Tuesday, November 08, 2005

103. மரணம் தொட்ட கணங்கள் ...4

* முதல் கணம் ...

* இரண்டாம் கணம் ...

* மூன்றாம் கணம் ...

E.C.G.பார்த்த டாக்டர் நேரே போய் I.C.U.வில் படுங்க என்றார். கொஞ்சம் அதிர்ச்சிதான். தனியாக பைக்கில் சென்றிருந்தேன். வீட்டுக்குப் போயிட்டு காலையில் வந்து விடட்டுமா என்றேன். E.C.G. சரியாக இல்லை என்றார். உடனே I.C.U.-வில் வைத்து மருத்துவம்  பார்க்க வேண்டும் என்றார். வேறு வழியில்லை.

.வீட்டில் துணைவிமட்டும் இருந்தார்கள். என்ன செய்வது, observation-ல் இருக்கவேண்டியதிருக்கிறதாம்; காலையில் வருகிறேன் என்று அவர்களிடம் ஒரு பொய் சொல்லிவிட்டு, I.C.U. போனேன். அங்கே போனால் அதுக்குப் பிறகு ஓரிரு நாட்களுக்காவது என்ன ஏது என்று ஒன்றும் தெரியாது; மயக்க மருந்து கொடுத்து அரை விழிப்பில் வைத்திருப்பார்கள். துணைவியார் பக்கத்து வீட்டு மக்களின் உதவியுடன் அன்றிரவே மருத்துவமனை வந்து வெளியே காவல் தெய்வமாக உட்கார்ந்து இருந்தார்களாம். இரண்டு நாட்கள் கழித்து discharge. இம்முறை டாக்டர் angiography பார்த்து விடுங்கள். என் ‘நீண்ட’ experience-ல் angio என்றாலே ஒரே மாதிரி வசனம்தான் மருத்துவர்களிடமிருந்து அடுத்து வரும்: “நல்ல வேளை; சரியான நேரத்தில் வந்திருக்கிறீர்கள்; 3/4 blocks இருக்கு; உடனே அறுவை சிகிச்சை பண்ணி ஆகணும்”. டாக்டரிடமே இதைச் சொன்னேன்; நல்ல பதில் ஒன்று கொடுத்தார். “கடந்த இரண்டு நாளில் 60-க்கும் மேல் இதய நோயாளிகளைச் சோதித்து, அதில் உங்களையும் சேர்த்து இரண்டு பேரை மட்டும் angio-வுக்கு அனுப்பியுள்ளேன். அதனால், அநேகமாக ஒரே மாதிரிதான் ரிசல்ட் இருக்கும் என்றார். ஆக, முடிவாகிவிட்டது - அறுவைதான் என்று.

மனத்தையும், பணத்தையும் தயார் நிலை கொண்டுவர சின்னாட்கள் எடுத்தது. அதற்குள் டாக்டரும் அவசரப் படுத்தினார். அக்டோபர் கடைசியில் - 23-ம் தேதி என்று நினைக்கிறேன். மதுரை அப்பல்லோவில் மாலை அனுமதிக்கப்பட மனைவியோடு சென்றேன். பணம் கட்ட என்று அங்கிங்குமாய் அலைந்து கடைசியில், அறை வாங்க ரிசப்ஷன் சென்றேன். patient எங்கே அன்றார்கள்; நான்தான் என்றேன்; மேலும் கீழுமாய் பார்த்துவிட்டு அறைக்கு அனுப்பினார்கள்! வீட்டுக்கார அம்மாவிடம் அதைச் சொல்லி…appearances are deceptive என்ற தத்துவத்தைப் பற்றிப் பேசிக்கொண்டோம்!

அடுத்த நாள் angio; சொன்னது மாதிரியே 4 ப்ளாக்குகள்; மூன்றில் bye-pass செய்ய வேண்டும் - உடனே என்றார்கள். தெரிந்ததுதானே… 28-ம் தேதிக்கு நாள் குறிக்கப்பட்டு அதற்கு முந்திய நாளே அட்மிட் ஆனேன். 27-ம் தேதி மாலை ஒரு சீனியர் நர்ஸ் வந்து, surgery பற்றிய முழு விபரம் கூறினார். மொத்தமே 25-30 நிமிடம்தான் உண்மையில் surgery இருக்கும்; ஆனால், ஓரளவு மயக்கம் தெளிந்த பின்பே தியேட்டரை விட்டு நோயாளிகளை வெளியே கொண்டு வருவார்கள். அதில் சிலருக்கு இரண்டு மணி நேரம் ஆகலாம்; இன்னொருவருக்கு மூன்று மணி நேரம் பிடிக்கலாம். அந்த நேர தாமதங்களை வைத்துப் பயப்படக்கூடாது என்பது போன்ற அறிவுரைகள் என் மனைவிக்கும், வந்து சேர்ந்துவிட்ட மகள்களுக்கும்; எனக்கு என்னென்ன risks இருக்கின்றன்; எப்படி பாதியிலேயே எல்லாமே ‘டப்புன்னு’ நிக்கிறதுக்கு சான்ஸ் இருக்கு.. வேற என்ன குளறுபடிகள் வரலாம்; bleeding heart surgery (இதயத்தை ‘அதுபாட்டுக்கு’ வேலை செய்யவிட்டுவிட்டு bye pass பண்ணுவது), இல்லையேல் heart-lung machine பொறுப்பில் உடம்பைக்கொடுத்துவிட்டு, இதயத்தை ‘ஒரு கை’ பார்ப்பது என்பது அறுவை மேசையில்தான் முடிவு செய்யப் படும் … இப்படி பல பயமுறுத்தல்களும், ஆலோசனைகளும். மக்கள் நன்றாகவே பயந்து போனார்கள். I think I was above all those things. A sort of emptiness…நம் மொழியில் அதற்குப் பெயர் என்ன - “கையறு நிலை” என்பதுதானே?

அடுத்த நாள் - D-Day - காலையிலேயே தியேட்டருக்கு stretcher-ல் பயணம்; வழியில் ஆல்பர்ட் (’நம்ம திருட்டுத் தம் கூட்டாளி !)என்னிடம் குனிந்து தைரியம் சொன்னான்; அவனிடமிருந்து பெரும் சிகரெட் நாற்றம்; ‘இப்படி அடிச்சிதான் நான் இப்படி போறேன்; நீ இன்னும் விடமாட்ட, இல்ல என்றேன். (சிரிச்சிக்கிட்டே ஜோக் மாதிரி நான் சொன்னதாக அவன் பின்னால் சொல்லி, எப்படி’டா, அந்த நேரத்தில் உன்னால ஜோக் அடிக்க முடுஞ்சுது என்றான்.)

தியேட்டருக்கு நுழைவதற்கு முன் உள்ள முன்னறையில் படுக்க வைத்தார்கள்; சில பல ஊசிகள். மயக்கநிலைக்குச் சென்று கொண்டிருந்தேன். அடுத்த ஒரு stretcher-க்கு மாற்றியதை உணர்ந்தேன்; அது மிக மிக ‘சில்’லென்று இருந்தது.  உள்ளே எடுத்துப் போகப்பட்டேன். தலைக்குமேல் ஏதோ ஒன்று - லைட் மாதிரி ஏதாவது இருக்கலாம்; பள பளவென்று இருந்தது. அதில் என் உருவம் ஓரளவு தெரிந்தது; ஏதோ சிலுவையில் அறையப் போவதுபோல் கைகளை நீட்டி வைத்திருந்தது தெரிந்தது. அதையே பார்த்துக்கொண்டேடேடேடே..…இருந்தேன். அவ்வளவுதான் தெரியும்.


விழித்தபோது post-operative I.C.U. பகுதியில் இருந்தேன். என்னோடு அன்று இன்னும் இருவருக்கும் ‘அறுப்பு’ நடந்ததாம்; பக்கத்தில் ஒருவர்; எதிர்த்தாற்போல் இன்னொருவர். எனக்கில்லாத சில extra-fittings இருந்தது அவர்களுக்கு. என்னவென்றால் எனக்கு bleeding heart surgery. அவர்களுக்கு அப்படியில்லாததால் எக்ஸ்ட்ராவாக தொண்டை, மூக்குக்குள் குழாய்கள் பொருத்தப் பட்டிருந்தன. அது அதிகமான உறுத்தல் தருமாம்; அதனால் இருமல் வரும் வாய்ப்பும் அதிகம். ‘இருமல், தும்மல் வராமல் பார்த்துக்கொள்ளுங்கள்; அப்படி வந்தால் கொடுக்கப் பட்டுள்ள சின்ன தலையணை ஒன்றை வைத்து நெஞ்சின்மேல் வைத்து அழுத்திப் பிடித்துக்கொண்டு இருமும் படி சொன்னார்கள்.’… நான் பரவாயில்லை, ஒரே ஒரு முறை ஒரு தும்மல் வந்து தொலைத்தது. ஆனால் அடுத்த இருவரும் மிகுந்த கஷ்டப்பட்டார்கள். இருவருக்குமே அடிக்கடி இருமல். எனக்கு ஒரே ஒரு தும்மல் என்றாலும் அது இன்னும் நினைவில் இருக்கும் அளவு நெஞ்சில் வலி. மற்றபடி, நெஞ்சு இறுக்கமாக இருந்தது; வலி பின்னால்தான் வந்தது. மூன்றாவது நாளே நான் அந்த இருவரையும் விட தெளிவாகிட்டதாகக் கூறி என்னை அறைக்கு அனுப்பிவிட்டார்கள். வீட்டு மக்களை அன்றுதான் முழு நினைவோடு பார்க்கிறேன்.

இரண்டு நாட்கள் ஆயிற்று. ரவுண்ட்ஸ் வந்த மருத்துவர் வழக்கம்போல் இதயத்துடிப்பு, நாடித்துடிப்பு என்று சோதித்தார்; அவ்ர் முகம் மாறியது; விரைந்து வெளியே சென்ற அவர் மூத்த மருத்துவரோடு திரும்பி வேகமாக வந்தார் - முகத்தில் கவலைக் குறிகளோடு. மறுபடி என்னை விரைவாக I.C.U.எடுத்துச் சென்றார்கள். ஊசிகள்…மருந்துகள்…நான் அரை நினைவுக்கு நழுவினேன். ஓரளவு சுற்றி நடப்பது தெரிகிறது. அறுவை செய்த மருத்துவர் ஸ்ரீதர் ஏதேதோ உத்தரவுகள் பிறப்பிக்க, என்னைச் சுற்றிப் பரபரவென எட்டு பத்து பேர்; என்னவோ நடக்கிறது; நடப்பது அவ்வளவு நல்லா இல்லாத விஷயம்தான் என்ற அளவு புரிகிறது. மருத்துவர் கையில் surgical scalpel.

இதுவே என் வாழ்வின் கடைசி நிமிடங்கள் என்ற நினைவு வந்தது. என்னைச் சுற்றியும் உள்ள பதட்ட நிலை, டாக்டரின் கையில் உள்ள அறுவைக் கத்தி…எல்லாம், அநேகமாக, அங்கேயே நெஞ்சை அறுத்துத் திறக்கப் போகிறார்கள் என்று நினைத்தேன். அப்போது என்னை நானே, என்னிலிருந்து தனியாகப் பார்ப்பதாக உணர்ந்தேன்.’சாகப்போகிறோம்; இப்போது கடவுளைப் பற்றி நினைக்கவேண்டுமோ; கடவுளிடம் ஏதாவது பிரார்த்திக்க வேண்டுமோ என்று ஒரு நினைவலை. எனக்கு நானே பதில் சொல்லிக் கொண்டேன். யோசிச்சி…யோசிச்சி அதெல்லாம் ஏதும் இல்லையென்ற முடிவுக்குத்தான் வந்து விட்டோமே; பிறகு இந்த நினைவு எதற்கு என்று நானே அந்த நினைவிலிருந்து வெளியே கொண்டு வந்தேன். மனைவி, மக்கள் நினைவு அடுத்தது…அவர்களை விட்டுவிட்டுப் போகிறோமோ என்று ஒரு வேதனை வந்தது. அடுத்த நினைவு: Osho சொல்லியது என்று நினைக்கிறேன்; only living is painful and not dying. நாம இப்போ செத்துட்டம்னா, நமக்குஅதன்பின் தொல்லை ஒன்றுமில்லை. பாவம் உயிரோடு இருப்பவர்கள்தான் கஷ்டப்படுவார்கள் என்ற நினைவு நெஞ்சில் நின்றது. . வீடு திரும்பிய சின்னாளில் நான் எழுதிவைத்த ஆங்கிலக் குறிப்பில் உள்ள ஒரு வாக்கியம் மருத்துவ மனையின் அந்த கணத்தை முழுமையாகச் சொல்லும் என்று நினைப்பதால்… : அதை இங்கு திரும்பச் சொல்கிறேன்:-- It was like the living Sam looking down on the dying Sam.

‘தப்பித்து வந்தானம்மா’ அப்டிங்கிறது மாதிரி மறுபடி அறை வந்து, மக்கள் சிரிப்பைப் பார்த்து… ம்…ம்… நாலு வருஷம் முழுசா ஓடியிருச்சோ…? மருத்துவ உலகின் அதிசயமாகச் சில விஷயங்கள் இருந்தன. விலா எலும்புகளின் நடுவில் அறுத்து, நெஞ்சைப் பிளந்து, காலில் இருந்து எடுக்கப்பட்ட ரத்தக் குழாய்களை வைத்து, இதயதிற்குச் செல்லும் அடைபட்ட ரத்தக் குழாய்களைச் சீர் செய்து, மறுபடி நெஞ்சுக் கூட்டை மூன்று இடங்களில் ‘கம்பிகளால் முடுக்கி’, என்ன, …படிக்கும்போதே தலை சுற்றுகிறதா என்ன…?..இவ்வளவு ‘வேலை’ நடந்த பிறகும் ஓரிரு நாளிலேயே காலில் இரத்தக்குழாய் எடுப்பதற்காக போட்ட கீறல் சரியாகி விட்டது; நெஞ்சில் மூன்று சின்ன பாண்டேஜ் மட்டும்தான்; அதுவும் முதல் வாரத்தில் மட்டும்தான்.

இன்னொரு சோதனை; (echo cardiogram..?)படுக்கவைத்து இதயத்தின் உட்கூறு தெரிய, அதில் புள்ளிகள் பலவைத்து, plot செய்து…ஒரு சின்ன வயது கிறித்துவப் பெண் எனக்கு அந்தச் சோதனையைச் செய்து கொண்டிருந்தார்கள். அநேகமாக இதயத்தின் உட்சுவர்களின் நிலை பற்றித் தெரிந்துகொள்ள செய்யப்படும் சோதனை என்ற அளவு புரிந்தது. அவர்களிடம் கேட்டேன்; ஆமாம் என்றார்கள்.

‘இதயச்சுவர்கள் எந்த அளவு damage ஆகியுள்ளது’ என்றேன்.

‘45-50 விழுக்காடு’ என்றார்கள்.

‘பரவாயில்லையே. அவ்வளவு போன பின்னும்கூட வண்டி இப்படி ஓடுதே’ என்றேன்.

என் பெயரிலிருந்து என்னைக் கிறித்துவனாக நினைத்து,‘கடவுள் (’கர்த்தர் என்று வாசித்துக்கொள்ளவும்!) அவ்வளவு உன்னதமாகப் படைத்திருக்கிறார்’ என்றார் அவர்.

‘கடவுள் படைச்சிருந்தா இந்த மாதிரி ஓட்ட ஒடசலாவா படைச்சிருப்பார்’ என்றேன்.

‘அவர் நல்லாதான் படைச்சிருக்கார்; நாமதான் அதை சரியா வச்சுக்கிறதில்லை’ -இது அவர்.

‘சாமி படச்ச விஷயமா இருந்தா நாம என்ன பண்ணினாலும், அது பாட்டுக்கு நல்லா இருந்தாதான் சாமி படச்சதுக்கு ஒரு மரியாதை இருக்கும்’ - இது நான்.

இப்படி படுக்கப்போட்டு, அறுத்த பிறகும் உனக்குப் புத்தி வரலையே; - இது அவர் தம் மனசுக்குள் சொல்லிக்கொண்டது. பதில் பேசாமல் ஒரே ஒரு முறை முறைத்துவிட்டு, தன் வேலையப் பார்த்தார்கள்.

2001,நவம்பர் 8-ம் தேதி - அறுவை முடிந்த பத்தாம் நாள் discharge. கடைசி நேர வேலைகள் எல்லாம் முடித்து நீங்கள் போகலாம் என்று கூறிய பிறகும், wheel chair வரும் என்ற எண்ணத்தில் காத்திருந்தோம். ‘என்ன போக மனசில்லையா?’ என்று நர்ஸ் கேட்டபோது, wheel chair-க்கு காத்திருக்கிறேன் என்றேன். நீங்கள் இப்போ நார்மல்…பேசாமல் நடந்து போங்கள்’ என்றார்கள். நடந்து மின் தூக்கிக்குப் போனேன்! எனக்கே மிகுந்த ஆச்சரியம்!

நான் ஒரு தனிக்கேசு என்று தெரிந்துகொண்டேன். பலருக்கும் ஏதாவது வெளிப்படையான பிரச்சனைகள் இருக்கும்; மூச்சு விட கஷ்டம்; நெஞ்சு வலி; இப்படிஏதாவது. எனக்கோ, வண்டி அது பாட்டுக்குப் போயிட்டு இருக்கும். எந்தப் பிரச்சனையின்றி இருப்பேன். திடீரென்று - somebody throwing a spanner into the wheel - என்பார்களே, அது மாதிரி காத்துப் போன பலூனாய் பொசுக்குன்னு ஏதாவது ஆகிவிடுகிறது. இதனால் எப்போ மணி அடிக்கும் என்று தெரியாத ஒரு ‘மாய வாழ்க்கை’! அதனால் சாவைப் பற்றிப் பேசவோ, நினைக்கவோ எளிதாகத்தான் இருக்கிறது. என்ன, துணைவியாருக்குத்தான் அப்பப்போ கோவம் வரும். ஏன்னா, செத்த பிறகு (கமல்ஹாசன் செஞ்சது மாதிரி) உடம்பைத் தானமாகக் கொடுக்கணும்னு ஆசை. பிள்ளைகளிடம் அது பற்றிப் பேசி சம்மதம் வாங்குவது பிரச்சனையில்லை; ஓரளவு வாங்கியது மாதிரிதான். துணைவியாருடன்…? கேட்டா, இதப் பற்றிப் பேசினா அடுத்த ஓரிரு மணிவரை பேச்சு கிடையாது. சரி, அது வேண்டாம்னா, at least, கல்லறை வேண்டாம்; எரிச்சிடலாம்னு சொன்னாலும் சண்டைக்கு வர்ராங்க. இந்தக் கிறித்துவர்கள் மட்டும், உள்ளதே இடப் பஞ்சம் இங்கே; இதில் நல்ல இடமா பாத்து ஏக்கர் கணக்கில வாங்கி, ஆளுக்கு 6 x 4 ன்னு கொடுத்து இடத்த வீணடிக்கிறார்கள்! இந்துக்களின் வழக்கம் ரொம்பப் பிடிக்குது; முஸ்லீம்காரரகள் கூட புதைத்தாலும் தனி அடையாளம் இல்லாமல் ஒரே இடத்தில் எல்லோருக்கும் ஒன்றாய், சமமாய் முடித்து விடுகிறார்கள். ‘சமரசம் உலாவும் இடம்’ அப்டின்னு சொல்லிட்டு,கிறித்துவர்கள் கல்லறையில் சிலருக்கு பளிங்கு அது இதுன்னு பளபளன்னு பெருங் கல்லறைகள்; அதிலும் உயர்வு தாழ்வுகள்…சரி…அதெல்லாம் பிறகு மக்கள் பாத்துக் கொள்ளட்டும்!

ரொம்ப சாரி’ங்க…ரொம்ப depressing விஷயமா எழுதிட்டேனோ? கண்டுக்காதீங்க…என்ன.இந்த மாதிரி நான் எழுதினதால யாரும் ‘டல்’லா ஆகியிருந்தாலும் கோவிச்சுக்காதீங்க. After all, it is also one point of life..இல்லீங்களா?

இனி இந்த மாதிரி கணங்கள் எழுதல…அடுத்த கணம் இனி எப்பவோ, எப்படியோ…உங்கட்ட அது பற்றியெல்லாம் சொல்ல முடியுமோ, முடியாதோ.அதனால இப்பவே - bye


இம்புட்டு எழுதி உங்களைக் கஷ்டப்படுத்தினதிற்காக உங்கள சிரிக்க வைக்கிறது இப்போது என் கடமையாப் போச்சு. இப்ப உங்கள சிரிக்க வைக்கணும்னா அதுக்கு ஒரு வழி கைவசம் இருக்கு…அதுக்காகத்தான் இங்கேயுள்ள படம்…பாத்தா உங்களுக்கும் சிரிப்பு வருமே…நல்லா சிரிச்சிக்கிங்க, சரியா..?



சந்தோஷமா அடுத்த பதிவில சந்திப்போம்.







Nov 08 2005 08:35 pm சொந்தக்கதை.. edit this
Rate this post at http://www.thamizmanam.com/ Current rating is:
(இதுவரை 7 பரிந்துரைகள்)ஹலோ, வந்தது வந்தீங்க; வந்ததுக்கு ஒரு வேட்டு / வோட்டு போட்டுட்டு போறதுதானே! சும்மா அப்டியே போய்ட்டா எப்படி??
26 Responses
Prem Says: after publication. e -->November 8th, 2005 at 9:52 pm e
Noorandu kaalam vazhga …
சங்கரய்யா Says: after publication. e -->November 8th, 2005 at 10:01 pm e
தருமி,
ஏதோ நானும் உங்களுடன் “அறுவைக்கு” வந்த ஒரு உணர்வு, படம் பார்த்து சிரிப்போ சிரிப்பு
இராமநாதன் Says: after publication. e -->November 8th, 2005 at 10:23 pm e
அடாடா தருமி.. என்ன ஒரு போட்டோ? செவாலியே கன்பர்ம்ட்! )
//இப்படி படுக்கப்போட்டு, அறுத்த பிறகும் உனக்குப் புத்தி வரலையே;//சூப்பர்.
உங்க approach ரொம்ப பிடிச்சிருக்கு. எனக்கு தெரிஞ்ச பலரும் வாழ்க்கையே முடிஞ்சிடுத்துங்கற மாதிரி, ஓவர் கண்ட்ரோல்ட் மோடுக்கு போய் எதையுமே அனுபவிக்காம இருக்கிறாங்க. ஒரு நோய் நம்மள பயமுறுத்த ஆரம்பிச்சுடுச்சுன்னா, அப்புறம் அதற்கு தீர்வே கிடையாது என்பது என் தாழ்மையான எண்ணம்.
அது சரி, என்னைய இளவஞ்சி பதிவுக்கு வரச்சொன்னீங்க. நானும் வந்துட்டேன்.. உங்களத்தான் காணலே. இதுல என்னப் பத்தி டீச்சர்கிட்ட வேற வத்திவக்கீறீங்க.. என்ன நியாயம்? அந்த சொக்கனே வந்தாத்தான் ஆகுமா?
வெளிகண்ட நாதர் Says: after publication. e -->November 9th, 2005 at 6:05 am e
நெஞ்சை கணக்க வைத்த தருணங்கள். இருந்தாலும் முடிவை சுபமாக்கி சிரிக்க வச்சுட்டிங்க
துளசி கோபால் Says: after publication. e -->November 9th, 2005 at 7:08 am e
என்ன தருமி,இப்படி எமனுக்கே ‘கடுக்காய்’ கொடுத்துட்டீங்களே?:-))))
நல்லா இருங்க. இந்தப் படம் நல்லா இருக்கே தருமி.
டீச்சருக்குத் தெரியாமத்தானே போட்டீங்க?
Thangamani Says: after publication. e -->November 9th, 2005 at 7:12 am e
//It was like the living Sam looking down on the dying Sam//
Nice. Take care.
D.Krishnamurthy Says: after publication. e -->November 9th, 2005 at 7:41 am e
It was like the living Sam looking down on the dying Sam.
great!
தாணு Says: after publication. e -->November 9th, 2005 at 10:52 am e
தாடியோடு இருந்த போட்டோ பார்த்து பாவமா இருந்தது. கண்ணாடி போட்டு சிரிக்கிறப்போ பார்க்க சந்தோஷமா இருக்கு.ஆனாலும் வாத்தியாரோட வறட்டு தத்துவங்கள் செத்துப் பொழைச்ச கணத்திலும் போகலை பாருங்களேன்!!
தாணு Says: after publication. e -->November 9th, 2005 at 10:53 am e
உண்மையைச் சொல்லுங்க பல் செட்டா உண்மையான பல்லா?
Awwai Says: after publication. e -->November 9th, 2005 at 11:00 am e
/”‘கடவுள் படைச்சிருந்தா இந்த மாதிரி ஓட்ட ஒடசலாவா படைச்சிருப்பார்’ என்றேன்.”/
அதுதானே! பயலுவ எம்புட்டு மக்கா இருந்தாலும், சோம்பேறியா, ஊதாரியா, கழிசடையா இருந்தாலும், அவிங்க அம்புட்டுபேரயும் 100% வாங்க வச்சிருவாருல எங்க தருமி! சாமியும் அதுபோல நாம என்ன @$#%$*^*&*&**)^&%^% செஞ்சாலும் எல்லாதயும் சரிபண்ணிடனும்!————–And Samji, a lateral thinking: cremation wastes away all the matter we built the body with, and ends up warming up the globe. Burial feeds zillions of bacteria, and then further feeds trees and plants! Don’t worry about real estate value of 6X4! Let us consider it as ‘compost pit’ where we will add value to the soil (and future archeologists)!!
anbudan awwai.
Awwai Says: after publication. e -->November 9th, 2005 at 11:02 am e
namma orukaararu-nu nirubichitteenga! (ilichchavaai photo!)
dharumi Says: after publication. e -->November 9th, 2005 at 10:01 pm e
என் படத்தைப் பார்த்துச் “சிரித்த” அனைத்து ‘சிரிப்பர்களுக்கும்’ நன்றி.
தாணு மாதிரி என் பல்வலியை..இல்ல..இல்ல..என் பல்வலிமையைச் சந்தேகிக்கும் ஆட்களுக்கு எச்சரிக்கை!
dharumi Says: after publication. e -->November 9th, 2005 at 10:16 pm e
இராமனாதன்,
இத…இததான் கேட்டுக்கிட்டு இருக்கேன் - எப்படி ஸ்மைலிகளைப் பின்னூட்டத்தில் ஏற்றுவது என்று. நீங்களாவது சொல்லுங்களேன்.
ஒத்த ஆளா நின்னு எல்லார்கூடவும் மல்லுக்கட்டிக்கிட்டு இருந்ததனாலதான் உங்களை இளவஞ்சி வீட்டுக்குக் கூப்பிட்டேன். நீங்க வந்துதான் எல்லாத்தையும் கிளியர் பண்ணீட்டீங்களே!
செவாலியே கன்பர்ம்ட்!- இது சரி…அதுக்குப் பின்னால என்ன ஸ்மைலி வேண்டியதிருக்கு. கேலியா…ம்ம்..?
“ஒரு நோய் நம்மள பயமுறுத்த ஆரம்பிச்சுடுச்சுன்னா, அப்புறம் …” - அது சரிதான், ஆனாலும் பயமில்லாமல் இருக்க முடியாது; பயத்தை மறைத்துக் கொள்ளவோ, குறைத்துக் கொள்ளவோ முயலவேண்டியதுதான். review-க்கு போகும்போது பக்கத்தில் இருந்த அடுத்த patients-களுக்கு நான் வேடிக்கையாகப் பேசி தைரியமளித்ததைப் பின்னால் இருந்து கேட்டுக்கொண்டிருந்த மருத்துவர், “உங்களை பேசாமல் post-operative counsellor-ஆகப்போட்டு விடலாமா” என்று வேடிக்கையாகக் கேட்டார்.
dharumi Says: after publication. e -->November 9th, 2005 at 10:19 pm e
சங்கரய்யா, வெளிகண்ட நாதர்,இருவருக்கும் ஒரேவித உணர்வுகள். நன்றி
வெளிகண்ட நாதர்,உங்கள் பெயர் ஏதாவது சாமியின் பெயரா?
dharumi Says: after publication. e -->November 9th, 2005 at 10:22 pm e
தங்கமணி, D.K.,
இருவருக்கும் ஒரேவித உணர்வுகள். ஆங்கிலத்தில் எழுதிய அந்தச் சொற்றொடர் பிடித்தமையால்தான் அதை அப்படியே பெயர்த்து எடுத்து இங்கும் இட்டேன். நன்றி
dharumi Says: after publication. e -->November 9th, 2005 at 10:28 pm e
துளசி,
“டீச்சருக்குத் தெரியாமத்தானே போட்டீங்க?” // -- போடும்போது தெரியாது. உங்கள் இந்த பின்னூட்டத்தையும், போட்டோவையும் சேர்த்து காட்டி, அடியிலிருந்து தப்பித்தேன்!!
இராமநாதன் Says: after publication. e -->November 9th, 2005 at 10:29 pm e
: )
இரண்டுத்தையும் gap இல்லாம சேர்த்து டைப் அடிச்சா தானா ஸ்மைலி வந்துட்டு போகுது.
//“ஒரு நோய் நம்மள பயமுறுத்த ஆரம்பிச்சுடுச்சுன்னா, அப்புறம் …” - அது சரிதான், ஆனாலும் பயமில்லாமல் இருக்க முடியாது; பயத்தை மறைத்துக் கொள்ளவோ, குறைத்துக் கொள்ளவோ முயலவேண்டியதுதான்.//பயம் எல்லாருக்கும் இருக்கும், தருமி. restrict செஞ்சுக்கறதுக்கும் முழுக்கவே isolate செய்வதற்கும் வித்தியாசம் இருக்கில்லையா? அதிகமா பயப்பட்டு, அந்த பயமே நம்ம வாழ்க்கையின் எல்லா விஷயங்களையும் dictate செய்யற அளவுக்கு போகக்கூடாது என்பது தான் நான் சொல்ல வந்தது.
dharumi Says: after publication. e -->November 9th, 2005 at 10:29 pm e
ஏங்க தாணு,
பல்லைப் பத்தித் தப்பா சொன்னீங்க - போனா போது, , பிழைச்சுப் போங்க. ஆனா, அதுக்குப் பிறகு என்ன : “வாத்தியாரோட வறட்டு தத்துவங்கள் …” //-
- எப்படி நீங்க இப்படிச் சொல்லலாம்; சாமி இருக்கு, பூதம் இருக்கு அப்டின்னா பசுமை; நாங்க சொல்றதெல்லாம் வறட்டுத் தத்துவமா…? (நிஜப் பல்லைக் கடிக்கிற சத்தம் கேட்குதா..?)
dharumi Says: after publication. e -->November 9th, 2005 at 10:33 pm e
அவ்வை,
அட போப்பா…நீயும் உன் entropy-யும்!
“அம்புட்டுபேரயும் 100% வாங்க வச்சிருவாருல எங்க தருமி! ” // -- சரி, தருமியால அது முடியாதுதான். என்னையும் மீறி சில பசங்க நல்லா வந்திர்ராங்க - உன்ன மாதிரி. அது வேற விஷயம். நீ சொல்றபடி பார்த்தா, தருமியையும் சாமியையும் ஒரே தட்டிலல்ல வச்சிருக்க. உதாரணம் தப்பு மாதிரில்ல தெரியுது..?
Bobby Says: after publication. e -->November 10th, 2005 at 12:58 am e
Hi Tharumi,
I’d like to create a blog acc. for me.Can you let me know the way you create, add the blog with Thamizmanam, and how to write & upload in Tamilplease?Thank you.-BobbyAlberta, Canada.
moses Says: after publication. e -->November 10th, 2005 at 2:01 pm e
fantastic dharumi……your writing style is nice
ரவிகுமார் Says: after publication. e -->November 10th, 2005 at 3:28 pm e
நிங்க brightன்னு தெரியும், ஆன இவ்வளவு brightன்னு தெரியாது
தருமி Says: after publication. e -->November 10th, 2005 at 8:21 pm e
பிரேம்,உங்க பேரு எப்படி முதல்ல விட்டுப்போச்சுன்னு தெரியலை. மன்னிக்கணும்.
பிரேம், மோசஸ், ரவிகுமார்,மூன்று பேருமே முதல் தடவையா வீட்டுக்கு வந்திருக்கீங்கன்னு நினைக்கிறேன். வரவேணும்.நல்ல வார்த்தைகளுக்கு மிக்க நன்றி.
ரவிகுமார் - என் பல்லைப் பத்திதான சொல்றீங்க…?
ரவிகுமார் Says: after publication. e -->November 10th, 2005 at 9:46 pm e
இது இரணடாவது முறை தருமி, முதல் முறை உஙகளோட ஒருக்கேள்விக்கு பதில் சொல்ல முயற்சிசெத்தேன்( வாதியாருன்னு தெரியாம ) . ஆனா உஙக மாணவர் அவ்வை பரிசு தட்டிடாரு
வெளிகண்ட நாதர் Says: after publication. e -->November 10th, 2005 at 10:21 pm e
அட நீங்க ஒன்னு, சாமியுமில்ல, பூதமுமில்ல. நாடுவிட்டு நாடு வந்தா நாடோடி, அது மாதிரி ஊரு விட்டு ஊரு போயி, மாநிலம் விட்டு மாநிலம் தாண்டி, பிறகு பொறந்த தேசத்தை வுட்டுட்டு வெளி நாடு வந்து வெளி உலகங்களை கண்டதுனால, வெளி கண்ட நாதர்.. ம்.. ஒண்ணுமில்லை நீங்க சொன்னது வாஸ்தவம் தான், சின்ன வயசுல நாங்க தங்கன வீட்டுக்கு பக்கத்தில இருந்த கோயில்ல இருந்த சாமி பேரு தான்.. வச்சுகிட்ட நல்லாருக்குமின்னு வச்சுக்கிட்டேன்.
Padma Arvind Says: after publication. e -->November 10th, 2005 at 10:49 pm e
கிட்டதட்ட இரண்டு மூன்று மாதங்களுக்கு முன் நானும் அனுபவித்தேன்.

4 comments:

http://rkguru.blogspot.com/ said...

சிரித்தேன்....

தருமி said...

rk guru
//சிரித்தேன்....//

சிரிப்புக்கு நன்றி

Mahesh said...

விசு சார் பதிவில் நீங்க கொடுத்திருந்த
மரணம் தொட்ட கணங்கள் ...4 பதிவின் லிங் கிலிக் செய்து வாசிச்சேன். தங்களுக்கு ஏர்பட்ட அட்டாக்-பிரச்சனை அனுபவத்தை நகைச்சுவையோடு
எழுதியவிதம் முந்தைய பகுதிகளையும் வாசிக்க தூண்டியது.
எப்படியோ தேடி கண்டுபிடிச்சு வாசித்து முடிச்சிட்டேன் சார்.

மரணம் தொட்ட கணங்கள்...முதல் கணம்.
தங்கச்சாமி, மாட்டு வண்டி, விபத்து...

மரணம் தொட்ட கணங்கள்…2
சைக்கிள், பஸ் இடித்தல்,
செல்ல நினைத்த ரயில் பெரும் விபத்துக்குள்ளானது...

மரணம் தொட்ட கணங்கள்…3
மரணம் தொட்ட கணங்கள் ...4

எல்லாம் படித்தேன்.

தருமி said...

//எப்படியோ தேடி கண்டுபிடிச்சு..//

ஒரு மயில் போட்டிருந்தா உடனே தொடுப்புகள் அனுப்பியிருப்பேனே...

எல்லாம் படித்தேன்.
வாசித்தமைக்கு நன்றி.

இப்பதிவின் பின்னூட்டங்களையும் வாசித்துப் பாருங்கள். நன்கிருக்கும்

Post a Comment