Wednesday, April 13, 2011

496. WHY I AM NOT A MUSLIM ... 14

*




ஏனைய முந்திய பதிவுகள்:
பதிவு - 7
பதிவு - 8
பதிவு - 9
பதிவு - 10
பதிவு - 11
பதிவு - 12
 பதிவு: 13

இப்பதிவு:  14


Image and video hosting by TinyPic


CHAPTER  9

THE ARAB CONQUESTS AND THE 
POSITION OF NON-MUSLIM SUBJECTS

அரேபியரின் வீர சாகசங்களும்
இஸ்லாமியரல்லாத மக்களின் நிலையும்

குரானில் கிறித்துவர்களும் யூதர்களும்:
5 : 51 - நம்பிக்கையாளர்களே! யூதர்களையும், கிறித்துவர்களையும் நண்பராகக் கொள்ளாதீர்கள். (அட! ஒரு கடவுள் தன்னை நம்புகிறவர்களுக்குக் கொடுக்கிற அறிவுரை இப்படியும் கூட இருக்குமா? அடக் கடவுளே!! )

5 : 56 - 64 - உங்களுக்கு முன் வசனங்களைப் பெற்ற யூதர்களையும், கிறித்துவர்களையும், நம்பாதவர்களையும் உங்கள் நண்பராக்கிக் கொள்ளாதீர்கள். (216)

600 - 900 Banu Qurayza மக்களையும், வரலாறுகளில் மறைக்கப்படும் Nadir-களைக் கொன்ற விவரங்களும் எவ்வித இரக்கமோ நற்பண்போ வெளிப்படாத முகமதுவைக் காண்பிக்கின்றன.

முகமது Khaybar-ன் பாலைவனப் பசுஞ்சோலைகளில் யூதர்களை எதிர்த்து 628-ம் ஆண்டு நடத்திய போரில் வென்று அதன் தலைவனைக் கொடுமைப்படுத்தி மறைத்து வைக்கப்பட்ட செல்வங்களைக் கொள்ளையடித்த பின், அந்த யூதர்களோடு ஓர் உடன்படிக்கை செய்கிறார். தோல்வியடைந்த யூதர்கள் தங்கள் நிலங்களில் தாங்களே சாகுபடி செய்யலாம். ஆனால் விளைந்ததில் சரி பாதியை முகமதுவிடம் ஒப்படைத்து விட வேண்டும். ஆனாலும் இந்த ஒப்பந்தத்தை எப்போது வேண்டுமானாலும் முகமது முறித்துக் கொள்ளலாம். இந்த ஒப்பந்தத்தின் பெயர் ‘திம்மா’. இந்த ஒப்பந்தத்தை ஒத்துக் கொண்டோர் ‘திம்மிகள்’. எல்லா இஸ்லாமியரல்லாதவர் இந்த ஒப்பந்தத்தின் மூலம் இஸ்லாமியரின் உயர்வை ஒத்துக் கொள்பவர்களாகவும், இஸ்லாமியரின் பாதுகாப்பிற்குக் கீழ் வருபவர்களாகவும் கருத்தப்பட்டார்கள். ( தமிழ்ப்பட தண்டல் வசூல்காரர்கள் மாதிரி போலும் !! )

இரண்டாம் கலிபாவான உமர் இந்த திம்மி சட்டத்தை 640-ல் முறித்து, யூதர்களையும், கிறித்துவர்களையும் ஹிஜாஸ் (மெக்கா, மெதீனாவைச் சார்ந்த இடங்கள்) பகுதியிலிருந்து வெளியேற்றுகிறார். இதற்காக அவர் முகமதுவின் புகழ் வாயந்த வாசகமான ‘அரேபிய தீபகற்பகத்துக்குள் இரு மதங்கள் இணைந்திருக்க முடியாது’ என்பதை மேற்கோளிடுகிறார். ( இந்தக் கொள்கைகளைத்தான் இன்றும் இஸ்லாமிய நாடுகள் பின்பற்றுகிறார்கள் போலும். அடுத்த நாட்டில் அவர்களின் உரிமைகளை நிலை நாட்டும் இஸ்லாமியர் தங்கள் நாட்டில் அந்நிய நாட்டினருக்கு எந்த வித உரிமையையும் இதனால்தான் அளிப்பதில்லை.) இதனால்தான் இன்றும் சவுதி அரேபியாவில் மற்ற மதங்களுக்கு எந்த இடமும்இல்லை. ( நல்ல நியாயம்யா இது

JIHAD :

 இஸ்லாமின் முழு ஆளுமை அவர்களது ஜிகாட் -  புனிதப் போர் -  என்ற தத்துவத்தில்தான் நன்கு தெரியும். முழு உலகையும் வென்று அல்லாவின் சட்டத்திற்குள் கொண்டுவருவதே அவர்களின் நோக்கம். இந்த மார்க்கம் மட்டுமே ஆன்மா உய்விப்பதற்கான வழி. 

ஜிகாட் என்பது ஒரு தெய்வீக உத்தரவு. இஸ்லாமைப் பரப்புவதற்கென்றே ஆன ஓர் ஆணை.. இஸ்லாமியர்கள் கடுமையாக முயற்சிக்க வேண்டும். தெய்வத்தின் பெயரில் அது உழைப்பின் மூலமாகவோ, போரிடுவதாலோ, எதிரிகளைக் கொல்வதாலோ இருக்கலாம்.

9 : 5-6 - ... இறைவனுக்கு இணைவைப்போரை நீங்கள் எங்கு கண்டாலும் கொன்று விடுங்கள்; மேலும் அவர்களைச் சிறைப்பிடியுங்கள்;  அவர்களை முற்றுகையிடுங்கள்; ......

4 : 76  - ஷைத்தானின் தோழர்களுடன் போர் புரியுங்கள்.

8 : 12 -  ...நிராகரிப்பாளர்களின் உள்ளங்களில் பீதியை ஏற்படுத்தி விடுகின்றேன்.  
 எனவே,. நீங்கள் அவர்களுடைய பிடரிகளில் தாக்குங்கள். அவர்களின் ஒவ்வொரு விரல் மூட்டுகளிலும் அடியுங்கள்.

8 ; 39-42 -  குழப்பம் இல்லா தொழிந்து தீன் முழுவதும் அல்லாஹ்வுக்கே உரித்தானதாகும் வரை நீங்கள் இந்நிராகரிப்பாளர்களுடன் போர் புரியுங்கள். .. அவர்கள் புறக்கணித்தால், அல்லாஹ் உங்கள் பாதுகாவலனாக இருக்கின்றான் .... 

ஒரு இஸ்லாமியன் இதுபோன்று நம்பிக்கையற்றவர்களின் மீது தொடுக்கும் போரில் விலகி நின்றால் அவன் மிகப்பெரிய பாவத்தைச் செய்கிறான். அவன் நிச்சயமாக நரகத்தில் வறுத்தெடுக்கப்படுவான். (217)

8 : 15-16 -  ... நீங்கள் படையாகத் திரண்டு சென்று இறை நிராகரிப்பவர்களுடன் போரிட நேர்ந்தால், அவர்களுக்குப் புறமுதுகு காட்டி ஓடாதீர்கள். ... அந்நாளில் புறமுதுகு காட்டி ஓடினால், ... திண்ணமாக அல்லாஹ்வின் கோபத்திற்கு ஆளாகி விடுவர். 

9 : 39 -  நீங்கள் இறை வழியில் புறப்படவில்லையாயின், அல்லாஹ் உங்களுக்குத் துன்புறுத்தும் தண்டனை அளிப்பான்.

4 : 74 -  இவ்வுலக வாழ்வை விற்று மறுமையைப் பெற விரும்புவோர் அல்லாஹ்வின் வ்ழையில் போர் புரியட்டும். பிறகு யார் அல்லாஹ்வின் வழியில் போர் புரிந்து கொல்லப்பட்டாலும் சரி, அல்லது வெற்றி பெற்றாலும் சரி, அவருக்கு உறுதியாக மகத்தான கூலியை நாம் வழங்குவோம். 

மேற்கூறிய மேற்கோள்களிலிருந்து குரானில் இவைகளெல்லாம் உருவகமாகச் சொல்லப்பட்டதல்ல; ஆனால் உண்மையிலேயே போர்ர்களங்கள் பற்றித்தான் பேசுகிறது.

இப்படிப்பட்ட ரத்த வெறியடிக்கும் வசனங்கள் ஒரு சமயத்தின் தூய புத்தகத்தில் இருப்பதைப் பார்க்கும் போது அது மிக  அதிர்ச்சியளிப்பதாக இருக்கிறது.

மனித குலமே இரு வகையாக உள்ளன. ஒன்று, இஸ்லாமிய சமூகத்தினரால் ஆனது. இவர்கள் எல்லோரும்  உம்மா; இவர்களுக்கு ‘இஸ்லாமிய உலகம்’ சொந்தமானது.(Dar al-Islam - Land of Islam).  மற்ற இனம் இஸ்லாமியரல்லாதவர்கள்; இவர்களுக்கான பெயர்: ஹர்பி (Harbi ) இவர்களின் இடம் போர்க்களத்தின் இடம். (Dar al-Harb - Land of Warfare) (218)






12 comments:

Siraj said...

Please visit onlinepj.com for all of your questions.

Siraj said...

Please visit www.Onlinpj.com for all of your Question.

saarvaakan said...

திரு முகமது மெக்காவில் இருந்த போது(610_622) வெளிபட்டதக சொல்லப் படும் வசன‌ங்கள் கொள்கைகளை வரையறுபதிலும்,எச்சரிக்கை செய்வதாக்வே இருக்கும். மெக்காவில் அவரால் சில நூறு ஆட்களையே மதம் மாற்ற முடிந்தது.
அவர் அக்கால மெக்கா குரேஷிய மனிதர்களின் வழிபாட்டை குறை கூறியதால் அவருடைய உயிருக்கே ஆபத்து நேரிடும் சூழ்நிலை நிலவியது.

இந்த ஹிஜ்ரா(622) அதாவது மெக்காவில் இருந்து மெதினாவிற்கு தன் ஆதரவாளர்களுடன் சென்ற பிறகுதான் வசன‌ங்களின் போக்கு ஆன்மீகத்தில் இருந்து வன்முறை கல்ந்த ஆன்மீகமாக் மாறுகின்றது. இப்பதிவில் நீங்கள் காட்டிய போர் குறித்த அனைத்து வசங்களும் இவ்வகையை செர்ர்ந்தவையே.


பத்ரு போர் (624) ஒரு குரேஷிய வியாபாரக் கூட்டத்தை கொள்ளையி சென்ற போது போர்வீரர்களுடன் சண்டையிட நேர்ந்தது.இது இஸ்லாமின் முதல்(போர் என்று கூறலாம்.அது எப்படி நடந்தது என்பது பற்றிய ஒரு காணொளி.

http://www.youtube.com/watch?v=NB-EfQYDIRQ

கைபர் போர்(628) பற்றிய ஒரு காணொளி.

http://www.youtube.com/watch?v=tXScDocR_ME&feature=related

இந்த போர்கள் அக்காலத்தின் ஏதோ ஒரு வாழ வேண்டிய கட்டாயத்தில் நடை பெற்றது.அது இக்காலத்திற்கு பொருந்தாது என்றால் பரவாயில்லை. இது எக்காலத்திற்கும் பொருந்தும் உண்மை மதத்தை பரப்ப போர் புரியலாம் என்பதே கொள்கையாக ஆட்டோமான் சாம்ராஜ்யத்தின் வீழ்ச்சி(1921) வரை நடைமுறையில் இருந்தது.

http://www.youtube.com/watch?v=Tfu24Mr0wFQ&feature=fvst

ஈப்போதைய மத்திய கிழக்கில் நடை பெறும் போராட்டங்கள் ஆட்டோமான் பேரரசின் மீட்சி IKhilafaa) என்ற கருத்தாகக்த்தை நோக்கி இருக்கிறது.

http://www.youtube.com/watch?v=Cy9da6LkANw

தருமி said...

//ஹதீது: ஹ்ல்ரத் அலீ (ரலி): "உலகினில் ஏற்படுகின்ற குழப்பங்களுக்குத் தீர்வு காண அல்லாஹ்வின் வேதந்தான் சிறந்த வழி. ...(தன் அறிவைக்கொண்டு) பெருமையடிக்கிறவன் இதனை (அமல் படுத்தாமல்) விட்டு விட்டால், அல்லாஹ் அவனைத் துண்டு துண்டாக ஆக்கிவிடுவான். அது அல்லாத (வேறு கிரந்தத்)தில் நேர்வழியைத் தேடுபவரை வழிதவறச் செய்து விடுவான்."//

கடவுள் ஏனிப்படி கொடூரமாக இருக்கிறார் என்று முன்பு என் பதிவில் கேட்டிருந்த போது தன் எதிரிகளோடு மோதுபோது எப்படி நடக்க வேண்டும் என்பதற்கான வழிகாட்டி என்றார்கள் சில இஸ்லாமியப் பதிவர்கள்.

இப்பதிவில் சிகப்பெழுத்தில் உள்ளவை எல்லாமே அல்லா சொன்னதாக இஸ்லாமியரால் நம்பப்படுகிறது.

எனது கேள்வி: எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் - சமாதான நேரத்திலோ, சண்டையிடும் நேரத்திலோ - ஒரு கடவுள் எப்படி இப்படி கொடூரமான வழிமுறைகளைத் தன்னைப் பின்பற்றுபவர்களுக்குக் கொடுக்க முடியும்?
இந்தக் கூற்றுக்கள் உண்மையாயின் அப்படிப்பட்ட ‘கடவுளை’ எப்படி இரக்கமானவன் ... erc., etc., என்றெல்லாம் கூற முடியும்?

Ganesan said...

// தோல்வியடைந்த யூதர்கள் தங்கள் நிலங்களில் தாங்களே சாகுபடி செய்யலாம். ஆனால் விளைந்ததில் சரி பாதியை முகமதுவிடம் ஒப்படைத்து விட வேண்டும். ஆனாலும் இந்த ஒப்பந்தத்தை எப்போது வேண்டுமானாலும் முகமது முறித்துக் கொள்ளலாம். இந்த ஒப்பந்தத்தின் பெயர் ‘திம்மா’. இந்த ஒப்பந்தத்தை ஒத்துக் கொண்டோர் ‘திம்மிகள்’. எல்லா இஸ்லாமியரல்லாதவர் இந்த ஒப்பந்தத்தின் மூலம் இஸ்லாமியரின் உயர்வை ஒத்துக் கொள்பவர்களாகவும், இஸ்லாமியரின் பாதுகாப்பிற்குக் கீழ் வருபவர்களாகவும் கருத்தப்பட்டார்கள். ( தமிழ்ப்பட தண்டல் வசூல்காரர்கள் மாதிரி போலும் !! ) //

தருமி ஐயா , இந்த திம்மா, திம்மி என்பதே ஒரு special status போலிருக்கிறது. இவர்களுக்கு கீழே முஸ்லிம் அல்லாதோர் என்ற ஒரு வகைப்பாடு வேறு இருந்திருக்கிறது. யூத, கிறிஸ்தவ நம்பிக்கையாளரை புத்தகத்தை பின்பற்றுவோர் என்று கூறி அவர்களுக்கு இந்த திம்மி சலுகை (?) வழங்கப்பட்டதாய் தெரிகிறது. இப்படி தான் விக்கிபீடியாவில் எழுதி உள்ளார்கள். அரபுகள் பெர்சியாவில் நுழைந்த பொழுது அங்குள்ளவர்களின் பிரதான மதம் zoroastrian என்னும் நெருப்பை வழிபடும் ஒரு பாகன் மதம். எப்படியோ இந்த மதத்தவர்களுக்கும் திம்மி என்ற சலுகை வழங்கப்படிருகிறது. இதன் மூலம் இவர்களுக்கு ஜிசியா வரி விதிகப்பட்டிருக்கிறது. அத்துடன் நில்லாமல் வேறு வழிகளிலும் இவர்களை நெருக்கி முழு தேசத்தையும் முஸ்லிமாய் ஆக்கியுள்ளனர். விக்கிபீடியா கூறப்பட்டுள்ள இந்த வரிகளை பார்க்கவும்.

"Two decrees in particular encouraged the transition to a preponderantly Islamic society.[citation needed] The first edict, adapted from a Arsacid and Sassanid one (but in those to the advantage of Zoroastrians), was that only a Muslim could own Muslim slaves or indentured servants. Thus, a bonded individual owned by a Zoroastrian could automatically become a freeman by converting to Islam. The other edict was that if one male member of a Zoroastrian family converted to Islam, he instantly inherited all its property."

திம்மிகளுக்கு எப்படிபட்ட ஒரு பாதுகாப்பு வழங்கி உள்ளார்கள் பார்த்தீங்களா :) ? இந்த பாதுகாப்பு நடவடிக்கைகள் பிடிக்காமல் பெர்சியரில் ஒரு சாரார் இந்தியாவுக்கு வந்து பார்சி என்ற பெயருடன் தங்கினர். திம்மிகளுக்கு இப்படி என்றால் அவர்களுக்கு கீழான மற்றவர்க்கு பாதுகாப்பு எல்லாம் கிடையாது முஸ்லிமாய் மாற வேண்டியது தான்.

"Before launching an attack the ruler would offer them three choices – conversion, payment of a tribute, or to fight by the sword. If they did not choose conversion a treaty was concluded, either instead of battle or after it, which established the conditions of surrender for the Christians and Jews – the only non-Muslims allowed to retain their religion at this time. The terms of these treaties were similar and imposed on the dhimmi, the people ‘protected’ by Islam, certain obligations.[70]"

yasir said...

தருமி அய்யா,
போர் குறித்த வசனங்கள் அனைத்தும் அரசாங்கத்திற்கு வழங்கப்பட்ட கட்டளைகள் தனிநபர் கையிலெடுக்கக் கூடாது. எப்படி தற்பொழுது நடக்கும் போர்களில் எதிரிகள் கொல்லப்படுகிறார்களோ அதுபோலத்தான் இதுவும் என்கிறது ஒரு பிரிவு. இதை எப்படி எடுத்துக் கொள்வது என்றுதான் விளங்கவில்லை.

saarvaakan said...

//இரண்டாம் கலிபாவான உமர் இந்த திம்மி சட்டத்தை 640-ல் முறித்து, யூதர்களையும், கிறித்துவர்களையும் ஹிஜாஸ் (மெக்கா, மெதீனாவைச் சார்ந்த இடங்கள்) பகுதியிலிருந்து வெளியேற்றுகிறார். //
2338. அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார். உமர் இப்னு கத்தாப்(ரலி) யூதர்களையும் கிறிஸ்தவர்களையும் ஹிஜாஸ் மாநிலத்திலிருந்து நாடு கடத்திவிட்டார்கள். இறைத்தூதர் கைபர் பிரதேசத்தை வெற்றி கொண்டபோது (அங்கிருந்த) யூதர்களை நாடு கடத்திட விரும்பினார்கள். (ஏனெனில்,) அந்தப் பிரசேத்தை வெற்றி கொண்டபோது அந்தப் பகுதியிலிருந்த நிலம் முழுவதும் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் முஸ்லிம்களுக்கும் உரியதாகி விட்டிருந்தது. (அந்த நிலையில்) யூதர்கள் அல்லாஹ்வின் தூதரிடம், 'நாங்கள் இந்த நிலங்களில் பயிரிட்டு உழைக்கிறோம். இவற்றின் விளைச்சலில் 'பாதியைப் பெற்றுக் கொள்கிறோம். (மீதியை இஸ்லாமிய அரசுக்கு நிலவரியாகச் செலுத்தி விடுகிறோம்)" என்று கேட்டுக் கொண்டார்கள். இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'நீங்கள் ஒப்புக் கொண்ட இந்த நிபந்தனையின் (நிலக் குத்தகை ஒப்பந்தத்தின்) அடிப்படையில் நாம் விரும்பும் வரை நீங்கள் அதில் பயிரிட்டுக் கொள்ள நாம் அனுமதிக்கிறோம்" என்று கூறினார்கள். எனவே, உமர்(ரலி), தம் ஆட்சிக் காலத்தில் அந்த யூதர்களை தைமா, அரீஹா, (ஜெரிக்கோ) ஆகிய பகுதிகளுக்கு நாடு கடத்தி அனுப்பும் வரை அவர்கள் அங்கேயே (நிலங்களைப் பயிரிட்டு வரி செலுத்தி) வசித்து வந்தார்கள்.
Volume :2 Book :41

saarvaakan said...

//600 - 900 Banu Qurayza மக்களையும், வரலாறுகளில் மறைக்கப்படும் Nadir-களைக் கொன்ற விவரங்களும் எவ்வித இரக்கமோ நற்பண்போ வெளிப்படாத முகமதுவைக் காண்பிக்கின்றன.//

371. நபி(ஸல்) அவர்கள் கைபர் போருக்கு ஆயத்தமானார்கள். அங்கே நாங்கள் அதிகாலைத் தொழுகையை அதிகாலையின் வெண்மை தெரியும் முன்னர் தொழுதோம். பின்னர் நபி(ஸல்) அவர்கள் தங்களின் வாகனத்தில் ஏறினார்கள். அபூ தல்ஹா(ரலி) அவர்களும் ஏறினார். அவர்களுக்குப் பின்னால் நான் ஏறி அமர்ந்தேன். நபி(ஸல்) அவர்கள் கைபர் கணவாயினுள் சென்றார்கள். என்னுடைய மூட்டு நபி(ஸல்) அவர்களின் தொடையைத் தொட்டது. பின்னர் நபி(ஸல்) அவர்கள் தங்களின் தொடையிலிருந்த வேஷ்டியை நீக்கினார்கள். அப்போது நபி(ஸல்) அவர்களின் தொடையின் வெண்மையை பார்த்தேன். நபி(ஸல்) அவர்கள் ஊருக்குள்ளே நுழைந்தபோது 'அல்லாஹ் பெரியவன்! கைபர் வீழ்ந்துவிட்டது! நிச்சயமாக நாம் ஒரு (எதிரிக்) கூட்டத்திடம் பகைமையுடன் இறங்கினால் எச்சரிக்கப்பட்ட அம்மக்களின் காலை நேரம் மோசமானதாம்விடும்' என்று மும்முறை கூறினார்கள். அவ்வூர் மக்கள் தங்களின் வேலைகளுக்காக வெளியே வந்தபோது நபி(ஸல்) அவர்களைப் பார்த்ததும், 'முஹம்மதும் அவரின் பட்டாளமும் வந்துள்ளார்கள்' என்று (பதட்டமாகக்) கூறினார்கள்.
நாங்கள் கைபரைப் பலவந்தமாகக் கைப்பற்றினோம். போர்க் கைதிகளெல்லாம் ஒன்று சேர்க்கப்பட்டபோது 'திஹ்யா' என்ற நபித்தோழர் வந்து 'இறைத்தூதா அவர்களே! கைதிகளிலுள்ள ஒரு பெண்ணை எனக்குக் கொடுங்கள்' என்று கேட்டார். 'நீர் போய் ஒரு பெண்ணை தேர்ந்தெடுத்துக் கொள்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். அவர் சென்று ஸஃபிய்யா பின்த் ஹுயய் என்ற பெண்ணைத் தேர்ந்தெடுத்தார். அப்போது ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து, 'இறைத்தூதர் அவர்களே! 'குறைளா' மற்றும் 'நளீர்' என்ற குலத்தின் தலைவி ஸஃபிய்யா பின்த் ஹுயய் என்ற பெண்ணையா திஹ்யாவிற்குக் கொடுத்துள்ளீர்கள். அந்தப் பெண் தங்களுக்கே தகுதியானவள்' என்றார். அப்போது 'அப்பெண்ணையும் திஹ்யாவையும் அழைத்து வாரும்' என்று நபி(ஸல்) அவர்கள் அவரிடம் கூறினார்கள். அப்பெண் அழைத்து வரப்பட்டார். அப்பெண் வந்ததும் 'நீ கைதிகளிலிருந்து வேறொரு பெண்ணைத் தேர்ந்தெடுத்துக் கொள்' என்ற திஹ்யாவிடம் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். நபி(ஸல்) அப்பெண்ணை விடுதலை செய்து பின்னர் அவரைத் திருமணம் செய்தார்கள்.
இந்த ஹதீஸை அறிவிக்கிற அனஸ்(ரலி) அவர்களிடம் ஸாபித் என்ற தோழர், 'அபூ ஹம்சாவே நபி(ஸல்) அப்பெண்ணுக்கு எவ்வளவு மஹர் கொடுத்தார்கள்?' என்று கேட்டதற்கு 'அவரையே மஹராகக் கொடுத்தார்கள்; அதாவது அவரை விடுதலை செய்து பின்னர் மணந்தார்கள்' எனக் கூறினார்.
நாங்கள் (கைபரிலிருந்து) திரும்பி வரும் வழியில் 'ஸஃபிய்யா' அவர்களை உம்மு ஸுலைம்(ரலி) மணப்பெண்ணாக ஆயத்தப்படுத்தி நபி(ஸல்) அவர்களிடம் இரவில் ஒப்படைத்தார். மறுநாள் காலை நபி(ஸல்) அவர்கள் புது மாப்பிள்ளையாகத் தோன்றினார்கள். அப்போது நபி(ஸல்) ஒரு விரிப்பை விரித்து 'உங்களில் யாரிடமாவது ஏதாவது (சாப்பிடுகிற) பொருள்கள் இருந்தால் கொண்டு வந்து இதில் போடுங்கள்' என்று கூறினார்கள். உடனே ஒருவர் பேரீச்சம் பழத்தைக் கொண்டு வந்தார். வேறு ஒருவர் நெய்யைக் கொண்டு வந்தார். ஒருவர் மாவைக் கொண்டு வந்தார். (இப்படி எல்லோரும் கொண்டுவந்த) அவற்றையெல்லாம் சேர்த்து ஒன்றாகக் கலந்தார்கள். அது நபி(ஸல்) அவர்களின் 'வலீமா' எனும் மணவிருந்தாக அமைந்தது" என அனஸ்(ரலி) அறிவித்தார்.
"அவளுடைய உடல் முழுவதையும் மறைக்கும் விதத்தில் ஒரே ஆடையை அணிந்தாலும் அது அவளுக்குப் போதுமானதாகும்" என இக்ரிமா கூறினார்.

தருமி said...

saarvaakan,
//http://www.youtube.com/watch?v=NB-EfQYDIRQ//
இதைப் பார்த்தேன். எல்லாம் நல்லா இருக்கு. ஆனால் கழுத்தைச் சீவியதும் ‘அல்லாஹூ அக்பர்’ அப்டின்னு கத்துறதைப் பார்த்தால் ... ம்ம்.. ம்.. என்ன சொல்றது?!
ஏனிந்த வழக்கம்?

தருமி said...

saarvaakan,
பாவம் 'திஹ்யா' !

Naran said...

தருமி சார் இவுங்க இப்படிதான் மறுப்பு கொடுத்துகிட்டே இருப்பாங்க .நீங்க எழுதுங்க .உங்களுக்கு நிறைய தைரியம்.வாழ்த்துக்கள்.உங்களுக்கு துணையா இங்க செங்கொடி இருக்கார்.
;
;
http://senkodi.wordpress.com/

saarvaakan said...

ஏனிந்த வழக்கம்?
_________

2826. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்
அல்லாஹ் இரண்டு மனிதர்களைப் பார்த்துச் சிரிக்கிறான். அவ்விருவரில் ஒருவர் மற்றொருவரைக் கொன்றுவிடுகிறார். இருவருமே சொர்க்கத்தில் நுழைகிறார்கள். இவர் இறைவழியில் போரிட்டுக் கொல்லப்படுகிறார். பிறகு (அவரைக்) கொன்றவர் பாவமன்னிப்புக் கோர, அதை ஏற்று அவரை அல்லாஹ் மன்னித்து விடுகிறான். பிறகு அவரும் அறப்போரில் (கொல்லப்பட்டு) உயிர்த் தியாகியாகி விடுகிறார்.
என அபூ ஹுரைரா(ரலி) கூறினார்.
Volume :3 Book :56
___________
யாருக்கும் நஷ்டமில்லை!!!!!!!!!!

Post a Comment