Showing posts with label I.S.L. 2015. Show all posts
Showing posts with label I.S.L. 2015. Show all posts

Wednesday, December 16, 2015

878. I.S.L. .... 5 A VERY LUCKY DAY FOR CHENNAI...





*

15.12.15 - கோவா - தில்லி - இரண்டாவது ஆட்டம் - 2 : 0 மொத்தம் 2 : 1

 16.12.15 - சென்னை - கொல்கத்தா - ,, .. - 1: 2 மொத்தம் 4 : 2

16.12.15 -இன்று ஆட்டம் நம்மை பெஞ்சின் விளிம்பில் உட்கார வைக்கும் அளவிற்கு நன்கிருந்தது. நேற்று சென்னை நன்கு விளையாடி மூன்றுக்கு முட்டை என்ற கணக்கில் வென்றது. ஆனால் இன்று மோசமாக விளையாடி தோற்றது. ஆனாலும் மொத்தத்தில் கூடுதல் கோல்கள் என்றதால் வென்று இறுதிப் போட்டிக்குப் போனது. A VERY LUCKY DAY FOR CHENNAI.

முதல் பத்து நிமிடங்களில் சென்னை வேகமாக விளையாடியது. ஆனால் முதல் கோல் ஒன்று விரைவில் சென்னைக்கு  விழுந்தது. சென்னை முதல் நாள் விளையாட்டில் விழுந்த முதல் கோல் almost a suicidal self goal. today also it was a pathetic goal. defense அவ்வளவு மட்டமாக விளையாடியது. மைனஸ் பாஸ் என்று சொல்லி பந்தைத் தட்டி கோலுக்கு வழியமைத்தார்கள்.

இரண்டாம் பாதியிலும் மிக மட்டமான டிபென்ஸ். பாவம் .. கொல்கத்தா. கொஞ்சம் LUCK இருந்திருந்தால் நாலைந்து கோல் சென்னைக்கு விழுந்திருக்கும். எப்படியோ சென்னை பொழச்சிது!

கொல்கத்தா அணியில் நம்மூர் பையன் மோகன்ராஜ் நன்றாக ஆடினார். சென்னை அணியின் மெண்டோசா நன்றாக விளையாடினார். ஆனால் எதிரணி அவரை விளையாட விடவில்லை.

இறுதிப் பணியில் சென்னை வெல்ல வேண்டும் என்று ஆவலுண்டு.

ஆனால் கோவா அணிதான் வெல்லும் என்றே எதிர்பார்க்கிறேன்.





 *



Sunday, December 13, 2015

877. I.S.L. ... 2015 .. 4




*


என்னென்னவோ நடந்துகிட்டுஇருக்கு ...

முதல் லீக்கில் கடைசியில் இருந்த சென்னையின் அணி அரையிறுதிக்கு வந்திருச்சு... டாப்ல இருந்த புனே அணி காணாமப் போயிருச்சு. கட்டாயம் வரும் என்று நினைத்திருந்த கேரளா அணி தோத்துப் போச்சு. 50 ஆயிரம் பேருக்கு மேல் கேரளாவில் விளையாட்டு பார்க்கக் கூட்டம் வந்துச்சு. ஆனால் தில்லியில் அரையிறுதிக்கே 6ஆயிரம் பேர்தான் - தில்லி அணி விளையாடியும் -  பார்க்க வந்திருக்கிறார்கள். இதுவே ஒரு பெரிய நகை முரண். இதிலும் எதிர்பார்ப்புக்கு மாறாக தில்லிதான் வெற்றி பெற்றுள்ளது 1:0. இதிலும் நான் எதிர்பார்த்த கோவா ஒரு கோல் வாங்கித் தோற்றது. பார்ப்போம் - இரண்டாவது ஆட்டத்தில் என்ன நடக்கிறதென்று.

சென்னையில் X கொல்கத்தா அணியின் முடிவும் வித்தியாசமாக இருந்தது. இரண்டு லீக் ஆட்டங்களிலும் கொல்கத்தா அணி சென்னையை வென்றது. இப்போட்டியில் மூன்றாவது முறையாக இந்த இரு அணிகளும் களம் இறங்கும்போது கொல்கத்தா அணி வெல்லும் என்று தான் நினைத்தேன். ஆனால் பந்து சென்னையிடமே அதிகம் இருந்தது. 3:0 என்று  முடிவு வந்ததும் ஒரு ஆச்சரியம் தான். இனி இரண்டாம் ஆட்டத்தில் 3 கோலை முறித்து கொல்கத்தா வெல்வது மிகவும் கஷ்டம் என நினைக்கிறேன்.

பார்க்கலாம் ..........






*




Thursday, November 12, 2015

873. I.S.L. 2015. ......(2) & மூன்று விஜய் சீரியல்கள்







*



 என்ன எழுதுவதென்றே தெரியவில்லை.. தலையே சுத்துது. காரணம் - எல்லா அணியும் ரொம்ப நல்லா விளையாடுறாங்க. clear picture கிடைக்கலைன்னு சொல்வாங்களே அப்படித்தான் இருக்குது! ஒரு வேளை செமி பைனல் ரவுண்டுகள் வித்தியாசமா இருக்கலாம். ஆனாலும் அதுக்கு எந்தெந்த அணி வரும்னு தெரியலை. ஏன்னா எல்லா அணிகளும் நல்லா விளையாடுறதுனால ரிசல்ட்கள் எல்லாம் கோக்கு மாக்கா இருக்கு.

 பாருங்களேன் ... கோவா அணி பெரிய அணிகளில் நான் வச்சிருந்தேன்.  ஆனா நம்ம சென்னை டீம் கூட விளையாடி 0:4ன்னு தோத்து நின்னாங்க. முதல் லீக்கில் நடுவில் இருந்த சென்னை அணி கடைசியில் இருந்த வடகிழக்கு அணிட்ட ரெண்டு கோல் வாங்கி தோத்தாங்க. ஆனா புனே அணி டாப்ல இருந்தப்போ நம்ம சென்னை அணி 1:2 என்று வென்றது. இப்படி நடந்தா தலை சுத்தாதா?

முந்தா நாள். 10ம் தேதி. இரண்டாம் லீக்கில் கேரளா அணியும் கல்கத்தாவும் மோதின. நினைத்துப் பார்க்க முடியாத கூட்டம். கொச்சின் மைதானம். 60,276ன்னு நினைக்கிறேன். அம்புட்டு கூட்டம் ...அதுவும் புட்பால் விளையாட்டுக்கு! கட்டாயம் கேரளா ஜெயிச்சிடும்னு நினச்சேன். விளையாட்டும் மகா தீவிரம். ஆனால் கடைசி நிமிடங்களில் 2:3 கல்கத்தா அணி ஜெயிச்சிருச்சி.

அதென்னமோ நிறைய விளையாட்டுகளில் கடைசி பத்து நிமிடங்கள் கதையவே மாத்தியிருது. நேத்து. 11ம் தேதி. சென்னையில் விளையாட்டு. சரியான மழை நடுவில். சென்னையும்,வ.கி. அணியும். 62% பந்து நம்ம கையில் ... ஐ மீன் .. காலில். ஆனால் இதிலும் மிகக் கடைசி நிமிடத்தில் சென்னைக்கு இரண்டாவது கோல் விழுந்தது. 1:2

சென்னைக்கு இன்னும் மூணு ஆட்டம் இருக்கு. எல்லாம் ஜெயிச்சா வரும், செமிக்கு சென்னை வருமோ... வராதோ...?


 ***********




இன்னைக்கி மேட்ச் இல்லை. அப்போ அந்த ரெண்டு சீரியலையும் பார்த்திரலாம் - விஜய் டிவியில். ஆனால் இந்த இரண்டு சீரியலுக்கும் நடுவில் ஒரு சீரியல் வருது பாருங்க .... கடவுள் தந்த வீடு  - அதுக்கு நான் வச்சிருக்கிற பெயர் - சைத்தான் கி கர்.  நிறைய கன்னாபின்னான்னு நகை போட்டுக்கிட்டு மகா கொடூரமா மூணு பொம்பிளைங்க வருவாங்க. கண் கொள்ளாக் காட்சி. அதிலும் நான் இதுவரை பார்த்த - முழுசாகவோ, அரைகுறையாகவோ - சீரியல்களில் இது போன்ற ஒரு முட்டாள்தனமான சீரியல் எதுவும் இல்லை. அட ... மடிக்கணினியை சோப்பு போட்டு சுத்தமா கழுவி வைக்கிற கதாநாயகில்லாம் இதில் உண்டு. ஆனா இந்த சீரியலில் நடிச்ச நிறைய பேருக்கு விஜய் அவார்ட் எல்லாம் கொடுத்தாங்க. (பாவம்,, சரவணா சீரியலில் வர்ர வில்லன் பாண்டிக்கு கொடுக்காம ஒரு பொம்பளைக்குக் கொடுத்தாங்க.) இந்த லட்சணத்தில் இந்த சீரியல் இந்தி, மலையாளத்திலும் ஓடுதாம். நம்மளை விட மலையாளத்துக்காரங்க பெட்டர்னு நினச்சிருந்தேன். அப்படியெல்லாம் இல்லை போலும். அவங்களும் நம்மள மாதிரி தர்த்திகள் தான் போலும்.

ஆனாலும் இந்த ஒரு சீரியலைப் பற்றி மட்டும் சொல்லிட்டா போதுமா? ஆண்டாள் அழகர்னு ஒரு சீரியல். ஒண்ணு இரண்டு வாரத்துக்கு முன்னால் அந்த சீரியலை வீட்ல சென்சார் பண்ணிட்டாங்க. என்ன மாதிரி சின்ன பசங்க எல்லாம் அதைப் பார்க்கக் கூடாதுன்னுட்டாங்க. ஒரு ஜோடி “அது” & “இது”ன்னு ”அதப்பத்தி” அசிங்கமா தொடர்ந்து பேசிக்கிட்டே இருந்தாங்களாம்.

ஆரம்பத்தில சரவணன் மீனாட்சி ரொம்ப பிடிச்சிது. காரணம் என்னன்னா ....நிறைய நல்ல விஷயங்களைக் காண்பிச்சாங்க.  வரதட்சணை கிடையாது; நல்ல நாள் பார்க்கிறது கூடாது; ஜாதகம் பார்க்கக் கூடாது; பெண்ணின் பழைய காதல் - அது infatuationஆக இருக்கலாம் - அதையெல்லாம் தாண்டும் கதாநாயகன்; இப்படி நிறைய பாசிட்டிவ் பாய்ண்டுகள் இருந்திச்சி. இப்போ கழுதை தேஞ்ச கட்டெறும்பா போச்சு. வேற வேற டைரடக்கர்களாம்!

sorry directors ...... கொஞ்சம் தேறப் பாருங்க’ப்பா ..........

Tuesday, November 03, 2015

872. I.S.L. 2015








*






 I.S.L. 2014 அதிகமாகவும் பார்க்கவில்லை. அந்த அளவு அப்போது ஆர்வமில்லாமல் போனது. ஆனால் இந்த லீக் விளையாட்டுகளில் கண்ணில் தென்படுமளவிற்கு கால்பந்து விளையாட்டு அங்கங்கு கண்ணில் படுகிறது மகிழ்ச்சியளிக்கிறது. ஏதோ சினிமாக்காரர்கள், கிரிக்கெட் விளையாட்டுவீரர்கள் தயவில் கால்பந்து விளையாட்டும், கபடியும் தொலைக்காட்சிகளில் வருகின்றன. பெரிய அதிசயம் தான். கால்பந்து விளையாட்டுன்னு ஒண்ணு இருக்குன்னு சின்ன வயசு பிள்ளைகளுக்கும் தெரிய வந்திருக்கு. தொடரட்டும்.

கால்பந்து பார்ப்பதில் ஒரு குறை  எனக்கு. யார் பெயரும் தெரியவில்லை. வெளியூர் ஆட்டக்காரர்கள் மட்டுமல்ல... நம்ம ஆளுகளும் யாரும் தெரியவில்லை. பரிச்சயமில்லாத முகங்கள் ... யார் யார் எப்படி விளையாடுவார்கள் என்பதும் தெரியாமல் ஆட்டத்தைப் பார்ப்பதில் விறுவிறுப்பு மிகவும் குறைந்து விடுகிறது.  பெயர் தெரிந்த விளையாட்டுக்காரர்களும் இணைந்தால் இன்னும் நன்றாக இருக்கும்.

சென்ற ஆண்டு எப்படி இருந்ததோ... இந்த ஆண்டில் ஒவ்வொரு அணியிலும் ஆடுபவர்களில் ஐந்து பேராவது நம்மூர் பசங்களா இருக்கணும்னு ரூல் இருக்கு. தெரிந்தவர்களோ தெரியாத முகங்களோ விளையாட்டு நன்றாக போகின்றன. ஆனால் எதிர்பார்ப்புகள் மாறி மாறி நடக்கின்றன.

விளையாட்டு ஆரம்பிப்பதற்கு முன் கல்கத்தா, கோவா, கேரளா அணிகள் நன்றாக விளையாடும் என்று நினைத்திருந்தேன். அதோடு நம்மூர் என்பதால் சென்னை அணியையும் எதிர்பார்த்திருந்தேன். அதில் முதல் குண்டு முதல் நாள் முதல் ஆட்டத்திலேயே நடந்தது. சென்னைக்கு விழுந்த முதல் கோல் very unlucky goal. கோல் கீப்பர் பந்தைப் பிடித்து விட்டார். ஆனால் அவர் மேலும் பந்தின் மேலும் ஒரு டிபன்ஸ் ஆட்டக்காரர் விழுந்து தொலைக்க, பந்து நழுவி கோலுக்குள் சென்றது. ஆனாலும் அடுத்து இரு கோல்கள் விழுந்தன. முதல் கோல் இல்லாமல் இருந்திருந்தால் முதல் ஆரம்பம் 2:2 என்று சரியாக ஆரம்பித்திருக்கும்.  சரி...சென்னையைக் கழுவி ஊத்தி விட்ற வேண்டியது தான்னு நினைச்சேன். ஆனாலும் துளிர் விட்டுடிச்சி.

நான் நினைத்த நாலு அணிகளையும் விட புனே அணி நன்றாக வென்று கொண்டு வந்தன. கேரளா அணி கீழே போய்க்கொண்டிருந்தது. அதிக ஏமாற்றம் North east அணி தான். எழுந்திருக்கப் போவதில்லை என்று தெரிகிறது.

தெரிந்த இரண்டே இரண்டு கோச் நம்ம ஆளு கார்லோஸ். மும்பை அணியை நடத்துகிறார். இன்னொருவர் சிக்கோ. இருவரும் ப்ரேஸில் காரர்கள்.

இனி வரும் மோதல்கள் இன்னும் நன்றாக இருக்குமென நம்புகிறேன். தொடர்ந்து பார்க்கணும் - டாக்டரும் சொல்லிட்டார்ல ....


 *