Showing posts with label தோரணம். Show all posts
Showing posts with label தோரணம். Show all posts

Monday, August 08, 2022

1179. CLICKBAIT



*


CLICKBAIT

இந்தத் தலைப்பில் T.O.I. நாளிதழின் தலைமை ஆசிரியர் இன்று ஒரு கட்டுரை எழுதியுள்ளார். ஏதாவது ஒரு “குண்டக்க மண்டக்கதலைப்பு ஒன்றைக் கொடுத்து தங்கள் பதிவுகளை, வீடியோக்களைப் பார்க்க வைக்கும் “தந்திரம்” பற்றியெழுதியுள்ளார்.

இணையத்தில் இந்த வியாதி தீயாய் எறிகிறது. திடீரென யாராவது செத்துப் போய் விட்டார்கள் என்று ஒரு தலைப்பு. உண்மையே இல்லாமல் இப்படி ஒரு தலைப்பு கொடுத்து அவர்களது  வீடியோவைப் பார்க்க வைக்கும் “ராஜதந்திரமாம்”! அல்லது ஏதாவது  ஒரு பொய்யைத் தலைப்பாக வைத்து ஆள் சேர்க்கிறார்கள். அங்கே போய் பார்த்தால் உப்புக்கு சப்பில்லாத ஒரு சொதப்பல் இருக்கும். பார்த்ததும் ஒரே ஒரு கேள்வி மட்டும் தான் மனதிற்குள் எழும்: “இந்த முட்டாப் பசங்க ஏன் இந்த மாதிரி செய்றாங்க?”

இன்னொரு தனி மனிதன் பெரும் படையாக நம்முன் உலாவி வருகிறார். தமிழர்களுக்குச் சேவை செய்யவே வந்த செம்மல். பருமனான ஆள் என்பதால் அச்சமில்லை.. அச்சமில்லை.. என்று தலைப்பாக்காரனின் பாட்டுக்கு ஆதர்சமாகத் திகழ்கிறார். எந்த நடிகை / நடிகர் எந்த angleல் படுத்திருக்கிறார் என்பது வரை துல்லியமாகப் பார்த்து நம்மிடம் அந்த நல்ல செய்தியைக் கொண்டு வருகிறார். இவர் இப்போதைக்கு சினிமா உலகத்தை மட்டுமே புரட்டிக் கொண்டிருக்கிறார். இவர் சிறிது திசை திரும்பி காவல் துறை ஆட்கள், அரசியல்வாதிகள் என்றும் விரைவில் ஆரம்பிக்க வேண்டும் என்பது என் ஆவல். (ஏனெனில் அப்போது தான் காவல் துறைக்கோ மற்றோருக்கோ இந்த ஆளின் கழுத்தில் கைவைத்து உள்ளே அனுப்புவார்கள் என்று நினைக்கின்றேன். ) அதுவரை இது இந்த ராசாவின் காலம் தான்.

இன்னொரு பருமனான ஆளு ரம்மி விளையாட நம்மைக் கூப்பிட்டால் கூட பரவாயில்லை. ஆனால் அவரு – சரத்து குமார் அய்யா தான் – நீங்க போய் விளையாடிட்டு செத்துப் போங்கன்னு சொல்றார். அவரையும் யாரும் கேள்வி கேட்பதில்லை.

அட போங்கப்பா ....





*


Saturday, June 18, 2022

1266. நடிகர்களின் ரசிகர்கள் எனிப்படி இருக்கிறார்கள்?




*

அம்புலிமாமா கதைகள்

தமிழ்வாணனின் சங்கர்லால் கதைகள்

மு.வரதராசனார்

அகிலன்

கல்கி

நா. பார்த்தசாரதி

.

.

.

ஜெயகாந்தன்

தி.ஜா.ரா.

இந்திரா பார்த்தசாரதி

அதன் பின் .. அசோகமித்திரன், லாசாரா, கி.ரா., சுந்தர ராமசாமி, கோணங்கி, மெளனி, ஜெ.மோ. என்று பலர் எழுத்துகளை ஆங்காங்கே தூவிக்கொண்டதுண்டு. சாரு மாதிரி ஒரு சிலரை ஓரிரண்டு வாசித்து விட்டு சுத்தமாகப் புறந்தள்ளியதுமுண்டு.

ஒரு வாசிப்பாளனின் வாசிப்பின் பரிணாமம் இப்படித்தானே அடுக்கடுக்காய் இருக்க முடியும்.

ஆனால் ஏதாவது ஒரு நடிகரைப் பிடித்துப் போனால் தங்கள் ஆயுள் முழுவதும் அவரின் விசிறியாக மட்டுமே இருப்பது எப்படி? நான் இன்னும் அம்புலிமாமா கதைகளைப் படித்துக் கொண்டு, ‘ஆஹா .. என்னே கதைகள்... என்னா இஸ்டைலு .. என்று சொல்லிக் கொண்டிருந்தால் என்னைப் பார்த்து சிரிக்க மாட்டார்களா? சிவாஜி மாதிரி இன்னும் யாரும் நடிக்க முடியுமான்னு ஒரு கேள்வி மனதிற்குள் இருந்தாலும், இன்று அவர் படங்களைப் பார்த்து முன்பு போல் ரசிக்கமுடியவில்லை; ரசிக்க முடியாது. அடுத்தடுத்து யார் என்று தானே இருக்க வேண்டும்.

இல்லீங்க ... சின்னப் பிள்ளையிலிருந்தே எனக்கு அவரைத் தான் (அவரை மட்டும் தான்) பிடிக்கும்னு யாரும் சொன்னால் ...

.... தள்ளி உட்கார்ந்து அவர்களை வேடிக்கை மட்டும் பார்க்கலாம்.





*

Wednesday, March 25, 2020

1087. தோரணம்




*


வடநாட்டு இறக்குமதி இங்கே நல்லா போணியாகுது. வடக்கில தான் fashion உருவாகும் போலும். நானும் கூட இந்தி ஆராதனா படம் பார்த்துதான் 70-ல் ஜிப்பா போட ஆரம்பித்தேன் - அதுவும் கலர் கலரா! (முதல் ஜிப்பா பின்க் கலர் தான்!) சாப்பாட்டில் கூட பாணிபூரி எல்லாத்துக்கும் பிடிச்சிப் போச்சு.(எனக்கில்லை.) ஏதோ ஒரு பாக்கை எடுத்து உதட்டுக்குக் கீழ போட்டுக்குறாங்களே … அதுவும் வட இந்திய சரக்கு தான்.  

இது மாதிரி  பொறுத்தமில்லாத fashions காத்தோடு நமக்கும் வந்திருதே. அட .. அவுக செவத்த தொலிக்காரவுக. முழுசா முதுகு தெரியறது மாதிரி ஜாக்கெட் எல்லா வயசுக்காரங்களும் ரொம்ப கீழ வரைக்கும் வர்ர மாதிரி போட்டுக்குறாங்க .. நம்ம ஆளுகளும் follow  பண்ண ஆரம்பிச்சிட்டாங்க. என்னத்த சொல்ல … ?

ஆனா ஒண்ணு பாருங்க .. அவங்க செவத்த தோலுக்கு மெகந்தி வச்சிக்கிட்டா எடுப்பா தெரியுது. நம்ம ஆளுக - என் பிள்ளைகளையும் சேர்த்து - மெகந்தி போட்டுக்கிட்டா போட்டதே தெரிய மாட்டேங்குது. நம்ம ஊர் பொண்ணுகளுக்கும் நம்ம தோலுக்கும் மருதோன்றி இலையை அரைச்சி வச்சிக்க்ட்டா தான் பளிச்சின்னு நல்லா இருக்கு. பிறகு ஏன் மெகந்தி?



இப்படிப் பல கேள்விகள் 








*

Thursday, January 02, 2020

1078. தருமியின் சின்னச் சின்ன கேள்விகள்




*
நேற்று மாலை புதிய தலைமுறையில் 2020ல் கலாமின் கனவு நனவாகுமா என்ற ஒரு கருத்தாடல். எல்லோரும் பேசினார்கள். பார்த்த பொழுது என் நீண்ட நாள் கேள்வி மீண்டும் மனதில் எழுந்தது. பேசியவர்களில் மிகவும் சிறப்பாகப் பேசியவர் கம்யூனிஸ்ட் கட்சிக்காரர்.

இந்தக் கட்சி மட்டும் தான் நம் மத்தியில் உள்ள கட்சிகளில் வித்தியாசமான ஒன்று. பதவி ஆசை, ஊழல் இப்படியே பார்த்து பழகிப் போய் விட்டோம். அவர்கள் மத்தியில் இப்படி ஒரு கட்சியா என்று சொல்லும் அளவிற்கு நல்ல கட்சியாக இருக்கிறது. ஆனால் மொத்தமே 5 இடங்களில் மட்டும் வென்று பாராளுமன்றத்தில் இருக்கிறார்கள். நமக்கு வரும் பிரச்சனைகளை இவர்கள் வென்றெடுக்க வேண்டும் என்றெல்லாம் விரும்புகிறோம்.  ஆனால் இவர்களுக்கு - என்னையும் சேர்த்து - நாம் எப்போதும் ஓட்டளிப்பதில்லை.

ஏனிந்த நிலை இவர்களுக்கு.? இதற்கான காரணங்கள் என்ன? என்றேனும் அவர்களும் கொஞ்சம் செல்வாக்கு பெருவார்களா?

பதில் தெரிந்தால் சொல்லுங்களேன் .. கேட்டுக் கொள்கிறேன்.

****

இன்றும் ஒரு செய்தி தினசரியில். புத்தாண்டு விழாக் கொண்டாட்டத்தில் ஒரு தலித் இளைஞன் அடிதடி சண்டையில் கொல்லப்பட்டான். அவனைக் கொன்றது ‘an intermediate caste ஆட்களாம்.


ஏற்கெனவே இது போன்ற செய்திகளில் தலித் என்பதை எழுதுபவர்கள் அவர்களைக் கொன்றவர்களின் சாதியை எழுதுவதே இல்லை. ஏனிந்த வழக்கம் என்று பல முறை கேட்டு விட்டேன்; தினசரிகளுக்கு எழுதியும் அலுத்து விட்டேன். 

செய்திகளைத் தரும்போது கூட இந்த சாதி வித்தியாசங்கள் எதற்கு? எந்த சாதி என்று எழுதினால் அந்த சாதிக்காரர்களுக்குப் பிடிக்காமல் போய் விடும் என்று தினசரிகள் மெளனம் சாதிக்கின்றனவா?

***

ராமராஜ் கம்பெனிக்காரர்கள் மாமாக்களுக்கு 1000 ரூபாய்க்கு வேட்டி சட்டை கொடுக்கப் போகிறார்கள் என்று மாமி சொல்வதாக ஒரு விளம்பரம்.
விளம்பரக்காரர்களுக்கும். விளம்பரம் செய்பவர்களுக்கும் அறிவே இருக்காதோ? அப்படி ஒரு சந்தேகம் எனக்கு.





 *

Thursday, November 21, 2019

1072. தோரணம்





*

பேருந்தில் மூன்று பெண்களுக்குத் தூக்குத் தண்டனை என்றார்கள். பின்னாளில் அவிழ்த்து விட்டு விட்டார்கள். அந்த நீதிபதிகளுக்கு உள்ள மனசாட்சி அது தான் போலும். 
*****

மேலவளவு 13 கொலைகாரர்களை அரசு வெளியே சுதந்திரமாகச் சுற்ற அவிழ்த்து விட்டு விட்டார்கள். அத்தனை மெல்லிய மனசு நம் அமைச்சர்களுக்கு.
*****

சமூகத்தின் ஒரு சாரார் தங்கள் பிணக்குழிக்குக் கூட ஓர் ஒழுங்கான வழியில் செல்ல முடியாத அளவு இருக்கும் அவலம் அரசின் கண்களில் விழுவதே இல்லையே ஏன்? 
*****

உயர் கல்வி நிலையங்களில் பட்டா போட்டுக் கொடுத்தவர்கள் மட்டும் தான் பயில வேண்டும் என்பது கீழ்நிலை மக்களுக்குப் புரியாமல் ஏன் அங்கே போய் தலை கொடுக்கிறார்கள்?
*****


சாதி வித்தியாசம் பார்க்கும் ஆசிரியர்களை நினைத்தாலே அருவருப்பாக உள்ளதே. ம்ம்..ம்.. சாதி .. அது எங்கும் வியாபித்திருக்கும் பெரும்பொருளாகப் போய் விட்டதே ...

*****





Monday, November 26, 2018

1012. தோரணம்





*





*

”வனம்” என்றொரு அமைப்பு கஜாவில் வீழ்ந்த மரங்களில் சிலவற்றிற்கு மீண்டும் உயிர் கொடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். விழுந்த பெரிய மரங்களின் மேல் கிளைகளை வெட்டி விட்டு, தடித்த ஏழெட்டு அடி நீளப் பகுதியை மீண்டும் நட்டு விட்டால் இரண்டு ஆண்டுகளில் தளிர்த்து துளிர்த்து மரமாக வளர்ந்து விடும் என்கின்றனர்.

தொடரட்டும் .. மரங்கள் வளரட்டும்.


                                                                                 *****



TOI தினசரியில் திரைப்பட விமர்சனம் போட்டிருந்தார்கள். ஜோசப்... / ஜார்ஜ் ... எதோ ஒரு பெயர். நகைச்சுவை நடிகர் சீரியஸ் ரோலில் அழகாக நடித்திருக்கிறாராம். மலையாளப்படம். 4 ஸ்டார் கொடுத்திருந்தனர். அதைத் தவிர நான்கு தமிழ்ப்படங்கள்... எல்லாம் ஒன்று.. ஒன்றரை ஸ்டார்.

அடப் போங்கடா .... என்றிருந்தது.


                                                                           *****


குருமூர்த்திக்கு ஒரு கடிதம் வந்தது. நறுக்குத் தெறித்தது போல் இருந்தது. இன்னும் பஞ்சாங்க காலத்து ஆட்களாக இருக்காதீர்கள் என்று ஒரு நல்ல திறந்த கடிதம். உலக அறிவுக்கு அடிமைகளாக ஆகாதீர்கள் .. இந்திய அறிவின் வழியேதான் உலகைப் பார்க்க வேண்டும் என்று குருக்களயா அறிவு பூர்வமாகப் பேசியிருப்பார் போலும்.  அதை எதிர்த்து ’ஸ்வாமினாமிக்ஸ்” என்ற தலைப்பில் அங்கலேசரியா ஐயர் நன்கு எழுதியுள்ளார்.



                                                                                  *****


தேவர் இனத்து 7 சின்னப் பசங்க அம்பையில் ஒரு 32 வயது கோனார் சாதிக்காரரைக் காலையில் கொன்று விட்டு, அவனவனும்  தங்கள் தங்கள் வேலைக்கு / பள்ளிக்குப் போய்விட்டார்களாம் .. எந்த வித மன உறுத்தலும் இல்லாமல். எப்படி ஒரு இளைஞர் படை வைத்திருக்கிறது அந்த சாதி. எவ்வளவு பெரிய பெருமை அந்த சாதியினருக்கு? கொலையும் செய்து விட்டு பத்து பதினொறாம் வகுப்புக்கு சென்று விட்டார்களாம். என்ன ஒரு தீரர்கள் !

ஒவ்வொரு சாதிக்கும் ஊருக்கு நாலு பேரை இதே போல் வளர்த்து விடுங்கள்.. நாடு முன்னேறும்.

இது காதல் விவகாரம். கோனார் சாதியைக் கீழ்ச்சாதியாக்கி, தேவர் சாதிக்கு இந்தக் கோபம் .. வெறி. காதலித்த தேவர் பெண்ணும் தற்கொலை செய்து கொண்டது என்கிறார்கள். நிச்சயமாக எனக்கு அப்படித் தோன்றவில்லை. இன்னொரு சந்தேகம். அட யாதவ் இந்தியா முழுவதும் இருக்கிற கட்சியாயிற்றே. காஞ்சா அய்லய்யாவின் வாக்கின் படி இவர்கள் ”புதிய சத்திரியர்கள்”. இச்சாதியினர் கட்சி அகில இந்தியக் கட்சியாயிற்றே; தேவர் கட்சிகூட பிராந்திக் கட்சி தானே... அதிலும் இப்படி ஒரு மேல்-கீழ் நிலையா?


கடவுளே...

                                                                                 
                                                                                   *****



நீயா நானா?  ஒரு பக்கம் தமிழ் தெரிந்த வடநாட்டுக்காரர்கள்..இன்னொரு பக்கம் தமிழ் எழுத வாசிக்கத் தெரியாத  ஒரு கூட்டம். ஆசிரியனாக வேலை பார்த்த போது ஆங்கிலம் தெரியவில்லை என்று வெட்கமும், வேதனையும் படும் மாணவர்கள் ஒரு புறமும், i dont know tamil என்று பெருமையோடு சொல்லும் மாணவனையும் பார்த்திருக்கிறேன். இது மாறவே மாறாது என்று தான் நினைக்கின்றேன்.

அட... நான் இவ்வளவு பேசுகிறேனே... நான் என் பிள்ளைகளை ஆங்கிலக் கல்வி முறையில் தான் சேர்த்தேன். அதனாலோ என்னவோ வாட்ஸ் அப் செய்தியைத் தமிழில் அனுப்புங்களேன் என் மகள்களிடம் இப்போது சொன்னால் கூட கேட்க மாட்டேன் என்கிறார்கள். நானும் நானெழுதிய இரு நூல்களில் முதல் நூலை என் பேரப் பிள்ளைகளுக்கு சமர்ப்பணம் இட்டேன். எதற்கென்றே தெரியவில்ல !. தமிழ் வாசிக்கும் பேரப்பிள்ளைகள் எனக்கில்லை. அப்படி ஒரு தனிப்பட்ட சோகம் எனக்கு. மொழியின் மேல் காதல் உண்டு என்ற எனக்கு தவறான ஒரு நினைப்புண்டு அதனால்.இந்தி, மலையாளம்,பிரஞ்சு மொழி படிக்க முயன்றேன். மூன்றாவது certificate அளவிற்காவது வந்தது. இந்தியும் மலையாளமும் - முக்கியமாக இந்தியும் -இந்த ka. ga gha. ha என்றெல்லாம் வர ஆரம்பித்தும் அந்த இடத்தை விட்டே ஓடி விட்டேன்.

சரி... நீயா நானாவுக்கு வருவோம். குறளை மேற்கோளாக ஒருவர் சொன்னதும், தமிழ் எனக்குப் பண்பைப் போதித்தது என்று ஒருவர் சொன்னதும், நாமறிந்த மூன்று மொழிகளில் தமிழுக்கும், தமிழருக்கும் உள்ள நகைச்சுவை உணர்வைப் பெருமையாக பேசிய ஒருவரும். எவ்வித பயனும் நோக்காமல் தனது மொழியிலிருந்து 25 நூல்களைத் தமிழில் மொழி பெயர்த்துள்ளேன் என்று சொன்ன ராஜஸ்தான் அம்மையும்....நம் தமிழ்த் தோள்களை நிமிர்த்தினார்கள்.

ஆனால் தமிழ் தெரியாது என்று சொன்ன சிலரில் ஓரிருவர் நிறையவே தங்களைக் கூமுட்டைகளாகக் காட்டிக் கொண்டனர். ஐம்பெருங் காப்பியங்களைப் பற்றிக் கேட்டதும் ஒரு புண்ணியவான் - இளைஞர் தான் _ தொல்காப்பியர் என்றார். மொழிபெயர்த்திருக்கிறேன் என்று சொன்ன பெண்மணி பொங்கலைப் பற்றி அழகாகப் பேசியதை இடை மறித்து, அவர்கள் சொன்னதில் திங்கள் என்ற சொல்லை நம்மாள் ஒருவரிடம் திங்கள் என்றால் என்ன என்று கோபிநாத் கேட்டார். இந்தப் புண்ணியவான் monday என்றார். புல்லரித்து விட்டது.  ஆனாலும் என் பேரப் பிள்ளைகளும் இந்த நிலைதான் என்று எண்ணினேன்.


நாடு போகும் நிலையும் நன்றாக இல்லை. மொழி செல்லும் வழியும் நன்றாக இல்ல. இதில் என்ன நமக்கு நாட்டுப் பற்று .. மொழிக் காதல் ...!!








*







Monday, June 01, 2015

840. தோரணம்







*


வழக்கமா வீட்டுக்கு கீரை விற்க வரும் அம்மாவின் இரண்டாம் பையனுக்குத் திருமணமாம்.இன்று பத்திரிகை கொடுக்க வந்தார்கள். பையன் பி.ஈ. முடித்து விட்டு, வேலை செய்து கொண்டே எம்.பி.ஏ, படிக்கிறாராம். பெண்ணும் பி.ஈ.முடித்துவிட்டு எம்.பி.ஏ.வும் முடித்து விட்டதாம். இது பெரிய ஆச்சரியமில்லை. அடுத்து, வீட்டையும் தென்னந்தோப்பையும் இன்னும் மகன்களுக்குப் பிரித்துக் கொடுக்கவில்லையாம். மற்றபடி ஆளாளுக்கு ஒவ்வொரு ஏக்கர் எழுதிக் கொடுத்தாச்சாம். இப்படி நிறைய குடும்பத்தைப் பத்தி சொன்னாங்க.

அவங்க போனதும் நானும் தங்க்ஸும் பேசிக்கொண்டோம். நம்மை விட வசதியான ஆளுக... அவங்க கிட்ட நாம் கீரை வாங்குறோம். அதிலும் நமக்கு ஒரு நினப்பு - நாம ரொம்ப பெரிய ஆளுக ... அவங்கல்லாம் படிக்காத லோயர் நிலை ஆளுக அப்டின்னு.

ஆனா இப்படி நினச்சப்போ அவர்கள் மேல் மரியாதை வந்தது. நிச்சயமாக சில மண்ணாந்தைகளுக்கு வரும் வயித்தெரிச்சல் எங்களுக்கு வரவில்லை.

இப்படித்தான் இன்னும் ஒரு ”பெரிய” உசந்த குரூப் நினச்சிக்கிட்டு இருக்கு - // ஐ. ஐ. டி மாதிரி ஒரு பிரிஸ்டீஜியஸ் காம்பஸில், கோஷம் போடுவது, கொடி பிடிப்பது, ஜாதி பேசுவது, ஹிந்து மதத்தை துவேஷமாகப் பேசுவது இதெல்லாம் நினைத்துப் பார்க்கும் போதே மனசுக்கு சங்கடமாகவும் அவமானமாகவும் இருக்கிறது//

இப்படிச் சொல்லிச் செல்லும் பெருந்தகைகளைப் பார்க்கும் போது கோபத்துக்கும் மீறி சிரிப்பும் வருகிறது.

பாவம் அவர்கள் .... நாமல்லாம் எங்கோ போய்டோம்னு தெரியாம நிக்கிதுகள்...!




*****


திண்டுக்கல் தலப்பாகட்டி விளம்பரப் பாடல்...

பிரியாணி எப்படியோ... இந்த பாடல் அம்புட்டு அழகு.

ஜிப்ரன் இசை; கார்த்திக் குரல் அப்டின்னாங்க.... செம டேஸ்ட்.

பாட்டு கேட்டதும் கஷ்டப்பட்டாவது தங்ஸ் டிவிக்கு ஒடி வந்திருவாங்க ...


*****


எப்படி சினிமாவை தியேட்டர்ல போய் பாக்குறது அப்படின்னு யாராவது ஒரு பாடம் எடுத்தா நல்லது. கட்டாயம் ஒரே வாரத்தில் பார்க்கணும் போல் இருக்கே. ஒரு வாரம் விட்டா படம் காணாமப் போகுது.

உத்தம வில்லன் பக்கத்தில நல்ல தியேட்டர்ல ஓடிச்சி. இந்தா அந்தான்னு உடனே பார்க்க முடியாமல் போச்சு.... சரி பார்க்கலாம்னு ஏழெட்டு நாள் கழிச்சிப் போனா அந்தப் படம் என்னைவிட வேகமாக ஓடிப்போயிரிச்சி.

புறம் போக்கு போகலாம்னு நினச்சா அது புறம்போக்காக ஆகிப் போச்சு.

36 வயதினிலே ... பார்க்கணும்னு நினச்சிக்கிட்டு இருக்கேன்.

இந்த நிலைமையில திருட்டு டி.வி. பார்க்காதன்னு சவுண்டு உடுறாங்க.

அதுனால இப்போவெல்லாம் இணையத்திலேயே பார்க்கிறதை வளர்த்துக்கணும்.


 ******


 படம் கோடிக்கணக்குல எடுக்கிறதா சொல்றாங்க. ஓடுறதோ ஒரு வாரம் ... இல்லைன்னா ...கூட நாலைந்து நாள். போட்ட காசு எப்படி வரும்? நடிகர்களுக்கும் கோடிக்கணக்கில் கொட்டிக் கொடுக்குறாங்க.

என்னமோ நடக்குதே சாமி ...!



******* *

Sunday, March 22, 2015

827. அட .. போங்கப்பா .. நீங்களும் உங்க சூப்பர் சிங்கரும் ....






*


சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை ஆச்சரியத்தோடு பார்த்தது உண்டு. இம்புட்டு திறமையான்னு ... ஆனால் வல்லவனுக்கு வல்லவன் இருப்பாங்க போலும். muziklounge அப்டின்னு ஒரு பாட்டுப் பள்ளிக்கூடம் ஒண்ணு இருக்கிறது போலும். அதன் மாணவர்கள் பாடிய இரண்டே இரண்டு பாட்டு கேட்டேன். என்னமா பாடுறாங்க... இவங்க திறமையோடு பார்க்கிறப்போ சூப்பர் சிங்கர்ல ஜெயிச்சவங்க திறமை அதிகமில்லை.

சூப்பர்ல ஜெயிச்சவங்கள்ள அதிகமாக அதன் பிறகு வெளிச்சத்திற்கு வந்தது மாதிரி தெரியவில்லை. முதல் தடவை வந்த மாத்யு என்ன ஆச்சு? அஜேஷ் ஒரு அரை பாட்டு மட்டும் பாடியது மாதிரி இருந்தது. பின் ஆளைக் காணோம். கடைசியா வந்த திவாகர் என்ன ஆச்சுன்னு தெரியலை. ஊதாக்கலரு ரிப்பன் பாட்டு பாடுன பையன் முதல் ஆளாக போட்டியில வரலை. ரொம்ப நல்லா பாடின அல்காவைப் பற்றி அதற்கு மேல் தெரியவில்லை. பரிசு வாங்கினாலும் பின்னணி பாடகர் ஆவதற்கு ’அதற்கு மேலும்’ போவது எப்படி?

எது எப்படியோ... muziklounge போட்டிருக்கிற youtubeல் வர்ர நான்கு பாடகர்கள் பக்கத்தில் - except அல்கா - சூப்பர் சிங்கர் பாடகர்கள் பக்கத்தில கூட வர முடியாது. என்னமா பாடுறாங்க....

சச்சினும், அந்த சின்னப் பொண்ணும் - அஸ்வதி ராஜ் -  நல்லா பாடுறாங்க ... அதிலும் அந்த சின்னப் பொண்ணு பாடும் போது அட... யார் யாருக்கெல்லாம் 60 லட்சம்..70 லட்சம்னு வீடு கொடுக்கிறாங்களேன்னு தோணுச்சி ...



 



*



 *

*

இப்படி ஒரு வித்தகரா? எந்த குருவும் இல்லாமல் பல வகை கம்பி வாத்தியங்களை வச்சி விளாசுகிறாரே.... வித்தகர் தான் .........



*

Thursday, February 26, 2015

823. தோரணம்





*******


உமாசங்கருக்கு முன்பு குரல் கொடுத்தோமேன்னு நினச்சா கஷ்டமா இருக்கு. சரியான விஷயத்துக்கு ‘சவுண்டு’ கொடுத்தோம்; ஆனால் சரியான ஆளுக்கு சவுண்டு கொடுக்கவில்லையேன்னு வருத்தமாக இருக்கு. பலரையும் அதில் இழுத்து வேறு விட்டு விட்டேன். எல்லோரும் மன்னிக்கணும்.

மனிதனுக்கு எத்தனை எத்தனை நிறங்கள் ...?

ஜீசஸ் வேற அடிக்கடி நேரே வந்து இவர்ட்ட பேசுறாராமே .... கடவுளே!

ஒரு கல்லூரியில் பேசியதைக் கேட்டேன். முட்டாள்தனமாகப் பேசினார். எதற்காக அந்தக் கல்லூரியில் அனுமதித்தார்களோ தெரியவில்லை. பேச்சைக் கேட்ட மாணவர்களும் நன்றாக எதிர் வினை செய்யவில்லையே என்ற வருத்தம் எனக்கு.


******

தில்லி மம்ஸ்  நல்ல திறமைசாலி. நினைத்ததை எல்லாம் இதுவரை சாதித்து முடித்து விட்டார்.

ஹோவிட்ஸர் - இதற்கு சமாதி கட்ட நினைத்தார். முழுவதுமாக முடித்து விட்டார். ராஜிவ் புனிதராகி விட்டார்.

ராஜிவின் கொடும் கொலைக்குப் பரிகாரம் செய்ய நினைத்தார்.  முள்ளிவாய்க்காலில் அதை முழுமையாக முடித்து விட்டார்.

அடுத்த ப்ராஜக்ட் பெரிய காந்தி - அதாங்க, மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி - அவர் சொன்னதை ஏறத்தாழ முடித்து விட்டார். என்ன .. காந்தி சுதந்திரம் கிடைத்ததும் காங்கிரஸைக் கலைக்கச் சொன்னார். மம்ஸ் கொஞ்சம் காலம் எடுத்துக் கொண்டார். அவ்வளவு தான். மன்மோகனும் ஒரு நல்ல பலிகிடா!

வாழ்த்துகள் மம்ஸ்!


******

காந்தி குடும்பம் தான் காங்கிரஸை ஒற்றுமைப் படுத்தி வைக்கும் என்று கட்சித் தலைவர்கள் கண்களை மூடிக்கொண்டு நம்பிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் மக்கள் அந்த மூட நம்பிக்கையிலிருந்து எப்போதோ விலகி விட்டார்கள். ஆனால் காங். தலைகள் அடுத்து பிரியங்கா வந்தால் காங். உய்வடைந்து விடும் என்று நினைப்பது வேடிக்கை.

அப்படி ஒரு வேளை பிரியங்கா வந்து விட்டால் என்ன செய்வது  என்று கொஞ்சம் அச்சமாகவே உள்ளது. பதவியில்லாத போதே அவரது ஆசைக்கணவர் அடிக்கும் கொள்ளை பயங்கரமாக இருக்கிறது. மாநிலத்துக்குள் அவர் அடிக்கும் ஸ்டண்ட் பிறகு நாடு முழுவதும் பரவி விடும்.

ராகுல் எங்கே போயிருக்கிறார் என்று தெரியவில்லை. க்ரீஸ் என்கிறார்கள். இமய மலை என்கிறார்கள்.போனது வரை சந்தோஷம்.

Times of Indiaவின் தலையங்கத்தை extend your leave ...  என்ற தலைப்பில் எழுதியுள்ளார்கள். quit என்று எழுதுவதற்குப் பதில் கொஞ்சம் நாகரீகமாக இப்படி எழுதியிருப்பார்கள் என்று நினைக்கிறேன். quit என்பதற்குப் பதில் disappear என்பது என் கருத்து.


*******


நல்லா நடிக்கிற தனுஷின் தலைவிதி ஏன் விளம்பரப் படங்களில் இம்புட்டு மோசமா இருக்கு? வாயில் போடுற சூயிங்கத்தை விளம்பரப்படுத்த ஒரு விளம்பரப் படத்தில ... அடடா ... கொடுமை வந்து கூத்தாடுது. இவருக்கு ஏனிப்படி ஒரு தலைவிதி!

தனுஷின் விளம்பரப் படங்கள் இதுவரை பார்த்ததெல்லாம் கொடுமையாக / கேவலமாக இருக்கு...

மாத்துங்க .. பாஸ்.


******

 அமிழ்திலும் இனிது தமிழ் என்றார். ஆனால் இலங்கைத் தமிழ்  அதிலினும் இனிது என்பது போல் இருக்கிறது.

பேசிப் பழக வேண்டுமென ஆசை!


******

Friday, November 21, 2014

802. பெங்களூரு உலா






*



 போன முறை பெங்களூரு சென்ற போது ஆங்கிலத்தில் எழுதிய தன் கதையை உறவினர் என்னிடம் கொடுத்தார். வாசித்தேன். இருவருமாக உட்கார்ந்து கதை பற்றிய எங்கள் கருத்துகளைப் பரிமாறிக் கொண்டோம்.

சில நாளில் மறுபடியும் பெங்களூரு. இப்போது அவரது அடுத்த கதை ரெடி. நானோ இந்தக் காலக்கெடுவிற்குள் ஒரு புத்தகத்தில் சில பக்கங்களை மட்டும் தமிழ்ப்படுத்தியிருந்தேன். அதற்கே அவ்வளவு சிரமம்.

யாரோ எழுதியதைத் தமிழ்ப்படுத்தவே எனக்கு அவ்வளவு பாடு. ஆனால் மக்கள் சொந்த கதை ஒன்றை உருவாக்கி அதற்கு எழுத்துருவும் கொடுக்கிறார்கள். ஆச்சரியமாக இருக்கிறது. எப்படி ஒரு கதையை உருவாக்குகிறார்கள் என்றே தெரியவில்லையே. எல்லாம் மேஜிக் மாதிரி தான் எனக்குத் தோன்றுகிறது.

 அடுத்த ஜென்மத்திலாவது கதை எழுதும் ஆற்றல் கைவரப் பண்ணணும்!!

 ************

எங்கள் ஊரில் நான்கு சீசன்களையும் ஒரே நாளில் பார்க்க முடியும் என்றார் உறவினர். சொன்னது மாதிரி இருந்த நாலு நாட்களும் வித விதமான நாட்களாகவே நகர்ந்தன. திடீரென்று வெயில். அடுத்த சில நேரம் கழித்து மழை. மாலையில் பனி..குளிர்.

ஆனாலும் நல்ல குளிரை எதிர்பார்த்து ஆசையோடு சென்றேன். குளிரவில்லை.

 ************

போகிற வழியில் விதான் செளதாவைப் பார்த்ததும் நம்மூரில் கட்டிய கட்டிடம் நினைவுக்கு வந்தது. பல எரிச்சல்கள். அழகில்லாத ஒரு கட்டிடம். கட்டிய பிறகு இடிக்கவா முடியும்? ஆனாலும் அதற்காக ‘அந்த ஆள் கட்டிய கட்டிடத்தில் நான் உட்காரவா?’ என்று வீண்பிடிவாதம் பிடிக்கும் அடுத்த அமைச்சர். ஒரு வீட்டைக் கட்டி விட்டு அததற்கு என்று சில இடங்களை வைத்து விடுகிறோம். ஒரு சின்ன வீட்டில் அதன் பிறகு கூட அதைக் கூட மாற்ற முடிவதில்லை. ஆனால் எதற்கோ கட்டிய ஒரு கட்டிடத்தை மருத்துவ மனையாக்குவேன் என்ற வீண்பிடிவாதம் ஒரு அரசியல்வாதியின் ஆணவமாகத் தான் தெரிகிறதேயொழிய அதில் எந்த அர்த்தமும் இல்லை.

 ம்ம் ... எல்லாம் நம் தலையெழுத்து!

 *************

விதான்செளதாவிற்கு எதிர்த்த நீதிமன்றங்களைப் பார்த்ததும் சென்னை நீதி மன்றமும், எங்கள் கல்லூரியும் நினைவிற்கு வந்தன. எல்லாம் Indo-Saracenic architecture. ஒரே ஆள் ... நிறைய கட்டிடங்களுக்கு டிசைன் போட்டிருக்கிறார். அதே சிகப்பு கலர்; வளைவுகள்; ஆர்ச்சுகள் .......

 ************* 

பெங்களூரு ஆட்களிடம் punctuality இருக்குமா? இருக்க முடியுமா?ன்னு கேள்வி எழுந்தது. இருக்க முடியாதுன்னு தான் தோன்றியது. எப்படி முடியும்? ஊர் முழுவதும் திரும்பும் இடத்திலெல்லாம் jam தான் ... traffic jam தான்! இந்த லட்சணத்தில் எப்படி அவர்களிடம் punctuality இருக்க முடியும் என்பது என் கேள்வி.

 ****************

சென்னையை விட விளக்கு அலங்காரங்கள் பெங்களூரில் அதிகமாக இருப்பதாகத் தோன்றியது. கடைகள், தெருக்கள் எல்லாம் வெளிச்ச மயமாக இருந்ததாகத் தோன்றியது.  அதுவும் Elevated Express way-ல் இரவில் போகும் போது சாலை மேலும் கீழுமாய் சென்றது. ஒரு பக்கம் நம் முன்னால் சிகப்பு விளக்குக்ள் அலங்காரமாகச் செல்ல, எதிரிப்பக்கம் வெள்ளை விளக்குகள் கண்ணைக் கூச வைக்கின்றன. படம் எடுக்க ஆசை. கொஞ்சம் க்ளிக்கினேன்.







நல்ல படம் தான் கிடைக்கவில்லை!

 ******************

 Meet Up என்று ஒன்றை புதிதாக கணினியில் காண்பித்தார் உறவினர்; அப்படி ஒன்று இருப்பதை அப்போது தான் அறிந்தேன்.

அட... மதுரையை ஒரு பெரிய கிராமம் என்பார்கள். உண்மைதான் போலும்! சென்னை, பெங்களூரு ஊர்களோடு மதுரையை ஒப்பிட்டுப் பார்த்தால் மதுரை ரொம்பவே பாவமாக இருக்கிறது. சான்றாக ஒரே ஒரு குழுவை எடுத்து பார்த்தேன். புகைப்படக்காரர்கள் குழு. மொத்தம் நான்கு பேர். அதில் ஒருவர் மட்டுமே மதுரைக்காரர்.

 மதுரையில் நிலமை ரொம்பவே மோசமாக உள்ளது. கஷ்டப்பட்டு மதுரை Meet Up-யின் எண்ணிக்கையைக் கூட்ட வேண்டும்.

*****************

பெங்களூரில்  நல்ல விஷயம் ஒன்று கேள்விப்பட்டேன்.

ஒரு  கூட்டு வீடு - apartments - கட்டினால், அதன் கழிவு நீர் எல்லாம் ஒரு தொட்டியில் தேக்கப்பட்டு, recycle செய்யப்பட்டு அந்தக் கூட்டு வீடுகளின் கழிவறையில் மீண்டும் பயன் படுத்தப் படுகிறதாம். இந்த அமைப்போடு தான் வீடு கட்ட முடியும். கட்ட அரசின் உத்தரவும் கிடைக்குமாம்.

ஏனிந்த ஏற்பாட்டை நமது மாநிலத்தில் செயல்படுத்தப் படுவதில்லை. அட...நீதி தெய்வத்தை சிறையில் அடைத்த அநீதிக்காரர்கள் தான் அவர்கள்; இதய தெய்வத்தை இருட்டறையில் பூட்டியவர்கள் தான் அவர்கள். இருந்தாலும் அவர்கள் செய்வதில் உள்ள நல்லவைகளை நாமும் கடைப்பிடிக்கலாமே... இல்ல...

******************

பல இடங்களில் மம்மி படங்கள் ஒட்டியிருந்தார்கள். மறுபடியும் அதே மாதிரி நிறைய படம் ஒட்ட வேண்டிய நிலை வரட்டும் என்று நினைத்துக் கொண்டேன்.


*****************
22.11.14

இன்னொன்று சொல்ல மறந்து போனேனே,,,, பெங்களூருக்குள் சுற்றிக் கொண்டிருந்தோம். எங்கும் ட்ராபிக்... வண்டிக்குள் சிறை ... பொறுமை காக்க திறமை தேவை ... அங்கே வண்டியோட்டவும் பெருந்திறமை தேவை....

அசந்து போய் உட்கார்ந்திருந்த போது அந்தத் தெரு முக்கில் ஒரு பெரிய போர்டு வைத்திருந்தது.

SMALL FAMILY 

HAPPY FAMILY

என்று எழுதியிருந்ததைச் சத்தமாக வாசித்தேன். சில நொடி கழித்து ...

SMALL CITY

HAPPY CITY

என்று சொன்னேன். காருக்குள் இருந்த ‘மக்கள் கூட்டம்’ அனைத்தும் ஒரு சேர கை தட்டி சந்தோஷம் என்றார்கள் -- இருந்தவர்கள் அனைவரும் ‘மதுரைக் கூட்டம்’ !

வாழ்க மதுரை !!!



*




Friday, November 07, 2014

798. தோரணம்







*



 ’க்ரிக்கெட் இருக்கிறது வரை எந்த விளையாட்டும் இந்தியாவில் வளரவே வளராது.’

’க்ரிக்கெட் இந்தியாவில் ஒரு மதம். இந்த மதம் குறைந்தால் தான் மற்ற விளையாட்டுகள் வளரும்.’

 ஒவ்வொரு விளையாட்டுப் போட்டிகள் வரும் போதும் இப்படி சொல்வர் பலர். ஆனால் இப்படி சொன்னவர்கள் கூட (என்னையும் சேர்த்து தான்!!) I.S.L. விளையாட்டு நடக்கிறதே .. அதைப்பற்றி ஏதாவது எழுதுவோம்னு ஒரு பதிவருக்கும் (என்னையும் சேர்த்து தான்!!) ஏன் தோன்றவில்லை?

 அம்புட்டு தான் உங்க கால் பந்து ரசிப்பு அப்டின்னு கிரிக்கெட் தீவிர ரசிகர்கள் சொல்வதும் கேக்குது!

நியாயம் தான். ஏன் யாருமே அதைப் பற்றி மூச்சு கூட விடவில்லை. சரி ... நம்மளாவது நாலு வரி எழுதிடுவோம் ...

விளையாட்டு நல்லாவே இருக்கு. international level இல்லாவிட்டாலும் நல்லா சுறுசுறுப்பான விளையாட்டு. பார்க்க நல்லாவே இருக்கு. அதைவிட பார்க்க வர்ர ஆளுக நான் எதிர்பார்த்ததை விட மிக அதிகம். இதற்கும் கிரிக்கெட்காரர்களின் விளம்பரங்களும், நடிகர்களின் அரவணைப்பும் ஒரு காரணமாக இருக்கலாம். அப்படியானால் .. அவர்களுக்கும் நன்றி.

 சூழல் கொஞ்சம் மாறியிருப்பது போலும் தோன்றுகிறது. அங்கங்கு கால்பந்து விளையாடும் பையன்களைப் பார்க்க முடிகிறது.

 ஒரு குறை - நம்மூர் ஆட்களின் முகத்தை ஆட்டக்காரர்களில் மத்தியில் பார்ப்பது அபூர்வமாக இருக்கிறது. எல்லாம் வெளி நாட்டு ஆட்களின் ஆட்டமாகத்தானிருக்கிறது. ஒரு வேளை வரும் வருஷங்களில் நம்மூர் ஆட்கள் அதிகமாகலாம்; அதிகமாக வேண்டும்!


 *****


 ரெண்டு வாரத்துக்கு முந்தின இரு பிரபல நீள் தொடர்களில் - நாதஸ்வரம் & சரவணன் மீனாட்சி - ஒரே வாரத்தில் இரு சிறு பெண்கள் தற்கொலை. .... பரவாயில்லை .. நல்ல பாடங்கள் சொல்லித் தருகிறார்கள்.


 *****

டாஸ்மாக் பத்தி இப்போதைக்கு ஒண்ணும் சொல்லலை. ஆனால் அந்தக் கடைகளை ஒட்டி நடத்தும் பார்களை மட்டுமாவது முதலில் நிறுத்தலாமே..

பார் முன்னால் நிறுத்தியிருக்கும் வண்டிகளை குடிமக்கள் எடுத்துக் கொண்டு போவதைப் பார்க்கும் போது இன்னைக்கி எத்தனை பேர் பலியோ என்று தான் தோன்றுகிறது.

அப்புறம் ஏன் தமிழ்நாட்டில் தான் இந்தியாவிலேயே அதிக சாலை விபத்துகள் வராது?

யாராவது சமுகத் தளங்களில் பார்களை முதலில் எதிர்க்க ஏதாவது ஒரு ஏற்பாடுஆரம்பியுங்களேன்....ப்ளீஸ்.

அதற்குப் பிறகு கேரளா மாதிரி ஏதாவது பண்ணலாமே! அம்மாட்ட கேட்டு ஓபிஎஸ் ஏதாவது பண்ணுவாரான்னு பார்ப்போம்!


 *****


யாராவது அந்த sleep well அப்டின்னு ஒரு விளம்பரம் டிவியில வருதே... அதில் கடைசியில் கையில் டீ தம்ளரோடு மீசை வச்ச ஒரு ஆளு என்னமோ சொல்றாரே ... அது என்னன்னு கேட்டு எனக்குச் சொல்லுங்களேன்.

இரண்டு வாரமா முயற்சி பண்றேன் - அவர் என்ன சொல்றார்னு கண்டு பிடிக்கிறதுக்கு.

மனுஷன் பிடி கொடுக்க மாட்டேங்கிறாரே ...!


******

ரேடியோவில ஒரு விளம்பரம். வீட்ல கக்கூஸ் கட்டணும்னு. அகில இந்திய விளம்பரம் போலும். அதில் பேசும் தமிழ் எந்த ஊர் தமிழ் அப்டின்னு தெரியலை. நல்ல வேளை எங்க ஊர் சீத்தலைச் சாத்தனார் இல்லை. அவர் எழுத்துப் பிழைக்கு தலையைப் பிய்த்துக் கொள்வாராம், இங்கே பேச்சுத் தமிழுக்கு வந்த நிலையைக் கேட்டார்னா தலையையே பிய்த்துக் கொள்வார் என நினைக்கிறேன்.

அந்தந்த மொழிக்காரங்க கிட்ட கொடுத்து அந்தந்த மொழியைப் பேச வைக்கக் கூடாதா? கொல்றீங்களே’ப்பா ...!


 *
நம் சமுகத்தில்  half brother,  half sister  என்பவைகளுக்குஇது வரை தமிழ்ச் சொல் ஒரு வேளை தேவையில்லாமல் இருந்திருக்கலாம், ஆனால் இரண்டு காரணம் பற்றி இனி அது தேவை என்றே நினைக்கிறேன்.

முதல் காரணம்:
பழைய சமுகத்தில் இந்த வார்த்தைகள் தேவையில்லாததால் அதற்குரிய தமிழ்ச் சொற்கள் தேவையில்லாமல் இருந்தது. ஆனால், இன்று சமுக மாற்றங்கள் நிறைய வந்து விட்டன. இனி இந்த வார்த்தைகள் இனி நம் சமுகத்திற்கும் தேவை தான்.

இரண்டாம் காரணம்:
வெளிநாட்டுக் கதைகளை மொழியாக்கம் செய்யும் போது இதற்கான வார்த்தைகள் தமிழில் இல்லையென்பதால் தலையைப் பிய்த்துக் கொள்ள வேண்டியதுள்ளது!

புது வார்த்தைகளைக் கண்டுபிடித்துச் சொல்லுங்களேன்!


*****

cinthol சோப்புக்கு ஒரு விளம்பரம். சில உடம்புக்கார சிப்பாய்கள் ... நம்புகிறோம் அப்டின்னு ஒரு பாடல்.
சாமிகளா... இந்த பின்னூட்டத்தை ஆக்கிய, தமிழாக்கிய புண்ணியவான்களே!  போதுமய்யா .. முடிஞ்சா இந்த பின்னூட்டத்தை எடுத்திட்டா அந்த சோப்புக்கு நல்லது.

*****


ஆங்கில இந்து வில் ஒரு செய்தி வந்திருந்தது - ஓரிரு நாட்களுக்கு முன்.

ஆங்கில இணையப் பதிவுகளின் தீரம் மிகவும் குறைந்து போய் விட்டதாம். எழுதுபவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாகப் போய் விட்டதாம். இப்படியெல்லாம் எழுதிய செய்தியில் தமிழ் இணையப் பூக்கள் நன்றாக, நிறைய, எண்ணிக்கை குறையாமல் வருகிறது என்ற செய்தி இருந்தது.

பரவாயில்லையே ... நல்ல பெயர் வாங்கியிருக்கிறோம். எனக்கென்னவோ ப்ளாக் மாதிரி மற்ற சமுகத்தளங்கள் மீது விருப்பம் இல்லை.

தொடருவோம் .................


*****





Sunday, January 13, 2013

630. தோரணம்







*

 நாயும் பேயும் கூட எங்கள் ஊர் மதுரைக்கு வரலாம். ஆனால் இந்த ராமதாஸுன்ற ஆளு உள்ள வரக்கூடாதாம். Thank you, Mr. Collector.
தீண்டப்படக் கூடாத ஆளு தான்.

இந்த மாதிரி கேவலங்களையெல்லாம் நம்மூர் அரசியல் வியாதிகள் எளிதாகத் துடைத்து விட்டுப் போய் விடுவார்கள். இருந்தாலும் இந்த ஆளுக்கு இது மிகச் சரியான பொங்கல் ‘விருது’!


*                                      *                                                 *

 இதென்னங்க ... புதுசா ஒரு தொலைக்காட்சி பார்த்தேன். தந்தி தொலைக் காட்சி. நல்ல நிகழ்ச்சிகள் எல்லாம் போட்டிருந்தது. தற்செயலாக நேற்று ஒரு நிகழ்ச்சி பார்த்தேன்.

பாகிஸ்தானியப் படையினரின் அராஜகத்தைப் பற்றி ஒரு கலந்துரையாடல். இரு ஓய்வுபெற்ற ராணுவ வீரர்கள் - சுந்தர் & இன்னொருவரின் பெயர் கார்த்திகேயன் என்று நினைக்கிறேன். இன்னொரு இளைஞர் சேவியர், லொயோலா கல்லாரிப் பேராசிரியர். நல்ல விவாதம்.

அரசியல்வாதிகளுக்கு அயல்நாட்டு விவகாரங்கள் ஏதும் தெரிவதில்லை; ஆனால் படையின்ரைக் கலந்தாலோசிக்காமல் பல முடிவுகளை அரசு எடுக்கிறது. ஓய்வு பெற்ற படையதிகாரிகளை வைத்து முடிவெடுக்க வேண்டும். ஓய்வு பெற்ற படையதிகாரிகளும் அரசிய்லில் இறங்க வேண்டும். நம் அயல் நாட்டுக் கொள்கைகளில் உள்ள தவறுகளை மேடைகளில் .. ஏன் .. வீதிகளில் இறங்கி நின்று பேச வேண்டும் என்றார் சுந்தர். மூவரின் பங்களிப்பும் மிக அழகாக இருந்தது.

அதைவிட இன்னொரு வியப்பு. இந்த நிகழ்வை நடத்தியவர் பார்ப்பதற்கு ஒரு தமிழர் மாதிரி கூட தெரியவில்லை. ஆனால் மனுஷன் கோட் சூட் போட்டுகிட்டு நல்ல தமிழில் அழகாக கருத்தரங்கை நடத்தினார். இதுவரை வட நாட்டு சேனல்களில் மட்டும் பார்த்தது போன்ற நிகழ்வை இங்கு தமிழில் அழகாக நடத்தியதைப் பார்த்த போது பெருமையாக இருந்தது.

 *                                              *                                               *

புதிய தலைமுறை செய்தித் தொகுப்பு - யானைகள் ஊர்ப்பக்கம் வந்து நாசம் விளைவிக்கின்றன. இதற்குக் காரணம் சரியான ஒப்புதல் இன்றி பல கட்டிடங்கள் அந்த மலைப்பகுதிகளில் கட்டுப்படுவதுதான். கட்டுவது எல்லாம் லேசுப்பட்ட ஆட்கள் இல்லை. ஈஷா, அமிர்தானந்தம் போன்ற ‘கடவுள் புள்ளிகள்’, அதோடு இண்டஸ் என்ற ஒரு கல்லூரி. இதை ஈஷா தங்களிடத்தைச் சுற்றி, மலையடிவாரத்திலிருந்து 150 மீட்டருக்கு உள்ளேயே, மின்சாரத் தடுப்புக் கம்பிகள் வைத்திருக்கின்றனராம்.

என்னே அவர்களது மற்ற உயிர்கள் மீதான பாசம் !

உபதேசங்கள் ஊருக்குத் தான் ...!


*                                                                  *                                  *

இப்படி சில தொலைக்காட்சிகளைப் பார்த்ததும் இன்னொரு நிகழ்ச்சி - வசந்த் டி.வி. ஐயப்பன மகர ஜோதியைக் காட்டப் போவதாக ஒரு நிகழ்ச்சி பற்றிய விளம்பரம்.

சில ஆண்டுகளுக்கு முன்புதான் இந்த மகர ஜோதி மக்கள் ஏற்றும் தீபம் என்றெல்லாம் நிரூபித்தார்கள். ஆனால் இன்னும் ம்கர ஜோதி தானாக வரும் ஒளி என்று மக்களும் நம்புகிறார்கள்; அதை ஒளிபரப்பவும் ஒரு தொலைக்காட்சி இருக்கிறது.

அட போங்க’ப்பா, ஒரே வேடிக்கை தான்!

*                                                           *                                                 *

சூர்யா ரொம்ப பிடிக்கும் தான். ஆனாலும் இவர் இம்புட்டு விளம்பரங்களுக்கு வரக்கூடாதுங்க. பயங்கர போர். Just an overkill. அதுவும் Aircel-க்கு ஒரு விளம்பரத்தில் வர்ராறு பாருங்க ... சாமியே! சகிக்கலை’ப்பா! தாங்க முடியலை. காசுன்னா என்ன விளம்பரத்திலேயும் தலை காட்ற அளவுக்கா சூர்யா காசுக்கு அலைய்றார்?

இந்த விளம்பரங்கள் பார்த்ததும் அஜீத் மேலே எல்லாம் ரொம்ப மரியாதை வந்தது.

*                                                                          *                                           *

 நமக்கு இசை ஞானம் சுத்தமா கிடையாது. ஆனாலும் என்னாலேயே Fiama சோப்புக்கு வர்ர ஒரு விளம்பரத்தில் ஒரு ஞான சூன்யம் ஒரு பாட்டு பாடுது. தாங்க முடியலை. கடவுளே .. கர்ண கடூரம் அப்டின்னு என்னான்னு தெரியணும்னா அந்தப் பாட்டை ஒரு தடவை கேட்டுப் பாருங்க. அந்த ஜிங்கிளுக்கு இசையமைத்த புண்ணியவான் யாருன்னு தெரியணும்னு ஆசையாக இருக்கிறது.

கடவுளே .. என்னைக் காப்பாத்தப்பா ...!



*                                                                      *                                                         *

*

Sunday, January 06, 2013

625. தோரணம்: I STAND FOR CAPITAL PUNISHMENT





*


 நிறைய இதைப் பற்றி வாசித்தாகி விட்டது; பேசியாகி விட்டது; யோசித்தாகி விட்டது. என் முடிவில் மாற்றமேதுமில்லை.

I STAND FOR CAPITAL PUNISHMENT

என் வரிப்பணத்தில் ஓசிச் சோறு யாருக்கும் போட வேண்டாம். ஆயுள் தண்டனை என்பது ஒரு பெரிய போங்காட்டம். காவல் துறையினர் மேல் ஏதும் தவறு என்றால் அவர்களை suspend செய்து விட்டதாக ஒரு செய்தி தினசரிகளில் வரும். அது மாதிரியான போங்காட்டம் தான் இந்த ஆயுள் தண்டனையும்.

உக்காரவைத்து சில நாய்களுக்குச் சோறு போட்டு வளர்ப்பது தான் ஆயுள் தண்டனை. சமீபத்தில் டெங்கு காய்ச்சலில் இறந்து போன ...ஓ! சாரி ... சாரி ... தூக்கிலிடப்பட்டு கொல்லப்பட்ட கஜாப்பிற்கு அவனை சிறையில் பத்திரமாக வைத்திருக்க லட்சக் கணக்கில் செலவழித்தார்களாம். நம்ம காசுக்கு இப்படி ஒரு தலைவிதியா?

எவனும் திருந்தப் போவதில்லை.
ஆசிட் ஊற்றும் நாய்களுக்கு மிஞ்சிப் போனால் நாலைந்து வருட தண்டனை என்பது மிகக் கொடூரம்; அநியாயம். கொடூரக்காரர்களை வைத்து அழகு பார்க்கும் எண்ணம் எனக்குக் கிடையாது.

போட்டுத் தள்ளு !

 =======================

அருணா என்ற கர்நாடக நர்ஸ் 1973-ம் வருஷம் ஒரு வார்டு பாயினால் கற்பழிக்கப்பட்டு அன்றிலிருந்து இன்று வரை ஜடமாக கோமாவில் இருக்கிறாள். அவளுக்காக இறஞ்சப்பட்ட Euthanasia-வும் நீதி மன்றத்தால் புறந்தள்ளப்பட்டு விட்டது.

ஆனால் அவளக் கற்பழித்தவன் பெண்டு பிள்ளைகளோடு சாதாரண வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறான்.

=======================

விஸ்வரூபம் படம் எப்படியிருக்குமோ ...ட்ரைலர் (D.T.H., DISTRIBUTION, THEATRES....) இதெல்லாம் ரொம்ப நல்லா இருக்கு. படம் வெற்றி பெற வேண்டுமென்று ஆசைப்படுகிறேன். கமலின் குணா படம் பார்த்ததும் இதே ஆசை வந்தது. அதற்காகவே ஒரு கட்டுரை அந்தக் காலத்தில் எழுதி ஆ.வி.க்கு அனுப்பினேன். பிரசுரமாகவில்லை. அந்தக் கட்டுரையை மறுபடி நினைவிலிருந்து என் பதிவுகளில் எழுத ஆசை.
எழுதணும்.

 ========================

தெய்வமகனில் சிவாஜி செய்த சின்னப் பையன் ரோலை வேறு யார் செய்தாலும் நன்றாக இருக்காது என்பது என் திண்ணிய எண்ணம். கொஞ்சம் மாறுபட்டால் அது ஒரு தவறுதலாக ஆகக்கூடிய கேரக்டர் அது. ஆனால் இப்போது விஸ்வரூபத்தில் கமல் நடன போஸ் ஒன்று கொடுக்கிறாரே .. ஒரு feminine touch-உடன் இருக்கும் அந்த ஸ்டில் பார்க்கும் போது தெய்வமகன் கேரக்டர் நினைவுக்கு வருகிறது.

========================