Showing posts with label சோதிடம். Show all posts
Showing posts with label சோதிடம். Show all posts

Friday, July 11, 2008

264 (132).. ஜோஸ்யம்….6

நாலு பேத்துக்கு நல்லதுன்னா எதுவுமே தப்பில்லை.

மோகன் கந்தசாமியின் சும்மா ட்டமாஸு பதிவிலும். வாத்தியாரின் க்ளாஸ்ரூம் பதிவிலும் நிழல்கள் ரவி .. ச்சீ .. செந்தழல் ரவி கொழுத்திப் போட்ட ஒத்தைவெடி சரவெடியா வெடிக்கிற இந்த நேரத்தில் என் பழைய பதிவைத் தூசிதட்டி மீள்பதிவா போட்டால் மேலும் கொஞ்சம் கேள்விகளும் பதில்களும் நாலா பக்கமும் எழும்; நாலு விஷயங்களும் புரியும் என்ற நினைப்பில் இதை மீண்டுமிடுகிறேன். மொத்தம் 13 பதிவுகள் தனித்தனியாக நான் போட்டிருந்தாலும் இப்பதிவு இந்த நம்பிக்கை சார்ந்த விஷயங்களை ஒட்டு மொத்தமாகக் கேள்வி கேட்பதால் இப்பதிவு மட்டும் இப்போது மீள்பதிவாகிறது.


originally posted on 20th feb '06





இதையெல்லாம் கூட வாஸ்து பார்த்துதான் கட்டியிருப்பாங்களோ……..?”

ஜோதிடம் தொடர் -


மற்றைய பதிவுகள்:


1*நான் ஜோஸ்யம் பார்க்கப் போனேன்.
2* ,,,
3* ,,,
4*தேடி வந்த ஜோஸ்யர்.
5*நாடி ஜோதிடம்.
6*ஜோஸ்யம்
7*சாஸ்திரம்.
8*நேரம் .. நாள் ..
9*ராசி பலன்
10*வாஸ்து
11*எண் கணிதம்.
12* ஜாதகம்.
13*முடிவுரை.



முதலிலேயே ஓர் ஒப்புதல் வாக்குமூலத்துடன் இந்தப் பதிவை ஆரம்பிக்கிறேன். இதுவரை எழுதிய ஐந்து ஜோஸ்யப் பதிவுகளில் எனக்கு அந்த விஷயத்தில் உள்ள தொடர்பை எழுதியுள்ளேன். ஜோஸ்யம், ஜாதகம், எண் கணிதம், வாஸ்து, இது போன்ற விஷயங்களில் எனக்கு சிறிது கூட நம்பிக்கை கிடையாது. ஆயினும் ஒன்றை எதிர்ப்பதற்கு முன்பு அவைகளைப் பற்றிய விஷய ஞானம் தேவை என்பதை ஒப்புக்கொள்கிறேன். மதங்களை எதிர்ப்பதற்கு முன் அவைகளைப் பற்றிக் கொஞ்சமாவது என் அறிவை வளர்த்துக் கொண்டேன். ஆனால் இந்த விஷயங்களில் நம்பிக்கை இல்லை; அவைகளைப் பற்றிய அறிவும் கிடையாது. ஆனால் ஒன்று தெரியும். இதில் இதுதான் என்று அறுதியிட்டு ஏதும் கிடையாது; எல்லாமே கையாள்வோரின் வசதிக்கும், அறிவுக்கும் அல்லது அறிவற்றமைக்கும் ஒத்திருக்கும் என்பது என் முடிவாதலால் - சுற்றி நடப்பதை வைத்து இந்தப் புள்ளிக்கு வரவேண்டியதாயுள்ளது - இந்த அறிவை வளர்த்துக்கொள்ள முயலுவதாகவுமில்லை. ஆகவே இப்பதிவுகளில் நான் செய்யக்கூடிய factual mistakes ஏதாவது இருப்பின், அவைகளைப் பற்றிய அறிவுறுத்தலை திறந்த மனதோடு ஏற்றுக்கொள்ள தயாராக இருக்கிறேன்.

ஜோஸ்யமும், ஜாதகமும் பல ஆண்டுகளாக நம் வாழ்க்கையோடு இணைந்தே இருந்தாலும், கடந்த 20 ஆண்டுகளில் அவைகளின் வேகமும், தாக்கமும் மிக அதிகமாகத் தென்படுகின்றன. அதுவும் வேதனைக்குரிய விஷயமாக எனக்குப் படுவது: என் போன்ற வயசான ‘கேஸ்’கள் இந்த விஷயங்களில் ஆர்வம் காண்பித்தாலாவது பரவாயில்லை எனக் கொள்ளலாம்; ஏதோ போற காலத்திலயாவது, தன்னால் இனி ஏதும் பிரமாதமாக சாதிக்க முடியாது என்ற சுய நம்பிக்கை இழந்த காலத்தில், ஒரு பற்றுக்கோடு போல் இவைகள் மேல் நம்பிக்கை வைக்கிறார்கள் எனலாம். அதோடு வாழ்க்கையின் இப்பகுதியில் பிரச்சனைகளும் அதிகமாக இருக்கக்கூடிய நேரம்; ஏதாவது ஒரு கொழுகொம்பு கிடைக்காதா என்ற நப்பாசைகள் இருக்கும். அந்த கிரகம் சரியான ‘வீட்டுக்குள்’ வந்து உட்கார்ந்து விடாதா, இந்தக் ‘கல்’ என் பாரத்தை நீக்கி விடாதா, பார்த்துப் பார்த்துக் கட்டிய வீட்டின் முன்பக்கத்தையே இடித்து மாற்றினாலாவது பிள்ளைகள் வாழ்வு சிறக்காதா என்பது போன்ற ஆதங்கங்கள் இருக்கலாம். ஆனால், இப்போதெல்லாம் மிக அதிகமான இளைஞர்களே இந்த ‘நோயில்’ விழுந்து, கவலைக்குரிய நிலையில் நம் சமுதாயத்தையே நிறுத்திவிட்டார்கள். தன்னம்பிக்கை இல்லாத போது குறி, நல்ல நாள், நல்ல பெயர், ராசிக்கல் என்று மனிதமனம் போகும். வாழ்க்கைக்குள் நுழையும் முன்பே இளைஞர்கள் இதில் காலை விட்டால், அவர்கள் தன்னம்பிக்கை எங்கே போயிற்று? இப்போதே இப்படி என்றால் நாடி நரம்பு தளரும் வயதில் இவர்கள் எதையெல்லாம் நம்பி எதனெதன் பின்னே போவார்கள்?

பொதுவாகவே இந்த விஷயங்கள் ‘மதங்கள்’ மாதிரிதான்; ஊட்டப்பட்டு, செரிமானம்கூட இல்லாமல் ‘கட்டி’யாக மனசுக்குள் தங்கிவிடும். நீங்கள் என்ன கரைத்தாலும், எவ்வளவு காரண காரியங்கள், சான்றுகள் என்று என்ன கொடுத்தாலும் அவைகள் எளிதில் ஏற்றுக்கொள்ளப் படுவதில்லை. இந்த விஷங்களும் அப்படித்தான் இருக்கும். ‘நம்பிக்கை’ சார்ந்த இது போன்றவைகளில் simple logic, rationality, scientific approach எனபவை எல்லாமே வெட்டியாகக் கொடுக்கப்படும் பலியாடுகள் என்று தெரியும். இருப்பினும்…ஒரு முயற்சி…அவ்வளவே.

What is science என்ற கேள்விக்கு collection of facts based on provability and reproducibilityஎன்பதே பதில் என்பது எல்லோருக்கும் தெரிந்த ஒன்றே. ஒரு குறிப்பிட்ட அளவு வேதியப் பொருள் (A)இன்னொரு குறிப்பிட்ட அளவுள்ள வேதியப் பொருள் (B) இரண்டும் சேர்ந்து புதிய பொருள் ஒன்று (C) உண்டாகிறதென்றால் அது வட துருவத்திலும், தென் துருவத்திலும், ராமசாமிக்கும் ராகுலுக்கும் ஒரே மாதிரிதான் இருக்கும். அதில் இரண்டாவது கருத்துக்கு இடமேயில்லை. அதுதான் விஞ்ஞானம்..science.. எப்போது ஒரே விஷயத்தில் இரண்டாவது கருத்துக்கும் இடமிருக்கிறதோ அங்கே அது hypothesis-ஆக - ஒரு கருத்தாக மட்டுமே - மாறி விடுகிறது. அது சரியாகவும் இருக்கலாம்; தவறாகவும் இருக்கலாம - every coin has got two sides என்பது போல.


நான் சின்னவனாக இருந்தபோது எல்லா கிறித்துவ மாணவர்கள் போல நானும் catechism - மறைக் கல்வி - வகுப்புகளுக்குத் தவறாமல் போயிருக்கிறேன். அந்த வகுப்புகளில் Creation Vs Evolution போதிக்கப்படும். படைத்தலைப் பற்றிய சார்புள்ள கருத்துக்களே சொல்லிக் கொடுக்கப்படும். சரி..மனிதன் குரங்கிலிருந்து வந்தான் என்றே வைத்துக் கொண்டால், அந்த குரங்கு எங்கிருந்து வந்தது..சரி..அப்படியே போய் கடைசியில் அமீபாவிலிருந்து வந்தது என்று வைத்துக் கொள்வோம்..அப்போ, அந்த அமீபா எங்கிருந்து வந்தது.. தெரியாதல்லவா… அங்கேதான் இருக்கிறது ‘கடவுள்’…இப்படித்தான் போகும் அந்த வகுப்புகளில் வாதங்கள். நன்றாக இருந்தன இந்த விவாதங்கள் - அந்த வயதில்!

பின்னாளில் முதுகலை வகுப்புகளில் இதே Creation Vs Evolution பற்றிப் பேச வேண்டியிருந்தது. முதலில் படைப்பு பற்றிச் சொல்லியாகிவிட்டது. பின்பு, பரிணாமம் பற்றிப் பேச வேண்டும். நானோ உயிரினங்களில் உள்ள ‘நம்ப முடியாத, பதில்கள் தெரியாத விஷயங்கள் பலவற்றைப் பற்றி பேசினேன். ஒரு mitochondria-வின் மிக மிக நுண்ணிய அமைப்பு, செயல் திறன் , ஒரு மலரின் அழகு, அதன் அல்லி-புல்லிவட்ட அமைப்பின் நேர்த்தி, எண்ணிக்கையிலடங்கா கோள்கள், அவைகளின் ஒழுங்கு முறையான சுற்றுக்கள் - ஆச்சரியப் பட வைக்கும் இந்த நேர்த்தியானவை எல்லாம் தானாக, ‘கடவுள்’ என்ற எவ்வித supreme power இல்லாமல் வருவதற்குச் சாத்தியக் கூறுகள் ஏதும் இருக்க முடியுமா என்ற என்னை நானே கேட்டுக் கொண்டேன் என்று சொல்லி ஒரு pause கொடுத்தேன். அந்த வகுப்பில் கடவுள் மேல் மிக நம்பிக்கைகொண்ட மாணவர்கள் ( முக்கியமாக மாணவிகள்) அதிகம். அவர்களுக்கு என் ‘மன மாற்றம்’ மிகவும் திருப்தியாயிருந்தது அவர்கள் முகங்களில் நன்கு தெரிந்தது. ‘மனுஷன் திருந்திட்டான்’ என்று அவர்கள் நினைக்க ஆரம்பிக்கும்போது, எனக்கு பிரமிப்பையூட்டும் இன்னொரு விஷயத்தைச் சொன்னேன்.

அது உங்களில் பலருக்கும் ஒரு ‘ஜுஜுபி’யான காரியமாக இருக்கும். எனக்கு அன்று மட்டுமல்ல, இன்றுவரை வியப்பான விஷயங்களில் இதுவும் ஒன்று. 100 பக்கம் தட்டச்சி உங்கள் கம்ப்யூட்டரில் ஒரு விஷயம் இருக்குதென்று வைத்துக் கொள்வோம். அதை ஒரு floppy-ல் (CD எல்லாம் அப்போ எனக்குப் பரிச்சயமில்லா பெரிய விஷயம்) ஒரு icon-ஐ ‘இழுத்துப்’ போடுவதன் மூலம் வந்துவிடுகிறது. நான் அதை எடுத்து என் கணினியில் போட்டு மறுபடி ஒரு தடவை ஒரு icon-ஐ ‘இழுத்துப்’ போடுவதன் மூலம் என் கணினிக்கு வந்துவிடுகிறது. இது எனக்கு (இன்றுவரையும்) மிக ஆச்சரியமாக இருக்கிறது. நம்பவே முடியாத அளவு பிரமிப்பாக இருக்கிறது. ஆனால் இந்த பிரமிப்புக்குப் பின்னால் சரியான ஒரு விளக்கம் உண்டு. பிரச்சனை என்னவென்றால், விளக்கம் எனக்குத் தெரியாது; புரிந்துகொள்ளக் கூட அடிப்படை விவரம் தெரியாது. நாம் எப்படி இது முடியும் என்று பிரமிப்போடு கேட்கும் கேள்விகளுக்கு விடை நமக்குத் தெரியாமல் இருக்கலாம்; ஆனால் பதிலே இருக்க முடியாது என்று நினைப்பது அறிவுடைமையாகாது. நாம் அதிசயப்படும் அளவுக்குச் சில விஷயங்கள் இருப்பதாலேயே அவைகள் கட்டாயம் ஓர் அதிசய அதிசக்தியால் தான் வழிநடத்தப் படவேண்டும் என்பதில்லை என்றேன்.

இந்த ஜோதிட சமாச்சாரங்களை நம்புவோர்கள் பலரும் ஒரே கருத்தைச் சொல்லுவதுண்டு: ஜோதிடம் ஒரு விஞ்ஞானம் தான்; அது ஒரு கணித முறையில் கணக்கிடப்படும் துறை. பிரச்சனை என்னவென்றால், சிலர் அதைத் தவறாகக் கணக்கிடுவதாலேயே தவறுகள் நடந்து விடுகின்றன என்பதே அது. அவை ‘கணக்கு’ என்றால் அதில் தவறேதும் நடக்க முடியாது; விதி முறைகள், வழி முறைகள் எல்லாம் ஒரு ஒழுங்கில் இருந்தால்தானே அது ஒரு கணக்காகும்; விஞ்ஞானமாகும்? எனக்கு ஒரு வகைக் கணக்கு; உனக்கு ஒரு வகைக்கணக்கு என்றால் அது கணக்கே அல்லவே.

இன்னொன்று: விஞ்ஞான சோதனைகளில் ‘control’ என்று ஒன்று இருக்கும். ஒரு guninea pig வைத்து சோதனை நடக்கிறதென்றால் இரு வகை சோதனைப் பிராணிகளை வைத்து சோதனை செய்வதே வழக்கம். ஒரு மருந்தை ஊசிமூலம் ஏற்றி சோதனை நடக்கிறதென்று கொள்வோம். சோதனைப் பிராணிகளுக்கு - experimental group - ஊசிமூலம் அந்த மருந்து ஏற்றப்படும்; இன்னும் சில பிராணிகளுக்கு - control group - மருந்தில்லாமல் வெறும் ஊசி (placebo or sham injection) போடுவார்கள். இந்த இரண்டாவது பிராணிகள் control group ஆக இருக்கும். இது எல்லா விஞ்ஞான சோதனைகளில் மேற்கொள்ளப்படும் முறை.

வாஸ்து, ராசிக்கல், ஜாதகம் இந்த விஷயங்களிலும் (ஏன், மதநம்பிக்கைகளில் கூட) இது போல கண்ட்ரோல் வைத்து சில சோதனைகள் செய்ய முடிந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும். இது செயல்முறைக்கு ஒத்துவராது; முடியாது என்பதாலேயே இதை வைத்து ‘வியாபாரம்’ செய்பவர்களுக்கு நல்லதாகப் போய்விட்டது; நம்புவர்களுக்கு வசதியாகப் போய்விட்டது. வாஸ்து ‘விற்பன்னர்கள்’ இருவரிடம் ஒரே வீட்டைப் பற்றிக் கேளுங்கள். Put two questions to three teachers and they will come with four answers என்பார்கள். அதிகம் வேண்டாம் ; ஒரே ஒரு கேள்வியை ‘’வாஸ்தர்கள்’ இரண்டு பேரிடம் மூன்று முறை கேளுங்கள்…எத்தனை பதில்கள் வருமோ?

ஆனால் ஒன்று செய்யலாம். ஒரே ஜாதகத்தை சில சோதிட மேதைகளிடம் கொடுத்துக் கணிக்கச் சொல்லலாம். சோதிடம் விஞ்ஞானமாக இருந்தால் கணிப்புகள் எல்லாமே ஒரேமாதிரி இருந்தாக வேண்டும். நடைமுறையில் நான் கேள்விப்பட்ட, பார்த்த வரையில் இப்படி இருப்பதேயில்லா. ஆளாளுக்கு ஒரு பலன் என்பதே நடப்பு.

ஜாதகங்களை எடுத்துக் கொண்டால், கணிசமான இந்துக்கள் ஜாதகம் பார்த்துக் கல்யாணங்கள் நடத்த, கிறித்துவர்கள், இஸ்லாமியர்களிடம் இந்த வழக்கம் கிடையாது. நடந்து முடிந்த திருமணங்களில் நல்லது கெட்டது எல்லாமே இந்த இருவகைத் திருமண வாழ்க்கைகளிலும் இருக்கின்றன. ஜாதகம் பார்த்து திருமணம் பண்ணிக்கொண்ட தம்பதிகளின் வாழ்க்கை ‘ஒன்பதாவது மேகத்திலும்’, மற்றவர்கள் வாழ்க்கை ‘ஏழாவது நரகத்திலுமா’ இருக்கிறது. நல்லது கெட்டது என்பது வாழ்க்கையோடு இயல்பாய் இருக்கும் காரியங்கள். இதற்கு நாளென்ன செய்யும்; கோளென்ன செய்யும்; பாவம், அவைகளை விட்டு விடுவோமே!

அடுத்து: ஒவ்வொரு வித நம்பிக்கைகளின் மேல் எனக்குள்ள சந்தேகங்கள், கேள்விகள்….இவைகளைத் தனித்தனிப் பதிவுகளாக - சின்னச் சின்னப் பதிவுகளாக இருப்பினும் - பதிவேற்ற ஆசை…..







Pathivu Toolbar ©2005thamizmanam.com


Feb 20 2006 02:04 pm | சமூகம் | | edit this
14 Responses
suresh - penathal Says:
February 20th, 2006 at 2:24 pm e
தருமி சார், உங்க ஜாதகத்தைப் பார்த்தேன்.

ஏழாம் வீட்டுலே சுக்கிரனும், 23ஆம் வீட்டுலே செவ்வாயும் உக்ரப்பார்வை பார்க்கறதாலே இந்த ஜாதகம் ஜோசியம்லே எல்லாம் உங்களுக்கு நம்பிக்கை இருக்காதுன்னு கணக்கு சொல்லுது.

நீங்க உங்க டெம்பிளேட்டுலெ பேக்க்ரவுண்டா வெளிர் பச்சை குடுத்தா இந்த நிலைமை மாறும்.

Geetha Sambasivam Says:
February 20th, 2006 at 3:59 pm e
tamil panjangathil ulla surya grahanam and chandra grahanam patriya kurippukal kalam kalamaga kuripidapattu varukirathu.Atharku ungal vignanan ennaa pathil solkirathu?:???:

கோபி Says:
February 20th, 2006 at 4:08 pm e
//இந்த விஷயங்களில் நம்பிக்கை இல்லை; அவைகளைப் பற்றிய அறிவும் கிடையாது.//

சோதிடம் குறித்து மேற்கொண்டு அறிய வராஹமிஹிரர் எழுதிய “ப்ருஹத் சம்ஹிதா” படிக்கலாம். இதன் மூல பதிப்பு கிடைப்பது அரிது. சிலர் எழுதிய விளக்க உரையுடன் கூடிய ஆங்கிலப் பதிப்புகள் பெங்களூரிலும் சென்னையிலும் பெரிய புத்தகக் கடைகளில் கிடைக்கும்.

//அவை ‘கணக்கு’ என்றால் அதில் தவறேதும் நடக்க முடியாது; விதி முறைகள், வழி முறைகள் எல்லாம் ஒரு ஒழுங்கில் இருந்தால்தானே அது ஒரு கணக்காகும்;//

ஜாதகம் கணிக்கப்படுவது கணக்கின் அடிப்படையில்தான். பிறந்த தேதி, நேரம் இடம் ஆகியவற்றை எத்தனை சோதிடர்களிடம் கொடுத்தாலும் ஜாதகம் ஒன்றாகத்தான் கணித்துத் தருவர்.(கணிக்கப் பயன்படுத்திய பஞ்சாங்கம் திருக்கணிதப் பஞ்சாங்கமா அல்லது சுத்தவாக்கியப் பஞ்சாங்கமா என்பதைப் பொறுத்து சிறிய அளவிலான மாற்றங்கள் இருக்கும்)

ஜாதகத்தின் அடிப்படையிலான பலன்கள், சொல்லுகின்ற சோதிடர்களின் தரத்தையும் தேவையையும், கேட்கின்றவர்களின் நிலையையும் பொறுத்து அமைகிறது.

எனது புரிதலில்:
ஜாதகம் - கணக்கு
பலன்கள் - நிகழ்தகவு (Probability)

கோபி Says:
February 21st, 2006 at 11:29 am e
//ஏழாம் வீட்டுலே சுக்கிரனும், 23ஆம் வீட்டுலே செவ்வாயும் உக்ரப்பார்வை பார்க்கறதாலே //

:-)

உண்மையில் ஏழாமிடம் களத்திர ஸ்தானம் எனப்படும். திருமணம், வாழ்க்கைத் துணையைப் பற்றி அறிய உதவும்.

பக்கத்துல இருக்கிற எட்டாமிடம் எதிரி, மரணம், இவை பற்றி அறிய உதவும் (அஷ்டம ஸ்தானம் அல்லது சத்ரு ஸ்தானம் எனவும் சொல்வர்)

:-)

23ஆம் வீடு என்ற ஒன்று கிடையாது(12 வீடுகள்தான்).

உக்ரம் (அல்லது வக்ரம்) அடைவது என்பது ஒரு கிரகம் தன் வழக்கமான சுற்றும் திசைக்கு எதிராக சுழல்வது. வானவியலில் ஒரு கிரகம் சுற்றும் கால அளவிற்கும் சோதிடத்தில் அந்த கிரகம் சுற்றும் கால அளவிற்கும் உள்ள வேறுபாடு இந்த வக்ரகதி காலத்துக்கு ஏற குறைய சமமாய் இருக்கும்.

தருமி Says:
February 21st, 2006 at 4:26 pm e
சுரேஷ்,
எதுக்கும் இன்னும் இரண்டு சோதிடர்களைப் பாத்து கேட்டுட்டு (முக்கா முக்கா மூணு தடவை ) அதுக்குப் பிறகு கலர் மாத்தலாமா, இல்ல வேற ஏதாவது பரிகாரம் இருக்கான்னு பார்க்கணும்..

தருமி Says:
February 21st, 2006 at 4:32 pm e
Geetha Sambasivam,
aren’t you confusing astronomy with astrology?

Atharku ungal vignanan ennaa pathil solkirathu?:???: i thought it is ‘OUR vignanam’

கோபி,
“இந்த விஷயங்களில் நம்பிக்கை இல்லை; அவைகளைப் பற்றிய அறிவும் கிடையாது”// இதோடு ‘அந்த அறிவுத் தேடலிலும் ஆர்வமில்லை’ என்று சொன்னதாக வைத்துக்கொள்ளுங்களேன்.
உங்களைப் போன்றோர் -அந்த நூல்களை வாசித்தவர்கள் - சொன்னால் கேட்டுக் கொண்டால் போயிற்று.

தருமி Says:
February 22nd, 2006 at 1:46 pm e
கோபி,
அம்மாடியோவ்! பயங்கர ஆளா இருப்பீங்க போல…எல்லாமே finger tip-ல இருக்கும்போல..

சுரேஷ் ஜோக்கைக் கூட ‘பிரிச்சி மேஞ்சிட்டீங்க’

சிமுலேஷன் Says:
February 22nd, 2006 at 2:16 pm e
எனக்குத் தெரிந்த ஒருவர் தனது பெயரை மாற்றிக் கொண்டது மட்டுமல்லாது, தனது அபார்ட்மென்ட் எண்ணைக் கூட மாற்றிக் கொண்டார். (G என்ற அபார்ட்மென்டை GA என்று). சமையல் மேடையை வாஸ்து நிபுணர் அறிவுரையின் பேரில் மாற்றிவிட்டு, பிறகு சமையல் மேடைக்கு நேரே சூரிய வெளிச்சம் அடிப்பதனால், தினமும், கூலிங் கிளாஸ் போட்டுக் கொண்டுதான் சமைக்கிறார்.

Geetha Sambasivam Says:
February 22nd, 2006 at 3:16 pm e
The astrologers calculated with the help of astronomy only. The astronomy helps the astrologers the correct position of the planets during one’s birthtime and aftereffects are also calculated in this type only. If the astrologer is a good calculater and if he knows the exact position of the grahas he can absolutely tell one’s future. It is true and it is happening.

சதயம் Says:
February 23rd, 2006 at 10:25 am e
DHARUMI=4+5+1+2+6+4+1=23

23 க்கு கபாலேரியன்(சரிதானா!) முறையில் பலன்கள் இவ்வாறாக உள்ளது….”குருசந்திர யோகம் உண்டு.எண்ணத்தை செயலாக்கும் திறன்.அதிர்ஷ்டத்தின் வாசல் கதவு.செயற்கரிய செயல், சரித்திர சாதனை,அரசியலில் புரட்சி,கலைகளில் வெற்றி.ராஜ கம்பீரம் உண்டு.சுகவாழ்வு,உலக அறிவு,ஜெயசக்தி.”

ஹீப்ரு பிரமிட் முறையில் 33ம் எண் வருகிறது, மிகவும் மங்களகரமான எண், அஷ்டலக்ஷ்மி வசியம் உடைய எண், தன தான்யத்திற்கு குறைவிருக்காது

தருமி சார்,கன்சல்டேஷன் பீஸாக ஒரு டன் அன்பை உடனே அனுப்பி வைக்கவும்.

தருமி Says:
February 23rd, 2006 at 2:43 pm e
சிமுலேஷன்,
நல்ல வேளை “தினமும், கூலிங் கிளாஸ் போட்டுக் கொண்டுதான்” தூங்க வேண்டிய நிலை அவருக்கு வரலையே, அதுவரை சந்தோஷம்தான்.

geetha sambasivan,
“It is true and it is happening. ” - sorry, ma’am. i dodnt buy that. if it is true this world would be changed in a jiffy to ‘garden of Eden”

தருமி Says:
February 23rd, 2006 at 2:49 pm e
சதயம்,
என்னங்க இது, இப்படிப் பண்ணீட்டீங்க..பயங்கரமான ஆளா மாறிட்டது மாதிரி இப்போதே தோணுதுங்க..நீங்க வேற ‘அரசியலில் புரட்சி’ அப்டின்னு சொல்லிட்டீங்க…தேர்தல் நேரம் வேற.. ‘எங்க’ கட்சியில மதுரைக்கு டிக்கெட் கொடுக்கிறது மாதிரி வேற கேள்விப்பட்டேன். ஒத்துக்க வேண்டியதுதான்.
அப்புறம் இதுவேற - ‘அஷ்டலக்ஷ்மி வசியம் உடைய எண்’ சொல்லியிரிக்கீங்க.
என்ன பண்றதுன்னே தெரியலை…சொக்கா,(சதயம்) இப்படி மண்டபத்தில பொலம்ப வச்சுட்டியே..

சதயம் Says:
February 23rd, 2006 at 4:02 pm e
:தருமின்னு பேர் சூடிய பின் இந்த பலனெல்லாம் உங்களுக்கு வாய்க்கனும்னு இருக்கு போல

ஐயா, எந்த தொகுதி மேல கண்ணு வச்சிருக்கீக!, கிழக்கா, மேற்கா, மத்திய தொகுதியா?…இல்லை எங்க சமயநல்லூர் தொகுதியா?

sam Says:
February 25th, 2006 at 8:20 am e
அன்புள்ள தருமி

வெள்ளை மாளிகையில் ஒரு ஆஸ்தான சோதிடர்

சாம்

Thursday, April 13, 2006

152. சோதிடம் - 13…முடிவுரை

Image and video hosting by TinyPic



மற்றைய பதிவுகள்:

1*,
2*,
3*,
4*,
5*,
6*,
7*,
8*,
9*,
10*,
11*,
12*.
13*.



இந்த சோதிடப் பதிவுகள் அனுமார் வால் மாதிரி நீண்டு போச்சு. ஆனாலும் ஜாதகம் பற்றிய பதிவுகளுக்கு மட்டுமே சிலரின் மாற்றுக்கருத்து பார்க்க முடிந்தது. வாஸ்து, எண்கணிதம் என்று பலர் முனைப்போடு இருப்பதாகத் தோன்றினாலும், உண்மையில் சாதகம் மட்டுமே மக்கள் மனத்தில் ஆழமாய் வேரூன்றி இருக்கிறது என்பதையே இது காண்பிப்பதாக எடுத்துக் கொள்கிறேன்.

ஏற்கெனவே சொன்னது போல வயதானவர்கள் தங்கள் மேல் நம்பிக்கையிழந்து, சுற்றி நிற்கும் பிரச்சனைகளால் மனம் கலங்கி ஏதாவது ஒரு கொழு கொம்பு கிடைக்காதா என்ற சோகச்சூழலில் இந்த “விஞ்ஞானங்களைத்” தேடிச் செல்வதையாவது ‘அய்யோ பாவம்’ என்ற முறையில் விட்டுவிடலாம். வாழ்வின் இளமைக்காலத்தில் ‘ஓடுற பாம்பை மிதிக்கிற வயசில்’ இளைஞர்கள் எவ்வளவு மன உறுதியுடனும் தன்னம்பிக்கையுடனும் இருக்கவேண்டும்; அதை விட்டு விட்டு பெயரை மாத்தினால் நல்ல வேலை கிடைக்குமா, மோதிரத்தில் கல்லை மாட்டிக் கொண்டால் எதிர்காலம் வெளிச்சமாகுமா என்று இந்த ‘விஞ்ஞானிகள்’ பின்னால் செல்வது சரியான ஒரு வயித்தெரிச்சல் சமாச்சாரமாக எனக்குத் தோன்றுகிறது. இதைப்பற்றிய பதிவுகளில் நான் சில கேள்விகள் எழுப்பியிருந்தேன் - உண்மையாகவே அவைகளுக்குப் பதில் தெரியாத காரணத்தாலயே அவைகளைக் கேட்டிருந்தேன். யாரும் பதில் சொல்லாததால் இன்னும் என் பழைய நிலையிலேயேதான் இருக்கிறேன்.

இப்பதிவுகளை எழுதக்காரணமே நம் இளைஞர்களில் பலருக்கும் வாஸ்து, எண் கணிதம், பெயர் மாற்றம் போன்ற பலவற்றில் புதிதாக ஏற்பட்டுள்ள ஈர்ப்பே காரணம். கடந்த இருபது ஆண்டுகளில் இந்த விஷயங்கள் மேல் மக்களுக்கு, அதுவும் இளைஞர்களுக்கு, ஏற்பட்டுள்ள தாக்கத்தைப் பார்த்த பிறகே அதைப் பற்றி நினைக்க ஆரம்பித்து, இப்பதிவுகளை எழுதலானேன்.

வழக்கமாகவே சோதிடத்தில் நல்லது ஏதாவது சொன்னால் அதை அப்படியே யாரும் நம்புவதில்லை - people take it with a pinch of salt. ஆனால் அதுவே கெட்டது நடக்கும் என்றால் மனம் பேதலித்து நிற்பது என்பது சாதாரணமாகப் பார்க்கும் ஒரு விஷயம்தான். கொஞ்ச நஞ்சம் இருக்கும் நம் தன்னம்பிக்கையை பாழடிக்கும் என்று தெரிந்தும் அதில் வீழ்வது புத்திசாலித்தனமாகாது.

அடுத்து கடைசியாக சாதகத்திற்கு வருவோம். இதைப்பற்றிய பதிவுகளுக்குத்தான் நம்பிக்கையாளர்கள் சிலர் பதிலளிக்க வந்தனர். நன்றி அவர்களுக்கு. நம்பிக்கையாளர்கள் வழக்கமாகச் சொல்லும் ஒரு விஷயம்: சாதகம் ஒரு கணக்கு; ஆனால் சிலரே அதை மிகச்சரியாக கணிக்கத் தெரிந்தவர்கள். அந்தக் கணக்கு தெரியாதவர்கள் கணிக்கும்போது ஏற்படும் தவறுகளை வைத்து சாதகமே தவறு என்று சொல்வது தவறு என்பது அவர்களின் ஒரு விவாதம். இவ்விவாதத்திற்கு தொப்புளான் சொன்னதை இங்கு மீண்டும் சுட்டிக்காட்டி அதற்குரிய பதிலாகத் தருகிறேன்: கணக்கு சரிதான். கணிக்கிறவர்தான் தப்புன்னா இத்தனை வருசத்தில ஒரு அமைப்பு ஏற்படுத்தி தரப்படுத்தி டாக்டருங்களுக்கு அங்கீகாரம் கொடுக்கிறமாதிரி தரவேண்டியதுதான.அது ஆதரவாளர்களுக்கும் நல்லதுதான.திரும்பத் திரும்ப சண்டை போட வேண்டாம்ல.இந்த மாதிரி விஷயத்தில எல்லாம் நிரூபிக்க முடியாதுங்கறது (non falsifiable)வசதியாப் போச்சு.

அடுத்து, இந்த சாதக அமைப்புகள் நம் “தலைவிதி” என்றே கொள்வோம். அப்படியாயின் அது கடவுள் கொடுத்த ஒன்றாயின் பின் எதற்கு அந்த அமைப்புகளில் காணும் ‘தோஷங்களுக்கு’ப் பரிகாரங்கள்? கடவுளுக்குக் கையூட்டு கொடுத்து, கிரஹங்களின் ‘தாக்கத்தை’ மாற்றுவதா இது? இந்தப் பரிகாரங்களைப் பற்றிச் சொல்லும்போது, சென்ற பதிவின் பின்னூட்டத்தில் சம்மட்டி சொன்னதை மீண்டும் நினைவு கூர்வது நன்றாயிருக்கும்:

“தோசம் கழிக்க மறுபடியும் சாமிக்கிட்ட தான போகனும் !. ஜோதிடத்தை 100% நம்புவர்கள் கூட அவைகளை மாற்றிவிட முடியும் என்று கருதுகிறார்கள், ஆஞ்சினேயருக்கு வட மாலை, சனீஸ்வரனுக்கு எள்ளுசாதம், துர்க்கைக்கு குங்கும பூஜை இப்படி என்னென்னுமோ தகிடுதத்தமெல்லாம் பண்ணிதாங்களே நம்புகிற ஜாதகத்தை பொய்யாக்கிறவர்கள் ஜோசிய நம்பிக்கையாளர்கள் தாம்.”

இன்னொரு காரியம்: சாதகம் கணிக்க குழந்தை ‘ஜனித்த’ சரியான நேரம் தெரியவேண்டும் என்பதில் ‘சரியான நேரம் எதுவென்பதைப் பற்றிய கருத்து வேறுபாடுகளையும் முன் பதிவில் பார்க்கலாம். கருச்சிதைவுக்கு எதிராகக் கருத்து சொல்லும் கிறித்துவ, இஸ்லாம் (மற்ற மதக்கோட்பாடுகள் பற்றி தெரியவில்லை) மதங்களிலும் தாயின் கரு சூல் (fertilization) ஆன உடனேயே அங்கே ஓர் உயிர் தோன்றி விட்டதாகவே கருதுகின்றன. அப்படியாயின் நான் ஞானவெட்டியானிடம் கேட்ட கேள்வி:
-சரியான நேரத்தை எடுத்துக்கொண்டு கணித்தால் ஜாதகம் மிகச்சரியாக இருக்கும் - ஒரு சாராரின் வாதம்.

-சரியான பிறந்த நேரம் தாயின் கருமுட்டை சினையுறுவது; ஆனால் அது யாராலும் கண்டுபிடிக்க முடியாத விஷயம்.

- அப்படியாயின் மற்றபடி பிறந்த நேரம் வைத்துக் கணக்கிடும் - திருக்கணிதத்தையும் சேர்த்தே - எல்லா ஜாதகக் கணிப்புகளுமே தவறாகத்தான் இருக்க வேண்டும்.

- எல்லா கணிப்புகளுமே தவறாக இருப்பின். அதனால் யாருக்கு என்ன பயன்? எல்லாமே தேவையற்றதுதானா?

- எல்லாமே தேவையற்றதாயின் பின் அது ஏன் காலங்காலமாய் மக்களால் பின்பற்றப் படுகிறது?

நறுக்கென்று ஞானவெட்டியான் இதற்குத் தந்த பதில்:

அறியாமையைத் தவிற வேறொன்றுமில்லை.

ஞானவெட்டியான் மேலும் சொன்னது:

எல்லாவற்றிற்கும் மேலாக “எது வரினும் வரட்டும்; எதிர்கொள்வோம். தன்னம்பிக்கையுடன் வாழ்வோம்” என முடிவெடுத்தால் சோதிடர் பக்கமே செல்லவேண்டாம்.”

தருமியின் கடைசிக் கேள்வி: மதங்களையும், கடவுளையும் நம்புகிறவர்களே இந்த வகையான விஷயங்களில் ஈடுபாடு காண்பிப்பது எனக்கு கொஞ்சம் அதிசயமாகவே படுகிறது. உங்களுக்கு உண்மையிலேயே நீங்கள் கும்பிடும் தெய்வத்திடம் நம்பிக்கை இருந்தால் இந்த துணை நம்பிக்கைகள் எதற்கு? இதனால் உங்கள் கடவுள் நம்பிக்கையையும், உங்கள் கடவுள்களையும் - அதனால் உங்களையுமே - நீங்கள் கேவலப்படுத்திக் கொள்ளவில்லையா?

பின்குறிப்பு:

ஜாதக நம்பிக்கையாளர்களுக்கு ஒரு வேண்டுகோள் - இதற்கு முந்திய பதிவின் கடைசியிலிருந்து இரண்டாவது பத்தி - last but one para - வுக்கும் கொஞ்சம் பதில் சொன்னால் நன்றாக இருக்குமே…



இதைப் பற்றி இங்கேயும்…

Š







Pathivu Toolbar ©2005thamizmanam.com


Apr 13 2006 04:00 pm | சமூகம் |
45 Responses
muthu(tamizhini) Says:
April 13th, 2006 at 4:20 pm


//இத்தனை வருசத்தில ஒரு அமைப்பு ஏற்படுத்தி தரப்படுத்தி டாக்டருங்களுக்கு அங்கீகாரம் கொடுக்கிறமாதிரி தரவேண்டியதுதான//

இதுக்குத்தான் அண்ணன் ஜோஷி முயன்றார்.நீங்க விட்டீங்களா? கேள்வி கேக்கறீங்க பெரிய கேள்வி…
உடம்பு சரியில்லைன்னா டாக்டர் கிட்ட போறீங்க..அப்புறம் சோதிடம்னா இளக்காரமா? என்னய்யா நியாயம் இது?

Geetha Sambasivam Says:
April 13th, 2006 at 6:03 pm
ஜாதகம் கணிக்க சரியான பிறந்த நேரம் தான் எடுத்துக் கொள்ளப் பட வேண்டுமே அன்றிக் கருவுற்ற நேரம் அல்ல. பரிகாரம், பூஜை என்று செய்வது நம் மனச்சாந்திக்காகவும், கெட்டது நடந்தால் ஏற்கும் மனப்பக்குவம் பெறவும்தான்.கிறித்துவத்தில் கூட மெழுகுவர்த்தி ஏற்று வழிபாடு செய்வதும், முஸ்லீம்கள் Chaddar போடுவதும் உண்டு. நாங்கள் பிரார்த்தனைக்கு வேளாங்கண்ணியிலும் செய்தது உண்டு. தர்காவிலும் Chaddar போட்டிருக்கிறோம்.பிரார்த்தனை மூலம் நடக்க முடியாத விஷயங்கள் நடக்க முடியும் என்று நம்புகிறோம்.இல்லாவிட்டாலும் அதை ஏற்க வேண்டிய சக்தியை அந்த ஆண்டவன் கொடுக்கவேண்டும் என்று தான் ப்ரார்த்திப்போம்.

தருமி Says:
April 13th, 2006 at 8:44 pm
hi muthu(thamizini),
the problem with Joshi was he was putting the cart before the horse!

தருமி Says:
April 13th, 2006 at 8:45 pm
Geetha Sambasivam

“ஜாதகம் கணிக்க சரியான ….என்று தான் ப்ரார்த்திப்போம். “//

- Amen!

தருமி Says:
April 13th, 2006 at 8:46 pm
geetha s.,
i have added a post-script in this post. pl. note that too.

ஞானவெட்டியான் Says:
April 13th, 2006 at 9:05 pm
//மதங்களையும், கடவுளையும் நம்புகிறவர்களே இந்த வகையான விஷயங்களில் ஈடுபாடு காண்பிப்பது எனக்கு கொஞ்சம் அதிசயமாகவே படுகிறது. உங்களுக்கு உண்மையிலேயே நீங்கள் கும்பிடும் தெய்வத்திடம் நம்பிக்கை இருந்தால் இந்த துணை நம்பிக்கைகள் எதற்கு?//

நோய் வந்துவிடுகிறது. ஒரு மருத்துவரிடம் போகிறோம். உடனே, பக்கத்து வீட்டுக்காரர், “அட, போய்யா! நம்ம மருத்துவர்கிட்ட பாக்கலாம்; வா” என்கிறார். சரி; ஒரு SECOND OPINION வங்கிக் கொள்வோமே என அந்த மருத்துவரிடம் போகிறோம். அது போலத்தான். இந்தக் கடவுள்கிட்ட போயாச்சு; அந்தக் கடவுள்கிட்டயும் போவோமே ன்னுதான். அதுக்காக முதல் மருத்துவரிடம் இருந்த நம்பிக்கை போய்விட்டது என அருத்தமா?
கடவுள் வந்து எங்காவது நேரில் பேசியிருக்கிறதா? அதுதான் சோதிடர்களை நியமித்துள்ளது. அங்கு போனால், “இந்த சாமிக்கு இப்படிப் பரிகாரம் செய்” அப்பிடிம்பார். உடனே செய்வீர்கள். “ஆவி உனக்கு; அமுது எனக்கு” ன்னு பரிகாரம் செய்பவர் சுளையாய் கொண்டுபோய் விடுவார். அதுக்காகக் கடவுள் நம்பிக்கை இருப்பவன் சோதிடரிடம் ஏன ்போகிறாய்? ன்னு கேட்டா நியாயமா?

// இதனால் உங்கள் கடவுள் நம்பிக்கையையும், உங்கள் கடவுள்களையும் - அதனால் உங்களையுமே - நீங்கள் கேவலப்படுத்திக் கொள்ளவில்லையா?//

நாங்கள் கேவலமென நினைக்கவில்லை; நீங்கள் நினைத்தால் அதுக்கு யார் பொறுப்பு.

அந்தக் காலத்துல சிவனுக்கும் நக்கீரனுக்கும் கேள்வி கேட்டே கலகமூட்டினீர்கள். இப்பொழுது யார் யாரெல்லாம் என்னோடு சண்டைக்கு வரப்போகிறார்களோ?

தருமி Says:
April 13th, 2006 at 10:28 pm
“அந்தக் காலத்துல சிவனுக்கும் நக்கீரனுக்கும் கேள்வி கேட்டே கலகமூட்டினீர்கள்.”//
- இதென்ன புதுக்கதை…நான் (திருவிளையாடல்)பார்த்த வரைக்கும், ‘நான்’ அறியாப்ப் பிள்ளையா வந்து, வாங்கிக் கட்டிட்டு போன பாவப்பட்ட ஜென்மம் தானேங்க!

ஆனாலும் ரொம்பவே நீங்க ‘அவங்களை’ லந்து பண்ணியிருக்கீங்க…

குறும்பன் Says:
April 14th, 2006 at 1:24 am
” எத தின்னா பித்தம் தெளியும்ன்னு அலையற” ஆளு எதை வேணும்னாலும் தின்பான், பித்தம் போகனும் அதுதான் அவனுக்கு தேவை.
சோசியம், எண்கணிதம், வாஸ்து, …. எல்லாம் இப்படிதான் வாழுது. சோசியத்தோட இரகசியம் என்னன்னா கேக்கறவங்க நம்பற மாதிரி சோசியம் சொல்லனும் இல்லைன்னா ….அடுத்த ஆளு, நம்ம ஊர்ல சோசியக்காரங்களுக்கா பஞ்சம்.

ஞானவெட்டியான் Says:
April 14th, 2006 at 7:54 am
அய்யா, தருமி,

வேண்டாமையா! வேண்டாம்!!
என்னை உட்டுறுங்க. நான் ஓடிப் போயிடரேன்.
இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

தருமி Says:
April 14th, 2006 at 1:16 pm
குறும்பன்,
எதையும் திங்காம ரெண்டு நாள் பட்டினி கிடந்தாதான் பித்தம் தீரும்னு சொல்லணும் அவங்கிட்ட…

தருமி Says:
April 14th, 2006 at 1:18 pm
ஞானவெட்டியான்,
“என்னை உட்டுறுங்க. நான் ஓடிப் போயிடரேன்.”// - எங்க விடறது; அதான் உங்கள இங்கன இழுத்து விட்டாச்சே !!

உங்களுக்கு என் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

சம்மட்டி Says:
April 15th, 2006 at 10:11 am
//இதனால் உங்கள் கடவுள் நம்பிக்கையையும், உங்கள் கடவுள்களையும் - அதனால் உங்களையுமே - நீங்கள் கேவலப்படுத்திக் கொள்ளவில்லையா?//
தருமி அவர்களே, எனது எண்ணங்களை முடிவுரையில் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

உங்கள் சோதிட பதிவு நிறைவுற்றாலும், இன்னும் சில் விசயங்கள் பேசப்படவில்லை என்று கருதுகிறேன். உதாரணமாக சனி பிடிப்பது. சிவ பெருமானுக்கே சனி பிடிக்க சென்றதாகவும், அதனால் அவர் ஓடி ஒளிந்ததாகவும், பித்தனாக மாறியதாகவும் கதைகள் இருக்கின்றன, சனி சிவனைப் பார்த்து கெ. கெ எனச் சிரித்தாதகவும் , அதாவது நான் பிடிக்க வந்ததற்கே, நீ பல்வேறு அவதிகளையும் அடைந்தாய் ஒரு வேளை பிடித்திருந்தால் உன் கதி என்ன என்று சொன்னதாகவுன் புராணபடங்களிலும், சமீபத்திய விக்ரமாத்திதன் சீரியலிலும் காட்டப்பட்டது ( இதல்லாமா பார்கிறீர்கள் ? என்ற கின்டலை நானும் ரசிக்கிறேன்).

இதிலிருந்து நான் சொல்ல வருவது என்ன வென்றால், சோதிடத்தை நம்பி, சோதிட பரிகாரம் செய்பவர்கள் எண்ணிப் பார்பார்களா, தாங்கள் நம்பும் கடவுள்களே, சோதிட பலன்களிலிருந்து தப்பியவர்கள் இல்லை என்று !

எரிகிற கொல்லியில் எந்த கொல்லி நல்ல கொள்ளி ?

இது ஒரு வழக்கு சொல்லோ அல்லது பழமொழியோ, எதுவாகவும் இருந்து விட்டு போகட்டம், கருத்து இது தான், இந்து தெய்வத்தில் எந்த தெய்வம் சக்தி வாய்ந்தது,

சென்ற நூற்றாண்டில் தோன்றிய ஐயப்பனா ?
சென்ற நூற்றாண்டில் காளியாக இருந்து வெங்கடேசனாக மாறிய திருப்பதி வெங்கடாஜலபதியா ?
( ஆதாரம் , இந்து மதம் எங்கே போகிறது , நக்கீரன் - தாத்தாச்சாரியார் )
கோபத்தையும் ஆசையும் தனித்துக் கொள்ளத் தெரியாமல் கோவித்துக் கொண்டு ஆண்டியான பழனி ஆண்டவரா ?

அல்லது திடீர் புகழ் மேல்மருவத்தூர் இன்ன பிற,

பல்வேறு கடவுள்கள் எதற்கு, ஒன்றை காட்டிலும் ஒன்று சக்தி வாய்ந்ததா ? அப்படி என்றால் சக்தியற்ற ஒன்றை கட்டிக்கிட்டு அழுவானேன் ? எண்ணிப்பார்பார்களா ?

தருமி அவர்களே, நீங்கள் பில்லி சூனியத்தைப் பற்றி ஒரு பதிவு போடவேண்டும் என்று வேண்டு கோள்வைக்கிறேன்.

இந்த பில்லி சூனியம் - சோதிடம், கடவுள் சக்தி எல்லவற்றையும் தூக்கி சாப்பிடுவதாக நம்பிக்கையாளர்கள் சொல்கிறார்கள்.

சம்மட்டி

சம்மட்டி Says:
April 15th, 2006 at 10:15 am
//இதனால் உங்கள் கடவுள் நம்பிக்கையையும், உங்கள் கடவுள்களையும் - அதனால் உங்களையுமே - நீங்கள் கேவலப்படுத்திக் கொள்ளவில்லையா?//
தருமி அவர்களே, எனது எண்ணங்களை முடிவுரையில் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

உங்கள் சோதிட பதிவு நிறைவுற்றாலும், இன்னும் சில் விசயங்கள் பேசப்படவில்லை என்று கருதுகிறேன். உதாரணமாக சனி பிடிப்பது. சிவ பெருமானுக்கே சனி பிடிக்க சென்றதாகவும், அதனால் அவர் ஓடி ஒளிந்ததாகவும், பித்தனாக மாறியதாகவும் கதைகள் இருக்கின்றன, சனி சிவனைப் பார்த்து கெ. கெ எனச் சிரித்தாதகவும் , அதாவது நான் பிடிக்க வந்ததற்கே, நீ பல்வேறு அவதிகளையும் அடைந்தாய் ஒரு வேளை பிடித்திருந்தால் உன் கதி என்ன என்று சொன்னதாகவுன் புராணபடங்களிலும், சமீபத்திய விக்ரமாத்திதன் சீரியலிலும் காட்டப்பட்டது ( இதல்லாமா பார்கிறீர்கள் ? என்ற கின்டலை நானும் ரசிக்கிறேன்).

இதிலிருந்து நான் சொல்ல வருவது என்ன வென்றால், சோதிடத்தை நம்பி, சோதிட பரிகாரம் செய்பவர்கள் எண்ணிப் பார்பார்களா, தாங்கள் நம்பும் கடவுள்களே, சோதிட பலன்களிலிருந்து தப்பியவர்கள் இல்லை என்று !

எரிகிற கொல்லியில் எந்த கொல்லி நல்ல கொள்ளி ?

இது ஒரு வழக்கு சொல்லோ அல்லது பழமொழியோ, எதுவாகவும் இருந்து விட்டு போகட்டம், கருத்து இது தான், இந்து தெய்வத்தில் எந்த தெய்வம் சக்தி வாய்ந்தது,

சென்ற நூற்றாண்டில் தோன்றிய ஐயப்பனா ?
சென்ற நூற்றாண்டில் காளியாக இருந்து வெங்கடேசனாக மாறிய திருப்பதி வெங்கடாஜலபதியா ?
( ஆதாரம் , இந்து மதம் எங்கே போகிறது , நக்கீரன் - தாத்தாச்சாரியார் )
கோபத்தையும் ஆசையும் தனித்துக் கொள்ளத் தெரியாமல் கோவித்துக் கொண்டு ஆண்டியான பழனி ஆண்டவரா ?

அல்லது திடீர் புகழ் மேல்மருவத்தூர் இன்ன பிற,

பல் வேறு கடவுள்கள் எதற்கு, ஒன்றை காட்டிலும் ஒன்று சக்தி வாய்ந்ததா ? அப்படி என்றால் சக்தியற்ற ஒன்றை கட்டிக்கிட்டு அழுவானேன் ? எண்ணிப்பார்பார்களா ?

தருமி அவர்களே, நீங்கள் பில்லி சூனியத்தைப் பற்றி ஒரு பதிவு போடவேண்டும் என்று வேண்டு கோள்வைக்கிறேன்.

இந்த பில்லி சூனியம் - சோதிடம், கடவுள் சக்தி எல்லவற்றையும் தூக்கி சாப்பிடுவதாக நம்பிக்கையாளர்கள் சொல்கிறார்கள்.

சம்மட்டி

Geetha Sambasivam Says:
April 15th, 2006 at 3:48 pm
ஜோதிடம் என்பது ஒரு முழுமையான சாஸ்திரம். தன் தேவைக்காக மற்ற இடத்திலிருந்து அது எதையும் எதிபார்க்கவில்லை. அப்படி அதை நம் முன்னோர்களும் மகான்களும் உருவாக்கவில்லை.ஒருத்தருக்கு ஊரும் பேரும் தெரிந்தாலே போதும். ஜாதகம் கணிக்கலாம். அதற்கு” நஷ்ட ஜாதக கணிதம் “என்று பெயர் என்று ஒரு புத்தகத்தில் படித்திருக்கிறேன்.பகுத்தறிவு உள்ள மனிதனுக்குத்தான் ஜாதகம் ஜோசியம் எல்லாம் தேவை. ஏனென்றால் மனிதன் தான் தப்புப் பண்ணுவான், பண்ணுகிறான்.இதை விஞ்ஞானமாகப் பார்த்தால் கூடக் கடைசியில் ஆன்மீகத்தில் தான் போய் முடியும்.விஞ் ஞானம் வளர வளர மெய்ஞ்ஞானம் வளரும். உதாரணம்; எல்லா விஞ்ஞானிகளுமே ஆன்மீகவாதிகளாக இருப்பதுதான்.மற்றபடி உங்கள் பதிவுகளால் என் அறிவு வளருகிறது. நன்றி மற்றும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

Geetha Sambasivam Says:
April 15th, 2006 at 4:22 pm
வானில் ஏற்படும் அமாவாசை மற்றும் பெளர்ணமி தினங்களில் கடல் அலைகளில் ஏற்படும் மாற்றங்களைத் தெரிந்து கொண்டிருப்பீர்கள். மேலும் மனநிலை சரியில்லாதவர் கூட அமாவாசை, பெளர்ணமி நாட்களில் வித்தியாசமாக நடந்து கொள்வது யாராலும் மறுக்க முடியாது.அப்படி இருக்கும்போது விண்ணில் சுற்றும் கோள்கள் மனிதனின் நடத்தைக்கும் அவன் வாழ்க்கைக்கும் காரணமாக ஏன் அமைய முடியாது?

தருமி Says:
April 15th, 2006 at 8:37 pm
சம்மட்டி,
நன்றிக்கு நன்றி.
இந்த பில்லி சூன்ய விவகாரமெல்லாம் பற்றி அதிகமாகத் தெரியாதே. அதில நம்ம knowldege எல்லாம் நம்ம தமிழ் சினிமாக்களிலும், மெகா சீரியல்களில் இருந்து தெரிந்து கொண்டவைகள்தான்! தெரிந்தவர்கள் (உங்களுக்கு..?)எழுதினால் தெரிந்து கொள்ளலாம்.

தருமி Says:
April 15th, 2006 at 8:44 pm
Geetha Sambasivam,
வானில் ஏற்படும் அமாவாசை மற்றும் பெளர்ணமி தினங்களில்…”// G force of moon அப்டின்னெல்லாம் என்னவோ சொல்லுவாங்களாமே…அது மாதிரி விளக்கங்கள் எல்லாத்தையும்தான் எங்கள மாதிரி ஆளுங்க விஞ்ஞானம் அப்படி என்கிறோம்.

“விண்ணில் சுற்றும் கோள்கள் மனிதனின் நடத்தைக்கும் அவன் வாழ்க்கைக்கும் காரணமாக ஏன் அமைய முடியாது? இதற்கு என் விளக்கம் என் பதிவுகளில் இருக்கிறதே. நீங்கள்தான் இப்போ பதில் சொல்லணும்.

தருமி Says:
April 15th, 2006 at 8:56 pm
Geetha Sambasivam,

விஞ் ஞானம் வளர வளர மெய்ஞ்ஞானம் வளரும். // - அப்டியா? (பிதாமகன் சூர்யா மாதிரி சொல்லிக்கோங்க!)

உதாரணம்; எல்லா விஞ்ஞானிகளுமே ஆன்மீகவாதிகளாக இருப்பதுதான்.// - மறுபடியும் ஒரு “அப்டியா?”

மற்றபடி உங்கள் பதிவுகளால் என் அறிவு வளருகிறது.//-கேக்கவே எவ்வளவு சந்தோஷமாயிருக்கு !

நன்றி மற்றும் புத்தாண்டு வாழ்த்துக்கள். // - தாமதமானாலும், எனது தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள். நன்றி.

தருமி Says:
April 15th, 2006 at 9:00 pm
ஞானவெட்டியான்,
நீங்கள் அனுப்பிய பின்னூட்டத்தை மட்டுறுத்தாது பதிவுக்கு அனுப்பிய பிறகும் இங்கு வரவில்லை; ஏனென்று தெரியவில்லை. வழியில் எங்கேயோ “காக்கா தூக்கிப் போச்சு”

ஞானவெட்டியான் Says:
April 15th, 2006 at 9:31 pm
அன்பு அம்மையீர், கீதா சாம்பசிவம்,

//ஜோதிடம் என்பது ஒரு முழுமையான சாஸ்திரம்.//

இரண்டாம் கருத்து இல்லை.

//தன் தேவைக்காக மற்ற இடத்திலிருந்து அது எதையும் எதிபார்க்கவில்லை. அப்படி அதை நம் முன்னோர்களும் மகான்களும் உருவாக்கவில்லை.ஒருத்தருக்கு ஊரும் பேரும் தெரிந்தாலே போதும். ஜாதகம் கணிக்கலாம். அதற்கு” நஷ்ட ஜாதக கணிதம் “என்று பெயர் என்று ஒரு புத்தகத்தில் படித்திருக்கிறேன்.//

நட்ட சாதகம் என்பது வேறு. ஒருவன் சோதிடனிடம் வருகிறான். வந்து அந்த அறையில் எந்த இடத்தில் அமர்கிறான் எனப் பார்க்கவேண்டும். அந்த அறையைப் 12 கட்டமாக்கி, அதில் சோதிடன் அமர்ந்த இடத்தை இலக்கினமாக்கி, கோட்சாரப் பலனைக்கொண்டு அவன் எதற்க்காக வந்துள்ளான் எனக் கணித்துச் சொல்வதே “நட்ட சாதகம்”. எடுத்துக்காட்டாக, 5ம் இடத்தில் அமர்ந்தால் அவன் குழந்தைப் பேறு பற்றி வினவ வந்துள்ளான் எனவும், 6ம் இடத்தில் அமர அவன் நோய் நொடிகளையும், எதிரிகளால் தொல்லை பற்றியும் சாதகம் பார்க்க வந்துள்ளான் எனவும் கொள்வர்.

இது எவ்வளவு உண்மை என வினவ, “எனக்குத்தெரியாது” என்பதே விடை.

swamy red bull Says:
April 15th, 2006 at 10:19 pm
Arrumaiyana paathevu anbaree

ungaludaya inthaa ulaipaal konjamavadu thirunthi irrupargal endru nambuhiren

தருமி Says:
April 15th, 2006 at 11:08 pm
ஞானவெட்டியான்,
நன்றி.
ஆமா, என்ன மாதிரி ஆளு, உங்கள மாதிரி ஆளுட்ட ஐடியா கேட்டுட்டு அந்த ஜோசியரிட்ட போய் குண்டக்க மண்டக்கன்னு உக்காந்து…கன்னா பின்னான்னு கேட்டா… ரொம்ப “நட்ட” ஜோதிடமா ஆயிடாது..?

தருமி Says:
April 15th, 2006 at 11:12 pm
swamy red bull,
konjamavadu thirunthi irrupargal …”// என்னங்க நீங்க…உங்க ஜாதக அமைப்பைப் பார்த்தா, நீங்க ரொம்ப optimisticஆன ஆளுமாதிரி தெரியுதே ரொம்ப தப்பு தப்பா நம்புவீங்கன்னும் தெரியுது..

இந்த உங்க ‘செங்காளை’ பெயருக்கு ஒரு விளக்கம் கொடுக்கலாமா..?

ஞானவெட்டியான் Says:
April 16th, 2006 at 6:57 am
அன்பு தருமி,
//ஆமா, என்ன மாதிரி ஆளு, உங்கள மாதிரி ஆளுட்ட ஐடியா கேட்டுட்டு அந்த ஜோசியரிட்ட போய் குண்டக்க மண்டக்கன்னு உக்காந்து…கன்னா பின்னான்னு கேட்டா… ரொம்ப “நட்ட” ஜோதிடமா ஆயிடாது..? //

கை காட்டுற வேலைக்கெல்லாம் போறதில்லீங்க. வம்பு வேண்டாம்.

தருமி Says:
April 16th, 2006 at 6:02 pm
ஞானவெட்டியான்,
நீங்க போக வேண்டாம்; நாங்களே உள்ள இழுத்திட மாட்டோமா..?

swamy red bull Says:
April 16th, 2006 at 7:35 pm
//இந்த உங்க ‘செங்காளை’ பெயருக்கு ஒரு விளக்கம் கொடுக்கலாமா..?//

swamy sankara…(or) premaa..(or)sachi…(or)sandra… ippadi peyar vaithukondal eppadiyum erandu varudathil paalana party endru ullathuki poturanga

so ivangakita escapeahurathuku ippadi oru getup….

how is it ???

தருமி Says:
April 16th, 2006 at 9:51 pm
எதுக்கும் ஜாக்கிரதையா இருங்க
பேசாம செங்காளைன்னு மட்டும் பேரை வச்சுக்கிட்டு, ‘ஸ்வாமி’யை ட்ராப் பண்ணிர்ரது நல்லதுன்னு தோணுது. எப்போ யார் எதுக்கு உள்ளே போறதுன்னு யாருக்குத் தெரியும்..சொல்லுங்க

Geetha Sambasivam Says:
April 16th, 2006 at 9:54 pm
I have to confirm about the” Nashta Jathaka Ganitham” and try to give the right answer to Mr. Gnanavettiyan. Without confirming it will not look good. Anyway I thank him for the new approach in the “Nashta Jathaka Ganitham”.Till today I did not hear about this method.

தருமி Says:
April 17th, 2006 at 8:41 am
Geetha Sambasivam,& கோபி,
உங்கள் இருவருக்குமே ஒரு கேள்வி; ஏற்கெனவே கேட்டதுதான். திரும்பவும் கேட்கிறேன்: ஜாதக நம்பிக்கையாளர்களுக்கு ஒரு வேண்டுகோள் - இதற்கு முந்திய பதிவின் கடைசியிலிருந்து இரண்டாவது பத்தி - last but one para - வுக்கும் கொஞ்சம் பதில் சொன்னால் நன்றாக இருக்குமே…

Sam Says:
April 17th, 2006 at 5:38 pm
தருமி சார்,

உங்கள் கேள்விக்கு விரிவான பதில் நாளை அனுப்புகிறேன். நீங்கள் கேட்ட ஒவ்வொரு
கேள்விக்கும் விரிவான பதில் அளிக்க வேண்டும் என்பதால் மலைத்துப் போய் பேசாமல் இருந்து
விட்டேன். கடைசி கேள்விக்கு மட்டும் நாளை பதில் அனுப்புகிறேன்.

அன்புடன்
சாம்

தருமி Says:
April 17th, 2006 at 10:23 pm
sam,
பயத்தோடு’ எதிர்பார்க்கிறேன் — விரிவான பதில் என்று சொன்னதால் வந்த பயம்

துளசி கோபால் Says:
April 18th, 2006 at 2:29 am
தருமி,

சோதிடம் சரியா, இல்லே பித்தலாட்டமான்னு இன்னும் புரியலைங்களா? 13 பதிவுகள். நல்லாதான் இருந்துச்சு.

நானும் ஒரு சமயம், மகளுடைய ஜாதகத்தைப் பார்க்கணுமுன்னு ஒரு ‘நல்ல, நம்பகமான’ ஜோசியரைப் பார்க்க
நண்பர்மூலம் ஏற்பாடு செஞ்சு நேரம் வாங்கி வச்சிருந்தேன். மொதநாள் முழுவதும் மன உளைச்சல். போறதா வேணாமான்னு.
அப்ப நெருங்கிய தோழி சொன்னாங்க, வேணாம்னு. ஏன்னு யோசனைச் செஞ்சுக்கிட்டே அதை பத்தி விவாதிச்சோம்.

நல்லதா சொல்லிட்டாருன்னா மனசுக்குச் சந்தோஷமா இருக்கும். ஒருவேளை எல்லாம் நெகட்டிவ் பாய்ண்ட்ஸ்னு
இருந்தா, அதை நினைச்சுக்கிட்டே இன்னும் மனசு கஷ்டம் ஆயிருமுல்லே?

நம்மளை இந்த பூமிக்குக் கொண்டுவந்த கடவுள் நம்மைக் காப்பாத்தட்டும். இதைவிட அவருக்கு வேற என்ன வேலை?னு
முடிவுசெஞ்சுக்கிட்டு அந்தஜோசியர் அப்பாயிண்ட்மெண்டைக் கேன்சல் செஞ்சுட்டேன்.

ஆனா ஒண்ணுங்க, கைரேகை சாஸ்த்திரம் இருக்கு பாருங்க. அதை நம்பலாம். நம்ம வாழ்க்கை நிகழ்ச்சியே இருக்கு.
நேரம் கிடைக்கறப்ப ஒரு பதிவாப் போடலாமுன்னு இருக்கேன்.

தருமி Says:
April 18th, 2006 at 8:51 am
எல்லாம் நல்லா சொல்லிட்டு கடைசியில ஒரு விஷயத்தில இப்படி சொல்லீட்டீங்களே
ஏன் அது மட்டும் exempted
தொண்ணூறுகளில் கட்டாயம் வெளிநாடு போகப் போகிறேன் என்ற ஒரு நிலையில், தவறிப்போனது. அப்போது என் ரேகை பார்த்து, ஒரு X - mark இருந்தாதான் போக முடியும்; அது உனக்கு இல்லை; அவ்வளவுதான் அப்டின்னாங்க. (நீ மட்டும் ஏன் கைரேகை பார்த்தாய் என்று கேட்பீர்களே; நானாகப் போகவில்லை. அதோடு அப்போவெல்லாம் இவ்வளவு தீர்க்கமான கருத்துக்கள் கிடையாது.) அப்படி சொன்னது பொய்த்துப் போனதே இது எப்டி இருக்கு…

Sam Says:
April 18th, 2006 at 9:00 am
• மேற்கூறிய கேள்விகள் இந்த ஜாதகமெல்லாம் கணிதம், விஞ்ஞானம் என்று கூறுவதற்கு எதிர்க் கேள்விகளாகக் கேட்கப்பட்டவைகள். அவைகளை கூட விட்டு விடுவோம். நடப்புக்கு வருவோம். ஜாதகப் பொருத்தம் பார்த்து நடக்கும் திருமணங்கள், மற்ற சுப காரியங்களையும் எடுத்துக் கொள்வோம். அவைகளின்றி நடக்கும் அதே போன்ற திருமணங்கள், நல்ல காரியங்களையும் பார்ப்போம். என்ன வித்தியாசம் என்று நம்புவர்கள்தான் கூற வேண்டும். ஏதாவது வித்தியாசம் இருக்கிறது என்று (மனசாட்சிக்கு விரோதமில்லாமல்/ நெஞ்சில் கைவைத்து…!!!) கூறத்தான் முடியுமா? விஞ்ஞான முறைப்படி பெரிய, ஒழுங்கான, முறையான statistics கூட வேண்டாம். நம்மைச் சுற்றியுள்ள நடப்புகளை வைத்தே பார்ப்போமே. என் பார்வையில் எல்லாம் ஒரே மாதிரிதான்…நல்லதும் நடக்கிறது; அல்லதும் நடக்கிறது. தனிமனித குண நலன்கள்தான் முக்கியமாய் இருக்கிறதேயொழிய எங்கேயோ உள்ள நட்சத்திரங்களும், கிரஹங்களும் உங்களையோ என்னையோ ‘கண்டுக்கிறதே இல்லை’! அது பாட்டுக்கு அது வேலைய பாத்துக்கிட்டு போகின்றன. நீங்களும் அவைகளை விட்டுவிடுங்களேன் பாவம்!!

தருமி சார்,

பெத்தவங்க எல்லாருமே தன் பிள்ளைங்க நல்லா இருக்கணும்ன்னு தான் நினைக்கிறாங்க.நம்ம ஊர்ல இன்னும் அப்பா அம்மா பார்த்தவங்கள கல்யாணம் பண்ணிக்கிறவங்க நிறையப் பேர் இருக்காங்க. காதல் கல்யாணம் பண்ணிக்கிறவங்களயோ ஒருத்தரை ஒருத்தர் தெரிஞ்சு
கல்யாணம் பண்ணிக்கிறவங்கள பத்தி நான் பேச வரல. மாப்பிள்ளை பெண் பார்க்கும் போது இரண்டு பேருக்கும் பொருத்தம் இருக்கான்னு, எதிர்காலம் எப்படி இருக்கும்ன்னு தெரிங்சுக்கத்தான் சோதிடம். எந்த சாதகத்த எடுத்துப் பார்த்தாலும் ஏழாம் இடம் வாழ்க்கைத் துணையைப் பத்திச் சொல்லும். பன்னிரண்டாம் இடமும் ஆறாம் இடம் இன்னும் சில விவரங்கள் சொல்லும். செவ்வாய்தோஷம்ன்னு இன்னொன்னு சொல்வாங்க. சோதிட விதிகளின் படி இது நிறையப் பேர் சாதகத்தில இருக்கும். இத சரிப்படுத்த இன்னொரு செவ்வாய் தோஷம் உள்ள சாதகரை திருமணம் செய்யச்
சொல்றாங்க. இது மட்டுமில்ல, நட்சத்திரப் பொருத்தம், அந்தப் பொருத்தம் இந்தப் பொருத்தம்ன்னு நிறைய பார்ப்பாங்க.

சில பேருக்கு உள்ளுணர்வு சாதகமெல்லாம் பார்க்க வேண்டாம் தேவையிலைன்னு சொல்லும். அவங்க அவங்க வழில போகட்டும். ஒரு கணவன் மனைவிக்கு ரொம்ப நாளா குழந்தை இல்லைன்னு வச்சுக்கிவோம். மருத்துவர் கருத்தரிக்க வாய்ப்பே இல்லைன்னு சொல்லீட்டார். அவங்க சோதிடத்த அணுகிறாங்க. அவங்க கிட்ட நான் போய் ஏங்க சோதிடத்தயெல்லாம் ஏன் நம்புறீங்கன்னு எப்படிச் சொல்ல முடியும். கொஞ்ச நாள் தான் உலகத்தில இருக்கப் போறோம். நமக்கு நம்பிக்கை
இருக்கிறத அணுகித்தான், தீர்வு வருதான்னு பார்ப்போமே! சோதிடத்தில சில வகைப் பாவங்களுக்குத்தான் பரிகாரம் கிடையாது. நிறைய சாதகக் குறைகளுக்கு பரிகாரம் உண்டு.

ஆழ்ந்த இறை நம்பிக்கை உள்ளவங்களுக்கும் சாதகமெல்லாம் தேவையில்லை. பாடகர் யேசுதாஸ் சபரி மலைக்குப் போய் வந்த பின் தான் தனக்குப் பையன் பிறந்ததா சொல்லியிருப்பார்.

நுகர்வோர் புத்திசாலித்தனமா இருக்க வேண்டியது அவசியம். இந்த கணி காலத்தில நிறைய படிக்கக் கிடைக்குது. தெருல இறங்கி நடக்கிறதுக்கு சோதிடம் பார்க்கணும்னா பயித்தியம் தான்
பிடிக்கும். வாழ்க்கையில முக்கியமான விசயத்துக்கு மட்டும் சோதிடத்த அணுகணும்னு வைச்சிட்டு மத்த வேலய பார்க்க வேண்டியதுதான்!

அன்புடன்
சாம்

துளசி கோபால் Says:
April 18th, 2006 at 9:35 am
தருமி,

X - mark இருந்தா தப்புன்னுதானெ அர்த்தம்? நான்போய்
வாத்தியாருக்குச் சொல்லித்தரேன் பாருங்க

அதான் வெளிநாடு போகலை.

அது டிக் மார்க்கா இருந்தாத்தான் வெளிநாடு. இல்லேன்னா வெளியூர் போவீங்க.

அது சென்னையாவும் இருக்கலாம்

தருமி Says:
April 18th, 2006 at 8:47 pm
துளசி,
“அதான் வெளிநாடு போகலை…”//
- அதான் போய்ட்டு வந்துட்டம்ல (வைகைப் புயல் ஸ்டைல் போட்டுக்கங்க)

தருமி Says:
April 18th, 2006 at 8:50 pm
கொழப்புறீங்க கொழுந்து…

என் கேள்வி இன்னும் அந்தரத்தில நிக்குது…:”ஜாதகப் பொருத்தம் பார்த்து நடக்கும் திருமணங்கள், மற்ற சுப காரியங்களையும் எடுத்துக் கொள்வோம். அவைகளின்றி நடக்கும் அதே போன்ற திருமணங்கள், நல்ல காரியங்களையும் பார்ப்போம். என்ன வித்தியாசம் என்று நம்புவர்கள்தான் கூற வேண்டும்.”

கமல் Says:
April 18th, 2006 at 9:07 pm
//ஆனா ஒண்ணுங்க, கைரேகை சாஸ்த்திரம் இருக்கு பாருங்க. அதை நம்பலாம். நம்ம வாழ்க்கை நிகழ்ச்சியே இருக்கு.//

கைரேகை சாஸ்திரம்னா? நாடி ஜோசியமா? எப்படி பேர் கண்டு பிடிக்கிறாங்கங்கிற குழப்பத்தை நீங்களாவது தீர்த்து வையுங்களேன்!

நன்றி
கமல்

Sam Says:
April 18th, 2006 at 10:00 pm
//என் கேள்வி இன்னும் அந்தரத்தில நிக்குது…:”ஜாதகப் பொருத்தம் பார்த்து நடக்கும் திருமணங்கள், மற்ற சுப காரியங்களையும் எடுத்துக் கொள்வோம். அவைகளின்றி நடக்கும் அதே போன்ற திருமணங்கள், நல்ல காரியங்களையும் பார்ப்போம். என்ன வித்தியாசம் என்று நம்புவர்கள்தான் கூற வேண்டும்.” //

தருமி சார்,

இந்தியாவில இன்னும் திருமணம்ன்கிறது இரண்டு பேர்களுக்கு இடையில மட்டுமில்லாமா இரண்டு குடும்பங்களுக்கு இடையே பாலமாயிருக்கு. பின்னாடி சிக்கல் வந்தாலும் பேசாம
அனுசரிச்சுப் போங்கன்னு சும்மா சொல்லிட்டுப் போயிடுவாங்க. சாதகம் பார்த்துப் பண்ணும் போது பெண்ணையோ பிள்ளையையோ பார்க்காமலேயே இந்தத் திருமணம் எப்படி இருக்கும்ன்னு சொல்ல முடியும். இந்த சிக்கலை தவிர்ப்பது பெத்தவங்க பிள்ளைங்களுக்கு செய்யக் கூடிய
உதவி.
வாழ்க்கை எல்லா சந்தர்ப்பத்திலும் சீரா போகும்ன்னு உறுதியா சொல்ல முடியாது. கொஞ்சமோ,அதிகமோ தடுமாற்றம் வருமான்னு தெரிஞ்சுக்கதான் சோதிடம்.
எப்படிப் பொருத்தம் பார்க்கிறாங்க என்பது பத்தி பெரிய பதிவு எழுதணும்.
எங்கிட்ட ஒருத்தர் ஒரு சாதகத்தைக் காமிச்சு, அதுல எழு, பன்னிரண்டு, ஆறு எல்லாம் பாதிக்கப்பட்டிருந்துன்னா, உங்க வாரிசுக்கு வேற வரனைப் பாருங்க, மத்த காரணங்களுக்காக
அவசரப் படாதீங்கன்னு சொல்லீடுவேன்.

அன்புடன்
சாம்

தருமி Says:
April 19th, 2006 at 2:56 pm
:headbanger:

தருமி Says:
April 19th, 2006 at 3:20 pm
ஏன் இந்த ஸ்மைலியெல்லாம் வரவே மாட்டேங்குது :headbanger:
:yahoo:
:ATTACK:

Geetha Sambasivam Says:
April 19th, 2006 at 3:53 pm
நான் உங்கள் post script and the last but one para இரண்டையும் மூன்று நாளாகத் திரும்பத் திரும்பப் படித்தேன். இளைஞர்களின் மூட நம்பிக்கைக்குக் காரணம் தெரியவில்லை. மற்றவற்றிற்குத் தகுந்த பதில் இருக்கிறது. நான் நாளை வெளிஊர் போவதால் அதற்கான ஏற்பாடுகள் செய்யவேண்டும். பதில் நீளமாக இருக்கும் என்பதால் வந்து தருகிறேன்.

தருமி Says:
April 19th, 2006 at 10:28 pm
கொழுந்து சாம் சொல்றது என்னன்னா,

Hi Sam,

I didn’t get your response! If you take the horoscopes of say thirty married couples,
happily or not, and give it to an astrologer ( a good one ) to analyze, he will be able to tell you which one’s are happily married, which one’s have problems, and what kind of problems.
People who choose their spouses as in a love marriage, intuitively know that their partner is the right one for them.

People who have no faith in God, and people who have full faith in God, both create their own
reality within the framework of their Horoscope. People who seek advice are the one’s who
have faith in God, but also a need a second opinion and looking for remedies. These are
the people who do NOT want to play the Russian roulette with their lives.

Unfortunately there are astrologers who exploit the weakness in an average person for their personal gain, bring bad name for the study of horoscopes.

Hope this answers your question! If not please re phrase the question and I will try one more
time. I didn’t want to leave a lengthy response in English in Tamizmanam.

Regards
Sam

தருமி Says:
April 19th, 2006 at 11:31 pm
* சாதகம் பார்த்துப் பண்ணும் போது பெண்ணையோ பிள்ளையையோ பார்க்காமலேயே இந்தத் திருமணம் எப்படி இருக்கும்ன்னு சொல்ல முடியும்.அதத்தான் நான் மறுபடி மறுபடி கேட்கிறேன்; அப்படியெல்லாம் சொல்ல முடிந்தால் சாதகம் பார்த்து நடக்கிற கல்யாணங்கள் எல்லாமே ஓஹோன்னு இருக்கணுமே; இருக்கா?

* …தடுமாற்றம் வருமான்னு தெரிஞ்சுக்கதான் சோதிடம்.// அப்போ சாதகம் சோதிடம் பார்த்தால் தடுமாற்றங்கள் இல்லாம, ‘வண்டி’ நல்லா ஓடும் அப்டிங்கிறீங்க; இல்லையா? நடப்பில அப்படி இல்லையே, அய்யா!

* if you take the horoscopes of say thirty married couples,
happily or not, and give it to an astrologer ( a good one ) to analyze, he will be able to tell you which one’s are happily married, which one’s have problems, and what kind of problems. i may say that any good astrologer will not be able to say that. it is my word against yours; both of us say this based on our belief.

* ..bring bad name for the study of horoscopes.” just read what தொப்புளான் has said in his comment

தருமி Says:
April 19th, 2006 at 11:35 pm
கீதா சாம்பசிவம்,
இளைஞர்களின் மூட நம்பிக்கைக்குக் காரணம் தெரியவில்லை”//- நான்கூட ‘மூட’ என்று அவைகளை அழைக்கவில்லை என்று நினைக்கிறேன். நீங்களே சொல்லிவிட்டீர்கள்.

bon voyage!

Thursday, April 06, 2006

150. சோதிடம்…12. ஜாதகம்

Image and video hosting by TinyPic

மற்றைய பதிவுகள்:

1*,
2*,
3*,
4*,
5*,
6*,
7*,
8*,
9*,
10*,
11*,
12*.
13*.


கைரேகை, ராசிக்கல், வாஸ்து, எண்கணிதம் - என்று நான் இதுவரை எழுதி வந்த போது எதிர்க் கேள்விகளோ, பதில்களோ இல்லாமல் என்னோடு இணைந்த ஒத்தக் கருத்துக்களே அதிகம் வந்துள்ளன.

இதிலிருந்து என் முடிவு என்னவெனில்:
(1) நம் பதிவாளர்கள் அதிகம் பேர் என்னோடு இந்த விஷயங்களில் ஒத்தக் கருத்து கொண்டவர்களாகவே உள்ளார்கள்.
(2) நம் பதிவாளர்கள் ஏறக்குறைய எல்லோருமே நல்ல கல்வியறிவும், வளர்ந்த சிந்தனைகள் கொண்டவர்களாகவும் இருப்பதால் அவர்களது கருத்துக்களும் தெளிவாகவே இருக்கும் என்பதால் நான் ஒன்றும் புதிதாகச் சொல்லிவிடவில்லை; எல்லோருக்கும் தெரிந்த, உடன்பாடான விஷயங்களையே சொல்லி வந்துள்ளேன் என்ற முடிவுக்கே வந்துள்ளேன்.

ஆயினும் இனி சொல்லப் போகும் ஜாதக விஷயம் அதுபோல் பலரின் ஆமோதிப்பைப் பெறுமா இல்லையா என்பது பொறுத்திருந்து பார்க்க வேண்டிய ஒன்றுதான்….ஏனெனில், நம்பிக்கையிருக்கிறதோ இல்லையோ பலருக்கு ஜாதகம் பார்ப்பது என்பது சமூகத்தாலோ, குடும்பத்தாலோ ஒரு கட்டாயப் படுத்தப்படும், தொன்று தொட்டுத் தொடரும் பாரம்பரியமாக இருந்து வருகிறது. அதை மீறுவதோ, ஒதுக்கித்தள்ளுவதோ பலரால் இயலாத காரியம். பலி ஆடுகள் மாதிரியாவது தலையாட்டி ஏற்றுக்கொள்ளும் காரியமாக பலருக்கும் அமைந்து விடுகின்றது. அதற்காக நான் சொல்ல வந்ததை சொல்லாமல் விட்டு விடுவதா, என்ன?

* ஜாதகம் என்றதுமே அது ஒரு விஞ்ஞானம், ஒரு கணக்கு என்பவர்களுக்கென்றே பல கேள்விகளை வைத்தாயிற்று. இப்போதைக்கு ஒன்று மட்டும் சொல்ல / கேட்க விழைகிறேன். ஒரே ஜாதகத்திற்கு ஆளுக்கேற்றாற்போல் பதில்கள் / பலன்கள் வருமெனில், இதை எப்படி விஞ்ஞானம் / கணக்கு என்ற தலைப்புக்குள் கொள்வது?

* எனக்குத் தெரிந்த வரை ஜாதகம் “கணிக்கப்படும்” போது நவக்கிரஹங்களின் இருப்பிடம் அந்த ஜாதகக்காரரை எப்படியெல்லாம் “ஆட்டி’ வைக்கும் என்பது தெளிவாகக் கணக்கிடப்படுகிறது. இதில், அடிப்படையாக இரு கேள்விகள்:
1. ஜாதகக்கணிப்பில் சந்திரனுக்கு ஒரு முக்கிய இடம் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால், சந்திரன் மற்ற கோள்கள் போலன்றி அது ஒரு துணைக்கோளாக இருக்கும்போதும் எப்படி அதுவும் ஒரு கோளாக எடுத்துக்கொள்ளப்படுகிறது? இந்த ராது, கேது விவகாரம் வேறு தனியாக இருக்கிறது. பக்கத்தில் இருப்பதால் அதன் பலனும் சேர்க்கப்பட வேண்டும் என்று ஒருவேளை நம்பிக்கையாளர்கள் சொன்னால், ஜாதகக் கணிப்பில் அதுவும் ஒரு கோளாகவே கருதப்படுவதைச் சுட்டிக் காட்ட விரும்புகிறேன். இது ஒரு அடிப்படைத் தவறாகக் கருதுகிறேன்.

2. ஒன்பது கோள்கள்; அதில் சந்திரன் ஒரு கோள் அல்ல - இந்த கேள்வி எழும்போதே இப்போது 10வது கோளைக் கண்டுபிடித்து, பெயரும் வைத்தாகி விட்ட பின்பும் (2003 UB313, the 10th planet - இன்னும் பாப்புலர் பெயர் வைக்கவில்லை.) இன்னும் நவக்கிரகங்கள், ஒவ்வொன்றுக்கும் தனித்தனி வீடு, ஒன்றோடு ஒன்று சேர்ந்து பலன் அளிப்பது என்றால், இந்த 10-வது கோளுக்கு ஜாதகக் கணிப்பில் இடம் உண்டா, இல்லையா? ஒரு வேளை சந்திரன் அருகில் இருப்பதால் அதை எடுத்துக்கொண்டது போல, இந்த புதுக்கோள் விலகி இருப்பதால் அதை விட்டு விட்டதாகக் கூறலாமோ? ஒருவேளை அப்படிச் சொன்னால் இந்த தூரக்கணக்கை எடுத்துக் கொண்டால் மற்ற தூரத்துக் கோள்களை மட்டும் ஏன் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும்?

* ஜாதகக் கணிப்பில் இந்தக் கோள்களின் இடத்தைப் பற்றியும், அவைகளின் movements பற்றியும் கூட தெளிவாகவெல்லாம் அந்தக் காலத்திலேயே சொல்லியிருக்கிறார்களே என்று ஒரு விவாதம் உண்டு. அது astronomy -லிருந்து astrology ‘லவட்டிக்கிட்ட’ விஷயமாகத்தான் இருக்கவேண்டும்.

* மேற்கூறிய கேள்விகள் இந்த ஜாதகமெல்லாம் கணிதம், விஞ்ஞானம் என்று கூறுவதற்கு எதிர்க் கேள்விகளாகக் கேட்கப்பட்டவைகள். அவைகளை கூட விட்டு விடுவோம். நடப்புக்கு வருவோம். ஜாதகப் பொருத்தம் பார்த்து நடக்கும் திருமணங்கள், மற்ற சுப காரியங்களையும் எடுத்துக் கொள்வோம். அவைகளின்றி நடக்கும் அதே போன்ற திருமணங்கள், நல்ல காரியங்களையும் பார்ப்போம். என்ன வித்தியாசம் என்று நம்புவர்கள்தான் கூற வேண்டும். ஏதாவது வித்தியாசம் இருக்கிறது என்று (மனசாட்சிக்கு விரோதமில்லாமல்/ நெஞ்சில் கைவைத்து…!!!) கூறத்தான் முடியுமா? விஞ்ஞான முறைப்படி பெரிய, ஒழுங்கான, முறையான statistics கூட வேண்டாம். நம்மைச் சுற்றியுள்ள நடப்புகளை வைத்தே பார்ப்போமே. என் பார்வையில் எல்லாம் ஒரே மாதிரிதான்…நல்லதும் நடக்கிறது; அல்லதும் நடக்கிறது. தனிமனித குண நலன்கள்தான் முக்கியமாய் இருக்கிறதேயொழிய எங்கேயோ உள்ள நட்சத்திரங்களும், கிரஹங்களும் உங்களையோ என்னையோ ‘கண்டுக்கிறதே இல்லை’! அது பாட்டுக்கு அது வேலைய பாத்துக்கிட்டு போகின்றன. நீங்களும் அவைகளை விட்டுவிடுங்களேன் பாவம்!!

ஆனாலும் எனக்கு ஒன்று நிச்சயமாகத் தெரியும். நம்பிக்கையாளர்கள் தங்கள் நம்பிக்கைகளை கைவிடுவது என்பது எளிதல்ல. எத்தனை கேள்விகளை அவர்கள் முன் வையுங்கள். ஒன்று ஏதோ மனசுக்கு வந்த ஒரு காரணத்தைக் கண்டுபிடிக்க முயல்வார்கள்; இல்லை, ச்சீ..இதெல்லாம் விதண்டாவாதம் என்று புறந்தள்ளி தன் போக்கில் போவார்கள். கொஞ்சமாவது இந்தக் கேள்விகளுக்குப் பதில் இருக்கிறதா என்று பார்ப்போமே என்ற மனநிலை யாரொருவருக்காவது வந்தால் சந்தோஷமே - வராது என்று தெரிந்திருந்தாலும், ஒரு அற்ப ஆசை. என் சந்தேகங்கள் சில நம்பிக்கையாளர்களுக்குக் கூட சந்தேகம் ஏற்படுத்தலாம். ஆனால் அவர்கள் கூட தாங்கள் இதுவரை நம்பி வந்ததைவிட்டு அவ்வளவு எளிதில் வந்துவிட மாட்டார்கள் - question of prestige? அப்படி ஒருவேளை யாருக்காவது பதில் இருந்தால் கூறட்டுமே என்றுதான் இந்தக் ‘கடை பரத்துதல்’! கொள்வார் கொள்ளட்டும் !! நல்லவேளை, மதங்களைப் போல் கேள்வி கேட்பதே தப்பு என்று யாரும் இதற்குக் கூற மாட்டார்கள் என்றே நினைக்கிறேன். என்ன செய்வது: தருமி, கேள்விகள் கேட்பதின்று வேறொன்றும் அறியான், வலைஞர்களே !!!
Š







Pathivu Toolbar ©2005thamizmanam.com


Apr 06 2006 03:17 pm | சமூகம் |
54 Responses
Geetha Sambasivam Says:
April 6th, 2006 at 3:49 pm
இதற்கு விரிவான பதிலை நீங்கள் நம்புமாறு ஆதாரத்துடன் கூறவேண்டும். அதற்குக் கொஞ்ச நாள் பிடிக்கும். ஆதார்ங்களைத் திரட்டிக் கொண்டு பிறகு சொல்கிறேன்.

கோபி Says:
April 6th, 2006 at 5:07 pm
//ஒரே ஜாதகத்திற்கு ஆளுக்கேற்றாற்போல் பதில்கள் / பலன்கள் வருமெனில், இதை எப்படி விஞ்ஞானம் / கணக்கு என்ற தலைப்புக்குள் கொள்வது//

ஒரே ஜாதகத்திற்கு முரண்பாடுடைய பல்வேறு பலன்கள் இல்லை. இரு ஜோதிடர்களுக்கிடையே ஒரு ஜாதகத்திற்கு முரண்பாடுடைய பலன்கள் வருகிறது என்றால் தவறு அந்த ஜோதிடர்களுக்கிடையே.

ஏனெனில் நான் முன்பே கூறியது போல பலன்களும் பல்வேறு Permutations and combinationsகளுடன் அறுதியிட்டு கூறப்பட்டவை.

உதாரணமாக, லக்னத்தில் கேது இருந்தால் ஒரு பலன் (ஜாதகர் சிலகாலம் மனவியாதியால் பீடிக்கப்படுவார்). அதே லக்னத்தில் கேதுவுடன் புதன் இருந்தால் வேறு பலன். லக்னத்தில் கேது இருந்து நவாம்சத்தில் ஒரு குறிப்பிட்ட Combination ல் கிரகங்கள் இருந்தால் வேறு பலன். சில Combinationsல் அடிப்படை பலன்களுக்கு நேரதிராய்க் கூட பலன்கள் அமைவதுண்டு. ஆனால் இவை யாவும் அறுதியிட்டு கூறப்பட்டவை.

தவறான மருந்து கொடுத்தால் மருத்துவ முறையை குறை சொல்வீர்களா அல்லது மருத்துவரை குறை சொல்வீர்களா ?

கோபி Says:
April 6th, 2006 at 5:19 pm
//ஜாதகக் கணிப்பில் அதுவும் ஒரு கோளாகவே கருதப்படுவதைச் சுட்டிக் காட்ட விரும்புகிறேன். இது ஒரு அடிப்படைத் தவறாகக் கருதுகிறேன்.//

வானியலில் உள்ளதைப் போலவே ஜோதிடத்திலும் 12 ராசிகளை கடக்க சந்திரன் எடுத்துக்கொள்ளும் காலம் இருபத்தொன்பதே கால் நாட்கள். எனினும் சந்திரன், கோள் என்று அழைக்கப்படுவது தவறுதான்.

கோபி Says:
April 6th, 2006 at 5:53 pm
//ஒன்பது கோள்கள்; அதில் சந்திரன் ஒரு கோள் அல்ல//

அதுமட்டுமல்ல Uranus, Neptune, Pluto ஆகியவை கூட இல்லை. இன்றைய கணினி ஜாதகத்தில் இக்கோள்கள் இடம் பெற்றாலும் அதற்குறிய பலன்கள் பழங்கால ஜோதிட நூல்களில் இல்லை. இந்நூல்களில் சனிக்கு அப்பால் மாந்தி(சனியின் பிள்ளை) என்ற ஒன்றே கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டு பலன்கள் கணிக்கப்பட்டுள்ளன.

//தூரக்கணக்கை எடுத்துக் கொண்டால் மற்ற தூரத்துக் கோள்களை மட்டும் ஏன் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும்?//

இதற்கு, எவ்வாறு கோசார (கோள்களின் சாரம் ‌- Movements) பலன்கள் கணிக்கப்படுகின்றன என்று சற்றே விளக்கமாய் பார்ப்போம்.

நாட்பலன்கள் சொல்ல சந்திரன், புதன் போன்ற குறைந்தகாலத்தில் 12 ராசி மண்டலங்களையும் கடக்கும் கோள்கள் கருத்தில் கொள்ளப்படுகின்றன

இது போலவே வாரப்பலன்கள் சொல்ல சுக்கிரன், மாதப்பலன்கள் சொல்ல சூரியன், வருடப்பலன் சொல்ல குரு ஆகியனவும், அதற்கு மேற்பட்ட காலங்களின் பலன்களை கணிக்க ராகு/கேது, சனி ஆகியனவும் கருத்தில் கொள்ளப்படுகின்றன.

//அது astronomy -லிருந்து astrology ‘லவட்டிக்கிட்ட’ விஷயமாகத்தான் இருக்கவேண்டும்.//

வானியல், சூரியனை எல்லாக் கோள்களும் சுற்றுகிறது என நிரூபித்துள்ளது. சோதிடம், சூரியன் உட்பட எல்லாமே ராசி மண்டலங்களில் பயனிக்கின்றன என்கிறது (பூமியிலிருந்து பார்த்தால் இதுவும் உண்மைதான்).

உதாரணமா 2006 முழுவதும் சனி கடகராசி மண்டலத்தில் காணக் கிடைக்கும் வானியல் சொல்லுது. தமிழ் நாட்காட்டியில் இருக்கும் கோசாரப் பலன்கள்லயும் சனி கடகராசிக் கட்டத்துலதான் இருக்கு.

சம்மட்டி Says:
April 7th, 2006 at 10:52 am
//மதங்களைப் போல் கேள்வி கேட்பதே தப்பு என்று யாரும் இதற்குக் கூற மாட்டார்கள் //
அத அப்படியே விட்டுட முடியுங்களா, மதங்களை தூக்கிப்பிடிப்பவர்கள் தான் இங்கும் நிற்கிறார்கள்.

தோசம் கழிக்க மறுபடியும் சாமிக்கிட்ட தான போகனும் !.
ஜோதிடத்தை 100% நம்புவர்கள் கூட அவைகளை மாற்றிவிட முடியும் என்று கருதுகிறார்கள், ஆஞ்சினேயருக்கு வட மாலை, சனீஸ்வரனுக்கு எள்ளுசாதம், துர்க்கைக்கு குங்கும பூஜை இப்படி என்னென்னுமோ தகிடுதத்தமெல்லாம் பண்ணி நம்புகிற ஜாதகத்தை பொய்யாக்கிறவர்கள் ஜோசிய நம்பிக்கையாளர்கள் தாம். ஏன் இதெல்லாம் பார்பானேன் ? பின்னால வேலியில போற ஓனான் கதையாகி, இடைத்தரகர்கள் தான் அதிகம் வாழுகிறார்கள். ஜோசியகாரனுக்கு மட்டும் ஜாதகத்தில் லெட்சுமி கடாச்சம் தான். மொத்ததில் ஜோதிடம் என்பது ஒரு குடும்ம வர்த்தகம் அதில் வியாபாரிகளே அதிகம் பயன் அடைகிறார்கள். இந்த சோதிட கூத்தில் அதிகமாக பாதிக்கப்படுவது என்னுமோ பெண்கள். பருவ வயதை தாண்டியும் திருமணமாகத நிலையை பெண்களுக்கு ஏற்படுத்தி முதிர்கன்னிகள் என்ற பட்டம் வாங்கிக் கொடுத்ததில் பெறும் பங்கு இந்த ஜோதிடக்காரர்களையே சாரும் என்றால் அது தவறு அல்ல

தருமி Says:
April 7th, 2006 at 3:50 pm
Geetha Sambasivam,
காத்திருக்கிறேன்.

தருமி Says:
April 7th, 2006 at 4:34 pm
கோபி,

“ஜாதகத்திற்கு முரண்பாடுடைய பலன்கள் வருகிறது என்றால்…”//- ‘ஜாதகம் ஒரு கணிதம்’ என்ற வழக்கமான ஒரு வாதத்திற்குரிய கேள்விகளை ஏற்கெனவே விரிவாக முந்திய பதிவுகளில் கேட்டு விட்டதால், இப்பதிவில் சுருக்கமாகவே கூறியிருந்தேன். மீண்டும் கூறுகிறேன்: கணிதம் என்றால் அதில் முரண்பாடு எப்படி வரமுடியும்? 2+2=4 என்பதில் என்ன முரண்பாடு வரும்? கணக்கு தெரிந்த யார் கூட்டினாலும் அதே நாலுதான் பதில். அதே போல சாதகம் கணிதம் என்றால், அந்த கணிதம் வரையறுக்கப்பட்ட ஒன்றாக இருக்க வேண்டும்; அப்படி இருந்தால் அதில் முரண்பாடுகளுக்கு வழியே இல்லை.

“தவறான மருந்து கொடுத்தால் மருத்துவ முறையை குறை சொல்வீர்களா அல்லது மருத்துவரை குறை சொல்வீர்களா? “// -
மருத்துவமும், கணிதமும் வேறு வேறல்லவா? மருத்துவத்தில் trial & error வர வழியுண்டு. கணிதத்தில்…? அதோடு வேறு உதாரணம் கொடுங்களேன்; இதே உதாரணத்தைக் கேட்டுக் கேட்டு புளிச்சிப் போச்சு. தப்பா எடுத்துக்காதீங்க.

“சந்திரன், கோள் என்று அழைக்கப்படுவது தவறுதான்….”//
- கோள் என்று அழைக்கப்படுவது மட்டுமல்லவே! மற்ற உண்மையான கோள்களோடு ஒன்றாக வைத்துப் பலன் சொல்லப்படுகிறதே…அப்படியாயின், இது ஓர் அடிப்படைத் தப்பு அல்லவா?

கோள் என்றில்லாவிட்டாலும் நிலவால் நம் உலகில் பல விளைவுகள் நிகழ்வது விஞ்ஞான உண்மை - கடலின் நீர் மட்டம் தாழ்வதும், உயர்வதும் நிலவினால் ஏற்படும் magnetic field-ன் மாற்றங்கள் - இது ‘அருகில்’ இருப்பதால் நடக்கிறது.

எங்கேயோ இருக்கும் மற்ற கோள்கள் எப்படி, அதுவும் தனி மனிதனின் வாழ்வில் நடக்கும் நல்லது கெட்டவைகளுக்குப்பொறுப்பாகும். இதில் position effect வேறு சொல்லுகிறீர்கள். அதுதான் புரியவில்லை.

“வானியல், சூரியனை எல்லாக் கோள்களும் சுற்றுகிறது என நிரூபித்துள்ளது. சோதிடம், சூரியன் உட்பட எல்லாமே ராசி மண்டலங்களில் பயனிக்கின்றன என்கிறது (பூமியிலிருந்து பார்த்தால் இதுவும் உண்மைதான்).”//
- புரியவில்லை. ராசி மண்டலங்கள்..?

தருமி Says:
April 7th, 2006 at 4:43 pm
தாங்களே ” நம்புகிற ஜாதகத்தை பொய்யாக்கிறவர்கள் ஜோசிய நம்பிக்கையாளர்கள் தாம்.” ஆமாம், இதை நான் யோசிச்சதே இல்லை
சாதகக் கணிதத்தை நம்புகிறவர்கள் செய்யும் ” சாந்திகள், பரிகாரங்கள், பூசைகள்” எப்படி அந்தக் கோள்களின் தாக்கங்களையே மாற்றுகின்றன? எப்படி இந்த பூசை புனஸ்காரங்களுக்கு ஒரு neutralising effect வருகிறது?

உங்களின் இந்தக் கேள்வி மிக நல்ல கேள்வியாக எனக்குப் படுகிறது. மிக்க நன்றி.

மணியன் Says:
April 7th, 2006 at 5:09 pm
சோதிடம் என்பது மூடநம்பிக்கையை சேர்ந்தது. முக்கியமாக அதிக risk உள்ள காரியங்களில் ஈடுபடும்போது ஒரு கொழுகொம்பு தேவைப் படுகிறது. புதுவணிகத்தில், புதுப் படத்தில் முயலும்போது அது வெற்றி அடையுமா என எழும் மன அழுத்ததிற்கு ஒரு வடிகால்.அவ்வாறு வெற்றியடைய தடைகள் வரும் பட்சத்தில்,அவற்றை நீக்க பரிகாரங்கள். வானியலின் உண்மைகளையும் உள்ளடக்கி மக்களை கவரும் ஓபியம். மற்றபடி ஜாதகம் என்பது ஒருவர் பிறக்கும்வேளையில் வானத்தில் அமைந்திருக்கும் ‘நவகிரகங்க’ளின் துல்லியமான இருப்பிடங்கள். நம்நாட்டு காலண்டர்.

கோபி Says:
April 7th, 2006 at 6:49 pm
//கணிதம் என்றால் அதில் முரண்பாடு எப்படி வரமுடியும்? 2+2=4 என்பதில் என்ன முரண்பாடு வரும்? கணக்கு தெரிந்த யார் கூட்டினாலும் அதே நாலுதான் பதில்.//

ஆமாங்க அதே மாதிரி சோதிடம் தெரிந்த யார் கணிச்சாலும் ராசி கட்டங்களும் பலன்களும் ஒன்னுதான். முரண்பாடு வராது.

உதாரணமா பூசம் நட்சத்திரத்தில பிறந்தவங்களுடைய ஜாதகத்தில்(யாரு கணிச்சாலும்) ராசிக் கட்டத்தில் சந்திரன் கீழ இருக்குற மாதிரிதான் இருக்கும்.

——————-
| | | | |
| | | | |
——————-
| | | |
| | | சந் |
—- RASI —-
| | | |
| | | |
——————-
| | | | |
| | | | |
——————-

இதுல எந்த மாற்றமும் கிடையாது.

//வேறு உதாரணம் கொடுங்களேன்; இதே உதாரணத்தைக் கேட்டுக் கேட்டு புளிச்சிப் போச்சு. //

சரிங்க, 2+2=6 ன்னு ஒரு கணக்கு வாத்தியார் சொன்னா அவரு சரியா படிக்கலைன்னு சொல்வீங்களா? இல்ல ஒரு வாத்தியார் 2+2=4 ன்னு சொல்றாரு, இன்னொருத்தர் 2+2=6 ன்னு சொல்றாரு. அதனால கணக்கு பாடமே பொய்யின்னு சொல்வீங்களா?

2+2=6 ன்னு சொல்ற வாத்தியாருகிட்ட எப்படின்னு நிரூபிக்க சொல்லிக் கேப்பீங்க தானே? அதே மாதிரிதான் சோதிடத்திலும் அறுதியிட்டு கூறப்பட்ட வழிமுறைகள் உள்ளன. தப்பா பலன் சொல்றவங்ககிட்ட எந்த விதிமுறைப்படி அப்படி பலன் சொல்றாங்கன்னு நிரூபிக்க சொல்லி கேளுங்க.

//- புரியவில்லை. ராசி மண்டலங்கள்..?//

சில நட்சத்திரக் கூட்டங்கள் அடங்கிய Patternஐ வானியலும் சோதிடமும் “ராசி மண்டலங்கள்” எனக் கூறுகின்றன.

வானியலில் தொலைநோக்கியெல்லாம் பயன்படுத்தி கண்டுபிடிக்கப்படுள்ள 88 ராசி மண்டலங்களுள் சோதிடத்தில் பயன்படுத்தப்படும் 12 ராசி மண்டலங்களும் உண்டு.

இரண்டுக்கும் என்ன தொடர்புன்னு இந்த சுட்டியில் விவாதிக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமல்ல நான் முன்பே சொன்னது போல 2006 முழுவதும் சனி கடகராசி மண்டலத்தில் காணக் கிடைக்கும் வானியல் Sky Watching Instructionல் உள்ளது. தமிழ் நாட்காட்டியில் இருக்கும் கோசாரப் பலன்கள்லயும் சனி கடகராசிக் கட்டத்துல இருக்கு.

இதெல்லாம் வானியலுக்கும் சோதிடத்துக்கும் தொடர்பு உண்டுன்னு நான் நம்பறதுக்கான காரணங்கள்.

ஜாதகம் கணிக்க பயன்படும் அறுதியிட்டு கூறப்பட்ட விதிமுறைகளில் பயன்படும் சூத்திரங்கள் கணக்குக்கும் சோதிடத்துக்கும் தொடர்பு உண்டுன்னு நான் நம்பறதுக்கான காரணங்கள்.

அதே சமயத்தில் பரிகாரங்களால் எதையும் மாற்ற முடியாதுன்றது என் நம்பிக்கை.

2+2=4ன்னு தெரிஞ்சதுனால தானே கணக்கு உண்மைன்னு தெரியுது. 2ன்னா என்னான்னே தெரியாத குழந்தை கிட்ட கணக்கு உண்மையா பொய்யான்னு கேட்ட என்ன சொல்லும்?

சோதிடம் பொய்ன்னு நம்பிக்கை வரனும்னா நான் இன்னும் நிறைய படிக்கனுமுங்க. படிச்ச வரையில் சோதிடம் உண்மைன்றதுதான் என் நம்பிக்கை.

கமல் Says:
April 7th, 2006 at 7:09 pm
தருமி ஐயா,

தங்கள் பதிவுகளைத் தொடர்ந்து படித்து வருகிறேன்.
சிந்தனையைத் தூண்டும் பதிவுகள்.

தாங்கள் கேட்ட கேள்விகளை நானும் பல நாட்களாகப் பலரிடம் கேட்டுக்கொண்டிருக்கிறேன். இன்னும் நம்பும்படியான தெளிவான பதில்கள்தான் கிடைக்கவில்லை. ஒருநாள் சென்னையிலிருந்து ஈரோடு போகும்போது இரயிலில் நான் சந்தித்த ஜோதிடரிடம் சில கேள்விகளைக் கேட்டேன். அவர் ஜோதிடப் பாடத்தில் மதுரை காமராஜர் பல்கலையில் பட்டம் பெற்றவராம். உரையாடல் பின்வருமாறு:-

கேள்வி : மற்ற கிரகங்களோடு சூரியனும் சேர்ந்து சுற்றுகிறதே, அது எப்படி?

பதில் : ஜாதகம் கணிக்கப்படுவது பூமியை அடிப்படையை வைத்துத்தான். அதாவது Geo centric. சூரியன் நிலையாக நின்று, அதைப் பூமி சுற்றினாலும், பூமியை நிலையாக வைத்துப்பார்த்தால், சூரியன் சுற்றுவது போலத்தான் இருக்கும்.

கேள்வி : ஜோதிடத்தில் இருக்கும் கோள்களின் வேகம் வானியல் கூறும் அதே வேகமா?

பதில் : ஆமாம். (ஆனால் இதை எப்படிச் சரிபார்ப்பது எனத் தெரியவில்லை. யாராவது விளக்குங்களேன்!)

கேள்வி : பூசை புனஸ்காரங்கள் எப்படி கெட்ட பலன்களைத் தடுக்கின்றன?

பதில் : கெட்ட பலன்கள் முழுவதுமாகத் தடுக்கப்படுவதில்லை. அவற்றின் வீரியத்தை ஓரளவுக்குக் குறைக்கலாம்.

கேள்வி : எந்த அளவுக்கு?

பதில் : அது அவரவர்களின் நம்பிக்கையைப் பொறுத்தது.

கேள்வி : மற்றவர்கள் முன்னேற, ஐந்துக்கும் பத்துக்கும் பலன் சொல்லி அலைந்து கொண்டிருக்கிறீர்களே, ஏன் உங்களுடைய ஜாதகத்தை நீங்களே பார்த்துப் பரிகாரம் செய்து வாழ்வில் முன்னேறக்கூடாது?

பதில் : என் ஜாதகத்தைப் பார்த்தேன். அதில் நான் பிறருக்குப் பலன் சொல்லும் ஜோதிடனாகத்தான் இருக்கவேண்டும் என இருக்கிறது.

கேள்வி : பரந்து விரிந்த மிகப்பெரிய வான்வெளியில் எங்கோ சுற்றிக் கொண்டிருக்கும் கோள்கள் எப்படி மனிதர்களின் வாழ்வில் பாதிப்பை (நல்லவை, கெட்டவை இரண்டும்தான்) ஏற்படுத்துகின்றன?

பதில் : எல்லாக் கிரகங்களும் ஒன்றுக்கொன்று தொடர்புடையது. பவுர்ணமி அன்று கடல் கொந்தளிப்பதில்லையா? அது போலத்தான்.

கேள்வி : பவுர்ணமியில் கடல் கொந்தளிப்பது காந்தப் புலத்தின் மாற்றங்களால். எங்கோ இருக்கும் செவ்வாய்க்கும் திருமணம் நின்று போவதற்கும் என்ன சம்பந்தம்?

பதில் : இதற்குச் செவ்வாய் மட்டுமே காரணமில்லை. மற்ற அருகிலிருக்கும் கிரகங்களும்தான் காரணம். (ஆனால் எப்படியென்று கடைசி வரை கூறவேயில்லை)

கேள்வி : ஒரே பிறந்தநேரம் மற்றும் இடத்தை இருவேறு ஜோதிடர்களிடம் கொடுத்தால் இரண்டு விதமான ஜாதகங்கள் மற்றும் பலன்கள் வருகிறதே, அது எப்படி?

பதில் : ஒரே பிறந்தநேரத்துக்கு ஒரே மாதிரியான ஜாதகம்தான் வரவேண்டும். ஜாதகம் கணிப்பவர் ஒரு விநாடியை விட்டுவிட்டாலும் ஜாதகம் மாறிப்போகும். கம்ப்யூட்டர் ஜாதகத்தில் வேறுவேறு இடங்களில் கொடுத்தாலும் ஒரே மாதிரியான ஜாதகம்தான் வரும். (கம்ப்யூட்டரில் ஒரே இன்புட்டுக்கு எத்தனை தடவை புரோகிராமை இயக்கினாலும் அதே அவுட்புட்தான் வருமென்பது எங்களுக்கே தெரியுமே!)

சில கேள்விகளுக்குப் பதிலே வரவில்லை. தெரிந்தவர்கள் யாராவது இருந்தால் கூறுங்களேன்!

1. பிரசவம் என்பது ஒரு நொடியில் நிகழ்வதல்ல. குறைந்தபட்சம் சில விநாடிகளாவது ஆகும். அப்படியானால், பிறந்த நேரம் என்பது எது? தலை வெளிவந்த நேரமா அல்லது முழு உடல் வெளிவந்த நேரமா அல்லது முதன்முதலில் அழுத நேரமா? மருத்துவர் கூறும் நேரமா? மருத்துவர் கூறும் நேரமென்றால், அவரது கடிகாரம் சரியான நேரத்தைக் காட்டுகிறது என்பது என்ன நிச்சயம்?

2. ஜோதிடத்தை ஒரு கணக்கு என்றே வைத்துக் கொண்டாலும், வாக்கியம் மற்றும் திருக்கணிதம் என்ற இருவேறு ஃபார்முலாக்கள் எப்படி இருக்கும்? இரண்டில் எது சரி? இரண்டுமே சரியென்றால், இரண்டுக்கும் நேரவித்தியாசம் இருக்கிறதே? பலன்கள் வேறுபடாதா?

நன்றி
கமல்

premalatha Says:
April 7th, 2006 at 8:20 pm
சிறிது விலகிப்போய், சில facts:

Indian/hindu astrology is lunar-cycle based. Western astrology is solar cycle based.
Historically/anthropologically people believed that sun/moon controlled our lives, as obviously, their food depended on one of these energy sources. Different civilisations followed either solar or lunar calendars. They needed to follow seasons to plan their activities. in many civilisations summer solstice and winter solstice play a very important role and hence they have a very significant place in their belief system. Interestingly sometimes these times coincide with harveting times and hence they are popularly celebrated as religeous festivals.

Brahmins (to others: do not dare to jump on me with caste issues. I am beyond that), should have used a calendar system that followed planets, and that is why they traditionally celebrate a star based date of birth whereas, in the present-day solar calendar the date of birth comes in a different day for them.
Originally Tamil calendar was a lunar-calendar, but it looks like it was adjusted to follow solar-calendar at some point of time.
within the limitation of what I know, to my knowledge, it is only Egyptians (or Mayans?) and Tamils have followed a 60(hexa)-based cycle in counting years. It is a shame we have lost it.. i.e, we all know, 60 sec=1 min, 60min = 1hr, 12hrs=oneday, 7days=week, 30days=month, 12 month=an year, and what? in Tamil calendar, 60 year = one complete cycle. we have 60 names for each year, and it comes in rotation.. we do not know how many cycles our Tamil calendar has completed so far, as we refer them only by name… also, today’s Tamil calendar is adjusted to follow Solar cycle and hence is corrupted:(

my interest in this is, it might have taken a lot of effort to observe and come to a conclusion that the whole thing around us come back to the same location in a hexa-cycle.. wow.

regarding sun’s rotation, it does spin, and the whole solar system does rotate (together).. well, it is a very interesting science..

well, coming back to people’s belief, originally it was out of fear, need for food, etc.. which holds true even today. Today, because of “moral values” thingys added to our lifestyle, believing helps to blame it on somebodyelse. I don’t believe, I am responsible for all my sins. I don’t look for ப்ராயச்சித்தம், I am perfectly capable of running my life.

premalatha Says:
April 7th, 2006 at 8:23 pm
I think I got carried over in my last comment.

ஜாதகம் கணிதம்தான். following stars and calculating their orbital paths/positions…

தருமி Says:
April 7th, 2006 at 8:43 pm
கோபி,

என்னது இது? நீங்கள் கொடுத்த சுட்டி முழுமையாக உங்கள் கருத்துக்களுக்கும், நம்பிக்கைகளுக்கும் எதிரான கருத்துக்களையும், கேள்விகளையும் கொடுத்து என் பார்வையைச் சரியென்று சொல்வதாக இருக்கிறதே எதற்காக எனக்கு இப்படி உதவ முடிவு செய்தீர்கள்

Excerpts from that article:

Why is it that astrologers never mention the fact that the sun actually passes through fourteen constellations, not twelve?

why weren’t these other two constellations ever added? don’t they influence people’s lives?

these groupings (of constellations) are arbitrary human constructions, how could they possibly have any impact on human personalities and human lives, much less the very specific effects which astrology traditionally attributed to them?

Did astrologers first notice the effects of certain star groups on people ( a real scientific approach; at least now it can be done before courses on ஜோதிடம், ஜாதகம் started!) and then assign those groups names and images which were somehow connected to those personality traits.

ANYWAY THANKS, MR. GOPI

ஞானவெட்டியான் Says:
April 7th, 2006 at 9:43 pm
அன்பு தருமி,
வணக்கம்.
“சோதிடம்” பற்றி அகண்டபாரதம் மடலாடல்குழுவில் நடந்த உரையாடலை கீழ்காணலாம். நீண்ட ஒரு இடுகையாகவிருந்ததால் தனியா இட்டுள்ளேன். ஆங்கிலத்தில் இருப்பது என் பங்களிப்பல்ல. தமிழில் இருப்பது எம் புரிதல்.
http://njaanavelvi.blogspot.com/2006/04/blog-post_114442687832879542.html

ஞானவெட்டியான் Says:
April 7th, 2006 at 9:48 pm
அன்பு கமல்,

//1. பிரசவம் என்பது ஒரு நொடியில் நிகழ்வதல்ல. குறைந்தபட்சம் சில விநாடிகளாவது ஆகும். அப்படியானால், பிறந்த நேரம் என்பது எது? தலை வெளிவந்த நேரமா அல்லது முழு உடல் வெளிவந்த நேரமா அல்லது முதன்முதலில் அழுத நேரமா? மருத்துவர் கூறும் நேரமா? மருத்துவர் கூறும் நேரமென்றால், அவரது கடிகாரம் சரியான நேரத்தைக் காட்டுகிறது என்பது என்ன நிச்சயம்?//

தந்தையும் தாயும் கூடி விந்து கருவோடு கூடும் நேரமே சரியான நேரம்.

//2. ஜோதிடத்தை ஒரு கணக்கு என்றே வைத்துக் கொண்டாலும், வாக்கியம் மற்றும் திருக்கணிதம் என்ற இருவேறு ஃபார்முலாக்கள் எப்படி இருக்கும்? இரண்டில் எது சரி? இரண்டுமே சரியென்றால், இரண்டுக்கும் நேரவித்தியாசம் இருக்கிறதே? பலன்கள் வேறுபடாதா?//

வாக்கியப் பஞ்சாங்கத்தில் நேரம் மட்டுமே கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுகிறது. திருக்கணிதத்தில், பிறந்த ஊர், longitude, lattitude ஆகியவைகளும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுவதால் வேறுபாடு இருக்கும். ஆகையால்தான் திருக்கணிதம் துல்லியமானது என்கிறார்கள்.

நல்லசிவம் Says:
April 8th, 2006 at 10:13 am
என் பங்குக்கு ஒரு குழப்பம்..

//கணிதம் என்றால் அதில் முரண்பாடு எப்படி வரமுடியும்? 2+2=4 என்பதில் என்ன முரண்பாடு வரும்? கணக்கு தெரிந்த யார் கூட்டினாலும் அதே நாலுதான் பதில்.

But here,
3=2 !!

Here it is explained..

-6 = -6
ie, 9-15 = 4-10

adding 25/4 to both sides:
9-15+(25/4) = 4-10+(25/4 )

Changing the order
9+(25/4)-15 = 4+(25/4)-10
(this is just like : a square + b square - two a b = (a-b)square.)
Here a = 3, b=5/2 for L.H.S and a =2, b=5/2 for R.H.S.

So, it can be expressed as follows:
(3-5/2)** 2 = (2-5/2)** 2

Taking positive square root on both sides:
3 - 5/2 = 2 - 5/2

Cancelling - 5/2 on both sides,
3 = 2

thangam Says:
April 8th, 2006 at 10:40 am
Dear Dharumi! i can explain some basic facts about Astrology. A main basic fact was already posted in your blog. It was posted as anonymous since I have no blog account however I had posted my name as thangam. If you can help me in creating a blog for me, will be welcome and appreciated. I am fully aware of computer and software but I can visit blogs and also posting comments as anonymous. Only in English I am posting my comments.If it is in Tamil the terminologies wiil have its correct understanding is easier. This also I expect from you. Thanking you. VAZHGA VALAMUDAN - thangam

thangam Says:
April 8th, 2006 at 10:44 am
Please insert ‘not’ between am and fully which is inadvertantly left out. sorry for inconvenience-thangam

குமரன் (Kumaran) Says:
April 8th, 2006 at 11:03 am
தருமி சார். பதிவைப் படித்துவிட்டேன். உங்கள் கருத்துக்கு ஆதரவாகவோ எதிராகவோ எனக்குக் கருத்து இல்லை. இப்படி சொல்லாம போயிட்டா எல்லாரும் உங்க கருத்துக்கு ஆதரவா இருக்கிறதா நீங்க நெனைச்சுக்கிடுவீங்கல்ல…அதான் சொல்லிட்டேன்.

நல்லசிவம் Says:
April 8th, 2006 at 11:37 am
எல்லோரும் ரொம்ம்ம்ம்ப சீரியஸா பேசிகிட்டு இருந்திங்களா..ஒரு ‘ரிலீப்’க்காக கூத்துல கோமாளி வேலை முன்ன இட்ட பின்னூட்டம். யாரும் டென்சன் ஆகாதீங்கப்பூ

கோபி Says:
April 8th, 2006 at 1:48 pm
//நீங்கள் கொடுத்த சுட்டி முழுமையாக உங்கள் கருத்துக்களுக்கும், நம்பிக்கைகளுக்கும் எதிரான கருத்துக்களையும், கேள்விகளையும் கொடுத்து என் பார்வையைச் சரியென்று சொல்வதாக இருக்கிறதே//

இந்த சுட்டி உட்பட நான் படித்த Critiques எதுவுமே சோதிடத்தில் கணிக்கப் பயன்படும் விதிகள் எப்படி சரியாகும்னு கேள்வி எழுப்புதேயொழிய தவறாகும்னு நிரூபிச்சு சொல்லாததால இன்னமும் சோதிடம் உண்மைன்றது தான் என் நம்பிக்கை.

1+1=10ன்னு சொன்னா சரியா தப்பா? தசமம் மட்டுமே தெரிஞ்சவங்க தப்புன்னு சொல்வாங்க. இரண்டின் அடிமானம்(Binary) பற்றி தெரிஞ்சவங்க சரின்னு சொல்வாங்க.

அது மாதிரி சோதிடம் பொய்ன்னு எனக்கு நம்பிக்கை வரனும்னா நான் இன்னும் நிறைய படிக்கனுமுங்க. படிச்ச வரைக்கும் சோதிடம் உண்மைன்றதுதான் என் நம்பிக்கை.

கோபி Says:
April 8th, 2006 at 1:55 pm
இன்னொன்னு கேட்க மறந்துட்டேனுங்க.

ராசிமண்டலங்கள் குறித்து என் பின்னூட்டத்துல வானியலும் சோதிடமும் ஒரே விஷயத்தை சொல்லுதே.. (in 2006 Saturn will be in Cancer constellation) அந்த சுட்டிகளை பார்த்தீர்களா?

muthu(tamizhini) Says:
April 8th, 2006 at 2:21 pm
நல்லசிவம் சூப்பருப்பு

V.Subramanian Says:
April 8th, 2006 at 3:25 pm
ஆன்புள்ள தருமிக்கு தங்கள் தொடரை தொடர்ந்து படித்து வரும் நான் பதிலாக ஒரு விரிவான கட்டுரை எழுதலாம் என்று இருக்கிறேன். ஆனால் இப்பொழுது சிலவற்றுக்கு (என் கருத்து) இது.

>>>>1. ஜாதகக்கணிப்பில் சந்திரனுக்கு ஒரு முக்கிய இடம் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால், சந்திரன் மற்ற கோள்கள் போலன்றி அது ஒரு துணைக்கோளாக இருக்கும்போதும் எப்படி அதுவும் ஒரு கோளாக எடுத்துக்கொள்ளப்படுகிறது?

ஜாதகத்தை பொருத்த வரை அதில் உள்ள கோள் என்று சொல்லப்படுவது Planet என்னும் பொருளில் எடுக்கவேண்டாம். அது தரும் பலன் பொருத்தே அதில் சேர்க்கபட்டுள்ளது. நீங்கள் அரசியல் பொருளாதார தன்மை நிலைபெற்ற நாட்டில் வசித்தாலும் உங்கள் பக்கத்து வீட்டுக்கரானோ அல்லது உங்கள் தெருவையே சுற்றி வரும் ஒரு சமூகசேவகராலோ அல்லது ஒரு ரெளடி
யாலோ நீங்கள் இன்பமோ துன்பமோ அடையலாம் அல்லவா அது போலத்தான் சந்திரனின் பலனும்.

>>>>>>> 10-வது கோளுக்கு ஜாதகக் கணிப்பில் இடம் உண்டா, இல்லையா?

எந்த ஒரு கோளும் அது சூரியனை சுற்றும் காலத்தை பொருத்தே அதன் பலா பலன் கூறப்படுகிறது. சனி 30 வருடம் வியாழன் 12 வருடம் என்பது போல். ஆனால் புளுட்டோ போன்ற தூரத்து கிரகங்கள் ஒருவர் பிறப்பிலிருந்து இறப்பு வரை ஒரே கட்டத்தில் இருப்பதால் அதன் பலன் நிரந்தரம் மாறாதது. அதைப்பற்றி யோசித்து பலன் இல்லை.

>>>> இந்த தூரக்கணக்கை எடுத்துக் கொண்டால் மற்ற தூரத்துக் கோள்களை மட்டும் ஏன் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும்?

தூரக்கணக்கை எடுப்பதில்லை சூரியனை சுற்றும் காலத்தையே எடுதுக்கொள்கின்றனர். மேலும் சந்திரன் 28 நாளுக்கு ஒரு முறை பூமியை சுற்றிவருவதால் அதன் நிலைப்பாடு தினப்பலன் கூறுவதற்கும் சூரியன் ஒவ்வொரு ராசியின் பார்வையிலிருந்து மாதம் ஒரு முறைதான் இடம் மாறுவதால் அதை மாத பலன் கூறுவதற்கும் உபயோகபடுத்துகிறார்கள்.

நான் ஜோசியத்தின் தரம் பற்றி விவாதிக்க வில்லை. ஆனால் நமக்கு புரியாத அல்லது விளக்க முடியாத எல்லாமே ஏமாற்று வேலை என்பது தவறான அணுகுமுறை.

சமீபத்தில் டோண்டு அவர்களின் சஷ்டியப்த பூர்த்தி பற்றி தமிழ் மணத்தில் வந்ததால் இதையும் கூறுகிறேன். 60 என்பது வியாழன் சனி கிரகங்கள் சூரியனை சுற்றி வரும் வருடங்களின் 12, 30 (LCM)60. என் கணக்குப்படி 58ம் வருடமோ அல்லது 59ம் வருடமோ ஒரு குறிப்பிட்ட நாளில் கணிக்கப்படும் ஜாதக்ம் அவர் பிறந்த போது இருந்த ஜாதகத்துடன் ஒத்துபோகும் என்று நினைக்கிறேன். இது ஒரு HOME COMING போல.

ஒவ்வொரு செயலுக்கும் ஒரு விளைவு எதிர் விளைவு உண்டு. நான் முன் குறிப்பிட்ட ஒரு ரெளடியின் தொந்தரவை ச்மாளிக்க நீங்கள் ஒரு போலீசின் துணை நாடலாம் அல்லது வேறு இடத்திற்கு குடி பெயரலாம்.

தருமி Says:
April 8th, 2006 at 4:12 pm
Premalatha,
Either you are a confused lot or you have confused me totally you long comment ends as if you dont believe in horoscopes and all that and sound so confident saying ‘ I run my life’. it really sounded so good. but in the second comment you change - at least that’s how i percieve - track.

60 year = one complete cycle. is there any scientific background to say this?

the whole thing around us come back to the same location in a hexa-cycle.. Is it?

தருமி Says:
April 8th, 2006 at 4:19 pm
Thangam,
i am not an expert but still i want to help you start a blog. for that dont i need your mail id?

premalatha Says:
April 8th, 2006 at 4:38 pm
Dharumi,

ஜாதகம் originated from the idea of கணிதம், என்பதற்கும், என் belief system-க்கும் எந்த சம்பந்தமுமில்லை. I don’t believe. How ஜாதகம்ங்கிற concept develop ஆச்சுன்னு analyse பண்றது ஒரு study.

ஜாதகம் மூலம் மனித குணங்களை மற்றும் விதியை தெரிந்துகொள்ள முடியும்னு நம்புறது - belief system. I don’t beleive one can find out about my charcters/personlaity or my fate through my ஜாதகம்.

I like to study how it all started.. without confusing myself with the belief systems… it helps that I am not a believer, I can stay out of it and can pay unbiased interest to the info I get when I study them.

I don’t know what made them to chose 60 years cycle. but that is what old-tamil-folks did. it is a very unique calendar system. they might have reasons. But the shame is no one knows. not even how many of those cycles Tamil Calendar has completed so far.

I think I have confused you in my previous comment. Hope it is better now. No. I am not a confused lot. (well, most of the time anyway )

premalatha Says:
April 8th, 2006 at 4:53 pm
There is another thing that is completely lost is the Brahmin Calendar. It is planets based. neither lunar, nor solar. It would be interesting to know how many days in a year it had. In my observation, there is a significant difference in number days that consitute an year in their calendar. it is a shame it is lost.

கமல் Says:
April 8th, 2006 at 7:07 pm
அன்புள்ள ஞானவெட்டியான்,

தங்கள் பதிலுக்கு நன்றி. மேலும் சில கேள்விகள்.

1. தந்தையும் தாயும் கூடி விந்து கருவோடு கூடும் நேரமே சரியான நேரம் என்றால், அந்த நேரம் என்னவென்று மருத்துவர்கள் உட்பட யாருக்குமே தெரியாதே! பிறகு எதற்காக ஜாதகம், பலன்கள் எல்லாம்?

2. திருக்கணிதம்தான் துல்லியமானது என்றால், வாக்கியப் பஞ்சாங்கத்தை இன்னும் பலர் பயன்படுத்துவது ஏன்?

நன்றி
கமல்

V.Subramanian Says:
April 8th, 2006 at 10:15 pm
60 is not a magical figure. It is just LCM of Orbital period taken by (Rounded off to nearest year) Mars - 2 years, Jupitor - 12, Saturn - 30. Tamil Years cycle thru 60 years (source http://www.tamilar.org/tamil-calendar.asp). (but I dont see any tamil word in Tamil year names. It looks like more of sanskrit). As per my understanding when you complete 60 years approximately all planets will align to same degree as at the time of birth.

தருமி Says:
April 8th, 2006 at 10:56 pm
கமல், ஞானவெட்டியான்,

கமல், நீங்கள் கேட்ட பிறந்த நேரம் கணிப்பது எப்படி என்பது எனக்கும் ஒரு கேள்வியாக இருந்தது. நல்ல நேரம் என்ற தலைப்பில் உள்ள முந்திய பதிவொன்றில் அதைப்பற்றிக் கேட்டிருந்தேன்.

ஞானவெட்டியான்,
நீங்கள் சொல்வதை வாசித்ததும் எனக்கு வேறொன்று நினைவுக்கு வந்தது.
* Have you stopped beating your wife?
* Can God create a stone which he himself cannot lift? - இந்த இரு கேள்விகளுக்கும் ஆமாம், இல்லை என்ற இரு பதில்களையுமே தர முடியாது. (ஆங்கிலத்தில் இதற்கொரு சொல் உண்டு; நினைவில் இல்லை.) அதைப்போலவே உங்களின் கூற்றினால் எனக்குத் தோன்றுவது:

-சரியான நேரத்தை எடுத்துக்கொண்டு கணித்தால் ஜாதகம் மிகச்சரியாக இருக்கும் - ஒரு சாராரின் வாதம்.

-சரியான பிறந்த நேரம் தாயின் கருமுட்டை சினையுறுவது; ஆனால் அது யாராலும் கண்டுபிடிக்க முடியாத விஷயம்.

- அப்படியாயின் மற்றபடி பிறந்த நேரம் வைத்துக் கணக்கிடும் - திருக்கணிதத்தையும் சேர்த்தே - எல்லா ஜாதகக் கணிப்புகளுமே தவறாகத்தான் இருக்க வேண்டும்.

- எல்லா கணிப்புகளுமே தவறாக இருப்பின். அதனால் யாருக்கு என்ன பயன்? எல்லாமே தேவையற்றதுதானா?

- எல்லாமே தேவையற்றதாயின் பின் அது ஏன் காலங்காலமாய் மக்களால் பின்பற்றப் படுகிறது?

தருமி Says:
April 8th, 2006 at 10:59 pm
நல்ல சிவம்,
thanks for the interlude.

தருமி Says:
April 8th, 2006 at 11:12 pm
முத்து தமிழினி,
ரொம்ப பிசியா இருக்கிற நேரத்தில கூட வந்ததுக்கு ரொம்ப நன்றி

குமரன்,
So, வந்திட்டு மெல்ல வாழைப்பழ ஊசி மாதிரி உங்க எதிர்மறைக் கருத்தை மறைந்த கருத்தாக வச்சிட்டுப் போறீங்க…

தருமி Says:
April 8th, 2006 at 11:19 pm
கோபி,

“சோதிடம் பொய்ன்னு எனக்கு நம்பிக்கை வரனும்னா நான் இன்னும் நிறைய படிக்கனுமுங்க. படிச்ச வரைக்கும் சோதிடம் உண்மைன்றதுதான் என் நம்பிக்கை.”

“நான் படித்த Critiques எதுவுமே சோதிடத்தில் கணிக்கப் பயன்படும் விதிகள் எப்படி சரியாகும்னு கேள்வி எழுப்புதேயொழிய தவறாகும்னு நிரூபிச்சு சொல்லாததால இன்னமும் சோதிடம் உண்மைன்றது தான் என் நம்பிக்கை.”

- செம குழப்பமுங்க

தருமி Says:
April 8th, 2006 at 11:21 pm
V.Subramanian

“கோள் என்று சொல்லப்படுவது Planet என்னும் பொருளில் எடுக்கவேண்டாம்.”
- astrology & astronomy ரெண்டுக்கும் முடிச்சி போடறதே நீங்க தான்; நீங்களே அது வேறு இது வேறு அப்படிங்கிறீங்க.

“நமக்கு புரியாத அல்லது விளக்க முடியாத எல்லாமே ஏமாற்று வேலை என்பது தவறான அணுகுமுறை.”
- மிகச்சரியா சொன்னீங்க.
ஆனா நான் என்ன சொல்றேன்னா, மதங்கள், அதனை ஒட்டிய விஷயங்கள் என்பதாலேயே அவைகளை அப்படியே நம்ப வேண்டியதில்லை. நாமளா கொஞ்சம் யோசிச்சும் பார்க்கலாமேன்னு சொல்றென். அவ்வளவுதான்.

“விரிவான கட்டுரை எழுதலாம் என்று இருக்கிறேன்.” - காத்திருக்கிறேன்.

தருமி Says:
April 8th, 2006 at 11:23 pm
premalatha.

“I don’t know what made them to chose 60 years cycle.” - not only you, none knows! right?

“…that is what old-tamil-folks did.” - then how come all the names are in sanskrit?

Somewhere i read that you wrote about your inquisitive mind as a seasoned researcher who would experiment, test,analyse and then only conclude. am i not right?

premalatha Says:
April 8th, 2006 at 11:37 pm


pointஅ புடிச்சீங்க போலருக்கு. இப்போ escape. ஏன்னா இதுக்கு மேல ஒண்ணும் தெரியாது.

you are right about the sanskrit names. sankrit influence in tamil is a long time one. in order to research into that, one needs unbiased reference material which is almost to highly impossibe to get, as most of the material we get are very much sanskrit influenced…

60 years cycle WAS tamil calendar. naming/altered names mights have come from sanskrit. It is similar to lunar cycle based calendar altered to follow solar cycle.. only that the later is much ancient when compared to the former (naming) I donot have (did not save it) references to quote here.

Lack of research. (including myself )

chiththan Says:
April 9th, 2006 at 12:26 am
நம்பிக்கை சம்மந்தப்பட்ட உல்டாவான தலைப்பு!
இரவு-பகல்,உண்டு-இல்லை,கடவுள்-இயற்கை என்பதைப்போல்
உலகம் உள்ளவரை தொடரும்”நெட் வெர்க்” வாழ்க!
ஜோதிடமென்பது மறுஜென்மம் உண்டெனும் கூற்றைப்போல் மனிதனுக்கு வாழ்வில் ஒரு பிடிப்பை,நம்பிக்கையை ஏற்படுத்தினால் சரி!

கமல் Says:
April 9th, 2006 at 6:45 am
V.Subramaniam,

60 வருடங்கள் கழித்து கோள்கள் திரும்ப அதே இடங்களுக்கு வரும், அப்போது ஜாதகத்தைக் கணித்துப் பார்த்தால், பிறந்த போது கணித்த ஜாதகத்துடன் ஒத்துவரும் என்கிறீர்கள். அப்படியானால், எனக்கு ஒரே சந்தேகம்.

கோபிசெட்டிபாளையத்தில், ஒரு மருத்துவமனையில், 5-ஜூன்-1977 16:30:15 க்கு ஒரு குழந்தை பிறக்கிறது. மீண்டும் கோபிசெட்டிபாளையத்தில், அதே மருத்துவமனையில், 5-ஜூன்-2017 16:30:15 க்கு இன்னொரு குழந்தை பிறந்தால், இருவரின் ஜாதகங்களும் பலன்களும் ஒரே மாதிரி இருக்குமா? முதலாமவர் இந்தியாவின் குடியரசுத்தலைவரானால், இரண்டாமவரும் குடியரசுத்தலைவராவாரா?

நன்றி
கமல்

ஞானவெட்டியான் Says:
April 9th, 2006 at 7:02 am
அன்பு தருமி,கமல்,

//-சரியான நேரத்தை எடுத்துக்கொண்டு கணித்தால் ஜாதகம் மிகச்சரியாக இருக்கும் - ஒரு சாராரின் வாதம்.

-சரியான பிறந்த நேரம் தாயின் கருமுட்டை சினையுறுவது; ஆனால் அது யாராலும் கண்டுபிடிக்க முடியாத விஷயம்.

- அப்படியாயின் மற்றபடி பிறந்த நேரம் வைத்துக் கணக்கிடும் - திருக்கணிதத்தையும் சேர்த்தே - எல்லா ஜாதகக் கணிப்புகளுமே தவறாகத்தான் இருக்க வேண்டும்.

- எல்லா கணிப்புகளுமே தவறாக இருப்பின். அதனால் யாருக்கு என்ன பயன்? எல்லாமே தேவையற்றதுதானா?//

எனது பின்னூட்டின் இறுதி வரியை ஓர்ந்து நோக்கின் விடை கிட்டும்.

“இந்தக் கல் போடலாமா? இப்படிப் பெயரை மாற்றிக்கொள்ளலாமா? என மண்டையைப் பிய்த்துக்கொண்டு அலையவேண்டாம். பணம் எப்போது வரும்? எனும் வினாவுக்குச் சோதிடம் பார்க்கத் தேவையில்லை.
“உடம்பை வளைச்சு நல்லா உழைச்சுப் பாரப்பா
உனக்கும் உலகத்துக்கும் நன்மையிருக்கு” எனும் திரையிசைக்குச் செவி சாயுங்கள்.
எல்லாவற்றிற்கும் மேலாக “எது வரினும் வரட்டும்; எதிர்கொள்வோம். தன்னம்பிக்கையுடன் வாழ்வோம்” என முடிவெடுத்தால் சோதிடர் பக்கமே செல்லவேண்டாம்.”

// எல்லாமே தேவையற்றதாயின் பின் அது ஏன் காலங்காலமாய் மக்களால் பின்பற்றப் படுகிறது? //

அறியாமையைத் தவிற வேறொன்றுமில்லை.

கோபி Says:
April 9th, 2006 at 3:10 pm
// செம குழப்பமுங்க //

இதுல குழப்பத்துக்கு ஒன்னுமேயில்லீங்க.

1+1=10 உண்மையா பொய்யான்னு தசமம் மட்டும் தெரிஞ்சவரும் இரண்டின் அடிமானம் தெரிஞ்சவரும் வாதிட்டா என்ன முடிவு கிடைக்கும்? இருவருக்கும் இரண்டின் அடிமான கணக்கு பற்றி முழுமையாய் தெரியும்போது இருவரும் ஒப்புக் கொள்ளும் முடிவு தெரியும்.

அது மாதிரி சோதிடம் உண்மைன்னு சொல்ற அளவுக்குத்தான் நான் சோதிடம் பத்தி படிச்சிருக்கேன். பொய்யின்னு சொல்ற அளவுக்கு இன்னும் படிக்கலை.

தருமி Says:
April 9th, 2006 at 3:50 pm
சித்தன்,
“மனிதனுக்கு வாழ்வில் ஒரு பிடிப்பை,நம்பிக்கையை ஏற்படுத்தினால் சரி! …” //
- தவறான கொழு கொம்பென்றால் அது தேவையா என்பதே என் கேள்வி..

தருமி Says:
April 9th, 2006 at 3:52 pm
கமல்,
“கோபிசெட்டிபாளையத்தில், ஒரு மருத்துவமனையில், 5-ஜூன்-1977 16:30:15 க்கு ஒரு குழந்தை பிறக்கிறது. ..” பிறந்த அந்த குழந்தை நீங்கள்தானே, கமல்!

தருமி Says:
April 9th, 2006 at 3:53 pm
ஞான வெட்டியான்,
“// எல்லாமே தேவையற்றதாயின் பின் அது ஏன் காலங்காலமாய் மக்களால் பின்பற்றப் படுகிறது? //

அறியாமையைத் தவிற வேறொன்றுமில்லை. “//
இதுவே எனது கடைசிப் பதிவின் ஆரம்பமாக இருக்கும். நல்ல ஆரம்பம் கொடுத்தமைக்கு சிறப்பான நன்றி.

தருமி Says:
April 9th, 2006 at 3:57 pm
ஞானவெட்டியான்,

““உடம்பை வளைச்சு நல்லா உழைச்சுப் பாரப்பா
உனக்கும் உலகத்துக்கும் நன்மையிருக்கு” எனும் திரையிசைக்குச் செவி சாயுங்கள்.
எல்லாவற்றிற்கும் மேலாக “எது வரினும் வரட்டும்; எதிர்கொள்வோம். தன்னம்பிக்கையுடன் வாழ்வோம்” என முடிவெடுத்தால் சோதிடர் பக்கமே செல்லவேண்டாம்.”

- இது அக்கட்டுரையின் முடிவுரையாக இருக்கும். மீண்டும் நன்றி

தொப்புளான் Says:
April 9th, 2006 at 5:16 pm
மனுஷனுக்கு வாழ்க்கையில கஷ்டம் வரும்போது “எத்தை தின்னாப் பித்தம் தெளியும்”னு ஜோசியர்ட்டப் போறான்.ஜோசியரும் கூடப் பொறந்தவங்க எத்தனை பேருன்ற மாதிரி ஏதாவது ஒண்ணைச் சரியாச் சொல்லிப்புடுராப்புல.(எப்படின்னுதான் தெரியலை?). 1000 சொல்லி அதுல ஏதாவது ஒண்ணு பலிச்சுட்டாலும் பலிக்காத 999ஐ மறந்துறதுதான் மனுஷனோட “பெருந்தன்மை”.

மத்தப்படி மக்கள் நம்பிக்கையைப்பெற அறிவியல் ரீதியான விளக்கம்லாம் தேவைன்றது மூட நம்பிக்கை.யாராவது சும்மா “குறி” சொன்னாலே நம்பிருவாய்ங்க..

எனக்கு ஜோசியம் சொல்லித்தந்த வாத்தியாரு குழந்தை முதல் முதலா அழுத நேரம்தான் அது முதல்ல மூச்சுவிட்ட நேரம். அதைத்தான் ஜாதகம் கணிக்க எடுத்துக்கிறணும் சொன்னாரு.இங்க ஒருத்தரு வேற மாதிரி சொல்றாரு.
ஜாதகம் கணிக்கிற கணக்கு வரைக்கும் சரியாத்தான் சொல்லித்தந்தாப்புல.பலாபலனுக்கு வரும்போது ஒழப்பி ஒண்ணுக்கிருந்துட்டாப்புல.குருவே சரணம்.
பின்னாடி “குடும்ப ஜோதிடம்” புத்தகத்தவச்சு முடிஞ்ச அளவுக்கு எதுவெல்லாம் பொருந்தி வருமோ அதையெல்லாம் எழுதி பட்டமும் வாங்கினோம்.
வாக்கியத்தைவிட திருக்கணிதம் துல்லியம்னு சொல்லிகிட்டு இருந்தவரு அதுக்கப்புறம் பாவக ஸ்புடம் போடணும்னு சொல்லிட்டாரு.அப்ப இது வரைக்கும் படிச்சதெல்லாம் ஒரு குத்துமதிப்புதான் போலன்னு நெனச்சுக்கிட்டோம்.அடிப்படையே தப்பா இருக்கையில அடுக்குமாடியா கட்டி என்னா ஆகப்போகுது?

அப்புறம் இந்த செவ்வாய் தோஷம் விஷயத்தில பாருங்க.நெறயா கொழப்பம்.செவ்வாய் தோஷம் இருக்கு. ஆனா இந்தக் கட்டத்தில இதெல்லாம் சேர்ந்திருக்கதால அதுக்குப் பரிகாரம் ஆகி செவ்வய் தோஷம் இப்ப இல்லைன்னு ஒரே வெளயாட்டு.
செவ்வாய் தோஷத்துக்காரன்ய்ங்களுக்கு எல்லாத்துக்கும் ரத்தம் ஓ நெகட்டிவ்னு ஒரு பொய் சொல்றான்ய்ங்கய்யா.நிரூபிச்சுக்காட்டுன்னு சொன்னா ஒருத்தனும் வர்றதில்ல.

அப்புறம் இந்தக் கல்யாணப் பொருத்தம் பார்க்கறதிலதான் உச்சகட்ட காமெடி.ஆம்பளை நட்சத்திரத்துக்கு பெண் நாய்னு வரும். பொண்ணுக்கு ஆண் குரங்குன்னு வரும்.”யோனி” பொருந்தலைனு சொல்லியிருவான்ய்ங்க.ஏதோ அளந்து பார்த்தாப்புல.
பால் மரமா இருந்தாதான் கொழந்த பொறக்குமாம்.பாலியல் விஞ்ஞானிகளின் அரிய கண்டுபிடிப்பு.

மூல நட்சத்திர நண்பர் ஒருத்தருக்கு பொண்ணுப் பார்க்கப்போனா தகப்பன் இல்லாதப் பொண்ணாப் பாருன்றான்ய்ங்க.க்ளோனிங் பண்ணினாதான் உண்டு.

கணக்கு சரிதான். கணிக்கிறவர்தான் தப்புன்னா இத்தனை வருசத்தில ஒரு அமைப்பு ஏற்படுத்தி தரப்படுத்தி டாக்டருங்களுக்கு அங்கீகாரம் கொடுக்கிறமாதிரி தரவேண்டியதுதான.அது ஆதரவாளர்களுக்கும் நல்லதுதான.திரும்பத் திரும்ப சண்டை போட வேண்டாம்ல.

இந்த மாதிரி விஷயத்தில எல்லாம் நிரூபிக்க முடியாதுங்கறது (non falsifiable)வசதியாப் போச்சு.

ஞானவெட்டியான் Says:
April 9th, 2006 at 7:03 pm
அன்பு நண்பர்களே,

என்னுடைய வேண்டுகோள் எல்லாம் “இதே பொழப்பா அலையாதீங்க! ஒரு TORCH LIGHT போல பயன்படுத்துங்கள்” என்பதுதான்.

தயிர் சோத்துக்கு ஊறுகாய் அவசியம்தான்; ஆனால் அதுக்காக ஊறுகாய்க்குத் தயிர் சோறு தொட்டுக்கிறது நியாயமா?

உங்கள் எல்லோரையும்போல எழுதிப் பாத்தேன்.

V.Subramanian Says:
April 9th, 2006 at 9:10 pm
கமல் நான் கூறிய 60 வருடத்திற்கு பின் ஒரே ஜாதகம் என்பது கிட்டத்தட்ட என்னும் அளவில் தான். அதாவது ஜாதகம் கட்டம் பார்த்தால் ஒரே மாதிரி கட்டங்களில் சூரியன் சந்திரன் செவ்வாய் சனி வியாழன் என்று இருக்கும். ஆனால் அதன் சாய்மானம் (Angle of Tilt) வெவ்வேறாக இருப்பதால் பலன்கள் வேறாக இருக்கும். ஜாதகம் பற்றி நான் கூறுவது எல்லாமே என் கருத்து தானே தவிர அறுதியிட்டு கூறும் அளவுக்கு நான் சோதிடம் பயின்றதில்லை.

ஜாதகம் பற்றிய என் பதிவை பார்க்க
http://yennottam.blogspot.com/2006/03/blog-post.html

கமல் Says:
April 9th, 2006 at 10:26 pm
//“கோபிசெட்டிபாளையத்தில், ஒரு மருத்துவமனையில், 5-ஜூன்-1977 16:30:15 க்கு ஒரு குழந்தை பிறக்கிறது. ..” பிறந்த அந்த குழந்தை நீங்கள்தானே, கமல்!//



ஐயா, நீவிர் வாழ்க. ஜோதிடராவதற்கான முழுத்தகுதியும் தங்களுக்கு வந்து விட்டது.

நன்றி
கமல்

தருமி Says:
April 10th, 2006 at 4:18 pm
கமல், இதைப்போய் கொஞ்சூண்டு காது மூக்கு வச்சி நாலு பேத்துக்கிட்ட சொன்னீங்கன்னு வச்சுக்கங்க...நம்ம ஊட்டு முன்னால கூட்டம் பிச்சுக்காது...?

தருமி Says:
April 10th, 2006 at 4:37 pm
ஹலோ
ரொம்ப டமாசான ஆளா இருப்பீங்க போலுமே! பேரே சொல்லுத்!

அது என்னங்க குரு ஒருத்தருட்ட போயி, ஜாதகம் படிச்சிருப்பீங்க போலும்; ஆனா, அதையே பயங்கரமா தாக்குறீங்க. அதுவும்,”மூல நட்சத்திர நண்பர் ஒருத்தருக்கு பொண்ணுப் பார்க்கப்போனா தகப்பன் இல்லாதப் பொண்ணாப் பாருன்றான்ய்ங்க.க்ளோனிங் பண்ணினாதான் உண்டு. - எனக்கு வந்த பின்னூட்டங்களில் இந்த அளவுக்கு நான் எதுக்கும் சிரிச்சது இல்லீங்க!
fantastic sense of humour

செவ்வாய் தோஷத்துக்காரன்ய்ங்களுக்கு எல்லாத்துக்கும் ரத்தம் ஓ நெகட்டிவ்னு …// - எனக்குச் சொன்னவங்க rh-ve அப்டின்னாங்களே?

“…..அதையெல்லாம் எழுதி பட்டமும் வாங்கினோம்.”// என்ன பட்டம் வாங்குனீங்க?

எனக்கு டாக்டர் மாத்ருபூதம் ரொம்ப பிடிக்கும். டி.வி. நிகழ்ச்சியில் அவர் அடிக்கிற ஜோக்குகள் …they would just come one after another with such ease.. நீங்க அந்த மாதிரி ரொம்ப சுளுவா ஜோக் அடிச்சிக்கிட்டே போவீங்க போலும். அதனால் எனக்காக, இல்ல..எங்க எல்லாத்துக்காகவும், நீங்க உடனே ஒரு பதிவு ஆரம்பிக்கணும், கட்டாயமா..சரியா

thangam Says:
April 18th, 2006 at 9:23 pm
Dear Dharumi, please find herewith my e-mail id
thangarajan_yoga@dataone.in. Only today I saw your reply to my request. Thank you for reply-thangam.

நவீனன் Says:
May 9th, 2006 at 4:09 am
ஜாதகக் கணிப்பு சரியா பிழையா எனும் வாதம் வேண்டாம், சரியாகக் கற்றவர்கள் யாராவது ஜாதகம் கணிக்கும் முறையை எழுதலாமே, என்னைப் போன்று விளக்கமற்றவர்களும் ஜாதகத்தைக் கணித்துப் பார்த்து அதிலுள்ள ஓட்டைகளை அறியலாமல்லவா? நல்லவை எனின் கற்போம்
தீயவை எனின் தவிப்போம்

Thursday, March 30, 2006

147. சோதிடம்..11 -எண் கணிதம்

மற்றைய பதிவுகள்:

1*,
2*,
3*,
4*,
5*,
6*,
7*,
8*,
9*,
10*,
11*,
12*.
13*.





உங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமா? ஆனானப்பட்ட நம்ம ஐயன் திருவள்ளுவரே எண் கணித சோதிடம் பற்றிச் சொல்லியிருக்காராமே தெரியுமா? அவர் ‘எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும்”னு சொல்லிட்டு போனாலும் போனார்; நம்ம ஆளுங்க அவரையே quote பண்ணிட்டாங்க…’பாத்தீங்களா, நம்ம ஐயன் திருவள்ளுவரே எங்க numerology பற்றிச் சொல்லியிருக்காராக்கும்’ அப்டின்னு சொல்ல ஆரம்பிச்சிட்டாங்க… பாவம்’பா…விட்டுருங்க.. உங்களுக்கு சப்போர்ட் வேணும்னா அதுக்காக இப்படியா?

எல்லா மட்டத்திலேயும் இந்த ‘வியாதி’ பரவியிருச்சு; பகுத்தறிவாளர்களாகட்டும், கை நாட்டுகளாக இருக்கட்டும். என்னதான் ஆகுதுன்னு பார்ப்போமே அப்டின்கிற நினப்பு போல. வை.கோபால்சாமி வைகோ ஆயிடரார்; அவ்வளவு எதுக்கு, எல்லா விஷயத்திலும் முற்போக்காளராக இருக்கும் கமல ஹாசன் ஏன் பெயரை மாத்திக்கிட்டாரென தெரியவில்லை.(இந்திக்காரர்களுக்குப் பரிச்சயமான பெயர் அது என்று சொன்னதாக நினைவு. சரியோ, தவறோ தெரியாது.) எனக்குக் கூட ஒருத்தர் பெயரை நான் மாத்திக்கிட்டா பெரிய ஆளா வந்திருவேன்னு சொன்னார்; அதுவும் sam அப்டிங்கிற பெயரை sham என்று மாத்திக்கச் சொன்னார். சாமி, sam அப்டிங்கிற பெயர் எனக்கு ரொம்ப பிடிக்கும் (பேராவது அழகா இருக்கட்டுமேன்னு அப்பா பெரிய மனசு பண்ணி வச்சிருக்காரு.). அதோட, sham- அப்டிங்கிற வார்த்தைக்கு என்ன அர்த்தம் தெரியுமா, என்னக் கேவலப்படுத்துறதின்னே முடிவெடுத்திட்டியான்னு கேட்டு விரட்டவேண்டியதாப் போச்சு!
சில சந்தேகங்களை மட்டும் உங்கள் முன் வைக்க ஆவல்.
1. பெயரை மாற்றுவதால் என்ன நடக்கிறது? (vibration அது இதுன்னு சொல்றாங்களோ?)
1. அந்த மாதிரி பெயரை மாற்றுவதால் (eg. sam -> sham ) என்ன ஆகிறது?
3. என் பெயரை மாற்றினாலாவது உச்சரிக்கப்படும் சத்தம் வேறுபடும். Murugan என்பதை Murugun என்று மாற்றுவதாக வைத்துக்கொண்டால், பழையபடி முருகன் என்றுதானே அந்த நபர் அழைக்கப்படுவார். பிறகு ஒலிமாற்றம் எப்படி ஏற்படும்? ஒலிமாற்றம் இல்லாவிட்டால் எழுத்துக்களை -spelling-யை மாற்றுவதால் என்ன பயன்?
4. முருகன் என்ற சாமியின் பெயரால் அழைக்கப்பட் வேண்டுமென்று பெயர் வைக்கப்பட்டு, பிறகு Murugun என்று அழைக்கப்பட்டால், அந்த முருகனின் மேலேயும் நம்பிக்கையில்லை; அவரையே ‘(ஏ)மாற்றி’ விடுகிறோம் என்று பொருளில்லையா?
5. ஒவ்வொரு எழுத்துக்கும் தனித்தனியே எண் மதிப்புகொடுத்தது எப்படி? (யாரோ ஒரு பிரான்ஸ் நாட்டு ‘மேதாவி’ கொடுத்ததாக ஒரு நண்பனும், இல்லை..இல்லை நம்ம சித்தர் ஒருத்தரு கொடுத்தார் என்று இன்னொருவனும் சொன்னார்கள்; எனக்குத் தெரியாது. ) யார் கொடுத்திருந்தாலும் ஏன் ஆங்கில மொழியைத் தேர்ந்தெடுத்தார்கள்? அப்படியானால் இந்த numerology-ன் மூலம் இங்கிலாந்தா?
6. உச்சரிப்பைப் பொருத்தே vibration இருக்கும். vibration-யைப் பொருத்து பலன்கள் இருக்கும் என்றால், எல்லோரும் ஒரே மாதிரியா உச்சரிக்கிறோம். என் பெயரே என்னென்ன பாடு படும் என்று எனக்குத்தான் தெரியும்! sam, sham, shiam, john, சாம், சாமி, - தொலைபேசியில் என் பெயரைச் சொல்லி அடுத்த முனையில் இருப்பவரைப் புரிய வைக்க நான் படும் பாடு எனக்குத்தான் தெரியும்!
7. ஆங்கிலமே தெரியாதவருக்கும், ஆங்கிலமே தெரியாத நாட்டில் இருப்பவர்களுக்கும் இந்த ஆங்கில மொழி சார்ந்த எண்கணிதம் எப்படி சரியாக இருக்கும்?
8. ஆங்கில முறையில் பெயரின் எழுத்துக்களை மாற்றினாலும் தமிழில் ஒரே மாதிரியாகவே உச்சரிக்கப்பட்டால் அதனால் என்ன வித்தியாசம் வரும்? பலன் என்ன மாறும்? சான்றாக, நம்ம முதல் அமைச்சர் தன் பெயரை ஆங்கிலத்தில் jeyalalithaa என்று மாற்றிக்கொண்டுள்ளார். ஆனால், jeyalalithaa என்று ஆங்கிலத்தில் சொல்வது போலவேதான் jeyalalitha என்ற பெயரையும் உச்சரிக்க முடியும். அப்படியானால் என்ன vibration changes வந்துவிடும்? பெயர் உச்சரிக்கப்படுவது ஒன்றாகவே இருப்பின், எதற்கு இந்த மாற்றம்?(இது 3-வது பாயிண்ட் மாதிரியே இருக்குல்ல? எட்டு என்றாலே இப்படித்தாங்க… இது எப்படி இருக்கு?)
9. எண்களுக்கு சில கணித மதிப்பு இதன் அடிப்படை விஷயம். இந்த கணித மதிப்புக்கு என்ன அடிப்படை? யார், எதற்காக, எப்படி, ஏன் இந்த மதிப்புகளை இந்த எழுத்துக்களுக்கு - ஆங்கில எழுத்துக்களுக்கு மட்டுமே - கொடுத்தார்கள்?
10. மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும்கூட ஒரு மாதிரி அட்ஜஸ்ட் செய்து முடிச்சு போட்டு விடலாம். ஆனால் இந்த பிறந்த தேதிக்கும், பெயரின் கூட்டல் கழித்தலுக்கும் என்ன தொடர்பு இருக்க முடியும்?

இன்னும் நிறைய கேள்விகள் இருக்கலாம்; தெரிந்தவர்கள் கேள்விகள் கேட்டு கேள்விகளின் எண்களைக்கூட்டினால், அந்தக் கூட்டுத்தொகை மாறுமல்லவா? அந்த மாற்றங்களுக்குத் தனிப் பலன்கள் உண்டு. அவைகளை நமது நிலைய ஜோதிடர் உங்களுக்கு ஒரு தாயத்துடனும், ஒரு தகடும் வைத்து அனுப்புவார். தாயத்தை அணிந்து கொண்டு, தகட்டை வீட்டில் ஏதாவது ஓரிடத்தில் புதைத்து வைத்தாலோ எல்லா அஷ்டதேவிகளும் உங்களைத்தேடி ஓடி வருவார்கள். வேண்டுவோர் இதை வாசித்த 9 நாட்களுக்குள் ரூபாய் 236.34 (பாத்தீங்களா- கூட்டுத்தொகை 9 வருதா…?) அனுப்பவும். தபால் செலவு தனி. வழக்கமாய் பின்னூட்டம் இடுபவர்களுக்கு 18% தள்ளுபடி உண்டு.







Pathivu Toolbar ©2005thamizmanam.com


Mar 30 2006 04:45 pm | சமூகம் |
27 Responses
nagarajan Says:
March 30th, 2006 at 5:29 pm
ஆயிரந்தான் சொல்லுங்க, இன்னமும் நிறைய பேர் ஜோசியத்தை நம்பிக்கிட்டுத் தானே இருக்காங்க. என்ன நாஞ்சொல்றது உண்மை தானுங்கலெ.

Suresh- Penathal Says:
March 30th, 2006 at 5:33 pm
பேச்சு மட்டும் எண் கணிதத்தை எதிர்க்கறது போல இருந்தாலும், இந்தப்பதிவு பற்றி ஒரு அனாலிஸிஸ்:

பதிவு எண்: 147 = கூட்டுத்தொகை 2

ஜோதிடம் தொடர் எண் 11 - கூட்டுத்தொகை 2.

பதிவிட்ட நேரம் அமெரிக்காவில் 29ஆம் தேதி - கூட்டுத்தொகை 2.

இப்படி எல்லாம் பாத்து பாத்துதான் செய்யரீங்களோ?

சதயம் Says:
March 30th, 2006 at 8:23 pm
நியூமராலஜி…அறிவியலா அல்லது பிதற்றலா என்கிற தர்க்கத்தை விட நியூமராலஜி பற்றிய எனது தெளிவுகளைப் பதிப்பிக்கலாம் என நினைக்கிறேன்.

‘உலகத்திலேயே மிக அழகான சொல் ஒருவருடைய பெயரே’ என்று யாரோ சொன்னதாக படித்தது,எனக்கு இன்றுவரை பிடித்த சிலவற்றில் ஒன்று. கணினிக்கு Machine language என்பதைப் போல ஒவ்வொரு மனிதனுக்கு பெயர் சூட்சுமமான ஒன்று என நினைக்கிறேன்.

சமஸ்க்ருதத்தில் ‘அஷரலஷா’ என்கிற நூலில் அட்சரங்கள்,எழுத்துக்களுக்கான ஒலி அளவுகள்,அதனால் விளையும் நன்மை தீமைகள் விளக்கப்பட்டுள்ளதாக படித்திருக்கிறேன்.(இந்நூல் பற்றி அறிந்தவர்கள் மேலும் விளக்கலாம்).

எழுத்துக்களின் கூட்டால் உண்டாகும் சப்தம் ‘மந்திரம்’ எனவும் நமது உடல் யந்திரமாக இயங்குவதாகவும் ஒரு கருத்துச் சொல்லப்படுகிறது.இந்த உடலுக்கு ஒத்திசைவான மந்திரங்களை(பெயர்) உச்சரிக்கும்போது யந்திரம்(உடல்) உருவேற்றப்படுவதாயும் அதன் தொடர்ச்சிதான் நன்மையும் தீமையும் என்பது ஒரு வாதம்.

தமிழில் அகத்தியரும்,வராகமிகிரரும் இதைப்பற்றிய ஆய்வு(!)க் கருத்துகளை கூறியிருப்பதாக கூறினாலும் 18ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ‘Cheiro’ என்பாரால் நாமகரணம் செய்யப்பட்டதே நியுமராலஜி.

எல்லாம் சரி..ஆங்கில எழுத்துக்களை ஏன் நியூமராலஜிக்கு பயன் படுத்த வேண்டுமென்கிற நியாயமான கேள்விக்கு கிடைத்த ஒரு சுவாரஸ்யமான சப்பைக் கட்டு என்னவென்றால்…”நமது 18 புராணங்களில் 9வது புராணமாகிய ‘பவிஷ்ய புராணம்’, கலியுகத்தில் வர்ணாசிரம தர்மங்கள் தலைகீழாய் போகும்,நான்கு வர்ணத்தாரும் தொழில் மாற்றங்களை காண்பர்.தொன்மையும் சிறப்பும் வாய்ந்த மொழிகள் அழியும்.”ஐம்.கலீம்.சௌக”எனும் ஆங்கில மொழியும் அதன் நாகரிகமும் பரவும்.தலைகீழாக தீபங்கள் எரியும்” எனக் கூறப்பட்டுள்ளதை அடிக்கோடிட்டு ஆங்கிலத்தில் நியூமராலஜி காலத்தின் கட்டாயமென்று வாதிடுகின்றனர்.

எது எப்படியோ என் பெயரை கையாளும் ஒவ்வொரு தருணத்திலும் பெயர்சூட்டிய என் பெற்றோரின் அன்பையும் கனிவையும்…எனக்கான அவர்களின் அர்ப்பணிப்பையும் உழைப்பையும் எண்ணியெண்னி நெகிழ்ந்து போகிறேன் என்கிற அந்தப் பலன் ஒன்றே எனக்குப் போதும்….

தருமி Says:
March 31st, 2006 at 11:38 am
நாய் வாலுன்னு சொல்றீங்களா, நாகராஜன்?

சுரேஷ்,
அப்போ எனக்கு ராசி எண் ரெண்டுன்னு சொல்றீங்களா? சரி இனிமே எல்லாமே ரெண்டு ரெண்டா பண்ணிடுவோம்.சுரேஷ்,
அப்போ எனக்கு ராசி எண் ரெண்டுன்னு சொல்றீங்களா? சரி இனிமே எல்லாமே ரெண்டு ரெண்டா பண்ணிடுவோம். - பாத்தீங்களா, பின்னூட்டம்கூட ரெண்டு…ஹி..ஹி

சம்மட்டி Says:
March 31st, 2006 at 12:05 pm
பெயரை மாத்துரதால எதாவது ஆதாயம் இருக்குமாங்கிறது சந்தேகம். ஆன சில பெயர்கள் அதை பலதடவை உச்சரிக்கப்பட்டு பெரிய வெற்றி பெற்றிருக்கிறது.

உதாரணத்துக்கு எடுத்துங்களே, நம்ம பில்கேட்ஸ் அண்ணாச்சி, வின்டோஸ்னு கணனி செயல் ஊக்கிய மொதமொதல்ல ஆரம்பிச்சப்ப DOS லேர்ந்து இயக்க ஆரம்பிச்சோம், அப்பல்லாம் , டாஸ் புராம்ட்ல (Prompt) win - ன்னு தட்டினால் வின்டோஸ் ன்னு படம்காட்டிட்டு தொடங்கும், இப்படியே நாம எல்லோரும் வின்டோஸ் version 1 லேர்ந்து 3.5 வரைக்கும் win win னு தட்டியதால என்னுமோ பிச்சிக்குட்டு win பண்ணிடுச்சி,

அது மட்டுமா, நம்ம அம்மா இருக்காங்களே அவுங்களையும் ஜெ. ஜெ இன்னு பத்திரிக்க காரங்க எ௯ழுதி தள்ளினாதால, என்னதான் ஜென்னு எழுதினாலும் உச்சரிக்கிரப்ப ஜே போட்டு போட்டு அவுங்க ஜெ . ஜெ இன்னு வெற்றி கண்டாங்க, இதல்லாம் பாத்த நம்ம விசு அண்ணாச்சியும் அரட்டை அரங்கம் டைட்டில win இன்னு போட்டு ஆரம்பிப்பாரு.

சில சொல்லுங்களுக்கு சத்தி இருக்கத்தான் செய்யிது, ஆனா மாத்தி வெச்சிக்கிட்டு ஜெயிக்கலாம்னு நிக்கரவுகல நெனெப்ப என்னத்த சொல்ல.

துளசி கோபால் Says:
March 31st, 2006 at 12:17 pm
ஏங்க தருமி,

பெயரை மாத்தி வச்சுக்கறதுக்குப் பதிலா இந்த பிறந்த தேதியை மாத்தி வச்சுக்கிட்டா நல்லா இருக்குமுல்லே?

இன்னும் கொஞ்சம் இளவயசா….. ஆஹா…..

இப்படிக்கு
Thulashee

கோபி Says:
March 31st, 2006 at 1:11 pm
ராசிக்கல், பெயர் மாற்றினால் தலையெழுத்து மாறிடுமா? - நேமாலஜி.. இன்னபிற ஆலஜிகள்(!) விசயத்தில் உங்கள் கருத்துதான் எனக்கும்.

எண் கணிதம் என்னைப் பொறுத்தவரை ஒரு கணித புதிர் விளையாட்டு போல. அதன் மூலம் கணிக்கப்பட்ட பலன்கள் - நிகழ்தகவு.

ஜாதகம் எழுதுவதும் கூட கணிதமும் வானவியலும் தொடர்புடையது. அதன் மூலம் கணிக்கப்பட்ட பலன்கள் - நிகழ்தகவு.

ஜாதகம் ஒரு வழிகாட்டி மட்டுமே (சாலையோர அறிவிப்புகள் மாதிரி - Just you can be aware of). பரிகாரங்கள் மூலமாய் ஜோதிட வியாபாரிகளுக்கு வேண்டுமானால் பலன் கிடைக்கலாம்.

சில ஜோதிட வியாபாரிகளை பார்த்து ஜோதிடத்தை தவறென்று சொல்வது, சில மத வியாபாரிகளை பார்த்து ஒரு மதத்தை தவறென்று சொல்வது போல.

Geetha Sambasivam Says:
March 31st, 2006 at 4:51 pm
A true jyothidam does not accept this type of peththalkal.This is only money making idea invented by somebody who was badly in need of money.

Geetha Sambasivam Says:
March 31st, 2006 at 4:53 pm
Thiruvalluvar “Ennum ezhuththum kannena thagum” enru chonnathu entha numerology padiyum cherathu.Avar chonnathu nam anrada vazhkaiku.

சிவா Says:
March 31st, 2006 at 5:28 pm
நம்ம நெருங்கிய நண்பர் பேரை மொத்தமா சம்மந்தமே இல்லாம (சட்டப்பூர்வமாகவே) மாத்திக்கிட்டார். ஆசையா சின்ன வயசுல இருந்தே கூப்பிட்ட பேர விட்டுடமுடியுமா என்ன? புது பேர பார்த்தாலே வேற எவனையோ பார்த்த மாதிரி இருக்கு. இன்னும் பழைய பேரு தான். மாத்தமுடியாது. ஏனோ! மக்களுக்கு ஒரு மோகம். மீடியாக்கள் மக்களை மேலும் முட்டாள்களாக்க காலையில் இருந்தே ஆரம்பித்து விடுகிறது ‘இன்றைய பலன்’ அப்படின்னு,….ம்ம்ம்

கார்த்திகேயன் Says:
April 1st, 2006 at 12:38 pm
தருமி, வாத்தியார் சொன்ன மாதிரி, இதெல்லாம் ஒரு வித ‘Distribution of wealth’-க்காக ஆரம்பிச்ச உட்டாலக்கடியோ என்ன எழவோ. கர்மம், கர்மம்…

தருமி Says:
April 2nd, 2006 at 12:19 am
சதயம், சம்மட்டி, நீங்க ரெண்டுபேருமே அந்தப் பக்கம் ஒரு அடி, இந்தப் பக்கம் ஒரு அடி அப்டிங்கிறது மாதிரி போடுறீங்க. ஆனா முடிவா எந்தப் பக்கம் நிக்கிறீங்க அப்டிங்கிறது கொஞ்சம் தடுமாற்றமாவே இருக்கு - especially சம்மட்டி

சதயம் உங்க பேரைப்பற்றி சொன்னதால ஒரு சந்தேகம்: உங்கள் பெயரின் பொருள் என்ன?

தருமி Says:
April 2nd, 2006 at 2:36 pm
துளசி,
பிறந்த வருஷம்னு சொல்லுங்க
“இப்படிக்கு
Thulashee”// - இதென்ன உங்க பேருக்கு இப்படி ஒரு spelling : எண்கணிதம்தானா…?

தருமி Says:
April 2nd, 2006 at 2:41 pm
கோபி,
உங்க கருத்தும் எனக்குப் பிடிபடவில்லை. ஜோதிடம் உண்மை. எண்கணிதம் தவறு அப்டிங்கிறீங்களா?

தருமி Says:
April 2nd, 2006 at 2:43 pm
Geetha Sambasivam,
“..true jyothidam ..” - அதாங்க, அந்த ‘உண்மையான’ ஜோதிடம் என்னன்னுதான் கேட்டுக்கிட்டே இருக்கேன்.

தருமி Says:
April 2nd, 2006 at 2:48 pm
சிவா,
அந்த நண்பர் இப்போ பயங்கர ஆளா மாறிட்டேன்னு சொல்றாரா…இல்ல இன்னும் ‘தெறமை’யான எண் கணித நிபுணர்கள தேடிக்கிட்டே இருக்காரா?

தருமி Says:
April 2nd, 2006 at 2:50 pm
கார்த்திகேயன்,
அந்த ‘வாத்தியார்’ யாருன்னு தெரியலையே..

சதயம் Says:
April 2nd, 2006 at 3:45 pm
சதயம் என்பது நான் பிறந்த நட்சத்திரம் .ராஜராஜ சோழன் கூட இந்த நட்சத்திரத்துலதான் பிறந்தாராம்.

(ரொம்பத்தான் நெனப்புன்னு மனசுக்குள்ள நீங்க சொல்றது நல்லாவே கேக்குது )

கோபி Says:
April 2nd, 2006 at 4:21 pm
//உங்க கருத்தும் எனக்குப் பிடிபடவில்லை. ஜோதிடம் உண்மை. எண்கணிதம் தவறு அப்டிங்கிறீங்களா?//

என் எண்ணத்தில் ஜாதகம் கணிப்பதும் எண் கணிதமும் கலைகள்.

ஜாதகம் கணிப்பதிலும் எண் கணிதத்திலும் வானவியலும் கணிதமும் (கணிப்பதற்கு) அறுதியிட்டு கூறப்பட்ட விதிமுறைகளும் உள்ளன. கணிக்கும் முறையில் சில வேறுபாடுகள் உள்ளன (திருக்கணிதம், சுத்த வாக்கியம்)

பலன்களும் குறிப்பிட்ட விதிமுறைகளுக்குட்பட்டே சொல்லப்படுகின்றன. எண்கணிதப் பலன்கள் எளிதானவை. துல்லியமானவை அல்ல. ஜாதகப் பலன்கள் துல்லியமானவை பல்வேறு Permutations and combinations கொண்டவை.

இவை இரண்டும் சாலையோர அறிவிப்புகள் மாதிரி - Just one can be aware of what may happen. It can not be changed through changing the Name or “பரிகாரங்கள்”.

உண்மை/தவறு என்பதை உங்கள் நம்பிக்கைக்கே விட்டுவிடுகிறேன்.

துளசி கோபால் Says:
April 3rd, 2006 at 1:43 am
தருமி,

இப்படி ஸ்பெல்லிங் மாத்திப் போட்டா அதிர்ஷ்டம் வந்துராதா….ன்ன்ற நப்பாசைதான்.

எனக்கு இந்த வருஷம்( பொறந்த வருஷங்க) விஷயத்துலே மட்டும் ‘லாங் டைம் மெமரி லாஸ்’
முயன்று பார்த்தாலும் ரெக்கவர் பண்ண முடியலை

தருமி Says:
April 4th, 2006 at 3:09 pm
நன்றி கோபி.

துளசி,
எனக்கு ஞாபகம் வந்திருச்சே…நீங்க பொறந்த வருஷம் 1943 தானே !!!!!!!!!

துளசி கோபால் Says:
April 8th, 2006 at 2:19 am
தருமி கணக்குலே இவ்வளோ வீக்கா? ஒரு 40 ஐக் கூட்டிக்கணும். இருங்க அடுத்தமுறை அங்கெ வர்றப்ப இருக்கு.

கார்த்திகேயன் Says:
April 8th, 2006 at 10:00 am
வாத்தியார் நம்ம விஞ்ஞானி ‘ரங்கராஜர்’தான் . ‘சுஜாதா’ன்னு கூட எழுத்துலகுல சொல்லுவாங்களே அவரு..

ஞானவெட்டியான் Says:
April 8th, 2006 at 10:00 am
அன்பு சதயம்,
//”ஐம்.கலீம்.சௌக”//
ஆங்கிலமா? புதியதாயுள்ளதே!

அன்பு சம்மட்டிக்கு,
//இப்படியே நாம எல்லோரும் வின்டோஸ் version 1 லேர்ந்து 3.5 வரைக்கும் win win னு தட்டியதால என்னுமோ பிச்சிக்குட்டு win பண்ணிடுச்சி,//
நானும் படிக்கும்போது “WIN,WIN” ்னு சொல்லியோ, எழுதி இருந்தாலோ இன்னும் அதிகமாகப் படித்து செல்வந்தனாகி இருக்கலாம் போலுள்ளதே!

அன்பு கோபி,

//ஜாதகம் ஒரு வழிகாட்டி மட்டுமே (சாலையோர அறிவிப்புகள் மாதிரி - Just you can be aware of). பரிகாரங்கள் மூலமாய் ஜோதிட வியாபாரிகளுக்கு வேண்டுமானால் பலன் கிடைக்கலாம்.

சில ஜோதிட வியாபாரிகளை பார்த்து ஜோதிடத்தை தவறென்று சொல்வது, சில மத வியாபாரிகளை பார்த்து ஒரு மதத்தை தவறென்று சொல்வது போல. //

சோதிடம் சோதித்து திடம் அடைவதற்கே! அது ஒரு கை விளக்கு. இரவில் நடக்கும்போது குழி எங்கே உள்ளது? எனத்தெரிந்து ஒதுங்கிச் செல்லவே! பரிகாரம் செய்யவேண்டுமெனச் சொல்லும் சோதிடர்களை புறந்தள்ளிப் பரிகசியுங்கள்.

அன்பு தருமி,

//“..true jyothidam ..” - அதாங்க, அந்த ‘உண்மையான’ ஜோதிடம் என்னன்னுதான் கேட்டுக்கிட்டே இருக்கேன்.//

எந்த சோதிடனிடம் நீங்கள் ஏமாறவில்லையோ, அந்த சோதிடம்தான் உண்மையான சோதிடம்.

மகேஸ் Says:
April 8th, 2006 at 10:31 pm
ஏனக்கு முதலில் வீட்டில் வைத்த பெயர் மகேஸ்பாபு.
பள்ளியில் பெயர் சேர்க்கும் போது மகேந்திரன் ஆனது. ஆனால் வீட்டில் மகேஸ் என்று அழைக்கின்றனர். நண்பர்கள் என்னை அழைப்பது மகேந்திரன், சில பேர் மகி, ஓரிருவர் ‘மாணா’.
என்னை நான் யாரிடமும் அறிமுகப்படுத்திக் கொள்ளும் போது என் பெயரை நான் சொல்வது ‘மகேந்ரா’ என்று.
இப்படிப் பல பெயர்கள். என் திருமண அழைப்பிதழில் என்ன பெயர் போடுவது என்று ஒரு குழப்பம் வரும் என் நினைக்கிறேன்.

தருமி Says:
April 9th, 2006 at 12:10 am
மகேஷ் aka மகேஷ்பாபு aka மகேந்திரன் aka மகி aka மாணா aka ??? aka

- எப்படியோ திருமண அழைப்பிதழில் என்ன இருந்தாலென்ன? திருமண வாழ்வு குழப்பமில்லா தெளிந்த நீரோடையாக இருக்க வாழ்த்துக்கள்.

மகேஸ் Says:
April 9th, 2006 at 1:32 am
வாழத்துகளுக்கு நன்றி திரு.தருமி அவர்களே. திருமணம் நிச்சயம் ஆனவுடன் சொல்கிறேன். நீங்கள் மதுரையா? நான் ராமநாதபுரம்.