Thursday, March 30, 2006

147. சோதிடம்..11 -எண் கணிதம்

மற்றைய பதிவுகள்:

1*,
2*,
3*,
4*,
5*,
6*,
7*,
8*,
9*,
10*,
11*,
12*.
13*.





உங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமா? ஆனானப்பட்ட நம்ம ஐயன் திருவள்ளுவரே எண் கணித சோதிடம் பற்றிச் சொல்லியிருக்காராமே தெரியுமா? அவர் ‘எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும்”னு சொல்லிட்டு போனாலும் போனார்; நம்ம ஆளுங்க அவரையே quote பண்ணிட்டாங்க…’பாத்தீங்களா, நம்ம ஐயன் திருவள்ளுவரே எங்க numerology பற்றிச் சொல்லியிருக்காராக்கும்’ அப்டின்னு சொல்ல ஆரம்பிச்சிட்டாங்க… பாவம்’பா…விட்டுருங்க.. உங்களுக்கு சப்போர்ட் வேணும்னா அதுக்காக இப்படியா?

எல்லா மட்டத்திலேயும் இந்த ‘வியாதி’ பரவியிருச்சு; பகுத்தறிவாளர்களாகட்டும், கை நாட்டுகளாக இருக்கட்டும். என்னதான் ஆகுதுன்னு பார்ப்போமே அப்டின்கிற நினப்பு போல. வை.கோபால்சாமி வைகோ ஆயிடரார்; அவ்வளவு எதுக்கு, எல்லா விஷயத்திலும் முற்போக்காளராக இருக்கும் கமல ஹாசன் ஏன் பெயரை மாத்திக்கிட்டாரென தெரியவில்லை.(இந்திக்காரர்களுக்குப் பரிச்சயமான பெயர் அது என்று சொன்னதாக நினைவு. சரியோ, தவறோ தெரியாது.) எனக்குக் கூட ஒருத்தர் பெயரை நான் மாத்திக்கிட்டா பெரிய ஆளா வந்திருவேன்னு சொன்னார்; அதுவும் sam அப்டிங்கிற பெயரை sham என்று மாத்திக்கச் சொன்னார். சாமி, sam அப்டிங்கிற பெயர் எனக்கு ரொம்ப பிடிக்கும் (பேராவது அழகா இருக்கட்டுமேன்னு அப்பா பெரிய மனசு பண்ணி வச்சிருக்காரு.). அதோட, sham- அப்டிங்கிற வார்த்தைக்கு என்ன அர்த்தம் தெரியுமா, என்னக் கேவலப்படுத்துறதின்னே முடிவெடுத்திட்டியான்னு கேட்டு விரட்டவேண்டியதாப் போச்சு!
சில சந்தேகங்களை மட்டும் உங்கள் முன் வைக்க ஆவல்.
1. பெயரை மாற்றுவதால் என்ன நடக்கிறது? (vibration அது இதுன்னு சொல்றாங்களோ?)
1. அந்த மாதிரி பெயரை மாற்றுவதால் (eg. sam -> sham ) என்ன ஆகிறது?
3. என் பெயரை மாற்றினாலாவது உச்சரிக்கப்படும் சத்தம் வேறுபடும். Murugan என்பதை Murugun என்று மாற்றுவதாக வைத்துக்கொண்டால், பழையபடி முருகன் என்றுதானே அந்த நபர் அழைக்கப்படுவார். பிறகு ஒலிமாற்றம் எப்படி ஏற்படும்? ஒலிமாற்றம் இல்லாவிட்டால் எழுத்துக்களை -spelling-யை மாற்றுவதால் என்ன பயன்?
4. முருகன் என்ற சாமியின் பெயரால் அழைக்கப்பட் வேண்டுமென்று பெயர் வைக்கப்பட்டு, பிறகு Murugun என்று அழைக்கப்பட்டால், அந்த முருகனின் மேலேயும் நம்பிக்கையில்லை; அவரையே ‘(ஏ)மாற்றி’ விடுகிறோம் என்று பொருளில்லையா?
5. ஒவ்வொரு எழுத்துக்கும் தனித்தனியே எண் மதிப்புகொடுத்தது எப்படி? (யாரோ ஒரு பிரான்ஸ் நாட்டு ‘மேதாவி’ கொடுத்ததாக ஒரு நண்பனும், இல்லை..இல்லை நம்ம சித்தர் ஒருத்தரு கொடுத்தார் என்று இன்னொருவனும் சொன்னார்கள்; எனக்குத் தெரியாது. ) யார் கொடுத்திருந்தாலும் ஏன் ஆங்கில மொழியைத் தேர்ந்தெடுத்தார்கள்? அப்படியானால் இந்த numerology-ன் மூலம் இங்கிலாந்தா?
6. உச்சரிப்பைப் பொருத்தே vibration இருக்கும். vibration-யைப் பொருத்து பலன்கள் இருக்கும் என்றால், எல்லோரும் ஒரே மாதிரியா உச்சரிக்கிறோம். என் பெயரே என்னென்ன பாடு படும் என்று எனக்குத்தான் தெரியும்! sam, sham, shiam, john, சாம், சாமி, - தொலைபேசியில் என் பெயரைச் சொல்லி அடுத்த முனையில் இருப்பவரைப் புரிய வைக்க நான் படும் பாடு எனக்குத்தான் தெரியும்!
7. ஆங்கிலமே தெரியாதவருக்கும், ஆங்கிலமே தெரியாத நாட்டில் இருப்பவர்களுக்கும் இந்த ஆங்கில மொழி சார்ந்த எண்கணிதம் எப்படி சரியாக இருக்கும்?
8. ஆங்கில முறையில் பெயரின் எழுத்துக்களை மாற்றினாலும் தமிழில் ஒரே மாதிரியாகவே உச்சரிக்கப்பட்டால் அதனால் என்ன வித்தியாசம் வரும்? பலன் என்ன மாறும்? சான்றாக, நம்ம முதல் அமைச்சர் தன் பெயரை ஆங்கிலத்தில் jeyalalithaa என்று மாற்றிக்கொண்டுள்ளார். ஆனால், jeyalalithaa என்று ஆங்கிலத்தில் சொல்வது போலவேதான் jeyalalitha என்ற பெயரையும் உச்சரிக்க முடியும். அப்படியானால் என்ன vibration changes வந்துவிடும்? பெயர் உச்சரிக்கப்படுவது ஒன்றாகவே இருப்பின், எதற்கு இந்த மாற்றம்?(இது 3-வது பாயிண்ட் மாதிரியே இருக்குல்ல? எட்டு என்றாலே இப்படித்தாங்க… இது எப்படி இருக்கு?)
9. எண்களுக்கு சில கணித மதிப்பு இதன் அடிப்படை விஷயம். இந்த கணித மதிப்புக்கு என்ன அடிப்படை? யார், எதற்காக, எப்படி, ஏன் இந்த மதிப்புகளை இந்த எழுத்துக்களுக்கு - ஆங்கில எழுத்துக்களுக்கு மட்டுமே - கொடுத்தார்கள்?
10. மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும்கூட ஒரு மாதிரி அட்ஜஸ்ட் செய்து முடிச்சு போட்டு விடலாம். ஆனால் இந்த பிறந்த தேதிக்கும், பெயரின் கூட்டல் கழித்தலுக்கும் என்ன தொடர்பு இருக்க முடியும்?

இன்னும் நிறைய கேள்விகள் இருக்கலாம்; தெரிந்தவர்கள் கேள்விகள் கேட்டு கேள்விகளின் எண்களைக்கூட்டினால், அந்தக் கூட்டுத்தொகை மாறுமல்லவா? அந்த மாற்றங்களுக்குத் தனிப் பலன்கள் உண்டு. அவைகளை நமது நிலைய ஜோதிடர் உங்களுக்கு ஒரு தாயத்துடனும், ஒரு தகடும் வைத்து அனுப்புவார். தாயத்தை அணிந்து கொண்டு, தகட்டை வீட்டில் ஏதாவது ஓரிடத்தில் புதைத்து வைத்தாலோ எல்லா அஷ்டதேவிகளும் உங்களைத்தேடி ஓடி வருவார்கள். வேண்டுவோர் இதை வாசித்த 9 நாட்களுக்குள் ரூபாய் 236.34 (பாத்தீங்களா- கூட்டுத்தொகை 9 வருதா…?) அனுப்பவும். தபால் செலவு தனி. வழக்கமாய் பின்னூட்டம் இடுபவர்களுக்கு 18% தள்ளுபடி உண்டு.







Pathivu Toolbar ©2005thamizmanam.com


Mar 30 2006 04:45 pm | சமூகம் |
27 Responses
nagarajan Says:
March 30th, 2006 at 5:29 pm
ஆயிரந்தான் சொல்லுங்க, இன்னமும் நிறைய பேர் ஜோசியத்தை நம்பிக்கிட்டுத் தானே இருக்காங்க. என்ன நாஞ்சொல்றது உண்மை தானுங்கலெ.

Suresh- Penathal Says:
March 30th, 2006 at 5:33 pm
பேச்சு மட்டும் எண் கணிதத்தை எதிர்க்கறது போல இருந்தாலும், இந்தப்பதிவு பற்றி ஒரு அனாலிஸிஸ்:

பதிவு எண்: 147 = கூட்டுத்தொகை 2

ஜோதிடம் தொடர் எண் 11 - கூட்டுத்தொகை 2.

பதிவிட்ட நேரம் அமெரிக்காவில் 29ஆம் தேதி - கூட்டுத்தொகை 2.

இப்படி எல்லாம் பாத்து பாத்துதான் செய்யரீங்களோ?

சதயம் Says:
March 30th, 2006 at 8:23 pm
நியூமராலஜி…அறிவியலா அல்லது பிதற்றலா என்கிற தர்க்கத்தை விட நியூமராலஜி பற்றிய எனது தெளிவுகளைப் பதிப்பிக்கலாம் என நினைக்கிறேன்.

‘உலகத்திலேயே மிக அழகான சொல் ஒருவருடைய பெயரே’ என்று யாரோ சொன்னதாக படித்தது,எனக்கு இன்றுவரை பிடித்த சிலவற்றில் ஒன்று. கணினிக்கு Machine language என்பதைப் போல ஒவ்வொரு மனிதனுக்கு பெயர் சூட்சுமமான ஒன்று என நினைக்கிறேன்.

சமஸ்க்ருதத்தில் ‘அஷரலஷா’ என்கிற நூலில் அட்சரங்கள்,எழுத்துக்களுக்கான ஒலி அளவுகள்,அதனால் விளையும் நன்மை தீமைகள் விளக்கப்பட்டுள்ளதாக படித்திருக்கிறேன்.(இந்நூல் பற்றி அறிந்தவர்கள் மேலும் விளக்கலாம்).

எழுத்துக்களின் கூட்டால் உண்டாகும் சப்தம் ‘மந்திரம்’ எனவும் நமது உடல் யந்திரமாக இயங்குவதாகவும் ஒரு கருத்துச் சொல்லப்படுகிறது.இந்த உடலுக்கு ஒத்திசைவான மந்திரங்களை(பெயர்) உச்சரிக்கும்போது யந்திரம்(உடல்) உருவேற்றப்படுவதாயும் அதன் தொடர்ச்சிதான் நன்மையும் தீமையும் என்பது ஒரு வாதம்.

தமிழில் அகத்தியரும்,வராகமிகிரரும் இதைப்பற்றிய ஆய்வு(!)க் கருத்துகளை கூறியிருப்பதாக கூறினாலும் 18ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ‘Cheiro’ என்பாரால் நாமகரணம் செய்யப்பட்டதே நியுமராலஜி.

எல்லாம் சரி..ஆங்கில எழுத்துக்களை ஏன் நியூமராலஜிக்கு பயன் படுத்த வேண்டுமென்கிற நியாயமான கேள்விக்கு கிடைத்த ஒரு சுவாரஸ்யமான சப்பைக் கட்டு என்னவென்றால்…”நமது 18 புராணங்களில் 9வது புராணமாகிய ‘பவிஷ்ய புராணம்’, கலியுகத்தில் வர்ணாசிரம தர்மங்கள் தலைகீழாய் போகும்,நான்கு வர்ணத்தாரும் தொழில் மாற்றங்களை காண்பர்.தொன்மையும் சிறப்பும் வாய்ந்த மொழிகள் அழியும்.”ஐம்.கலீம்.சௌக”எனும் ஆங்கில மொழியும் அதன் நாகரிகமும் பரவும்.தலைகீழாக தீபங்கள் எரியும்” எனக் கூறப்பட்டுள்ளதை அடிக்கோடிட்டு ஆங்கிலத்தில் நியூமராலஜி காலத்தின் கட்டாயமென்று வாதிடுகின்றனர்.

எது எப்படியோ என் பெயரை கையாளும் ஒவ்வொரு தருணத்திலும் பெயர்சூட்டிய என் பெற்றோரின் அன்பையும் கனிவையும்…எனக்கான அவர்களின் அர்ப்பணிப்பையும் உழைப்பையும் எண்ணியெண்னி நெகிழ்ந்து போகிறேன் என்கிற அந்தப் பலன் ஒன்றே எனக்குப் போதும்….

தருமி Says:
March 31st, 2006 at 11:38 am
நாய் வாலுன்னு சொல்றீங்களா, நாகராஜன்?

சுரேஷ்,
அப்போ எனக்கு ராசி எண் ரெண்டுன்னு சொல்றீங்களா? சரி இனிமே எல்லாமே ரெண்டு ரெண்டா பண்ணிடுவோம்.சுரேஷ்,
அப்போ எனக்கு ராசி எண் ரெண்டுன்னு சொல்றீங்களா? சரி இனிமே எல்லாமே ரெண்டு ரெண்டா பண்ணிடுவோம். - பாத்தீங்களா, பின்னூட்டம்கூட ரெண்டு…ஹி..ஹி

சம்மட்டி Says:
March 31st, 2006 at 12:05 pm
பெயரை மாத்துரதால எதாவது ஆதாயம் இருக்குமாங்கிறது சந்தேகம். ஆன சில பெயர்கள் அதை பலதடவை உச்சரிக்கப்பட்டு பெரிய வெற்றி பெற்றிருக்கிறது.

உதாரணத்துக்கு எடுத்துங்களே, நம்ம பில்கேட்ஸ் அண்ணாச்சி, வின்டோஸ்னு கணனி செயல் ஊக்கிய மொதமொதல்ல ஆரம்பிச்சப்ப DOS லேர்ந்து இயக்க ஆரம்பிச்சோம், அப்பல்லாம் , டாஸ் புராம்ட்ல (Prompt) win - ன்னு தட்டினால் வின்டோஸ் ன்னு படம்காட்டிட்டு தொடங்கும், இப்படியே நாம எல்லோரும் வின்டோஸ் version 1 லேர்ந்து 3.5 வரைக்கும் win win னு தட்டியதால என்னுமோ பிச்சிக்குட்டு win பண்ணிடுச்சி,

அது மட்டுமா, நம்ம அம்மா இருக்காங்களே அவுங்களையும் ஜெ. ஜெ இன்னு பத்திரிக்க காரங்க எ௯ழுதி தள்ளினாதால, என்னதான் ஜென்னு எழுதினாலும் உச்சரிக்கிரப்ப ஜே போட்டு போட்டு அவுங்க ஜெ . ஜெ இன்னு வெற்றி கண்டாங்க, இதல்லாம் பாத்த நம்ம விசு அண்ணாச்சியும் அரட்டை அரங்கம் டைட்டில win இன்னு போட்டு ஆரம்பிப்பாரு.

சில சொல்லுங்களுக்கு சத்தி இருக்கத்தான் செய்யிது, ஆனா மாத்தி வெச்சிக்கிட்டு ஜெயிக்கலாம்னு நிக்கரவுகல நெனெப்ப என்னத்த சொல்ல.

துளசி கோபால் Says:
March 31st, 2006 at 12:17 pm
ஏங்க தருமி,

பெயரை மாத்தி வச்சுக்கறதுக்குப் பதிலா இந்த பிறந்த தேதியை மாத்தி வச்சுக்கிட்டா நல்லா இருக்குமுல்லே?

இன்னும் கொஞ்சம் இளவயசா….. ஆஹா…..

இப்படிக்கு
Thulashee

கோபி Says:
March 31st, 2006 at 1:11 pm
ராசிக்கல், பெயர் மாற்றினால் தலையெழுத்து மாறிடுமா? - நேமாலஜி.. இன்னபிற ஆலஜிகள்(!) விசயத்தில் உங்கள் கருத்துதான் எனக்கும்.

எண் கணிதம் என்னைப் பொறுத்தவரை ஒரு கணித புதிர் விளையாட்டு போல. அதன் மூலம் கணிக்கப்பட்ட பலன்கள் - நிகழ்தகவு.

ஜாதகம் எழுதுவதும் கூட கணிதமும் வானவியலும் தொடர்புடையது. அதன் மூலம் கணிக்கப்பட்ட பலன்கள் - நிகழ்தகவு.

ஜாதகம் ஒரு வழிகாட்டி மட்டுமே (சாலையோர அறிவிப்புகள் மாதிரி - Just you can be aware of). பரிகாரங்கள் மூலமாய் ஜோதிட வியாபாரிகளுக்கு வேண்டுமானால் பலன் கிடைக்கலாம்.

சில ஜோதிட வியாபாரிகளை பார்த்து ஜோதிடத்தை தவறென்று சொல்வது, சில மத வியாபாரிகளை பார்த்து ஒரு மதத்தை தவறென்று சொல்வது போல.

Geetha Sambasivam Says:
March 31st, 2006 at 4:51 pm
A true jyothidam does not accept this type of peththalkal.This is only money making idea invented by somebody who was badly in need of money.

Geetha Sambasivam Says:
March 31st, 2006 at 4:53 pm
Thiruvalluvar “Ennum ezhuththum kannena thagum” enru chonnathu entha numerology padiyum cherathu.Avar chonnathu nam anrada vazhkaiku.

சிவா Says:
March 31st, 2006 at 5:28 pm
நம்ம நெருங்கிய நண்பர் பேரை மொத்தமா சம்மந்தமே இல்லாம (சட்டப்பூர்வமாகவே) மாத்திக்கிட்டார். ஆசையா சின்ன வயசுல இருந்தே கூப்பிட்ட பேர விட்டுடமுடியுமா என்ன? புது பேர பார்த்தாலே வேற எவனையோ பார்த்த மாதிரி இருக்கு. இன்னும் பழைய பேரு தான். மாத்தமுடியாது. ஏனோ! மக்களுக்கு ஒரு மோகம். மீடியாக்கள் மக்களை மேலும் முட்டாள்களாக்க காலையில் இருந்தே ஆரம்பித்து விடுகிறது ‘இன்றைய பலன்’ அப்படின்னு,….ம்ம்ம்

கார்த்திகேயன் Says:
April 1st, 2006 at 12:38 pm
தருமி, வாத்தியார் சொன்ன மாதிரி, இதெல்லாம் ஒரு வித ‘Distribution of wealth’-க்காக ஆரம்பிச்ச உட்டாலக்கடியோ என்ன எழவோ. கர்மம், கர்மம்…

தருமி Says:
April 2nd, 2006 at 12:19 am
சதயம், சம்மட்டி, நீங்க ரெண்டுபேருமே அந்தப் பக்கம் ஒரு அடி, இந்தப் பக்கம் ஒரு அடி அப்டிங்கிறது மாதிரி போடுறீங்க. ஆனா முடிவா எந்தப் பக்கம் நிக்கிறீங்க அப்டிங்கிறது கொஞ்சம் தடுமாற்றமாவே இருக்கு - especially சம்மட்டி

சதயம் உங்க பேரைப்பற்றி சொன்னதால ஒரு சந்தேகம்: உங்கள் பெயரின் பொருள் என்ன?

தருமி Says:
April 2nd, 2006 at 2:36 pm
துளசி,
பிறந்த வருஷம்னு சொல்லுங்க
“இப்படிக்கு
Thulashee”// - இதென்ன உங்க பேருக்கு இப்படி ஒரு spelling : எண்கணிதம்தானா…?

தருமி Says:
April 2nd, 2006 at 2:41 pm
கோபி,
உங்க கருத்தும் எனக்குப் பிடிபடவில்லை. ஜோதிடம் உண்மை. எண்கணிதம் தவறு அப்டிங்கிறீங்களா?

தருமி Says:
April 2nd, 2006 at 2:43 pm
Geetha Sambasivam,
“..true jyothidam ..” - அதாங்க, அந்த ‘உண்மையான’ ஜோதிடம் என்னன்னுதான் கேட்டுக்கிட்டே இருக்கேன்.

தருமி Says:
April 2nd, 2006 at 2:48 pm
சிவா,
அந்த நண்பர் இப்போ பயங்கர ஆளா மாறிட்டேன்னு சொல்றாரா…இல்ல இன்னும் ‘தெறமை’யான எண் கணித நிபுணர்கள தேடிக்கிட்டே இருக்காரா?

தருமி Says:
April 2nd, 2006 at 2:50 pm
கார்த்திகேயன்,
அந்த ‘வாத்தியார்’ யாருன்னு தெரியலையே..

சதயம் Says:
April 2nd, 2006 at 3:45 pm
சதயம் என்பது நான் பிறந்த நட்சத்திரம் .ராஜராஜ சோழன் கூட இந்த நட்சத்திரத்துலதான் பிறந்தாராம்.

(ரொம்பத்தான் நெனப்புன்னு மனசுக்குள்ள நீங்க சொல்றது நல்லாவே கேக்குது )

கோபி Says:
April 2nd, 2006 at 4:21 pm
//உங்க கருத்தும் எனக்குப் பிடிபடவில்லை. ஜோதிடம் உண்மை. எண்கணிதம் தவறு அப்டிங்கிறீங்களா?//

என் எண்ணத்தில் ஜாதகம் கணிப்பதும் எண் கணிதமும் கலைகள்.

ஜாதகம் கணிப்பதிலும் எண் கணிதத்திலும் வானவியலும் கணிதமும் (கணிப்பதற்கு) அறுதியிட்டு கூறப்பட்ட விதிமுறைகளும் உள்ளன. கணிக்கும் முறையில் சில வேறுபாடுகள் உள்ளன (திருக்கணிதம், சுத்த வாக்கியம்)

பலன்களும் குறிப்பிட்ட விதிமுறைகளுக்குட்பட்டே சொல்லப்படுகின்றன. எண்கணிதப் பலன்கள் எளிதானவை. துல்லியமானவை அல்ல. ஜாதகப் பலன்கள் துல்லியமானவை பல்வேறு Permutations and combinations கொண்டவை.

இவை இரண்டும் சாலையோர அறிவிப்புகள் மாதிரி - Just one can be aware of what may happen. It can not be changed through changing the Name or “பரிகாரங்கள்”.

உண்மை/தவறு என்பதை உங்கள் நம்பிக்கைக்கே விட்டுவிடுகிறேன்.

துளசி கோபால் Says:
April 3rd, 2006 at 1:43 am
தருமி,

இப்படி ஸ்பெல்லிங் மாத்திப் போட்டா அதிர்ஷ்டம் வந்துராதா….ன்ன்ற நப்பாசைதான்.

எனக்கு இந்த வருஷம்( பொறந்த வருஷங்க) விஷயத்துலே மட்டும் ‘லாங் டைம் மெமரி லாஸ்’
முயன்று பார்த்தாலும் ரெக்கவர் பண்ண முடியலை

தருமி Says:
April 4th, 2006 at 3:09 pm
நன்றி கோபி.

துளசி,
எனக்கு ஞாபகம் வந்திருச்சே…நீங்க பொறந்த வருஷம் 1943 தானே !!!!!!!!!

துளசி கோபால் Says:
April 8th, 2006 at 2:19 am
தருமி கணக்குலே இவ்வளோ வீக்கா? ஒரு 40 ஐக் கூட்டிக்கணும். இருங்க அடுத்தமுறை அங்கெ வர்றப்ப இருக்கு.

கார்த்திகேயன் Says:
April 8th, 2006 at 10:00 am
வாத்தியார் நம்ம விஞ்ஞானி ‘ரங்கராஜர்’தான் . ‘சுஜாதா’ன்னு கூட எழுத்துலகுல சொல்லுவாங்களே அவரு..

ஞானவெட்டியான் Says:
April 8th, 2006 at 10:00 am
அன்பு சதயம்,
//”ஐம்.கலீம்.சௌக”//
ஆங்கிலமா? புதியதாயுள்ளதே!

அன்பு சம்மட்டிக்கு,
//இப்படியே நாம எல்லோரும் வின்டோஸ் version 1 லேர்ந்து 3.5 வரைக்கும் win win னு தட்டியதால என்னுமோ பிச்சிக்குட்டு win பண்ணிடுச்சி,//
நானும் படிக்கும்போது “WIN,WIN” ்னு சொல்லியோ, எழுதி இருந்தாலோ இன்னும் அதிகமாகப் படித்து செல்வந்தனாகி இருக்கலாம் போலுள்ளதே!

அன்பு கோபி,

//ஜாதகம் ஒரு வழிகாட்டி மட்டுமே (சாலையோர அறிவிப்புகள் மாதிரி - Just you can be aware of). பரிகாரங்கள் மூலமாய் ஜோதிட வியாபாரிகளுக்கு வேண்டுமானால் பலன் கிடைக்கலாம்.

சில ஜோதிட வியாபாரிகளை பார்த்து ஜோதிடத்தை தவறென்று சொல்வது, சில மத வியாபாரிகளை பார்த்து ஒரு மதத்தை தவறென்று சொல்வது போல. //

சோதிடம் சோதித்து திடம் அடைவதற்கே! அது ஒரு கை விளக்கு. இரவில் நடக்கும்போது குழி எங்கே உள்ளது? எனத்தெரிந்து ஒதுங்கிச் செல்லவே! பரிகாரம் செய்யவேண்டுமெனச் சொல்லும் சோதிடர்களை புறந்தள்ளிப் பரிகசியுங்கள்.

அன்பு தருமி,

//“..true jyothidam ..” - அதாங்க, அந்த ‘உண்மையான’ ஜோதிடம் என்னன்னுதான் கேட்டுக்கிட்டே இருக்கேன்.//

எந்த சோதிடனிடம் நீங்கள் ஏமாறவில்லையோ, அந்த சோதிடம்தான் உண்மையான சோதிடம்.

மகேஸ் Says:
April 8th, 2006 at 10:31 pm
ஏனக்கு முதலில் வீட்டில் வைத்த பெயர் மகேஸ்பாபு.
பள்ளியில் பெயர் சேர்க்கும் போது மகேந்திரன் ஆனது. ஆனால் வீட்டில் மகேஸ் என்று அழைக்கின்றனர். நண்பர்கள் என்னை அழைப்பது மகேந்திரன், சில பேர் மகி, ஓரிருவர் ‘மாணா’.
என்னை நான் யாரிடமும் அறிமுகப்படுத்திக் கொள்ளும் போது என் பெயரை நான் சொல்வது ‘மகேந்ரா’ என்று.
இப்படிப் பல பெயர்கள். என் திருமண அழைப்பிதழில் என்ன பெயர் போடுவது என்று ஒரு குழப்பம் வரும் என் நினைக்கிறேன்.

தருமி Says:
April 9th, 2006 at 12:10 am
மகேஷ் aka மகேஷ்பாபு aka மகேந்திரன் aka மகி aka மாணா aka ??? aka

- எப்படியோ திருமண அழைப்பிதழில் என்ன இருந்தாலென்ன? திருமண வாழ்வு குழப்பமில்லா தெளிந்த நீரோடையாக இருக்க வாழ்த்துக்கள்.

மகேஸ் Says:
April 9th, 2006 at 1:32 am
வாழத்துகளுக்கு நன்றி திரு.தருமி அவர்களே. திருமணம் நிச்சயம் ஆனவுடன் சொல்கிறேன். நீங்கள் மதுரையா? நான் ராமநாதபுரம்.

Wednesday, March 29, 2006

146. சோதிடம்..10: - வாஸ்து

மற்றைய பதிவுகள்:

1*,
2*,
3*,
4*,
5*,
6*,
7*,
8*,
9*,
10*,
11*,
12*.
13*.




கேட்டா கடந்த 5000 வருஷமா இது நம்மகிட்ட இருக்கு அப்டிங்கிறாங்க. ஆனா இப்ப பத்து பதினைந்து வருஷமாதான் ரொம்ப அடிபடுது. எது எப்படியோ? இதையும் விஞ்ஞானம் அப்படிங்கிறாங்க. ஏற்கெனவே விஞ்ஞானம் என்றால் என்ன என்று முன் பதிவுகளில் சொல்லியாயிற்று. ஒரு கேள்விக்கு ஒரு பதில் இருந்தாதான் அது விஞ்ஞானம். ‘தமிழ்நாட்டு வாஸ்துஅறிஞரும்’ ‘மலையாள வாஸ்து அறிஞரும்’ ஆளுக்கொண்ணு சொன்னா அது எப்படி விஞ்ஞானமாகும். ‘ரெண்டு வாத்தியாரிட்ட மூணு கேள்வி கேட்டா நாலு பதில் வரும்’ என்று ஜோக்கடிப்பாங்க. ரெண்டு வாஸ்து ஆளுககிட்ட ஒரே ஒரு கேள்வி கேளுங்க. எத்தனை பதில் வருமோ. அதெல்லாமே …. உங்க பண வச்தி, மன நிலை (அதாவது, எந்த அளவு நீங்க போவீங்க அப்டிங்கிறது பொறுத்து.), வாஸ்துக்காரருக்கும் உங்க வீடு கட்டுறவருக்கும் உள்ள தொடர்பு, வாஸ்துக்கரரின் பணத்தேவை, - இப்படிப் பல விஷயங்களைப் பொறுத்தது.



நண்பன் ஒருவன் வேலையில் செய்த - தெரிந்தே செய்த - தப்புக்காகத் தண்டிக்கப்பட்டு, வேலையிலிருந்து தற்காலிக நீக்கம் செய்யப்பட்டு வீட்டில் உட்கார்ந்திருந்தான். வீட்டில் சும்மா இருக்கலாமா? ஒரு வாஸ்துக்காரர் வந்து வீட்டைத் தலைகீழாக மாற்றச்சொன்னார். மாற்றியதும் நிறைய மாற்றங்கள் வாழ்க்கையில். அதில் பெரிய மாற்றம் - வங்கிக் கணக்கு! ரொம்ப மெலிஞ்சு போச்சுது. ஆனாலும் ஆசை யாரை விட்டது. அடுத்து வந்தவர் தமிழ்நாட்டின் தலைவிதியையே நிர்ணயிப்பவரின் ஆஸ்தான வாஸ்துகாரராம். அவருக்கு விமான டிக்கெட் எல்லாம் எடுத்து, தடபுடலாக வீட்டுக்கு வரவழைத்து, பின் அவர் சொல்லிச்சென்ற மாற்றங்களைச் செய்ததும் வாழ்க்கையில் இன்னும் பெரிய முன்னேற்றம்: இப்போ வங்கிக்கணக்கு சுத்தமா தொடச்சாச்சு. வேற வழியில்லாம வீட்டை வித்துட்டுப் போயிட்டான். அதன் பிறகு சமூகத்தில அஞ்சு வருஷத்துக்கொரு முறை நடக்கும் மாற்றங்களால் மறுபடியும் பழைய நிலைக்கு வந்ததும், கொஞ்ச நாளில் புதுவீடு கட்டினான்; அதற்கும் வாஸ்து கட்டாயம் பார்த்திருப்பான். சூதாட்டத்தில ‘விட்டத பிடிக்கிறது மாதிரிதான்’!



வாஸ்து என்ற பெயரில் படுக்கை அறை கிழக்குத் திசையில் இருக்கவேண்டும். அது சரி; மாலை வெயில் விழுவதால் மேற்குப் பக்கம் உள்ள அறை இரவும்கூட உஷ்ணமாயிருக்கும். வாஸ்து என்ற பெயர் இதுக்குத் தேவையில்லை. common sense போதும். ஆனால், அடுப்பு கிழக்குத் திசை பார்த்து இருக்கணும்னு என்ன அவசியம்? அப்போதான் அடுப்பு எரியுமா? அதுகூட பரவாயில்லை; ஒரு அறை 10 x16க்கு இருக்கலாம் என்று வைத்துக்கொள்வோம். ( எனக்கு இந்த அளவுகள் எல்லாம் தெரியாது; ஒரு உதாரணத்துக்குத்தான்!) அதை 11 x 16 அல்லது 10 x17 வைத்தால் என்ன ஆகும்? இதில் என்ன விஞ்ஞானக் கணக்கு? இவ்வளவு cubic meter-க்கு இவ்வளவு ஐஸ்வர்யம் வரும்னு ஏதாவது கணக்கா என்ன?



இன்னொரு மெத்தப் படித்த நண்பன் வீட்டில் வாஸ்துபடி, படுக்கை அறை ஏதோ ஒரு திசையில் சில inches மட்டுமே உயரமாக இருக்கும்படி தரையை மாற்றினான். வீட்டைக் கழுவினால் தண்ணீர் வடிவதற்கு வேண்டுமானால் இது பயனுள்ளதாயிருக்கும்; வேறென்ன பயன் என்று கேட்ட போது, ‘இதுக்கே சண்டைக்கு வர்ரீங்களே; வாஸ்துக்காரர் அந்த அறையில் மட்டும் elelctric switch-களை மட்டும் மாற்றி வைக்கச்(american style?) சொல்லி, அப்படியே வைத்துள்ளேன்’ என்றான்! swithces மாத்திறது கூட அந்தக் காலத்துல சொன்னவங்க சொல்லிட்டு போயிட்டாங்களா, என்ன?



ஒவ்வொரு விஞ்ஞானத்திற்கென்றே அடிப்படையான நிலைப்பாடுகள் ( facts) இருக்கும்; அதன் மேல் கருத்துக்கள் (hypotheses) எழுப்பப்பட்டு, அவைகளை நிரூபணம் செய்யவேண்டி ஆராய்ச்சிகள் (research / experiments) செய்து, நிரூபணங்களிண் மேல் (evidences) புதிய நிலைப்பாடுகள் (facts) எழும். இந்த நிலைப்பாடுகள் எப்போது வேண்டுமானாலும், யாராலும், எங்கேயும் மீண்டும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டாலும் அவைகளுக்கு ஒரே மாதிரியான முடிவுகளே (results) வரவேண்டும்; வந்தால்தான் அது ஒரு விஞ்ஞானம். இப்படியே படிப்படியாகவே விஞ்ஞானம் வளரும்.



அப்படி ஏதுமின்றி -

- பலர் சத்தமாகக் கூறுவதாலேயோ,

- ஆண்டாண்டு காலமாய் நம்மிடம் இருந்துவரும் ஒரு விஷயம் என்பதாலேயோ,

- சொன்னவர்கள், சொல்பவர்கள் எல்லாருமே அறிவில்லாதவர்களா என்று கேட்பதாலேயோ,

- பலரும் நம்பிக்கை வைத்திருப்பதாலேயோ -

? இதை எப்படி விஞ்ஞானம் என்று சொல்வது?

சொல்பவர்கள் அதை ஏதேனும் ஒரு வகையிலாவதாவது நிரூபிக்க வேண்டாமா? அல்லது, இதுவும் கடவுள் நம்பிக்கை போல் - this is something personal; one has to ‘feel’ it and believe it….. - அப்டிங்கிறதுதான் பதிலா?



எனக்குள்ள கேள்விகள்:

* வாஸ்து பலன்களின் அடிப்படை என்ன?

* பலன்கள் இப்படி இப்படி என்று வரையறுத்தது யார்? எங்கே? எப்போது? ஏன்?

* பலன்கள் இப்படி இப்படி என்று வரையறுத்தது யார்? - கடவுளா, மனிதனா?

* வாஸ்து பலன்கள் நிரூபிக்கப் பட்டுள்ளனவா? நிரூபிக்க முடியுமா?

* நம் நாட்டில் மட்டுமே (சைனாவிலும் உள்ளது; அது வேறு வகையானது என்ற பதிலைத்தவிர..) வாஸ்து பார்த்துக் கட்டுவது ஏன்?

இன்னும் பல ஏஏஏஏஏஏஏஏஏஏன்கள்??????????



நம்பிக்கையாளர்களே, இது என் நம்பிக்கை; கடவுள் நம்பிக்கை மாதிரியேதான் இதுவும் என்று வேண்டுமானால் சொல்லிவிட்டுப் போங்கள். உங்கள் காசு…உங்கள் வீடு…உங்கள் சந்தோஷம்…உங்கள் திருப்தி. அதை சொல்ல நான் யார்?

ஆனால், அது விஞ்ஞானம் என்று சொன்னால் கொஞ்சம் புரிந்துகொள்ள உதவுங்கள்… PLEASE!







Pathivu Toolbar ©2005thamizmanam.com


Mar 29 2006 03:13 pm | சமூகம் | | edit this
44 Responses
muthu(tamizhini) Says:
March 29th, 2006 at 3:38 pm e
வாஸ்துக்கரரின் பணத்தேவை, - இப்படிப் பல விஷயங்களைப் பொறுத்தது.


adichi aadunga

சம்மட்டி Says:
March 29th, 2006 at 3:49 pm e
நீங்கள் சொல்றது வாஸ்த்து’ வம் தான். இதுக்கே இப்படின்னா ? விஜய ராஜெந்தர், ராஜ கண்ணப்பன், திருனாவுக்கரசர் … எஸ்.ஜே சூர்யா கூட சூர்யாக் மாத்திக்கிட்டாரமே
சம்மட்டி

premalatha Says:
March 29th, 2006 at 4:04 pm e
வாஸ்து பார்த்துக் கட்டிய மாமல்லபுரமும், அன்கோர் வாட் (Angkor Wat -ம்
அழிந்தது proves that வாஸ்து is just a belief and not a science.

Mahesh Says:
March 29th, 2006 at 4:14 pm e
ஒரு வேளை வாஸ்துவைக் கண்டுபிடித்தவர் வாஸ்தாயனராக இருப்பாரோ? just kidding )))

gilma Says:
March 29th, 2006 at 6:07 pm e
Another way to earn money for frauds … That s all the entire background.

சதயம் Says:
March 29th, 2006 at 7:38 pm e
வாஸ்துவை ஒரு Magic solution அல்லது சுகவாழ்வுக்கான தீர்வு என்று சொல்வதை விட அழகியலோடு இனனந்த ஒரு அறிவியல் தத்துவமாய் கொள்ள வேண்டுமென்பது என் கருத்து.

இந்திய வாஸ்துவுக்கு இனையாகச் சொல்லப்படும் Fengshui இந்த விடயத்தில் மிகத் தெளிவாய் சொல்லப்படுவதாய் நினைக்கிறேன்.Feng shui என்பதில் Feng காற்றையும் Shui நீரையும் குறிக்கிறது.அதாவது பிரபஞ்சத்தில் உள்ள அனைத்து சக்திகளிலும் காற்றும்,நீருமே நம் வாழ்க்கையை மேம்படுத்துவதில் பெரும் பங்கு வகிக்கின்றன என்பதே அடிப்படை தத்துவம்.

மேலும் மனித வாழ்வின் விளைவுகளை அவரைச் சூழ்ந்துள்ள திட அமைப்புகளும்(கண்ணுக்குப் புலப்படும் பொருள்கள்), கண்ணுக்குப் புலப்படாத மின்காந்த சக்தி அலைகள்(Electro Magnet Waves) ஆகியவையே தீர்மானிக்கிறது என்றும், எனவே நாம் சார்ந்த சூழலை இந்த கூறுகளுக்கேற்ப சமன்படுத்துவதினால் Harmony உறுவாக்கலாம் என்கிறது.

என்னுடைய வளர்ப்பில் நான் அனுபவித்த சிலவிடயங்களும், தற்போது படித்து உணர்ந்த விடயங்களும் ஒத்துப்போவதை பல சமயங்களில் ஆச்சர்யமாய் ரசித்ததுண்டு.

1.கூரை வீட்டில் வாழ்ந்த மக்கள் தற்போதைய காங்ரீட் காடுகளில் வாழும் மக்களை விட ஆரோக்கியமாய் வாழ்ந்தனர்.காரணம் கூரை வீடுகளின் கூம்பு வடிவ கூரை அமைப்பு பிரபஞ்சத்தில் நிறைந்திருக்கும் ப்ராணா எனப்படும் உயிர் சக்தியை ஈர்த்துக்கொடுத்தது.ப்ரமிடுகளும் அதன் சக்திகளும் உங்கள் நினைவுக்கு வரலாம்.

2.தலைவாசல் முதல் பின்வாசல் ஒரே நேர்கோட்டில் அமையும் வகையிலான வீடுகள்.வீடுகளின் நடுவே அமைக்கப்பட்ட தொட்டிமுற்ற அமைப்புகள் வீடுகளுக்குள் காற்று சுழற்சியை உறுவாக்கியது.

இப்படி சொல்லிக்கொண்டே போக நிறைய இருக்கிறது….பின்னூட்டத்தின் நீளம் கருதி இத்துடன் முடிக்கிறேன்.

செல்வன் Says:
March 29th, 2006 at 7:58 pm e
வாஸ்துன்னா என்னனு கூட சில வருஷம் முன்னாடி எனக்கு தெரியாது பார்ட்னர்.வீடு வாங்க ட்ரை பண்ணிட்டிருந்தேன்..சந்து குத்து வீடு ஒண்ணு விலைக்கு வந்துச்சு..வாங்கலாமனா வாஸ்து சரியில்லைண்ணாங்க.அதை எல்லாம் வியாபாரத்துல பாத்தா முடியுமா..விலை படியுது வாங்கறேன்னு சொன்னப்ப வேணாம் மறுபடி அதை விக்கறப்ப reseale value குறைஞ்சுடும்னு சொன்னாங்க.

வாஸ்து நம்பிக்கை இல்லாமலேயே அதுக்கப்புறம் வாஸ்து சாஸ்திரப்படி வீட்டை வாங்க வேண்டியதாப்போச்சு.

கொத்ஸ் Says:
March 29th, 2006 at 8:08 pm e
வாஸ்துவமா இது பத்தி எனக்கு தெரியாதுங்க. ஆனா சரியான சில விஷயங்கள் இருந்தாலும் அதை ஆளாளுக்கு வேணும்கிற மாதிரி இண்டர்பிரட் (interpret) பண்ணிக்கிட்டு அது மதிப்பு ஒண்ணும் இல்லாம பண்ணிட்டாங்க. இதுதான் நிஜம்.

தருமி Says:
March 29th, 2006 at 8:12 pm e
தமிழினி முத்து,
கிறித்துவக் கூட்டங்களுக்கு விளம்பரப் படுத்துவார்கள் - பார்த்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன். அதில் பல காரணங்களில் ஒன்றாக - ‘கடன் தொல்லை தீர வாருங்கள்’- என்று விளம்பரப்படுத்தி இருப்பார்கள். அதற்கு நான் சொல்லும் பொருள் - பிரசங்கியின் கடன் தொல்ல தீர வாருங்கள் என்பதே

தருமி Says:
March 29th, 2006 at 8:28 pm e
சம்மட்டி,
நீங்க சொல்றது நம்ம அடுத்த சோதிடப் பதிவில் வருதில்லா… அங்கேயும் வந்திருங்க.

தருமி Says:
March 29th, 2006 at 10:10 pm e
பிரேமலதா,
அவைகள் எல்லாம் வாஸ்து பாத்துக் கட்டியதாகச் சொல்லுகிறீர்களா? எப்படி?

தருமி Says:
March 29th, 2006 at 10:48 pm e
மகேஷ்,
முதல் தடவையா வர்ரீங்க…வரும்போதே செம லொள்ளோடு வர்ரீங்களே. அடிக்கடி இந்த மாதிரி லொள்ளோடு வந்துகிட்டு
இருங்க…

கில்மா,
சரியான கில்பாஞ்சியா இருக்கீங்களே!

V.Subramanian Says:
March 29th, 2006 at 11:20 pm e
நான் என்னுடைய வலைத்தளத்தை (இணைய வீடு) வாஸ்து படி அமைக்கவில்லை என்று நினைக்கிறேன். அதனால் தான் அவ்வளவாக விருந்தினர் வரவில்லை.

இருக்கட்டும் ஆனால் வாஸ்து சோதிடம் என்று எந்த ஒரு கலையையும் அழிக்க வேண்டாம். இன்று நமக்கு புரியவில்லை என்பதாலோ அல்லது ஏமாற்றும் எத்தர் அதிகம் இருப்பதாலோ அதை முழுமையாய் உணரும் வரை அதை அழிக்காமல் பாதுகாப்போம்.

ஜாதகம் பற்றிய என்னுடைய கருத்துக்களையும் பாருங்கள். பின்னொரு நாள் விரிவான கட்டுரை எழுதுகிறேன்.

http://yennottam.blogspot.com/

பட்டிணத்து ராசா Says:
March 30th, 2006 at 12:20 am e
சதயம்

//கூரை வீட்டில் வாழ்ந்த மக்கள் தற்போதைய காங்ரீட் காடுகளில் வாழும் மக்களை விட ஆரோக்கியமாய் வாழ்ந்தனர்//

இது எழைகள் எல்லோரும் நல்லவர்கள் பணம் படைத்தவர்கள் எல்லோரும் வில்லன்கள் ன்னு எம்ஜியார் படத்தில வருகிற உளவியல் மாதிரி, ஆனா நிஜம் வேறு. அரோக்கியமும், சராசரி மனிதர்களோட உயிர் வாழர வருடங்களும் இரண்டுமே அன்று இருந்ததவிட இன்று அதிகரிச்ந்த்தான் இருக்கு. இன்று இருக்கிற வாகனப்புகை தொழிற்சாலைக் கழிவு இப்படி பல விடயங்கள் நம்ம காற்றை மாசுப்படித்தியும். கண்டிப்பா இந்த சுழலில் அந்த குடிசைகள் அரோக்கியத்த தராது.

வாஸ்து எழுதன காலம், சுழ்நிலை, தேவை, புரிதல்,அறிவு இப்படி பல விடயங்கள் முன்னெறியாச்சு. இன்னமும் அத அப்படியே.. வேணாங்க..

துளசி கோபால் Says:
March 30th, 2006 at 2:42 am e
கூரை வீட்டில் சந்தோஷம் நிறைய இருந்ததுக்குக் காரணம், அப்பெல்லாம் ‘தேவைகள்’ கம்மி. டி.வி கிடையாது,
அதனாலே அக்கம்பக்கத்துலெ நட்போடு இருக்க முடிஞ்சது. இப்படிச் சொல்லிக்கிட்டே போகலாம்.

அப்புறம் தருமி,

அடுப்பு மேற்கே பார்க்கணும். சமைக்கிறவங்கதான் கிழக்கே பார்க்கணும். அதிகாலையிலே எழுந்து அடுப்பங்கரைக்குப் போய்
சமைக்க போரடியா இருக்குமுல்லே. அப்ப சூரிய வெளிச்சம் பார்த்தா , தூக்கம் போய் விழிப்பு நல்லா வந்துருமில்லே?
இல்லேன்னா , தூக்கக் கலக்கத்துலே சமையலில் ஒண்ணு கிடக்க ஒண்ணு போட்டுட்டா?

சிவா Says:
March 30th, 2006 at 9:15 am e
சார்! கடைசில வந்துட்டேன். இனி தொடர்ந்து வந்துடறேன்.

//* மாற்றியதும் நிறைய மாற்றங்கள் வாழ்க்கையில். அதில் பெரிய மாற்றம் - வங்கிக் கணக்கு! ரொம்ப மெலிஞ்சு போச்சுது. **// ) சூப்பர். இன்னொரு மாற்றம் வாஸ்து சொன்னவன் வங்கி கணக்கு பெருத்து போச்சு )

சார்! வாழ்க்கைல ஜோசியம், வாஸ்து இல்லாம இருக்கிறதை வச்சி சந்தோசமா வாழ்ந்தால் தான் வாழ்க்கை. எல்லாம் இருக்குறத விட்டுட்டு பறக்குறதுக்கு ஆசை. பேராசை சார். மனுசனுக்கு நிம்மதின்னா என்ன, திருப்தின்னா என்னன்னு புரியாம போச்சு. கடவுள் மேல, தன் மேல, சுற்றத்தின் மேல நம்பிக்கை போச்சு. அதான் சார்! இப்படி அலையறானுங்க. முட்டா பசங்க )

pot"tea"kadai Says:
March 30th, 2006 at 2:36 pm e
தருமி,
எனக்கு வாஸ்து பற்றி அ,ஆ…கூடத் தெரியாது. தெரிந்து கொள்ளலாமே என்று நினைக்கையில் எவர் எழுதிய வாஸ்துவில் ஓரளவாவது செய்தி இருக்கும் என்று தெரியாததால் அதைப் படிக்கும் ஆர்வம் எழவில்லை.
ஸ்தபதியாரை சந்தித்த பொழுது கூட “என்னிடம் ஓலைகள் இருக்கிறது” என்று கூறினாரேயொழிய மருந்துக்கு கூட கண்ணில் காட்டவில்லை.

//ஃபெங் ஷுய் என்பதில் ஃபெங் காற்றையும் ஷுய் நீரையும் குறிக்கிறது.அதாவது பிரபஞ்சத்தில் உள்ள அனைத்து சக்திகளிலும் காற்றும்,நீருமே நம் வாழ்க்கையை மேம்படுத்துவதில் பெரும் பங்கு வகிக்கின்றன என்பதே அடிப்படை தத்துவம்.//

காற்றும் நீரும் வாழ்க்கையை மேம்படுத்துகிறதா இல்லையா என்பது பற்றி எனக்குத் தெரியாது. ஆனால் இவை இரண்டும் உயிர் வாழ்தலுக்கு முக்கியமானது. ஆக அதை அடிப்படைத் தத்துவமாகக் கொள்வதில் தவறேதும் இல்லை. மேலும் அனைத்து மதங்களிலுமே நீர் முக்கியப் பங்காற்றுகிறது.

//மேலும் மனித வாழ்வின் விளைவுகளை அவரைச் சூழ்ந்துள்ள திட அமைப்புகளும்(கண்ணுக்குப் புலப்படும் பொருள்கள்), கண்ணுக்குப் புலப்படாத மின்காந்த சக்தி அலைகள் ஆகியவையே தீர்மானிக்கிறது என்றும், எனவே நாம் சார்ந்த சூழலை இந்த கூறுகளுக்கேற்ப சமன்படுத்துவதினால் ஹார்மொனியை உறுவாக்கலாம் என்கிறது.//

இதில் நம்பிக்கையும் இல்லை, இதில் தர்க்கம் செய்யவும் விரும்பவில்லை. ‘96 ல் சத்யபாமா பொறியியற்கல்லூரியில் VASTUTSAV நடைபெற்றது. நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வாஸ்து மற்றும் கட்டிடக்கலை நிபுணர்கள் கலந்துக் கொண்டனர். அன்று மாலை மாமல்லபுரத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அங்கு ஒரு வடநாட்டை சேர்ந்த வாஸ்து/கட்டிடகலை நிபுணர் ஒருவர் “Y” கவை போன்ற வடிவிலான இரும்பால் கூடிய ஒரு பொருளை இப்படியும் அப்படியும் நகர்த்தினார். ஆனால் ஒரு இடத்தில் மட்டும் அதன் செங்குத்தான பகுதி நகர்ந்து கீழே சரிந்தது. நானும் முயற்சி செய்தேன் ஆனால் ஒரு “ரியாக்க்ஷனும்” கிடையாது. “உனக்கு சரியான நிலையில் பிடிக்கத் தெரியவில்லை” என்று அதை என் கையில் இருந்து பறித்துக் கொண்டார். ஆக மின்காந்த அலைகள் வாஸ்து நிபுணர்களுக்கு மட்டுமே ஒத்து வரும்:-).

//வாஸ்து என்ற பெயரில் படுக்கை அறை கிழக்குத் திசையில் இருக்கவேண்டும். அது சரி; மாலை வெயில் விழுவதால் மேற்குப் பக்கம் உள்ள அறை இரவும்கூட உஷ்ணமாயிருக்கும். வாஸ்து என்ற பெயர் இதுக்குத் தேவையில்லை. common sense போதும்.//

அந்த “common sense” இருந்தால் இந்த வாஸ்து “nonsense” ஏன் இன்னும் இருக்கிறது?

//‘இதுக்கே சண்டைக்கு வர்ரீங்களே; வாஸ்துக்காரர் அந்த அறையில் மட்டும் electric switches-களை மட்டும் மாற்றி வைக்கச்(american style) சொல்லி, அப்படியே வைத்துள்ளேன்’ என்றான்! switches மாத்திறது கூட அந்தக் காலத்துல சொன்னவங்க சொல்லிட்டு போயிட்டாங்களா, என்ன?//

உங்க நண்பர் படிக்காமலே இருந்திருக்கலாம்!:-)

கட்டிடக்கலையின் அடிப்படை கோட்பாடுகளே symmetry, balance, proportion & aesthetics தான்.
அங்கோர்வாட் தொடங்கி எகிப்தீய பிரமீடுகள், புகழ் வாய்ந்த இஸ்லாமிய, கிறித்துவ தேவாலயங்கள் அனைத்தும் இதன் கோட்பாடுகளால் மட்டுமே அமைந்துள்ளது என்பது என் கருத்து.

பின்னாளில் கட்டிடங்கள் கட்டுவதற்கேற்ற இடங்கள் குறுகியதாலும்,கட்டுமானப் பொருள்களும் மாறியதாலும், தொழில் நுட்பத்தின் வளர்ச்சியாலும் “functional purpose” க்காக வேண்டி “symmetry”யில் சமரசம் செய்ய வேண்டியதாயிற்று.

Geetha Sambasivam Says:
March 30th, 2006 at 3:50 pm e
Thiru Sadhayam cholli iruppathuvum en karuththum oththu povathal virivaga ezhthavillai. Thiru Subramaniyam koori ullathai naan amothikkiren. Ithu oruththar oruththarukku thani thaniyaga than amaiyum. Anaal ungalai ponra murpokkuvathikal namba matteerkal. Now-a-days fashion is Do not Believe in God. Do not believe the country’s valid culture and heritage. This is the slogan for all the leftists.

Mahesh Says:
March 30th, 2006 at 5:08 pm e
என் மாமாவும், பக்கத்து வீட்டுக்காரரும் வாஸ்துக்குப் பண்ணிய சேவைகளைக் காண
http://www.mahendranmahesh.blogspot.com/



KRISHANRAJ.S Says:
March 31st, 2006 at 1:16 am e
DEAR THARUMI

I USE VAASTU BRAND JEANS.,

THE ZIPPERS ARE IN THE JALA MOOLAI
THE POCKETS IN THE DANA MOOLAI
THERE IS A HOLE IN THE VAYU MOOLAI.

THE TAILOR MISUNDERSTOOD THE LEGS SHOULD BE IN THE OPPOSITE DIRECTIONS.
MADE ONE LEG GOING UPPER SIDE TO THE CHEST AND ANOTHER LEG NORMAL.

AGAINT MADE TO ALTER ACCORDING TO VAASTU ,
BOTH THE LEG PIECES DOWN.

தருமி Says:
March 31st, 2006 at 4:51 pm e
V.Subramanian,
“… அதை அழிக்காமல் பாதுகாப்போம். : அப்படியென்றால் என்ன செய்வது?
அழிக்காமல் பாதுகாப்பது என்றால், அதனை முழுமையாய் உணரும்வரை நாம் வாஸ்துவைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றுதானே பொருள்?

தருமி Says:
March 31st, 2006 at 5:02 pm e
சதயம்,
உங்களுக்கு பட்டணத்து ராசா பதில் சொல்லிட்டாரு. அவருக்கு அதற்காக நன்றி

தருமி Says:
March 31st, 2006 at 11:00 pm e
partnerசெல்வன்,
அதாவது வண்டி வாங்கும்போது 8-ம் எண் உடைய வண்டி வாங்கக்கூடாது என்பாங்களே அது மாதிரி.

தருமி Says:
March 31st, 2006 at 11:02 pm e
கொத்ஸ்,
“ஆனா சரியான சில விஷயங்கள் இருந்தாலும்…”// - அந்த நல்ல / சரியான் விஷயங்களைத்தான் நான் common sense என்ற category-ல் கொண்டு வருகிறேன். மற்றவை…?

தருமி Says:
March 31st, 2006 at 11:05 pm e
துளசி,
உங்கவிளக்கம் நல்லாத்தான் இருக்கு

அதோட “அடுப்பு மேற்கே பார்க்கணும். சமைக்கிறவங்கதான் கிழக்கே பார்க்கணும்.” - இதில அடுப்பு எங்கேயும் பாக்கிறதில்லை; சமைக்கிறவங்க கிழக்கே பார்க்கக்கூடாது; அடுப்ப பார்க்கணும்

தருமி Says:
March 31st, 2006 at 11:10 pm e
வாங்க சிவா,
வந்திட்டீங்க ஒரு வழியா. ஆனா, “இனி தொடர்ந்து வந்துடறேன்..” - பாவங்க நீங்க; இப்படி ஒரு தீர்மானத்துக்கு வந்திட்டீங்களே

“கடவுள் மேல, தன் மேல, சுற்றத்தின் மேல நம்பிக்கை போச்சு” // - நீங்க சொன்னதில நடுவில உள்ளத மட்டுமே நம்பினால் போதும் என்றுதான் நான் நினைக்கிறேன்.

தருமி Says:
March 31st, 2006 at 11:28 pm e
Geetha Sambasivam,
சதயம், சுப்ரமணியன் இருவருக்கும் கூறிய பதில்கள் அப்படியானால் உங்களுக்கும்தான்.
“ungalai ponra murpokkuvathikal namba matteerkal.” - நன்றி for the compliment அறிவுஜீவி அப்டின்னு சொல்லாம விட்டுட்டீங்க…
“Now-a-days fashion is Do not Believe in God.” - இப்படி சொல்றதுதான் இப்போ ஃபாஷனாகிப் போச்சுன்னு நினைக்கிறேன். நண்பர் ஒருவரும் இதையே கூறினார். இதெல்லாம் பார்த்தால் எனக்குக் கோபம் எதுவும் வருவதேயில்லை, தெரியுமா? கொஞ்சம் வேடிக்கையாக இருக்கும்.அவ்வளவே.
Do not believe the country’s valid culture and heritage. This is the slogan for all the leftists. இல்லீங்க ma’am; i am NOT a leftist. பாவம் அவங்க நல்ல மனுஷங்க; அவங்கள போட்டு இங்க எதுக்கு இழுத்துக்கிட்டு…இல்லீங்களா?

Manasatchi Says:
March 31st, 2006 at 11:29 pm e
தருமி. அசத்துங்க.

daya Says:
March 31st, 2006 at 11:31 pm e
வாஸ்து உண்மையிலேயே ஒரு பொது அறிவு தாங்க. இளம் வெயில் நம் உடம்பில் படுவது எவ்வளவு நல்லதுன்னு அமெரிக்க மருத்துவர்கள் சொன்னா தான் நாம ஏத்துக்கோவோம். அந்த அளவுக்கு பொது அறிவும் பகுத்தறிவும் நமக்கு.

வாஸ்துவும் காற்று சுலபமாக வரனும் போகனும்ன்னு தான் வாசல் இருந்து பார்த்தா கொல்லை வாசல் தெரியனனும்னு சொல்கிறது. இன்னைக்கு அது சாத்தியமா. காலத்துக்கு ஏத்த மாதிரி ஒரு ஜன்னலை வச்சா அது சரியாகிறது.

அந்த அறிவை ஒரு கைடு மாதிரி உபயோகப்படுத்தினா சரியா வரும்.

நம்ம மக்களுக்கு கஷ்டம் வரும்போது இல்ல இன்னும் போராசையினாலே அல்லது ஒரு பெருமைக்காக வெட்டியா செய்யும்போது எதற்கும் அர்த்தமே இல்லாம போகிறது.

அதுவே வழக்கம் போல அவலை நினைச்சு உரலை இடிக்கிற கதையாக பகுத்தறிவு பேசனும்னா எதையும் தெளிவா புரிஞ்சுக்காம முயற்சியும் செய்யாம மனம் போன போக்கில பேசறவங்களுக்கு வசதியாக போகிறது.

premalatha Says:
March 31st, 2006 at 11:45 pm e
செம ஸ்மிலீலாம் வைச்சிருக்கீங்க. evil, twisted, idea… super. (இதுக்கு ஏதும் இல்லயா? :super: னு? )

ஜீவா Says:
April 1st, 2006 at 1:31 pm e
வாஸ்து என்ற வார்த்தையில் சமீப காலங்களாக புழங்க்குறது. ஆனால் மனையடி சாத்திரம் என்ற பெயரில் பல நூறாண்டுகளாக நம்நாட்டில் இருக்கிறது என்று என் கணிப்பு. என் வீட்டில் பல நூறு ஆண்டுகட்கு முட்பட்ட ஓலைச்சுவடியும் இருந்தது.

காகபுசுண்டர், அகத்தியர் என பலரும் எழுதியதாக பல புத்தகங்களும் இருந்தது.

அன்புடன்
ஜீவா

பாரதி Says:
April 1st, 2006 at 1:33 pm e
தருமி சார்,

சிவாவைத் தொடர்ந்து நானும்.

எனக்கு மிக நெருக்கமான நண்பர் வீட்டிற்குள் ஒரு நாள் இரவு திருடன் வந்துவிட, மனம் கலங்கிப் போனவரை வாஸ்து குறை என்று சொல்லி உசுப்பி விட்டனர் அக்கம் பக்கத்தினர்.

முன் வாசல் கதவு இருக்கும் இடம் சரியில்லை அதனால் தான் இப்படியெல்லாம் நிகழ்கிறது. அதை இடமாற்றம் செய்தால் பல்கிப் பெருகி பல காலம் வாழ்வீர்கள் என்றார் வாஸ்து நிபுணர்.

நண்பரும் செலவு செய்து வாஸ்து புருஷர் மனத்தைக் குளிர வைத்தார்.

இது நடந்த அடுத்த ஒரு வருடத்துக்குள் அவருடைய மனைவி நுரையீரல் புற்று நோயினால் பரிதாபமாக இறந்து போனார்.

தருமி Says:
April 1st, 2006 at 11:50 pm e
premalatha,
இந்தாங்க உங்களுக்காகவே இந்த ஸ்பெஷல் பின்னூட்டம்:
-இது எப்படி இருக்கு? ஒரு ரகசியம் உங்க கிட்ட மட்டும் சொல்லட்டா? இந்த ஸ்மைலிகள் எல்லாமே மதி உபயம்..வேற யாருட்டயும் சொல்ல வேண்டாம்; சரியா

தருமி Says:
April 1st, 2006 at 11:53 pm e
மகேஷ்,
கல்யாணமெல்லாம் ஆகாத பிள்ளை. நீங்கள்ளாம் இப்போ மாமாமார்களைக் கிண்டல் பண்ணக்கூடாது; தெரியுதா

தருமி Says:
April 1st, 2006 at 11:56 pm e
தயா,
“அதுவே வழக்கம் போல அவலை நினைச்சு உரலை இடிக்கிற கதையாக பகுத்தறிவு பேசனும்னா எதையும் தெளிவா புரிஞ்சுக்காம முயற்சியும் செய்யாம மனம் போன போக்கில பேசறவங்களுக்கு வசதியாக போகிறது.” // - செம உள்குத்தா இருக்கு

மனசாட்சி,
மிக்க நன்றி. இப்ப என்ன சொல்றீங்க மொதல்ல நீங்க அசந்துட்டீங்களா இல்லியா

தருமி Says:
April 2nd, 2006 at 12:00 am e
கிருஷ்ணராஜ்,
“AGAINT MADE TO ALTER ACCORDING TO VAASTU ,
BOTH THE LEG PIECES DOWN..”// தப்பு பண்ணீட்டிங்களே…இதுக்குத்தான் நம்மளமாதிரி சரியான வாஸ்து எக்ஸ்பெர்ட்டிடம் முதலிலேயே வரணும் அப்டிங்கிறது. யார் சொன்னா இது சரின்னு..முதல்ல இருந்த மாதிரி மறுபடி ஆல்டர் பண்ணிட்டு நடந்து பாருங்க..அப்ப பாருங்க …எங்கேயோ போயிருவீங்க

தருமி Says:
April 2nd, 2006 at 12:11 am e
பொட்டீக்ஸ்,
உங்களுக்கு மட்டும் கடைசியா பின்னூட்டம் இடலாமா, இல்லை உங்கள் பின்னூட்டத்தை cut & paste பண்ணி பதிவின் கடைசிப் பகுதியாகச் சேர்க்கலாமா (அப்படியானால் பதிவு பெரும் முக்கியத்துவத்தை உங்கள் பின்னூட்டமும் பெருமே என்ற எண்ணம்)என்று கொஞ்சம் குழப்பம்.

தெரியாதவர்களும் தெரிந்து கொள்வததற்காக: ‘பொட்டீக்கடைக்காரர்’கட்டிடக்கலையில் முதுகலைக் கல்வியை ஆஸ்திரேலியாவில் இப்போது படித்து வருகிறவர். எதற்காக இதை இங்குக் குறிப்பிடுகிறேனென்றால் அவர் தரும் செய்திகள் - from the mouth of the horse itself என்று சொல்வது போல - ஒரு துறையில் நிபுணத்துவம் பெற்றுவரும் ஒருவரின் வாஸ்து பற்றிய கூற்றுக்கு முக்கியத்துவமும், சிறப்பிடமும் தரவேண்டுமென்பதற்காகவே.

ஆனாலும் பொட்டீக், நீங்கள் இங்கு வந்து உங்கள் தொழிலை ஆரம்பிக்கும்போது வாஸ்து சாஸ்திரம் உங்களுக்கு தெரிந்து, அதைப் பின்பற்றிதானே உங்கள் கட்டிடங்களை வடிவமைக்க வேண்டியிருக்கும்?

pot"tea"kadai Says:
April 2nd, 2006 at 5:55 pm e
I have started reading a book on ANCIENT CITIES, SACRED SKIES - Cosmic Geometries and City Planning in Ancient India. It’s really helpful and the book wasn’t available in Sydney University and i had borrowed it from University of Newcastle. It was really helpful to understand the architectural principles of ancient INDIA. It never explained much about the residential plans/designs as Vastu Sastra was basically dealt with City Planning. It always dealt with grids which means proportions. So present day VASTU in residential buildings are **********(add anything abusive if u want) fake theories.

Those who believe in it are people who wants to blind themselves eventhough they could see!

pot"tea"kadai Says:
April 2nd, 2006 at 6:01 pm e
BTW Tharumi,
I had already practised my own for a year and worked with few architects for 4-5 years. I reckon I had good understanding about the people’s mentality and I never tried to market my designs in the name of VASTU. I used to tell them the facts practically and thats how i work.

So, Practicing anywhere in INDIA wouldnt be a great problem for me!

For previous post i can give real examples if you want but might take time as i have to scan few drawings!

premalatha Says:
April 4th, 2006 at 12:08 am e

premalatha Says:
April 4th, 2006 at 12:09 am e
http://www.hallofmaat.com/smilie.html

தருமி Says:
April 4th, 2006 at 2:48 pm e
பொட்டீக்ஸ்,
” i can give real examples ..”// that would be greatly appreciated.

பிரேமலதா,அவைகளை எப்படி நம்ம ‘வீட்ல′ இறக்குவது என்றும் சொல்லிடுங்களேன், please!

pot"tea"kadai Says:
May 16th, 2006 at 4:24 pm e
tharumi,

Here is an article by Mano, i was happened to be his student for a year. His article published in Hindu long bck.I just came across this today…

click here

dharumi Says:
May 17th, 2006 at 3:31 pm e
potteeks,
thanks for the reference. i would like to quote one of his statements here: “Science claims neither absolute knowledge nor infallibility. Anything which does do so is not to be trusted as a basis for living.”

his question on having the kithcen according to vasthu sastra in chennai is so pointed. but i wonder whether any amount of such valid questions can wake the believers at all to reality and to eral science.

Sunday, March 26, 2006

145. இரட்டை எச்சரிக்கை:

இதனால் நம் தமிழ் மணத்தில் என் பதிவுகளை அவ்வப்போதாவது வாசித்து வரும் அன்பு மனம் கொண்ட அந்த ஒரு சில நல்ல உள்ளங்களுக்கு ஒன்றல்ல இரண்டு எச்சரிக்கைகளை இதன் மூலம் தெரிவித்துக் கொள்(ல்)கிறேன்:

தமிழில் எழுதிக் ‘குவிப்பது’ பற்றாது என்பதுபோல் இப்போது தருமிக்கு ஆங்கிலத்திலும் எழுதிக் குவிக்க ஆசை வந்தால் அது உங்கள் தலைவிதி; தருமியை என்ன சொல்ல முடியும், பாவம்.

ஏற்கெனவே முதலில் ஆங்கில இடுகை ஒன்று ஆரம்பித்து, அதன் பிறகு தமிழ்மண ‘ஜோதி’யில் கலந்ததும் ஆங்கில இடுகை மறந்தே போச்சு; இப்போ ப்ளாக் தேசம் வந்திருச்சா, பழைய நினப்புடா பேராண்டின்னு ஆயிப்போச்சு. defunct ஆகிப்போன அந்த ப்ளாக்கில் இருந்த விஷயங்களை வைத்து மீண்டும் உங்களை தொல்லைப்படுத்த புதுசா ஆங்கிலத்தில ஆரம்பிச்சிட்டேன்ல… எல்லாம் உங்கள நம்பிதான்… ‘உங்கள் பொன்னான ஆதரவை நம்பி’ அப்டின்னு timely வேண்டுகோளோடு -ஆறாவது விரல் / sixth finger - என்ற தலைப்பில் ஆரம்பிச்சிருக்கேன்; கண்டுக்குங்க…அதில உள்ள tagline-ல சொல்லியிருக்கிறது மாதிரி என் சந்தோஷங்களையும், வயித்தெரிச்சல்களையும் உங்களோட பகிர்ந்து கொள்றதா ஒரு திட்டம்.

சில நல்ல மனுஷங்க (ஒண்ணிரண்டு பேரு மட்டும்தான்; மற்றவங்க யாரும் கண்டுக்கிட்டதே இல்லை என்றாலும்..) என் தமிழ் இடுகையின் ஒவ்வொரு பதிவிலும் ஏதாவது ஒரு படம் என்று போட்டு வந்ததற்கு கொஞ்சம் பாராட்டி விட்டார்கள். அது போதாதா நமக்கு.. உடனே புகைப்படங்களுக்கென்றே இன்னொரு ப்ளாக் ஆரம்பிச்சாச்சு… ஆசை யாரை விட்டது, சொல்லுங்க. முடிஞ்சவரை இரண்டு ப்ளாக்குகளிலும் படங்கள் repeat ஆகாமப் பாத்துக்கிறேன். ( ஏற்கெனவே இந்த தீர்மானத்தை மீறியாச்சு!) அப்பப்போ அங்கயும் வந்து பாருங்க.







Pathivu Toolbar ©2005thamizmanam.com


Mar 26 2006 07:58 pm | சொந்தக்கதை.. | | edit this
15 Responses
இளவஞ்சி Says:
March 26th, 2006 at 8:35 pm e
தருமி சார்! கலக்குங்க!!!

ஆனா ஒரே ஒரு கண்டிஷன்! என்னைமாதிரி இங்கிலீபீசு வராத ஆட்களின் சார்பில்!!! அங்க என்ன எழுதினாலும் அதை மொதல்ல இங்கதான் எழுதனும்(தமில்ல.. ) சரியா??

இல்லைனா அங்க வந்து (-) குத்திடுவேன்! இங்கிலீசு தெர்லன்னாலும் நமக்கு - தெரியும்ல!!

Padma Arvind Says:
March 26th, 2006 at 8:55 pm e
இன்னும் கொஞ்ச நாளில தெலுங்கு, மலையாளம் இன்னு எல்லா மொழியிலயும் ஆரம்பிச்சுடுவீங்க. ஆங்கிலத்தில எழுதறது இன்னும் எளிமையா இருக்கும். வாழ்த்துகள்

மணியன் Says:
March 26th, 2006 at 10:41 pm e
கலக்குங்கண்ணா கலக்குங்க!!
உங்கள் ஆங்கில பதிவுகள் இரண்டுமே நன்றாக இருந்தது.
தமிழ்திறன் இங்கு கண்டால் ஆங்கிலத் திறன் அங்கு கண்டேன்.
வாழ்த்துக்கள்!

தருமி Says:
March 27th, 2006 at 3:30 pm e
ரெண்டு விஷயம் இளவஞ்சி:
1. ஆமா, சொன்னாங்க உங்களுக்குத் தமிழில் எழுதவே தெரியாதாமே! நீங்க எழுதறத வாசிச்சா கண்ணுல தண்ணி வராதாமே! எப்பவாவது எழுதினாலும், எழுதறத அழகா, மனசில பதியிறது மாதிரி ‘நச்’சுன்னு எழுதத் தெரியாதாமே! எல்லாரும் ‘நாலு’ பற்றி பதிவு போட்டாலும் ‘you’re a complet man’ அப்டின்னு comment வாங்குறது மாதிரி உங்களுக்கு எழுதவே தெரியாதாமே! - சொன்னாங்க
தமிழில எழுதத் தெரியாத மாதிரிதான் ஆங்கிலத்திலும் உங்களுக்கு எழுதத் தெரியாதாமே, அப்படியா
அடப் போங்க..இளவஞ்சி.

2. நான்தான் ‘பட்டை’ போட முடியாம தவிச்சிக்கிட்டு இருக்கேனே..நீங்க எங்க பிறகு - /+ போட்றது?! அதென்ன எனக்கும் பட்டைக்கும் இவ்வளவு தூரமா இருக்கு? இதுக்காகவே பட்டை போடணும்போல இருக்கு

தருமி Says:
March 27th, 2006 at 3:32 pm e
பத்மா,
நான் ஒண்ணும் அவ்வளவு மோசமான ஆள் கிடையாது; எனது ‘கொலைகளை’ இந்த இரண்டு மொழிகளோடு நிச்சயமாக நிறுத்திகொள்வேன். ‘நாக்கு தெலுகு தெலிலேது’; ‘மலயாளம்…?

தருமி Says:
March 27th, 2006 at 3:34 pm e
மணியன்,
நீங்க சொன்னதை ‘உண்மை’யெனப் பாவித்து, சந்தோஷப்பட்டுக்கிறேன் - with your permission

சோம்பேறி பையன் Says:
July 11th, 2006 at 4:51 pm e
// என்னைமாதிரி இங்கிலீபீசு வராத ஆட்களின் சார்பில்!!! அங்க என்ன எழுதினாலும் அதை மொதல்ல இங்கதான் எழுதனும்(தமில்ல.. ) சரியா?? //

இதை முற்றிலும் வழிமொழிகிறேன்.. வாழ்த்துக்கள் தருமி, தமிழில் கலக்குவது போல் ஆங்கிலத்திலும் கலக்குங்கள் !!!

பொன்ஸ் Says:
July 17th, 2006 at 2:49 pm e
// என்னைமாதிரி இங்கிலீபீசு வராத ஆட்களின் சார்பில்!!! அங்க என்ன எழுதினாலும் அதை மொதல்ல இங்கதான் எழுதனும்(தமில்ல.. ) சரியா?? //

நானும் நானும்

தருமி Says:
July 18th, 2006 at 8:51 am e
சோ.பையானாரே,
அட போங்கப்பா…அகில உலகமே சுத்துவாங்களாம். (இஸ்ரேலில் ஆரம்பிச்சாச்சுல்லா… அடுத்து உலகம் சுத்துதறதுக்கு இது ஒரு முன்னோட்டம்தானே?) கேட்டா இங்கிலிபீசு தெரியாதுன்னு சொல்லிக்குவாங்க…
இதுக்குப் பேருதான்..fishing for compliments!

selvanayaki Says:
July 18th, 2006 at 10:07 am e
///நம் தமிழ் மணத்தில் என் பதிவுகளை அவ்வப்போதாவது வாசித்து வரும் அன்பு மனம் கொண்ட அந்த ஒரு சில நல்ல உள்ளங்களுக்கு ////

அந்த நல்ல உள்ளங்களில் நானும் உண்டுன்னு நினைக்கிறேன் எழுதுங்க எழுதுங்க! படிச்சிடுவேன். ஆனா பதிவு போட என்றில்லாமல், பின்னூட்டம் போடவே நாட்கள் எடுத்துக்கொள்ளும் என்னை மாதிரி ஆசாமிகள் (வேற யாரும் இருக்காங்களா என்ன இவ்வளவு சோம்பேறியா) உங்களின் மௌன வாசகர்கள் என்றும் அறிக.

TheKa Says:
July 18th, 2006 at 10:02 pm e
I am listening still but with a difference, right now I am busy fishing and frogging (hehehe… ) along with one of those many Minnesota lake beaches.

Thirumba vandhu kando kirengov…

தருமி Says:
July 18th, 2006 at 10:11 pm e
வாங்க செல்வநாயகி,
உங்கள் எழுத்தைப் பாராட்டி (நெஜம்மான உணர்வோடு..) ஒரு பின்னூட்டம் போட்டதாக -வேறு ஒரு பதிவில் நினைவு. நீங்கள் என் தொடர் வாசகர் அறிவது மிக்க மகிழ்ச்சி. அடிக்கடி வரணும்.
நன்றி.

கொத்ஸ் Says:
July 18th, 2006 at 10:22 pm e
நடத்துங்க சாமி! வாழ்த்துக்கள்!

sarah Says:
July 18th, 2006 at 11:17 pm e
//அந்த நல்ல உள்ளங்களில் நானும் உண்டுன்னு நினைக்கிறேன் எழுதுங்க எழுதுங்க! படிச்சிடுவேன். ஆனா பதிவு போட என்றில்லாமல், பின்னூட்டம் போடவே நாட்கள் எடுத்துக்கொள்ளும் என்னை மாதிரி ஆசாமிகள் (வேற யாரும் இருக்காங்களா என்ன இவ்வளவு சோம்பேறியா) //

ஆஹா, செல்வநாயகி, என்ன இப்படி படக்னு சொல்லிட்டீங்க?. அப்புறம், நான்?

தருமி சார்! கலக்குங்க!!!

சாரா.

selvanayaki Says:
July 24th, 2006 at 11:45 am e
மகிழ்ச்சியா இருக்கு சாரா, என்னை மாதிரியே (அட….. சோம்பேறியாத்தான்) இன்னொருவர் இருப்பதை அறிந்து

Saturday, March 18, 2006

144.எப்படி இருந்த நான்… !

எனது பழைய பதிவொன்றில் மதுரையின் பழம் பெருமை வாய்ந்த ஒரு கட்டிடத்தினைப் பற்றி எழுதியிருந்தேன். எழுதி இரண்டு மூன்று மாதங்களில் அந்த இடத்தைத் தாண்டி செல்லும்போது பார்த்தது ஒரு கணம் திடுக்கிட வைத்தது. ‘எப்படியிருந்த நான் இப்படி ஆயிட்டேன்’ அப்டின்னு சோகமா சொன்னது மாதிரி இருந்தது. . அந்தக் காலத்துப் பெருமையெல்லாம் போய் - சிலரின் அந்திக் காலத்தில் உடம்பெல்லாம் வற்றிப் போய், துருத்திக்கொண்டிருக்கும் முன்பற்களோடு பரிதாபமாகத் தோற்றமளிப்பார்களே அது மாதிரி - முன்னால் இருந்த அந்த முகப்பு -facade - மட்டும் இடிக்கப்படாமல், அதன் ஜன்னல்கள் வழியே தெரியும் உள்வெற்றிடம் வெட்டவெளியாய் தெரிய நின்று கொண்டிருக்கிறது.
எதற்கும் அந்தப் பதிவில் பதிவில் போட்டிருக்கும் படத்தையும் அதன் பழம் பெருமையையும் பார்த்துக்கொள்ளுங்களேன்.

ஒரு கொசுறு சேதி: ஒரு காலத்தில் ஊரிலேயே பெரிய தங்குமிடமாக இருந்த போது, இதன் அருகில் ஒரு ‘ஃபேமஸ்’ இட்லிக்கடை இருந்தது என்று எழுதியிருந்தேன். இன்றும் இந்தப் பாழடைந்த கட்டிடத்தின் எதிர்தாற்போல் சுப்ரமணிய சாமி புகழ் முருகன் இட்லிக் கடை உள்ளது. இந்தப் படம் எடுக்கும்போது அந்தக் கடையில் உள்ளவர் ஒருவரிடம், ‘இந்த இடத்தில என்ன வரப் போகுதுன்னு’ கேட்டேன். ‘ஓணர் இன்னும் இதை விற்கவில்லை; அதனால என்ன வரப்போகும்னு தெரியாது’ என்று சொல்லிவிட்டு, ‘என்ன சார், நீங்க பத்திரிக்கைகாரரா?’ என்று கேட்டார்.

யாரும் வாங்கிப் போடறதுன்னா போடலாமேன்னு இந்த ‘டிப்ஸ்’ கொடுத்தேன்







Pathivu Toolbar ©2005thamizmanam.com


Mar 18 2006 10:45 pm | Uncategorized | | edit this
4 Responses
சிங்.செயகுமார் Says:
March 18th, 2006 at 11:15 pm e
தருமி சார் கண்ணதாசன் சொல்லுவாரே அந்த லாட்ஸா இது?!

selvan Says:
March 19th, 2006 at 4:19 am e
பார்ட்னர்,

மாடர்ன் லாட்ஜ் கதைய கேட்டதும் பாவமா போச்சு.மாடர்ன் லாட்ஜுன்னு பேரு வெச்சா போதுமா?மாடர்னா போட்டி போட்டு ஓடிருக்க வேண்டாமா?

Geetha Sambasivam Says:
March 19th, 2006 at 4:54 pm e
Oru kalaththil koottam neriyum idam ippothu ippadiya? Maduraiyin mugam modern aga mari vittathu.Now she is a modern girl.

கில்லி - Gilli » Madurai, then & now - Dharumi Says:
April 8th, 2006 at 5:16 am e
[…] ‘எப்படி இருந்த நான் இப்படி ஆய்ட்டேன்’ என்று விவேக் ஸ்டைலில் மதுரை நகரம் புலம்பினால் எப்படி இருக்கும்? தருமியின் இந்தப் பதிவு போல இருக்கும்… […]

Tuesday, March 14, 2006

143. சோதிடம்..9 - ராசிபலன்

முந்திய பதிவுகள்:
1.
2.
3.4.
5.
6.
7.
8.

பிந்திய பதிவுகள்:

10.
11.
12.
13.





ராசி பலன்களும், ராசிக்கற்களும்…

ஒரு பத்திரிக்கை விடாமல் எல்லா பத்திரிக்கைகளிலும் வரும் ஐட்டம் ஒன்று உண்டென்றால் அது ‘இந்த வார ராசிபலன்’தான். அந்தக் காலத்தில் நான்கூட Peter Vidal அப்டின்னு ஒரு ஆளு I.E.-ல் எழுதுவார்ல அதப் படிக்கிறது உண்டு. அப்போ யாராவது இத ஏன் படிக்கிற அப்டின்னு கேட்டா வழக்கமா நம்ம எல்லோரும் ஒரு பதில் வச்சிருப்போமே - ‘சும்மாதான்’ - அதச் சொல்லிர்ரது. அதுக்குப் பிறகு ஒண்ணு புரிஞ்சிது. பாஸிட்டாவா ஏதாவது சொல்லியிருந்தா அத ஒண்ணும் சீரியசா எடுத்துக்கிறதில்லை; ஆனால் நெகட்டிவா ஏதாவது இருந்தா கொஞ்சம் நெருடலா இருந்திச்சு. ஆனா கடைசியில அது ஒண்ணுமில்லாத விஷயமாத்தான் இருக்கும். அப்புறம் இதப் போட்டு எதுக்குப் பாக்கணும்னு லேட்டா புத்தி வந்திச்சி.

பிறகு ஒரு சமயத்தில இந்த ராசிபலன்களுக்கு ஒன்னொரு பயன் இருப்பது தெரிந்தது. ரொமான்ஸ் பண்ற ஆளுங்க நிறைய பேர்,’ஆஹா, பாத்தியா..நம்ம ரெண்டு பேர் ராசிக்கும் எவ்வளவு ஒற்றுமை’ அப்டின்னு காண்பிச்சிக்கிறதுக்கு அவங்க ரெண்டு பேரோட ராசிகளா வாசிச்சி, அடிக்கோடிட்டு அமர்க்களம் பண்ணிக்கிட்டு இருந்தாங்க. நாமும் பார்ப்போமேன்னு வாசிச்சிப் பாத்தேன். அவங்க சொன்னது மாதிரி அவங்க ரெண்டு பேரும் பொருத்தம்னா பொருத்தம் அவ்வளவு பொருத்தமா இருந்தாங்க. பரவாயில்லையே, ரொம்ப பொருத்தமாத்தான் இருக்காங்கன்னு நினச்சேன். சரி எதுக்கும் வேற ராசிக்காரங்களுக்கும் இவங்களுக்கும் பொருத்தம் எப்படி இருக்குனு பார்க்கலாமேன்னு பார்த்தேன். பார்த்தா எந்த ராசி எடுத்துக்கிட்டாலும் அங்கங்க நம்மளுக்கு வேண்டிய மாதிரியான பொருத்தங்கள் இருந்திச்சு. அப்போதுதான் புரிஞ்சுது - நல்லது நாலு; அப்பப்ப நடுவில ஒண்ணு ரெண்டு நெகட்டிவா போட்டுட்டு, அதையும் கொஞ்சம் தட்டி கிட்டி அட்ஜஸ்ட் பண்ணிப் போட்டுட்டா வாசிக்கிற எல்லாரும் சந்தோஷமா போயிடுவாங்களல்லவான்னு புரிஞ்சுது. மக்களின் மனச நல்ல புரிஞ்சி வச்சிக்கிட்டு நல்லாவே காசு பார்க்கிறாங்கன்னு தெரிஞ்சுது.

சரி..இதெல்லாம் நம்ம நாட்டு சரக்கு கிடையாது. நம்ம சரக்கு அதவிட எல்லாம் ரொம்ப ஒஸ்தி அப்டின்னு ஒரு விவாதம் வரலாம். நம்ம ராசிபலனில் மொத்தம் 12 ராசிகள்..மேஷம், ரிஷபம் அப்டி இப்டின்னு. வாசிச்சி பாத்தா அதே ‘தத்துவம்’தான்னு புரிச்ஞ்சிது.

இதுல்ல ஒரே ஒரு கேள்வி மட்டும் போதும்னு தோணுது. உலகத்தில இப்போதைக்கு 6-7 பில்லியன் மக்கள் இருக்கிறாங்களா? இதுவரை பிறந்த வாழ்ந்து முடிச்சிவங்க எத்தனை கோடியோ? இன்னும் பிறக்கப் போறது எவ்வளவோ? இந்த எண்ணிக்கை அவ்வளவையும் ரொம்ப சிம்ப்பிளா பன்னிரெண்டே வகையா பிரிச்சி, அவர்கள் எல்லாரும் இந்த இந்த குணநலன்களோடு இருப்பார்கள் என்பதுவும், இத்தகைய பலன்கள் அவர்கள் வாழ்க்கையில் இப்பப்ப நடக்கும் என்பதுவும் ‘கடல் தண்ணிய கடுகில் அடைக்கிறது’ மாதிரிதான் தோன்றுகிறது. மனுஷ டைப்புகளே 12 மட்டும்தானா? Is it not every human being an individual, a clear and separate entity? எல்லோரையும் பன்னிரெண்டு வகையில் ஏதோ ஒன்றில் அடைக்க முடியுமா, என்ன?

இந்த மாசத்தில் பிறந்தால் நீ இந்த நட்சத்திரம்…உனக்கு இந்த ராசி…அப்போ உன் குணம் இப்படிதான் இருக்கும்..உன் வாழ்க்கை இப்படி இப்படி அமையும்…..இதில் என்ன விஞ்ஞான உண்மைகள் உள்ளன? என்ன தத்துவம் பின்னடங்கியுள்ளது? என்ன லாஜிக் இருக்கிறது? என்ன common sense இருக்கிறது? Is human life so simple to be put into any one of these strait jacket compartments? Is human behaviour such a simplistic affair? —-பதில்கள் எனக்குத் தெரியவில்லை..

இதை ஒட்டிய இன்னொரு விஷயம்: ராசிக்கல்.
கற்களுக்கு, அதுவும் ஒவ்வொரு கல்லுக்கும், வேறு வேறு ஆட்களுக்கும் தனித்தனி பலனாம். கற்களுக்கு ஒரு effect இருக்குன்னு சொன்னா, இயல்பியல், வேறியியல் இப்படி ஏதாவது ஒன்றின் தயவை நாடலாம் - either to prove it or disprove it. ஆனால் இங்க ஒரே கல் ஆளாளுக்கு, தனித்தனி பலன் கொடுக்குதுன்னு சொன்னா அதை எந்த விஞ்ஞானத்தின் கீழ் கொண்டு வருவது? ஏதாவது செய்து எப்படியாவது காசு பார்க்க மாட்டோமா அப்டின்னு பரிதவிக்கிறவங்க இருக்கிறது வரை இந்தக் கல் வியாபாரிகளுக்கு நல்ல வியாபாரம்தான்.




Š

Š







Pathivu Toolbar ©2005thamizmanam.com


Mar 14 2006 01:41 pm | சமூகம் | | edit this
31 Responses
துளசி கோபால் Says:
March 14th, 2006 at 2:21 pm e
என்னங்க தருமி,

நம்மளாவது ஒரு நட்சத்திரத்துலெ பொறந்தவுங்களுக்கு ஜோசியம் சொல்லிடறோம். இங்கே இங்கிலீஷ்காரன்
ஒரு மாசம் பூரா பிறந்தவனுக்கு ஒரு ராசியாம். உதாரணம் என்னன்னா நம்ம கும்பராசிக்கு ஜனவரி 20 லே இருந்து ஃபிப்ரவரி
18 வரை. ஆனா நம்மூர் நட்சத்திரப்படி நானு துலாம். அப்ப நானு எதுன்னு பலன் பாக்கறது? எது நல்லதோ அது என்னோடது:-)

ராசிக்கல்லைப் பொறுத்தவறை, எல்லாத்துக்கும் பொதுவா ‘நவரத்திக்கற்கள்’ நகையைப் போட்டுக்கலாம். எல்லாக் கலர்
உடுப்புக்கும் பொருத்தமா இருக்குமுல்லே?

Geetha Sambasivam Says:
March 14th, 2006 at 2:23 pm e
Ahaa, atleast we are agreeing in this matter. I am also not a believer in the RASIPALAN of the magazines.And not a believer of wearing a stone according to my Rasi or change my name into numerological method. I am a believer of God who will give us everything we are able to get, not even a penny less or not even a penny more.

suresh - penathal Says:
March 14th, 2006 at 3:03 pm e
ஒரு பெரிய கல் எடுத்து பலன் சொல்றவன் தலையிலே போட்டா நிச்சயம் பலன் இருக்கும் தருமி. (ஐடியா உபயம்: பாளையத்தம்மன் விவேக்.

தருமி Says:
March 14th, 2006 at 4:07 pm e
துளசி,
இந்த கல்மோதிரங்கள் மேல் எனக்கு ஒரு காலத்தில (இப்பவும்தான்!) ஆசை. ஒரு தடவை நாலஞ்சு கலர்ல வகை வகையா வாங்கி அப்பப்போ கலர் கலரா மினுக்கிக்கிட்டு போறதுண்டு. ஆனா எல்லாம் கண்ணாடிக்கல்; ஸ்டீல் மோதிரங்கள். அவ்வளவுதான் நம்பளால முடியும்!!

தருமி Says:
March 14th, 2006 at 4:23 pm e
கீதா சாம்பச்சிவம்,
“I am a believer of God ” - இதுதானங்க எல்லாரும் வேணும்னு சொல்றாங்க. இதயும் வச்சிக்கிட்டு, பிறகு ஏன் சாதகம்,ராசின்னு ஓட(றீ)றாங்க?!

muthu(tamizhini) Says:
March 14th, 2006 at 5:22 pm e
இதையெல்லாம் கடுமையா விமரிசிக்கலாம் கெட்ட பெயர் தான் வரும்..குரங்கு மாதிரி ஒர்த்தன் வந்து ராசிக்கல் மோதிரத்தை பத்தி பேசுவான் பாருங்க..விஜய் டிவின்னு நினைக்கிறென்…அவன பாம்பே லோக்கல் டிவி சேனல்ல நான் பார்த்தேன்..பாருங்க அவன் ரீச்சை..நம்ப மக்கள் முட்டாளுங்க..அவன என்ன சொல்றது?

கொத்ஸ் Says:
March 14th, 2006 at 6:21 pm e
என்ன நைனா இப்படி சொல்லிட்டீங்க. போனதபா இந்தியா வந்தாசொல்ல, நைட் டீ.வீ.ல இந்த கல்லுங்க பத்தியும் பேரு மாத்தி வைக்கறது பத்தியும் ப்ரோகிராமெல்லாம் பாத்தேன். படா டமாசா இருந்திச்சிப்பா. காதுல எல்லாம் என்னென்னவோ மாட்டிக்கிட்டு அந்த ஆளுங்க அடிச்ச லூட்டி தாங்கலப்பா.

அவங்களே எப்பமாச்சும் அளுக சீரியலுக்கு நடுவா இந்த மாதிரி காமெடி எல்லாம் போடறாங்க. விட மாட்டீங்க போல இருக்கே.

தருமி Says:
March 14th, 2006 at 6:49 pm e
சுரேஷ்,
“ஒரு பெரிய கல் எடுத்து பலன் சொல்றவன் தலையிலே போட்டா நிச்சயம் பலன் இருக்கும் தருமி.”//-
இல்ல சுரேஷ், நாம் அந்த ஆளுகளை மதிக்கணும்; ஏன்னா இத்தனை பேரை ஏமாத்தணும்னா அந்த ஆட்கள் எவ்வளவு திறமைசாலிகளாக, புத்திசாலிகளா இருக்கணும்.

ஆனா இந்த ஆட்கள் முன்னால் உக்காந்திருக்குதுகளே அதுக தலையில நீங்க சொல்ற மாதிரி பெருசா போடணும். ஏன்னா அதுகதானே பேரு மாத்தினதும், கல் மோதிரம் போட்டதும் கூறையப் பிச்சுக்கிட்டு ‘மேல′ இருந்து விழுகப்போகுதுன்னு நினைக்குதுக.அதுக தலைதான் சரியான டார்கெட்…இல்ல?

தாணு Says:
March 14th, 2006 at 8:52 pm e
அட
நான்கூட `காதலித்த நாட்களில்’ பீட்டர் விட்டால் வாசித்திருக்கிறேனே!

தருமி Says:
March 14th, 2006 at 9:51 pm e
தமிழினி முத்து,
“நம்ப மக்கள் முட்டாளுங்க..அவன என்ன சொல்றது?”//
- நானும் அதத்தான் சொல்றேன்…அவர்கள் மேல் தப்பே இல்லை. நம்புகிறவன் இருக்கிற வரை ஏமாத்துறவன் ஏமாத்தத்தான் செய்வான்.

சிமுலேஷன் Says:
March 14th, 2006 at 10:07 pm e
புயலுக்கு என்ன பெயர் வைப்பது என்ற எனது கட்டுரையையும் பார்க்கவும்.

http://simulationpadaippugal.blogspot.com/2005_12_01_simulationpadaippugal_archive.html

- சிமுலேஷன்

தருமி Says:
March 14th, 2006 at 10:08 pm e
கொத்ஸ்
” ….அளுக சீரியலுக்கு நடுவா இந்த மாதிரி காமெடி எல்லாம் போடறாங்க”
பிரச்சனை என்னன்னா, சீரியல்களில் அவங்க அழுவுறாங்க; இதில நமக்கு அழுகை வருதே …

தருமி Says:
March 14th, 2006 at 10:27 pm e
தாணு,
பேப்ப்ர கட் பண்ணி, அண்டர்லைன் பண்ணி ‘தலைவருக்குக்’ கொடுதிருப்பீங்களே

தருமி Says:
March 14th, 2006 at 10:35 pm e
சிமுலேஷன்,
உங்க புயல் எங்க வீசுதுன்னு தெரியலையே

Mohan P Sivam Says:
March 14th, 2006 at 10:43 pm e
நம்ம ஊரைப் பொறுத்தவரைக்கும் 12 டைப்பா மட்டும் பிரிக்கறதில்லை. அதிலேயும் நிறைய காம்பினேஷன் வரும்.
உதாரணமா லக்னம், நட்சத்திரம், ராசி அப்படி பார்த்தா (12 x 27 x 12) நிறைய வகைப்படுத்தி இருப்பாங்க. லக்னத்துக்கு தனி கேரக்டர், நட்சத்திரத்துக்கு தனி கேரக்டர், ராசிக்கு தனி கேரக்டர் இது ஒன்னொன்னும் கலந்து வேதி வினை மாற்றத்துக்குள்ளாகும் போது அது ஒரு தனி கேரக்டர்.

மற்றபடி கல் விசயத்துல துளிசி கோபால் அவர்கள் சொன்னது தான்.

வெளிகண்ட நாதர் Says:
March 14th, 2006 at 10:53 pm e
இந்த ராசி பலன் சும்மா படிச்சிட்டு பசங்ககிட்ட பீலா வுட்டு திரியறதுக்கு. இந்த கல்லு, வேணாம், நமக்கு எமகண்டன் மாதிரி, இந்த மஞ்சகல்லால வந்த வினை வேணவே வேணாம், அப்புறம் இதை ஒரு பதிவா போடறேன்!

இராமநாதன் Says:
March 15th, 2006 at 1:43 am e
ஆஹா, பெரிய தொடரா இருக்கே.. பொறுமையா ஆரம்பத்துலேர்ந்து படிச்சிட்டு வரேன்.

தருமி Says:
March 15th, 2006 at 9:27 am e
Mohan P Sivam,

“அப்படி பார்த்தா (12 x 27 x 12) ..”//
- அப்படி பார்த்தாலும் 3888 தான வருது…

பின்னூட்டங்கள பார்க்கும்போது இன்னொரு காம்பினேஷன் தெரியுது. சாதகம் மட்டும் நம்புறவங்க..சாதகம்+ராசி; ராசி மட்டும்; ராசி+கல்; சா+க+ரா; கல்+ வாஸ்து; சாதகம்+ வாஸ்து+கல்+எண் கணிதம்…பயங்கர permutation combination-ஆக இருக்கும் போலவே இதப் பத்திக் கூட ஒரு சமூகவியல் ஆராய்ச்சி நடத்தலாம் போல இருக்கு

தருமி Says:
March 15th, 2006 at 9:32 am e
வெளிகண்ட நாதர்,
என்ன நீங்க..நான் ஒண்ணு சொன்னா, அதில இருந்து அடிக்கடி சொந்தக் கதை..சோகக்கதைன்னு போயிடறீங்க..அதுவும் நல்லா இருக்கு…ஜமாய்ங்க…

தருமி Says:
March 15th, 2006 at 9:37 am e
இராமநாதன்,
நீங்கதான் இந்தப் பக்கம் வந்து ரொம்ப நாளாச்சே…ஏதோ பெரீஈஈஈஈயப்பான்னு ஒரு சீவன் இருக்கேன்னு ஞாபகமே இல்லாம போச்சு ??: சரி…அடுத்தவங்க வீட்ல வச்சு பார்க்கலாமான்னு பாத்தா அங்கயும் கண்ல படறதில்ல..F1 கத வாசிச்சேன்..

இன்னும் 2/3 பகுதி எழுதறதா திட்டம் - இன்ஷா அல்லா

Geetha Sambasivam Says:
March 16th, 2006 at 6:21 pm e
Hello, I told I am not a believer of these drama artists who are coming and going in the TV Rasi palan shows and in the magazines. But if a true Jyothidar analyse your bio-data or jathakam in my language and told your past and present and some of the event which are going to happening in the near future, that is true. And it happened to big political leaders also.So do not believe these bammathu persons.Believe God and true jyosiam which is very rare now-a-days.And to your kind information, I am not Geetha Sambachchivam. I am only Geetha Sambasivam.Thank you.

Geetha Sambasivam Says:
March 16th, 2006 at 6:27 pm e
My comment some minutes ago was refuse due to lso9me technical problem. I said I am not a believer of these BAMMATHU jyosiers who are coming in the TV shows and in magazines. But if a true and honourable jyothidar analyse your jathakam and tellyou the past and present and the happenings of the near future that will become true. And it is happening to big political leaders also. Ex:Rajiv Gandhi:Who neglected his jyosiers repeated requests not to go to Tamilnadu at that time.And for your kind information:My name is GEETHA SAMBASIVAM not Geetha Sambachchivam as you wrote. Thank you.

சோம்பேறி பையன் Says:
March 16th, 2006 at 7:10 pm e
இந்த டுபாக்கூரை எல்லா பத்திரிக்கைகளும் பின்பற்றுகின்றன என்பதுதான் வேதனை.. நான் என்னோட தமிழ் மற்றும் ஆங்கில் ராசியை பாத்துட்டு எது நல்லா இருக்கோ அதை எடுத்துப்பேன்.. அதுவும் அன்றைய தின முடிவில்தான் அதைப் பார்ப்பேன்.. அதுசரி தருமி, உங்க ராசி என்னா ????

துளசி கோபால் Says:
March 17th, 2006 at 11:03 am e
அவுருது ‘ஏப்ப ராசி’ங்க

Khannan.R Says:
April 15th, 2006 at 8:59 am e
Dear Bro/sis

Stop looking for your future, your future has been decided when u born. Astrology can’t predict and tell u what will happen in the future. Future is on your hand. If you work hard that will create good life, so that wil be the your future.

Khannan. R
Canada

ஞானவெட்டியான் Says:
April 15th, 2006 at 12:00 pm e
அடாடா!!
ஒங்க தொல்லை தாங்கமுடியலியே!!!

மொதல்ல சோதிடம்; இப்ப ராசிக்கல்

எல்லாத்துக்கும் பதில் ஒண்ணுதானே!!!

விட்டுருங்க. பட்டுத் திருந்தட்டும்.
“பட்டால் தெரியும் பார்ப்பவன் பாடு”

குமரன் (Kumaran) Says:
April 19th, 2006 at 1:55 am e
//அவுருது ‘ஏப்ப ராசி’ங்க //

துளசி அக்கா,

ஏப்பைன்னு எங்க ஊருல சொல்லுவாங்களே. அந்த ராசியா? நாமளும் அது தானுங்க…

:-)

தருமி சார், இந்த கல்லு மோதிரம் எல்லாம் இன்னும் போடறீங்களா? இது மதுரை ஸ்டைலோ? நானும் சின்ன வயசுல அப்படி தான் போட்டுக்கிட்டுத் திரிவேன். அப்புறம் மெல்ல அந்தப் பழக்கம் போயிடுச்சு.

Swami Says:
May 25th, 2006 at 11:22 pm e
//இப்போதைக்கு 6-7 பில்லியன் மக்கள் இருக்கிறாங்களா? இதுவரை பிறந்த வாழ்ந்து முடிச்சிவங்க எத்தனை….மனுஷ டைப்புகளே 12 மட்டும்தானா?//

see there is only 12 size of shoos or cheppal for all thos 6-7 பில்லியன் மக்கள் also i heared jathakam palan is not based on birth time also depence on what good or bad u did in the past(Karuma vinai?).

சின்னக்கடப்பாரை Says:
July 10th, 2006 at 4:45 pm e
தருமி அய்யாவுக்கு வணக்கம்,

என்னடா இன்னும் தலைவர் நம்மளை வாரலையேனு யோசிச்சென்,

capri அப்படினு நான் வச்சிருக்கரது sun sign. I’ve personally seen personality familiarities with a person of the same sun sign. I’m not supporting ஜாதகம் & ராசிக்கல்.

A same person born on the same day i was born has a lot of personality familiarities.

For ex.

I hate seafood
I love eggs, chicken (without bones)
I sleep with 4 pillows
The liking towards bikes
The liking towards cooking
The liking to be lazy
The liking towards a specific cult of friends
Being very very choosy!

He has the same personalities!!!!

The same is the case with another friend born a day before me and she is a girl from Germany.

This is not a belief! But, still, the birthday has to do something with the personalities

தருமி Says:
July 12th, 2006 at 10:38 am e
சீ.க.,

I hate seafood ……….I DO LIKE THEM.crab, shrimps பிடிக்காத ஒரு non-veg ஆளா..?
I love eggs, chicken (without bones)…WITH OR WITHOUT BONES; ESPECIALLY WITH BONES IN FRIED வேட்டைக் கறி
I sleep with 4 pillows …ONE WILL DO
The liking towards bikes…HAD IT. WHO WONT AT YOUR AGE!
The liking towards cooking…NEVER EVEN VISITED KITCHEN FOR LONG; BUT VERY RECENTLY DEVELOPED TASTE FOR COOKING THOUGH NOT COOKING FOR TASTE!
The liking to be lazy…WHO IS NOT? ONLY IT IS A MATTER OF AFFORDABILITY.
The liking towards a specific cult of friends…FRIENDS HAVE TO BE ALWYAS LIKE THAT - LIKE MINDED!
Being very very choosy!…AGAIN A MATTER OF AFFORDABILITY.

ஆக நீங்க சொன்னதில நிறைய பொதுவா மனுஷங்களுக்கு இருக்கிற விஷயம்தான். சிலது மாறுபட்டு இருக்கு என்னிடம் - ஆனால் நானும் ஒரு capricorn ஆளுல்லா…??!!

சின்னக்கடப்பாரை Says:
July 17th, 2006 at 11:16 am e
அடடே,

இதை இப்படியும் யோசிக்கலாமோ?

சரி, நம்ம 2 பேருக்குமே நெறைய ஒற்றுமை இருக்கே?

ஆனாலும் ராசிக்கல் போடர அளவுக்கு நான் போனதில்லை. எனக்கு அப்பப்போ வர்ற kidney stone போதும்னு நெனச்சுக்கறேன்.

Saturday, March 11, 2006

142.சோதிடம்..8: நேரம்,நாள்..

ஜோதிடம் தொடர் - முந்திய பதிவுகள்:
1*,
2*,
3*,
4*,
5*
6*,
7*.

பிந்திய பதிவுகள்:

9.
10.
11
12.
13.



நம்ம நாட்டுல நல்ல நாள், நல்ல நேரம் பார்க்கிறது சர்வ சாதாரணமா இருக்கு. ஏறத்தாழ பார்க்காதவர்களே இல்லைன்னு சொல்லலாம். இதில் கிறித்துவர்கள்,இஸ்லாமியர்கள் எல்லாருமே அடக்கம்

சில நாட்களை நல்ல நாட்கள் என்றும், சில நாட்களை கரி நாளென்றும் வகுத்தது யார்? அந்த வகுத்தலுக்கு அடிப்படைக் காரணங்கள் ஏதுமுண்டா? ‘செவ்வாய் வெறுவாய்’ என்பதற்கோ, ‘பொண்ணு கிடச்சாலும் புதன் கிடைக்காது’ என்பதற்கோ ஏதாவது காரணம் உண்டா? ஏதுமிருப்பதாக எனக்குத் தெரியாது. என் வாழ்நாளில் நிகழ்ந்துள்ள ஒரு விஷயத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம் சந்தோஷமாக இருக்கு. என் சிறு வயதில் பலரும் ஊருக்குப் போகணும்னா, தெற்கே சூலம், வடக்கே சூலம் அப்டின்னு அதுக்கு ஏற்ற மாதிரி தங்கள் பயண நாட்களை மாற்றிக் கொள்வதுண்டு. இப்போது இந்த அவசர உலகத்தில் அது குறைந்து போனதாகத் தோன்றுகிறது. ஆனாலும் இன்னும் இருக்கவே செய்கிறது - பெளர்ணமி, அமாவாசை, அப்புறம் என்னவெல்லாமோ சொல்வார்களே - பிரதோஷம்… இவைகள் எல்லாம் ஜே..ஜேன்னு போகுது.

இதில் கிறித்துவ மக்கள் இதிலும் ஒரு தனிவழியில் போவதுண்டு. கத்தோலிக்கக் கிறித்துவர்களிடம் சனிக்கிழமை மாதா நாள், செவ்வாய் அந்தோனியார் நாள் என்று சில நாட்களைச் சிலருக்கு ‘அலாட்மெண்ட்’ செய்திருப்பார்கள். அவர்கள் கேட்டார்களா; இவர்களா கொடுத்தார்களா என்று எனக்குத் தெரியாது. அவைகளின் பின்னால் உள்ள ‘தாத்பர்யம்’ எனக்குத் தெரியாது. இன்னொரு வகைக் கிறித்துவர்கள் ’sabath’ என்று ஒரு நாளை - சிலர் அதை ஞாயிற்றுக் கிழமையாகவும், அட்வெண்டிஸ்ட் ஆட்கள் சனிக்கிழமையாகவும் ‘ஃபிக்ஸ்’ பண்ணியிருப்பார்கள். இந்த நாளில், கடவுள் ஆறு நாட்களில் தன் படைப்புத் தொழிலை முடித்துவிட்டு, அக்கடா என்று ‘ஓய்வு’ எடுத்த நாள் என்றும், நாமும் கடவுள் போலவே அன்று ஓய்வு - முழு ஓய்வு - எடுக்க வேண்டும் என்று மிகவும் தீவிரமாக இருப்பார்கள். யூதர்கள் தங்கள் வீடுகளில் எந்த வேலையும் செய்யாமல் முழுமையான ஓய்வில் இருப்பார்கள் என்றும், அன்று வீட்டில் மாலை விளக்கேற்றுவதற்குக் கூட வேலையாள் வைத்திருப்பார்கள் என்றும் சொல்கிறார்கள். இதில் எனக்கு இரண்டு ஐயங்கள்: எல்லாவற்றையும் படைத்தக் கடவுள் அந்த 6 நாட்களில் செய்தது என்ன களைப்பைத் தரும் உடல் உழைப்பா? (manual labour?) என்ற ஐயம் முதலாவது. வானமும் பூமியும் வா என்றால் அதுபாட்டுக்கு வந்துவிட்டுப் போகிறது. இதில் என்ன தேவை ஓய்வு - அதுவும் கடவுளுக்கு. சின்னப் பிள்ளைகளுக்குச் சொன்ன கதை போல இருப்பதை வைத்துக் கொண்டு மக்கள் இவ்வளவு தீவிரமாக இருப்பது எனக்கு வேடிக்கைதான். இரண்டாவதாக, சரி கடவுள் ஆறு நாட்கள் தன் படைப்புத் தொழிலைச் செய்து விட்ட களைப்பில் ஓய்வெடுத்தார் என்றே கொள்வோம். இருந்து விட்டுப் போகட்டும். அதனால் நாமும் ஏன் ஓய்வெடுக்க வேண்டும். ஒருவேளை இதற்குப் பதில் சொல்ல வருபவர்கள், ‘இந்த நாள் ஓய்வுக்காக அல்ல; கடவுள் நம்மைப் படைத்ததை நினைவு கூறவும், அதோடு ஜெபம், தவம் என்று இருக்கவே அது ஓய்வு நாளாகக் கடைப்பிடிக்கப் படுகிறது’ எனலாம். அப்படிச் சொன்னால் என் பதில்: அப்படியே நன்றி சொல்ல அந்த ஒரு நாள் மட்டும்தானா; வாழ்நாளின் ஒவ்வொரு வினாடியும்தானே என்பேன்.

இதில் அவர்கள் -முக்கியமாக ஏழாம் நாள் அட்வென்டிஸ்ட்கள் - அந்த ஓய்வு நாளில் (சனிக்கிழமைகளில்) எந்த வேலையும் செய்ய மாட்டோம் என்பார்கள். அந்த நாட்களில் இருந்தது என்பதால் தேர்வுகளைக் கூட எழுதாத மாணவர்கள் பலரைப் பார்த்திருக்கிறேன். (அது எங்கள் இஷ்டம்; நன்மையோ தீமையோ அது எங்கள் சாய்ஸ்; இதில் பிறர் சொல்ல என்ன இருக்கிறது? - இப்படியும் கேட்கலாம்!)

சரி, நாள் விஷயம் இப்படி என்றால் ‘நேரம்’ இன்னொரு முக்கியமானது. நிறைய பெயர்கள் உண்டே…யம கண்டம், அது இதுன்னு. இந்த ‘டைம் டேபிள்’ போட்டது யார்? எந்த அடிப்படையில்? பத்து மணினா நல்லதில்லை; பத்து ஐந்து என்றால் எல்லாம் சரியாகி விடுகிறதே எப்படி?

இதில் பிறந்த நேரம் மிகவும் முக்கியமாம். என் நண்பர் an orthodox hindu - பிராமணர் என்று சொல்ல வேண்டியதில்லை - தன் தங்கைக்குக் குழந்தை பிறந்ததைப் பற்றிக் கூறினார். சிஸேரியன் என்று மருத்துவர் கூறி விட்டு, எப்போது வைத்துக் கொள்ளலாம் என்று இவர்களிடமே கேட்டாராம். இவர்கள் வீட்டில நல்ல நாள், நேரம் எல்லாம் பார்த்து சொல்ல, அதே சுப யோக நேரத்தில் குழந்தை ‘பிறப்பிக்கப்’ பட்டதாம். நண்பர் இதைக் கேலி செய்து, ஜாதகம் எழுதுவதைக் கேள்வி கேட்க, ‘உனக்கு சேர்க்கையே சரியில்லை; அதனால் தான் இப்படியெல்லாம் பேசுகிறாய்’ என்றார்களாம்.

ஒரே நேரத்தில் எத்தனை எத்தனைக் குழந்தைகள் பிறக்கின்றன. அதைவைத்து ராசி, நட்சத்திரம் என்று சொல்லும்போது - எடுத்துக் காட்டாக, பரணி நட்சத்திரத்தில் பிறந்தால் தரணி ஆள்வார்கள் (நம்ம மு. அமைச்சரின் நட்சத்திரம் அதுதானாமே, அப்டியா?) என்று சொல்கிறார்கள். அந்த பரணி நட்சத்திரத்தில் பிறந்த குழந்தை தரணியும் ஆளலாம்; ரோட்டு ஓரத்தில் பிறந்திருந்தால் பிச்சையும் எடுக்கலாம். பரணியில பிறந்து, ஒரு முதலமைச்சருக்கு ரொம்ப வேண்டப்பட்டவங்களா இருந்தா நம்மளும் ஒரு நாள் மு. அமைச்சராகலாம்; இல்லாட்டி மிஞ்சிப்போனா என்ன, ஒரு வலைப்பதிவு வச்சிக்கிட்டு ஏதாவது மனசில தோண்றத எழுதிக்கிட்டு இருக்கலாம்!

சரி..சரி..இதெல்லாம் உங்க நேரம் - இதையெல்லாம் வாசிக்கணும்னு உங்க தலைவிதி’ங்க !








Pathivu Toolbar ©2005thamizmanam.com


Mar 11 2006 09:06 am | சமூகம் | | edit this
28 Responses
துளசி கோபால் Says:
March 11th, 2006 at 9:47 am e
உங்களுக்கு இப்ப நேரம் சரியில்லை போலெ

மு.அமைச்சரின் நட்சத்திரம் ‘மகம்’ன்னு கேள்விப்பட்டேன். மகம் பிறந்த மங்கை! மகம் ஜெகத்தை ஆளும்!

இந்த நல்ல நேரம் கெட்ட நேரம் எல்லாம் சூரிய உதயம் , சூரிய அஸ்தமனம் இது ரெண்டுக்குள்ளேதான் இருக்கும்.
பொழுது சாஞ்சுருச்சுன்னா இதெல்லாம் இல்லை.
அதேமாதிரி, ராசி பலன் பாக்கறப்ப நல்லதாச் சொன்னா அது எனக்கு. தீமையா இருந்தா அது வேற யாருக்கோதான்.
இப்ப என்னென்னா நாளும் நேரமும் பாக்கறப்ப, அது கெட்ட நேரமா(!) இருந்தா அமெரிக்காவுலே, இல்லே வேற இடங்களிலே
இப்ப இந்த டைம், அது நல்ல நேரம்தான்னு பார்த்துக்கிட்டுப் போகவேண்டியிருக்கு.

பாண்டிபஜார்லே போய்ப் பாருங்க. ஜனங்க கெட்ட நேரம் நல்ல நேரமுன்னு பார்க்காம நகையும், துணியுமா
வாங்கிக் குவிக்கிறாங்க.( எல்லாம் அனுபவம்தான்)

டி.பி.ஆர். ஜோசஃப் Says:
March 11th, 2006 at 10:50 am e
அடடா என்ன மாதிரியேதான் இருக்கீங்க நீங்களும்.

நீங்க சொன்னா மாதிரி அந்தோணியார் நாள், மாதா நாள்ங்கறதுக்கு பின்னால ஒன்னு இருக்கு. கத்தோலிக்க தேவாலயங்கள் பெரும்பாலும் ஏதாவது ஒரு புனிதர்களை பேட்ரனாக வைத்துதான் இருக்கும். அந்தோணியார் கோவில்களில் அப்புனிதருக்கான நவநாள் செவ்வாய் அன்றும் அன்னை மரியாளுடைய நவநாள் அக்கோவில்களில் சனியன்றும், சூசையானால் புதன் கிழமை என்றும் நடப்பது காலந்தொட்டு நம் நாட்டில் மட்டுமல்ல உலகெங்கிலும் உள்ள கத்தோலிக்க தேவாலயங்களில் நடந்து வருகின்றன.

ஆனால் நல்ல நாள் கெட்ட நாள் பார்க்கும் பழக்கம் கத்தோலிக்கர்களிடத்தில் இருந்து வருகிறது என்பது உண்மைதான். ஆனால் சென்னை போன்ற பெருநகரங்களில் காலங்காலமாய் என் போன்றவர்களிடத்தில் நான் அதைக் கண்டதில்லை. மற்றபடி திருமணம் போன்ற வைபவங்களை முகூர்த்த நாள் பார்த்து வைக்கும் பழக்கம் இருக்கிறது.

ஆனால் சாதாரண விஷயங்களுக்கு வெளியே கிளம்பிச் செல்வதற்குக் கூட எமகண்டம், ராவு காலம் பார்க்கும் பழக்கம் நிச்சயம் கத்தோலிக்கர்களிடத்தில் நான் அறிந்து இல்லை. எனக்கு தெரிந்த ஒருவருடைய குடும்பத்தில் வீட்டில் இருக்கும் பீரோவை திருப்பி வைப்பதற்குக்கூட ஜோசியரிடம் கேட்டுவிட்டுத்தான் செய்வார்கள்..இத்தனக்கும் அவர் என்னுடைய முன்னாள் மேலதிகாரி!

நான் முன்பே ஒரு முறை என் பதிவில் இதைப் பற்றி மறைமுகமாக குறிப்பிட்டிருக்கிறேன். என்னுடைய கிளைதிறப்பு விழாவில் பங்கு பெற்ற என்னுடைய சேர்மன் அன்று இரவே மரித்துப் போனார். அதற்கு நான் நல்ல நாள் பார்த்து, நல்ல நேரம் பார்த்து வங்கியின் திறப்பு விழாவை நடத்தாததுதான் காரணம் என்று என் வங்கியின் அப்போதைய அதிகாரிகள் (கிறிஸ்துவர்கள் அல்ல) என்னைக் குற்றப்படுத்தினர்!

இதனை எழுதுவதன் மூலம் நான் யாரையும் குறை சொல்ல வரவில்லை என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்..

dharumi Says:
March 11th, 2006 at 3:45 pm e
துளசி,
“மகம் ஜெகத்தை ஆளும்!” சரி, என் பதிவில நம்ம மு.அமைச்சரின் ராசி நட்சத்திரம் மகம் என்றே வச்சுக்குவோம். (எதுன்னாலும் நம்ம argument அப்டியே நிக்குது; இல்லீங்களா?)
அதென்ன மகம் ஜெகத்தை ஆளும்; பரணி தரணி ஆளும்….அப்டின்னா என்ன மாதிரி ஆளுக யாருக்கும் இந்த நட்சத்திரம் இருக்காதா.. டாப் ஆளுகமட்டும்தான் இந்த நட்சத்திரத்தில பிறந்திருப்பாங்களா…இல்ல, டாப் ஆளுகளா ஆனா இந்த மாதிரி சொல்லுவாங்களா?
இதுக்காகவாவது இந்த நட்சத்திரம் பற்றிப் படிக்கணும்; படிச்சி தெருவில போற நாலு பாவப்பட்ட ஜன்மங்களுக்கும், நம்ம மு. அ., பில் கேட்ஸ், லஷ்மி மிட்டல், டாடா இவங்களுக்கும் ஒரே நட்சத்திரம் இருக்குன்னு நிருபிச்சிரலாம்.

தருமி Says:
March 11th, 2006 at 10:01 pm e
ஜோசஃப்,
இந்த புனிதருக்கு இந்த நாள் என்ற பழக்கம் எப்படி, ஏன் என்பதுதான் என் கேள்வியே.

“எமகண்டம், ராவு காலம் பார்க்கும் பழக்கம் நிச்சயம் கத்தோலிக்கர்களிடத்தில் நான் அறிந்து இல்லை”//-

- ஆமாம் ஜோசஃப், அந்த அளவு ‘மோசமில்லைதான்:

தருமி Says:
March 11th, 2006 at 10:05 pm e
துளசி,
“இப்ப என்னென்னா நாளும் நேரமும் பாக்கறப்ப, அது கெட்ட நேரமா(!) இருந்தா அமெரிக்காவுலே, இல்லே வேற இடங்களிலே
இப்ப இந்த டைம், அது நல்ல நேரம்தான்னு பார்த்துக்கிட்டுப் போகவேண்டியிருக்கு” // - இது நல்ல டெக்னிக்கா இருக்கு பாத்தீங்களா, உலக மக்கள் எல்லோரும் ஒரு குடும்பம் அப்டின்றது எவ்வளவு வசதியா இருக்கு இதத்தான் “யாதும் ஊரே; யாவரும் கேளீர்” அப்டின்னு சொல்லியிருக்கா

kozhundu Says:
March 11th, 2006 at 10:54 pm e
தருமி சார்

கூப்பிட்டீங்க போல இருக்கு. நானும் கொஞ்சம் சொல்றேனே! சோதிடத்தோட அடிப்படை என்னன்னா மனிதன் செய்கிற பாவ புண்ணியங்களுக்கு ஏற்ப அவனோட சாதகம் அமையுது. இங்கே, புண்ணியம்ங்கிற்து, கோவிலுக்குப் போகிற்து மட்டுமில்ல, மனிதன மனிதனா நடத்தும் போதும் புண்ணியம் சேக்கிறோம்.அன்ன தானம், அறிவு தானம், இரத்த தானம், எல்லாமே புண்ணியம்
சேர்க்குது. சோதிடமும், ம்றுபிறவி, முற்பிறவி எல்லாம் சேர்ந்து வர கருத்துக்கள். ஒரே நட்சத்திரதுல பிறந்தவங்களுக்கெல்லாம், ஒரே பலன் கிடைக்காது. செல விசயங்கள்தான்
ஒத்துப் போகும். இதனாலதான் செய்தித் தாள்ல வர ராசி பலனெல்லாம் சரியில்ல. மும்பைல பிறக்கிற பிள்ளைக்கும் கொல்கொத்தாவில பிறக்கிற பிள்ளைக்கும், ஒரே நேரத்துல பிறந்திருந்தாலும், இட மாற்றத்த கணக்குல எடுத்துக்கிறதால சாதகம் வேற மாதிரி அமையும்.

அது என்ன அந்த பச்சை ஸ்மைலி என்னோட கொள்கைக்கப்புறம்?:))

அன்புடன்
சாம்

தருமி Says:
March 11th, 2006 at 11:55 pm e
மனிதன் செய்கிற பாவ புண்ணியங்களுக்கு ஏற்ப அவனோட சாதகம் அமையுது.”// -
- அட கிரஹாச்சாரமே, என்ன சாம், ஏதோ கிரஹங்கள் எல்லாம் ஒவ்வொரு ‘வீட்ல′ இருக்கிறதுனால சாதகம் அமையுதுன்னுதானே சொல்லுவாங்க…

“இட மாற்றத்த கணக்குல எடுத்துக்கிறதால சாதகம் வேற மாதிரி அமையும்”// -
- சரி, ஒரே ஊர்ல ஒரே ஆஸ்பத்திரியில ஒரே நட்சத்திரத்தில பிறந்திருந்தா ஒரே மாதிரி அமையுமா?

“அது என்ன அந்த பச்சை ஸ்மைலி என்னோட கொள்கைக்கப்புறம்?:))”// - இது புரியலையே..

துளசி கோபால் Says:
March 12th, 2006 at 1:12 am e
தருமி,

பரணி-தரணி
மகம்-ஜெகம்

எல்லாம் ஒரு ரைமிங்கதான். எதுகைமோனையிலே நம்மாளுங்க படுகெட்டியாச்சே.

‘நாளும் கிழமையும் நல்லவர்கில்லை’ என்பது என்னோட புதுமொழி.

வசந்தன் Says:
March 12th, 2006 at 4:49 am e
//சனிக்கிழமை மாதா நாள், செவ்வாய் அந்தோனியார் நாள்//
உங்கயும் உந்தக் கதைதானோ?

அதுசரி, பரணியிற் பிறந்திட்டு, தரணியாளாமல் இருந்தால் எப்படி? என்னைப் பொறுத்தவரை உங்களுக்கு அந்த யோகம் வந்தது, நீங்கள் தான் தவற விட்டுவிட்டீர்கள். ஞாபகமிருக்கா உங்கள் சிறை மீள்வு?
இப்போது கூட உங்கள் “வகுப்புத் தோழனை”ப் பிடித்து முயற்சித்துப் பார்க்கலாமே?

kozhundu Says:
March 12th, 2006 at 7:41 am e
தருமி சார்

உங்க கேள்விக்கு விடை இருக்கு. கொஞ்சம் விரிவாவே விடை சொல்றேனே!
நாளைக்கு மயில் அனுப்புகிறேன்

அன்புடன்
சாம்

Sam Says:
March 13th, 2006 at 7:36 am e
தருமி சார்

என் நட்சத்திரம் அவிட்டம்
‘அவிட்டம்னா தவிட்டுப் பானையெலாம் பொன்னாம்’. எங்கிட்டே தவிட்டுப் பானை இல்லை. ஒரு தவிட்டுப் பானை வாங்கினா பொன் வருமோ என்னமோ?

உங்க கேள்விக்கு பதில் சொல்லுமுன்னாடி சில விசயங்களை முதல்ல சொல்லணும். சாதகம் எப்படி கணிக்கிறாங்க?

சாதகம் எழுதியிருக்க காகிதத்தை பார்த்க்தீங்கன்னா அதுல இரண்டு படம் இருக்கும். ஒன்னு ராசி, இன்னொன்னு நவம்சம். இரண்டுலேயும், பன்னிரண்டு கட்டங்கள் இருக்கும். ஒன்னுலெயிருந்து பன்னிரண்டு வறையிலான கட்டங்களை வீடுன்னு சொல்வாங்க. முதல் வீட்டைப் பார்த்து
சாதகரோட மனசு, உடம்பு, பெர்சனாலிட்டி, இரண்டாம் வீட்டைப் பார்த்து அவரோட குடும்பம், பேச்சு, இப்படின்னு, எல்லா வீட்டையும் பார்த்து பலன் சொல்லலாம். குழந்தை பிறக்கிறப்போ, கிழக்கில உதயாமயிருக்கிற நட்சத்திரக் கூட்டம்தான் சாதகத்தில, ராசி சக்கரத்தில முதல் இடம். குழந்தை பிறந்த இடத்திலுருந்து, நெட்ட நெடுவா, வெர்டிகலா, ஒரு கற்பனை வட்டம் வரைஞ்சு, அதை பன்னிரண்டா பிருச்சீங்கன்னா, ஒவ்வொன்னும், ராசி சக்கிரத்தில வர ஒரு இடம். இந்த பன்னிரண்டுலயும், மேசம், ரிசபம், மிதுனம், மகரம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுர், கடகம், கும்பம், மீனம்ன்னு, ஒவ்வொரு நட்சத்திரக் கூட்டம் இருக்கும். அடுத்து, அந்த நட்சத்திரக் கூட்டத்திக்கு முன்னாடி
என்னென்ன கிரகங்கள் இருக்குன்னு பஞ்சாஙக்த்த பாத்து குறிச்சுக்குவாங்க. கணினியில வர ஒரு பஞ்சாங்கம், நம்ம ஊர் பஞ்சாங்கத்த விட சரியா இருக்கு. முத தப்புக் கணக்கு இங்க ஆரம்பிக்குது

சரி, நட்சத்திரத்தை விட்டு வேறு எதை எதையோ சொல்றேன்னு பார்க்கிறீங்களா? வந்துட்டேன் விசயத்துக்கு. நட்சத்திரம் மொத்தம் இருபத்தேழு. ஒவ்வொரு நட்சத்திரத்தையும், நாலு பகுதியாப்
பிறிச்சு, பாதம்ன்னு சொல்றாங்க. ஒவ்வொரு ராசி கட்டத்திலேயும் ஒன்பது பாதம் வரும். முதலல பரணின்னு சொன்னீங்கன்னா என்ன பாதம்ன்னு பாக்கணும்.சந்திரன் எந்த ராசிக் கட்டத்தில எந்த பாதத்தில வருதோ, அதுதான், சாதகரோட நட்சத்திரம், பாதம். இப்ப சந்திரன் எந்த வீட்டில இருக்கும்ன்னு பார்க்கணும். அஞசாம் வீட்டில இருக்கிறதுக்கும், எட்டாம் வீட்டுல இருக்கிறதுக்கும்
வித்தியாசம் நிறைய இருக்கு. அதோடு பகைக் கிரகமான ராகு சேர்ந்துக்கிச்சுன்னா இன்னும் பலன் மாறும். அடுத்து நவாம்சத்துல சந்திரன் எந்த வீட்டுல இருக்குன்னு பார்க்கணும். இப்படி நிறைய
விதிகள் இருக்கு. இப்படி பரணி நட்சத்திரமா இருந்தாலும் பலன்கள் மாறுபடும்

ராசி, நவம்சத்தோட, இன்னும் இருபத்தியோரு சக்கரங்கள் தயாரிக்கலாம். இந்த ஒவ்வொன்னும் வெவ்வேற விசயங்களை, சொல்லும். ஒன்னு குழந்தைகளைப் பத்திச் சொல்லும். ஒன்னு நம்ம பார்க்கப் போர வேலையப் பத்திச் சொல்லும். சில வினாடிகள், சில நிமிடங்கள், மாறிப் போனாலும், இதல்லாம்
மாறிப் போகும். அதனாலத்தான், இரட்டையர்களா இருந்தாலும், வாழ்க்கை வேற மாதிரி இருக்கும்

ஒரே மருத்துவமனையில ஒரே நிமிடத்தில, ஒரே வினாடியில பிள்ளைகள் இரண்டு பிறக்க வாய்ப்பே
இல்லை. படைப்பு என்னைக்குமே ஏமாறாது. நமக்குன்னு, உள்ளது நமக்கு என்னைக்குமே உண்டு.
இன்னும் பிறக்கப் போற குழந்தைக்காக் எதாவது அதிகமா செய்யணுன்னு நினைச்சா, கோயிலுக்குப் போகலாம், மத நம்பிக்கை இல்லைன்னா தான தருமங்கள் செய்யலாம். ஒரு வாய், ஒரு வயிறு, ஒரு மனசு குளிர்ந்தாலும் அந்தப் பலன் குழந்தைக்கும், பெத்தவங்களுக்கும் போகும். நம்ம ஊர்ல தர்மம் தலை காக்கும்ன்னு சும்மாவா சொல்றாங்க?

சோதிடம் வட மொழி வேதத்தில ஒரு பகுதி. தமிழில கோளறு பதிகம்ன்னு ஒன்னு இருக்கு. அதைப் பத்தி எனக்கு ஒன்னும் தெரியலை. நண்பர் குமரன் அதைப் பத்தி எழுதப் போரார். அங்கயும் வந்து பாருங்களேன்.

சரி, உங்க ஊரில தவிட்டுப் பானை கிடைக்குமா? கொஞ்சம் தகவல் சொல்லுங்களேன்? )))

அன்புடன்
சாம்

துளசி கோபால் Says:
March 13th, 2006 at 10:03 am e
சாம்,

நீங்க பொண்ணா இருந்தாத்தான் இந்தத் ‘தவிட்டுப்பானை’ டயலாக் செல்லும்.

தாணு Says:
March 13th, 2006 at 3:29 pm e
தருமி
இந்த நாள் நட்சத்திரம் எல்லாம் ஹம்பக்தான். நேரம் குறித்துவைத்து சிசேரியன் செய்யச் சொல்லுவார்கள், ஆனால் குழந்தை பிரந்த நேரம் உள்ளே உள்ள மருத்துவர் சொல்வதுதானே! ஆப்பரேஷனில் ஏதேனும் சிக்கல் ஏற்படும்போது சில மணித்துளிகள் முன்னே பின்னே சொல்வதெல்லாம் சகஜம்.
எனக்கு சிசேரியனுக்கு நாள் குறிக்கப்பட்டபோது என் தம்பியும், அண்ணனும் உடனிருக்கும் வேளை( Rh negative ரத்தவகை நாங்கள் மூவரும்) அஷ்டமி அன்று ஏதோ கெட்ட நேரம், அது பேர் கூட மறந்துடுச்சு, அப்போதான் பிக்ஸ் பண்ணப்பட்டது. ஆனா பாருங்க அறுவை சிகிச்சை செய்யப்போற மருத்துவ நண்பர் ரொம்ப நாள் நட்சத்திரம் பார்க்கிறவங்க, ஒரே சண்டை. ஆனாலும் பிடிவாதமாக அன்றே பெற்றுக் கொண்டேன். ஒருவாரம் கழிச்சு ஆடி முடிந்துவிடும் அப்போ பண்ணலாம்னு விவாதம் கணவரும் என்போலவே என்பதால் சாத்தியமானது!(ரெண்டு நாளா இந்த பதிவு ஓப்பன் ஆகலையே, ஏன்?)

Geetha Sambasivam Says:
March 13th, 2006 at 3:55 pm e
about jyothidam it is not only in vadamozhi, tamil mozhiyum jyothidaththai patri koorukirathu. Agathiyaril irunthu arambithu eththanaiyo per.Melum veru veru ooril piranthalum palan verupaduvatharku karanam antha antha ooril ulla atcha regai melum dheerka regai konam marupaduvathal than.ithu oru kanakku. athil thulliyamaga therinthavar inru migavum kuraivu. neengal nambavillai enral jyothidam illai enru aagi vidathu.neengal dharumi enbathal naan nakkeran enru ninaikka vendam.ithu muzhukka muzhukka vignanam.ithaivada indhiyavil sila palkalaikazhagangalill katru tharukirarkal.

தருமி Says:
March 13th, 2006 at 4:13 pm e
தாணு,
உங்க இடத்தில நான் இருந்திருந்தா அவ்வளவு strong-ஆ இருந்திருக்க மாட்டேன் என்று நினைக்கிறேன். Hats off to you and to your hubby.

“!(ரெண்டு நாளா இந்த பதிவு ஓப்பன் ஆகலையே, ஏன்?)”// - தெரியலையே. அதோட இன்னும் என்னென்னவோ நடக்குது…மர்மமாய் இருக்குது
இப்போ ஒரு நாலஞ்சு நாளா இந்தப் பின்னூடங்கள் என் மயில் பொட்டிக்கு வரமாட்டேங்குது. moderation box-ல் வந்து நிக்கிது. ஏன், எப்படின்னு தெரியலை..

தருமி Says:
March 13th, 2006 at 4:29 pm e
Geetha Sambasivam,
“Agathiyaril irunthu arambithu eththanaiyo per.”//
- so what?

“ithu oru kanakku.”
- i think I already made a comment on this routine statement.

“athil thulliyamaga therinthavar inru migavum kuraivu.”
-this is another routine statement, a very handy ‘escape route’!

“neengal nambavillai enral jyothidam illai enru aagi vidathu.”
- neengalum palarum nambuvathaal jyothidam unmai enru aagi vidathu.

“ithu muzhukka muzhukka vignanam.”
- dont keep harping about it this way. i have given a common definition for vignanam earlier. will this come under that category? can it stand for any scientific scrutiny? anyway i want to raise still a lot more Qs. hope you keep track of them too.

“ithaivada indhiyavil sila palkalaikazhagangalill katru tharukirarkal.” - உபயம் பி.ஜே.பி. & PROFESSORஜோஷி.. and there are Universities in U.S. teaching theory of creation and banning of teaching evolution

தருமி Says:
March 13th, 2006 at 4:46 pm e
கொழுந்து சாம்,
* - “……..மீனம்ன்னு, ஒவ்வொரு நட்சத்திரக் கூட்டம் இருக்கும்..”// நட்சத்திரக் கூட்டம் அவ்வளவுதானா..?

* - “கணினியில வர ஒரு பஞ்சாங்கம், நம்ம ஊர் பஞ்சாங்கத்த விட சரியா இருக்கு”// அப்போ, no standard and single பஞ்சாங்கம்..அப்படித்தானே?

* - “நட்சத்திரம் மொத்தம் இருபத்தேழு” - அது என்ன கணக்கு..? கோடானு கோடீன்னுல சொல்லுவாங்க!

* - ” நம்ம ஊர்ல தர்மம் தலை காக்கும்ன்னு சும்மாவா சொல்றாங்க?” - சும்மாதான் சொல்லியிருக்காங்க…அப்பத்தான ஏதாவது பண்ணுவோம்னு. எதுக்கும் இந்த பதிவுக்கு முந்தின நம்ம பதிவு பாருங்க, என்ன?

* - “உங்க ஊரில தவிட்டுப் பானை கிடைக்குமா? கொஞ்சம் தகவல் சொல்லுங்களேன்? ” - அதெல்லாம் முடியாது. அது எங்க எப்படி யார் மூலமா கிடைக்கும்னு உங்க சாதகத்தில என்ன சொல்லியிருக்குமோ, எனக்கென்ன தெரியும்.

தருமி Says:
March 13th, 2006 at 4:48 pm e
துளசி,
please define ‘தவுட்டுப் பானை’
தவுட்டுனால செஞ்ச பானையா; தவுடு போட்டு வைக்கிற பானையா..?

Geetha Sambasivam Says:
March 13th, 2006 at 4:58 pm e
Mr.Dharumi, ellavatrukkum irandu pakkam undu enbathai vasathiyaga maranthu vitterkale.Neengal illai enral undu enru solbavarkalum athai niroobippavarkalum undu.Itharku BJP and Joshi enna seivarkal? People like you accept things only from the foreign countries. If the foreign countries accept Indian jyothidam and all other things you will also begin to praise them.It is not fair. Do not think our culture is conservative and do not make others also. We used to think very cheap ourselves from the British period, I think. It is not an arogyamana sinthanai.vatham enral ethir vathamum undu. To.Thanu, to-day’s doctors are money making minded and they will compell peopleby saying this and that to fulfill their needs.Neengall netrikan thiranthalum en bathil ithuthan.I am also from Madurai.Ullathaiullapadi sollum Maduraikararil nanum oruthi.Do not come to a judgement with your experience only.

Geetha Sambasivam Says:
March 13th, 2006 at 6:07 pm e
Thanu, I am sorry, i did not know you are also a doctor. Again I am sorry if it hurts you in any way. I was just telling about today’s thinking.

Sam Says:
March 13th, 2006 at 6:16 pm e
துளசி டீச்சர்
தவிட்டுப் பானையை எப்படியாவது கண்டு பிடிச்சிட்டா என் கஷ்டம் எல்லாம் போயிடும்ன்னு
நினைச்சிட்டுருந்தேனே!! என் எண்ணத்த போட்டு உடச்சிட்டேன்ங்களே!! வேற எதாவது
ஐடியா இருந்தா குடுங்களே!!!
உங்களை டீச்சர்ன்னு கூப்பிடலாமா?
அன்புடன்
சாம்
தருமி சார்,
உங்க கிட்ட மெதுவா வந்து பேசறேனே
உங்களுக்கு எவ்வளோ கமிஷன் வேணுமோ கொடுத்து விடுகிறேன்

தருமி Says:
March 14th, 2006 at 11:26 am e
கீதா சாம்பசிவம்,
“undu enru solbavarkalum athai niroobippavarkalum undu.” நிரூபிங்கன்னுதானே சொல்றேன்.

“People like you accept things only from the foreign countries.” அய்யோ, என்ன இப்படி சொல்லீட்டீங்க; அப்படியெல்லாம் இல்லை. பாருங்களேன், ஒரு ஃபாரின் விஷயம் இருந்திச்சி, நம்மட்ட. தூக்கிப் போட்டுட்டேன்லா…christianity !

“vatham enral ethir vathamum undu.” எதிர்வாதம் கூடாதுன்னு நான் எப்ப யாருக்கு 144 போட்டேன்!?
வெறும் வார்த்தைகள் - “இது ஒரு விஞ்ஞானம்”, “இது ஒருவகைக் கணக்கு” - மட்டும் போதாது. better you substantiate at least these statements. we need not keep thses things at a high pedestal just ‘coz they had their origin in our land.

thangam Says:
March 14th, 2006 at 12:09 pm e
Ella jathakam kattam melae oru Sanskrit poem undu, athai padiyunga. It says “Jananee janma sowkyanam pathavi poorvapunniyam, kula sampath…..”. ethu avaravarkal thai thanthaiyar seitha nalla, theeya, kariangal, ennia ennangal ellam ‘KARU MAIYATHIL’(Genetic Centre) pathivakum. Athan padi than antha sathakar vazhkai amaiyum. Melum appavin vinthuvum ammavin karu muttaiyum inaiyum nerappadi antha antha kiragangalin kantha alaikal (Magnetic Waves)thanmai otti iyarkaiyana pirappu nikazhavendum. Ithai nam puthisali endru nammai name ematrikkolvathagum. Ithai patri innum niraiya unmaikal irukku oru web site venum. uthavi seithal ennal innum konjam vilakkukiren, therinththai. web site uruvakka uthavi thevai.Vazhga Valamudan-thangam

Geetha Sambasivam Says:
March 14th, 2006 at 2:03 pm e
ungalukkana atharangalai thdi kondu irukkiren. Thakka samayam eluthukiren.

துளசி கோபால் Says:
March 14th, 2006 at 2:29 pm e
சாம்,

தாராளமா டீச்சர்னே கூப்புடுங்க. வாழ்க்கையிலே ஒவ்வொரு கணமும் மனுஷன் வாழ்க்கைப்பாடத்தைப் படிக்கணுமுல்லே?
எப்படி நம்ம தத்துவம்?

ஆமா, நீங்க வேற’சாம்’தானே?:???:
ஆங்…..விஷயத்துக்கு வருவோம். தவிட்டுப் பானைன்னா தவிட்டுலே செஞ்ச பானையா? அப்படி தவிட்டுலே பானை
செய்யமுடியுமா? முடியாதுல்லே? அதனாலே தவிடு போட்டு வைக்கிற பானை.

அந்தக் காலத்துலே புருசன்கிட்டே இருந்து காசை( அப்பெல்லாம் தங்கக்காசு இருந்துச்சுங்களே) ஒளிச்சு வைக்கிறதுதான்.
நல்ல சிக்கனமாக் குடும்பம் பண்ணுற பொண்ணு, காசை ஒளிச்சு வைக்கிற இடம்தான் தவிட்டுப் பானை. அதையாரு
ஆராயப் போறாங்கன்னு அந்த இடம். அப்புறம் அவிட்டம், தவிடு எல்லாம் என்ன ரைமிங்கோ?

ஜோ Says:
March 14th, 2006 at 6:33 pm e
தருமி & ஜோசப் சார்,
இந்த ‘நவநாள்’ என்பது உண்மையில் ‘நவவாரம்’..அதாவது குறிப்பிட்ட அந்த புனிதரிடம் தொடர்ச்சியாக ஒன்பது வாரங்கள் சென்று ஜெபித்து ஒரு குறிப்பிட்ட வேண்டுகோளை வைத்தால் ,அது நிறைவேறும் என்பது பல கத்தோலிக்கர்களின் நம்பிக்கை .அதற்காக வாரத்தில் ஒரு குறிப்பிட்ட நாளை குறிப்பிட்ட அந்த புனிதருக்காக வைத்திருக்கிறார்கள் .எல்லோரும் ஒரே நாள்,ஒரே நேரத்தில் ஓரிடத்தில் கூடி ஜெபிக்க வசதியாய் இருக்கும் என்பதை விட குறிப்பிட்ட நாளுக்கு எந்த தார்ப்பரியமும் இருப்பதாக எனக்கு தெரியவில்லை .

(பொதுவான நடைமுறையை நான் சொன்னேன் .நானும் இதை நம்பி கடைபிடிப்பதாக நினைத்து ,என்னை பொறுப்பேற்கச் சொல்லி தருமி கேள்வி மேல் கேள்வி கேட்டால் நான் இந்த ஆட்டத்துக்கு வரல .மற்ற படி நடைமுறைகளைப் பற்றி எனக்கு தெரிந்ததை கட்டாயம் சொல்லுவேன்)

தருமி Says:
March 16th, 2006 at 8:59 am e
ஜோ,
“நானும் இதை நம்பி கடைபிடிப்பதாக நினைத்து..”//
- ஏன் ஜோ, அது உண்மையாய் இருந்தால் தப்பா என்ன? நானெல்லாம் உங்க வயசில எங்க ஊர் ஜெபமாலை மாதா கோவில்ல சனிக்கிழமை சாயுங்காலம் தவறாம நவநாளுக்கு போயிருவேன்ல; அதுவும் வருஷக்கணக்கா…நல்ல பசங்களா இருங்கப்பா.. (சைத்தான் வேதம் ஓதுது.. )

சிவமுருகன் Says:
March 16th, 2006 at 10:04 am e
தருமி சார்,
ஆள் செய்யாத வேலையை நாளும், கோளும் செய்யும்னு கேள்விபட்டுள்ளேன்.

எல்லாம் ஒரு சின்ன அட்ஜெஸ்ட்மென்ட்டுக்காகவும், சிந்தித்து ஆராயவும் செய்யப்பட்ட ஒரு முன்னறிவிப்பு ஜோதிடம், சிஸ்டம் (system).

Wednesday, March 08, 2006

141. சோதிடம்…7 - ‘சாஸ்திரம்’

ஜோதிடம் தொடர் -

மற்றைய பதிவுகள்:

1*,
2*,
3*,
4*,
5*,
6*,
7*,
8*,
9*,
10*,
11*,
12*.
13*.



பெரியவங்க சொன்னவங்க சும்மாவா சொல்லியிருப்பாங்க;

அந்தக் காலத்திலேயே சொல்லிட்டாங்கல்லா;

காலம் காலமா அப்படிச் சொன்னாங்கன்னா, அதில ஏதாவது இருக்கும்.

- இப்படி நம்ம முன்னோர்களுக்கு நாம் அப்பப்போ அளிக்கும் நற்சான்றிதழ்கள் அனேகம். அவர்கள் சொன்ன பல நல்ல விஷயங்களை நாம் கண்டு கொள்வதேயில்லை. நல்லவனா இருன்னு சொன்னால் யார் கேட்பது? ஆனால் நம் முன்னோர்கள் ரொம்பவே புத்திசாலிகள். பொய் சொல்லதேன்னு சொன்னாலும் நாம் பொய் சொல்லுவோம்னு அவங்களுக்கு நல்லாவே தெரிஞ்சிருக்கு. அதனால், பொய் சொன்ன வாய்க்குப் போசனம் கிடைக்காதுன்னு சொன்னாங்க. ஆனாலும், நம்ம ஆளுக இந்த மாதிரி விஷயங்களில் பெரியவங்க சொன்னதைக் கேட்பதில்லை. ஆனால், அதையே ‘இது சாஸ்திரம்’ அப்டின்னு சொல்லிட்டாங்கன்னு வச்சுக்குவோம். நம்ம ஆளுங்க டோட்டல் சரண்டர். அதுக்கு மேல கேள்வி எதுவும் கிடையாது.

அய்யா, நம்ம வீட்டுத் தோட்டத்துக்குள்ள நல்ல பாம்பு ஒண்ணு வந்திருச்சி. இயற்கை, பல்லுயிர் ஓம்புதல் எல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும், அந்த பாம்ப
அடிக்கட்டா, மனசு கேக்குமா? ஒரு வழியா ஆளுகளக் கூட்டியாந்தாச்சு. ஆனா, நம்ம ஏரியாவில பாம்பு அடிக்கிற எக்ஸ்பெர்ட் அடிக்க வந்த பாம்பு
நல்ல பாம்பு அப்டின்னதும், (அதில கூட நல்ல பாம்புன்னு சொல்லக்கூடாதாமில்ல; ‘நல்லது’ அப்டின்னுதான் சொல்லணுமாம். ஏன்யா அப்டின்னு கேட்டா ‘பெரியவங்க அப்டிதான் சொல்லுவாங்க’ அப்டின்னு பதில்!) பின் வாங்கிட்டார். ‘வீடல பிள்ளதாச்சியா இருக்காங்க; அதனால ‘நல்லதை’ அடிக்கக் கூடாதுன்னு பெரியவங்க சொல்லுவாங்க’ அப்டிங்கிறார். அப்புறம் என்ன, நம்மளே அடிக்கிறோம். அடிச்சுக் கொன்ன பிறகு ஒருபாட்டு சனம் நம்ம வீட்ட சுத்தி. எதுக்குங்கிறீங்க? ‘நல்லதுக்கு’ கடைசி காரியம் எப்படி பண்ணணும்னு சொல்றதுக்கு. அங்க என்னன்னா, ஒரு பட்டி மன்றமே ஆரம்பிச்சிருச்சு. ஒரு குரூப், ‘புதைச்சுதான் ஆகணும்’ அப்டிங்குது. இன்னொண்ணு, இல்ல..இல்ல.. எரிக்கணும்னு ஒத்த கால்ல நிக்குது. நானே பாப்பையாவா மாறி, விடுங்க, எரிச்சு புதைச்சுருவோம்னு தீர்ப்பு சொல்லிட்டு எரிக்கச் சொன்னேன். எதுத்த வீட்டுல இருந்து ஒரு பெரியம்மா, ‘தம்பி, கொஞ்சம் பாலு ஊத்திரு’யா’ என்று ஒரு மனு.

இதெல்லாம் என்னங்கப்பான்னு கேட்டா, ஒரே மாதிரியா எல்லாரும் சொல்லி வச்ச மாதிரி, - ‘பெரியவங்க அப்படிதான் சொல்லியிருக்காங்க’; ‘அது காலங்காலமாய் ஆகி வந்த சாஸ்திரம்’…

ஆனா நான் பார்த்த வரையில் எப்படியோ சாஸ்திரம்னு சொன்னா நம்மாளுக மடங்கிடுவாங்கன்னு பெரியவங்களுக்கு அப்பவே தெரிஞ்சிருக்கு. நிறைய
விஞ்ஞான அடிப்படையான காரியங்களைக் கூட சாஸ்திரம் என்ற பெயரில் சொல்லிச் சென்று விட்டார்கள். அதன் அடிப்படை என்னவென்று தெரியாமலே நாம் அவைகளைச் சிரத்தையாக நடத்தி வருகிறோம். வாழை இலை போடும் முறை சாஸ்திரம் என்ற பெயரில் சொன்னால் கேட்கிறோம். நல்ல
common sense-யோடு இலையை எப்படிப் போட வேண்டும் என்று சொல்லி, அதை சாஸ்திரம் என்ற பெயரில் கொடுத்ததும் நாமும் அதை அப்படியே
ஒத்துக்கொண்டு செய்து வருகிறோம். இலையின் முனைப்பகுதி ஏன் இடப் பக்கம் வரவேண்டும் என்று உங்களுக்கெல்லாம் தெரியாதா என்ன? இதே
போல் நான் ஒரு பெரிய லிஸ்ட் வைத்திருக்கிறேன் - சாஸ்திரம் என்ற பெயரில் உள்ள நல்ல விஷயங்கள் என்று:

விளக்கு வைத்த பிறகு வீட்டைக் கூட்டினால் லஷ்மி வெளியே போய்விடுவாள்.
விளக்குப் போட்ட பிறகு நகம் வெட்டினால் தரித்திரம்.
பச்சைக் குழந்தையையோ, வயிற்றுப் பிள்ளையோடு இருப்பவர்களையோ தாண்டக் கூடாது.
ஒத்தக் காலில் நிற்காதே - தரித்திரம்.
வீட்டுப் படியில் உட்கார்ந்து சாப்பிடாதே.
சாப்பிடும்போது விளக்கை அணைக்கக்கூடாது.

- இப்படி எத்தனை எத்தனையோ… இவைகள் நல்ல விஷயங்கள்; சாஸ்திரம் என்ற பெயரில் கொடுக்கப்பட்ட காரியங்கள்.

இவைகள் இப்படி என்றால், இன்னும் பல காரியங்கள் சாஸ்திரம் என்ற பெயரில் அர்த்தமில்லாமல் நம்மேல் சுமத்தப் படுகின்றன. எங்கேயும் போகும்போது எங்க போறீங்கன்னு கேட்கக் கூடாதாம். கேட்டா போற காரியம் நடக்காதாம். இது male chauvenism இல்லாம வேற எதுவும் இருக்குமா என்ன?

கண்ணாடி சாமான்களைக் கீழே போட்டா உடையத்தான் செய்யும். அதுலயும் சாஸ்திரம். அதுவும் வெள்ளிக் கிழமை உடைச்சா, ரொம்ப விசேஷமாம்!
அட, ஒரு சின்ன பூனை, அதுவும் கறுப்புப் பூனை அதுபாட்டுக்குப் போனா நமக்கென்ன; அது குறுக்கே போச்சுதுன்னா நம்ம ஆளு அவ்வளவுதான்!
பூனையாவது பரவாயில்லைங்க; இந்தப் பல்லி பாவம்; இத்தனூண்டு. அது பாட்டுக்கு சுவர் கூறைன்னு திரியற ஜந்து. அவ்வளவு உயரத்தில போற வர்ரப்போ ஏதோ கையோ காலோ வழுக்கி கீழ விழ நம்மாளு மேல பட்டிச்சின்னா, தலைவர் உடனே காலண்டரின் பின்பக்கம் பார்க்க ஆரம்பிச்சுருவார் - பல்லி பலன் பார்க்க!

இதையெல்லாம் கேள்வி கேட்டால் ‘ஆமா, எல்லாம் படிச்ச திமிரு’ / ‘’பெரியவங்க அர்த்தமில்லாமலா சொல்லுவாங்க..’ - இப்படி ஏதாவது ஒரு பதில். என் கேள்வி: சாஸ்திரம் என்று சொல்லிவிட்டால் கண்ணை மூடிக்கொண்டு வழிநடக்கணுமா அப்டின்னுதான்.




Pathivu Toolbar ©2005thamizmanam.com


Mar 08 2006 01:19 pm | சமூகம் | | edit this
16 Responses
suresh - penathal Says:
March 8th, 2006 at 1:58 pm e
நல்ல பதிவு தருமி,

இவற்றுக்கு மட்டும் காரணங்களை சொல்லி விடுங்களேன்.. மற்றவற்றுக்கு எனக்கே(?!) தெரியும்.

ஒத்தக் காலில் நிற்காதே - தரித்திரம்.
வீட்டுப் படியில் உட்கார்ந்து சாப்பிடாதே.

எல்லா சாஸ்திரங்களும் நல்ல காரணத்தோடே ஆரம்பிக்கப்பட்டவையாகத்தான் இருந்திருக்கும். ஆனால், காலப்போக்கில் பூனையைப்பிடித்துக்கட்டிய சீடன் கதையாகவே ஆகிவிட்டன என்பது என் கருத்து.

செல்வம் Says:
March 8th, 2006 at 2:02 pm e
ஐயா,

புகைப்படத்தில் இருப்பது கூடல்நகர் வானொலி நிலையம் பின்னால் கரிசல் குளம் கண்மாயை ஒட்டிய வயல்தானே?

Geetha Sambasivam Says:
March 8th, 2006 at 2:09 pm e
what is the link between this and jothidam?I am confused. You should take whichever you like and drop which does not suit you. It is very simple.

துளசி கோபால் Says:
March 8th, 2006 at 3:54 pm e
விளக்கு வச்ச பிறகு யாருக்கும் ‘உறைமோர்’ கொடுக்கக்கூடாது.

வெள்ளிக்கிழமையன்னிக்குக் கடன் கொடுக்கக்கூடாது.

அமாவாசையன்னிக்கு எண்ணெய் தேய்ச்சுத் தலை முழுகக்கூடாது.

pot"tea"kadai Says:
March 10th, 2006 at 9:14 am e
பெரியவங்க சொன்னா கேட்டுக்கனும்.

நீங்க சொல்லிட்டீங்க, நா கேட்டுக்கறேன்…

நிழற்படம் மிக அருமை…

I LOVE IT…

dharumi Says:
March 11th, 2006 at 3:05 pm e
ஒத்தக் காலில் நிற்காதே - தரித்திரம்.
வீட்டுப் படியில் உட்கார்ந்து சாப்பிடாதே.

சுரேஷ்,
நான் நினைக்கிறது: 1. matter of balance
2. mater of hygiene -ஏன்னா, வாசல் படி -நுழை வாயில் தெரு அழுக்கு நுழையும் இடமல்லவா?

“எல்லா சாஸ்திரங்களும் நல்ல காரணத்தோடே ஆரம்பிக்கப்பட்டவையாகத்தான் இருந்திருக்கும்.”
இல்ல சுரேஷ், நான் நினைக்கிறது என்னென்னா, சில விஞ்ஞான பூர்வமான விஷயங்கள் இதுபோல சாஸ்திரம் என்ற பெயரோடு வழங்கி வருகின்றன. ஆனால் பல விஷயங்கள் எந்த அர்த்தமும் இல்லாமல் சாஸ்திரப் போர்வையில், கண்மூடித்தனமாக புழங்கப்படுகின்றன என்றே நான் நினைக்கிறேன். மேலே துளசி சொல்லியுள்ள மூன்று விஷயங்களில் என்ன விஞ்ஞானம் இருக்க முடியும்?

dharumi Says:
March 11th, 2006 at 3:28 pm e
ஐயா செல்வம்,
இதென்ன அநியாயமா இருக்கு? ஏதோ நான் காலையில் வாக் போறப்போ என் பின்னாலேயே வந்து, நான் படம் எடுக்கும்போது பார்த்தமாதிரி அவ்வளவு சரியா சொல்லிட்டீங்க??!! எப்டிங்க இது? ஆச்சரியம் என்னென்னா, அந்த இடத்தை இவ்வளவு சரியா சொல்றதுக்கு படத்தில ஒரு அடையாளம் கூட இல்லையே..அங்க தூரத்தில தெரியிற டவர் தவிர.
suspense தாங்கலை; சீக்கிரம் சொல்லுங்க.

dharumi Says:
March 11th, 2006 at 3:30 pm e
Geetha Sambasivam,
ரொம்ப அவசரப் படுறீங்களே! இனிமதான் அது வரும்…

“You should take whichever you like and drop which does not suit you. It is very simple…”

Is it that simple? My aim is not to find and accept what suits me; but to raise the basic question : should we have such ’set of rules’ in the name of சாஸ்திரம்?

dharumi Says:
March 11th, 2006 at 3:32 pm e
இதயும் சேத்துக்குங்க:

should we have such ’set of rules’(most of which have become so obsolete) in the name of சாஸ்திரம்?

dharumi Says:
March 11th, 2006 at 3:33 pm e
துளசி,
விளக்கு வச்ச பிறகு யாருக்கும் ‘உறைமோர்’ கொடுக்கக்கூடாது.// - லைட் இல்லாத அந்த நாட்களில் பாலுக்கும் உறை மோருக்கும் வித்தியாசம் தெரியாமல் குடிச்சிரக் கூடாதல்லவா..?

வெள்ளிக்கிழமையன்னிக்குக் கடன் கொடுக்கக்கூடாது. ‘’ மக்கள் weekend celebration-ல ரொம்ப செலவழிச்சிருவாங்க..!

அமாவாசையன்னிக்கு எண்ணெய் தேய்ச்சுத் தலை முழுகக்கூடாது'’ // - உள்ளதே சில கேசுகள் இழுத்துக்கோ பரிச்சுக்கோன்னு இருக்கும். அதுக தலைல எண்ணெய் வைச்சு ஒரேயடியா முடிச்சிரக் கூடாதேன்னுதான்..!

dharumi Says:
March 11th, 2006 at 3:34 pm e
பொட்’டீ’க்கடை,
என்னங்க விளையாடுறீங்களா? இந்தப் படத்தை நல்லா இருக்குன்னு சொல்லி ‘லந்து’ பண்றீங்களா? இதெல்லாம் சரியில்ல, சொல்லிட்டேன்!

selvam Says:
March 30th, 2006 at 6:30 pm e
//அந்த இடத்தை இவ்வளவு சரியா சொல்றதுக்கு படத்தில ஒரு அடையாளம் கூட இல்லையே..அங்க தூரத்தில தெரியிற டவர் தவிர.//

அந்த ஒலிபரப்புக் கோபுரத்தை வச்சும் நீங்க மதுரைக்காரருங்கிறதையும் வச்சுத்தான்.

நான் கோயில் பாப்பாகுடிக்காரன்.

கோபி Says:
April 3rd, 2006 at 12:29 pm e
//கண்ணாடி சாமான்களைக் கீழே போட்டா உடையத்தான் செய்யும். அதுலயும் சாஸ்திரம். அதுவும் வெள்ளிக் கிழமை உடைச்சா, ரொம்ப விசேஷமாம்!//

:-)

//அட, ஒரு சின்ன பூனை, அதுவும் கறுப்புப் பூனை அதுபாட்டுக்குப் போனா நமக்கென்ன; அது குறுக்கே போச்சுதுன்னா நம்ம ஆளு அவ்வளவுதான்!//

உண்மையில பூனை தன்னோட ஆளுமைக்குறிய பிரதேசத்தை குறிக்க “உச்சா” போயி (நாய்க்கும் இந்த குணம் உண்டு) மார்க் பண்ண பிஸியா நடந்துக்கிட்டு இருக்கும்போது குறுக்கே போறது நாமதானுங்க.

“சே! மனுசப்பய குறுக்கே போயிட்டானே.. இனி எல்லை குறிச்ச மாதிரிதான்” அப்படின்னு பூனை நெனைக்குமோ என்னவோ.

தருமி Says:
April 3rd, 2006 at 1:26 pm e
கோபி,
“பூனை “உச்சா” போயி மார்க் பண்ண பிஸியா நடந்துக்கிட்டு இருக்கும்போது .. ‘ பாவம் அது எதுக்கு பிஸியாயா போச்சோ..

சம்மட்டி Says:
April 3rd, 2006 at 1:59 pm e
இடது கையில் எதையும் வாங்ககூடாது என்பார்கள், ஆனால் நாயர் கையால் (நல்லா கைகழுவியோ ?) தட்டின மசால் வடையை மட்டும் சுவைத்துச் சாப்பிடுவார்கள். உங்களுக்கு வடைதட்டுறது எப்படின்னு சொல்லித்தர வேண்டியதில்லை. வடைத்தட்டுவதில் இடது கையே பெரும்பங்கு வகிக்கிறது. ஏப்பம் விட்டலும், கொட்டாவி விட்டலும், தும்முனாலும் எல்லாம் சகுனம். நம்பாளுங்க சாவுக்கும் தடைவெச்சிருக்காங்கன்ன பாத்துக்குங்க, அது என்னான்னா, சனிப் பொனம் தனியா போகாதாம் கூடவே (பாவம்) ஒரு கோழிக்குஞ்சியையும் கட்டி அனுப்புவார்கள்.

நாம சகுனத்தடையா நினைக்கிற ஆமை (அதாங்க ஆமைப் பூந்த வீடும் அமீனார் பூந்த வீடும் உருப்படாதாமே) சீனர்களுக்கு அதிர்ஷ்ட சின்னம். ஒரு பழமொழி கூட இருக்குங்க, ஒரு சோசிய காரன் சொல்லுவானம் ‘உங்களுக்கு தலைப்பிள்ளை ஆண்பிள்ளை தப்பித்தால் பெண்பிள்ளை இது மாதிரி அபத்தங்களை சொல்லிக்கின்னெ போவலாம்.

இந்த செவ்வாக்கிழமைய வெச்சு அடிக்கிற கூத்து இருக்கே அது சொல்லி மாளதுங்க.

சம்மட்டி

மகேஸ் Says:
April 3rd, 2006 at 2:57 pm e
அதல்லாம் விட, பஸ்ல போகும் போது , அசைவ உணவு சாப்பிட எடுத்துச் சென்றால், எங்கள் வீட்டில் ஒரு அடுப்புக்கரியையும் பையில் போட்டு அனுப்புவார்கள். அது ஏன்??
தருமி அப்படியே நம்ம பதிவுக்கும் வாங்க, கொஞ்சம் போட்டோ போட்டிருக்கேன்.