Saturday, October 15, 2005

93. என் போட்டோவும்…இன்ன பிறவும்…!!



நம்ம கதை வான்கோழிக் கதைதான்.
இளவஞ்சி மாதிரி பட்டாம்பூச்சி கவிதயும் எழுதத் தெரியாது. சின்னவன் மாதிரி ஒரு பக்கம் பாத்தா மயிலு மாதிரியும், இன்னொரு பக்கம் பாத்தா வான்கோழி மாதிரியும் தெரியிறது மாதிரி தட்டான பத்தி கவிதயும் எழுதத்தெரியாது. அதுக்காக சும்மா விட்றதா? அதுக்குத்தான் இந்தத் தட்டான். அது கவித எழுதுறதாக நீங்களே எதுனாச்சும் நினச்சுக்கங்க…


வேண்ணா, அது அந்த ‘ஊசி இலை மேல தூங்கற பனித்துளியை நினச்சு பாடறதாகக் கற்பனை பண்ணிக்கீங்க…
இவ்வளவு கற்பனை பண்றவங்க படம் எடுத்த ஆளையும் கற்பனை பண்ணவா முடியும்; அதான் அடுத்த படம்..






இங்கேயும் கற்பனை தேவைதான் … இல்ல?
Oct 15 2005 11:45 pm அவியல்... edit this
Rate this post at http://www.thamizmanam.com/ Current rating is:
(இதுவரை 1 பரிந்துரைகள்)ஹலோ, வந்தது வந்தீங்க; வந்ததுக்கு ஒரு வேட்டு / வோட்டு போட்டுட்டு போறதுதானே! சும்மா அப்டியே போய்ட்டா எப்படி??
9 Responses
சின்னவன் Says: after publication. e -->October 16th, 2005 at 12:33 am e
ஒரு பக்கம் பார்த்தா மயில் மாதிரி இருக்கு என்ற தருமி அய்யா அவர்களேநீங்களே ஒரு பக்கம் பார்த்தா சின்னவராத்தான் இருக்கீங்க
dharumi Says: after publication. e -->October 16th, 2005 at 12:55 am e
சின்னவரே,நம்ம மறு பக்கம் பாக்கலியே! பாத்தா தெரியும்…பொறுங்க..பொறுங்க !!
துளசி கோபால் Says: after publication. e -->October 16th, 2005 at 2:45 am e
ஆளாளுக்குப் படம் காமிச்சுக்கிட்டு இருக்கீங்கப்பு.
ம்ம்ம்ம்….படம் நல்லாத் தெளிவா இருக்கு.
‘கல்லைத்தூக்கு, கருப்பட்டி தாரேன்’னு பாடினது ஞாபகம் வருது.
இப்படிக் கொசுவத்தி வாங்கியே காசெல்லாம் போச்சு. ஹூம்.இன்னும் எவ்வளவு வாங்கணுமோ?:-)
P.V.Sri Rangan Says: after publication. e -->October 16th, 2005 at 4:18 am e
தருமி அழகான படப்பிடிப்பும்,அமைதியான இயற்கை வனப்பும் உங்கள் படங்களுக்குள் கவிதையாக விரிகிறது.ஸ்ரீரங்கன்
வசந்தன் Says: after publication. e -->October 16th, 2005 at 5:50 am e
படத்திலிருப்பதையா நீங்கள் தட்டான் என்கிறீர்கள்?நாங்கள் தும்பி என்போம். தட்டான் என்றும் பாவிப்பதுண்டு. ஆனால் தும்பி தான் அதிகமாகப் பயன்படுத்தப்படும் சொல்.
chiththan Says: after publication. e -->October 16th, 2005 at 8:07 am e
பின்னூட்டத்தில் போட்டோ போடத்தெரியலைஇல்லேன்னா நானும் ஒரு படம் காட்டியிருப்பென்.
“தேவதைதோட்டத்து ஹெலிக்காப்ட்டர்தேன் தேடி வந்ததோ?உமக்கு ஏதும் தூது கொண்டுநின்றதோ?
அன்பரே- பின்னூட்டப்பக்கத்தையும் எப்படி முன்னூட்டத்தில்கொண்டுவர்ரது ?
dharumi Says: after publication. e -->October 16th, 2005 at 10:28 am e
துளசி, ஸ்ரீரங்கன்,வசந்தன், சித்தன் — நன்றி.
துளசி,“இப்படிக் கொசுவத்தி வாங்கியே காசெல்லாம் போச்சு. ஹூம்.இன்னும் எவ்வளவு வாங்கணுமோ?:-) ”- வாஆஆஆஆஆங்கிக்கிட்டேதான் இருக்கணும் இனிம..வயசாக வயசாக‘பழைய நினப்புடா பேராண்டி’ன்னுதான் இருக்க வேண்டியிருக்கு - நான் என்னமாதிரி வயசான ஆளுகளப் பத்தி சொல்றேன்; நீங்கள்ளாம் சின்னப் பிள்ளைங்க!
ஆனாலும் அதுக்குத்தான் நான் நம்ம ‘(கற்பனைக்) குதிரை’யில செலவில்லாமபோயிடுறது.
ஸ்ரீரங்கன்,“அமைதியான இயற்கை வனப்பும்”- இயற்கை வனப்பு சரி; ஆனா, அமைதியானங்றது சரியான்னு தெரியலை; ஏன்னா இதுஎங்க கல்லூரிக்குள்ள எடுத்தது!
வசந்தன்,தும்பின்னா பொதுவா வண்டுகளைக் குறிக்கும் சொல்லல்லவா? நம்ம ஆளு Lord Shiva கூடஎன்னிட்ட ஒரு கவிதை கொடுத்துவிட்டு அதில் நான் மாட்டிக்கிட்டேனே - அந்த மண்டபத்துவிவகாரம் - அந்தக் கவிதைல கூட தும்பிங்கிறது வண்டு என்ற பொருளில் வராது??
சித்தன்,கவிதைல்லாம் பரத்திருங்க! நமக்குத்தான் ஒண்ணும் ‘ஓட’ மாட்டேங்குது!இந்த மாதிரியெல்லாம் எங்கூட விளையாடாதீங்க…நானே ஒரு க.கை.நா. எங்கிட்டஇதல்லாம் கேட்டா எப்படி?
ivarugala Says: after publication. e -->November 7th, 2005 at 1:48 am e
வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்உங்களுக்கு Camedia போதும்எப்படி இந்த தெளிவு சாத்தியம்என்பது எந்தன் சோத்தியம்.
பனித்துளிக்குள் பனை மரத்தை கண்டதாக செய்தி உண்டுதேடிப்பாருங்கள் நீங்களே கிடைபீர்கள்.
dharumi Says: after publication. e -->November 7th, 2005 at 8:41 am e
நன்றி ivarugala,camedia பற்றாது; macro வேணுமில்லா…!

No comments:

Post a Comment