Sunday, April 27, 2014

748. கடன் வாங்கிய பதிவு -- முகத்திரைக்குள்ளே ....!









*
முகத்திரைக்குள்ளே...!

தஜ்ஜால் 



ஏகத்துவப் பிரச்சாரம் வீரியமடைந்த பிறகு, பெண்கள் தங்கள் முகம், முன் கைகளைத் தவிர ஏனைய பகுதிகளை மறைக்கும் புர்கா அணியத் துவங்கினர். மார்க்கம் கூறியபடி தங்கள் உடல் அழகை மறைக்காத நிலை தான் பெரும்பாலான முஸ்லிம் பெண்களிடம் இருந்தது. இது வஹாபிஸ வியாபாரிகளுக்குக் கிடைத்த வெற்றிதான்; மறுப்பதற்கில்லை.

ஜனவரி, 2010-ம் ஆண்டு, விஜய் டிவியில், நீயா? நானா? நிகழ்ச்சிக்காக இஸ்லாமியப் பெண்களுக்கிடையே ஹிஜாப் பற்றிய விவாதம் பதிவு செய்யப்பட்டு, ஒலிபரப்பாக இருந்த நேரத்தில் பீஜே குழுவினரின் மிரட்டலால் நிறுத்தப்பட்டது. தங்களது இஸ்லாமியப் பெண்களே உண்மையைக் கூறிவிடுவார்களோ என்ற நிஜமான அச்சம்தான் காரணம்.

ஹிஜாப் இஸ்லாமியப் பெண்களின் மீது சுமத்தப்பட்டதற்கு காரணங்களாகக் கூறப்படும் சில காட்சிகளைக் காண்போம்.

காட்சி-1
முஹம்மதிற்கு, ஜைத் என்றொரு வளர்ப்பு மகன். அவனது மனைவி ஜைனப். பல காரணங்கள் கூறப்பட்டாலும், இறுதியில் மருமகளையே தனது மனைவியாக்கிக் கொள்வதில் முடிந்தது. குர்ஆனில் என்னென்ன கட்டளைகள் இடம்பெற வேண்டுமென்பதை சுமார் மூன்று முறை அல்லாஹ்(!)விற்கே ஆலோசனை கூறியுள்ளார் முஹம்மதுவின் அல்லக்கைகளில் ஒருவர்.

புகாரி 4790 உமர்(ரலி) அறிவித்தார்:
 நான், 'இறைத்தூதர் அவர்களே! தங்களிடம் நல்லவரும் கெட்டவரும் வருகின்றனர். எனவே, தாங்கள் (தங்களின் துணைவியரான) இறை நம்பிக்கையாளர்களின் அன்னையரை பர்தா அணியும்படி கட்டளையிட்டால் நன்றாயிருக்குமே!' என்று சொன்னேன். அப்போது அல்லாஹ் பர்தா (சட்டம்) தொடர்பான வசனத்தை அருளினான்.

உமர் சொன்னார்; அல்லா கொடுத்தார்………

காட்சி-2
புது மனைவியுடன் பொழுதைக் கழிக்க நினைத்ததில் விழுந்தது மண். முகமதுவின் திருமணம் ஜேனப்போடு முடிந்ததும் உறவினர்கள் சமயம் புரிந்து விலகவில்லை. //இது நபிக்குத் தொந்தரவாக இருக்கும். உங்களிடம் (கூற) அவர் வெட்கப்படுவார். (நபியின் மனைவியரான) அவர்களிடம் எதையேனும் நீங்கள் கேட்டால் திரைக்கப்பால் இருந்தே கேளுங்கள்!. அவருக்குப் பின் ஒரு போதும் அவரது மனைவியரை நீங்கள் மணக்கவும் கூடாது.’’ என்று குர்ஆன் 33:53 வஹி மூலம் இறங்கி விடுகிறது.

முஹம்மதின் மனைவியர்கள் ஹிஜாப் கடைபிடிப்பவர்களல்ல. விருந்திற்கு வந்தவர்கள், அவரை அன்று வெறுப்பேற்றியிருக்கவில்லையெனில் ஹிஜாப்- பர்தா பற்றிய அறிவிப்புகள் வெளியாகியிருக்காது என்பது எளிமையான விளக்கம்.

குர்ஆனின் ஒவ்வொரு வார்த்தையும் இப்பிரபஞ்சம் படைக்கப்படுவதற்கு முன்பே லவ்ஹுல் மக்ஃபூல் என்ற ஏட்டில் அல்லாஹ் எழுதிவைத்தவாறே வெளியாகிறது என்ற குர்ஆனின் கூற்றை நம்பினால், அல்லாஹ்வின் திட்டப்படி விருந்தினர்கள் முஹம்மதின் வீட்டிற்கு வரவழைப்பட்டு, வீட்டிற்குள் எட்டியும் பார்க்க வைத்து, முஹம்மதுவும் எரிச்சலூட்டப்பட்டார்; பின்னர், முஹம்மதை ஆதரித்தும், தோழர்களைக் கண்டித்தும் குர்ஆன் வசனங்களையும் வெளியிட்டுக் கொண்டான் என்பது தெளிவு நிரம்பிய குர்ஆனின் குழப்பமான விளக்கம்.

இதில் எந்த விளக்கத்தையும் தேர்ந்தெடுக்கும் வாய்ப்பை வாசகர்களிடமே விடுகிறேன்.

இதனோடு சொல்ல விரும்புவது, குர்ஆன் 33:53-ம் வசனத்தின் இறுதிப்பகுதி முஹம்மதின் மனநிலையை மிகத் தெளிவாக உணர்த்துகிறது. அதாவது ஜைத்தைக் காணச் சென்ற பொழுது திரை விலகியதாலே மருகளான ஜைனப்பின் மீது காமம் பிறந்தது. அதே முறையில், வேறு ஒருவர் தன் மனைவியர்களையும் கவர்ந்து சென்று விடக்கூடாது என்ற முஹம்மதின் கவலையை அல்லாஹ், வஹியின் மூலம் இங்கு சரிசெய்கிறான்!

முஹம்மது, தனது வயதான காலத்தில் எண்ணற்ற மனைவிகளையும், வைப்பாட்டிகளாக அடிமைப்பெண்களையும் தனது அந்தப்புரத்தில் நிரம்பச் செய்திருந்தார். தானாக முன்வந்து முஹம்மதிற்கு தங்களை தாரைவார்த்துக் கொண்ட பெண்களும் உண்டு. இவர்களில் ஸவ்தாவைத் தவிர மற்றுள்ள அனைவருமே இளம்வயது அழகிகள். இவர்களை கட்டுப்பாட்டில் வைக்க முஹ்ம்மதிற்குத் தெரிந்த ஒரேவழி அல்லாஹ்தான். அவனது தலையில் ஒரு தட்டு தட்டினால் குர்ஆன் வசனங்களைக் அள்ளித் தெளித்துவிட்டுப் போகிறான்!

முஹம்மதின் மீது அபாண்டமாக பழிசுவத்துவதாக நீங்கள் நினைக்கலாம். அவர் பெண்கள் விஷயத்தில் மிக பலவீனமான மனநிலையைக் கொண்டவர்; அவரது மனநிலை எப்படியிருந்தது என்பதை விளக்க இன்னொரு ஹதீஸைக் காண்போம்.

முஸ்லீம் ஹதீஸ் 2718
ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் :
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஒரு முறை) ஒரு பெண்ணைப் பார்த்தார்கள். அப்பெண்(ணின் அழகு) அவர்களைக் கவர்ந்தது. உடனே அவர்கள் தம் துணைவியார் ஸைனப் (ரலி) அவர்களிடம் சென்றார்கள். அப்போது அவர் தமக்குரிய ஒரு தோலைப் பதனிட்டுக் கொண்டிருந்தார். அவரிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது தேவையை நிறைவேற்றிவிட்டுப் பிறகு தம் தோழர்களிடம் புறப்பட்டு வந்து, "ஒரு பெண் (நடந்து வந்தால்) ஷைத்தான் (தூண்டிவிடும்) கோலத்திலேயே முன்னோக்கி வருகிறாள்; ஷைத்தான் (தூண்டிவிடும்) கோலத்திலேயே திரும்பிச் செல்கிறாள். எனவே, உங்களில் ஒருவரது பார்வை ஒரு பெண்ணின் மீது விழுந்து அவள் (அழகு) அவரைக் கவர்ந்து விட்டால் உடனே அவர் தம் துணைவியிடம் செல்லட்டும். ஏனெனில், அது, அவரது மனத்தில் தோன்றும் (கெட்ட) எண்ணத்தை அகற்றிவிடும்'' என்று கூறினார்கள்.

அந்தப் பெண்ணின் அழகு, முஹம்மதைக் கவர்ந்ததாம் உடனே அவரது உணர்வுகள் கிளர்ந்தெழுந்து விட்டதாம்; அதைத் தணித்துக் கொள்ள தனது மனைவியை நாடி சென்றுவிட்டாராம். எத்தனை கேவலமான மனிதராகக் காட்சிப்படுத்தப் படுகிறார். அல்லாஹ், குர்ஆன் வசனங்களை கூறிக் கொண்டிருப்பதை நிறுத்திவிட்டு புலனடக்கம் என்றால் என்னவென்பதை முஹம்மதிற்குக் கற்றுக் கொடுத்திருக்கலாம்.

 புகாரி ஹதீஸ் 29 
 'எனக்கு நரகம் காட்டப்பட்டது. அதில் பெரும்பாலோர் பெண்களாகக் காணப்பட்டனர்.

முஹம்மதிற்கு எப்பொழுதுமே பெண்களின் மீது நல்ல கருத்து இருந்ததில்லை, அவரது இத்தகைய எண்ணங்கள், பெண்களின் மீது அர்த்தமற்ற கட்டுபாடுகளை விதிக்கத் தூண்டியது.

 காட்சி-3
முஹம்மதின் மனைவியர்கள், தங்களது தேவைகளுக்காக சுதந்திரமாக வெளியில் சென்றுவருபவர்களாக இருந்துள்ளனர் என்பதற்கு குர்ஆன் 33:33 நமக்கு போதுமான ஆதாரமாக இருக்கிறது.

புகாரி ஹதீஸ்- 4795
இதில் கூறுவதை வைத்துப் பார்க்ல்கும் போது முஹம்மதின் மனைவியர்கள், வீட்டினுள் அடைத்துப் பாதுகாக்கப்பட வேண்டிய பொருள் என்பது உமரின் கருத்து என்பது தெளிவாகத் தெரிகிறது.

33:33 ’உங்கள் வீடுகளிலேயே தங்குங்கள்! முந்தைய அறியாமைக் காலத்தில் வெளிப்படுத்தித் திரிந்தது போல் திரியாதீர்கள்! தொழுகையை நிலை நாட்டுங்கள்! ஸகாத்தைக் கொடுங்கள்! அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் கட்டுப்படுங்கள்!... என்ற அல்லாவின் கட்டளையும் முகமதுவின் மனைவியருக்கு மட்டும் வருகிறது. ஆனால் அது அனைவருக்குமாக பின்னால் பொதுமைப்படுத்தப் பட்டு விட்டது.

இஸ்லாமியர்கள் கூறும் ஹிஜாப் நடைமுறைகள் :
ஹிஜாப் என்பது குறிப்பிட்ட நிறம், மற்றும் வடிவத்திலானது அல்ல. எந்த நிறத்திலும், எந்த வடிவத்திலும் இருக்கலாம். முகம், முன் கை தவிர மற்ற பகுதிகளை அது மறைக்கும் வகையிலும், தளர்வான ஆடைகளால் உடலின் பரிமாணங்கள் தெரியாதவாறு மறைத்திருக்க வேண்டும் என்பதே இன்றைய விதியாகும் என்கிறது வஹாபியத் தரப்பு.

 "சீரழிவுக்கு பெண்களின் முகமே ஆரம்பப் புள்ளி" என்று கருதும் மற்றொரு தரப்பான ஆப்கான் மற்றும் தமிழக தாலீபான்களும், பொறுப்பற்று ஊர்சுற்றித் திரியும் தப்லீக்வாதிகளும், முகம் உட்பட முழுவுடலும் கட்டாயமாக மறைக்கப்பட வேண்டுமென்று வாதிடுகின்றனர். அவ்வாறே அவர்கள் தங்களது இல்லப்பெண்களுக்கு, கூடுதலாக கையுறை மற்றும் காலுறைகளை அணிவித்து, மூடி, மூட்டையாகக் கட்டியும் வைத்துவிட்டனர்.

இது பெண்களை அவமதிக்கும் கேடுகெட்ட பைத்தியக்காரத்தனம் என்ற விமர்சனங்கள் எழும்பொழுது, இஸ்லாம் முகம், கை மற்றும் கால்களை மூடி மறைக்கச் சொல்லவில்லை என்று நழுவுகிறது வஹாபிய தரப்பு.... இஸ்லாமியப் பெண்களை அவர்களது நடமாடும் கூடாரங்களிலிருந்து விடுதலையளிக்க முல்லாக்கள் தயாரில்லை.

இஸ்லாமியப் பெண்களை மூட்டைகட்டி வைப்பதற்கு குர்ஆன் 24 அத்தியாயத்தின் 31–ஆம் வசனத்தை மிக முக்கியமான ஆதாரமாகக் காண்பிக்கின்றனர். இவ்வசனம், பெண்கள் தங்கள் உடலின் எந்தப் பகுதியை மறைக்க வேண்டுமென்பதையும், எந்தப் பகுதியை வெளிப்படுத்தலாம் என்பதையும் வரையறை செய்வதாக அவர்கள் கருதுகின்றனர்.

குர்ஆன் 24:31, தமது பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறும் தமது கற்புகளைப் பேணிக் கொள்ளுமாறும் நம்பிக்கை கொண்ட பெண்களுக்குக் கூறுவீராக! அவர்கள் தமது அலங்காரத்தில் வெளியே தெரிபவை தவிர மற்றவற்றை வெளிப்படுத்த வேண்டாம். தமது முக்காடுகளை மார்பின் மேல் போட்டுக் கொள்ளட்டும். ... ” khumurihinna ala juyubihinna” என்பது எதைக் குறிக்கிறது?

’கிமார்’ என்ற சொல் எதைக் குறிப்பிடுகிறது என்ற குழப்பம் குர்ஆன் விரிவுரையாளர்களுக்கிடையே இருந்துள்ளது. ...கிமார் என்றால் முகத்தை மூடும் ஆடை என்ற கருத்து தவறானது. தலையை மறைக்கும் துணி என்பதே இதன் சரியான பொருள். கிமார் என்பது முகத்திரை அல்ல. தலைத்துணி தான் என்பது இதிலிருந்து தெளிவாகின்றது... கிமார்(khimar)” மறை, மூடு என்று பொருள் கொள்ளலாம். குர்ஆனில் இருப்பதை மறைத்தும் இல்லாததை திணித்தும் அப்பாவி மக்களை ஏமாற்றுவதன் மூலம், தங்களது கடவுளின் மானத்தைக் காப்பாற்ற நினைக்கின்றனர். குர்ஆன் தெளிவானது, நன்கு விளக்கப்பட்ட புத்தகமென்று தன்னைத் தானே சான்றிதழ் வழங்கிக் கொள்வதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

உண்மையில், பர்தா-புர்கா-ஹிஜாப் என்ற பெயரில் பெண்களை தலைமுதல் கால்வரை மூடிக்கொள்ளுமாறு குர்ஆன் அறிவுறுத்தவில்லை. ஜைனபுடனான தனது திருமண(வலீமா) விருந்தில், தனது தோழர்களின் செய்கையால் கடுப்பான முஹம்மது, தனது மனைவியரை திரைக்குள் மறைந்திருக்க உத்தரவிட்டார். அதையே காரணமாகக் கொண்டு மற்ற பெண்களின் மீதும் திரையைத் திணிப்பது அர்த்தமற்றது.

ஆப்ரஹாமிய மதங்கள் பிற நாகரீகங்களை ஆக்கிரமித்து ஆதிக்கம் செலுத்தி; உள்ளூர் மக்களை இரண்டாம் தர குடிமக்களாக்கிய நிகழ்வுகளை வரலாற்றில் காணமுடியும். அவர்கள், தலையில் முக்காடு அணியாத உள்ளூர் பெண்களை நாகரீகமற்றவர்களாக வரையறை செய்தனர்.

’பர்தா’ முறையின் வாயிலாக முல்லாக்கள், தங்களது பெண்களை அறிவற்றவர்களாகவும், தங்களது உடலால் ஆண்களைத் தவறான வழிக்கு கொண்டு செல்பவர்களாகவும், ஆண்கள் அனைவருமே அடக்க முடியாத காமவெறி பிடித்து அலையும் மிருகங்களாகவும் சித்தரிக்கின்றனர். 
வரலாற்றின் சக்கரங்களை பின்னோக்கி இழுக்கும் இவர்களின் செயல், முன்னேறிய ஒரு நாகரீக சமுதாயத்திற்கு அவமானமே!

இன்று தமிழ் நாட்டில் மதவியாபாரிகளின் ”புர்கா போடும் புரட்சி” என்ற பீற்றலுக்கு பின்னால் மறைந்திருப்பது, திருமணச் சந்தையில் தங்களது பிள்ளைகள் விலைபோகாமல், மற்றவர்களால் எங்கே நாம் அவமானப்பட்டு விடுவோமோ என்ற ஒவ்வொரு அப்பாவி முஸ்லீம் பெற்றோர்களின் அச்சம் மட்டுமே!









*

3 comments:

Unknown said...
This comment has been removed by a blog administrator.
வேகநரி said...

பெண்களை மூடி வைக்கும் முறை வந்தது பற்றி அருமையான விளக்கம்

வேகநரி said...

முகமதுவின் சரியான தற்கால வாரிசு போகோ ஹராம் என்ற முகமதுவின் நைஜீரியா புனித போராளிங்க தலைவர் தான் என்று நினைக்கிறேன். அதன் தலைவர் சொல்றார் தாங்க கடத்தி வைத்திருக்கும் பெண்களை அடிமைகளாக விற்க போறாங்களாம் .அந்த பெண்கள் அல்லாஹ்வின் சொத்துக்கள், அல்லாஹ் அவர்களை விற்க எனக்கு உத்தரவிட்டுள்ளார். அவர் உத்தரவை நான் நிறைவேற்ற வேண்டும்.
http://www.news.com.au/world/seven-shocking-facts-about-boko-haram-the-group-that-kidnaps-schoolgirls/story-fndir2ev-1226909076238

Post a Comment