Sunday, December 23, 2018

1014. BIBLE STUDY - பழைய ஏற்பாடு ...10 இணைச் சட்டம்





கிறித்துமஸ் விழா சமயத்தில் இப்படி ஒரு தலைப்பில் பைபிளைப் பற்றி ஒரு  கட்டுரையா என்று எண்ணாதீர்கள்.

வெட்டு, குத்து, கொலை, கொள்ளை ....

இதை முன்பே நானே சொல்லியிருப்பேன் என்று நினைக்கின்றேன் - யூத மதத்தினருக்கு பழைய ஏற்பாடு வேத நூல் என்றும், கிறித்துவர்களுக்கு புதிய ஏற்பாடு வேத நூல் என்றும், இஸ்லாமியருக்கு இறுதி வேதமாக குரான் உள்ளது என்றும் அந்தந்த மதக்காரர்கள் சொல்வதுண்டு. ஆனால் கிறித்துவர்கள் பழைய ஏற்பாட்டைப் புறந்துள்ளுவதில்லை. இஸ்லாமியர் பழைய ஏற்பாட்டுக் கதைகளை அப்படியே தங்கள் குரானில் காப்பி & பேஸ்ட் செய்துள்ளனர்

என்னங்க ...  உங்கள் வேத நூலான பழைய ஏற்பாட்டில் ஆபிரஹாம் கதை, ஜோசப் கதை போன்ற மோசமான இதிகாசக் கதைகளும், இன்னும் பல கிளு கிளு கதைகளும் இருக்கிறதே என்றால் அதற்கான சரியான பதில்களை எனக்கு இதுவரை யாரும் தந்ததில்லை.   பழைய ஏற்பாட்டைஅப்படியேஎடுத்துக் கொள்ளக் கூடாது என்று மட்டும் சொல்வார்கள். அதன் பொருள்  எனக்குப் புரிவதில்லை. ஏனெனில் கிறித்துவர்களுக்கு இதுவும் ஒரு பைபிள் தான். ஆனால் அதைப் பற்றவும் மாட்டார்கள்; கேள்வி கேட்டால் புது ஏற்பாட்டை எடுத்து வருவார்கள். ஆனால் பழைய ஏற்பாட்டை விடவும் மாட்டார்கள். அது ஒரு பெரும் நகை முரண்.

இஸ்லாமியர்கள் தங்கள் பல கொள்கைகளை அப்படியே பழைய ஏற்பாட்டில் இருந்து காப்பி & பேஸ்ட் செய்துள்ளனர். இந்தக் கட்டுரையில் அதனைத் துல்லியமாகப் பார்க்கலாம்.

என்னைப் பொறுத்தவரை பழைய ஏற்பாடு இன்னொரு இந்துப் புராணக் கதைகள் போன்ற ஒரு தொகுதி.

கருப்பெழுத்துகளில் பழைய ஏற்பாட்டின் வசனங்களும், அதை ஒட்டி / வெட்டி சிகப்பு எழுத்துக்களில் என் கருத்தும்  இக்கட்டுரையில் காணலாம்.


4. இணைச்சட்டம்


முன்னுரையில்: ... மோசே ... வாக்களிக்கப்பட்ட நாட்டில் இஸ்ரயேலரின் வாழ்க்கைத் தடமாக இருக்க வேண்டிய பல்வேறு சட்டங்களை நினைவூட்டுகிறார்.
--  பழைய ஏற்பாட்டை மோசஸ் / மோசே எழுதியதாகச் சொல்வர். ஆனால் அதற்கான எவ்வித சான்றும் கிடையாது.
மோசே இஸ்ரவேலர்களின் தலைவர் - அதாவது ஆதாம்  .. அவரை அடுத்து ஆபிரஹாம் .. அதற்கடுத்து மோசஸ் என்பார்கள். அவர் கடவுளோடு நேரடித் தொடர்பு கொண்டு கடவுளின் கட்டளைகளை மக்களுக்கு, அதாவது இஸ்ரவேலர்களுக்குக் கொடுத்ததாகச் சொல்வார்கள். பின் இஸ்ரயேலருக்குக் கொடுத்ததை நானும் நீங்களும் ஏன் பின்பற்ற வேண்டும் என்று கேள்வி கேட்டாலும் கிறித்துவர்களிடமிருந்து சரியான பதிலேதும் கிடைக்காது. இன்று எழுதப்பட்ட முன்னுரையிலும் இது இஸ்ரயேலரின் வாழ்க்கைக்கான சட்டங்கள் என்று தான் சொல்லியுள்ளனர். ஆக, இது நமக்கான கட்டளைகள் கிடையாது அல்லவா?

முன்னுரையில் இன்னொரு கருத்து -- கடவுள் இஸ்ரயேல் மக்களுக்கு .. விடுதலை அளித்து தம் ஆசியை வழங்குகிறார். அன்பு கூர்ந்து அவரைப் பணிந்தால் அவர்கள் வாழ்வுபெற்று அவர் தம் ஆசியைத் தொடர்ந்து பெறுவர். -- 
Is it not a good business deal? கையில காசு .. வாயில தோசை என்று ஆசை காட்டுவது போல் தெரியவில்லையா? It is all ONLY a CONDITIONAL LOVE!!!! What a good hearted god! கும்பிட்டால் ஆசி உண்டு என்னும் கடவுள் !!!


இனி பழைய ஏற்பாட்டின் வசனங்கள்:

1:8 -- ஆண்டவர் உங்கள் மூதாதையராகிய .. அவர்கள் வழிமரபினருக்கும் கொடுப்பதாக ஆணையிட்டுக் கூறியபடி நீங்கள் போய் அந்த நாட்டை உரிமையாக்கிக் கொள்ளுங்கள்.
-- இஸ்ரயேலருக்கான நாட்டைக் கடவுள் கை காட்டுகிறார். இஸ்ரயேலருக்குத்தான் அது ... நமக்கெல்லாம் இல்லை. இஸ்ரயேலருக்குத்தான் கடவுள் ... நமக்கில்லை!

7:6 -- ஏனெனில், உங்கள் கடவுளாகிய ஆண்டவரின் தூய மக்களினம் நீங்கள், மண்ணிலுள்ள எல்லா மக்களினங்களிலும்உங்களையே சொந்த மக்களாக கடவுளாகிய ஆண்டவர் தேர்ந்து கொண்டார்.
கடவுள் மிகத் தெளிவாக யாரைத் தான் தேர்ந்தெடுத்ததாகக் கூறுகிறார். அது இஸ்ரயேலர்கள் மட்டுமே. பின் எப்படி நாமெல்லாம் பின் செல்வது? இதற்கானப் பதில்களை கிறித்துவர்களிடம் கேட்டுப் பார்த்தும், இதுவரை சரியான பதில் கிடைக்கவில்லை. (உங்களிடம் இருந்தால் சொல்லுங்களேன்.)


7:14 -- மற்றெல்லா மக்களினங்களையும் விட நீங்கள் ஆசி பெற்றவர்களாய் இருப்பீர்கள்.
இஸ்ரயேலர்களின் கடவுள். அதனால் இப்படி சொல்கிறார்.


2:33-35  ஆண்டவர் அவனை (சீகோனை) நம் கையில் ஒப்படைத்தார். நாம் அவனையும் அவன் நகர்கள் அனைத்தையும் கைப்பற்றி அங்கிருந்த ஆண்கள், பெண்கள், குழந்தைகள், எவரையுமே தப்பவிடாமல் அழித்தோம். கால்நடைகளையும், நாம் பிடித்த நகர்களின் கொள்ளைப் பொருள்களையும் நமக்கெனச் சூறையாடினோம்.
எப்படி ..? அப்படியே முகமது தன்னைப் பின்பற்றியவர்களுக்குச் சொன்னது போல் அப்படியே இங்கும் சொல்லப்பட்டுள்ளதா? என்ன... முகமது அப்படி கொள்ளையடித்த பொருட்களில் தனக்குச் சேர வேண்டியகட்டிங்எவ்வளவு என்றும் விளக்கமாகச் சொல்லியுள்ளார். இங்கே அது சொல்லப்படவில்லை. ஆனாலும் எந்த மாதிரியான பொருட்கள் கடவுளுக்கு (லேவியர் மூலமாக) காணிக்கையாகச் செலுத்த வேண்டுமென நிறைய சொல்லியிருப்பதை முந்திய கட்டுரைகளில் குறிப்பிட்டிருந்தேன்.


3:22 -- நீ அவர்களுக்கு அஞ்சாதே. ஏனெனில், உங்கள் கடவுளாகிய ஆண்டவர் உங்களுக்காகப் போர் புரிவார்.
What a valiant god! நமக்காகக் களத்தில் இறங்கும்கருணையானகடவுள் இவரல்லவா !


4வது அத்தியாயத்தின் தலைப்பு: கீழ்ப்படியுமாறு மோசே இஸ்ரயேலரை ஊக்குவித்தல்.
-- ஆகவே இதெல்லாம் கடவுள் - இஸ்ரயேலர் அளவிலான தொடர்பே. நாம் எங்கிருந்து இதற்குள் வருகிறோம்?




4:17 எந்த உருவத்திலும் சிலைகளைச் செய்யாதீர்கள்.
7:5 -8 -- அவர்களின்  பலி பீடங்களை அசேராக் கம்பங்களை வெட்டி, அவர்களின் கைவினையான சிலைகளைத் தீயில் எரித்து விடு.
8:19  -- உங்கள் கடவுளாகிய ஆண்டவரை மறந்து வேற்றுத் தெய்வங்களைப் பின்பற்றி, அவைகளைப் பணிந்து வணங்கினால், நீங்கள் அழிந்து போவீர்கள் என்று இன்றே உங்களுக்கு எச்சரிக்கை விடுக்கிறேன்.
12:3  --  அவர்களின் தெய்வங்களின் சிலைகளை உடைத்து அவர்களின் பெயர் அவ்விடங்களில் இல்லாது ஒழியுங்கள்.



17:4,5  வேற்றுத் தெய்வங்களை வணங்கினால் ...அக்குற்றத்தைச் செய்த ஆணையோ பெண்ணையோ உன் நகர வாயிலுக்கு கூட்டிச் சென்று அவனை அல்லது அவளைக் கல்லால் எறிந்து கொல்.
என்ன I.S.I.S. நினைவிற்கு வருகிறார்களா? அதே... I.S.I.S தான் முழுமையாக பழைய ஏற்பாட்டைப் பின்பற்றுகிறார்கள் என்பதற்கான பல சான்றுகளை இந்தக் கட்டுரையில் இப்படிப் பல இடங்களில் காணலாம்.



4:24 -- உங்கள் கடவுளாகிய ஆண்டவர் அழிக்கும் நெருப்புப் போன்றவர்; அவர் வேற்றுத் தெய்வ வழிபாட்டைச் சகிக்காத இறைவன்.
11:25  --  நீங்கள் அறியாத வேற்றுத் தெய்வங்களைப் பின்பற்றினால் சாபமும் உண்டாகும்.
என்ன .. குரானின் வசனங்களும், இஸ்லாமியரின் ஓரிறைக் கொள்கையும் நினைவுக்கு வருகிறதா? எல்லாம் காப்பி & பேஸ்ட் தானே!


பத்துக் கட்டளைகள் பற்றி இப்பகுதியில் வருகிறது.
5:9 -- நானே உன் கடவுளாகிய ஆண்டவர்; வேற்றுத் தெய்வ வழிபாட்டைச் சகிக்காத இறைவன்; என்னை வெறுக்கும் மூதாதையரின் அச்செயலுக்காக மூன்றாம் நான்காம் தலைமுறை மட்டும் பிள்ளைகளைத் தண்டிப்பவன்.
6:14,15 -- உங்களைச் சுற்றியுள்ள மக்களின் தெய்வங்களாகிய வேற்றுத் தெய்வங்களைப் பின்பற்ற வேண்டாம். ... உங்கள் கடவுளாகிய ஆண்டவரின் சினம் உங்கள் மேல் மூண்டு, உலகினின்றே உங்களை அழித்து விடலாம்.
நல்ல வேளை .. பத்துக் கட்டளைகளில்பொறாமை கொள்ளாதேஎன்று ஒரு கட்டளை இல்லை. ஏன் தெரியுமா? கிறித்துவக் கடவுளுக்கு(ம், இஸ்லாமியக் கடவுளுக்கும்) வேற்றுத் தெய்வ வழிபாட்டைச் சகிக்காத ஒரு பொறாமைக் குணம் உண்டு. பொறாமையில் அம்மக்களையே கொன்றொழித்து விடும் இரக்கமான கடவுள் இவர்.


9:13,14  -- மோசேயிடம் கடவுள் சொல்கிறார்: நானும் இந்த மக்களைப் பார்த்துக் கொண்டுதான் வருகிறேன். இவர்கள் வணங்காக் கழுத்துள்ள மக்கள். ... நான் அவர்களை அழிப்பேன். மண்ணினின்று அவர்கள் பெயர் இல்லாது ஒழிப்பேன்.
கிறித்துவக் கடவுள் மிகவும் இரக்கமான கடவுள் என்று சொல்வார்கள். ஆஹா.. எத்தனை இரக்கம் அவருக்கு. தன்னை வணங்காத கழுத்துகளை அவர் வெட்டிச் சாய்ப்பாராமே...


10:20  --  உங்கள் கடவுளாகிய ஆண்டவருக்கே அஞ்சுங்கள்.
கிறித்துவக் கடவுள் அளவில்லாத அன்பானவர் என்கிறார்கள்.ஆனால் அவர் அச்சுறுத்தும் பயங்கரக் கடவுளாக அல்லவா இருக்கிறார்.


115:11  --  உனது நாட்டில் ஏழைகள் என்றும் இருப்பர்.
அடப் பாவமே ...! ஆனால் இஸ்ரேல் அப்படி ஒன்றும் பிச்சைக்கார நாடாக இப்போது இல்லையே!


18:9  ... அந்த வேற்றினத்தாரின் அருவருப்பான செயல்களைக் கற்றுக் கொள்ளாதே.
கிறித்துவக் குழந்தைகள் - ஏன் பெரியவர்களும் கூட - இந்து சமயப் பழக்கவழக்கங்களை பேய் .. பேய்ச்செயல்கள் என்று குறிப்பிடுவது உண்டு. (நானும் அப்படித்தான் இருந்தேன்.) ஏனெனில் அப்படித்தான் சொல்லிக் கொடுக்கப்பட்டு வளர்க்கப் பட்டோம்.


19:15  --  ஒருவனது எந்தக் குற்றத்தையும் எந்தப் பழிபாவச் செயலையும் உறுதி செய்ய ஒரே சாட்சியின் வாக்குமூலம் போதாது. இரண்டு அல்லது மூன்று சாட்சிகளின் வாக்கு மூலத்தாலே அது உறுதி செய்யப்பட வேண்டும்.
மிக நல்லதொரு அறிவுரை. ஆனால் இதே சட்டம் குரானிலும் சொல்லப்பட்டுள்ளது. அதிலும் ஒரு வேறுபாடு உண்டு. இங்கே ஆண் சாட்சி, பெண் சாட்சி என்ற எந்த வேற்றுமையும் இல்லை. ஆனால் குரானில் பெண்கள் சாட்சியென்றால் அது இரு மடங்காக இருக்க வேண்டும் என்றுள்ளது.


21:10-13  -- போர்ப் பெண் கைதிகளைக் குறித்த விதிமுறைகள்: சிறை பிடிக்கப்பட்டதில் அழகான பெண்ணிருந்தால் அவளை எப்படி அடைய வேண்டும் என்ற methodology இங்கே கொடுக்கப்பட்டுள்ளது!
அப்படியே குரானில் கடவுளின் கட்டளை என்று முகமது கூறியது அப்படியே இதன் காப்பி & பேஸ்ட்! ஆனால் முகமது இந்த methodologyயைக் விட்டு விட்டு ஒரு short cut எடுத்து ஜுவேரியா என்ற கொல்ல்ப்பட்ட எதிரியின் மனைவியை உடனே மனைவியாக்கிக் கொண்டார்.


23:13  --  ஸ்வாச் பார்த் விஷயம் இங்கு சொல்லிக் கொடுக்கப்படுகிறது. திறந்த வெளியில் “ஆய் போனால் என்ன செய்ய வேண்டும் என்பது கற்பிக்கப்பட்டுள்ளது.
Holy shit!!


33:29  --  "இஸ்ரயேலே! நீ பேறு பெற்றவன்;
       ஆண்டவரால் மீட்கப்பட்ட
       மக்களினமே! உன்னைப் போல்
       வேறு இனம் உண்டோ?”


சரி.. சரி.. இஸ்ரயேலர்கள் பேறு பெற்றவர்கள் தான். அவர்களை மீட்ட கடவுளை அவர்கள் வணங்குவது மிகச் சரி. ஆனால் நாம், அதாவது இஸ்ரவேலரைத் தவிர அனைத்து உலக மக்களும் எப்படி அந்தக் கடவுளை வணங்க வேண்டும் என்பது எனக்குப் புரியவில்லை. .. உங்களுக்கு ...?

ஆக, 
1. கிறித்துவக் கடவுள் இஸ்ரயேலருக்கான கடவுளாகத் தன்னை நிலைநிறுத்துவதைப் பார்க்க முடிகிறது.
2. வேறெந்தக் கடவுளையும் வணங்கினால் அவர்கள் கொல்லப்பட வேண்டியவர்கள்.
3.அடிமைத்தனம், பெண்களுக்கான தாழ்ந்த நிலை, காணிக்கை .. என்று பல்வேறு கருத்துகளும் இந்த வேதநூலில் இருக்கிறது.

சிந்திக்க மாட்டீர்களா...?


Thursday, December 06, 2018

1013. அம்பேத்கர் ...




*

இன்று அம்பேத்கரின் பிறந்த நாள். 

நேற்று தான் அம்பேத்கரைப் பற்றிய நூல் ஒன்றின் தமிழாக்கத்தை  எழுதி முடித்த மகிழ்ச்சி.





இன்று தமிழ் இந்துவில் வினோத் என்பவர் எழுதிய கட்டுரை ஒன்றை வாசித்தேன். அதில் அவர் அம்பேத்கர் இன்னும் நம் மத்தியில் ஒரு “ஒதுக்கப்பட்டவராகவே “ உள்ளார் என்பதை எழுதியுள்ளார். இதைச் சாதி வெறி என்று அம்பேத்கரின் நினைவகத்தின் காவலாளி மிகச் சரியாகக் குறிப்பிட்டுள்ளார்,

(ஆனாலும் அம்பேத்கருக்கு இவ்வளவு அழகான நினைவகம் கட்டியது யாரோ! மிகுந்த ஆச்சரியமாக இருந்தது. எப்படி இத்தனை அழகாக ஒரு நினைவகம் என்ற மகிழ்ச்சியும் ஏற்பட்டது. ஆனால் பார்வையாளர்கள் இல்லாமல் இருக்கும் இடம் கூட பலருக்கும் தெரியாமல் எங்கோ முடங்கிக் கிடக்கிறதாமே!)

என்று மாறுமோ இந்த சாதி வெறி?

இந்தியர்களின் மனத்திலிருந்து. இது மாறவே மாறாது என்று தான் நினைக்கின்றேன். ஒரு பெரும் முடியாத நீள் கதை...



அம்பேத்கரின் பிறந்த நாள் .. எனது இப்போதைய மொழியாக்க வேலை முடிந்த ஒரு மகிழ்ச்சி. இந்தச் சூழலில் நண்பன் பேராசிரியர் முனைவர் சாமிநாதன் எழுதிய “நெகிழ்ச்சி” என்னும் புதினத்தை இப்போது வாசித்துக் கொண்டிருக்கும்போது இதையொட்டிய மிகச் சரியான சில வரிகளை அவன் நூலில் காண முடிந்தது. அதையும் இங்கு தருகிறேன் - நம் சாதி வெறிக்கு இன்னும் ஒரு சின்ன அடையாளச் சின்னம்!







****

எத்தனை அம்பேத்கர்கள், பெரியார்கள் வந்தென்ன ... 


*****