மாவோயிஸ்டுகள் என்று குற்றம் சாட்டப்பட்டு UAPA சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட தலித்துகளும் ஆதிவாசிகளும் விடுதலை பெற வேண்டும் என்று 25 ஆண்டுகளாக வெற்றிகரமாக போராடிக் கொண்டிருப்பவர். நாக்பூரில் தனது தொழிலை செய்து கொண்டிருக்கிறார்
சுரேந்திரா ஏழை மக்களிடம் பணம் ஏதும் வாங்காமல் அவர்களுக்காக வழக்காடுகிறார். ...114அவரின் மனைவி மினல் காட்லிங், “இவர்கள் எல்லோருமே பாவப்பட்ட ஏழை மக்கள்; நல்லது கெட்டது தெரியாத எளிமையான மக்கள்; அவர்களுக்கு சட்டதிட்டங்கள் பற்றி எதுவுமே தெரியாது. நாக்பூர் போன்ற நகரங்களுக்கு வந்ததும் அங்கு இருக்கும் மக்கள் கூட்டமும், வாகன நெரிசலும் அத்தனை ஆச்சரியமாக இருக்கும். அவர்களுக்கு மாடுகள் இழுக்காமல் எவ்வாறு இந்த கார்கள் ஓடுகின்றன என்ற கேள்விகள் அவர்கள் மனதில் இருக்கும் . இப்படிப்பட்ட ஏழை மக்களுக்காக சுரேந்திரா தன் பணியை முன்னெடுத்துச் செல்கிறார்.
இன்னொரு பிரபலமான வழக்கிலும் சுரேந்திரா முழு ஆர்வம் காட்டினார். Dr. G. N. சாய்பாபா ஏறத்தாழ 90% உடல் மரத்துப் போய், வாழ்க்கையைச் சக்கர நாற்காலியில் கடத்துபவர். டெல்லிப் பல்கலைக்கழகத்தில் துணைப் பேராசிரியராக பணிபுரிந்து வந்தவர். மகாராஷ்டிரா காவல்துறை இவர் கல்லூரியில் இருந்து வீட்டிற்கு போய் கொண்டு இருக்கும் வழியில் மறித்து கைது செய்யப்பட்டார். மாவோயிஸ்டுகளோடு தொடர்பில் இருக்கிறார் என்றும், அதற்காக ஆயுள் சிறைத்தண்டனையை 2017 ஆண்டில் பெற்றார். இவருக்காக சுரேந்திரா வழக்காடினார்.
இவர் கைதாகும்போது அவரது வயது 47.அவர் நடத்திய வழக்குகளில் மூன்று வழக்குகளை தவிர அனைத்து வழக்குகளிலும் வெற்றி பெற்ற வழக்கறிஞர் அவர்.
சுரேந்திராவை பொறுத்த வரையில் அவர் மிகவும் பெருமைக்குரிய மனிதர். ஒரு தலித்தாகப் பிறந்து நாக்பூர் நகரின் குடிசைப் பகுதிகளில் தன் வாழ்க்கையை வாழ்ந்தவர். அவருடைய தந்தை ஒரு கைவண்டி ரிக்ஷாக்காரர். ஆனால் அதன் பின் அவர் நகர முனிசிபாலிடியின் சுகாதாரத் தொழிலாளியாக இருந்தார்.
No comments:
Post a Comment