Friday, May 29, 2020

1099. இடப் பங்கீட்டின் பரிதாப நிலை




*



இதெல்லாம் புரிஞ்சா தானே கோபம் வரும். இந்த OBC பசங்களுக்கு இது துப்புறவாகப் புரியவேயில்லை. இது வெறும் மாடு பிடிக்கும் சண்டையில்லை. அடி வயிற்றில் அடிக்கும் மரண அடி என்பது அவர்கள் மண்டையில் எப்போது ஏறுமோ!




இது ’ஆண்ட சாதி’க்கு மட்டும் வந்ததல்ல. அனைத்து சாதிக்கும் வச்ச ஆப்பு தான் இது. சும்மா சொல்லக் கூடாது ... நல்ல மூளைக்காரர்கள் .. எங்கு கன்னம் வைக்கிறோம் என்பதே நமக்குத் தெரியாமல், இழந்தது என்னவென்றே புரியாமல் இருக்கும் நம்
அத்தனை சாதியினருக்கும் வச்ச ஆப்பு இது.






முதலில் நாம் யாருன்னு இந்த OBC பசங்களுக்குத் தெரிந்தால் நல்லது. அதுவே தெரியாமல் இருக்கிறவங்களுக்கு இந்த மீம்ஸ் சொல்லும் முக்கியமான சேதி போய்ச் சேரவே சேராது.

பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு அவர்களின் ஆசிரியர்களாவது இதைச் சொல்லிக் கொடுக்கலாம். இது எவ்வளவு பெரிய விஷயம் என்று புரியாமால் இருப்பவர்களைப் பார்த்தால் என்னைப் போன்ற கிழவனுக்குக் கோபம் வராமல் என்ன செய்யும்? என் புலம்பலில் இது ஒரு வெகு முக்கியமான புலம்பல்……. வெகு நாட்களாகவே!





*



Sunday, May 24, 2020

1098. நெருக்கடி காலத்தில் அரசியல் பேசக்கூடாதா?






*

நெருக்கடி காலத்தில் அரசியல் பேசக்கூடாதா?

(தமிழ் இந்துவில் சமஸ் எழுதிய நடுப்பக்கக் கட்டுரை)


நாட்டிலேயே பெரிய கலிபோர்னியா மாநிலத்தின் ஆளுநர் கரோனா களேபரரங்கள் இடையே கலிபோர்னியாவை ”தேசிய அரசு” என்று அறிவித்தார். அரசு மாநிலங்களுக்கு மருத்துவ சாதனங்கள் அனுப்புவதில் காட்டிய மெத்தனத்தை சாடியவர் நேரடியாகவே வெளிநாடுகளில் இருந்து அவற்றை தடுக்க ஒப்பந்தங்களுக்கு உத்தரவிட்டார். அதற்கான முன்னோட்டமாக இந்த அறிவிப்பை வெளியிட்டார். பொதுவாக ஒரு மாநிலம் தன்னை தேசிய அரசாக அறிவித்து கொண்டால் அதை உள்நாட்டு போருக்கான அறிவிப்பாகத்தான் கருத வேண்டும். ஆனால் இந்த அறிவிப்பு அப்படி பார்க்கப்படவில்லை. மாநில மக்களின் நலன் கருதி எடுக்க வேண்டிய நடவடிக்கைகளை சுதந்திரமாக விரைவாக எடுக்க வேண்டிய அவசியத்தை சுட்டும் பிரகடனமாக சரியாகவே புரிந்து கொள்ளப்பட்டது.
மற்ற மாநிலங்களுக்கு எப்படியோ தமிழ் மாநிலத்திற்கு வர வேண்டிய நிதிகள் எதுவும் சரியாக கொடுக்கப்படவில்லை; மருத்துவ சாதனங்கள் ஒழுங்காக அளிக்கப்படவில்லை; இன்னும் பல இல்லை.. இல்லைகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. இவைகளை எல்லாம் சரிக் கட்டுவதற்கு நாமும் பேசாமல் ஒரு தேசிய அரசு அறிவித்தால் என்ன?
தமிழ்நாடு தேசிய அரசு வாழ்க!!









Monday, May 18, 2020

1097. TRANCE கிளப்பி விட்ட தூசி





*

TRANCE கிளப்பி விட்ட தூசி 



 ஒரு வழியா TRANCE படத்தைப் பார்த்தாச்சு. துணிச்சலாக இப்படி ஒரு படம் எடுத்தமைக்கும், நன்றாக எடுத்திருப்பதற்காகவும் பாராட்டுகளும், வாழ்த்துகளும். பழைய நினைவுகளும் அனுபவங்களும் இந்தப் படத்தைப் பார்த்த பிறகு தொடர்ந்து வருகின்றன

. தூசி …1 

ஏறத்தாழ 40 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஒரு விஷயம். பக்கத்து வீட்டில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவி. கௌசல்யா. பள்ளிக்குச் சென்று கொண்டிருந்த பெண் திடீரென நடக்க முடியாமல் வீட்டில் படுத்த படுக்கையானாள். முதுகுத்தண்டில் வீக்கம் என்றார்கள். என் வீட்டில் நாங்கள் ஒருவேளை அவளுக்கு கேன்சராக இருக்குமோ என்று சந்தேகப்பட்டுக் கொண்டிருந்தோம். அதன் பின்னால் முற்றிலுமாக நடக்க முடியாமல் போனது . அப்போது ஒரு கிறிஸ்துவ பிரசங்கியார் அவர் பெயர் எல்லாம் எனக்கு ஞாபகமில்லை.(ஒரு வேளை டி ஜி எஸ் தினகரனாக இருக்கலாம்.) அவரது கூட்டத்திற்கு இந்தப் பெண்ணை அழைத்துச் சென்றார்கள்.

நான் அன்று வீட்டுக்கு வந்த போது என் மனைவி பயங்கர சந்தோஷத்துடன் கௌசல்யா நடந்துவிட்டாள் என்றாள். எப்படி என்றேன். கூட்டத்திற்கு போயிருக்கிறாள். சுகம் இல்லாதவர்கள் நடக்க முடியாதவர்கள் நடந்து வாருங்கள் என்று சொன்னவுடன் மேடைக்குப் போட்டிருந்த பாலம் போன்ற அமைப்பில் 20.. 30 அடிக்கு மேல் நடந்து மேடைக்கு சென்று சாட்சியம் சொல்லி இருக்கிறாள் என்றார்கள், என்னால் நம்பவே முடியவில்லை அடுத்த நாள் காலை அடுத்த வீட்டில் அழுகை ஒலி கேட்டது. விரைந்து ஓடிப் போய் பார்த்தோம். அந்தப்பெண் கௌசல்யா ஆர்வத்தின் காரணமாக காலை நேரத்திலேயே எழுந்து நடக்க முயற்சித்திருக்கிறாள். அவளால் எழுந்திருக்க முடியவில்லை. சோகத்தில் அழத்தொடங்கினாள். அழுகை எல்லோரையும் பற்றிக்கொண்டது. விரைவில் அந்தப் பெண்ணும் இறந்து போனாள்.

இது எப்படி நடந்தது என்ற கேள்விக்குறி எனக்கு. அப்போதும் தெரியவில்லை; இப்போதும் தெரியவில்லை. மாஸ் ஹிப்னாடிஸம், அது .. இது .. என்று ஏதேதோ நினைத்துப் பார்த்தேன். அவ்வளவே.

 *****

 தூசி … 2

இரண்டாவது அனுபவம் என் சொந்த அனுபவம். 1990ல் முதல்முறையாக ஹார்ட் அட்டாக் வந்து மருத்துவமனை வாசம்முடிந்து மருத்துவ விடுப்பில் வீட்டில் இருந்த நேரம். அப்போது நான் முழுமையான இறை மறுப்பாளனாக ஆகவில்லை; அந்தப் பாதையில் இருந்தேன். அவ்வளவே. கத்தோலிக்க மதத்தில் ஒரு பாதிரியார். அவர் பெயர் பெர்க்மான்ஸ். வேடிக்கை பார்ப்பதற்காக புறப்பட்ட ஒரு நண்பர் என்னையும் அழைத்துச் சென்றார். என்னால் அந்தக் கூட்டத்தில் 30 நிமிடங்கள் கூட இருக்க முடியவில்லை. அவர் பேச ஆரம்பிப்பதற்கு முன்பே மக்கள் நிலைதடுமாறி இருந்தது போலவே தோன்றினார்கள். ஏறக்குறைய இந்த காட்சியை ஒரு பத்து நிமிடம் பார்த்துக் கொண்டிருந்தேன். பிறகு பெர்க்மான்ஸ் பேச ஆரம்பித்தார். மயிர்க்கூச்செறியும் என்பார்கள்… goosebumps என்பார்கள். அந்த உணர்வு எனக்கும் தோன்ற ஆரம்பித்தது . ஏனென்றால் பேச ஆரம்பித்த பெர்க்மான்ஸ் சாதாரண குரலில் பேச வில்லை. தில்லானா மோகனாம்பாள் சிவாஜி கணேசன் சொல்வாரே நாபிக்கமலத்தில் இருந்து என்று … அதே போல் இவரும் குரல் எழுப்பி மெல்ல - சரியாகச் சொல்ல வேண்டுமென்றால் ஒரு பில்டப் கொடுத்து - கூட்டத்தைப் பார்த்து பேச ஆரம்பித்தார். அடிவயிற்றிலிருந்து ஆரம்பித்து அவருடைய குரல் மெல்லியதாக ஒடுங்கி ஆரம்பித்தது. Crescendo என்பார்களே அதைப் போல் குரல் மெல்ல கொஞ்சம் கொஞ்சமாக உயர்ந்த பிச்சிற்குப் போனது. என் மனதிற்கு அது பிடிக்கவில்லை. ஆனால் அதோடு நின்றிருந்தால் பரவாயில்லை. வயிற்றுக்குள் இல்லாமல் நெஞ்சுக்குள் பட்டாம் பூச்சிகள் படபடத்தன. ஏனிப்படி ஆனது என்று தெரியவில்லை . அந்த குரலில் ஏதோ வசியம் இருந்ததா? அப்போதும் தெரியவில்லை; இப்போதும் தெரியவில்லை.

 **** 

தூசி .. 3 

 எல்லோருக்கும் தெரிந்த நிகழ்வு ஒன்று. இந்துக் கோவில் ஒன்றில் கர்ப்பகிரகத்தில் அர்ச்சகர் ஒருவர்… அவர் ஒரு பெண்ணோடு கொண்ட பாலியல் நிகழ்ச்சியை அவரே வீடியோ எடுத்து, அது வெளிவந்து அவர் மாட்டிக்கொண்டார் என்ற செய்தி எல்லோருக்குமே தெரியும். இவரைப் பற்றி ஏன் இங்கு சொல்கிறேன் என்றால் … கடைசியாக அதற்கு வருவோம்.

 **** 

தூசி … 4 

டி ஜி எஸ் தினகரன் என்று ஒரு கிறிஸ்தவ பிரச்சார பீரங்கி. ஏறத்தாழ எல்லோரும் அவரைத் தெரிந்து வைத்திருப்பார்கள் என்று நினைக்கிறேன். அவரைப் பற்றிய ஒரு சிறு செய்தி. ஏறத்தாழ கிறிஸ்தவ பிரச்சாரத்தில் முதல்முதல் மிகவும் ஆழமாக காலூன்றிய மனிதர் இவர்தான் என்று நினைக்கிறேன். பேசினார்.. கூட்டம் சேர்த்தார் …. பணம் சேர்த்தார். அதெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும். ஆனால் முடிந்தால் இந்த கட்டுரையை வாசித்த பிறகாவது யூடியூப் சென்று Dinakaran in heaven என்று போட்டுப் பாருங்கள். அவர் மோட்சத்திற்கு செல்வது போன்ற காணொளிகள் நிறைய இருக்கின்றன. Very very interesting. don't ever miss those videos. இவரைப் பற்றியும் பின்னால் பேசுவோம்.

 *************

 படம் பார்த்ததும் இதுபோன்ற நினைவுகள் அடுத்த எடுத்து ஒவ்வொன்றாக நினைவுக்கு வர ஆரம்பித்தன. வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்ற ஒரே வெறியோடு இருந்த ஒரு இளைஞனை ஒரு கார்ப்பரேட் குழு அவனை ஒரு கிறிஸ்தவ பிரச்சார பீரங்கி ஆக்கி பணத்தை அள்ளிக் கட்டுகிறார்கள். மேலும் மேலும் செல்வம் குவிகிறது. அதன்பின் வழக்கமாக நமது சினிமாக்களில் வருவதுபோல் ஹீரோவுக்கும் வில்லனுக்கும் பிரச்சனைகள். ஹீரோவை கொல்ல வில்லன்கள் திட்டமிடுகிறார்கள். அதே நேரத்தில் இன்னொரு பிரச்சார பீரங்கியை வில்லன்கள் தயார் செய்து கொண்டிருக்கிறார்கள். ஊக்க மருந்துகளைத் தொடர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்த நமது ஹீரோவிற்கு நிறைய சைட் எஃபெக்ட்ஸ். அதனாலேயே அவர் உண்மையைக் கூறிய பிறகும் இரண்டு வருட மன நல மருத்துவம் நடந்து அவர் சுதந்திர பறவை ஆகிவிடுகிறார்.

ஏறத்தாழ ஹீரோ மட்டுமே இந்த படத்தை தாங்கிப் பிடித்திருக்கிறார் மற்ற நட்சத்திரங்கள் வந்துபோகும். அவ்வளவே. ஆனால் கதாநாயகன் பாசில் மிகப்பொருத்தமாக நடித்திருக்கிறார். அது அவர் ஆவேசம் வந்தது போல் கத்தும் காட்சிகளெல்லாம் உண்மையான பிரசங்கிகள் செய்வது போலவே எனக்கு தோன்றியது. பல காணொளிகள் பார்த்திருக்கிறோமே அதிலும் இதுபோல்தான் ஆடுவார்கள்; குதிப்பார்கள்; மற்றவர்களைத் தள்ளி விடுவார்கள். படங்களில் அப்படியே எடுத்திருக்கிறார்கள்.

 படத்தைப் பற்றிச் சொல்வதற்கு இதைவிட அதிகமாக ஏதும் இல்லை. ஆனால் ஒரே ஒரு பிரச்சனை. எப்படி இந்த படத்தை எடுத்தார்கள்? எப்படி கிறிஸ்தவர்கள் நிறைய இருக்கும் மலையாள நாட்டில் இந்த படம் எந்தவித எதிர்ப்புமின்றி நடந்தது? இதே படம் தமிழில் எடுத்திருந்தால் என்ன ஆகியிருக்கும் போன்ற கேள்விகள் மட்டுமே நம்முன் நிற்கின்றன. கேரளாவில் எந்த எதிர்ப்பும் வராதது ஒரு பெரிய ஆச்சரியம்தான்

*****

 இந்தப் படத்தில் வருவது போல் கிறித்துவ மதத்தின் ஒரு பகுதியான பெந்தகோஸ்தே என்ற சபையினர் தான் அதிகமாக இதைச் செய்வார்கள்; ஆனால் பெர்க்மான்ஸ் ஒரு கத்தோலிக்க பாதிரி; டி ஜி எஸ் தினகரன் தென்னிந்திய கிறித்துவ திருச்சபைக்காரர். நான் முன்பே சொன்னது போல் பெர்க்மான்ஸ் கத்தோலிக்கப் பாதிரியாராக இருந்தார், அவர் கூட்டம் போடுவது .. உயர்நிலைப் பாதிரிமார்களை மதிப்பதில்லை … மாதாவைக் கும்பிடுவதில் மாற்றுக் கருத்து … பணம் திரட்டி ஜெபத் தோட்டம் நிறுவியது … இப்படி பல காரணங்களைச் சொல்லி அவரை ஒதுக்கி வைத்தார்கள். ஆனால் அவர் இன்றும் கத்தோலிக்க கிறித்துவப் பாதிரியாகத் தானிருக்கிறார். அனைத்துப் பிரிவினரும் நடத்துகிறார்கள். அதிகமாக நடத்துவது பெந்தகோஸ்தே என்ற சபையினர் தான். Hardcore Christians!

 **** 

எனக்கு உள்ள சில ஆச்சரியங்களை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்: இந்தப் பிரச்சார பீரங்கிகளுக்குத் தாங்கள் பேசுவதில் எந்த அளவு நம்பிக்கை இருக்கும் என்ற கேள்வி என் மனதை உறுத்திக் கொண்டே இருக்கும். நிச்சயமாக ஆரம்பிக்கும் பொழுது அவர்கள் கடவுள் நம்பிக்கையோடு தங்கள் “ தொழிலை” ஆரம்பித்திருக்கலாம். அதன் பின் அதனை “வியாபாரம்” என்ற நிலைக்கு எடுத்துச் செல்லும் பொழுது அவர்களுக்கு நிச்சயமாக கடவுள் நம்பிக்கை இருக்கவே இருக்காது என்பதுதான் எனது தீவிர நம்பிக்கை. 

ஏனென்றால் மேலே சொன்ன ஒரு இந்து அர்ச்சகர் கோவிலின் கர்ப்பகிரகத்திலேயே தனது திருவிளையாடலை நடத்தியிருக்கிறார். நிச்சயமாக கடவுள் நம்பிக்கை இருக்கும் ஒரு மனிதருக்கு அவ்வாறு செய்ய மனம் வரவே வராது. நம்பிக்கை இல்லாதவர்களுக்கும் கூட வராது. ஆனால் அவருக்கு வந்திருக்கிறது என்றால் அவரிடம் தெய்வ பயம் மட்டுமல்ல தெய்வ நம்பிக்கையும் போய்விட்டது என்றுதான் பொருள்.

 இதைப்போலவே தினகரன். இவரும் பக்தியோடு ஆரம்பித்திருக்கலாம். நம்பிக்கையோடு கூட்டங்கள் நடத்தி இருக்கலாம். ஆனால் பின்னாளில் தான் வாரம் ஒருமுறை இயேசு கிறிஸ்துவை நேரில் பார்க்கிறேன் என்றெல்லாம் சொல்லும் பொழுது நிச்சயமாக அப்படி ஒன்று நடந்திருக்க வாய்ப்பே இல்லை என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் துணிந்து அவர் சொல்லுகிறார் என்றால் அவருக்கு கடவுள் மீது நம்பிக்கை இல்லை என்பது வெளிச்சம்போட்டுத் தெரிகிறது. கடவுள் நம்பிக்கை இருந்தால் கடவுளை நேரில் வாராவாரம் பார்த்துக் கொண்டிருக்கிறேன் என்று யாரும் அவ்வளவு எளிதாகப் பொய் சொல்லிவிட முடியாது.

 இந்தப் படத்தில் ஹீரோவிற்கும், அவர் பணத்திற்கும் அவர் பின்னாலிருக்கும் கார்ப்பரேட் ஆட்களால் ஆபத்து வருகிறது. ஆனால் உண்மையான கிருத்துவ பீரங்கி களுக்கு இந்த பிரச்சினையே வராது ஏனென்றால் அவர்கள் கார்ப்பரேட்டுகளின் கைக்கூலிகளாக இருப்பதில்லை. அவர்களே கார்ப்பரேட் ஆக மாறி விடுகிறார்கள். தங்களைச் சுற்றி தங்கள் குடும்பத்தை மட்டுமே வைத்து தங்கள் சொத்து வெளியே எங்கேயும் போகாத படி பாதுகாப்பாக வைத்துக் கொள்கிறார்கள். அப்பா .. அதன்பின் அவரது மனைவி.. பின் மகன்.. மருமகள் .. பேரன் பேத்திகள் … கிறித்துவ போதகர்கள் நல்ல அறிவாளிகள்! 


படத்தில் ஒரு காட்சி வரும். எப்படி இவ்வளவு பணம் சேர்த்தீர்கள் என்று ஹீரோவைக் கேட்பார்கள். ஆனால் நிஜமாக இந்த ‘சாமிக் கடவுள்கள்’ காசு சேர்ப்பது ஏன் பக்த கோடிகளுக்குத் தெரிவதுமில்லை; தெரிந்தாலும் கண்டு கொள்வதுமில்லை. ஏசுவின் பீரங்கிகளை விட இந்து பீரங்கிகள் கொஞ்சம் பரவாயில்லை. பாபாவும், மேல்மருவத்தூரும் சொத்து சேகரித்தாலும் மக்களுக்கென்று மருத்துவ மனைகள், கல்லூரிகள் என்று ஏதோ செய்கிறார்கள். கிறித்துவப் பீரங்கிகள் யாரும் இப்படி ஏதும் ‘தர்ம காரியங்கள்’ இதுவரை செய்ததாகத் தெரியவில்லை.


*
டி ஜி எஸ் தினகரன்  தான் அடிக்கடி செல்லும் மோட்சம் (??) பற்றி ....

https://www.youtube.com/watch?v=m-WUBu4iDiY&feature=youtu.be

***

Funny Christian Missionary trying to convert people to Christianity through fraud in Kerala

https://www.youtube.com/watch?v=Fu9gfDaBa-0



 *

Thursday, May 14, 2020

1096. யூதர்களின் இயேசுவும் பவுலின் கிறிஸ்துவும் ...4




*

ஏனைய பதிவுகள் ….




                                                             செயின்ட் பவுல்

                                                      பைபிளின் பழைய ஏற்பாடு

 பைபிள் ஒரு வரலாற்று நூலாகும். ( எனக்கு இதில் உடன்பாடு இல்லை.  எந்த ஆண்டில் யாரால் எப்போது எப்படி நடந்தது போன்ற அனைத்து விளக்கங்களும்  வரலாற்றில் இருக்க வேண்டும்.  பைபிளில் அவ்வாறு எதுவும் இல்லை என்பது என் கருத்து.  சில இடங்களில் பழைய மன்னர்களின் பெயர்கள் இருக்கலாம்.  அவை மட்டுமே பைபிளை ஒரு வரலாற்று நூலாக ஆக்காது என்று நினைக்கிறேன்.) 

‘ இஸ்ரேலியர்’  எனப்பட்ட ஓரின மக்கள் 12 ஜாதிகளாக வகைப்படுத்தப்பட்டு இருந்தனர் அவர்கள் தொடக்க காலத்தில் இஸ்ரேலியர்கள் எனவும் பின்னர் யூதர்கள் எனவும் பைபிள் அழைக்கிறது.  கடவுள் யெஹோவா என அழைக்கப்பட்டார்.

 இந்த கடவுள் இஸ்ரேலிய மக்கள் தமக்குரிய ’சொந்த மக்களாக’ (The Chosen Pepple) தேர்வு செய்து அவர்களோடு வாழ்ந்து வந்ததாக பைபிள் அறிவிக்கிறது.(17)
46 புத்தகங்கள் பழைய ஏற்பாட்டில் உள்ளன.  அவற்றுள் 7 புத்தகங்களை பிரிவு கிறிஸ்தவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. எனவே அவர்களுக்கு பழைய ஏற்பாட்டு நூல்கள் 39 மட்டுமே.
 புதிய ஏற்பாட்டில் 27 புத்தகங்கள் உள்ளன. அனைத்துப் பிரிவு கிறிஸ்தவர்களும் ஏற்றுக் கொண்டுள்ளனர்.

கிமு1975  வாக்கில் மெசபடோமியா பள்ளத்தாக்கு யாக்கோபு (Jacob) எனப்பட்ட இஸ்ரவேல் (Israrel) வாழ்ந்து கொண்டிருந்தார். ( இந்த ஆண்டை இவ்வளவு குறிப்பாக எழுதுவதற்கான வரலாற்று ஆதாரங்கள் கிடைத்தால் மகிழ்ச்சி.) ..
  இவர் எகிப்து நாட்டில் குடியேறினார்.  அவரது 12 மகன்களும் இஸ்ரேலிய ஜாதிகளின் குலமுதல்வர்கள் (Patriarchs) என்று அழைக்கப்பட்டனர். 
 இதிலிருந்து 75 பேர் எகிப்திற்கு சென்று அடிமைகளாக  430 ஆண்டுகள் (??) வாழ்ந்தார்கள். 
 அவர்களின் எண்ணிக்கை பெருகி ஆண்கள் மட்டும் ஆறு லட்சத்தை விட அதிகம்.(எண்ணிக்கைக் கணக்கு உதைக்குமென்று தெரிகிறது. !!) (18)
கிமு1500  வாக்கில் இஸ்ரேலிய இனத்தில் மோசே  என்ற  ஆண் குழந்தை பிறந்தது.

இந்த காலத்தில் எல்லோருக்கும் பொதுவான கடவுள் என ஒருவரும் இருக்கவில்லை. …  இஸ்ரேலியர்கள் புதிதாக உருவாகிய இனம் என்பதால் அவர்களுக்கு உரிய கடவுள் என அதுவரை எவரும் அறியப்படவில்லை.(19)

“ ஒரு கடவுள் மோசேயை சந்தித்ததாகவும் இஸ்ரயேலரின் விடுதலைக்காக அவர் பாடுபடப் போவதாகவும் எனவே அனைத்து இஸ்ரேலியர்களும் மோசே சொல்கிற படி கேட்டு நடந்து கொள்ள வேண்டும் என்று மோசேயின் சகோதரர் ஆரோன் அறிவித்தார். (யாத்ராகமம்4:29-30)
இஸ்ரேலிய மக்களின் மூதாதையர் ஆகிய ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு ஆகியோரின் கடவுள் என்பதே அவருடைய பெயர் என கடவுள் அறிவிக்கிறார்(3:15)  (20)

 இஸ்ரவேலுடைய கடவுளாக (Triabl God) மோசே அவர்களுக்கு அக்கடவுளை அறிமுகப்படுத்தினார். ( கடவுளை அறிமுகப்படுத்துகிறார். இதைவிட கடவுள் மோசேயை அறிமுகப்படுத்தி இருந்தால் நல்ல யோசனையாக எனக்கு தெரிகிறது!!)

 பைபிளின் கடவுள் கி.மு.4000 வாக்கில் தோன்றியதாகப் பேசப்படுகிறது.  (அறிவியலோடு நாம் பேசும் பரிணாமம், fossil study, geneology, human evolution, archaeology .. என்ற எதுவும் இந்த ஆண்டுக் கணக்கை ஒத்துக்கொள்ளாது.)  அப்போதுதான் ஆதாம் படைக்கப்படுகிறார்..  பின் நோவா.  அதன்பின் 9ஆவது தலைமுறையில்  ஆபிரகாம்.   அடுத்து 42 ம் தலைமுறையில் இயேசு.  ஆதாம் முதல் இயேசு வரைக்கும் 60 தலைமுறைகள். (ந்த 60 தலைமுறைகளையும், பைபிளில் சொல்லப்பட்ட பலரின் வயதையும் வைத்து ஆதாம் பிறந்த நாள், கிழமை , நேரம் எல்லாம் குறிக்கும் தீவிரக் கிறித்துவர்களும் உண்டு.)

 பைபிளின் கடவுள் மோசேயின் காலத்தைச் சார்ந்தவர் தான் என்பதற்கான சான்றுகள் பைபிளில் உள்ளன. (21)

யாத்ராகமம் 5:2 -  இஸ்ரவேலர்களின் கடவுள் பற்றி எகிப்திய மன்னன் அறிந்திருக்கவில்லை. அந்த அளவிற்கு இஸ்ரேலின் கடவுள் அனைவருக்கும் புதியவர்.
( எகிப்திய மன்னன் விடுதலை தராததால்)   மோசே கடவுளிடம் மீண்டும் வந்து தன் குறையைப் பற்றி பேசினார். உடனே கடவுள், “ உங்களை நான் என் மக்களாக தேர்ந்தெடுப்பேன் உங்களுக்கு கடவுளாக இருப்பேன்’  என்கிறார். (யாத் 6:7)  (22)

உபாகமம் - இணைச்சட்டம் 27:9, 10 - இந்த வசனங்கள் கூறப்பட்ட நாளில் இருந்துதான் இஸ்ரேலியர்கள் அந்த கடவுளுடைய மக்களினம் ஆகியிருப்பதாக பைபிள் அறிவிக்கிறது. 

கடவுளுக்கு சில குணங்கள் இருந்ததாக மோசே அறிவிக்கிறார்.  கோபம், பொறாமை, பழிவாங்குதல்,  பாரபட்சம் காட்டுதல் முதலியன அவருடைய குணங்களாக இருந்தன என்று பைபிள் அறிவிக்கிறது. (உபாகமம் - இணைச்சட்டம் 9:8, மற்றும் 6:14,15, ஏசயா 35:4, யாத்ராகமம் - விடுதலைப் பயணம் 11:7).புரோட்டஸ்டண்ட்  மற்றும் பொது  மொழிபெயர்ப்பில் ’பொறாமை’  என்ற சொல் தவிர்க்கப்பட்டுள்ளது. ஆனால் ஆங்கில மொழிபெயர்ப்பில் ‘a jealous god’ (Deuteronomy 6:14,15 in Catholic edition)  என்று சொல்லப்பட்டுள்ளது .

மோசே தம்மையும் தம் சகோதரர் ஆரோனையும் முன்னிலைப்படுத்தி எகிப்திய மன்னன் பாரவோனிடம் சேர்ந்து தங்கள் விடுதலைக்கான கோரிக்கையை வைத்தார். முதலில் மன்னன் மறுத்தாலும் இறுதியில் அவர்கள் வெளியேறுவதற்கு அனுமதித்தார். கிமு 1446 எகிப்தை விட்டு இஸ்ரேலியர்கள் வெளியேறினார்கள். இதிலிருந்து வெளியேறும் போது பிற ஜாதியினராகிய எகிப்தியர்களைக் கொள்ளையடித்துச் செல்லுமாறு ’தம்  பிள்ளைகளாகிய இஸ்ரவேலர்களுக்கு அவர்களுடைய கடவுள் உத்தரவிட்டார். (யாத்ராகமம் - விடுதலைப் பயணம் 12:35,36. 

இப்பொழுது நீங்கள் என் வாக்கை உள்ளபடி கேட்டு என் உடன்படிக்கையை கைக் கொள்வீர்களானால்  சகல ஜனங்களும் நீங்களே எனக்கு சொந்த சம்பத்து ஆகி இருப்பீர்கள்;  பூமி எல்லாம் என்னுடையது. (யாத்ராகமம் - விடுதலைப் பயணம் 19:5)

நான் இஸ்ரயேல் மக்களிடையே குடியிருப்பேன் அவர்களுக்கு கடவுளாய் இருப்பேன். யாத்ராகமம் - விடுதலைப் பயணம் 29:45 ,46

புறஜாதியாரை- gentiles - தம்முடைய எதிரிகளாக நடத்த வேண்டும் என்று தம் பிள்ளைகளுக்கு பைபிளில் கடவுள் உத்தரவிட்டார்.  பிற சாதியினருடன் உடன்படிக்கை எதுவும் செய்யக்கூடாது;  பிற ஜாதி பெண்களை திருமணம் செய்யக்கூடாது‘  பிற ஜாதியினரை நாடுகளோ அல்லது நல்லுறவுடன் அவர்களோடு வாழ்வு கூடாது;  தங்களுக்கு அடிமைகள் தேவைப்பட்டால் அவர்களிடமிருந்து தான்  இஸ்ரேலியர்கள் பெற்றுக்கொள்ளவேண்டும். பிற சாதியினருடன் கலந்து வாழ்ந்தால் இஸ்ரேலிய சமூகம் தீட்டுப்பட்டு விடும். யாத்ராகமம் - விடுதலைப் பயணம் 34:15, உபாகமம் - இணைச்சட்டம் 7:1-5, லேவியர் 25:42-45; எஸ்றா 9:11-15. இவ்வாறு கூறி  ஜாதி மீது தீண்டாமையை அவர் திணித்தார். (what a ‘separatist’ god!!

பைபிள் மொழிபெயர்க்கப்பட்ட போது அதன் கருத்துக்களை தங்கள் விருப்பம் போல் மொழிபெயர்ப்பாளர்கள் சிதைத்து எழுதினர். (28)

ஒரு சான்று:
” நம் கடவுள் அநீதிக்கு பழிவாங்கும் நாளை அறிவிக்கவும் , துயருற்று  அழுவோர்க்கு ஆறுதல் கூறவும் (எசையா 61:2) எசையா தீர்க்கதரிசியை கடவுள் தேர்ந்தெடுத்து அனுப்பி வைத்ததாக தகவல் தெரிகிறது. அவ்வாறு பழிவாங்கும் விதமாக வரும்போது புறஜாதியார் கொள்ளையடிப்பது பற்றியும் ஒரு தகவலை கூறுகிறார். இத்தகவலை பெரும்பாலான மொழிபெயர்ப்பாளர்கள் இருட்டடிப்பு செய்து மறைத்து விடுகின்றனர். அதாவது உண்மையில் இஸ்ரேலியர்களை பற்றிய பழைய ஏற்பாட்டு எசையா எழுதும்போது,

“ நீங்களோ ஆண்டவரின் குருக்கள் என்று அழைக்கப்படுவீர்கள். பிற இனத்தாரின் செல்வத்தைக் கொண்டு நீங்கள்  உண்பீர்கள். அவர்களின் சொத்தில் நீங்கள் பெருமை பாராட்டுவீர்கள். ( எசையா 61:6 பொது மொழிபெயர்ப்பு) 

என்று கூறுகிறார்.  கத்தோலிக்க மொழிபெயர்ப்பும் இதே தகவலைத் தருகிறது ஏனைய ஆங்கில மொழிபெயர்ப்புகளும், புரோட்டஸ்டண்ட் தமிழ் மொழி பெயர்ப்புகளும் ’புறஜாதியார் சொத்துக்களை இஸ்ரயேலர்களால்  கொள்ளையடிக்கப்படும் என்ற தகவலைப் பதிவு செய்யவில்லை

 இவ்வாறு பைபிளின் கடவுளுக்கு இழுக்கு வராமல் பைபிள் மொழிபெயர்ப்பாளர்கள் அவரைப் பாதுகாக்கிறார்கள்.(30)

எகிப்தை விட்டு வெளியே வந்தபின்னர் பின்னர்தான் மோசே தன்னுடைய ஐந்து நூல்களையும் எழுதத் தொடங்கியிருக்க வேண்டும்.

மோசேதான் நூல் எழுதினாரா?
 (3500 ஆண்டுகளுக்கு முந்திய காலம் மேசேயின் காலம் என்கிறார்கள். அப்போது எழுத்து வடிவங்கள் வந்து விட்டனவா? புதிய ஏற்பாடுகளின் ஆசிரியர்களே யார் யாரென்பது தெரியவில்லை என்கிறார்கள் வரலாற்றாசிரியர்கள். ஆனால் பழைய ஏற்பாடு மோசே எழுதியது என்பதை எவ்வாறு ஒத்துக்கொள்வது?) (31)

  நூலின் ஆசிரியர் ஆதாம்-ஏவாள் அவர்களின் குழந்தைகள் என்பவைகளைப் பற்றி பேசுகிறார்.  கடவுள் காயினைப் பிரித்து விடுகிறார் அப்போது அவன், “ என்னை காண்கிற எவனும் என்னைக் கொல்வானே” என்று கூறுகிறார். அவன் வேறு யாரைப் பற்றி பயப்பட்டான்? அப்படியெனில் பைபிளின்  கடவுள் படைத்த உலகத்தையும் மக்களையும் தவிர வேறு மக்களும் அப்போது இருந்திருக்கிறார்கள் என்பதை அறிகிறோம்.

 வேறு பெண்கள் இல்லாத நிலையில் நோது தேசம் சென்றதும் காயினுக்குப் பெண் கிடைத்து இருக்கிறது.  எனவே கர்த்தர் படைத்த உலகத்தைவிட நோ தேசம் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே படைக்கப்பட்டது. எனில் நோக்கி தேசத்தை படைத்த கடவுள், பைபிளின் கடவுளை விட மிகவும் மூத்தவர்.(36)

 ஹமுராபி  என்னும் பாபிலோனிய மன்னர் தன்னுடைய சட்டங்களின் தொகுதிகளால் மிகவும் பெயர் பெற்றவர் ஆவார். பைபிளில் முக்கியமானதாக கருதப்படும் ’கண்ணுக்குக் கண்; பல்லுக்குப் பல்’ என்பது  ஹமுராபியின் சட்டம் என அறிகிறோம்.  ஹமுராபியின் காலம் கிமு 1772 - 1750 ஆகும்.  அதாவது அவர் மோசேக்கும் 280 ஆண்டுகளுக்கு முந்தையவர். அவரை  பைபிள் நன்கு அறிந்திருந்ததாகத்  தெரிவிக்கிறது. (ஆதியாகமம் - தொடக்க நூல் 14:1

 ஹமுராபி மன்னர், தன்னுடைய கடவுளாகிய ஷமாஷ் என்பவர் சட்டங்களின் தொகுதியைத் தம்மிடம் வழங்கியதாகக் கூறிக்கொண்டார்.  அதே வழியைப் பின்பற்றி தம்முடைய கடவுளிடம் சட்டத்  தொகுதிகளை வழங்கியதாக மோசேயும் கூறிக்கொண்டார். (36)

                                                                              தொடரும்…..

                                                            











*