Thursday, May 29, 2025

1310. THE INCARCERATIONS .. CONTENT







லத்தீன் அமெரிக்கப் பகுதிகளில் உள்ள திருச்சபையைப் பற்றிய கட்டுரைகளை எழுதியிருந்தார். அதைவிட அவர் எழுதிய இன்னொரு புத்தகம் வெகு விரைவில் அனேகரின் எதிர்வினைகளுக்கு உள்ளானது. அந்த நூலின் தலைப்பு: கிறித்துவமும் புரட்சிகளும் (The Church and Revolution). ஏனெனில் இந்த நூல் கிறித்துவ நடைமுறைகளுக்கு எதிரான கருத்துகளோடு வெளிவந்திருந்தது. சமுதாய நல்லெண்ணத்தை வளர்க்க வேண்டும்; அதைத் திருச்சபை வளர்த்தெடுக்க வேண்டும் என்பதே நடைமுறை கருத்தாக இருந்தது. ஆனால் கவ்தார்த் ஐரோப்பா, தென் அமெரிக்கா, ஆப்பிரிக்கா போன்ற நாடுகளில் மீண்டும் மீண்டும் பல புரட்சிகள் தோன்றின. அப்போதெல்லாம் கிறித்துவ மதம் இந்தப் போராட்டங்களுக்கு எதிரான நிலையிலேயே இருந்தது. சமுதாய, பொருளாதாரப் போராட்டங்களை எதிர்த்து கிறித்துவம் நின்றது. ஆனால் பிற மனிதர்களை அடக்கியாளும் உயர்நிலை மக்களுக்கு ஆதரவாக இருந்தது. இதில் இன்னொரு ஆச்சரியம் என்னவென்றால் கவ்தார்த் இரண்டாம் வத்திகன் குழுவில் ஓர் உறுப்பினராக இருந்தார். இந்தக் குழு உலகத்தில் உள்ள திருச்சபை முழுவதிலும் அனைத்து இனத்தவருக்கும் புது மாற்றங்களை எவ்வாறு கொண்டு வருவது என்பதைப் பற்றி அலசும் குழுவாக அது இருந்தது.
-----------------------------
ஜுலியஸ் நெய்ரெர் கிறித்துவத் திருச்சபை பற்றிக் கூறியதையும் வாசித்துக் காண்பித்தார்கள்:
“...கிறித்துவம் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். மக்கள் விழித்தெழுந்து வளர வேண்டுமானால் போராட்டம் தேவையான ஒன்று. … சமுதாய கட்டமைப்புகள், பொருளாதார அமைப்புகள் மனிதனை ஏழ்மைக்குள் அழுத்துகின்றன. அவன் கேவலப்படுத்தப்படுகிறான், தாழ்த்தப்படுகிறான். இவைகளை எதிர்த்துப் போராடா விட்டால் கிறித்துவம் பொருளற்றதாகிவிடும். இதனால் மதத்தில் மீதியாக இருப்பது நம்பிக்கையாளர்களால் நம்பப்படும் மூடநம்பிக்கைகளின் மூட்டையாக மட்டுமே இருக்கும். மனிதன் மேல் கடவுள் வைத்திருக்கும் அன்பை திருச்சபையும், அதன் உறுப்பினர்களும், அமைப்புகளும் இந்தப் போராட்டங்களில் தலைமை எடுத்து கலந்து கொள்ள வேண்டும். இல்லையேல் அது நீதிக்கு புறம்பான கொடுமைகளோடு அடையாளப்படுத்தப்பட்டு விடும்.”



No comments:

Post a Comment