ஒரு பக்கம் மோடி தன் புகழை மேலும் மேலும் வளர்த்துக் கொண்டார் அதே சமயத்தில் பெரும் முதலாளிகள் வளர்ந்து தங்கள் செல்வத்தை மேலும் மேலும் பெருக்கிக் கொண்டார்கள். ஒரே ஒரு சான்றாக, அதானி இந்தியாவில் பெரும் பணக்காரராகவும் உலகத்தின் பெரும் பணக்காரர்களின் பட்டிலியில் குறைந்த காலத்திற்குள் உயர்ந்து விட்டார்.... மோடி முதலமைச்சரான பிறகு குஜராத்தில் அவரது செல்வம் செழிக்கத் தொடங்கியது. வியாபாரம் பரந்து விரிந்தது. அதனை முன்மாதிரியாக வைத்து ‘அதுதான் குஜராத் மாடல்’ என்று அழைக்கப்பட்டது. இந்த வணிக வளர்ச்சி மூலம் அவருடைய வணிக சாம்ராஜ்யம் பெரிதும் விரிவடைந்தது. இந்தியாவின் முக்கியமான துறைமுகங்கள் அதானியின் கைவசம் வந்த பிறகு வணிகப் பொருட்களின் போக்குவரத்து எளிதாயிற்று. அதனோடு ஏழு விமான நிலையங்கள், நாடு முழுவதும் உணவு தானியங்களைச் சேமித்து வைப்பதற்காகச் சேமிப்புக் கிடங்குகள் அனைத்தும் அதானியின் குழுமத்தின் கீழ் வந்தது . பல உலகச் சுரங்கங்களைக் கைப்பற்றி இந்தியாவில் நிலக்கரி உற்பத்தியில் முதல்வரானார்.
நாட்டில் ‘பல்லுயிர்க் காடுகள்’ என்று காப்பாற்றப்பட்ட நிலங்களை சிமெண்ட் தயாரிப்பிற்கும், மின்சக்தி உற்பத்திக்கும், நிலக்கரி சுரங்கங்கள் என்ற பெயரில் அரசு அதானிக்கு வாரிக் கொடுத்தது. காடுகள் அழிந்தன; அதனால் அதானி வளர்ந்தார். ; மின்சாரம் அவர் உற்பத்தி செய்கிறார்; பல தொலைக்காட்சி நிறுவனங்கள் ஊடகங்கள் அவர் தலைமையேற்றார்.45
வளர்ந்தது அதானி என்ற ஒருவர் மட்டும் அல்ல; அவரைப் போல் நிறைய வணிகர்கள் பட்டியலில் உள்ளார்கள். அம்பானி, டாட்டா, பிர்லா போன்ற வணிகர்கள் மோதியின் காலத்தில் வேக வேகமாக பொருளாதாரத்தில் முன்னோக்கிப் பாய்ந்தார்கள்.
2004-ம் வருடத்தில் அதானியின் செல்வம் 1600% எகிறியது. மோடி பிரதமராக ஆன பிறகு 2022-ல் எட்டு பில்லியன் டாலர் அளவில் ஆரம்பித்த அதானியின் வர்த்தகம் 137 பில்லியன் டாலர் அளவு உயர்ந்தது. என்னே ஒரு ராட்சச வளர்ச்சி!
No comments:
Post a Comment