Thursday, May 29, 2025

1311. THE INCARCERATIONS .. CONTENT






மதங்களினால் ஏற்பட்ட முக்கோண வடிவப் படிநிலைகளில் அவர்கள் அடித்தட்டுகளிலேயே அமுக்கி, அழுத்தி வைக்கப்பட்ட மக்கள். இந்த ஒதுக்கப்பட்ட மக்களோடு பல்வேறு உள்மண சாதி மக்கள், அவர்களுக்குள்ளே இருக்கும் உள்சாதியினர் போன்ற அனைவரையும் இணைத்து இந்திய சமூகம் உள்ளது.
சமூகப் படிநிலைகளில் மேலிருந்து கீழாகப் புனிதத் தன்மையும், நில உடைமையும், செல்வமும், அறிவும், வாய்ப்புகளும் குறைந்து கொண்டே வந்து கீழ் நிலையில் உள்ளவர்களை மேலே சொல்லப்பட்ட அனைத்தும் இல்லாத ஒரு நிலைக்கு மேல் தட்டில் உள்ளவர்களால் தள்ளப்பட்டிருப்பார்கள். இதிலும் ஒரு வினோதமான பழக்கம் இந்தச் சமூகத்தில் உண்டு. அந்தப் படிநிலை முக்கோணத்தில் நீங்கள் எங்கே இருக்கிறீர்கள் என்பதை உங்கள் பிறப்பு மட்டுமே நிச்சயம் செய்யும். அந்த நிலையிலேயே தான் நீங்கள் எப்போதும் இருக்க முடியும். அதில் மாற்றமேதுமில்லை. நீங்கள் அறிவில், கல்வியில், பதவிகளில் உயர்ந்தாலும் சாதிநிலை மாறாது.
இந்தப் படிநிலை முக்கோணத்தில் மேல் தட்டில் இருப்பவர்கள் புரோகிதர்களாகவும், அதற்கு அடுத்த நிலையில் இருப்பவர்கள் சத்ரியர்களாகவும் இருப்பார்கள். இந்த இரு இனத்தவரும் மிகவும் சுத்தமான, அதாவது பரிசுத்த சாதிக்கார்களாக இருப்பவர்கள்; வசதிகளிலும்,வாய்ப்புகளிலும் இந்த இருவருக்கே முதலிடங்கள் கொடுக்கப்படும். அதன் பின்வரும் இனத்தவர் வைசியர்; அதற்கும் அடுத்த கடை நிலை ஆட்கள் சூத்திரர்கள் அல்லது பணியாட்கள். இன்னும் இதன் கீழ்ப் படிநிலையில் கூட வைக்கப்படாத மக்களாக தலித் மக்கள் இருக்கிறார்கள். படிநிலையில் கூட அவர்களை வைக்காததற்கான காரணம் அவர்கள் அத்தனை தீட்டுப் பட்டவர்கள்; ஆகவே மிகத் தாழ்ந்தவர்கள்; அவர்கள் மனிதர்கள் தானா என்பதே ஒரு கேள்வியாக இருக்கிறது. அதனால் அவர்கள் குடியிருப்பதும் கூட ஊருக்கு வெளியே தனியே “காலனிகளில்”வாழ்வார்கள்… இல்லை ... வாழ வைக்கப்படுவார்கள். இந்த மக்கள் பொது இடங்களுக்கு வரக்கூடாது, நீர் நிலைகளில் தண்ணீர் எடுக்கக்கூடாது; கோயில் போன்ற புனிதமான இடங்களில் நுழையக்கூடாது. இப்படி அவர்களுக்குப் பல ‘கூடாதுகள்’!

No comments:

Post a Comment