Saturday, September 12, 2026

1399. ஜாதிவாரிக் கணக்கெடுப்பு:

‘சமூக நீதி’ என்ற பெயரில்
திரிந்து போன பால்!

ஆனந்த் டெல்டும்டெ 

தமிழாக்கம்: தருமி








மக்களுடைய எண்ணிக்கை கணிசமாகத் தெரிய வந்தால், அதை வைத்து மக்கள் தங்களுடைய நியாயமான உரிமைகளைக் கோரிப் பெறுவதற்குத் தயாராக இருப்பார்கள் என்று பலரும் ஒரு கற்பனையில் மிதக்கிறார்கள். அதுவே அவர்களுக்கு சுதந்திரத்தையும் துணிச்சலையும் கொடுக்கும் என்றும் கருதுகிறார்கள். 

இது, சில முக்கிய உண்மைகளைத் தவிர்த்து விட்டுப் பார்ப்பது போலத் தெரிகிறது. ஏனெனில், சாதிக் கணக்கெடுப்பு நடப்பதால் மட்டுமே - மக்களுக்குச் சரியான விகிதாச்சாரத்தோடு - அனைத்திலும் பங்கு கிடைக்கும் என்று நினைப்பதே தவறு. 

அதையும் கடந்து, பல்வேறு ஆதிக்கச் சக்திகளின் அதிகாரங்களையும் வசதிகளையும் கேள்வி கேட்கும் நிலை வர வேண்டும். சாதியக் கணக்கெடுப்பின் மூலம் அதனை ஒரு கருவியாகப் பயன்படுத்தி, சமூகத்தில் சம பங்கு கேட்கும் நிலை இயல்பிலேயே வர வேண்டும். இதிலிருந்து தெரியும் ஒரு செய்தி, தரவுகள் மட்டுமே போதாது; அவை வெறும் ஆயுதங்கள் மட்டுமே.

சாதிப் பட்டியலை வைத்துக் கொண்டு, அந்தப் படிநிலைகளை உடைக்காமல், ஆட்சியமைக்கும் முயற்சி மட்டும் இருப்பதால் எந்தப் பயனுமில்லை. சாதிகளை மக்களின் புற அடையாளங்களாகவும், மக்களின் சமூக எல்லைகளை வரைமுறைப்படுத்துவதற்கும் மட்டுமே பயன்படுத்தக் கூடாது.

முழு கட்டுரையை வாசிக்க:

https://dalitmurasu.com/posts/6aa3e4467854facd07144db8

முகநூல் இணைப்பு:

https://www.facebook.com/share/p/1EoUYAuajE/

1398. என் கதை - Dr. அழகேசன், தமிழ்ப் பேராசிரியர்




சாம்ஜி சாரிடம் பழகிய போது அவரது வெளிப்படையான செயலும், சுருக்கென்று தைக்கும் பேச்சும் என்னை ஈர்த்தன. Future ல் இப்படி shock தரும் அவரது எழுத்தும், உழைப்பும் விஸ்வரூபமெடுக்கும் என்று ....... அன்று நினைக்கவே இல்லை. ஆல்வின்

டோப்ளர் அன்று அறுதியிட்டது 'என்கதை' நூலுக்கும் ...
அப்படியே பொருந்தும். 

நீண்ட. ஆண்டுகளுக்குப் பிறகு டாக்டர் உவேசாவின் என் சரித்திரம் என்னும் படைப்பை இருமுறை கற்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. வியந்தேன்.அந்த வரிசையில் 'என்கதை'யை மும்முறை முற்றுகையிட்டேன்.படிக்கப் படிக்க, படித்தேன் என பிடித்தது.
ஒரே. ஒரு ஆய்வும் பாராட்டும்.......

திருக்குறளுக்கு மட்டுமே நூல் எழுதிய காலத்தில் ஒருappreciation அமைந்தது போலவே தங்களின் நூலுக்கும் பொலிந்தது போற்றுதலுக்குரியது.

நன்கு பிரித்து மேய்ந்த தருமி, ஒரு நல்ல மேய்ப்பர்.
தன்னையே அடையாளங் காணும் படைப்பாளன் தரணியில் தாழ்வதில்லை.ஏன் என்றால் தருமியைப் போன்றவர்கள் வாரிசுகளால் வார்க்கப்படுவதில்லை.
வாசிப்பவர்களால் பூசிக்கப்படுபவர்கள்.. வாழ்க.


நினைவுகளுடன்
தங்கள்.
ஆர்.கே.அழகேசன்

****

ப்ளாகர் காலத்தில் ஒவ்வொரு பதிவிற்குப் பின்னும் பல மிக நல்ல  பின்னூட்டங்கள் வருவதுவே வழக்கம். அந்த வழக்கம் இப்போது இல்லாமல் வெறும் ஸ்மைலிகளில் காலம் கரைகின்றது.

பழைய நினைப்புடா பேராண்டி என்ற நினைப்பில் உங்கள் கருத்துகளை இங்கே கீழே comments எழுத அழைக்கின்றேன். வாருங்கள் ...


 

Thursday, September 03, 2026

1391. என் கதை - நூல் வெளியீடு













செந்தில் வாழ்த்துரை







சந்திரசேகர் வாழ்த்துரை




நூல் வெளியீடு
























எங்கள் குடும்பம்















1397. என். கதை - சியாம் சுந்தர்

சார், வணக்கம்.                   

தாங்கள் எழுதிய 'என் கதை' போன வாரம் வரப்பெற்று. இன்றுதான் வாசிக்க ஆரம்பித்தேன். 'அப்பாவின் கல்யாண வைபோகமே ' படித்தேன். சில நிகழ்வுகளை உங்களோடு பகிர்ந்து கொள்ள விழைகிறேன்.  
போடி நாயக்கனூரில் பிறந்த என் தாய் எனக்கு தாயான பிறகு என் 2 வயதில் எனக்கு தங்கை பிறந்து சிறிது நாட்களிலேயே இருவரும் இறைவனடி சேர்ந்து விட்டார்கள். என் அய்யம்மா ( அப்பம்மா) அதன் பிறகு எனது 30 வயது வரை எனக்கு தாய்க்கு தாயாக என்னை சீராட்டி வளர்த்து விட்டு மறைந்தார்கள். 

எனது சித்தியுடன் வாழ்ந்த வாழ்க்கை அவ்வளவு சுகமில்லை.  எனது சித்தப்பாமார்கள், அத்தைமார்கள், என் அப்பப்பா மட்டுமே எனது உலகம்.  இன்று என் அப்பம்மாவின் இடத்தை விக்ரமசிங்கபுரத்திலிருந்து வந்த என் மனைவி பிடித்துக் கொண்டாள். ஆனாலும் என் தாய், தங்கையின் நினைவுகள் இன்றளவும், என்றளவும் இருக்கும். அவர்கள் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது.

Wednesday, September 02, 2026

1396. என் கதை - வேல்முருகன்




வணக்கம்!
காசியாபுரம், தற்போதைய தென்காசி மாவட்டம், ஆலங்குளம் தாலுகாவில், நல்லூர்–ஆலடிப்பட்டிக்கு அடுத்த தெருவிலுள்ள ஒரு சிறு கிராமம்.
எனக்கும் ஐயா தருமிக்கும் ஏற்பட்ட தொடர்பும், எங்கள் கிராமமான காசியாபுரத்தை Google தேடலும் ஏற்படுத்திக் கொடுத்ததுதான்.
11.09.2011 அன்று மின்னஞ்சல் மூலம் ஐயாவிடமிருந்து வந்தது: “தம்பி, இங்கே ஒரு காசியாபுரத்தான்” என.
2012-ல் மதுரையில் சந்தித்தோம்.
நெல்லைச் சீமையில் பிறந்தாலும், மதுரையம்பதியில் வளர்ந்ததாலும், கேள்விகள் கேட்கப்படும் என்பதால் “தருமி” என்பது புனைப்பெயராகாது; வினையோடு காரணப்பெயரானது.
“என்கதை” – வாழ்க்கை வரலாறு.
ஆம், அவரின் 80 ஆண்டு கால நினைவலைகள், 1940–1960 காலகட்டத்தின் வாழ்வியல் சூழலை மிக அழகாகப் பதிவு செய்துள்ளார்.
பத்திற்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதியுள்ளதால், (அரசியல், வரலாறு, மதம், ஆகியவற்றில் மொழிபெயர்ப்பு நூல்கள் மற்றும் கடவுள் எனும் மாயை, மதங்களும் சில விவாதங்களும் அவரின் சொந்த படைப்புகளும் உண்டு)அவரின் தமிழ் நடை படிக்கப் படிக்க சுவாரசியமாக இருக்கிறது.
இன்பமும் துன்பமும் தானே வாழ்வு!
சிறு வயதில் தாயை இழந்தது முதல், முதுமையில் கோவிட்-19 தாக்கியது வரை...
சின்னச் சின்ன ஆசைகள், ஜாவா பைக் முதல்...
80-ஐக் கடக்கும் போது, பழைய நினைவுகளை அசைபோடும் போது, நண்பர்களைத் தேடும் அனுபவத்தைப் பகிர்ந்துள்ளார்.
பித்தளை, செம்பு என்று புழங்கிய காலம்
கும்பா, சொளவு, அருங்காட்சியகங்களுக்குச் சென்றுவிட்ட பொருட்களை ஞாபகப்படுத்துகிறார்.
கடவுள் மறுப்பினால் குடும்பத்தினர், நண்பர்களிடம் எதிர்கொண்ட அனுபவத்தையும் பகிர்ந்துள்ளார்.
ஒரு சாமானியனின் வாழ்க்கையை உங்களோடு தொடர்புபடுத்திக்கொள்ளப் படியுங்கள்.
நன்றி.
அ. வேல்முருகன்






\\
ப்ளாகர் காலத்தில் ஒவ்வொரு பதிவிற்குப் பின்னும் பல மிக நல்ல  பின்னூட்டங்கள் வருவதுவே வழக்கம். அந்த வழக்கம் இப்போது இல்லாமல் வெறும் ஸ்மைலிகளில் காலம் கரைகின்றது.

பழைய நினைப்புடா பேராண்டி என்ற நினைப்பில் உங்கள் கருத்துகளை இங்கே கீழே comments எழுத அழைக்கின்றேன். வாருங்கள் ...