ஆதிமூலம்
தருமி (SAM)
கேள்விகள் கேட்பதன்றி வேறொன்றும் அறியேன், வலைஞர்களே!
Tuesday, April 14, 2026
1372. ஜெமினியில் நான்
ஆதிமூலம்
Wednesday, March 11, 2026
1371. வழுக்கி விழுந்த வயோதிகன் ... :(
பெருசுக எல்லாரும் நடக்கும் போது கவனமாக நடக்கணும்னு
சொல்லியிருக்காங்க. நானும் அப்படித்தான் நடந்தேன். ஆனாலும் ஒரு சில மாதத்திற்கு
முன் முகம் குப்புற விழப் பார்த்தேன். நல்ல வேளையா விழாமல் தடுமாறிப் பிழைத்தேன்.
ஆனாலும் ஓரிரு வாரங்களுக்கு முன் நடைபாதியில் புதிதாக முளைத்து மேடாக இருந்த man hole ஒன்றும் தடை போட்டது. மீண்டும் பிழைத்தேன். இருமுறை பிழைத்தேனா ...
இப்போது நான்கைந்து நாட்களுக்கு முன் நடக்குமிடத்தில் கையில் காய்கறிப் பையோடு
படாரென்று முகம் குப்புற விழுந்தேன். நெற்றி பூமித் தாயை வேகமாக முட்டி
விழுந்தேன். ஒருவர் ஓடிவந்து உதவினார். நெற்றியைத் தொட்டுப் பார்த்தேன். ரத்தக்
காயமில்லை. எனக்கே கொஞ்சம் ஆச்சரியம்தான். தூக்கி விட்டவரும் பார்த்து ஒன்றுமில்லை
என்றார். ‘பரவாயில்லை ..hard nut to crack’ என்றேன். பக்கத்தில் தான் லிப்ட். நடக்க உதவி செய்தார். வீடு வரை
வருகின்றேன். என்றார். யாருங்க போய் அடி வாங்கிறது .. நான் மட்டும் போகிறேன் என்றேன்..
என் அனுபவம்தான் அவருக்கும் இருக்கும் போலும். சரியென்றவர் லிப்டில் மேலே வந்து,
நான் வீடு வரை செல்வதைப் பார்த்து விட்டு சென்றார்..
வீட்டம்மாவிடம் முதலில் சொல்லாமல் மெல்ல சொல்லலாமென
நினைத்து உள்ளே நுழைந்தேன். என்னைப் பார்த்ததும், வீட்டம்மா, ‘கீழே விழுந்திட்டீங்களா?” என்றார்கள். என்னடா இது..
ஏதாவது சாமி ஏதும் வந்து அவங்ககிட்ட சொல்லியிருக்குமோன்னு நினச்சேன். நான் கீழே
விழுந்ததை அடுத்த லிப்டில் இருந்தவர் பார்த்திருக்கிறார் அவ்ருக்கு என்னைத்
தெரியும் போலும். அவர் லிப்டில் இறங்கியதும் அவர் வீட்டம்மாவிடம் சொல்ல, பல மைல் தொலைவில் இருக்கும் என் இளைய மகளுக்குத் தொலைபேசியில் உடனே
சொல்லியிர்ருக்கிறார்கள். அவள் என் மூத்த மகளுக்குத் தகவல் சொல்லிவிட்டு, உடனே அம்மாவுக்கு ஒரு போன். What a telecommunication! நான் 12 மாடிக்குச் செல்வதற்குள் மூன்றாவது மாடிக்காரர் சொன்ன செய்தி பல
மைல்கள் கடந்து, அங்கிருந்து என் வீட்டுக்குள் சேர்வதற்குள் நான்
விழுந்த சேதி வந்து சேர்ந்து விட்டது. சும்மா சொல்லக்கூடாது. விஞ்ஞானம் அப்படி
வளர்ந்து விட்டது.
விஞ்ஞானம வளர்வது ஒரு பக்கம் இருக்கட்டும். இரண்டு
மூட்டுகளிலும் வலி. சரி .. விழுந்தால் வலிக்கத்தானே செய்யும் என்று நினைத்துக்
கொண்டேன். ஆனால் அடுத்த நாள் காலையில் கட்டிலிலிருந்து எழுந்து நடக்க முடியவில்லை.
இடது முழங்காலுக்குப் பின்புறம் (அந்த இடத்திற்குத் தமிழில், ஆங்கிலத்தில்
என்னங்க சரியான சொல்?) சரியான வலி. வீட்டுக்காரம்மாவிற்காக
வாங்கிய நடைக் குச்சி – walking stick – கொஞ்சம் உதவியது.
இருந்தாலும் நடக்க அத்தனை சிரமம். ஆனால் வீக்கம் ஏதுமில்லாததால் எலும்பில் ஏதும்
தகராறு இல்லை என்று தெரிந்து கொண்டேன். கால் வலிக்கு என்ன செய்யலாம்?
அண்மையில் எங்கள் அடுக்குமாடியில் இருந்த நண்பர் ஒருவர்
வாட்சப் செய்தி ஒன்று அனுப்பியிருந்தார். DOCZO –
Doctors2home, evening clinic பற்றிய செய்தி ஒன்று அனுப்பியிருந்தார். சில மருத்துவர்கள்
இணைந்து இதை நடத்துவதாகவும், தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டால்
வீட்டிற்கே வந்து மருத்துவம் செய்வதாக அச்செய்தி சொன்னது. வாசித்த அன்று அதை நான்
முற்றிலுகாக நமபவேயில்லை. மருத்துவம் வியாபாரமாக மாறிவிட்ட நிலையில் எந்த
மருத்துவர்கள் இது போன்ற சேவை செய்யத் தயாராக இருப்பார்கள் என்று நினைத்தேன்.
ஆனால் இன்று ஒரு trial கொடுப்போமே என்று நினைத்து தொலைபேசியில் தொடர்பு கொண்டேன்.
ஒரு பெண் பேசினார். எனக்கு என்னப் பிரச்சனை என்று கேட்டார். சொன்னேன். அப்போது
காலை 11 மணியிருக்கும். பேசியவர் மிகக் கனிவாகப் பேசியதே ஆச்சரியமாக இருந்தது. 5-9
அவர்களின் உதவி நேரம். மால 4 மணிக்குள் உங்களுக்கு இன்று வரமுடியுமாவென்று
சொல்கிறேன். என்றார். வழக்கமாக இல்லை .. முடியாது .. என்று சொல்வதற்குப் பதிலாக
நாம் இப்படித்த்தானே சொல்வோம். அதுமாதிரி சொல்கிறார்கள் என்று நினைத்துக்
கொண்டேன். சரியாக 4 மணிக்கு ஒரு குறுஞ்செய்தி அனுப்புயுள்ளார்கள். 5.30-6
மணிக்குள் வருவோம் என்ற செய்தி. 5.30 மணிக்குத் தயாரானேன். 6 மணியாயிற்று. யாரும்
வரவில்லை. ஓரிரு நிமிடங்களில் தொலைபேசி
ஒலித்தது. காலையில் பேசிய பெண் வழி கேட்டார். சொன்னேன். அவர் எங்கள்
குடியிருப்புக்கு அருகில் வந்த பிறகே அழைத்திருக்கிறார்.
முப்பதுகளின் கடைநிலையில் இருந்த வாட்ட சாட்டமான
மருத்துவர். உடம்பை நன்கு பேணியிருந்தார். அந்தப் பெண்ணுடன் வந்தார். மருத்துவரின் பெயர்: Dr. S. Muralishankar MBBS., DLO., CCEBDM(Diab).,இருவருக்கும்
இருக்கை அமைத்திருந்தும் அந்தப் பெண் இறுதி வரை உட்காரவில்லை. மருத்துவர் என்னிடம்
பேசிவிட்டு, கால்களையும் சிறு கீறல்களையும் (ஆனாலும் வலித்தது) பார்த்து
விட்டு, விழுந்ததால் ஏற்பட்ட வலிதான் என்று கூறி மருந்து
எழுதித் தருகிறேன். வாங்கிக் கொள்ளுங்கள்; அல்லது
எங்களிடமும் மருந்து உள்ளது. அவருக்கான கட்டணம் 499 + மருந்துக்கு 500+ ஆக
மொத்த்தம் 1054 என்றார்கள்.
அத்தனை ஆச்சரியம். அதை அவரோடு பகிர்ந்து கொண்டேன். .நாங்கள்
சில மருத்துவர்கள் இணைந்து இதைச் செய்கிறோம். எதிர்ப்புகளும் பல
மருந்தகங்களிடமிருந்து வருகிறது. எங்களோடு முதலில் இணைந்த இரு மருத்துவர்கள்
அதனால் இதிலிருந்து விலகி விட்டார்கள் என்றார். ஆனால் மிகவும் ஆச்சரியத்துக்குரிய
சேவை என்றேன். அவரும் எங்களுக்கு இது நல்லதொரு திருப்தியையும், மகிழ்ச்சியையும்
தருகிறது என்றார்.
பாலவனங்களிலும் ஆங்காங்கே சில பூக்கள் மலரத்தான்
செய்கின்றன.
மலர்களுக்க்கு என் பாராட்டுகளும், நன்றியும்.
எனக்கு வந்த குறுஞ்செய்தி இதோ:
Good news for our Chennai people!
Now, government doctors and a few like-minded fellow doctors from
Saraswathi Polyclinic@Ashok Nagar & Mass Polyclinic@Virugambakkam in
Chennai have come together with a
service mindset and started a service called
“DOCZO – Doctors2Home”
Evening Clinic @ Your Home for just Rs.499 only
(70% discount from Rs.1600 of home doctor visit)
With this initiative, for common health issues like fever, cold, cough,
stomach pain, diabetes, BP, etc., patients no longer needed to go to nearby
clinic/hospital by inconvenience of travel & its cost, long waiting in
clinic and accompanying a relative/ friend to the clinic.
Just one phone / watsapp msg r call, your qualified, experienced, friendly
MBBS/MD doctors along with a staff nurse will directly come to your home and
provide treatment between 5pm to 9pm @ just Rs.499 only.
This service is for all patients especially for kids, working people,
Elders etc who are finding difficulty to go to nearby clinic/ hospital. It
saves not only health complications, but also time and money of the patient
family.
All medicines / injections / IV fluids / lab test are given at 10% discount
(If patient needs and available with us)
In short, An evening clinic running right inside our home!
To avail this new home health service
DOCZO – Doctors2Home
Evening Clinic@ your Home at Just Rs.499 only( 5pm to 9pm)
Call / WhatsApp
📞 7338830305 /
7338830905
(For Enquiry and appointment booking)
Areas where your friendly MBBS/MD doctors are currently providing service
in Chennai:
Virugambakkam, Valasaravakkam, Ramapuram, KK Nagar, Ashok Nagar, Koyambedu,
Arumbakkam, Kodambakkam, Nerkundram, Vadapalani, Anna Nagar, Mogappair, West
Mambalam, Ekkattuthangal.
If you share (forward) this message to all your whatsapp groups and chennai
based friends personally , it might be a big help and useful to someone else….
Sunday, March 08, 2026
1370. நல்ல வேளை ... அதன் பின் எதுவும் நடக்கவில்லை.
நல்ல வேளை ...
அதன் பின் எதுவும் நடக்கவில்லை.
இந்தக் கிழடுகளுக்கு ஒரு சான்ஸ் கொடுத்தால் தங்கள் பழைய காலத்துக் கதைகளை
எடுத்து விடுவார்களாமே ... ஆகவே நானும் சில பல கதைகளைச் சொல்லட்டுமா? ரெண்டு பழசு; ஒண்ணு
புதுசுன்னு வச்சுகுவோம்.
முதல் கதை:
பற்பல ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது, மதுரையிலிருந்து எங்கள் கல்லூரியின் சார்பாக சென்னைப் பல்கலைக்கழகத்தில்
நடந்த ஒரு பன்னாட்டுக் கருதரங்கிற்கு வந்திருந்தேன். எங்கள் கல்லூரியில் என்னுடன்
பணிசெய்து கொண்டிருந்த பேரா. சோமசுந்தரம் அப்போது அங்கு தன் முனைவர் ஆய்வை
மேற்கொண்டிருந்தார். அந்த மூன்று நாளும் என்னோடு இருந்து கம்பெனி கொடுத்தார்.
முதல் நாளின் முதல் அமர்வில் கருத்தரங்கை நடத்தியப் பேராசிரியர் அனைவரையும்
அந்த HUMAN ETHICS கருத்தரங்கிற்கு வந்தமைக்கு
வரவேற்று, அதன்பின் வரும் நாட்களில் Hindu ethics,
Christian ethics and Islamic ethics என்ற தலைப்புகளில் யார் யார் பேசுவார்கள் என்ற
அறிமுகம் கொடுத்தார். அதன் பின் கேள்வி நேரம் என்பது போல் சிறிது நேரமளித்தார்கள்.
பேசாமல் இருந்திருக்கலாம்.
நானெழுந்து ethics என்பது
அனைத்து மனிதருக்க்கும் பொதுவானது; அதை மதங்களை வைத்துத்
தனித்தனியாகப் பிரிப்பது சரியா? என்றேன்.
அப்போதிருந்து வந்திருந்த அனைவருக்கும் எதிரியாகி விட்டேன் என்றே தோன்றியது.
அடுத்து காபி டைம். நானும் சோமுவும் ஒரு டீ குடித்துக் கொண்டு நின்றோம். இஸ்ரேலிலிருந்து
வந்திருந்த ஒரு தத்துவப் பேராசிரியர் எங்களோடு சேர்ந்து கொண்டார். அவர் ஏதேதோ
பேசினார். நமக்கும் தத்துவத்திற்கும் என்ன தொடர்பு. தலையாட்டிக் கொண்டிருந்தேன்.
நம்மூர் மாயா பற்றிப் பேசினார். டீ குடித்துக் கொண்டே, எதிரில் தெரியும் கட்டிடத்தைக் கையால்
காண்பித்து “What’s it?”
என்றார்.
நமக்குத்தான் விடை தெரியுமே. “It is just a building”, என்றேன்.
‘No.. the building is not there. It is here..” என்று சொல்லி, தன்
சுட்டு விரலால் தன் முன் நெற்றியைச் சுட்டிக் கொண்டு, the building is here in your brain.. not
there”, என்றார்.
சட்டென்று ஒரு பதில் சொன்னேன்: “go and hit it with your head; you will find
whether it is there or inside your brain”.
உறைந்தார். அடுத்த வினாடி காலி டீ கப்பை வைப்பது போல் அங்கிருந்து சென்று
விட்டார்.
சோமு என்னை முறைத்தார்.
நல்ல வேளை .. அதன்பின் ஏதும் நடக்கவில்லை.
இரண்டாம் கதை:
1991. Desert Storm என்ற பெயரில் மத்தியகிழக்குப் பகுதியில் நடந்த போரை ஒட்டிய
ஒரு நிகழ்வு அது. அதில் அமெரிக்கா patriot என்ற SAM (Surface air missile) என்ற ஏவுகணைகளையும், அந்நாடு எதிர்த்து நின்ற ஈராக் நாடு Scud என்ற ஏவுகணைகளையும் அப்போரில்
பயன்படுத்தின. இதில் ஸ்கட் ஏவுகணையின் திறம் மிகவும் மட்டமாக இருந்தது. அதனால்
அந்த ஏவுகணைகள் சவுதியையும், இஸ்ரேலையும்
நோக்கி வீசப்பட்டாலும் அவைகளால் இந்த இரு நாட்டிலும் அதிக சேதமில்லை. இஸ்ரேலில் நோய்வாய்பட்டிருந்த என்னைப் போன்ற ஒரு கிழவன்
குண்டு வெடித்த சத்தத்தில் பயந்து உயிரை விட்டதாகச் சொன்னார்கள். வேறு சேதமில்லை.
பிப்ரவரி மாதத்தில் நடந்த போர் அது.
அந்த ஆண்டில், அநேகமாக
அது ஈஸ்டர் திருநாளாக இருந்திருக்க வேண்டும். அன்று இரவுப் பூசை விசேஷமாக
இருக்குமில்லையா? அன்று கோவிலில் இல்லாமல் மதுரை பிரிட்டோ
பள்ளி வளாகத்தில் இரவுப்பூசை நடந்தது. குடும்பம் முன்னால் உட்கார்ந்திருக்க நான் கூட்டத்திற்குப்
பின்னால் உட்கார்ந்திருந்தேன். அப்போது நண்பர் அருளானந்தர் கல்லூரிப் பேராசிரியர் ஒருவரும்
என்னோடு உட்கார்ந்திருந்தார். அப்போது பூசையில் பிரசங்கம் கொடுத்த சாமியார் எப்படி
ஏசுநாதர் தம் இனத்தவரான யூதர்களைக் காப்பாற்றினார் என்று கூறிக்கொண்டிருந்தார். கோழிகள்
குஞ்சுகளைத் தன் செட்டையின் கீழ் வைத்துக் காத்தது போல் கடவுள் தன் பிள்ளைகளைக்
காத்துவிட்டார் என்று உணர்ச்சி பொங்கப் பிரசங்கித்துக் கொண்டார். dramatize செய்து அனைவரையும் காப்பாற்றினார் என்பதை விலாவாரியாகக் கூறி, ஆச்சரியப்பட்டுக் கொண்டிருந்தார். கடவுளுக்கு
தம் இனத்தவரின் மீது அத்தனை அன்பு. இது ஒரு பெரிய அற்புதமில்லையா ... என்று
கூறிக்கொண்டிருந்தார்.
நண்பர் என் பக்கம் திரும்பி, “ஆச்சரியமாக
இருக்குல்ல ..?”
“ஆமாம்”.
“அத்தனைப் பத்திரமாக இஸ்ரவேலர்களைக்
காப்பாற்றியிருக்கிறாரே!” என்று வியந்து சொன்னார்.
“விழித்திருந்து காத்திருக்கிறார். அல்லேலூயா”என்றேன். அதோடு
நிறுத்தியிருக்கலாம்.
“ஆனால் இரண்டாம் உலகப் போரின்போது 60
லட்சம் யூதர்களை ஹிட்லர் கொல்லும் போது மட்டும் எப்படியோ கடவுள் அப்படியே தூங்கிவிட்டார்
போலும்!” என்றேன்.
நண்பர் என்னைப் பார்த்து முறைத்தார்.
நல்ல வேளை .. அதன்பின் ஏதும் நடக்கவில்லை.
மூன்றாம் கதை:
அண்மையில் நடந்தது. 2025. ஜூன் 12. அகமதாபாத்தில் நடந்த விமான விபத்து. புறப்பட்ட
சில விநாடிகளில் வெடித்துச் சிதறி, அதிலிருந்த அனைத்துப் பயணிகளும், விமானம் விழுந்த
இடத்திலிருந்த 17 பேரும், மொத்தத்தில் 260 பேரும் செத்து
மடிந்தனர். ஒரே ஒருவர் - விஷ்வாசகுமார் ரமேஷ் - என்பவர் 11 A
சீட்டில் இருந்தவர் மட்டும் தப்பிப் பிழைத்தார்.
அமெரிக்காவில் இருந்து நம் நாட்டின் கிழக்கு மாநிலங்களில் கள ஆய்விற்காக வந்த
ஒரு பேராசிரியர் ஒரு காணொளி வெளியிட்டிருந்தார். அந்த விமானத்தில் அவர்
ஏறுவதற்குக் கடும் முயற்சியெடுத்தும், அவரால் சரியான நேரத்தில் விமானத்திற்கு வந்து சேர முடியாமல் அவர்
விமானத்தைத் தவற விட்டு விட்டார். சில நிமிடங்களால் அவர் உயிர்பிழைத்தார். ஏசு
தன்னைச் சரியான நேரத்தில் வர முடியாதபடி செய்து தன்னைக் காப்பாற்றியுள்ளார்.
இதிலும் அவர் உண்மையில் ஓர் இறைமறுப்பாளர். இருந்தும் கடவுளின் கருணையால் அவர்
பிழைத்து விட்டார். இதை அந்தக் காணொளியில் அவர் இதைக் கூறி,
தன்னைக் காப்பாற்றிய ஏசுவின் கருணை பற்றிக் கூறியிருந்தார்.
உடன் பணியாற்றிய ஒரு பேராசிரியர் பெங்களூரிலிருந்து எனக்கு இதை
அனுப்பியிருந்தார். எல்லாம் என்னைத் ‘திருத்தி, நேர்வழிப் படுத்தும்’ முயற்சிதான். அவரும் கடவுளின் கருணையைப் புகழ்ந்து எழுதினார்.
குரல் அஞ்சலில் பதில் சொன்னேன். “ஆமால்ல ...கடவுளின் கருணையே கருணை. அதனால் தான் அந்த மனிதர்
உயிரோடு இருக்கிறார். ஆனால் இதில் ஒரு சின்ன சந்தேகம். இந்த மனிதர் டிக்கெட்
எடுத்தும் விமானத்தில் அவர் ஏற முடியாத அளவு டிலே செய்து அவரை அதில் ஏறவிடாமல்
தடுத்து, அவரை லார்ட் ஜீசஸ் காப்பாற்றிவிட்டார்.
ஆனால் இன்னொருவர் டிக்கெட் எடுத்து, விமானத்தில் ஏறி,
அதில் உள்ள அனைவரும் இறந்த பிறகும் 11 A சீட்காரரை
மட்டும் கடவுள் மிக மிக ஆச்சரியாகக் காப்பாற்றி விட்டாரே! அதிசயம் தான். ஆனால்
அவர் கும்பிட்ட சாமி லார்ட் சிவா!”
“இப்போ எனக்கு ஒரு சந்தேகம். அந்த
இரண்டு லார்ட்களில் லார்ட் சிவா செய்ததுதான் அதிக ஆச்சரியம். விமானத்தில் ஏறி அமர்ந்தும் அந்த மனிதரை
லார்ட் சிவா காப்பாற்றி விட்டார். இதனால் அந்த இரு லார்ட்களில் சிவா is much better than Lord Jesus. இல்லியா?” என்றேன்.
இவன் தேறமாட்டான் என்பது நண்பருக்குப் புரிந்திருக்கும். டூ போட்டு விட்டார்.
நல்ல வேளை .. அதன்பின் ஏதும் நடக்கவில்லை.
Thursday, March 05, 2026
1369. நல்ல வேளை .. அதன்பின் ஏதும் நடக்கவில்லை.
நல்ல வேளை ...
அதன் பின் எதுவும் நடக்கவில்லை.
*
*
நல்ல வேளை ...
அதன் பின் எதுவும் நடக்கவில்லை.
இந்தக் கிழடுகளுக்கு ஒரு சான்ஸ் கொடுத்தால் தங்கள் பழைய காலத்துக் கதைகளை எடுத்து விடுவார்களாமே ... ஆகவே நானும் சில பல கதைகளைச் சொல்லட்டுமா? ரெண்டு பழசு ஒண்ணு புதுசுன்னு வச்சுகுவோம்.
முதல் கதை:
பற்பல ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது, மதுரையிலிருந்து எங்கள் கல்லூரியின் சார்பாக சென்னைப் பல்கலைக்கழகத்தில் நடந்த ஒரு பன்னாட்டுக் கருதரங்கிற்கு வந்திருந்தேன். எங்கள் கல்லூரியில் என்னுடன் பணிசெய்து கொண்டிருந்த பேரா. சோமசுந்தரம் அந்த மூன்று நாளும் என்னோடு இருந்து கம்பெனி கொடுத்தார்.
முதல் நாளின் முதல் அமர்வில் கருத்தரங்கை நடத்தியப் பேராசிரியர் வரவேற்புரை அளித்து, அனைவரையும் அந்த HUMAN ETHICS கருத்தரங்கிற்கு வந்தமைக்கு வரவேற்று, அதன்பின் வரும் நாட்களில் Hindu ethics, Christian Ethics and Islamic ethics என்ற தலைப்புகளில் யார் யார் பேசுவார்கள் என்ற அறிமுகம் கொடுத்தார். அதன் பின் கேள்வி நேரம் என்பது போல் சிறிது நேரமளித்தார்கள்.
பேசாமல் இருந்திருக்கலாம்.
நானெழுந்து ethics என்பது அனைத்து மனிதருக்க்கும் பொதுவானது; அதை மதங்களை வைத்துத் தனித்தனியாகப் பிரிப்பது சரியா? என்றேன்.
அப்போதிருந்து வந்திருந்த அனைவருக்கும் எதிரியாகி விட்டேன் என்றே தோன்றியது.
அடுத்து காபி டைம். நானும் சோமுவும் ஒரு டீ குடித்துக் கொண்டு நின்றோம். இஸ்ராலிலிருந்து வந்திருந்த ஒரு தத்துவப் பேராசிரியர் எங்களோடு சேர்ந்து கொண்டார். அவர் ஏதேதோ பேசினார். நமக்கும் தத்துவத்திற்கும் என்ன தொடர்பு. தலையாட்டிக் கொண்டிருந்தேன். நம்மூர் மாயா பற்றிப் பேசினார். டீ குடித்துக் கொண்டே, எதிரில் தெரியும் கட்டிடத்தைக் கையால் காண்பித்து “அது என்ன?” என்றார்.
நமக்குத்தான் விடை தெரியுமே. “It is just a building”, என்றேன்.
‘No.. the building is not there. It is here..” என்று சொல்லி, தன் சுட்டு விரலால் தன் முன் நெற்றியைச் சுட்டிக் கொண்டு, the building is here in your brain.. not there”, என்றார்.
சட்டென்று ஒரு பதில் சொன்னேன்: “go and hit it with your head; you will find whether it is there or inside your brain”.
உறைந்தார். அடுத்த வினாடி காலி டீ கப்பை வைப்பது போல் அங்கிருந்து சென்று விட்டார்.
சோமு என்னை முறைத்தார்.
நல்ல வேளை .. அதன்பின் ஏதும் நடக்கவில்லை.
இரண்டாம் கதை:
1991. Desert Storm என்ற பெயரில் மத்தியகிழக்குப் பகுதியில் நடந்த போரை ஒட்டிய ஒரு நிகழ்வு அது. அதில் அமெரிக்கா patriot என்ற SAM (Surface air missile) என்ற ஏவுகணைகளையும், அந்நாடு எதிர்த்து நின்ற ஈராக் நாடு Scud என்ற ஏவுகணைகளையும் அப்போரில் பயன்படுத்தின. இதில் ஸ்கட் ஏவுகணையின் திறம் மிகவும் மட்டமாக இருந்தது. அதனால் அந்த ஏவுகணைகள் சவுதியையும், இஸ்ரேலையும் நோக்கி வீசப்பட்டாலும் அவைகளால் இந்த இரு நாட்டிலும் அதிக சேதமில்லை. இஸ்ரேலில் நோய்வாய்பட்டிருந்த என்னைப் போன்ற ஒரு கிழவன் குண்டு வெடித்த சத்தத்தில் பயந்து உயிரை விட்டதாகச் சொன்னார்கள். வேறு சேதமில்லை. பிப்ரவரி மாதத்தில் நடந்த போர் அது.
அந்த ஆண்டில், அநேகமாக அது ஈஸ்டர் திருநாளாக இருந்திருக்க வேண்டும். அன்று இரவுப் பூசை விசேஷமாக இருக்குமில்லையா? அன்று கோவிலில் இல்லாமல் மதுரை பிரிட்டோ பள்ளி வளாகத்தில் இரவுப்பூசை நடந்தது. நான் பின்னால் உட்கார்ந்திருந்தேன். அப்போது நண்பர் அருளானந்தர் கல்லூரிப் பேராசிரியர் ஒருவரும் என்னோடு உட்கார்ந்திருந்தார். அப்போது பூசையில் பிரசங்கம் கொடுத்த சாமியார் எப்படி ஏசுநாதர் தம் இனத்தவரான யூதர்களைக் காப்பாற்றினார் என்று கூறிக்கொண்டிருந்தார். நன்கு dramatize செய்து அனைவரையும் காப்பாற்றினார் என்பதை விலாவாரியாகக் கூறி, ஆச்சரியப்பட்டுக் கொண்டிருந்தார். கடவுளுக்கு தம் இனத்தவரின் மீது அத்தனை அன்பு. இது ஒரு பெரிய அற்புதமில்லையா ... என்று கூறிக்கொண்டிருந்தார்.
நண்பர் என் பக்கம் திரும்பி, “ஆச்சரியமாக இருக்குல்ல ..?”
“ஆமாம்”.
“அத்தனைப் பத்திரமாக இஸ்ரவேலர்களைக் காப்பாற்றியிருக்கிறாரே!” என்று வியந்து சொன்னார்.
“விழித்திருந்து காத்திருக்கிறார்’” “அல்லேலூயா”என்றேன். அதோடு நிறுத்தியிருக்கலாம்.
“ஆனால் இரண்டாம் உலகப் போரின்போது 60 லட்சம் யூதர்களை ஹிட்லர் கொல்லும் போது மட்டும் எப்படியோ கடவுள் அப்படியே தூங்கிவிட்டார் போலும்!” என்றேன்.
நண்பர் என்னைப் பார்த்து முறைத்தார்.
நல்ல வேளை .. அதன்பின் ஏதும் நடக்கவில்லை.
மூன்றாம் கதை:
அண்மையில் நடந்தது. 2025. ஜூன் 12. அகமதாபாத்தில் நடந்த விமான விபத்து. புறப்பட்ட சில விநாடிகளில் வெடித்துச் சிதறி, அதிலிருந்த அனைத்துப் பயணிகளும், விமானம் விழுந்த இடத்திலிருந்த17 பேரும், மொத்தத்தில் 260 பேரும் செத்து மடிந்தனர். ஒரே ஒருவர் - விஷ்வாசகுமார் ரமேஷ் - என்பவர் 11 A மட்டும் தப்பிப் பிழைத்தார்.
அமெரிக்காவில் இருந்து கிழக்கு மாநிலங்களில் கள ஆய்விற்காக வந்த ஒரு பேராசிரியர் ஒரு காணொளி வெளியிட்டிருந்தார். அந்த விமானத்தில் அவர் ஏறுவதற்குக் கடும் முயற்சியெடுத்தும், அவரால் சரியான நேரத்தில் விமானத்திற்கு வந்து சேர முடியாமல் அவர் விமானத்தைத் தவற விட்டு விட்டார். சில நிமிடங்களால் அவர் உயிர்பிழைத்தார். ஏசு தன்னைச் சரியான நேரத்தில் வர முடியாதபடி செய்து தன்னைக் காப்பாற்றியுள்ளார். இதிலும் அவர் உண்மையில் ஓர் இறைமறுப்பாளர். இருந்தும் கடவுளின் கருணையால் அவர் பிழைத்து விட்டார். இதை அந்தக் காணொளியில் அவர் இதைக் கூறி, தன்னைக் காப்பாற்றிய ஏசுவின் கருணை பற்றிக் கூறியிருந்தார்.
உடன் பணியாற்றிய ஒரு பேராசிரியர் பெங்களூரிலிருந்து எனக்கு இதை அனுப்பியிருந்தார். எல்லாம் என்னைத் ‘திருத்தி, நேர்வழிப் படுத்தும்’ முயற்சிதான். அவரும் கடவுளின் கருணையைப் புகழ்ந்து எழுதினார்.
குரல் அஞ்சலில் பதில் சொன்னேன். “ஆமால்ல ...கடவுளின் கருணையே கருணை. அதனால் தான் அந்த மனிதர் உயிரோடு இருக்கிறார். ஆனால் இதில் ஒரு சின்ன சந்தேகம். இந்த மனிதர் டிக்கெட் எடுத்தும் விமானத்தில் அவர் ஏறாத அளவு டிலே செய்து அவரை அதில் ஏறவிடாமல் தடுத்து, அவரை லார்ட் ஜீசஸ் காப்பாற்றி விட்டார். ஆனால் இன்னொருவர் டிக்கெட் எடுத்து, விமானத்தில் ஏறி, அதில் உள்ள அனைவரும் இறந்த பிறகும் 11 A சீட்காரரை மட்டும் கடவுள் அவரை மிக மிக ஆச்சரியாகக் காப்பாற்றி விட்டாரே! அதிசயம் தான். ஆனால் அவர் கும்பிட்ட சாமி லார்ட் சிவா!”
“இப்போ எனக்கு ஒரு சந்தேகம். அந்த இரண்டு லார்ட்களில் லார்ட் சிவா செய்ததுதான் அதிக ஆச்சரியம். விமானத்தில் ஏறி அமர்ந்தும் அந்த மனிதரை லார்ட் சிவா காப்பாற்றி விட்டார். இதனால் அந்த இரு லார்ட்களில் சிவா is much better than Lord Jesus. இல்லியா?” என்றேன்.
இவன் தேறமாட்டான் என்பது நண்பருக்குப் புரிந்திருக்கும். டூ போட்டு விட்டார்.
நல்ல வேளை .. அதன்பின் ஏதும் நடக்கவில்லை.
*
Sunday, February 22, 2026
1368. JUDGMENT IN NUREMBERG
JUDGMENT IN NUREMBERG
https://dharumi.blogspot.com/2026/02/1367-judgment-in-nuremberg-review.html
இந்த ஜெர்மனிய
நகரில் இரண்டாம் உலகப்போருக்குப் பின்னால் நேச நாடுகளும் அமெரிக்காவும் பல
வழக்குகளை ஜெர்மானிய நாசி அதிகாரிகள் மீது தொடுத்தன. 1946லிருந்து பல
திரைப்படங்கள் இதைப் பற்றி எடுக்கப்பட்டிருக்கின்றன. அவைகளில் இரு படங்களை
அண்மையில் பார்த்தேன். அதில் 1961 ஆண்டு எடுக்கப்பட்ட படம் - JUDGMENT IN NUREMBERG. Stanley Krammer என்ற பெரிய இயக்குநர்; Spencer
Tracy, Burt Lancaster போன்ற பெரிய நடிகர்கள் நடித்த படம். 3 ஆஸ்கார் விருதுகள் பெற்ற படம். ஓரிரு
காட்சிகளில் வரும் இரு சாட்சிகளின் நடிப்பும்கூட அத்தனை அழகாக இருக்கும்.
ஆனால் இப்படம் பார்க்கும்போது என்னால் அந்தப் படத்தோடு
முழுமையாக ஒன்றிப் போக முடியாமல் இன்னொரு தடங்கல் மனதில் இருந்தது. ஹிட்லரின்
நாசிக் கும்பல் பல லட்சம் மக்களைக் கொன்று குவித்தது.. நினைத்துப் பார்க்க முடியாத
கொடுமைகளை நாசி மக்கள் செய்ததாக உலகம் பின்னாளில் தெரிந்து கொண்டது. இப்படத்தில்
வரும் வழக்கில் பலவேறு மக்கள் குற்றம் சாட்டப்பட்டிருந்தாலும், அவர்களில்
நான்கு நீதிபதிகள் மட்டும் காண்பிக்கப்படுகின்றனர். அனைவரின் மன உளைச்சல்களை
அழகாகப் படம் எடுத்துள்ளனர்.
இந்தப் படத்தைப் பார்க்கும்போது இன்னும் பத்து பதினைந்து
ஆண்டுகளுக்குப் பிறகு இதே போன்ற ஒரு வழக்கை நடத்தும் கொடுமை நம் நாட்டிலும்
நடக்கக்கூடும் என்றே எனக்குத் தோன்றியது. இன்றிருக்கும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் சூத்திரக்
கயிற்றில் ஆடும் பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் ‘கரசேவகர்களான’ மோடியும், அமித்
ஷாவும், அவர்களின் தாளத்திற்கு நடனமாடும் பெரும் ‘நீதியரசர்களும்’, அவர்கள் தரும் வேதனையான
தீர்ப்புகளும் என் கண் முன்னே வரிசை கட்டி நின்றன.
ஒரு நீதிபதி, கடவுள் ராமரே வந்து என்னை வழி நடத்தி,
பாபர் மசூதித் தீர்ப்பை எழுத வைத்தார் என்றார். இன்னொருவர்
தமிழ்நாட்டில் சனாதனத்தைக் கட்டிப் பிடித்துக் கொண்டு, இல்லாத
நியாயத்தை மிகச் சத்தமாகச் சொல்லிக்கொண்டு நீதியளித்தார். இன்னொரு நியாயஸ்தர் பல
வழக்குகளை அரசிற்குச் சாதகமாகத் தீர்ப்பளித்து, ஓய்வு
பெற்றதும் மனித உரிமைக்கழகத்தின் தலைவரானார். இன்னொரு நீதியரசன் பாப்ரி மசூதி
வழக்கில் கொடுத்த ‘நல்ல’ தீர்ப்பிற்காக,
ஓய்வு பெற்றதும் எம்.பி. பதவி பெற்றார். வளர்ந்து வரும் இப்பட்டியல்
மிக நீளமானது.
நீதியரசர்கள் அரசிற்குச் சாதகமாக இருந்தால் தங்கள் ஓய்வு காலத்தில் அவர்களின் சேவைக்கு”
ஏற்றது போல் “பரிசுகள்” அரசரிடமிருந்து பெருவார்கள். ஒரு வேளை அவருக்குப்
பிடிக்காத முறையில் தீர்ப்பளித்தால், லோயா என்ற நீதிபதி 100 கோடி பணம் தருவதாகக் கூறியும், அதை
மறுத்து, பெரிய அரசியல்வாதியின் வழக்கில் அவர் கொடுத்த
நியாயமான தீர்ப்பிற்காக மர்மமாக திடீரென மரணமடைந்தார் என்கிறது அவர்கள் குடும்பம்.
ஆர்.எஸ்.எஸ். ஆட்சி இன்னும் நிச்சயம் அடுத்த சில ஆண்டுகளாவது
தொடரும் ஆபத்து உள்ளது. இன்னும் எத்தனை குற்றச்சாட்டுகள் ஒன்றிய அரசின் மீது வந்தாலும், நமது
மக்களுக்கு மோடியின் மேலிருக்கும் charisma ஈர்ப்பு குறையவே குறையாது. பணமதிப்பிழப்பு,
நாட்டின் சொத்துகள் எல்லாவற்றையும் வாரிச் சுருட்டி அவரது ஆப்த நண்பர்களுக்குச் ‘சல்லிசு’ விலையில் கொடுத்தாலும் இந்த ஆபத்து
தொடர்ந்து வந்து கொண்டுதானிருக்கும். 2029 வரை அவர் ஆட்சி. அதன் பிறகு ஒன்று
அல்லது இரண்டு முறை ஆட்சிகள் ஆர்.எஸ்.எஸ். ஆட்சியின் கீழ்தான் இருக்குமென
நினைக்கின்றேன்.
2040 – அதாவது இன்னும் 14 ஆண்டுகள் கழித்த பிறகே விடியல்
வரும் என்று நம்புகிறேன். நிச்சயமாக அப்படி ஒரு காலம் வந்தால் அப்போது JUDGMENT
IN NUREMBERG போன்ற ஒரு படம் வரும்,
இந்தப் படம் பார்க்கும்போது அப்படி ஒரு படம் பின்னாளில்
எடுத்தால் எந்தெந்த நீதிபதிகள் குற்றவாளிகளாகச் சாட்டப்பட்டு அமர்ந்திருப்பார்கள்
என்ற நினைவே எனக்கு வந்தது. முன்பு அந்த ஜெர்மன் நீதிபதிகளுக்குக் கொடுக்கப்பட்ட
தண்டனை அத்தனை பெரிதில்லை.1948ம் ஆண்டில் ஆயுள் தண்டனை அவர்களுக்கு
அளிக்கப்பட்டிருந்தும், இந்தப்படம் எடுத்த 1961ம் ஆண்டில் அனைவரும்
அந்தத் தண்டனையிலிருந்து விடுதலை பெற்றிருந்தனர், ஆனால்
அவர்கள் பெயர்கள் வரலாற்றில் அழிக்கமுடியாதபடி இடம் பெற்று விட்டன. அப்படி ஒரு
வழக்கு பின்னாளில் நடந்தால் நமது நீதியரசர்கள் பலரும் நிச்சயமாக வரலாற்றில் இடம்
பெருவார்கள்; பெற வேண்டும்.
2040ல் அப்படி ஒரு வழக்கு நடந்தால் எனக்குச்
சொல்லியனுப்புங்கள்!!!









