Thursday, December 31, 2015

881. டயரி

மதுக்கடைக்காக ஒரு மரணம்
மதுக்கடை எதிர்த்து மறியல்கள்

மழை ...
மழை ...

பெரு மழை ...
பயங்கரப் பெருமழை

வெள்ளம்
தவிப்பு

தன்னார்வலர்களுக்குப் பாராட்டுகள்
ஸ்டிக்கர்ளும் ஒட்டியாச்சே

பீப் பாட்டு
அவங்க அம்மா...சகோதரிகள் படும் பாடு

இ.ராஜாவிடம் முட்டாள் தனமான கேள்வி
மாறி மாறி சாடல்கள்

த்தூ ....
த்தூ ....

அதிமுக பொதுக்குழு
ஊரெல்லாம் போஸ்டர்

வாழ வைத்த் மாண்புமிகு அம்மா 
உறவில்லாமல் வைத்த ஒப்பாரி (வே.ந.க்கு நன்றி)


எல்லாம் (2015) ஆண்டு  முடிந்தது.
தேர்தல் ஆண்டும் பிறந்தது

****

புத்தாண்டிற்கு  அனைவருக்கும் வாழ்த்துகள் ........


       *

Tuesday, December 22, 2015

880. I.S.L. 2015 ... 7 அடுத்த I.S.L






*

இது ஒருபுது யுகம். கிரிக்கெட் மட்டுமே கோலோச்சிக்கொண்டிருந்த நம்மூரில் புதியதாகத் தோன்றியுள்ள லீக் ஆட்டங்கள் புதிய விளையாட்டுகளையும் அதன் வீரர்களையும் மக்களிடையே பிரபலமாக்கிக் கொண்டு வருகின்றன. கபடி விளையாட்டும் தொலைக் காட்சியில் வரும்போது புதியதாக பலரும் விளையாட்டு ஆர்வலர்களாக ஆவதைக் காண முடிகிறது.

நான் பார்த்த ஒரு பெரிய மாற்றம்.... பலரும் விளையாட்டின் மீது புது ஆர்வம் காண்பிக்கிறார்கள். வயசான பலரும் shuttle cock விளையாடுவதும், இளைஞர்கள் அதுவும் சின்னப் பசங்க கால்பந்து விளையாடுவதும் சாதாரணமாகக் காணக்கூடிய காட்சியாகி விட்டது.  பெரும் மகிழ்ச்சி. கால்பந்து விளையாட்டிற்குக் காரணம் I.S.L. போட்டிகள் என்றால் மிகையில்லை.

கால்பந்து போட்டிகள் இவ்வளவு தீவிரமாகப் பரவ காரணமாயிருந்தவர்களுக்கு பெருத்த நன்றியும் வணக்கமும்.
திருமதி நிடி அம்பானி
ஹீரோ கம்பெனி
மற்றும் பல ஆதரவாளர்கள்....

.... இவர்களோடு மிக மிக முக்கியமாக நமது கிரிக்கெட் வீரர்கள் - selling coal in New Castle என்பதற்கு எதிர்ப்பதமாக இவர்கள் வினையாற்றியிருக்கிறார்கள். அவர்கள் விளையாட்டு இந்த அளவு பிரபலமாக இருக்கும் போது அவர்களே அடுத்த ஒரு விளையாட்டை ‘வாங்கி’ அதனைப் பிரபலப்படுத்துகிறார்கள். நிச்சயம் அவர்களை மனதாரப் பாராட்டுகிறேன். I.S.L-ல் அவர்களின் பங்களிப்பும், ஈடுபாடும் பலரையும் இந்த விளையாட்டின் மீதும் ஆர்வம் கொள்ள வைத்திருக்கும் என்பதில் ஐயமில்லை.

கிரிக்கெட் வீரர்களோடு, நடிகர்களும் இதில் கலந்து கொண்டது பெரும் வீச்சை கால்பந்து விளையாட்டிற்குக் கொடுத்துள்ளது. Celebrity Cricket என்பது போல் celebrity foot ball என்றும் ஒன்று ஆரம்பித்தார்கள் என்று வைத்துக் கொள்வோம். அடடா ... கால்பந்து விளையாட்டு எங்கோ போய் விடும்! நடிகர்களை வைத்து ஒரு போட்டியை யாராவது ஆரம்பயுங்களேன் ... ப்ளீஸ்.

மேற்சொன்ன அனைவருக்கும் ஒரு கால்பந்து ரசிகனான எனது பணிவான நன்றியும், வணக்கங்களும், பாராட்டும்.


இன்னும் சில சிந்தனைகள்:

நிச்சயமாக I.S.L, 3 அடுத்த ஆண்டு நடக்கும். இப்போதுள்ள நியதிப் படி ஒவ்வொரு அணியிலும் 6 இந்திய விளையாட்டு வீரர்கள் இருக்க வேண்டும். அதைக் கொஞ்சம் மாற்றினால் இன்னும் ‘சூடு’ பிடிக்கும்.

6 இந்திய விளையாட்டு வீரர்கள் என்பதை 3 + 3 என்றாக்கலாம். அதாவது 6 இந்திய வீரர்கள் என்பதைவிட எந்த மாநிலத்தின் பெயரில் அணி இருக்கிறதோ அந்த மாநில வீரர்கள் மூவரும், மீதி மூவர் மற்ற மாநிலங்களிலும் இருக்கலாம். இன்னும் மூன்று பேர் வெளிநாட்டுக்காரர்களாக இருக்கலாம். ஆக விளையாடும் போது 3 மாநில வீரர்கள் + 3 வேற்று மாநில வீரர்கள் + 3 வெளிநாட்டு வீரர்கள் + 2 from any category 

சென்னைக்கு எதிரே நமது மாநில மோகன்ராஜ் கொல்கத்தா அணியில் அழகாக ஆடிய போது, ஆஹா... இந்த ஆள் நம் அணியில் ஆடியிருக்கக் கூடாதா என்று தான் தோன்றியது.

இப்படி நமது மாநிலம், அடுத்த மாநில வீர்ர்கள் என்பதைத் தேர்ந்தெடுக்க I.S.L. தவிர அடுத்த போட்டிகள் பலவும் நடக்க வேண்டும். கிரிக்கெட்டில் ராஞ்சி போட்டி நடப்பது போல் inter state tournaments கால்பந்து விளையாட்டிற்கும் நடக்க வேண்டும். இப்போட்டியின் முடிவின் படி எத்தனை அணிகள் வேண்டுமோ அத்தனை அணிகளை, இதில் விளையாடும் வீர்ர்களை ஏலத்தில் எடுத்து அமைக்கலாம்.

எல்லோரும் சொல்லும் grass root level அளவிலேயே கால்பந்திற்கு இந்த வழிமுறை மூலம் சிறப்பிடம் கிடைக்கும்.

I.S.L. போல் மற்ற விளையாட்டிற்கும் பெரும் அளவில் போட்டிகளும் ஆரம்பிக்க வேண்டும்.

ஒரு கிழவனின் கவலை ...
இது பல இளைஞர்கள் கண்களிலும், கருத்துகளிலும் போய்ச் சேர வேண்டுமென்ற ஆவலில் இதனை எழுதுகிறேன்.









*







 

879. I.S.L. 2015 ....6







*

கடைசி ஆட்டம் அப்படி ஒரு விறுவிறுப்பு.


85 நிமிடம் வரை it was a game of the two goal keepers. Fantastic job by both of them between the bars. Wow!


கோவாவின் கோலி கட்டிமணி (எந்த ஊருக்காரர்? கோவாக்காரராமே! மணின்னு பெயர் இருந்ததும் நம்மூர்க்காரரோன்னு நினச்சேன்.)முதலில் அடித்த பெனல்டியை அழகாகத் தடுத்தார். ஆனால் மீண்டும் அதை அடித்து கோலானது. ஆனல் மெண்டோசா அடித்த இரண்டாவது பெனல்டியை அழகாகத் தடுத்தார். எதிர் கோலில் எடல் இக்கட்டான சில பந்துகளைத் தடுத்தார். கடைசி நிமிடங்களில் கட்டிமணிக்கும் மெண்டோசாவிற்கும் நடுவில் அப்படி ஒரு போட்டி.


 முதல் பாதியில் கோல் எதுவுமில்லை.


 இரண்டாவது பாதி ஆரம்பித்த சில நிமிடங்களில் ஒரு பெனல்ட்டி சென்னைக்குக் கிடைத்தது. பெஸ்ஸாரி அடித்ததை எளிதாக கட்டிமணி தடுத்தார். ஆனால் சென்னையின் எடல் பந்தயத்தின் முதல் கோலை விட்டது மாதிரி இப்போது நடந்து விட்டது. மணி தடுத்து எதிர்த்து வந்த பந்தை பெஸ்ஸாரியோவோ மீண்டும் அடித்து கோலாக்கினார். 1: 0 ஆஹா…


சென்னை இனி ஜெயிச்சிரும் அப்டின்னு நினப்பு மனசுல விழுகுற நேரத்துக்குள்ள, அதாவது ரெண்டு மூணு நிமிஷத்தில கோவா ஒரு field goal போட்டிருச்சி. 1: 1


இதில இருந்து சில நிமிஷத்தில சென்னைக்கு இன்னொரு பெனல்டி கிடச்சுது – மெண்டோசாவிற்காக. அவரே பெனல்டியை அடித்தார். மணி தடுத்துட்டார். பெரிய ஏமாற்றம். இறுதிப் போட்டியில் கிடைத்த பெனல்ட்டி! இப்படிப்பட்ட நல்ல தருணம் போச்சேன்னு சோகமாச்சு.


 அடுத்த 20 நிமிஷம் விறுவிறுப்பாக கோல் ஏதும் விழாமல் போனது. இனி எக்ஸ்ட்ரா டைம் போகும்னு நினச்சிக்கிட்டு இருந்த போது கோவா ஒரு கோல் போட்டது. 2:1


ஆனால் இந்த கோல் விழுந்த அடுத்த இரண்டு மூன்று நிமிடத்தில் கோவா கோல் முன்னால் மணி, மெண்டோசா, கோவா வீரர் ஒருவர் என மூவருக்குள் நடந்த போட்டியில் மணி பந்தை தடுத்த பிறகும் அவர் கையிலிருந்து பந்து எழுந்து கோலுக்குள் விழுந்தது. 2 : 2


 ஆட்டத்தின் 89வது நிமிடம் இது. விறுவிறுப்பின் உச்சத்தில் அடுத்த 4 நிமிடத்தில் செண்டோசா ஒரு அழகான கோலைப் போட்டார். 3 : 2

 சென்னை வென்றது – மிகக் கடைசி நிமிடத்தில்!


*

Better they change the cup for the next tournament. looked so lousy!


 *



 

Wednesday, December 16, 2015

878. I.S.L. .... 5 A VERY LUCKY DAY FOR CHENNAI...





*

15.12.15 - கோவா - தில்லி - இரண்டாவது ஆட்டம் - 2 : 0 மொத்தம் 2 : 1

 16.12.15 - சென்னை - கொல்கத்தா - ,, .. - 1: 2 மொத்தம் 4 : 2

16.12.15 -இன்று ஆட்டம் நம்மை பெஞ்சின் விளிம்பில் உட்கார வைக்கும் அளவிற்கு நன்கிருந்தது. நேற்று சென்னை நன்கு விளையாடி மூன்றுக்கு முட்டை என்ற கணக்கில் வென்றது. ஆனால் இன்று மோசமாக விளையாடி தோற்றது. ஆனாலும் மொத்தத்தில் கூடுதல் கோல்கள் என்றதால் வென்று இறுதிப் போட்டிக்குப் போனது. A VERY LUCKY DAY FOR CHENNAI.

முதல் பத்து நிமிடங்களில் சென்னை வேகமாக விளையாடியது. ஆனால் முதல் கோல் ஒன்று விரைவில் சென்னைக்கு  விழுந்தது. சென்னை முதல் நாள் விளையாட்டில் விழுந்த முதல் கோல் almost a suicidal self goal. today also it was a pathetic goal. defense அவ்வளவு மட்டமாக விளையாடியது. மைனஸ் பாஸ் என்று சொல்லி பந்தைத் தட்டி கோலுக்கு வழியமைத்தார்கள்.

இரண்டாம் பாதியிலும் மிக மட்டமான டிபென்ஸ். பாவம் .. கொல்கத்தா. கொஞ்சம் LUCK இருந்திருந்தால் நாலைந்து கோல் சென்னைக்கு விழுந்திருக்கும். எப்படியோ சென்னை பொழச்சிது!

கொல்கத்தா அணியில் நம்மூர் பையன் மோகன்ராஜ் நன்றாக ஆடினார். சென்னை அணியின் மெண்டோசா நன்றாக விளையாடினார். ஆனால் எதிரணி அவரை விளையாட விடவில்லை.

இறுதிப் பணியில் சென்னை வெல்ல வேண்டும் என்று ஆவலுண்டு.

ஆனால் கோவா அணிதான் வெல்லும் என்றே எதிர்பார்க்கிறேன்.





 *



Sunday, December 13, 2015

877. I.S.L. ... 2015 .. 4




*


என்னென்னவோ நடந்துகிட்டுஇருக்கு ...

முதல் லீக்கில் கடைசியில் இருந்த சென்னையின் அணி அரையிறுதிக்கு வந்திருச்சு... டாப்ல இருந்த புனே அணி காணாமப் போயிருச்சு. கட்டாயம் வரும் என்று நினைத்திருந்த கேரளா அணி தோத்துப் போச்சு. 50 ஆயிரம் பேருக்கு மேல் கேரளாவில் விளையாட்டு பார்க்கக் கூட்டம் வந்துச்சு. ஆனால் தில்லியில் அரையிறுதிக்கே 6ஆயிரம் பேர்தான் - தில்லி அணி விளையாடியும் -  பார்க்க வந்திருக்கிறார்கள். இதுவே ஒரு பெரிய நகை முரண். இதிலும் எதிர்பார்ப்புக்கு மாறாக தில்லிதான் வெற்றி பெற்றுள்ளது 1:0. இதிலும் நான் எதிர்பார்த்த கோவா ஒரு கோல் வாங்கித் தோற்றது. பார்ப்போம் - இரண்டாவது ஆட்டத்தில் என்ன நடக்கிறதென்று.

சென்னையில் X கொல்கத்தா அணியின் முடிவும் வித்தியாசமாக இருந்தது. இரண்டு லீக் ஆட்டங்களிலும் கொல்கத்தா அணி சென்னையை வென்றது. இப்போட்டியில் மூன்றாவது முறையாக இந்த இரு அணிகளும் களம் இறங்கும்போது கொல்கத்தா அணி வெல்லும் என்று தான் நினைத்தேன். ஆனால் பந்து சென்னையிடமே அதிகம் இருந்தது. 3:0 என்று  முடிவு வந்ததும் ஒரு ஆச்சரியம் தான். இனி இரண்டாம் ஆட்டத்தில் 3 கோலை முறித்து கொல்கத்தா வெல்வது மிகவும் கஷ்டம் என நினைக்கிறேன்.

பார்க்கலாம் ..........






*