இப்போது மொழிபெயர்த்துக் கொண்டிருக்கும் THE INCARCERATIONS - சிறைக்கம்பிகளுக்குப் பின்னால் .. என்ற நூல் ஒரு வழக்கைப் பின்புலமாக வைத்து எழுதப்பட்டுள்ளது. பீமா கோரேகான் என்ற இடத்தில் நடந்த வன்முறைகளை வைத்து எழுதப்பட்டுள்ளது. அதன் தொடர்பாக 16 பேர் கைது செய்யப்படுகின்றனர், அவர்களில் ஒருவர் உமர் காலித். ஏறத்தாழ ஐந்து ஆண்டுகளாகச் சிறையில் அடைபட்டுக் கிடக்கிறார் - வெறும் விசாரணைக் கைதி என்ற பெயரில் இந்த நீண்ட சிறைவாசம்.
இவரைத்தான் அண்மையில் நடிகர் பிரகாஷ்ராஜ் டெல்லியில் சிறைக்குச் சென்று சந்தித்து வந்தார்.
உமரைப் பற்றி நூலில் வரும் சில வரிகள்:
ரோஹித் வெமுலா என்ற தலித் மாணவர் ஹைதராபாத் பல்கலைக் கழகத்தில் தற்கொலை செய்து இறந்து விட்டார். சாதிப் பிரச்சனையால் அவர் தற்கொலை செய்து கொள்ள தள்ளப்பட்டு விட்டார், அவரின் தாய் ரேணுகா மகனைப் பற்றிப் பேசியமர்ந்ததும், ….
உமர் காலித் ரேணுகாவின் சோகப் புலம்பலுக்குப் பதில் சொன்னார்:
“அவர்கள் உங்கள் மகனைக் கொன்று விட்டார்கள்; இல்லை … அவரை விதைத்து விட்டார்கள். இன்று நிறைய ரோஹித்துகள் முளைத்து விட்டார்கள்.”25ரோஹிதின் மரணம் இந்தியா முழுமைக்கும் ஓர் பேரதிர்ச்சியாக மாணவர்களிடம் பரவியது. பல்வேறு பல்கலைக்கழக வளாகங்களில் சாதி வெறுப்பிற்கு எதிராக மாணவர்கள் அணி திரண்டனர்.2
6உமர் காலித் 2018 ஆகஸ்ட் மாதம் மெல்லிய நூலிழையில் உயிர் தப்பினார். அவரைக் கொல்வதற்காக நடந்த முயற்சிகளிலிருந்து தப்பிவிட்டார்.27அப்படித் தப்பித்தவரை 2020 செப்டம்பர் மாதம் அரசு சிறையிலிட்டது. அவர் செய்த தவறு தலித்துகளின் தன்மானம் காக்கப்பட வேண்டும் என்று போராடியதுதான்.28அன்று மேடையேற்றப்பட்ட மக்களில் மிகவும் முக்கியமானவராக இவர் கருதப்பட்டார். ஜேஎன்யு பல்கலைக்கழகத்தில் - தரத்திற்காக பெரும் புகழ் பெற்ற இந்தப் பல்கலைக்கழகத்தில்- நல்லதொரு மாணவராக புகழ்பெற்ற இவர் இந்துத்துவத்தை எதிர்த்துப் போராடினார். அது மட்டுமல்ல; பிறவியால் அவர் ஒரு இஸ்லாமியர்.29அவர் அன்று மேடையில் பேசியபோது, “நாளை கோரேகானில் நடக்கும் விழா ஆங்கிலேய அந்நியர்களின் வெற்றிக்காக அல்ல; ஆனால் சாதி வெறி பிடித்த ஒரு பேரரசு வீழ்ந்ததின் வரலாறு. அந்தப் பேரரசு கீழ் சாதி என்று நசுக்கப்பட்ட மக்கள் தாங்கள் நடக்கும் பாதையில் ஏற்பட்ட தீட்டை விலக்குவதற்காக முதுகுகளில் விளக்குமாற்றைக் கட்டிச் செல்ல வேண்டுமென்று கட்டாயப் படுத்தினர்.30அந்த அரசை எதிர்த்து தோல்வியடைச் செய்த தலித்துகளின் கொண்டாட்டம்தான் அது.
No comments:
Post a Comment