ஹனிபாபு. Associate Prof of English in Delhi University
நமது மக்கள் சாதியோடு தொடர்பில்லாத ஒரு மொழியை கற்றுக் கொள்வதே மிகச் சரியாக இருக்கும். இந்த விவாதம் முழுமையான ஒன்றாகவும், மிகுந்த பொருள் பொதிந்ததாகவும் உள்ளது. அந்நிய காலனிய மொழி வேண்டாம் என்று கூறுபவர்களுக்கும், காலனிய மொழிகளை விலக்கி, நம் நாட்டு மொழிகளைத்தான் தூக்கிப் பிடிக்க வேண்டும் என்று கூறுபவர்களுக்கும் அவர் கொடுத்துள்ள எடுத்துக்காட்டு நல்லதொரு பதிலைக் கொடுக்கும்.
ஹனி பாபுவைப் பொருத்தவரையில் குழந்தைகள் தங்கள் தாய் மொழியைக் கற்க வேண்டும். அதற்கு அடுத்த இடத்தை ஆங்கிலத்திற்குக் கொடுக்க வேண்டும். அது ஒரு காலனிய, அயல்நாட்டு மொழியாக இருக்கலாம் ஆனால் அது சாதியக் குவியலிலிருந்து தனித்து நிற்கும் ஒரு மொழி. அந்த மொழியை வைத்து மேலோர் கீழோர் என்றெல்லாம் பிரிக்க முடியாது. மொழி மூலம் சாதியை ஒழித்து, சமத்துவ சமூகத்தை ஏற்படுத்த இது ஒரு நல்ல வழி.
.............ஹனிபாபு. Associate Prof of English in Delhi University
No comments:
Post a Comment