Showing posts with label ஊடகங்கள். Show all posts
Showing posts with label ஊடகங்கள். Show all posts

Monday, March 27, 2017

933. ஆவியில் வந்த என் ஆசை ...3




***
ஆவியில் வந்த என் ஆசை ...1  

ஆவியில் வந்த என் ஆசை ... 2  

***



           
ஆவியின் ”ஆசைஎன்ற ஒரு தொடர் நிகழ்வுக்கு என் பெயரையும் கொடுத்திருந்தேன். எல்லாம் ஒரு சின்ன ஆசை தான். நம் பக்கம் “சீட்டுவிழுந்து விடாதா என்ற ஒரு  நப்பாசை. ஆனால் நப்பாசை நடந்தே விட்டது. ஓவியர் மருது மிகவும் பெரிய மனது வைத்து, தன் சுறுசுறுப்பான நேரத்தில் எனக்கும் நேரம் ஒதுக்கினார். அவருக்கு என் மனமார்ந்த நன்றி.


***


 
என் நல்லூழ் ...  இந்நிகழ்விற்குப் பொறுப்பாளராக இருந்தவரின் பெயர் கொஞ்சம் முகநூலில் எனக்குப் பரிச்சயமான பெயர் - பரிசல்காரன் கிருஷ்ணா. அவரோடு உடன் வந்தவர் ஆவியின் தலைமைப் புகைப்படக்காரர் - கே.ராஜசேகரன். இவரைப் பற்றியும், அவரின் ஒரு புகைப்படம் ஒன்றைப் பற்றியும் தெரியும் – பின்னால் சொல்கிறேன் அதைப் பற்றி.  அவரோடு  காணொளிப் பொறுப்பாளராக இன்னொரு இளைஞர்- நாகமணி – வந்திருந்தார். நாங்கள் நால்வரும் மருது அவர்களின் வீட்டிற்குச் சென்றோம்.




ஓவியர் எனது கல்லூரிக்கு ஒரு முறை வந்த போது அந்த நாள் முழுவதும் அவரோடு இருந்திருக்கிறேன். அது பல ஆண்டுகளுக்கு முன் நடந்தது. என்னை அவர் வீட்டில் பார்த்ததும் என் முகம் நினைவுக்கு வந்ததாகச் சொன்னார்.

இனிய முகம் ஓவியருக்கு. பேச்சிலும் இனிமை. புகழ் பெற்ற மனிதர்களைப் பார்க்கப் போகும் போது பல சமயங்களில் அவர்கள் நம்மிடமிருந்து மிகவும் விலகியே இருப்பது வழக்கம் தான். ஆனால் ஓவியரிடம் அந்த குணம் சிறிதும் இல்லை. நல்ல விருந்தோம்பல். எங்களோடு சமதையாக அமர்ந்து பலவற்றைப் பற்றிப் பேசினார்.

ஒரு ஓவியராக அவரது  professional work (!!)  அவர் எட்டாம் வகுப்பு படிக்கும் போதே ஆரம்பித்து விட்டது என்றார்.  இந்தி திணிப்புக்கு எதிரான போராட்டத்தில் அவர் பெரிய சுவர்களில் பிரம்மாண்டமாக, பெரிய படங்கள் வரைய கிடைத்த வாய்ப்புகள் பற்றிப் பேசினார். அதனால்  ஓவியத்தில் ”space" பற்றிய அனுபவம் அந்த சிறிய வயதிலேயே கிடைத்தது பற்றிக் கூறினார்.  இந்தி திணிப்பு எதிர்ப்பு பற்றிக் கூறியதும் நானும் அந்தப் போராட்டத்தில் என் பங்கைப் பற்றிக் கூற ஆரம்பித்தேன்.

அடுத்து அவர் சிறு வயது முதல் அவர் தந்தையோடு ரீகல் தியேட்டரில் ஆங்கிலப்படங்கள் ஆரம்பித்ததைக் கூறினார். நானும் விடுவேனா .... எப்படி வீட்டில் படிக்கப் போவதாகச் சொல்லி ஆங்கிலப்படங்கள் பார்க்க ஆரம்பித்த என் வரலாற்றை எடுத்து விட்டேன்! அந்த தியேட்டருக்கு என்றே ஒரு தனி நாகரிகம் இருந்தது. ஏனைய தியேட்டர்களில் காணும் அசுத்தமான பழக்கங்கள் இங்கே நடக்காது. எப்படி அங்கு வரும் மக்கள் அப்படி ஒரு நனி நாகரிகத்தைக் கடைப்பிடித்தார்கள் என்பது இன்று வரை ஒரு அதிசயமே! வரும் மக்களும் கோலிவுட்டின் வரலாறும், ஆங்கிலப்படங்களின் இயக்குனர்கள், நடிகர்கள் என்று பெரும் பட்டியல்களை அள்ளித் தெளிப்பது இன்னொரு அதிசயம். இதில் பலரும் அதிகம் படித்திராத மக்கள் தான். அந்தத் தியேட்டரின் மகிமை பற்றிப் பேசினோம்.

ஒரு மணி நேரம் ஓடி விட்டிருந்தது. பேசிய சுவாரசியத்தில் அந்த நேரம் போனதே தெரியவில்லை. படம் வரையலாமா என்றார். நிலத்திலிருந்து சில இஞ்சுகள் மேலெழும்பியது போல் நான் உணர்ந்தேன். அந்த அனுபவம் எப்படியிருக்குமென மனதிற்குள் பல கேள்விகள். லைட்டிங்க் செய்ய வேண்டுமென்றார். ஆவி மக்கள் தயாராக வந்திருந்தார்கள். ஒரு லைட்டை என் முகம் நோக்கி வைத்தார்கள். ஒளிவெள்ளத்தில் நான். அப்போதே அரைகுறை நினைவு என்னிடமிருந்து கழன்று போனது போன்று இருந்தது. ஒரு மேஜையின் பாதிப் பரப்பில் பல தூரிகைகள், பல விதப் பேனாக்கள் .. அதில் சிலவற்றோடு என் எதிரில் அமர்ந்தார். என்னை அவருக்கெதிராக வசதியாக உட்கார வைத்து வரைய ஆரம்பித்தார். அவர் தலைக்குப் பின்னால் சுவற்றில் ஒரு கடிகாரம் இருந்தது. கடிகாரத்தின்பெரிய முள் ஏழாம் எண்ணில் இருந்தது. நல்ல பிள்ளையாக, தலையை ஆட்டாமல் என் பெரிய தொந்தியோடு  பிடித்து வைத்த பிள்ளையாராக  அப்படியே அமர்ந்திருந்தேன். பெரிய முள் பதினொன்றைத் தொடுவதற்குள் படம் வரைந்து முடித்து விட்டார்.
 


படம் முடிந்ததும் பேச்சு ஓவியக்கலை பற்றியதாக மாறியது. தனது படங்கள் பலவற்றை எங்களுக்குக் காண்பித்தார். நால்வருக்கும் அதுவே பெரும் விருந்தாக இருந்தது.    தன் அயல் நாட்டு அனுபவங்கள், அங்கு மறைந்த ஓவியர்களுக்கு அவர்கள் தரும் மரியாதை ... அதன் பின் கணினி வைத்து ஓவியம் வரையும் தற்கால முன்னேற்றம், இந்த முன்னேற்றத்திற்கு அவர் முன்பே எடுத்த முயற்சிகள் என்றெல்லாம் பேசிக்கொண்டிருந்தோம்.
 
திடீரென்று என்னை வேறு ஒரு கோணத்தில் அமர்த்தி, அதற்கும் ஒளி அமைப்பு கொடுத்தார். ஆனாலும் ஒளி போதுமான அளவில் இல்லை என்றார். இந்த இரண்டாம் படம் வரைய அனேகமாக நான்கு நிமிடங்கள் மட்டுமே எடுத்தார். படத்தை என்னிடம் கொடுத்தார்.நோ்த்தியான வெகு சில கோடுகளுக்கு நடுவே நான் இருந்தேன். மனதில் உடனே தோன்றிய சொல் “MAGIC". முதல் படத்தை விட இது எனக்குப் பிடித்தது. அவரிடம் இந்தப் படம் ஒரு “MAGIC" என்றேன். மகிழ்ச்சியோடு பெரிதாகச் சிரித்தார்.

அதன் பின்னும் பேசிக்கொண்டிருந்தோம். கம்பன் வீட்டுக் கட்டுத் தறி போல் அவரது படங்களில் உள்ள சிறு கிறுக்கல்கள் கூட அழகாக இருக்கிறது என்று நானும் பரிசல்காரனும் அவரிடம் சொன்னோம்.
 
மூன்று மணி நேரத்தை எங்களுக்காகச் செலவிட்டார். நிச்சயமாக அது அவர் ஆவியோடு கொண்டிருக்கும் நேசத்திற்கு இது ஒரு அடையாளம் என்றே நினைக்கின்றேன். அந்த மணித்துளிகள் மிகவும் பயனுள்ளதாகவும், நிறைய அனுபவங்களையும் தந்தன. ஒரு பெரிய ஓவியரோடு இணைக்கு இணையாக அமர்ந்து அளவளாவியது ஆவி தந்த கொடை. வாழி.

ஓவியர் வீட்டை விட்டு வெளிவந்ததும் புகைப்படக் கலைஞர் ராஜசேகரனிடம் ஒரு வேண்டுகோள் வைத்தேன். நான் மருதுவோடு பேசிக்கொண்டிருக்கும்  போது தொடர்ந்து பல படங்கள் எடுத்துத் தள்ளினார். ஒவியர் வரைந்த படங்கள் போலவே இன்னொரு புகைப்பட ஓவியர் எடுத்த படங்களும் கிடைத்தால் நலமே என்று எண்ணிக் கேட்டேன். அவர் மறுப்பேதும் சொல்லாமல் எல்லா படங்களையும் கொடுப்பதாகச் சொன்னார்.
 
அவரின் படங்களை நான் கேட்டுப் பெற ஒரு காரணம் இருந்தது.  மிகப்பல ஆண்டுகளுக்கு முன்  மதுரை சட்டக்கல்லூரி மாணவனாக இருக்கும் போது ஆவியின் மாணவ புகைப்படக்காரராக இருந்தார். அப்போது அவர் எடுத்த ஒரு படம் என் மனதில் இன்னும் தேங்கி நின்று விட்டது. சீவலப்பேரி பாண்டி என்ற ஒரு தொடரை ’செளபாஎன்ற எங்கள் கல்லூரி மாணவ நண்பன் ஜூனியர் விகடனில் எழுதி, அது வெளியாகி, பின்னாளில் திரைப்படமாகவும் வெளி வந்தது. அதில் இறுதி அத்தியாயங்களில் சீவலப்பேரி பாண்டியன் காவல்துறையினர் ஒருவரின் தலையைத் தனியாகச் சீவி வெட்டியதாக வரும்.


 

இதனை மிக அழகாகப் கொடூரமாகப் புகைப்படத்தில் ராஜசேகரன் காண்பித்திருப்பார்.  ஒரு குழியை வெட்டி, ஆளை உள்ளே இறக்கி, பாதுகாப்பிற்கு வாழை மட்டைகள் கொடுத்து எடுத்த படம். தரையில் தலை ஒன்று தனியாக உருண்டு கிடக்கும். படமே பார்க்க பயங்கரமாக இருக்கும். அந்தப் படம் வந்த போது அதைப் பற்றி நண்பர்களோடு பேசியிருந்திருக்கிறோம். அதன்பின் அவர் ஆவியில் வேலைக்குச் சேர்ந்த பிறகு அவர் எடுத்த படங்களை சிரத்தை எடுத்து பார்க்கும் பழக்கம் தொற்றிக் கொண்டது. அன்று  Portrait எடுப்பதற்கு வசதியான இடத்தில் அவர் எடுக்கும் படங்கள் கிடைத்தால் நல்லதே என்று ஆசைப்பட்டேன். அன்று என் ‘ஆசைகள்’ எல்லாமே நிறைவேறும் என்ற ‘விதி  இருந்திருக்கும் போலும். அவரிடம் என் ஆசையைச் சொன்னேன். அவர்படங்களை எந்தவித மறுப்பின்றி கொடுத்துதவினார். நன்றி.


என்னை யூ ட்யூபில் காணொளியாகக் காண்பிக்க என்னைச் சுருள்  படமெடுத்த நாகமணிக்கும் மிக்க நன்றி. (என்னதொப்பையை மறைக்க நாகமணி ‘ஏதாவதுசெஞ்சிருக்கலாமோவென நானே என்னைக் காணொளியில் பார்க்கும் போது தோன்றியது!)   




















 *

Friday, March 24, 2017

932. ஆவியில் வந்த என் ஆசை .. 2







*


//என் ஆசை ... எனக்கு ஆ.வி. “இறவாமை”யைத் தர வேண்டும். கடினமோ? உங்களுக்கு அது எளிது தான் என்று நினைக்கின்றேன்.

எனக்குப் பிடித்த ஓவியர் மருது அவர்கள் என்னை நேரில் பார்த்துப் படம் வரைந்தால் - பெரிய படமல்ல, 1.5’ x 2’ போதும்! – பரம்பரையாக என்றும் பேணுவோம். நான் உங்களிடம் கேட்கும் இறவாமை அதுவே ... //

இது நான் ஆவிக்கு எழுதிய ‘ஆசை மனு’!


 ஆசையை நிறைவேற்றிய ஆவிக்கும், பொறுப்போடு இதனை ஏற்று நடத்திய பரிசல்காரன் கிருஷ்ணாவுக்கும், ஆவியின் முதன்மை புகைப்படக்காரர் கே. ராஜசேகரன் இருவருக்கும் என் மனமார்ந்த நன்றியும், பாராட்டும்.




 *




 * *

Thursday, March 09, 2017

930. ஆவியில் வந்த ஆசை … 1




*





*




*






Tuesday, February 16, 2016

888. உங்களிடம் ஒன்று கேட்கிறேன். பதில் சொல்லுங்கள்.








*

Siachen bravehearts laid to rest என்று இன்றைய தினசரிகளில் வந்த தலைப்பு. இறந்தவர்கள் bravehearts அல்ல …just ‘cold hearts’! தன் தலைவிதியை நொந்து கொள்ளும் சில போர்வீரர்களும் அவர்களது பாவப்பட்ட குடும்பங்களும்.


700 சதுர கிலோ மீட்டர் அளவுள்ள இந்த பனிபடர்ந்த இடம் 5,753 m /18,875 ft உயரத்தில் உள்ளது. உலகின் மிக உயரமான படைத் தளம். சிம்லா உடன்படிக்கையை பாக்கிஸ்தான் மீறியதால் 1984ல் Operation Meghdoot என்ற பெயரில் இந்தியா போர் தொடுத்து Siachen Glacier முழுவதையும் தன் “குடைக்குக் கீழ்’ கொண்டு வந்தது.

பாதுகாப்பு அமைச்சர் Rao Inderjit Singh பாராளுமன்றத்தில் இது வரை 869 படைவீர்ர்கள் உயிரிழந்ததாகக் கூறியுள்ளார். (1000 வீர்ர்கள் இறந்ததும் நாமெல்லோரும் அதைக் கொண்டாடுவோமா?)

இவர்கள் எதிர்களோடு போரிட்டு மாளவில்லை. இயற்கையோடு போராடி உயிரைத் தந்துள்ளார்கள்.

இந்த லட்சணத்தில் Siachen என்ற பெயருக்கு “ரோஜாக்களால் நிரம்பிய இடம்” என்று பொருளாம்! அடப்பாவமே!

இந்த அழகில் இப்போது இவ்விடத்தின் பொறுப்பு 16 madras regiment இடம் உள்ளதாம். அப்படியானால் நம் ஏரியாக்கார்ர்கள் அதிகமாக இருப்பார்களோ? (இதுவும் ஒரு காரணமாக இருக்குமோ?)

பயனில்லாத, தேவையில்லாத இட்த்தில் ஒரு போர்க்களம். போரில்லாமல் இயற்கையின் இறுக்கத்தில் உயிரை அனாவசியமாக இழக்கும் நம் வீர்ர்கள். இறந்தவர்களின் பட்டியல்:

(1) Subedar Nagesha TT r/o vill Tejur, Hassan Dist, Karnataka.
(2) Havildar Elumalai M r/o vill Dukkam Parai, Vellore Dist, Tamil Nadu. 
(3) Lance Havildar S Kumar r/o vill Kumanan Thozhu, Teni Dist, Tamil Nadu.
(4) Lance Naik Sudheesh B r/o vill Monroethuruth, Kollam Dist, Kerala.
(5) Lance Naik Hanamanthappa Koppad r/o vill Betadur , Dharwad Dist, Karnataka.
(6) Sepoy Mahesha PN r/o vill HD Kote, Mysore Dist, Karnataka.
(7) Sepoy Ganesan G r/o village Chokkathevan Patti, Madurai Dist, Tamil Nadu.
(8) Sepoy Rama Moorthy N r/o vill Gudisatana Palli , Krishna Giri Dist, Tamil Nadu. 
(9) Sep Mustaq Ahmed S r/o vill Parnapalle, Kurnool Dist, Andhra Pradesh.
(10) Sepoy Nursing Assistant Suryawanshi SV r/o village Maskarwadi, Satara Dist, Maharashtra

4 பேர் தமிழர்கள்; 9 பேர் தென்னிந்தியர்கள். 

 மனசு கேட்காமல் கீழேயுள்ள நாலைந்து கீச்சுகள் - twitters - போட்டேன்.

"வீரர்கள் இங்கு அனுப்பப்படும்போது தன் குடும்பத்தினரிடம் "நாங்கள் திரும்பி வந்தால் பார்த்துக் கொள்வோம்" என்று சொல்வார்களாம்."* 

‘two baldies fighting for a single comb” நல்ல உதாரணம். இன்னும் இதற்காக உயிரை விட்டுக் கொன்டிருக்க வேண்டுமா?*  

"உச்சாணிக் கொம்பில் உட்கார்ந்திருக்கிறோம் என்பது தவிர என்ன பயனோ? தேவையில்லாத உயிர்ப்பலிகள். நிறுத்துங்களேன்." 

"போர் எதுவும் இல்லாமலேயே வெறும் பாதுகாப்புப் பணியிலேயே பல உயிரைப் பலிகொடுக்கிறோம். இது தேவை தானா?"

இப்படி எழுதியும் எந்த விதமான ஆதரவும் என் கீச்சுகளுக்குக் கிடைக்கவில்லை. யார் கடைக்கண்ணும் என் கீச்சுகள் மீது விழவில்லை. முகப் புத்தகத்தில் இட்டேன். அதே கதி தான். ஒரு வேளை எனது profile photoவை மாற்றிப் போட்டேன் என்று வைத்துக் கொள்ளுங்கள். எக்கச்சக்கமாக பலரின் பார்வையும், பகிர்தலும் வந்து விடும். 'விசாரணை' பற்றி எழுதியிருந்தாலும் பற்றிக் கொண்டிருக்கும்.  இல்ல ...?

சமூகத் தளங்களில் போட்டோவிற்கும், சினிமாவிற்கும் இருக்கும் இடம் சீரியசான விஷயங்களுக்குக் கிடைக்காதோ...

மனது இன்னும் வெறுத்து நாடு தழுவி சமூக ஊடகங்கள் வழியாக இதை நாம் எதிர்க்க முடியாதா? முயற்சிக்கக் கூடாதா? என்று ஒரு கீச்சு விட்டேன்.

இதற்கும் எந்த வித பயனுமல்ல. அதனால் உங்களனைவருக்கும் என் ஒரு கேள்வி:

சமூக ஊடகங்கள் வழியே பெரும் புரட்சிகளே ஏற்படும் என்றெல்லாம் சொல்கிறீர்களே …. அது ஏன் நம்மூரில் நிகழ மாட்டேன் என்கிறது.
நம் தோல் அவ்வளவு தடிப்பா?
அல்லது … நரி வலம் போனால் என்ன .. இடம் போனால் என்ன .. என் மேல் விழாமல் இருந்தால் போதும் என்ற மேனாமினிக்கித் தனமா?
இல்லை .. வேறு பெயர் ஏதும் இதற்குண்டா?


அட ... இதுதான் போகுதுன்னு நம்மூர் விஷயம் ஒண்ணு போட்டேன். அதுவும் ஒரு சீரியஸான விஷயம் தான். அதுவும் சேற்றில் விழுந்த கல் போலானது.

#சீப்மினிஸ்டர் சொல்லிட்டாங்க. அதிகாரிகள் மேல் ஊழல்கேஸ் போடக்கூடாதாம்.இனிமே under the table வேண்டாம் எல்லாம் இனிமே over the table தான். ஜாலி … ஜாலி … OPEN BUSINESS ……

------------
சமூகத் தளங்களை வெறும் 'ஜாலிக்காக' மட்டும் தான் வைத்துக் கொள்ள வேண்டுமா?  ஆக்க பூர்வமாகப் பயன்படுத்தவே கூடாதா?
 ----------


அட ...போங்கப்பா ...நீங்களும் உங்கள் சமூகத்தளங்களும் ....


----------


 *1 ... From Letters to the Editor from THE HINDU






 *

Sunday, February 23, 2014

719. இப்பதிவு தமிழ்மண மகுடத்திற்குப் போகுமா ...?







*

இறையச்சத்திற்கு அல்ல ....
வெறும் மனிதத் தன்மைக்கு வாழ்த்து மட்டும்.
***
 40 லட்சம் ரூபாயெல்லாம் நம்மால் கொடுக்க முடியுமா? 
நம்மிடம் என்ன பெட்ரோல் காசு இருக்கா என்ன?




இந்தத் தலைப்பில் இதைப் பற்றி நான் எழுதியதும் மக்கள் நீங்கள் எல்லாம் மகிழ்ந்து அதில் 21 பேர் ஓட்டும் போட்டு, தமிழ்மண மகுடத்தில் இப்பதிவை இடம் பெற வைக்கவா போகிறீர்கள்!

(அதென்ன 21 மட்டும் ஓட்டு போட்டிருக்கிறார்கள். வழக்கமான 35 பேர் மட மடன்னு ஏன் ஓட்டுப் போடவில்லை? அப்பதிவுக்கு ஓட்டுப் போட்டவர்கள் இதற்கும் ஓட்டுப் போடமாட்டார்களோ!!!)

முதற்கண் ஒரு சிறு முன்னுரை.

ஒரு நாட்டில் உள்ள அனைத்து குடிமக்களிடமும் நல்ல மனம் இருந்தால் அந்நாட்டில், காவல் துறைக்கோ நீதித்துறைக்கோ சிறைக்கோ தூக்கு மேடைக்கோ எவ்வித வேலையோ அதற்கான அவசியமோ அறவே தேவையே இல்லாமல் போய்விடும்..! இதுதான் நிதர்சனம்..!

நிற்க. இனி விஷயத்துக்குச் செல்வோம்.

தெருவில் கிடந்த நகைப்பையை காவல் துறையிடம் ஒப்படைத்த இரு ஆட்டோ ரிக்‌ஷாகாரர்களைப் பற்றிய செய்தி இங்கே.

இந்த நல்ல மனதுக்காரர்களுக்கு ஒரு வேளை இனிமேல் ஏதேனும் பரிசுத் தொகை சிறிது கிடைக்கலாம். ஆனாலும் அதையெல்லாம் எதிர்பார்க்காமல் தெருவில் கிடைத்த நகைகளைத் திருப்பிக் கொடுத்த இரு மதுரை ஆட்டோ ரிக்‌ஷாக்காரர்களின் பெருமைக்குரிய பண்பு பாரட்டுக்குரியது. வெறும் ஆடு இல்லை அது; அவர்களுக்குக் கிடைத்தது ஒரு தங்கக் குவியல் !

 இவர்கள் நகையைத் திருப்பிக் கொடுத்தது இறை பயத்தினால் என்று சொல்ல வில்லை. மேலிருந்து எங்கள் ‘சாமி’ பார்த்துக் கொண்டே இருக்கும்; அதனால் இதை உரிமையாளர்களிடம் சேர்த்தோம் என்று பணக் கஷ்டம் உள்ள லாரன்ஸும்( father of three daughters), கணபதியும் சொல்லவில்லை!

இதற்கு //இஸ்லாமிய வாழ்வியல் நெறி// மட்டும் தேவை என்று எழுதும் அடிப்படைவாதிகள் நம் ஊரில் நடந்த நல்ல செய்தி இது என்று தெரிந்து கொள்ளவே இந்தச் செய்தியை இங்கு கொடுத்துள்ளேன்..

இதற்கெல்லாம் சூடானுக்கும் சவுதி அரேபியாவுக்கும் போக வேண்டுமா என்ன ...!!!?? 

ஆட்டோ ரிக்‌ஷாக்காரர்களின் மனிதப் பண்பே இதற்குரிய காரணம். ஏதோ அல்லா மேலிருந்து பார்ப்பார் என்ற பயத்தினால் இல்லாமல் மனிதத்தன்மையோடு நடந்த இந்த இரு நல்ல “மனிதர்களுக்கு’ நம் பாராட்டு.







இந்த நல்ல இரு மனிதர்களைப் பாராட்ட பெரிய ஆட்கள், சுல்தான்கள்  எல்லாம் வந்து பரிசு தரவில்லை. ஏனெனில் இந்த மண்ணில் இது அப்படி ஒன்றும் காணக்கிடைக்காத விஷயம் அல்ல. இன்னும் இது போல் நிறைய உண்டு. கண்களைத் திறந்து செய்தித் தாள் வாசிப்பவர்களுக்கு இது போல் நிறைய செய்திகள் கண்ணில் படும்.

இதற்காக செளதிக்கெல்லாம் போகத் தேவையில்லை. ஒரு வேளை அங்கெல்லாம் இது ஒரு மிகப் பெரிய விஷயம் போலும். அதனால் தான் அத்தனை பரிசுகளும் பாராட்டும் அங்கே!!!



*

Thursday, January 30, 2014

707. தருமியின் சின்னச் சின்னக் கேள்விகள் -- 22





*


 அது என்னமோங்க .. திரைப்படங்கள் பற்றி நான் எழுதுவது கம்மி தான். எப்போதோ ஒன்றிரண்டு. ஆனால் அவைகளை திரை மணத்தில் எப்படி சேர்ப்பது என்று இன்றுவரை தெரியாத ஒரு விஷயம். அது எப்படி சேர்க்கணும்?


*

 திரை மணத்தைத் திறந்தால் வரும் பதிவுகளில் செய்திகள் இருக்கிறதோ இல்லையோ.. எக்கச்சக்க விளம்பரங்கள். அவைகளைத் தாண்டி செய்திகளை வாசிப்பது மிகச் சிரமமாக இருக்கிறதே... வேலி தான் தெரிகிறது.உள்ளே இருப்பது படிக்க தலைகீழாக நிற்க வேண்டியதுள்ளது.

யாராவது தமிழ்மண் அட்மின்னுக்குச் சொல்லி ஏதாவது செய்யுங்களேன்.

 இந்த விளம்பரத் தொல்லை நினைவுக்கு வந்ததற்குக் காரணம் தொலைக் காட்சியில் வரும் சில விளம்பரங்கள் தான்.

*

தனுஷ் பெரிய நல்ல நடிகர்னு பெயர் வாங்கியாச்சி. நல்ல படங்கள் எடுக்கும் தயாரிப்பாளர். இருந்தாலும் COOL FRESH அப்டின்னு ஒரு வெகு மட்டடடமான விளம்பரத்தில் வர்ரார். எதுக்குன்னு தெரியலை. அதிலும் தன் வழக்கமான mental ரோல் மாதிரி வேறு நடிக்கிறார். எப்படியும் அந்தப் பட்டத்தைத் தக்க வைத்துக்கொள்ள இப்படி ஒரு மட்டமான விளம்ப்ரத்தில் நடிகணுமா?

 காசு கிடைச்சா எந்த விளம்பரத்திலும் நடிக்கணுமா ... அதுவும் நல்ல பெயர் நிறைய வாங்கிய பிறகும்?

 *

 இதே மாதிரி இன்னொரு ஆளு - பிரபு தேவா. BIG BOSS அப்டின்னு ஒரு ஆகப்பாடாவதி விளம்பரம். இதில் ஒரு பாலிவுட் ஆளு வர்ராரு. அந்த ஆளு மூஞ்சே நமக்கு ஆகாது. பெயரும் தெரியாது. அந்த ஆகப்பாடாவதி ஆளோடு சேர்ந்து, பிரபு தேவா ஒரு டான்ஸ் ஸ்டெப் வேற போட்டு ... ஆத்தாடி ...!

 காசு கொடுத்தா இப்படி ஒரு தேறாத விளம்பரத்திலேயும் மூஞ்சைக் காண்பிக்கணுமா, அதுவும் பட இயக்குனருக்கு வடக்கே பிரபு தேவாவுக்கு அம்புட்டு காசாமே!

 *

 நம்ம ஜட்டி விளம்பர சரத்குமார் இருக்காரே .... சாரி... பூமெக்ஸ் பனியனுக்கு வர்ர சரத்குமார் இருக்காரே... என்னமோ ஒரு சட்டை போட்டிருக்கிறார். அதை வைத்து ரோட்டுல போற பொண்ணை அப்படியே லபக்கிடுகிறார். ஆனால் விளம்பரம் பனியனுக்கு.

என்ன சனியனுக்கோ எதுக்கு இந்த மாதிரி மெண்டல் விளம்பரங்கள்?

 *

 பையன் எங்கே போனாலும் பின்னாலே ஒரு நாய் போகுமே ஒரு தொலைப்பேசி விளம்பரத்தில். அந்த விளம்ப்ரத்தையே ஒரு விளம்பரமாகப் பயன் படுத்துகிறார்கள். நன்றாக இருக்கிறது.

ஆனால் விளம்ப்ரம் எடுத்த கம்பெனி பெயரே ஏன் வருவதில்லை? ஏன் விளம்பரக் கம்பெனிகளின் பெயர்களை அவர்களே விளம்பரப் படித்துக் கொள்வதில்லை, ஏதும் கொள்கை முடிவா?  ஏனிந்த வழக்கம்?

 *

 lackeys - என்ற சொல்லுக்குப் பொருள் பார்த்தேன் - A person who tries to please someone in order to gain a personal advantage

 அப்படியானால் lackeys என்பது ’அல்லக்கை’ என்ற வார்த்தையிலிருந்து வந்திருக்குமோ? இருக்கும் .. இருக்கும் ..



 *



Sunday, September 22, 2013

682. என்று வரும் மதங்களைத் தாண்டும் அந்தச் சமூகம்?



 *
இன்றைய இந்துவில் வந்த ஒரு கட்டுரையின் தமிழாக்கம். பிடித்த கருத்தாக இருந்தது. சிறிது தமிழ்ப்படுத்தி சில பகுதிகளைக் கொடுத்துள்ளேன்.


*


 http://www.thehindu.com/opinion/open-page/lets-aim-for-a-posttheistic-society/article5154603.ece  


Let’s aim for a post-theistic society 

மேலெழுந்தவாரியாகப் பார்த்தாலே மனித வரலாற்றில் மதங்களுக்காக நடந்த போர்களே அதிகம்.

மதங்களின் பிறப்பு இனம் தெரியாத அச்சத்தில் எழுந்தது. ஆனால் இன்றைய அறிவியல், இயற்கை மீது மனிதனுக்கு இருந்த பல அச்சங்களைப் போக்கி விட்டன. அந்த அச்சங்கள் இன்று பொருளற்றுப் போய்விட்டன.

வாழ்வில் நம்முடைய ஒழுக்கங்கள் மதங்களிலிருந்து பிறக்கவில்லை; ஆனால் நம்முள் குடியிருக்கும் மனித நேயத்திலிருந்தும், அடுத்தவரின் துயரைக் கண்டு துன்புறும் நமது மனத்திலிருந்தும் தான் பிறக்கின்றன. இந்த நேய உணர்வு எல்லா உயிரினங்களுக்கும் பொதுவல்ல.

 ’மதங்கள் என்பவை மனிதத்தின் உயர்நிலைக்கு எதிரானவை’ என்கிறார் நோபல் பரிசு பெற்ற ஸ்டீவன் வெய்ன்பெர்க்.

இயற்பியல் நோபல் பரிசை வெய்ன்பெர்க்கோடு இணைந்து பெற்றவர் பாகிஸ்தானின் அப்துஸ் சலாம் என்பவர். இவர் மத்திய கீழ்த்திசை நாடுகளில் கல்வியை மேம்படுத்த முயன்றார். ஆனால் அந்நாட்டுத் தலைவர்கள் இவருக்கு எவ்வித உதவியும் செய்யவில்லை. ஏனெனில் அறிவியல் மத நம்பிக்கைகளைக் குலைத்துவிடும் என்று அவர்கள் நம்பினார்கள்.

மதங்களைத் தாங்கிப் பிடிப்போர் உலகில் நாம் காணும் துன்பங்களும் துயரங்களும் கடவுள் தனக்குப் பிடித்தோரின் நம்பிக்கையைச் சோதிக்கவே செய்கிறார் என்று சொல்வதுண்டு. கான்சரில் அவதியுறும் ஒரு சின்னக் குழந்தையின் பெற்றோரிடம் இதை அவர்கள் சொல்லிப் பார்க்க வேண்டும். கடவுளுக்கு இப்படிப்பட்ட துன்பம் தரும் பெரும் சக்தியிருந்தால் அந்தக் கடவுள் மிக மிகக் கொடூரமானது.

ஐன்ஸ்டீன் கடவுள் நம்பிக்கை என்பது முட்டாள்தனமான மூடநம்பிக்கை என்றார்.

தத்துவ மேதை காலின் மேக்கின் கடவுள் நம்பிக்கையற்றவர்களை மூன்று வகையான நாத்திகர்கள் என்று வரையறுக்கிறார்.
atheists – தங்கள் கருத்துகளை மற்றவர்கள் ஒத்துக் கொள்கிறார்களா என்றெல்லாம் கவலைப் படாதவர்கள்;
anti-theists – மதங்களை அதன் தீமைகளுக்காக வெறுத்து, அவைகளை எதிர்ப்பவர்கள்.
ஆனால் எதிர்காலம் POST-THEISTIC மக்களால் நிரப்ப்ப்படும். இவர்களுக்கு மதங்களே ஒரு பொருட்டல்ல.

 உலகத்தை அறிவால வெல்ல வேண்டும். அதைத் தவிர்த்து அடிமைத் தனமாக அச்சத்தினால் கட்டுப்பட்டுக் கிடப்பது தவறு.

கடவுள் என்ற கருத்தாக்கம் ஒரு தனிமனிதனுக்கு உகந்ததல்ல. நல்லதொரு உலகத்திற்கு அறிவு, இரக்கம், தைரியம் போன்றவை தேவை; பழையனவற்றைக் கட்டிப்பிடித்துத் தொங்குவதோ, என்றோ யாரோ சொன்னவைகளைப் பற்றிக் கொண்டு நம் அறிவை அடமானம் வைப்பதோ தேவையில்லாதது.


*

(The writer is on the faculty of the Department of Physics, Indian Institute of Science, Bangalore. Email: profvasant@gmail.com)


*

Monday, July 29, 2013

671. நூல் அறிமுகம் - FREUD

*


நண்பர் முனைவர் வின்சென்ட் தமிழாக்கம் செய்த நூலைப்
பற்றிய அறிமுகப் பதிவு இது.

ப்ராய்ட் போன்ற மனோதத்துவ நூல்களை எழுதப்பட்ட மொழியிலேயே படித்துப் புரிந்து கொள்வது சிரமம். ஆனால் அந்த நூலை வய்ப்படுத்தி நம் மொழியில் தருவது என்பது மிகவும் கடினமான பணி. ஆனால் அப்பணியைத் திறம்படச் செய்து நல்ல தமிழ் நூலாகத் தந்துள்ள வின்சென்ட் அவர்களுக்கும், அதை நூலாகத் தந்துள்ள ‘எதிர்’ வெளியீட்டு நிறுவனத்திருக்கும் வாழ்த்துகள்.



 


ஆசிரியர் வின்சென்ட்  ஏற்கெனவே தான் எழுதிய Zen and the Art of Motorcycle mechanism என்ற நூலின் மொழியாக்க நூலை நீதிபதி அக்பருக்கு வழங்கிய போது எடுத்த புகைப்படம்.


*


 


*



*

Sunday, May 26, 2013

655. இஸ்லாம் வேகமாகப் பரவுகிறது ...!











*




http://www.thehindu.com/opinion/op-ed/seeking-allah-in-the-midlands/article4743582.ece 


SEEKING ALLAH IN THE MIDLANDS ....

OF THE THOUSANDS OF WHITE BRITONS EMBRACING ISLAM EVERY YEAR, MOST ARE THOUGHT TO BE PROFSSIONALLY SUCCESSFUL, INDEPENDENT-MINDED WOMEN, SAYS A STUDY.


*  ஏறத்தாழ ஆண்டு தோறும் 50,000 ஆங்கிலேயப் பெண்கள் இஸ்லாமிற்கு மதம் மாறுகிறார்கள்.
*  9/11க்குப் பிறகு அதிக பெண்கள் இஸ்லாமிற்கு மாறி வருகிறார்கள்.
*  இஸ்லாமிய ஆண்களைத் திருமணம் செய்வதன் மூலமாகவும் நிறைய பெண்கள் இஸ்லாமிற்கு வருகிறார்கள்.
*  மதம் மாறிய பெண்களுக்கு எதிராக அவர்களது குடும்பம், நண்பர்கள், சமூகம் நிற்பது சாதாரணம்.
*  மதம் மாறிய பெண்களும் பிரிட்டனில் இயங்கி வரும் ஷாரியத் பெண்களுக்கு எதிராக இயங்கி வருவதாகக் கூறுகிறார்கள்.

மத மாற்றம் பற்றி பொதுவாக எனக்குப் பல கருத்துகள் உண்டு. தன் மதமும் புரியாமல், பாதி மட்டும் அறிந்து அடுத்த மதத்திற்குப் போகும் பலரைப் பார்த்துள்ளேன். அல்லது, தனக்குக் கிடைத்த ஏதோ ஒரு நன்மையை வைத்து அடுத்த மதத்திற்கு சென்றவர்கள் நிறைய பேரை நானும் பார்த்திருக்கிறேன். ஆனால் மேலே சொல்லப்பட்டவர்களை அந்த அட்டவணையில் சேர்க்க விரும்பவில்லை. 

இஸ்லாம் பற்றி அதிகமாகத் தெரியாத நிலையில் இருந்த போது என்னிடமிருந்த  எண்ணங்கள் அந்த மதக் கொள்கைகளை அறிந்த பின் அம்மதத்திற்கு மிகவும் எதிராகத் திரும்பின. . மாற்று மதங்கள் மீது இஸ்லாமிற்கு இருக்கும் ‘கோபமும்,’ எதிர்ப்பும் மிக அதிகம். அந்த வெறுப்புணர்வு அச்சத்தைத் தந்தது. 

அதோடு, மற்ற மதங்களிலிருர்ந்து இஸ்லாமிற்குள் நுழைபவர்கள், அதன் பின் அப்படி மதம் மாறும் தங்கள் உரிமையை முற்றிலும் இழந்து விடுகிறார்கள். இஸ்லாமிற்குள் நுழைந்தால் இறுதி வரை அப்படியே இருக்க வேண்டும் என்ற இந்த  ஒரு சட்டம் இருப்பது தெரிந்தாலே அம்மதத்தின் மீது மரியாதைக்குப் பதில் பயம் தானே வரும் என்பது என் எண்ணம்.

எப்படியோ ... பலர் இஸ்லாமிற்குள் வருகிறார்கள். இனியாவது ஆர்ம்ஸ்ட்ராங்க் .. மைக்கிள் ஜாக்சன் .. பதிவியைத் துறந்த போப் .. எல்லோரும் இஸ்லாமியர்களாக மாறி விட்டார்கள் என்பது போன்ற   இஸ்லாமியரின் வழக்கமானப்  பிரச்சாரத்தைக் குறைத்துக் கொண்டால் நல்லது.

இக்கருத்து தினசரியில் வந்த அடுத்த நாள் மூன்று இஸ்லாமியரின் கடிதங்கள் Letters to the Editor-க்கு வந்தது. அது ஒன்றும் ஆச்சரியமில்லை!

*****************************

http://articles.timesofindia.indiatimes.com/2013-05-24/uk/39500802_1_woolwich-muslim-communities-riot-police

நட்ட நடுத் தெருவில், பட்டப் பகலில்  ஆங்கிலேய சிப்பாய் ஒருவரை இரு இஸ்லாமியர் பலர் கண்முன்னே கழுத்தை அறுத்துக் கொலை செய்துள்ளார்கள். இந்த கொலையில் சம்பந்த்தப்பட்ட இரு நைஜீரியர்களும் கிறித்துவத்திலிருந்து இஸ்லாமிற்கு சமீபத்தில் மதம் மாறியவர்கள். இவர்களது வெறிச் செயலை //It was also a betrayal of Islam - and of Muslim communities who give so much to our country.// - என்கிறார் ஆங்கிலேயப் பிரதமர்.

கொலையாளிகள் ஒருவனான Adebolajo  banned Islamist organization Al Muhajiroun which promotes Sharia law-ல் சேர்ந்து, பின் விலகி,. இன்னொரு militant Islamist group Al Shabaab in Somalia-ல் சென்ற ஆண்டு சேர்ந்துள்ளான்.

இஸ்லாமில் சேருவதோடு நின்று விட்டால் பரவாயில்லை போலும். ஏனெனில் பல்வேறு உருவத்தோடு வளர்ந்து வரும் இஸ்லாமிய குழுக்கள் இவ்வாறு வல்லினத்தை வளர்த்து விடுகின்றன.

இந்த இரு  கொலைகாரர்களும் அப்படை வீரனைக் கழுத்தை அறுத்துக் கொல்லும் போது ‘அல்லாஹூ அக்பர்’ என்று கத்தினார்கள். கழுத்தை அறுக்கும் போது ஏன் அல்லாஹூ அக்பர் என்று கத்துகிறார்கள் என்று முன்பே கேட்டிருந்தேன். பல கேள்விகளுக்குப் பதிலில்லாதது போல் இக்கேள்விக்கும் சகோக்கள் யாரும் இதுவரை பதில் சொல்லவில்லை.

இச்செயலை எதிர்த்து எந்த இஸ்லாமியரும் அத்தினசரிக்கு எக்கடிதமும் அடுத்த நாள் எழுதியதாக நான் பார்க்கவில்லை.

********************







*

Monday, April 01, 2013

650. நீயா .. நானா ..?






 *



மார்ச் 31,2013 ... நீயா .. நானா ..?
காதல் திருமணங்களும் அவைகளுக்கான எதிர்ப்பும் என்ற தலைப்பில் ஆரம்பித்தது. இந்நிகழ்ச்சிக்குரிய விளம்பரத்தில் ‘கெளரவம்’ என்ற படத்தினரும் இருந்தனர். இது ஒரு புதிய விளம்பர யுத்தி என்று நினைத்தேன். ஏனிப்படி இந்தப் படத்திற்கு மட்டும் இப்படி ஒரு தனியிடம் என்று நினைத்துக் கொண்டேன்.

**************************

வழக்கமான பாணியில் சென்று கொண்டிருந்த நிகழ்ச்சியில் ஒரு இளம் தாய் தன் மிகச் சிறு குழந்தையுடன் தன் வாழ்க்கையைப் பற்றிச் சொன்னதும் சில விஷயங்கள் வெளிப்படையாக வந்தன. இதில் சாதி வேற்றுமைகள் என்பதை விட, தலித்துகள் ஒரு புறமும், மற்ற சாதியினர் அனைவரும் இன்னொரு பக்கம் என்பது வெளிப்படையாக வெளி வந்தது. அந்த தாய் தன் குழந்தை ஒரு தலித்தின் குழந்தை; அதற்காகவே அதை வாழவிடக்கூடாது என்று தன் உறவினர்களே கூறுவதாகக் கூறினார். வெகு பச்சையான உண்மை.

இதற்குப் பின் வந்த கருத்தோட்டங்கள் அனைத்துமே தலித் vs மற்ற சாதியினர் என்ற கூறுபாட்டைத் தெளிவாக வெளிக்கொணர்ந்தது. கெளரவக் கொலைகள் பற்றிய பேச்சு தொடர்ந்தது. இதே போன்ற ஒரு நீயா நானா நிகழ்வில் ஒரு தகப்பன் தன் மகள் சாதி மாறிக் கல்யாணம் செய்தால் அவளை வெட்டிக் கொல்லுவேன் என்று மூன்று முறை அந்த மனித மிருகம் சொன்னதை ஒருவர் இங்கு நினைவூட்டினார்.  எனக்கு அந்த நிகழ்வைப் பார்த்த அன்றே அந்த வெறிப் பேச்சுக்காக அவன் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க முடியாதா என்று தான் தோன்றியது. இப்படிப் பேசுவதைப் பெருமையாக மக்கள் நினைப்பதை இயக்குனர் சேரன் வருத்தத்தோடு கூறினார்.

எனக்கென்னவோ எல்லா சாதியினருமே தலித்துகளை ஒதுக்கி வைப்பதாக இருந்தாலும் நம் தமிழகத்தின் வடக்குப் பக்கம் உள்ள வன்னியர்களும், தெற்குப் பக்கம் உள்ள தேவர் இனத்தவரும் இன்னும் தங்கள் புத்திகளை வளரவிட்டு, சாதித் திமிரைக் குறைத்தால் சமூகத்தில் இன்னும் விரைவில் நிலைமை மாறும் என்றே நினைக்கிறேன். சில விஷயங்களை மூடி போட்டுப் பேசுவதை விட்டு விடுவது எல்லோருக்கும் நலம். நாம் எல்லோருமே சாதி விஷயத்தில் மிகவும் மோசமென்றாலும் பலரும் உள்மனத்துக்குள் தங்கள் எண்ணங்களை ஒளித்து வைத்துக் கொள்கிறோம். ஆனால் நான் சொன்ன இரு சாதியினரும் இதில் வெளிப்படையாக இருப்பதை ஒரு பெருமையாகவே நினைக்கிறார்கள்.

ஊடகங்களில் இன்னும் மேல் சாதி / caste hindus / ஆதிக்க சாதி போன்ற சொல்லாக்கங்களைத் தவிர்த்தலும் கட்டாயமே.

*****************************

இன்னும் சேரி மக்கள் ஆண் நாய்களை வளர்க்கக் கூடாது என்ற கட்டமைப்பு இன்னும் நமது ஊர்களில் இருப்பது அறிந்து, அர்த்தம் புரிந்து அதிர்ந்தேன். அடப் பாவிகளா ...!  நாத்தம் பிடித்த  பிறவிகள் !

*****************************

பேசிய ஒரு சமூகவியலாளர் சாதி ஐந்தாயிரம் ஆண்டுகளாக நம் சமூகத்தில் இருந்து வருகிறது. ஆனால் தீண்டாமை கடந்த கி.பி.500-லிருந்து தான் இருக்கிறது என்றார். ஆனாலும் புராணக் கதைகளிலேயே சாதியும், தீண்டாமையும், தாழ்வு நிலையும் சொல்லி இருக்கிறதே என்று நினைத்தேன். எனக்கு நந்தன் கதையும் நினைவுக்கு வந்தது.

*****************************

கமல் ஹாசன் தேவர் மகன், விருமாண்டி போன்ற படங்களை எடுத்து ஒரு சாதியினரைத் தூக்கிப் பிடிப்பது பற்றி பலரும் எழுதியாயிற்று. தேவர் மகனில் தேவர் சாதி பற்றிய பாடலை முதலில் கேட்ட போது அது சிவாஜி கணேசனுக்காக எழுதியது என்று தான் நினைத்தேன். ஆனால் அது முத்துராமலிங்கத்துக்காக எழுதியது என்பது பின்புதான் புரிந்தது. அதுவும் நான வாழும் பகுதியில் இந்த இனத்தவர் அதிகம். இதே பகுதியில் உள்ள ஒரு தலித் வேறு ஒரு ரிசர்வ்டு தொகுதியில் எம்.எல்.ஏ. ஆனார். அவர் தன் பெற்றோரைப் பார்க்க எங்கள் பகுதிக்கு வரும்போதெல்லாம் பயங்கர உச்ச சத்தத்தில் இந்தப் பாடல் திரும்பத் திரும்ப போடப்படும். வக்கிரமம் தான்; வேறென்ன..?

கமல் இந்த சாதிக்கு இன்னும் கொடி கட்டுவதை விட்டு விட்டால் நலம். கமலின் விஷ்வரூபம் பிடித்தது. ஆனாலும் எடுத்த கருத்து எனக்கு ஒரு ஆச்சரியத்தைக் கொடுத்தது. நிச்சயம் அப்படம் இஸ்லாமியர் மீது ஒரு அச்சத்தையோ, ஐயத்தையோ உண்டு பண்ணக்கூடிய படம். கமல் இதைப் போன்ற துவேஷ சிந்தனை தரும் படங்களை எடுப்பதை விட அன்பே சிவம் போன்ற அருமையான படங்களை எடுத்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்.

***********************************

கெளரவம் படம் எடுக்க என்ன காரணம் என்று கேட்ட போது பிரகாஷ்ராஜ் கொடுத்த பதில் இதமாகவும், இனிமையாகவும், பெருமையாகவும் இருந்தது. எங்கும் விரவிக்கிடக்கும் சாதியக் கொள்கைகளுக்கு இவ்வளவு நேர்மையாக எதிர்ப்பு தெரிவிக்கும் அவரது மனது வாழ்த்துக்குரியது. பணத்தைப் பற்றி நினைக்காமல் தான் வாழும் சமூகத்திற்கு தான் கொடுக்கும் ஒரு வேண்டுகோளாக இப்படத்தை எடுப்பதைக் குறிப்பிட்ட போது அவர் மேல் இதுவரை இருந்த மரியாதை மிக அதிகமாயிற்று. வாழ்க ... வளர்க ...

********************************

நீயா நானா பரிசளிக்கும்போது  சமூகத்தை எதிர்த்து திருமணம் செய்து கொண்ட விழியற்ற இருவருக்கும், அந்த இளம் தாய்க்கும் கொடுத்தது மனதைத் தொட்டது. அந்த தாய் பரிசை வாங்கும்போது அவரது குழந்தையை இயக்குனர் பாலாஜி வாங்கி தூக்கி வைத்துக் கொண்டதில் மனித நேயம் மிளிர்ந்தது. பரிசு வாங்கும்போதும் கூட முகத்தில் உறைந்திருந்த சோகத்தோடு அந்தப் பெண் நின்றது வேதனையாக இருந்தது. அவருக்கு உதவிட மகளிர் உதவிக் குழுக்களோடு மற்றோரும் உதவினால் நன்றாக இருக்கும்.

********************************

கெளரவத்திற்கு இப்படி ஒரு விளம்பரமா என்று முதலில் நினைத்தது தவறு என்பது புரிந்தது. நல்ல ஒரு கொள்கையுடன் எடுக்கப்பட்ட ஒரு படம். இதற்கு இப்படி ஒரு வரவேற்பும், விளம்பரமும் கொடுப்பது தவறல்ல என்றும் புரிந்தது.

ஆனாலும் தேவர்மகனில் ‘போங்கடா .. போய் பிள்ளைகளைப் படிக்க வைங்கடா ...’  என்ற புத்திமதி யார் மனத்திலும் விழுந்து, விளைந்து, முளைத்ததாக நான் பார்க்கவில்லை. இப்படத்திற்கும் அப்படிப்பட்ட முடிவு இல்லாமல் இருக்க ஆசைப்படுகிறேன்.

******************************

அந்த இளம் தாயின் சோகம் காண்க ....


*

Friday, March 29, 2013

648. ஒரு புது தமிழாக்க நூலுக்கான திறனாய்வு







*

பல பதிப்பாளர்களால் வேண்டாமென்று ஒதுக்கப்பட்டு, இறுதியில் பதிப்பிக்கப்பட்ட ஒரு நூல்  - அதன் பின் விற்பனையில் மிக உயரத்திற்குச் சென்றது. உலக அளவிலும் பல்வேறு மொழிகளில் மொழி மாற்றம் செய்யப்பட்ட தத்துவ நூல் இது. புதிய பதிப்பாக இப்போது தமிழிலும் மொழியாக்கம் செய்யப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. அந்த நூலைப் பற்றிய ஒரு திறனாய்வை இங்குப் பதிவிடுகிறேன்.



*



A Review on the  Tamil translation of 


Robert M. Pirsig’s  


Zen and the Art of Motorcycle Maintenance 


Pirsig’s Zen and the Art of Motorcycle Maintenance is a philosophical novel published in 1974. It is a bestseller translated into several languages. But ironically it has also found a place in the Guinness Book of Records as a best selling book rejected by the largest number of publishers. The novel describes the experiences of the persona’s seventeen day journey with his son Chris from Minnesota to Dakota on a motorcycle. While the landscape and the climate form the background, the narrator undergoes a transformation resolving his personal psychological crisis. If the journey provides one stream of the narrative, the philosophical debate of Phaedrus, the other side of the narrator’s split personality explores the theme of Quality explicating its relevance to the modern age.

The novel is autobiographical in a sense because the psychological crisis undergone by the narrator is the author’s also. One could observe the modern canon of catatonic schizophrenia and Zen Buddhist hard enlightenment getting expressed for an enquiry into values, which is the subtitle of the novel.

This book has been translated into Tamil by Sidharthan Sundaram and 
Prof. Dr. Vincent. It is indeed a stupendous task and the collaborative effort, one must admit, has paid   rich dividends. The translators have captured the tone of the novel and the philosophical debates and discourses involving Phaedrus have been made lucid and simple. The conflict between romanticism and classicism, rhetoric and dialectics, Quality and reason has been brought out in a style which can be understood even by a layman. 

The translation published by Ethir veliyedu runs to 582 pages and is indeed a valuable contribution to Tamil.


Published by : 
Ethirveliyedu, 
New Scheme Road, 
Pollachi -2. 
04259-226012. Also mobile 9442125697. 
Price Rs. 400.
                                                                                     

*
Reviewed by SARAVANAN

*




Thursday, February 14, 2013

638. ஒச்சப்பனும் நானும்







*


ஒச்சப்பன் இந்த ஆண்டில் ‘அந்திமழை’ என்ற நூலுக்குக் கொடுத்த ஒரு செவ்வி. ஆங்கிலத்தில் அதை ஒச்சப்பனே தருகிறார்.


*  





Camera Eye &
The Madurai Lover 

Interview for the Andhi Mazhai Magazine by Perassi Kannan 


The Belgian man, Henk, is quite familiar with Madurai taking pictures in and around the town for the past 25 years, discovering lately more the life in villages and small towns around the big city. In his own accented Tamil, picked up from his continuous visit from 1987, talking to local Tamil people, he replied:



 “My mother tongue is Dutch, I’m living in the small town Lokeren - Belgium. When I studied for my degree on architecture I came across Indian architecture. That pulled me to Tamil Nadu through Delhi and finally arriving in Madurai.

 “Why did you select Madurai at all?”

“Madurai, I consider the center point of TN. I can reach any place in TN from here. Moreover I find that the essence of Tamil culture is very much alive in Madurai. Festivals like Chitra, Karthigai, Pongal … feels more vibrant celebrated here. The hospitality, the joy, the love and smile from their heart are livelier in Madurai than anywhere else.

 “My mother was attracted by the photos that I took in Madurai. She was then 72. Still she wanted to visit India. She did it for 10 years. Now I am coming alone … she passed away immediately after her last visit to TN. I am in my sixties. I worked for the Government of Justice as a high ranking officer. Presently I am retired. Photography is my hobby, a way to meet people, sharing the pleasure. In ’94 I discovered the real Jallikattu, nowadays losing its glamour.

 “When I first came to Madurai I met Ochappan, a load man, still a good friend using his derived name ‘oochappan’ on the internet. Anand is nowadays my right hand, helping, getting a day older.

Henk hibernates in Madurai from November till February. He likes so much our language as carrier of our culture and lives, hoping that Tamil doesn't lose its importance to English, a foreign language. His photographs are so brightly colored since he feels that colors reflect the happiness in the minds and lives of the Tamil people.

His dream is to exhibit once his Madurai photos on the pavement in the city, so that everyone will have the chance to see and enjoy them.

His photos can be seen in : http://www.flickr.com/photos/oochappan/


*

Monday, October 15, 2012

597. நீயா .. நானா ..? - ஒரு கரும்புள்ளி





*


 ஒரு நீயா .. நானா? நிகழ்ச்சியில், பழைய தொழில் சார்ந்த வியாபாரிகள், புதிய தொழில் சார்ந்த வியாபாரிகள் என்று இரு குழுக்களுக்கு நடுவிலான ஒரு விவாதம் நடந்தேறி வந்தது. அதன் கடைசி பாகத்தில் நகர சுத்திகரிப்பாளர்கள் நால்வரையும், அதில் ஒருவரின் மகளையும் அறிமுகப்படுத்தினார்கள். அவர்கள் ஐவரையும் மதுரை சமூக ஆர்வலர் முத்துக் கிருஷ்ணன் எங்களூரிலிருந்து அழைத்து வந்திருந்தார்.

அந்த ஐவரையும் ஒரு பக்கம் நிறுத்தி அவர்களிடம் கேள்விகளை கோபிநாத் கேட்டுக் கொண்டிருந்தார். நான் தங்க்ஸிடம் ஏன் இவர்களை மட்டும் தனியே நிற்க வைத்துக் கேள்விகள் கேட்டுக்கொண்டிருக்கிறார். அவர்களை உட்காரவைத்து பேச வைக்கக்கூடாதா என்று சொல்லிக் கொண்டிருந்தேன். இது என் முதல் ஏமாற்றம். 

அந்த ஐவரில் ஒரு இளம்பெண். மலம் அள்ளும் ஒருவரின் குழந்தை. மிக மகிழ்ச்சியாக தான் முதுகலை முடித்து (M.Sc., B.Ed. ??) முடித்து இப்போது கணினியில் ஒரு டிப்ளமா கோர்ஸ் படிப்பதாகச் சொன்னார். தன் தந்தையின் தொழிலை எங்கும், யாரிடமும் மறைப்பதில்லை என்றும் கூறினார். அவரை அப்படி மகிழ்ச்சியாகப் பார்த்தது நன்றாக இருந்தது. அவர் படிப்பு, ஆர்வம், வேலை பார்க்கும் எண்ணம் பற்றி அங்கிருந்த புதிய தொழில் சார் மக்கள் யாரேனும் கேள்வி கேட்டு அவருக்கு அங்கேயோ வேலையளிக்க முன் வருவார்களோ என்று நான் எதிர்பார்த்தேன். அப்படி ஏதும் நடக்கவில்லை.  அவர்கள் எல்லோருமே வியாபாரிகள் தானே!  .. இல்லையா?! . இது என் இரண்டாவது ஏமாற்றம்.

வந்திருந்த மற்ற நால்வரில் இருவர் பெண்கள். அதில் ஒருவர் தான் சொல்ல வந்ததை மிகக் கோர்வையாக, வெகு இயல்பாக எடுத்துச் சொன்னார். அடுத்தவர் பேசவில்லையே என்று நினைத்த போது, அவர் கோபிநாத்தைப் பார்த்து, நீங்களும் கூட எங்களை நிற்க வைத்து தானே பேசுகிறீர்கள்; எங்களை இங்கே உட்காரவைக்கவில்லையே என்று நேருக்கு நேர் கேட்டார். இதன் பிறகு கூட கோபிநாத் அவர்களை அங்கே உட்கார வைக்கவில்லை.  வேகமாக வந்து நீங்க என் அக்கா என்றெல்லாம் கோபி சொல்லி அப்பெண்ணை அணைத்து ஈடு கட்டியது ... ஹூம் .. “பப்பு வேகவில்லை”!  அவரும் அவரது குழுவும் மிகவும் மோசமாக இடறிய இடம் இது. இது மூன்றாவது ஏமாற்றம். ஏமாற்றம் மட்டுமல்ல மிகக் கொடுமை.

 மரியாதையை கேட்காமல் கொடுத்திருக்க வேண்டும். கேட்டும் கொடுக்க மனமில்லையெனில் அது மிகக் கொடுமையே. ஒருவேளை அங்கே ஏற்கெனவே உட்கார்ந்திருந்தவர்களோடு இவர்களை உட்கார வைத்தால் அவர்கள் கஷ்டப்படுவார்களோ என்று நினைத்திருப்பார்களோ? என் பார்வையில் அங்கு உட்கார்ந்திருந்த பல பெண்களை விட நிற்க வைக்கப்பட்டு அனுப்பப்பட்ட சுத்திகரத் தொழிலாளிப் பெண்கள் இருவரும் மிகவும் நன்றாக இருந்தார்கள். They were more presentable that many in the audience. பின்னும் ஏனிந்த நடைமுறை?

ஊடகங்களில் சாதி இந்துக்கள், தலித்துகள் என்று பிரித்து எழுதுவது வழக்கம். ஒரு வேளை நீயா நானாவில் சாதி இந்துக்கள் மட்டும் தான் உட்காரவைத்து மரியாதை செய்யப் படுவார்களோ? இது போன்ற நல்ல நிகழ்வுகளிலேயே இந்த சாதிய முறை இப்படிப் பட்டவர்த்தனமாகப் பார்க்கப்படுமாயின் நாம் வேறே எங்கே போய் முட்டிக் கொள்வது?






 *

Friday, October 12, 2012

596. ’பரதேசி’ பாலா .. ஒரு பெரிய பரதேசி.








*



வியாழக்கிழமை காலையில் மேசை மேல் கிடந்த தினசரிகளின் நடுவே இருந்து ஒரு முகம் என்னை முறைத்தது. ஆ.வி.யின் அட்டைப் படம் ... பரதேசி படத்தின் கதாநாயகனின் முகம் .. அதர்வா ... நினைத்தே பார்க்க முடியாத அளவிற்கு இருந்தது அப்படம். அதர்வாவைக் காணோம். ஒரு பாவப்பட்ட கோவக்காரனின் வெறித்த கண்கள் நம்மை ஊடுறுவுவது போல் இருந்தன.




உள்ளே கட்டுரையில் பாலா: “பிழைக்க வழியில்லாமல் சொந்த மண்ணைவிட்டுப் பிரியும் ஒவ்வொருத்தனும் பரதேசி தான். படம் எடுக்கிற நானும் பேட்டி எடுக்கிற நீங்களும்கூட பரதேசிகள்தான்!”

எங்கும் எத்தனை எத்தனையோ பரதேசிகள். எல்லாப் பரதேசிகளும் நன்கு ‘பிழைத்து’ விடவில்லை. பாலா சென்னைக்கு வந்த கதை எல்லோருக்கும் தெரியும். அப்படி வந்த பரதேசி இன்று மலைக்க வைக்க உயர்ந்து நிற்கிறார்.

வாழ்க ... வளர்க ....

ஆ.வி. கட்டுரையில் வரும் படங்களும் தனி ஒரு உலகைக் காட்டின. பாலா காண்பிப்பது எல்லாமே ஒரு தனி உலகாகத்தான் இருக்கிறது. ஒவ்வொரு படத்திலும் அந்த எண்ணம் எழுவதைத் தவிர்க்க முடியாது என்றே நினைக்கிறேன். சில மனிதர்கள் ... அவர்கள் உலகம் என்றே அவரின் கதைகள் பயணிக்கின்றன. கதை மாந்தர்களை நிஜமான மனிதர்களை மாற்றி நமக்குத் தருகிறார். அவர்களின் அந்த உலகமும் - அந்த உலகம் மட்டுமே - நம்மைச் சுற்றி வருகின்றன. An embossed world!

அதர்வாவைத் தேர்ந்தெடுத்துள்ளாரேன்னு நான் கூட நினைத்தேன். ஆனால் பாலா, ‘அதர்வாவைக் கவனிச்சிப் பாருங்க. வெள்ளந்தியா சிரிக்கும் போதும் அவன் கண்ணுல ஒரு சோகம் தெரியும்’ என்கிறார். என்னமோ பார்க்கிறார் .. எதையெதையோ நடிகர்களிடமிருந்து கொண்டு வருகிறார். நல்ல magician ... நல்ல creator .... ஒவ்வொரு நடிகனையும் எப்படி இவ்வாறு மாற்றி போடுகிறார்.

வெறும் ஒரு அட்டைப் படமே இந்த அளவிற்கு என்னை ‘உசுப்பேற்றி விட்டதே’ என்று நினைக்கும் போது ஆச்சரியமாக இருக்கிறது. படத்தில் வரும் மற்ற stills எல்லாமே ஒரு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்துகிறது. படத்திற்கு ஆனந்த விகடனின் அட்டைப் படம் நல்ல ஒரு திறப்பு .. a real good bang!




கட்டுரையில் வரும் படங்களும் தனி ஒரு உலகைக் காண்பிக்கின்றன. படங்களில் உள்ள முகங்களில் அதர்வா முகம் பட்டுமே பார்த்த முகமாக இருக்கிறது. ஒரு பெண்ணுக்கு ஸ்ரீவித்யா மாதிரி முகம் தெரிந்தது. இன்னொரு பெண் யாரென்று தெரியவில்லை. இப்போதைக்குப் பிடித்த ஹீரோயின் - அதாவது இந்தப் படத்தின் ஹீரோயின் - அனுஷ்கா என்கிறார். படங்களில் தெரிந்த அந்த முகத்தைத் தேடிப்பார்த்தேன். அடையாளம் தெரியவில்லை. ஒரு வேளை இது வேறு ஒரு அனுஷ்காவோ??



முதல் நாள் .. முதல் ஷோ பார்க்கணும் .. பார்த்தே ஆகணும் !!

*

பின் குறிப்பு:
ஆ.வி.யில் அனுஷ்கா என்று கூறியுள்ளனர். அது தனுஷ்கா. தன்ஷிகா. அரவான் பட நாயகி.









 *