Thursday, May 29, 2025

1307. THE INCARCERATIONS .. CONTENT



யுக் சௌத்ரி தான் கலந்து கொண்ட கருத்தரங்கில் 2021 ஜூன் மாதம் இதைப் பற்றிய விளக்கங்களை அளித்தார். "நீதிமன்றங்கள் தங்களுக்கு முதுகெலும்பு உள்ளது என்பதை காண்பித்திருக்க வேண்டும். அவர்கள் தன்னிச்சையாக, நியாயத்திற்காகப் போராடுவார்கள் என்று நம்பிக்கையைக் கொடுத்திருக்க வேண்டும். கொடுக்கப்பட்ட சான்றுகளை, தரவுகளை அவைகளின் உண்மைத் தன்மையை உணர்ந்து கொள்ள அவர்கள் முயற்சி எடுத்து இருக்க வேண்டும். அப்படியே இல்லாவிட்டாலும் மற்றவர்கள் எடுத்த முயற்சியை கண்கொண்டாவது பார்க்க வேண்டும். எந்தச் சான்றுகளால் மக்கள் சிறையில் அடைபட்டார்களோ அந்த சான்றுகளை, அதன் உண்மைத் தன்மையைக் காண வேண்டியது நீதிமன்றத்தின் கடமை. அந்தக் கடமை உண்மையாக மேற்கொள்ளப்பட்டதா? இந்தத் தரவுகளை நம்பி, இத்தனை பேரை சிறையில் அடைப்பது எந்த அளவு நியாயம் என்று சிறிதாவது உணர்ந்ததா? அப்பொழுது ஏதும் கூற முடியாத இந்த மக்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்கள். ஆனால் எந்த ஒரு நீதிமன்றமும் கொடுக்கப்பட்ட சான்றுகளின் உண்மைத் தன்மையை கண்டுபிடிக்க எந்த முயற்சியும் எடுத்துக் கொள்ளவில்லை".
பீ.கோ. வழக்கில் சிறைப்பட்டவர்களின் வழக்கை விசாரணை செய்ய ஆரம்பித்த பத்து நீதிபதிகள் தொடர்ந்து இந்த வழக்கிலிருந்து தங்களை விடுவித்துக் கொண்டனர் (recused). 2022 மே மாதம் வரை இந்த வழக்கில் 10 நீதிபதிகள் இவ்வாறு தங்களை விடுவித்துக் கொண்டனர்.85 மும்பை உயர்நீதிமன்றத்தில் மட்டுமே ஐந்து நீதிபதிகள் வழக்கிலிருந்து விலகிக் கொண்டார்கள். அதற்கு முன்பு உச்ச நீதிமன்றத்தில் 5 நீதிபதிகள் கௌதம் நவ்லக்கா அவர்களை விசாரிக்கும் பொழுது விலகிக் கொண்டார்கள்.84 இவ்வாறு விலகிக் கொள்ளும் நீதிபதிகள் அதற்கான காரணங்கள் எதுவும் கொடுக்கத் தேவையில்லை. ஆயினும் நடப்பதைப் பார்க்கும் பொழுது பீ.கோ. வழக்கைத் தொடுவதற்கே பல நீதிபதிகளுக்கு மனதில்லை.
************************
யுஏபிஏ வழக்குகள் அனைத்தும் அரசியல் தொடர்பானவை; ஆகவே இது ஒரு வழக்கமான வழக்கல்ல. அதிலும் இது ஒரு சாதாரண அரசியல் வழக்கு என்றும் கருத முடியாது. ஏனென்றால் இந்த வழக்குகளில் அரசு மிகவும் ஆர்வம் எடுத்துக் கொள்கிறது. ஒரு சாதாரணமான யுஏபிஏ வழக்கில் அரசுகளுக்கு ஆதரவாக நீதிமன்றங்கள் இருப்பது வழக்கமே. ஆனால் இது போன்ற வழக்குகளில் அரசியல் சார்புத்தன்மை அதிகமாக வழக்கின் மீது படிந்துள்ளன. இந்த வழக்குகளில் அரசாங்கம் முதலிலேயே வழக்கின் முடிவை தீர்மானித்து விடுகிறது. ஆகவே நீதிபதிகளும் நீதிமன்றமும் அதிகமாக அரசின் பக்கம் இணக்கமாக இருந்தாக வேண்டும். ஏறத்தாழ அரசு சொல்வதை நீதிமன்றமும் நீதி அரசர்களும் கேட்டுக் கொள்ள வேண்டும் என்ற நிலையை காண்கிறோம்.இந்த நிலை மிகவும் ஆபத்தானது. மட்டுமல்ல ஏறுத்தாழ இதுவே ஒரு பெரும் ஊழல்தான். நாட்டிற்கே இது இழுக்கு", என்று கூறியிருந்தார்.
*************
நீதிமன்றங்களின் மௌனம், நீதி அரசர்களின் அசட்டுத்தனம் மிகவும் வருத்தத்திற்குரிய ஒன்றாக உள்ளது. எந்த காலத்திலும் இல்லாத அளவு நீதியரசர்கள் இவ்வாறு அரசோடு மிகவும் இணைந்து செல்வதை இப்போதுதான் பார்க்கிறேன்"
***************
இந்திரா காந்தி காலத்தில் காங்கிரஸ் அரசு நீதிபதிகளை சிறிது வளைந்து கொடுக்கச் சொன்னது. ஆனால் அவர்களோ ஒரே அடியாக கீழே விழுந்து தவழ ஆரம்பித்து விட்டார்கள். அவர்களை சிறிதே வளைக்க நினைத்தனர்; ஆனால் அவர்கள் வளைந்ததோ மிக அதிகம். மனதில் அத்தனை அச்சம். பல நேரங்களில் அவர்களை தங்கள் வாய்களை அடைத்துக் கொண்டார்கள். அரசின் முன்னால் கைகட்டி அமைதியான தொழிலாளிகள் போல் இருந்தார்கள்".
"அதே போன்ற காடசிகளை நம் கண் முன்னே இன்றும் நாம் காண்கிறோம். அமைச்சர்கள் அரசாங்கத்தின் மேல் கொள்ளும் காதலை விட நீதிபதிகளுக்கு அரசின் மீதான காதல் அதிகமாகி விட்டது. .....
நீதிபதிகளுக்கு ஓர் எண்ணம் இருந்திருக்கும் போலும்: இந்த அரசு உனக்கு என்ன செய்தது என்பதை விட அந்த அரசுக்கு நீ என்ன செய்து விட்டாய் என்று கேட்டுக் கொள் என்ற எண்ணம் நீதிபதிகளிடம் இருந்திருக்கும் போலும்".


No comments:

Post a Comment