Friday, August 10, 2007

233. ஒளி ஓவியங்கள் - போட்டிக்கு

ஒளிக் கோட்டு ஓவியம்

Image and video hosting by TinyPic


--------------------
அசையாம ... கொஞ்சம் சிரி'மா !
Image and video hosting by TinyPic

Thursday, August 09, 2007

232. எங்க ஊருக்காரங்க சந்திப்பு



ஏற்கெனவே எங்க ஊரு ஜாலிஜம்பர் ஒரு பதிவு போட்டு, எங்க ஊருக்காரங்க சந்திப்பில நடந்தது எல்லாத்தையும் ஆணி வேறு அக்கு வேறுன்னு (அய்யாக்களே! ஆணின்னா என்னன்னு தெரியும்; அதென்ன 'அக்கு' ? யாராவது விளக்குங்களேன்.) பிரிச்சி மேஞ்சிட்டார். நான் சொல்றதுக்கு ஒண்ணே ஒண்ணு இருக்கு. அத மட்டும் சொல்லிக்கலாம்னு இருக்கேன். On second thoughts ... ரெண்டு இருக்கு ..

1. சென்னையில் நடக்கப் போற பட்டறை பற்றிப் பேசினோம். நாமளும் நம்ம ஊர்ல ஒரு பட்டறை நடத்திர வேண்டியதுதான் அப்டின்னு பேசினோம். அதற்கான முதல் கட்ட வேலைகளை ஆரம்பித்துள்ளோம்.

2. எங்க ஊர்ல ஒரு பட்டறை கல்லூரி மாணவர்களை மய்யமாக வைத்து ஆரம்பிக்கத் திட்டமிட்ட உடனேயே அப்படி ஒரு பட்டறை நடத்துவதற்கு முன்பே நாம் மதுரைக்கார பதிவர்களை ஒருங்கிணைத்து ஒரு பொதுக்களம் உருவாக்க வேண்டும். விரைவில் ஒரு குழுப்பதிவு ஆரம்பிக்க வேண்டும் என்று ஏறத்தாழ 7 மணியளவில் பேசிவிட்டு, அவரவர் வீட்டுக்குப் போனால், 9 மணிக்கே 'இதோ, புதுப் பதிவு' அப்டின்னு இராம் ஒரு பொதுப்பதிவை ஆரம்பித்தே விட்டார். வாழ்க அவர்தம் சுறுசுறுப்பு.

அவரது இந்த சுறுசுறுப்பைப் பாராட்டும் முகத்தான் அவரது மற்றொரு திருவுருவப் படமொன்றை இங்கே அளிப்பதில் பெருமகிழ்வெய்துகிறேன்.

Image and video hosting by TinyPic

இந்தப் படம் போட்டது ஒண்ணும் அந்த படம் போட்டதுக்கான பழிவாங்குதல் எல்லாம் இல்லை. ஒரு நன்றிக்கடன்தான் .. !

அப்படி ஆரம்பித்துள்ள எங்கள் ஊரின் பொதுப்பதிவின் முகவரி: http://marudhai.blogspot.com/

மதுரைக்கார பதிவர்கள் அனைவரும் திரு. ராம் அவர்களை raam.tamil@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொண்டு குழுப்பதிவில் இணைந்து கொள்ள இதனையே அழைப்பாகக் கருதும்படி கேட்டுக் கொள்கிறேன்.

வலைப்பதிவின் நுட்ப வேலைகளை இப்போதைக்கு திரு. ராம் மட்டுமே செய்துவந்தால் குழப்பமேதுமின்றி வலைப்பதிவை தொடரமுடியும். மாற்றங்கள் வேண்டுவோர் திரு, ராம் அவர்களைத் தொடர்பு கொள்ளவும்.


.......

Wednesday, August 01, 2007

231.PORTRAITS - போட்டிக்கு அல்ல !

Image and video hosting by TinyPic
......................................சிங்கம் #1 ..............................


Image and video hosting by TinyPic

......................................சிங்கம் #2 ..............................

Image and video hosting by TinyPic

......................................சிங்கம் #3 ..............................


Image and video hosting by TinyPic

......................................சிங்கம் #4 ..............................


என்ன?

இங்கே உறுமிக்கிட்டு இருக்கிற இந்த நாலு இளம் சிங்கங்கள் யாரு? இங்க எதுக்கு உறுமிக்கிட்டு இருக்காங்கன்னு தெரிஞ்சுக்கணுமா, அப்போ அந்தப் பதிவுக்குப் போய் பாத்துட்டு வாங்க...

சிங்கம் ஒண்ணு: நாடறிஞ்ச ராயலு

சிங்கம் ரெண்டு: கவிஞர் முத்துக் குமார்

சிங்கம் மூணு: ஜாலி ஜம்பர்

சிங்கம் நாலு: புல்லட் பாண்டி

Friday, July 20, 2007

230. டைட்டானிக்கில் தனலச்சுமி ...

மக்கள்ஸ் ... எல்லோரும் இன்புற்றிருப்பதன்றி வேறொன்றுமறியேன்.



ENZZZOY .............

ஒரே ஒரு க்ளிக்கில் ... தமிழ்ப் பட உலகிலேயே அதிக செலவில் தயாரான, ப்ரமாண்டமான மிகச் சிறந்த காதல் திரைக்காவியம் காண வாரீர் ...

காணத்தவறாதீர்கள்.

பார்த்தபின் மீண்டும் இங்கு வந்து அட்டென்டன்ஸ் கொடுக்க மறந்து விடாதீர்கள்.

நன்றி.



சுபம்.

Wednesday, July 18, 2007

229. A LETTER TO (THE HINDU) EDITOR

வழக்கமாக எழுதி அனுப்பப்படும் கடிதங்களின் கூர்மையைச் சிறிது மழுங்கடித்து (read 'edited') அதன் பின்பே என் சில கடிதங்கள் பதிப்பிற்கு ஏற்றுக் கொள்ளப் பட்டதே இந்து தினசரியைப் பொறுத்தவரை என் முந்திய அனுபவங்கள். நன்றாகவே எடிட் செய்யப் படுவதைப் பார்த்து வியந்ததுண்டு. ஆனால் இம்முறையோ என் கடிதம் மழுங்கடிப்படுவதற்குப் பதில் மேலும் 'கூர்மை"யாக்கப் பட்டிருப்பதைப் பார்த்து ஆச்சரியம்.

இந்துவிற்கு நான் அனுப்பிய என் கடிதத்தில் நான் குறிப்பிடாத "அடிப்படைவாதிகள்' (fundamentalists) என்று ஒரு சொல்லாடலைச் சேர்த்து என் கடிதம் இன்று (18th July,'07)பிரசுரிக்கப் பட்டுள்ளது. அதற்கு இங்கே என் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். (வேறென்ன செய்ய முடியும்?) அதோடு நான் அனுப்பிய ஒரிஜினல் கடிதத்தை இங்கு பதிவிடுகிறேன்.


Sir,

For his article "Debate or denial: the Muslim Dilemma" in your columns on 17th July,'07 Hasan Suroor deserves great appreciation for calling a spade a spade. Especially in the last paragraph of the article he has encapsulated what every Muslim of this day should understand and adhere. But the big question is whether Muslims in general and the Muslim zealots in specific would accept that "When Islam was in its infancy and battling against non-believers violence was deemed legitimate…" but NOT NOW.

The problem arises when people insist that the "words" given by god should not even be interpreted, leave alone be changed.

Wish we get more level headed people among our all religious brethren.

-------------------------------------------------------------------

இஸ்லாம் பற்றிய விவாதங்களும், மறுப்புகளும் என்ற தலைப்பில் எழுதியுள்ள ஹசன் சாரூர் 'இந்து'வில் வழக்கமாக எழுதும் ஒரு இஸ்லாமிய எழுத்தாளர். இக்கட்டுரையில், ஒரு இஸ்லாமியர் இன்றைய சூழலில் எவ்வாறு தன் மதத்தைப் பற்றிய புரிதல் கொள்ள வேண்டும் ஒரு புதிய பார்வையைக் கொடுத்துள்ளார். மறுப்புகளை விடவும் விவாதங்கள் புதிய பாதையில் எப்படித் தொடரவேண்டும் என்று கூறியுள்ளார்.

அக்கட்டுரையில் எனக்குப் பிடித்த அந்த கடைசிப் பத்தியை மட்டும் இங்கு இடுகிறேன்:

Let’s face it; there are verses in the Koran that justify violence. The “hard truth that Islam does permit the use of violence,” as Mr. Butt* points out, must be recognised by Muslims. When Islam was in its infancy and battling against non-believers violence was deemed legitimate to put them down. Today, when it is the world’s second largest religion with more than one billion followers around the world and still growing that context has lost its relevance. Yet, jihadi groups, pursuing their madcap scheme of establishing Dar-ul-Islam (the Land of Islam), are using these passages to incite impressionable Muslim youths. Yet there is no sign of a debate in the community beyond easy platitudes, and it remains in denial.

(கோடிட்ட பகுதி என் கடிதத்தில் மேற்கோளிடப்பட்டது.)

*Hasaan Butt is a reformed British extremist,quoted much in this article.