சுதாவிற்கு நினைவில் ஒன்று தோன்றியது. அவர் என்னிடம், “நெல்சன் மண்டேலா சொன்னதை நான் வாசித்திருக்கிறேன். அதுதான் இப்போது நினைவுக்கு வருகிறது. ‘வெள்ளை மக்களின் நீதிமன்றத்தில் நான் ஒரு கருப்பு மனிதனாக நின்று கொண்டிருந்தேன்’ என்றார் அவர். ஏறத்தாழ அதே நிலை தான் நமக்கும். பல சமயங்களில் முதலாளிகளின் வழக்காடு மன்றத்தில் அங்கு வேலை செய்யும் ஏழைத் தொழிலாளியின் சொல் எடுபடுமா? அல்லது ஒரு கிராமத்தானாக ஒரு முதலாளியின் நீதிமன்றத்தில் நிற்க வேண்டியதிருக்கும்; அவன் பேச்சு எடுபடுமா? சில சமயங்களில் ஆண்களின் நீதிமன்றத்தில் தனியாக பெண்ணொருத்தி நின்றிருப்பாள். சில சமயங்களில் மாநில நீதிமன்றத்தில் சில மக்களும் அவர்கள் போராட்டமும் நின்று கொண்டிருப்பார்கள். இந்த நீதிமன்றங்கள் எல்லாம் நமக்கானது அல்ல; ஆனால் நமக்கு வேறு வழியும் இல்லை. அனைத்தும் உனக்கு எதிராக நிற்கும்; ஆனால் அவைகளை விட்டு நீ ஓடிவிட முடியாது; ஓடி விடக்கூடாது. எதிர்த்து நின்று உன்னால் என்ன செய்ய முடியுமோ அவைகளையாவது செய்துவிடு” என்றார் சுதா.
“சில வழக்குகளில் சில சமயங்களில் நமக்கு ஒரு தடை உத்தரவு கிடைக்கலாம்; வேறு சில சமயங்களில் சமரச முயற்சிகள் நடக்கலாம். இவைகள் எல்லாம் நமக்கு கிடைக்கும் சில சில நன்மைகள். நாம் விரும்பியது அனைத்தும் கிடைக்காமல் கைநழுவி போனாலும் ஏதோ இப்படி ஒரு சில நன்மைகளும் நடக்கும் வாய்ப்புண்டு. சில சமயங்களில் சமரசங்கள் மூலம் தொழிலாளர்களுக்கு சில லாபங்கள் கிடைக்கும். இப்படி தான் வாழ்க்கையும் வழக்குகளும் போய்க் கொண்டிருக்கின்றன”, என்றார் சுதா.
No comments:
Post a Comment