Saturday, December 17, 2011

543. நானும், photography-யும் ... 4





*
தொடர் பதிவுகள்: 
......... 1,
......... 2,
......... 3,
......... 4

*
முதலில் கலந்து கொண்ட போட்டியில் முதல் பரிசு. அதன் பிறகு இரு ஆறுதல் பரிசுகள். அதோடு சரி. தோல்விச் சுவை வந்த பின், அதற்குப் பிறகு அதிகமாக அனுப்பவும் இல்லை. Madurai Photographic Association  ஒன்று ஆரம்பித்து இரு ஆண்டுகள்  இரு போட்டிகள் நடத்தினோம். பதிவுலகத்தில் நுழைந்ததும் புகைப்படங்களுக்காக ஒரு வலைப்பதிவு ஆரம்பித்தேன். முதலில் வேகமாக படங்களை அதில் சேர்த்துக் கொண்டிருந்தேன். AUTOBIO(PHOTO)GRAPHY என்று சொந்தக் கதை சோகக் கதை ஒன்றையும் எழுதியிருந்தேன். பின் அதிலும் தேக்கம். நல்ல படங்களைக் காணும்போது நாமும் இதுபோல் எடுக்க வேண்டும் என்றெல்லாம் தோன்றும். ஆனாலும் நடைமுறையில் அந்த அளவு படங்கள் எடுக்க முடியாதது சோகம் தான்.ஒரு handycam - பெரிய மகளிடமிருந்து - இருந்தது. ஒரு short film எடுக்க ஆசை. ஆசையோடு நின்று விட்டது.

அதே போல் வேறு சில பொறாமைகள்:

முதலில் பதிவுலகில் பார்த்து வியந்த படங்கள் ஆனந்த். இரண்டு ஆச்சரியங்கள். முதலில் அவர் எடுக்கும் subjects -




அவை எதுவாகவும் இருக்கலாம். தக்காளிப் பழமாக இருக்கலாம். ஒன்றும் கிடைக்கவில்லையெனில் வைத்திருக்கும் லென்ஸ்களில் ஒன்றை எடுத்து, இன்னொரு லென்ஸால் அதைப் படமெடுப்பார். அவரைப் பார்த்து சில படங்களை எடுத்து 'ஏமாந்திருக்கிறேன்'.



இந்தக் கட்டிடத்திற்குக் கிடைத்த lighting மிக அழகு. எடுத்த angle  பிரமாதம். திரண்டிருக்கும் மேகங்களும் பல வண்ணக் கலவைகளில் நிற்கின்றன. PP வேலை நிறைந்த படம் என்று நினைக்கிறேன். ஒரு surrealistic படமாக எனக்குத் தெரிகிறது.











எல்லாம் இவர் சொன்ன சொல் கேட்கும் என்பது போல் மேகங்கள் அழகாக அடுக்கடுக்காக நிற்கின்றன. கோவிலும் சரியாக துல்லிதமாக  இருக்கின்றன. சரியான exposure போலும்.

முயற்சித்துப்  பார்க்கணும்.


கருவாயன்: (எதற்கு இந்த பெயரோ? நேரில் பார்த்தால் கேட்கணும்!.) இவரது படத்தில் ஒரு mysticism இருப்பதாக எனக்கு ஒரு நினைப்பு. கிழவியும் புகையும் .. அவரது பல candid shots களில் இது ஒன்று. இவரது படைப்பில் பல இது போன்ற candid shots இருக்குமென நினைக்கிறேன். மழையில் விவசாயி போன்ற படங்கள் நினைவுக்கு வருகின்றன.


காற்று, மேகம், ஒளி, செடிகள் எல்லாமும் இவருக்கு இப்படி ஒத்துழைக்கின்றனவே!
நானும் இதே வண்ணத்துப் பூச்சியை விரட்டிப் பார்த்திருக்கிறேன். பசை போட்டு ஒட்டி வைத்தது போல் செடியில் இவருக்காக உட்கார்ந்தது போல் எனக்கு ஏன் உட்கார மாட்டேன் என்கின்றன இந்த வண்ணத்துப் பூச்சிகள்?!


இரு பெண்கள். வழக்கமாகக் காணும் காட்சிதான். பூவைத்து செல்லும் இவர்களைப் பார்த்ததும் காமிராவைத் தேடும் விரல்கள் இளவஞ்சிக்கு.

மொழியை தங்கள் இஷ்டத்திற்கு வளைத்து தங்களுக்கு சேவகம் செய்ய வைக்கும், நான் மிக விரும்பும்,  இரு பதிவர்களில் இவர் ஒருவர். வார்த்தைகளில் ஜாலம் காட்டும் இவரது படங்களுக்கும் அதே ஜால வித்தை தெரியும். மிக சாதாரணமானவைகளை வித்தியாசமாகப் பார்க்கும் பார்வை இவருக்கு - அது காலி பீர் டப்பாவாக இருந்தாலும் சரி .. கூத்து கட்டி ஆடும் மக்களாக இருந்தாலும் சரி... இவர் காமிராவிற்குள் அழகாக  அடக்கமாகி விடுகிறார்கள்.


தெரு விளக்கும் ஜாலம் காண்பிக்கிறது. படம், PPயில்  கொடுத்திருக்கும் வண்ணம், நின்றிருக்கும் நண்பர் குழாத்தின் moodயை நன்கு பிரதிபலிக்கிறது.




ஆனாலும் இப்படி ஒரு சுரங்கப் பாதை .. அதில் தூரத்தில் நடக்கும் ஒருவர் .. கையில் காமிரா .. சரியான ஒரு தருணத்தில் ஒரு geometric படம் .. வாரே வாவ்!



தருணங்கள் இவர்களைத் தேடி வருகின்றனவா .. இல்லை .. இவர்கள்  அதைத் தேடிப்போகிறார்களா ... தெரியவில்லை. magic moments !


முத்துச்சரம் ராமலஷ்மி ராஜன்:



இவர் படங்களில் எனக்குப் பிடித்தது - படங்களின் நேர்த்தி. அப்படியே picture card quality முழுவதுமாக நிறைந்திருக்கும். எடுக்கும் இடத்தை அப்படியே அச்சுக் குண்டாக கண்முன் இவரது படங்கள் கொண்டு வருகின்றன.

கட்டிடத்தில் எத்தனை மாடி? எண்ணிப் பார்த்துத் தெரிந்து கொள்ளுங்கள் என்பது போன்ற precision உள்ள படங்கள்.


சரி .. கட்டிடம் அங்கேயே நிற்கும்.
அதை precise ஆக எடுக்க அடுத்த தடவை முயற்சிக்க வேண்டும்.

ஆனால் ஆங்காங்கே பறந்து திரியும் பறவைகளைப் படமெடுக்க நிறைய பொறுமை

வேண்டும். ஆனாலும் எப்படி இந்த படங்களை
எடுக்கிறார்கள் என்பது எனக்கு ஒரு ஆச்சரியம்தான்!  அதில் framingயையும் சரியாகக் கொண்டு வருவது வெறும் PP யால் மட்டுமே முடியாது.




சரி .. சரி .. படம் எடுக்கத் தெரிஞ்சவங்க படம் எடுக்குறாங்க. நம்ம படம் எடுக்க வந்தா வண்ணத்துப் பூச்சிகளெல்லாம் செடியில், மலரில் உட்காராமல் இந்த மாதிரி ரோட்டில் உட்கார்ந்து பாடாய் படுத்துது. என்ன பண்றது, சொல்லுங்க!

..

நாம பார்க்காத தோல்விகளா?

தோல்விகளின் தொடர் பட்டியலில் புகைப்படக் கலையையும் சேர்த்து விட வேண்டியது தான். ஆனால் அதைக் கைவிட வேண்டியது இல்லை என்று முடிவெடுத்திருக்கிறேன். ஆச்சு .. அதுக்காச்சு .. எனக்காச்சு ... பாத்துக்குவோம்!

தோல்விகளின் தொகுப்பிலும், களைப்படையாத விக்கிரமாதித்தன் வேதாளத்தைத் தோளில் போட்டுகொண்டு போவது போல், காமிராவைத் தோளில் போட்டுக்கிட்டு தொடரணும் ......


*


















*




*

Thursday, December 15, 2011

542. ஒரு சில்லறை ...

*

hi tharumi sir அவர்களே..

blogger ல ஒரு இடம் கிடைத்துட்டா நீங்க என்ன பெரிய ஆலா? கேல்வி கேட்க மட்டும்தான் தெரியும்னா உனக்கெல்லாம் எதுக்குடா blogger?நீ இஸ்லாத்தப் பற்றி கெட்ட கேல்வியை எல்லாம் என்கிட்ட கேலுடா..ஆனா ஒன்று மற்றவன் சொன்னத டப்பிங் பன்னாம நீயாகவே யோசித்து, இஸ்லாத்தில் உள்ள தவருகளை கேலுடா..

*
அழகுத் தமிழிலும், பண்பிலும் மேலோங்கிய இம்மடல் ரியாஸ் என்ற பெருந்தகையிடமிருந்து எனக்கு வந்துள்ளது. ("S. Riyas" முகவரி: riyaamail@gmail.com)

தமிழ் வாழ்க .. அவரது மார்க்கமும்..!

*



*

Wednesday, December 14, 2011

541. நானும் photography-யும் ... 3




*
தொடர் பதிவுகள்: 
......... 1,
......... 2,
......... 3,  
........  4.

*
காமிராவைத் தூக்கிய அந்தக் காலத்திற்கும் இந்தக் காலத்திற்கும் தான் எத்தனை வித்தியாசம். auto focusing, VR lens, digital, படம் எடுத்த அடுத்த விநாடியில் படம் கண்முன்னே... சரியாக வந்ததா இல்லையா என்று instant result .. சரியாக வரலையா அடுத்த முயற்சி.. படம் எடுத்து முடித்த பிறகு இருக்கவே இருக்கிறது PP - post production ... adobe photoshop, light room போன்று ஆயிரத்தெட்டு மென் பொருள்கள் .. எங்கேயோ போய்க்கொண்டிருக்கிறோம்.

ஆனால் அந்த காலத்தில் எல்லாமே manual மட்டும் தான். காலமும் நன்கு கைகளைக் கட்டிப் போட்டு வைத்திருக்கும். ஒரு ரோல் பில்ம் வாங்கி மாட்டினால் படம் எடுத்து முடித்து எப்போது develop செய்வோமோ அதுவரை என்ன எடுத்தோம்; எப்படி வந்திருக்கும் என்பதெல்லாமே தெரியாமல் இருப்போம். தனிக்குறிப்பாக exposure details எழுதி வைத்துக் கொண்டதும் உண்டு - பின்னால் பார்த்துத் தெரிந்து கொள்வதற்காக. சொந்தமாக develop செய்யும் போது கிடைக்கும் thrill பயங்கரம் தான். fixer-லிருந்து எடுக்கும் போது நிச்சயமாக இதயம் பட படத்துத் துடிக்கும். பாவம் .. இப்போ காமிரா வைத்திருக்கும் இளைய நண்பர்களுக்கு அந்த துடிப்பை அனுபவிக்கும் பாக்கியம் கிடைக்காது தான்.

fixer-லிருந்து எடுத்துக் கழுவி காய வைத்து விட்டு அதன் பின் ஒவ்வொரு ப்ரேமாகப் பார்க்கும் போது ஏற்படும் சந்தோஷங்கள் .. சோகங்கள் .. ஒரு நிகழ்வை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேனே ...

மதுரை வைகை நதியின் கல்பாலத்தில் பட்மெடுப்பது மிகவும் பிடிக்கும். வாழ்க்கையின் பல குறுக்கு வெட்டுத் தோற்றங்களை அங்கே காணலாம். பலவகை வியாபாரங்கள், ஆற்றுக்குள் தொட்டி கட்டி காசு கொடுத்து குளிக்கும் மக்கள், காற்றில் காயும் துணிகள் .. வாழ்க்கை மிகவும் சுறுசுறுப்பாக நடக்கும். அந்தப் பாலத்திலும், ஆற்றுக்குள் இறங்கியும் பலமுறை படமெடுத்ததுண்டு. ஒரு நாள் படமெடுத்து பாலத்தில் ஏறப்போகும்போது இரண்டு கழுதைகள் மேய்ந்து கொண்டிருந்தன. நல்ல back lighting .. படமெடுக்க ஆசை. முதல் ஷாட்
U  &  I

எடுத்தேன். எதற்கும் இன்னொன்றும் எடுத்துக் கொள்ளலாமா என்று நினைத்தால் அதுவே கடைசி ப்ரேமாக இருந்திருக்கிறது. அப்பவே ஒரு பயம் தான் -  கடைசி ப்ரேம் என்பதால். ரோல் டெவலப் செய்து முதலில் க்ழுதைகளைத்தான் பார்த்தேன். பயந்தது நடந்திருந்தது. exposure  சரிதான். ஆனால் கடைசி ப்ரேம் என்பதால் நன்றாக ஒரு scratch. - emulsion உறிந்திருந்தது. படம் போட்டால் ஒரு கருப்பு வட்டம் வயிற்றில் வரும். சோகப்படத்தான் முடியும். இப்போதென்றால் உடனே அடுத்த படம். நீங்களும் அங்கே தான் இருப்பீர்கள்; கழுதைகளும் அப்படித்தான். பிரச்சனை ஏதுமில்லை. இப்போது நெகட்டிவ் இப்படி ஆன பின் நான் கழுதைகளைத் தேடிப் போகவா முடியும். என் தலைவிதியும், கழுதைகளின் தலைவிதியும் இப்படித்தான்  என்று தான் வைத்துக் கொள்ள வேண்டும். ஆனாலும்  அந்த நெகட்டிவ் என்னிடம் பத்திரமாக இருந்தது. adobe photoshop கை கொடுக்க படத்தை பல ஆண்டுகள் கழித்து தேற்றி விட்டேன்! இப்போது காமிரா உலகமே மாயலோகமாக அல்லவா மாறிவிட்டது ! (கழுதைகளுக்குக் கொடுத்த தலைப்பு உங்களுக்குப் பிடிக்கிறதான்னு சொல்லுங்க ...)

நெகட்டிவ்களோடு இவ்வளவு பிரச்சனையென்றால் படங்களை ப்ரிண்ட் போடுவதும் தனி ஒரு சுகம்.  பெரிய படம் போடுவதற்கேற்ற நல்ல நெகட்டிவ்கள் கிடைப்பது முதல் சுகம். அதன் பின் பெரிய ப்ரிண்டுகள் போட நடக்கும் முஸ்தீபுகள் பற்றித் தனிப்பதிவே போடலாம்! கெமிக்கல்ஸ் கலப்பது, பெரிய wet table-ல் வேண்டிய வசதிகள் செய்து கொள்வது. enlarger-யைத் திருப்பி, சுவற்றை நோக்கி நிறுத்தி, சுவற்றில் printing paper-யை நிறுத்த சில ஸ்பெஷல் ஏற்பாடுகள் ... இப்படியே போகும். blow up  என்றால் முதலில் 10 x 12 என்ற சைஸ்தான் இருந்தது. அதிலிருந்து முன்னேறி 18 x 24 சைஸ் வரை ப்ரிண்ட் போட்டதாக நினைவு. அதற்கு மேல் போகவும் ஆசை. K.பாலச்சந்தரின் 'அக்னிசாட்சி' படத்தில் சரிதா முகத்தை மிகப் பெரிதாக blow up செய்திருக்குமே .. அதைப் பற்றியக் கட்டுரைகள் எல்லாம் வாசித்து அதில் பாதியாவது செய்ய வேண்டுமென்ற ஆசையெல்லாம் இருந்தது. அதற்கு, முதலில் .. காசுக்கு எங்கே போவது!!??



ஆனாலும் முதலில் blow up என்றால் அது 10 x 12 என்ற சைஸ்தான். அந்த அளவில் முதன் முதல் போட்ட படம் தான் இது.






முதலில் பட்டென்ற வளர்ச்சி ...பின் slowing down ... இதுதானே நம்ம வாழ்க்கை. அதே போல்தான் புகைப்படக் கலையிலும் நமது வளர்ச்சி.

ஆனாலும் காலத்தோடு காலமாக நானும் கொஞ்சம் at least காமிராக்களைப் பொறுத்தவரை மாறித்தான் வந்துள்ளேன். Mamiya போய் Nikon FE வந்தது. அதன்பின் Nikon F2. அடுத்த கட்டம் டிஜிட்டல். 2002-ல் அமெரிக்கா போனபோது முதல் Olympus - digital. 2 MP!! ஆனால் இப்போது வெறும் போனிலேயே அதைவிட அதிக பிக்செல்களோடு காமிரா வந்து விட்டன. Olympus-க்குப் பிறகு Canon Power shot  சின்ன மகளின் முதல் வருகையில் கிடைத்தது. அவளது இரண்டாம் வருகையில் போனால் போகுதுன்னு Nikon 60 with 18 - 55mm & 70 -300mm கிடைத்தது. 500 mm கூட வேணுமானால் நண்பனிடம் இருக்கிறது.

நண்பனும் ஐந்நூறும் ...

ஆக, இப்போ தெருக்கோணல்; அதனால் தான் நடனம் வரவில்லை என்றெல்லாம் நான் பொய் சொல்ல முடியாது!

நல்ல தெரு .. நல்ல மேடை .. நெடுநாள் ஆடிப் பழகிய நடனம் ... ஆனாலும் இன்னும் கட்டுக்குள் வரவில்லையேன்னு கவலை. இதிலும் அடுத்தவங்க எடுக்கிற படமெல்லாம் கண்ணுக்குள் ஒத்தி வச்சிக்கிறது மாதிரி இருக்கு. of course, ஒண்ணு சொல்லுவாங்க .. எத்தனை படம் எடுத்தாலும் நல்ல படத்தை மட்டும் வெளியே காண்பிக்கணும் அப்டின்னு. அப்படிப் பார்த்தா சமீபத்தில் எடுத்த எந்தப் படத்தை நான் பெருசா வெளியே சொல்ல முடியும்னு தெரியலை. அந்தக் கதைகளை அடுத்தப் பதிவில் சொல்றேனே ...

.......... தொடரும்


*

Tuesday, December 13, 2011

540. நானும் photography-யும் ... 2



*
தொடர் பதிவுகள்: 
......... 1,
......... 2,
......... 3,  
........  4.

*

காமிரா வாங்குவதற்கு முன்பேயே அந்த ஆசை கொஞ்சம் இருந்தது நினைவுக்கு வருகிறது. S.S.L.C. முடிப்பது அந்தக் காலத்தில் ஒரு முக்கிய கால கட்டம். அந்த விடுமுறையில் எதிர்த்த வீட்டு ஜாபர் தன்னை படம் எடுத்துக் கொள்ள ஆசைப்பட்டு, எங்கிருந்தோ ஒரு டப்பா காமிரா வாங்கி வந்தான். நான் அவனைப் படமெடுக்க வேண்டுமென்றான். 'ஒரு கண்டிஷன்' என்றேன். என்ன .. உன்னையும் படம் எடுக்கணுமா என்றான். 'அதெல்லாம் என் ஆசை இல்லை'. ஆனால் ஒரே ஒரு படம் மட்டும் என் ஆசைக்கு உன்னை எடுப்பேன் என்றேன். சரியென்றான். எங்கள் பள்ளிக்கூடத்திற்கு சென்றோம். அந்தக் காலத்தில் கையை நீட்டிக் கொண்டு, அந்தக் கையில் பின்னாலிருக்கும் ஏதாவது ஒன்று உட்கார்ந்திருப்பது போல் படமெடுப்பது வழக்கம். அதே போல் கேட்டான்.   இன்னும் சில போஸ்கள். மொத்தம் எட்டோ பன்னிரண்டோ படம் என்று நினைக்கிறேன். கடைசிப் படம் .. என் ஆசைக்கு எடுக்கப் போகும் முதல் படம்!

எப்படி எடுக்க வேண்டுமென்றான். எங்கள் சைக்கிளை ஒரு வேப்ப மர நிழலில் நிறுத்தி, அதன் பின் சீட்டில் அவனை எறி நிற்கச் சொன்னேன். நான் கீழே படுத்து அவனை - cat's view என்பார்களே, அந்தக் கோணத்தில் - ஒரு படம் எடுத்தேன். உயரமான மரத்தின் கீழே அவன் உயரமா, சாமி மாதிரி பெருசா தெரிவான் என்று மனதுக்குள் ஒரு எண்ணம். கொஞ்ச நாள் கழித்து படத்தின் ரிசல்ட் தெரிய ஆர்வத்தோடு இருந்த என்னிடம் நாலைந்து படங்கள் மட்டும் காண்பித்தான். இதுதான் வந்ததாம் என்று சொல்லி விட்டு என் முதல் படத்தில் 'மண்ணைத் தூவி' விட்டுப் போய்விட்டான்.

அதற்குப் பிறகு 1971-ல் சொந்தக் காமிரா. எல்லா படமுமே ஸ்ரீதர் பின்னேயிருந்து சொல்ல, பக்கத்திலிருந்து வின்சென்ட் உதவ எடுத்த படங்கள் என்ற நினைப்புதான்! மழை, கிழட்டு முகங்கள், என்று ஏதேதோ ... அநேகமாக 1977-ல் முதல் S.L.R..  Mamiya Sekor .. சுடச் சுட அமெரிக்காவிலிருந்து வந்தது. அப்போது ஒரு டாலருக்கு 8 ரூபாய் எண்பது பைசா.  100 டாலருக்கு வாங்கியதை என்னைப் பார்த்துப் பரிதாபப்பட்டு உடன் வேலை பார்த்த ஆசிரியர் 800 ரூபாய்க்குக் கொடுத்தார். அடேயப்பா ..! அந்தக் காமிராவை வாங்கியதும் ஏதோ விண்ணைத் தொட்ட ஓர் உணர்வு. அதை வாங்கிக் கொண்டு வீட்டுக்கு வர  பஸ்ஸுக்காகக் காத்திருந்தது ... காமிராவைத் திருப்பித் திருப்பி பார்த்து மகிழ்ந்தது ...  எதுவும் இன்னும் மறக்கவேயில்லை. அப்போதைக்கு ஒரு S.L.R. காமிரா ஒரு அபூர்வம். அதோடு எனக்கு அது அப்பொது மதிப்பேயில்லாததாகத் தோன்றியது. மதுரையில் அப்போது S.L.R. காமிராவுக்கு அப்படி ஒரு மவுசு. ஒரு S.L.R. காமிரா வைத்திருப்பதே பெரிய prestige!

வீட்டிற்கு வந்ததும் முதலில் மூத்த மகள் - அப்போது அவளுக்கு மூன்று வயது என்று நினைக்கிறேன் -மாடலாக மாறினாள். கதவுக்குப் பக்கத்தில் நிற்க வைத்து ஒரு படம் எடுத்தேன்.

எப்போதுமே படங்களின் பின்னணி கறுப்பாக இருப்பதுதான் எனக்குப் பிடிக்கும். இப்படத்தில் அதே போல் அமைந்தது. அவள் போட்டிருந்த உடையின் இழைகள் நன்கு focus-ல் இருந்தன. முகத்தில் அவளது இடது பக்கத்தில் இருந்து வலது பக்கத்திற்கு ஒரு நேர்கோடு வரைந்தால் வெளுப்பிலிருந்து கறுப்பாக grey tonal gradation  கிடைத்திருந்தது. (இந்த கடைசி பாய்ன்ட் மதுரையில் அப்போது மிகவும் புகழ்பெற்ற கிறிஸ்டோபர் என்ற பெரிய, எனக்கு மிகவும் பிடித்த புகைப்படக்காரர் சொன்னது.) முதல் ரோலிலேயே நல்ல படம் கிடைத்ததால் mamiya காமிரா  மீது காதலில் விழுந்தேன்.

(இந்தப் படத்திற்கு இன்னொரு கிளைக் கதை உண்டு! இந்தப் படத்தை என்னிடமிருந்து வாங்கிச் சென்ற பழைய இயல்பியல் மாணவன் BARC - பாபா அட்டாமிக் ஆராய்ச்சிக் கூடத்தில் Ph.D. செய்யச் சென்றான். அதனைப் படம் வரைவேன் என்று சொல்லி வாங்கிச் சென்றவன் ஓராண்டிற்குப் பிறகு என்னைப் பார்க்க வந்தான். படம் வரைந்து விட்டேன். என் வீட்டிற்கு வந்து பாருங்கள் என்றான். ஒரு மாலை சென்றேன். என்னை அமர வைத்து விட்டு ஏதேதோ ஏற்பாடுகள் செய்தான். உங்கள் பிள்ளையின் படத்திற்குப் பக்கத்தில் ஒரு விளக்கு வைக்கலாமா என்று கேட்டேன். ஓகே சொன்னேன். ஒளி மங்கிய நேரத்தில் வீட்டிற்குப் பின்னால் கூட்டிச் சென்றான்.

இதே படத்தை வெறும் பென்சிலால் மிக மிக அழகாக வரைந்திருந்தான். பெரிய் அளவு. அனேகமாக 16 x 24 இருக்கும். அவளின் உடையில்  இருந்த இழைகள் கூட அவ்வளவு தெளிவாக அழகாக வந்திருந்தன. விளக்கு வெளிச்சத்தில் அவ்ளோ அழகு. அந்தப் படம் வரைந்த பின் அவனது டைரக்டர் நூலகத்தில் அதை மாட்டச் சொன்னாராம். என்னிடம் காட்டுவதற்காகவே எடுத்து வந்தேன். மீண்டும் திரும்பிய பின் எங்கள் துறையில் நூலகத்தில் வைத்து விடுவேன் என்றான். அப்படத்தோடு மகளை நிற்க வைத்து எடுத்த படம் மிஸ்ஸிங்!)



கல்லூரியில் இரு dark rooms இருந்தன. என் ஈடுபாட்டைப் பார்த்த பின் இயல்பியல் துறைத் தலைவர் எனக்காக புதிய dark room ஒன்றை ஆரம்பித்தார். அதோடு புகைப்படத்திற்காக ஒரு elective course ஒன்றையும் உருவாக்கினார். சில நாளில் dark room முழுவதும் என் வசமே  இருந்தது. அதற்குக்காரணமான படம் இதுதான். சாலையில் போய்க்கொண்டிருந்த ஒருவரை அவரின் அனுமதி கேட்டு எடுத்த படம். (தனுஷ் 'மயக்கம் என்ன' என்ற படத்தில் ஒரு பாட்டியை எடுத்தது மாதிரின்னு வச்சுக்கோங்களேன்!! ஆனால் அதில் மாதிரி நிறைய படம் எடுக்க முடியுமா? இரண்டு படம் எடுத்த நினைவு. அதில் ஒன்று இது.) புதியதாக போட்ட பிரிண்டுகளை அவரிடம் காண்பிப்பதுண்டு. அப்படி காண்பித்த இந்தப் படம் அவருக்கு மிகவும் பிடித்துப் போய் அதை அவரது துறை தகவல் பலகையில் அந்தப் படத்தைப் பற்றிய குறிப்புகள், என்னைப் பற்றிய குறிப்புகள் என்று போட்டு வைத்தார். கல்லுரியில் எனக்கு இது ஒரு தனியிடத்தைப் பெற்றுத் தந்தது. ஒரு புதிய dark room முழுச் சுதந்திரத்தோடு என் வசமாச்சு! காமிராவைத் தூக்கும் மாணவர்கள் எல்லோருக்கும் பொது ஆளானேன். எனக்குத் தெரிந்து, என்னோடு 'சுற்றித் திருந்த' இரு மாணவர்கள் அடையாறு திரைப்படக் கல்லூரியில் cinematography course-ல் சேர்ந்தார்கள்.)

காமிராக் கூட்டம் கல்லூரியில் பெருகவே இயல்பியல் துறையில் U.G. & P.G. துறைகளில் இரு இரு dark rooms கிளைத்தன. அது பற்றாது என்று விலங்கியல் துறை, தாவர இயல் துறைகளிலும் புது  dark rooms முளைத்தன. மொத்தம் கல்லூரியில் ஆறு dark rooms! ஆச்சரியம்தான். தாவர இயல் dark rooms முழுவதும் என் கையில்! இரவு, பகல்,  கல்லூரி நாள், விடுமுறை நாள் என்று எந்த வித்தியாசமும், கட்டுப்பாடும் கிடையாது. அப்போது கிடைத்த உற்சாகத்திற்கு அளவேயில்லை. இயல்பியல் துறைத் தலைவர் V.சீனிவாசன், தாவரவியல் தலைவர் Dr. ஜேம்ஸ் இருவருக்கும் மிகவும் நன்றிக் கடன் பட்டிருக்கிறேன்.
WHAT'S  STILL  BEYOND ...?



முதன் முதலாக அண்ணாமலைப் பல்கலைக் கழகம் நடத்திய புகைப்படப் போட்டி ஒன்றிற்கு ஒரு படம் அனுப்பினேன். முதன் முதல் போட்டிக்கு அனுப்பிய அந்தப் படத்திற்கு முதல் பரிசு கிடைத்தது. நூர் முகமது என்ற என் கல்லூரி நண்பனின் தந்தை அவர். நண்பன் படிப்பு முடித்து இரு சக்கர வண்டி பட்டறை வைத்திருந்தான். அவன் தான என் ஜாவாவிற்கு மெக்கானிக். அவனை மாதிரி என்னையும் அவன் தந்தை வாடா .. போடா..ன்னுதான் கூப்பிடுவார். அவரும் எனக்கு 'அத்தா' தான். படத்திற்குப் பரிசு என்றதும் அத்தாவுக்கு பயங்கர பெருமை.  ஒரு படம் ப்ரேம் செய்து கொடுத்தேன். ஒரு வாரம் பட்டறையில் இருந்தது. அதன்பின் காணோம். 'எங்கே அத்தா படம்?'  என்றேன். 'உங்க அம்மா கடையில் வேண்டான்னு சொல்லிட்டா ...  என் மேல் கண்ணு பட்டுருமாம்' என்று சொல்லிச் சிரித்தார். வீட்டிற்குள் பத்திரமாக மாட்டியிருந்ததைக் காண்பித்தார். எனக்கு புகைப்படத்தில் அலுப்பு வரும் போதெல்லாம் - எப்போவெல்லாம் படங்கள் சரியாக வரலையோ அப்போவெல்லாம் - எனக்கு பயங்கரமாக தைரியமூட்டுவார். இந்தப் படத்தை விட அதற்கு நான் கொடுத்த தலைப்பு பலருக்கு மிகவும் பிடித்தது!



........... தொடரும்

*




539. நானும், photography-யும் .. 1



*
தொடர் பதிவுகள்: 
......... 1,
......... 2,
......... 3,  
........  4.


சமீபத்தில்தான் புகைப்பட வல்லுனராக வேண்டுமென்ற வெறியில் இருக்கும் கதாநாயகனைக் கொண்ட 'மயக்கம் என்ன' படம் வேற பார்த்தேனா... தொடர்ந்து சில புகைப்படங்களை, அதுவும் நம் பதிவர்களின் படங்களைப் பார்க்க ஆரம்பித்தேனா ... சில இரவுத் தூக்கமே போய்விட்டது!

வயசான காலத்தில் வாழ்க்கையில் என்ன இப்படி ஒரு சோதனை ..?!

சில சுய பரிசோதனைகள் .......

வாழ்க்கையில் ஏதாவது ஒன்றை புதுசா கத்துக்கிடணும்னு சின்ன வயசில இருந்து அப்படி ஒரு ஆசை. ஏதாவது ஒண்ணுன்னா ... ஏதாவது ஒரு கலையைக் கத்துக்கிடணும்னு ஆசை. எங்க காலத்தில் அப்பா அம்மாக்களுக்கு இது மாதிரி ஆசைகளை பிள்ளைகளிடம் வளர்த்து விடணும்னு எல்லாம் தெரியாது. இப்போ கொஞ்சம் பரவாயில்லை.

இதில் ஒரு side track. எங்க கல்லூரிக்கு அமெரிக்காவிலிருந்து இளம் பசங்க வருடா வருடம் வருவாங்க. சில வருஷம் மொத்தமாகவும் வந்து சேருவாங்க. கல்லூரி வளாகத்தில் 'வெள்ளைத் தோல்கள்' சுற்றியலைவது மிகச் சாதாரணம். ஒரு முறை பார்க்க வந்த நண்பரை canteen-க்கு கூட்டிச் சென்றிருந்தேன். ஒரு சின்ன வயசுப்பொண்ணு - அமெரிக்க பொண்ணுதான் - ஒரு நீள பாவாடை கட்டிக் கொண்டு, கையில் ஒரு பீடியை வச்சி 'வலிச்சிக்கிட்டு' கடிதம் எழுதிக்கிட்டு இருந்ததைப் பார்த்து மனுசன் அசந்துட்டாரு. இப்படி அமெரிக்காவிலிருந்து வர்ர மக்களிடம் ஒரு விசயம் பார்த்தேன். ஒவ்வொருவருக்கும் ஏதாவது ஒரு hobby-ல் நிச்சயம் தொடர்பும், அறிவும் இருக்கும். அங்க இருந்த வர்ர ஆளுங்களுக்கு மட்டும் எப்படி ஒரு 'கலைத்தேடல்' இருக்கு; நம்ம பசங்க கிட்ட அப்படியெதுவும் இல்லையே என்று அப்போது கவலைப்பட்டதுண்டு. ஆனால் இப்போது பல பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் இளம் வயது திறமைகளை வளர்க்க ஆசைப்படுவது பார்த்து மிக்க மகிழ்ச்சி. அடிப்படைத் தேவைகளைத் தாண்டிய பின் தான் இப்படி நடக்கும் போலும்.

சரி ... என் கதைக்கு மறுபடியும் வருவோம்!

நாமளா ஒரு கலையைக் கத்துக்கணும்னா படம் வரையறது தான் எளிது. எனக்கும் 'கிறுக்குவது' மிகவும் பிடித்த ஒன்று. கிறுக்க ஆரம்பித்தேன். வாராந்தரிகளில் வரும் படங்கள் தான் நமக்கு மாடல். பார்த்து வரைந்து பார்க்க முயற்சித்தேன். ம்ம்..ம்.. வருவது போலில்லை. அடுத்த கட்டம் ... படங்களைக் கட்டமாகப் பிரித்து வரைவது .. ஒரு நாலைந்து படம் தேறியது. ஒன்று சிவாஜி கணேசன் படம். பார்த்ததும் சிலர் இது சிவாஜி 'மாதிரி' இருக்குதே என்றார்கள்! அப்போ லதா என்ற பெயரில் ஒரு ஓவியர் (சாண்டில்யன் கதைகளுக்குப் படம் வரைவதில் அவர் specialist! பெருசு பெருசா வரைவார்!) - அவரின் படங்களை வரைய ஆரம்பித்தேன். ஆனால் கட்டம் போட்டு வரைவதை விடவும் free hand - scribbling art தான் பிடித்தது. அதை முயற்சித்தேன். என் தலையில் கட்டிய பாடமான விலங்கியலிலும் படம் நிறைய வரைய வேண்டி வந்தது. அந்தப் படங்கள் எல்லாம் சுலபமாக வந்து விடும் - சும்மா காப்பியடிக்கிறதுதானே. ஆனால் அதைத் தாண்டிப் போக முடியவில்லை. பின்னாளில் water colour, paints-ல் படம் வரையறது எல்லாம் முயற்சித்தேன். தேறவில்லை.

ஓவியம் கைவிட்டு விட்டதே என்று, அடுத்து ஏதாவது இசைக் கருவி ஒன்று பழகணும்னு ஆசை. கிட்டார் தொட்டுப் பார்த்தேன். கை மட்டும்தான் வலித்தது. இசை ஒன்றும் பிறக்கவில்லை. புல்லாங்குழல் கேட்க நிரம்ப பிடிக்கும். ஊதிப் பார்ப்போமே என்று ஊதிப் பார்த்தேன். அடுப்புக்குப் பக்கத்தில் வந்து அதைச் செஞ்சா கொஞ்சமாவது பிரயோஜனமாயிருக்கும் என்றார்கள். அப்படி ஊதியிருக்கிறேன்! முயற்சியில் தோல்வியடைந்தும் மனம் தளராத விக்கிரமாதித்தனாக அடுத்த முயற்சியில் இறங்கினேன். புல்புல் தாரா என்று ஒரு இசைக்கருவி. யாரும் கேள்விப்பட்டிருக்க மாட்டீர்களே .. அதே தான்! அந்தக் கருவியில் எளிதாகப் பழகலாம் என்று நண்பர் ஒருவர் அறிவுரை சொல்லி ஒன்று வாங்க வைத்தார். வாங்கியதும் அவர் 'என்ன என்ன பார்வைகளோ...' அப்டின்னு வெண்ணிற ஆடையில் வரும் ஒரு பாட்டு மிக எளிது என்று சொல்லி முதலடியை மட்டும் போட்டுக் காண்பித்தார். நானும் நாலஞ்சு நாள் கஷ்டப்பட்டு, 'என்ன என்ன பார்வைகளோ...' என்பதை மட்டும் போட்டுக் கொண்டே இருந்தேன். அடுத்த அடிக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. நண்பரிடம் கேட்டேன். அடுத்தடுத்து நீயே கண்டுபிடிச்சி வாசிக்கணும் என்றார். நானும் கண்டுபிடிக்கலாம் என்று கம்பிகளைத் தட்டிக்கொண்டே இருந்தேன். 'சீ .. போடா ..' என்றது புல்புல் தாரா! அடுத்த முயற்சியும் தோல்வியா ..? மனம் தளரவில்லை; இருப்பதிலேயே எளிது mouth organ என்றார்கள். அது ஒன்று வாங்கினேன். அதில் படித்தது ஒன்றே ஒன்றுதான். நம்ம படத்தில வர்ர ஹீரோக்கள் ஒற்றைக் கையில் அதை வைத்துக் கொண்டு வாசிப்பார்களே அதெல்லாம் சுத்த ஹம்பக் என்று மட்டும் தெரிந்து கொண்டேன். இரண்டு கையில் எப்படியெல்லாம் அதைப் பிடிக்க வேண்டுமென்று கற்றுக் கொண்டேன். ஆனால் இசை மட்டும் வரவேயில்லை.

கடைசி முயற்சி. சினிமா பாட்டை விசிலில் அடிப்பது சுத்தமான சொந்த முயற்சியால் என்று ஒருவர் சொல்ல அதையும் முயன்றேன். விசிலடித்தேன்; காற்று நன்றாக வந்தது. இசை .. ம்ம் .. அது எப்படி வரும்! சரி ... ஓவியக் கலைக்கும்,இசைக் கலைக்கும் நமக்கும் உள்ள தொலைவு ரொம்ப அதிகம் என்று உள்ளுணர்வு சொல்லித் தொலைத்தது. அடுத்து என்ன செய்யலாம் என்று யோசித்துப் பார்த்தேன். சரி .. நாம் முயற்சி செய்த கலைகளுக்கான ஆற்றல் இரத்தத்திலேயே இருக்க வேண்டும் போலும்; நம்ம ரத்தத்தில் அதெல்லாம் இல்லைன்னு ஒரு முடிவுக்கு வந்தேன்.

அடுத்து என்ன செய்யலாம் என்று யோசித்து, இனி விளையாட்டு வீரனாகி விட வேண்டியதுதான் என்று முடிவு செய்தேன். இதற்குள் மூன்று கழுதை வயது (8 x 3 = 24) முடிவடைந்திருந்தது. பள்ளியில் பிடித்தது கால்பந்து. ஏதோ கொஞ்சம் .. இப்போது கால்பந்து விளையாட முடியாது. indoor games தான். bachelor life வேறு. (இரண்டையும் சேர்த்து வைத்து ஏதாவது கற்பனை செய்து கொள்ளாதீர்கள்!)

தஞ்சை வாசம். நாலு நண்பர்கள் ஒன்றாயிருந்தோம். என் ஆவலை அவர்களிடம் கிளப்பி விட செஸ் பழகுவதென்று முடிவு செய்து ஒரு போர்டு ஒன்று வாங்கினோம், அதுவரை தெரிந்ததை வைத்துக் கொண்டு விளையாட ஆரம்பித்தோம். அப்போது இந்தியன் எக்ஸ்பிரஸில் white wins in two moves என்று வாரத்திற்கொரு போட்டியிருக்கும். அதையும் விளையாட ஆரம்பித்தோம். நால்வருமே துவக்க ஆட்டக்காரர்கள் தான். சமமாக இருந்தோம். சில நாட்களில் என்னை அடிக்க அங்கே ஆளில்லை என்று ஆயிற்று. அதனால் மற்ற மூவரும் அவர்களுக்குள் விளையாடி அதில் வெல்பவர் என்னோடு விளையாட வேண்டுமென்று வைத்துக் கொண்டோம். சில வாரங்களுக்கு நானே முடிசூடா ராசா! கொஞ்ச நாள் தான். ஒவ்வொருவராக என்னை முந்த ஆரம்பித்தார்கள். சில மாதங்களில் நான் தான் கடைசி ஆளாகிப் போனேன். வாழ்க்கை வழக்கம் போல் வெறுத்தது. ஆனாலும் .. முயற்சி .. அதைக் கைவிடுவோமா?

அடுத்து ரயில்வே கிளப்பில் எங்களைச் சேர்த்துக் கொண்டார்கள். table tennis விளையாட ஆரம்பித்தோம். மலேஷியாவிலிருந்து ஜப்பான் butterfly bat எல்லாம் வாங்கினோம். செஸ் கதை இங்கும் தொடர்ந்தது. சில நாட்களிலேயே எல்லோரையும் அடித்துத் 'தூள் பரத்தினேன்'. கொஞ்ச நாளில் பழைய கதை போல் மற்றவர்கள் என்னை முந்த ஆரம்பித்தார்கள். நல்ல வேளை விளையாட்டை மாற்றினோம். கொஞ்சூண்டு billiards .. carrom  ( ivory striker தொலைந்ததும் இந்த விளையாட்டு நின்னு போச்சு.) என்று தொடர்ந்தோம் சின்னாட்களுக்கு.

மதுரைக்கு வந்தபின் அமெரிக்கன் கல்லூரியில் டென்னிஸ். முப்பது முப்பத்தைந்து வயது வரை விளையாட முடிந்தது. அதன் பின் நாக்கு தள்ளவே அடுத்த ஆட்டம் - shuttle cock - ஆரம்பமானது.

நான் தான் ...! போஸ் குடுத்து எடுத்தோம்ல ...!!


எல்லாம் எங்க ஏரியா டீம் தான்!


அது இன்றும் தினமும் காலையில் தொடர்கிறது.

தொன்னூறுகளின் ஆரம்பத்தில் எங்கள் துறை மக்களுக்கு scrabble  ஆட்டத்தை அறிமுகப் படுத்தினேன். மக்களுக்கு இருந்த உற்சாகத்தால் துறைக்குள்ளேயே ஒரு tournament நடத்திக்கொண்டோம். எங்கள் ஆசிரியர்கள் போராட்டத்தில் பல முறை சிறைக்குச் சென்றேன். அதில் ஒரு தடவை 28 நாட்களோ என்னவோ சிறைவாசம். அப்போது இந்த விளையாட்டு ஏறத்தாழ 20 பேராசிரியர்களுக்குச் சொல்லிக் கொடுத்து, சிறை வாழ்க்கையை scrabble வாழ்க்கையாக மாற்றிய புண்ணியம் உண்டு.

அடுத்த ஆட்டம் - இந்துவில் வரும் Crossword puzzle. தினமும் மெனக்கெட்டு அந்தப் பக்கத்தை வைத்து விளையாடிக்கொண்டு இருந்தேன். இரு பேராசிரியர்களுக்கும் அது மிகவும் பிடித்துப் போச்சு. அப்போ நான் 30 - 40 விழுக்காடு வார்த்தைகளைக் கண்டுபிடித்த நேரம். அவர்கள் ஆரம்பித்தார்கள்.  60 வார்த்தைகளோடு நான் போராடும்போது அவர்கள் எழுபதைத் தாண்டி விட்டார்கள். வழக்கம்போல் நான் கழண்டு கொண்டுவிட்டேன். இப்போது அவர்கள் முழுவதும் முடிக்கும் அளவிற்கு வந்து விட்டதாகச் சொன்னார்கள்.

இப்படியாக 'ஆடிய ஆட்டங்கள்' நடந்தேறின. அதன் பின் .........

ஸ்ரீதர் படம் அந்தக் காலத்தில் மிகவும் பிடிக்கும். பாட்டு வந்தால் கூட தம்மடிக்க அவர் படத்தில் வெளியே செல்ல முடியாதபடி இருக்கும் அவர் படங்கள். அவரது படத்தின் போஸ்டர்கள், costumes எல்லாமே அழகு. அதைவிட அவர் படங்களுக்கு வின்சென்ட் காமிராமேன். இருவரின் கூட்டு மிக நன்றாக இருக்கும். அதை மிகவும் ரசிப்பதுண்டு. அவரது படங்களைப் பார்த்து விட்டு வித்தியாசமான கோணங்களைப் பாராட்டுவது வழக்கமாயிருந்தது. இது ஒரு ஆரம்பப்புள்ளியாக இருந்தது - அடுத்த ஆசைக்கு!

1971-ல் Yashica J என்று ஒரு range finder 35 mm வாங்கினேன். புகைப்படக் கலையை ஒரு கை பார்த்து விடுவது என்று இறங்கினேன் .........

...............தொடரும்

Thursday, December 01, 2011

538. மயக்கம் என்ன?

*

பார்க்கப்போன படம் ஒன்று - Tin Tin; அங்கு ஓடியது இன்னொன்று - மயக்கம் என்ன?

வழக்கமான தமிழ் சினிமாக் காதல் மசாலா, அடிச்சா ஐம்பது அடி தள்ளிப் போய் விழாத சண்டை, இந்த வழக்கமான சரக்குகள் இல்லாவிட்டாலே அது ஒரு வகையில் நல்ல படம்தான். முதல் பாதி நன்றாகப் பிடித்தது. இரண்டாவது பாகத்தின் முதல் பாதி நீளமாய் போய்க்கொண்டே இருந்தது. எடிட்டிங், திரைக்கதை இரண்டும் கொஞ்சம் சுதப்பியது போலிருந்தது.

முதல் பாதி வெறியொடு அலையும் தனுஷ். தன் ஆதர்சன புகைப்படக்காரர் தன் புகைப்படங்களை பார்த்து shit என்று சொல்லியனுப்ப, 'ஆய் போட்டோ' என்று வேதனைப்படுவது .. துவண்டு விடாமல் மேலும் முயற்சிப்பது .. photo shoot-க்காக காடு மேடு சுற்றுவது .. எல்லாம் நன்கு வந்திருக்கின்றன.

ஏமாற்றத்தால் புத்தி தடுமாறி, குடியில் மிதந்து, அதிலும் காமிராவோடு உள்ள உறவைத் தொடர்ந்து, இறுதியில் வெற்றி பெற்ற பின்னும், ஆணவம் ஏதுமின்றி மிகப் பெரிய பரிசை அழகாக ஏற்றுக் கொண்டு அப்போது தன் கடந்த வாழ்க்கையைத் திரும்பிப் பார்ப்பது ... தனுஷெல்லாம் ஒரு நடிகரா என்று ஒரு காலத்தில் நினைத்த என்னை முழுவதுமாக மாற்றிப் போட்ட 'ஆடுகளம்' படத்தில் எழுந்த எண்ணத்தை இப்படம் நன்கு உறுதி செய்து விட்டது.

இரண்டு இடங்களில் கைதட்ட வேண்டும் போல் இருந்தது. ஒன்று ராம்ஜி(ஒளிப்பதிவாளர்) - செல்வராகவனுக்கு; இன்னொன்று தனுஷிற்கு.

படமெடுக்க காட்டுக்குள் பயணம். ஒரு பறவை அழகாக ஒரு தூரக்கிளையில் வந்து அமர்கிறது. சிறகை விரிக்கிறது. படமெடுத்து அதன்பின் அழகில் லயிக்கிறான் நாயகன். படமெடுத்தது; அதைக் கதைக்குள் அழகாகச் செருகியது; உயிர்ப்போடு சொல்லப்பட்டிருந்தது. மிகவும் பிடித்த முதல் காட்சி.

இரண்டாவதாக, புத்தி பேதலித்த நாயகன் நண்பர்களோடு தண்ணியடிக்க உட்கார்கிறான். மனைவி தடுக்கிறாள். தடுக்கும் மனைவியைத் தட்டி விட்டு, கண்களில் ஒரு முறைப்பைக் கொண்டு வருகிறார். ஏனோ தெரியவில்லை ... சிவாஜி, கமல், சூர்யா மூவரும் கண்ணுக்குள் வந்து விட்டுப் போனார்கள். அவர்களிடமெல்லாம் பார்க்காத மிக உக்கிரமான பார்வை. தனுஷிற்கு full mark!

கடைசி சீன். பரிசளிப்பு விழா. A Beautiful Mind படம் நினைவுக்கு வந்தது. நாயகனிடம் இருந்த அமைதி, நண்பர்களுக்கான நன்றி; மனைவிக்கான அன்பு (மறந்து போய் மீண்டும் வந்து மனைவிக்கு நன்றி சொல்வது தேவையில்லாத ஒரு cinematic idea என்று தோன்றியது; மறக்கக்கூடிய மனைவியா அவள்?) எல்லாம் நன்கு இருந்தது.

முதல் பாதியில் ராம்ஜி, G.V.P இருவரின் திறமைகள் மிக நன்கு பளிச்சிட்டன.

படத்தில் காண்பிப்பது போன்ற western culture-க்குள் நம் சமூகம் நன்கு விழுந்து விட்டதோ?! கதாநாயகியின் முதல் தொடர்பு, அதனூடே உள்ள உறவுகள், எளிதாக மனம் அடுத்தவனிடம் தாண்ட ... ஆனால், அதற்குப் பின் ஒரேயடியாக 'தவமிருக்கும் தமிழ்ப்பெண்ணின்' தியாகங்கள் ... அவைகளில் சில நெருடல்கள் எனக்கு.

நன்கு உழைத்து, முனைப்போடு எடுக்கப்பட்ட படம். தமிழ்ப்பட உலகின் மீது எந்த நம்பிக்கையுமின்றி எழுதிய பழைய பதிவுகள் நினைவுக்கு வந்தன. இப்போது தமிழ்ப்பட உலகத்தின் மீதான நம்பிக்கை மேலும் மேலும் உறுதியாகிறது.


*







*

537. EMBRYOLOGY IN THE QURAN




*
"குர்ஆனிலிருந்து அறிவியலுக்கு முரணான ஒரு வசனத்தை காட்டுங்கள் என்று பலமுறை கேட்டு விட்டேன். இதுவரை அதற்கு எந்த பதிலும் ஏன் இல்லை?"  -- சுவனப்பிரியன்.

சிறு வயதிலேயே ஒரு கிறித்துவனாக எனக்கு வேத பாடங்கள் சொல்லித் தருவார்கள். அப்போது சொல்லித் தரும் சில  வாக்கியங்களை, அல்லது கதைகளை மனதின் அடியில் சேமித்து வைத்துக் கொள்வோம். அந்த வாக்கியங்களோ கதைகளோ அவ்வளவு எளிதில் மனதைவிட்டு அகலுவதில்லை. இதை கதைதான் இஸ்லாமியருக்கும் இருக்கிறது என்பதை பதிவுலகில் அவர்களோடு நிகழ்த்திய விவாதங்களிலிருந்து புரிந்து கொண்டேன்.

1400 ஆண்டுகளாக எல்லாவிதக் கேள்விகளுக்கும் பதிலளித்து விட்டோம் என்பது அதில் மிக முக்கியமான ஒன்று. இதனாலேயே கேட்ட கேள்விகளுக்கு நாம் கொடுத்துள்ள பதில் முழுமையானதா, சரியானதா என்று அவர்கள் எப்போதும் சிந்திப்பதில்லை. அடுத்த பக்கத்தில் வரும் விவாதத்தில் உண்மையிருக்கிறதா என்ற கேள்விகள் அவர்களுக்கு வருவதேயில்லை. கண்ணாடி முன் நின்று பதில் சொல்லும் பாணியைத்தான் பார்க்க முடிகிறது.

*





*

Thursday, November 24, 2011

536. எனக்கு மிகவும் பிடித்த ஒரு குறும்படம்



1912ம் ஆண்டு தான் பீட்சா திரைப்படம் வந்தது. அப்போது கார்த்திக் சுப்புராஜ் என்ற பெயர் யாருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அப்போது நான் பார்த்து எனக்குப் பிடித்த குறும்படம் இது.

*
இதுவரை நான் பார்த்த குறும்படங்களில் இப்படம் எனக்கு மிகவும் பிடித்தது. கார்த்திக் சுப்பராஜ் யாரோ .. எங்கேயோ  .. அவரின் படைப்பார்வத்திற்கு என் வாழ்த்துகள். வளர்க ..

ஆனால் உங்களுக்கும் இப்படம் பிடிக்க வேண்டும் என்பது கட்டாயமல்ல.

படத்தைப் பாருங்கள் ...



*
Last train - short film by karthik subbaraj



*

THERE IS NOTHING CALLED A LAST TRAIN ....

*

Sunday, November 20, 2011

535. Oh! JESUS CHRIST !!!




*

Oh! Jesus Christ! Entry through a back door is not a barely legal option even if you go there for paying a deposit.

But considering a flatulence (A state of excessive gas in the alimentary canal ... புர் .. புர்ர்.. ...!) like a murder is crazy.

With dope a drunk may molest any one even with headlights on! Damn devil, he should be an idiot.

ஜாக்கிரதை! மேலே உள்ள மூன்று சொற்றொடர்களை நீங்கள் SMS செய்தால் உங்கள் மீது காவல் துறை நடவடிக்கை எடுக்கலாம். கடும் தண்டனை நிச்சயம்!

நல்ல வேளை இதெல்லாம் இங்கில்லை. பக்கத்து ஊரு பாக்கிஸ்தானில் தான். ‘athlete's foot,' ‘back door,' ‘barely legal,' ‘damn,' ‘deposit,' ‘devil,' ‘dope,' ‘drunk,' ‘flatulence,' ‘headlights,' ‘idiot,' ‘Jesus Christ,' ‘molest,' and ‘murder.'
இதுபோன்ற 1695 வார்த்தைகளைப் பயன்படுத்தக் கூடாதென (அவைகள் அப்படி ஒன்றும் கெட்ட வார்த்தைகள் கூட இல்லையே!)
அரசு சட்டம் போட்டிருக்கிறதாம்.

இங்கே வாசித்துக் கொள்ளுங்கள்.

இந்த வார்த்தைகளை ஏன் அந்த அரசு இப்படி புத்திசாலித்தனமாகத் தடை செய்திருக்கிறது என்பது உங்களுக்குத் தெரிந்தால் சொல்லுங்கள்; நானும் தெரிந்து உய்வடைகிறேனே ...!




*


Monday, November 07, 2011

534. அய்யனாரும் நானும்

*


கடந்த ஞாயிற்றுக் கிழமை நண்பர் வீட்டில் ஒரு விழாவிற்கு அழைத்திருந்தார்கள். போயிருந்தோம். சாப்பாட்டு நேரம். மாடியில் சாப்பாடு. கொஞ்சம் காத்திருக்க வேண்டியதிருந்தது. நானும் தங்க்ஸும் உட்கார்ந்திருந்த இடத்தில் என் வயதுக்காரர் ஒருவர் எதிரில் வந்து உட்கார்ந்தார். சைஸான தாடி வைத்திருந்தார். கலகலப்பாகப் பேசினார். இந்தியா முழுவதும் ரவுண்ட் அடித்தேன் என்றார். ஒரே மகளின் கணவர் இராணுவத்தில் இருந்ததால் இந்த வாய்ப்பு என்றார். கையில் தன் பெயரைப் பச்சை குத்தியிருந்தார். பெயர்: அய்யனார். தங்க்ஸ் அவர் கையில் இருந்த பெரிய மோதிரத்தைக் காண்பித்தார்கள். பெரிய எம்.ஜி.ஆர். படம் போட்ட தங்க மோதிரம். செம சைஸ். மோதிரத்தைப் பெருமையாகக் காண்பிக்கும்போது தான் அந்தக் கையிலும் ஒரு பச்சை பார்த்தேன். அ.தி.மு.க. படம் போட்ட பச்சை. எம்.ஜி.ஆர். தன் கட்சிக்காரர்கள் எல்லோரும் கையில் பச்சை குத்திக் கொள்ளுங்கள் என்றார். (ஆனால் அவர் மட்டும் பச்சை குத்திக் கொள்ளவில்லை.) பக்தர்கள் எல்லோரும் உடனே பச்சை குத்திக் கொண்டனர். இவரும் இதற்காகச் சென்னை போய் அங்கு பச்சை குத்திக் கொண்டாராம். அப்போதுதான் சொன்னார் அவர் ஊர் ஸ்ரீவில்லிப்புத்தூர் பக்கத்தில். தாமரைக்கனி நல்ல நண்பராம். அதுதான் அந்த சைஸில் மோதிரமா என்றேன். சிரித்துக் கொண்டார்.

அரசியல் பேசினோம். இன்னும் எம்.ஜி.ஆரின் பக்தர்தானாம். ஆனால் மம்மி பிடிக்காதாம். ஆனால் ஓட்டு மட்டும் எம்.ஜி.ஆருக்காக இன்றும் அ.தி.மு.க. தானாம். இருவரும் இந்தி திணிப்பு எதிர்ப்புப் போராட்டம் பற்றி பேசினோம். அப்போது அவர் என்னைவிடச் சின்னவர் என்று தெரிந்தது. அப்படித்தானா என்று கேட்டேன். என் வயதைக் கேட்டார். அவர் வயதைச் சொல்ல என்னமோ தயக்கம். ஆனால் அப்போது பள்ளியில் படித்ததாகச் சொன்னார். வயசெல்லாம் யாருக்குங்க தெரியும் என்று சொல்லி விட்டார். நன்றாகப் பேசிக்கொண்டிருந்தோம். இருவரின் wave length-க்கு ஒன்றும் குறைச்சலில்லை. வட இந்தியப் பயணம் .. பார்த்த இடங்கள் .. நன்கு நேரம் போய்க்கொண்டிருந்தது. பாவம் போல் தங்க்ஸும் பக்கத்தில் உட்கார்ந்திருந்தார்கள்.

எங்கள் ‘வண்டி’ நன்றாக ஓடிக்கொண்டிருந்த போது இன்னொருவர் எங்களருகில் வந்து உட்கார்ந்தார். அவரும் எங்கள் வயதை ஒட்டிய ஆள்தான். அய்யனார் ஊர்தானாம். சாப்பாடெல்லாம் முடித்து விட்டு வந்தவர் எங்கள் பக்கத்தில் உட்கார்வதற்குள் என் புதிய நண்பர் அய்யனாரைப் பற்றி சில குறைகள் சொல்ல ஆரம்பித்தார். அய்யனார் கொஞ்சம் திகைத்தார். அவரது uneasiness எனக்குப் புரிந்தது. புதிதாக வந்தவரிடம் வேறு பேச்சு பேசுவோமா .. நீங்கள் வருவது வரை வேறு பல விஷயங்கள் நன்றாகப் பேசிக் கொண்டிருந்தோம் என்றேன்.

அய்யனார் என்னிடம் நாம் எப்படி நன்றாகப் பழகிக்கொண்டிருந்தோம். இவர் வந்து கெடுத்து விட்டாரே என்றார். சமாதானம் செய்வதற்குள் புதிதாக வந்தவர் சாமி, கடவுள் என்று ஏதோ பேச ஆரம்பித்தார். அய்யனார் அப்போது சொன்னார் புதிதாக வந்தவர் ஒரு கிறித்துவ பாதிரி என்று. அவரிடம் நான் மறுபடியும் பேச்சை மாற்ற முயன்றேன். என்னைப் பேச விடாது மேலும் தொடர்ந்தார். நீங்கள் ஒரு பாதிரியார். எப்போதும் உங்களுக்கு நீங்கள் பேசி மற்றவர்கள் கேட்பதுதான் பழக்கமாக இருக்கும். மற்றவர்கள் பேசி நீங்கள் கேட்ட பழக்கம் உங்களுக்குக் கிடையாது என்றேன். உடனே கொஞ்சம் சுருதியைக் குறைத்தார். (இப்போது தங்க்ஸிடமிருந்து முதல் கிள்ளு கிடைத்தது.) ஆனாலும் பாதிரியாரின் வீரியம் குறையவில்லை. ஒரு விஷயத்தைப் போட்டு உடைத்தார். நம் நண்பர் அய்யனார் இப்போது ஒரு இஸ்லாமியர் என்றார். பாதிரியாருக்கு செம கோபம். அந்தக் கோபத்தில் தான் சூடாகப் பேசி விட்டிருப்பார் போலும். இஸ்லாமியராக ஆகி 19 வருஷம் ஆச்சாம்.

இஸ்லாமியர் என்கிறார். கையில் எம்.ஜி.ஆர். மோதிரம். வீட்டுக்குப் போனால் பெரிய தாமரைக்கனியோடு உள்ள படம் அது .. இது .. என்று அய்யனாரை சாடினார் பாதிரியார். (அய்யனார் சொன்ன பெயர் என் மனதில் நிற்கவில்லை. அது ஒரு 'A'-ல் ஆரம்பிக்கும் ஒரு பெயர்.) நான் பாய்க்குப் பரிந்து பேசினேன். பாதிரியாரிடம் உங்களுக்கு ஏசுவைத்தவிர எந்த மனிதர் பிடிக்கும் என்றேன். ஒன்றும் சொல்லவில்லை. காந்தியைப் பிடிக்குமா என்றேன். ஆஹா என்றார். உங்களுக்குக் காந்தி பிடிப்பது போல் அவருக்கு எம்.ஜி.ஆர். பிடிக்குது; இதிலென்ன தப்பு என்றேன். எப்படி இஸ்லாமிற்குச் சென்றீர்கள் என்று அய்யனாரிடம் கேட்டேன். அவர் பதில் சொல்வதற்கு முன் பாதிரியார் எல்லாம் இஸ்லாமியரின் பிரச்சாரம் என்றார். நான் ‘கிறித்துவர்களை விடவா இஸ்லாமியர்கள் ‘ஆள் பிடிக்கிறார்கள்’ என்று கேட்டேன். மனிதர் பாவம் .. மயிலிறகு எடுத்துக்கிட்டு சாம்பிராணி தட்டோடு சில இஸ்லாமியர்கள் பாவம் போல் வருவார்களே ... அவர்களை பார்த்து, அவர்களெல்லோரும் மதம் பரப்ப வருபவர்கள் என்றார். மறுத்தேன்.காசு கொடுத்து மாற்றுகிறார்கள் என்றார். அதை வெளிப்படையாகச் செய்யும் மதம் எது என்று தெரியாதா என்றேன். (அடுத்த கிள்ளு ..) நாங்கள் உதவி மட்டும்தான் செய்கிறோம் என்றார். எப்படியென்று எனக்கும் தெரியுமே என்றேன். உங்கள் மதம் என்னவென்றார். ஒன்றுமில்லை என்றேன். அது எப்படி என்றார். கிறித்துவனாகப் பிறந்தேன்; இப்போது இல்லையென்றேன். அது எப்படியிருக்க முடியும் என்றார். நான் இருக்கிறேனே என்றேன். சாமி கும்பிடாதவர்கள் நல்லவர்களாக இருக்க முடியாது என்றார். உங்களால் முடியாது என்று சொல்லுங்கள். ஒப்புக் கொள்கிறேன் என்றேன். மற்றவர்களைப் பற்றி உங்களுக்கு என்ன தெரியும் என்றேன். (தங்க்ஸ் தோளைப் பிடித்து இழுத்து என் காதில் வன்மையாகக் ‘கடித்தார்’!) (ஆனால் இப்போது ‘மீனாட்சிபுர நிகழ்வு’ எப்படி நடந்தது என்று ஒரு கேள்வி என் மனதிற்குள் எழுந்தது.)

அய்யனாருக்கு இவரு நம்ம ஆளு என்று என்னைப் பார்த்து தோன்ற ஆரம்பித்து விட்டது. இருவரும் சேர்ந்து பாதிரியாரை ஓரங்கட்டி விட்டோம். அய்யனார் கடைசியில் ஒரு போடு போட்டார். நாங்கள் இப்போது தான் சந்தித்து நல்ல நட்போடு இருந்தோம். நீங்கள் வந்து கலைக்கப் பார்த்தீர்கள். நாளை நாம் இருவரும் வந்தால் சார் என்னோடுதான் பழகுவார் என்றார். நானும் அது சரியென்றேன். பாதிரியாருக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை; எங்களை சாப்பிடப் போகச் சொல்லி வேகப்படுத்தினார்.

நானும் அய்யனாரும் சாப்பிடக் கிளம்பினோம். எனக்கு இரண்டு கேள்விகள் இருந்தன. எப்படி அல்லது ஏன் அய்யனார் இஸ்லாமிற்குச் சென்றார்; இஸ்லாம் பற்றித் தெரிந்த பிறகு அந்த மதத்திற்குச் சென்றாரா?

படியில் ஏறும்போது முதல் கேள்வி கேட்டேன். நானாகப் போனேன் என்று ரொம்ப சுருக்கமாகச் சொல்லிவிட்டார். அதற்குமேல் ஏதும் சொல்லவில்லை. விட்டுவிட்டேன். சாப்பிடும்போது இரண்டாம் தடவை சோறு வைக்க வந்த அவரது உறவினரிடம் நான் இரண்டாம் தடவை சோறு வாங்கக் கூடாது’ப்பா என்றார். நான் ஏனென்று கேட்டேன். எங்கள் மார்க்கத்தில் அப்படி சொல்லியிருக்கிறது என்றார். ஒரே தட்டில் பிரியாணி வைத்து அரேபியர்கள் உணவருந்துவார்கள் என்ற எண்ணம் நினைவுக்கு வந்தது. அது ஏன் என்றேன். அப்படித்தான் சொல்லியிருக்கிறது என்றார்.வாசிச்சீங்களா என்றேன். ஹஸ்ரத் (ஹஸ்ரத் என்றுதான் நினைக்கிறேன். இதுவா அல்லது வேறு வார்த்தை சொன்னாரான்னு தெரியலை.) சொன்னார் என்றார்.

நானும் அதோடு விட்டிருக்கலாம். ஆனால் அய்யனார் அடுத்த பாய்ன்ட் ஒன்று சொன்னார்: எங்கள் மார்க்கத்தில் எல்லாம் அறிவியல் படிதான் இருக்கும் என்றார். அப்டின்னு ஹஸ்ரத் சொன்னாரா என்றேன்.(ஆஹா .. எப்படியோ ஒரு brain washing தான்.) ஆமா, தங்க நகை போடக்கூடாதே ... எப்படி போட்டிருக்கிறீங்கன்னு கேட்டேன். போட வேண்டாம்னு சொன்னாங்க. ஆனா எனக்கு பிடிச்சது என்று சொல்லிவிட்டு இன்னொரு சமூகக் காரணம் சொன்னார். அவர் மட்டுமே இஸ்லாமிற்கு வந்தாராம். இவங்க ஊரில் பாய் என்றால் இவர் மட்டும் தானாம். நானே தங்க மோதிரத்தை எடுத்துட்டு நின்னா மக்கள் ஒரு மாதிரி பேசுவாங்கல்லா .. அதான் போட்டுக்கிட்டேன் என்றார். அதோடு நின்னாரா, தங்கம் பெண்கள் போடலாம். ஆண்கள்தான் போடக்கூடாது என்றார். ஏன் என்றேன். ஆண்கள் உடல் ரொம்ப சூடு என்றார். பெண்கள் உடல் என்று கேட்டேன். அப்படியெல்லாம் இல்லை என்றார். எனக்குத் தெரிஞ்சி அப்படியெல்லாம் ஒண்ணுமில்லை. உங்கள் வயத்துக்கு எதெது சரியோ அதுவே பெண்கள் வயிற்றுக்கும் சரி என்றேன். (மாம்பழத்தை மாதிரிக்கு சொன்னேன்.)சிரித்துக் கொண்டார்.

சாப்பிட்டு விட்டு கீழே வந்தோம். அப்போது பார்த்தேன். வேட்டி கரண்டைக்காலுக்கு மேலே இருந்தது. ஓ! மார்க்கம் சொல்றது மாதிரி வேட்டி கட்டியிருக்கிறீர்களே என்றேன். ஆமாம் .. அது எதுக்குன்னா ... தொழுகை சமயத்தில் (சொன்ன ஒரு வார்த்தை புரியவில்லை .. மண்டி போடுவது பற்றி ஒரு வார்த்தை சொன்னார்; காதில் ஏறவில்லை.) நாங்கள் 16 தடவை மண்டியிடுவோம். அதனால் முழங்காலில் கூட வடு வந்து விடும் என்றார். அதற்காகத்தான் வேட்டியை ஏற கட்டணும் என்றார். அப்போ pants போடுவோர் என்ன செய்வார்கள் என்றேன். சிரித்தார்.

நானும் தாடிவைக்க இப்போது முயற்சியெடுத்துக் கொண்டிருந்தேன். அதைப் பார்த்து சில ஐடியா கொடுத்தார். அதோடு நிற்காமல், தாடி வைத்தால் கண் நன்றாகத் தெரியும் என்றார். யார் சொன்னது என்றேன். ஹஸ்ரத் என்று சொல்லவில்லை; ஆனால் அதைத்தான் சொல்ல வந்தார். எந்த கண் டாக்டரும் அப்படி சொல்லவில்லையே என்றேன். கண்னுக்கும் தாடிக்கும் என்ன இருக்கு? உங்க நபி இஸ்லாமியரை யூதர்கள், கிறித்துவர்களிடமிருந்து வேறுபடுத்த சொன்ன விஷயம்தானே தாடி என்றேன். ஒரு சின்ன சிரிப்பு அவரிடமிருந்து!

படாரென்று ஒன்றைப் போட்டு உடைத்தார். அதெல்லாம் அந்தக் காலத்திற்காக நபி சொன்னது என்று சொல்லி உண்மையை உடைச்சார். ஆமாங்க .. அன்னைக்கி சரியா இருந்த விஷயம் இன்னைக்கி சரியா இருக்கணும்னு இல்லை இல்லையா? அன்னைக்கு சண்டை போட்டுக்கிட்டு இருந்த காலத்தில் ஒரு ஆணுக்கு 4 பொண்டாட்டி சரி.. ஆனால் இன்னைக்கு அது தாங்குமா .. இல்ல .. சரியா என்றேன். கரெக்ட் என்றார்.

தங்கஸ் - இப்போ கொஞ்சம் தள்ளி நின்னுக்கிட்டு இருந்தாங்க - முறைச்சாங்க. மழைமேகம் கூடி இருட்டிக்கிட்டு இருந்தது. அய்யனார் குடும்பமும் புறப்படத் தயாரானார்கள். நானும் former-அய்யனாரும் கை குலுக்கிக் கொண்டோம் அடுத்த முறை வரும்போது கட்டாயம் வீட்டுக்கு வருவதாகச் சொன்னார். விடை பெற்றோம்.
*
இன்னொன்று சொல்ல மறந்தேனே!

பாதிரியார் அய்யனார் மதம் மாறியதைச் சொல்லி விட்டு, இதையெல்லாம் விட்டுட வேண்டியதுதானே என்றார். நான் எதற்காக அவர் நம்புறதை விடணும் என்றேன். அதற்குள் அய்யனார் நாங்க அப்படியெல்லாம் உட்டுட்டு வரக்கூடாது அப்டின்னார். பாதிரியாருக்கு உள்விஷயம் புரியலை. எடுத்துச் சொன்னேன் - அவங்க மதத்தில சேர்ந்துட்டு உட்டுட்டு வரமுடியாதுன்னேன். பாதிரியாருக்கு ஆச்சரியம். என்ன ஆகும் என்று கேட்டார். நம்மூர்ல ரொம்ப பெருசா தொல்லையில்லை. ஆனால் இஸ்லாமிய நாடுகளில் ரொம்ப ஆபத்து அப்டின்னேன்.

அய்யனாரைப் பார்த்து ஆனா இப்படி அடைச்சி வக்கிறது சரியான்னேன். பிடிச்சி சேர்ந்தா, நம்பிக்கை வச்சிட்டா அங்கதான இருக்கணும் அப்டின்னார். நீங்க இந்து மதத்தில இருந்து மாறுனது தப்பான்னு கேட்டேன். இல்லைன்னார். அப்போ அதேமாதிரி இந்த மதத்திலிருந்து மாறினால் மட்டும் என்ன தப்புன்னேன். ஒண்ணும் சொல்லலை.

பாதிரியாரின் ஆச்சரியம் இன்னும் தீரலை.

*


Thursday, November 03, 2011

533. Gaddafi - A dictator or a rebellion ?

*
16 Reasons to believe Gaddafi is a dictator.
  1. There is no electricity bill in Libya; electricity is free for all its citizens.
  2. There is no interest on loans, banks in Libya are state-owned and loans given to all its citizens at zero percent interest by law.
  3. Having a home considered a human right in Libya.
  4. All newlyweds in Libya receive $60,000 dinar (U.S.$50,000) by the government to buy their first apartment so to help start up the family.
  5. Education and medical treatments are free in Libya. Before Gaddafi only 25 percent of Libyans were literate. Today, the figure is 83 percent.
  6. Should Libyans want to take up farming career, they would receive farming land, a farming house, equipments, seeds and livestock to kickstart their farms are all for free.
  7. If Libyans cannot find the education or medical facilities they need, the government funds them to go abroad, for it is not only paid for, but they get a U.S.$2,300/month for accommodation and car allowance.
  8. If a Libyan buys a car, the government subsidizes 50 percent of the price.
  9. The price of petrol in Libya is $0.14 per liter.
  10. Libya has no external debt and its reserves amounting to $150 billion are now frozen globally.
  11. If a Libyan is unable to get employment after graduation the state would pay the average salary of the profession, as if he or she is employed, until employment is found.
  12. A portion of every Libyan oil sale is credited directly to the bank accounts of all Libyan citizens.
  13. A mother who gives birth to a child receive U.S.$5,000.
  14. 40 loaves of bread in Libya costs $0.15.
  15. 25 percent of Libyans have a university degree.
  16. Gaddafi carried out the world’s largest irrigation project, known as the Great Manmade River project, to make water readily available throughout the desert country.

A documentary that discusses all these things is here -
http://www.youtube.com/watch?v=0Fwcntl7BeM

The reason Gaddafi was driven out and killed was not because he was a dictator, but because Libya had the purest petroleum in the world in abundance and because Gaddafi did not allow the western countries to capture it cheap and because Gaddafi driven out the IMF and World Bank by nationalizing all the banks in his country and because he supported anti-American and anti-western movements all over the world and  various other reasons.
This staged 'revolution of Libya' followed by the killing of Gaddafi shows how easy it is for the G7 countries to cheat the common masses(people like you and me) through media and propaganda; to create a fake revolution and to kill a leader whom they don't want.
*







Thursday, October 27, 2011

532. WHY I AM NOT A CHRISTIAN ... 1




*
அடுத்த 2-ம் பதிவு ...

WHY I AM NOT A CHRISTIAN 
and other essays on religion and related subjects

First published in 1957

*


பெர்ட்ரண்ட் ரஸ்ஸல்  - 1872 - 1970


* போர்களுக்கும் காலனியாதிக்கத்திற்கும்  எதிராகக் குரல் கொடுத்தவர். 
* ஹிட்லருக்கு எதிரான கருத்துப் போராட்டத்தை நடத்தியவர். 
* அமெரிக்காவின் வியட்நாம் யுத்தத்தைக் கடுமையாக எதிர்த்தவர்; 
* அணுகுண்டு அழிப்புக்கும்  குரலெழுப்பியவர்.

மனிதப் பண்பாடுகளுக்காகவும், சுதந்திரத்திற்காகவும் அவர் எழுதிய இலக்கியத்திற்காக 1950-ல் இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்றவர்.  

*
Richard Dawkins  நூலில் பார்த்தது போலவே இந்நூலிலும் கிறித்துவத்திற்கு என்று சொல்லப்படும் பல கருத்துக்கள் ஆப்ரஹாமிய மதங்களுக்கும் பொதுவானது என்றே கொள்ள வேண்டும்.


CHAPTER I
WHY I AM NOT A CHRISTIAN

மக்கள்  பலரும் கடவுள் நம்பிக்கையுள்ளவர்களாக இருப்பதற்கான காரணம் சிறு வயதிலிருந்தே அவர்களுக்கு அந்த நம்பிக்கை கற்றுக் கொடுக்கப்படுகிறது.

‘வலது கன்னத்தில்  அடித்தால் அடுத்த கன்னத்தைக் காண்பி’ - இது ஒன்றும் புதியதல்ல.கிறிஸ்துவிற்கு ஐந்து, ஆறு நூற்றாண்டுகளுக்கு முன்பே புத்தரும், Lao-Tze-வும் சொன்னவைகளே. (20)

’உன் சொத்துகளை விற்று ஏழைகளுக்குக் கொடுத்து விடு’  - நல்ல கோட்பாடு; ஆனால் வாழ்க்கையில் பயன்படுத்த முடியாத ஒன்று. (21)

கிறிஸ்துவின் நல்லொழுக்கக் கோட்பாடுகளில் எனக்கொரு ஐயம். அவர் நரகத்தை நம்பினார். ஆனால் மனிதத்தன்மையுள்ள எவரும் அப்படியொரு கால வரையற்ற தண்டனையை நம்ப முடியாது. 

அவருடைய போதனைகளுக்கு எதிராகச் செல்லும் எவருக்கும் இத்தகைய கொடூரமான நீண்ட தண்டனை என்பது கிறித்துவின் உயர் பண்புகளுக்கு எதிரானதாக இருக்கிறது. (22)

பாவங்களுக்கான சம்பளம் நரகம் என்பது கொடூரத்தின் உச்சம். கிறிஸ்துவின் இந்தக் கோட்பாடு உலகத்தின் வரலாற்றில்  நடந்த பல வன்முறைகளுக்கு காரணமாக இருந்திருக்கிறது.

அத்தி மரத்தை நோக்கிப் பசியோடு வந்த ஏசு அங்கே வெறும் இலைகளே இருப்பதைக் காண்கிறார். கோபமுற்று ‘இனி நீ கனி கொடுக்கவே மாட்டாய்; உன் கனியை இனி யாரும் உண்ணவே கூடாது’ என்று சாபமளிக்கிறார். பின்னால் வந்த சீடர்கள் அம்மரம் அவரது சாபத்தால் பட்டுப் போனதை அவரிடம் சொல்கிறார்கள். (மத் : 21; 19;  மாற் : 11 : 14)  விநோதமான கதை இது. தவறான கால கட்டத்தில் கனி கொடுக்கவில்லையென்று மரத்தைக் கோவிப்பதா?

அறிவு சார்ந்த விஷயத்திலோ, பண்பாட்டு விஷயத்திலோ வரலாற்றில் வரும் பலரோடு சேர்த்து வைத்துப் பார்க்கும்போது கிறித்துவிற்கு உயர்ந்த இடம் கொடுக்க முடியவில்லை; புத்தரையும் சாக்ரட்டீஸையும் இதைவிட உயர்ந்த இடத்தில் வைக்கலாம். (24)

நம்பிக்கையோடு இருப்பவர்கள் விவாதத்திற்கு அப்பாற்பட்டவர்கள்; ஏனெனில் அவர்களது நம்பிக்கைகள் எல்லாமே உணர்ச்சி வசப்பட்டவை. (emotional)
ஆசிரியர் Samuel Butler எழுதிய Erewhon Revisited என்ற அங்கத நாவலின் கதையைக் கூறுகிறார். நல்ல கதை. குட்டிக் கதையாக, இங்கே இருப்பதை வாசித்துப் பாருங்கள். நமது நம்பிக்கைகளின் பிறப்பிடத்தின் ‘ரகசியம்’ புரியும்!

கிறித்துவ நம்பிக்கைகள் இல்லாதவர்கள் மிகவும் கெட்டவர்களாக இருப்பார்கள் என்பதும் ஒரு நம்பிக்கை. ஆனால் மத  நம்பிக்கையுடையவர்கள்தான் அனேகமாக அப்படிப்பட்ட கெட்டவர்களாக இருப்பார்களென நினைக்கிறேன்.

உங்களைச் சுற்றிப் பார்த்தால் உலகத்தில் ஒவ்வொரு மனித உணர்வுகளின்  முன்னேற்றத்திற்கும், குற்றத்தடைச் சட்டம் ஒவ்வொன்றின் முன்னேற்றத்திற்கும், நமக்குள் நடக்கும் யுத்தங்களைக் குறைக்க எடுக்கப்படும் முயற்சிகளுக்கும், நிறவெறிகளைக் குறைக்க எடுக்கும் நடவடிக்கைகளுக்கும்,   அடிமைத்தனத்தை ஒழிக்க எடுக்கப் படும் செயல்களுக்கும், பண்பாட்டு முன்னேற்றத்திற்கான முயற்சிகளுக்கும் கிறித்துவ மதம் எதிர்ப்பாகவே இருந்து வந்துள்ளது. கோவில்கள் மூலமாக இயங்கும் கிறித்துவ மதம் இப்பொதும் எப்போதும் உலகின் பண்பாட்டு வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாகவே இருந்து வந்துள்ளது என்று நான் துணிந்து சொல்வேன்.

மதங்களின் முதல் முக்கியமான அடிப்படையே அச்சம் தான். புரியாதவைகளின் மேலுள்ள அச்சம் பாதியென்றால், அடுத்த பாதி நம் ‘பெரிய அண்ணன்’ ஒருவர் நமக்குத் தோள் கொடுக்க இருக்கிறார் என்ற நினைப்பும் ஒரு காரணமாயுள்ளது. (25)

*

CHAPTER II

HAS RELIGION MADE USEFUL CONTRIBUTIONS TO CIVILIZATIONS?

சமயங்களைப் பற்றிய என் கருத்துக்கள் Lucretius என்ற ரோமானிய தத்துவ ஞானியின் கருத்தோடு ஒன்றிப் போகிறது. சமயங்கள் பயத்தின் அடிப்படையில் பிறந்து மனித  குலத்திற்கு சொல்ல முடியாத மிகுந்த சோகங்களைத் தந்துள்ளன. ஆனாலும் மனித நாகரீகத்திற்கு அவைகள் பங்களித்திருக்கின்றன என்பதை நான் மறுக்கவில்லை. (27)

கிறித்துவம் பெண்களின் சமூக நிலையை மேலேற்றியதாகக் கூறுவதுண்டு; ஆனால் இது வரலாற்றை மிகவும் திரிக்கும் செயலாகும். (29)

ஏறத்தாழ ஒவ்வொரு கிறித்துவனும் சிறு வயதில் பாலியல் தொடர்பாகக் கொடுக்கப்பட்ட தடைகளால் முதிய வயதில் மனக் கோளாறுகளோடு இருப்பதுண்டு. பாலியலைப் பற்றிய செயற்கையான கருத்துக்கள்  மனித மனத்தில் கடுமை, அச்சம், மடத்தனம் போன்றவைகளை முதிய வயதில் ஏற்படுத்துகின்றன. (30)

ஒரு மனிதன் என்ன தவறு செய்வான் என்பது கடவுளுக்கு முன்பே தெரியுமென்றால்,  அப்படி ஒருவனைப் படைத்ததற்கும், அந்த மனிதன் செய்யும் எல்லா தவறுகளுக்கும் கடவுள் தானே பொறுப்பு. 

உலகத்தில் மனிதனுக்கு வரும் துன்பங்கள் எல்லாமே அவனை தூய்மைப்படுத்துவதற்காக; ஆகவே துன்பங்கள் நல்லதே என்பது ஒரு கிறித்துவ விவாதம். ஆனால் இது ஒரு கொடுமையை அறிவுக்குப் பொருத்தமாக்கும்  (rationalization of sadism) முயற்சியேயொழிய வேறில்லை.


சமயங்களுக்கு எதிராக இரு வாதங்கள் உண்டு: ஒன்று அறிவு சார்ந்தது; மற்றொன்று பண்பாடு சார்ந்தது. அறிவு சார்ந்த எதிர்ப்பில் சமயங்கள் உண்மையென்று சொல்ல  சான்றுகள் ஏதும் இல்லை. பண்பாடு சார்ந்து எழும் விவாதத்தில்,  இப்போதிருக்கும் மனிதனை விட மிகவும் கொடூரமாக மனிதக் கூட்டம் இருந்த போது சமயங்கள் ஆரம்பித்தன. அப்போதிருந்த மனிதத் தன்மையற்றவைகளையும், இப்போதைய மனசாட்சிக்கு எதிரானவைகளையும் சமயங்கள் தொகுத்துக் காத்து வருகின்றன. (31)

மெக்ஸிகோவிலும்,. பெருவிலும் ஸ்பானியர்கள்  செவ்விந்தியர்களின் இளம் கைக்குழந்தைகளுக்கு ஞானஸ்நானம் (கிறித்துவத்திற்குள் கொண்டு வருதல்) கொடுத்து, உடனே அந்தக் குழந்தைகளைத் தரையிலடித்துக் கொன்று விடுவார்கள். அவர்கள் கொல்லும் குழந்தைகளுக்கு நேரே மோட்சம் ! அப்போதிருந்த அடிப்படை கிறித்துவனுக்கு அது தவறாகப் படவில்லை. ஆனால் இன்றைய நிலையில் எல்லோருக்கும் இது தவறு.

கிறித்துவத்தில் ஆன்மாவையும் உடலையும் பிரித்துப் பார்க்கும் முறையால் மிகவும் மோசமான விளைவுகள் நிகழ்ந்தன. (34)

யூதர்கள் தங்களின் நேர்மைத்தனத்தின் மீது வைத்திருந்த நம்பிக்கைகளும், தங்கள் யூதக் கடவுளே சரியான கடவுள் என்ற நம்பிக்கையும் தொடர்ந்து வருகின்றன. கிறித்துவ மதம் பரவிய காலந்தொட்டு மற்ற சமயங்கள் உண்மையல்ல என்ற சமய அடிப்படைவாதம் உலகந்தொட்டு வளர ஆரம்பித்தன. 

யூதர்களும் அதிலும் முக்கியமாக  தூதர்களும் தங்கள் நேர்மைத்தனத்தின் மீதான கடும் பிடிப்போடும், தங்கள் மதத்தைத் தவிர வேறு எந்த மதத்தின் மீதும் நம்பிக்கை கொள்வதைத் தாங்க முடியாதவர்களாகவும் இருந்தார்கள்.

நம் உலகம் உருவானது ஆறாயிரம் ஆண்டுகளுக்கு முன்புதான் என்றால் இப்போது யாரும் நம்புவதில்லை. ஆனால் சில ஆண்டுகளுக்கு முன் இதை நம்பாதது பெரிய குற்றமாகக் கருதப்பட்டது. (35)

FREE-WILL - சுயாதீனம்:
இயற்கை நியதிகளின் மீதான கிறித்துவர்களின் எண்ணங்கள் நிச்சயமற்றதாகவும், பெரிதும் உறுதியற்றதாகவும் இருந்தன. சுயாதீனம் (free-will) என்பதையே பெரும்பாலான கிறித்துவர்கள் நம்பினார்கள்.  இந்த சுயாதீனத்தால் மனித குலம் இயற்கை நியதிகளுக்கு உட்பட்டவர்கள் அல்ல என்ற நம்பிக்கை அவர்களிடமிருந்தது. (36)

சுயாதீனத்தைப் பற்றிய கேள்விகள் இன்னும் கேள்விகளாகவே நிற்கின்றன. யாரும் நடப்பியல் வாழ்க்கையில் அதை நம்புவதாக இல்லை. (37)

கார் ஒன்று கோளாறாகி நின்றால் அதை ஒரு பாவமாகப் பார்ப்பதில்லை; அதில் என்ன தகராறு என்று பார்ப்பதே இயல்பு. அதை விட்டு விட்டு ’இந்த கார் பாவம் செய்து விட்டது’ என்று கூறுவதில்லை. அதைப் போலவே ஒரு மனிதனையும் பார்க்க வேண்டும் என்பது சமயங்களுக்கு எதிரான ஒரு கொள்கையாகப் பார்க்கப்படுகிறது. (38)

ஆபிரஹாமிய மதத் தூதுவர்கள் சொல்வதெல்லாம் உண்மை; ஜெஹோவாவின் எண்ணமும் அதுவே என்று சொல்வதுண்டு. (’இது பரிசுத்த ஆவிக்கும் எங்களுக்கும் நல்லது என்று தெரியும்’. நடவடிக்கை: 25:28) இன்னொரு தூதுவர் வந்ததும் முந்திய தூதர்களின் வார்த்தைகளை விட என் வார்த்தைகளே சரியானவை என்று சொல்வதும் கண்கூடு. (40)

கிறித்துவத்தில் அறிவு பாவமாக முந்திய காலத்தில் பார்த்தைப் போல் இப்போது பார்க்கப்படுவதில்லை. ஆனாலும் அது பாவமில்லாவிட்டாலும் அது ஆபத்தானது; ஏனெனில், அறிவு ஒருவனைப் புத்திசாலியாக்குகிறது; அதன் மூலம் அவன் கிறித்துவக் கொள்கைகளை கேள்வி கேட்கலாம்.(41)

சமயங்கள் பகுத்தறிவான படிப்பினையைக் குழந்தைகளுக்கு மறுக்கின்றன; சமயங்கள் பழைய பழக்க வழக்கங்களை, பாவம் தொடர்பான கருத்துக்களை,  தண்டனைகளைவிடாது பிடித்துக் கொண்டு, புதிய, அறிவியலோடு தொடர்புள்ளவைகளைத் தெரிந்து கொள்ள விடாது தடுக்கின்றன. 

மனித குலம் ஒரு புதிய பாதைக்கு இட்டுச் செல்லும் நுழை வாயிலில் நிற்கிறது. ஆனால் அதில் நுழைவதற்கு முன் ஒரு பெரிய ராட்சத மிருகத்தைக் கொல்ல வேண்டியதுள்ளது. அந்தக் கொடிய மிருகம் நமது சமயங்களே.


*



Friday, October 14, 2011

531. விளம்பரங்கள்

*

சமீபத்தில் பார்த்த பாட்டு & நடனத்தில் எனக்கு மிகவும் பிடித்தது -- விஜய் தொலைக்காட்சியில் வரும் விளம்பரப் படம் தான் --

“காலு கிலோ கறுப்புப் புளி
மஞ்சத் தூளு’டா ...

பையனுடைய entry, பாடுகின்ற பாட்டு, ஆடுகிற ஆட்டம், படப்பிடிப்பு எல்லாமே  மிக அழகு.  அந்தப் படம் எடுத்தவங்களுக்கு hats off !

பய புள்ள டான்சும் ரொம்பவே நல்லா இருக்கு ... கட்டாயம் பாருங்க.





*

ST கைப்பேசி விளம்பரத்தில் வருகிற நால்வருமே மிக அழகாக நடித்திருக்கிறார்கள். இருந்தாலும் அந்த நால்வரில் யார் மிக நன்றாக நடித்திருக்கிறார்கள்? வேலைக்கார அம்மா நன்கு பேசுகிறார். ஆனாலும் பேசாமலே நடித்த குண்டு பையன் கைப்புள்ளைக்குத் தான் முதலிடம்.


*
புரு காபி விளம்பரத்தில் வரும் அழகான பையன், ‘அம்மா சொன்னாங்க .. காபியில் ஸ்வீட்  இல்லாட்டா என்னடா; பொண்ணுதான் ஸ்வீட்டா இருக்கிறாளே’ என்று சொன்னதும் அந்தப் பெண் சிரிக்குமே பார்த்திருக்கிறீர்களா ...? என்ன ‘அழகு’!!



அடடா .. அந்த சீன் வரும்போது நான் வேறு பக்கம் பார்த்துக் கொள்வேன். தங்க்ஸ் ரொம்ப ஆசையா அந்த பொண்ணை, அதன் “சிரிப்பை” (!) பார்த்து ரசிப்பார்கள்.ஆனாலும் அவர்களுக்கு ஒரு பெரிய வருத்தம்: ஏன் இவ்வளவு அழகான பையனுக்கு இப்படியொரு ‘அழகான’ பெண் கிடைக்க வேண்டும்?

*

Raymonds விளம்பரப் படங்களில் வரும் மேல்நாட்டு இசை எங்கிருந்தெல்லாம் எடுக்கிறார்கள் என்று அப்படங்களைப் பார்க்கும் போதேல்லாம் ஒரு கேள்வி எழுகிறது. தெரிந்தவர்கள் சொல்லுங்கள் ... முழுதாகக் கேட்க ஆசை.


*

Sunday, October 02, 2011

530. சின்னச் சின்ன கேள்விகள்

*

எங்கள் பகுதி புதிதாக மதுரை பெருநகரப் பகுதியில் இணைந்து விட்டது. தேர்தலும் வந்து விட்டது. வேகமாகத் தான் வேட்பாளர்கள் வேலை பார்க்க ஆரம்பித்து விட்டார்கள். இதுவரை நான்கு வேட்பாளர்கள் நேரடியாக வீட்டிற்கு வந்து ஓட்டு கேட்டார்கள். ஏதோ புது வழக்கம் போலும். ஒவ்வொருவரும் ஒரு துண்டு எடுத்து வந்து தோளில் போர்த்தி ஓட்டு கேட்டார்கள். (பக்கத்தில் செல்லூர் பகுதி தறித் துண்டுகளுக்குப் பெயர் போன இடம். செல்லூர் கடைகளில் துண்டு விற்பதற்காக அட்சய திருதி மாதிரி ஏதோ பொய் சொல்லி துண்டு போடச் சொல்லிக் கொடுத்திருப்பார்கள் போலும். ) எல்லோரின் துண்டையும் அந்த வேட்பாளர்களுக்குத் திருப்பி தோளில் போட்டு வெற்றிக்கு வாழ்த்து சொல்லிட்டேன்.

பக்கத்து வீட்டுக்காரங்க துண்டை வாங்கிக்கிட்டாங்கல்லா என்று தங்க்ஸுக்கு வருத்தம்.

*** *** *** *** ***

புதுவை மாநில கல்வி அமைச்சர் கல்யாண சுந்தரம் 10-ம் வகுப்புகூட முடிக்கவில்லையாம். என்னே நமது ஜனநாயகம்! ’விவஸ்தை’ அப்டின்னு ஒரு வார்த்தை உண்டு. அது நினைவுக்கு வந்தது. யாருக்கு விவஸ்தை இல்லை - பதவி கொடுத்தவருக்கா?; வாங்கியவருக்கா?; இதெயெல்லாம் கண்டுக்காமல் தலைவிதியேன்னு போகிறவர்களுக்கா?

ஆனால் அமைச்சர் 10 படிச்சி, தேர்வு எழுதி, தேர்ச்சி பெற்று, அடுத்து ஒரு ‘டிகிரி’ வாங்கணும்னு ரொம்ப கஷ்டப்பட்டு படித்து தேர்வு எழுதினார் அப்டின்னு தினசரியில் வாசிச்சதும் மனசு அப்படியே எங்கேயோ போய்ட்டுது.

ஆனால் அடுத்த நாளே அவர் தேர்வு எழுதாம, அதுக்கு ஒரு ஆளை அனுப்பிச்சிட்டார் அப்டின்னு செய்தி. மந்திரின்னா அதுகூட இல்லைன்னா எப்படி?

இப்போ தமிழ்நாட்டு கல்வி அமைச்சர் இதை புலன் விசாரணை செய்யப்போகிறாராம். ஏற்கெனவே பாண்டி முதலமைச்சர் தன் ”வழக்கத்தை” காப்பி அடிச்சிட்டார்னு ’மம்மி’ கோபத்தில் இருக்கிறாராம். கூட்டணிக் கட்சிகளைக் கேட்காமலேயே பாண்டி முதலமைச்சர் தன் அமைச்சர்களைத் தேர்ந்தெடுத்ததில் அவருக்குக் கோபம். இப்போ ஒரு அமைச்சர் கிடைத்திருக்கிறார். கஞ்சா வைத்து கைது செய்வது பழைய பழக்கம். இப்போது என்ன நடக்குமோ?

*** *** *** *** ***

19 ஆண்டுகளுக்கு முன்னால் வாச்சாத்தி பாலியல் குற்றங்கள் நடந்தன. இத்தனை ஆண்டுகளுக்குப் பின்னால் குற்றம் செய்தவர்கள் ஒரு நீதியரசரால் தண்டிக்கப்பட்டுள்ளார்கள். (இனி அடுத்த உயர்நிலைக்குத் தண்டனை பெற்றவர்கள் போகலாம்.)

எப்படியோ 19 ஆண்டுகள் ஆனாலும் செய்த குற்றம் தொடர்ந்து போய் அவர்களைத் தண்டித்திருக்கிறது.

இப்படி ஒரு நீதியரசர். ’மம்மி’யின் பிறந்த நாள் பரிசளிப்பு வழக்கில் C.B.I வழக்குப் பதிய பல ஆண்டுகள் எடுத்துக் கொண்டதால் குற்றத்தையே விட்டு விட்டார் இன்னொரு பெரிய நீதியரசர். வழக்கு போடாததால், செய்த குற்றம் இப்போது குற்றமில்லாமல் போய்விட்டது என்றொரு புதிய தத்துவத்தைப் பிறப்பித்து விட்டார்.

முன்பொரு நீதியரசர் டான்ஸி வழக்கில் குற்றம் செய்தவரை ‘தியானம்’ செய்யச் சொல்லி உத்தரவிட்டார். எப்படியெல்லாம் தப்பிக்கிறாங்கப்பா ...!

பொறந்தா ஒரு அரசியல்வாதியா பொறக்கணுங்க ... யாருக்கும், எதற்கும், எந்தக் குற்றத்திற்கும் தண்டனை இல்லை!

*** *** *** *** ***

நில அபகரிப்பிற்காகத் தனியமைப்பு எல்லாம் வைத்து பழைய அமைச்சர்களை (சிறிது நாட்களுக்காவது) சிறையில் போடுவதைப் பார்க்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது.

அப்படியே கொஞ்சம் பழைய கதைகளையும் எடுக்க சொல்லுங்க’ப்பா! அந்த ஊரு என்ன .. சிறுதாவூரில் தலித்துகள் நிலத்தை எடுத்ததையும் சேர்த்து எடுங்க ... ஆமா, ஏன் அந்த நிலைத்தை இழந்தவர்கள் இதுவ்ரை எந்த நியாயமும் தேடலை.

நம்ம கம்யூ. ஆளுங்க இதுவரை கூட்டணியில் இருந்தவங்க. இப்போ வெளியே தூக்கிப் போடப்பட்டவங்க .. இப்போவாவது அவர்களுக்கு சிறுதாவூரும் நினைவுக்கு வருமா?

*** *** *** *** ***

ஒரு பதிவு இப்போது தான் பார்த்தான். தொடுப்பு எடுக்க மறந்து போனது. ஸ்விஸ் வங்கிகளில் பணம் போட்டிருக்கும் நம்ம ஊர் ஆட்கள் - ராஜீவ் காந்தி, ப. சிதம்பரம், கருணாநிதி, ஸ்டாலின், ஆ. ராசா பெயர்களும் உண்டு - பற்றி விக்கிலீக்ஸ் கொடுத்த பட்டியல் கொடுத்திருந்தது.

அது ஒன்றுமே நடக்காதா?????

நாமும் பேசாமல் அந்த லிஸ்டை அடிக்கடி பார்த்து பெருமூச்சு விட்டுக் கொள்ள வேண்டியதுதானா???

*** *** *** *** ***

நாமளும் தான் காலங்காலமாய் இணையப் பதிவர்களாக இருக்கிறோம். ஆனால் அதைப் பற்றியெல்லாம் யாரும் கண்டுக்க மாட்டேங்கிறாங்களேன்னு தோணுச்சு. எப்போன்னு கேட்கிறீங்களா? இன்றைய Times of India -ன் Madurai Times-ல் ஒரு கட்டுரை. அனுஷா வின்சென்ட் என்பவர் எழுதியிருக்கிறார். யாரைப் பற்றி தெரியுமா? Tam-Bram பதிவர்களைப் பற்றி மட்டும் ஒரு கட்டுரை. special category!!??

அதன் தொடுப்பைக் கொடுக்க முயற்சித்தேன். கண்டுபிடிக்க முடியவில்லை. அதனால் கட்டுரையாசிரியருக்கே ஒரு மயில் போட்டிருக்கிறேன் - தொடுப்பு கொடுக்கச் சொல்லி!

*** *** *** ***





Saturday, September 10, 2011

529. பகுத்தறிவு பெருக்கெடுக்கும் அரசியல் ...

*

’புதிய தலைமுறை’ வந்த பிறகு செய்திகள் கேட்பது கொஞ்சம் அதிகமாகி விட்டது. நேற்று - 9.செப்ட். ஒரு செய்தி கேட்டேன். இன்று தினசரியில் வருமா என்று எதிர்பார்த்தேன். அந்த செய்தி வரவில்லை. (செய்திகளை முந்தி தருகிறது புதிய தலைமுறை ..!!)

நேற்றைய செய்தியில் ப்ரணாப் முகர்ஜி சொன்ன செய்தி ஒன்று வந்தது. ஜன லோக்பாலில் சொல்லியாகி விட்டது - அடிப்படை அரசு ஊழியர்களுக்கும் இந்த சட்டத்தில் இடமுண்டு என்று. அதனால் மத்திய அரசு புதியதாக மார் தட்டிக்கொண்டு ஒரு சட்டம் கொண்டு வரப் போகிறதாம். அடிப்படை நிலை ஊழியர்கள் தங்கள் பதவிக் காலத்தில் ஊழல் செய்யலாம்; எந்த அளவு ஊழல் செய்கிறார்களோ அதன்படி அவர்களது பதவி இறுதிக்காலத்தில் வரும் மொத்தப் பணத்தில் சில ‘டிஸ்கவுன்ட்’ செய்யப்படும் என்று ஒரு சட்டம். செய்தியில் பார்த்த வரிகள்: சிறிய அளவில் ஊழல் செய்தால் இறுதிப் பணத்தில் 10%, அதிக அளவில் ஊழல் செய்தால் 20% எடுக்கப்படும்!

அடப்பாவிகளா!  -- இப்படித்தான் சொல்லத் தோன்றுகிறது. யார் பெரிய மடையர்கள் என்று புரியவில்லை. எனக்கு வரும் வேலை முற்றுப் பணம் 10 லட்சம் என்று வைத்துக் கொள்வோம். நான் முதலில் இருந்தே “ஒழுங்காக” கணக்கு வைத்து ஊழல் செய்ய வேண்டும் போலும். 10 question paper விற்றால் 10% = 1 லட்சம் எடுத்துக் கொள்வார்கள்; அப்போ நான் விற்கும் ஒரு question paperக்கு பத்தாயிரத்திற்கு மேல் விலை வைக்க வேண்டுமோ? பெரிய ஊழல் செய்ய வேண்டுமென்றால் ஒரு கல்லூரி வாத்தியார்  என்ன செய்ய முடியும்னு தெரியலையே! சரி ... அப்படி ஒரு பெரிய ஊழல் செய்யணும்னா .. அது இரண்டு லட்சத்திற்கு மேல் வருமானம் வர்ர மாதிரி செய்யணும். எல்லாம் நல்லா யோசித்து ப்ளான் பண்ணணும் ! அப்போதான் ‘வரவுக்கும் செலவுக்கும்’ சரியா இருக்கும்.

சரி ... கடைநிலை ஊழியருக்கு இப்படி ஒரு தண்டனை. ஒரு அமைச்சன் கோடி கோடியாக ஊழல் செய்தால் அவனை என்ன செய்வார்கள். (மிஞ்சிப் போனால் நாலைந்து மாதம் ஏதாவது ஒரு சிறையில் வைத்து விட்டு அதன் பின் விடுதலை ... ஊழலில் திரட்டிய சொத்து ... அதை என்ன செய்வார்கள்? ஒன்றுமே செய்யவே மாட்டார்கள்.  அனைத்து சொத்தும் அவனுக்கும் அவன் பிள்ளைகளுக்கும், பேரப் பிள்ளைகளுக்கும் ....

என்ன மடத்தனமான திட்டம். ஊழல் செஞ்சா தண்டனை உண்டு; சாதாரணமாக வரவேண்டிய பணம் எதுவும் வராது; ... இப்படி ஏதும் சொன்னால் ஒரு பயம் இருக்கலாம். மக்கள் கொஞ்சம் ஒழுங்காக இருக்க முயலலாம். ஆனால் இந்த அரசு பட்டியல் போடுவது மாதிரி போட்டால் என்ன லாபமோ தெரியவில்லை; இந்த சட்டத்தைக் கொண்டுவந்த அந்த ‘அதீத புத்திசாலியை’ என்ன சொல்லி வாழ்த்துவது; இதை ஏற்றுக் கொண்ட அரசையும், அமைச்சரையும், அதிகாரிகளையும் என்ன சொல்லி வாழ்த்துவது என்றும் புரியவேயில்லை.

வெட்கக்கேடாக இருக்கிறது.

======================

சில செய்திகள் வருகின்றன -- 2G  ஊழலுக்கு பாடை கட்டியாகி விட்டது என்பது அந்தச் செய்தி.

2G ஊழலில் ராசாவும் கனிமொழியும் மன்மோகன், சிதம்பரம் பெயர்களை இழுத்ததும் மெல்ல மத்திய அரசு இதைப் பூசி மெழுகப் பார்க்கிறதாமே. C.B.I. ஒரு தகவல் தருகிறது; இந்த அமைப்பு இது வரை யாரையேனும் உருப்படியாக கழுவேற்றியுள்ளதா என்பதே ஒரு பெரிய கேள்வி. இதோடு C.A.G.சில தகவல்கள் தந்தன. ஆனால் இப்போது T.R.A.I. புதிய தகவல்களோடு வருகின்றன. 2G ஊழலில் அரசுக்கு ஏதும் நட்டமேயில்லை என்று ஒரு பெரும் போடு போடுகிறது.

ஆக, சீக்கிரம் ராசாவும், கனிமொழியும் எந்த ஊழலும் செய்யாதவர்கள் என்ற பட்டியலில் வெளிவருவார்கள்.

வெட்கக் கேடாக இருக்கிறது .......

=======================

மதுரையில் போன வாரத்தில் செய்தித் தாளில் வந்த செய்தி: வண்டிகளில் number plates  சரியான முறையில் எழுதப்பட்டிருக்க வேண்டும். இல்லையேல் தண்டனை என்று செய்தி.

சட்டம் என்று சொல்லி விட்டார்களே என்று யாராவது சரியாக எழுதாத தங்கள் வண்டி எண்களை மாற்றுகிறார்களா என்று பார்த்தால் அப்படி யாரும் இல்லை; அரசு ஒரு சட்டம் என்று ஒன்றைக் கொண்டு வந்தால் மக்கள் அதை நடைமுறைப்படுத்தினால் நல்லது. ’அட .. போங்கய்யா .. நாலைந்து நாளைக்கு போலீஸ் தேடும். கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக் கொண்டால் பிறகு என்ன’  என்ற மனப்பான்மை நம்மில் அநேகருக்கு.

ஏன் நாம் மட்டும் இப்படி சட்டங்களை மதிக்காத மாக்களாக இருந்து தொலைக்கிறோம் ...?

நம்ம ஊர்  மக்களை நான் நல்லாவே பார்த்து விட்டேன். சட்டம் என்றால் மதிக்கும் மனப்பான்மையே கிடையாது. ஆனால் அரசு கொஞ்சம் ‘கையை ஓங்கினால்’ அனைத்தும் சரண்டர்! இரண்டு சான்றுகள்: இந்திராவின் அவசரகாலச் சட்டத்தில் நம் தமிழ் மக்கள் அடைந்திருந்த முட்டாள்தனமான அடிமைத் தனத்தைக் கண்கூடாகக் கண்டிருக்கிறேன். உதாரணமாக, மூன்று முறை வேலைக்குத் தாமதமாக வந்தால் தண்டனை என்று ஒரு பேச்சு - வெறும் பேச்சுதான் - அடிபட்டது. அடேயப்பா ... மக்கள் பதறிப் போய் சரியான காலத்திற்கு அலுவலகம் வந்தது எனக்கு ஒரு அவலமாகப் பட்டது. இது போல் நம் தமிழ் நாட்டில் நடந்தவைகளைப் பார்த்த போது எனக்கு ஏற்பட்ட எண்ணம்: இந்த மக்களுக்கு முதுகெலும்பு என்பதே கிடையாது; வெறும் பூச்சிகள் .. புழுக்கள். வெட்டு வீராப்புகள்.

மதுரையிலேயே இன்றும் நடக்கும் ஒரு வழக்கம். சாலையில் ஒரு சண்டை என்று வைத்துக் கொள்ளுங்கள்.  யாராவது ஒருவன் ‘ஏய் .. ஆள் தெரியாம விளையாடாதே!’ என்று அடுத்தவனைப் பார்த்து முதலில் எவன் சொல்கிறானோ அவனே வின்னர்!

இரண்டாவது சான்று: ஜெயலலிதா மழைநீர் வடிகால் திட்டம் நல்ல ஒரு ‘பய முறுத்தலில்’ அழகாக நடந்தேறியது.

நமக்கு எது சரி அதன்படி நடக்க வேண்டும்; கம்பெடுத்தால் மட்டும் ஆடக்கூடாது; சட்டம் என்று ஒன்றிருந்தால் அதைக் கடைப்பிடிக்க வேண்டும் ... இப்படியெல்லாம் நமக்கு எப்போது தோன்றும்????????




*


Friday, September 09, 2011

528. பகுத்தறிவு பெருக்கெடுக்கும் சீரியல் - “தங்கம்”

*

யார் சொன்னது தொலைக்காட்சியில் நீள்தொடர்கள் பார்ப்பது தப்பு என்று. எவ்வளவு அறிவு பூர்வமான காட்சி ஒன்றை இப்போதுதான் பார்த்தேன். ‘தங்கம்’ அப்டின்னு ஒரு சீரியல். விஜயகுமார் தன்  மகள் கூட போட்ட சண்டையிலிருந்து கையில் ஒரு கட்டு கட்டிக்கொண்டு நடிப்பாரே அந்த சீரியல்தான். அதில் வரும் வில்லன் தன்னை சிவாஜியின் தத்துப்புத்திரன் மாதிரி நடிப்பாரே அதே சீரியல்தான். கதாநாயகனும் கதாநாயகியும் I.A.S., TNPSC I GROUP-ல் தேர்வாகி, சொந்த ஊரிலேயே கலெக்டரும், உதவி கலெக்டராகவும் இருப்பாங்களே .. அதே சீரியல்தான்.

8.30-க்கு U.S. OPEN நடக்குமே பார்த்து விடலாமேன்னு உட்கார்ந்தா அங்கே தடிமாடுகள் சண்டை போடுமே அந்த WWW நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தது. மாற்றி மாற்றி channel மேயும் போது தங்கம் வந்தது. அறிவுப்பசிக்கு நல்ல தீனி போட்டது. அதாவது எல்லை அம்மன் .. எல்லை அம்மன் என்று ஒரு தெய்வம். திராவிட தெய்வம். ஏன்னா நல்லா கருப்பா மூக்கும் முழியுமா இருந்தது. அதுக்கு முன்னால் ஒரு சீன். ஒரு பெண் எல்லை அம்மன் மேல் மிளகாயை அரைத்து அம்மனுக்குப் பூசுகிறாள். அடுத்து நம்ம கலெக்டர் அய்யா பூசுறார். உதவி கலெக்டரம்மாவும், அவுக அப்பா கையில் கட்டோடு நம்ம வி.குமாரய்யாவும் விட்னெஸ் பண்றாங்க. தத்துவம் என்னன்னு தங்க்ஸ் கிட்ட கேட்டேன். யாரு பொய் சொன்னாலும் இந்த எல்லை அம்மன் காட்டிக் கொடுத்துரும். யார் பொய் சொல்லிக்கிட்டே மிளகாய் பூசுறாங்களோ அவங்களைக் காட்டிக் கொடுத்துரும் அப்டின்னாங்க. சரி என்ன ஆகுதுன்னு பர்த்ருவோம்னு உக்காந்தேன். ஒருவேளை அம்மன் தலையில இருந்து ஒரு பூ கீழே விழுந்து கலெக்கடரய்யாவைக் காப்பாதிருமோன்னு பார்த்தான்; பூ விழவில்லை.  அடுத்து, அந்த வில்லியம்மா மிளகாய் பூசும்போது தட்டு கீழே விழுந்து காட்டிக் கொடுத்துருமோன்னு பார்த்தேன்; நடக்கவில்லை. பயங்கர சஸ்பென்ஸ். இதில எனக்கு இன்னும் ஒரு பயம்.... எங்கே தங்க்ஸ் நம்மளையும் எல்லை அம்மனிடம் கூட்டிட்டு போய்டுவாங்களோன்னு நினச்சி பயந்துகிட்டு இருந்தேன்.  நல்ல வேளைன்னு தோணுச்சி ... ஏன்னா எல்லை அம்மன் ஒண்ணுமே கண்டுக்கலை. சரி .. சீரியல் டைரடக்கர் ஒரு நல்ல பகுத்தறிவுவாதக் கொள்கையைக் கொண்டு வந்துட்டார்  கடவுள் இப்படியெல்லாம் டபக்குன்னு வந்து ரிசல்ட் சொல்லாது அப்டின்னு புரட்சிகரமா சொல்லப் போறார்னு நினச்சேன். ஆனா டைரடக்கர் கதையில் ஒரு ட்விஸ்ட் கொடுத்துர்ரார்.   நம்ம நாட்டைமை வி.குமார் ஒரு எக்ஸ்ட்ரா ரூல் கொண்டு வந்திர்ரார். பாவம் போல மீசை வச்சிக்கிட்டு நின்னுக்கிட்டிருந்த பூசாரியைப் பார்த்து ஒரு கட்டளை கொடுக்கிறார். ( ஒரு பூசாரிக்குப் பதில் அங்கே ஒரு ஆரிய சாமியார் நின்னுக்கிட்டு இருந்தா அப்படியெல்லாம் நாட்டாமை ஒரு கட்டளை கொடுத்திருக்க முடியாதுன்னு நினைக்கிறேன். அப்படி ஒரு சாமி  இருந்தால் அவர் சொல்றதை மக்கள் எல்லோரும் கேட்டுக்குவாங்க .. இல்ல?  இங்கே நாட்டாமை சொல்றதை பூசாரி உடனே கேட்டுக்கிறார்.) கேட்டுக்கிட்ட பூசாரி ஒரு சோலோ பெர்மான்ஸ் கொடுக்கிறார். சாமியை ஆடி .. ஆடி .. அழைக்கிறார். அதென்னவோ தினகரன் கூப்பிட்டா ஜீசஸ் வந்திர்ரார். (நான் பொய்யெல்லாம் சொல்லலை ... வேணும்னா இந்தப் பதிவைப் பார்த்து புரிந்து கொள்ளுங்கள்.  ) அதே மாதிரி இங்கேயும் பூசாரி கூப்பிட்டதும் எல்லையம்மன் அவரிடம் இறங்கி வந்திருது. எல்லையம்மனுக்கு யார் பொய் சொல்றாங்க .. யாரு உண்மை சொல்றாங்கன்னு உடனே டிசைட் பண்ண முடியவில்லை; பாவம்!  டிசைட் பண்றதுக்கு கொஞ்சம் டைம் வேண்டியதிருந்திருக்கு. அதைப் பூசாரிட்ட சொல்லிட்டு ‘ஆறு மாசம்’ டைம் கேட்டுட்டு, படக்குன்னு சாமி மேலே போய்ருது; பூசாரி சடார்னு தரையில உழுந்திர்ரார். (இதுக்குத்தான் தினகரன் நல்ல சோபாவில் உக்காந்திருக்கார் போலும்! கீழே விழுந்தாலும் அடி படாதே.)

ஆக தெய்வம் நின்னு கொல்லும் என்கிற தத்துவத்தைக் காண்பிக்கத்தான் இந்த டைரடக்கர் இந்த சீனை எடுத்திருப்பார் போலும்.

ரிசல்ட் என்னாகுமோன்னு தெரிஞ்சிக்க ஆறு மாசம் கழிச்சி இந்த சீரியலைப் பார்க்கணும். அப்ப சாமி உண்மையைச் சொல்லிடும்னு நினைக்கிறேன் .... பாத்துட்டு உங்ககிட்ட வந்து சொல்றேன்.


*
எனக்குப் பிடிக்காத Andy Murray முதல் செட்ல 3 : 4 அப்டின்னு டவுன்ல நிக்கிறார்.

*








Tuesday, September 06, 2011

527. பிறந்த மண்ணின் வாசனை ... பல ஆண்டுகளுக்குப் பின் - 2

*
அப்பா ஊரிலிருந்து கிளம்பி அடுத்து அம்மாவின் ஊருக்கு - குறும்பலாப்பேரிக்கு - சென்றோம்.  நெல்லை -தென்காசி சாலையில், ஆலங்குளத்திலிருந்து ஏறத்தாழ 10-12 கி.மீட்டர் தாண்டி பாவூர்சத்திரம். அதிலிருந்து  ஓரிரு கி.மீட்டர் சென்றால் குறும்பலாப்பேரி. ஊரின் மேற்குக் கடைசியில் தாத்தா - பாட்டி வீடு. இப்போது மாமாவின் பிள்ளைகளின் குடும்பங்கள் இருக்கின்றன. கிராமத்தில் இருந்ததாலோ என்னவோ மாமாவின் பிள்ளைகள் பள்ளியோடு தங்கள் படிப்பை முடித்துக் கொண்டனர். ஆனால் தங்கள் பிள்ளைகளை நன்குப் படிக்க வைத்து சென்னையிலும், அமெரிக்காவிலும் ‘ஆணி பிடுங்க’ வைத்து விட்டார்கள் என்பதறிந்து மிக்க மகிழ்ச்சி.

தாத்தாவின் பழைய வீட்டில் எனக்குப் பிடித்த இடமே கீழே காணும் வாசல்தான். புதிய சாலைகள் வீட்டுப் படிகளின் உயரத்தைக் கபளீகரம் செய்து விட்டன. மூன்று நான்கு படிகள் சாலைகளில் முங்கி விட்டன போலும். அதன் பின் பூச்சு ஏதுமின்றி இருந்த நுழை வாயில் இப்போது பெரிதும் மாறி வண்ணக்
பழைய வீட்டின் நுழைவாயில்
கலவையோடு நிற்கின்றன. அதனால் முன்பு ‘தர்பார்’ போன்று காட்சியளித்தது இப்போது இல்லாமல் போய்விட்டது. ஆனால்  உள்ளே பழைய வீடுகள் வரலாற்றுச் சின்னங்களாக ஆகிவிட்டன.அழகிய புதிய வீடுகளைக் கட்டிக் கொண்டதால் பழைய வீடு இன்னும் பழமையோடு நிற்கின்றன.  சின்ன வயதில் எனக்குப் பிடித்த மாடியில் உள்ள வளைவுகளும், தூண்களும் இப்போது சிறிது செம்மைப் படுத்தப் படுகின்றன.

மாடி
வீட்டிற்கு வெளியே பூட்டன்-பூட்டியின் சமாதிகளைச் சுற்றி மனோரஞ்சிதச் செடிகளும், ஏனைய செடிகளும் முன்பு நிறைந்திருந்தன. பக்கத்தில் இருந்த கிணறு இப்போது பயன்படுத்தப் படாததால் இப்போது அந்த தோட்டம் காய்ந்து

பூட்டையா & பூட்டி சமாதி
பிள்ளையார் கோவில்
போய் நிற்கின்றது. நல்ல நிலையில் இருந்த போதே அந்தக் கிணற்றை எட்டிப் பார்க்க எனக்குப் பயம். இம்முறை மிகவும் ‘பாதுகாப்பாக’ நின்று கொண்டு கிணற்றை எட்டிப் பார்த்தேன். குப்பையும் கூளமும் அடிவாரத்தில் சிறிதே நீரோடு இருந்தது. 




பூட்டனாருக்கு மிக்க தெய்வ பக்தி இருந்திருக்குமென நினைக்கிறேன். பழைய வீட்டிற்குள்ளேயே  பெரிய திண்ணையோடு ஒரு  கோவில்; வீட்டிற்கு வடக்குப் பக்கம் ஒரு உயரமான பிள்ளையார் கோவில். மற்றொன்று ஊருக்கு நடுவில் பத்திரகாளியம்மன் கோவில். இந்தக் கோவில் பூட்டையாவின் பெயரிலேயே இன்றும் இருப்பதாகச் சொன்னார்கள்.

படத்தில் பார்க்கும் பிள்ளையார் கோவிலில் மண்டபப் பகுதி மட்டுமே இன்றும் முழுமையாக இருக்கிறது. கோவிலுக்கு முன்னால்  ஓடு போட்ட ஒரு நீண்ட திண்ணை இருந்தது. சிறு வயதில் இங்கு வரும்போது நிழலில் அசந்து தூங்கும் மக்கள், ஆடு-புலி ஆட்டம் ஆடும் மக்கள், ஊர்க்கதை பேசும் மக்கள் என எப்போதும் அந்த திண்ணை நிறைந்திருந்தது. காலம் திண்ணையைக் காப்பாற்றவில்லை போலும். இப்போது வெறும் கல்தூண்களோடு மட்டும் நிற்கின்றன.


மண்டபத்தின் இரு வெளித் தூண்களிலும் பூட்டையா - பூட்டியின் சிலைகள் இருக்கின்றன. பூட்டையாவின் மீசை .. ம்ம் .! சிவப்பழமாக இருந்திருப்பார் போலும். உடலெங்கும் உத்திராட்சக் கொட்டை மாலைகள். பூட்டியின் மூக்குதான் சிறிது சிதைபட்டு இருக்கிறது.




பூட்டன்





பூட்டி
ஊருக்கு நடுவேயுள்ள பத்திரகாளியம்மன் கோவில் பெரிதாக உள்ளது. இங்கு புரட்டாசி மாதம் விழா எடுப்பார்களாம். அன்று கோவிலின் முதல் மரியாதை இன்றும் மாமா குடும்பத்தினருக்கு நடக்குமாம்.
பத்திர காளியம்மன் கோவில்



தாத்தா வீட்டிற்கு மேற்குப் பக்கம் வெறும் புளியம் விளை ஒன்றிருந்தது. வறண்ட பூமியாகத்தான் அதைப் பார்த்திருக்கிறேன். ஆனால் இன்று அது பச்சைப் பசேலென்று அழகான தோட்டமாக மாறியிருந்தது. தோட்டத்தில் ஒரு கிணறு, ஆனால் இந்தக் கிணறு பட்டினங்களில் sump  கட்டுகிறார்களே அதே போல் பயன்பட்டு வருகிறது. சற்று தள்ளி எப்போதும் ஊற்றெடுக்கும் மற்றொரு கிணற்றில் இருந்து தண்ணீர் இறைத்து இந்தக் கிணற்றுக்கு குழாய்

பழைய புளியந்தோப்பு
மாமா மகன்


வழியே வந்து விழுகிறது. தேவைப்படும் போது இக்கிணற்றிலிருந்து தோட்டத்திற்குத் தண்ணீர்  பாய்கிறது. வெங்காயமும், மிளகாயும் நன்கு காய்த்திருந்தன.
இன்றைய தோப்பு
ஊரும், உறவினரும், தோட்டமும் துறவும் நன்கிருந்ததைப் பார்க்க மனதுக்கு மகிழ்ச்சி.  விடுமுறைக்கு வீட்டுக்கு வரும் பிள்ளைகள் தோட்டத்தில் உடன் வந்து துணை செய்வதைப் பெருமையுடன் பகிர்ந்து கொள்ளும் பெற்றோரைப் பார்த்ததும் மகிழ்ச்சியே.

பட்டினங்களில் வீடு கட்டும்போது முதல் வேலையாக ஒரு architect பார்த்து வீட்டுப் படம் தயாரிக்கிறார்கள். ஆனால் அம்மா ஊரில் நிறைய புதிய கட்டிடங்கள். well designed houses. யாருப்பா உங்க architect? என்றேன். அப்படியெல்லாம் யாரும் கிடையாது; எல்லாம் எங்கள் ப்ளான் தான் என்றார்கள். உறவினர்கள் வீடுகள் மட்டுமல்லாது ஊரில் பார்த்த பல வீடுகளும் மிக அழகாகக் கட்டப்பட்டிருந்தன. வீட்டின் சுற்றுச் சுவர்களில் கூட அந்த அழகு தெரிந்தது. வீடுகள் எல்லாமும் பல வண்ணக் கலவைகளோடு, பட்டினத்து வீடுகளுக்குப் போட்டியாக நின்றன.பழைய கட்டுமானக் கலை இன்னும் அங்கே செழிப்பாக நிற்கின்றது.


*

குறும்பலாப்பேரி பற்றிய வேறு சில பதிவுகள்:

DAYS AT KURUMBALAPERI

KURUMBALAPERI DAYS - CONTINUED


*