Thursday, July 25, 2024

இறைநம்பிக்கையற்ற இறையாளர்கள்



*

காஞ்சிபுரம் தேவநாதன் பற்றி அனைவரும் அறிவோம். கோவிலுக்குள், அதுவும் கர்ப்பக் கிரகத்திற்குள் வைத்து பாலியல் தவறுகள் செய்துள்ளார் என்பதும் அனைவரும் அறிவோம். கர்ப்பக் கிரகத்திற்குள் இருந்த நாட்காட்டியும் அவர் எடுத்த வீடியோவில் பதிவாகி, எங்கு நடந்து என்பதையும் உறுதி செய்துள்ளது.

கடவுளுக்கு அருகில் இருந்து சேவகம் செய்வதே அவரது தொழில். சாதி அவருக்கு அந்த வசதியை அளித்துள்ளது. பொதுவாக இவர்கள் வேதம் அறிந்து, பக்தியோடு தொழில் செய்ப்வர்கள் தான். அதனாலேயே அந்த சாதியினருக்கும், அவர்களது தொழிலுக்கும் மக்கள் பெரும் மரியாதை தருகிறார்கள். இந்தப் புரோகிதர்கள் அனைவரும் இறை நம்பிக்கை கொண்டிருப்பவர்கள். இறை நம்பிக்கையுள்ளவர்களுக்கு இறைவன் மீது அச்சமும் இருக்கும். தப்பு செய்தால் தண்டனை தருவான் என்றே நம்புக்கையுள்ளவர்கள் ஆழமாக அஞ்சுகிறார்கள்.

ஆனால் இவரோ அந்த அச்சமேதுமின்றி, ஆண்டவன் உறையும் இடமான கரப்பக் கிருகத்தின் உள்ளேயே – வேறு சாதியினர் யாரும் உள்ளே நுழையக்கூடாது என்று சொல்லும் புண்ணிய அறைக்குள்ளேயே – பாலியல் தவறு செய்கிறார். காமம் கண்ணை மறைத்தது என்று நினைக்கின்றனர், ஆனால் என்னைப் பொறுத்த வரையில் அவருக்கு இறை நம்பிக்கை சுத்தமாகக் கிடையாது; அதனால் இறை மீது எந்த பயமோ அச்சமோ சுத்தமாக இல்லை. சிறிதேனும் அச்சமிருந்தால், ஆண்டவன் கண்டிப்பான் என்ற அச்சமிருந்தால் தன் தவறுகளை அந்த இடத்திலாவது செய்யாதிருந்திருப்பார். அந்த அச்சமில்லை; ஏனெனில் இறை நம்பிக்கை இல்லை.

கடவுள் மீது நம்பிக்கையில்லாத ஒருவர் தனது வேலையாக இறைப் பணி செய்கிறார். காசு சம்பாதிப்பதற்கான வழியே அவரது கடவுள் சேவை. அது நம்பிக்கையால் எழுவதல்ல.

என் கருத்தின்படி தேவநாதன் ஒரு இறை நம்பிக்கையற்றவர்; அதனால் தான் அவர் கோவில், புனிதம், புனித இடம் என்று எதற்கும் அஞ்சாமல் அந்தத் தவறை கோவிலின் உள்ளேயே செய்ய முடிந்தது.

****

அடுத்து கிறித்துவ மதத்திலிருந்து ஒரு சான்று:

தினகரன் குடும்பம் பற்றி அறியாதவர் யார்? சமீபத்தில் கூட இரண்டாம் தினகரனின் மனைவி அழுது பிரார்த்தித்து கார், வீடு வாங்கியதைப் பார்த்து அதிசயித்தோம். நாம் சொன்னதை நம்ப ஆட்கள் இருக்கிறார்கள் என்பதால் பல சொந்தக் கதை .. சோகக் கதையை எடுத்து விட்டார்.  உண்மையில் கடவுள் நம்பிக்கையும், இறையச்சமும் இருந்தால் ஒருவரால் இப்படி ஒரு கதையை எடுத்து விட முடியாது. அவருக்கு கடவுள் நம்பிக்கையிருந்திருந்தால் இப்படிப் பச்சையாக ஒரு பொய்யை வெளியில் சொல்ல முடியாது. கடவுள் நம்பிக்கை, இறைத்தண்டனை என்ற அச்சமிருப்பவர், மக்கள் நம்பி காணிக்கை போடுவார்கள் என்றாலும், கடவுள் தண்டிப்பாரே என்று அச்சப்பட்டால் இப்படி பொய் சொல்ல முடியுமா? தேவநாதன் போலவே இவரும் இவர் குடும்பத்தினரும் பணத்திற்காக, தாங்களே  நம்பாத இறையைப் பற்றிப் பேசி காசு பார்க்கிறார்கள்.

இவர் மட்டுமல்ல; சீனியர் தினகரன் தன்னை எப்படி ஏசு தன் கரத்தில் ஏந்தி அவரை மோட்சத்திற்கு அழைத்துச் சென்றாரெனவும், அதன்பிறகு அடிக்கடி தான் மோட்சம் சென்று ஏசுவோடு பேசிவிட்டு வருவதாகவும் காணொளி வெளியிட்டுள்ளார். (பராசக்தி வசனம் தான் நினைவுக்கு வருகிறது; கடவுள் எங்கேடா பேசினார்....) பைபிளில் பல இடங்களில் கடவுள் மனிதர்களோடு direct contact-ல் இருந்திருக்கிறார். பின்பு இப்போதும் ஆயிரக்கணக்கான கத்தோலிக்கர்கள் மாதா தன் முன் தோன்றிப் பேசியதாகக் கூறி வருகிறார்கள். ஆனாலும் இதுபோன்ற பல காட்சிகளை போப், திருச்சபை மறுத்து வருகின்றன. ஆனால் இங்கே நம்மோடு வாழ்ந்த ஒரு மனிதர் அடிக்கடி நேர்முகமாக கடவுளைத் தரிசித்து, பேசி வருகிறேன் என்று கூசாமல் கூறி வருகிறார். பக்த கோடிகளும் நம்புகிறார்கள். என்னைப் பொறுத்த வரையில் இதுவும் காசு சம்பாதிக்க போடும் ஒரு வேஷம்.

தினகரனுக்கு “The fear of the Lord is the beginning of knowledge…என்பது தெரியாதா; தெரியும். ஆனாலும் இன்னொன்றும் தெரியும். கடவுள் என்ற கருத்தே தவறு என்பதும் தெரியும். கடவுள் பெயரைச் சொல்லி காசு சம்பாதிக்கலாம்; ஆனால் கடவுள் என்று ஒன்றில்லை என்பதும் அவருக்கும் தெரியும். அதனால் தான் இத்தனை தைரியமாக மோட்சம் போனேன் .. வந்தேன்.. என்று கதை சொல்கிறார். அவர் மகனோ Build the Prayer Tower, God will build your house என்று அவர் வீடு வாங்க மக்களிடம் காசு கேட்கிறார். உண்மையான இறை நம்பிக்கையிருந்தால் இப்படியெல்லாம் பொய் சொல்ல மனம் வராது.கடவுள் தண்டிப்பார் என்ற அச்சம் இருக்கும். அந்த அச்சம் சிறிதுகூட இல்லாவிட்டால் ... அதிலிருந்து எனக்குக் கிடைக்கும் லாஜிக் – அவர்களுக்கெல்லாம் இறைநம்பிக்கை துச்சமாகக் கூட இருக்காது என்பதே. அதனால் இறையச்சமும் இல்லை. மக்களைக் கவர்ந்திழுத்து காணிக்கை வாங்க வேண்டும்; அவ்வளவே.



                                இங்கேயும் டவர் கட்டியாச்சா ...!?

மதப் பற்றாளர்கள் என்று சொல்லிக் கொள்ளும் பலரைப் பற்றியும் எனது கருத்தாகவே இது பல்லாண்டுகளாக உருவாகியுள்ளது. பலருக்குக் கோபம் வரலாம். அதிலும் உண்மையான நம்பிக்கையாளர்களுக்கும் கோபம் வரலாம். 

அவர்களுக்கு ஒரு வார்த்தை: 

நீங்கள் வார்த்தெடுத்தபடி உங்கள் நம்பிக்கைகளோடு உள்ளீர்கள். ஆனால் பிரசங்கிகளும், பிரச்சாரர்களும் உங்களைப் போல் உண்மையான இறை நம்பிக்கையோடும், இறையச்சத்தோடும் இருக்கிறார்களா என்று மட்டும் யோசித்துப் பாருங்களேன்.

 

 


Tuesday, July 16, 2024

1284. EURO,’24 & WIMBLEDON ‘24




*

ஒரு வழியாக இரு போட்டிகளும் ஒரே நாளில் நேற்று முடிந்தன. இரண்டும் நினைத்தது போல் நடந்து முடிந்தன.

 

EURO,’24 

ஏறத்தாழ எப்போதும் அனைத்திலும் நான் இங்கிலாந்திற்கு எதிரானவன். சாகா - Saka - விளையாட்டு பிடித்தது. இருந்தாலும் முதலிலிருந்தே ஸ்பெயின் நாட்டின் வில்லியம் பிடித்தது. பின்னால் அவரோடு யமால் என்பவரும் பிடித்துப் போனது. இந்தக் கடைசிப் போட்டியில் யமால் நான்கைந்து  தடவை பந்தை கோல் நோக்கி அடித்த பந்துகள் கோலாகாமல் தப்பித்து விட்டன.  ஆயினும் இருவரின் ஆட்டமும் நன்றாக இருந்தது.










சோகமென்னவென்றால் அரையிறுதி ஆட்டத்திற்குள் நுழைய பெனல்டி கோல் வரை சில ஆட்டங்கள் சென்றன. அந்த ஆட்டங்கள் எனக்குப் பொதுவாகவே பிடிக்காது. அதைவிட sudden death இருப்பது நன்றாக இருந்தது. அதைவிட பெனல்ட்டியில் வெற்றி தோல்வி நிர்ணயிப்பது காசை சுண்டிப்போட்டு பார்ப்பது போல் ஆகிவிடுகிறது. One shooter / one goal keeper என்ற இருவர் மேல் பாரம் விழுகிறது. அட போங்க ... இது அழுவாச்சி ஆட்டம் அப்டின்னு தோணுது.

ஸ்பெயின் வென்றது; மகிழ்ச்சி

 

 

WIMBLEDON ‘24

 

அல்காரஸ் – சின்னர் இருவரும் அநேகமாக மோதுவார்கள்;  இல்லையேல் அல்காரஸ் – ஜோக்கோவிச் என்று எதிர்பார்த்தேன்.

வேறொன்றுமில்லை. The period of the triumvirate – Fedd-rafa-nova – is almost over. ஜோக்கோ இன்னும் சிறிது முயல்வார்.



இப்போடியில் ஜோக்கோ முயன்றார். 2:0 என்ற நிலையிலிருந்தும் மீண்டு வந்துள்ளார். அப்படியேதும் நடக்குமா என்று எண்ணிக்கொண்டிருந்த போது மூன்றாவது செட்டில் 0:2 என்ற நிலை வந்த போது சரி கதை முடிந்தது என்றே நினைக்கத் தோன்றியது.  ஒரு காலத்தில் ஜோக்கோவின் athletic actions ஆட்டத்தையும், உடம்பு அதற்கு ஒத்துழைத்ததும் பார்த்து மகிழ்ந்தேன். என்ன செய்வது? காலம் அனைத்தையும் மாற்றிப் போட்டு விட்டது. அல்காரஸ் ஆட்டம் ஜோக்கோவின் பழைய ஆட்டம் போல் ஆடினார்; வென்றார்; மகிழ்ச்சி.

ஜோக்கோ வென்றிருந்தால் பல புதிய records  உருவாகியிருக்கும். 










Thursday, July 11, 2024

1283. மதங்களும் சில விவாதங்களும் ...ஒரு நண்பரின் கருத்து




*

மதங்களும் சில விவாதங்களும் நூல் மிக அற்புதமான உண்மைகளை விளக்கும் நூல்,ஒரு கடவுள் கொள்கை உடைய இஸ்லாம் கிறிஸ்துவம மதத்திலேயே இவ்வளவு முரண்பாடுகள்,உள்ளது.  சில இடங்களில் நகைச்சுவையாஎவும் உள்ளது,நம் இந்து மததத்திலோ பெரு தெய்வங்கள் சிறு தெய்வ வழிபாடு என்று பல வகைகள் உள்ளது   

எதை நம்புவது எதை தவிர்ப்பது எனத் தெரியாமல் நம் முன்னோர்கள் சொன்னார்கள் என்று சுயமாக சிந்திக்காமல் அதே வழியிலேயே நடந்து பழகி விட்டோம் ஆனால் உங்கள் நூல், நம்மை யோசிக்க வைத்து முடிவை நம்மையே எடுக்கச் செய்கிறது 

மதம் சம்பந்தமான ஆர்வம், விருப்பம் உள்ளவர்கள் அவசியம்  இந்த நூலை படித்தால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என நம்புகிறேன் நல்ல நூலை படிக்க உதவியதற்கு நன்றி ஐயா 

வேலுமணி 
கோவை




Friday, July 05, 2024

1282. MAHARAJA & GARUDAN

Tuesday, July 02, 2024

1281. "டிண்கு" தான் நன்றாக ஆடியது ...!



*

ப்ரான்ஸ்  -  பெல்ஜியம்  -- 1 : 0

ப்ரான்ஸ் பெருசு...பெல்ஜியம் சிறுசுன்னு நினச்சேன். ஆனால் அப்படியெல்லாம் விளையாட்டில் வித்தியாசம் தெரியவில்லை. சமமாக விளையாடின .. கோல் எந்தப் பக்கமும் விழவில்லை. 


 Lukaku of Belgium showed his presence. அதே மாதிரி பிரான்சின் எம்பாப்பே கோல் பக்கத்தில் வந்ததும் நன்றாக - நம் ஊரில் சொல்லுவோமே, அதே மாதிரி - பந்தைக் கடைந்து கொண்டு போனார்... சப்ளை செய்தார். இரு பெரும் வீரர்களின் விளையாட்டை உன்னிப்பாகப் பார்த்த எனக்கு பிரான்சின் வலது விங்கராக விளையாடிய ஒரு குட்டை வீரரை மிகவும் பிடித்துப் போனது. அவரது எண் 5. அதை வைத்து பாலோ பண்ணும் போது அவர் பெயரை வர்ணனையாளர் சொல்லும் போது கொஞ்சம் வித்தியாசமாக அவரது பெயரைச் சொன்னது போலிருந்தது. டிண்கு ... புரியுதா, அதே மாதிரி சவுண்டு வந்தது. என்னடான்னு போய் பெயரைப் பார்த்தேன்.  Kounde ... குண்டேன்னு சொல்லியிருந்திருக்கலாம். ஆனால் அவர்களின் உச்சரிப்பில் அது டிண்கு என்று தான் என் காதில் பட்டது. 






சரி ... உடுங்க ... பெயர் என்ன ஆனால் என்ன? நன்றாக ஆடினார்.

முடிவதற்கு 5 நிமிடம் இருக்கும்போது பிரான்ஸ் ஒரு கோல் போட்டு வெற்றி பெற்றது.







Monday, July 01, 2024

1280. EURO, '24 ENGLAND SURVIVED



*

ENGLAND  -  SLOVAKIA



நல்ல ஆட்டம். 25வது நிமிடத்திலேயே ஸ்லோவாக்கியா இங்கிலாந்திற்கு ஒரு கோல் போட்டது. மீதி நேரம் முழுவதும் பந்து அங்குமிங்கும் இரு பக்கமும் சென்றது. ஆட்ட காலம் முடிந்து, injury time-ல் முதல் இரண்டாவது நிமிடத்தில் இங்கிலாந்தின் கேன் ஒரு கோலடிக்க சமமாயிற்று.

எக்ஸ்ட்ரா டைம் ஆரம்பித்ததும் இரண்டாம் நிமிடத்தில் இங்கிலாந்து இன்னொரு கோல் போட்டது.  ஸ்கோர் நீடித்து, ஸ்லோவாக்கியா கவலையுடன் வெளியேறியது.

எப்படியோ உலக மகா வில்லன் இங்கிலாந்து தப்பிப் பிழைத்து காலிறுதிக்கு முன்னேறியது.

Friday, June 21, 2024

1279. EURO, '24

16.6.24

ஸ்விட்சர்லாண்ட்  - ஹங்கேரி –    3:1

93 நிமிடம் விழுந்த 3வது கோல் அழகு.

ஸ்விட்சர்லாண்ட் சிகப்பு வண்ணச் சட்டை போட்டு விளையாடினர். அடுத்தவர்கள் வெள்ளைச் சட்டை. ஆனால் போட்டி பார்க்க வந்தவர்கள் அனைவரும் ஒரேயடியாக மேல்மருத்துவ பக்தர்கள் மாதிரி சிகப்பாக வந்திருந்தார்கள்.

ஏன் அப்படி?

17.6.24

உக்ரைன் - ருமேனியா   - 0:3

என்ன ஆச்சரியம் என்றால், உக்ரைனில் போர் நடக்கிறது. இதில் அவர்கள்தேர்வுப் போட்டிகளில் வென்று இறுதிப் போட்டிக்கு வந்திருக்கிறார்கள். ஆச்சரியமாக இருந்தது.

விளையாட்டு உற்சாகமில்லை


பிகு.

பல குட்டி குட்டி நாடுகள். இத்தனூண்டு நாடுகள்.அதுக ஜெயிச்சி உலகக் கால்பந்து, ஐரோப்பிய கால்பந்துன்னு விளையாடுதுக..

ஆனா நாம எம்புட்டு பெரீஈஈஈஈய நாட்டுக்காரவுக ... பின் ஏன்?


17.6.'24   பிரான்ஸ் - ஆஸ்ட்ரியா    1-0

எம்பாப்வே ஆடுகிறாரே என்ற நினைப்பில் உட்கார்ந்தேன். அழகாகவே விளையாடினார். ஆஸ்ட்ரியா  கோலுக்கு வலது பக்கம் பந்தை அழகாக வாங்கி, தன் தொழிலை அழகாகச் செய்து பந்தை கோலுக்கு முன்னாலிருந்த வீரர்களுக்கு அனுப்பினார். ஆனால் ஆஸ்ட்ரியா வீரர் ஒருவர் 'தலை சுற்றி' தன் கோலுக்குள் அனுப்பி விட்டார்.

இரண்டாம் பகுதியில் எம்பாப்வே ஏறத்தாழ தனியாக பந்தை எடுத்து எதிராளி கோலுக்குச் சென்றார். அவரும் எதிரில் நிற்கும் கோல்கீப்பர் மட்டும் தான். அந்தப் பந்தை வெளியே அடித்து, நல்ல தருணத்தைத் தவற விட்டு விட்டார்.

'எப்படியோ' பிரான்ஸ் வென்றது.

20.6.24 SPAIN - ITALY  : 1 : 0

கால்பந்தில் இத்தாலி பெயரே அதிகமாகத் தென்பட்டதால் அதுதான் வெல்லும் என நினைத்தேன்.

ஸ்பெயின் தூள் கிளப்பியத்து. அதில் விளையாடி, கோலும் போட்ட வில்லியம்சின் தலையலங்காரத்தை விட அவர் விளையாட்டு பிடித்தது.

21.6.24   UKRAINE  -  SLOVAKIA   2 : 1

உக்ரைன் அணியைப் பார்க்கும்போது பாவம் போல் இருந்தது. ஆட்டமும் குறையாகவே தோன்றியது. ஆனால் கடைசியில் ஆட்டத்தில் வென்றது 




Saturday, June 15, 2024

1278. EURO ‘2024 GERMANY – SCOTLAND



சில சமயங்களில் மிகப் பெரிய டீம்கள் பெரிய போட்டிகளின் முதல் ஆட்டத்திலேயே தோற்று ,பின்பு மெல்ல எழுவதுண்டு. அதுபோல் இந்த தடவை ஜெர்மனிக்குஆகலாமோவென்று யாரோ எழுதியதை வாசித்தேன். ஆனால் நடந்தது வேறு.

ஜெர்மனி பெரும் உறுமலோடு தன் போட்டியின் ஆரம்பத்தை வைத்திருந்தது. என்ன உறுமல் ... 5;1 என்று ஸ்காட்லாந்தை வென்றது.


                                                

நான் போன பதிவில் எழுதியது அப்படியே முதல் கோல் போட்டபோது நடந்தது. Kroos – ஜெர்மனியின் டாப் மேன் – (ஒருவேளை  அந்தப் பெயர் Cross என்பதின் திரிபாக இருக்குமோ?) தனது டீம் இருக்குமிடத்தின் இடது பக்கத்திலிருந்து நீளமாக வலது பக்கம் அடித்தார். அங்கிருந்த right winger அப்படியே பந்தை வாங்கி, எதிராளியின் கோலுக்கு நேரே பந்தை அடித்தார்.  அதை அழகாக உள்வாங்கி அவர் நேரே அடித்த பந்து  ....கோல்.  மூன்றே பேரிடம் பந்து சென்றது. அரை நிமிடத்திற்குள் இங்கிருந்த பந்து அங்கு கோலானது. அது விளையாட்டு ...

5:1 என்ற கணக்கும் தப்புதான். அதாவது அந்த ஒரு கோலும் self goal!




Friday, June 14, 2024

1277. FIFA QUALIFICATION  EURO, 2024



ரொம்ப நாளாச்சே கால்பந்து விளையாட்டைப் பார்க்கணும்னு ஒரு நினைப்பு. சேத்ரியின் கடைசிக் கால்பந்தாட்டம் என்பதால் பார்க்கணும்னு ஒரு ஆசை. அதோடு குவைத்தை இந்தியா வென்றால் பிபா அடுத்த ரவுண்டுக்குப் போக வாய்ப்பிருக்கு என்றார்களே .. அதனால் பார்க்கலாம்னு நினைச்சேன்.

நினச்சதெல்லாம் தப்பில்லை; ஆட்டத்தைப் பார்த்ததுதான் தப்பா போச்சு. சரி ..ஒரு international game ஆச்சேன்னு பார்த்தால், ஏகப்பட்ட ஏமாற்றம். செயிண்ட் மேரிஸ் பள்ளியில அந்தக் காலத்தில நாங்க ஆடும் போது பண்ணியதை இன்றைய international ஆட்டக்காரங்க ஆடினாங்க.

அப்போவெல்லாம் நாங்கல்லாம் 11க்கு 11 அப்டின்னா விளையாடினோம்? வர்ரவனெல்லாம் வாடான்னு விளையாடுவோம். பந்து எங்க இருக்கோ அங்க கோலியைத் தவிர எல்லோரும் சுத்தி நின்னு ஆடுவோம். மற்ற இடத்தில ஒரு ஆட்டக்காரனும் இருக்க மாட்டான். இந்த இந்தியா-குவைத் ஆட்டத்திலேயும் ஏறத்தாழ அதே மாதிரி தான் விளையாடினாங்க. பந்து இருக்க இடத்தைச் சுத்தி ஆட்டக்காரங்க. Positional play அப்டின்னு சொல்லுவாங்களே .. அது சுத்தமா இல்லை. Stimac என்ன சொல்லிக் கொடுத்தாரோ தெரியலை.

கால்பந்துவின் விளையாட்டே Positional playதான் அழகா, விளையாட்டைத் தொடர்ந்து பார்க்கும் ஆர்வத்தைக் கொடுக்கும். பந்தை எடுத்து நம்ம பக்கம் வந்தா, கோல் முனையில என்னென்னமோ நடக்கும். ஆவலா பாத்துக்கிட்டு nervous ஆக இருப்போம். பந்து அவுட்ல போகுதுன்னு வச்சுக்குவோம். கோல் கீப்பர் பந்தை அங்கிருந்து எத்துவார். அப்படியே எதிர் முனைக்கு பந்து பறக்கும். அங்கே left wing, right wing-ன்னு நம்ம ஆளுக நிப்பாங்க. அவங்க பந்தை வாங்கிக்கிட்டு எதிரி கோல் பொட்டிக்குள்ள போனா .. நமக்குப் பொங்கிக்கிட்டு வராதா?

 அங்க கொஞ்சம் அமளி துமளி. போன நிமிடம் நம்ம கோல் தாங்குமான்னு தவிச்சிக்கிட்டு இருப்போம்; அடுத்த நிமிடம் அவங்களுக்கு கோல் போட்டிருவோமான்னு துடிச்சிக் கிட்டு இருப்போம். கால்பந்து விளையாட்டு துடிப்போடு ஒவ்வொரு நிமிடமும் இருக்க இதுதானே காரணம். அப்படியேதும் இந்தியா-குவைத் விளையாட்டில் ஏதும் காணோம். நாம் இன்னும் முன்னேற பல படிகள் ஏறணும். அன்று சேத்திரி கூட தனிப்பட்டுத் தெரியவில்லையே. ஆயினும் அவருக்கு என் நன்றிகள். ஓரளவாவது இந்தியாவின் பெயரை கால்பந்துலகில் முன்னெடுத்து வைத்தாரே... அதற்கு என் பாராட்டு. அவரைப் போல் நிறைய சேத்திரிகள் இன்னும் நம் டீமில் வரணும்.






இப்படி ஒரு மேட்ச் பார்த்து ஏமாந்து போய் நின்னேன்னா.. இந்த சமயத்தில் EURO,2024 இன்னைக்கி ஆரம்பமாகுது. 6.30க்கு ஓர் ஆட்டம்; 10.30க்கு இன்னொன்று. முதல் 6.30ஆட்டத்தையாவது அவ்வப்போது பார்க்கணும்னு ஒரு மூட் செட்டாயிருச்சி.

 ரொனால்டோவை விட M.B.A. ஆளு ஒருத்தரு இருக்காரே – Mbappe – உலகக் கால்பந்தாட்டத்தில் மெஸ்ஸி கண்ணுல விரல விட்டு ஆட்டினாரே ... அவரைப் பார்க்க அதிக ஆவல். அவர் பெயரை எப்படித் தமிழில் எழுதணும்னு தெரியல. ஆண்டவரிடம் கேட்டேன். அவரு எம்-பா-பே – எம்பாபே – அப்டின்னு சொல்லிக் கொடுத்தாரு. அவரைப் பார்க்கணும்.

வரட்டா ...



Sunday, May 26, 2024

1276. லவ்வர் ... திரைப்பட விமர்சனம்


**

ஜெய்பீம், குட்னைட்  படங்களுக்குப் பிறகு லவ்வர் படம் பார்த்தேன். நினைத்தபடி கதையை முடித்த விதம் பிடித்திருந்தது.

காதல் உன்மத்தம் தலைக்கேறிய இளைஞனின் ஏறத்தாழ ஒரே மாதிரியான எதிர் வினைகளை வைத்தே ஒரு படம் எடுத்திருந்தாலும் திரைக்கதையை அலுக்காமல் கொண்டு சென்ற இயக்குநருக்குப் பாராட்டுகள்.

இப்போது வரும் படங்களில் “ex” என்ற பதம் அடிக்கடிப் பயன்படுவதைப் பார்க்கும் போது காதல் தோல்வியால் தாடி வளர்க்காமல் “break up” என்பதைத் தாண்டி இளைஞர்கள் எளிதாகச் செல்லும் “நல்ல” வழியைக் காண்பிக்கும் நல்லதொரு நாகரிக முன்னெடுப்பு என்றே நினைக்கின்றேன்.

விஜய் சேதுபதியிடமிருந்து விலகி மெல்ல மணிகண்டனை நோக்கி நடை போட ஆரம்பித்திருக்கிறேன்.




Thursday, May 23, 2024

1275. சில பல திரைப்படங்கள் ....



*

நான்கைந்து நாட்கள். வேலை ஏதும் செய்யாமல் அக்கடாஎன்று படுத்துக் கிடந்தேன். ஆனாலும் அப்படியே சும்மாவா படுத்திருக்க முடியும். இருக்கவே இருக்கு ..OTTக்கள் வா ... வா என்று அழைத்துக் கொண்டே இருந்தன. இரண்டு, மூன்று படங்கள் முழுதாகவும்,… சில “சில்லறைப் படங்களைஅரை குறையாகவும் பார்த்து நொந்து கொண்டேன்.







முழுதாகப் பார்த்த முதல் படம் ஒரு வெப்சீரீஸ். வசந்த பாலனின் “தலைமைச் செயலகம்”. முதல் இரண்டு மூன்று எபிசோடுகளைப் பார்த்ததும் உடனே எழுந்து போய் முக நூலில் நல்லதாக நாலு வார்த்தை எழுதிட்டு வரணும்னு ஓர் உந்துதல். முதல் சீனிலேயே ஒய்ட் ஆங்கிள் ரவிச்சந்திரன் படத்தோடு ஒட்ட வைத்து விட்டார். ஹீரோ ஆடுகளம் கிஷோர்; கதாநாயகி எனக்குப் பிடித்த இரு நடிகைகளில் ஒருவரான ஷ்ரேயா ரெட்டி (வெயில் படத்திலிருந்தே …) இருவரின் தோற்றமே நன்கிருந்தது. இருவரும் கண்களால் தங்கள் நடிப்பைக் கொண்டு வந்தது போலிருந்தது. நான்கைந்து எபிசோடுகள் அலுப்பில்லாமல், நன்றாக சென்றது. கடைசி மூன்று,நான்கு எபிசோடுகளை எப்படி முடிப்பது என்று தெரியாமலோ, திரைக்கதை எழுதுவதிலோ ஒரே குழப்படி  செய்து, நம்மை வைத்து செய்து விட்டார்கள்’.  நன்றாக ஆரம்பித்து இறுதியில் சொதப்பலாக,  சோக அவியலாக முடிந்த சோகம் அந்தப் படம். ஆனாலும்  பல மாதங்கள்/ ஆண்டுகளுக்கு முன்பு ஏறத்தாழ இதே மாதிரியான இன்னொரு படம் ஓடிடியில் பார்த்தேன். அது சிவகாசி என்று நினைக்கின்றேன். அதில் பரம்பரையாக இருந்த ஓர் அரசியல் குடும்பத்தை வைத்து இதே போன்ற கதையாக்கத்தோடு – அரசியல்வாதி அப்பாவை மகளோ மகனோ கொன்றுவிடும் கதையாக – பார்த்த நினைவு வந்தது. முதலில் பார்த்த அந்தப் படமே பரவாயில்லை என்று இப்போது தோன்றுகிறது. அழகாக ஆரம்பித்து தடுமாறி முடித்து விட்டார், ஜெமோ இதற்கு அதிகமாகப் பங்கு கொடுத்த்திருப்பார் போலும்.

 


இந்தப் படத்திலிருந்து தப்பி இன்னொரு படத்திற்குத் தாவினேன். தங்கர் பச்சானின் படம். :கருமேகங்கள் கலைகின்றன” தலைப்பெல்லாம் நன்கு கவித்துவமாகவே இருக்கிறது.  பாரதி ராஜா கதாநாயகன். யோகி பாபு துணைக் கதாநாயகன். எஸ்.சி (அதாவது தளபதி விஜய்யின் அப்பா),  கெளதம் வாசுதேவன், அதிதி பாலன் ... என்று ஒரு பெரிய பட்டாளம்.  பாரதி ராஜாவிற்கு ஒரு கதை; யோகிபாபுவிற்கு இன்னொரு கதை; வாசுதேவனுக்கு ஒரு கதை ... என்று பல துணைக்கதைகளை வைத்து மகாபாரதம் போல் ஒரு நீண்ட படம். இதில் ஏதாவது ஒரு கதை – பாரதி ராஜாவின் கதை மட்டும் – வைத்து ஒரு படமெடுத்திருந்தால் உட்கார்ந்து பார்த்திருக்கலாம்.

 

THE TRAIN என்று ஓர் ஆங்கிலப்படம். WW II காலத்துப் படம். பிரான்சிலுள்ள பெரும் ஓவியர்களின் படங்களையெல்லாம் அள்ளிக் கொண்டு செல்ல நினைக்கின்றார் ஒரு ஜெர்மானிய அதிகாரி. அதைத் தடுத்து நிறுத்தி தங்கள் நாட்டின் கர்வத்தையும். பெருமையையும் காப்பாற்றுகிறார் கதாநாயகன்



Burt Lancaster, எப்படி ரயிலை டைரக்ஷன் மாத்துனாங்கறது மட்டும் புரியலை. ஆனா படம் நல்லா இருந்தது.

இதோடு நிறுத்தியிருக்கலாம். THE BOYS அப்டின்னு ஒரு தமிழ்ப்படம் ஓடிடியில். யாரோ செந்தில்குமார் அப்டின்னு ஒரு தயாரிப்பாளராம். காசு எப்படியோ வந்திருக்கும் போலும், அதைக் கண்டபடி செலவு பண்ணியாகஆணும்னு ஒரு வரம் வாங்கிட்டு வந்திருக்கார் போலும். அதுக்காக இப்படி ஒரு படம் எடுத்து ... கடவுளே ... தாங்கலடா சாமி.

இன்னும் இது மாதிரி ஓடிடியில் சில தமிழ்ப்படம் முயற்சித்து,தப்பித்து ஓடி வந்துட்டேன். பலரும் தமிழில் ஓடிடியில் காசை தர்ப்பணம் செய்யவே படம் எடுக்கும் பரிதாபத்தையும் பார்த்தேன்.

 


Wednesday, May 15, 2024

1274. ஆவேசம்னு ஒரு படம் ...


ஏதோ ஒரு மலையாளப் படத்தில் பகத் பாசில் (அப்போது அவரைப் பற்றி எனக்கு அதிகம் தெரியாது) ஒரு narcist-ஆக, தன் அழகைத் தானே ஆராதிக்கும் ஒரு பார்பராக வருவார். அதில் முதல் கட்டத்தில் அவர் தன்னையே ஒரு கண்ணாடியில் பார்த்துக் கொண்டு,  கண்ணாடியிலிருந்து விலகி ஓரிரு அடி எடுத்து வைத்து, பின் மீண்டும் கண்ணாடிக்குச் சென்று தன் மீசையை ஒதுக்கிக் கொள்வார். சில வினாடிகள் வந்த அந்த சீன் எனக்கு மிகவும் பிடித்தது. சரியான நடிப்பு அரக்கன்என்று அன்று நினைத்தேன்.

இது ஒரு பழைய கதை.

புதிய கதை என்னன்னா ... இன்று ஆவேசம்என்று ஒரு தர்த்தி படம் பார்த்தேன். சும்மானாச்சுக்கும்எடுத்த ஒரு படமாகவே எனக்குத் தோன்றியது. ஆனால் மதிப்பிற்குரிய இரு நண்பர்கள் இந்தப் படத்தை ஆஹா ... ஓஹோ என்று புகழ்ந்திருந்தனர். அதிலும் பெரிய எழுதாளராக ஆக வேண்டிய ஒருவர் -இன்று வரை வெறும் பதிவராக மட்டுமே இருக்கிறார் – பகத்தை ஒரு நடிப்பு ராட்சசன் என்றும் அழைத்துப் புகழ்ந்திருந்தார். அடி வயித்திலிருந்து ஏறத்தாழ ஒரு பத்து தடவை காட்டுத் தனமாக உச்சஸ்தாயில் கத்தினார் பகத். அதையெல்லாம் நடிப்பின் உச்சமான்னு எனக்குத் தெரியலை .. புரியலை ...

அதோடு எனக்கு ஒரு பெரிய சந்தேகம். இது ஒரு டான் படமா? அல்லது காமெடி படமா?   இன்னும் சந்தேகம் தீரவில்லை.

இன்னொரு சந்தேகமும் வந்தது, இந்த இரு பூமர் அங்கிள்களுக்கு மிகவும் பிடிக்கிற இந்தப் படம் pre-boomer தாத்தாவான எனக்குப் புரிபடவில்லையோன்னு ஒரு சந்தேகம்.

படமா இது? சோதித்து விட்டார்கள்.

மன்னித்துக் கொள்ளுங்கள். பூமர் அங்கிள்களே ..!

Tuesday, May 14, 2024

1273. தனிநபர் நாடகம்: "க"வின் "ஜ"

அமெரிக்கன் கல்லூரி பழைய மாணவர் குழு ஒரு விசித்திரமான தலைப்பு கொண்ட ஒரு நாடகத்தைத் தொடர்ந்து நடத்தி வந்தார்கள் என்பது தெரியும். அது  மதுரையில் நடந்து கொண்டிருந்தது என்பதும் தெரியும். ஆனால் திடீரென சென்னையில் நடக்கிறது என்றும், அதுவும் என் இருப்பிடத்திற்கு  அருகிலேயே நடக்கிறது என்று தெரிந்ததும்,  “பல சீரியசான திட்டங்கள்” தீட்ட ஆரம்பித்தேன். வயதைக் காரணம் காட்டி  குடும்பம் ஏறக்குறைய வீட்டுச் சிறையில்’  வைத்து விட்டார்கள். இரண்டு மணி நேரம் அதிலிருந்து தப்பிப்பதற்காக, காலையிலிருந்தே  வீட்டில் நல்ல பிள்ளையாகநடக்க ஆரம்பித்து, மாலையில் அப்போதுதான் அந்த விளம்பரத்தைப் பார்த்தது போல் நடித்து ... ஒரு வழியாக அமெரிக்கன் கல்லூரியின் மீது பாரத்தைப் போட்டு, அவர்கள் நடத்தும் ஒரு சிறு கூட்டம் என்று சொல்லி, (நாடகமெல்லாம் இந்த வயதில் போய் பார்க்கணுமா? என்று கேள்விக்கணைகளுக்கு அஞ்சி...) புறப்பட்டுப் போனேன். சரியான நேரத்தில் இடத்தைக் கண்டுபிடித்து முதல் ஆளாகப் போனேன். நல்ல வேளை மற்றவர்களும் விரைவில் வந்து சேர நாடகம் ஆரம்பமானது.



கவின் ஜ ”என்பது நாடகத்தின் தலைப்பு. தலைப்பே வித்தியாசமானது தான். அதுவும் முழு நீள நகைச்சுவை தனிநபர் நாடகம் என்று விளம்பரம் கூறியது. ஒரு விஷயத்தை உடைத்து விடுகிறேனே ... தலைப்பை முழுவதுமாக விளக்கி விடுகிறேன். “கந்தவேலின் ஜட்டி”  என்பதே முழுத் தலைப்பு. நாமெல்லோரும் நம் உள்ளாடைகளை அதன் பெயரை வெளிப்படையாகச் சொல்வதே வெகு unparliamentary . என்றல்லவா நாம் நாகரிகமாக நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆகவே முதலில் சில நிமிடங்களில் ரொம்பவுமே கஷ்டப்பட்டு கந்தவேல் ஜட்டி” என்ற சொல்லை மிகவும் வெட்கப்பட்டுக் கொண்டே சொல்கிறார். 


இந்த நாடகத்தை நான் முழுவதுமாகச் சொல்லி அதன் நயத்தைக் கெடுக்க விரும்பவில்லை. ஆனால் விளையாட்டுத் தனமாக ஆரம்பித்து... மெல்ல மிகவும் முக்கியமான, ஆழமான காம வக்கிரங்களை நோக்கி கதை நகர்கிறது. இறுதியில் கந்தவேல் ஒரு கடிதம் வாசிக்கிறார். ஒரு பெண்ணின் தந்தையான அவர் தன் பெண்ணை நினைத்து அஞ்சி, ஆண்களின் வக்கிரப் புத்திக்கான காரணங்களை நம் முன் வைக்கின்றார்.  கேள்வியும் பதிலுமாக நாடகம் ஒரு serious tone-ல் முடிகிறது.




ஆனந்த குமார் தனி நபராக நிறைவாக நடித்துள்ளார். இறுதியில் கலங்கும் கந்தவேல் நம்மையும் கலங்க வைத்து விடுகிறார்.




இளம் பிள்ளைகள் இந்த நாடகத்தைப் பார்ப்பது பல் நல்வினைகளை விளைவிக்கும் என்றே நம்புகிறேன்.







நண்பர்கள் பாஸ்கர், சுதன் எடுத்த படங்களுக்கு நன்றி.

பி.கு. அதென்னவோ, அமெரிக்கன் கல்லூரி மாணவர்களுக்கு அந்தக் கல்லூரிமேல் எப்போதுமே  அத்தனை காதல்!  நாடகம் நடந்த அறையில் பெரும் நடிகர்கள் சிலரின் புகைப்படங்கள் அலங்காரமாக மாட்டப்பட்டிருந்தன. அத்னோடு எங்கள் கல்லூரியின் கலைரசனையோடு கட்டப்பட்டுள்ள மணிக்கூண்டின் படமும் அவைகளோடு தொங்கியதில் அந்தக் காதல் வெளிப்பட்டது. மகிழ்ந்தேன். அதனை வீடியோவாக எடுத்தேன். பதிந்திருக்கிறேன்.


Sunday, February 25, 2024

1272. Samson and Delilah (1949) Samson kills a hundred men with the jawbone of...

Tuesday, January 16, 2024

1272. SAMSON AND DELILAH vs LEO

எந்த ஆண்டு அந்தப் படம் வந்தது என்று ஆண்டவரிடம் கேட்டேன். 1949 என்று போட்டிருந்தது. அதாவது எனக்கு நாலைந்து வயது. ஆனாலும் பாருங்க ... அந்தப் படத்தை ரொம்ம்ம்ம்ப சின்ன வயசில பார்த்திருக்கிறேன். எப்போ படம் இந்தியாவிற்கு வந்ததோ... நான் எங்கு, யாருடன் அந்தப் படத்தைப் பார்த்தேனோ என்பதெல்லாம் நினைவில் இல்லை. சின்ன வயதில் பார்த்த ஒரு படம். ஒருவேளை பைபிள் படம் என்பதால் பள்ளியில் காண்பித்திருக்கலாம்.(ம்ம்... அதற்கு வாய்ப்பில்லை.) எப்படியோ அந்தப் படத்தை அன்னாளில் பார்த்தேன்.


https://youtu.be/yMo3DL_KkHE?si=dl0b261hgoUwe0O7

அந்த சாம்சன், நம்ம கர்ணன் மாதிரி தன் சக்திகள் அனைத்தையும் தன் தலைமுடியில் வைத்திருந்தாராம். அதை வெட்டிட்டா அவரை எதிரிகள் அடித்து வீழ்த்த முடியும், டிலைலா  “முடிவெட்டும்” சீன் இன்னும் நினைவில் இருக்கிறது. இருந்தாலும் அவர் ஹீரோ அல்லவா... அதுனால் முடி போனாலும் முடிவில் ஹீரோ தான் ஜெயுக்கணும்.  கடைசியில் அவர் எதிரிகளோடு சண்டையிடுவார். அதில் நினைவில் இருப்பதெல்லாம், அவர் கையில் கழுதை அல்லது கோவேறிக் கழுதையின் கீழ்த்தாடை எலும்பு இருக்கும். அது மட்டுமே அவரது ஆயுதம். மயிரும் ஏற்கெனவே போய் விட்டது, இருந்தாலும் அந்த எலும்பை வைத்து எதிரிகளை அடித்துத் துவம்சம் செய்து விடுவார். அடின்னா அப்படி ஒரு அடி அடித்துக் கொல்லுவார்.

https://www.youtube.com/watch?v=yMo3DL_KkHE

அசந்து பார்த்தது அந்தக் காலம் அப்டின்னு நினச்சுக்கிட்டு இருந்தப்போ பொங்கலுக்கு லியோ படம் போட்டாங்க. அது ஒரு மூணு நாலு மணியளவில் ஓடுமா... நல்ல வேளை .. படம் பார்க்கிறப்போ பொங்கல் வாழ்த்து சொல்லி, கதையடிக்க மூணு நண்பர்களின் தொலைபேசி அழைப்பு வந்தது.  அப்பப்போ mute போட்டு பேசினேன். அப்போவெல்லாம் சில வெவ்வேறு மாநில ஊர்களின் பெயர்களின் ஸ்லைடுகளும் வந்திச்சு. அதையெல்லாம் வச்சி நானோ ஒரு கதை உண்டாக்கிக் கிட்டேன். 

அதிலும் பிக்பாஸ் ஜனனி, மாயா இவங்கல்லாம் ஒத்த ஒத்த சீனுக்கு வந்தாங்க... எதுக்கு வந்தாங்கன்னு தெரியலை. அப்புறமா காணாம போய்டுறாங்க. திரிஷா எங்கேயோ போய் டிடக்டிவ் வேலை செய்றாங்க. இப்படியெல்லாம் போச்சா ... கடைசி சீன் வந்திருச்சா .... அதுல, சாம்சன் கையில் கழுதையின் தாடை எலும்புன்னா இங்க பார்த்திபன் அலையாஸ் லியோ - அதாவது விஜய் அண்ணா - கையில் ஒண்ணறை இஞ்சி சைசில் சின்னப் பேனா கத்தி மட்டும் இருந்தது. ஆனால் mortality rate இன்னைய படத்தில் அதிகம். ஏறத்தாழ ஐநூறு பேரை அந்த ஒண்ணரையணா... இல்லைங்க .. ஒண்ணறை இஞ்ச் கத்தியே வச்சி அத்தனை பேரையும் வெட்டிச் சாய்ச்சிட்டார் விஜய் அண்ணா.

சாம்சன்னை விட நம் விஜய் அண்ணாதான் பெட்டர்.


Friday, January 12, 2024

1271. kathal, the core #dharumispage

1270 . சென்னைப் புத்தக விழாவில் இரண்டாவது புத்தகம் - சூத்திரர்

இந்த நூலுக்கு “சூத்திரன்” என்றே பெயர் வைக்க விரும்பினேன். அந்தச் சொல்லே சூத்திரர்களைக் குத்தும் என்று நினைத்தேன்; அதையே விரும்பினேன். ஏனெனில், இந்த நூலை வாசிக்கும் போதே என்னை நானே நொந்து கொண்டேன்.... இத்தனை ஆயிரம் ஆண்டுகளாக நான் ஏன் சுத்தமாக சுய மரியாதை இல்லாமல் இருந்து தொலைத்தேன். (இங்கே நானென்பது என் மூதாதையரையும் சேர்த்து அனைத்து சூத்திரன்களையும் ஒன்று சேர்த்தே சொல்கிறேன்.) சில ஆண்டுகள், சில நூற்றாண்டுகள் என்றாலும் பரவாயில்லை. ஆனால் அன்றிலிருந்து இந்த வினாடி வரை கூனிக் குறுகி, சுயமரியாதை என்றால் என்னவென்று தெரியாமல், அறியாமல், புரியாமல் இருந்திருக்கிறேனே என்று நினைத்துக் கொண்டே இந்த நூலை வாசித்தேன். நூலில் கொடுத்துள்ள உண்மைகள் அத்தனை வன்மையானவை; உண்மையானவை; உணர்ந்து படிக்க வேண்டியவை.

சூத்திரன் என்று நம்மை ஒதுக்கி வைத்த மக்களும் இதைக் கட்டாயம் வாசித்தாக வேண்டும். ஒரு வேளை இத்தனைக் கொடுமையானவர்களா நாம் என்ற கேள்வியும், மனிதத்தன்மையிலிருந்து எவ்வளவு விலகிப் போய்விட்டோம் என்பதை அவர்களும் இந்நூலை வாசிக்கும்போது (ஒருவேளை) உணரலாம்.

கட்டாயம் வாசிப்போம் .... திருந்துவோமா என்பது அதற்கடுத்த நிலை !!!


Wednesday, January 03, 2024

1269. வெங்காயத்தை உறிச்சிப் பாத்தாச்சு ...

வெங்காயத்தை உறிச்சிப் பாத்தாச்சு ... 

 

கடந்த சில மாதங்களாகவே இந்த மூட் நன்றாக வந்து என்னை இறுக்கிப் பிடித்துக் கொண்டு விட்டது. பற்றாததற்கு ஏற்றாற்போல் பேரா. முரளியின் காணொளி ஒன்றையும்  பார்த்தாகி விட்டது.


 அந்தக் காலத்தில் ஆங்கில தினசரிக்குத் தான் அதிக முக்கியத்துவம் கொடுப்பதுண்டு.இப்போதெல்லாம் தமிழ் நாளிதழுக்குக் கொடுக்கும் நேரத்தில் கால்வாசி கூட ஆங்கில நாளிதழ்களுக்குக் கொடுப்பதில்லை. ஆங்கில நாளிதழை நிறுத்தி விடலாமாவெனவும் தோன்றுகிறது.

செய்திகளைப் படிப்பதில் எந்த வித அக்கறையும் எடுக்க முடிவதில்லை. உக்ரைன்.. பாலஸ்தீன் ... எல்லாம் சுடச்சுட படித்து சோர்ந்து போயாச்சு. அயல்நாட்டு விவகாரம்தான் இப்படி இருக்கிறதென்றால் உள்நாட்டு விவகாரமும் அலுத்துப் போச்சு. அடுத்தது மோடிதான் என்ற பின் எந்த மனுசனுக்குத் தான் அலுப்பு வராமல் போகும்?

மாநிலத்திற்குள், அடுத்து மகனை அரியணையில் அமர வைப்பதற்காகவே இந்த முறை அதிக ஊழல் இல்லாத அரசு அமையும் என்று நம்பிக்கொண்டிருந்தேன். அதுவும் போச்சு. வேற கட்சி ஏதுமிருக்கான்னு தேடின்ன போது பல காமெடியன்கள் வரிசை கட்டி நிற்கிறார்கள். அட எடப்பாடி முதலமைச்சராக ஆகணும்னு ஆசைப்படுறாரா ...சரி .. அவரு பக்கமும் ஆளுக நிக்கிறாங்களேன்னு நினச்சி உட்டுவிடலாம். அது போதாதுன்னு சசிகலா சித்தி, டி.வி. தினகரன், ஓ.பி.எஸ். என்றொரு வரிசைன்னா ... புதுவரிசை இன்னொண்ணு ஆரம்பிச்சிருக்கு. அதிலேயும் எனக்கு சரத்குமார் சாரை ரொம்ம்ம்ம்ப பிடிச்சு போச்சு. ஏன்னா அவருக்கு அந்தப் பதவி மேல ஒண்ணும் ஆசையில்லையாம். ஆனா அவரு wife  ரொம்ப ஆசைப்படுறாங்களாம். அதோடில்லாமல் அவங்க மாமியாரும், ‘மாப்பிள்ள .. நீங்க இன்னும் முதலமைச்சராக ஆகலையான்னு கேட்டு அல்லாடிக்கிட்டு இருக்காங்களாம். இது பத்தாதுன்னு புதுசா இன்னொரு ஹீரோயின் வந்திருக்காங்க. புருசன் செத்த நாளை இந்த நல்ல நாளில் ...அப்டின்னு பேசுறாங்க. எல்லோரும் வாங்க ... நம்ம வீடு புழங்கிரும் ...

தனிப்பட்ட வாழ்க்கையிலும் சிக்கல் ஏதும் இல்லாவிட்டாலும் வயது ஒரு அச்சத்தைக் கொடுக்குது. என்ன ... வயசானவங்க எல்லோரும் சிக்கல் இல்லாம போய்ச் சேரணுமேன்னு ஒரு கவலையோடு இருப்பாங்க. அத லிஸ்ட்லயும் சேர்ந்தாச்சு.

வாழ்க்கையைப் பிரிச்சிப் பார்த்தா அர்த்தமே இல்லையோன்னு தோணுது. வெங்காயம் .. பிரிச்சிப் பார்த்தா ஒண்ணுமேயில்லை. (இதோ ..  இன்று .. டிசம்பர் 31. இரவு 12 மணி. மக்கள் வேட்டெல்லாம் போடுறாங்க. சத்தம் காதில் விழுது. கமல்ஹாசன் பாட்டு ஒண்ணும் காதில் இதுவ்ரை விழவில்லை.) யோசிச்சி பாருங்க. நேத்து டிசம்பர் 31. இன்று ஜனவரி 1. இரண்டுக்கும் என்ன வித்தியாசம்? என்ன மாற்றம்? ஒரு மண்ணுமில்லை. ஆனா ஏன் ஆடுறோம்... பாடுறோம். எதுக்கு? (போன வருஷம் வேட்டுப் போட்டு, பாட்டு பாடினோம்ல ... அதைத் திருப்பிச் செய்யணும்ல!)

மேலே போட்ட காணொளியைப் பாருங்க. பெரிய தத்துவஞானியாம். இதைத்தான் சொல்லியிருக்கிறார். ஆனா அத கேக்குறதுக்கு முந்தியே இதையே அடிக்கடி நினச்சிருக்கேன். ஏதோ எப்படியோ (??) வந்து பிள்ளையா பிறந்தோம் ... வளர்ந்தோம் .. யாரும் வளர்க்காமலேயே – அப்பா, அம்மா சோறு போட்டு வளர்க்கிறதைச் சொல்லலை – நமக்குன்னு ஒரு பண்பியல் – character - நம்மோடு வளர்ந்தது. நாம் நல்லவானா கெட்டவனா வளர்ந்ததற்கு வேறு யாரும் பொறுப்பில்லை... நாம மட்டும் தான் பொறுப்பு. நல்லவனாகவே இருந்து நல்லாவே செத்துப் போனாலும் ... போனபிறகு .. என்னதான் நமக்கு நடக்குது? அட கொஞ்சம் பேரு புகழ் அப்டின்னு ஏதோ ஒண்ணை சேர்த்தாலும்... செத்த பிறகெல்லாம் அதனால் யாருக்குத் தான் லாபம்? ஒண்ணும் புரியலைங்க ... அர்த்தங்கெட்ட வாழ்க்கைன்னு சொல்லுவாங்களே ... அதுவா இது?

உரிக்க உரிக்க வெங்காயம் ... ஒண்ணுமேயில்லாம தான போகும்! இல்ல ...? பற்றின்றி போகணுமோ? அப்படி சிலர் சொல்றாங்க.கட்டுப்பட்ட ஒரு சமூகத்தில் அப்படியும் இருக்க முடியாது.

WHAT DO I MISS? OR, DO WE ALL MISS SOMETHING?