*
ஏனைய முந்திய பதிவுகள்:
பதிவு - 7
பதிவு - 8
பதிவு - 9
பதிவு - 10
பதிவு - 11
பதிவு - 12
பதிவு - 13
பதிவு - 14
பதிவு - 15
பதிவு - 16
பதிவு - 17
பதிவு - 18
பதிவு - 19
........................... இப்பதிவு - 22
CHAPTER 17
ISLAM IN THE WEST
சல்மான் ரஷ்டியின் நிகழ்வுக்குப் பிறகே ஐரோப்பியர்கள் நமக்கு நடுவில் சமய நல்லிணக்கத்திற்கு எதிரான மக்கள் வாழ்கிறார்கள் என்ற உணர்வைப் பெற்றார்கள்.
1989க்குப் பிறகு இங்கிலாந்தும், பிரான்சும் தங்களது சமய மாச்சரியம் இல்லாத நிலைப்பாடுகளின் நடுவே, இஸ்லாமியர் தங்கள் சமயப் பழக்க வழக்கங்களைக் கைக்கொள்ள முழு உரிமை வேண்டும் என்ற உச்சக்கட்ட நிலைப்பாடுகளுக்கும் போராட்டங்களுக்கும் வெவ்வேறு நிலைகளை மேற்கொண்டனர்.
ரஷ்டியைக் கொல்ல வேண்டும் என்ற தங்கள் பத்வாவைப் பற்றிப் பேசும் எந்த இஸ்லாமியரையும் இங்கிலாந்து காவல் துறை கைது கூட செய்யவில்லை.
இஸ்லாமிய அமைப்பைச் சார்ந்த Dr. Siddiqui இங்கிலாந்தின் சட்ட திட்டங்களை நாம் மதிக்க வேண்டியதில்லை; இஸ்லாமிய ஷாரியத் சட்டங்களே நமக்குத் தேவை என்று கூட்டத்தில் உரையாற்றிய போதும் அவரைக் காவல் துறை ஏதும் செய்யவில்லை. ஆனால் பிரான்சில் ஒரு துருக்கி இஸ்லாமியக் குரு ஷரியத் சட்டங்களே பிரஞ்சு சட்டங்களை விட இஸ்லாமியருக்கு முக்கியமானது என்று கூறிய 48 மணி நேரத்தில் நாட்டை விட்டு அனுப்பப் பட்டார்.
பிரிட்டனில் அரபு நாடுகளின் வழக்கமான் பெண்களின் பாலியல் உறுப்புகளில் மேற்கொள்ளப்படும் பயங்கர அறுவை சிகிச்சைகளைப் பற்றி அதிகம் கண்டு கொள்வதில்லை. அதில் தலையிட்டால் ‘இனவெறி’ என்ற அவலத்திற்கு ஆளாகலாம். ஆனால் பிரான்சில் இவைகளுக்கு எதிரான வழக்குகள் உண்டு. (351)
பிரிட்ட்னில் இஸ்லாமியரும் அவர்களின் விழைவும்:
கடந்த 15 ஆண்டுகளில் இஸ்லாமியர் தாங்கள் வசிக்கும் பிரிட்டனின் சமூகத்தோடு ஒருங்கிணையத் தயாராக இல்லை.
இஸ்லாமியப் பண்பாட்டுக் கழக முன்னாள் தலைவர் Dr. Zaki Badawi, ‘தங்கள் மதத்தைப் பரப்ப வேண்டும் என்பவர்கள் அமைதியாக இருக்க முடியாது. ... இஸ்லாம் பிரிட்டனில் வளரவேண்டிய மதம். இஸ்லாமே உலகத்திற்குமான மதம். ... ஒரு காலத்தில் இந்த மதமே முழு மானிட சமுதாயத்திற்கும் உரியதாக வளர்ந்து, முழு மனிதச் சமுதாயம் ’உம்மா’ வாக மாறும்’, என்றார். (352)
ஒரு இமாம், ’உண்மையான ஒரே கடவுள் அல்லா; கிறித்துவர்களின் திரித்துவக் கொள்கை மனிதனின் ஊடுறுவலே. பிரிட்டன் பல்வேறு பிரிவினைகளோடு நிற்கிறது. ஆனால் இஸ்லாம் இங்கு முழுமையாக நிறுவப்பட்டாலே இந்த நாட்டுக்கு விமோசனம்’, என்றார்.
கிறித்துவத்தை இஸ்லாமியர் இழிப்பது உண்டு; ஆனால் இஸ்லாமியத்தை யாராவது இழிவு செய்ய முனைந்தால் பெருத்த சினத்தோடு கொதித்தெழுகிறார்கள். இஸ்லாமியரல்லாதவரும் குரான் கடவுளிடமிருந்து வந்ததை அப்படியே நம்ப வேண்டுமென எதிர்பார்க்கிறார்கள்.
கேம்ப்ரிட்ஜ் பல்கலையின் இஸ்லாமிய அமைப்பு இங்கிலாந்தின் கல்வி முறை பற்றிய ஒரு கருத்துக் கணிப்பில், அந்த நாட்டின் சமயச் சார்பற்ற கல்வி முறை மகிழ்ச்சியளிப்பதாகவில்லை என்று கூறப்பட்டுள்ளது. இங்கிலாந்தின் அரசியல் சட்டத்தை எதிர்த்தும், தங்களது அடிப்படையான கருத்துக்களைத் தான் இஸ்லாமியர் பின்பற்ற வேண்டும் என்றனர். (353)
இஸ்லாமியரின் தேவைகளும், முரண்களும்:
இஸ்லாமியரின் தேவைகள் மிக அதிகம். அவைகளை நிறைவேற்ற முயன்றால் இங்கிலாந்து சமுதாயத்தின் பல நல்ல பண்புகள் மறைந்தொழிந்து விடும். (353)
Peter Singer தான் எழுதிய Animal Liberation நூலில் ஒரு சான்று தருகிறார். இஸ்லாமியரும், யூத பழமைவாதிகளும் உணவுக்காகக் கொல்லப்படும் உயிரினங்கள் முழு உயிர்ப்போடு இருக்க வேண்டுமென்பார்கள். இங்கிலாந்தில் உயிரினங்கள் கொல்லப்படும் முன் மயக்கமாக்கப்பட்டு அதன் பின்னே கொல்லப்படும். இது கொல்லப்படுபவைகள் வலியோடு சாக வேண்டாமென்பதற்காகச் செய்யப்படுவது. ஆனால் யூத, இஸ்லாமியக் கோட்பாட்டின் படி அவைகள் முழு நினைவோடு இருக்கும்போது கொல்லப்பட வேண்டும். இன்றைய நிலையில் இது மிகவும் கொடுமையானது. ஆனால் மதத்தின் பெயரால் செய்யப்படும் இந்தக் ‘கொலை’ அவர்களுக்கு நியாயமாகத்தான் இருக்கிறது. (354)
இஸ்லாமியப் பெண்களுக்கான கட்டாயக் கல்யாணம், honour killing, படிப்பறிவு தராதது, ஆண்களின் மேலாதிக்கம் .. இவைகளுக்கெதிராக காவல் துறை இருப்பதில்லை. கண்டும் காணாது போய் விடுகிறார்கள். இங்கிலாந்தில் வாழ்ந்தாலும் அந்த நாட்டின் சட்டங்கள் இந்தப் பெண்களுக்கு உதவாமல் போய்விடுகிறது.
இஸ்லாமிய நாட்டிற்காகத் தீவிரமாகக் குரல் கொடுக்கும் லண்டனின் இஸ்லாமிய அமைப்பின் இயக்குனர் Dr. Kalim Siddiqui பிரிட்டனின் இஸ்லாமிய நாடாளுமன்றம் அமைத்து, அது இங்கிலாந்து இஸ்லாமியரின் நன்மைக்காகப் போராட வேண்டுமென்கிறார். அவர் எழுதிய பல நூல்களில், இஸ்லாம் உலகமயமாகுதல், அயத்துல்லா கோமேனி பற்றிய புகழாரங்கள், கத்தியால் இஸ்லாம் பரப்புதல், மேலை நாட்டு தத்துவம், சமுதாயம், அரசியல், பொருளாதாரம் பண்பாடு ... அனைத்தையும் சிதைத்து அல்லாவின் ராஜ்யத்தை இவ்வுலகில் பரப்ப வேண்டுமென்கிறார். அரசியலும் மதமும் பிரிக்க முடியாதவை என்கிறார்.
அவரின் எழுத்துக்களில் ஜனநாயகம், விஞ்ஞானம், தத்துவம், நாட்டுப் பற்று, தானே முடிவெடுத்தல் போன்ற அனைத்தும் அவரின் கோபத்துக்குள்ளாகின்றன. (355)
பல பண்பாட்டுக் குவியல்:
Mervyn Hiskett, ’சமய நம்பிக்கைகளைப் பொறுத்துக் கொள்ளலாம்; ஆனால் சமய பழக்க வழக்கங்களும், அமைப்புகளும் ஒரு நாட்டின் சட்ட திட்டங்களுக்குப் புறம்பாக நின்றால் அவைகளைப் பொறுத்துக் கொள்ளக் கூடாது’ என்கிறார். . ஆனால் இது பெரும்பான்மையான இஸ்லாமியருக்குப் பொருந்தாத கொள்கை. இதனாலேயே இங்கிலாந்திலேயே பிறந்து வளர்ந்த ஒரு பெண்ணை அவளின் விருப்பத்திற்கு மாறான திருமணத்திற்குள் தள்ளுவது, மற்றவர்களுக்கு மிக கொடூரமாகத் தோன்றும் விதத்தில் உயிரினங்களைக் கொல்வது, பள்ளியில் பரிமாணத்தைப் பாடமாக வைப்பதை எதிர்ப்பது, பள்ளியாண்டு தங்கள் சமய பழக்க வழக்கங்களுக்கு ஏற்றாற்போல் மாற்றி வைக்கப் போராடுவது ... இப்படி ஒரு பெரிய பட்டியலே உண்டு. (356)
அரசியல்வாதிகளின் ஏமாற்றல்:
11, டிசம்பர், 1990-ல் The Daily Telegraph -ல் வந்த தலையங்கத்திலிருந்து சில பகுதிகளை Hiskett சுட்டுகிறார்:
இஸ்லாமிய அடிப்படைவாதத்திற்கு விட்டுக் கொடுக்கும் அளவு நிச்சயமாக வேறு எந்த மதத்திற்கும் நாம் கொடுப்பதில்லை. ஏனிப்படி? அரசும் லேபர் கட்சியுமே இதற்கான காரணங்கள்.
லேபர் கட்சி பதவிக்கு வந்தால் அமெரிக்காவில் யூதர்களின் தாக்கம் அரசியலில் அதிகம் இருப்பது போல் இங்கும் இஸ்லாமியரின் ஆதிக்கம் காலூன்றும்.
கன்சர்வேடிவ் கட்சியும் தன் பங்கிற்கு பொருளாதார நன்மைக்காக செளதி அரேபியாவின் மக்கள் நன்மைக்கெதிராக செய்பவைகளைக் கண்டுகொள்வதில்லை. BBC-யின் நிகழ்ச்சிகள் செளதிக்கு எதிராக இல்லாதவாறு தடை செய்கிறது. செளதியில் வாழும் கிறித்துவர்கள் அந்த அரசுக்குப் பயந்து, இங்கிலாந்தில் இஸ்லாமியருக்கு இருக்கும் சுதந்திரம் போல் அல்லாமல், தங்கள் மதங்களை மிக ரகசியமாகப் பின்பற்ற வேண்டியதுள்ளது.
கல்வியாளர்களின் ஏமாற்றல்:
பிரிட்டனில் கல்வியும் அரசியலும் முழுவதுமாகப் பிரிக்கப்படவில்லை. இதனாலேயே பள்ளிகளில் கூட்டுப் பிரார்த்தனை நடந்து வருகிறது. இதை வைத்து இஸ்லாமியர் பள்ளிகளில் தங்கள் பிரச்சாரத்தைத் தொடங்கி விடுகிறார்கள். கல்வியிலிருந்து சமயத்தைப் பிரிப்பதே மிகச் சிறந்தது.
பொதுப் பள்ளிகள் இஸ்லாமிற்கு மட்டுமின்றி எந்த சமயத்திற்கும் எவ்வித சலுகையையும் கொடுக்கக் கூடாது. எல்லாப் பள்ளிகளிலும் கலை, இசை, நாடகம் எல்லாம் சொல்லிக் கொடுக்கப் படவேண்டும். பெற்றோர்களுக்கு இவையெல்லாம் கட்டாயப் பாடம் என்றும், எந்த மதத்து மாணவரும் இவைகளைப் பயில் வேண்டுமென்றும் சொல்லிவிடல் வேண்டும். (358)
அறிவாளிகளின் ஏமாற்றல்:
Pluralism -- இது பல சமூகங்கள் இணைந்த ஒட்டு மொத்த சமூகம். நானாவித குமுகங்கள் குவிந்து இணைந்திருக்கும் - தங்களின் வேறுபாடுகளோடு.
Multiculturalism --பல சமூகங்கள் தங்கள் வேற்றுமைகளைக் காண்பித்துக் கொண்டு கூடியிருத்தல். (இடியாப்பச் சிக்கல்)
ஜனநாயகத்தில் பல குளறுபடிகள் இருக்கலாம். ஆனாலும் மேற்கத்திய ஜனநாயகம் வெகு நிச்சயமாக அதிகாரமும், மனதை வெருட்டும் இஸ்லாமிய சமய அரசியலை விட மிக நல்லது.
போராட்டம் இஸ்லாமிற்கும் மேற்கத்திய நாடுகளுக்கும் நடுவேயில்லை; அது சுதந்திரத்தை விரும்புவோருக்கும் அதனை எதிர்ப்போருக்கும் நடுவே!
======================
இத்துடன் WHY I AM NOT A MUSLIM என்ற நூலின் முக்கியக் குறிப்புகள் முடிந்து விட்டன. நீ..... ண் ... ட ... கட்டுரையாகி விட்டது. இக்கட்டுரையை எழுதிப் பதிப்பித்த போது எனக்கு சில ஊன்றுகோல்கள் கிடைத்தன; சில தூண்டுகோல்கள் கிடைத்தன.
ஊன்றுகோல்கள்:
சார்வாகன்
Cortext
Cortext
கல்வெட்டு
The Analyst
கும்மி
சீனு
சீனு
வால்பையன்
No
நரேன்
குஜால்
கணேசன்
செங்கொடி
குடுகுடுப்பை
Yasir
நரேன்
குஜால்
கணேசன்
செங்கொடி
குடுகுடுப்பை
Yasir
தூண்டுகோல்கள்:
சுவனப்பிரியன்
இறையடியான்
Zia
ராபின்
கார்பன் கூட்டாளி
மு. மாலிக்
விடை பெறும் முன் இன்னொன்று சொல்ல ஆசை. இப்பதிவுகளில் கலந்து கொண்டோர் சிலர் என்னை வியக்க வைத்துள்ளனர். அவர்களுக்கு என் பாராட்டுகளைத் தெரிவிக்க விரும்புகிறேன்.
முதலில் ஒரு தூண்டுகோல் - சுவனப்பிரியன். இவரது மத அறிவு என்னை ஆச்சரியப்பட வைத்தது. (வயதும் சின்ன வயது என்றே நினைக்கிறேன்.) என்னை ஆச்சரியப்பட வைக்கும் இன்னொன்று எப்படி இஸ்லாமியரில் மிகப் பலர் மதத்திற்காக இத்தனை வலுவாக இருக்கிறார்கள் என்பது. (எங்கள் மதம் உண்மை; அதனால்தான் இப்படி என்ற விவாதம் வேண்டாமே. ஏனெனில் கிறித்துவ மக்களுக்கும் அவர்கள் மதமே சரியென்ற எண்ணம் உண்டு.) இந்த இரு மதங்களிலுமே சிறு வயதிலிருந்தே “மதப்பாடம்” அழுத்தமாகச் சொல்லித் தருவதுண்டு. இஸ்லாமில் மதராஸா ஒரு extra விசயம். அது மட்டுமே இவ்வாறு ஒரு அழுத்தத்தைக் கொடுக்கிறதா என்று தெரியவில்லை. சுவனப்பிரியனின் மத அறிவுக்கு என் பாராட்டு.
IbnWarraq நிறைய நூல்களைத் தொகுத்து இந்நூல் எழுதியுள்ளார். சொன்ன செய்திகள் ஏராளம். ஆனால் அவரையும் விட இன்னும் நம் மக்கள் சிலர் மிக ஆழமாக இஸ்லாமைப் பற்றித் தெரிந்து வைத்துள்ளார்கள். இவர்களே இப்படி ஒரு நூல் எழுதினால் நிச்சயமாக அது மிக மிக நன்றாக - இந்த நூலைவிட நன்றாக - இருக்கும் என நம்புகிறேன். சார்வாகன், கும்மி, செங்கொடி - இவர்களின் மத அறிவு என்னை மிக வியப்படைய வைக்கிறது. மத நம்பிக்கையுள்ளவர்கள் மத நூல்களை பக்தியோடு வாசிப்பது வேறு; அது எளிதும் கூட. நம்பிக்கையோடு வாசிப்பது கண்ணை மூடிக்கொண்டு வாசிப்பது என்பதற்கு ஒப்பு. ஆனால் நம்பிக்கையில்லாமல் ஒரு தீவிர ஆய்வு மனப்பான்மையோடு வாசிப்பது மிகவும் கடினம். அப்படி வாசித்து தெளிவாக இருப்பது வியப்பு. இம்மூவருக்கும் என் வாழ்த்துகளும், பாராட்டுகளும்.
Zia
ராபின்
கார்பன் கூட்டாளி
மு. மாலிக்
விடை பெறும் முன் இன்னொன்று சொல்ல ஆசை. இப்பதிவுகளில் கலந்து கொண்டோர் சிலர் என்னை வியக்க வைத்துள்ளனர். அவர்களுக்கு என் பாராட்டுகளைத் தெரிவிக்க விரும்புகிறேன்.
முதலில் ஒரு தூண்டுகோல் - சுவனப்பிரியன். இவரது மத அறிவு என்னை ஆச்சரியப்பட வைத்தது. (வயதும் சின்ன வயது என்றே நினைக்கிறேன்.) என்னை ஆச்சரியப்பட வைக்கும் இன்னொன்று எப்படி இஸ்லாமியரில் மிகப் பலர் மதத்திற்காக இத்தனை வலுவாக இருக்கிறார்கள் என்பது. (எங்கள் மதம் உண்மை; அதனால்தான் இப்படி என்ற விவாதம் வேண்டாமே. ஏனெனில் கிறித்துவ மக்களுக்கும் அவர்கள் மதமே சரியென்ற எண்ணம் உண்டு.) இந்த இரு மதங்களிலுமே சிறு வயதிலிருந்தே “மதப்பாடம்” அழுத்தமாகச் சொல்லித் தருவதுண்டு. இஸ்லாமில் மதராஸா ஒரு extra விசயம். அது மட்டுமே இவ்வாறு ஒரு அழுத்தத்தைக் கொடுக்கிறதா என்று தெரியவில்லை. சுவனப்பிரியனின் மத அறிவுக்கு என் பாராட்டு.
IbnWarraq நிறைய நூல்களைத் தொகுத்து இந்நூல் எழுதியுள்ளார். சொன்ன செய்திகள் ஏராளம். ஆனால் அவரையும் விட இன்னும் நம் மக்கள் சிலர் மிக ஆழமாக இஸ்லாமைப் பற்றித் தெரிந்து வைத்துள்ளார்கள். இவர்களே இப்படி ஒரு நூல் எழுதினால் நிச்சயமாக அது மிக மிக நன்றாக - இந்த நூலைவிட நன்றாக - இருக்கும் என நம்புகிறேன். சார்வாகன், கும்மி, செங்கொடி - இவர்களின் மத அறிவு என்னை மிக வியப்படைய வைக்கிறது. மத நம்பிக்கையுள்ளவர்கள் மத நூல்களை பக்தியோடு வாசிப்பது வேறு; அது எளிதும் கூட. நம்பிக்கையோடு வாசிப்பது கண்ணை மூடிக்கொண்டு வாசிப்பது என்பதற்கு ஒப்பு. ஆனால் நம்பிக்கையில்லாமல் ஒரு தீவிர ஆய்வு மனப்பான்மையோடு வாசிப்பது மிகவும் கடினம். அப்படி வாசித்து தெளிவாக இருப்பது வியப்பு. இம்மூவருக்கும் என் வாழ்த்துகளும், பாராட்டுகளும்.