Sunday, November 30, 2008

287. அன்றும் .. இன்றும் ...

*

*

"பண்புடன்" வலையிதழுக்காக எழுதிப் பதிப்பித்த இப்பதிவை மீண்டும் உங்கள் பார்வைக்கு ...

*

வேகமாக வளரும் அறிவியல் மாற்றங்கள், அதனால் ஏற்படும் புதிய சமூக விளைவுகள், வாழ்வியல் மாற்றங்கள் – எல்லாமே மிக வேகமாக நம்மைச் சுற்றி நடந்து வருகின்றன. என் வயதுக்குள்தான் எத்தனை எத்தனை மாற்றங்கள்! இந்த வளர்ச்சிகளையும், மாற்றங்களையும் பார்க்கும்போது மிகுந்த ஆச்சரியமாக உள்ளது. இந்த ஆச்சரியங்களை உணர்ந்து அனுபவிப்பதில் யார் அதிர்ஷ்ட சாலிகள் என்று அவ்வப்போது மனதில் ஒரு எண்ணம் எழுவதுண்டு. முதிய வயதில் இருக்கும் என் போன்றோரா, இளம் வயதில் இருப்பவர்களா, இல்லை என் பேரப்பிள்ளைகள் போல் இன்னும் எதிர்காலத்தை நோக்கி நடப்பவர்களா – இவர்களில் யார் இந்த நித்தம் நித்தம் அரங்கேறும் அதிசயங்களைக்
கண்டு அதிசயித்து அனுபவிக்கும் பேறு பெற்றவர்கள்?

Alvin Toffler எழுதி பிரபலமடைந்த Future Shock என்ற நூலில் இப்போது நடைபெறுவது knowledge explosion – அதைத் தொடர்ந்து வருவது பெரும் மாற்றங்கள். வரப்போகும் இந்த பெரும் மாற்றங்களை எதிர்கொள்ள நம்மை நாமே தயார் நிலையில் வைத்துக் கொள்ளாவிட்டால் நாளைக்கு நமக்குக் கிடைக்கக் கூடிய அதிர்ச்சிகளையே Future Shock என்றார். இன்றைய குழந்தைகள் இன்று நடக்கும் மாற்றங்களைப் பற்றியேதும் அறியார்கள் . நடுவயதினருக்கோ இதில் பெரியதாக ஏதும் வியப்பிருக்காது. ஆனால் என் போன்றோருக்கு இந்த மாற்றங்கள் தரும் வியப்புகளைப் பற்றித் தெரிந்து கொள்ள ஒரு சின்ன உதாரணம் :

அந்தக் காலத்துத் தமிழ்ப்படங்களில் கதாநாயகர்கள் அந்தக் கருப்புத் தொலைபேசியைக் கையில் எடுத்துக்கொண்டு நடந்துகொண்டே பேசுவார்கள். ஆனால் எண்பதுகளின் கடைசிகளில் handset வந்தபோது ஆஹா என்றிருந்தது; ஓடிப்போய் ஒவ்வொரு முறையும் போனை எடுக்கக் கூட தேவையில்லாமல் பக்கத்திலேயே handset என்பதே ஆச்சரியாக இருந்தது. தொன்னூறுகளின் நடுவில் கைத்தொலைபேசியைப் பார்த்து நான் வாய் பிளந்து நின்றிருக்கிறேன். முதலில் தமிழ்நாட்டில் சென்னையில் மட்டும் தொலைபேசி இணைப்பு இருந்தது. RPG Cellular..? கறுப்பாக நீளமாக 'கொம்பு' வச்சுக்கிட்டு, பணக்கார மக்களின் அந்தஸ்தைக் காண்பிக்கும் பொருளாக இருந்தது. கிசுகிசுவில்கூட கைப்பேசியின் மகத்துவம் வந்தது நினைவுக்கு வருது. சரத்குமார் ஒரு நடிகையுடன் அப்படி பேசிக்கொண்டேயிருந்தாராம். நிமிடத்துக்கு இரண்டு பேருக்கும் ஏழேழு ரூபாய் .. எந்த தயாரிப்பாளரின் பணமோ? என்று விசனப்பட்டு பத்திரிகைகளில் ஒரு கிசுகிசு! ஆ.வி.யில் ரெண்டு மூட்டை பருத்திக் கொட்டையும், ரெண்டு மூட்டை புண்ணாக்கும் அனுப்பிவிடு என்று கைத்தொலை பேசியில் மாடுகளை மேய்த்துக் கொண்டே ஒருவர் பேசிக்கொண்டு போவது ஜோக்காக வந்திருந்தது. Toffler சொன்னதுபோல் அன்று அதிசயமாக இருந்தது; இன்று அவையெல்லாம் சாதாரணம் என்பதாக நடைமுறைக்கு வந்துவிட்டன.

ஆனால் என் பேரப்பிள்ளைகளுக்கு இதில் எந்த பிரமிப்பும் இல்லை. நடுவயதினருக்கும் இந்த வளர்ச்சிகள் அப்படிஒன்றும் பெரும் பிரமிப்பையோ ஆச்சரியத்தையோ தந்திருக்காது. ஆனால் பதின்ம வயதுகளில் போனை அருகில் வைத்துக் கூட பார்க்காத என் போன்றவர்களுக்கு …. அதைப் பற்றி
இங்கு வந்து பாருங்களேன்.



இந்த தொலைபேசிகளின் வளர்ச்சியின் பிரமாண்டம் புரியும். இன்னும் இதைப்பற்றி நிறையச் சொல்லலாம். அந்தக் காலத்தில் – அப்படி ஒன்றும் ரொம்ப வருஷங்களுக்கு முன்புகூட இல்லை – 80-கள் வரையிலும் தொலைபேசி இணைப்புக்கு ஆறு வருடங்கள் காத்திருக்க வேண்டும். 24 மணி நேரத்தில் தொலைபேசி இணைப்பு கிடைக்கும் "எங்க ஊரில்" என்று அமெரிக்கா சென்ற நண்பர் சொன்ன போது ஆச்சரியமாக இருந்தது உண்மை. இப்போது நம்மூரிலேயே over the counter என்றாகிவிட்டது.

இதுபோல் இன்னும் எத்தனை எத்தனை…? சின்ன வயதில் பார்த்த கார்கள் – அப்போதெல்லாம் அவைகளுக்குப் பெயர் பிளசர் கார் – எல்லாமே அயல்நாட்டு இறக்குமதிகள். வகை வகையாக இருக்கும். Buick, Hillman, Plymouth, Chevrolet, Morris Minor, நடு நடுவே Landmaster …. அதே மாதிரி மோட்டார் சைக்கிள்களில் Norton, Red Indian, B.S.A.… விதவிதமாக இருந்ததால் தூரத்தில் வரும்போதே அது என்ன கார் / மோட்டார் சைக்கிள் என்று கண்டுபிடித்து சொல்வது என்று ஒத்த வயதினரோடு விளையாடியது உண்டு. அப்படி இருந்தது கொஞ்ச காலம்தான். அதன் பிறகு பல காலத்துக்கு Ambassador, Fiat, Standard என்று கார்களில் மூன்றுவகை மட்டும்; மோட்டார் சைக்கிள்களில் Bullet, Jawa, Rajdoot என்று மூன்றுவகை மட்டுமே என்று சுருங்கி, இப்போதோ நித்தம் ஒரு மாடல். வெள்ளையும் கறுப்பும் மட்டுமே கார்கள் என்பது போய் இப்போது வண்ண
மயம்தான். Simply riots in colours.


அட .. கார்களை விடுங்கள்.. சாதாரண பென்சிலை எடுத்துக் கொள்ளுங்கள். மிஞ்சிப் போனால் வழக்கமான மரக்கலர் பென்சில்களைத் தவிர மஞ்சள் கலரில் நாங்கள் பார்த்திருப்போம். இப்போது .. கணக்கேது. வெளிநாட்டிலிருந்து, அதாவது அமெரிக்காவிலிருந்து (அந்தக் காலத்தில் foreign என்றாலே அமெரிக்காதானே!) நண்பர்கள் வந்தால் BiC என்று ஒரு ball point பேனா; அதன் பின் கொஞ்ச காலத்துக்கு ஸ்கெட்ச் பேனாக்கள், அடுத்து highlight pens என்று கொடுப்பதற்கு என்றே வாங்கி வருவார்கள். அடேயப்பா .. பிரான்ஸ் நாட்டிலிருந்து வந்த நண்பன் ஒரு Reynolds ballpen வாங்கி வந்து கொடுத்ததோடில்லாமல் ஒரு demo வேறு காண்பித்தான். அப்படியே செங்குத்தாக பேனா முனையைக் கீழே போட்டாலும் எழுதும் என்று செய்து காண்பித்தான். பார்த்த உடனே எனக்குப் பெரிய கவலை. இப்படிப்பட்ட நல்ல பேனா ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக் கூடிய use & throw-வாக இருக்கிறதே என்று. 'அங்கெல்லாம் அப்படித்தான்; ஒரு தடவை பயன்படுத்திட்டு நாங்க தூரப் போட்டுவிடுவோம்' என்றான்.
சே! பாரின்னா பாரின்தான் என்றுதான் நினைக்கத் தோன்றியது!

அடேயப்பா! முதன் முதல் மலேசியாவில் இருந்து வந்திருந்த ஒருவரிடம் ரொம்ப
யோசித்து, தயங்கி, பேரம் பேசாமல் அவர் பயன்படுத்திக் கொண்டிருந்த ஒரு Parker Fountain பேனாவை விலை பேசி வாங்கியது எவ்வளவு சந்தோஷமாயிருந்தது. Parker பெயருக்கே ஒரு மரியாதை. அப்படி ஒரு ஃபாரின்மோகமும் பல வருஷங்கள் இருந்தது. அந்த மாயையில் தோன்றியவைதான் ஊருக்கு ஊர் அயல்நாட்டுப் பொருள் விற்கும் பர்மா பஜார்
என்ற பெயரில் இருக்கும் கடைகள். ஆனால் இப்போது வெறுமனே திருட்டு சினிமா சிடிக்கள் மட்டுமே அங்கே பெரிதாக விற்கின்றன.

ஆனாலும் அயல்நாட்டு மோகம் நமக்கு இன்னும் குறையவில்லை என்றுதான் நினைக்கிறேன். அல்லது ஒரே ஒரு விஷயத்தில் மட்டுமாவது இருக்கிறது. நமது சினிமா படங்கள் மட்டும் உலகத்தரத்தில் வர வேண்டுமென நினைக்கிறோம். அந்த "தரம்" மட்டும்தான் இன்னும் கிடைக்கவில்லை; மற்றபடி அயல்நாட்டுப் பொருட்கள்தான் இப்போது எல்லாமே அப்படியே, அல்லது உள்நாட்டு பொருளாகவோ கிடைத்து விடுகின்றனவே. இப்போதெல்லாம் என்ன வாங்கி
வர வேண்டும் என்று அங்கிருந்து பிள்ளைகள் கேட்டால்கூட சொல்வதற்கு ஒன்றுமில்லையென்று ஆகிவிட்டது .. Toffler சொன்ன global village இதுதானோ… ?

டார்வினின் பரிணாமக் கொள்கைகளில் அடிப்படையாக அவர் சொன்னதில் முக்கியமான ஒன்று:
variations are the raw materials for changes. இன்று அந்த விதவிதமான விஷயங்கள் கண்முன்னால் விரிகின்றன. வீட்டுக்கே பசுவோடு, வைக்கோலால் செய்த கன்றுக்குட்டியுடனே வந்து அங்கேயே கறந்து பால் கொடுத்திட்டு போனாங்க .. இப்போ அந்த பால்தான் எத்தனை எத்தனை விளம்பரங்களோடு, விதவிதமான பாக்கெட்டுகளில் கிடைக்கின்றன. குடிக்கிற தண்ணியில்கூடத்தான் எத்தனை எத்தனை விதம்! இந்தக் காலத்துப் பசங்க 'ஃபிகர்' என்பதுபோல், அந்தக் காலத்தில் நாங்க வயசுப் பொண்ணுகளை "கலர்" என்போம். காரணம் பசங்க அனேகமாக வெள்ளைச் சட்டை; அப்படியே கலர் சட்டையாக இருந்தால் ரொம்ப வெளிர் நிறங்களில்தான். பொண்ணுக மட்டும்தான் பல வண்ண உடைகளில் இருப்பார்கள். காரண இடுகுறிப் பெயர் !!


இப்படி அனைத்திலும் varieties …


பரிணாம வளர்ச்சியின் அடிப்படையே அதுதான் என்று டார்வின் சரியாகத்தான் சொல்லியிருக்கிறார்.

Wednesday, November 26, 2008

286. SOME POLITICALLY CORRECT JOKES

*


The prime Minister of China called President Bush to console him after the
attack on the Pentagon:
'I'm sorry to hear about the attack. It is a very big tragedy. But in case
you are missing any documents from the Pentagon, don’t worry, we have copies of
everything.'

==============

Musharraf calls Bush on 11th sept:

Musharraf: Mr President, I would like to express my
condolences to you. It is a real tragedy. So many people, such great
bldgs... I would like to ensure that we had nothing in connection with
that..
Bush: What buildings? What people??
Musharraf: Oh, and what time is it in America now?
Bush: It's eight in the morning.
Musharraf: Oops...Will call back in an hour!

===========
Vajpayee and Bush are sitting in a bar. A guy walks in and asks the barman,
'Isn't that Bush and Vajpayee?'
The barman says 'Yep, that's them.' So the guy walks
over and says, 'Hello, what are you guys doing?'
Bush says, 'We're planning world war 3'
The guy says, 'Really? What's going to happen
And Vajpayee says, 'Well, we're going to kill 14
million Pakistanis and one bicycle repairman.'
And the guy exclaimed, 'A bicycle repairman?!! !'

Vajpayee turns to Bush and says, 'See, I told you no-one would worry about
the 14 million Pakistanis!'

==============
Pakistani on the moon:
Q: What do you call 1 Pakistani on the moon?
A: Problem...
Q: What do you call 10 Pakistanis on the moon?
A: Problem...
Q: What do you call a 100 Pakistanis on the moon?
A: Problem...
Q: What do you call ALL the Pakistanis on the moon?
A: ...... Problem Solved!!!

=============
A man is! taking a walk in Central park in New York . Suddenly he sees a
little girl being attacked by a pit bull dog.
He runs over and starts fighting with the dog. He succeeds in killing the
dog and saving the girl's life.
A policeman who was watching the scene walks over and says: 'You are a
hero, tomorrow you can read it in all the newspapers:
'Brave New Yorker saves the life of little girl'.
The man says: 'But I am not a New Yorker!'

Oh then it will say in newspapers in the morning:
'Brave American saves life of little girl' the policeman answers.
'But I am not an American!' - says the man. Oh, what are you then?'
The man says: 'I am a Pakistani!'

The next day the newspapers say: 'Extremist kills innocent American dog '




*
a bonus:

ஒரு நேர்முக தேர்வில்,
கேள்வி கேட்பவர்:how does an electric motor run?
சர்தார்: Dhhuuuurrrrrrrrrr. .....
கோபத்துடன், கேள்வி கேட்டவர்: Stop it.
சர்தார்: Dhhuurrrr dhup ... dhup .. dhup.

*

Sunday, November 23, 2008

285. மங்களம் ... மங்களம் ...

*

*

துணிந்து இரண்டாம் முறையாக என்னை நட்சத்திரமாகத் தேர்ந்தெடுத்த தமிழ்மண பொறுப்பாளர்களுக்கு என் நன்றி.

வரலாறு காணா வரவேற்பளித்த நண்பர்களுக்கு நன்றி.

அப்பாடா வாரம் முடிந்தது என்று பெருமூச்சு விடும் நண்பர்களுக்கும் நன்றி.

இந்த வாரத்தில் ரொம்பவும் திட்டாமல் இருந்த தங்கமணிக்கு நன்றி.


மீண்டும் வழமை போல் வராமலா போய்விடப் போகிறேன் என்ற பயமுறுத்தலோடு விடைபெறுகிறேன்.





*

284. ஒரு நிகழ்வு - ஒரு செய்திப்படம் - ஒரு நூல் .. 3

*


*
ஒரு நிகழ்வு - ஒரு செய்திப்படம் - ஒரு நூல்... 1

ஒரு நிகழ்வு - ஒரு செய்திப்படம் - ஒரு நூல்... 2

ஒரு நூல்

முந்திய பதிவுகள்; 1 .... 2

இத்தொடர் பதிவுகளின் முதல் பதிவில் பெரும்பான்மையான இந்து மக்களின் மத நம்பிக்கைகளுக்காக இஸ்லாமியர்கள் விட்டுக் கொடுத்திருக்கலாமே என்று நான் நினைத்ததைச் சொல்லியிருந்தேன்.

இரண்டாவது பதிவில் ஆனந்த் பட்வர்த்தனின் செய்திப் படத்தின் மூலம் ஆதிக்க சாதியினர் சிலரின் உந்துதலாலேயே இந்நிகழ்வு நடந்தேயன்றி பெரும்பான்மையான இந்துக்கள் மசூதியை இடிப்பதை விரும்பாதவர்களே என்று அறிந்து கொண்டேன்.

மூன்றாவது பதிவில் இதையெல்லாம் புரட்டிப் போட்டது காஞ்சா அய்லய்யாவின் நான் ஏன் இந்து அல்ல என்ற புத்தகம். அந்தப் புத்தகத்தில் நான் கண்ட செய்திகளைப் பகிர்வதே இப்பதிவு.

சண்டாளர்கள் -- மிலேச்சர்கள் -- தீண்டத்தகாதவர்கள் -- ஹரிஜன்கள் -- சூத்திரர்கள் -- ஆதி சூத்திரர்கள் -- அட்டவணை சாதியினர் -- ஒடுக்கப் பட்ட சாதியினர் (அம்பேத்கார்) -- இறுதியாக, தலித்துகள்

தாழ்த்தப்பட்ட குடியினருக்குத்தான் எத்தனை எத்தனை பெயர் மாற்றங்கள். பெயரை மாற்றி வைத்தாவது ஒரு 'மரியாதையை' பெயரளவிலாவது கொடுத்த விட முடியுமா என்றுதான் பலரும் பல கால கட்டங்களில் முயன்றார்கள். இந்த முயற்சிகளில் தாழ்த்தப்பட்டோரையும், பிற்படுத்தப் பட்டோரையும் ஒன்று சேரவிடாது தனித்து நிற்க வைக்கும் முயற்சிகளைப் பற்றியும் அய்லய்யா குறிப்பிடுகிறார். இந்த முயற்சியின் முழுவெற்றிதான் இன்று தலித்துகளும், தேவர்களும், தலித்துகளும் வன்னியர்களூம் அது சட்டக் கல்லூரியாக இருக்கட்டும், பஞ்சாயத்துத் தேர்தல்களாக இருக்கட்டும், கோவில்விழாக்களாக இருக்கட்டும் தமிழகமெங்கும் அடித்துக் கொண்டு நிற்கிறார்கள்.

இதைத்தான் அய்லய்யா "பல சமூகவியல் அறிஞர்கள் அட்டவணை சாதியினர்க்கு வெளியில் இருப்பவர்களைச் சாதி இந்துக்கள் என்று குறிப்பிட்டார்கள். இந்தச் சொல்லாக்கத்தில் பிற்பட்டவர்களையும் இணைக்கிற தந்திரம் உள்ளது. அன்றாட வாழ்க்கையில் இதர பிற்படுத்தப்பட்ட சாதியினரும் தாழ்த்தப்பட்ட சாதியினரைப் போல்வே மேல்சாதியினரால் ஒடுக்கப் பட்டவர்களாகவே உள்ளனர். இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் இந்து அமைப்பிற்கு உட்பட்டவர்களாக இருந்த போதிலும், அங்கே சமத்துவமில்லை. எனவே சாதி இந்து என்கிற சொல்லையும் நான் நிராகரிக்கிறேன்" என்கிறார்.(pp29)

இந்த நிலையை மாற்ற 1984-ல் திரு. கன்ஷிராம் பகுஜன் சமாஜ் கட்சியினைத் தோற்றுவித்தார். 'பகுஜன்' என்றால் பெரும்பான்மை என்று பொருள். தலித் என்று ஒரு சாராரைத் தனிமைப் படுத்தாமல் பகுஜன் என்பது அட்டவணை சாதியினர், மலைவாழ் மக்கள் இவர்களோடு பிற்படுத்தப்பட்டோரையும் இணைக்கும் விதமாக பகுஜன் - பெரும்பான்மை மக்கள் - என்ற சொல்லாடலைப் பயன்படுத்த ஆரம்பித்தார். எனக்கு இது மிகப் பொருத்தமாகத் தோன்றினாலும் அய்லய்யா தலித்-பகுஜன் என்றே தன் நூலில் பயன்படுத்துகிறார்.

சாதி அடையாளங்களோடுதான் ஒவ்வொரு இந்தியனும் பிறக்கிறான். ஆனால் கல்வியறிவு இல்லாமல் ஏழ்மையில் வாழும் மக்கள் "ஏதாவது ஒரு கடவுளை வணங்கும், ஆலயங்களுக்குச் செல்லும், மத சம்பந்தமான திருவிழாக்களில் கலந்து கொள்ளும் மக்களோடு மக்களாக வாழ்கின்ற போதுதான், அந்த மக்கள் ஒரு மதத்தைச் சார்ந்தவர்கள் ஆகிறார்கள்". (pp33) சாதி பிறப்போடு ஒட்டி வருகிறது; மதம் வாழ்வியலோடு ஒட்டி வருகிறது.

ப்ராமணீய இந்து மதத்திற்கும் பகுஜன்களின் - அதாவது பெரும்பான்மையான தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்களின் - மத வழக்கங்களுக்கும் எந்த ஒரு தொடர்பும் இல்லாதிருந்ததை, இன்றும் இல்லாதிருப்பதைக் காண முடியும். பின் எப்படி பகுஜன்கள் இந்து மதத்திற்குள் இழுக்கப்பட்டார்கள் அல்லது திணிக்கப்பட்டார்கள்? ஆங்கிலேயர் காலத்தில் நடந்த மக்கட் கணக்கெடுப்பில் இஸ்லாமியர், கிறித்துவர், பார்சிகள், சீக்கியர்கள், புத்தர்கள் என்ற எந்த மதங்களுக்குள்ளும் வராத அனைவருமே இந்துக்கள் என்ற அமைப்புக்குள் திணிக்கப்பட்டார்கள். பகுஜன்களின் மதங்கள் பெரும்பாலும் தம் முன்னோர்களை, சிறு தெய்வங்களைக் கும்பிடும் வழக்கம். அய்லய்யா சொல்வது போல் "நாங்கள் பள்ளிக்குச் செல்கிற வரையில் எங்களுக்கு பிரம்மா, விஷ்ணு, ஈஸ்வரன் ஆகியன பற்றி எதுவுமே தெரியாது. நாங்கள் முதன் முறையாக அவைகளைப் பற்றிக் கேட்டவுடன் அவைகள் எங்களுக்கு அல்லா, இயேசு போன்று புதியதாகத் தோன்றின. புத்தர் பற்றி எங்களுக்கு எதுவும் தெரியாது. பிறகுதான் புத்தர் என்பவர் பார்ப்பனர்களுடைய யாகம், பலியிடல் போன்ற சடங்குகளுக்கு எதிராக தலித் பகுஜன்களைத் திரட்டியவர் என்று அறிந்தோம்"(pp40). "எங்கள் வீடுகளில் ஒரு பண்பாடும் பள்ளிகளில் வேறொரு பண்பாடும் இருந்தன"(pp49).

இந்த நூலை வாசித்த பிறகு இந்துக்கள் என்பவர்களே ஒரு சிறுபான்மையர், தலித்-பகுஜன்களே பெரும்பான்மை மக்கள் என்ற முடிவுக்கு வந்தேன். ஆனாலும் இந்தச் சிறுபான்மையர் பெரும்பான்மை மக்களையும் இந்துக்கள் என்ற ஒரு குடைக்கீழ் கொண்டுவந்தது மட்டுமின்றி இந்தக் கட்டுக்கோப்பை சிதையாமல் எடுத்துச் சென்று வருகிறார்கள் என்று புரிந்து கொண்டேன்.

பாபர் மசூதி விவகாரத்திலும் இதைத்தான் ஆனந்த் பட்வர்த்தன் தெளிவாக சில கேள்விகளை கர் சேவாக்களின் முன் வைத்து தெளிவாக்கியுள்ளார். கையில் கட்டையும் திரிசூலமும் ஏந்தி செல்வோர்கள் பலரிடம் கேட்ட கேள்விகள் இந்த உண்மையைத்தான் உரைத்தன. இந்த கட்டுக்கோப்பை மதம் வளர, நாடு முன்னேற பயன்படுத்தினால் மகிழ்ச்சியே. ஆனால் மேடையிலிருந்தும், ரதத்திலிருந்தும் சொல்லும் அழிவுக் காரியங்களைச் செய்து முடிக்க 'வானரப் படையாக' தலித்-பகுஜன்களைப் பயன்படுத்துவதும், இதற்கு இந்து மதம் என்ற கேடயத்தைப் பயன்படுத்தும் போதும்தான் இந்த விபரீதம் புரிகிறது.

இந்த கருத்துக்களை ஏற்கெனவே என் பழைய பதிவொன்றில் பேசி, அதற்கு அதிகமான எதிர்ப்புகளும் மறுப்புகளும் வந்தன. அதைவிட ஏறத்தாழ அதே சமயத்தில் பதிவர் தங்கமணி என்பவர் தன் வலைப்பூவில் இதைப் பற்றி எழுதி காரசாரமான நீண்ட விவாதங்கள் தொடர்ந்து வந்தன. (அப்பதிவிற்கு இங்கு தொடுப்பு கொடுக்க நினைத்துத் தேடினேன்; கிடைக்கவில்லை. யாரேனும் அப்பதிவை சேமித்து வைத்திருந்தால் அதை மீள் பதிவாகவோ, இல்லை நகலை எனக்கோ அனுப்பி வைக்க வேண்டுகிறேன். Please.) இந்தப் பிரச்சனைக்கெதிராக எனக்குத் தோன்றுவதெல்லாம் கிறித்துவத்திற்குக் கிடைத்த மார்ட்டின் லூதர் போல் இங்கும் ஒருவர் வரமாட்டாரா; வந்து, ப்ராமணீய இந்து மதத்திற்கும் தலித்-பகுஜன்கள் பின்பற்றும் நாட்டார் வழக்குகளையும் பிரித்து ஒன்றிலிருந்து ஒன்றை விலக்கி வைக்க மாட்டாரா என்று தோன்றுகிறது.

பி.கு.

நான் பிறப்பினால் கிறித்துவன் என்பதாலேயே, ஏன் நீ இந்து மதத்துக்குள் தலையை நுழைக்கிறாய் என்று கேட்கலாம். அதற்கு என்னிடம் பதிலில்லை. இது ஒரு மிச நரியின் வேலை என்று சொன்னால் ... சிரித்துக் கொள்வேன்.


*

*

Saturday, November 22, 2008

283. நம்பிக்கையாளர்களுக்கு ஒரு அறைகூவல்

*

*
நம்பிக்கையாளர்களுக்கு ஒரு அறைகூவல் ... அசோகச் சக்கரவர்த்தியிடமிருந்து,


The House of Blue Mangoes நூலை எழுதி, அந்த முதல் புத்தகத்திலேயே புகழ் பெற்ற David Davidar எழுதிய THE SOLITUDE OF EMPERORS புத்தகத்தை சமீபத்தில் வாசித்தேன். அவரது முதல் புத்தகத்தின் முதல் சில பக்கங்களை வாசித்துவிட்டு அப்படியே விட்டு விட்டேன். ஆனால் இது நம் இப்போதைய நாட்டு நடப்போடு, அதுவும் அரசியல் - மதங்கள் என்பவைகளோடு தொடர்புள்ளது என்று பின்னட்டையில் இருந்ததைப் பார்த்து ஆஹா, நம்ம விஷயமாச்சேன்னு எடுத்து வாசிக்க ஆரம்பித்தேன். விட முடியவில்லை.

நவீனம்தான்; ஆனால் தன்மையில் தன் சுயசரிதை போல் எழுதியிருப்பதால் உண்மையிலேயே அவரது வாழ்க்கைச் சரிதம் தானோ என்றுதான் நினைத்தேன். அந்த அளவு இயற்கையாக விறு விறுப்புடன் ஒரு personal touch-ஓடு நன்றாக இருந்தது. நான் அந்தக் கதையையெல்லாம் இங்கே சொல்லப்போவதில்லை. மூன்று பேரரசர்கள் - அசோகர், பாபர்,காந்தி - இம்மூவர்களின் வாழ்ககையில் சில பகுதிகளை நம் சிந்தனைக்குத் தருகிறார். அதில் அசோகர் பற்றியுள்ள பகுதி எனக்குப் பிடித்தது. அதை உங்களோடு பகிர்ந்து கொள்ள ஆவல்.


அசோகப் பேரரசர்

அவருடைய காலத்தில் உலகத்திலேயே பெரும் பேரரசை ஆண்டிருந்தாலும் அவரைப் பற்றிய குறிப்புகள் வரலாற்றில் மிகவும் குறைவே. 1837ல் ஜேம்ஸ் ப்ரின்செப் (James Prinsep) என்ற ஆங்கிலேயர் ப்ராமி((Brahmi) எழுத்துக்களைப் பற்றிய தன் ஆராய்ச்சியின் நடுவே பியா பியதாசி (Piya Piyadassi) (கடவுளுக்கு மிகப் பிரியமானவன்) என்ற ஒரு அரசரைப் பற்றிய விவரங்கள் கிடைக்கப் பெற அதிலிருந்து அசோகரைப் பற்றிய முழு வரலாற்றுச் சித்திரம் உருவாக ஆரம்பித்தது.

மெளரிய பரம்பரையின் மூன்றாவது அரசனான அசோகன் (290 -232 B.C.)சண்டாள அசோகன் என்று அழைக்கப்படுமளவிற்கு பல கொடுமைகளைச் செய்ததாக அறியப்படுகிறார். நம்ம சிவாஜி நடித்த சாம்ராட் அசோகன் பார்த்திருப்பீர்களே, அதே போலவே கலிங்கத்துப் போரில் வெற்றி பெற்ற பின்னும் புத்த பிக்குவால் மனம் மாறி 'அன்பே மகா சக்தி' என்பதைப் புரிந்து இனி வாழ்நாளில் வாளெடுக்க மாட்டேன் என்று சூளுரைத்து, மக்கள் எல்லோரும் என் பிள்ளைகள் என்று பிரகடனப்படுத்தி சண்டாள அசோகன் என்றிருந்தவர் தர்ம அசோகர் என்றாகினார். புத்த மதத்தைப் பரப்புவதில் மிகவும் தீவிரமாக ஈடுபட்ட அசோகர் கல்வெட்டுக்களில் சமயங்கள் சார்ந்த தன் கருத்துக்களைப் பதிந்துள்ளார். அது எப்போதைக்கும் அதிலும் இந்தக் காலகட்டத்தில் நமக்கும் / எல்லா சமயத்தினருக்கும் பொருத்தமானதாக இருப்பதால் அதை உங்களுக்குத் தர விரும்பினேன். இதோ …

கடவுளுக்கு மிகப் பிடித்தமானவனான ப்யாதாசி மதிப்பது …. எல்லா சமயங்களின் அடிப்படைக் கருத்துக்களும் வளர்த்தெடுக்கப் பட வேண்டும் என்பதே.

இந்த வளர்ச்சியை பல வழிகளில் செய்ய முடியும்; ஆனாலும் அப்படி செய்யும்போது ஒவ்வொருவரும் தங்கள் பேச்சிலும் செயலிலும் மிகுந்த கட்டுப்பாடோடு இருக்க வேண்டும். தங்கள் மதத்தை மட்டும் உயர்த்திக் காண்பிப்பதும், அடுத்த மதத்தினை காரணமின்றி தாழ்த்திப் பேசுவதும் தவிர்க்கப் பட வேண்டும். விமர்சனங்கள் உண்டென்றாலும் அவைகளை மென்மையாக அந்த மதத்தினர் வருந்தாத அளவு செய்தல் வேண்டும். ஆனால் அதை விடவும் மற்ற மதங்களுக்கு மரியாதை கொடுக்க வேண்டும். இதனால் உங்கள் மதத்தின் மேல் மற்றவருக்கு மிகுந்த மரியாதை ஏற்படுகிறது. இல்லாவிடில் உங்கள் மதம் அடுத்தவர் மதம் என இரண்டுக்குமே நீங்கள் கேடு விளைவிக்கிறீர்கள்.

தங்கள் மதத்தின் மேல் உள்ள அளப்பரிய ஈடுபாட்டால் தன் மதத்தை உயர்த்திப் பிடித்து, ‘என் மதத்தை மகிமைப் படுத்த வேண்டும்’ என்ற நினைப்பில் அடுத்த மதங்களைச் சாடும்போது நீங்கள் உங்கள் மதங்களுக்கே கேடு விளைவிக்கிறீர்கள். மதங்களுக்குள் சீரான, ஆரோக்கியமான உறவு தேவை. அடுத்த மதத்தினரின் கொள்கைகளையும், கோட்பாடுகளையும் காதுகொடுத்துக் கேட்கும் மனமும், அவைகளுக்கு மனமார்ந்த மரியாதை அளிக்கும் மாண்பும் நம் ஒவ்வொருவருக்கும் வேண்டும்.

மக்கள் எல்லோரும் தங்களின் மாற்று மதங்களின் அடிப்படைக் கொள்கைகளையும், அறிவுரைகளையும் நன்கு தெரிந்து வைத்திருக்க வேண்டுமென்பதே ப்யாதாசியின் விருப்பம்.




*

*