Thursday, December 15, 2005

114. Letter to the Editor




The Hindu -க்கு இரண்டு கடிதம் எழுதிப்போட்டு,அதை அவர்கள் பதிப்புக்குத் தேர்ந்தெடுக்கவில்லை என்றதும், நம் சொந்த பதிப்பகம்தான் இருக்கிறதே என்று தோன்றியதாலும், நமக்குன்னு படிக்கிறதுக்கு நாலு பேரு இருக்க மாட்டார்களா என்ற நம்பிக்கையிலும் இங்கே பதிகிறேன்.



To
The Editor
The Hindu
Madurai

Sir,
Many have expressed a great shock over the expose’ of the sting operation, Operation Duryodhana. It is not surprising at all, if one has come to understand and accept what our politicians are. Don’t we all know that these politicians take up politics as their serious full-time profession and they would stoop down to any level for money in this ‘noble profession’ of theirs? Don’t we know the sole aim of our politicians is to go for fast bucks at the shortest period. They know pretty well that there may not be a ‘tomorrow’ and they make hay when the sun shines.

xxx xxx xxx xxx

To
The Editor
The Hindu
Madurai

Sir,
Appeasing the monorities, I assumed, is only in our country. Sorry to find the same in U.S., and U.K. too. The article (Celebrating Christmas by other names) by Hasan Suroor on 14th Dec shows how religions play havoc with peoples’ psyche all over the world. It is not as simple as it looks. This is nothing less than the symptom of paranoa that has crept into human mind, a sure sign of one of the after-effects of 9/11.

14th Dec ‘05






Dec 15 2005 08:41 pm | ஊடகங்கள் | | edit this
2 Responses
துளசி கோபால் Says:
December 16th, 2005 at 12:30 am e
புது டிசைன் நல்லா இருக்கு. உங்க மகளை உடனே இங்கே அனுப்பி வையுங்க. எனக்கும் இன்னும் வேற வேற டிசைன்களிலே டெம்ப்ளேட் மாத்தணும்:-))))

மகாபாரதம் ராமாயணம் இதெல் எல்லாம் லட்சக்கணக்கான பெயர்கள் இருக்கு. அதுலே இருந்து ஒவ்வொண்ணா எடுத்து விட்டுக்’கலாம்’.

தருமி Says:
December 16th, 2005 at 11:00 am e
அனுப்பிட்டா போகுது…டிக்கெட் மட்டும் அனுப்பிச்சிடுங்க!!

Friday, December 09, 2005

113. A PHOTO-FINISH...!

வேறு ஒண்ணுமில்லை...நானும் என் பேரனும் எங்க சின்ன வயசில சந்திச்சிக்கிட்டோம். அப்படி சந்திச்சிக்கிட்டத ஒரு படமா எடுத்து வச்சிக்கிட்டா posterity-க்கு நல்லா இருக்குமேன்னு என் பேரன் ஒரு ஐடியா கொடுத்தான். பேரன் சொன்னா தட்ட முடியுமா என்ன..? அதனால நாங்க ரெண்டு பேருமா சேர்ந்து ரெண்டு படம் எடுத்துக்கிட்டோம். அதான் உங்ககிட்ட அத காமிக்கலாமேன்னு நினச்சேன்....


Thursday, December 08, 2005

112. தல புராணம்…6

சாயுங்கால வேளைகள் பொதுவாக காலேஜ் ஹவுஸ் முன்னால்தான் என்றாலும், போரடிக்கக்கூடாதென்பதற்காக அவ்வப்போது அப்படியே காலாற நடந்து மேற்குக்கோபுரம், தெற்குக் கோபுரம், கிழக்குக் கோபுரமும் தாண்டி, அந்தப்பக்கம் அந்தக் காலத்தில் இருந்த மெட்ராஸ் ஹோட்டலில் போய் ஒரு சமோசாவும், டீயும் அடிச்சிட்டு மறுபடியும் வந்த வழியே திரும்பவும் நம்ம குதிரை நிக்கிற இடத்துக்கு வர்ரது ஒரு வழக்கம். அவ்வளவு தூரம் நடக்கச் சோம்பேறித்தனமான நாட்களில் மதுரை ரயில்வே ஸ்டேஷன் முன்னால் அப்போதிருந்த பாதைகளின் பக்கவாட்டில் போடப்பட்டிருக்கும் சிமெண்ட் கிராதிகளின்மேல் உட்கார்ந்து கொண்டு…ம்..ம்ம்…என்ன இனிய நேரங்கள்; என்ன பேசினோம்; எதைப்பற்றிப் பேசினோம் என்றெல்லாம் யாரறிவார்?


தெற்குக் கோபுரத்தின் உச்சியிலிருந்து….



…………..கோயிலின் உட்பக்கம்..

ரொம்பவே ஸ்பெஷலான நாட்களில், காலேஜ் ஹவுஸ் உள்ளே நுழைந்ததும் வலது பக்கம் இருக்கும் கடையில் சில ஸ்பெஷலான ஐட்டங்கள் இருக்கும்; பயந்திராதீங்க. அந்தக் கடையில் எல்லா magazines and newspapers கிடைக்கும். அவ்வப்போது வேறு வேறு பத்திரிக்கைகள், செய்தித்தாட்கள் வாங்குவதுண்டு. அதோடு, எல்லா foreign brand சிகரெட்டுகளும் கிடைக்கும் என்பது இன்னொரு விசேஷம். மறைந்து மறைந்து குடித்த நாட்களில் ஒரு பிராண்டும், அதற்குப் பின் வேறு ஒரு பிராண்டும் நமது ஃபேவரைட். அந்த முதல் ஃபேவரைட்: மார்க்கோபோலே-ன்னு ஒரு சிகரெட். வித்தியாசமா இருக்கும்; ப்ரெளண் கலர்; சப்பையா, ஓவல் வடிவில் இருக்கும்; வாசனை பயங்கர சாக்லெட் வாசனையா இருக்கும். எப்படியும் வருஷத்தில் இரண்டு மூன்று தடவை இந்த ஸ்பெஷல் சிகரெட். இதே மாதிரி - a poor man’s version of Marco Polo - Royal Yacht என்றொரு சிகரெட். அதே கலர்,வாசனை, சுவை…! இந்த ஸ்பெஷல் ஐட்டங்களை வாங்கிட்டு, மதுரை ரயில்வே ஸ்டேஷன் உள்ளே போய் - அப்பல்லாம் பிளாட்பார்ம் டிக்கெட் உண்டா இல்லையா என்றே தெரியாது -ஏதோ ஒரு ஒதுக்குப்புறத்தில் உட்கார்ந்து, பயந்து, ரசிச்சி…..ம்..ம்ம்..அது ஒரு காலம்! பயம் போன பிறகு ஃபேவரைட் ப்ராண்ட் மார்ல்போரோ சிகரெட்தான்…ஆடிக்கொண்ணு அம்மாவாசைக் கொண்ணுன்னு…




………..தெற்குக் கோபுரத்தின் உச்சியிலிருந்து..

பறவைப் பார்வையில் மதுரை….........


அந்த சாயுங்கால ஊர்சுற்றல்களில் அந்தக் கோயில் கோபுரங்களைத் தாண்டும்போதெல்லாம் அதன் உச்சிக்குச் செல்ல நினைத்ததுண்டு; ஆனால், அது நிறைவேற ஆண்டுகள் பல காத்திருக்க வேண்டியதாயிற்று.காமிரா கிறுக்கின் உச்ச நிலையில் கோயிலின் உள்ளும் புறமும் எடுத்தபிறகு, தெற்குக் கோபுரத்தின் மேல் ஏறுவதற்கு உத்தரவு வாங்கி, நண்பன் ரவியோடு கோபுரத்தின் உச்சிக்குப் படம் எடுக்கச் சென்றோம். பொன்னியின் செல்வனை அந்த வயதில் படித்த அனைவருக்குமே இருக்கும் ஒரு சாகச உணர்வு. ஏதோ பாண்டியர் காலத்திற்கே சென்று விட்டது போன்ற நினைப்பு. அந்தக் காலத்து குடிமக்கள் எல்லாம் நினைவில் வருவதில்லை; ராஜ குமாரர்களும், குமாரத்திகளும்தான் நினைவில். அசப்பில மணியனின் குந்தவி பிராட்டி நம்முடனே நடந்து வர்ர மாதிரி நினைப்புல மேல ஏறினோம். மேலே போனா கோபுரத்தின் உச்சியில் தெரியும் அந்த கலசங்களுக்கு நடுவில் ஓர் ஆள் நுழையும் அளவிற்கு துவாரங்கள். கலசங்களுக்கு இரு புறமும் அந்தப் பெரிய பூத கணங்களின் முட்டைக் கண்களும், நீண்டு வளைந்த பற்களும்..அம்மாடியோவ்! அதுவும் dead close-up…!



ரவியும், உடன் வந்த இன்னொரு நண்பனும் ரொம்ப சாதாரணமாக அதன் வழியே வெளியே சென்று, கோபுரத்தின் உச்சியின் மேல், வெளியே - open space-ல் - நின்றார்கள்.(top of the world ?) அதை நினைத்துப் பார்க்கையில் எனக்கு இப்போது கூட அடிவயிற்றில் அட்ரீனலின் சுரப்பதை உணர முடிகிறது. அதென்னவோ, உயரமான இடங்களின்மேல் ஏறி நின்றாலே இந்த அட்ரீனலின் தன் வேலையைக் காண்பிக்கும். இதுதான் vertigo-வா என்று தெரியாது. அட போங்கப்பா, நான் வெளியில் வரமாட்டேன்னு சொல்லிட்டு, இரண்டே இரண்டு படம் எடுத்தேன். ஒன்று அங்கிருந்து கோயிலின் உட்புறம் நோக்கி; இன்னொன்று கீழ் நோக்கி மதுரையை எடுத்தேன். (இங்கே இருக்கும் படங்கள்தான் அவைகள்). ரவி நிறைய எடுத்தான்.

இந்த எபிசோட் முடிந்த சின்னாட்களில் இதே கோபுரத்தின் உச்சிக்குச் சென்று, மேலே ஏறி, வெளியே நின்று, குதித்து, கோயிலின் உட்புறம் கல் வேயப்பட்ட ஆடிவீதியில் விழுந்து ஒரு இளைஞன் தற்கொலை செய்துகொண்ட பிறகு இந்தக் கோபுரத்தில் ஏறுவதற்குத் தடை விதிக்கப்பட்டதாக அறிந்தோம்.

Dec 08 2005 06:20 pm | சொந்தக்கதை.. | | edit this
Rate this post at www.thamizmanam.com
இதுவரை விழுந்த "உள்குத்து" நிலைமை பாருங்க!!??:
(இதுவரை 2 பரிந்துரைகள்)

ஹலோ, வந்தது வந்தீங்க; வந்ததுக்கு ஒரு வோட்டு / வேட்டு போட்டுட்டு போறதுதானே! சும்மா அப்டியே போய்ட்டா எப்படி??
5 Responses
குமரன் Says:
December 8th, 2005 at 8:06 pm e
தருமி ஐயா, இதெல்லாம் எனக்கு நினைவு தெரிஞ்ச நாட்களுக்கு முன்னால நடந்திருக்கும்னு நெனைக்கிறேன். ஏன்னா எங்களை எல்லாம் கோபுரத்துல ஏற யாரும் விட்டதில்ல.

மெட்ராஸ் ஓட்டல் எனக்கு தெரிஞ்சு T.M. கோர்ட்ல (மேலமாசி வீதி, தெற்குமாசி வீதி முக்கு) தான் இருந்துச்சு. சிக்கன் பிரியாணிக்கும் சிக்கன் சாப்ஸ்க்கும் ரொம்ப பேமஸ் (எனக்கு இது ரெண்டும் அந்த ஓட்டல்ல பிடிக்கும். அதனால பேமஸ்ன்னு போட்டாச்சு). நீங்க அந்த ஓட்டலத்தான் சொல்றீங்களா?

தருமி Says:
December 8th, 2005 at 9:31 pm e
“எங்களை எல்லாம் கோபுரத்துல ஏற யாரும் விட்டதில்ல. “//
- அதனாலதான குமரன் இந்தப் பதிவு.
இறந்த பையன்கூட நண்பன் ஒருவனுக்குத் தெரிந்தவரின் தம்பி.
நீங்க சொல்ற மெட்ராஸ் ஹோட்டல் தெரியும். அதுக்குப் பக்கத்தில தான் நான் முந்தி சொன்ன பேமஸ் இட்லிக்கடை இருந்தது. இன்னொரு மெட்ராஸ் ஹோட்டல் நான் சொல்ற இடத்தில், செண்ட்ரல் மார்க்கெட் பக்கம் உயரமான படிக்கட்டோடு இருக்கும்.

பல்லவி Says:
December 8th, 2005 at 9:56 pm e
உம் மதுரையை நினைத்தால் ஞாபகம் வருவது கோபுரங்களும்,கோயில் கடை வீதியும் தான்.அப்புறம் இந்த தமுக்கம் மைதானம் பக்கத்தில் இருக்கும் நகராட்சி பூங்காவில் இருக்கும் பிள்ளையார் கோவிலும் கொஞ்ஞம் தள்ளி இருக்கும் பெருமாள் கோவிலும் தான்.உங்கள் பகுதியில் பழைய நினைவுகளை அலசுகிறீர்கள்.நடக்கட்டும்!

ivarugala Says:
December 9th, 2005 at 2:11 am e
இப்பக்கூட அந்த தருணத்தை நினைத்தால் புல்லரிக்குதுங்க தருமி.

தருமி Says:
December 9th, 2005 at 9:44 pm e
ivarugala என்ற அழகுரவிப் பையா,
வேற ஏதாவது முக்கியமான விஷயம் விட்டுப் போயிருந்தா எடுத்துக் கொடு; சரியா…?

Sunday, December 04, 2005

111. தருமின்னா கேள்வி…கேள்வின்னா தருமி !

ரஜினி ராம்கியின் இரண்டாம் ஆண்டு நிறைவுப் பதிவுக்குப் போய் - “நீங்கள்லாம் பழந்தின்னு கொட்டை போட்ட ஆளுங்க“ன்னு சொல்லி -ஒரு பின்னூட்டம் விட்டேனா.. அதில ஒரு கேள்வி இப்போ.

அது எப்படி பழம்தின்னு கொட்டை போட்ட ஆளுன்னா ரொம்ப முத்தின கேசு..much experienced ஆளுன்னு அர்த்தம் வரும்? இப்போ பழம் இருக்கு; அத ஒருத்தர் தின்னுடறார்; கொட்டையைக் கீழே கடாசுறார். எல்லாமே ரொம்ப சின்ன, சாதாரணமான காரியம்தானே; இதிலெங்கே திறமை / experience / வேற சிறப்பு இருக்கு? புரியலைங்களே!

அதுக்குப் பதிலாக, “கொட்டை போட்டு பழம் தின்னவர்” என்றால் நிறைய பொருள் இருக்கே. அது என்னனனா, ஒருத்தர் கொட்டையைப் போடுறார்; அதாவது, கொட்டையை ஊன்றி, செடியாக்கி, மரமாக்கி, பூக்க வைத்து, காய்க்க வைத்து, பழுக்க வைத்து……….அதுக்கப்புறம் அவர் தானே வளர்த்து உருவாக்கிய அந்தத் தருவின் பழத்தை தின்றால் - அது ஒரு பெரிய விஷயம் இல்லையா?

அப்டின்னா, “பழந்தின்னு கொட்டை போட்ட ஆளு”ன்னு சொல்றதில ஒரு பொருளும் இல்லையே; அதுக்குப் பதிலா, “கொட்டை போட்டுப் பழம் தின்னவர்” என்பதுதானே சரியாக இருக்கும்.

மக்களே, இதனால் உங்கள் அனைவருக்கும் தருமி தெரிவிப்பது என்னவெனில்…மன்னருக்கு மட்டும்தான் சந்தேகம் வரணுமா என்ன? இப்போ தருமிக்கே சந்தேகம். தனியொருவராக வந்து யாரேனும் இந்தச் சந்தேகத்தைத் தீர்த்துவைத்தால் அவர்களுக்கு ஆயிரம் *_____ கொடுக்கப்படும்….

* தருமி இதை என்னவென்று பின்னால் முடிவு செய்வார்.

Dec 04 2005 03:12 pm | அவியல்... | | edit this
Rate this post at www.thamizmanam.com
இதுவரை விழுந்த "உள்குத்து" நிலைமை பாருங்க!!??:
(இதுவரை 5 பரிந்துரைகள்)

ஹலோ, வந்தது வந்தீங்க; வந்ததுக்கு ஒரு வோட்டு / வேட்டு போட்டுட்டு போறதுதானே! சும்மா அப்டியே போய்ட்டா எப்படி??
23 Responses
சத்யா Says:
December 4th, 2005 at 4:26 pm e
நா இன்னும் கொட்டைய கீழ போடல…போட்டுட்டு சொல்றன்.

நன்றி!
சத்யா

சத்யா Says:
December 4th, 2005 at 5:02 pm e
இங்க வந்தா தெரியும்!

நன்றி!
சத்யா

Dondu Says:
December 4th, 2005 at 5:07 pm e
“நீங்கள்லாம் பழந்தின்னு கொட்டை போட்ட ஆளுங்க”

வேப்பம் பழத்தைத் தின்று கொட்டையை எச்சமாக இடும் காகம். அவ்வாறு அக்காகத்தின் ஜீரண உறுப்புகள் வழியாக மறுபடியும் தரைக்கு வரும் அக்கொட்டை அமோகமாக விளையும்.

அதே போல ஒருவர் தான் உட்கொண்டதை ஜீரணித்து வெளியே தரும் கருத்துக்கள் புடம் போட்டது போல பிரகாசிக்கும். அவ்வாறு செய்பவர்கள் மிகவும் அனுபவசாலிகள் என்பதே இதன் பொருள்.

முடிந்தால் பரிசு தாருங்கள், குற்றம் குறை ஏதேனும் இருந்தால் அதற்காகக் கழித்துக் கொண்டு பரிசு தாருங்கள். (இந்தக் கழித்தல் வேறு பொருளுடையது.)

அன்புடன்,
டோண்டு ராகவன்

சத்யா Says:
December 4th, 2005 at 5:21 pm e
tharumi,
i used to come here regularly, but unable to reply in all your logs ‘cos of my “inability” to analyse deeply …
avlothaan…otherwise appappo starle oru kutthu kutthittu poiduven

தருமி Says:
December 4th, 2005 at 5:29 pm e
sathya,
i have stopped ‘gazing’ at stars, of late.
anyway, thanks a lot for the patronage.

துளசி கோபால் Says:
December 5th, 2005 at 1:43 am e
தருமி,

நம்ம டோண்டு சொன்னதைப் பார்த்ததும் ஒரு விஷயம் ஞாபகம் வந்தது.

‘சிவெட்’ன்னு ஒரு மிருகம் இருக்குல்லே ( புனுகுப் பூனைன்னு நினைக்கிறேன்)
காஃபிப் பழங்களை அதுக்குக் கொடுத்துட்டா, அதோட கழிவுலே அந்தக் காஃபிக் கொட்டைகள்
வெளியே வருமில்லே. அதைக் கழுவி பிறகு வறுத்து காஃபிக்கொட்டையைப் பொடிச்சுப் போடற
காஃபிக்கு பயங்கர விலையாம்.மிகவும் விலை உயர்ந்த காஃபி.( உவ்வே!)

தயவுசெய்து நாமயாரும் தினம் காஃபி குடிக்கறப்போ இதை நினைக்கவேணாம்:-)

சரி இப்பப் பழம் தின்னு கொட்டை…..

‘அறிவு என்ற பழத்தைத் தின்னு அந்தக் கொட்டையை விதைச்சு வருங்கால சந்ததிக்கு
அறிவை வழங்கப்போறவர்’ என்ற அர்த்தம் சரியா வருதா?

பரிசுத் தொகையை நேரில் வந்து பெற்றுக் கொள்கின்றேன். தேங்க்ஸ்.

ஷ்ரேயா Says:
December 5th, 2005 at 11:26 am e


தாணு Says:
December 5th, 2005 at 1:25 pm e
நாம் என்னைக்கு பழம் தின்னு கொட்டையை உருப்படியா ஊணியிருக்கோம்? அதனால அப்பிடி அபூர்வமா செஞ்சவங்களைச் சிறப்பிக்கும் விதமா அந்த வரிகள் வந்திருக்கலாமோ?

டி.பி.ஆர். ஜோசஃப் Says:
December 5th, 2005 at 2:42 pm e
சார் எனக்கு ஒரு பயங்கரமான டவுட்டு,

பொற்காசுல்லாம் தரமுடியுமான்னு தெரியலை. மறுபடியும் Branch Managerஆனா வட்டியில்லா கடனா வேணும்னா தரேன்.

என்னா சந்தேகம்னு கேக்கறீங்களா? பழம் தின்னு கொட்டைப் போட்ட ஆளுங்களோட தலைய பாத்தாலே தெரியும்சார். கொட்டை மாதிரி பளபளப்பா.. பார்த்ததில்லே..

மத்தபடி டோண்டு சார மாதிரி விளக்கமெல்லாம் குடுக்க தெரியலை..

பாருங்களேன் துளசி ஏதோ சொல்ல வந்து நாளைலருந்து காப்பிய கூட நிம்மதியா குடிக்க முடியாது போலருக்கு. இது தேவையாங்க துளசிங்க..

ஜோ Says:
December 5th, 2005 at 4:31 pm e
பெரியவங்கள்லாம் சேர்ந்து சீக்கிரம் ஒரு முடிவுக்கு வாங்கப்பா!

கோ.இராகவன் Says:
December 5th, 2005 at 5:23 pm e
பழம் தின்னு கொட்டை போடுறது………..இதுக்கென்ன விளக்கம். இந்த வெளக்கத்துக்கே எல்லாரும் தெனறிக்கிட்டு இருக்கும் போது இன்னோன்னு சொல்றேன். தோலிருக்கப் பழந்தின்னி. இந்தத் தோலிருக்கப் பழந்தின்னிதான் பழம் தின்னு கொட்ட போட்டவரொட அண்ணன். யாருக்காவது புரியுதா?

Mohandoss Ilangovan Says:
December 5th, 2005 at 5:46 pm e
I sent one mail to you Dharumi. Please check.

ஷ்ரேயா Says:
December 6th, 2005 at 5:08 am e
//* தருமி இதை என்னவென்று பின்னால் முடிவு செய்வார்.//

“பின்”னால் முடிவு செய்வீங்களா?? புது method ஆ இருக்கே..

ராம்கி Says:
December 6th, 2005 at 6:48 am e
கொட்டை போட்டுப் பழம் தின்னவர் மற்றும் பழம் தின்னு கொட்டை போட்டவர் எல்லாம் தாங்களே.. உங்களுக்கே சந்தேகமா? உங்க ஊர்ல மண்டபத்துல யாராவது வந்து கவிதை எழுதித் தருவாங்களே..

Kumaran Says:
December 7th, 2005 at 9:57 pm e
இதோ வந்துட்டேன் ராம்கி மண்டபத்துல பாட்டெழுதிக் கொடுத்து சந்தேகம் தீர்க்க. பாண்டியனார் சந்தேகம் என்றால் என் தந்தையார் இறையனார் வருவார்; இது பாமரனார் (தருமி ஐயா மன்னிக்கவும், நான் புலவர் தருமியைக் குறிக்கிறேன்) கேட்ட சந்தேகம் தானே - குமரா நீ சென்று வான்னு அனுப்பிச்சிட்டார். பாட்டுக்குப் பொருள் புரியலைன்னா தோலிருக்க சுளைமுழுங்கி நம்ம ராகவன் வந்து விளக்குவார்

மூத்தவரை முழுதும் அறிந்தவரை பக்தியுடன்
கூத்தவனைக் கொண்டாடி ஞானப் பழம் தின்றார்
உருத்திராக்கக் கொட்டை அணிந்தாரைக் கூறுவதே
பழம் தின்று கொட்டை போடுவார்.

தருமி Says:
December 8th, 2005 at 9:06 pm e
பாட்டுக்குப் பொருள் புரியலைன்னா தோலிருக்க சுளைமுழுங்கி நம்ம ராகவன் வந்து விளக்குவார் “// -

ராகவா…வாங்கய்யா..வந்து என்ன ஏதுன்னு சொல்லுங்கய்யா..!

கோ.இராகவன் Says:
December 9th, 2005 at 2:18 pm e
ஆகா! பாட்டைத் தந்த குமரா! ஏட்டை என்னிடம் தள்ளி விட்டாயா! உனது எண்ணமே திருவுளம். அப்படியே செய்திடலாம்.

தருமி, இந்த பாடலுக்கு விளக்கம் எழுதுனா…பெருசா வருது. ஒரு பதிவே போட்டுர்ரேன். சரியா?

குமரன் Says:
December 9th, 2005 at 3:50 pm e
இராகவன்,

தருமி ஐயா கேள்வியைப் பார்த்தவுடன் எனக்குத் தோன்றிய பாடலை நான் எழுதி இங்க பின்னூட்டத்துல போட்டேன். அதுக்கு கலக்கலா ஒரு விளக்கம் உங்க வலைப்பதிவுல கொடுத்து கலக்கிட்டீங்களே…. நன்றிகள் வாழ்த்துகளுடன்.

நீங்கள் குறிப்பிட்டதைப் போல் இது ‘நான் தேடிப் போட்ட தமிழ்ப்பாடல்’ கிடையாது. ராம்கியின் பின்னோட்டம் பார்த்தவுடன் அப்போது எனக்குத் தோன்றிய விளக்கத்தை பாடலாய் போட்டால் நன்றாய் இருக்கும் என்று தோன்றியதால் நான் எழுதிய பாடல். தளை தட்டியிருக்கும்; அப்படி இருந்தால் என் தலை தட்டுங்கள்.

அது சரி தோளிருக்க சுளைமுழுங்கிக்கு விளக்கம் சொல்லலை?

குமரன்.

J. Rajni Ramki Says:
December 9th, 2005 at 4:03 pm e
//தோளிருக்க சுளைமுழுங்கிக்கு

கோ.இராகவன் Says:
December 9th, 2005 at 5:48 pm e
தேடிய பாடலா இருந்தா என்ன? பேப்பரில் பேனா ஓடிய பாடலா இருந்தா என்ன? எல்லோரும் நாடிய பாடலாக இருந்தால் சரிதானே குமரன்.

தருமி Says:
December 9th, 2005 at 8:38 pm e
தோலிருக்க சுளை முழுங்கி - இதற்குப் பொருள் எல்லோருக்கும் புரியும்தானே; இது ஒன்றும் புரியாத புதிரல்லவே!

குமரன் Says:
December 9th, 2005 at 9:29 pm e
தோலிருக்க சுளைமுழுங்கிக்கு என்ன பொருள்ன்னு சொல்லுங்க தருமி ஐயா.

//தோளிருக்க சுளை…// எழுத்துப் பிழையைத் திருத்தியதற்கு நன்றி. ரஜினி ராம்கிக்கும் நன்றி. முதலில் ரஜினி ராம்கி பின்னூட்டத்தைப் பார்த்த போது எதற்கு அந்த ஸ்மைலி போட்டிருக்கார்னு புரியலை. உங்க பின்னூட்டம் பார்த்தபிறகு தான் நான் செய்த எழுத்துப்பிழை புரிந்தது.

தருமி Says:
December 9th, 2005 at 9:48 pm e
இந்த அர்த்தம் சொல்ற வேலயெல்லாம் தருமிக்குக் கிடையாது. அதெல்லாம் குமரன் & ராகவன் பாத்துக்கணும்; தருமிக்கு கேள்வி கேட்கிறதுதான் பிடிக்கும்னு (& தெரியும்னு! ) தெரியாதா?

Comment
Name

Mail (will not

Friday, November 25, 2005

110. திருமாவுக்கு ஒரு வார்த்தை…

மரியாதைக்குரிய திருமா,

உங்கள் தூண்டுதலோ, உங்கள் கட்சியின் ஆதரவோ இன்றி தன்னிச்சையாகத்தான் குஷ்பூ எதிர்ப்பு போராட்டம் நடக்கிறது என்று சொல்லியுள்ளீர்கள்.



நம் “தமிழ்ப் பண்பாட்டு’க்கு எழுந்துள்ள சவாலை முறியடிக்க இது மக்களின் மத்தியில் சுயமாகப் பூத்த ஒரு போராட்டம் என்று சொல்லியுள்ளீர்கள். இருந்தாலும் உண்மை உலகத்துக்கே தெரிந்ததுதான். அதை விடுங்க.

நான் சொல்ல வந்தது:

* பெயர்கள் வைப்பதில்கூட இருந்த ஜாதீய முறையை மாற்ற, ஒழிக்க நல்ல தமிழ்ப் பெயர்களைச் சூட்டிக்கொள்ள உங்கள் சமூகத்தினரைக் கேட்டுக்கொண்டீர்கள். இது ஒரு நல்ல முடிவு. தமிழை இப்படிப் பயன்படுத்துவது எவ்வளவு அர்த்தமுள்ளதாக உள்ளது.

* இதே போல அவர்கள் எப்படி படிப்பினால் மட்டுமே உயர முடியும் என்பதையும் அழுத்தமாக மனதில் ஊன்றுங்கள்.

* குலத்தொழிலை விட்டு வெளியே வந்தாகவேண்டும் என்ற உண்மையை வலியுறுத்துங்கள்.

* எல்லாவற்றையும் விட தலித்துகளுக்கு நிறைய செய்வதாகக் கூறப்பட்டாலும், இப்போது அதிலும் ஏற்றத்தாழ்வுகள் ஏற்பட்டுவிட்டது: பயன்பெற்று உயரே போய்விட்டு, ‘திரும்பிப் பார்க்க’ விரும்பாதவர்கள் ஒரு புறம்; இன்னும் நமக்கு என்னென்ன சலுகைகள் இருக்கின்றன என்பதுகூட தெரியாது, எந்த விழிப்புணர்வும் இல்லாத ஏழை மக்கள் மறுபுறம். ‘இது என் விதி’என்ற நினைப்பிலேயே தனது சமூக நிலைக்குக் காரணம் புரியாது இருக்கும் மக்கள் கூட்டத்திற்கு இப்போது தேவை விழிப்புணர்வு; அதை ஏற்படுத்த முயலுங்கள்.

* தலித்துகளுக்குக் கிடைக்கவேண்டிய சலுகைகளைப் பெற அவர்களின் முதல் தேவையான ஜாதிச் சான்றிதழ் கிடைக்காததால் அவதிப்படும் ஏழை தலித் மாணவர்களையும், மற்ற மக்களையும் அடிக்கடி சந்தித்துள்ளேன். மாவட்டம்தோறும் ஓர் அமைப்பை ஏற்படுத்தி, இதுபோல சான்றிதழுக்காக இழுத்தடிக்கப்படும் மக்களுக்கு உதவிடுங்கள். மற்ற சாதியினரில் சிலர் போலிச்சான்றிதழ்கள் பெற்று உயர் கல்வி பெற்று இன்று மேல் நிலையில் சமூகத்திலும், அரசியலிலும் உயர்ந்த இடங்களில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. உண்மையான தலித்துகளுக்கு இந்த விஷயத்தில் உதவுவது பேருதவியாக இருக்கும்.

கண்முன்னே நீங்கள் சாதிக்கவேண்டிய காரியங்கள் இதுபோல் இன்னும் எவ்வளவோ இருக்கின்றன. தமிழ் என்றும் வாழும்; தார்ச்சட்டி எப்போதும் இருக்கும்; தமிழர்தம் கலாசாரம் என்றும் இருக்கும். நம் தமிழ்ப்பெண்களின் கற்பை காக்கா வந்து தூக்கிட்டுப் போய்விடாது. ஆகவே அவைகளைப் பற்றிக் கவலைப் படாமல் இப்போது ஆகவேண்டியதைப் பாருங்கள். தமிழ் காப்பும், தார் பூசுவதும் உங்களுக்கு இப்போது தேவையில்லை. Can you afford to have these LUXURIES, that too, NOW. அவைகள் வெறும் முழக்கங்கள்; மீடியாக்களின் பசிக்கும், பங்கேற்பவர்கள் தங்களை முன்னிலைப் படுத்திக் கொள்ள மட்டுமே இந்த gimmicks என்பது யாருக்குத்தான் தெரியாது? உங்கள் தோழமைக்கட்சிகள் வேண்டுமானால் அவைகளைச் செய்து கொள்ளட்டும்.

அதோடு, ஒரு கரம் ராமதாஸுடன் என்பது சந்தோஷமே; இன்னொரு கரம் கொண்டு ஏன் கிருஷ்ணசாமியுடனும் உறவு கொள்ளக் கூடாது?

Nov 25 2005 02:46 pm | அரசியல்... and சமூகம் | | edit this
Rate this post at www.thamizmanam.com
இதுவரை விழுந்த "உள்குத்து" நிலைமை பாருங்க!!??:
(இதுவரை 6 பரிந்துரைகள்)

ஹலோ, வந்தது வந்தீங்க; வந்ததுக்கு ஒரு வோட்டு / வேட்டு போட்டுட்டு போறதுதானே! சும்மா அப்டியே போய்ட்டா எப்படி??
58 Responses
இளவஞ்சி Says:
November 25th, 2005 at 4:23 pm e
//தமிழ் என்றும் வாழும்; தார்ச்சட்டி எப்போதும் இருக்கும்; //

எப்படிங்க இப்படியெல்லாம்?!

சுதர்சன் Says:
November 25th, 2005 at 4:58 pm e
தருமி,

திருமாவின் ஆரம்ப கால முயற்சிகள் தம் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதை மட்டுமே நோக்கமாகக் கொண்டிருந்தன. அவரின் பேச்சும், எழுத்தும் நல்லதொரு எழுச்சியை ஏற்படுத்தியிருந்தது. பல இடங்களில் வெறும் சோற்றுக்காக உழைத்த மக்கள், ‘சோறு வேண்டாம், கூலி கொடு’ என்று கேட்க ஆரம்பித்தனர். பண்ணை வீட்டில் சாணி அள்ளுவது போன்ற காலங்காலமாக செய்து வந்த வேலைகளை மறுத்தனர். படிப்பின் அவசியமும் பலருக்கு புரிந்தது. அவரின் வீச்சு வடக்கிலிருந்து தெற்கிற்கு பரவும் சமயத்தில் அவரின் இயக்கம் அரசியல் இயக்கமானது. பிறகு மெல்ல மெல்ல தடம் மாறி இன்று ஒரு சாதாரண அரசியல்வாதியாகி போல தோற்றமளிக்கிறார். இந்த தமிழ் பாதுகாப்பும், கலாசார காப்பும் அவரின் முழு சக்தியையும் நேரத்தையும் உறிஞ்சி வீணடிக்கிறது. ‘அடங்க மறு, அத்து மீறு’ என்ற வசனத்தின் வேரை அவர் மறக்காமல் இருக்க வேண்டும்.

டி.பி.ஆர். ஜோசஃப் Says:
November 25th, 2005 at 5:07 pm e
தருமி சார்,

நீங்க மூனு நாளைக்கு முன்னால சன் நியூஸ்ல நடந்த கலந்துரையாடல்ல இவரு பேசினத கேட்டீங்களான்னு தெரியலை. கேட்டிருந்தீங்கன்னா இன்னும் காரமா எழுதியிருப்பீங்க. அவ்வளவு கேவலமா நடிகைகளை அவ, இவன்னு.. கேக்கறதுக்கு நாராசமா இருந்தது.

இவரெல்லாம் ஒரு தலைவர்?

இவங்கல்லாம் தப்பித்தவறி ஜெயிச்சி பதவியில உக்கார்ந்தா நாடு என்ன ஆவும்? சிவசேனாவே பரவாயில்லைன்னு தோணும். தாலிபான் கதையாகாம இருந்தா சரிதான்.

நீங்க சொன்னதையெல்லாம் செய்றதுக்கு அவருக்கு எங்க சார் நேரம்?

அதுசரி சார். உங்க பதிவுக்கும் அதுலருக்கற ஃபோட்டோவுக்கும் சம்மந்தம் இருக்கா?

ஜோ Says:
November 25th, 2005 at 5:08 pm e
தருமி,
ஆச்சர்யம் என்னன்ணா நேற்று இதே கருத்துக்களை வைத்து வலைப்பூ நண்பர் ஒருவரிடம் நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்தேன் .என்னுடைய கருத்தை அப்படியே புரதிபலிக்கிறது உங்கள் இந்த பதிவு..நன்றி!

சோம்பேறி பையன் Says:
November 25th, 2005 at 5:31 pm e
வணக்கம் தருமி ஐயா, ரொம்ப நாள் கழிச்சு இன்றுதான் உங்க வலைப்பக்கத்துக்கு வந்தேன்.. வழக்கம்போலவே கலக்கிக் கொண்டிருக்கிறீர்கள்.. ரீகல் தியேட்டர் தல புராணம், விஜய்-ரஜினி பதிவுகள் மசாலா கலக்கல்.. சூப்பரப்பூ…

MUTHU Says:
November 25th, 2005 at 5:38 pm e
joseph சார்,

இங்கு ஓங்கி ஒலிக்கிற பிரச்சாரத்தை நம்பி முற்போக்குவாதி என்றால் இப்படித்தான் சிந்திக்கவேண்டும் போல இருக்கிறதே என்று எண்ணிவிடாதீர்கள். இங்குள்ள முற்போக்குவாதிகள் காரியகாரர்கள்..சில விஷயங்களில் உங்கள் சிந்தனை அவர்களால் இன்பூளியன்ஸ் செய்யப்பட்டு உள்ளது தெரிகிறது.

நடிகைகளை இதைவிட கேவலமா தினமலர் எழுதறதை நீங்க படிச்சதில்லையா?

MUTHU Says:
November 25th, 2005 at 5:40 pm e
திருமாவளவன் நீங்க சொல்ற மாதிரி காம்ரமைஸ் பண்ணாமல் இருந்தால்
காணாமல் போய்விடுவார். காம்பரமைஸ் பண்ணிக்காமல் அரசியல் கிடையாது என்பதை புரிஞ்சுக்கங்க.

எல்லாரும் அவுத்து போட்டுட்டு ஆடும்போது அவர் மட்டும் போத்திக்கிட்டு இருக்கணுமா? அவரு அடக்கி வாசிச்சா மட்டும் நீங்க அவருக்கு ஓட்டு போட்டிடுவீங்களா என்ன?

குமரன் Says:
November 25th, 2005 at 5:41 pm e


டி.பி.ஆர். ஜோசஃப் Says:
November 25th, 2005 at 6:17 pm e
முத்து,

உணர்ச்சிவசப்படாதீர்கள். தினமலர்மேல கேஸ் போட்டா அவரும் இப்படி அலையவேண்டியதுதான்.

கேஸ் யார் யார்மேல வேணும்னாலும் போடலாம். அத வேணுமா இல்லையாங்கறத முடிவு பண்ண வேண்டியது நீதிமன்றம்தான். நீங்க விருப்பப்பட்டாலும் படாட்டாலும். அதுதான் உண்மை.

இரத்தினவேலு Says:
November 25th, 2005 at 6:25 pm e
//* தலித்துகளுக்குக் கிடைக்கவேண்டிய சலுகைகளைப் பெற அவர்களின் முதல் தேவையான ஜாதிச் சான்றிதழ் கிடைக்காததால் அவதிப்படும் ஏழை தலித்//
சரியான ஆதாரத்தைக்கொடுத்தால் சாதிச்சான்றிதழ் வழங்குவார்கள் அதில் ஒன்றும் குறைவுகிடையாது. பொய்யானவர் பொய்யாக சான்று வாங்கிவிட்டால் கொடுத்தவர் வட்டாட்சியர் கோட்டாட்சியர் பெட்டியைக் கட்டடிக்கிட்டு வீட்டுக்குப் போகவேண்டியதுதான் அதற்காகத்தான். மாற்றுச்சாதியினர் இந்த சாதிதான் நான் எனக்கு கொடுங்கள் என்று ஒரு தலித்துடைய சான்றை எடுத்துககொண்டு வந்து இது எனது அண்ணன் என கேட்பார் அப்பா பெயர் சரியாக இருக்கம். அதற்காகத்தான் நன்றாக விசாரித்து கொடுக்க வேண்டியுள்ளது.

தருமி Says:
November 25th, 2005 at 9:22 pm e
//தமிழ் என்றும் வாழும்; தார்ச்சட்டி எப்போதும் இருக்கும்; //
எப்படிங்க இப்படியெல்லாம்?! - இளவஞ்சி

வேணாம் இளவஞ்சி …இந்த சிரிப்பெல்லாம் ..சொல்லிப்புட்டேன், ஆமா..!

தருமி Says:
November 25th, 2005 at 9:31 pm e
சுதர்சன்,
வசனத்தின் வேரை அவர் மறக்காமல் இருக்க வேண்டும். // உயரத்துக்குப் போகிறவர்கள் எல்லோருமே முதலில் மறப்பது தாங்கள் வந்த வழியையும், தங்கள் வேர்களையும்தானே. இதில் நம்ம அரசியல்வாதிகளின் ஸ்கோர்: 200%

தருமி Says:
November 25th, 2005 at 9:35 pm e
சன் நியூஸ்ல நடந்த கலந்துரையாடல்ல இவரு பேசினத கேட்டீங்களான்னு தெரியலை// அந்த ‘பாக்கியத்தை’ நான் எப்படியோ இழந்துவிட்டேன்.

உங்க பதிவுக்கும் அதுலருக்கற ஃபோட்டோவுக்கும் சம்மந்தம் இருக்கா? // ஒவ்வொரு பதிவுக்கும் ஒரு படம் என்ற அளவில் மட்டுமே சம்பந்தம்! முடிஞ்சா ஏதாவது ஒரு அர்த்தம் கொடுக்க முடியுமான்னு ஒரு முயற்சியும்தான். (உன்னையே பார்த்துக்கொள் - அப்டின்னு ஒரு டைட்டில் போட்றுவோமா? )அவரு ஆனந்த்விநாயகம் மட்டும்தான் படம் காண்பிக்கணுமா என்ன? (அது சரி, சம்மந்தம்/சம்பந்தம் -ரெண்டுல எது சரி?)

தருமி Says:
November 25th, 2005 at 9:59 pm e
ஜோ,
ஜோ நினைக்கிறார்…தருமி செஞ்சிர்ரான் … இது எப்படி…?

கொஞ்சம் முந்திக்கிட்டேனோ..?

சோம்பேறி பையன்,
சூப்பரப்பூ… //
சரிப்பூ..அடிக்கடி வந்து போய்க்கிட்டு இருங்கப்பூ, சரியா…?

தருமி Says:
November 25th, 2005 at 10:13 pm e
முத்து,
உங்களுக்கும் ஜோசஃப்புக்கும் நடுவில் நான் வரலாமா?

//இங்கு ஓங்கி ஒலிக்கிற பிரச்சாரத்தை நம்பி..// - இங்கு என்பது எங்கு? என்ன பிரச்சாரம் ஒலிக்கிறது இங்கு? புரியலையே?

//காம்பரமைஸ் பண்ணிக்காமல் அரசியல் கிடையாது../ - சுதர்சன் சொன்ன மாதிரி வேர்களை மறக்கிற அளவுக்கு அது என்ன காம்ப்ரமைஸ்…? விளங்கலையே?

//நீங்க அவருக்கு ஓட்டு போட்டிடுவீங்களா என்ன?// யார் யார் யார் யாருக்கு ஓட்டு போடுவாங்க்ன்னு உங்களுக்குத் தெரியுமா?

உங்கள் கோபம் யார் மீது? ஏன்? தெரியலையே?

தருமி Says:
November 25th, 2005 at 10:20 pm e
இரத்தினவேலு,
//சரியான ஆதாரத்தைக்கொடுத்தால் சாதிச்சான்றிதழ் வழங்குவார்கள் அதில் ஒன்றும் குறைவுகிடையாது.// - சான்றிதழ்களுக்காக ஆண்டுக்கணக்காக அல்லல் படும் யாரையாவது உங்களுக்குத் தெரியுமா? இருக்க வீடில்லாமல் இருப்பவரிடம் சொத்துப் பத்திரம் இருக்குமா? எது இல்லையோ அதைக்கொண்டு வா என்று கேட்கப்பட்டு
வாழ்நாளெல்லாம் இதற்காக அலைந்தவர்களைத் தெரியுமா?
//வட்டாட்சியர் கோட்டாட்சியர் பெட்டியைக் கட்டடிக்கிட்டு வீட்டுக்குப் போகவேண்டியதுதான் // வட்டாட்சியர் கோட்டாட்சியர் இவர்கள் மீது உள்ள கரிசனத்தில் கொஞ்சம் இந்த மக்கள் மீது எல்லோருக்கும் வந்தாலே போதும்.

முகமூடி Says:
November 26th, 2005 at 12:54 am e
மரியாதைக்குரிய தருமி,

உங்கள் சமூகம், தலித் முன்னேற்றம் என்றெல்லாம் சொல்லி திரு.திருமா அவர்களை ஏன் ஒரு குறுகிய வட்டத்துக்குள் அடைக்க முயற்சிக்கிறீர்கள்.. அவரின் பார்வை விரிவடைந்தது உங்களுக்கு தெரியாததா? காம்ப்ரமைஸ் பண்ணாமல் இருந்தால் காணாமல் போய்விடுவோம் என்பதை உணர்ந்து ஒரு விசாலமான பார்வை கொண்டு விடுதலை சிறுத்தைகள் என்பது ஒரு பிரிவினரின் முன்னேற்றத்துக்கான இயக்கம் இல்லை, அனைவருக்கும் பொதுவான அரசியல் கட்சி என்ற இமேஜ் வர போராடுபவரை ஏன் மீண்டும் மீண்டும் ஆரம்பத்தை ஞாபகப்படுத்தி பின்னேற சொல்கிறீர்கள்.. இது போலவே ஆரம்பத்தை நினைவுபடுத்தி பாட்டாளிகளின் முன்னேற்றம் குறித்து திரு.இராமதாஸருக்கும், தமிழினத்தின் முன்னேற்றம் குறித்து திரு.கருணாநிதி அவர்களுக்கும் இவவாறு கடிதம் எழுதுவீர்களா? திரு.திருமா அவர்கள் மீது மட்டும் உங்களுக்கு ஏன் இவ்வளவு காழ்ப்புணர்ச்சி?

முகமூடி Says:
November 26th, 2005 at 1:07 am e
// அதோடு, ஒரு கரம் ராமதாஸுடன் என்பது சந்தோஷமே; இன்னொரு கரம் கொண்டு ஏன் கிருஷ்ணசாமியுடனும் உறவு கொள்ளக் கூடாது? //



துளசி கோபால் Says:
November 26th, 2005 at 1:27 am e
சூப்பர் பதிவு தருமி.

இப்ப நீங்க சொன்ன ‘கிருஷ்ணசாமி’ யாருன்னு தெரியலை.

அரசியல்வாதியா? என்ன கட்சியாம்?

-L-L-D-a-s-u-- Says:
November 26th, 2005 at 4:52 am e
சூப்ர்ரப்பு தருமி

கல்வெட்டு Says:
November 26th, 2005 at 7:23 am e
//இப்ப நீங்க சொன்ன ‘கிருஷ்ணசாமி’ யாருன்னு தெரியலை.//

அக்கா சும்மா அடுப்படியிலேயே பாயாசம்,வடைன்னு சிந்திச்சுக்கிடே இருந்தா எப்படி? இவரும் டாக்டர்தான். தென் மாவட்டங்களில் கொஞ்சம் பிரபலம்.

அப்புறம் தருமி அந்த மீனாட்சி மிஷன் ஆசுபத்ரிக்கார அய்யாவ விட்டுட்டீக அவரையும் இன்னொரு கைய பிடிச்சுக்கட்டும். தென் மாநிலங்களும் அமைதியா இருக்கும்.

துளசி கோபால் Says:
November 26th, 2005 at 7:42 am e
கல்வெட்டு,

ஓஓஓஓ … இப்ப ‘டாக்டர்’ங்கெல்லாம் கட்சி ஆரம்பிச்சு ‘நடத்தி’ வராங்களா?

அதென்ன ‘மீனாட்சி மிஷன் ஆசுபத்திரி அய்யா’ விஷயம்?

நாட்டு நடப்பு சரியாத்தெரியலையே(-:

கொழுவி Says:
November 26th, 2005 at 8:05 am e


தருமி Says:
November 26th, 2005 at 8:39 am e
முகமூடி,
உங்கள் அங்கதம் புரிகிறது. அரசியல் என்பது எல்லோருக்கும் ‘முழு நேர வேலை’தான்! தெரியும். ஆனாலும் தலித் தலைவர்கள் கண் துஞ்சாது, மெய்வருத்தம் பாராது இந்த காலகட்டத்தில் உழைத்தாலொழிய there would not be any light at the end of the tunnel- என்பது உங்களுக்குத் தெரியாதா என்ன? எதற்கு இந்த தேவையில்லாத விளக்கம். உங்கள் கேள்விகளுக்கு ஏற்கெனவே இப்படி பதில் அங்கேயே சொல்லிவிட்டேனே: Can you afford to have these LUXURIES, that too, NOW.

தருமி Says:
November 26th, 2005 at 8:45 am e
முகமூடி,
நான் என்னவோ ஆத்ம சுத்தி என்பார்களே அதுபோன்ற ஓர் உண்மையான ஆதங்கத்தோடு எழுதியதுதான் இப்பதிவு. அந்த மாதிரி பதிவுகளில்கூட நீங்கள் இதுபோல் குசும்பு பண்ணும்போது ‘நறுக்’குன்னு இந்த ஆளு தலைல குட்டினா என்னென்னு தோணும். குட்டட்டா…?

தருமி Says:
November 26th, 2005 at 9:07 am e
முகமூடி,
நான் என்னவோ ஆத்ம சுத்தி என்பார்களே அதுபோன்ற ஓர் உண்மையான ஆதங்கத்தோடு எழுதியதுதான் இப்பதிவு. அந்த மாதிரி பதிவுகளில்கூட நீங்கள் இதுபோல் குசும்பு பண்ணும்போது ‘நறுக்’குன்னு இந்த ஆளு தலைல குட்டினா என்னென்னு தோணும். குட்டட்டா…? அது அவ்வளவு எளிதில் நடக்கக்கூடியதல்ல என்பது தெரியும்தான்; இருப்பினும் ஒரு ஆசை.

தருமி Says:
November 26th, 2005 at 9:11 am e
நன்றி துளசி.

ஸ்மைலிஸ் போட்டது தப்புத்தான் கொழுவி.ஆனாலும் இப்படியா? ரொம்பத்தான் பொறுமை உங்களுக்கு…! இருந்தாலும் உங்க நீங்க சொல்லவந்தது அப்ப்டியே எனக்குப் புரிஞ்சிரிச்சி

MUTHU Says:
November 26th, 2005 at 9:49 am e
திரு தருமி.

//உங்களுக்கும் ஜோசஃப்புக்கும் நடுவில் நான் வரலாமா? //

நீங்க கண்டிப்பா வரலாம்.உங்களுக்கு உரிமை இருக்கு. இது உங்க வீடுங்க.நாங்க வந்து பேசிட்டு இருக்கோம்.நீங்க காபி கொடுத்து நாலு வார்த்தை பேசுறது தப்பா என்ன?

//இங்கு ஓங்கி ஒலிக்கிற பிரச்சாரத்தை நம்பி..// - இங்கு என்பது எங்கு? என்ன பிரச்சாரம் ஒலிக்கிறது இங்கு? புரியலையே?

இங்கே என்பது தமிழ்மணத்தை குறிக்கும். உஙகளுடைய இந்த பதிவை பற்றி அல்ல. முற்போக்கு என்றால் என்ன என்பதை பற்றித்தான்.அதிலென்ன சந்தேகம்?

//காம்பரமைஸ் பண்ணிக்காமல் அரசியல் கிடையாது../ - சுதர்சன் சொன்ன மாதிரி வேர்களை மறக்கிற அளவுக்கு அது என்ன காம்ப்ரமைஸ்…? விளங்கலையே?

வேர்களை மறக்காமல் அரசியல் பண்ணறதுக்கு அவர் அரசியல் களத்தில் தொடர்ந்து இருக்கவேண்டியது முக்கியம் என்று நான் நினைக்கிறேன்.அவர் வேர்களை மறக்காமல் இருக்கிறாரா என்பதை அவர் யாருக்காக பாடுபடுகிறாரோ அவர்கள் சொல்லவேண்டும் என்பது என் கருத்து.

//நீங்க அவருக்கு ஓட்டு போட்டிடுவீங்களா என்ன?// யார் யார் யார் யாருக்கு ஓட்டு போடுவாங்க்ன்னு உங்களுக்குத் தெரியுமா?

உங்கள் கோபம் யார் மீது? ஏன்? தெரியலையே?

என் கோபம் யார் மீதும் இல்லை(நீங்கள்ளால் பெரிய ஆள்.நாங்கள்ளாம் இப்பத்தான் இங்க எட்டி பார்க்கிறோம்)அடக்கி வைக்கப்பட்ட சமுதாயத்தில் இருந்து போராடி ஒரு முக்கிய சக்தியாக வருவது எனக்கு பிடித்திருக்கிறது. நாமெல்லாம் வாயளவில் அவர்கள் முன்னேற்றத்தை பற்றி பேசி ஆனால் உண்மையில் யாராவது முன்னேறினால் அதை தடுக்க பார்க்கிறோம் என்று நினைக்கிறேன்.இதை பற்றி நிறைய எழுத இருக்கிறது.தனிப்பதிவாக இடுகிறேன்.

MUTHU Says:
November 26th, 2005 at 9:53 am e
joseph சார்,

நான் எதுக்கு உணர்ச்சி வசப்படறேன்?. கேஸ் போடறதை பத்தி நான் பேசலை. வெட்டியா யார் கேஸ் போட்டாலும் அது முட்டாள்தனம்தான்.

ஆனால் திருமாவளவனை நீங்கள கடுமையாக விமர்சித்த மாதிரி எனக்கு பட்டதால் கூறினேன்.(இவரெல்லாம் ஒரு தலைவர் என்ற வார்த்தை)

டி.பி.ஆர். ஜோசஃப் Says:
November 26th, 2005 at 1:18 pm e
ஐயோ முத்து,

நான் சண்டைக்கெல்லாம் வரலை. திருமா உங்க பார்வையில பெரீரீரீரீய தலைவரா? இருக்கட்டும், இருக்கட்டும். நல்லாயிருக்கட்டும்.

தருமி Says:
November 26th, 2005 at 11:24 pm e
முத்து தம்பி,

நீங்கள் ஒன்றை சரியாகப் புரிந்து கொள்ளுங்கள். காலங்காலமாய் அடக்கிவைக்கப்பட்ட மக்கள் தங்கள் உரிமைகளைப் புரிந்து கொள்ளவும், தங்கள் வாழ்வை உயர்த்திக் கொள்ள தலைவர்களாகத் தங்களை முன்னிறுத்திக் கொள்பவர்கள் உதவ வேண்டும் என்று நான் சொல்லும் ஆதங்கத்தைப் புரிந்து கொள்ளுங்கள்.

//(நீங்கள்ளால் பெரிய ஆள்.நாங்கள்ளாம் இப்பத்தான் இங்க எட்டி பார்க்கிறோம்)// இந்த நினைப்புதான் வேண்டாமென்கிறேன்.

//அடக்கி வைக்கப்பட்ட சமுதாயத்தில் இருந்து போராடி ஒரு முக்கிய சக்தியாக வருவது எனக்கு பிடித்திருக்கிறது// - அது முக்கிய சக்தியாக மட்டுமல்ல, அந்த சமுதாயத்தை இன்னும் சரியான பாதையில் கொண்டு செல்ல வேண்டிய முனைப்பான சக்தியாக இருக்க வேண்டுமென்பதுதான் என் ஆசையும் என்று நான் நினைப்பது உங்களுக்குப் புரியவில்லையா..?

ivarugala Says:
November 28th, 2005 at 11:11 pm e
அன்புள்ள தருமி அவர்களுக்கு,
உங்களது அனைத்துக் கருத்துக்களிலும் யாருக்கும் மாற்றுக்கருத்து இருக்கமுடியாது. திருமாவிற்கும் கூட!!!. நீங்கள் பதிவு செய்தவைகளெல்லாம் சம்மந்தப்பட்டவர்களுக்கு தெரியாதா என்ன?
அவர்கள் செய்வது தெரிந்தே செய்கிறார்கள். இவர்கள் திருந்த வேண்டும் அல்லது புதியதாக தன்னலமில்லாத சிலர் உண்மையிலேயே தன்னலமில்லாதவர்கள் தலைமைக்கு வரவேண்டும்.

தருமி Says:
November 29th, 2005 at 9:39 am e
தன்னலமில்லாத சிலர் உண்மையிலேயே தன்னலமில்லாதவர்கள் தலைமைக்கு வரவேண்டும்../ –எப்போ அத்தைக்கு மீசை முளைத்து…என்னமோ போங்க!

Snegethy Says:
December 3rd, 2005 at 6:23 am e
Dharumi aiya,
ungalapathium ungada appa patrium dinamalarila podurukinam.
(-._.-)
_( Y )_
(:_-*-:)
(_)-(_)

சிங். செயகுமார். Says:
December 3rd, 2005 at 7:27 am e
தாத்தாவுக்கு தெரிய படுதலாம்னு நெனச்சேன் சினேகிதி! முந்தி கிட்டீங்க!
வாழ்த்து சொல்ல வயசில்ல ! ஆசீர்வாதமாவது கிடைக்குமா தாத்தா ?

தருமி Says:
December 3rd, 2005 at 11:51 am e
நன்றி சினேகிதி..பார்த்தேன்.

சிங். செயக்குமார்,
ஆசிவாதம்தானே…உங்களுக்கில்லாததா…நல்லா இருங்க..என்றும்.

குமரன் Says:
December 3rd, 2005 at 10:16 pm e
வாழ்த்துகள் தருமி ஐயா. உங்கள் வலைப்பதிவைப் பற்றி இன்றைய தினமலரில் போட்டிருக்கிறார்கள் பார்த்தீர்களா?

http://www.dinamalar.com/2005Dec03/flash.asp

Snegethy Says:
December 3rd, 2005 at 11:40 pm e
\\ஆசிவாதம்தானே…உங்களுக்கில்லாததா…நல்லா இருங்க..என்றும்\
appa enaku?

-L-L-D-a-s-u-- Says:
December 4th, 2005 at 4:55 am e
தினமலர் “தருமிக்கு 61 வயது. வெப்சைட் நடத்துவோரில் தமக்குத்தான் வயது அதிகம் என்று நினைத்துக்கொண்டிருந்தார்.”

அப்படியா? தருமி . ‘தமிழ்மண’-பதிவரில் மூத்தவர் என்று கூறினீர்கள் என்றுதான் நினைக்கிறேன் . என்னமோ போங்க !!

வாழ்த்துக்கள் ..

madhumitha Says:
December 4th, 2005 at 10:44 am e
வாழ்த்துகள் தருமி.

திருமாவுக்கு
ஒரு வார்த்தை

கவிதையையும் விடமாட்டீங்களோ

சரி நாங்க ஒங்க நலனில் அக்கறையா இருக்கோம்.
கொஞ்சம் ஆட்டோ,அடியாளுங்க வராத ஜாக்கிரதையா இருங்கய்யா

தருமி Says:
December 4th, 2005 at 2:29 pm e
பாத்துட்டேன் குமரன்….நன்றி

சினேகிதி, உங்களுக்கு மட்டுமென்ன…இளம் வலைப்பதிவாள- பிள்ளைகள் (Below 40 அப்டின்னு வச்சுக்குவோமா?)அனைவருக்கும் என் மனமுவந்த ஆசீர்வாதம் என்றும்..எப்போதும்..மிக்க அன்புடன்கூட.

தருமி Says:
December 4th, 2005 at 2:32 pm e
-L-L-D-a-s-u–,
‘தமிழ்மண’-பதிவரில் மூத்தவர் என்று கூறினீர்கள் என்றுதான் நினைக்கிறேன் “// - நான் எழுதியது அப்படிதான். எல்லாம் ஒரு editorial mistake தான். எப்படியோ அந்த தவறினால்தான் “அப்பா” எல்லாருக்கும் அறிமுகமாகிறார், இல்லையா? அதுவரை சந்தோஷம்தான்!

தருமி Says:
December 4th, 2005 at 2:39 pm e
மதுமிதா,
“ஜாக்கிரதையா இருங்கய்யா ” // இந்த மாதிரி நாம் எழுதறதெல்லாம் அவுங்களுக்கெல்லாம் போய்ச்சேரும் அப்டிங்கிற நம்பிக்கை எனக்கில்லை. இவைகள் நமது உரத்த சிந்தனைகள் என்றளவில் மட்டுமே இருக்கும் என்றே நினைக்கிறேன். இதெல்லாமி ஒரு ‘ஜுஜுபி’ நம்ம அரசியல்வாதிகளுக்கு. நமக்கு நல்லது ஒண்ணு சொல்லிட்டோம்ல அப்டிங்கிறா திருப்தி தவிர ஏதும் எதிர்வினை இருக்கும்னு நினைக்கிறீங்க?

கவிதையையும் விடமாட்டீங்களோ” // கவிதையாயினியைப் பாத்து சூடு போட்டுக்கிறதுதான்!

உங்களுக்கு ஒரு தனி மயில் அனுப்பி வச்சேன்; பறக்க முடியலைன்னு திரும்பி வந்திருச்சி எங்கிட்டேயே!

madhumitha Says:
December 4th, 2005 at 6:43 pm e


கோ.இராகவன் Says:
December 5th, 2005 at 12:05 pm e
தருமி, இப்பொழுதுதான் உங்கள் வலைப்பதிவைப் படித்தேன். அற்புதமாகச் சொல்லியிருக்கின்றீர்கள்.

எந்த ஒரு மாற்றத்தையும் கொண்டு வருவதற்கு ஒரு ஆரோக்கியமான நேர்மையான வழிமுறை உண்டு என்று ஏன் உணர மாட்டேன் என்கின்றார்களோ! குறுக்கு வழி வேண்டாம். நியாயமாக நடுநிலையாகச் செய்ய வேண்டியதைச் செய்யுங்கள். கண்டிப்பாகப் பலன் கிடைக்கும் என்று நானும் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். தனிநபர் எதிர்ப்பெல்லாம் ரொம்ப நாளைக்கு ஆகாது. அதற்குப் பலனும் கிடையாது.

தருமி, உங்கள் பதிவுகளில் மெருகு எக்கச்சக்கமாக ஏறிக்கொண்டிருக்கிறது. பிரமாதம்.

தமிழ் இடிதாங்கி கோமா தாஸ் Says:
December 7th, 2005 at 12:26 am e
திருமாவை கண்டிப்பதை தமிழ் இடிதாங்கி கண்டிக்கிறார்…

திரைப்படங்கள் பற்றிய தமிழ் இடிதாங்கி கோமா தாஸ் கருத்தறிய வாருங்கள்
http://kakapriyan.blogspot.com

Inga Paarunga Says:
December 8th, 2005 at 11:50 pm e
http://mayavarathaan.blogspot.com/2005/12/234_04.html

தருமி Says:
December 9th, 2005 at 12:13 am e
மதுமிதா,


தருமி Says:
December 9th, 2005 at 12:17 am e
ராகவன்,
மிக்க நன்றி.

தமிழ் இடிதாங்கி கோமா தாஸ்,
நல்ல பேருங்க! அந்த ‘கோமா’என்னங்க? Coma..? இல்ல, ஒரு ‘ளி’யை விட்டுட்டீங்களா?

Inga Paarunga,
நீங்க அங்க பாருங்க.

karthikramas Says:
December 9th, 2005 at 12:19 am e
இந்தப்பதிவில், திருமாவுக்கு ஒன்றும் பயனுள்ள செய்தி இருப்பதாக எனக்கு படவில்லை. அந்த அளவுக்கு அறிவுள்ள பதிவாகவும் இது தெரியவில்லை.

/தலித்துகளுக்குக் கிடைக்கவேண்டிய சலுகைகளைப் பெற அவர்களின் முதல் தேவையான ஜாதிச் சான்றிதழ் கிடைக்காததால் அவதிப்படும் ஏழை தலித் மாணவர்களையும், மற்ற மக்களையும் அடிக்கடி சந்தித்துள்ளேன்./
ஒரு வாதததுக்கு இதை ஏற்றுக்கொண்டால் கூட, இந்தப் பதிவின் தொனி ஏதோ இரக்கம் காட்டுவது போல் அமைந்துள்ளது கவனிக்கப்படவேண்டியது. வேறு சாதிக்கு இப்படி நம்மால் சொல்ல வருமா என்று தெரியவில்லை. “தலித்” என்றாலே அய்யோ பாவம் என்ற மனநிலை தென்படுகிறது. தாசில்தார் ஆபிஸில் உள்ளவன் தனது வேலையை செய்தாலே சான்றிதழ் பிரச்சினை தீர்ந்து போய்விடும். அல்லது சங்கம் வைத்தாலும் “சங்கம்” மாமா/மாமூல் வேலை பார்க்காது என்று நிச்சமில்லை.

இது கிம்மிக்ஸ் என்பதில் சந்தேகமில்லை என்றாலும் திருமாவுக்கு இது லக்ஸரி என்று சொல்லும் உளவியல்தான் ஆச்சர்யப்படவைக்கிறது. மேற்கொண்டு எதுவும் எழுத இல்லை. நன்றி

தருமி Says:
December 9th, 2005 at 12:36 am e
கார்த்திக்ராமாஸ்,
i accept your comments though i dont agree with your views.
தாசில்தார் ஆபிஸில் உள்ளவன் தனது வேலையை செய்தாலே சான்றிதழ் பிரச்சினை தீர்ந்து போய்விடும்// நீங்கள் நினைக்கும் அளவிற்கு இந்தப் பிரச்சனை அவ்வளவு எளிதானதுமல்ல; சிறியதுமில்லை.
இரக்கம் காட்டுவது(அதைவிட, showing concern) பெரிய தவறேன்று நினைக்கவில்லை.
நன்றி

இரத்தினவேலு Says:
December 29th, 2005 at 6:54 am e
ஒருவருக்கு ஜாதிச் சான்றிதழ் கொடுக்க வேண்டுமென்றால் அதற்கு சில வழிமுறைகள் உண்டு. அதற்கு அரசாங்கத்தால் வழிகாட்டப்பட்டுள்ள வழியில் தான் கொடுக்கவேண்டும் அதை விடுத்து தாசில்தார் பார்த்து கொடுக்கலாம் கி.நி.அ. நினைத்தால் கொடுக்கலாம் என்பதெல்லாம் கிடையாது.
ஒரு தலித்துக்கு ஒரு ஜாதி சான்று கொடுக்கவேண்டும் என்றால் அவர் அந்த ஜாதிதான் என்பதற்கான ஆதாரத்தைக் காட்டவேண்டும்.
மேட்டூரில் பிறந்து காட்டூரில் வளர்ந்து சிற்றுரில் தற்போது கூலி வேலை பார்க்கும் திரு.குபேரனை அந்த ஊரில் யாருக்குத் தெரியும் அவர் என்ன ஜாதி என்பது யாருக்குத் தெரியும்.அவர் படிக்கவில்லை உண்மையில் அந்த ஜாதியாகவும் இருக்கலாம். அதை எப்படி நிரூபிப்பது அதான் ஐயா நீ போய் உனது சொந்த ஊரில் வாங்கிக் கொள் என கூறுகிறார்கள் அங்கு சென்றால் ஒரு நாள் வேலை போகுமே என அவர் செல்வதில்லை அவர் மகனுக்கு கிடைக்கவேண்டிய சலுகைகள் கிடைக்க வில்லை. இதை பயன் படுத்தி மேல் நிலையில் உள்ள தலித்துக்கள் முன்னேறிக்கொண்டே போகின்றனர். இந்த சூழலிள் உள்ளவர்கள் அப்படியே இருக்கின்றனர். இதற்குத் தான் அந்த தலைவர்கள் இதற்கு ஒரு வழிகாட்டும் நடவடிக்கை எடுத்தால் அந்த ஏழைக்கு பயனாக இருக்கும்.

//தாசில்தார் ஆபிஸில் //உள்ளவன்// தனது வேலையை செய்தாலே சான்றிதழ் பிரச்சினை தீர்ந்து போய்விடும். அல்லது சங்கம் வைத்தாலும் “சங்கம்” மாமா/மாமூல் வேலை பார்க்காது என்று நிச்சமில்லை.//

அன் விகுதியை போட்டது சரியில்லை

மாமா மாமூல் வேலை பார்த்தால் கிடைக்குமா? கண்டிப்பாக கிடைக்காது

இரத்தினவேலு Says:
December 29th, 2005 at 7:16 am e
நண்பர் தருமி
//வட்டாட்சியர் கோட்டாட்சியர் பெட்டியைக் கட்டிக்கிட்டு வீட்டுக்குப் போகவேண்டியதுதான் // வட்டாட்சியர் கோட்டாட்சியர் இவர்கள் மீது உள்ள கரிசனத்தில் கொஞ்சம் இந்த மக்கள் மீது எல்லோருக்கும் வந்தாலே போதும்

நன்றாகத் தெரியும் இவர்கள் படும் கஷ்டங்கள் அதற்கு யார் என்ன? செய்யமுடியும் அரசு சில வழிமுறைகளைச் சொல்லிக்கொடுத்து அதன் படி நடக்கச் சொன்னால் அப்படித்தானே அதிகாரிகள் நடப்பார்கள் சரியான ஆதாரம் இல்லையென்றால் அவர்கள் கண்டிப்பாக சான்று கொடுக்கமாட்டார்கள் இவர்கள் இன்னஜாதிஎன்பது எப்படி அவருக்குத் தெரியும்?
இவ்வாறு தவராக சான்று கொடுத்து ஒரு தாசில்தார் பணியிறக்கம் செய்யப்பட்ட கதை உங்களுக்தெரியுமா திருச்சியில் மூன்று மாதங்களுக்கு முன் ஒரு கிராம நிர்வாக அலுவலர் சஸ்பெண்ட் ஆனார்.
சில சமூக விரோதிகள் தாங்கள் இன்ன ஜாதியென பள்ளிச் சான்றிதழ் மற்றும் சில ஆதாரங்களோடு வந்து வட்டாட்சியர் கோட்டாட்சியர்களிடம் சான்று வாங்கிவிடுகின்றனர். இதனால் உண்மையான தலித் பாதிக்கப்படுகிறார் இதற்காகத்தான் சரியான நபருக்கு கொடுக்க வேண்டும் தனது பணியும் பரிபோகக் கூடாது என்பதற்காக ஜாக்கிரதையாக இருக்க வேண்டியுள்ளது.

தருமி Says:
December 29th, 2005 at 2:17 pm e
“//தாசில்தார் ஆபிஸில் //உள்ளவன்// தனது வேலையை செய்தாலே சான்றிதழ் பிரச்சினை தீர்ந்து போய்விடும். அல்லது சங்கம் வைத்தாலும் “சங்கம்” மாமா/மாமூல் வேலை பார்க்காது என்று நிச்சமில்லை.//
அன் விகுதியை போட்டது சரியில்லை -

இரத்தினவேலு, இவை என்வார்த்தைகள் இல்லை.ஆனால். உங்களது இந்த வார்த்தைகள்: “நன்றாகத் தெரியும் இவர்கள் படும் கஷ்டங்கள் அதற்கு யார் என்ன? செய்யமுடியும் ..” //

இதற்கு என்ன பதில் சொல்வதென்று எனக்குத் தெரியவில்லை; பதில் சொல்லுவதில் எந்தப் பயனும் இருக்கப்போவதில்லை அல்லவா?.

“சரியான ஆதாரம் இல்லையென்றால் அவர்கள் கண்டிப்பாக சான்று கொடுக்கமாட்டார்கள்..”// பிரச்சனை எனக்குக் கொஞ்சம் அறிமுகம் உண்டு என்பதால் சொல்கிறேன். சான்று கொடுக்கக்கூடாதென்பதற்காகவும் ஆதாரங்கள் கேட்கலாம்.
இந்த விவாதம் நமக்குள் முடியாதென்றே நினைக்கிறேன். ஏனெனில் நாம் எடுத்திருக்கும் நிலைப்பாடுகள் எதிரெதிராக இருக்கிறதல்லவா? மீண்டும் ஒரு ரிப்பீட்டு: “வட்டாட்சியர் கோட்டாட்சியர் இவர்கள் மீது உள்ள கரிசனத்தில் கொஞ்சம் இந்த மக்கள் மீது எல்லோருக்கும் வந்தாலே போதும்”

இரத்தினவேலு Says:
December 29th, 2005 at 8:17 pm e
எல்லலோரும் ஒரே மாதிரி இருக்க முடியாத என்பது உண்மை
நன்றி நண்பரே

தருமி Says:
December 30th, 2005 at 9:57 am e
முகமூடி சொன்னது:

“குட்டிட்டீங்களா தருமி. என்ன
வாத்தியார் போங்க நீங்க
வலிக்கவேயில்ல.
இதுக்குத்தான் எங்க
பள்ளிக்கூடத்துல என்ன
பண்ணுவாய்ங்க, ப்சங்களோட
என்மீஸ கூப்பிட்டு குட்ட
சொல்லுவாரு வாத்தியாரு. தலை
பழுத்து போவும்ல.. அதுக்காக
நம்மோட எதிரிங்கள
கூப்பிட்டிடாதீங்க..
ஏகப்பட்ட பேரு.. தலை காணாம
போயிரும்..

அப்புறம் சைடுகிக்கு ஒண்ணு..
நான் ஒம்பதாப்பு
படிக்கிறப்போ ஜூனியர்
விகடன்ல இசைஞானி இளையராஜா
வாசகர்களுடன் கேள்வி பதில்.

வாசகர் : உங்களுக்கு ஆத்ம
திருப்தி கொடுத்த பாடல் எது?
இளையராஜா : ஆத்மாவுக்கு
ஏதுங்க திருப்தி.

(நீங்க ஆத்ம சுத்தின்னுதான்
சொன்னீங்க, என்னவோ எனக்கு இது
ஞாபகத்துக்கு வந்தது)

தருமி Says:
December 30th, 2005 at 10:16 am e
முகமூடி,
உங்க சைடு கிக் பற்றி: நான் வாசிச்சது என்னன்னா, ஒரு தடவை பார்த்திபன் (அப்படித்தான் நினைக்கிறேன்) ராஜா காலத் தொட்டப்போ, இதெல்லாம் எதுக்குன்னு கேட்டாராம். அதுக்கு பா. ஒரு ஆத்ம திருப்திக்கு அப்டின்னாராம். அப்போ ராஜா ஆத்மாவுக்கு ஏதுப்பா திருப்தி ,, . எப்படியோ சொன்ன ஆளு ஒண்ணுதான…யார்ட்ட, எங்கே அப்டிங்கிறதா முக்கியம்.

தருமி Says:
December 30th, 2005 at 10:20 am e
நன்றியெல்லாம் எதுக்கு, ரத்தினவேலு.
வந்து போய் இருங்க…

Thursday, November 24, 2005

109. சட்டச் சிக்கல் பற்றி ஒரு கேள்வி…

உண்மையிலேயே எனக்குத் தெரியாததாலேயே இந்தக் கேள்வி; அங்கதமெல்லாம் ஒன்றுமில்லை என்று முதலிலே ஒப்புதல் வாக்குமூலம் தந்து விடுகிறேன். ஆகவே பதில் தெரிந்தோர் விளக்கம் கொடுத்தால் தெரியாத ஒரு விஷயத்தை, தெரியாத ஒருவனுக்கு, தெரியவைத்த புண்ணியம் கிடைக்கும்! புண்ணியம் பெற விழைவோர் தயவு செய்து வரிசையாக வரவும். … மிக்க நன்றி. அதேபோல் போடப்பட்டிருக்கும் இந்தப் படத்திற்கும்,கீழே உள்ள பாடல் வரிக்கும், இந்தப் பதிவுக்கும் எவ்வித தொடர்பு இல்லையென்ற disclaimer-யையும் கவனத்தில் கொள்க!


திரை ஊடகங்களில் இருப்பதால் நாட்டில் எல்லோருக்கும் தெரிந்த இரண்டு பெண்மணிகளின் கூற்றுக்கள் பற்றிய விவாதங்கள் ஒரு பக்கம் என்றால் கோர்ட், கேஸ்கள் என்று இன்னொரு பக்கம் நடந்தேறுகின்றன. இந்தக் கோர்ட்டுகள் முன்னால் நம் மக்களின், அதிலும் தாய்க்குலங்களின் நம் தமிழ்க் கலாச்சாரத்தை ஒட்டிய, நம் பண்பாட்டைத் தூக்கி நிறுத்தக் கூடிய திருவிளையாடல்களையும் பார்க்கும் நம் நீதிக் காவலர்களுக்கு இந்தக் கேஸ்களின் அடிப்படை புரியாமலா இருக்கிறது? புரிந்திருந்தால் ‘on frivolous ground’ என்ற அடிப்படையில் இந்தக் கேஸ்களை எடுக்காமலே புறந்தள்ள முடியாதா? ஒவ்வொரு கோர்ட்டாக இந்தப் பெண்களைப் படியேற வைத்து, அந்தந்த கோர்ட்டுகள் முன்பு ஒவ்வொரு முறையும் நம் பண்பாட்டுத் திருவிழாக்கள் நடந்தேற விடவேண்டுமா? prima facie என்றெல்லாம் என்னென்னவோ சட்ட நுணுக்கங்கள் சொல்வார்களே, அதெல்லாம் இங்கே நடைமுறைப் படுத்தமுடியாதா? எவ்வளவு மடத்தனமான அடிப்படையிலும், யார் வேண்டுமானாலும், யார் மீதும் பொறுப்பற்ற முறையில் இது போல கேஸ்களை ஜோடிக்கலாமா? பொது நலமும், கோர்ட்டுகளின் ‘பொன்னான நேரமும்’ வீணாவதில் நம் நீதியரசர்களுக்குப் பொறுப்பில்லையா? அல்லது, அவர்களும் இந்த “அழகான” ’side shows’ தரும் ’side kicks’-களை கண்டு களித்துக்கொண்டிருக்க வேண்டியதுதானா?

இதற்கெல்லாம் உண்மையிலேயே எனக்குப் பதில் தெரியாது…

Nov 24 2005 12:27 pm | அவியல்... | | edit this
Rate this post at www.thamizmanam.com
இதுவரை விழுந்த "உள்குத்து" நிலைமை பாருங்க!!??:
(இதுவரை 1 பரிந்துரைகள்)

ஹலோ, வந்தது வந்தீங்க; வந்ததுக்கு ஒரு வோட்டு / வேட்டு போட்டுட்டு போறதுதானே! சும்மா அப்டியே போய்ட்டா எப்படி??
22 Responses
தாணு Says:
November 24th, 2005 at 1:39 pm e
இதையேதான் நானும் நினைத்தேன். தீர்வு செய்யப்படாத வழக்குகள் தேங்கிக் கிடக்கும் நிலையில், கவைக்குதவாத இத்தைகைய வழக்குகள் தேவைதானா? வழக்கறிஞர்களைத்தான் கேட்கணும். `நேரம் போகாதோர் வழக்காடு மன்றம்’ ஒன்று தொடங்கி, இதையெல்லாம் அங்கே ட்ரான்ஸ்பர் செய்துவிடலாம்.

குகு Says:
November 24th, 2005 at 2:14 pm e
இந்த உரல் படிச்சு பாருங்க:

http://www.ndtv.com/morenews/showmorestory.asp?category=National&slug=Murdered+IOC+officer’s+family+devastated&id=81682

http://news.webindia123.com/news/showdetails.asp?id=171309&n_date=20051124&cat=India
நம்ம ஆளுங்க போற பாதை பத்தி தெரியும்!
இந்தப் பதிவுக்கும் உரலுக்கும் எவ்வித தொடர்பு இல்லையென்ற disclaimer-யையும் கவனத்தில் கொள்க!

ஜோ Says:
November 24th, 2005 at 7:49 pm e
இது ஒரு நல்ல கேள்வி..நானும் சட்டம் தெரிந்தவர்களின் பதிலை எதிர்பார்க்கிறேன்.

சுதர்சன் Says:
November 24th, 2005 at 8:41 pm e
எனக்கும் இதுதான் புரியவில்லை. எப்படி இந்த வழக்குகளை நீதிமன்றங்கள் அனுமதிக்கின்றன..இந்த வழக்குகளுக்கெல்லாம் பிடிவாரண்ட் வேறு வழங்குகிறார்கள்..

kirukan Says:
November 24th, 2005 at 9:48 pm e
Ooops… There are no lawyers here

Think they went to the court to see Kushboo

இளவஞ்சி Says:
November 24th, 2005 at 10:38 pm e
தருமி சார்,

ஸ்ரீதேவி என் பொண்டாட்டின்னு ஆந்திராகாரரு ஒருத்தரு போட்ட வழக்கையே எடுத்து விசாரிக்கறாங்க!? அவருக்கு இதே பொழப்பாம். இதுக்கு முன்னாடி இதுமாதிரி அவரு போட்ட 2 வழக்குல எச்சரிக்கையும் தண்டனையும் வேற கெடைச்சிருக்கு அந்த ஆளுக்கு! என்னத்த சொல்ல?!

1000 குற்றவாளிகள் தப்பிக்கலாம். ஒரு நிரபராதி தண்டிக்கப்படகூடாது பாருங்க! ஜனநாயக நாட்டுல சில விசயங்களை தவிர்க்கமுடியாது போல! அது எவ்வளவுதான் கேனத்தனமா இருந்தாலும்!!

துளசி கோபால் Says:
November 25th, 2005 at 1:08 am e
தருமிக்கே இந்தக் கோர்ட்டுவாசலிலே நடக்கும்’திருவிளையாடல்’ புரியலைன்னா எப்படி?

நீதி அரசர்களுக்கு மட்டும் ‘சினிமா இஷ்டாருங்களைப் பார்க்கற’ ஆசை இருக்கக்கூடாதாமா?

நல்லடியார் Says:
November 25th, 2005 at 2:12 am e
தருமி,

எதுக்கும் உஷாரா இருங்க! நீதிமன்ற அவமதிப்பு வழக்குக்குக் சாத்தியம் உண்டு!

;-)

தருமி Says:
November 25th, 2005 at 2:10 pm e
குகு,
இந்த மாதிரி நிகழ்ச்சிகளைப் பார்க்கும்போதுதான் ‘நல்லவனா இருப்பது தவறா?’ என்ற மகாநதிப் படத்து வசனம் நினைவுக்கு வருது. யார் இவருக்குச் சிலை வைக்கப் போகிறார்கள்? Was what he did a mere waste? விடை தெரியாத கேள்விகள்…

தருமி Says:
November 25th, 2005 at 2:14 pm e
இத்தைகைய வழக்குகள் தேவைதானா? - தாணு

எனக்கும் இதுதான் புரியவில்லை. - சுதர்சன்

நானும் சட்டம் தெரிந்தவர்களின் பதிலை எதிர்பார்க்கிறேன். - ஜோ

- sailing in the same boat…?

தருமி Says:
November 25th, 2005 at 2:17 pm e
ஆனாலும் இளவஞ்சி, எனக்கு என்னவோ நம் நீதித் துறை எப்பவோ ஒரு முறைதான் தூக்கத்தில இருந்து எழுந்திரிச்சி உருப்படியா ஏதாவது தங்களை ‘மறந்து’நல்லது பண்ணிடுராங்க. மற்றபடி…என்ன சனநாயகமோ தெரியலை’ங்க!

தருமி Says:
November 25th, 2005 at 2:19 pm e
நல்லடியார்,
ஏதோ வலைப்பதிவர்கள் நீங்கள் எல்லாரும் எனக்குப் பக்கபலமா இருக்குறீங்க அப்டிங்கிற நம்பிக்கைதான்…!

நல்லடியார் Says:
November 25th, 2005 at 3:27 pm e
//எவ்வளவு மடத்தனமான அடிப்படையிலும், யார் வேண்டுமானாலும், யார் மீதும் பொறுப்பற்ற முறையில் இது போல கேஸ்களை ஜோடிக்கலாமா?//

குஷ்பு மற்றும் சுஹாசினி மீதான வழக்குகள் அரசியல் காரணங்கள் ஒரு பக்கம் என்றாலும் அவை பொறுப்பற்ற வழக்குகள் அல்ல.

பிரபலங்களாக இருப்பவர்கள் தங்களுக்கு பிரபலத்தைத் தந்தவர்களுக்கு பதில் சொல்லும் பொறுப்பில் இருக்கிறோம் என்பதை மறந்து விட்டுபொறுப்பற்ற/மடத்தனமான கருத்துச் சொல்லிவிட்டு மன்னிப்புக் கேட்பதும் தேவையா?

சினிமா/அரசியல் பிரபலங்களை தங்களின் முன்மாதிரியாக எடுத்துக் கொண்ட மக்கள்தான் உண்மையில் பொறுப்பற்றவர்கள்.

//ஏதோ வலைப்பதிவர்கள் நீங்கள் எல்லாரும் எனக்குப் பக்கபலமா இருக்குறீங்க அப்டிங்கிற நம்பிக்கைதான்…!//

ஸாரி. இப்ப நான் பின்னூட்டப் பதிவர் மட்டுமே

டி.பி.ஆர். ஜோசஃப் Says:
November 25th, 2005 at 5:56 pm e
தருமி சார்,

நம்மள்ல பெரும்பாலோர் குஷ்பு சொன்னதுல பெரிசா யாரோட மானமும் போயிரலங்கற கண்ணோட்டத்தில பாக்குறதுனாலயோ என்னவோ இந்த வழக்குகள் எல்லாம் தேவையில்லன்னு தோணுது. ஆனா சட்டத்துக்கு கண், உணர்ச்சி அப்படீன்னு ஒன்னுமில்லைங்கறதுதான் நிதர்சனம்.
நம்ம அலுவலகத்தையே எடுத்துக்குங்க. எவனாவது ஒரு வேலயத்தவன் நமக்கெதிரா ஒரு மொட்டை கடிதாசி போடறான்னு வச்சிக்குவம். அதன் அடிப்படையில உண்மை இருக்கோ இல்லையோ உடனே ஒரு என்க்வயரின்னு ஒரு நாடகத்தை நடத்தித்தான் அதுல எந்தவித உண்மையில்லங்கறத ஆதாரபூர்வமான!? கண்டுபிடிப்பாங்க. நான் முப்பது வருஷமா நாணயமா உழைச்சிருக்கேனே ஒரு மொட்ட கடுதாசிய வச்சிக்கிட்டு என் மேல என்க்வயரி வைக்கிறீங்களேன்னு புலம்பி பயனிருக்காதில்லையா?

அதே போலத்தான் இந்த குஷ்பு விஷயமும். நீதியரசர்கள் வாதி பிரதிவாதிகளுடைய கருத்துக்களைக் கேட்ட பிறகுதான் ஒரு விஷயம் Frivolousஆ இல்லையாங்கற முடிவுக்கே வரமுடியும். த.நாவுலருக்கறல எல்லா நீதிமன்றங்களிலும் இவர்களுக்கெதிராய் வழக்கு தொடுப்பதன் உள் நோக்கம் என்ன? இவர்களை தண்டிக்க வேண்டும் என்பதா? இல்லவே இல்லை.. திருமாவே சட்டம் படித்தவர்தானே. அவருக்கு நன்றாய் தெரியும் குஷ்புவை சட்டத்தால் பெரிசாக ஒன்றும் தண்டிக்க முடியாதுஎன்று. ஆனாலும் அவரை ஊர் முழுக்க இழுத்தடித்து தொல்லை கொடுக்க வேண்டுமென்பதே இவர்கள் நோக்கம். அதற்கு சட்டத்தில் இருக்கும் archaic விதி முறைகள்தான் காரணம்.

நாம புலம்பி என்னாவ போவுது?

தருமி Says:
November 25th, 2005 at 11:06 pm e
நல்லடியார்,
//சினிமா/அரசியல் பிரபலங்களை தங்களின் முன்மாதிரியாக எடுத்துக் கொண்ட மக்கள்தான் உண்மையில் பொறுப்பற்றவர்கள்//- முழுமையாக ஒத்துக்கொள்கிறேன்.

ஜோசஃப்,
//நாம புலம்பி என்னாவ போவுது?//at least அதையாவது செய்வோமே!

தருமி Says:
November 25th, 2005 at 11:09 pm e
கிறுக்கன்,

நன்றி

தருமி Says:
November 28th, 2005 at 9:56 am e
ஜோச்ஃப்,
அந்த மொட்டைக்கடுதாசி விவகாரம் - ஒரு கேள்வி: முதல் தடவை ஒரு மொட்டைக்கடுதாசி வந்து நடவடிக்கை எடுத்தால் சரி. இதே வேலையாக ஒருத்தன் பண்றான்னு தெரிஞ்சா அதுக்குப் பிறகும் நடவடிக்கை, விசாரணைன்னா - அது தேவையில்லாத விவகாரம்தானே, இல்லியா?

madhumitha Says:
November 28th, 2005 at 1:01 pm e
இதையும் பார்த்து ஏதாவது பண்ணுங்க தருமி

http://madhumithaa.blogspot.com/2005/10/blog-post_04.html

டி.பி.ஆர். ஜோசஃப் Says:
November 28th, 2005 at 1:43 pm e
அது தேவையில்லாத விவகாரம்தானே, இல்லியா?

நீங்க சொல்றது சரிதான் சார். ஒத்துக்கறேன். ஆனாலும் என்ன பண்றது? கடுதாசி மொட்டையின்னாலும் அதுல இருக்கற விஷயம் உண்மையா இல்லையான்னு கண்டுக்கணும்னா விசாரணை வேணுமா இல்லையா?

ஆனா ஒன்னு. ஒன்னும் இல்லாத வாய்க்கு அவல் கிடைச்சா மாதிரியிருக்கு இந்த பத்திரிகை காரங்களுக்கு. இதுல பிராமின் நான் பிராமின்னு வேற ஒரு ஆங்கிள். நேத்தைக்கி ஹிண்டுல இதப்பத்தியே ரெண்டு மூனு ஆர்ட்டிகிள்ஸ் இருந்துச்சே. படிச்சீங்களா? இந்த விஷயத்துல ஹிண்டுவோட அதிகப்படியான அக்கறைதான் கலைஞர அப்படி பேச சொல்லியிருக்குன்னு நினைக்கிறேன். இந்த விஷயம் காமடியா பாக்கறதுக்குத்தான் லாயக்குன்னு நான் ஒரு காமெடி கலந்துரையாடல ஜோடிச்சேன். படிச்சீங்களா?

ivarugala Says:
November 28th, 2005 at 11:24 pm e
ஒரு சாதரண செயலுக்கு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பாயும் என்று ஒரு நீதிபதியால் கண்டித்து தண்டிக்கப்பட்டவன் நான். எதற்கும் உஷாரா இருங்க! நீதிமன்ற அவமதிப்பு வழக்குக்குக் சாத்தியம் உண்டு!(நல்லடியாருக்கு நன்றி)

anon1 Says:
November 29th, 2005 at 2:52 am e
neraya vazhakkugal vandhal neraya vakkeeluku velai kidaikum. needipadhigalukum velai kidaikum. velai illadha naatule neraya per indha vetti velaya seyyalame!
:)

sari. frivolos caseku penalty iruku. penaltya romba osathina aprom yarum case podave mudiyama poyidum.

தருமி Says:
November 29th, 2005 at 9:36 am e
ivarugala,
ரொம்ப இண்டரஸ்டிங்-ஆ இருக்கும்போல இருக்கே. அதை கொஞ்சம் எங்க எல்லாத்துக்கும் சொல்லலாமே…

ஜோச்ஃப்,
படிச்சேங்க நீங்க எழுதி இருக்கிறதை…ஒண்ணு இந்த மாதிரி சிரிச்சிக்கிட்டே போகணும்.. (இன்னும் எத்தனை காலம்தான்…?)இல்ல, புலம்பிக்கிட்டே இருக்கணும்..! வயித்தெரிச்சல்தான் போங்க

Tuesday, November 22, 2005

108.தல புராணம்…5



*
ஏனைய பதிவுகள்:
1...................
2..................
3...................
4..................
5..................



*

ரீகல் தியேட்டர் உறவு பல ஆண்டுகள் நீடித்தது. பின்னால் பரமேஸ்வரி என்று இன்னொரு தியேட்டர் ஆங்கிலப் படங்களுக்கெனவே வந்து, அதுவும் எங்கள் வீட்டுப் பக்கமே இருந்தது வசதியாகப்போனது. அதன் பின் வேறு சில தியேட்டர்களும் ஆங்கிலப் படத்துக்கென்றே வந்தன. ஆனாலும், அந்த ரீகல் தியேட்டரும், தனிப்பட்ட அதன் culture-ம், அதில் படம் பார்க்கும் ரசனை மிகுந்த கூட்டமும் - எல்லாமே காலப் போக்கில் ஓர் இனிய கனவாகிப் போயின. இப்போது வெளிப்பூச்செல்லாம் அழகாகச் செய்யப்பட்டு, ‘பளிச்’சென்று இருந்தாலும், ஐந்தரை மணிவரை வாசகசாலையாக இருந்து, அதன்பின் ஏதோ மாயாஜால வித்தை போல் சடாரென தியேட்டராக மாறும் அந்த இனிய நாட்கள் இனி வரவா போகின்றன?



‘ரீகல் நாட்க’ளின் தொடர்பு இருந்தபோது, அதிலிருந்து 50 மீட்டர்தொலைவுகூட இல்லாத ‘காலேஜ் ஹவுஸ்’ என்ற லாட்ஜிடமும் ஒரு தொடர்பு ஏற்பட்டது. இது ரீகல் தியேட்டரிலிருந்து ஆரம்பமாகும் டவுண் ஹால் ரோடு என்ற மதுரையின் மிக முக்கிய ரோட்டில் உள்ள பழம்பெருமை பேசும் மதுரையின் இன்னொரு ‘தலம்’!



படம் பார்க்காத நாட்களில் எங்கள் நண்பர்கள் கூடும் ‘joint’ இந்த லாட்ஜின் முன்னால்தான். படத்தில் தெரியும் ஜுபிடர் பேக்கரி முன்னால் நம்ம குதிரை -அதாங்க, நம் ‘ஜாவா’ - ஒவ்வொரு மாலையும் நிற்கும். அதற்குப் பக்கத்தில் இருபுறமும் நாலைந்து சைக்கிள்கள். நண்பர்கள் குழாம் கூடிவிடும். ஆறு மணி அளவில் வந்தால் எட்டு ஒன்பது மணி வரை இந்த இடமும், இதைச் சார்ந்த இடமும்தான் நம் அரட்டைக் கச்சேரி மேடையேறும்; எல்லா விஷயங்களையும் அலசி, ஆராய்ந்து, துவச்சி, காயப்போட்டுட்டு, அதற்கு அடுத்த நாள் வந்து அதை எடுத்து மீண்டும் அலச ஆரம்பிக்கிறது. ஆர அமர்ந்து அரட்டை அடித்த இடம் இது என்று இப்போது யாரிடமேனும் சொன்னால் நம்பாமல் ஆச்சரியப்படுகிறார்கள். ஏனெனில் இப்போது இங்கு நிற்கக்கூட முடியாது; அவ்வளவு ஜன நெரிசல். கீழே உள்ள படத்தைப் பார்த்தாலே இப்போது எப்படி இருக்கிறதென்பது தெரியும்.

ஆனால் இந்த ‘காலேஜ் ஹவுஸ்’ அதுக்கு முந்தியே நம்ம வாழ்வில் ஒரு இடம் பிடிச்சிரிச்சி. சின்னப் பையனா இருந்த போதே, இந்த காலேஜ் ஹவுஸுக்கு ஒரு தனி ‘மருவாதி’ உண்டு. அப்போவெல்லாம், நயா பைசா காலத்துக்கு முந்தி காபி, டீ எல்லாமே ஓரணாவிற்கு விற்கும்; நயா பைசா காலம் வந்ததும், காபி, டீ விலை சாதாரணமா 6 பைசா; ஸ்பெஷல் காபி’ன்னா 10 பைசா. அந்தக்காலத்திலேயே, அந்த மாதிரி 10 பைசாவுக்கு காபி, டீ விற்கும்போது காலேஜ் ஹவுஸில் காபி நாலரையணா, அதன்பின் 30 பைசா. அதாவது, வெளியே விற்கும் விலையைவிட 3 மடங்கு அதிகம். அப்போ, எங்க வீட்டுக்கு ஒரு உறவினர் வருவார். வந்ததும் முதல் வேலை, ஒண்ணு அப்பா சைக்கிள் இல்ல..வாடகை சைக்கிள் எடுத்துக்கிட்டு, என்னையும் பின்னால உட்கார வச்சுக்கிட்டு - நான் தான் அவருக்கு சந்து பொந்து வழியா வழி சொல்ற வழிகாட்டி - நேரே காலேஜ் ஹவுஸ் போய் காபி குடிக்கிறதுதான். எனக்கு அவர் காபி குடிக்கிறதுக்காகவே ஊர்ல இருந்து வர்ராரோன்னு தோணும். அப்படி ஒரு மகிமை அந்த காபிக்கு. அந்தக் காபியின் மகத்துவம் பற்றி நிறைய வதந்திகள் - யாரோ ஒரு சாமியார் கொடுத்த ஒரு மூலிகை ஒன்றை சேர்ப்பதலாயே அந்த ருசி; அப்படியெல்லாம் இல்லை. காபியில அபின் கலக்குறாங்க; அதனாலதான் அந்த டேஸ்ட். அதனாலேயே இந்த காபி குடிக்கிறவங்க அது இல்லாம இருக்க முடியாம (addiction என்ற வார்த்தையெல்லாம் அப்போ தெரியாது) ஆயிடுறாங்களாம். இப்படிப் பல வதந்திகள். எது எப்படியோ, நிறைய பேர் இந்தக் கடை காபிக்கு அடிமையாய் இருந்தது என்னவோ உண்மைதான்.

சின்ன வயசில ‘வேப்ப மர உச்சியில நின்னு பேயொண்ணு ஆடுது…’அப்டின்றது மாதிரி இது மாதிரி எத்தனை எத்தனை வதந்திகள். அதையே ஒரு பெரிய லிஸ்ட்டாகப் போடலாம். இந்த காலேஜ் ஹவுஸுக்குப் பக்கத்து சந்திலதான் ஆசியாவின் மிகப் பெரிய தியேட்டர் என்ற பெருமையோடு இருந்தது - தங்கம் தியேட்டர். ஒரு பெரிய கால்பந்து மைதானத்தையே உள்ளே வைத்து விடலாம்போல அவ்வளவு பெரிய தியேட்டர். சுற்றியும் பெரிய இடம். தியேட்டரின் வெளி வராந்தாவே அவ்ளோ அகலமா இருக்கும். இதுதான் நான் சிகரெட் குடிச்சி, போலிசிடம் பிடிபட்டு, ஆங்கிலத்தால தப்பிய ‘தலம்’! இந்த தியேட்டரில் கூட முதல் நாள் படம் பார்க்க டிக்கெட் வாங்கும் இடத்தில் கூட்டத்தில் சிக்கி உயிர் இழந்த சினிமா ரசிகர்கள் உண்டு என்றால் எங்கள் ஊரின் மகிமையை என்னென்று சொல்வது! இந்த தியேட்டர் கட்டும்போது - அப்போது நான் நான்காம் ஐந்தாம் வகுப்பு மாணவனாயிருந்திருப்பேன் என்று நினைக்கிறேன். பல கதைகள் காற்றில் வந்த நினைவு இருக்கிறது. நரபலி கொடுத்ததில் பானை நிறைய கிடைத்த தங்க காசுகள் வைத்துக் கட்டப்பட்ட தியேட்டர் என்றார்கள். இதன் முகப்பு மீனாட்சி அம்மன் கோயிலைவிட உயரமாகப் போய்விடும் என்பதால் அந்த முகப்பைக் கட்ட அனுமதி மறுக்கப்பட்டது என்று பின்னாளில் கேள்விப் பட்டோம். ஆனால் அந்த சமயத்தில் நரபலிக் கதையின் தொடர்ச்சியாக வேறு சில கதைகள் மிதந்தன.

இப்போது இந்த தியேட்டரின் படத்தைப் போட ஆசைப் பட்டு படம் எடுக்கப் போனால், மிகவும் பரிதாபமாக முள்ளும் செடியும் மரமுமாய் பாழடைந்து பரிதாபக் கோலத்தில் இருக்கிறது. படம் எடுக்கவும் அனுமதியில்லை. என்ன பிரச்சனையோ. ஒரு காலத்தில் சிவாஜி கணேசன் இதை வாங்கப் போறதாகவும் ஒரு வதந்தி. பல வதந்திகளில் முதலிலிருந்தே சிக்கியிருந்த அந்த பிரமாண்டமான தியேட்டரைத்தாண்டி வரும்போதும், பார்க்கும்போதும் அதன் அன்றைய நாளின் சிறப்பு கண்முன்னே வருகிறது. என்ன, இன்னும் சில ஆண்டுகளில் அங்கே ஒரு பெரிய ஹோட்டலை எதிர்பார்க்கலாம் என்று நினைக்கிறேன்.

இப்படி, ரீகல் தியேட்டர் போல் பிரபல்யமான இடங்களும், தங்கம் தியேட்டர் மாதிரியான பிரமாண்டமான இடங்களும் மிகக் குறுகிய காலத்திலேயே இருந்த இடம் தெரியாமலோ, அல்லது தங்களின் உன்னதங்களை இழந்து போவதென்றால் மனுஷ ஜென்மத்தைப் பற்றி சொல்ல என்ன இருக்கிறது? அதிலும் ஒன்று ‘வெள்ளையடிக்கப்பட்ட கல்லறைகள்’ என்று சொல்வதுபோல, வெளியே பார்க்க அழகு; உள்ளே சீழும், பேனும் என்பது போலவும், இன்னொன்று முற்றுமாய் எல்லாம் இழந்து பரிதாபமுமாய் நிற்பதைப் பார்க்கும்போது என்ன சொல்வதென்றே தெரியவில்லை.

QUE CERA CERA…








Nov 22 2005 10:10 pm | சொந்தக்கதை.. | | edit this
Rate this post at www.thamizmanam.com
இதுவரை விழுந்த "உள்குத்து" நிலைமை பாருங்க!!??:
(இதுவரை 8 பரிந்துரைகள்)

ஹலோ, வந்தது வந்தீங்க; வந்ததுக்கு ஒரு வோட்டு / வேட்டு போட்டுட்டு போறதுதானே! சும்மா அப்டியே போய்ட்டா எப்படி??
20 Responses
Kumaran Says:
November 22nd, 2005 at 11:05 pm e
நம்ம ஊர் புராணம் சொல்றீங்க அதனால ஒரு + போட்டுட்டேன். ரீகல் தியேட்டர் (தங்க ரீகல் ஆவதற்கு முன்) உரிமையாளர்களில் (14 பேர் இருந்தார்கள்) என் தாய்வழி தாத்தாவும் ஒருவர் என்பதால் நிறைய படங்கள் பாப்கார்னுடன் ஓசியில் பார்த்திருக்கிறேன்.

சன்னாசி Says:
November 23rd, 2005 at 12:49 am e
//இந்த தியேட்டரில் கூட முதல் நாள் படம் பார்க்க டிக்கெட் வாங்கும் இடத்தில் கூட்டத்தில் சிக்கி உயிர் இழந்த சினிமா ரசிகர்கள் உண்டு என்றால் எங்கள் ஊரின் மகிமையை என்னென்று சொல்வது!//

என்னதான் தள்ளுமுள்ளாக இருந்தாலும், கம்பியில் காலைவைத்து ஏறுகிறேன் என்ற சாக்கில் வரிசையில் முன்னால் நிற்கும் ஆள் தோள்மேல் ஏறி நடந்து கூட்டத்துக்குள் பாயும் rock starகள் போல சர்வசாதாரணமாக சினிமா டிக்கெட் கவுண்ட்டரைநோக்கிப் படையெடுக்கும் நபர்களை முதன்முதலாக மதுரையில்தான் (மாணிக்க விநாயகரில், அதுவும்!!) பார்த்தேனென்பதை இங்கே கூறிக்கொள்ள விரும்புகிறேன் . பார்க்கச் சென்றது Gladiator படமென்பது உபரித் தகவல்!!

Rajan Says:
November 23rd, 2005 at 2:37 am e
Dear Dharumi

In another corner of college house around 6-7 PM I used to be there standing with another group. In your busy chit-chat with your friends you would not have noticed a slim person in his kadar dhoti and shirt wearing a specs chatting with another group in another corner of the same college house. That person is now deciding the financial fate our country.

People used come in their Enfield Bullets from neighbourhood villages just to have a coffee and meet friends in college house. The full meals lunch of college house was very famous next to its coffee once upon a time. Now a days for coffees small roadside chains like Visalam are famous. Taste the coffee at Rajendra in a small lane (the one in my photo album) next to Sai Engg in Townhall road. They still maintain a superb taste.

Now a days it is very difficult to find a suitable joint near townhall road. Since college house became crowded we started assembling behind Sarvodhya Ilakkiyap Pannai. Hmm, I miss all those days crisscrossing the town without any purpose, chitchatting, going to second show movies, chatting for another couple of hours after the movie was over. That was a life.

When I sought a permission to apply for a passport, Major.PPC told me ‘Maduraiyai Chuthuna Kazhuthai kooda veliya pogaathu, neeya pogap pora?’

Regards
Rajan

Rajan Says:
November 23rd, 2005 at 2:45 am e
One more titbit:

The land where the current college house stands was originally acquired to build the current Madura College. Somehow instead of college, a lodge with boarding facility came up. So it acquired the name college. Seerkazhi Sivachidambaram is married to the daughter of this complex. Rest you carry on. There was a joke on how rickshaw waalaahs used to bring people from railway station to college house.

Regards
Rajan

துளசி கோபால் Says:
November 23rd, 2005 at 3:10 am e
தருமி,

காலேஜ் ஹவுஸ்ன்னு சொன்னதும் எனக்கு ஞாபகம் வர்றது என்னன்னா, அடுக்களை
பக்கத்துலே ஒரு பெரிய ஹாலிலே ஆட்டுக்கல்லுங்களாப் போட்டிருக்கும். எல்லாம்
மின்சாரத்தாலே வேலை செய்யும். கடமுடகடமுடான்னு தானே மேல்குழவி சுத்திச்சுத்தி
ஆட்டறதை வேடிக்கைப் பார்க்க எனக்கு ரொம்ப இஷ்டம்! ஒரு இரும்புச் சங்கிலி குழவியோட
சேர்த்திருப்பாங்க.

அதுசரி, நான் ஏன் மாவாட்டற இடத்துக்குப் போனேன்னு கேட்டுறாதீங்க

அந்தக் காலத்துலே மதுரைக்கு வர்றப்பெல்லாம் காலேஜ் ஹவுஸ்லேதான் தங்குவோம்.

அப்படி வர்றப்ப ‘தங்கத்துலே’ படம் பாக்கறதும் உண்டு.

வெளிகண்ட நாதர் Says:
November 23rd, 2005 at 5:22 am e
நீங்கள் சொல்ற மாதிரி சில தியோட்டர்ங்க பெருமையெல்லாம் அந்தந்த காலகட்டத்தோட முடிஞ்சு போவுது. நமக்குத்தான், பழய நினப்புதான், பேராண்டி, பழய நினப்புதாங்கிற மாதிரி அல்லாடுது. எதுவுமே நிலையைல்ல, இருந்த உருத்தெரியாம போவும்னு சொல்றாங்களே, அது மனுஷ ஜன்மத்தையும் சேத்து தான்.

தருமி Says:
November 23rd, 2005 at 2:27 pm e
குமரன்,
நீங்கள் பாப்கார்ன் மட்டும்தான் சாப்பிட்டிருப்பீர்கள் என்றே நினைக்கிறேன். அந்த வயசில் பாவம் உங்களை எந்தப் படம் பார்க்க அனுமதித்திருக்கப் போகிறார்கள்!

இப்போது மூடிக்கிடக்கும் நியூ சினிமா தியேட்டரும் அந்த குரூப்புக்கு உரியது என்பார்களே? உண்மையா?

குத்துக்கு நன்றி

தருமி Says:
November 23rd, 2005 at 2:32 pm e
சன்னாசி,
ஹும்..முந்தா நாள் வந்த படம் gladiator; அத நேத்து பாத்துட்டு இப்படி அசந்து நிக்கிறீங்க! அந்தக் காலத்தில சிவாஜி, எம்.ஜி.ஆர். படம் வந்தா முதல் இரண்டு நாள்ல கட்டாயம் எந்த தியேட்டரா இருந்தாலும் ஒண்ணு ரெண்டு சாவு or at least குத்துவெட்டு நடக்கலன்னா என்ன ஊரும்பாங்க, தெரியுமா?

தருமி Says:
November 23rd, 2005 at 2:36 pm e
Rajan,
thanks for the tips. that gives me a chance to write about the ‘famous’ roadside coffee joints including vishalam. let me write it as an annexure to this.

“That person is now deciding the financial fate our country. ” // - whom do you mean, P.C. ..??

தருமி Says:
November 23rd, 2005 at 2:40 pm e
துளசி,
நீங்க என்ன சொல்லுங்க…”ஏன் மாவாட்டற இடத்துக்குப் போனேன்னு கேட்டுறாதீங்க ..” - இதில என்னமோ இருக்கு. உண்மையைச் சொல்லிடுங்க எங்கிட்ட மட்டும்; நான் யார்ட்டயும் சொல்லலை, சரியா?

தருமி Says:
November 23rd, 2005 at 2:42 pm e
வெளிகண்ட நாதர்,
நம்ம வாழ்க்கையோடு ஒன்றிவிட்ட சில விஷயங்களைத் திரும்பிப் பார்க்கும்போது-nostalgia ? - ஒரு சின்ன கலக்கம்தான்; இல்லியா?

தருமி Says:
November 23rd, 2005 at 2:47 pm e
குமரன்,
அது என்ன என் பதிவின் பின்னூட்டத்தில் மட்டும் உங்கள் படம் வரவில்லை?

குமரன் Says:
November 23rd, 2005 at 3:45 pm e
//அந்த வயசில் பாவம் உங்களை எந்தப் படம் பார்க்க அனுமதித்திருக்கப் போகிறார்கள்//

உண்மைதான். எல்லா படத்துக்கும் என்னை அனுமதித்தது கிடையாது. எங்க அப்பா மட்டும் போய் பார்ப்பார்.

//இப்போது மூடிக்கிடக்கும் நியூ சினிமா தியேட்டரும் அந்த குரூப்புக்கு உரியது என்பார்களே? உண்மையா?// உண்மை.

//அது என்ன என் பதிவின் பின்னூட்டத்தில் மட்டும் உங்கள் படம் வரவில்லை? // ஏன் என்று எனக்குத் தெரியவில்லை.

Rajan Says:
November 24th, 2005 at 12:21 am e
Yes Sir, It was PC. That was in early 80s. One day, by pointing him my friend whispered in my ears “see that person is paana cheena who translates Indira’s speeches in meetings’. He used to be seen in college house frequently along with aavanna rathinam et al. College House book store is the only place in Madurai, where you can find everything from Time magazine to Kanayaazhi. For a city like Madurai where public parks and beaches are of unheard things, college house served the purpose of everything. Another peaceful airy place is Kovil’s aadi veedhi, the beach of Madurai.

Yes, you may write about such roadside popular joints like visalam, mudaliyar idli, konar mess, nagapattinam kadai etc too, pl. feel free to use that idli shop photo, if you need. Although lot of big hotels came to Madurai my favorite eating places are still the Rajendra, Gobu Iyengaar, Modern Rest, visalam cofee only.

New Cinema, Reagel, Thangam, Parameswari were managed by a group of partners I think.

Thanks
Rajan

anand Says:
November 24th, 2005 at 10:52 am e
தருமி. நன்றி. நான் இன்னும் பார்க்கவில்லை
எங்கே படம் ??

தருமி Says:
November 24th, 2005 at 11:17 am e
ஆனந்த்,
http://dharumi.weblogs.us/2005/11/08/124- படம்தான் சொன்னேன்.

தருமி Says:
November 24th, 2005 at 11:22 am e
rajan,
i had missed the opps to be some bigwig by a whisker, it seems!

கோ.இராகவன் Says:
November 24th, 2005 at 4:11 pm e
தருமி, எனக்கு விவரம் பத்தாத சிறு வயதில் (இப்ப என்ன பத்துதுன்னு கேக்காதீங்க) தங்கம் தேட்டரில் மலையூர் மம்பட்டியான் படம் பார்த்தேன். பிறகு தூத்துக்குடிக்குப் போய், சார்லஸ் தேட்டர் அளவுக்குப் பெரிய தேட்டர் மதுரைல ஒன்னு இருக்குன்னு நண்பர்கள் கிட்ட சொல்லீட்டு இருந்தேன். அது உண்மையில்லை. தங்கம் உண்மையிலேயே மிகப்பெரியது என பிறகு உணர்ந்தேன்.

சென்ற முறை மதுரை சென்ற பொழுது தங்கியிருந்தது காலேஜ் ஹவுசில். பழைய பளபளப்பு இல்லாவிட்டாலும் சாப்பாடு பிரமாதம். தோசை போன்ற ஐட்டங்கள் சூப்பர்.

மணியன் Says:
November 24th, 2005 at 5:05 pm e
மதுரையின் காலேஜ் ஹவுஸ் மற்றும் ரீகல் பற்றியெல்லாம் முன்பே குமுதம், விகடன் மதுரை சிறப்பிதழ்களில் வந்திருந்தாலும், அவற்றோடு இணைந்திட்ட நினைவுகளை நீங்கள் பகிரும்போது அவற்றின் முழு பரிமாணம் உணரமுடிகிறது. எல்லோருக்கும் அவரவர் மதுரை நிகழ்வுகளை நினைவுக்குக் கொண்டு வருகிறது.

தருமி Says:
November 25th, 2005 at 2:05 pm e
இராகவன்,
உங்க ஊரு சார்லஸ் தியேட்டர்தான கப்பல் மாதிரி இருக்கும்?

நன்றி, மணியன்.

107. Age does not wither ….

Hi,

நீங்க எல்லாரும் கட்டாயம் அங்கே போய் சுத்திப் பாருங்க

நமக்கு ஒரு பதிவு டெடிகேஷன்!

ஆச்சரியப் பட பல விஷயங்கள்:

* இந்த internet என்ன வேலையெல்லாம் பண்ணுது?
* எங்க அப்பாவுக்கு இந்த வயசில கத்துக்கிறதுக்கு இருக்கிற மனசு..ஆச்சரியம்தான்! இல்ல?
* நல்ல கதைகள் நிறைய சொல்றாரு.
* வயசு, வயோதிகம் எல்லாம் எங்கே இருக்கு? நம்ம மனசுக்குள்ளேயா..இல்லையே… நம்ம ஊர்ல அடுத்தவங்க சொல்லிச் சொல்லியே நம்ம மனசுக்குள்ள வயோதிகம் எல்லாம் வந்திடுமோ. ‘இந்த வயசில இது இவனுக்குத் தேவையா’ அப்டின்னு நாம் எல்லாருமே அடிக்கடி சொல்றோம், இல்லியா? (ஜீன்ஸ் போடறதுக்கு சொல்ற comments மாதிரி!!) நான் retire ஆகிறதுக்கு நாலஞ்சு வருஷத்துக்கு முன்னால் ஒரு அமெரிக்கன் குழு SIP - South Indian Pilgrimage - எங்க கல்லூரிக்கு வந்திருந்தாங்க; எல்லாருமே 65 வயசுக்கு மேலே. வந்திருந்த எல்லாருமே hiking, swimming என்று பயங்கர sportive. அட, ஆப்ரிக்காவில கூட நம்ம நெல்சன் மண்டேலா எப்படி இருக்கார்?!
* இவையெல்லாம் வெறும் பொருளாதார தன்னிறைவினால் மட்டுமே வருவதா, இல்லை நம் “பண்பாடு” என்பதே இப்படியா?
* நம் பண்பாடுதான் நம்மை எப்படியெல்லாம் குறுக்கி மடக்கி வைத்துள்ளது? sex பற்றிப் பேசினாலே தப்பு; அதுவும் ஒரு பெண் பேசிவிட்டால் நமது பண்பாட்டுக் காவலர்களின் ரத்தம் எப்படி கொதித்து விடுகிறது?
* நம்ம மனசு இன்னும் விசாலமாவது எப்போது?

Nov 22 2005 11:33 am | அவியல்... | | edit this
Rate this post at www.thamizmanam.com
இதுவரை விழுந்த "உள்குத்து" நிலைமை பாருங்க!!??:
(இதுவரை 3 பரிந்துரைகள்)

ஹலோ, வந்தது வந்தீங்க; வந்ததுக்கு ஒரு வோட்டு / வேட்டு போட்டுட்டு போறதுதானே! சும்மா அப்டியே போய்ட்டா எப்படி??
7 Responses
குழலி Says:
November 22nd, 2005 at 12:11 pm e
வாழ்த்துகள்
சுட்டியை சுட்டியபோது வெறும் வெள்ளைப்பக்கம் தான் வந்தது , ஆனால் Header வந்தது என்னால் படிக்க இயலவில்லை, உங்களுக்கு ஒரு தனி மடல் அனுப்பியிருந்தேன் வந்ததா?

நன்றி

தருமி Says:
November 22nd, 2005 at 12:41 pm e
குழலி,
அப்பாவின் பக்கம் எனக்கு நல்லா தெரியுதே.

மன்னிக்கணும் ..பதில் உடனே போடவில்லை..இதோ…

கோ.இராகவன் Says:
November 22nd, 2005 at 2:04 pm e
புரிகிறது தருமி. ஆனால் மற்றவர்களுக்குப் புரியவில்லையே. ஆனால் காலம் நிச்சயம் மாறும். நிச்சயமாக.

தருமி Says:
November 22nd, 2005 at 4:05 pm e
இளையவர்களுக்கு இருக்கும் இந்த நம்பிக்கைதான் கொஞ்சம் ஆறுதல், ராகவன்

வெளிகண்ட நாதர் Says:
November 22nd, 2005 at 10:52 pm e
//நம்ம மனசு இன்னும் விசாலமாவது எப்போது? // அது சரி என்னத்த சொல்ல? மாறாத ஜென்மம் நம்முலுது போங்க!

துளசி கோபால் Says:
November 23rd, 2005 at 3:20 am e
தருமி,

நம்ம ஊருலே ‘ஒரு மூதாட்டி……’ன்னு எதாவது நியூஸ் தலைப்புலே வந்தா, அது என்னன்னு
படிச்சோமுன்னா , 45 வயதான மூதாட்டி ஒருவர்…. இப்படி இருக்கும்.

இங்கே பாருங்க, 80 வயசானாக்கூட தன்னை நல்லா அலங்கரிச்சுக்கிட்டு இருக்கற எத்தனையோபேரைப்
பார்க்கலாம். அதுவும் காதுலே தொங்கட்டான்கூடப் போட்டுருப்பாங்க.
முதியோர் இல்லத்துலே கூட எத்தனை திருமணங்கள் நடக்குது தெரியுமா? ரெண்டு பக்கத்துப் பேரன் பேத்திகளோடு!

வயசுன்றது மனசுலேதான்றது என் எண்ணம்.

( இப்படி இருந்தாத்தான் 50+ எல்லாம் உற்சாகமா இருக்க முடியும். இல்லே? )

Partha Says:
December 9th, 2005 at 12:08 pm e
adadadada! already 6 vanthaacha pottu thaakunga

Wednesday, November 16, 2005

106. (8.M.G.R.–>ரஜினி–>விஜய்–>..???) - பின் குறிப்பு

8 M.G.R.–>ரஜினி–>விஜய்–>..???Post Date :Friday, Apr 29th, 2005 at 4:15 pmஇது ஒரு மறு பதிப்பு. அதோடு இப்போது ஒரு பின் குறிப்பு இணைக்கிறேன். இது “காலத்தின் கட்டாயம்”:-) சினிமா = பொழுதுபோக்கு - இந்தக் கணக்கை நம் தமிழ் மக்களுக்குச் சொல்லிக் கொடுத்த கணக்கு வாத்தியார் யாருன்னே தெரியலை. தெரிஞ்சா நாலு கொடுக்கலாம். அதுவும் பொழுதுபோக்குன்னா, மூளையைக் கழட்டி வெளிய வச்சுட்டு சினிமா பார்க்கணும்னு சொன்னதும் யாருன்னு தெரியலை. அந்த பெரிய மனுஷன் M.G.R. ஒரு பத்து இருபது வருஷமா தமிழ் சினிமா முன்னேறாதபடி பார்த்துக்கிட்டார். ஏதோ அவரால முடிஞ்சது! சினிமான்னா கதை வேணும்னு யார் சொன்னதுன்னு கேட்டவர்.
ஏதோ…அவருக்குப் பிறகு கொஞ்சம் தலையைத் தூக்கலாம்னு தமிழ்த்திரையுலகம் நினைத்தது. வந்தாரையா நம்ம சூப்பர் ஸ்டார். நல்ல மனுஷன். M.G.R. மாதிரி இல்லாம நல்லாகூட நடிக்கக்கூடிய ஆளுதான்(புவனா ஒரு கேள்விக்குறி; முள்ளும் மலரும்;ஆறிலிருந்து அறுபது வரை…). ஆனா நம்ம மக்களுக்கு அதெல்லாம் பிடிக்குமா? ஒரே ஸ்டைல் மயந்தான், போங்க. நானும் கையை ஆட்டி ஆட்டி பார்க்கிறேன்.. சத்தமே வரமாட்டேங்குது… (நான் ஒரு தடவை சொன்னா…). துண்டை தோளில் சுற்றி சுற்றி போட்றேன்… அப்பவும் சத்தமே வர மாட்டேங்குது! சரி, கதை, அதில் கொஞ்சம் லாஜிக், சண்டை, அதில் கொஞ்சம் sense, இப்படி ஏதும் இல்லாமலேயே தலைவர் காலம் போயிருச்சி… (past tense-ல் சொல்லலாமா? அல்லது இன்னும் 2 வருஷம் கழிச்சி வரப்போற படத்துக்குப் பிறகுதான் சொல்லணுமா?
அடுத்தக் கட்டத்துக்கு வருவோம். சரி, இனி தமிழ்த்திரை எழுந்துவிடும் என்ற நினைப்பில் இருக்கும்போது வந்தாரையா அடுத்த வாத்தியார். வரிசையா ஹிட்ஸ். அதுவும் வழக்கமான நம்ம மசாலா படங்கள். logic இல்லாத, anti-gravitational டிஷ்யும் டிஷ்யும் படங்கள். புதிதாக எதுவும் முயற்சிகூட செய்துவிட மாட்டேன் என்ற நல்ல முடிவில் நம் இளைய தளபதி மிக மிக உறுதியாக இருக்கிறார். ஒரு தியாகம்தான். இனி இந்த தலைவர் தன் பங்குக்கு எத்தனை வருஷங்களைக் கெடுக்கப்போகிறாறோ…..ம்ஹும் … சாபக்கேடுதான், போங்க!
நமக்கு மட்டும் ஏங்க இப்படி…?
============== ======================== ===============
இப்போ பின்குறிப்பு:
இது ஒரு பரிமாண வளர்ச்சியைக் கோடு போட்டுக்காட்டும் ஒரு முயற்சி. சும்மா சொல்லக்கூடாதுங்க இந்த தருமியை; வாய்க்கு சீனிதான் போடணும். சிவகாசி படமெல்லாம் வர்ரதுக்கு முந்தியே எழுதிய இந்த பதிவில் சொன்னதின் நிரூபணம் இதோ, சிவகாசியில நடந்திருச்சி. என்னன்னு கேக்றீங்களா?
விவசாயின்னு ஒரு படம்; நம்ம பொ.ம.செ.(வேற ஒண்ணும் இல்ல - பொன்மனச் செல்வர்தான்) படிச்சி விவசாயி;அவரு மேல லவ்ஸ் உட்றது கே.ஆர்.விஜயா. (எப்பவுமே அப்டிதானே, தலைவிக்குத்தான் தலைவரு மேல ஒரு ‘இது’ வரும்; never vice versa!) அதில் ஒரு பாட்டு: “இப்படித்தான் இருக்க வேணும் பொம்பளை…” இது just ஒரு example தான். அங்கங்க, அப்பப்ப இது மாதிரி அட்வைஸ்களை பொம்பளைகளுக்கு வாத்தியார் அள்ளி விடுவார், அல்லது அள்ளிவிடறது மாதிரி சீன்கள் கட்டாயம் செட் பண்ணிடுவாங்க. அவரு அப்படி சொன்னதுதான் தாமதம்; நம்ம ஹீரோயின்கள் - சரோஜா தேவி, ஜெயலலிதா, விஜயா,etc..etc.. - அடுத்த சீன்ல பயங்கரமா ஒரு பட்டுச் சேலை, ஒரு கூடைப் பூ வச்சி அப்டி ஒரு நட நடப்பாங்க பாருங்க..இங்க இருந்து விசிலு பறக்கும். இப்படியாக எல்லாத்துக்கும், எப்போவும், சிறப்பா பொம்பளைங்களுக்கு அட்வைஸ் பறக்கும் எல்லா படத்திலும்.
அடுத்தது வந்தாரு நம்ம சூப்பர் ஸ்டார். இவரும் அவர் பங்குக்கு பல படங்கள்ல ஒரே அட்வைஸ் மயம் தான். ரொம்ப கோபப் பட்ற பொம்பளைபத்தியெல்லாம் நெறைய சொல்லுவார். மன்னன் படத்தில் வர்ர தலைவி நாட்டின் முதல் இடத்தில இருக்கிற தொழிலதிபர். ஆனா நம்ம தலைவர் முன்னால ஜுஜுபியா ஆயிருவாங்க. அந்த படத்தில கடைசி சீன்ல, தலைவர் வேலைக்கு -அதே கடைநிலைத் தொழிலாளியாகத்தான் - போவார்; அந்த அம்மா அவருக்கு டிஃபன் பாக்ஸில் சோறு கொடுத்து அனுப்பிட்டு வீட்லேயே இருந்திருவாங்க; ஏன்னா, பொம்பிளயோட “இடம்” அதுதானே! இந்தப் பெண்ணடிமைத் தனத்திற்கும் தியேட்டர்ல முதல் வரிசை மட்டுமல்லாமல், கடைசி வரிசையிலிருந்தும் விசில் வரும். ஆக, சூப்பர் ஸ்டார் எம்.ஜி.ஆர். லெவலுக்கு பரிணாம வளர்ச்சிக்கு வந்துட்டாரா? ஆனா, நம் சினிமா அபிமானிகளின் பரிணாமம் அதைவிட ஒரு ஸ்டெப் முன்னேறி விட்டது. எப்டின்னு கேட்டீங்கன்னா, எம்.ஜி.ஆர். பீரியட்ல பொதுவா முதல் வரிசைக்காரர்கள்தான் விசிலடித்ததாக ஒரு ஐதீகம்; ஆனா, இப்போ அமெரிக்கா, ஜப்பான் தியேட்டர்லயும் கடைசி வரிசையிலிருந்துதான் ரொம்ப விசிலாமே - அப்படி ஒரு பரிணாம வளர்ச்சி நம்ம மக்களிடம்; நல்லா இருக்கில்ல?
அடுத்து நம்ம ஈனா.தானா. (அதாங்க, இளைய தளபதி - அது சரி,மூத்த தளபதி யாருங்க?)அவர் இதுவரை பொம்பளைங்களுக்கு எந்த அட்வைஸும் கொடுத்ததாகத் தெரியவில்லை. இப்போ அவரும் ‘வயசுக்கு வந்திட்டாராம்’! அதனால, அவரும் ஆரம்பிச்சிட்டார்..! அஸினுக்கு அட்வைஸ் கொடுக்கிற சீனைப் பாத்துட்டு அப்டியே ‘இதாய்ட்டேன்’! தமிழர்களுக்கு அடுத்த ஒரு தலைவரின் உதயம்னா சும்மாவா? அப்டியே, நெக்குரிகிட்டேன்.
ஆக நம் தலைவர்கள் சினிமாவை மட்டுமல்லாமல் நம்ம நாட்டையும் இப்படி உண்டு இல்லைன்னு பண்றதுக்கு நாம என்ன புண்ணியம் பண்ணியிருக்கணும்னு நினச்சி எனக்கு கண்ணீரே வந்திரிச்சி…ஆமா, உங்களுக்கு…?
Nov 16 2005 10:30 pm சினிமா edit this
Rate this post at www.thamizmanam.com
இதுவரை விழுந்த "உள்குத்து" நிலைமை பாருங்க!!??:
(இதுவரை 11 பரிந்துரைகள்)
ஹலோ, வந்தது வந்தீங்க; வந்ததுக்கு ஒரு வோட்டு / வேட்டு போட்டுட்டு போறதுதானே! சும்மா அப்டியே போய்ட்டா எப்படி??
76 Responses
இளவஞ்சி Says: after publication. e -->November 17th, 2005 at 12:37 am e
அது ஒரு சோகக்கதைன்னேன்! தருமி சார்… என்னத்துக்கு படத்துக்கு போனோம்னு ஆகிருச்சு! அதுவும் நீங்க சொல்லற அட்வைசு சீன்.. கன்னறாவி…
இராமநாதன் Says: after publication. e -->November 17th, 2005 at 1:34 am e
பெரீய்ய்யப்பா,பின்னூட்டத்துல உத வாங்கணும்னு தலையில எழுதியிருந்தா அத அந்த ஆண்டவனாலும் தடுக்க முடியாதுங்கறது சரியாத்தான் இருக்கு!
வெளிகண்ட நாதர் Says: after publication. e -->November 17th, 2005 at 1:58 am e
//விவசாயின்னு ஒரு படம்; நம்ம பொ.ம.செ.(வேற ஒண்ணும் இல்ல - பொன்மனச் செல்வர்தான்)//“பொன்மனச் செம்மல்” இப்படி செல்வர் ஆக்கிட்டிங்களே! செல்வி இருக்கிறதாலே செல்வர் ஞாபகமோ!
//நம் சினிமா அபிமானிகளின் பரிணாமம் அதைவிட ஒரு ஸ்டெப் முன்னேறி விட்டது. எப்டின்னு கேட்டீங்கன்னா, எம்.ஜி.ஆர். பீரியட்ல பொதுவா முதல் வரிசைக்காரர்கள்தான் விசிலடித்ததாக ஒரு ஐதீகம்; ஆனா, இப்போ அமெரிக்கா, ஜப்பான் தியேட்டர்லயும் கடைசி வரிசையிலிருந்துதான் ரொம்ப விசிலாமே - அப்படி ஒரு பரிணாம வளர்ச்சி நம்ம மக்களிடம்; நல்லா இருக்கில்ல?//
பின்ன சிலுக்குவார்பட்டி பழக்கம் சிகாகோ வந்தாலும் வுடுமா?
Rajan Says: after publication. e -->November 17th, 2005 at 2:14 am e
Pombalaiyaa latchanamaa podavaik kattuSumma puru purunnu kizhingi pora trouvusara vittu
Pombala sirichaa pochu pugayilai virichaa aachi …
the above were some other famous MGR songs advising girls on what to wear and how to behave. All tamil heroes from MGR, Shivaji, Jaishankar, Sivakumar to latest Vijay they were never tired of showing women their correct place in society. I must be having lot of tolerance and patience to watch Vijay movies and all.
AnbudanRajan
துளசி கோபால் Says: after publication. e -->November 17th, 2005 at 3:12 am e
தருமி,
எனக்கும் இந்த சந்தேகம் ரொம்பநாளா இருக்கு. யாராம் இந்த மூத்த தளபதி?
கண்ணீர் வருதுன்னு சொன்னீங்களே, அது ஆனந்தக்கண்ணீர்தானே?:-))
ஆளாளுக்கு அட்வைஸ் பண்ண வந்துர்றாங்கப்பா, சினிமாவுலேயும்,நிஜ வாழ்க்கையிலேயும்.எப்பத்தான் ஆண்குலம் திருந்தப்போகுதோ?
kirukan Says: after publication. e -->November 17th, 2005 at 4:34 am e
Dharumi, It is clear from this post that this menace has been passing from generation to generation and adapting like a virus.
Atleast this generation has to find a vaccine.
குமரன் Says: after publication. e -->November 17th, 2005 at 4:58 am e
அப்படி போடுங்க தலைவரே. நல்ல ஆராய்ச்சி. நம்ம கருத்தை அப்படியே புட்டுப்புட்டு வச்சிட்டீங்க. ஈனா தானா ஆனாலும் ஓவராத்தான் சிவகாசியில அலட்டிகறார்ப்பா…எங்க போயி நிக்கப் போகுதோ இதெல்லாம்…
padma arvind Says: after publication. e -->November 17th, 2005 at 5:41 am e
தருமிஇத்தன அட்வைஸ் பண்ணியும் புரிய மாட்டேங்குதே;(
வசந்தன் Says: after publication. e -->November 17th, 2005 at 6:27 am e
இளைய தளபதியும் முன்பே தொடங்கிவிட்டாரென்றே நினைக்கிறேன்.“பிரியமானவளே” யில் சிம்ரனுடன் நடக்கும் உரையாடல் ரொம்ப பிரபலமாச்சே. இன்னும் நிறைய இருக்கு.
கடிதம் கிடைத்தது.நன்றி.
ஜோ Says: after publication. e -->November 17th, 2005 at 8:24 am e
இதுல கொடுமை என்னனா இப்படி பெண்களை அடிமையா இருக்க சொல்லி அட்வைஸ் பண்ணும் நடிகர்களுக்குத்தான் பெண்கள் ஆதரவும் அதிகம்.
துளசி கோபால் Says: after publication. e -->November 17th, 2005 at 9:47 am e
ஏம்ப்பா, யாராவது சொல்லுங்களேன் அந்த ‘மூத்த’ தளபதி யாருன்னு.
மண்டை காயுதேப்பா….
MUTHU Says: after publication. e -->November 17th, 2005 at 9:52 am e
ANTHA ANDAVANNAE NINAICHALLUM NAMMALA KAAPAATHA MUDIYATHUUUU
ஜோ Says: after publication. e -->November 17th, 2005 at 10:09 am e
துளசியக்கா,தளபதி ரஜினி!இளைய தளபதி விஜய்!
இதிலிருந்து என்ன புரியுது?
விஜய் தான் இளைய ரஜினி- னு சொல்ல வர்றாங்க.சரியா?
துளசி கோபால் Says: after publication. e -->November 17th, 2005 at 10:20 am e
ஜோ,
சிம்பு லிட்டில் சூப்பர் இஷ்ட்டார்னு போட்டா அப்ப அது பிக் சூப்பர் ரஜினின்னு இல்லையா?
அதேன் ஒரே ஆளுக்கு ரெண்டுபேர் வாரிசா?
இன்னும் மண்டையைக் காயவைக்கறாங்களே.
ஜோ Says: after publication. e -->November 17th, 2005 at 10:30 am e
துளசியக்கா,ரஜினியா பார்த்து கொடுத்தா அவர் ஒருத்தருக்கு மட்டும் தான் கொடுக்க முடியும் .தானாவே தனக்கு கொடுத்துகிறவங்க கிட்ட இதுக்கெல்லாம் காப்பி ரைட் கேக்க முடியுமா?
நாளைக்கே ஒரு வலைப்பதிவர் ‘வலைப்பதிவுலக இளைய துளசி’ -ன்னு போட்டுக்குறார் .இன்னொருத்தர் ‘வலைப்பதிவுலக இரண்டாம் துளசி’ -ன்னு போட்டுகிறார்ன்னு வச்சுகுவோம் .நீங்க என்ன செய்ய முடியும் ? நிறைய பேர் மோதுரது உங்களுக்கு பெருமை தானே?ஹி ..ஹி
Snegethy Says: after publication. e -->November 17th, 2005 at 10:42 am e
Enaku ippathan angatham enda enna endu nallave villangithu
தருமி Says: after publication. e -->November 17th, 2005 at 11:06 am e
இளவஞ்சி,ஏதோ, நாம் பெற்ற இன்பம்… அதுவரை சந்தோஷமே!
என்ன ராம்ஸ்,“பின்னூட்டத்துல உத வாங்கணும்னு தலையில எழுதியிருந்தா…”// - நாம பதிவாளர்கள் எல்லோரும் அப்படியா பழகுறோம்..இதல்லாம் சும்மா அப்டியே தட்டி விட்டுட்டுப் போறதுதான..
வெளிகண்ட நாதர்,““பொன்மனச் செம்மல்” இப்படி செல்வர் ஆக்கிட்டிங்களே…” // - இந்தப் பட்டமே நமக்குப் பிடிக்காதது…அதனால மனசுல நிக்கல போலும். எப்படியாயினும், திருத்தியமைக்கு நன்றி
ஷ்ரேயா Says: after publication. e -->November 17th, 2005 at 11:14 am e
எனக்கு>> விஜய்யோட சேர்த்து விசயகாந்து, அசித்து, “விரல்” சிம்பு, (இந்த வரிசையிலே (பழைய படங்களென்றால் சேர்றதும் புதுப்படமென்றால் விலகுறதுமா ரஸ்னிகாந்தும்) - இவர்கள் என்னை “உடற்பயிற்சி” செய்ய வைக்கிறவர்கள். விளங்கல்லயா? இவர்கள் படமென்றால் நான் ஆளை விட்டாக் காணுமென்று ஒரே ஓட்டமாக ஓடிவிடுவேன்.
உலகத்திலே logic என்கிறதொன்று இருக்கிறதென்றும், இந்த “பெண்கள்-இப்படித்தான்-இருக்கவேண்டும்” அறிவுரைகள் படத்தை “ஊத்திக்கொள்ள″ வைக்கும் என்றும் யாராவது எங்கட தமிழ்த்திரையுலக ஜீவன்களுக்கு எடுத்துச் சொன்னால் நலம்! :rofl:
தருமி Says: after publication. e -->November 17th, 2005 at 11:16 am e
ராஜன்,“All tamil heroes from MGR, Shivaji, Jaishankar, Sivakumar to latest Vijay they were never tired of showing women their correct place in society.”.. // - i dont agree. Other than M.G.R., Rajini, and Vijay in their respective periods other actors were never so seriouly sermonising in our films.
of the two songs you mentioned , which film has the first song? i dont think i am familiar with that one.
தருமி Says: after publication. e -->November 17th, 2005 at 11:17 am e
துளசி,“எனக்கும் இந்த சந்தேகம் ரொம்பநாளா இருக்கு. யாராம் இந்த மூத்த தளபதி?” // உங்கள் சந்தேகத்தைத் தீர்த்துவைக்க நம்ம ‘தளபதி’ய அனுப்பிவைக்கிறேன்.
‘கண்ணீர் வருதுன்னு சொன்னீங்களே, அது ஆனந்தக்கண்ணீர்தானே?:-))” // - பின்னே, வேற என்ன..?
“ஆளாளுக்கு அட்வைஸ் பண்ண வந்துர்றாங்கப்பா, சினிமாவுலேயும்,நிஜ வாழ்க்கையிலேயும்.எப்பத்தான் ஆண்குலம் திருந்தப்போகுதோ? ” // சான்ஸ் கிடச்சா, சந்தடி சாக்கில கோபால்ஜியைத் திட்டிடறதா…இது ஒண்ணும் நல்லா இல்ல!!
தருமி Says: after publication. e -->November 17th, 2005 at 11:33 am e
கிறுக்கன் (சாமி, வேற புனைப்பேருகிடைக்கலையா, உங்கள எப்படி ‘விளிக்கிறது’ன்னே தெரிய மாட்டேங்குதுல்லா..?)“Atleast this generation has to find a vaccine. ” ஆனாலும் நீங்க ரொம்பத்தான் optimistic-ஆக இருக்கீங்க! keepthis statement ready to pass it on to your grandchildren !! நம்ம எல்லாம் அவ்வளவு ஈசியா திருந்திட்ற ஜென்மங்களா…இந்த ஜாதி விஷயம் பாத்தீங்களா..ஏதாவது கொஞ்சமாவது மாறியிருக்கா..என் லைஃப்லேயே முந்திக்கு இப்ப கூடிதான் போச்சு…ம்..ம்ம்..என்னத்த சொல்றது…?
குமரன்,“எங்க போயி நிக்கப் போகுதோ இதெல்லாம்… ” // - முந்தினதில சொன்னதுதான், குமரன்..
தருமி Says: after publication. e -->November 17th, 2005 at 11:44 am e
ஜோ,(இந்தமாதிரி)நடிகர்களுக்குத்தான் பெண்கள் ஆதரவும் அதிகம். // இதுக்கு அவங்கதான் பதில் சொல்லணும்…ஏன்னு..!!
ஜோ, சிலருக்கு ஒரு புது அகராதியே போடணும் போல இருக்கில்ல…அவுங்க பாட்டுக்கு நாட்டை விட்டு decades கணக்கா வெளியே போயிடறாங்களா… நாட்டு நடப்பே தெரிய மாட்டேங்குது. இல்ல?
தருமி Says: after publication. e -->November 17th, 2005 at 11:46 am e
பத்மா,“இத்தன அட்வைஸ் பண்ணியும் புரிய மாட்டேங்குதே;( ..” // - உங்களுக்குத்தான் புரியலை, பத்மா! ஏற்கெனவே சொல்லியிருக்காங்கல்லா..one who advices is a fool, so also one who does not heed to that-ன்னு! மாத்தி மாத்தி சொல்லிக்க வேண்டியதுதான்.
வசந்தன்,அப்போ நம்ம ஈனா.தானா. அப்பவே மூனா.தானா.வா (மூத்த தளபதி) ஆகிவிட்டாரோ..தெரியாமப் போச்சு, போங்க..!
முத்து,இப்படி தலைவர் சொன்னத அவருக்கே திருப்பி கொடுக்றீங்களே..:-)
ramachandran usha Says: after publication. e -->November 17th, 2005 at 11:46 am e
தருமி, கொஞ்சம் மாத்தி சிந்திச்சி பாருங்க. எழுதுறவங்க, நடிக்கிறவங்க, பார்க்கிற கும்பல்( பெரும்பாலும்) அத்தனையும் ஆண்வர்க்கம். எங்களுக்கு இந்த டயலாக் வெறும் காமடி. ஆனா ஆண்களுக்கு வாழ்க்கையில் தங்களால் முடியாததை திரையில சொல்லி மனச தேத்திகிறாங்கன்னு நெனச்சிக்கீங்களேன். படாவதி சீரியல் வசனங்கள், கேட்டு என் கணவர் சொன்ன விளக்கம் இது.அய்யயோ! சிநேகிதி இருக்காங்களா
தருமி Says: after publication. e -->November 17th, 2005 at 11:55 am e
சினேகிதி,அப்பாடா:-)அப்படி என்ன உங்களைப் பார்த்து உஷாவுக்கு ஷாக் அடிக்கிது??
சாஃப்ட்வேர் மக்களே,இங்க பாருங்க, தருமிக்கு ஒரு சந்தேகம் வெகு நாளா..இப்ப சினேகிதி, அவுங்க தோஸ்த்தி உஷா இவங்க பின்னூட்டத்தில ஸ்மைலி நல்லா தெரியுது. ஆனா நான் இப்படி போட்டா ” ” ஸ்மைலி ஒண்ணும் தெரியமாட்டேங்குது. ஏன்..ஏன்..ஏன்? ரொம்ப நாளா மண்ட காயுற விஷயம் எனக்கு இது…யாராவது என்னைத் தூக்கி விடுங்களேன்..
ஜோ Says: after publication. e -->November 17th, 2005 at 12:02 pm e
//எங்களுக்கு இந்த டயலாக் வெறும் காமடி. //உஷா,உங்களுக்கு இது வெறும் காமெடியா இருக்கலாம் .நீங்க ரொம்ப சிறுபான்மை.ஆனா இதை சீரியஸா பாக்குற பெண்கள் தான் நம்ம சமுதாயத்துல அதிகம்.நம்ம வாத்தியாருக்கு பெண்கள் ஆதரவு தான் உங்களுக்கு தெரியுமே ?வாத்தியாராவது சினிமால உள்ள ஒரு கேரக்டர் கிட்ட சொல்லுற மாதிரி மறைமுகமா சொல்லுவார் .ஆனா நம்ம சூப்பர் ஸ்டார் விசுக்கு..விசுக்கு சத்ததோட நம்ம கிட்ட நேரடியாவே சொல்லுவார் .
//நாட்டு நடப்பே தெரிய மாட்டேங்குது. இல்ல? //தருமி,மனசுக்குள்ள நினச்சுகிட்டு நம்ம துளசியக்கா பிழைச்சு போகட்டும்-னு சொல்லாம விட்டேன் .நீங்க போட்டு தாக்கிட்டீங்க .ஹி..ஹி
தருமி Says: after publication. e -->November 17th, 2005 at 12:05 pm e
ஷ்ரேயா,உங்கள் ஓட்டம் விரைவில் நிற்குமா என்ன..? எனக்கு அந்த நம்பிக்கையில்லை. உங்கள் ஓட்டம் ஒரு ‘தீராத ஓட்டம்’தான்!
எம்.ஜி.ஆர். அமைச்சரானதும் எவ்வளவு சந்தோஷப்பட்டேன் தெரியுமா..? ஏதோ இரண்டில ஒண்ணாவது பொழச்சிடும்னு நம்பினேன். ரெண்டுமே தேறலையே!
நான் அப்போ இருந்த மாதிரியே நீங்களும் ‘மொடாக்கா’ இருக்கீங்களே..பின்ன என்ன..”“பெண்கள்-இப்படித்தான்-இருக்கவேண்டும்” அறிவுரைகள் படத்தை “ஊத்திக்கொள்ள″ வைக்கும்…” - இப்படி ஒரு மூட நம்பிக்கையோடு இருக்கீங்க…திருந்துங்க.. இந்த மாதிரி பேசுற தலைகளோட படம்தானங்க பிச்சுக்கிட்டு போகுது…
தருமி Says: after publication. e -->November 17th, 2005 at 12:08 pm e
ஐயோ இது என்ன இப்படி போட்டா இப்ப ஸ்மைலி தெரியுது…என்ன மந்திரமோ, மாயமோ தெரியலையே…:-)
தருமி Says: after publication. e -->November 17th, 2005 at 12:09 pm e
என்ன மந்திரமோ, மாயமோ தெரியலையே…:-)என்ன மந்திரமோ, மாயமோ தெரியலையே -இப்ப தெரியமாட்டேங்குது…என்னப்பா, நடக்குது இங்கே..?
தருமி Says: after publication. e -->November 17th, 2005 at 12:12 pm e
உஷா,:-(ஜோ கட்சிதான் நானும்.. இப்ப என்ன சொல்றீங்க ! நானும் ஸ்மைலியா போட்டுப் பாக்க்றேன். சிலது வருது..சிலது .. ம்ஹூம்..என்ன மாயமோ…
ramachandran usha Says: after publication. e -->November 17th, 2005 at 12:17 pm e
அது சரி, தமாஷாய் நினைக்கும் கூட்டம் பெரியதுதான் என்று நான் சொன்னாலும், சிரீயசாய் எடுத்துக் கொள்ளும் கும்பலே தியேட்டரில் படம் பார்க்கின்றன, ஓட்டும் போடுகின்றன சரியா ஜோ, தருமி!
தருமி Says: after publication. e -->November 17th, 2005 at 12:21 pm e
test for smilies மற்ற ஸ்மைலிகளுக்கு என்ன symbols போடணும்..?
குமரன் Says: after publication. e -->November 17th, 2005 at 5:00 pm e
:-)
Snegethy Says: after publication. e -->November 17th, 2005 at 6:34 pm e
santhadi sakila ennai mandai kaya vaikringa 2 perum enna.
ramachandran usha Says: after publication. e -->November 17th, 2005 at 6:44 pm e
சிநேகிதி, இப்பத்தான் பார்த்தேன். சின்னதா ஸ்பெல்லிங் மிஸ்டேக் ஆயிடுச்சு. அய்! சிநேகிதி இருக்காங்களா என்பதை அய்யயோ சிநேகிதி இருக்காங்களான்னு அடிச்சிட்டேன். ஆக, நீங்க எக்ஸ்ட்ராவாக இருக்கும் ‘யயோ” வை தூக்கிடுங்க. சரியா ))))
ramachandran usha Says: after publication. e -->November 17th, 2005 at 6:45 pm e
சிநேகிதி, இப்பத்தான் பார்த்தேன். சின்னதா ஸ்பெல்லிங் மிஸ்டேக் ஆயிடுச்சு. அய்! சிநேகிதி இருக்காங்களா என்பதை அய்யயோசிநேகிதி இருக்காங்களான்னு அடிச்சிட்டேன். ஆக, நீங்க எக்ஸ்ட்ராவாக இருக்கும் ‘யயோ” வை தூக்கிடுங்க. சரியா ))))
தருமி Says: after publication. e -->November 17th, 2005 at 6:52 pm e
ஏங்க சினேகிதி,உங்க சினேகிதி உஷா:-( சொல்றத நம்புறீங்க..?
ramachandran usha Says: after publication. e -->November 17th, 2005 at 8:12 pm e
விளையாடாதீங்க தருமி! சிநேகிதி நா சொன்னா நம்புவாங்க. இல்லையா சிநேகிதி?லேசான பயத்துடன்,உஷா
தருமி Says: after publication. e -->November 17th, 2005 at 9:22 pm e
ஆனாலும் சினேகிதி, நீங்க ரொம்பவே பாவங்க! எனக்கே இவ்வளவு கஷ்டமாயிருக்கே…உங்களுக்கு எப்படியிருக்கும்?
ரொம்ப வருத்தத்துடன்……தருமி
Mathy Kandasamy Says: after publication. e -->November 17th, 2005 at 9:40 pm e
//சினிமா = பொழுதுபோக்கு - இந்தக் கணக்கை நம் தமிழ் மக்களுக்குச் சொல்லிக் கொடுத்த கணக்கு வாத்தியார் யாருன்னே தெரியலை. தெரிஞ்சா நாலு கொடுக்கலாம். அதுவும் பொழுதுபோக்குன்னா, மூளையைக் கழட்டி வெளிய வச்சுட்டு சினிமா பார்க்கணும்னு சொன்னதும் யாருன்னு தெரியலை.//
ரொம்ப சரியாச் சொல்லிருக்கீங்க. அதிலயும் பாருங்க, நல்ல நல்ல படங்களைத் தேர்ந்தெடுத்துப்பார்க்கிற ஆசாமிங்களே * படம்னா “கண்மணி”ங்களா மாறிடறாங்க..
—-மக்களே ரொம்ப அரட்டை அடிக்கிறாப்ல இருக்கு.
வீட்டில சொல்லிக்குடுக்கப்போறேன்.
-மதி
தருமி Says: after publication. e -->November 17th, 2005 at 10:15 pm e
மதி ,இந்த ஸ்மைலி உங்க வேலையா? ஐயா, நல்லா இருக்கே…
சினேகிதி, உஷா, இங்கே சிலருக்கு காதில இருந்து புகையாமே …ஏங்க?
Rajan Says: after publication. e -->November 19th, 2005 at 7:55 am e
Dear Dharumi
I dont remember the name of the movies where those songs belog to. Both were famous songs once upon a time. The first one may be from Pattikaattup Ponnaiyaa or something. Does name matter for MGR films? All MGR films are just MGR films, same plot, same story, same everything, same unsahikkapable movies. From the success of the films by the likes of Vijay, I dont think even the next Tamil generation has changed a bit. No hopes. Read my review on the movie Kaazhcha. If you get the DVD in Madurai, please see it. It will give an antidote for seeing films like Maja or Sivakasi.
RegardsRajan
-L-L-D-a-s-u-- Says: after publication. e -->November 19th, 2005 at 10:52 am e
‘’இந்தப் பட்டமே நமக்குப் பிடிக்காதது…'’
தருமி அவர்களே!!
அப்படியா !! அப்ப கணேசனுக்கு கொடுத்த ‘சிவாஜி’ என்ற பட்டம் ? (எதுக்கும் போட்டுக்கிறேன் )
suresh penathal Says: after publication. e -->November 19th, 2005 at 1:14 pm e

varutha paakkareen!
தருமி Says: after publication. e -->November 19th, 2005 at 2:29 pm e
தாஸு,context புரியலையே!
சுரேஷ்,வருது ..வருது …ஸ்மைலிகள் வருது…வருது
-L-L-D-a-s-u--- Says: after publication. e -->November 19th, 2005 at 2:35 pm e
இளைய தளபதி , பொன்மன செம்மல் என பட்டங்களை கேலி செய்யும் நீங்கள் , ‘சிவாஜி’ எனும் பட்டத்தையும் (கணேசனுக்கு ஈ வே ராமசாமி கொடுத்த பட்டம்தானே ‘சிவாஜி’) கிண்டல் பண்ணுவீர்களா? :
தருமி Says: after publication. e -->November 19th, 2005 at 2:59 pm e
தாஸு,
இ.த. - எந்தவிதப் பொருளாவது இருக்கிறதா இதில்?
பொ.ம.செ. - அவரை எப்படிப் பார்க்கிறோமே அந்த persepctives -யைப் பொறுத்து இந்தப் பட்டம். எனக்கு அது வெறும் வேடிக்கை; அவரது அபிமானிகளுக்கோ அது உண்மை. எல்லோரும் ஒத்துக்கொள்ளும் பட்டமல்ல அது.
சிவாஜி - இதைப்பட்டமென்று நினைக்கவில்லை; இரண்டு கணேசன்கள். வேறுபடுத்திக் காட்ட ஒருவர் ஜெமினி ஆனார்; இன்னொருவர் சிவாஜி ஆனார் - ஒரு காரண இடுகுறிப்பெயர்!
நடிகர் திலகம் - இதுதான் அவருக்குச் சரியான பட்டம். என்னைப் பொறுத்தவரை மகாகவி,கவிஞர், நடிகையர் திலகம் போன்ற பட்டங்கள் எவ்வளவு சரியோ அதே மாதிரி நடிகர் திலகம் என்ற பட்டம் சரியே; பொறுத்தமே.
-L-L-D-a-s-u-- Says: after publication. e -->November 19th, 2005 at 3:26 pm e
தருமி அவர்களே
வேறுபடுத்திக் காட்ட இனிஷியல் பயன்படுத்துவது போதும் என்று நினைக்கிறேன் . பட்டம் கொடுப்பது சினிமா மற்றும் திராவிட கலாச்சாரமாகிவிட்டது … இதில் வி.சி.கணேசனுக்கு மட்டும் விலக்கு அளிப்பதை ஒத்துக்கொள்ளமுடியவில்லை .
நடிகர் திலகம் - அவரை எப்படிப் பார்க்கிறோமே அந்த persepctives - -யைப் பொறுத்து இந்தப் பட்டம். எனக்கு அது வெறும் வேடிக்கை . உங்களுக்கோ அது உண்மை. எல்லோரும் ஒத்துக்கொள்ளும் பட்டமல்ல அது.
சிவாஜி : இதுவும் ஈ.வே.ரா எனும் திராவிட தலைவர் கொடுத்த பட்டமே .. இது வழக்கம்போல திரும்ப திரும்ப உச்சரிக்கப்பட்டு, சிவாஜி என்பது ஒரு பட்டமே என்பது மூடிமறைக்கப்பட்டு விட்டது . இது அவர் சார்ந்தோரின் புத்திசாலித்தனம்தான் .

தருமி Says: after publication. e -->November 19th, 2005 at 3:47 pm e
தாஸ்,“பட்டம் கொடுப்பது சினிமா மற்றும் திராவிட கலாச்சாரமாகிவிட்டது ..” //
- மகாத்மா, இரும்பு மனிதர், Mr. Clean …இப்படிப் பட்டங்கள் கொடுத்தது திராவிட கலாசாரமா? ‘இந்தியாதான் இந்திரா; இந்திராதான் இந்தியா - என்றது திராவிட கலாசாரமா?…எல்லோரும் ஒத்துக்கொள்ளும் பட்டமல்ல அது.//சரி, ஒத்துக்கறேன்.… அவர் சார்ந்தோரின் புத்திசாலித்தனம்தான் // - சார்ந்தோர் யார்? திராவிடக் கழகக்காரர்கள் / சிவாஜி ரசிகர்கள்..
(உங்களுக்குத் திராவிட கழகங்கள் மேல் ஒட்டுமொத்த வெறுப்பா? “சிவாஜி” மீது வெறுப்பா?
-L-L-D-a-s-u-- Says: after publication. e -->November 19th, 2005 at 3:48 pm e
அப்படியே பட்டத்து ராசா வையும் பாருங்கள்
-L-L-D-a-s-u-- Says: after publication. e -->November 19th, 2005 at 4:04 pm e
மகாத்மா என்ற பட்டத்தை காந்தி வெறுத்தார் என படித்திருக்கிறேன் . அவர் சுயசரிதையில் ‘மோகன் தாஸ்…’ என்ற பெயரைத்தவிர அவர் பட்டங்களை சேர்க்கவில்லை .. ( ராம்கி சரிதானே . இது தவறான தகவல் என்றால் பட்டம் விஷய்த்தில் அவரும் புனிதரல்ல) . ஆனால் இங்கு அப்படியா நடக்கிறது . கருணநிதி எழுதும் கட்டுரைகளிலெல்லாம் என்ன உள்ளது . சினிமாக்காரர்களின் பெயர் பலகைகளை பாருங்கள் .. கொஞ்சம்கூட வெட்கம் இல்லாமல் கேப்டன் என்றும் . தளபதி என்றும் ..
நானும் வி.சி.கணேசனின் நடிப்பை ரசிப்பவன் தான் , (எ.கா . தேவர் மகன் , முதல் மரியாதை) .. ஆனாலும் பட்ட பெயர் விஷயத்தில் அவரும் மற்றவரைப் போல ஒரு மட்டைதான் .
சார்ந்தோர் : அவர் , அவர் படங்களின் தயாரிப்பாளர் , இயக்குனர் , ரசிக கண்மணி தலைவர்கள் ,..
சங்கரய்யா Says: after publication. e -->November 19th, 2005 at 5:28 pm e
ஆளாளுக்கு தளபதி யாருன்னு கேள்வி…
விசயி யங்கா கீராரா அதால இளைய தள, கொஞ்சம் வயசானா அவரே தளபதி
குழலி Says: after publication. e -->November 19th, 2005 at 6:20 pm e
இணையதள தளபதி எல்.எல்.தாசு வாழ்க வாழ்க, தமிழ்மண நக்கீரர் எல்.எல்.தாசு வாழ்க, பட்டம் விரும்பா மாமேதை எல்.எல்.தாசு வாழ்க வாழ்க….
Snegethy Says: after publication. e -->November 19th, 2005 at 6:53 pm e
yeppa oru naal oorila illa endal en peyarai intha illu illuthrukinga 2 perum enna.dharumi aiya nan nambanum enduthan pola Usha 2 tharam pinnotam poturukira.
ahh ahh nan paavamthan shrumi aiya.ama yaruku காதில இருந்து புகை??
ஜோ Says: after publication. e -->November 19th, 2005 at 7:38 pm e
சினிமா நாடக கலைஞர்கள் பல பேர் அவர்களை அடையாளம் காட்டிய படங்கள்,பாத்திரங்கள் பெயர் கொண்டு அழைக்கப்படுவது ஒன்றும் புதிதல்ல .வெண்ணிற ஆடை மூர்த்தி ,வெண்ணிற ஆடை நிர்மலா,படாபட் ஜெயலட்சுமி ,வியட்நாம் வீடு சுந்தரம் ,மேஜர் சுந்தர்ராஜன் ,குலதெய்வம் ராஜகோபால் ,மகாநதி சோபனா ,தளபதி தினேஷ் இவையெல்லாம் அப்படிப்பட்டவை தான்.
அது சரி .”ஆசிய ஜோதி” நேரு ,”இரும்பு மனிதர்” பட்டேல் இதெல்லாம் கலைஞர் கொடுத்த பட்டங்களோ?
ஜோ Says: after publication. e -->November 19th, 2005 at 7:43 pm e
‘நடிகர் திலகம்’ என்றால் அதற்கு முழுத்தகுதியும் பொருத்தமும் உடையவர் “சிவாஜி” கணேசன் ஒருவரே.
-L-L-D-a-s-u-- Says: after publication. e -->November 19th, 2005 at 8:05 pm e
ஜோ ..
பின்னுட்டத்திற்கு நன்றி ..விருப்பமிருந்தால் கருத்துக்கு மட்டும் மாற்றுக் கருத்துக்கூறவும் . எனக்கு நேரம் இருந்தால் அதற்கு கருத்துக் கூற முனைவேன் . இந்த முன்னுரையோடு எனது கருத்து கீழே ..
கணேசன் பைத்தியமாக மிக சிறப்பாக நடித்திருந்தால் (அவர் நன்றாகவே நடித்திருப்பார் ) ‘பைத்திய கணேசன்’ என்றா அழைத்திருப்பார்கள் ? ‘சேது’வில் விக்ரம் மிக தத்ரூபமாக பைத்தியமாக நடித்திருப்பார் அவரை ஏன் ‘பைத்திய’ விக்ரம் என்றழைக்கவில்லை ?
ஆசிய சோதி முதற்கொண்டு எல்லாம் சொறிந்துவிடுகிற வேலை !! அதை மற்றவர்கள் ரசிப்பதுதான் புரியவில்லை ..ஆனாலும் பட்டத்து ராசா மாதிரி யாரும் பட்டங்களை அவுத்து விட்டதில்லை!! பட்டங்கள் சூட்டியதை பெருமையாக சொல்லித்திருந்ததில்லை !! வெட்கமேயின்றி தன் ‘பட்டபெயரை’ தான் எழுதும் கதைகளில் போட்டுத்திரிந்ததில்லை .
-L-L-D-a-s-u-- Says: after publication. e -->November 19th, 2005 at 8:16 pm e
//பாத்திரங்கள் பெயர் கொண்டு அழைக்கப்படுவது ஒன்றும் புதிதல்ல//
ஜோக்கே அதுதான் . அதிலும் மேஜர் சுந்தரராஜன், கேப்டன் விஜய்காந்த் போன்ற பட்டங்கள் ..
//இணையதள தளபதி//
குழலி ,
பிரபலமான ஒரு தமிழ் வலைத்தளத்தில், ஒருவரின் பெயரை ‘இணையதளபதி’ XXX என்றே குறிப்பிடுவார்கள் .. சீழ் எங்கு வரை பீடித்துள்ளது பாருங்கள் ..
ramachandran usha Says: after publication. e -->November 19th, 2005 at 8:21 pm e
//பிரபலமான ஒரு தமிழ் வலைத்தளத்தில், ஒருவரின் பெயரை ‘இணையதளபதி’ XXX என்றே குறிப்பிடுவார்கள் .. சீழ் எங்கு வரை பீடித்துள்ளது பாருங்கள்//
ஜோ Says: after publication. e -->November 19th, 2005 at 8:38 pm e
//கணேசன் பைத்தியமாக மிக சிறப்பாக நடித்திருந்தால் (அவர் நன்றாகவே நடித்திருப்பார் ) ‘பைத்திய கணேசன்’ என்றா அழைத்திருப்பார்கள் ?//
இருக்கலாம் .காக்கா ராதாகிருஷ்ணன் கிட்ட தட்ட அப்படித் தான் .கலைஞரைப் போல தந்தைப் பெரியார் பட்டங்கள் வழங்குபவரல்ல .அநேகமாக அவர் பட்டம் வழங்கியது கணேசனுக்கு மட்டும் தான் என நினைக்கிறேன் (வெங்காயம் etc எல்லாம் பட்டங்களில் சேத்தி இல்லை) .அண்ணாவின் ‘சிவாஜி கண்ட இந்து சாம்ராஜ்யம்’ நாடகத்தில் எம்.ஜி.ஆர் (அப்போது அவர் சினிமா நடிகர்) நடிக்க இருந்து கடைசி நேரத்தில் மறுத்து விட ,வேறு வழியின்றி கணேசனை நடிக்க வைக்க ,நாடகம் ,சினிமா இவற்றை விரும்பாத பெரியார் அண்ணாவுக்காக வேண்டா வெறுப்போடு நாடகத்துக்கு தலைமை தாங்க வந்தார் .புதிய பையன் ஒருவன் சிவாஜியாக அற்புதமாக நடித்தது அவரை கவர்ந்தது .நாடக முடிவில் அவனை மேடைக்கு அழைத்து பேரைக் கேட்க ,’கணேசன்’ என்று சொல்லப்பட ,’தம்பி சிவாஜியாவே மாறிட்ட மாதிரி நடித்தார் .சிவாஜி கணேசன் -னு கூப்பிட்டா கூட தப்பில்லை’-னு சொல்ல அந்த பெயர் நிலைத்தது.
‘நடிகர் திலகம்’ என்ற பெயர் வந்ததற்குக் கூட ஒரு கதை இருக்கு .தேவையென்றால் சொல்லுகிறேன் .
பட்டங்கள் தேவையில்லையென்பதே என் நிலையும் .ஆனால் அது அர்த்ததோடு இருந்தால் ஒன்றும் தவறில்லை . ‘புரட்சி தமிழன்’ சத்தியராஜ் என்று ஒரு பட்டம் .இதற்கு என்ன அர்த்தம் .தமிழர்களிலேயே புரட்சி பண்ணியது சத்தியராஜ் ஒருவர் தான் என்று அர்த்தம் .இது அபத்தம் ! ‘புரட்சிக் கலைஞர்’ ,இது ‘புரட்சி தலைவர்’ ,கலைஞர்’ ரெண்டையும் சேர்த்து ஒரு காம்பினேசன் இதுவரை யாரும் வைக்கல்ல ,அதுனால நம்ம எடுத்துக்குவோம்-னு எடுத்துக்குறது .’உலக நாயகன்’ கமல் ..என்ன இவர் உலகத்துக்கே நாயகனா? இது K.S.ரவிக்குமார் கமலுக்கு பண்ணின அபத்தம் ..ஆனா ‘நடிகர் திலகம்’ அப்படின்னா ,நடிகர்களில் முதன்மையானவர் அப்படின்னு அர்த்தம் .இதுக்கு சிவாஜியத்தவிர பொருத்தமானவர் யாரும் இல்லைன்னு சிவாஜிய பிடிக்காதவங்களே ஒத்துக்குவாங்க .நீங்க விதி விலக்கா இருக்கலாம் .காந்தி ஒண்ணும் மகாத்மா இல்லைன்னு சொல்ல கொஞ்ச பேர் இருப்பாங்க .அதுனால அவரை நாடு அப்படி கூப்பிடாம இருக்குமா?
காந்தி அவரை மகாத்மான்னு அவரே அவருடைய சுயசரிதத்துல கூப்பிடல்லன்னு ஒரு உலக மகா கருத்தை சொல்லியிருக்கீங்க ..சிவாஜி சுய சரிதையில கூட அவர் தன்னை சிவாஜின்னோ ,நடிகர் திலகம் -ன்னோ கூப்பிட்டுக்கல்ல .பல இடத்துல தன்னை ‘முட்டா பய’-ன்னு சொல்லியிருக்கார் .அவ்வலவு தான்.
கலைஞர் பட்டம் கொடுப்பது குறித்து உங்கள் கருத்து எனக்கு உடன்பாடே .தானே தன் தலையில மண் அள்ளி போட்டுகுறது கலைஞர் ராசி .இப்போ ஜெயலலிதாவுக்கு ‘புரட்சித் தலைவி’ பட்டம் வருவதற்கும் அவர் தான் காரணம் .எம்.ஜி.ஆருக்கு ‘புரட்சி நடிகர்’ பட்டம் கொடுத்தது அவர் தான் .அது ‘புரட்சி தலைவர்’ ஆகி இப்போ ‘புரட்சி தலைவி’ல வந்து நிக்குது .வினை விதைத்தவன் வினை அறுப்பான்!
-L-L-D-a-s-u-- Says: after publication. e -->November 19th, 2005 at 8:55 pm e
//. சுய சரிதையில கூட அவர் தன்னை சிவாஜின்னோ ,நடிகர் திலகம் -ன்னோ கூப்பிட்டுக்கல்ல //
அவரது பெயர் திரையில் என்னவென்று இருந்தது என்று சொல்லமுடியுமா? அது தயாரிப்பாளர் (அ) இயக்குனரின் முடிவு என கூறவேண்டாம் ..
//’நடிகர் திலகம்’ அப்படின்னா ,நடிகர்களில் முதன்மையானவர் அப்படின்னு அர்த்தம்//
இவர்தான் முதன்மையானவர் என்பதற்கு என்ன அளவுகோல் .. இதுவரை வேண்டுமானால் , இவர் முதன்மையான நடிகராக இருக்கலாம் .. இனிமேல் ஒருவர் இவரை விட நன்றாக நடித்தால் .. அப்போது ‘ நடிகர் திலகம்’ எனும் பட்டம் கணேசனுக்கு பொருந்தாதே ..
‘கவிப்பேரசர்’ என்ன ‘கவியரசரை’ விட பெரிய கவிஞரா? இதெல்லாம் ஜோக்காக தெரியவில்லை .
-L-L-D-a-s-u-- Says: after publication. e -->November 19th, 2005 at 9:03 pm e
//’தம்பி சிவாஜியாவே மாறிட்ட மாதிரி நடித்தார் .சிவாஜி கணேசன் -னு கூப்பிட்டா கூட தப்பில்லை’-னு சொல்ல அந்த பெயர் நிலைத்தது..//
ஒரு பேச்சுக்கு சொன்னதுதானா அது ..யாராவது உங்களின் ‘ப்ரோக்ராம்’ பார்த்து .. Stroustrup போல ப்ரோக்ராம் எழுதியுள்ளீர்கள் என பாராட்டினால் உடனே உங்கள் பெயரை ‘Stroustrup ஜோ’ என்றா கூறிக்கொள்வீர்கள் ?
தருமி Says: after publication. e -->November 19th, 2005 at 9:04 pm e
சினேகிதி,“nan nambanum enduthan pola Usha 2 tharam pinnotam poturukira.” // திருப்பி திருப்பி சொன்னாலும் பொய் உண்மையாயிருமா, என்ன?
ama yaruku காதில இருந்து புகை?? //தேடுங்கள் கண்டடைவீர்கள்…
ஜோ Says: after publication. e -->November 19th, 2005 at 9:05 pm e
//அது தயாரிப்பாளர் (அ) இயக்குனரின் முடிவு என கூறவேண்டாம் ..//சரி கூறல்ல.
//இவர்தான் முதன்மையானவர் என்பதற்கு என்ன அளவுகோல்//ஒரு அளவு கோலும் கிடையாது .நீங்கள் வெண்டுமென்றால் விஜயையோ ,அஜித்தையோ ‘நடிகர் திலகம்’ என்று கூப்பிட்டு கொள்ளலாம் .அது உங்கள் விருப்பம்.எல்லாம் கருத்து சுதந்திரம் தானே.
//இனிமேல் ஒருவர் இவரை விட நன்றாக நடித்தால் //அது உங்க அளவுகோலைப் பொறுத்தது.தாராளமா உங்க அளவுகோலை வைத்து அளந்து கொள்ளவும்.
//‘கவிப்பேரசர்’ என்ன ‘கவியரசரை’ விட பெரிய கவிஞரா? //அதை ஏற்றுக் கொண்டவர் யாரிடமாவது போய் கேட்கவும்.
//இதெல்லாம் ஜோக்காக தெரியவில்லை . //‘நடிகர் திலகம்’ தவிர நீங்க சொன்ன எல்லா பட்டங்களும் எனக்கும் ஜோக்கா தான் தெரியுது .உங்களுக்கு எவை எவை ஜோக்குண்ணு உங்க அளவுகோல் வச்சு தான் முடிவு பண்ணனும்.நான் என் அளவு கோல் வச்சு பண்ணிக்குறேன்.
ஜோ Says: after publication. e -->November 19th, 2005 at 9:11 pm e
//ஒரு பேச்சுக்கு சொன்னதுதானா அது ..யாராவது உங்களின் ‘ப்ரோக்ராம்’ பார்த்து .. Stroustrup போல ப்ரோக்ராம் எழுதியுள்ளீர்கள் என பாராட்டினால் உடனே உங்கள் பெயரை ‘Stroustrup ஜோ’ என்றா கூறிக்கொள்வீர்கள் ? //
நீங்க வலைப்பதிவுலகுல லாடு லபக்கு தாஸ் தானே?எல்லோரும் உங்கள அப்படித்தானே கூப்புடுறாங்க .உங்க உண்மையான பெயர் எனக்கு தெரியும்ணாலும் நானும் லாடு லபக்கு தாஸ்-ன்னு தான் கூப்பிட்டுடிருக்கேன்.
-L-L-D-a-s-u-- Says: after publication. e -->November 19th, 2005 at 9:16 pm e
இது என்ன என் பட்டப்பெயரா? இணையத்தில் என் identity மறைக்க பயன்படும் ஒரு புனைப்பெயர் . குழலி , தருமி , முகமூடி , பெயரிலி போல .
-L-L-D-a-s-u-- Says: after publication. e -->November 19th, 2005 at 9:19 pm e
//அது தயாரிப்பாளர் (அ) இயக்குனரின் முடிவு என கூறவேண்டாம் ..//சரி கூறல்ல.
//இவர்தான் முதன்மையானவர் என்பதற்கு என்ன அளவுகோல்//ஒரு அளவு கோலும் கிடையாது .நீங்கள் வெண்டுமென்றால் விஜயையோ ,அஜித்தையோ ‘நடிகர் திலகம்’ என்று கூப்பிட்டு கொள்ளலாம் .அது உங்கள் விருப்பம்.எல்லாம் கருத்து சுதந்திரம் தானே.
//இனிமேல் ஒருவர் இவரை விட நன்றாக நடித்தால் //அது உங்க அளவுகோலைப் பொறுத்தது.தாராளமா உங்க அளவுகோலை வைத்து அளந்து கொள்ளவும்.
//‘கவிப்பேரசர்’ என்ன ‘கவியரசரை’ விட பெரிய கவிஞரா? //அதை ஏற்றுக் கொண்டவர் யாரிடமாவது போய் கேட்கவும்.
//இதெல்லாம் ஜோக்காக தெரியவில்லை . //‘நடிகர் திலகம்’ தவிர நீங்க சொன்ன எல்லா பட்டங்களும் எனக்கும் ஜோக்கா தான் தெரியுது .உங்களுக்கு எவை எவை ஜோக்குண்ணு உங்க அளவுகோல் வச்சு தான் முடிவு பண்ணனும்.நான் என் அளவு கோல் வச்சு பண்ணிக்குறேன்.
//
முழு வாதமும் அருமை
ஜோ Says: after publication. e -->November 19th, 2005 at 9:20 pm e
//இது என்ன என் பட்டப்பெயரா? இணையத்தில் என் identity மறைக்க பயன்படும் ஒரு புனைப்பெயர் . குழலி , தருமி , முகமூடி , பெயரிலி போல . //ஒரு பேச்சுக்கு சொன்னதுதானா அது ?எனக்கு அதுல ஒண்ணும் பிரச்சனை இல்லை.
-L-L-D-a-s-u-- Says: after publication. e -->November 19th, 2005 at 9:23 pm e
புனைப்பெயருக்கும் பட்டப்பெயருக்குமுள்ள வித்தியாசம் உண்மையிலேயே உங்களுக்குத் தெரியவில்லையா? ஆச்சரியம்தான் ..
-L-L-D-a-s-u-- Says: after publication. e -->November 19th, 2005 at 9:28 pm e
//ஒரு பேச்சுக்கு சொன்னதுதானா அது ?எனக்கு அதுல ஒண்ணும் பிரச்சனை இல்லை. //
ஜோ Says: after publication. e -->November 19th, 2005 at 9:30 pm e
//புனைப்பெயருக்கும் பட்டப்பெயருக்குமுள்ள வித்தியாசம் உண்மையிலேயே உங்களுக்குத் தெரியவில்லையா? ஆச்சரியம்தான் .. //தெரியுமையா..’வெண்ணிற ஆடை’மூர்த்தி என்ன பட்டப் பெயரா? அவர் முதன் முதலில் நடித்த படத்தின் பெயர் .’குலதெய்வம்’ ராஜகோபால் கூட அப்படித்தான் .அதையும் நீங்கள் புரிந்து கொள்ளுங்கள் .’சிவாஜி’ என்பது கணேசனை உலகுக்கு முதலில் அறிய வைத்த காதாபாத்திரத்தின் பெயர் .மற்றபடி ‘சிவாஜி’ போன்ற மாமன்னன் கணேசன் என்ற அர்த்ததில் வைக்கப்படவில்லை.
தருமி Says: after publication. e -->November 19th, 2005 at 9:38 pm e
Ll Dasu,
இதுவரை வேண்டுமானால் , இவர் முதன்மையான நடிகராக இருக்கலாம் .. // Thank you. அவ்வளவுதான் வேணும்.
இதே மாதிரி, அந்த முண்டாசுக்காரனுக்கு ‘மகாகவி’ன்னு பேரு வச்சிருக்கோம். அதனால, இனிமே யாருமே அவனை ‘முந்த’ முடியாதுன்னா பொருள்?
இன்னைக்கி இது உண்மைன்னு நினைக்கிறதை வைத்து வைக்கப்படும் பட்டங்களில் எல்லாமே ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை; சில மட்டுமே காலத்துக்கும் நிலைத்து நிற்கிறது - மகாகவி, நடிகர் திலகம், Nature Poet - Wordsworth) மாதிரி. என்னடா, ஆங்கிலத்தை உள்ள இழுக்கிறானேன்னு பாக்றீங்களா? இது திராவிடப் பாரம்பரியம் ஒன்றும் இல்லை. பிடிச்சவங்களை ஏத்தி வைக்கிறது மனித குணம். அதில் நிலைச்சு சிக்கிறது கொஞ்சமே. நாம் மட்டுமா Father of Nation-ன்னு காந்திஜியைச் சொல்றோம். ஒவ்வொரு நாட்டுக்கும் ஒரு ஃபாதர்தான். அதுக்காக, ‘மதர்’ எங்கேன்னு கேட்டுகிட்டா இருக்க முடியும்! அப்படி கேட்க ஆரம்பிச்சா, ஆங்கிலத்தில் சொல்ற ஒரு idiom சொல்லணும். hair-splitting exercise..
அதே மாதிரி, உண்மையைச் சொல்லுங்க…உண்மையோ பொய்யோ, உங்கள் ஒருத்தரு கொஞ்சம் ‘ஓஹோ’ன்னு சொன்னா, அல்லது உங்கள் பதிவுக்கு ‘கொன்னுட்டீங்க’ன்னு ஒரு பின்னூட்டம் வந்தால் at least அந்த வினாடியில் மனசு கொஞ்சம் மேல போய் வரலை! ஒருவேளை அப்படி எல்லாம் எனக்குக் கிடையாதுன்னு சொன்னா, ” தலீவா , நீங்க இங்க இருக்க வேண்டிய ஆளே இல்ல″ன்னு சொல்லி …. அப்பீட்.
LLDasu Says: after publication. e -->November 19th, 2005 at 9:40 pm e
//தெரியுமையா..//
அப்படின்னா .. குட் நைட்டுங்க.. ..
தருமி Says: after publication. e -->November 19th, 2005 at 10:42 pm e
குமரன், ராஜன், சுரேஷ்(வந்திருச்சி போல), சங்கரய்யா,குழலி,
அனைவருக்கும் நன்றி
துளசி கோபால் Says: after publication. e -->November 22nd, 2005 at 1:20 am e
??:
இதுவரை நடந்த விவாதங்களைப் படித்தபிறகு
இது ஒரு சோதனை.
தருமி Says: after publication. e -->November 22nd, 2005 at 4:45 pm e
துளசி,என்னங்க இது
எத ‘சோதனை’ங்கிறீங்க?