Saturday, October 29, 2005

98. நடிகையர் திலகம் vs ராதிகா

98. நடிகையர் திலகம் vs ராதிகா
என்ன மாதிரி பழைய ஆளுங்ககிட்ட கேளுங்க, ஒண்ணுபோல ஒரே மாதிரி பதில் சொல்லுவோம். கேட்டுப் பாருங்களேன் - தமிழில் நல்லா வசனம் பேசுற நடிகை யாருன்னு? டக்குன்னு பதில் வரும்: ‘
கண்ணாம்பா’ன்னு. அதாங்க, மனோகராவில சிவாஜிக்கு அம்மாவா வருவாங்களே, அவங்க.
அதே மாதிரி, நடிப்புக்கு எந்த நடிகைன்னு கேளுங்க; சாவித்திரி அப்டீம்பாங்க.

முதல்ல சொன்னவங்க பூர்வீகம் தமிழ் நாடுகூட இல்ல; ஆனா தமிழ பிச்சு வாங்கிருவாங்க. அப்படி ஒரு modulation, clarity… அப்படி முழிச்சி பாத்தாங்கன்னாலே நாம ஒரு வழியா ஆயிடுவோம். மூச்சு விடாம வசனம் பேசுவாங்க -மனோகராவில பாத்திருப்பீங்களே! ‘ போதுமடா மகனே, பொறுத்தது போதும்; பொங்கி எழு, மனோகரா’ அப்டீங்கிற வசனம் இன்னைக்கி வரைக்கும் நம்ம காதில் ஒலிக்குமே.

அடுத்தது, சாவித்திரி அவர்கள். நல்ல நடிகை; ஆனாலும், இப்போவெல்லாம் அவங்கள நினச்சாலே அவங்களோட பரிதாப கடைசி நாட்கள்தான் நினைவுக்கு வருகிறது. எப்படி ஒரு வீழ்ச்சி. யார்தான் இந்தக் குடியைக் கண்டுபிடித்தார்களோ. சினிமா தயாரிப்பு ஒரு சூதாட்டம் என்பார்கள். சாவித்திரி சொந்தமாக எடுத்த, ‘பிராப்தம்’, சிவாஜி நடித்த அந்தப் படமே ஒரு பெரும் சோகக் காவியம்; அப்போதே அவர்களின் வாழ்வின் அஸ்தமன காலம் ஆரம்பித்து விட்டது.

பாசமலர் படம் அவருக்கும், சிவாஜிக்கும் ஒரு மகுடம். ( குமுதம் இந்தப் படத்திற்கு எழுதிய விமர்சனம் நன்றாக நினைவிலிருக்கிறது.: ‘பாசமலர்- அது வெறும் காகித மலர்!’ நம் தமிழ் பத்திரிகையின் சினிமா விமர்சர்களுக்கு differentiating between grain and chaff தெரியாது என்பதற்கு இது ஒரு உதாரணம்.) அதன்பின் வந்த படங்களில் இந்த இரு பெரும் கலைஞர்களும் காதல் ஜோடிகளாக வருவதைத் தமிழுலகமே ஒத்துக்கொள்ள மறுத்தது. Such was the impact of Pasamalar!

நவராத்திரியில் சிவாஜி ஒன்பது வேடங்கள் என்றால் சாவித்திரிக்கும் ஏறத்தாழ அதே மாதிரிதான். அழகாகச் செய்திருப்பார்கள். சிவாஜியோடு இணைந்து உணர்ச்சிப் பிழம்பாய் (ஓவர் ஆக்டிங்?) நடித்தார் என்றால், ஜெமினியோடு சேர்ந்து இயல்பான, மிகையற்ற நடிப்பிலும் ஒளிர்ந்தார். என்ன ஒண்ணு, அந்தக் காலத்தில சிவாஜிக்கும், நம்ம ஆளு எம்.ஜி.ஆருக்கும் ஒரு போட்டி; இவர் ஒரு நடிகையோடு நடித்தால் அவர் அதே நடிகையை அடுத்த படத்திற்கு ‘புக்’ செய்துவிட வேண்டும். பாசமலர் பெற்ற வெற்றியைப் பார்த்த எம்.ஜி.ஆர். தன் அடுத்த படமான ‘வேட்டைக்காரன்’ என்ற படத்திற்கு சாவித்திரியோடு சேர்ந்து நடித்தார். ‘மெதுவா..மெதுவா..தொடலாமா, மேனியிலே கை படலாமா?” என்றொரு பாட்டு. பாட்டு என்னவோ, மெதுவா..மெதுவா அப்டின்னுதான் வரும்; ஆனா நம்ம தலைவர் பிடிக்கிற பிடி…செம பிடி…! அது என்னவோ, தலைவர்கூட நடிக்கிற நடிகைமேல கூட எரிச்சல் வர்ர மாதிரி ஆயிடும். சரி..சரி…digression வேண்டாம்!


எனக்கும் எப்பவுமே நடிப்புக்கு சாவித்திரின்னுதான் இருந்திச்சு. சாவித்திரி எல்லா ரோலும் பண்ணினாலும் சோக நடிப்புக்கு அவர்தான் அப்டிங்கிறது ஒரு முடிவான விஷயமா என்னைப் பொறுத்தவரை இருந்தது. நாளாக நாளாக அந்தக் கருத்து மாறிடிச்சி. இப்போ என்னைப் பொறுத்தவரை, இதுவரை நம் தமிழ் நடிகைகளில் டாப் யாருன்னு கேட்டா, கண்ணை மூடிக்கிட்டு, ‘ராதிகா’ என்பேன்.

அந்த எண்ணம் முதலில் வந்தது அவரும், விக்ரமும் (!) சேர்ந்து நடித்த ‘சிறகுகள்’ என்ற சின்னத்திரைக்காக எடுத்த படம் பார்த்தபோதுதான். அதன்பின் பல படங்கள். அதிலும் முக்கியமாக, அவரது சிறந்த நடிப்பு அதிகம் பேசப்படாத ‘ஜீன்ஸ்’ படத்தில் அவரது negative role - simply superb. அதன் பிறகு வந்த, கிழக்குச் சீமை, அதைவிடவும் பசும்பொன்…வாவ்… ராதிகா நடித்ததில் மிகவும் பிடித்த படம் அதுதான்.

சாவித்திரியை விடவும் variety roles செய்தது ராதிகாதான். முதல்வரிடம் இல்லாத சிலவகைத் திறமைகளை ராதிகாவிடம் கண்டிருக்கிறேன். சூட்டிகையான பெண்ணாக, glamour ரோல் (சாவித்திரியை அப்படிக் கற்பனைகூட பண்ண முடியவில்லை!);tough and strong lady ரோல்; இப்படி எந்த ரோலையும் எளிதாகச் செய்த ராதிகாவிற்குக் கிடைக்கவேண்டிய மரியாதை கிடைக்கவில்லை என்றே தோன்றுகிறது. இன்னும் அவர் பல படங்களில் challenging roles பண்ணியிருக்க வேண்டும்; இனிமேயாவது பண்ண வேண்டும்.


ஆனால், அது முடியாது போயிற்று. சாவித்திரிக்கு குடிப்பழக்கமும், அதனால் ஏற்பட்ட உடல்நலக் குறைவுகளும் அவரது திரைப்பயணத்திற்கு ஒரு முற்றுப் புள்ளியானதென்றால், இவருக்கோ வேறொரு மெகா பூதம் மெகா சீரியல் என்ற ரூபத்தில் வந்து விட்டது. அனகொண்டாவை விடவும் இந்த ‘முழுங்கு பூதம்’ அவரை மொத்தமாய் விழுங்கி விட்டது. இனி அவர் அதிலிருந்து வெளி வருவது அனேகமாக நடக்காத காரியம்தான்.

தமிழ்த் திரையுலகிற்கு ஒரு பெரும் நட்டம்தான்.


பி.கு.ராதிகா நடித்த முதல் படம் - கிழக்கே போகும் ரயில். இடைவேளை வரை கூடவந்த நண்பன் பொறுத்துக் கொண்டான். அதற்கு மேல் முடியவில்லை; இந்த மூஞ்சிகளைப் பார்க்கவே சகிக்கவில்லை என்று எழுந்து போய்விட்டான்; நான் பாரதி ராஜாவுக்காக முழுப் படமும் பார்த்தேன். அப்படி அசிங்கமாக (யாரும் கோவிக்க மாட்டீங்களே?) இருந்த ஒரு பெண் எப்படி அழகாகவே மாறினார். ‘அப்படி இருந்தவர் எப்படி இப்படி ஆனார்?

 ( அதேபோல், விஜய் சின்னப் பையனாக முதலில் தோன்றிய ஒரு படம், பெயர் தெரியவில்லை. ரஜினிக்கு ராம்கி மாதிரி விஜய்க்கு யாருங்க அங்கே? ஆனா என்ன? விஜய் ஏறக்குறைய அதே மாதிரிதான் இருக்கார்;கொஞ்சம் பரவாயில்லை. அடுத்து விஜயகாந்த் - எப்படி இவுங்கல்லாம் சகிக்காத மூஞ்சுகளோடு வந்து அப்புறம் மாறிடுராங்க?) எனக்கு என்ன சந்தேகம்னா, ராதிகா அழகா( அழகுன்னா உடனே அஸினோட கம்பேர் பண்ணிடவேணாம்!)உண்மையிலேயே மாறிட்டாங்களா; இல்லா, பாத்துப் பாத்து நமக்கு அப்படி ஒரு acceptance வந்திருதா? தெரிஞ்சவங்க பதில் சொல்லுங்களேன். சொல்றீங்களா???

(அப்பாடி, ஒரு வழியா தருமி அப்டீங்கிற பேரைக் காப்பாத்திக்கிறதுக்காகவே ஒரு கேள்வியோடு இந்தப் பதிவை முடிச்சிட்டேன்; இல்லைன்ன நம்ம பையன் அவ்வைக்குக் கோபம் வரும்!)


Oct 29 2005 07:46 pm சினிமா edit this
Rate this post at www.thamizmanam.com Current rating is:
(இதுவரை 0 பரிந்துரைகள்)ஹலோ, வந்தது வந்தீங்க; வந்ததுக்கு ஒரு வேட்டு / வோட்டு போட்டுட்டு போறதுதானே! சும்மா அப்டியே போய்ட்டா எப்படி??
21 Responses
padma arvind Says: after publication. e -->October 29th, 2005 at 9:10 pm e
தருமி: இப்போதுதான் நீங்கள் எழுதிய சிவாஜி எம்ஜியார் கட்டுரைகளை படித்தேன்.எனக்கு ராதிகாவின் நடிப்பில் நான் பார்த்த இரண்டு படங்களில் பிடித்தது சிப்பிக்குள் முத்து படத்தில் மட்டுமே.முதலாவது கிழக்கே போகும் ரயில். அதை பார்த்தவுடன் சாதாரண பெண்கள் கூட த்ரையில் நடிக்க முடியும் என்றதுதான்.சாவித்ரியின் முகபாவங்கள், நடிப்பு பிடிக்கும் என்றாலும் அனியாயமாக குண்டாக இருந்ததாக ஒரு எண்ணம் அதுவும் பச்சைவண்ணம் பூசி திருவிளையாடலில் நடித்த சில காட்சிகள் !!
ஜோ Says: after publication. e -->October 29th, 2005 at 9:41 pm e
தருமி,சாவித்திரியின் தாய்மொழி கூட தெலுங்கு தான் .எனக்கு இன்னும் சாவித்திரி தான் ‘நடிகையர் திலகம்’.
ஜோ Says: after publication. e -->October 29th, 2005 at 9:43 pm e
நவராத்திரி அந்த கூத்துப்பாட்டு ஒன்று போதும் சாவித்திரியின் திறமையை சொல்வதற்கு .சும்மா அனாசயமா பண்ணிருப்பாங்க.
ennar Says: after publication. e -->October 29th, 2005 at 9:51 pm e
தங்கப்பதுமை பத்மினி அத்தா…ன் உங்கள் கண்கள் எங்கே?கொடுத்தவனே எடுத்துக்கொண்டான்டி மானே வளத்தவனே வெறுத்துவிட்டான்டி நீதி நிலைபெற என் குங்கும் நிலைத்திருக்க உங்கள் மனைவி கேட்கிறேன் சொல்லுங்கள் அத்தான்.சிங்காரம் கெட்டு சிறைபட்ட பாவிக்கு சம்சாரம் எதுக்கடி தங்கம் சம்சாரம் ஏதுக்கடி
தாணு Says: after publication. e -->October 29th, 2005 at 10:05 pm e
பாஞ்சாலியை எல்லோருக்கும் பிடிச்சது அழகுக்காக இல்லை, அந்த கொஞ்சல் மொழிக்காக. இன்னும் அது அவ்வளவா மாறலியே
வெளிகண்ட நாதர் Says: after publication. e -->October 30th, 2005 at 3:21 am e
ராதிகாவை விட கூட நடித்த உஷாவை எனக்கு ரொம்ப பிடிக்கும். பெரிய கிருதாவுடன் தடித்து வந்த ராதிகா பாரதிராஜா அறிமுக படுத்திய ஹீரோயின்களில் வசீகரம் குறைந்தவர். அதற்குப் பின் வந்ததெல்லாம் சினிமா தந்த ஜோடணை அழகு.
P.V.Sri Rangan Says: after publication. e -->October 30th, 2005 at 5:10 am e
தருமி,வணக்கம்!பனையோலை மிக அழகாகத் தங்கள் கமிராவுக்குள் படமாகியுள்ளது.பதிவு நன்று.எனக்குப் பிடித்த நடிகை சோபா.மிக வெகுளித்தனமாக,இயல்பாக நடிக்கும் ஆற்றலை வேறெவரிடமும் பார்க்கமுடியாது.இந்தச் சோபாவை அற்புதமாக வெளிப்படுத்திய பாலுமகேந்திரா அவரைக் கொண்டுபோட்டதாகவும் ஒரு வதந்தியுண்டு.சோபாவின் மறைவையொட்டி நான் பலநாட்கள் மனம் நொந்தவன்.இராதிகாவிடம் நடிப்பைப் பார்த்தோம்.ஆனால் இயல்பாக சட்டகத்துள் வாழும் வாழ்வைப் பார்க்கமுடியாது.இத்தகைய ஆற்றல் சோபாவிடமே காணமுடியும்.
LLDasu Says: after publication. e -->October 30th, 2005 at 7:24 am e
//விஜய் ஏறக்குறைய அதே மாதிரிதான் இருக்கார்;//
விஜயின் முதல் பட குமுதம் விமர்சனத்தில் ‘ இந்த மூஞ்சயெல்லாம் ‘ என எழுதியிருந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து அவரின் ரசிகர் மன்ற தலைவரிடமிருந்து(!!) வந்த கண்டன கடிதத்தைத் தொடர்ந்து , குமுதம் ஆசிரியர் ‘இனிமேல் விஜய் பற்றிய செய்திகள் குமுதத்தில் வராது ‘ என எழுடியிருந்தார் .. ஓரிரு வருடங்களிலே விஜய் வாழ்க்கை வரலாறை குமுதம் பிரசுரித்தது …
//அடுத்து விஜயகாந்த் - எப்படி இவுங்கல்லாம் சகிக்காத மூஞ்சுகளோடு வந்து அப்புறம் மாறிடுராங்க?//
விஜயகாந்த் மாறிட்டாரா?? அதுசரி கொ.ப.செ.க்கிட்டயிருந்து என்ன எதிர்பார்க்கமுடியும் ?
Annonymous Says: after publication. e -->October 30th, 2005 at 9:24 am e
ரஜினிக்கு ராம்கி மாதிரி விஜய்க்கு யாருங்க அங்கே?
Ramki, kevalam ithu
ramachandran usha Says: after publication. e -->October 30th, 2005 at 10:07 am e
தருமி, தாஜ்மகால் என்ற படு திராபையான படத்தில் சில காட்சிகளில் வரும் ராதிகாவின் நடிப்பு பார்த்திருக்கிறீர்களா? இதுவரைஅவர் நடித்ததில் மிக பிடித்தது அந்த நடிப்புத்தான்.அப்புறம் சாவித்திரி ம்ம்ம்ம், நா உங்க மாதிரி வயசாளி இல்லைங்க ))))))))))ராகவன், நடிப்பை மட்டும் பார்ப்போமே? நீங்கள் ராதிகாவின் சொந்த வாழ்க்கையை விமர்சிப்பதாய் தோன்றியதால் இதை குறிப்பிட்டேன்.
//இராதிகாவிடம் நடிப்பைப் பார்த்தோம்.ஆனால் இயல்பாக சட்டகத்துள் வாழும் வாழ்வைப் பார்க்கமுடியாது//
Awwai Says: after publication. e -->October 30th, 2005 at 10:24 am e
Ramachandran Usha, I guess there is a misunderstanding; what Raghavan means is, “we see Radhika *acting* but not living (like Shobha does) inside the frame (of the camera)”. Which means, Shobha’s acting is so natural that it doesn’t appear it is ‘acting’, whereas Radhika’s performance comes out as “good acting”, where you are not able to forget the actor when you look at the character. Shobha acheives that.
Awwai Says: after publication. e -->October 30th, 2005 at 10:27 am e
Correction: “Sri Rangan” not “Raghavan”
dharumi Says: after publication. e -->October 30th, 2005 at 11:05 am e
உஷா,நம்ம பையன் அவ்வை ‘தனியொருவனாக வந்து’ நான் சொல்ல நினைத்ததைச் சொல்லிச் சென்று என் வேலையை எளிதாக்கி விட்டான்.நீங்களே சொல்லிவிட்டீர்கள் தாஜ்மகல் திராபை என்று. நான் பார்க்கவே இல்லை. இது தொடர்பாக ஒரு கேள்வி: ஒருவேளை பா.ரா.வின் மகன் மனோஜும் நிறைய படங்களில் வந்திருந்தால் அவர் ‘மூஞ்சும்’ சகிக்கும்படி ஆயிருக்குமோ? - விஜய் மாதிரி!
dharumi Says: after publication. e -->October 30th, 2005 at 11:25 am e
padma arvind,“சாதாரண பெண்கள் கூட திரையில் நடிக்க முடியும் என்றதுதான்.” - இந்த விஷயத்தில் எல்லாப் புகழும் பாரா.வுக்கே!பாண்டியன், சந்திரசேகர்,பா.ரா. - இப்படி யாரை வேண்டுமானாலும் நடிக்க வைத்து, உங்களையெல்லாம் பார்க்கவும் வைப்பேன் என்று சொல்லி, செய்தும் காட்டியவர்தான். என் கேள்வி இன்னும் நிற்கிறது: அவர்கள் உண்மையிலேயே அழகாக மாறி விடுகிறார்களா; இல்லை, நம்முடைய tolerance level கூடி விடுகிறதா என்பதுதான்.
joe,கண்ணாம்பாவைத் தெலுங்கர் என்று சொன்னது in spite of that.. என்ற பொருளில் கொள்க. “அப்படி ஒரு modulation, clarity… ”
P.V.Sri Rangan,மர்லின் மன்றோ ஒருவேளை வயதாகி, இயற்கையாக மரணமடைந்திருந்தால் இப்போதுள்ளது மாதிரிஎல்லோர் நினைவிலும் இன்னும் நீங்காது இருப்பாரா என்ற ஐயம் உண்டு. அது போலவே ஷோபாவின் மரணம் அவரைச் சுற்றி ஒரு aura-வையும், halo-வையும் விட்டுச் சென்று விட்டதோ என்றொரு ஐயம் உண்டு.
வெளிகண்ட நாதர்,“ராதிகாவை விட கூட நடித்த உஷாவை எனக்கு ரொம்ப பிடிக்கும்.//உஷா..who? !
LLDasu,விஜயகாந்த் மாறிட்டாரா?? அதுசரி கொ.ப.செ.க்கிட்டயிருந்து என்ன எதிர்பார்க்கமுடியும்//இப்படி வாரீட்டீங்களே, தலீவா!!ஆனாலும் கேப்டன் இத்தனை நாள் ‘வண்டிய’ ஓட்டிட்டாரா இல்லியா?
ramachandran usha Says: after publication. e -->October 30th, 2005 at 11:47 am e
ஸ்ரீரங்கன் மன்னிக்க, போட்ட பிறகு தோன்றியது, ஸ்ரீரங்கன் இப்படி எழுத மாட்டாரே என்று! அதற்குள் வீட்டில் ஒரு சிறு குழப்பம்,மனம் வேறு திசையில் திரும்பிவிட்டது.தருமி, அந்த “உஷா” ராஜேந்தர் மனைவி, அன்றைய லிட்டில் சூப்பர் ஸ்டார், தற்போதய ஜூனியர் சூப்பர் ஸ்டார் என்று தானே நாமகரணம் சூட்டிக்கொண்ட சிம்பிவின் தாய்.அந்த திராபை படத்தை ராதிகாவுக்காக பாருங்கள்
P.V.Sri Rangan Says: after publication. e -->October 30th, 2005 at 1:02 pm e
Awwai Says:October 30th, 2005 at 10:24 am>>>>>Ramachandran Usha, I guess there is a misunderstanding; what Raghavan means is, “we see Radhika *acting* but not living (like Shobha does) inside the frame (of the camera)”. Which means, Shobha’s acting is so natural that it doesn’t appear it is ‘acting’, whereas Radhika’s performance comes out as “good acting”, where you are not able to forget the actor when you look at the character. Shobha acheives that.
P.V.Sri Rangan Says: after publication. e -->October 30th, 2005 at 1:05 pm e
நான் இதையேதாம் கூறினேன்.நன்றி,ஒளவை!மற்றும்படி தனிப்பட்ட வாழ்வைச் சொல்லுவேனா?இராதிகாபோன்றவர்கள் மிகவும் முன்னேறிய படிப்பாளிகள்.அவர்களின் தெரிவு,அவர்களின் தனிநபர் சுதந்திரம்.அதைப்பேச நாம் யார்?அன்புடன்ப.வி.ஸ்ரீரங்கன்
Awwai Says: after publication. e -->October 30th, 2005 at 8:04 pm e
To answer the ‘becoming beautiful’ question, I think it has to do with conditioning of the mind. Even our charismatic Rajinikanth is commented badly outside Tamizhnadu and Japan! We too don’t find the leading film personalities of Telugu or Kannada attractive! You keep seeing a face and your mind opens up to the beauty to which it had been blind till then! Why else would most of us feel ‘good’ after spending 5 minutes infront of the mirror!
Secondly, it has to do with the ‘build up’ given to these people. This technique is very wisely utilized by our very own Dharumi. First he hides his identity under an interesting pseudonym; then writes an elaborate note on why he chose that name. Then after keeping people guessing for a while (he himself becomes impatient) he reveals part of his identity. Then he posts his childhood photograph. Then a 30-year-old photograph, and then to top it, a back pose that covers the ‘bright-spot and the silver lining’. And then finally for his 100th posting he will dramatically post a smiling picture! Lo! we all will be excited to see him! )(Sam-Ji! you don’t have to change your plan now. I know you’d have already gotten the 100th posting and the bestest of all pictures ready for posting. Deepavali release?—Anyways, why do you always refer to me as ‘தனியொருவனாக வந்து’? Is it because I was the one who posted a scientific and logical counter-arguement for your series on God and Religion? Eager to see your reponse to my essay.anbudan Awwai.
dharumi Says: after publication. e -->October 30th, 2005 at 8:36 pm e
hi awwai,you are too cute, boy! and at the same time a spoilsport!!
you are the first one among those to whom i sent an info about my blog initially. you got / caught me right and now actually i have plans to put a photo of mine, as you have correctly guessed, in the hundredth post! any way i am yet to decide on the photo that i would place in the blog -//he will dramatically post a smiling picture! //that one or a serious one!? but you have said ’smiling picture’ and so let me go by your decision /judgment.
no wonder you passed meritoriously in all the 8 entrance exams you sat for after your U.G.!
//Why else would most of us feel ‘good’ after spending 5 minutes infront of the mirror!// let me try tomorrow, ‘coz i do spend less than that.
“why do you always refer to me as ‘தனியொருவனாக வந்து’”// that is the வசனம் of the pandiya king in திருவிளையாடல், you know.
அன்புடன்….தருமி
ஜோ Says: after publication. e -->October 30th, 2005 at 9:53 pm e
//joe,கண்ணாம்பாவைத் தெலுங்கர் என்று சொன்னது in spite of that.. என்ற பொருளில் கொள்க. “அப்படி ஒரு modulation, clarity… ”//அது தெரியுது .ஆனா எங்க சாவித்திரி மட்டும் என்னவாம்? திருவிளையாடல் படத்தி
ஜோ Says: after publication. e -->October 30th, 2005 at 9:54 pm e
//joe,கண்ணாம்பாவைத் தெலுங்கர் என்று சொன்னது in spite of that.. என்ற பொருளில் கொள்க. “அப்படி ஒரு modulation, clarity… ”//அது தெரியுது .ஆனா எங்க சாவித்திரி மட்டும் என்னவாம்? திருவிளையாடல் படத்தில் சிவனும் சக்தியும் மோதும் இடத்தில் நம்ம சிம்மக்குரலோனுக்கு வேறு யாரும் ஈடு கொடுத்திருக்க முடியுமுண்ணு நினைக்குறீங்க ?Never.

No comments:

Post a Comment