Friday, July 20, 2007

230. டைட்டானிக்கில் தனலச்சுமி ...

மக்கள்ஸ் ... எல்லோரும் இன்புற்றிருப்பதன்றி வேறொன்றுமறியேன்.



ENZZZOY .............

ஒரே ஒரு க்ளிக்கில் ... தமிழ்ப் பட உலகிலேயே அதிக செலவில் தயாரான, ப்ரமாண்டமான மிகச் சிறந்த காதல் திரைக்காவியம் காண வாரீர் ...

காணத்தவறாதீர்கள்.

பார்த்தபின் மீண்டும் இங்கு வந்து அட்டென்டன்ஸ் கொடுக்க மறந்து விடாதீர்கள்.

நன்றி.



சுபம்.

Wednesday, July 18, 2007

229. A LETTER TO (THE HINDU) EDITOR

வழக்கமாக எழுதி அனுப்பப்படும் கடிதங்களின் கூர்மையைச் சிறிது மழுங்கடித்து (read 'edited') அதன் பின்பே என் சில கடிதங்கள் பதிப்பிற்கு ஏற்றுக் கொள்ளப் பட்டதே இந்து தினசரியைப் பொறுத்தவரை என் முந்திய அனுபவங்கள். நன்றாகவே எடிட் செய்யப் படுவதைப் பார்த்து வியந்ததுண்டு. ஆனால் இம்முறையோ என் கடிதம் மழுங்கடிப்படுவதற்குப் பதில் மேலும் 'கூர்மை"யாக்கப் பட்டிருப்பதைப் பார்த்து ஆச்சரியம்.

இந்துவிற்கு நான் அனுப்பிய என் கடிதத்தில் நான் குறிப்பிடாத "அடிப்படைவாதிகள்' (fundamentalists) என்று ஒரு சொல்லாடலைச் சேர்த்து என் கடிதம் இன்று (18th July,'07)பிரசுரிக்கப் பட்டுள்ளது. அதற்கு இங்கே என் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். (வேறென்ன செய்ய முடியும்?) அதோடு நான் அனுப்பிய ஒரிஜினல் கடிதத்தை இங்கு பதிவிடுகிறேன்.


Sir,

For his article "Debate or denial: the Muslim Dilemma" in your columns on 17th July,'07 Hasan Suroor deserves great appreciation for calling a spade a spade. Especially in the last paragraph of the article he has encapsulated what every Muslim of this day should understand and adhere. But the big question is whether Muslims in general and the Muslim zealots in specific would accept that "When Islam was in its infancy and battling against non-believers violence was deemed legitimate…" but NOT NOW.

The problem arises when people insist that the "words" given by god should not even be interpreted, leave alone be changed.

Wish we get more level headed people among our all religious brethren.

-------------------------------------------------------------------

இஸ்லாம் பற்றிய விவாதங்களும், மறுப்புகளும் என்ற தலைப்பில் எழுதியுள்ள ஹசன் சாரூர் 'இந்து'வில் வழக்கமாக எழுதும் ஒரு இஸ்லாமிய எழுத்தாளர். இக்கட்டுரையில், ஒரு இஸ்லாமியர் இன்றைய சூழலில் எவ்வாறு தன் மதத்தைப் பற்றிய புரிதல் கொள்ள வேண்டும் ஒரு புதிய பார்வையைக் கொடுத்துள்ளார். மறுப்புகளை விடவும் விவாதங்கள் புதிய பாதையில் எப்படித் தொடரவேண்டும் என்று கூறியுள்ளார்.

அக்கட்டுரையில் எனக்குப் பிடித்த அந்த கடைசிப் பத்தியை மட்டும் இங்கு இடுகிறேன்:

Let’s face it; there are verses in the Koran that justify violence. The “hard truth that Islam does permit the use of violence,” as Mr. Butt* points out, must be recognised by Muslims. When Islam was in its infancy and battling against non-believers violence was deemed legitimate to put them down. Today, when it is the world’s second largest religion with more than one billion followers around the world and still growing that context has lost its relevance. Yet, jihadi groups, pursuing their madcap scheme of establishing Dar-ul-Islam (the Land of Islam), are using these passages to incite impressionable Muslim youths. Yet there is no sign of a debate in the community beyond easy platitudes, and it remains in denial.

(கோடிட்ட பகுதி என் கடிதத்தில் மேற்கோளிடப்பட்டது.)

*Hasaan Butt is a reformed British extremist,quoted much in this article.

Saturday, July 14, 2007

228. தொடரும் அநியாயங்கள் - இடப் பங்கீடு

சென்ற ஆண்டு ஏறத்தாழ இதே நேரத்தில் (06.06.2006) நான் இடப் பங்கீடு பற்றி எழுதிய ஒரு கட்டுரையில் U.P.S.C. தன் தேர்வு முறைகளில் நடத்தும் அநியாயங்கள் பற்றிக் குறிப்பிட்டிருந்தேன். அதே சமயத்தில் ஷரத் யாதவ் இந்துவில் எழுதிருந்த ஒரு நடுப்பக்கக் கட்டுரையையும் பதிவிட்டிருந்தேன். U.P.S.C. தேர்வுகளில் உயர் மதிப்பெண் எடுத்துத் தேர்வுபெறும் O.B.C., S.C.,/S.T. -களை O.C. quota-வில் காண்பிக்காது விட்டு,(இது முறைகேடானது என்று உச்ச நீதிமன்றம் கட்டளையிட்டும்) இடப்பங்கீட்டு மோசடி செய்துவந்ததை எழுதியிருந்தேன். இந்த ஆண்டும் தேர்வாளர்கள் தங்கள் திறமையை மீண்டும் அரங்கேற்றியுள்ளார்கள். அதனை எதித்து சென்னை உயர்நீதி மன்றத்தில் பொதுநல வழக்கொன்று பதியப்பட்டுள்ளது.

நீங்கள் ஆண்டுதோறும் இப்படி வழக்கு போட்டுக்கொண்டேயிருங்கள்;நாங்கள் எங்கள் மோசடியைத் தொடர்ந்து நடத்திக்கொண்டேயிருப்போம் என்ற நிலை நீடிக்கும்போது நம் சட்டங்கள், சட்டங்களின் காவலான நீதிமன்றங்கள், நீதியை நிலைநாட்ட வேண்டிய அரசு என்று அத்தனை துறைகள் மீதும் நம்பிக்கையில்லாமல் போய்விடுகிறது. எல்லாமே 'அவர்கள்' கையில்; இதில் நாமென்ன செய்ய முடியும் என்ற கையறு நிலைக்குத்தான் வரவேண்டியதுள்ளது. சமூகநீதிக்குப் போராடுவதாகக் கூறும் அரசியல், சமூகக் கட்சிகளாவது இந்த தொடரும் அநியாயங்களுக்கு எதிர்க்குரல் கொடுக்கக் கூடாதா? இந்த தொடரும் அநியாயங்களை யாரும் நிறுத்தவே முடியாதா?

இந்த வழக்கு பற்றிய இன்றைய (14.07.2007) இந்துவில் வந்துள்ள செய்தி:

The petitioners contended that the UPSC continued to flout the Centre’s directives and the Supreme Court rulings, besides the constitutional provisions, by not including successful candidates from reserved categories in the open category.

The petitions said nearly 60 candidates belonging to the open category were unlawfully included in the merit list.

06.06.2006 அன்று நானெழுதிய பதிவில் வழக்கறிஞர் திரு. ப்ரபு ராஜதுரை அளித்திருந்த பின்னூட்டம்:

PRABHU RAJADURAI said…

உங்களில் யாரும் இதை அறிந்திருக்கிறீர்களா என்பது தெரியாது. மண்டல் கமிஷன் பரிந்துரையினை ஏற்று மத்திய அரசு பணிகளிலும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இட ஒதுக்கீடு ஏற்பட்ட பிறகு, இட ஒதுக்கீட்டினையே கேலிக்குறியதாக்கும் ஒரு மோசடி நடைபெற்றது. அதாவது, தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் அவர்கள் எவ்வளவு மதிப்பெண் பெற்றாலும் அவர்களை பொது வகுப்பில் தேர்ந்தெடுக்காமல் ஒதுக்கீட்டு பிரிவிலேயே தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். இதன் விளைவு தாழ்த்தப்பட்டவர், பிற்படுத்தப்பட்டவருக்கான ஐம்பது சதவீதம் போக மீதி ஐம்பது சதவீதம் இவர்கள் அல்லாத முற்படுத்தப்பட்டவர்களுக்காக ஒதுக்கப்பட்டது.

இப்படி நடக்க முடியுமா என்று யாருக்கேனும் சந்தேகம் ஏற்பட்டால், இத்தகைய ஒரு செயலை எதிர்த்து, எனது நண்பர் சென்னையிலுள்ள மத்திய நிர்வாக தீர்ப்பாயத்தில் (CAT)ஒரு வழக்கு தொடர்ந்து அதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்ட முழு விபரத்தினையும் தர முடியும். வேடிக்கை என்னவென்றால், இந்த தீர்ப்பினை எதிர்த்து மத்திய அரசு உச்ச நீதிமன்றம் சென்றது. உச்ச நீதிமன்றம் அந்த வழக்கினை எடுத்த எடுப்பிலேயே தள்ளுபடி செய்தது வேறு விஷயம்.



இந்துவில் வந்திருந்த ஷரத் யாதவ் எழுதிய கட்டுரையை 09.07.2006-ல் பதிப்பித்திருந்தேன்.அதில் இது தொடர்பான பகுதி மீண்டும் இங்கே ...


...but the UPSC has continued to deny meritorious candidates of reserved categories the right to join the civil services as general category candidates.


People controlling the UPSC and DoPT are so strongly motivated against the candidates of reserved categories that they can go to any extent in their adventure to block the entry of reserved categories in the civil services.

Friday, July 06, 2007

227. யாரைத்தான் நொந்து கொள்வதோ... ? 4

உங்களின் பொறுமைக்கும் ஓர் எல்லை உண்டு என்பது தெரியும்; அதனால் இன்னும் அதிகமாக சோதிக்காமல் இந்தப் பதிவோடு 'யாரைத்தான் நொந்து கொள்வதோ... ? ' என்ற இந்த மெகாசீரியலை முடித்துக் கொள்கிறேன்; சரியா?!

மனசுதான் முக்கியம் அப்டின்னு நாம பொதுவா சொல்றதுண்டு. அதுமாதிரிதாங்க .. எங்க ஊர்ல நிர்வாகம் ஒரு நல்ல காரியம் ஒண்ணு பண்ணணும்னு நினச்சாங்க. அதாவது மதுரையில் ஒரு பெரிய ஆறு - வைகைன்னு பேரு - இருக்கா. அதில எப்பவாவது வெள்ளம் - அதாங்க, ரொம்ப தண்ணி வருமே அதுதான் - வந்திச்சின்னா மக்கள் கஷ்டப் படுவாங்களே அப்டின்னு ஒரு எண்ணம்; அதோடு, விட்டா மதுரக்காரங்க ஆற்றோரம் எல்லாம் மெல்ல மெல்ல ஆக்கிரமிப்பு பண்ணி, பேருக்கு கூட வைகை இல்லாம் பண்ணிடுவாங்க அப்டிங்கிற உண்மையான பயத்தில வைகைக் கரையின் இரு பக்கமும் ரோடு போட்டுட்டா, நதியைக் காப்பாத்திடலாம் அப்டிங்கிற நல்லெண்ணத்தில இரு பக்கமும் உயரமா கரையை உயர்த்தி அழகா ரோடு போட்டாங்க.

ஆனா பாருங்க, ஆற்றின் தென்கரையில் நெடுக போட்ட சாலை ஒரு இடத்தில மட்டும் நடுவில நின்னு போச்சு. இப்ப, இங்க ஒரு சேஞ்சுக்கு கோவில் இல்லை, அதுக்குப் பதிலாக ஒரு பெரிய பள்ளிக் கூடம் கரையோரம் உயர்ந்து நின்னுது. ஆக்கிரமிப்புகளை நீக்கும் நேரத்தில் எந்த நேரமும் ஆற்றுக்குள் நீட்டிக் கொண்டிருக்கும் அந்தப் பள்ளி இடிக்கப் படும் என்ற நிலை. ஆனா விஷயம் அறிஞ்ச சிலர் சொன்னாங்க.. அதெல்லாம் அந்தப் பள்ளிக்கூடத்துக்காரருக்கு முன்னால் அதெல்லாம் நடக்க முடியாது அப்டின்னாங்க; அவரு அவ்வளவு பேமஸான ஆளு அப்டின்னாங்க; நமக்கு என்ன தெரியும்? அது மாதிரியே இன்னும் அந்தப் பள்ளிக்கூடம் ஆற்றின் கரையோரம் நிலச்சு நிக்குது, ஆற்றோர சாலை அப்படியே துண்டு துண்டா ரெண்டுபக்கமும் நிக்குது. ஒரு தனி மனிதனின் செல்வாக்கு மொத்த ஊர் மக்களின் நன்மைக்கு எதிரா இருந்து வெற்றி கொடி நட்டுரிச்சி. இது தென்கரையோர சாலையின் கதை. இது என்ன பெரிய விஷயமா அப்டின்றவங்களுக்கு அடுத்த சாலையின் கதை நிச்சயமா இன்னும் கொஞ்சம் interesting -ஆ இருக்கும் அப்டின்னு சொல்லிக்கிறேன்.



தெரியுதுங்களா .. இதுதான் வைகையின் தென்கரை நெடுக போடப் பட்டுள்ள ரோடு. இடது பக்கம் பச்சையா தெரியறதுதான் எங்க வைகை. தண்ணீர் இருந்தா வெள்ளையா தெரியும்; இல்லைன்னா இப்படி கருவேல புதர்கள்தானே தெரியும். என்ன இவ்வளவு பெரிய ரோடு போட்டிருக்காங்க ... ஆனா போக்குவரத்து, வண்டிகள் அது இதுன்னு எதுவுமே இல்லையேன்னு பாக்றீங்களா? அது எப்படி வண்டிகள் போக்கு வரத்து இருக்க முடியும்? அடுத்த படம் பாருங்க ...






வரப்போற மேம்பாலத்திற்காக கட்டப்பட்டுள்ள பெருந்தூணைத்தான் பாக்றீங்க... என்ன இது ரோடுமேல இருக்கேன்னு பாக்கிறீங்களா? எனக்கும் அதுதாங்க புரியலை. ரோடு போட்டும் ரொம்ப வருஷமாயிடலை. இப்போதான் போட்டாங்க. அதனால போடும்போதே இங்கே ஒரு பாலம் வரும்; அதுக்கு தூண்கள் வரும் என்று எல்லாம் தெரிஞ்சிருக்கும்; தெரிஞ்சிருக்கணும். ஆனா அரசு இயந்திரங்கள் ஒன்றோடு ஒன்றுக்கும் அப்படி ஒரு இணைவு. ஏன் இப்படி என்று கேட்டால் வைகை ரோடு நகராட்சி போட்டது; பாலம் போடுறது நெடுஞ்சாலைத் துறைன்னு பதில் வருகிறது. எப்படி ஒரு coordination! இப்போ போட்ட ரோடு நம்ம காசை மட்டும் விழுங்கிட்டு எனக்கென்னன்னு நிக்குது .. இல்ல ... படுத்திருக்குது!

எனக்கு ஒரு கார்ட்டூன் நினைவுக்கு வருது. தலைப்பு: TEAM WORK !


Image and video hosting by TinyPic

இங்கிலாந்துக்கும், பிரான்ஸுக்கும் இடையில் கடலுக்கடியில் ஒரு சாலை அமைத்துள்ளார்கள். இதில் ஒரு பாதியை ஆங்கிலேயர்கள் அவர்கள் நாட்டு கடலுக்கடியிலும், அதே போல் பிரான்ஸ்காரர்கள் அவர்கள் பாதியை அவர்கள் நாட்டு கடலுக்கடியிலும் தோண்டினார்களாம். இறுதியில் இரண்டு பகுதியும் இணையும்போது மிக மிகச் சரியாக இரு சாலைகளும் கடலுக்கடியில் ஒன்றோடொன்று சேர்ந்தனவாம். ம்..ம்ம்.. நம் நாட்டுல இப்படி ஒண்ணு நடந்தா என்ன ஆகியிருக்கும்னு தெரியலையே ..?

Monday, July 02, 2007

226. மதுரைத் தேர்தல் துளிகள்

ஆளே ரொம்ப நாளா காணாம போயிருந்தாலும் வந்ததும் சுடச் சுட ரெண்டு பதிவு போட்டிருக்கிற தமிழினி தன் பதிவில் சொல்லியிருந்த ஒரு 'வசனம்' இது:
//கைநீட்டீ காசை வாங்கிட்டா சரியா குத்திடறான்.பண விஷயத்தில் துரோகம் செய்ய தமிழன் நினைக்கறதேயில்லை//

இதப் படிச்சதும் நம்ம நேரடி அனுபவத்தைச் சொல்லணும்னு நினப்பு வந்திருச்சி. தேர்தலுக்கு சில நாட்களுக்கு முன்பே இந்த காசு விவகாரம் தெரிய ஆரம்பிச்சது. மொதல்ல சொன்ன ரேட்டு 500 ரூபாய்தான். ரெண்டு பெரிய கட்சி பெயரையும் சொல்லியிருக்காங்க தங்கமணிட்ட படிக்கிற பசங்க. தங்கமணி வேலை பார்க்கிற பள்ளிக்கூடம் மதுரை மேற்குத் தொகுதியின் முக்கிய இடத்தில் இருக்கிறது. நாள் நெருங்க நெருங்க பணம் குடுக்கிறதில் ஆளும் கட்சியின் பெயர் மட்டுமே வந்தது. தங்கமணியுடன் வேலைபார்க்கும் ஒருவரே சொன்னாராம் அவங்க வீட்டுக்கு ரூபாய் 1500 பட்டுவாடா செய்யப் பட்டது என்று. பிக்ஸ் பண்ணினது ரூபாய் 2000; அதில் 'நெல்லுக்கு பாயும் நீர் புசியுமாமே அங்கே உள்ள புல்லுக்கும்' என்ற தத்துவத்தில் 1500 மட்டுமே இறுதியாகக் கொடுக்கப் பட்டது என்ற பேச்சும் இருந்தது.

எஸ். எஸ். காலனின்னு இன்னொரு பகுதி. அங்கிருக்கும் ஒரு நண்பர் சொன்னது: 'எங்க ஏரியாவில் யாரும் பணம் கொடுக்கக் கூடாதுன்னு சொல்லி விட்டோம்.' முதல்ல சொன்னது கொஞ்சம் ஏழைபாழைங்க இருக்கிற இடம்; இரண்டாவது மிடில்க்ளாஸ் & வசதிப் பட்டவங்க இருக்கிற இடம். பரவாயில்லையேன்னு நினச்சுக்கிட்டேன்.

காசு கொடுக்கிறதுக்கும் கட்சிகளுக்குள் ஒரு அக்ரிமென்ட் போட்டுக்கிட்டது மாதிரி முதல் சொன்ன பகுதியை ஆளுங்கட்சி எடுத்துக் கொண்டதாகவும், வேறு சில ஏரியாக்களை அடுத்த கட்சி தத்து எடுத்துக் கொண்டதாகவும், முதலில் இரு பெருங்கட்சிகளுக்கும் பணம் கொடுப்பதில் போட்டி இருந்தாலும் பின்னால் எதிர்க்கட்சி போட்டியில் பின் தங்கிவிட்டது / காசை அவர்களே வைத்துக் கொண்டார்கள் என்று பேச்சும் வந்தது.

தேர்தலுக்கு முந்திய நாள் பழக்கப்பட்ட ஆட்டோகாரர் தன் குடும்பத்துக்கும் மொத்தமா 1500 வந்ததாகச் சொன்னார். நான் ரொம்ப மேதாவித்தனமா, கொடுத்ததை வாங்கிகிட்டு ஓட்டை மாற்றிப் போட்டுவிட வேண்டியதுதானே என்றேன். அது சரியில்லை என்றார்.

"காசு கொடுக்கிறவங்களை அப்படித்தான் தண்டிக்கணும்; அப்பதான் அடுத்ததடவை காசு யாரும் கொடுக்க மாட்டாங்க".

"இல்ல சார், அது தப்பு".

"காசு கொடுக்கிறது தப்பு இல்லையா?", என்றேன்.

"காசு வாங்குறதும் தப்புதானே!", என்றார் பதிலடியாக.

அவரின் நியாய உணர்ச்சியும், அதனால் வாங்குன காசுக்கு ஓட்டு போட்டே ஆகணும் அப்டிங்கிற உணர்ச்சியையும் பார்த்து, எனக்குப் பேசுவதற்கு ஒன்றுமில்லாமல் நின்றேன்.

அதன்பிறகு அவரே சொன்னார்: "நீங்க சொல்றது மாதிரியும் சில பேர் சொல்றாங்க; அதிலேயும் அந்த மாதிரி சொல்றவங்க, அவனுக்கும் வேண்டாம்; இவனுக்கும் வேண்டாம்; விஜயகாந்த கட்சிக்கு போடலாம்'னு சொல்றாங்க. பார்ப்போம் என்ன ஆகுதுன்னு" என்றார்.

இந்த நியாய உணர்வின் தாக்கமே 75 விழுக்காடு ஓட்டு விழுந்ததற்கும், விஜயகாந்த் கட்சிக்கு இந்த அளவு ஓட்டு விழுந்ததற்கும் உரிய காரணங்களாக இருக்கலாம். என்னென்னமோ நடக்குதுங்க அரசியலில்.

வாழ்க ஜனநாயகம்!