Friday, March 14, 2025

THE INCARCERATIONS .. Content




இது என் கார்ட்டூன் இல்லை'ங்கய்யா ......




இப்போது மொழிபெயர்க்கும் நூலிலிருந்து சில இழைகள் .....
மும்பை சவேரியார் கல்லூரியில் பயிலும் பொழுது அருணின் கலையார்வம் வெளிச்சத்திற்கு வந்தது. அருண் தன் ஓவிய திறமையை முழுமையாக வெளிக்கொணர்ந்தார். கல்லூரியில் இருந்த சமூக சேவை இயக்கத்தில் உறுப்பினராக இருந்து தொடர்ந்து தங்களது வளாகத்தில் ரத்ததான இயக்கத்தை முன்னெடுத்தார். யார் யார் ரத்த தானம் கொடுக்க வருகிறார்களோ அவர்களின் கேலிச்சித்திரங்களை வரைந்து அவர்களுக்கு அன்பளிப்பாகக் கொடுத்தார். அவ்வப்போதே விரைவில் வரைந்ததால் அவர் படங்களுக்கு மிகுந்த வரவேற்பு இருந்தது. அதுவும் ரத்த தானம் கொடுக்கும் பொழுது அன்பளிப்பாக கொடுத்தமையால் அவருக்கு ஒரு புதுப் பெயர் சூட்டப்பட்டது: “ ரத்தக் கார்ட்டூனிஸ்ட்”!






THE INCARCERATIONS - CONTENT


 இப்படிச் சொல்கிறார் நம் பெரியவர்.  'நகர்ப்புற நக்சல்கள்' புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட நல்ல சொல். நல்ல சொல்தான்!

படித்தவன் சூதும் வாதும் செய்தால் போவான், போவான்; ஐயோ என்று போவான்! - பாரதியார்.



நானும் படித்தேன் - இரு நூல்களை. அவைகளை மொழியாக்கம் செய்தேன். உணர்வோடு மொழியாக்கம் செய்தேன் என்பதே சரி. இரு நூல்களுமே "நகர்ப்புற நக்சல்கள்" பற்றிய நூல்கள் தான்.







படித்த பிற்கு இரண்டையும் சீர்தூக்கிப் பார்க்க முடிந்தது. நீங்களும் இந்த நூல்களை வாசித்தால் என் பக்கம் வருவீர்கள் என்றே திடமாக நம்புகின்றேன்.

வாசிக்க வேண்டிய - அதுவும் படித்தவர்கள் படிக்க வேண்டிய - நூல்கள்.

நூல்கள் காத்திருக்கின்றன.

Thursday, February 20, 2025

THE INCARCERATIONS - CONTENTS

இந்தப் படிநிலை முக்கோணத்தில் மேல் தட்டில் இருப்பவர்கள் புரோகிதர்களாகவும், அதற்கு அடுத்த நிலையில் இருப்பவர்கள் சத்ரியர்களாகவும் இருப்பார்கள். இந்த இரு இனத்தவரும் மிகவும் சுத்தமான, அதாவது பரிசுத்தர்களாக இருப்பவர்கள்; வசதிகளிலும்,வாய்ப்புகளிலும் இந்த இருவருக்கே முதலிடங்கள் கொடுக்கப்படும். அதன் பின்வரும் இனத்தவர் வைசியர்; அதற்கும் அடுத்த கடை நிலை ஆட்கள் சூத்திரர்கள் அல்லது பணியாட்கள். இன்னும் இதன் கீழ்ப் படிநிலையில் கூட வைக்கப்படாத மக்களாக தலித் மக்கள் இருக்கிறார்கள். படிநிலையில் கூட அவர்களை வைக்காததற்கான காரணம் அவர்கள் அத்தனை தீட்டுப் பட்டவர்கள்; ஆகவே மிகத் தாழ்ந்தவர்கள்; அவர்கள் மனிதர்கள் தானா என்பதே ஒரு கேள்வியாக இருக்கிறது. அதனால் அவர்கள் குடியிருப்பதும் கூட ஊருக்கு வெளியே தனியே “காலனிகளில்” வாழ்வார்கள்… இல்லை வாழ வைக்கப்படுவார்கள். இந்த மக்கள் பொது இடங்களுக்கு வரக்கூடாது, நீர் நிலைகளில் தண்ணீர் எடுக்கக்கூடாது; கோயில் போன்ற புனிதமான இடங்களில் நுழையக்கூடாது. இப்படி அவர்களுக்குப் பல ‘கூடாதுகள்’!
தலித் மக்கள் ஏனைய இனத்தவர் யாரும் செய்யத் தயங்கும் அனைத்து இழிவான வேலைகளையும் செய்வதற்கே படைக்கப்பட்டவர்கள். அந்த வேலைகளை செய்வதால் அவர்கள் தீண்டத் தகாதவர்கள். மற்றவர்களின் அசுத்தங்களை இவர்கள் சுத்தம் செய்ய வேண்டும்; குப்பையை அள்ள வேண்டும்; சாக்கடையைச் சுத்தமாக்க வேண்டும்; நரகலை தலையில் தூக்கிச் செல்ல வேண்டும்; செத்த கால்நடைகளை எடுத்துச் செல்ல வேண்டும்; அடிமைகளாக விவசாய நிலங்களில் வேலை செய்ய வேண்டும். அந்தந்த சாதிக்குரிய மக்கள் அந்தந்த வேலைகளை மட்டுமே செய்ய வேண்டும். இதை மீறி ஏனைய சாதியின் தொழிலைச் செய்தால் அவர்களுக்கு மிகக் கடினமான தண்டனைகள் வழங்கப்படும்; அடித்தல், உதைத்தல், கற்பழித்தல், கொலை செய்தல் … என்று எல்லாமும் நடக்கும்.
ஆதிவாசி மக்கள் வேறு விதமாக வகைப்படுத்தப்படுகிறார்கள். பெயரில் இருந்தே தெரிய முடியும் அவர்கள் அனேகமாக நமது முன்னோர்களாக இருந்திருக்க வேண்டும். ஆனால் இப்போது அவர்கள் படிநிலை மக்கள் இனத்திலிருந்து தனியாக ஒதுக்கி வைக்கப்பட்ட மக்களாக இருக்கிறார்கள். காட்டுவாசிகள் என்பது காட்டுமிராண்டிகள் போல் பேசப்படுகிறது. இவர்கள் பொதுவாக மலைவாழ் அல்லது காடு வாழ் மக்கள். இவர்கள் பூர்வீகக் குடிமக்கள். ஆனால் இப்போது அவர்கள் முடிந்தால் தங்களைத் தாங்களே பேணி காத்துக் கொள்ள வேண்டும். அரசாங்கமே அவர்களிடம் உள்ள சொத்துக்களான காடுகளையும் மலைகளையும் நிலங்களையும் பிடுங்கிக் கொண்டு அவர்களைக் கேள்விகளின்றி, இரக்கமின்றி அனாதைப் பராரிகளாக்கும்.
May be an image of text that says 'A chilling, meticulously documented account' Arundhati Roy E NCARCERATIONS BHIMA KOREGAON THE IND SEARCH FOR DEMOCRACY IN INDIA FROM THE IEAWARD-WINNING K AUTHOR NIGHTMARCH ALPA SHAH'
All reactions:
Dev, Suresh Kathan and 4 others

Saturday, February 08, 2025

THE INCARCERATIONS - CONTENTS


நாயன்மார்கள் = சைவ அடியார்கள்;

ஆழ்வார்கள் = வைணவ அடியார்கள்

தீர்த்தங்கரர்கள் = சமண அடியார்கள்

வேதசாட்சிகள் = கிறித்துவ அடியார்கள்

தூதுவர்கள் – இஸ்லாமிய அடியார்கள்

இப்படி மதத்திற்கொரு வகை அடியார்களுண்டு. இவர்கள் தங்கள் தங்கள் மதக் கடவுள் மீதான அதீத நம்பிக்கையாளர்கள். தங்கள் கடவுளின் மீது மட்டற்ற அன்பு கொண்டவர்கள், ஆகவே அந்தந்த மதக்காரர்களிடமிருந்து பெரும் மதிப்பைப் பெறுகிறார்கள். இவர்கள் கண்ணால் காணாத கடவுளைத் தாங்கினார்கள்; நம்பினார்கள், தொழுதார்கள்; தங்கள் உயிரையும் கொடுத்தார்கள். இதனால் இவர்களுக்கு நாமும் மரியாதை கொடுக்கிறோம். உயரத்தில் வைத்துப் போற்றுகிறோம்.






ஆனால் இப்போது நான் மொழிபெயர்க்கும் நூலில் பேசப்படும் ஒருவர் நம்மோடு இப்போதும் வாழ்ந்து கொண்டிருக்கிறார். 12 வயது வரை அமெரிக்க வாழ்க்கை. அவரது தாயாருக்கு டில்லி JNU பல்கலைக் கழகத்தில் பேராசிரியரானதால் அவருடன் இந்தியா வந்து, கற்றோர் மத்தியில் பலகலைக் கழகத்தின் வளாகத்தில் வாழ்ந்து, பின் கான்பூர் IIT-ல் முதுகலை முடித்தவர். தன்னோடு பயிலும் மாணவர்களில் பலர் அமெரிக்கக் கனவோடு இருப்பது தெரிந்தும், தொழிலாளர் நலனுக்காக பாடுபடவேண்டும் என்ற ஒற்றைக் குறிக்கோளில் தன் அமெரிக்கக் குடியுரிமையை வேண்டாமென்று கொடுத்து விட்டுத் தன் பணியைத் தொடர்ந்தார். தொழிலாளர்களுக்காகப் பணிபுரியும் அவர் அவர்களோடு வாழ்ந்தால்தான் சரியென்று நினைத்து, அதே முகாமில் ஒரே ஒரு அறை மட்டும் உள்ள வீட்டில் தங்கிக் கொண்டு, காலைக்கடன் கழிக்க கையில் குச்சியோடு அருகிலுள்ள வெளிப்புறப் பகுதிக்கு செல்ல வேண்டும். வெருட்டி வரும் பன்றிகளை விரட்டுவதற்குத்தான் அந்தக் குச்சி. 


தொழிலாளிகளுக்காகவே வாழும் இந்தப் பெண்மணிக்கு நகரத்து நக்சலைட் என்று பச்சை குத்தி நமது அரசு அவரைக் கைது செய்தது. மூன்றரை ஆண்டுகள் கழித்து வெளிவந்த இவர் இப்போது மும்பையில் தொழிலாளர்களுக்கானத் தன் பணியைத் தொடர்ந்து கொண்டிருக்கிறார்.




என்னால் நம்ப முடியாத அளவு ஒருவர் தன் வாழ்க்கையை முழுவதையும் தன்னைச் சுற்றியுள்ள தொழிலாளர்களுக்காக அர்ப்பணித்து விட்டார். இதைத் தான் மனிதம் என்பதா? இல்லை .. அதற்கும் மேல் என்றே தோன்றுகிறது. மேலே சொன்ன கடவுளுக்காகத் தன்னை அர்ப்பணித்த மனிதர்களை விட இவர் எவ்வளவோ மேல் என்றே எனக்குத் தோன்றுகிறது. இவர்களை மனித தெய்வங்கள் என்று சொல்வதே சரி. 

அந்த நூலில் இதுபோன்ற மனித தெய்வங்கள் நிறைய இருக்கிறார்கள். ஆச்சரியத்துடனும், அதிசயத்துடனும், மிகுந்த உணர்வு பூர்வமாக இந்த வேலையைச் செய்ய இவர்கள் தூண்டுகிறார்கள்.

 

Friday, February 07, 2025

THE INCARCERATIONS -- CONTENTS



இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன் மேடையில் மோடியோடு நின்று கொண்டிருந்தார். கேமரூன் ஏடன், ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகங்களில் பயின்ற படிப்பாளி. பல்லாயிரக் கணக்கான மக்களை இதே மைதானத்தில் தனது பேச்சினால் கட்டிப் போட வேண்டும் என்ற கனவு கட்டிக் கொண்டவராகத்தான் இருந்திருப்பார். ஆனால் அவர் இப்போது ஓர் டீக்கடைக்காரர் மய்யமாக இருக்கும் காட்சியில் ஒரு சின்னக் கதாபாத்திரமாக ஓரத்தில் நின்று கொண்டிருந்தார்.....
பின்னாளில் அவர், “எனது நாட்டு மேடையில் நானே ஓர் அயலானாக, வேடிக்கைப் பொருளாக நின்று கொண்டிருந்தேன்’” என்று கூறியிருந்தார்.