Monday, September 30, 2013

நான் ஏன் இந்து அல்ல ...3





*
*
தொடர் பதிவுகள்:   1 ......     2 .....     3 .....  4..........  5..............  6 ...........  7..................

*


*







அத்தியாயம்  2

திருமணம், சந்தை மற்றும் சமூக உறவுகள் 

 குருமா குடும்பங்களில் திருமணம் என்பது சாதியிலிருக்கிற எல்லோர் முன்னிலையுலும் மேற்கொள்கிற ஒரு ஒப்பந்தமாகிறது. இதில் ஆணுக்குத் தருகிற விலையோ பெண்ணுக்குத் தருகிற விலையோ (வரதட்சணை) முக்கிய இடத்தை வகிப்பதில்லை.(56)

திருமணம், சாவு போன்ற சந்தர்ப்பங்களில் தான் புரோகிதர் த்லித் பகுஜன்களோடு தொடர்பு கொள்கிறார். மற்ற நேரங்களில் எந்தக் காரியத்திற்கும் வருவதில்லை.(57)

புரோகிதருக்கும் மக்களுக்கும் உள்ள தொடர்பு என்பது எள்ளளவும் ஆன்மீகம் சார்ந்தது அல்ல.(58)

புரோகிதருக்கும் மக்களுக்குமிடையே நிலவுகிற இந்த மனிதாபிமானமற்ற உறவு வெறும் பொருளாதாரச் சுரண்டலோடு நின்று விடுவதில்லை. இன்னும் ஆழமான சமுதாயப் பரிமாணங்களையும் அது கொண்டிருக்கிறது. தலித் பகுஜன மக்கள் ஆன்மா அற்றவர்களாகவும், தன்னுணர்வு அற்றவர்களாகவும், தான் நம்புகிற கடவுளுக்கு நெருக்கமற்றவர்களாகவும் வைத்திருப்பது புரோகிதர்களுடைய நலனுக்கு உகந்ததாக இருக்கிறது.(59)

தலித் பகுஜன் குடும்பங்களில் உள்ளவர்கள் செய்ய வேண்டிய வேலைகளை காலையிலேயே அவர்களின் எஜமானர்கள் தீர்மானிக்கிறார்கள். ... அவர்களது வேலை பிரார்த்தனையுடனோ அல்லது நீராடி முடித்தவுடனோ தொடங்குவதில்லை.(61)

பார்ப்பன, பனியா, சத்திரிய இந்து கடவுளிடத்தில் உணவுக்காகவும், அறிவுக்காகவும் நலத்திற்காகவும் வேண்டுகிறான். கடவுள் என்பவர் அவர்கள் கேட்கும் அனைத்தையும் கொடுக்க வல்ல பொலிகாளை போன்றவர்.  புரோகிதர் அனைத்து வேலைகளையும் கடவுளிடமே விட்டு விடுகிறார்.(62)

ஆண்கள் இல்லாத நேரத்தில் ஒரு குருமாப் பெண் ஆடு மேய்க்கிற வேலையையும் செய்கிறாள். ஆனால் ஒரு பார்ப்பனப் பெண் எப்படியிருந்தாலும் புரோகிதர் வேலையைச் செய்ய முடியாது.  ஒரு தலித் பகுஜன் பெண் தனது சாதியிலும் அதன் இயங்கு தளத்திலும் தனது அரசியல் பொருளியல் மற்றும் சமூக இருப்பை உறுதி செய்ய முடியும்.(64)

பார்ப்பன, பனியாக்களின் தத்துவம் தெய்வீகமானது. தலித் பகுஜன் தத்துவத்திற்கு எதிரானது. தலித் பகுஜன் தத்துவம் இது தான்: ‘கை வேலை செய்யாவிடில் வாய் உண்ண முடியாது’ என்பதே அது.(64)

உழைக்கும் சாதியினராகிய இந்த மக்களுக்குப் பகவத் கீதை என்ற இந்துத்துவ நூல் ஒன்று தமக்கு எதிரான கோட்பாட்டுடன் இருக்கிறது என்பதே தெரியாது. ... மக்கள் உழைக்க வேண்டுமே தவிர அதன் பயனைப் பெறக்கூடாது என்ற ஒரு கோட்பாட்டை அது நிலை நாட்டுகிறது.  ... உடல் உழைப்பு கேவலமானது; அது கூடாது என்று கூறுகிற புரோகிதக் கூட்டம் ஒரு பக்கம் தலித்துகளின் உழைப்பைச் சுரண்டிக் கொண்டு போகிறது.(65)

ஒரு பனியா என்பவர் உட்கார்ந்த நிலையிலிருக்கும் ஒரு தெய்வீக ஞானி!
... ஒரு பனியா தீவிர இந்துத்துவவாதியாக இருக்கிறான். அவன் விற்கும் பொருள்பொருள்கலீஹ் விலைகள் சாதிக்கேற்றவாறு கூடவோ குறையவோ செய்யும்,.(68)

தலித் பகுஜன் கடவுளர்களின் கதைகளில் ஒன்றில் கூட காமம் ஒரு முக்கியப் பொருளாக இருந்ததில்லை. ... ஆனால் மேல் சாதியினர் சமூகத் தளத்திலும் அன்றாட வாழ்க்கையிலும் காணக்கிடைக்காத பாலியல் கதையாடல்களைத் தெய்வீகத்தளத்தில் தேடத் தொடங்கி விடுகின்றனர்.((&))

சுருக்கமாகச் சொல்வதென்றால், தலித் பகுஜன் ஆண் பெண் உறவு இயற்கைக்கு மாறானதல்ல. எழுத்தறிவில்லாததாலும் ஆன்மீகத் தொடர்பு இல்லாததாலும் ஆண் பெண் உறவு என்பது சூழ்ச்சியற்றதாகவும், சுரண்டலற்றதாகவும் உள்ளது. ... பாலியல் உறவு உடல் தேவையாக மட்டும் இருக்கிறது. காவிய சுகமளிப்பதாக இல்லை.(71)  ... தெய்வீகத் தன்மை வாய்ந்த உறவை விட இயற்கையான உறவு உறுதியானதாக இருக்கிறது. அந்த உணர்வு தனித்துவமானது. புறச்சக்திகளுடைய உருவாக்கத்தால் வருகின்ற பயத்தோடு கூடிய உறவிலிருந்து இது வேறுபட்டது.

உலகிலேயே இந்தியாவிலுள்ள தலித் பகுஜன்கள் மட்டும் தான் மதத்தின் இறுக்கமான வரையறைக்கு அப்பாற்பட்ட சமூக வாழ்க்கை வாழ்ந்து வருகிறார்கள். உதாரணமாக அவர்களது திருமண ஒப்பந்தத்தை எடுத்துக் கொள்ளலாம். அது அடிப்படையில் மனிதர்களுக்கு இடையிலான ஒப்பந்தம். ... ஒரு மனைவி தன் கணவரைக் கடவுளாகக் கருத வேண்டியதில்லை.  தன் கணவனுக்குக் காலை மாலை பாத பூஜை செய்ய வேண்டியதில்லை. கணவனை சக மனிதனாக நடத்த அவளுக்கு உரிமை உண்டு.(72)

இந்துத்துவா தனது ஆன்மீக எல்லைக்குள் மனித சமூகத்தை ஈர்க்கக்கூடிய ம்னித உறவுகளை வளர்த்து இருந்தால் அது உலக மதமாக புத்த மார்க்கத்துக்கும், இஸ்லாமிய கிறித்துவ மதங்களுக்கும் முன்பாகவே மாறியிருக்கும்.

இந்துத்துவா பார்ப்பன பனியா சத்திரியர்களுக்கான தனிநபர் சொத்தாக மாற்றியது. மற்ற சூத்திர சாதிகள் - கம்மா, ரெட்டிகள், வேலமா (ஆந்திரா); மராத்தா, பட்டேல், ஜாட், ராஜ்புத் பூமிகார் (வட இந்தியா); முதலியோர் மெல்ல மெல்ல புதிய சத்திரியர்களாக மாறி இந்துத்துவத்துக்குள் நுழைந்து கொண்டிருக்கிறார்கள்.(73)








*






 

Thursday, September 26, 2013

684. நான் ஏன் இந்து அல்ல ...2






*
*
தொடர் பதிவுகள்:   1 ......     2 .....     3 .....  4..........  5..............  6 ...........  7..................

*





*


 அத்தியாயம்  1

இளமைப் பருவ உருவாக்கங்கள்
 

நான் இந்துவாகப் பிறக்கவில்லை.
அதற்கான எளிய காரணம், தாம் இந்துக்கள் என்பது எமது பெற்றோருக்குத் தெரியாததே.(33)

உண்மையில் அந்தக் கிராமத்தில் கிராம மக்கள் அனைவரும் கூடி வணங்குகிற ஆலயம் எதுவும் இல்லை.(33)

இளம் வயதில் வேறு சாதி நண்பர்களோடு விளையாடுவதுண்டு. பெற்றோர் சொல்லிக் கொடுத்த சில வேறுபாடுகளையும் நாங்கள் உணர்ந்ததுண்டு. எங்கள் விளையாட்டு நேரங்களில் இந்த வேறுபாடுகள் காணாமல் போய்விடும்.(34)

இளம் வயதிலேயே எங்கள் சாதிக்குரிய தொழில் பற்றியும், அதன் மொழி பற்றியும் தெரிந்து கொண்டோம்.

தகப்பனை விட தாயே குழந்தைகளிடம் அதிகமான தொடர்புடையவளாக இருக்கிறாள்.எல்லா அம்சங்களையும் குழந்தைகளுடன் பேசுவது ஒன்றும் இங்கு வழக்கத்திற்கு முரணானது அல்ல.

மேல் உலக உணர்வு, தெய்வீகத் தனமை, ஆன்மீகம் ஆகியவை எங்களை இந்துக்களிடமிருந்து மேலும் பிரித்தது.

நாங்கள் பள்ளிக்குச் செல்லுகிற வரையில் எங்களுக்கு பிரம்மா, விஷ்ணு, ஈஸ்வரன் ஆகியவை பற்றி எதுவுமே தெரியாது(40)

பார்ப்பன, பனியா, சத்திரியக் குழந்தைகள் பேசும் மொழி மற்றும் அவர்களுடைய சமூக உறவுகள், தொடர்புகள் எல்லாம் இந்துக் கலாச்சாரத்தின் ஒரு பகுதியாகவே கருதப்படுகின்றன.

எமது கிராமங்களில் கணவனை இழந்த பல விதவைகள் மரியாதைக்கு உரியவர்களாக இருக்கின்றனர். விதவைகள் தலித்  பகுஜன் சமூகத்தில் புறக்கணிக்கப்படுவதில்லை.(41)

ஒரு இந்துக் குடும்பம் என்பது படிநிலையான ஏற்றத் தாழ்வைக் கொண்டது. பெண்கள் ஆண்களுக்குக் கீழ்ப்படியவேண்டும்.  ... பார்ப்பனக் குழந்தைகள் சூத்திரத் தொழில் என்று கூறும் உற்பத்தி தொடர்பான வேலைகளில் ஈடுபடாதிருக்க வேண்டுமெனக் கற்பிக்கப்படுகின்றார்கள்.  ...தலித் பகுஜன்களை வெறுப்பது அவர்கள் உணர்வில் ஒரு அம்சமாகி விடுகிறது.(42)

ஆண் பெண் பாலியல் உறவு பற்றி விவாதிப்பது இந்துக் குடும்பங்களில் தடை செய்யப்படுகிறது.(42)

இளமையிலிருந்தே பணிவாக இருப்பது போல் நடிப்பது பிற்காலத்தில் வாழ்வின் ஒரு அம்சமாகவே மாறி விடுகிறது. காந்தி ஏழையாக நடித்தது போல் இவர்கள் பயப்படுவதாக நடிக்கிறார்கள்.(44)

ஒவ்வொரு நாளும் அன்றாட உணவுக்குச் சம்பாதிப்பதே அவர்களுக்குப் போராட்டமாக உள்ளது. அவர்களுக்கு உணவு கிடைக்கும் நாள் சொர்க்கமாகவும், உணவு கிடைக்காத நாள் நரகமாகவும் உள்ளன.(45)

எங்கள் பள்ளி ஆசிரியர்களும் எங்கள் ஒவ்வொருவரையும் சாதியை அடிப்படையாகக் கொண்டே அணுகினர்.(46)

நாங்கள் உயர் வகுப்புகளுக்குச் சென்ற போது பாடப்புத்தகங்களில் போதிக்கப்பட்ட கதைகளில் ஒன்று கூட எங்கள் வீடுகளில் நாங்கள் கேள்வியுறாதவைகளே. ... பார்ப்பன பனியாக் குழந்தைகளின் நிலைமை வேறு. பாடப்புத்தகத்தில் இடம் பெற்ற மொழி பார்ப்பனத் தெலுங்கு.எங்கள் இரு மொழிகளுக்கும் பெருத்த வேறுபாடுகள் உண்டு.(47)

புரோகிதர்கள் புராணங்களைப் புகழ்ந்து எழுதினார்கள். கம்யூனிஸ்ட் மற்றும் பகுத்தறிவாளர்களோ இந்தப் புராணங்கள் பற்றித் திறனாய்வு செய்தார்கள். ஆனால் எங்களுக்கும் இதயம் இருக்கிறது என்பதையும், அந்த இதயம் தன்னைப் பற்றிப்  பேச வேண்டும் என்று நினைக்கிறது என்பதையும் யாரும் எண்ணிப் பார்க்கவில்லை. நல்லதற்கோ, கெட்டதற்கோ யாரும் எங்களைப் பற்றி எதுவும் பேசவில்லை. ... கம்யூனிஸ்ட்டுகளும் பகுத்தறிவாளர்களும் கூட புரோகித மொழியிலேயே பேசியும் எழுதியும் வந்தார்கள். அவர்களுடைய கலாச்சாரம் அடிப்படையிலேயே சமஸ்கிருத மயமாக்கப்பட்டது.(49)

எங்கள் வீடுகளில் ஒரு பண்பாடும் பள்ளிகளில் வேறொரு பண்பாடும் இந்ததன. எங்களுடைய பண்பாடு தலித் பண்பாடு. பள்ளியிலிருந்த பண்பாடோ இந்துப் பண்பாடு.(49)

உபநயனத்திற்குப் பிறகு பூ நூல் அவர்கள் உடலில் தொங்குகிறது. அது முதல் அவர்கள் இரு பிறப்பாளர்கள். .. நாங்களும் சிறு வயதில் பூ நூல் அணிய விரும்பினோம்.(50)

எங்கள் குடும்பங்களில் மாமியார் கொடுமையால் அவதியுற்ற பெண்கள் மிகச் சுலபமாக மணவிலக்கு பெற முடிந்தது.  ஒரு சில நாட்களில் அவர்களுக்கு இரண்டாவது திருமணம் ஒரு சிறப்பான விருந்தோடும், பானத்தோடும் கொண்டாடப்படும்.  ... பொறுப்பற்ற கணவனிடமிருந்து ஒரு பெண் மணவிலக்கு கோருவது அங்கீகரிக்கப்பட்ட சமூக வழக்கமாகும். சாவித்திரி கதையை வாசித்திருக்கிறேன். சாவித்திரி தன் கணவன் இறந்ததை எதிர்த்து எம தர்மராஜனுடன் போராடுகிறாள். ஏனெனில் கணவன் இறந்து விட்டால் தாம் விதவையாகி விட நேருமே என்று தான். எமது பெண்கள் சாவித்திரி போல போராட வேண்டியதில்லையே என்று நினைத்து நான் மகிழ்ச்சியடைந்தேன்.(51)

சதி எனப்படும் உடன் கட்டையேறுதல் பற்றிக் கதை கதையாகச் சொல்லும் சரித்திரப் பாடங்களையும் தெலுங்குப் பாடங்களையும் சதியில் மாய்ந்த பெண்கள் பற்றியும் படிக்கிறோம். ஆனால் கணவன் இறந்த பிறகும் உயிருடன் இருந்து தனியாகப் பாடுபட்டு உழைத்து தமது குழந்தைகளை வளர்த்து பெரியவர்களாக்கி அவர்களுக்குத் திருமணம் செய்து வைத்த எங்கள் பெண்கள் பற்றி வரலாற்றில் இலக்கியத்தில் ஏதாவது ஒரு பாடம் உண்டா?

பார்ப்பன வீடுகளிலும், குடும்பங்களிலும் புகழப்படும் வீரர்கள், வீராங்கனைகள் எவரும் மனித சமுதாயத்தில் வாழ்ந்தவர்கள் அல்ல.(52)

சூத்திர சமூகத்தில் முற்றிலும் இது மாறுபட்டுள்ளது. இலட்சியக் கதாநாயகர்கள் தோன்றக்கூடிய எதார்த்த வாழ்க்கைச் சூழல்கள் பல இங்கு உண்டு.(53)

தலித் பகுஜன் பெண்கள் ஆண்களோடு சேர்ந்து கள்ளோ, அல்லது வேறு வகையான மதுவோ அருந்துகிறார்கள். வீட்டிலும் வயல்களிலும் சுருட்டு புகைக்கிறார்கள். தலித் பகுஜன் பெண்கள் குறைந்த பட்சம் கருத்தளவிலாவது ஆண்களுக்குச் சமமானவர்கள் என்று தம்மைக் கருதுகிறார்கள்.

எல்லோரும் இந்துக்கள் என்ற்யு சொல்கிறவர்கள் இவற்றில் எந்தப் பண்பாடு இந்துப் பண்பாடு என்று கூற வேண்டும். எந்த மதீப்பீடுகளை, எந்த ஒழுக்கங்களை அவர்கள் சரியானதென்று தூக்கிப் பிடிக்க விரும்புகிறார்கள்? மேல்சாதி இந்துக்களுடைய சமத்துவமற்ற, மனிதத் தன்மையற்ற கலாச்சார மதீப்பீடா? அல்லது நம்முடைய கலாச்சார மதீப்பீடா?(54)

பார்ப்பன பனியாக்கள் உற்பத்தி சாராத, சடங்கு சார்ந்த வாழ்க்கையையே உயர்ந்த வாழ்க்கை என்றும், மிகப் பெரும்பாலான தலித் பகுஜன்களின் சடங்குகளற்ற உழைப்பு சார்ந்த வாழ்க்கையைக் கீழ்த் தரமானதென்றும் கருதுகிறார்கள்.(54)

பார்ப்பன பனியாக்கள் நம்முடைய கலாச்சாரத்தைக் கொன்று அதன் பிணங்களின் மீது நடந்து சென்றார்கள். மற்றவர்களுடைய நன்மைக்காக எல்லாவற்றையும் உற்பத்தி செய்த நம்முடைய பெற்றோர்கள் பட்டினி கிடக்கும்போது பார்ப்பன பனியாக்கள் உண்டு கொழுத்தார்கள்.  நம்முடைய குழந்தைகள் தேசியப் பொருளாதாரத்திற்கு வலுவூட்டிக் கொண்டிருந்த போது அவர்களுடைய பிள்ளைகள் வெறும் சாப்பாட்டு மன்னர்களாக இருந்தார்கள்.(55)



*

பி.கு.
காஞ்சாவை எதிர்த்து ஷாஸ்த்ரி ஒருவர்  எழுதிய கட்டுரையை முன்பு என் பதிவில் நண்பர் ஒருவர் அனுப்பி, அவ்ர் காஞ்சாவை ‘துவைத்துக் காயப்போட்டு விட்டார்’ என்று அனுப்பியிருந்தார். அக்கட்டுரையை நான் ‘தோலுரித்ததாக’ ஒரு பதில் போட்டேன். அதனைப் பார்க்க வேண்டுவோர் இந்தப் பதிவில் உள்ள பின்னூட்டத்தில் அதைக் காணலாம்.

*





Tuesday, September 24, 2013

683. நான் ஏன் இந்து அல்ல ...1






*
*
தொடர் பதிவுகள்:   1 ......     2 .....     3 .....  4..........  5..............  6 ...........  7..................

*

காஞ்சா அய்லய்யா 


*

முனைவர்  காஞ்சா அய்லய்யா உஸ்மானியா பல்கலைக் கழகத்தில் அரசியல் அறிவியல் கற்பிக்கும் பேராசிரியர். ’தலித் பகுஜன்’ என்ற சொல்லைப் பயன்படுத்தி தலித் - மற்றும் பெரும்பான்மை மக்களுக்கும் இந்து மதத்திற்கும் உள்ள தொடர்பையோ, தொடர்பின்மையையோ இந்த நூலில் விளக்குகிறார். ‘இந்தியாவை இந்து மயமாக்குவோம்’ என்ற ஒரு புது முழக்கத்தோடு கடந்த சில ஆண்டுகளாக நம் நாட்டில் நடக்கும் முயற்சிக்களுக்கு எதிராக அறிவுத் தளத்தில் மேற்கொள்ளப்படும் முயற்சியே இந்த நூல்.

மதங்களை மறுப்பவன் என்ற முறையில் இந்த நூல் எனக்கு அதிகம் பயனளிப்பதில்லை. ஆயினும் மதங்கள் எப்படி ஒர் சமூகத்தை அடிமைப்படுத்தி, அதனை பல வடிவங்களில் காலப்போக்கில் மாற்றுகின்றன என்ற உண்மையை காஞ்சா இந்நூலில் கூறியதால் இந்து மதத்திற்கே எதிராக இக்கருத்துகள் எனக்குப் பயன்படும் என்பதால் இந்த நூலில் உள்ள முக்கிய கருத்துக்களை இங்கே கொடுக்க விரும்புகிறேன்.

இந்நூலுக்கு அ. மார்க்ஸ் அறிமுகம் அளித்துள்ளார். அவரது பல கருத்துக்கள் தமிழ்ச்சமுதாயத்தோடு ஒட்டியிருப்பதால் அதிலிருந்தும் சில பகுதிகளைத் தொகுத்துள்ளேன்.

**************************


அறிமுகம் - அ. மார்க்ஸ்

ரஸ்ஸல் தன்னைக் கிறிஸ்துவன் அல்ல என அறிவித்துக் கொண்டார். அய்லய்யாவோ தனது பிறப்பே இந்து மதத்திற்குள் நிகழவில்லை என்கிறார்.(9)

’பகுஜன்’ என்னும் அடையாளம் எண்பதுகளின் மத்தியில் கன்ஷிராம் அவர்களால் முன்னிறுத்தப்பட்டது. சூத்திர சாதியினரையும்,  பல்வேறு தலித் சாதியினரையும்’தலித் பகுஜன்கள்’ என அழைக்கின்றார் அல்லய்யா.(11)

இந்துக் கடவுளின் ஆயுதந்தாங்கிய வன்முறையின் தோற்றத்தை வெகுமக்கள் வழிபடும் சிறு தெய்வங்களோடு ஒப்பிடும் அல்லய்யா இந்துக் கடவுளர் கையில் ஏந்திய விற்களும், சக்கரங்களும் வெகு ஜனங்களை ஒடுக்கி அவர்களை இந்து மதப்படுத்தும் நோக்கிற்காகத்தான் என விளக்குகிறார். அவதாரக் கதைகளெல்லாம் அப்படிதான். வாமன அவதாரம் வெகுமக்கள் தலைவனகிய பாலி மன்னனை (மகாபலி)க் கொன்றொழிப்பதற்காக மேற்கொள்ளப்பட்டது. இராமயணக் கதையே தென்னிந்தியரைப் பார்ப்பனமயமாக்கிய கதைதான். (12)

தலித் பகுஜன்கள் மத்தியில் தனிச்சொத்து என்கிற கண்ணோட்டமே இல்லை என்பது அல்லய்யாவின் முன்வைக்கும் கருத்து. .... தமிழகத்தில் வசித்து வந்த ஆதிப் பழங்குடி மக்களிடையே இருந்த இந்தப் பொதுமைப் பண்பை அழித்த திருப்பணியைச் செய்து முடித்தது பார்ப்பனீயம். ... அம்மக்களின் நிலங்களைத் தனிச்சொத்துகளாக்கிப் பார்ப்பன, வேளாளக் குடும்பங்களுக்கோ கோயில்களுக்கோ தாரை வார்த்தது தான். பார்ப்பனர்களுக்கு இவ்வாறு வழங்கப்பட்ட நிலத்தைப் ’பிரம்மதேயம்’ அல்லது ‘சதுர்வேதி மங்கலம்; என்பர். தம் நிலங்களில் தங்கி உழைத்து அதன் விளை பொருடளில் பெரும் பகுதியை இத்தகைய ப்பர்ர்பன வேளாள உரிமையாளர்களுக்கு மேல்வாரமாக அளித்து, எஞ்சிய கொஞ்ச நஞ்சத்தைக் கீழ்வாரமாக அனுபவித்து, வறுமையில் உழல வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு உள்ளாயினர் இந்த மண்ணின் மைந்தர்கள்.(13)

தமிழக வரலாற்றின் மிக முக்கியமான ஆவணங்களில் ஒன்றாகிய 
வேள்விக்குடிச் செப்பேடும் (கி.பி.6-ம் நூ.) இதனைத் தெளிவாகச் சொல்கிறது. 

செப்பேட்டில் வரும் கதை: நெடுஞ்சடையன் என்ற பாண்டிய மன்னனிடம் கொற்கைக் கிழான் நற்சிங்கன் என்ற பார்ப்பனன் தன் முன்னோரு ஒருவர் செய்த யாகத்திற்காகக் கிடைத்த வேள்விக்குடி என்ற ஊரை அதன் பின் வந்த களப்பிரர் ஆட்சிக்காலத்தில் இழந்து விட்டதாகவும், அதனைத் திருப்பித் தரவேண்டுமென்ற வேண்டுகோளோடு வந்தான். பாண்டிய மன்னனும் வேள்விக்குடியைத் திரும்பத் தந்து விடுகிறான். 

இச்செப்பேட்டில் நான் காணவேண்டியவைகள் இவை:
பாண்டிய மன்னனின் வம்சப் பெருமையாக -- பரவரைப் பாழ்படுத்தியது; குறுநாட்டவர் குலங் கெடுத்தது; செந்நிலங்களைச் செறு வென்றது; துலாபாரம், இரண்ய கர்ப்பம் முதலான இந்து யாகங்களைச் செய்தது; பார்ப்பனருக்கு ஈந்தளித்தது; மகீதலம் பொது நீக்கி அரசாண்டது; பரவர், குறுநாட்டவர் முதலான பழங்குடி மக்களைப் பாழ்படுத்திக் குலங்கெடுத்து அவர்களது செந்நிலங்களைக் கைப்பற்றி, யாகம் செய்த பார்ப்பனர்களுக்கு ஈந்தளித்தது .... (14)
இவ்வாறு பொதுத்த்தன்மை அழிக்கப்பட்டு தனிவுடைமையை தமிழ்நாட்டு மன்னர்கள் நிலைநாட்டியது; முன்பு தாரை வார்க்கப்பட்ட நிலங்கள் களப்பிரர் காலத்தில் மீண்டும் கைப்பற்றப்பட்டுள்ளன. 

களப்பிரர் காலத்தை, சோழர் காலம் குறித்து ஆய்வுகள் நடத்திய வரலாற்றாசிரியர் பர்ட்டன் ஸ்டெய்ன் மீண்டும் பழங்குடியினர் மேலெழுந்து ஆட்சியைக் கைப்பற்றிய காலம் என்று கூறுகிறார். இதனை இன்றுவரை பார்ப்பன வேளாள வரலாற்றாசிரியர்கள் இருண்ட காலம் எனத் தூற்றி வந்துள்ளனர்.(15)

காலனிய ஆட்சியை எதிர்த்த இந்து மேல்சாதியினர் இரட்டை நிலையை எடுத்தனர்; ஒரு பக்கம் நவீன நிறுவனங்களைத் தங்களின் நலனுக்குப் பயன்படுத்திக் கொள்ளுதல். இன்னொரு பக்கம் காலனியத்திற்கு எதிராக இந்துத்துவத்தைக் காப்பது என்கிற நிலை எடுத்து, நவீனத்துவத்தின் இன்றியமையாத கூறாகிய மதநீக்கம், பகுத்தறிவாக்கம் என்பவற்றைத் தடுத்து நிறுத்தினர்..(16)

காலனியத்திற்குப் பிந்திய நிறுவனங்களெல்லாம் மதக் கறைபடிந்து போயுள்ளன எனச் சொல்லும்  அல்லய்யா பள்ளிக்கூடமும் கல்வியும் எப்படி இந்துத் தன்மையாக உள்ளதென்பதையும், வெகுமக்களின் குழந்தைகள் எவ்வாறு இதிலிருந்து அன்னியப்பட வேண்டியதுள்ளது என்பதையும் விரிவாக விளக்குகிறார்.... சாதியப் பயிற்சியே இங்கு அளிக்கப்படுகிறது. சாதி மொழியே இதற்குக் கையாளப்படுகிறது என்கிறார் அல்லய்யா.(17)

பாடநூற்களில் எங்காவது விளிம்பு நிலை மனிதர்களின் பண்பாடுகள் பேசப்பட்டதுண்டா?  ... ஏன் எங்களுக்குக் கதையாடல்கள் கிடையாதா? பெருங்கதையாடல்களுக்கு மட்டும்தான்  உங்கள் பாட நூற்களில் இடமுண்டா? அல்லய்யாவின் இந்தக் கேள்விகள் தமிழ்ச்சூழலுக்கு அப்படியே பொருந்தும் என்பதில் அய்யமில்லை. (18)

தரப்படுத்துதல் என்கிற பெயரில் மய்யங்களில் வீற்றிருந்து ஆட்சி செலுத்தக் கூடியவர்கள் தமது பண்பாட்டுக் கூறுகளை விளிம்பு நிலையினர் மீது திணிக்கும் ஆபத்தையும் அய்லய்யா சுட்டிக் காட்டுகிறார். ‘பிராமண போஜன ஓட்டல்கள்’ என்கிற பெயரில் பார்ப்பன உணவையும், சுவையையும் பொதுமைப்படுத்த மேற்கொள்ளப்பட்ட முயற்சியை அவர் அடையாளம் காட்டுகிறார். சுவை, விருப்பு ஆகிய தளங்களிலும் வெகுமக்களைக் கட்டுப்படுத்த நினைக்கும் ஒரு அரசியல் முயற்சியாக நாம் இதனை அணுக வேண்டி இருக்கிறது.(19)

இந்து மயப்பாட்டிற்கு எதிராக தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், பிறப்டுத்தப்பட்டோர், சிறு பான்மையினர் ஆகியோரின் அய்க்கிய முன்னணி மட்டுமே நமது ஒரே நம்பிக்கையாக உள்ளது என்று முடிக்கிறார் அய்லய்யா. 



ஏனிந்த நூல் - அய்லய்யா

திடீரென்று தொண்ணூறுகளில் இந்தியாவில் இருக்கிற முஸ்லீம்கள், கிறித்தவர்கள், சீக்கியர்கள் அல்லாத எல்லோரும் இந்துக்கள் என்ற பொருளில் இந்துத்வா என்ற வார்த்தை நமது காதுகளில் ஒலித்தது.
உண்மையில் இவர்கள் முன் வைக்கிற இந்தக் குங்குமப் பொட்டுக் கலாச்சாரத்தின் தோற்றமே எங்களை அலைக்கழிப்பதாய் உள்ளது. (23)

இந்திய தலித் பகுஜன்கள் அத்தனை பேரும் இளமையிலிருந்தே கலாச்சாரத்தின் பெயராலோ ஒரு மதம் என்கிற அடிப்படையிலோ இந்து என்ற வார்த்தையைக் கேள்விப்பட்டதேயில்லை. முஸ்லீம்கள், கிறித்துவர்கள், பார்ப்பனர்கள், பனியாக்கள் இவர்களிலிருந்து நாங்கள் வேறுபட்டவர்கள் என்று சொல்ல மட்டும் கேட்டிருக்கிறோம். இந்த நான்கு வகைகளில் பார்ப்பானும், பனியாவுமே முற்றிலும் வேறுபாடானவர்கள்.

தலித் பகுஜன்கள் முற்றிலுமாக இந்துக் கலாச்சாரத்திலிருந்து விலக்கப்பட்டுள்ளனர் .(25)

                                                                                        ....... தொடரும்
=============================================================


என் வார்த்தைகள் சில: 

என் 680-வது பதிவில் கூறிய சில விஷயங்கள்: 

//  பிராமணத் தமிழ் அன்றும் இன்றும் ஊடகங்களில் ஓங்கி ஒலிக்கிறது. வரும் விளம்பரங்களில் அறுபது எழுபது விழுக்காட்டில் பிராமணத் தமிழ் ஒலிக்கிறது. காரணம் புரியவில்லை. இதெல்லாம் விளம்பரப் படம் எடுப்பவர்கள் செய்யும் கோமாளித் தனமா?  இல்லை விளம்பரதாரர்களின் ‘புத்திசாலித்தனமா’? இந்த மொழியைப் பயன்படுத்துவதால் எதிர்ப்புகள் ஏதும் இருக்காது என்று விளம்பரதாரர்கள் ஏன் நினைப்பதில்லை?//

காரணம் புரியவில்லை - என்று கூறியுள்ளேன். ஆனால் இப்பதிவில் இறுதியாக சிகப்பு வண்ணத்தில் வரும் பத்திகள் இதைப் பற்றியே பேசுகின்றன. இது வெளியே பேசப்படாத ஒரு அரசியலாக இருந்து வருகிறது. இது ஒரு மெளனமான சாதி ஆக்கிரமிப்பு அரசியலோ?
சுவை, விருப்பு ஆகிய தளங்களிலும் வெகுமக்களைக் கட்டுப்படுத்த நினைக்கும் ஒரு அரசியல் முயற்சியாக நாம் இதனை அணுக வேண்டி இருக்கிறது. இதுதான் அந்தக் காரணமா...?


நம் தொலைக்காட்சிகளில் சில நிகழ்வுகள்:

சமையல் போட்டி ... கறியும், கோழியும் கருவாடும் கூட சமைக்க வேண்டுமாம். ஆனால் மூன்று ஜட்ஜ்களில் இருவர் அதைத் தொடவும் மாட்டார்களாம்.

பாட்டுப் போட்டி ... சிறுவயதிலிருந்தே சில மக்கள் கர்நாடக சங்கீதம் கற்பார்கள்; ஆனால் நீங்கள் எப்படி இஸ்லாமியராக இருந்தும் நன்றாகப் பாடுகிறீர்கள் என்று ரிஸ்வானைப் பார்த்து ஒரு கேள்வியை நடத்துனர் க.கா.பா.கேட்டார். ரொம்ப நியாயமான கேள்விதான்!

பாட்டுப் போட்டி ... தெய்வீகப்பாடல்கள் என்று ஒரு பிரிவு; பாவம் .. இதில் அல்கேட்ஸ், ரிஸ்வான், ரமேஷ் போன்ற முறையான சங்கீதம் - அது என்ன முறையான சங்கீதம என்றாலே கர்நாடக இசைதானா என்பதும் ஒரு கேள்வி - கற்காத இவர்களைத் தோல்வி தருவதற்கே இப்போட்டிகளோ? சூப்பர் சிங்கர் தானே... சூப்பர் கர்நாடக சிங்கரா இது?
யார் கேள்வி கேட்பது இவைகளை?

பாட்டுப் போட்டி ... பாட்டு பாடவே பிறவி எடுத்த குழந்தைகள் பாட வருதுகள். அதோடு வேறு சில அபிஷ்டுகளும் போட்டிக்கு வந்திட்டாங்க. நடுவர்களிலும் ‘எல்லோரும்’ இருக்கலாமே? 
எங்கள் கல்லூரி போட்டிகளில் எங்கள் மாணவர்கள் இருந்தால் நாங்கள் நீதிபதிகளாக இருப்பதில்லை என்பது போல் இங்கும் ‘பொதுவான’ நடுவர்கள் இருக்கலாமே! அல்லது இசை தெரிந்த ‘பொதுவானவர்கள்’  என்று யாருமேயில்லையோ?

பிராமணர் அல்லாதவர் பலர் பரிசுகளைப் பாட்டுப் போட்டியில் வாங்கினார்கள். என்றாலும் ... 
இதெல்லாமே நான் சொன்ன மெளனமான சாதி ஆக்கிரமிப்பு அரசியலோ?
இதையெல்லாம் கண்டுகொள்ள வேண்டுமா ... கூடாதா?

எனக்குத் தெரியவில்லை; சொல்லிக் கொடுங்கள்.

மேலே எழுதியவைகளை எழுத மனம் சிறிது கூசியது. casteist என்ற  பழி வந்து சேருமே என்றும் தோன்றுகிறது. ஆனாலும் ...I want to call a spade a spade ! Just belling the cat !!

============================


















Monday, September 23, 2013

467. என் குட்டையைக் குழப்பியவர்கள் ... 1

*

"You are a deadly perfectionist".
"இல்ல'ண்ணே!"
"ஏம்'பா இல்லன்னு சொல்றே?"
"என்னைப் பொருத்தவரை perfectionist அப்டின்னா, அவர் ராத்திரி சரியா 12 மணிக்கு எழுந்திருச்சி.. டெய்லி கேலண்டரிலிருந்து அன்றைய தேதியைக் கிழிக்கணும்'ணே! நான் அந்த அளவு perfectionist இல்லை".
"அடப் பாவி! அப்படியும் ஒண்ணு இருக்கா?"


* * * * * * * *

(casabianca  கதை உங்களுக்குத் தெரிந்திருக்கும்.)


Casabianca கதைல வர்ர பையன் மாதிரி மடையனாக இருக்கக்கூடாது.
என்ன கதைண்ணே அது?
கதை சொன்னேன்.
ஏ'ண்ணே, அந்த பையன் செஞ்சதுதான் சரி'ண்ணே.
இல்லப்பா ... பையனோட அப்பா கூட அந்தக் களேபரத்தில் தப்பியிருக்கலாம். இப்படி நெருப்பு எரியும்போது தப்பிக்க வேண்டாமா?
இல்லண்ணே .. அப்பா சொன்னதை அப்படியே கடைப்பிடிக்கிறதுதான் சரி.
இல்லப்பா ..  புத்திசாலித்தனம் அப்டின்னு ஒண்ணு இருக்கு. அதையும் நாம பயன்படுத்தணும். அப்பா சொல்லிட்டார் என்பதற்காக அப்படியே 'ஒழுகக் கூடாது'. கண்மூடித்தனமா இருக்கக் கூடாதுல்ல ..
இல்லண்ணே  ... என் மகன் அந்தப் பையன் மாதிரி தாண்ணே இருக்கணும்.
பாவம் உன் மகன்.

*****************************

இன்னைக்கி காலேஜ் வர்ர வழியில ஒரு சண்டை.
ஏண்ணே?
ரெண்டு பேரு ரோட்டை மறிச்சி நின்னுக்கிட்டு கதையடிச்சிக்கிட்டு இருந்தாங்க. ஓரமா நிக்கக் கூடாதான்னு கேட்டேன். பேச்சு வளர்ந்திருச்சி.
அதெல்லாம் நமக்கு எதுக்குண்ணே?
ஏம்'பா .. civic sense அப்டின்னு ஒண்ணு இருக்குல்ல?
அதெல்லாம் பார்க்க முடியாதுண்ணே.
அப்போ நீ இந்த மாதிரி விஷயங்களைக் கண்டுக்க மாட்டியா?
இல்லேண்ணே.. பேசாம ஒதுங்கி வந்திருவேன்.
கண்டுக்க மாட்டியா?
எதுக்குண்ணே ..? அவனுக யாரோ என்னவோ ... நம்ம வழியைப் பார்த்து நாம ஒதுங்கி வந்திரணும்ணே ...
இதையெல்லாம் பார்த்தா உனக்குக் கோபம் வராதா?
வந்தா என்ன லாபம்? BP மட்டும்தான் ஏறும்! 
செல் போன் பேசிக்கிட்டு வண்டி ஓட்டுறவங்களைக் கண்டாலே எனக்குக்   கோபமா வருதே ..
தப்பு'ண்ணே. அவன் போன் .. அவன் பேசிக்கிட்டு போறான். உங்களுக்கு ஏன் கோபம் வருது?
உன்னிட்ட இருந்து நிறைய படிக்கணுமோ!?

----------------------------------
நம்ம காலேஜ்ல இத்தனைப் பிரச்சனை. இதில நியாயத்தின் பக்கம்தானே நாம நிக்கணும்.
நம்ம philosophy வேற'ண்ணே.
என்னப்பா அது?
அண்ணே! ஒண்ணு, எதுலயும் நாம முதல் ஆளா இருக்கணும்; இல்லாட்டி முதல் ஆளோடு நின்னுடணும்.
இது சரியில்லை'ப்பா.
அப்பதான்  வாழ்க்கையை நல்லா வாழ முடியும்.
நியாயத்துக்குப் பக்கம் நிக்கிறது ...?
நமக்கு வாழ்க்கை சுகமா நடக்கணும். அதுக்கு இதுதான் வழி'ண்ணே.
இல்லையே ..உன்ன மாதிரி ஆளுகளுக்கு TIME SERVER அப்டின்னு பேரு. யாருக்கும் - தனக்கும் கூட - அவங்களால் உண்மையா இருக்க முடியாது.
ஆனா, இதுலதான் நம்ம பொழைப்பு நல்லா நடக்கும்'ண்ணே ...?

--------------------------


Sunday, September 22, 2013

682. என்று வரும் மதங்களைத் தாண்டும் அந்தச் சமூகம்?



 *
இன்றைய இந்துவில் வந்த ஒரு கட்டுரையின் தமிழாக்கம். பிடித்த கருத்தாக இருந்தது. சிறிது தமிழ்ப்படுத்தி சில பகுதிகளைக் கொடுத்துள்ளேன்.


*


 http://www.thehindu.com/opinion/open-page/lets-aim-for-a-posttheistic-society/article5154603.ece  


Let’s aim for a post-theistic society 

மேலெழுந்தவாரியாகப் பார்த்தாலே மனித வரலாற்றில் மதங்களுக்காக நடந்த போர்களே அதிகம்.

மதங்களின் பிறப்பு இனம் தெரியாத அச்சத்தில் எழுந்தது. ஆனால் இன்றைய அறிவியல், இயற்கை மீது மனிதனுக்கு இருந்த பல அச்சங்களைப் போக்கி விட்டன. அந்த அச்சங்கள் இன்று பொருளற்றுப் போய்விட்டன.

வாழ்வில் நம்முடைய ஒழுக்கங்கள் மதங்களிலிருந்து பிறக்கவில்லை; ஆனால் நம்முள் குடியிருக்கும் மனித நேயத்திலிருந்தும், அடுத்தவரின் துயரைக் கண்டு துன்புறும் நமது மனத்திலிருந்தும் தான் பிறக்கின்றன. இந்த நேய உணர்வு எல்லா உயிரினங்களுக்கும் பொதுவல்ல.

 ’மதங்கள் என்பவை மனிதத்தின் உயர்நிலைக்கு எதிரானவை’ என்கிறார் நோபல் பரிசு பெற்ற ஸ்டீவன் வெய்ன்பெர்க்.

இயற்பியல் நோபல் பரிசை வெய்ன்பெர்க்கோடு இணைந்து பெற்றவர் பாகிஸ்தானின் அப்துஸ் சலாம் என்பவர். இவர் மத்திய கீழ்த்திசை நாடுகளில் கல்வியை மேம்படுத்த முயன்றார். ஆனால் அந்நாட்டுத் தலைவர்கள் இவருக்கு எவ்வித உதவியும் செய்யவில்லை. ஏனெனில் அறிவியல் மத நம்பிக்கைகளைக் குலைத்துவிடும் என்று அவர்கள் நம்பினார்கள்.

மதங்களைத் தாங்கிப் பிடிப்போர் உலகில் நாம் காணும் துன்பங்களும் துயரங்களும் கடவுள் தனக்குப் பிடித்தோரின் நம்பிக்கையைச் சோதிக்கவே செய்கிறார் என்று சொல்வதுண்டு. கான்சரில் அவதியுறும் ஒரு சின்னக் குழந்தையின் பெற்றோரிடம் இதை அவர்கள் சொல்லிப் பார்க்க வேண்டும். கடவுளுக்கு இப்படிப்பட்ட துன்பம் தரும் பெரும் சக்தியிருந்தால் அந்தக் கடவுள் மிக மிகக் கொடூரமானது.

ஐன்ஸ்டீன் கடவுள் நம்பிக்கை என்பது முட்டாள்தனமான மூடநம்பிக்கை என்றார்.

தத்துவ மேதை காலின் மேக்கின் கடவுள் நம்பிக்கையற்றவர்களை மூன்று வகையான நாத்திகர்கள் என்று வரையறுக்கிறார்.
atheists – தங்கள் கருத்துகளை மற்றவர்கள் ஒத்துக் கொள்கிறார்களா என்றெல்லாம் கவலைப் படாதவர்கள்;
anti-theists – மதங்களை அதன் தீமைகளுக்காக வெறுத்து, அவைகளை எதிர்ப்பவர்கள்.
ஆனால் எதிர்காலம் POST-THEISTIC மக்களால் நிரப்ப்ப்படும். இவர்களுக்கு மதங்களே ஒரு பொருட்டல்ல.

 உலகத்தை அறிவால வெல்ல வேண்டும். அதைத் தவிர்த்து அடிமைத் தனமாக அச்சத்தினால் கட்டுப்பட்டுக் கிடப்பது தவறு.

கடவுள் என்ற கருத்தாக்கம் ஒரு தனிமனிதனுக்கு உகந்ததல்ல. நல்லதொரு உலகத்திற்கு அறிவு, இரக்கம், தைரியம் போன்றவை தேவை; பழையனவற்றைக் கட்டிப்பிடித்துத் தொங்குவதோ, என்றோ யாரோ சொன்னவைகளைப் பற்றிக் கொண்டு நம் அறிவை அடமானம் வைப்பதோ தேவையில்லாதது.


*

(The writer is on the faculty of the Department of Physics, Indian Institute of Science, Bangalore. Email: profvasant@gmail.com)


*