Sunday, September 20, 2009

337. கண் திறவாதோ ... !?

*



A life in penury for whip dancers

Mohamed Imranullah S.

Their children cannot pursue higher education for want of community certificates.



ON A TIGHT LEASH: Whip dancers performing at Sattayadi Colony of Sakkimangalam panchayat in Madurai district.

MADURAI: Society comprises two classes: those who have more food than appetite and those who have more appetite than food, goes a popular saying. Unfortunately, about 250 families residing at Sattaiyadi Colony in Sakkimangalam village panchayat near here belong to the latter.

A majority of the residents in this colony were from ‘Sholiga’ community, a Telugu speaking nomadic group of self harming whip dancers who meandered about public places seeking alms by arousing the sympathy of the people. They were accompanied by women and children playing the ‘urumi’ drums.

These nomads also conducted road shows to earn their livelihood. While dancing, they use to lash the whip on the floor to create a terrifying sound. In a ghastly act, the performers would inflict injuries on their forearms and spill the leaking blood on bare bodied children made to lie on the floor.

According to a study conducted by Foundation for Human Rights and Development (FOHRD), a non-governmental organisation here, recently not even a single parent in this colony wants their children to continue the profession. But the children cannot pursue higher education for want of community certificates.

“Many children here could not appear in the 10th standard examinations for want of community certificates. These adolescent boys and girls have become negative role models, leading to large scale school dropouts. The courageous among them are learning to use the whip,” says S. Syed Ahmed of FOHRD.

The district administration had allotted housing plots for this community in the colony in 1990 following efforts taken by their leader Ellappan, father of 14. He now wants the Government to declare them as a Scheduled Tribe. But the process is getting delayed for want of sufficient documents to prove their caste status.

The study found that joint family system was predominant among the whip dancers’ community with an average household size of 11 persons. One particular household had as many as 33 members. Only a few youngsters took up other vocations such as construction work. The rest were addicted to liquor and gambling.

Lack of access to training programmes on skilled trades and poor sanitary conditions in the colony were the other problems faced by the 250 families including a small population of ‘Bhoom Bhoom Mattukararkal’ (people who seeks alms along with a decorated bull and a drum) and fortune tellers/palm readers.

© Copyright 2000 - 2009 The Hindu


*

10 comments:

passerby said...

So what Mr Dharumi?

Where are your own comments on this human disinterest story?

Not found.

Such pockets of people, in India, and TN, in particular, are part of this society. They carry on their traditional occupations on their own choice.

What do you want the government to do? To bracket them into Scheduled Tribes, when they themselves have not thought themselves to be, for centuries?

Government has given them pattas, as the news item say. Has it given to others? And, are you sure others don't deserve such help?

Boom-boom maattukkaarans, the kili joshiyars, the kurisolvabanvans, the pattaani-sundal sellers, the kudukuduppaikkaarans - are such pockets of people in our society, to name a few.

What is your opinion: to make them all white collar workers?

Pl open your mouth and say something. Then, I will continue where you let off.

தருமி said...

சிந்திக்க விரும்பும் சிலருக்காக ..

சிலருக்கு மட்டுமே எழுதும் தாங்கள் அங்கு போய் //Pl open your mouth and say something. Then, I will continue where you let off.// இதுபோன்ற சவால்களை எழுப்பலாமே! இங்கு என் பதிவில் வந்து என்னை சவாலுக்கு இழுக்கும் அளவிற்கு அப்படி என்ன அக்கறை. நான் என்ன எழுதவேண்டும் என்று நீங்கள் சொல்லி நான் எழுத வேண்டுமோ? நல்ல கூத்து! இந்த விளையாட்டெல்லாம் என்னிடம் எதற்கு?

நீங்கள் உண்மைத்தமிழன் பதிவில் இட்ட பின்னூட்டத்தைப் பார்த்த பிறகு உங்களின் மேலான 'புத்தி' புரிகிறது.

//சிந்திக்க விரும்பும் சிலருக்காக...!

இதில் யாதொரும் உண்மையிருப்பதாகத் தெரிய்வில்லை. கற்பனையாக. இப்படி காவலர்களையும் ரவுடிகளையும் கேட்க ஆசைப்பட்டிருப்பார். அதை உண்மையில் செய்ய முடியாது. எனவே எழுதுகிறார். ஒரு போலிஸ்காரில் வந்திறங்கும் ஆய்வாளரிடம் போய் இப்படி பேசமுடியாது. தான் படம் பார்க்க என்ற தன்னலமே தொனிக்கிறது.//

இப்பதிவின் தலைப்பைப் பார்த்தும் நான் சொல்ல வந்ததைப் புரியாத ஆள் நீங்கள் !

தருமி said...

நன்றி, டாக்.டெல்பின்

passerby said...

என்ன புத்தி?

வோட்டாண்டி said...

sindhika virumbum silarin sindhanigalil saaniyai kalapadharkaaga-- "sindhikka virumbum silarukaaga" pinootam poduranga..

//so what nu evalo saadharnama kekuraaru patheengala...
pullakuttingaloda sandosama irunga..

கிருஷ்ண மூர்த்தி S said...

கண் திறந்தால் மட்டும் போதாது, சிவந்து எரிக்கவும் வேண்டும்!

'கல்லுளி மங்கன்' என்று பேச்சு வழக்கில் குறிப்பிடப்படும் சவுக்கால் தன்னையே அடித்துக் கொண்டு ஆடும் மக்கள் மட்டுமில்லை, கொண்டாரெட்டி என்று ஒரு பிரிவு, இன்னும் காடுமேடுகளில் கஷ்டப்பட்டுக் கொண்டு தான் இருக்கிறார்கள். அரசு அறிவிப்பின் படி அவர்கள் எஸ்சி/எச்டி பிரிவின் கீழ் சலுகைகளைப் பெற உரிமை உள்ளவர்கள். ஆனால், நடப்பது வேறு!

ரெட்டிகள் 'கொண்டா ரெட்டியாகி' அரசு வழங்கும் சலுகைகளை முள்முனை கூட விட்டுவிடாமல், அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள்.
இதேமாதிரி காட்டு நாயக்கர்கள் என்ற பிரிவுக்கும் கூட ஏற்பட்டிருக்கிறது. நாயுடுக்கள்/நாயக்கர்கள் வந்து இந்த மக்களுக்கான சலுகைகளை அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள்.

இங்கே போலிச் சாதிச் சான்றிதழ் வாங்குவது எளிதாக இருக்கும் அவலத்தை, இங்கே சில ஆண்டுகளுக்கு முன்னாள், மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் குவிந்த முன்னூறுக்கும் மேலான போலிச் சான்றிதழ் குறித்த விசாரணைகளே சொல்லும்!

அவை எப்படி மூடி, மறைந்தன என்பதையும் சேர்த்துப்பார்த்தால், கண்ணை மறைப்பது எது, கண்ணைத் திறப்பது எது என்ற கேள்விகளுக்கு விடை கிடைத்துவிடும்.

passerby said...

கிருஷணமூர்த்தி

இப்பதிவில், வெறும் சாதிச்சான்றிதழ் பிரச்னை மட்டுமல்ல. தன்னைச்சாட்டையால் அடித்துக்கொண்டு கேளிக்கை காட்டுவதைத் தொழிலாளகவே எடுத்து பரம்பரையாக வாழும் ஒரு மனிதக்கூட்டத்தைப்்பற்றி.

இப்பதிவாளர் அதைப்பற்றி திருவாய் மலர்ந்தருளாவிட்டாலும், கேள்விகள் பல எழுகின்றன.

சில:

இவர்கள் விசயத்தில், மனித உரிமை ஆர்வலர்கள் கலக்கிறார்கள். அவர்கள் கண்டுபிடிப்பின்படி, இவர்கள் சாதிசான்றிதழ் இல்லாததால், உயர்கல்வியைத் தொடரமுடிய்வைல்லை.

உயர்கல்வி கல்விக்கும், இப்படி, தன்னையும், தன் குழந்தைகளையும் சாட்டையால் குருதி கொட்ட அடித்துகொண்டு, பிறரின் பச்சாபத்தை ‘காசுகள்’ வடிவத்தில் பெற்று நடத்துவதற்கும் என்ன தொடர்பு?

நாளை ஒரு பெண் கெட்டவழியில் சென்று பணம் பெற்று வாழ்கையில் காவலரால் பிடிக்கப்படுகிறார். அப்போது அவள், ‘என் பெற்றோர் என்னை உயர்கல்வி கற்க அனுப்பவைல்லை. எனவே, என் உடலை மூலதனமாக வைத்து நான் பணம் பெறுகிறேன்.’ என்பாள்.

ஒவ்வொரு மனிதனும் தான் செய்யும் அநியாயத்துக்கு இப்படிச்சொன்னால் எப்படி?

”இச்செய்தியைப்பற்றி உங்கள் கருத்தென்ன/” என்று கேட்டால், அது தலைப்பில் உள்ளது எனச்சொல்கிறார் தருமி.

தலைப்பென்ன்: ‘க்ண் திறவாயோ...’

அஃதாவது, இப்படி வாழும் வாழ்க்கைமுறையைச் சரியென்கிறாரா? இல்லை, அவர்களுக்கெல்லாம் சாதிசசான்றிதழ் கொடுத்தால், தன் வாழ்க்கைமுறையை மாற்றிக் கொள்வார்களா? என்ன சொல்லவருகிறார் தருமி்? ஒன்றுமட்டும் தெளிவு: என்கருத்து என் தலைப்பில் என்னும்போது, நாமும் இந்த அக்கிரமத்தைப் பார்த்து சரியென்று பச்சாதப்படவேண்டும் என்கிறார்.

அது கிடக்க.

இப்படி வாழ்பவர்கள் பிறரால் தூண்டப்பட்டா செய்கிறார்கள்? இவர்களை யார் இத்தொழில் செய்ய வற்புருத்தினார்கள்? தன் குழந்தைகளின் உடலை வருத்தி பணம் பெற்று வாழும் இவர்களுக்கு தான் செய்வது CHILD ABUSE என்று தெரியாதா? பிழைக்க வேறு வழிகள் இல்லையா?

உயர்க்ட்டடங்களில் ஏறி வேலைப்பார்க்கும் தொழிலாளர்கள், நகரசுத்தி தொழிலாளர்கள், பாதைபோடும் தொழிலாளர்கள், மீன்வர்கள், போர்ட்டர்கள், தன்பாடு சுமையாள்ர்கள் (head load workers) - இவ்ர்களெல்லாம் வாழவில்லையா? இவர்களெல்லாம் தம் குழந்தைகளையும் மனைவிகளையும் தெருவில் ஆடவிட்டு, உடலை குருதி பொங்க அடித்து பார்வையாளர்களின் பச்சாபிதத்தைப்பெற்று, பணம் வாங்கியா வாழ்கிறார்கள்? என் தருமி சிந்த்தித்தாரா? என்று கேட்டால் எனக்கு புத்தி சரியில்லை என்கிறார்.

என்ன வேடிக்கையிது?

சிந்திக்க விரும்பும் சிலருக்காக. ஏனென்றால் பலர் சிந்திக்க விரும்புவதில்லை. ‘கண்டதே காட்சி, கொண்டதே கோலம்’ என்பதுதான்.

இத்தெரு நிகழ்ச்சி, என்பது காட்சி. அதைக்கண்டு பச்சாபிதம் கொள்வது, கொண்டதே கோலம் ஆகும்.

கிருஷ்ண மூர்த்தி S said...

சிந்திக்க விரும்பும் சிலருக்காக என்று தலைப்பு வைத்துக் கொண்டு எழுதும் நண்பருக்கு,

/தன்னைச்சாட்டையால் அடித்துக்கொண்டு கேளிக்கை காட்டுவதைத் தொழிலாகவே எடுத்து பரம்பரையாக வாழும் ஒரு மனிதக்கூட்டத்தைப் பற்றி./

என்ன சொல்ல வருகிறீர்கள் ஐயா?

அவர்கள் அப்படியே இருந்துவிட்டுப்போகட்டுமே என்றா?

பதிவிட்டவர், தன் மனதை நெருடிய ஒரு செய்தியைப் பகிர்ந்து கொண்டிருக்கிறார். அவர் கருத்து எதுவும் சொல்லவில்லை என்பதை மட்டுமேவைத்துக் கொண்டு, நீங்கள் முதலில் சொல்லுங்கள், அப்புறம் நீங்கள் விட்ட இடத்தில் இருந்து நான் சொல்கிறேன் என்பது சரிதானா? ஏன்,நீங்களே முன்வந்து உங்களுடைய கருத்தைச் சொல்லிவிட்டு, தருமி ஐயா உங்கள் கருத்தையும் சொல்லுங்கள் என்று கேட்டிருக்கலாமே!

அவருக்கு,படிக்க வருபவர்கள் என்ன சொல்கிறார்கள் என்று தெரிந்து கொண்டு பேசலாமே, என்ற நினைப்பாகவும் இருக்கலாம். அல்லது ஒரு ஆரம்பத்தைக் கொடுத்துவிட்டு, விவாதத்தை நீங்கள் தொடருங்கள் என்ற உத்தியாகவும் இருக்கலாம்.எனக்கு அது முக்கியமாகப் படவில்லை. அவர் சுட்டிய செய்தியை நானும் தான் படித்தேன், எனக்கும் உறுத்தலாகத் தான் இருந்தது, அதன் அடையாளமாகத் தான் ஒரு பின்னூட்டம்!

என்னுடைய கேள்வி, நீங்கள் என்ன தீர்வு சொல்ல வருகிறீர்கள்?

நீங்கள் சொல்வது போலவே அவர்கள் சீரழிந்தவர்கள் என்று வைத்துக் கொண்டாலுமே, அது அவர்களாகத் தேடிக் கொண்டது - அப்படியே இருந்து விட்டுப் போகட்டும் என்று சொல்கிறீர்களா? இது ஒரு ஆரோக்கியமான சிந்தனை இல்லையே!

நீங்கள் சொல்கிற வழியில் தான், சிந்திக்க முடியும் என்று சொல்ல வருகிறீர்களா? எதுவானாலும், கருத்தின் மீது, உங்கள் விவாதத்தைத் தொடர்ந்தால், இன்றில்லை என்றாலும் நாளையாவது ஒரு நல்ல தீர்வைக் காணமுடியும் என்ற நம்பிக்கை பிறக்கும்.

மாற்றங்கள் தன்னிடமிருந்துதான் ஆரம்பித்தாக வேண்டும், அடுத்தவரிடமிருந்து அல்ல என்று கொஞ்சம் மாற்றி யோசித்துப் பாருங்களேன்!

passerby said...

//என்னுடைய கேள்வி, நீங்கள் என்ன தீர்வு சொல்ல வருகிறீர்கள்?

நீங்கள் சொல்வது போலவே அவர்கள் சீரழிந்தவர்கள் என்று வைத்துக் கொண்டாலுமே, அது அவர்களாகத் தேடிக் கொண்டது - அப்படியே இருந்து விட்டுப் போகட்டும் என்று சொல்கிறீர்களா? இது ஒரு ஆரோக்கியமான சிந்தனை இல்லையே!//

Child abuse is a social crime. எனவே, இப்படிப்பட்டவர்களை சட்டம் தண்டிக்கவேண்டும். ஏன் விபச்சாரிகளை மட்டும் சட்டம் தண்டிக்கிறது?

ஆனையைத்தெருவாக இழுத்துவந்து பிச்சைக்கேட்கிறான். பச்சிளம் குழந்தையைப் பரிதாபமாகக்காட்டி பிச்சையெடுக்கிறாள். சிறுவர்களையும் சிறுமிகளையும் கைகால்களை வெட்டி, கண்களைப்பிடிங்கி, முடமாக்கி, குருடாக்கி, அவர்களைக்காட்டு, மக்களின் இரக்கத்தைப்பெற்று, வாழும் ஒருகூட்டமே பம்பாயில் உள்ள்து என ஒரு திரைப்படத்தில் காட்டினார்கள். அது உண்மையாகும்.

இப்படி வாழும் அனைவரையும் சட்டம் தண்டிக்கவேண்டும்.

ஆனால், ‘கண் திறவாதோ...’ என சொல்லியழுதால், அவர்கள் செய்யும் சமூகஏமாற்றும் பிறர் குறிப்பாக child abuse தொடரத்தான் செய்யும்.

தருமி போட்ட படத்தைப்பாருங்கள். அச்சிறுமியைப்பாருஙகள். உங்கள் மனம் கொதிக்கவில்லையா?

இவர்களை இப்படிச்செய்ய யாரும் தூண்டினரா? இல்லை, இப்படிச் செய்தால்தான் வாழமுடியும் என நிர்ப்பந்தம் உண்டா? ஏன் செய்கிறார்கள்/

ஏனென்றால், கேட்க ஆளில்லை. அவர்களைத் த்ட்டிக்கேட்டு வேறு வழியில் வாழமுடியும் எனச்சொல்லவேண்டிய் N.G.O, அவர்களைச்சாதிச்சான்றிதழ் பெற்றால் எல்லாம் சரியாகிவிடும் என தப்பான வழியைக்காட்டுகிறது.

ப்திவிட்டவரோ, அவர்களுக்கு இரங்குங்கள் என தலைப்பில் சொல்கிறார்.

வேடிக்கைதானே?

கிருஷ்ண மூர்த்தி S said...

/அவர்களைத் த்ட்டிக்கேட்டு வேறு வழியில் வாழமுடியும் எனச்சொல்லவேண்டிய் N.G.O, அவர்களைச்சாதிச்சான்றிதழ் பெற்றால் எல்லாம் சரியாகிவிடும் என தப்பான வழியைக்காட்டுகிறது/

நீங்க எதையோ மனசுல வச்சு, எங்கேயோ வந்து இடிக்கற மாதிரியும் தோணுது!

இல்லே, ஏதோ தெரிஞ்சு வச்சுப் பேச வர்றீங்கண்ணும் தோணுது!

உதாரணத்துக்கு இந்த என் ஜி ஒ விவகாரம்!

சொல்ல வர்றதைத் தெளிவா, உங்க பதிவுலேயே விலாவாரியா எழுதுங்க! இங்கே வந்தோ, என் பெயரைச் சொடுக்கி என் பதிவுக்கு வந்தோ ஒரு தகவல் மட்டும் சொல்லுங்க! வந்து தெரிஞ்சுக்கறோம்! ஒரு பொதுவான action programme வேணும்னாக் கூட சேர்ந்து செய்யலாம்! தருமி ஐயா மட்டுமில்லை, இங்கே கொஞ்சம் பதிவர்கள் கூட சேர்ந்துக்குவாங்க!

புலம்பறதை விட, ஏதாச்சும் செய்யணும் தலைவரே! அதான், நான் வேண்டிக்கொள்வது!

Post a Comment