Saturday, September 19, 2026

1404. மாணவர்கள் சிலரின் வாழ்த்துகள்

 


 

வழக்கமாக ஆசிரியர் தினத்தன்று பழைய மாணவர்களிடமிருந்து நல்ல வார்த்தைகள் நாலு வருவது வழக்கம் தான். ஆனால் இந்த ஆண்டு இன்னுமதிக நல்ல வார்த்தைகள் காதில் விழுந்தன. அதோடு என் கதைவேறு வந்ததா? இரண்டும் இணைந்து அல்லது இரண்டுக்கும் இணைத்து பல நல்ல வார்த்தைகள்காதை எட்டின.

அதில் ஒரு சில ...

 

Dr. Prof.. ANDAL

வாழ்த்துக்களுடன் இனிய காலை வணக்கம் Sir. தங்களின் "என் கதை" நூல் வெளியீட்டு நிகழ்வு மிக அருமை. பெருமைக்குரியது.

 

எல்லோரின் வாழ்வின் பல நிகழ்வுகள்,அனுபவங்கள் மலரும் நினைவுகளாக தோன்றினாலும் அதை எழுத்து வடிவில் அழகான,நகைச்சுவை உணர்வுடன் ஆர்வமாக படிக்கும் விதமாக வெளியிட உங்களைப்போன்ற உயரிய சிந்தனை கொண்ட ஒரு சிலரால் மட்டுமே சாத்தியம்.

 

மனம் நிறைந்த பாராட்டுக்கள்

 

கோதை

 

அன்பிற்கும் மிகுந்த மரியாதைக்கும் உரிய பேராசிரியர் சாம் ஜார்ஜ் அவர்களுக்கு,

ஆசிரியர் தின வாழ்த்துகள்! 🌷

என் வாழ்க்கையில் பல ஆசிரியர்களைச் சந்தித்திருக்கிறேன். ஆனால், பாடங்களை மட்டும் கற்றுக் கொடுத்த ஆசிரியர் என்ற வரையறைக்குள் உங்களை என்னால் வைத்துப் பார்க்க முடியாது.

 

உங்கள் வகுப்புகள் எனக்குப் பாடங்களாக இருந்ததைக் காட்டிலும், *வாழ்க்கையைப் பற்றிச் சிந்திக்கக் கற்றுக் கொடுத்த அனுபவங்களாகவே* இருந்திருக்கின்றன.

 

கேள்வி கேட்பது, எதையும் அப்படியே ஏற்றுக்கொள்ளாமல் சிந்திப்பது, நம்முடைய நம்பிக்கைகளையே கூட பரிசோதித்துப் பார்ப்பது—இவற்றை உங்கள் சிந்தனைகளும், உங்கள் வாழ்க்கை அனுபவங்களும் எனக்குக் கற்றுக் கொடுத்திருக்கின்றன.

 

குறிப்பாக, என்னை பல நல்ல புத்தகங்களின் உலகத்திற்கு அறிமுகப்படுத்தியதில் உங்களுக்குள்ள பங்கு மிகப் பெரியது. அந்தப் புத்தகங்கள் என் வாசிப்பை மட்டுமல்ல் என் சிந்தனையையும் விரிவு படுத்தின. அதற்காக நான் உங்களுக்கு எப்போதும் நன்றியுள்ளவளாக இருப்பேன்.

உங்கள் வாழ்க்கையை நீங்கள் எவ்வளவு நேர்மையாகவும் துணிச்சலாகவும் அணுகிகிறீர்கள் என்பதற்கான இன்னொரு சான்றாக நான்  உங்களின் “என் கதை” புத்தகத்தைப் பார்க்கிறேன்.

ஒரு காலத்தில் நம்பிக்கையிலிருந்து கேள்விகளுக்குள் பயணித்து, தனது அனுபவங்களின் வழியாக ஒரு தனித்தனி சிந்தனை உலகை உருவாக்கிக் கொண்ட உங்கள் பயணம் என்னைப் போன்ற பலரையும் சிந்த்திக்கத் தூண்டுகிறது.

என் ஆசிரியராக இருந்ததற்காக மட்டுமல்ல; என்னை இன்னும் சிந்திக்கச் செய்து கொண்டிருக்கும் ஆசிரியராக இருப்பற்காகவும் உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி.

இன்றும் உங்களுடன் தொடர்பில் இருப்பது எனக்கு ஒரு மகிழ்ச்சியும் பெருமையும்.

என்னைப் போன்ற ஒரு மாணவியின் வாழ்க்கையில்
ஒரு ஆசிரியர் ஏற்படுத்தக் கூடிய தாக்கம் எவ்வளவு ஆழ்மானது என்பதற்கு நீங்கள் ஒரு சிறந்த உதாரணம்.

இந்த ஆசிரியர் தினத்தில், உங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகளும், நன்றியும், அன்பும்.

இனிய ஆசிரியர் தின நல்வாழ்த்துகள், சார்!

 

ZAMEER

 

I have learnt from you in ways you may never know. Not only from the obvious guidance from you, but from watching how you thought, spoke, worked and carried yourself. Somewhere along the way, I began noticing those little things, consciously and unconsciously, and letting them shape the person I was becoming.

 

Perhaps I am still a work in progress, a collage of the people who have inspired me, with a little piece of each woven into who I am. I know there is a little of you in there too.

 

Happy Teachers Day

 ***

 

SANTOSH

 

Sir i will tell u one thing which you may not agree, God has given you an amazing brain which always think out of the box and your perceptions are unique. But somehow you restricted yourself not to do much deeper research, if you took research as your career, you could have received a Nobel Prize by this time. You are still active because of your unique brain. American College spoiled a Good scientist. You may not agree,sir

 

 

SABITHA

 

Hi Sir! Hope you are doing well. Robert sent me the old seminar evaluation papers that you had sent him. I can never forget that seminar Alvin Toffler was very hard to comprehend in the beginning but as I got on with it, I was fascinated and it opened new vistas. My social perspectives shifted overnight. Maybe my work in the human rights arena too was an extension of that.

My father had his books but I was never inclined to read them before that. Thanks for shaping our young minds.

 

In other news, Robert has bought two copies of your new book. He is going to give one to his senior Prabhu Rajadurai tomorrow as it is his birthday today. He is in Chennai today and is returning to Madurai only tomorrow.

 

Congratulations on the release of your autobiography Sir. Eager to read it.

 

 You are an inspiration.

 

 

RAJALAKSHMI

 

Thank you so much sir❤️ You have been much more than a teacher to me—you have been a guiding light whose lessons and values have stayed with me throughout my life. I feel truly blessed and grateful to have had you in my life. Your affection and blessings will always hold a very special place in my heart. 🙏🌷


******

\\
ப்ளாகர் காலத்தில் ஒவ்வொரு பதிவிற்குப் பின்னும் பல மிக நல்ல  பின்னூட்டங்கள் வருவதுவே வழக்கம். அந்த வழக்கம் இப்போது இல்லாமல் வெறும் ஸ்மைலிகளில் காலம் கரைகின்றது.

பழைய நினைப்புடா பேராண்டி என்ற நினைப்பில் உங்கள் கருத்துகளை இங்கே கீழே comments எழுத அழைக்கின்றேன். வாருங்கள் ...

 

 

 


Thursday, September 17, 2026

1403. என் கதை – Dr. Delphine Victoria






I love reading books during my train journeys. "என் கதை" by Sam George, aka Dharumi, is one such book that completely drew me in. I couldn’t put it down and ended up finishing it in one sitting.

What I loved most about the book is its simplicity and humour. The narration is so natural and effortless that, while reading, I often felt as though I was walking alongside the author, listening to him tell me his story.

Some parts of his life were particularly touching. Reading about how he lost his mother at a very young age and then had to live in his பாட்டையா’s house. this made me to pause and think about how painful that experience must have been for a child.

What makes the book even more real is that Dharumi does not try to portray himself as a perfect person. He openly shares his weaknesses, mistakes, struggles and experiences. That honesty makes his story relatable and human.

His life as a professor and the lasting impact he made on his students also touched me deeply. The friendships he formed, valued and nurtured over the years are another beautiful part of his story.

His experience in the hospital during the COVID-19 pandemic in 2020 was very painful to read. The support he received from friends, relatives, students and even strangers during that difficult period was truly moving. people do come together when someone is going through a difficult time.

And then there is his prison experience. it must have been very difficult but becomes the ultimate comedy 😊in his narration! That ability to find humour even in difficult situations is perhaps one of the things that makes the book so enjoyable.

"என் கதை" is not simply a book about one man’s life. It is a story about childhood, loss, friendship, teaching, mistakes, difficult times, strength and, above all, living life with honesty and humour.

On a personal note, I truly admire the way Dharumi has chosen to use his retired life so meaningfully—writing, translating books and continuing to connect with readers through his words.

 


1402. என் கதை - Dr.பேரா. ஆண்டாள்

Shared with Public
என் கதை - Dr.பேரா. ஆண்டாள்


வாழ்த்துக்களுடன் இனிய காலை வணக்கம் Sir.
தங்களின் "என் கதை" நூல் வெளியீட்டு நிகழ்வு மிக அருமை.
பெருமைக்குரியது.
எல்லோரின் வாழ்வின் பல நிகழ்வுகள்,அனுபவங்கள் மலரும் நினைவுகளாக தோன்றினாலும் அதை எழுத்து வடிவில் அழகான,நகைச்சுவை உணர்வுடன் ஆர்வமாக படிக்கும் விதமாக வெளியிட உங்களைப்போன்ற உயரிய சிந்தனை கொண்ட ஒரு சிலரால் மட்டுமே சாத்தியம்.
மனம் நிறைந்த பாராட்டுக்கள்.

Wednesday, September 16, 2026

1401. என் கதை - நூல் வெளியீட்டு விழா

 


1400. என் கதை - இளங்கோ கண்ணன்

ஐயா வணக்கம்; நலமாய் இருப்பீர்கள் என நம்புகிறேன்.




 220 பக்கம் முடிந்திருக்கிறது. நீண்ட நாட்களுக்குப் பின் தொடர்ச்சியாகப் படிக்கும் ஒரு நூலாக அமைந்திருக்கிறது.

  தாங்கள்  மதச்சார்பற்றவர் என்பதை, வாழ்வில் நடந்த நிகழ்வுகளைக்  கொண்டே விளக்கி இருக்கிறீர்கள்.

 எந்த மதத்தைச் சார்ந்தவர் ஆனாலும் உயர்வு தாழ்வு காட்டாமல் நடுநிலையோடு தங்கள் கருத்துகளைப் பதிவு செய்துள்ளீர்கள். 

பொதுவாக, இஸ்லாம்  அறிவியல் அடிப்படையில் அமைந்த ஒரு மார்க்கம் என்று பெருமையோடு சொல்லிக் கொள்வார்கள். அதையும்  விமர்சனம் செய்திருக்கிறீர்கள்.

 இந்து மதம், பின்ன கிறிஸ்தவ மதத்தைப் பற்றிக் கேட்கவே வேண்டாம்.

  'சத் சபை' என்ற புதிய செய்தியைப் பற்றியும் சொல்லி இருக்கிறீர்கள். அந்த  அந்த அமைப்பில் உள்ள கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் சொல்லுக்கும் செயலுக்கும் எப்படி ஒருமைப்பாடு இல்லாமல் நடந்து கொண்டார் என்பதைக் குறிப்பிட்டு சாடி இருக்கிறீர்கள். உலகம் முழுவதும் இன்று பலபேர் அப்படித்தான் இருக்கிறார்கள். குறிப்பாக இந்தியாவில்.

 தங்களுடைய எள்ளல் சுவை கலந்த நடைதான் மின் தொடர்வண்டி எஞ்சின் போல என்னை  விறுவிறுப்பாக இழுத்துச் செல்கிறது என உறுதியாகச் சொல்லலாம்.

 ஒரு சிறு திருத்தம். பக்கம் 129ல் துப்புரவுத் தொழிலாளர் என்ற இடத்தில் இடையின 'ர' வருவதற்குப் பதில் 'ற' வந்திருக்கிறது. அதையும் சரி பார்த்துக் கொள்ளுங்கள்.

  கடமை தவறாத மருத்துவர்கள், செவிலியர்கள், துப்புரவுத் தொழிலாளர்கள் மற்றும்  மருத்துவமனை தொடர்பான பணியாளர்கள் அனைவரையும் மனம் திறந்து பாராட்டியிருக்கிறீர்கள். இது ஒரு பெரிய பண்பு.

அந்தப் பண்புக்குத் தலை வணங்குகிறேன்.