Wednesday, October 12, 2005

91. PASSING SHOT…

நேரம்; மதியம்: 3.48;ஞாயிற்றுக் கிழமை,09.10.’05.இன்றிரவோடு star of the week’ முடிகிறது.
உண்மையாகச் சொல்கிறேன். ஒரு மறக்க முடியாத வாரமாக இந்த நாட்கள் கழிந்தன. ஆனால், முடியும் தருவாயில் வந்த ஒரு பின்னூட்டம், பின்னூட்டமா அது என்னைக் கொஞ்சம் - கொஞ்சமென்ன கொஞ்சம் - நன்றாகவே தடுமாற வைத்துவிட்டது. எழுத நினைத்து வைத்தவைகளை எப்படி சொல்ல முடியுமோ, தெரியவில்லை. அந்தப் பின்னூட்டம் வந்து சில நிமிடங்களே ஆயின. இப்போது தொடர மனமில்லை. சிறிது நேரம் கழித்து வந்து தொடர்கிறேன்.
திங்கட்கிழமைகாலை: 8.5810.10.;05
இந்தப் பதிவு நட்சத்திரப் பதிவோடு சேராது என்றே எண்ணுகிறேன். நேற்று இரவு எழுத முயற்சித்தும் முடியாது போயிற்று.
நன்றாகச் சென்ற ஒரு வாரம், என்னை cloud9–ல் ஏற்றிவைத்த பின்னூட்டங்கள், நமக்கும் ஏதோ கொஞ்சம் எழுத வரும்போலும் என்ற நினைப்பு - இவையெல்லாமே கடைசி நேரத்தில் ‘மனிதன்’ என்ற பெருமனிதனால் சிதைந்தது வருத்தத்தையே தருகிறது. ஆனாலும் அந்த ‘மனிதனின்’ உயர் சிறப்புகளைப் பாடாமல் இருக்க முடியவில்லை. பாருங்களேன், தமிழ்மண நிர்வாகிகளுக்கும், காசிக்கும், மதிக்கும் வலைப்பதிவன் என்ற முறையிலும் தனிப்பட்ட முறையிலும் நன்றி சொல்லிக்கொண்டிருக்க வேண்டிய நேரத்தில் தன் புகழைப் பாட வைத்த அந்த ‘ம்னிதனின்’ திறமையையும், பெருமையையும் என்னென்று சொல்வது! வேறு எந்தப் பதிவில் போட்டிருந்தாலும் நான் அநேகமாக அதைக் கண்டு கொண்டிருக்கமாட்டேன். ஆனால்..
***அந்தப் பதிவைத் தேர்ந்தெடுத்த அவரின் மனிதாபிமானத்திற்கு என் வாழ்த்துக்கள்.இதுபோன்ற ‘வேலை’களைச் செய்ய எவ்வளவு அழகான, பொருத்தமான ஒரு பெயரைத் தன் புனைப்பெயராக வைத்துள்ளார்.***அந்த அறிவுக்கூர்மைக்கு தலை வணங்குகிறேன்.என்ன அழகான வார்த்தைகளால் என்னை ‘அர்ச்சித்திருக்கிறார்’.***அந்த அழகு மொழிக்கு அவரை வாழ்த்துகிறேன்.4 என்பது எங்கெங்கே பதிவில் வந்திருக்கிறது என்று தேடித் தேடி எடுத்து, தன் உயர்ந்த கருத்துக்களுக்கு அவைகளைச் சான்றாக நிறுவி உள்ளார்.***இந்தப் பொறுமைக்கும், அவரது ஆராய்ச்சித் திறனுக்கும் வாழ்த்துக்கள்.***அதற்கு மொந்தை எழுத்துக்களில் பதிலும் கேட்டிருக்கும் அவரது புலமைக்கு வாழ்த்துக்கள்.***எல்லாவற்றிற்கும் மேலாக, ஏன் நான் இப்படி எழுதியிருக்கிறேன் என்று ஒப்புதல்வாக்குமூலம் கொடுத்திருக்கிறாறே அந்த நேர்மைக்குத் தலை வணங்கித்தானே ஆக வேண்டும்.***என்னே ஒரு தெளிவு, என்னே ஒரு நேர்மை. என்னே ஒரு கொள்கைப் பிடிப்பு. இவரல்லவோ ஒரு தனி ‘மனிதப்பிறவி, கொள்கைக் கோமான்” வாழ்க அவர்தம் கொள்கையும்,தொண்டும்.************* ************
தமிழ்மணம் பற்றி…இல்லை இல்லை.. தமிழ்மணத்தில் உள்ள தமிழ் பற்றியும், வலைஞர் பற்றியும் எழுத ஆசை. மாற்றுக் கருத்துகள் இருந்தால், சினமற்று இது இவன் கருத்து என்று எடுத்துக் கொள்ளும்படி முதலிலேயே கேட்டுக்கொள்கிறேன்.
தமிழ்மணம் தமிழுக்குச் சேவை செய்கின்றதா? இது என் முதல் கேள்வி. இல்லை என்பது அநேகமாக பலரது பதிலாக …………….. இதுபோன்று பல் விதயங்களை எழுத எடுத்து வைத்திருந்தேன். இப்போது முடியவில்லை. வேறொரு சமயம் இதைத் தொடர்கிறேன்.நான் எழுத நினைத்தவைகளை எழுதுவேன். தயவசெய்து இப்போது பொருத்தருள்க. நட்சத்திரப் பதிவுகளை மட்டுமேயா வாசிப்பவர்கள் நீங்கள்.
********************* ***********************************************************
நட்சத்திரமாக்கி, என்னை ஒரு வாரம் தனி உயரத்தில் ஒளிர வைத்து, நித்தம் நித்தம் புத்தம் புது நண்பர்களை எனக்கு அறிமுகப்படுத்தி, அதையெல்லாம் விட எனக்கு இதுவரை இல்லாத தன்னம்பிக்கையைக் கொடுத்த தமிழ் மண நிர்வாகிகளுக்கும், நட்சத்திரங்களைத் தேர்ந்தெடுப்போருக்கும் என் நன்றி.
சிறப்பாக இருவர் பெயர் சொல்ல வேண்டும். முதல்வர்; காசி: எல்லோரும் அவர் தமிழ்மணத்திற்குச் செய்த, செய்துகொண்டிருக்கும் technical விதயங்கள் பற்றிச் சொல்வார்கள். அது என்ன மாதிரி க. கை. நா. -க்கு (கம்ப்யூட்டர் கை நாட்டு) அவ்வளவு புரியாது. ஆனால் என்னைக் கவர்ந்தது அவரது ‘என் கோடு; உன்கோடு; யூனிகோடு’ என்ற தலைப்பில் எழுதிய அந்தக் கட்டுரைதான். அது என்னை தமிழ்மணத்தின் மேல் காதல் கொள்ளச் செய்தது. கம்ப்யூட்டர் விதயங்களை இவ்வளவு எளிதாக, அதைவிடவும் சுவையாகவும் சொல்ல முடியுமா என்ற வியப்பு. வெறும் பாராட்டல்ல, காசி; 37 வருடங்களாக கல்லூரியில் ஆசிரியனாக இருந்தவன் என்ற முறையில் சொல்கிறேன். அந்தக் கட்டுரை it is a piece of art . இது போன்ற art of writing எல்லோருக்கும் வருவதில்லை. நீங்கள் அதே மாதிரி பல கட்டுரைகள் எழுதி - என் போன்றோருக்காக மட்டுமல்ல - உங்கள் திறனையும் தமிழ் உலகமே அறியச் செய்ய வேண்டும். தொடர்ந்து இந்த சேவையைத் தொடர வாழ்த்துக்கள். நிச்சயமாக இதை ஒரு வெறும் புகழ் மொழியாக எடுத்துக் கொள்ள வேண்டாம்.
மதி, முதலில் என் ‘புதுவீடு’ நன்றாக இருக்கிறது’ என்று சொன்ன பலரின் பாராட்டுக்களை உங்களுக்குத் திசை திருப்பி விடுகிறேன். அந்த process-ல் நான் எப்படிப்பட்ட க.கை.நா. என்பதை உங்களிடம் நன்கு நிரூபித்து விட்டேன் என்று நினைக்கிறேன். செய்த உதவிகளுக்கு - உங்கள் உடல் நலக் குறைகளோடும் - மிக்க நன்றி. இன்னும் உதவி கேட்டு வருவேன்! இனிய சேதியைக் கொண்டு வந்ததை எப்போதும் நினைவில் வைத்திருப்பேன். ஆனாலும் உங்களுக்கு என்னைப்பொருத்தவரையில் அசாத்திய பொறுமை. அதே சமயம் உங்கள் கோபம் (என்னிடமில்லை; நான் பார்த்த வேறிடங்களில்) மிகவும் நன்றாக இருக்கிறது!
அனைத்து நண்பர்களே, ஒன்று பார்த்தீர்களா? நீங்கள் யாரோ, நான் யாரோ என்றிருக்கும்போது ஒரே ஒரு பின்னூட்டம் நம்மை எவ்வளவு நெருங்கி வரச்செய்து விடுகிறது. ஒரு மடலில் நண்பர்களாகிவிடும் மாயம் நம் தமிழ்மணத்தில் எவ்வளவு சாதாரணமாகி விடுகிறது. ஒரே மடலில் ஒருவரை ஒருவர் சர்வ சாதாரணமாகப் பெயர் சொல்லி அழைத்து, காலை வாரி, கேலி செய்து, லொள்ளு பண்ணி,…ஓ, என்ன ஒரு இனிய உலகம் இது. நான் இப்போதெல்லாம் காலங்கார்த்தால கணினி முன் உட்காரப் போகும் முன் வீட்டில் சொல்வது: ‘ என் நண்பர்கள் காத்துக் கொண்டிருப்பார்கள்; போய்ப் பார்த்துட்டு வர்ரேன்’. அது உண்மைதான். சிலரின் ஓரிரு வார்த்தைகள்கூட மனசுக்குள்ள ஆழமா போய் உக்காந்துக்குது. ‘ஆத்மார்த்தமான’ அப்டின்னு சொல்வாங்களே, அது மாதிரி நிறைய பேரை நான் மனசுக்குள்ள வச்சிருக்கேன்; எப்போவும் வச்சிருப்பேன். இந்த உறவுகள் நிலைத்திருக்க, நீண்டிருக்க ஆசை. அடிக்கடி ‘பேசிக்குவோம்’ - அதான் இருக்கே நம்ம தமிழ்மணம். நன்றியெல்லாம் நண்பர்களுக்குள் தேவையா என்ன?
என்றும் அன்புடன்………….தருமி
Oct 10 2005 10:04 am நட்சத்திரப் பதிவுகள edit this
Rate this post at http://www.thamizmanam.com/ Current rating is:
(இதுவரை 2 பரிந்துரைகள்)ஹலோ, வந்தது வந்தீங்க; வந்ததுக்கு ஒரு வேட்டு / வோட்டு போட்டுட்டு போறதுதானே! சும்மா அப்டியே போய்ட்டா எப்படி??
22 Responses
Josaph Irudayaraj Says: after publication. e -->October 10th, 2005 at 1:06 pm e
கடந்த வாரம் வந்து எங்களோடுஉறவாடியதற்கு நன்றி!
உங்கள் அநுபவமும்,அறிவும், வெகு லாகவமாகஉங்களுக்கு உங்கள் எழுத்துகள் வழியாகவெளியில் வருது. கற்றவர் கற்றவர்தான்,கைநாட்டு (என்னை போன்று) கை நாட்டு தான்.
வாழ்த்துகள்!
ஓரு பாட்டு பாடிக்கிட்டே போயிடவா? !!!!!
உறவுகள் தொடர்கதைஉணர்வுகள் சிறு கதைஒரு கதை இன்று முடியலாம்ஒரு கதை இன்று தொடங்கலாம்இனியெல்லாம் சுகமே!…..
dharumi Says: after publication. e -->October 10th, 2005 at 2:32 pm e
ரொம்பவே இன்சல்ட் பண்ணீட்டீங்க ஜோசஃப்…ஒரு கதை இன்று முடியலாம்இனியெல்லாம் சுகமே!…..”………….இதுக்கென்னங்க அர்த்தம்!! ம்ம்!!!
அன்புடன்…….தருமி
அது என்ன, ஜோச்ஃப் -க்கு இந்த spelling? அதப்பத்தி அட்டாக் பண்ணி எழுதணும்னு நினச்சிக்கிட்டு இருக்கேன்..
வசந்தன் Says: after publication. e -->October 10th, 2005 at 6:02 pm e
தருமி. மிக்க நன்றியும் பாராட்டுக்களும்.
ஒன்று சொல்வேன். மனிதன் என்ற பெயரில் எழுதும் நபரைப்பற்றி அலட்டிக்கொள்ள வேண்டாம்.உங்களுக்கு ஞாபகமிருக்கிறதா, முன்பு ஆபாசப்பின்னூட்டங்கள் வலைப்பதிவுகளில் உலவியது?இந்த ‘மனிதனும்’ அந்த வகைப்பின்னூட்டங்கள் எழுதியவர்தான். ஓரிரு இடங்களில் மிக அருந்தலாக சாதாரணப்பின்னூட்டங்களும் இட்டுள்ளார். எனவே அந்தப் பெயரில் வருவதைக் கருத்திலெத்து உங்கள் நேரத்தையும் சக்தியையும் வீணாக்காதீர்கள்.
padma Says: after publication. e -->October 10th, 2005 at 6:23 pm e
நல்ல வாரம் தருமி. நிறைய பின்னூட்டம் இடவில்லை என்றாலும் படித்தேன்.
Awwai Says: after publication. e -->October 10th, 2005 at 7:34 pm e
Dear Dharumi! you disappointed me! I do agree that Mr.Manithan touched a very senstitive topic. But I don’t understand why it should bother you so much!Suriyanai paarththu Naai kuraiththaal enna,Star-ai paarththu manithan muraiththaal enna?“மாற்றுக் கருத்துகள் இருந்தால், சினமற்று இது இவன் கருத்து என்று” neengal vittirukalame!
Why did you forget your 10th commandment (10.Nothing matters. zen, பதறுவதால் ஒன்றும் நடக்கப்போவதில்லை).—When you were considered ’star of the week’, it is not that you were MADE into a star for a week; rather, it is recognition of the star (writing) qualities in you. The recognition implies that you were, are and will continue to be a star, irrespective of the readership!So, don’t get bored of writing; continue writing, please. You have made many of us an addict (I used to visit your blog when I had free time. Now-a-days it is part of my morning ritual!).If you hit “writer’s block”, you are permitted a short break to refresh yourself. But be back.anbudan awwai.
PS: In a personal mail, kindly tell me how to use Tamizh font in gmail.
dharumi Says: after publication. e -->October 10th, 2005 at 8:06 pm e
என்ன சொல்லுங்கள்…’என் பையனே’வந்து மண்டையில் தட்டி, என் ‘கட்டளை’யை எனக்கே திருப்பிச் சொல்லும்போதுதான் கூடக் கொஞ்சம் உறைக்கிறது.
அவ்வை, ஆமப்பா../ஆமா..கொஞ்சம் தேவையில்லாமல்தான் தடுமாறிட்டேன். மன்னிச்சுக்கோ. i will go steady; ok?
முகமூடி Says: after publication. e -->October 10th, 2005 at 11:09 pm e
தருமி… உங்கள் பதிவுகள் அனைத்தும் படித்தேன். சிறப்பான பதிவுகள். மோசமான பின்னூட்டங்கள் எல்லாம் கண்டுகொள்ளாதீர்கள். வலைப்பூ அரசியலில் சகஜமப்பா என்று ஜாலியாக இருங்கள். இந்தி எதிர்ப்பு மாதிரியான கட்டுரைகள் அதை பற்றி கேள்வி மட்டுமே பட்ட்ருந்த என் போன்றோருக்கு ஒரு புதிய பரிணாமத்தை காட்டியது. உங்கள் அனுபவங்கள் பதிவுகளாக எங்களுக்கு தேவை.
தெருத்தொண்டன் Says: after publication. e -->October 10th, 2005 at 11:12 pm e
நல்ல வாரம் நன்றி சார்.
துளசி கோபால் Says: after publication. e -->October 11th, 2005 at 12:20 am e
உங்க நட்சத்திரவாரம் நல்லாவே போச்சு தருமி.
இன்னும் எழுதியிருக்கலாம்.வாழ்த்துக்கள்.
anony Says: after publication. e -->October 11th, 2005 at 8:36 am e
Avvai,
Type your tamil text here….,
http://www.jaffnalibrary.com/tools/Unicode.htm
And then C&P into gmail form.
anony Says: after publication. e -->October 11th, 2005 at 8:38 am e
Avvai,
Type your tamil text at http://www.jaffnalibrary.com/tools/Unicode.htm
and C&P into gmail.
anony Says: after publication. e -->October 11th, 2005 at 8:44 am e
தருமி,
நானும் இதுபோல் நிறைய வலைத்தளங்களில் நட்பு பாராட்டிவிட்டு பின்பு சுத்தமா அந்தப் பக்கமே போகாம இருந்திருக்கேன். வலை உலகம் ஒரு மாய உலகம். முகத்துக்கு முகம் பார்க்காமல் பாராட்டும் நட்பு மறையும்போது எந்த வருத்ததையும் தராது. இன்று நான் முகமின்றி தமிழ்மணத்தில் உலாவுவதற்க்கும் அதுவே காரணம்.
இந்த போக்கை புரிந்துகொள்ள முடியாமல் அவஸ்தைப்படுபவர்களில் முதன்மையானவர் ‘சாரு நிவேதிதா’.
அன்புடன்,உங்கள் ரசிகன்
Josaph Irudayaraj Says: after publication. e -->October 11th, 2005 at 11:50 am e
ஐயோ! என்னாங்க பெரிய வார்தையெல்லாம்…” இன்சல்ட்டு” கின்சல்ட்டுனுகிட்டு, அப்டியெல்லாம் ஓன்னுமில்லை
உங்கள் வரிகளை வாசித்துக்கொண்டே வரும் போது தீடீரென்று இந்த பாட்டு மனசுக்குள் வந்துச்சு, சும்மா அப்படியே கிறுக்கிவிட்டுட்டேன் அவ்வளவு தான்.
//சிலரின் ஓரிரு வார்த்தைகள்கூட மனசுக்குள்ள ஆழமா போய் உக்காந்துக்குது. ‘ஆத்மார்த்தமான’ அப்டின்னு சொல்வாங்களே, அது மாதிரி நிறைய பேரை நான் மனசுக்குள்ள வச்சிருக்கேன்; எப்போவும் வச்சிருப்பேன்.//
இதுக்கு தான் ” இனியெல்லாம் சுகமே!… அப்படீன்னது.
//இந்த உறவுகள் நிலைத்திருக்க, நீண்டிருக்க ஆசை.//
இதுக்குத்தான் “ஒரு கதை இன்று தொடங்கலாம்!…” அப்படீன்னது,(புதுக்கதை யொன்று தொடங்கலாம் ன்னு இருந்திருந்தா நல்லா இருந்து இருக்கும் போல)
//இன்றிரவோடு star of the week’ முடிகிறது.//இதுக்கு தான் ” ஒரு கதை இன்று முடியலாம்..” அப்படீன்னது.
மற்றும் படி வேறு ஒன்னும் கிடையாதுங்க! நமக்கு பொடி வச்சு எல்லாம் பேச தெரியாதுங்க. மனசுக்கு பட்டத படக்குன்னு சொல்லிபுடுவேன், அம்புட்டு தாங்க!
மனசு பொசுக்குன்னு ஆகியிருந்தா மன்னிச்சுகோங்க.
dharumi Says: after publication. e -->October 11th, 2005 at 12:02 pm e
ஐயோடா…தம்பி ஜோச்ஃப்,நான்கூட ஒரு ‘பொடி வச்சி’ ஜோக் அடிச்சேன்’யா! (இப்படி ஜோக் அடிச்சிட்டு, நான் அடிச்சது ஜோக்கு’ப்பான்னு சொல்ற தல எழுத்து வாத்தியார்களுக்கே வாச்சது!!)நல்லா பாருங்க நீங்க எழுதின பாட்டின் கடைசி 3 வரிகளில் நடு வரியை உருவிட்டுப் போட்டதும் பாட்டின் அர்த்தம் மாறிச்சே, கவனிக்கலையா.நான் எதையும் ரொம்ப சீரியஸா எடுக்கிற ஆளுன்னு தப்பா ஒரு நினப்பு வர்ர மாதிரி நடந்துகிட்டேன். இல்ல..? அப்படியெல்லாம் இல்லன்னு மக்களுக்குப் புரியவைக்க இன்னும் நாளாகும்போல.அது சரி, அந்த spelling விஷயம் என்ன ஆச்சு? பதிலேஇல்ல?
Suresh - Penathal Says: after publication. e -->October 11th, 2005 at 12:31 pm e
(இப்படி ஜோக் அடிச்சிட்டு, நான் அடிச்சது ஜோக்கு’ப்பான்னு சொல்ற தல எழுத்து வாத்தியார்களுக்கே வாச்சது!!)அப்படிப் போடுங்க!!
same side goal-aa?
dharumi Says: after publication. e -->October 11th, 2005 at 12:48 pm e
“same side goal-aa? ”
இல்ல சுரேஷ்,
CONFESSION!!
ஒண்ணு ஞாபகத்திற்கு வருது; எங்க P.U.C. தமிழ் ஆசிரியர் மறுபடியும் இளங்கலை முதலாண்டுக்கும் வகுப்பெடுக்க வந்தார்.(வாத்தியார்கள் எல்லோரும் ஒரு stock of jokes வச்சிக்கிட்டு அப்பப்போ ஒண்ணு ஒண்ணா எடுத்து விடறதுதான வழக்கம். அடுத்த confession!) நம்ம வாத்தியாரும் அதே மாதிரி சில ஜோக்குகளை repeat பண்ணுவார். இன்னொரு mannerism அவருக்கு. ஒவ்வொரு ஜோக்குக்கும் முந்தி மூக்கைச் சொறிந்து கொள்வார். ஆனா அவரை எங்க எல்லாத்துக்கும் பிடிக்கும். அதனால அவரோட பழைய மாணவர்கள் எல்லோரும் அவர் மூக்கைத்தொட்டதும் தயாராயிடுவோம்; மற்ற புது மாணவர்களோடு சேர்ந்து சிரித்துக் கொள்வோம். ஏதோ நம்மாலான உதவி, வாத்தியாருக்கு.
நம்ம கிளாஸ்பத்தி நம்ம பசங்ககிட்டதான கேக்கணும்.
தாணு Says: after publication. e -->October 11th, 2005 at 2:28 pm e
உங்க எழுத்துக்களெல்லாம் வாசித்தாலும் இடையிடையே பின்னூட்டமிட நேரமிருப்பதில்லை. சில நாள் சேர்த்துவைச்சுக் கூட வாசிப்பேன். ஆனாலும் இவ்ளோ வயசாகியிருக்கும்னு நெனைக்கலை, உங்கள் எழுத்துக்களிலிருந்த இளமையைப் பார்த்து!
இன்னும் இளமையான சண்டை சச்சரவுகளுடன் சந்தியுங்கள்.
வசந்தன் Says: after publication. e -->October 11th, 2005 at 4:46 pm e
//இன்னும் இளமையான சண்டை சச்சரவுகளுடன் சந்தியுங்கள். //
தாணு சொல்லுறதும் சரிதான். சண்டை சச்சரவெண்டு வந்தால்தான் இளமையாயிருக்கிறமாதிரிக் காட்டலாம்.அதால இனி சண்டை பிடிக்கிற தருமியப் பாக்க ஆசையாக் கிடக்கு.
dharumi Says: after publication. e -->October 11th, 2005 at 6:29 pm e
தாணுகூட சண்டை போடலாம்; வசந்தன் கூட சண்டை போடலாம்; நம்ம லொள்ளு பார்ட்டிக கூட சண்டை போடலாம்..ஆனா, மனிதர்கள் எல்லாரும் அதே மாதிரியா, என்ன?
Awwai Says: after publication. e -->October 11th, 2005 at 6:45 pm e
“நம்ம கிளாஸ்பத்தி நம்ம பசங்ககிட்டதான கேக்கணும்.”Suppppera irukkum.You feel relaxed and well rested after his class!
Awwai Says: after publication. e -->October 11th, 2005 at 7:01 pm e
பெயர் இல்ல பெருமகனுக்கு மிக்க நன்றி! இப்படி தமிழ்ல எழுதுவது இனிமையக இருகிறது!
ஸாம்-அய்யாவின் வகுப்புகள் மிக நிறைவாக/ நித்திரையாக இருக்கும். (இன்த ஆளூ எழுதுவதே ( இவ்வளவு சுவைனா வகுப்பு எப்படி சூப்பரா இருன்துருக்கும் யொசிச்சு பாருங்க!
பிழைகளுக்கு மன்னிக்கவும். விரைவில் சரியாக டைப் அடிக்க கற்று கொள்வேன்.
dharumi Says: after publication. e -->October 11th, 2005 at 7:52 pm e
அடப் பாவி அவ்வை,கெடுத்தியே காரியத்தை…ஏதோ இது நாள்வரை ஆங்கிலத்தில் மட்டும் எழுதி வந்தாய்; இப்போ தமிழ்ல எழுத ஆரம்பிச்சிட்டியா…இனி எம்பாடு அவ்வளவு தான்!
இதுக்காகவாவது பெனாத்தல் சுரேஷின் மாணவன் யாரையாவது பிடிக்கணும்..

Monday, October 10, 2005

90. சினிமாவும், விமர்சனக்காரர்களும்…

*
*

நம்ம தமிழ்ப்படங்கள் ஏனிப்படி இருக்கின்றன என்ற அங்கலாய்ப்பு நிறைய பேருக்கு இருக்கோ என்னவொ, எனக்குண்டு. நம் தமிழ்ப் படங்களை இரண்டே வகையாய் பிரிக்கலாம்; இரண்டுமே படங்கள் எடுக்கும்ஆட்களின் sincerity பற்றியது. முதல் வகை: புத்தியைப் பயன்படுத்தி, கொஞ்சமாவது லாஜிக்கோடு எடுக்கப்படும், அல்லது எடுக்க முயற்சிக்கப்படும் சீரியஸ் படங்கள். இரண்டாவது வகை: முட்டாள்களால், முட்டாள்களுக்காக, முட்டாள்தனமாக எடுக்கப்படும் படங்கள். இதில் கசப்பான உண்மையென்றால், எம்.ஜி.ஆர்., அதற்குப் பிறகு ரஜினி (அவரின் முதல் காலகட்டப் படங்கள் தவிர), இப்போது விஜய் என்ற “சகாப்தங்களின்” படங்கள் எல்லாமே இந்த இரண்டாம் வகையில்தான் வருகின்றன. என்ன எடுத்தாலும், கதையென்று ஒன்று இருந்தாலும் இல்லாவிட்டாலும், லாஜிக் என்பதின் அறிகுறிகூட இல்லாவிட்டாலும் இவர்களின் ‘முகங்களுக்காகவே’ படங்கள் ஓடுவது மக்களின் முட்டாள்தனம்தான். ஆனாலும், மக்கள் இதைத்தான் விரும்புகிறார்கள் என்று இயக்குனர்கள் சொல்வது அவர்களது இயலாமையை மறைத்துக் கொள்ள அவர்களே வைக்கும் ஒரு விவாதம்.
வீணை செய்யும் ஒரு கலைஞனால் வீணைதான் செய்ய முடியும். அகப்பைக்கு நல்ல டிமாண்ட் இருக்குன்னு சொல்லி மாதத்திற்கு ஒரு வீணை செய்யும் அவனால் தினத்திற்கு நாப்பது அகப்பைகள் செய்ய முயன்றாலும் முடியாது; செய்யவும் மாட்டான். பிரச்சனை என்னவென்றால் நம்மிடம் இருப்பதெல்லாம் அகப்பைகள் மட்டுமே செய்யத் தெரிந்தவர்கள்தான்; வீணை ஆக்கும் கலைஞர்கள் அல்ல. ஒரு அடூர் கோபாலகிருஷ்ணனை ஜனரஞ்சகமாக ஒரு ‘ஆக்ஷன் மூவி ‘ எடுக்கச் சொல்லுங்களேன். அந்தப் ‘புலிகள்’ புல்லைத் தின்பதில்லை.


கொடுக்கும் காசுக்கு டைரக்டர் சொல்வதைச் செய்து விட்டுப் போகிறவர்கள் நடிகர்கள். சிவாஜி கணேசனையும் சேர்த்து (with due apologies to my favourite Sivaji ) நம்மூர் நடிகர்களுக்கென்று தனி புத்திசாலித்தனம் ஏதும் இல்லையென்பதே உண்மை - கமல், நாசர் போன்றவர்களைத் தவிர. அப்படி இருந்திருந்தால் சிவாஜி சிகப்புக் கலர்ல விக் வச்சு நடிப்பாரா? இல்லை, ஓட்டைப் பல்லுடன் இருபது வயது கல்லூரிக் கதநாயகனாக வந்திருப்பாரா? மார்லன் பிராண்டோவின் ‘On the water front’ என்ற அவருக்கு ஆஸ்கார் வாங்கித் தந்த படத்தை இதுவரை இருமுறை பார்த்தபோதும் இது மாதிரி என்ன, இதைவிட நம் நடிகர் திலகத்தால் சிறப்பாக நடிக்க முடியாதா என்ன என்ற நினைப்பு உடனே வரும். ஆனால் அவர் துரதிருஷ்டம் இங்கே பிறந்து, குடத்தில் இட்ட விளக்காகிவிட்டாரே என்று வருந்துவேன்.


இப்போதுள்ள நடிகர்கள் இன்னும் கொஞ்சம் முயற்சி எடுக்கலாம்தான். புது வித கதாபாத்திரங்களில் நடிக்க மாட்டேன் என்று ‘நல்ல′ தீர்மானம் மேற்கொண்டுள்ள விஜயைத்தவிர இப்போதுள்ள நடிகர்கள் - ஓரளவு புதுக் கதைகளில் ஆர்வம் காண்பிக்கத்தான் செய்கிறார்கள். புதுக் கருத்துக்களோடோ, புதுக் கதைகளோடோ டைரக்டர்கள்தான் வருவதில்லை. Established directors என்று, சரியோ தப்போ பெயர் வாங்கி விட்ட மணிரத்தினத்தின் படத்திலும் ரெண்டு டப்பா பாட்டு, டான்ஸ் இருக்கின்றதென்றால் அவரை எப்படி பெரிய இயக்குனர் என்று அழைக்கிறார்களோ, தெரியவில்லை. இன்னும் ஒரு பாட்டு இல்லாத படத்தை எடுக்கத் தயங்கி, அதைப்பற்றிப் பேசிக்கொண்டு மட்டும் இருக்கிறவர்தானே அவர்.

டைரக்டர்கள் அப்படி;நடிகர்கள் இப்படி;படம் பார்க்கும் மக்கள் எப்படி?
கட்டபொம்மன் படம் பார்த்துவிட்டு வெளியே வரும்போது, ‘இதே படத்தில மட்டும் நம்ம வாத்தியார் நடிச்சிருந்தா, தூக்கில போட்டுட விட்டுருப்பாரா?’-ன்னு தியேட்டரைவிட்டு வெளியே வரும் கும்பலில் ஒரு 30-35 வருஷத்திற்கு முன்பு ஒரு குரல். இப்போது காதல் படம் பார்த்துவிட்டு வரும்போது, ‘படம் நல்லாத்தான் இருக்கு; ஆனா ஒரு டூயட் பாட்டாவது இருந்திருக்கலாம்’ என ஒரு விமர்சனம்!


அப்படியானால் மக்கள் சினிமாவைப் பொறுத்தவரை மாறவேயில்லை என்றுதானே பொருள். கொஞ்சம் கொஞ்சம் வித்தியாசம்: நாயகி தண்ணீருக்குள் -முழங்கால் ஆழம்தான் - விழுந்துவிடுவாள்; குதிரையில் நாயகன் பாட்டுப் பாடிக்கொண்டே வருவார்; கதாநாயகியைத் தொட்டுத் தூக்கிவிடுவார்; ஆஹா, என்னைத் தொட்டுவிட்டீர்கள்; ஆகவே நீங்கள்தான் இனி என் பிராணநாதன் என்று சொல்லி, ‘நாதா’ என்பார் நாயகி. நமது நாயகரும் உடனேயே, ஆ என் நாதி…என்று ஒரு பாட்டு எடுத்துவிடுவார். - இது அன்றைக்கு. நடுவில் கொஞ்ச நாள், கதாநாயகன் அதே மாதிரி வருவார் - ஒரே ஒரு வித்தியாசம் - காரில் வருவார்…வந்து கொண்டே இருப்பார். இந்தப் பக்கம் இடுப்பில் குடத்துடன் தனியாகக் காட்டுக்குள் அங்கிருக்கிற (காகிதப்)பூ ஒன்று விடாமல் பறித்துப் போட்டுகொண்டே நாயகி பாட்டுப் பாடி வருவார். தலைவரின் கார் ரேடியேட்டர் சூடாகி நின்று விடும்; டால்டா டப்பாவுடன் கதாநாயகர் காட்டுக்குள் நுழைவார்; தலைவனும் தலைவியும் பார்த்துக் கொள்வார்கள்; தலைவர் உடனேயே அத்தானாகி விடுவார்; ரேடியேட்டரும், கதாநாயகியின் வயிரும் நிறைந்துவிடும். கடைசியில் ‘சுபம்’தான்! இப்போது, காலேஜ், கம்ப்யூட்டர் கிளாஸ், இவர் கனவில் அவர், அவர் கனவில் இவர், கடைசியில் கதையை எப்படி முடிப்பது என்று தெரியாமல் தலைவர் அங்கு ஒரு ஸ்டண்ட் போட, கதாநாயகி எங்கிருந்தோ பாட, ரிசீவர் இல்லாமலே தலைவருக்கு அந்தப் பாட்டு கேட்க இருவரும் மைல் கணக்கில் ஓடி வந்து, மூச்சு வாங்கிக்கொண்டே அருகருகில் சிறிது நேரம் நின்று நம்மைச் சோதித்துவிட்டு, அதற்குப் பிறகு சடாரென ஈருயிரும் ஓருயிராக ஆகி நம்மை சிலிர்க்க வைத்துவிடுவார்கள்.


இப்படி படம் சம்பந்தப்பட்டவர்கள் எல்லோரையுமே குற்றவாளிக் கூண்டில் நிற்க வைக்க முடிந்தாலும் A1, அதாவது accused 1 யார் தெரியுமா? சினிமா விமர்சகர்கள். இவர்களில் இரண்டு வகை. முதல் வகை - அக்கிரா குரோசோவாவில் ஆரம்பித்து, வாய்க்குள்ளும் நம் காதுக்குள்ளும் நுழையாத பெயர்களாகத் தேடிப் பிடித்துப் பொறுக்கி எடுத்து, (நான் மட்டும் அவங்களுக்கு கொறஞ்சவனா என்ன..?) !பெலினி, கைஸ்லொவ்ஸ்க்கி, டர்கோவ்ஸ்க்கி,டாரன்ரினோ (-இந்தப் பேருக போதுமா; இன்னும் கொஞ்சம் வேணுமா…?) நமக்கு இவர்கள் என்ன சொல்ல வருகிறார்கள் என்றே தெரியாதபடி இன்னும் சர்ரியலிஸ்ம், நியோ சரிரியலிஸ்ம், எக்ஸிஸ்டென்ஷியலிஸ்ம்….இப்படி கொஞ்சம் - கொஞ்சமென்ன கொஞ்சம், நிறையவே போட்டு - கடைசியில ஒரே ‘மசாலா’ வாடை மட்டும் அடிக்கும்; சரக்கு என்னென்ன தெரியாமலே போய்டும். உதாரணத்துக்கு ஒன்றே ஒன்று சொல்லட்டுமா..?


அரவிந்தனின் ‘சிதம்பரம்’ ஒரு நல்ல படம். மலையாளப் படம். இண்டர்வெல்லில் வெளியே நின்றப்போ, பக்கத்தில் நின்றவர் ஒரு தோழமையோடு, இது என்னங்க படம், இப்படி இருக்கு என்க, அதில் உள்ள சில நல்ல விதயங்ளை எடுத்துச் சொன்னதும், ‘ஓ, படம்னா இப்படியெல்லாம் பார்க்கணுமோ’ என்று நல்ல படியாகச் சொல்லிவிட்டுப் போனார். ஆனால் அதற்குப் பிறகு ஒரு விமர்சனம் வாசித்தேன். என்னென்னமோ எல்லாமே என் தலைக்கு மேலே போச்சு. அதிலும் கடைசியாக, தான் செய்த தவற்றினால் ஏற்பட்ட மன உளைச்சலில் தேசாந்திரியாகத் திரியும் நாயகன் (கோபி) சிதம்பரம் கோவில் முன்னால் நாயகியைப் (ஸ்மித்தா பட்டேல் ?) பார்த்து…’அம்மா’ என்று அடிவயிற்றிலிருந்து குரல் எழுப்புகிறான். காமிரா அப்படியே கோவில் கோபுரத்தைக் கீழிருந்து மேல்வரை காண்பித்து, வானத்தில் போய் முடியும். இந்த சீன் நன்றாகவே இருந்தது. ஆனால் விமர்சனக் கர்த்தா அந்தக் கோபுரத்தைக் காண்பிப்பது phallic symbol என்றும்…symbolism… அது..இதுன்னு எழுதியிருந்தார். இந்த ‘இட்டுக் கட்டுகள்’ கொஞ்சம் அதிக பட்சமாக எனக்குத் தோன்றியது.


இன்னொரு வகை விமர்சனங்கள் நம் தமிழ் ஊடகங்களில் வருபவை. டி,வி.க்காரர்களை ஒன்றும் சொல்லவும் முடியாது. அவர்கள் சினிமாத் துறையினறைத் தான் நம்பி காலம் தள்ளுகிறார்கள். உண்ட வீட்டுக்கு இரண்டகம் நினாக்கலாமா? செஞ்சோற்றுக் கடன் தீர்க்கிறார்கள் அவர்கள். அவர்களைச் சொல்லிக் குற்றமில்லை. அதிலும் விஜய் டி.வி.-யில் ‘மதன் திரைப்பார்வை’ என்று ஒரு நிகழ்ச்சி வருகிறதே; சரி, இது கொஞ்சம் வித்தியாசமாக இருக்கும் என்று தப்புக் கணக்குப் போட்டு விட்டேன். அவர் எவ்வளவு ‘காலிக்குடம்’ என்பது அதில்தான் தெரிந்தது. பாவம், நல்ல கார்ட்டூனிஸ்ட்!


அடுத்தது நமது பத்திரிகைகள். இதிலும் இரண்டு வகைகள். சிறு பத்திரிகைகள் - இவை யாருக்கும் புரியாத மொழியில் technical jargons எவ்வளவு போட முடியுமோ அவ்வளவு போட்டு, சமயம், சாதி, வர்க்கப் போராட்டம் என்று ஏதேதோ எழுதி ஒரு குழப்பு குழப்பி விடுவது அந்த ரகம். ஜன ரஞ்சகப் பத்திரிகைகள் வாசகர்களைத் தரை மட்ட ரசிகர்கள் என்ற நினைப்பிலேயே எழுதப்படும் குப்பைகள். நான் கொஞ்சம் வாசிக்கும் ஆனந்த விகடன் கல்லூரிகளில் உள்ள சில ஆசிரியர்கள் மதிப்பெண்கள் போடுவது போல மார்க் போடுகிறார்கள். குறைவாகப் போட்டால்தானே மாணவன் என்ன இது என்று ஒருவேளை ஏதாவது கேட்கக்கூடும். எல்லோருக்கும் அள்ளிப் போட்டுவிட்டால் எல்லோருக்கும் பிடித்த ‘நல்ல வாத்தியாராக’ இருக்கலாமே, அது மாதிரி என்ன குப்பையாக இருந்தாலும் 35-40 என்று போட்டு, நல்ல படமாக இருந்தாலும் 49 என்று போட்டு விட்டால் சரியாப் போச்சு என்ற தத்துவம்!


புதுப்படங்கள் வருவதற்கு முன்பு படத்தோடு தொடர்புள்ளவர்கள் அதைப் பற்றி சொல்வதை கேட்டிருப்போம். அது நமது அரசியல்வாதிகள் ஓட்டுக் கேட்டு வரும்போது பேசுவது போலவே இருக்கும். ஓட்டுக்கேட்டு வருபவன் எல்லா சாராருக்கும் தொண்டாற்றப் போவதாக உறுதிமொழிகளை - சூடத்தில் அடித்து சத்தியம் செய்யாத குறையாக - அள்ளித் தெளிப்பார்கள்.அதைப் போலவே, இந்த படத்தில நீங்க எதிர்பார்க்கிற எல்லாமே இருக்கும். நகைச்சுவை,மனசதொட்ற சென்டிமெண்ட்ஸ், ஆக்ஷன், இப்படி எல்லாமே இருக்கும் என்பாங்க.


இப்படி ‘மசாலா’ படங்களாக என்னும் எத்தனை கால்த்திற்குத்தான் பார்த்துக்கொண்டே இருக்கப் போகிறோம். ஆங்கிலத்தில் சொல்வார்களே -genre - என்று அதுபோல வகைப்படுத்தப் பட்ட படங்களைப் பார்க்கும் காலம் வரவே வராதா? நம் இந்தியப் படங்களில்தான் இப்படி ‘எல்லாமும்’ சேர்ந்த சினிமாக்கள் வருகின்றன. action, thriller, musical, mystery, suspense, western, war stories என்று எத்தனை வகைகள் மற்ற எல்லா மொழிப்படங்களிலும் இருக்க
………….’மனிதனின்’ பின்னூட்டத்தால் ஏற்பட்ட தடங்கல்………..பின் தொடர்கிறேன்.
Oct 10 2005 07:25 am சினிமா and நட்சத்திரப் பதிவுகள edit this
Rate this post at http://www.thamizmanam.com/ Current rating is:
(இதுவரை 0 பரிந்துரைகள்)ஹலோ, வந்தது வந்தீங்க; வந்ததுக்கு ஒரு வேட்டு / வோட்டு போட்டுட்டு போறதுதானே! சும்மா அப்டியே போய்ட்டா எப்படி??
5 Responses
ஜோ Says: after publication. e -->October 10th, 2005 at 7:42 am e
தருமி,சுவாரஸ்யமான பதிவு.வழக்கம் போல அலசி எடுத்துருக்கீங்க.
இராமநாதன் Says: after publication. e -->October 10th, 2005 at 7:54 am e
//‘இதே படத்தில மட்டும் நம்ம வாத்தியார் நடிச்சிருந்தா, தூக்கில போட்டுட விட்டுருப்பாரா?’-ன்னு //ஹி ஹி.. கண்டிப்பா வரலாற்ற மாத்தினாலும் மாத்தலாம், வாத்தியார தூக்குல போடமுடியுமா?
ரொம்ப நிஹிலிஸ்டிக்காக எழுதிருக்கீங்க..
விளம்பரம் இல்லாமல் எப்படி–நேரமிருந்தால் இதப் பாருங்க..
jafarulla Says: after publication. e -->October 10th, 2005 at 2:51 pm e
Cinema today should be tied to the truth rather than logic . . . The rhythm of life is not made up of one steady beat; it is, instead, a rhythm that is sometimes fast, sometimes slow . . . There are times when it appears almost static . . . I think that through these pauses, through this attempt to adhere to a definite reality — spiritual, internal, even moral — there springs forth what today is more and more coming to be known as modern cinema, that, a cinema which is not so much concerned with externals as it is with those forces that move us to act in a certain way and not in another.
–Director Michelangelo Antonioni
வசந்தன் Says: after publication. e -->October 10th, 2005 at 8:05 pm e
தருமி, நல்ல பதிவு.உந்த இயக்குநர்களினதும் படம் சம்பந்தமான கூட்டத்தினதும் தொல்லை தாங்க முடியாதது.ஒவ்வொரு முறையும் இது வரை பார்க்காத ‘இவரை’ இதில் பார்ப்பீர்கள் எண்டு குரல் விடுறானுகள்.பாத்தா, அதே ஆள்தான். சிலவேளை அதே வசனங்கள், அதே கதை, அதேநடை, எல்லாம் அதேதான்.இன்றுவரை, காய்கறிச்சந்தையிலும் பாத்திரக்கடைகளிலும் சண்டைபிடிப்பதிலிருந்தும், ஐம்பது பேர் அருவாளோடு துரத்தும் சண்டைகளிலிருந்தும் மீளவேயில்லை.அடிவாங்கிச் செத்துப்போனான் எண்டு இருக்கிற நேரத்தில கடவுள்களின்ர முகங்கள் கொஞ்சத்தைக்காட்டிப்போட்டு நாயகன் எழும்பி அடிப்பாரே ஒரு அடி. விசில் பறக்கும்.போதாததுக்கு, நகைச்சுவைக்கெண்டு தனிய ஒராளோ ஒரு கூட்டமோ வைத்துக்கொள்வது.முக்கியமாக இசையமைப்பாளரின் திறமை பாடல்களில் மட்டும் வைத்து மதிப்பிடுவது, இசையமைப்பாளரின் வேலை 5 பாடல்களுக்கு இசையமைப்பதுதான் என்ற அளவில்தான் இன்னும் புரிதல் உண்டு.
வசந்தன் Says: after publication. e -->October 10th, 2005 at 8:11 pm e
இன்னொன்று.நடிகை ரேவதி, இந்தியில் ஒரு படத்தை இயக்கினார்.அது எயிட்ஸ் நோய் தொற்றிக்கொண்ட நாயகனைப்பற்றிய கதை. அது குறித்து பி.பி.சி. தமிழோசை ரேவதியைச் செவ்விகண்டது.செவ்வியில் “கொமர்ஷியல் படங்களுக்கிடையில் நல்லதொரு கதையம்சம் கொண்ட வித்தியாசமான படமொன்றைத் தரமுன்வந்துள்ளீர்கள், வாழ்த்துக்கள்” என்று சொன்னதுதான் தாமதம்.‘இல்லையில்லை. இது கொமர்ஷியல் படம்தான். இதிலும் காதல் இருக்கு. பாட்டிருக்கு” என்று விழுந்தடித்துச் சொன்னார் ரேவதி.தம் படத்தைப் பாதுகாக்கிற அவசரம் தெரிந்தது அப்பதிலில். இதுதான் இன்றைய நிலை. நல்ல முயற்சியாளரைக் கூட என்னமாய்ப் பயப்படுத்தி வைத்துள்ளது இந்த மசாலாத்துறை.

97. சிவாஜி vs எம்.ஜி.ஆர்.

சிவாஜி vs எம்.ஜி.ஆர்.–அல்லது —பிள்ளைகளுக்குப் பெயர் வைப்பது எப்படி?
‘கதை ஒன்று சொல்லுங்கள், அத்தான்’ என்று தலைவி கேட்க, சேரன் செங்குட்டுவனாக, கலைஞரின் நீண்ட வசனத்தைத் தொடர்வாக, தெளிவாக,அழகு உச்சரிப்பில் ‘ராஜா-ராணி’ படத்தில் பேசிய அழகைச் சொல்லவா?(மேக்கப் போடும்போது அருகில் நின்று ஒருவர் உரத்துப் படிக்க, எத்தனை நீண்ட வசனமாயினும் அப்படியே மனனம் ஆகிவிடுமென்று வாசித்தபோது ம்..ம்..இப்படி ஒரு கலைஞனா என்று தோன்றியது)
தொண்டுக் கிழமாக சாக்ரடிஸ் வசனம் பேசிய அழகா, ‘அவர்களும் பேசிப்பார்க்கட்டுமே; ம்..ம்..பேசித்தோற்றவர்கள்’ என்று கரகரத்த குரலில் சொல்வாரே அந்த அழகைச் சொல்லவா?
சாம்ராட் அசோகனில் அந்த ‘ ரத, கஜ, துரக, பதாதிகள்’ என்ற சொற்றொடரை நாங்கள் உச்சரிக்க முயன்று தோற்போமே அதைச் சொல்லவா?
உயர்ந்த மனிதனில் சாப்பிட்டுவிட்டுப் பல்குத்திக்கொண்டே பேசுவாரே..இல்லை, ‘அந்த நாள் ஞாபகம் வந்ததே’ என்ற பாட்டுக்கு 14 வித நடை நடந்து அசத்துவாரே அதைச் சொல்லவா?
திடீரென்று ஆள் ட்ரிம்மாக ஆகி, எங்க மாமாவில் நடனம் ஏது ஆடாமலேயே தோளைக் குலுக்குவதை மட்டும் வைத்தே அழகாக நடனம் ஆடுவதுபோன்ற ஒரு பிரம்மையை உண்டாக்குவாரே அதை நினைவு கூறவா?
வ.உ.சி.யாகவே மீண்டும் வந்து வாழ்ந்து காட்டினாரே அதைச் சொல்லவா?
இல்லை, பாசமலரில் மனம் நெகிழ ‘கைவீசம்மா கைவீசு’ என்றதைச் சொல்லவா?
உத்தம புத்திரனில் காண்பித்த வேறுபட்ட குணச்சித்திரங்களைச் சொல்லவா?
அதையெல்லாம் விடுங்கள் - தெய்வமகனில் அந்த convent bred இளைய மகனின் சேட்டைகளை வேறு யாரும் செய்தால் அரவாணி போல்தானே இருந்திருக்கும்.
சரி, விடுங்கள். It is an endless list…
அடுத்த ஆள், நம்ம எம்.ஜி.ஆர். என்னைப் பொறுத்தவரை அவர் நடித்த ஒரே படம் ‘பெற்றால்தான் பிள்ளையா?’. லியோனி ஒரு பட்டிமன்றத்தில் சொன்னது போல, ‘பாவம்..அவர். சோகம்னா வேகமா போய் ஒரு தூணில் முகத்தை மூடி வைத்துக்கொண்டு அட்ஜஸ்ட் செஞ்சுக்குவார்; அவருக்கு அவ்வளவுதான் பண்ண முடியும்’.
இப்படி நடிப்பில் இரு எதிர் எதிர் துருவங்களாக இருந்தும் திரைஉலகிலும், தமிழ் மக்கள் மத்தியிலும் பெயர் என்னவோ எம்.ஜி.ஆருக்குத்தான். சிலருக்கு இப்படிதான் ஒரு ஸ்டார் இருக்கும்போல; நம்ம ரஜினி, அமிதாப்..பாருங்களேன், இந்த தருமிக்குக் கூட ஸ்டார் ஸ்டேட்டஸ் ஒரு வாரத்திற்குக் கிடைக்கலை, அது மாதிரிதான் எல்லாமே போலும்!
நான் சொல்ல வந்த விஷயம் அது இல்லை. ரொம்ப நல்ல நடிகரா ஒருத்தர். அரசியல் நடிகரா இன்னொருவர். இதில் அந்தக் காலத்தில் இவர்களைக் குறிப்பிட்டு பேசும்போது எல்லோருமே, சிவாஜியை ‘அவன்,இவன்’ என்றும், எம்.ஜி.ஆரை ‘அவர், இவர்’ என்றும் பேசுவது வழக்கம். இதில் என்னைப் போன்றவர்களும் அடக்கம். திடீரென்று ஒரு நாள் அது உறைத்தது. ஏறத்தாழ எல்லோருமே இது போல் இருந்ததைக் கண்டேன். ஒர் ஆராய்ச்சி…!முடிவு தெரிந்தது.
சிவாஜியின் பெயர் கணேசன் என்று முடிகிறது; இதனால், (சிவாஜி)கணேசன் நடித்தான்;(சிவாஜி)கணேசன் கொன்னுட்டான்’டா… இப்படித்தான் சொல்ல எளிதாகிறது. அடுத்த பெயரைச் சொல்லிப் பாருங்கள்: எம்.ஜி.ஆர். நடித்தார் என்பதுதான் எளிதாக வரும். நல்லா வாள் சண்டை எம்.ஜி.ஆர். போட்டான் என்றால் நல்லாவா இருக்கு.ஆக, கண்டுபிடிச்சது என்னென்னா, பெயரின் விகுதியை ‘அர்’, ‘ஆர்’ என்பதுபோல வைத்தால் பின்னால் கூப்பிடுபவர்கள் பெரும்பாலும் மரியாதை கொடுத்துவிட வாய்ப்புகள் அதிகம். இதை விட்டு விட்டு, கணேசன் என்று ‘அன்’ விகுதியோடு பெயர் வைக்கிறீங்கன்னு வையுங்க…பிள்ளைங்க உங்கள பின்னால வையுங்க!
இந்த மாதிரி இலக்கணம் பாத்து பெயர் வச்சீங்கன்னா நல்லா இருக்குமா…அதை விட்டுட்டு numerology அது இதுன்னு போட்டு மக்கள குழப்பாதீங்க. இந்த numerology அதோடு சேர்ந்த மூ–தனமான விஷயங்களைப் பற்றியும் சீக்கிரம் எழுதணும்; அது ஒரு சமூகக் கடமையல்லவா?
Oct 26 2005 11:31 am அவியல்... and சினிமா edit this
Rate this post at http://www.thamizmanam.com/ Current rating is:
(இதுவரை 4 பரிந்துரைகள்)ஹலோ, வந்தது வந்தீங்க; வந்ததுக்கு ஒரு வேட்டு / வோட்டு போட்டுட்டு போறதுதானே! சும்மா அப்டியே போய்ட்டா எப்படி??
20 Responses
ஜோ Says: after publication. e -->October 26th, 2005 at 12:11 pm e
அடேங்கப்பா..நம்ம நடிகர் திலகத்தின் புகழ பாடி விட்டு ,அசத்தலான ஒரு விஷயத்தையும் சொல்லிட்டீங்க.
வினையூக்கி Says: after publication. e -->October 26th, 2005 at 12:13 pm e
தருமி, நான் மிகவும் குழம்பியது உண்டு…ஏன் எம்.ஜி.ஆரை மட்டும் அவர் இவர் என்று விளிக்கிறார்கள் ?நன்றி….உங்கள் பதிவு எனக்கு ஒரு தெளிவான காரணத்தை அளித்துள்ளது.எம்.ஜி.ஆர் நடிப்பை விட்ட பிறகுதான் நான் இவ்வுலகத்தில் அவதரித்தேன்….
என் அறிவுக்கு எட்டியவரை, எம்.ஜி.ஆர் ஒரு பாசிடிவ் எலிமென்ட்…. எம்.ஜி.ஆர் படங்களை பார்த்தால் I feel/get a positve impact… where as with Sivaji movies, most of the movies சோக மயம் தான்…..
Suresh - Penathal Says: after publication. e -->October 26th, 2005 at 12:14 pm e
அப்போ - பினாத்தல் கொன்னுட்டாள், சொதப்பிட்டாள்னு சொல்லுவீங்களா?
என்ன ஆராய்ச்சி சார் இது - என் தலை மேல கை வைக்கிற ஆராய்ச்சி!
வினையூக்கி Says: after publication. e -->October 26th, 2005 at 12:16 pm e
//இந்த மாதிரி இலக்கணம் பாத்து பெயர் வச்சீங்கன்னா நல்லா இருக்குமா…அதை விட்டுட்டு numerology அது இதுன்னு போட்டு மக்கள குழப்பாதீங்க. இந்த numerology அதோடு சேர்ந்த மூ–தனமான விஷயங்களைப் பற்றியும் சீக்கிரம் எழுதணும்; அது ஒரு சமூகக் கடமையல்லவா?//
Attention Please Vijay TV, Raj, Raj Digital Plus Channels
Josaph Irudayaraj Says: after publication. e -->October 26th, 2005 at 1:12 pm e
ஆகா!அடுத்து நம்ம “பேர்” மேட்டர் எழுதப்போரிங்க போல…..
எம்ஜிஆர், எம்மார் ராதா, பதிவு நல்லா இருந்திச்சு.
எனக்கு என்னா தெரியுமுன்னா இன்னமாதிரி சுட்டுபுட்டங்கன்னு சொல்லி கேள்விபட்டேன்… அவ்வளவுதான் அதுவும் எப்ப தெரியுங்களா? 79லன்னு நினைக்கிறேன்,அப்ப தான் நமக்கு கொஞ்சம் வெவரம் வெலங்குற வயசு.(ஹீ ! ஹீ ஒரு பன்னிரண்டு தான் இருக்கும்)
ஆனா உங்க பதிவ படிச்சப்புறம் தான் தெரிஞ்சது. ஆகா! உள்ள மேட்டர் இவ்வளவான்னு?
சதம் போடவும் தொடர்ந்து இரட்டைச்சதம் போடவும் எனது வாழ்த்துகள்!
Dondu Says: after publication. e -->October 26th, 2005 at 2:40 pm e
“இதில் அந்தக் காலத்தில் இவர்களைக் குறிப்பிட்டு பேசும்போது எல்லோருமே, சிவாஜியை “அவன்,இவன்” என்றும், எம்.ஜி.ஆரை “அவர், இவர்” என்றும் பேசுவது வழக்கம்.”
“நான் ஏன் பிறந்தேன்” என்ற தன்னுடைய தொடரில் எம்.ஜி.ஆர் குமுதத்தில் வந்த ஒரு கேலிச் சித்திரத்தைப் பற்றி இவ்வாறு எழுதியிருக்கிறார். அதாவது, ஒரு சிவாஜி ரசிகர் சைக்கிளில் உட்கார்ந்திருக்கிறார், எம்.ஜி.ஆர். ரசிகர் விளக்குக் கம்பத்தின் கீழ் உட்கார்ந்திருக்கிறார். சிவாஜியின் ரசிகர் பேன்ட் ஷர்ட் போட்டிருக்கிறார், எம்.ஜி.ஆர். ரசிகரோ சாதாரண வேட்டிச் சட்டை. தன்னுடைய ரசிகரை பட்டிக்காட்டானாகக் காட்டிவிட்டு சிவாஜி ரசிகரை நாசுக்கான பேர்வழியாகக் காட்டுவதே குமுதத்தின் வேலையாகப் போயிற்று என்று எம்.ஜி.ஆர். குறை கூறியிருக்கிறார்.
அன்புடன்,டோண்டு ராகவன்
கோ.இராகவன் Says: after publication. e -->October 26th, 2005 at 3:35 pm e
யாரங்கே தருமிக்கு பொற்கிழியைப் பரிசாகக் கொடுங்கள்.
தருமி நீங்க கண்டுபிடிச்சது நம்ம ரத்தத்துல ஊறுனதுதான். இந்த எனக மொகனைல நம்ம ஆளுங்க பெரிய ஆளுங்க. அத அப்படியே இலக்கணத்துலயும் சேத்துட்டாங்க. அத நாமளும் அப்படியே பிடிச்சுக்கிட்டு கொண்டு போயிக்கிட்டு இருக்கோம். அதுல வந்ததுதான் இந்த வினையும்.சிவாஜிவாயிலேஜிலேபின்னு சொல்லத்தானே செய்யுறோம்.
வசந்தன் Says: after publication. e -->October 26th, 2005 at 6:22 pm e
அன் விகுதியில கூப்பிடப்படுறதில ஒரு சந்தோசம் இருக்கு கண்டியளோ?வசந்தன் எண்ட பேரை வச்சிருக்கிற நான் அதை அனுபவிச்சிருக்கிறேன்.நல்ல ஆராய்ச்சி.
kirukan Says: after publication. e -->October 26th, 2005 at 6:49 pm e
This avan and avar, I have also noticed. Your explanation seems to be right.
இளவஞ்சி Says: after publication. e -->October 26th, 2005 at 6:57 pm e
இளவஞ்சி… நீயெல்லாம் என்னத்தை பதிச்சி… எழுதி கிழிச்சி… சீச்சீ…!! அய்யையோ.. நம்ப நிலமை பெனாத்தலைவிட மோசமா இருக்கே!
இந்த கேப்புல எனக்கு ரொம்ப பிடிச்ச மாஸ்டர்பீஸையும் சொல்லிடறேன்! சிவாஜியும் M.R.ராதாவும் “மாமா..மாப்ப்ளே..!”ன்னு ஒரு பாட்டு பாடுவாங்களே! கலக்கலுங்க அது….
dharumi Says: after publication. e -->October 26th, 2005 at 9:33 pm e
ஜோ,இன்னும் இதுமாதிரி மனசுக்குப் பிடிச்சது, நெஞ்சில் நின்றதுன்னு சொல்லிக்கிட்டே போகலாம்… இல்ல
வினையூக்கி,“என் அறிவுக்கு எட்டியவரை, எம்.ஜி.ஆர் ஒரு பாசிடிவ் எலிமென்ட்….”அது simply romanticism அப்டின்னு இந்த வயசிலகூட தோணலியா?“Attention Please Vijay TV, Raj, Raj Digital Plus Channels “..அதுல வர்ர ஒரு ஹீரோவை சந்திச்சதையும் சொல்லிடறேன்!
பினாத்தல்,“கொன்னுட்டாள், சொதப்பிட்டாள்னு ..”சரியா வரலையே! இளவஞ்சிக்கு சரியா வருதோ?!
Josaph Irudayaraj,“சதம் போடவும் தொடர்ந்து இரட்டைச்சதம் போடவும்..” சதம் முதல்ல முடியட்டும். ‘அன்றன்றுள்ள எங்கள் அப்பம் எங்களுக்குத் தாரும்’ அப்டிங்கற கேசு நான்! நம்ம அடுத்து வரப்போற ‘மரணம் தொட்ட கணங்கள்’ வாசிச்சா புரியும்ல..!
டோண்டு ராகவன்,“சொன்னாலும் சொல்லாட்டியும் அதுதானே சரி..இல்லியா?
வசந்தன்,“;அன்’ விகுதியில கூப்பிடப்படுறதில ஒரு சந்தோசம் இருக்கு” - அப்டியா? (பிதாமகன் சூர்யா ஸ்டைலில் சொல்லிப்பார்த்துக் கொள்ளவும்)
இளவஞ்சி…“நீயெல்லாம் என்னத்தை பதிச்சி… எழுதி கிழிச்சி…”எதுகை, மோனை எல்லாம் சரியா இருக்கு. ஆனா, நான் ரொம்ப நேசிச்ச எழுத்த அப்படியெல்லாம் சொல்லாதீங்க, அப்புறம் எனக்கு ரொம்ப ‘இது’வாயிடும்.
துளசி கோபால் Says: after publication. e -->October 27th, 2005 at 1:08 am e
இளவஞ்சி,
//சிவாஜியும் M.R.ராதாவும் “மாமா..மாப்ப்ளே..!”ன்னு ஒரு பாட்டு பாடுவாங்களே!கலக்கலுங்க //
அந்தப் படம் ‘பலே பாண்டியா’
இந்தப் படத்துலெ எல்லாப் பாட்டுக்களுமே நல்லா இருக்கும்.
இராமநாதர் Says: after publication. e -->October 27th, 2005 at 1:17 am e
சரி, நீங்க சொன்னதுக்காக (அப்டியாவது அவர்னு சொல்றாங்களான்னு பாக்கலாம்) இராமநாதர்-னு மாத்திட்டேன்… அப்படியும் இரம்நாதர்-னு தான் மண்டபத்துல சில நாளைக்கு கூப்பிட்டாங்க. அத சரி பண்ண எதுனாவது வழி இருக்கா??
//நம்ம ரஜினி,//தேவையில்லாமல் எங்கள் தலைவரை இழுத்த தருமியை அகில உலக ரசிகர் மன்றத்தின் (ரஷ்ய வட்டம் - நம் 812) சார்பாய் கண்டிக்கிறேன்.
dharumi Says: after publication. e -->October 27th, 2005 at 2:58 pm e
துள்சி,அப்டியே அந்தக் “காய்” பாட்டைப் பத்தியும் இளவஞ்சிகிட்ட சொல்லிற வேண்டியதுதானே!
ஏங்க ராமனாதர், பிள்ளைகளுக்குப் பெயர் அப்படி வைங்கப்பான்னு சொன்னா, இவ்வளவு லேட்டா உங்க பேரை மாத்தினா எப்படி?பேரு மாத்திக்கோன்னு சொன்னா போதுமே, இந்தக்காலத்து இளைஞர் பட்டாளத்துக்கு…
Kumaran Says: after publication. e -->October 29th, 2005 at 1:18 am e
சின்ன வயசில் நானும் என் தம்பியும் சிவாஜி ரசிகர் மன்றம் வைத்து நடத்தியது தான் ஞாபகம் வந்தது. பின்னர் சிவாஜி கட்சி தொடங்கிய போது நான் பெரிய பையன் ஆகிவிட்டேன். என் தம்பி (2 வயது இளையவன்) கட்சி கொடி எல்லாம் கட்டிக் கொண்டு திரிந்தான்.
சிவாஜி கணேசனை ‘அவன் இவன்’ என்று சொல்லுவார்கள் என்பது எனக்கு புதிய செய்தி. என்னை ஒத்த பசங்க ‘ரஜினி கமல்’ என்று போகும்போது சிவாஜி என்று நாங்கள் இருந்ததால் எப்போதும் அவர் இவர் என்று தான் பேசி வழக்கம்.
dharumi Says: after publication. e -->October 29th, 2005 at 11:00 pm e
இராமநாதர், “அப்படியும் இரம்நாதர்-னு தான் மண்டபத்துல சில நாளைக்கு கூப்பிட்டாங்க” -- ஒருவேளை ‘காரண இடுகுறிப் பெயராக’ இருக்குமோ?
அது என்ன குமரன், நீங்க, ஜோ எல்லாரும் எங்க காலத்து ஆளுகளுக்குகூட விசிறியா இருந்திருக்கீங்க!சந்தோஷமாத்தான் இருக்கு..
dharumi Says: after publication. e -->October 29th, 2005 at 11:02 pm e
குமரன்,இன்னொரு சந்தேகம். உங்க அப்பா சிவாஜி ரசிகர்தானே?
ஜோ Says: after publication. e -->October 30th, 2005 at 8:41 am e
தருமி,சிங்கையில் நேற்று இரவு லிட்டில் இந்தியா பகுதியில் தீபாவளியை முன்னிட்டு வாணவேடிக்கை நடந்தது .வேறு ஒரு வேலையாக சென்ற நான் சிறிது நேரம் வேடிக்க பார்த்து நின்றேன் .திறந்த வெளியில் ஒரு இசை நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தது.இந்தியாவிலிருந்து வந்து வேலை செய்யும் தொழிலாளர் கூட்டம் நிரைய இருந்தது.நிகழ்ச்சி நடுவில் பாட்டு மன்றம் என்ற பெயரில் இரு அணிகள் எம்.ஜி.ஆர் அணி ,சிவாஜி அணி என்று மாறி மாறி எம்.ஜி.ஆர் சிவாஜி பாடல்களை பாடினார்கள் .முடிவில் வேடிக்கையாக தொகுத்து வழங்கிய உள்ளூர் பெண் நிகழ்ச்சி படைப்பாளர், எம்.ஜி.ஆர் சிவாஜி இருவரில் பார்வையாளர் ஆதரவு யாருக்கு என்று குரல் மூலம் முடிவு செய்யலாம் என்று சொன்னார் .அவர் எம்.ஜி.ஆர் தான் வெற்றி பெறுவார் என தீவிரமாக நம்பினார் போலும் .எம்.ஜி.ஆர் பெயரை சொன்னதும் நல்ல குரல் எழும்பியது .அடுத்து சிவாஜி பெயரை சொல்ல அதைவிட 5 மடங்கு சத்தமாக குரல் ஆரவாரம் எழும்பியது .அவர் அசடு வழிந்து விட்டு ,நம்ப முடியாமல் ‘எம்.ஜி.ஆர் ஆதரவாளர்கள் எங்கே?’ என்று சொல்லி மறு படியும் ஓட்டு நடத்தினார் .இம்முறை சிவாஜிக்கு முன்னை விட அதிக குரல் எழும்ப ,நொந்து போய் “எம்.ஜி.ஆர் ..பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்” என்று நழுவினார் .தமிழகத்து இன்றைய இளைய தலைமுறையினர் எம்.ஜி.ஆர் ,சிவாஜி இருவரில் நடிகர் என்ற முறையில் யாரிடம் அதிக அபிமானம் வைத்திருக்கிறார்கள் என்பது எனக்கு தெளிவானது .மகிழ்ச்சி. (நான் சத்தம் போடவேயில்லையப்பா ..சத்தம் போடுறது ..கைதட்டுறது நமக்கு பழக்கமில்லை)
dharumi Says: after publication. e -->October 30th, 2005 at 11:30 am e
ஜோ,“(நான் சத்தம் போடவேயில்லையப்பா ..சத்தம் போடுறது ..கைதட்டுறது நமக்கு பழக்கமில்லை)” - அட, போங்கப்பா! நான் அங்க இருந்திருந்தா ஒரு விசில் அடிச்சிருப்பேனே!ஆனா, நீங்க என் வயசுக்கு வரும்போது இப்படி ஒரு நிகழ்ச்சி கமல்-ரஜினியை வைத்து நடந்தாலும், இது போன்றே இருக்கும் என்பது நிச்சயம் - என்னைப் பொறுத்த வரையில்!
Kumaran Says: after publication. e -->October 31st, 2005 at 8:24 pm e
தருமி,
எங்க அப்பா சிவாஜி ரசிகர் இல்லை. ஜெமினி ரசிகர்.

96. எம்.ஜி.ஆர். vs எம்.ஆர்.ராதா

1968- 1969 -எப்போது என்று நிச்சயமாகத் தெரியவில்லை; ஆனாலும் தமிழ் நாட்டையே உலுக்கிய நிகழ்வல்லவா? எம்.ஜி.ஆர். சுடப்பட்டார்; சுட்டது எம்.ஆர். ராதா. கென்னடியைச் சுட்டபோது குண்டுபாய்ந்த இடத்திலேயே - சில மில்லி மீட்டர்கள் தள்ளி - எம்.ஜி.ஆருக்கும் கழுத்தில் - carotid artery பக்கத்தில் - குண்டு பாய்ந்தது. அவர் செய்த தருமம் அவர் தலை காத்து, ‘நான் செத்துப் பொழச்சவண்டா’ன்னு பாட்டுப் பாட வச்சிது; குண்டடிபட்டு மருத்துவமனையில் இருந்தபடியே, அந்த போஸ்டரைப் போட்டே தி.மு.க. தேர்தலில் வெற்றி பெற்றது - இப்படிப் பல செய்திகள். உண்மைகள்…?

அது என்ன காரணம்னே தெரியாது. அவர் ரொம்ப நல்லவர் அப்டி, இப்டின்னு எல்லாருமே சொன்னாலும் எனக்கு என்னவோ அவரைச் சிறு வயதிலேயே பிடிப்பதில்லை. நடிகனாக இருந்ததால் அரசியலிலும், அரசியலில் இருந்ததால் சினிமாவிலும் அவர் புகழ் பெற்றார் என்பது என் எண்ணம். உதாரணமாக, ‘காமராஜர் என் தலைவர்’ என்றோ, ‘வழிகாட்டி’ என்றோ இவர் பேசிவிட, ‘எப்படி மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கு மணம் உண்டு’ என்று இவர் சொல்லலாம் என்று கழகக்கண்மணிகள் கோபித்துக்கொள்ள, இவர் கட்சியிலிருந்து விலகுகிறேன் என்க, அப்போது ரிலீசான ஒரு புதுப்படம் (கைராசி என்று நினைக்கிறேன்) ஈயாட, தயாரிப்பாளர் இவர் கையில கால்ல விழ, இவர் மன்னிப்புக் கோரி தாய்க்கழகத்திற்குத் திரும்பியதும், படம் பிச்சுக்கிட்டு போச்சு.தி.மு.க.விலிருந்து இவரே வெளியே போயிருந்தால்கூட அனேகமாக அப்படித்தான் நடந்திருக்கும். அதிலும் எங்க ஊர்க்காரர் ஒருத்தராலதான் அவரை வெளியே தள்ளி பெரிய ஆளாக்கினதா சொல்லுவாங்க. சரி, அத விடுங்க.

60-களில் மாணவர்களாக இருந்த அனேகம்பேர் போலவே நானும் அப்போது ஒரு தி.மு.க.-வின் ஆதரவாளனாய் இருந்த போதும் அவருக்கும் நமக்கும் ஒத்து வந்ததேயில்லை. ஒருவேளை அதன் அடிப்படைக் காரணம் நான் ‘பிரேமித்த’ சிவாஜிக்குக் கிடைக்காத ‘numero uno postion’ இந்த மனிதருக்குத் திரைஉலகில் கிடைத்தனால் இருக்கலாம். நன்றாக நினைவில் இருக்கிறது; தஞ்சையில் வேலை பார்த்து வந்த நாட்களில் தீபாவளிக்கு வந்த இரு படங்களில் சிவாஜியின் ‘இரு மலர்கள்’ (சிவாஜி, பத்மினி, கே.ஆர். விஜயா)படத்தை இரண்டாம் தடவையாக மாலைக் காட்சி பார்த்து விட்டு வெளியே வந்தோம். அன்றோடு அந்தப் படம் கடைசி. அடுத்த காட்சி -கடைசிக் காட்சி- க்குக் கூட்டம் ஒன்றும் இல்லை. ஆனால் இந்தத் தியேட்டருக்கு எதிர்த்தாற்போல் இருந்த இன்னொரு தியேட்டரில் ‘விவசாயி’ படத்திற்கு எக்கச் சக்கக் கூட்டம். ‘கருமண்டா சாமி’ன்னு தலியில அடிச்சிக்கிட்டேன். ஏன்னா, இதுவரை வந்த திரைப்பட விமர்சனங்களில் எனக்கு மிகவும் பிடித்தது விவசாயி படத்திற்கு குமுதத்தில் வந்த விமர்சனம்: அப்போது திரையிடப்பட்டு வந்த ஒரு அரசின் செய்தித் தொகுப்பைப் பற்றி விலாவாரியாக எழுதிவிட்டு, இறுதியாக குமுதம் இவ்வாறு எழுதியிருந்தது: இந்த செய்திப் படத்தோடு ‘விவசாயி’ என்றொரு சினிமாப் படமும் காண்பிக்கப்பட்டது. ஆனா, இப்போ காலம் கடந்து ஒரு உண்மை புரிந்து விட்டது. இன்றைக்கு யாராவது நடிகன் என்ற முறையில் எம்.ஜி.ஆரைப் பற்றி ஏதும் கூறுவது கிடையாது. சகாப்தம் அப்டி இப்டின்னு சொல்லுவாங்களே தவிர நல்லா நடிச்சார்னு யாருமே இப்போவெல்லாம் பொய் சொல்றதில்லை. (இதேமாதிரிதான், நாளைய உலகில் கமல்-ரஜினி விதயம் இருக்குமோ? இதப் போய் ரஜினி ராம்கியிடம் யாரும் சொல்லிடாதீங்க!)
பாத்தீங்களா, நம்ம பேச ஆரம்பிச்ச விதயம் என்னென்னே மறந்து போச்சு…சுட்ட கேஸ்…சுடாத கேஸ்… அதாவது எம்.ஜி.ஆரை எம்.ஆர்.ராதா சுட்டார்; சரி.ஆனால் எம்.ஆர்.ராதாவைத் திருப்பி யாரும் சுட்டார்களா, இல்லையா? யாரும் சுடலைன்னாஎம்.ஆர்.ராதாவுக்கு இருந்த காயம் எப்படி வந்தது? prosecution சொன்ன மாதிரி அவர் தன்னையே சுட்டுக்கிட்டாரா?…இப்படிப் பல கேள்விகள். குற்றவியலில் ஒன்று சொல்வார்கள். தடயங்களைச் சரியாகத் திரட்டி, சரியான முறையில் அவைகளைச் சோதித்தால் உண்மை கட்டாயம் வெளிச்சத்துக்கு வரும் என்று. வேண்டுமென்றே, கேஸை கோட்டைவிடுவதற்காகவே - அதாவது, நமது C.B.I.நம்ம அரசியல்வாதிகளுக்கு எதிராக வழக்கமாய் கேஸ் போடுவார்களா அது மாதிரி - தகுந்த தடயங்களை பத்திரமாக வெளியில் வைத்துவிட்டு கேஸை நம் நீதிதவறா நீதியரசர்களிடம் கொண்டு போவார்களே, அப்படி போனால் எந்த கேஸ்தான் நிற்கும்; படுத்தே விடும். நம் ஊரில் நீதி தேவதை என்றைக்கு முழித்திருந்தது? கண்ணை வேறு நாம் கட்டிவிட்டோமா - இதுதான் சமயம் என்று நம் ஊர் நீதி தேவதை தூங்கிப்போய் ரொம்ப நாளாச்சு; அது தெரியாமல் நாம் அதன் கையில் ஒரு தராசை வேறு வைத்து விட்டோம்; பாவம்!

அடடா..மறுபடி, மறுபடி digression! இனிமே அப்படியில்லாம straight hit at the bull’s eye! சரிதானே…

கோர்ட்டில் கேஸ் போய்க்கொண்டிருக்கிறது. தமிழ் தினசரிகளில் சுடச் சுட செய்திகள்; தவறாமல் படித்து விடுவோம். இறுதிக் கட்டம். எம்.ஆர்.ராதாவுக்கு வாதாடிய வழக்கறிஞரின் இறுதி விவாதம் மிகவும் நன்றாக இருந்தது. நாங்கள்கூட (இங்கே நாங்கள் என்பது, நானும் என் மற்ற இரு அறை நண்பர்களும்..எல்லோருக்கும் இந்த விஷயத்தில் ஒரே புத்தி!)ஆஹா, நம்ம ஆளு எம்.ஆர்.ராதா விடுதலை ஆயிடுவார் போல இருக்கே; இவ்வளவு பாயிண்ட்டுகள் எம்.ஆர்.ராதாவுக்குச் சாதகமா இருக்கேன்னு நினச்சோம். வாதாடிய வழக்கறிஞரின் பெயர் வானமாமலைன்னு நினைக்கிறேன். அவரின் அந்தக் கடைசி நாள் விவாதத்தைச் சொல்லட்டுமா…?

அப்போதுதான் matinee idol என்ற வார்த்தை எங்களுக்குத் தெரிய வந்தது. எம்.ஜி.ஆரின் வழக்கறிஞர் தன் வாதத்தை முடிக்கும்போது,எம்.ஜி.ஆரை வானளாவப் புகழ்ந்து விட்டு….’ஆகவே, இப்படிப்பட்ட என் கட்சிக்காரரைக் கொல்ல முயற்சித்த எம்.ஆர்.ராதாவுக்குக் கடுமையான தண்டனை அளிக்கும்படிக் (கனம் கோட்டாரவர்களை !) கேட்டுக்கொண்டு தன் வாதத்தை முடித்திருந்தார். பதிலளிக்க வந்த எம்.ஆர்.ராதாவின் வழக்கறிஞர், வழக்கமாக நடக்கும் ஆயிரக்கணக்கான கேஸ்களில் இதுவும் ஒன்று; சம்பந்தப்பட்டவர் matinee idol என்பதால் உள்ள பரபரப்பைவைத்து இது ‘ஆயிரத்தில் ஒரு கேஸ்’ என்று கனம் கோர்ட்டார் அவர்கள் நினைக்கக்கூடாது. மற்ற இது போன்ற எல்லா கேஸ்களுக்கும் கொடுக்கும் முக்கியத்துவம் மட்டுமே கொடுக்கப்படவேண்டும் என்றார். (ஆஹா, கொன்னுட்டார்’டா! - இது நாங்க!)

குண்டடி பட்டு, அதுவும் தொண்டையில் அடிபட்டு ரத்த வெள்ளத்தில் கிடக்கும் ஒரு மனிதரை அவருக்கு வேண்டியவர்கள் பக்கத்தில் இருக்கும் பட்சத்தில், முதலில் அவரை எங்கே கொண்டு செல்வார்கள்? நிச்சயமாக, மிக அருகில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு; அப்படியே இல்லாவிட்டாலும், போலிசுக்கு ஃபோன் செய்யலாம்; அதன் பிறகாவது உடனே மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும். ஆனால், எம்.ஜி.ஆர். விஷயத்தில் நடந்தது என்ன?அந்த critical-ஆன நேரத்திலும் முதலில் அவர் அவர்களது வழக்கறிஞர் வீட்டிற்கு எடுத்துச் செல்லப்பட்டு, அதன்பின் வழக்கறிஞரோடு போலீஸ் ஸ்டேஷனுக்குச் சென்று F.I.R. போட்டுவிட்டு, அதன் பின்பே மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்படுகிறார்; அதுவும், மிகவும் தொலைவிலுள்ள ராயப்பேட்டை மருத்துவமனைக்கு. ஏதும் பின்னணியோ, கேஸை ஜோடிக்கவேண்டிய அவசியமோ இருந்ததால்தான் இந்தத் தலைகீழான நிகழ்ச்சிகள் நடந்திருக்க வேண்டும். ஆகவே, prosecution தரப்பு வக்கீல் சொல்வதுபோல எம்.ஆர்.ராதா வந்தார்; சுட்டார் என்பதெல்லாம் நம்பமுடியாத விஷயங்கள். (ச்சே!..பின்னிட்டாண்டா, மனுஷன்! - இது நாங்க!)

அடுத்த பாயிண்ட் அசத்தல் பாயிண்ட். சம்பவம் நடந்த இடத்தில் இரண்டு கைத்துப்பாக்கிகளும், இரண்டு spent bullets கிடைத்ததாகச் சொல்லப்பட்டது. அதில் forensic test-ன்படி ஒரு bullet எம்.ஆர்.ராதாவின் துப்பாக்கியில் இருந்து வந்தது என்று உறுதிப்படுத்தப் பட்டது. ஆனால், மற்றொரு bullet எந்தத் துப்பாக்கியில் இருந்து வந்தது என்பதைக் கண்டு பிடிக்கமுடியவில்லை என்று சொல்லப் பட்டது. நம்ம வழக்கறிஞர், அதாங்க..எம்.ஆர்.ராதாவின் வழக்கறிஞர்தான் கொடுத்த வாதம் உண்மையிலேயே உண்மை நிறைந்தது. அதுக்காக, சத்தியமே ஜெயதே - அப்டின்னா எல்லோரும் நம்பி விடறதா?
எந்த ஒரு ballistic expert-க்கும் அடிப்படைப் பாடமே spent bullets எந்தத் துப்பாக்கியிலிருந்து எந்த குண்டு வந்தது என்பதைக் கண்டுபிடிப்பதுதான். ஒரே ஒரு comparison micrsocope வைத்துச் செய்யப்படும் அடிப்படை டெஸ்ட்தான் இது. இருப்பது இரண்டு துப்பாக்கிகளும் இரண்டு குண்டுகளும்; இதில் ஒன்றை மட்டும் என் கட்சிக்காரரின் துப்பாக்கியில் இருந்து வந்ததைத் தெளிவாகக் கண்டுபிடித்தவர்களுக்கு, அடுத்த குண்டு இந்த இரண்டு துப்பாக்கிகளில் எதிலிருந்து வந்தது என்றோ, அல்லது இந்த இரண்டு துப்பாக்கிகளுக்குமே தொடர்பில்லையென்றோ நிச்சயமாகக் கூற முடியும். ஆனால், எந்தக் காரணத்திற்காகவோ உண்மை மறைக்கப்படுகிறது. எம்.ஜி.ஆரின் அரசியல் பலமும், புகழும் இதற்குக் காரணங்கள் என்றார். (பரத்திட்டார்’டா; இதுக்குக் கோர்ட் கட்டாயம் போலீசிடமிருந்து பதில் பெற்றேயாகணும்; at least benefit of doubt-ன்னு ஒண்ணு இருக்கே ! - இது நாங்க!)

ஆனா, நாங்களா அப்போ நீதிபதியாக இருந்தோம்…!
Oct 25 2005 03:09 pm அரசியல்... and சினிமா edit this
Rate this post at http://www.thamizmanam.com/ Current rating is:
(இதுவரை 9 பரிந்துரைகள்)ஹலோ, வந்தது வந்தீங்க; வந்ததுக்கு ஒரு வேட்டு / வோட்டு போட்டுட்டு போறதுதானே! சும்மா அப்டியே போய்ட்டா எப்படி??
50 Responses
Mohandoss Ilangovan Says: after publication. e -->October 25th, 2005 at 3:45 pm e
அமேரிக்க ஜனாதிபதியாக இருந்த ஜான் எப் கென்னடியின் தம்பி, ரொபர்ட் கென்னடியின் கொலையில் ஒரு சில குண்டுகள் அதிகமாக இருந்த காரணத்தால், அவன் கொலைசெய்ததை ஒப்புக்கொண்ட பிறகும் கூட அவனுக்கு வழங்கிய தூக்குதண்டணையை, ஆயுள் தண்டனையாக குறைத்தது என நினைக்கிறேன் அமேரிக்க அரசு. என் ஞாபகங்கள் சரியாக இருக்கும் பட்சத்தில்.
மோகன் தாஸ்.
dharumi Says: after publication. e -->October 25th, 2005 at 4:00 pm e
மோகந்தாஸ்,முதல் தடவையா நம்ம வீட்டுக்கு வந்திருக்கீங்க. வரணும்..வரணும்.
உங்களைப் போலவே ஒரு காலத்தில் பொன்னியின் செல்வனின் வந்தியத் தேவனாக என்னையே நினைத்துக்கொண்டு -சைக்கிளில் செல்லவதல்லாம் குதிரையில் போவதாகக் கற்பனை செய்து கொண்டு- அது ஒரு காலம்.உங்கள் சோழர் வரலாறு கட்டுரையை ஏற்கெனவே வாசித்திருந்தேன். நல்ல முயற்சி. வாழ்த்துக்கள்.
Dondu Says: after publication. e -->October 25th, 2005 at 4:42 pm e
எம்.ஜி.ஆர். மற்றும் சிவாஜி, பி.யு. சின்னப்பா மற்றும் எம்.கே.தியாகராஜ பாகவதர் ஜோடிகளை பற்றி நான் எழுதிய பதிவு கீழே பார்க்கலாம்.http://dondu.blogspot.com/2004/12/inevitable-pairs-in-tamil-cinema.html
எம்.ஜி.ஆர். 1967 ஜனவரி 17-ஆம் தேதியன்று சுடப்பட்டார்.
எம்.ஜி.ஆரை எனக்குப் பிடிக்கும், ஆனால் அவர் நடிப்புக்காக அல்ல. அவருக்கு இரு முகபாவம்தான் வரும் என்று ஒருவர் கூறினார், அதாவது ஒன்று தேள் கொட்டிய முகபாவம், இன்னொன்று தேள் கொட்டாத முகபாவம்.
ஆனாலும் அவர் எல்லோரது இதயத்திலும் இருக்கிறார் என்பதை மறுக்க இயலாது.
அன்புடன்,டோண்டு ராகவன்
அன்புடன்,டோண்டு ராகவன்
dharumi Says: after publication. e -->October 25th, 2005 at 4:50 pm e
நம்மில் பல நடமாடும் encyclopaedia இருப்பீர்கள் போலும்! தகவலுக்கு நன்றி.ஒரு திருத்தம்:”ஆனாலும் அவர் எல்லோரது இதயத்திலும் இருக்கிறார் என்பதை மறுக்க இயலாது”இதை - “ஆனாலும் அவர் பலரது இதயத்திலும் இருந்தார் என்பதை மறுக்க இயலாது” - என்பதே சரியென்று நினைக்கிறேன். இப்பல்லாம் ‘நம்மளவிட’ பழசுங்க கொஞ்சம் நினச்சுக்கிட்டு இருக்கலாம்; அவ்வளவே. சரியா?
ramachandran usha Says: after publication. e -->October 25th, 2005 at 5:20 pm e
தருமி, சுதாங்கன் எழுதிய ‘’சுட்டாச்சு, சுட்டாச்சு” படியுங்க. படிச்சதும் எம்.ஜி.ஆர்விட ராதாவே நினைவில் நிற்பார். எனக்கும்எம்.ஜி.ஆர் அலர்ஜி. நடிப்பும் வராது. ஓரே மாதிரி கையை ஆட்டிக்கிட்டு, தாய்மை, பாசம் இதியாதிகளுடன் வல்கரும் அதிகம்,
Ramya Nageswaran Says: after publication. e -->October 25th, 2005 at 5:41 pm e
தருமி சார், விரைவில் நூறாவது பதிவா? எதாவது டாபிக் யோசிச்சு வைச்சுருக்கீங்களா?
J. Rajni Ramki Says: after publication. e -->October 25th, 2005 at 5:43 pm e
//சகாப்தம் அப்டி இப்டின்னு சொல்லுவாங்களே தவிர நல்லா நடிச்சார்னு யாருமே இப்போவெல்லாம் பொய் சொல்றதில்லை. (இதேமாதிரிதான், நாளைய உலகில் கமல்-ரஜினி விதயம் இருக்குமோ? இதப் போய் ரஜினி ராம்கியிடம் யாரும் சொல்லிடாதீங்க!)
We need not come to a conclusion. Let the audience/readers to decide… That’s what i did in my book.
When i read Suthangan’s book, i thought of saying what Usha has written here. At the same time, arguments put up by Vanamamalai were too much. Infact, he didn’t achieve anything other than simply asking childish questions!
Coming back to the point… To my knowledge, Rajni - Kamal pair did lot of achievements compare to Shivaji - M.G.R.
theevu Says: after publication. e -->October 25th, 2005 at 5:49 pm e
வர வர நம்ம வலப்பூ மகாஜனங்க ரொம்ப கஞ்சனாக மாறிக்கிட்டே போறாங்க..இந்தக் கட்டுரைக்கு ஏன் 1 பரிந்துரை?தாராளமாக இன்னொன்று குத்தலாம்தானே..குத்தியுள்ளேன்.நல்ல நடையுடன் கூடிய கட்டுரை
ஜோ Says: after publication. e -->October 25th, 2005 at 6:46 pm e
தருமி,எம்.ஜி.யார் என்கிற மனிதர் உண்மையிலயே புரியாத புதிர் .அவரைப் பற்றி மிக உயர்வாகவும் ,மிக மட்டமாகவும் கேள்விப்பட்டிருக்கிறேன் .இவ்வளவு வேறுபாடு வேறு யார் குறித்தும் இருந்ததில்லை ..ஆனா ஒண்ணு ..எம்.ஜி.ஆர் பட பாட்டுண்ணா எனக்கு ரொம்ப பிடிக்கும்
Awwai Says: after publication. e -->October 25th, 2005 at 6:51 pm e
I am surprised you didn’t mention these details in the “Forensic Science” course you handled!Awwai
கோ.இராகவன் Says: after publication. e -->October 25th, 2005 at 7:54 pm e
ஐயோ! அப்புறம் என்னாச்சு….எம்.ஆர்.ராதாவை விட்டுட்டாங்களா? இது பத்தி லேசா கேள்விப் பட்டிருக்கேன். ஆனா முழு விவரம் தெரியாது. கேஸ் முடிவையும் சொல்லுங்க.
எம்.ஜி.ஆர் என்ற தனிமனிதர் மேல் எனக்குக் கொஞ்சமும் அபிமானம் இருந்ததில்லை. நடிகர் மேல் எதிரபிமானமே உண்டு. பழைய படங்களையும் பார்க்கும் எனக்கு எம்.ஜீ.ஆர் படங்கள் பிடித்தமானவைகளாக இருந்ததேயில்லை. பாட்டுகள் எல்லாம் நன்றாக இருக்கும். அதிலும் விசுவநாதன் அவருக்கென்றே இழைத்து இழைத்து செய்தது போல இருக்கும்.
நடிகராக சிவாஜி மிகவும் பிடிக்கும். ஓவர் ஆக்டிங் என்று இன்று சொல்வார்கள். ஆனால் அன்றைய அளவுகோலில் அவர் நடிப்பு சரியே. இன்றைக்குள்ள படங்களில் அவர் இன்றைக்குத் தக்க நடித்திருக்கிறாரே. குறிப்பாக பூ என்று தொடங்கும் படம். கடைசிப் படம் என்று நினைக்கிறேன்.
dharumi Says: after publication. e -->October 25th, 2005 at 7:58 pm e
உஷா,சுதாங்கன்(ஜெயா டி.வி.க்காரர்தானே?)அவர் அப்படி எம்.ஆர்.ராதாவுக்கு சப்போர்ட் பண்ணி எழுதினார்? வாசிச்சதில்லை.ரம்யா,சொந்தக் கதைக்குப் போகட்டுமா, வேண்டாமா? அல்லது கடைசித் தடவையா ஜெயிலுக்குப் போகலாமா?அல்லது மரணம் தொட்ட கணங்களா? முதல் நாள் பள்ளிக்கூடம் போனதா?உங்கள் ஓட்டு எதற்கு? சீக்கிரம் சொல்லுங்க.
ஜோ,கலங்கரை விளக்கம் படப் பாடல்கள் அவ்வளவு பிடிக்கும். ஆனா, பொதுவாக மற்ற பாடல்கள் கேட்கும்போது அவர் திருமுகம் நினைவுக்கு வந்துவிடும் என்பதால் அதிகமாக ரசிக்க முடிவதில்லை.
அவ்வை,எம்.ஜி.ஆர்., ஷோபா (பசி), இந்த மாதிரி கதைகள் நம்ம ஸ்டாக்ல எப்பவும் உண்டே…எப்படியோ விட்டுப் போச்சு போல.
ஜோ Says: after publication. e -->October 25th, 2005 at 8:23 pm e
தருமி,கலங்கரை விளக்கம் படத்தில் ‘பொன்னெழில் பூத்தது புதுவானில்’ என்ற பாடல் அற்புதம் .எம்.ஜி.ஆர் பாடல்கள் குறித்து ,பாடல் உருவாக்கத்தில் அவருக்கும் கண்ணதாசன் ,விஸ்வநாதன் ஆகியோருக்கும் நடந்த சுவாரஸ்யமான சம்பவங்கள் குறித்து கீழேயுள்ள சுட்டியில் மனிசேகரன் என்பவர் நிறைய எழுதியிருக்கிறார்.
http://forumhub.mayyam.com/hub/viewtopic.php?t=2192&postdays=0&postorder=asc&start=45
dharumi Says: after publication. e -->October 25th, 2005 at 8:30 pm e
Ramki,sorry i have neither read your book nor suthangan’s. so no comments on that.how come you say that vanamamalai’s arguments are childish? the last two points, in all respects, are good pointers to how the case was handled by the police and others. well, he did not acheive anything in spite of those points and any one can see the reason behind it.
“Coming back to the point… To my knowledge, Rajni - Kamal pair did lot of achievements compare to Shivaji - M.G.R.” definitely YES - for kamal. rajini, i LIKE him for his personality, i mean his character. but filmic achievements - a definite NO. that’s MY personal view. Even he talks about முள்ளும் மலரும்;and not படையப்பா or சந்திரமுகி. பாபா படம் நல்லா போகலன்னதும் காசைத் திருப்பிக் கொடுத்தாரே, அது உங்க தலைவரால மட்டும்தான் முடியும். மனோரமா விஷயத்தில காட்டிய magnanimity வேறு யாருக்கும் வராது. ஆனா, ஸ்டைல் ஸ்டைல்னு சொல்லி அந்த மனுஷனைக் கெடுத்திட்டீங்க / கெடுத்திட்டாங்க. படம் ஓடுறது, ஓடாதது வச்சு நல்லபடம்,மோசமான படம் அப்டிங்கிற முடிவுக்கு வரமாட்டீங்கன்னு நினைக்கிறேன். ‘கப்பலோட்டிய தமிழன் ரிலீசானப்போ பயங்கர ஃப்ளாப்.
ஜோ Says: after publication. e -->October 25th, 2005 at 8:31 pm e
//சுதாங்கன்(ஜெயா டி.வி.க்காரர்தானே?)அவர் அப்படி எம்.ஆர்.ராதாவுக்கு சப்போர்ட் பண்ணி எழுதினார்? //தருமி ,ரொம்ப தான் நக்கல் உங்களுக்கு .ஜெயலலிதாவுக்கு எம்.ஜி.ஆர் மேல் ரொம்ப அக்கறை இருக்க மாதிரி சொல்லுறீங்க .ஓட்டுக்கு மட்டும் தான் எம்.ஜி.ஆர் .தன் படத்தை விட எம்.ஜி.ஆர் படத்தை பெருசா போட்டு அவங்க கட்சி காரங்க போஸ்டர் அடிச்சா என்ன ஆகும்னு தெரியாதா ? எம்.ஆர்.ராதா மகன் ராதாரவி இப்போ எங்க இருக்கார்ன்னு தெரியாதா?
ஜோ Says: after publication. e -->October 25th, 2005 at 8:46 pm e
ராம்கி மற்றும் தருமி,எம்.ஜி.ஆர்- சிவாஜி ,கமல்-ரஜினி குறித்த பார்வையில் பலரும் எம்.ஜி.ஆரை ரஜினியுடனும் ,கமலை சிவாஜியுடனும் ஒப்பிட்டு நிறுத்தி விடுகிறார்கள் .நடிப்பில் சிவாஜியின் உயரத்தை தொடுவதற்கு சிவாஜி மீண்டும் பிறந்து வந்தால் தான் உண்டு என்றாலும் ,அவரது இடத்தை நிரப்ப கொஞ்சமாவது தகுதியுடையவர் கமல் தான் .அதே நேரத்தில் எம்.ஜி.ஆர் நடிப்பு விஷயத்தில் மோசமே என்றாலும் அவர் ஒரு வெற்றி பெற்ற தொழில்நுட்பவாதி .இரண்டு வெள்ளிவிழா படங்களை இயக்கியவர் .தயாரிப்பாளராக வெற்றி பெற்றவர் (சிவாஜியும் கூட) .இந்த விஷயத்தில் எம்.ஜி.ஆர்-ன் வாரிசு கூட கமல் தான் .கமல் ஒரு கதை வசன கர்த்தா ,இயக்குனர் ,தயாரிப்பாளர் ,பாடலாசிரியர் ,பாடகர் ..என்று சகல துறைகளிலும் முத்திரை பதித்தவர் .ரஜினியப் பொறுத்தவரை ஜனரஞ்சகத்தில் அவர் எம்.ஜி.ஆர் வாரிசு என்றாலும் அவர் எம்.ஜி.ஆர் போல,கமல் போல பல்துறை வித்தகர் அல்ல .ஆனால் கமல் அளவுக்கு இல்லையென்றாலும் ,எம்.ஜி.ஆரை விட நடிப்பு திறமை உள்ளவர்.இது என் கருத்து.
dharumi Says: after publication. e -->October 25th, 2005 at 9:32 pm e
இராகவன்,அப்புறம் என்ன? எம்.ஆர்.ராதாவை ஜெயில்ல போட்டாங்க. எத்தனை வருஷம் என்ன ஏது, அதில்லாம் வேணும்னா நம்ம எல்லோரும் டோண்டுவிடம் கேட்டிடுவோம்.
ராம்கி,முத முதல்ல வந்ததுக்கு நன்றி சொல்ல மறந்து போச்சு. நன்றி.இன்னொரு சந்தேகம். இதுவரை வராத ஆளு எப்படி உங்க ஆள்பற்றி எழுதியதுமே கண்டுபிடித்துவிட்டீர்களே, எப்படி? ஆச்சரியமா இருக்கு.ஆமா, இதுக்கே இப்படி சொல்றீங்களே,நான் முந்தி எழுதனதைப் படிச்சா என்ன சொல்வீங்க? அதோடு இதைப் பற்றி சீரியஸா ஒரு தொடர் பதிவு போடலாம்னு நினைக்கிறேன். ரொம்பவே எதிர்ப்பீங்களோ? நம்ம வீட்டுக்குள்ளே இருக்கு எதிர்ப்பு (எல்லாம் உங்க software ஆளுதான்!); அதெல்லாம் பாத்தா முடியுங்களா? வலைகளில் இதெல்லாம் சகஜமப்பா!!
dharumi Says: after publication. e -->October 25th, 2005 at 9:37 pm e
முக்கியமான ஆள் பாக்காம விட்டுட்டேனே. பின்னூட்டக்காரர்கள் எல்லாம் நம்ம ‘தீவு’ சொல்றதக் கேட்டு நடந்தா எவ்வளவு சந்தோஷமாயிருக்கும்…!! ரொம்ப நன்றி. அதோடு முதல்வரவு நல்வரவாகுக..
தாணு Says: after publication. e -->October 25th, 2005 at 10:11 pm e
எம்.ஜி.ஆர். பிடிக்குதோ இல்லையோ, அவரோட படப் பாடல்கள் என்றும் இனிமைதான். நான் ஜோ கட்சி. சமீபத்தில் படித்தேன். சென்னையில் புதுசா ஓடின படங்களெல்லாம் ஊத்திக்கிட்டப்போ, பழைய எம்.ஜி.ஆர் படம் ஓகோன்னு ஓடிச்சாம்.
J. Rajni Ramki Says: after publication. e -->October 25th, 2005 at 10:25 pm e
நன்றி தருமி. நிறைய தடவை உங்க வூட்டுக்கு வந்திருக்கேன். கமெண்ட் போடறதுததான் கிடையாது! நீங்க சொல்ற பதிவையும் அப்பவே படிச்சிருக்கேன். ப்ச்! ரஜினியை விஜய் கூடவெல்லாம் ஒப்பிடறதெல்லாம் மரம்வெட்டிங்க மனசாட்சி கூட ஒத்துக்காத விஷயம்!
ஜோ ஏற்னவே இந்த விஷயத்தை கையிலெடுத்திருக்காரு. ரஜினி - கமல், சிவாஜி - எம்ஜிஆர் பத்தியெல்லாம் ஏதோ பின்னூட்டத்துல போடற விஷயமில்லை. பக்கம் பக்கமா தட்ட வேண்டிய விஷயம். தேவையில்லாத வேலை. வெட்டியா பத்து பேர் விதண்டாவாதம் பண்ண வருவாங்க. என்னைப் பொறுத்த வரை தமிழ் சினிமாவில் தனக்கென்று தனிப்பாணி நடிப்பு இரண்டு பேர்கிட்டேர்ந்து மட்டும்தான். ஒண்ணு சிவாஜி, இன்னொன்னு ரஜினி. மற்றவர்களெல்லாம் கலர்·புல்லாக இருந்தாலும் கார்பன் காப்பிதான்!
அது இருக்கட்டும். இதை விட முக்கியமான விஷயம் இந்த சுட்ட மேட்டர். சரோஜோ தேவி கூட மட்டும் ஏன் நிறைய படங்கள் நடிக்கிறீங்க? ஒரு படத்துக்கு ஏன் இவ்ளோ ஜாஸ்தியா சம்பளம் வாங்குறீங்க? வாங்குற பணத்தை என்ன பண்றீங்க? என்றெல்லாம் கேள்வி கேட்பது சட்டப்படி நியாயமாகவும் கருப்பு கோட்டு கலாசாரத்தின் படி பிரமாதமாகவோ இருந்தாலும் சாதாரண மக்களுக்கு படு எரிச்சல்தான். யார்தான் சுட்டது என்கிற கேள்விக்கு தெளிவான விடை கிடைக்காமலே குழப்படியாக முடிந்ததிற்கு காரணம் இதுவாகத்தான் இருக்க முடியும்.
எம்ஜிஆர் - ‘இந்த ஆளு கன்னாபின்னான்னு கேள்வி கேட்டு இம்சைப்படுத்துறானே… அதுக்கு சம்பந்தப்பட்ட பார்ட்டிக்கிட்டேயே சரண்டர் ஆயிட்டு கேஸை இழுத்து மூ வெச்சுடலாமே’
Kumaran Says: after publication. e -->October 25th, 2005 at 10:32 pm e
தருமி, இந்த விஷயத்தைப் பத்தி நானும் கொஞ்சமாதான் படிச்சிருக்கேன். முடிவு என்னாச்சுன்னு இன்னும் கொஞ்சம் விவரமா சொல்லுங்க.
dharumi Says: after publication. e -->October 26th, 2005 at 11:04 am e
வரவேணும் குமரன்.
“இன்னும் கொஞ்சம் விவரமா சொல்லுங்க”ரொம்ப details தெரியாதுங்க. ஜெயில்ல போட்டாங்க. வெளியே வந்ததும்,தான் எம்.ஜி.ஆரைச் சுட்டதாகவும், ஜானகி தன்னைச் சுட்டதாகவும் சொன்னார். அதைவைத்து ‘ சுட்டான்; சுட்டேன்; சுட்டாள்’ என்ற தலைப்பில் நாடகம் ஒன்று போடப்படுவதாகச் சொன்னார். நடக்கவில்லை.விஷயம் தெரிஞ்சவங்க இன்னும் சொன்னா தேவலை.
dharumi Says: after publication. e -->October 26th, 2005 at 11:18 am e
ராம்கி…ராம்கி…சஸ்பென்ஸ் தாங்கல..”அதுக்கு சம்பந்தப்பட்ட பார்ட்டிக்கிட்டேயே சரண்டர் ஆயிட்டு” - அது யாரு ‘அந்த’ பார்ட்டி? please! சீக்கிரம் சொல்லுங்க.
“ரஜினியை விஜய் கூடவெல்லாம் ஒப்பிடறதெல்லாம் மனசாட்சி ஒத்துக்காத விஷயம்!” மூணுபேரையும் ஒப்பிடலை; ஆனா எம்.ஜி.ஆர்.–>ரஜினி–>விஜய் -இந்த மூன்று பேரும் ஒரே தொடர் சங்கிலியின் தனித்தனித் துண்டுகள். தமிழ் சினிமாவை ‘இழுத்துக்கொண்டு’ சென்றதில், செல்வதில் இந்தச் சங்கிலிக்குப் பெரும் பங்கு உண்டு; எந்தத் திசையில் என்பதுதான் கேள்வி.
“தனிப்பாணி நடிப்பு இரண்டு பேர்கிட்டேர்ந்து மட்டும்தான். ஒண்ணு சிவாஜி, இன்னொன்னு ரஜினி” -இப்படி ‘இந்த’ இரண்டு துருவங்களையும் ஒரே bracket-ல் போடுவது உங்களுக்கே சரியாகத் தோன்றினால்…சொல்லிக்கொள்ளுங்கள்.
போவதற்கு முன்: நம் தமிழ் சினிமாவை அதன் தொடர்பான காரியங்களை முழுசாக, வன்மையாக எதிர்த்து, கண்டித்து ஒரு தொடர் எழுத உத்தேசம். அதைப்படித்து உங்களைப் போன்றவர்கள் “வருத்தப்’ படுவீர்களா என்று தெரிந்து கொள்ள ஆசை; கோபப்படுவதைப் பற்றிக் கவலையில்லை. remember, rajini will not be my only target, just one of many.
dharumi Says: after publication. e -->October 26th, 2005 at 11:23 am e
இன்னொண்ணு ராம்கி,““தனிப்பாணி நடிப்பு இரண்டு பேர்கிட்டேர்ந்து மட்டும்தான். ஒண்ணு சிவாஜி, இன்னொன்னு ரஜினி” -இப்படி ‘இந்த’ இரண்டு துருவங்களையும் ஒரே bracket-ல் போடுவது உங்களுக்கே சரியாகத் தோன்றினால்…சொல்லிக்கொள்ளுங்கள்.”
சொல்ல மறந்தது:இந்த இரண்டு பேரையும் நான் இப்படி ஒரே bracket-ல் இணைப்பேன்: utterly wasted talents. முன்னவர் முகிழ்த்த பிறகு; பின்னவர் முகிழ்க்கும்போதே (nipped in the bud)!
மூர்த்தி Says: after publication. e -->October 26th, 2005 at 1:10 pm e
அன்பின் தருமி அவர்களே,
நல்ல பதிவு. எம்.ஜி.ஆர் சுடப்பட்டபோது நானெல்லாம் பொடியன். அதன்பிறகு படித்துதான் தெரிந்து கொண்டேன். இங்கு வலை வாசகர்களுக்கு அறியத் தந்தமைக்கு நன்றிகள் பல.
துளசி கோபால் Says: after publication. e -->October 26th, 2005 at 1:26 pm e
சிவாஜி x எம்ஜியார் பதிவு சூடாப் போயிக்கிட்டு இருக்கறதை இப்பத்தான் பார்த்தேன் தருமி.
நடிப்புன்னா என்னான்னு குறிப்பிட்டுச் சொல்றதுலேயே ஏகப்பட்ட அபிப்பிராயங்கள் இருக்குதானே?
சிவாஜி நடிப்பு ஓவர் ஆக்டிங்னு சொன்னவுங்க எல்லாப்படத்திலேயும்னு சொல்லலைதானே?
நம்ம வீட்டுலே கோபால் எம்ஜியார் ரசிகர். அவரே சொல்லுவார் எம்ஜியார் படத்துலே எல்லாமே நல்லா இருக்கும்எம்ஜியாரைத் தவிரன்னு )
மகள், கமல் படத்தை மட்டுமே பார்ப்பாள்.
நானு ‘எல்லா’படத்தையும் பார்த்துக்கிட்டு இருக்கேன். கமல், விக்ரம் படங்கள் பிடிக்கும்.
கொஞ்சம் வயசான நாயகர்கள் வந்துக்கிட்டு இருந்தப்ப கொஞ்சம் இளைஞனா ஒருத்தர் வந்தவுடனேஅவரைப் பலருக்குப் பிடிச்சுப்போச்சு.
‘ராஜு மெச்சிந்தி ரம்பை ‘ன்னு ஒரு தெலுங்குப்பழமொழி இருக்கு. ராஜாவுக்கு இஷ்டமானவள் எப்படி இருந்தாலும்அழகுலெ ரம்பா( தேவலோகத்து)தான்னு அர்த்தம். அதனாலே ஆளைப் பிடிச்சுப் போச்சுன்னா அவுங்க நடிப்பையும்பிடிச்சிருக்குன்னு ஒரு மனமயக்கத்துலேதான் இப்ப ‘ரசிகர்கள்’னு சொல்லிக்கிறவுங்க இருக்காங்க.
J. Rajni Ramki Says: after publication. e -->October 26th, 2005 at 1:42 pm e
//இப்படி ‘இந்த’ இரண்டு துருவங்களையும் ஒரே bracket-ல் போடுவது உங்களுக்கே சரியாகத் தோன்றினால்…சொல்லிக்கொள்ளுங்கள்.
//நம் தமிழ் சினிமாவை அதன் தொடர்பான காரியங்களை முழுசாக, வன்மையாக எதிர்த்து, கண்டித்து ஒரு தொடர் எழுத உத்தேசம்
All the best. But, before doing this pl. go through the list of first 50 films, did by Rajni. This my humble suggestion.
Reg. the fans of Rajini, they are not that much ridiculous people. They have been trained to welcome all type of comments. They are the only fans who do not want to promote much about Rajni which is rare in Tamil cinema.
Dondu Says: after publication. e -->October 26th, 2005 at 1:49 pm e
“அப்புறம் என்ன? எம்.ஆர்.ராதாவை ஜெயில்ல போட்டாங்க. எத்தனை வருஷம் என்ன ஏது, அதில்லாம் வேணும்னா நம்ம எல்லோரும் டோண்டுவிடம் கேட்டிடுவோம்.”
முதலில் ஒரு சிறு திருத்தம். எம்ஜிஆர் சுடப்பட்டது ஜனவரி 12-தான், 17 அல்ல. எம்.ஆர்.ராதாவுக்கு 7 ஆண்டுகள் தண்டனை. தண்டனை காலத்தில் இன்டர்னேஷனல் மோசடிப் பேர்வழி வால்காட்டுடன் சிறையில் பழக்கம். பிரெஞ்சு அவரிடம் கற்றுக்கொண்டாராம், முக்கியமாக கெட்ட வார்த்தைகளை. எனக்கே அவை சரியாகத் தெரியாது. அல்லியான்ஸ் பிரான்ஸேசில் கேட்டிருந்தால் என்னை உண்டு இல்லை என்று ஆக்கியிருப்பார்கள்.
5 ஆண்டுகள் முடியும் முன்னரே அவர் விடுதலை அடைந்ததாக ஞாபகம். எழுபதுகளில் மறுபடியும் படங்களில் நடித்திருக்கிறார். உதாரணம்: தசாவதாரம், மேளதாளங்கள், கந்தர் அலங்காரம் (இதில் முருக பக்தராக வந்து காலட்சேபம் எல்லாம் செய்தார்). சரியோ தவறோ கடைசி வரை தன் தனித்தன்மையைக் காப்பாற்றிக் கொண்டார்.
அன்புடன்,டோண்டு ராகவன்
tbrjoseph Says: after publication. e -->October 26th, 2005 at 1:54 pm e
என்னுடைய சொந்த அனுபவத்தை இங்கே சொல்கிறேன்.
நான் முதன் முதல் மேலாளராக பதவியமர்த்தப்பட்ட என்னுடைய வங்கிக் கிளையைத் திறந்து வைத்தவர் எம்.ஜி.ஆர் (1980ம் வருடம். அவர் இரண்டாவது முறையாக ஜெயித்து முதல்வர் பதவியேற்றிருந்த வருடம் என்று நினைவு).
அவரிடம் தியதி வாங்குவதற்காக பலமுறை அவருடைய இரண்டு அலுவலகங்களுக்கும் (தலைமைச் செயலகம் மற்றும் தி.நகரரிலுள்ள கட்சி அலுவலகம்) பல மாதங்கள் நடையாய் நடந்திருக்கிறேன்.
அந்த பழக்கத்தில் சொல்கிறேன். அவருடைய சுயரூபம் திரையில் காண்பதற்கு நேர் எதிரானது. இப்படி ஒரு ஈகோ பிடித்த மனிதரை என் வாழ்நாளில் கண்டதேயில்லை.
துவக்க விழா அன்று தனிமையிலும், அரங்கத்திலும் அவர் நடந்துக் கொண்டதை இப்போது நினைத்துப்பார்த்தாலும் ஒரு மனிதரால் முற்றிலும் நேர்மறையான முகங்களை வைத்துக்கொண்டு எப்படி செயலாற்ற முடிந்தது என்று வியந்து போகிறேன்.
இப்போதைய கருப்பு எம்.ஜி.ஆரும் அதே போல்தான். அவரும் ஜெயித்து வந்து முதலமைச்சரானாலும் வியப்பில்லை!
dharumi Says: after publication. e -->October 26th, 2005 at 2:38 pm e
மூர்த்தி,இந்த வயசான ஆட்களுக்கு வலைப்பாதிவாளராக இருப்பது ஒரு வசதிதான் போலும். பழைய கதையை எடுத்துவுட்டாலே நிறைய எழுதலாமோ. நமக்குத் தெரிஞ்ச நாலஞ்சு கிழடு கட்டைங்க இருக்கு; வரச்சொல்லட்டுமா..?
துளசி, தெலுங்கில அப்படி சொல்றது இருக்கட்டும். நியூசில ‘கோபாலு மெச்சிந்தி துளசி’ங்கறாங்களே; சரிதானா?translation ஒண்ணும் உதைக்கலையே..?
ராம்கி -’All the best.’ - க்கு நன்றி.
டோண்டு, கைகொடுத்ததற்கு மிக்க நன்றி. அது எப்படி எல்லாம் மேல (தலையில)data base-ல் போட்டு வச்சிருப்பீங்களோ? “கடைசி வரை தன் தனித்தன்மையைக் காப்பாற்றிக் கொண்டார்.” எனக்கும் அவருடைய தனக்குத்தானே நேர்மையாகஇருந்ததும், என் இரண்டாம் commandment-படி இருந்ததும் எனக்கு அவரிடம் பிடித்த காரியங்கள்.
ஜோசஃப்,“நேர்மறையான முகங்களை வைத்துக்கொண்டு எப்படி செயலாற்ற முடிந்தது” - அந்த இரட்டைமுகம் வைத்துக் கொண்டு வாழ்க்கையை நடத்துவதே ஒரு திறமைதான். வந்தமைக்கு நன்றி.
dharumi Says: after publication. e -->October 26th, 2005 at 2:51 pm e
மன்னிக்கணும் - மேலே கூறியதில் ஒரு திருத்தம்; “என் இரண்டாம் commandment-படி இருந்ததும் எனக்கு அவரிடம் பிடித்த காரியங்கள்”- அல்ல, அது எனது மூன்றாவது commandment என்று கொள்ளவும்.
ஜோ Says: after publication. e -->October 26th, 2005 at 3:26 pm e
//They are the only fans who do not want to promote much about Rajni which is rare in Tamil cinema.//ஒண்ணுமே புரியல ராம்கி .எதை வச்சு சொல்லுறீங்க ? கட்டவுடுக்கு பாலபிஷேகம் ,போஸ்டர் ,சுவர் விளம்பரம் ,ரசிகர் மன்றம் , யாகு குழுமம் ,இணைய தளம் ,தியேட்டருக்குள் கலாட்டா என்று எல்லா வகையிலும் தங்கள் அபிமான நடிகரை தூக்கிப்பிடிப்பதில் ரஜினி ரசிகர்களே முன்னணியில் இருக்கிறார்கள் .இதை எப்படி மறுக்கிறீர்கள் ?
anon1 Says: after publication. e -->October 26th, 2005 at 6:52 pm e
எம்.ஜி.ஆர் படங்கள் ஓடுவதற்கு காரணம் அதில் உள்ள பொழுதுபோக்குஅம்சங்கள். எல்லா படத்துக்கும் ஒரே கதைதான். அதில் நல்லஇசை, பாடல்கள், சண்டை என்று கலவையாக இருக்கும். அழுது வடிந்துமூக்கு சிந்த வைக்காது. அதனால் பல பேருக்கு இவர் படங்கள் பிடிக்கும்.(அவருக்கு நடிக்க தெரியாவிடாலும் கூட.)
குழலி Says: after publication. e -->October 26th, 2005 at 7:36 pm e
அப்போதே பதிவை தவற விட்டு விட்டேன், இப்போது படித்தேன் பல புதிய தகவல்களுடன் இருந்தது, பலே விவாதம் கூட நன்றாகத் தான் போயிருந்திருக்கு, பரவாயில்லை மரம்வெட்டியையெல்லாம் ஞாபகம் வெச்சிருக்காரு ரஜினி ராம்கி ஹா ஹா நாம மறந்தாலும் நம்மள மறக்க மாட்டாங்க போல…
சில பின்னூட்டங்களுக்கு பின்னூட்டம் கொடுக்க தோனினது, ஆனால் ஏற்கனவே குங்ஃபூ குழலி என்ற பெயரிருப்பதால் தற்போதைக்கு அப்பீட்…. வேறொரு முறை பார்த்துக்கலாம்.
எனக்கும் எம்ஜியார் படங்களை பிடிக்காது முன்னொரு காலத்தில், காஞ்சித்தலைவன் படத்திலிருந்து தான் அவரின் படங்கள் பிடிக்க ஆரம்பித்தது, அதன் பிறகு எம்ஜியாரின் கருப்பு வெள்ளை படங்களை ஆர்வத்துடன் பார்ப்பேன், எம்ஜியாரின் வண்ணப்படங்கள் பார்ப்பதில்லை அது அளவுக்கதிகமான ஹீரோயிச அபத்த களஞ்சியமாக இருப்பதால் ஆனாலும் தமிழகத்தை 13 ஆண்டுகள் ஆண்ட ஒரு வலிமையான தலைவராகவும், பல மக்களின் ஆதர்ச நாயகனாகவும் இருந்தவர் பேசிய வசனங்களை தற்போது கேட்கும் போது அவ்வளவாக எனக்கு சிரிப்பு வருவதில்லை, ஆனால் விஜயும், சிம்புவும், இப்போ விஜய் பேசுற மாதிரி முன்பு வேறொருவர் பஞ்ச் வசனம் பேசியதையும் கேட்கும் போது அய்யோ அய்யோ… ஒரே தமாசு…
வசந்தன் Says: after publication. e -->October 26th, 2005 at 9:22 pm e
மூர்த்தியின் தகவல் மீது ஐயமுள்ளது. அந்த நேரத்தில் அவர் சிறுவனாக இருந்திருக்க வாய்ப்பில்லையென்றே நினைக்கிறேன். பரவாயில்லை. உங்களது கிழட்டுப் பட்டியலில் அவரைச் சேர்த்துவிட்டீர்கள்.
chiththan Says: after publication. e -->October 29th, 2005 at 12:08 am e
நீதி தேவன் என்ன ஆனார்? மயங்கி விட்டாரோ!எம் ஜி ஆரால் வாழ்ந்தவர்கள் உண்டுஅசோகன்,சந்திரபாபு போல் வீழ்ந்தவர்களும் உண்டு.பாடல்களால் அவர் படங்கள் ஓடின.
NA Says: after publication. e -->October 30th, 2005 at 12:53 am e
M.G.R. = No Acting, Meaningful songs, Originality in telling the message through his films, Know the pulse rate of poor people, Know how to “HANDLE” politics.
Shivaji = “ACT(K)ING”
Kamal = ‘ACTing’ (but varies according to moods/films)
Rajini = Successful Hero (for style and action), Profit guaranteed, “thani vazhi”.
சன்னாசி Says: after publication. e -->October 30th, 2005 at 11:26 am e
பாகப்பிரிவினை (என்று நினைக்கிறேன்) படத்தில் “அடிக்றான், நொண்டிக்கையன் அடிக்றான்” என்று ஒதுங்கியவாறே எம்.ஆர்.ராதா துப்பும் வாக்கியம் சிவாஜியின் அதுவரையிலான “நடிப்பை” விழுங்கி ஒரே கணத்தில் ஏப்பம் விடுவதை ஆச்சரியத்துடன் பார்த்து ரசித்ததுண்டு!
எம்.ஜி.ஆர்? “ஹம்மாஆஆ…” என்று சுவரைப்பார்த்துத் திரும்பிக்கொள்கிறேன்!
dharumi Says: after publication. e -->October 30th, 2005 at 11:45 am e
குழலி, சித்தன் - நன்றி
NA - (not avilabel??),ஒண்ணு சேத்துக்கிறன். கமல் = ‘ACTing’ + மண்டையில மசாலா
சன்னாசி,இது மாதிரி நிறைய சொல்லமுடியும்னு நினைக்கிறேன்: உயர்ந்த மனிதனில் ஒரு சீனில் சிவாஜியைத் தூக்கி சாப்பிடுவார் ஒருவர்; அவர் யார் தெரியுமா? Of all people, S.A. அசோகன்!! கமல், சத்தியராஜ் நடித்த (காக்கிச் சட்டை??) படத்தில் சத்தியராஜ் ஓவர் டேக் பண்ணியிருப்பார். சத்தியராஜை ரகுவரன் நல்லாவே பொம்முக்குட்டி படத்தில் சைடு வாங்கியிருப்பார். இப்படியே போகும்…
Annonymous Says: after publication. e -->October 30th, 2005 at 9:54 pm e
கமல் = ‘ACTing’ + மண்டையில மசாலா
appo mathavungalukku masala illaya? you have started talking about their acting. it look like you have started telling about their personal behaviour also. he..he…
ஜோ Says: after publication. e -->October 30th, 2005 at 10:11 pm e
//கமல் = ‘ACTing’ + மண்டையில மசாலா//
மண்டையில மசாலா என்றால் அவர் மகான்னு அர்த்தம் இல்லை ..கமல் வெறும் நடிகன் மட்டுமல்ல .நடிப்பு போக சினிமாவில் தயாரிப்பாளராக ,இயக்குநராக ,கதை வசன கர்த்தாவாக ,பாடல் பாடுபவராக ,பாடல் எழுதுபவராக முத்திரை பதிப்பதற்கு மண்டையில் கொஞ்சம் மசாலா வேண்டும் தானே?
dharumi Says: after publication. e -->October 30th, 2005 at 10:18 pm e
திரு./திருமதி/ செல்வி/ குழந்தை (இதில் எது சரியோ; அதைப் பொருத்திக்கொள்ளவும்!)கண்மணி,
இவ்வளவு நல்ல பெயரை வச்சிக்கிட்டு எதுக்கு அனானிமஸா வரணும்? அடுத்த பதிவையும் வாசிங்க; வாசிச்சிட்டு மறுபடியும் பேரோடு வாங்க; சரியா?
இந்த அனானிமஸ்களுக்குப் பதில் தர கொஞ்சம் தயக்கம். இருந்தும் தவறான புரிதலை மாற்ற இந்த பதில்: “it looks like you have started telling about their personal behaviour also. he..he… ” - உலக சினிமாகளைப் பற்றிய அறிதலும், புரிதலுமே நான் குறிப்பிட்ட மசாலா. நம்ம விஜய்க்கும், ரஜினிக்கும் இருக்குதா இது? இல்ல, பெரியவர் சிவாஜிக்கு இருந்ததா? நாசரின் முதல் இரண்டு படங்கள் எனக்கு அக்கிரா குரோசோவாவை நினைவூட்டியது. குருதிப்புனலின் தரம் - leaving aside the compromises, the technical side of the movie - உலகத்தரமென்று கூற முடியாவிட்டாலும், அதை நோக்கிய நல்ல முயற்சி. ஆனால், இந்த திரையுலக அறிவு கட்டாயம் வேண்டுவதில்லை - பாலா போன்ற சில சுயம்புகளுக்கு. சரியா…?
ஜோ Says: after publication. e -->October 30th, 2005 at 10:40 pm e
//பாலா போன்ற சில சுயம்புகளுக்கு//தருமி,பாலா கூட சுயம்பு இல்லை .பாலுமகேந்திரா பள்ளியில் பயின்றவர்.
ஜோ Says: after publication. e -->October 30th, 2005 at 10:43 pm e
குருதிப்புனல் வேறு மொழியிலிருந்து மறு பதிப்பு என்றாலும் ,என் அபிமான படங்களில் முக்கியமான ஒன்று.அதிலும் நாசரின் நடிப்பு அட்டகாசம்.
dharumi Says: after publication. e -->October 30th, 2005 at 11:46 pm e
ஜோ,“பாலா கூட சுயம்பு இல்லை .பாலுமகேந்திரா பள்ளியில் பயின்றவர்.”Probably he was ‘delearning’ in that school!இருவருக்கும் எவ்வளவு வேற்றுமை என்பதைவிடவும், எந்த ஒற்றுமையும் நான் காணவில்லை.
குருதிப் புனல் மறு பதிப்பு என்பது தெரியாது. ஒரிஜினல் என்ன மொழிப்படம், ஜோ?அந்தப் படத்தின் டெக்னிக்கல் விஷயங்கள் எனக்கு பிரமிப்பூட்டியது.
பெத்தராயுடு Says: after publication. e -->October 31st, 2005 at 5:41 am e
குருதிப்புனல் கோவிந்த் நிஹ்லானி-யின் ‘த்ரோஹ்கால்’ படத்தின் தமிழ் பதிப்பு.
ஜோ Says: after publication. e -->October 31st, 2005 at 7:26 am e
தருமி,இந்தியில் வந்த ‘துரோக்கால்’ என்ற படத்தின் உயிமையை கமல் வாங்கி சில மாற்றங்களுடன் எடுத்த படம் ‘குருதிப்புனல்’. குருதிப்புனலை பார்த்த துரோக்கால் இயக்குநர் மூலத்தை விட மிகச்சிறப்பாக இருப்பதாக பாராட்டினாராம் .இந்த படத்தில் கமல் எழுதிய வசனங்கள் கவனித்தீர்களா ? “வீரம்னா என்ன தெரியுமா? பயம் இல்லாத மாதிரி நடிக்குறது” - ஒரு சோறு
ஜோ Says: after publication. e -->October 31st, 2005 at 7:33 am e
//இருவருக்கும் எவ்வளவு வேற்றுமை என்பதைவிடவும், எந்த ஒற்றுமையும் நான் காணவில்லை. //அவரவர்களுக்கு தனிப்பாணி இருந்தாலும் ,அடிப்படை விஷயங்களை கற்றுக்கொள்ள குரு உதவியிருப்பார் இல்லையா?
பாரதிராஜா சிஷ்யன் தான் மணிவண்ணன் ..என்ன சம்பந்தம்?
S.A.சந்திர சேகரன் (விஜய் அப்பா) சிஷ்யன் ஷங்கர் .என்ன சம்பந்தம்?
இதெல்லாம் விட K.S.ரவிக்குமார் சிஷ்யன் தான் சேரன் என்றால் நம்ப முடிகிறதா?
dharumi Says: after publication. e -->October 31st, 2005 at 10:32 am e
அடிப்படை விஷயங்களை கற்றுக்கொள்ள குரு உதவியிருப்பார் இல்லையா?// நன்றி,ஜோ.நான் என் மாணவர்களிடம் சில சமயம் கூறுவதுண்டு: என்னை ‘மாடலாகக்’ கொள்ளுங்கள் - as negative model, வாழ்க்கையில் முன்னேற முடியும் என்று!
dharumi Says: after publication. e -->October 31st, 2005 at 10:32 am e
பெத்தராயுடு,வரணும்..வரணும்.சேதிக்கு நன்றி.உங்கள் பெயர் எந்த படத்தின் தலைப்பு?!