Tuesday, June 28, 2005

24. THE GREAT DICTATOR

It all starts on the very day when I become the Prime Minister of India. On that day I start to promulgate list of drastic changes and orders. I send a fiat through all channels of television at 7 a.m. asking all the citizens to submit the details of their property. This info will all be fed into a Super Computer so that each individual gets an ID card within 3 months, with individual Identity Number. Different coloured and coded cards will immediately tell your status and all other particulars about every individual. No more benami - even for politicians!

The second day begins. Reservation policy remains with the following conditions: First generation candidates get the full extent of the advantages of the existing reservation policy. Second generation gets only one third of the benefits. Children from financially sound families - identified from their respective security numbers fall under common pool. On the other hand children form poor families irrespective of their castes get the ‘one third benefits’. The minority ‘rights’ are to be replaced by minority ‘protection’.

The third day. Lots of news about threatened riots come from all corners of the nation. So the third day becomes a busy day - giving orders to the military and paramilitary forces to proceed to all corners of the nation. At 7 p.m. I telecast in all channels sending a very stern warning to the people trying for the ‘uprising’ of the masses. I mainly focus on the communal and religious leaders to keep their mouths shut. And finally a serious toned warning to all politicians of all hues and colours not to wag their tongues. I warn them that it is good for them to keep idle - no speeches; no comments; no notifications; no nothing. The final word from me is that all the wealth of them and their kith and kin will be blindly confiscated even if there is an iota of doubt about any of them. Lesser they talk safer their wealth. That seals the major source of troubles tight.

Fourth day. People have started to anxiously wait for my messages everyday at 7 a.m. and 7 p.m.. This day brings them total ban on hartal, strike, bandh and such things. Religious, communal, political processions and public meetings of all sorts are banned totally - just by a word from me. Bureacrats are warned that either they produce results or go home. The term ‘accountability’ in all walks of life is to be stricly followed and stressed.

Fifth day. A very mild pleasant morning. So also my telecast brings in mild suggestions and orders. No maternity leave for the second delivery. Cut of one increment for every child after the second child. Disqualification of people to hold any public office if they have more than two children. Politicians are filing all their tax returns for the past 10 years with the details of their wealth in these periods within the next 15 days. They can choose to do this or face further repercussions.

Sixth day - A think tank for the country is nominated. I select just 4 dependable people and make them charge of 4 different think-tanks - one for economics, one for social, one for administration and one for justice. These people have to select a set of intellectuals suitabale who should be above board in all respects. They are commanded to conduct affairs of their repective fields. They are to bring results at the shortest span possible. They are all supreme and take orders only from me.

The seventh day dawns. I have a feeling that I have achieved what I wanted to. I really feel tired. I cancel the daily routine. No telecast today. I relax. Go to bed. I’m almost slipping into a very deep slumber. But suddenly there is a slight drizzling. I woke up and find that my daughter is waking me up from my Sunday afternoon nap sprinkling water on my face.


இது கற்பனை; நடக்க முடியாதது என்று தெரியும். ஆனாலும், இப்படியெல்லாம் நடந்தால்... அப்படியேயில்லாவிட்டாலும் இதில் சில காரியங்களாவது நிறைவேறினால்... ! ஆழமான ஆதங்கங்கள்.
கனவுகள்... நம் ஜனாதிபதிதான் கனவு காணச் சொல்லியிருக்கிறாரே! அதனால்தான் அவருக்கு இந்த கனவின்
ஒரு பகுதியை அவருக்கே ஒரு கடிதமாக அனுப்பினேன். அதையும் பாருங்களேன்.

Sunday, June 26, 2005

23. எல்லோரும் இதை சும்மா விட்ராதீங்க..

காஞ்சி பிலிம்ஸ்காரர் செய்தது கொஞ்சங்கூட நல்லாயில்லை. அவர்பாட்டுக்குக் கடையை இழுத்துப்பூட்டிக்கிட்டு, போற இடமும் சொல்லலை-பின்னூட்டம் கொடுக்கிறதுக்கு. இது நியாயமாகவும் தெரியலை; ஆனா என்ன ப்ண்றதுன்னும் புரியலை.

இது ரொம்பவும் கண்டிக்கப்பட வேண்டிய விஷயம்;
எல்லோரும் இதை சும்மா விட்ராதீங்க.

Friday, June 24, 2005

22. ஒரு GK test...?

To destroy the caste system and adopt the Western European social system means that Hindus must give up the principle of hereditary occupation which is the soul of the caste system. The hereditary principle is an eternal principle. To change it is to create disorder."

எங்கே, இது யார் சொன்னதுன்னு கண்டுபிடிங்க, பார்க்கலாம். உங்கள் பதில்/ஊகம் சரிதானா என்று
இங்கு பார்த்துக்கொள்ளுங்கள்.

பி.கு. தெரியலைன்னா எதுக்கும் நம்ம 'காஞ்சி பிலிம்ஸ்'காரர்ட்ட ஒரு வார்த்தை கேளுங்க.

21. நனி நாகரீகம்...ரொம்ப தூரம்.

இன்றைய (25.06.'05 வெள்ளிக்கிழமை) இந்து செய்தித்தாளைப் பார்த்ததும் மிகவும் சந்தோஷமாக இருந்தது - வந்திருந்த புகைப்படத்தில், நடுவில் சோனியா காந்தி இருக்க இருபுறமும் லல்லுவும் பஸ்வானும். எல்லோர் முகத்திலும் சிரிப்பு. தில்லியில் பஸ்வானின் மகள் திருமணத்தில் எடுத்த படம்.

பொதுவாகவே நமது அரசியல்வாதிகள் மத்தியில் பரஸ்பர உறவுகள் அவர்களின் கட்சி அரசியலைப் பொறுத்தே இருக்கும். இன்றிருக்கும் அரசியல் சூழ்நிலையைப் பொறுத்ததே இன்றைய உறவுகள்; நேற்று வரையிருந்த உறவுகளைப் பற்றி எந்தவித கவலையுமின்றி இன்று அவர்கள் பேசுவதைக் கேட்கும்போது நமக்குத் தலை சுற்றுவது வழக்கம். இன்றைய 'அம்மையார்' நேற்று 'சகோதரி'யாக இருந்திருக்கலாம்; நேற்றைய 'கொலைகாரன்; இன்றைக்குத் 'தம்பி'யாக இருக்கலாம்; நாமும் அது 'காலத்தின் கோலம்' என்று தலையிலடித்துக்கொண்டு நம் வேலையைப் பார்த்துக்கொண்டு போய்க்கொண்டே இருப்போம். அப்படிப்பட்ட சூழ்நிலையில் நண்பர்களாக ஒரு காலத்தில் இருந்து இப்போது எதிர் துருவங்களாக இருக்கும் இரண்டு அரசியல்வாதிகள் தமது அரசியல் மாச்சரியங்களை மறந்து ஒருவர் வீட்டு திருமணத்திற்கு அடுத்தவர் வரும் இந்த நல்ல பண்புக்காக அவர்களை வாழ்த்தத்தான் வேண்டும்.

அவர்களை வாழ்த்தும் அதே நேரத்தில் நம்மூர் அரசியல்வாதிகளை நினைக்காமல் இருக்க முடியவில்லை. இரண்டு திராவிட கட்சிகளுமே "ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்தான்". யார் வீட்டுக் கல்யாணமாயினும் இவர்களுக்கு அவை கட்சி மேடைகள்தான். திருமணநாள் இரு வீட்டாருக்கும் எவ்வளவு முக்கியமான, மகிழ்ச்சிகரமான் நாள்; அன்று எதற்கு அங்கு அரசியல்? அழைப்பவர்களைக் குறை சொல்வதா; அழைக்கப்பட்டவர்களைச் சொல்வதா; இதை ஒரு வழக்கமாக்கிவிட்ட திராவிடக்கட்சிகளைக் குறை கூறுவதா, தெரியவில்லை. (மற்றொன்றும் நினைவுக்கு வருகிறது; நாம் பெற்ற பிள்ளைக்கு, காலமெல்லாம் நாம் நம் பிள்ளைகளைக் கூப்பிடுவதற்குரிய பெயரை யாரோ அவசர அவசரமாக வைத்துவிட்டுப் போகும் அவலத்திற்கு யாரை நொந்துகொள்வது?)


இந்த விஷயங்களில் ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் இல்லையொன்றாலும், புரட்சித்தலைவி காலத்தில் நம் தமிழ்நாட்டு அரசியல்வாதிகளின் சமூகப்பண்புகள் மிகவுமே நீர்த்துப்போய்விட்டன. சுனாமி மீட்பு நிதியாக தன் தந்தையின் பங்கு என்று ஸ்டாலின் பணவோலையுடன் முதலமைச்சரைக் கண்டபோது, கலைஞருக்குத் தன் வாழ்த்துக்களைச் சொன்னதாக வந்த பத்திரிக்கைச்செய்தி ஒன்று மட்டுமே நான் இதுவரை நம் முதலமைச்சர் சாதாரணமாக நம்மைப்போன்று நடந்துகொண்டதாக அறிகிறேன். மற்றபடி அவருக்கும் இதுபோன்ற சமூகப்பண்புகளுக்கும் (etiquettes)வெகு தூரம் என்பது மட்டுமின்றி அவரது கட்சிக்காரர்களுக்கும் அவைகளை வெகு தூ.....ரமாக்கிவிட்டார். நடந்து முடிந்த காஞ்சிபுரம் இடைத்தேர்தலில் தோற்ற தி.மு.க. வேட்பாளர் வெற்றி பெற்ற அ.தி.மு.க. வேட்பாளருக்குக் கை கொடுத்து வாழ்த்தியதாகச் செய்தித்தாள்களில் வாசித்தது சந்தோஷமாக இருந்தது. நிச்சயமாக அதற்காக தி.மு.க. தலைமையிடம் அவரைத் தண்டித்திருக்காது. தண்டிக்காது என்பதால்தான் அவர் அந்த நல்ல காரியத்தைச் செய்திருக்கிறார். ஆனால், ஒருவேளை அ.தி.மு.க. தோற்று அவர் எதிராளிக்குக் கை கொடுத்திருந்தால் ... ? இங்கே, கட்சி வேறு வேறாக இருந்தால் அப்பா-பிள்ளைகளாக இருந்தாலும் அடித்துக் கொண்டால்தான் அமைச்சர் பதவி கிடைக்கும். இந்த லட்சணம் சாவு வீடு வரை வந்து விடுவதுதான் மிகவும் வேதனை. பழைய நண்பரோ,மாஜி கட்சிக்காரரோ - யாராயிருந்தாலும், செத்தால் அங்கே போய் மாலை போட்டால் நாளைக்கு நமக்கு 'என்ன' கிடைக்கும் என்று பயப்படவேண்டிய நிலையில் உள்ள நமது அரசியல்வாதிகளைப் பார்த்து சிரிப்பதா; அழுவதா?


நனி நாகரீகம் பற்றி அய்யன் சொன்னதை எல்லாம் மேற்கோள் காட்டும் நமது அரசியல்வாதிகள் இன்னும்
கொஞ்சம் பண்போடு இருக்க முயற்சிக்கலாமே. ம்ம்ம்..இப்போதைக்கு முடியாதுதான்.

Tuesday, June 21, 2005

20. 'அந்நியன்' என்ன ஆனான்?

26 கோடி செலவு..27 கோடிக்கு காப்பீடு...அது இதுன்னு ஒரே build up. படம் என்ன ஆச்சு, ஆகப்போகுதுன்னு தெரியலை. ஆனால் பார்த்தவர்களிடமிருந்து கிடைத்த துண்டுச்செய்திகளும், பார்த்த சின்னத்திரை விளம்பரங்களும் தரும் சேதிகள் அப்படி ஒன்றும் பெரிதாகத் தெரியவில்லை. ஒரே க்ராஃபிக்ஸ் மயம்தான் என்பதுதான் கெட்ட & கேட்ட சேதி.

ஷங்கர் படத்தைப் பற்றி பெரிதாக எனக்கு எப்போதும் நல்ல எண்ணம் ஒன்றும் கிடையாது. கொஞ்ச நஞ்சம் இருந்ததும் 'பாய்ஸ்'- ஓடு போயே போய் விட்டது. சுஜாதாவுக்கும் அது ஒரு கண்திருஷ்டியாக போய் விட்டது. அவரை மாதிரி யாராவது ஷங்கரிடம் கொஞ்சம் சொல்லலாம் - இந்த க்ராஃபிக்ஸ் எல்லாம் - நம்ம 'காஞ்சி ப்லிம்ஸ்'காரர் மாதிரி - க்ராஃபிக்ஸ்னா க்ராஃபிக்ஸ் மாதிரியே தெரியக்கூடாது; அதுதான் உண்மையான, திறமையான ரசிக்கக்கூடியதுன்னு. உதாரணமா, பாம்பே இல்லாம ஆனா தத்ரூபமா பாம்பு மாதிரி (Anaconda), பொம்மைகளை வைத்தே பயங்காட்டுற (Jurassic Park) மாதிரி இல்லாம, கிறுக்குத்தனமா தண்ணீரில நடக்கிறது, வானத்தில பறக்கிறதுன்னு ஒரு சீனப்படம் - crouching tiger... - ஆஸ்கார் பரிசு வாங்கிச்சே, அதுதான் க்ராஃபிக்ஸ்னு ஷங்கர் நினைச்சுக்கிட்டார்னு நினைக்கிறேன். அப்படி எப்படி ஒரு சின்னப்பிள்ளைத்தனமான படத்திற்கு பரிசு கொடுத்தார்களோ, அது ஒரு கேவலம்.

நம்ம ஆளு என்னன்னா, ரொம்ப ரொமான்டிக்கான சீன்களில் கூட கதாநாயகன் திடீரென்று கழுதையா, புலியா மாறுவார். ரொம்ப சிம்பாலிக்கா காண்பிப்பதாக நினைத்துக் கொண்டு பலதலைப் பாம்பு - draw a lebelled picture-ன்னு தேர்வுல கேட்பார்களே அது மாதிரி -எழுத்துக்களோடு வரும். aesthetics-னா வீசை எவ்வளவுன்னு கேட்கிறது மாதிரிதான் இதுவரை ஷங்கரின் படத்தில் க்ராஃபிக்ஸ் பார்த்ததாக நினைவு. இந்த படமும் அதே மாதிரிதான் போலும்.

சுஜாதா சார், நீங்களாவது கொஞ்சம் சொல்லக்கூடாதா?

19. மன்னிக்கணும்..மன்னிக்கணும்..

மன்னிக்கணும்..மன்னிக்கணும்..பல பேர் என் வலைக்குவந்து புதிய பதிவுகள் இல்லாம
ஏமாந்து திரும்பியதாக தகவல். (லஷ்மி/ அவ்வை..இது எப்படி?) மன்னிக்கணும்..மன்னிக்கணும்.

இதுக்குத்தாங்க, என்னைமாதிரி கம்ப்யூட்டர் கத்துக்குட்டிகளுக்காகவே ஒரு correspondence course நடத்திட்டு அதுக்குப்பிறகுதான் வலையில் சேரணும்னு - முடிஞ்சா ஒரு entrance exam வச்சு, அதுக்குபிறகு அதை cancel பண்ணிட்டு, ஒரு/பல சாரள முறையில் நேர்காணல் வைத்து... - முடிவு பண்ணனும். ஏன்னா இப்ப பாருங்க, எங்க ஊரை விட்டு சென்னைமாநகரம் வந்தேன் (ஐயோடா, தருமி பற்றி கொஞ்சம் சொல்லித்தொலைச்சிட்டேனே..) . மகள் வீட்டுக்கு (மறுபடியும், தப்பா வயசு சொல்லிட்டேனே, போகுது போங்க) கம்ப்யூட்டரில் எனக்குத் தெரிந்தவரை முட்டி மோதி நானும் என்னென்னவோ பண்ணிப்பார்த்தேன். ஹு..ஹும்..என் பாச்சா பலிக்கலை. சரி, ஆபத்பாந்தவா அப்டின்னு திரு. பத்ரிக்கு ஒரு மெயில் அடித்து, அவர் செல் எண் வாங்கி, காரில் போய்க்கொண்டருந்தவரைப் பிடித்து, ஒரு tinkle கொடுத்தேன். சும்மா சொல்லக்கூடாது...ஒவ்வொன்றாக சொன்னார். நல்ல பொறுமை. எனக்கே புரியும்படி சொல்லிக்கொடுத்தார்னா பார்த்துக்கங்களேன். (மறுபடியும், மிக்க நன்றி பத்ரி).

ஆனாலும், மீண்டும் XP-க்காகக் காத்திருந்து...இப்போதான் ஒருவழியா மறுபடியும் என் வலைக்குள் மீண்டும் நுழைகிறேன். ( அது யாரு அங்கே, 'கஷ்டம்டா, சாமி'ன்னு'
சொல்றது? இதான வேண்டாங்றது.)

பி.கு. இந்த இடைப்பட்ட வேளையில் ஒரு வாரத்திற்கு முன்பு எப்படியோ தட்டுத் தடுமாறி 'விருந்தினர் வரவு எண்ணிக்கையை' உள்ளே சேர்த்துவிட்டேன். அப்படியே ஒரு கடிகாரத்தையும் சேர்க்க முற்சித்தேன். இதுவரை முடியவில்லை. பார்ப்போம்..

Sunday, June 05, 2005

18. யாருக்கு வேண்டும் இப்படி ஒரு சி.பி.ஐ.?

போஃபர்ஸ் வழக்கில் ஹிந்துஜா சகோதரர்கள் விடுவிப்பு; சரியான ஆதாரங்கள் சி.பி.ஐ. தரவில்லை; இந்த வழக்கிற்கான செலவு 250 கோடி அல்ல, பத்து கோடிதான்; - சென்ற வாரத்தில் அடுத்தடுத்த பத்திரிகைச் செய்திகள்.

இது ஒன்றும் புதிது அல்ல. சி.பி.ஐ. தொடுத்த வழக்குகள், அதுவும் சிறப்பாக பெரிய அரசியல் புள்ளிகள் தொடர்புள்ள வழக்குகள் ஏதும் வெற்றி பெற்றதாகவே தெரியவில்லை. Accountability (சரியான தமிழ்ச் சொல் எனக்குத் தெரியவில்லை; உதவவும் ) என்று எதுவும் சி.பி.ஐ.-க்கு கிடையாதா?
அந்த அமைப்பிற்காகச் செலவிடப்படும் பொதுப்பணம் எல்லாம் வீண் என்றால் எதற்கு அந்த அமைப்பு?
அங்கு பெரிய பொறுப்பில் வேலை பார்க்கும் பெரிய மனிதர்களுக்கு சுய கெளரவமே இருக்காதா?
எதிர் கட்சிக்காரங்களை அவ்வப்பொழுது பயமுறுத்துவதற்கு மட்டுமே இந்த அமைப்பா?

Saturday, June 04, 2005

17. சில பம்மாத்து வரிகள்

சில பம்மாத்து வரிகள்: உண்மைகள் அடைப்புக் குறிகளுக்குள்.

நான் நல்லவனுக்கு நல்லவன்; கெட்டவனுக்கு கெட்டவன். (நான் எப்பவுமே கெட்டவன்தான்.)

எனக்கு என் மனசாட்சிதான் முக்கியம். (நான் என் இஷ்டப்படிதான் ந்டப்பேன்.)

நான் நினைச்சா சாதிச்சிடுவேன். (ஆனா நினைக்கவே மாட்டேன்.)

பொய் சொல்றது மட்டும் எனக்குப் பிடிக்காது. (இந்த பொய்யைத் தவிர.)

செய்யும் தொழிலே தெய்வம். ( இது எனக்கல்ல; எனக்கு கீழே உள்ளவன் எல்லாம் அதே தொழிலையே - அது எவ்வளவு மோசமான அல்லது இழிவான தொழிலாக இருந்தாலும் - செய்து வர வேண்டும். அவன் முன்னேறி விடக்கூடாது என்பதற்காக என் புத்திசாலி முன்னோர்கள் சொன்னது.)

Friday, June 03, 2005

16. தலித் - உள்ளிருந்து சில முயற்சிகள்

THE HINDU Monday, MAY 2, 2005 pp11

DALITS all over the world have something to rejoice about. Durban was not in vain. On April 19, 2005, the U.N. Commission on Human Rights adopted a Resolution to appoint two Special Rapporteurs to tackle caste-based discrimination.

--------------------------------------------------------

பள்ளத்தில் இருப்பவர்களைத் தூக்கிவிட வெளியிலிருந்து தூக்கிப்போடும் கயிறு போல இது. தேவைதான். அதைவிடவும் உள்ளிருந்து சில முயற்சிகள் அவசரமாகத் தேவை.

1. சில தொழில்களுக்கு என்று சிலரை ஒதுக்கிவைத்து, அதை சாதியாக்கி...கீழிறக்கி, தாழ்த்தி 'வர்ண'மயமாக்கியாயிற்று. இது நடந்துபோனது. இனி நடக்கவேண்டியது - இந்தத் தொடர்பைத் துண்டிக்க வேண்டும். பரம்பரையாகச் செய்துவரும் தொழில்களை விட்டேயாகவேண்டும். சில தொழில்களை கலை என்ற பெயர் சூட்டி (தப்பாட்டம்,பறையாட்டம்) தலையில் கட்டியுள்ளார்கள்; இன்னும் சிலவற்றை இவர்கள்தான்செய்யவேண்டும் என்று 'பட்டயம்' கட்டியுள்ளார்கள்.

யாருக்கும் யார் வேண்டுமென்றாலும் சவக்குழி வெட்டமுடியும்.
சங்கு யார் ஊதினாலும் சத்தம் வரும். வேண்டுமென்பவர்கள் ஊதிக்கொள்ளட்டுமே.

2. மேலேவந்து விட்டவர்கள் ஒவ்வொருவரும் தன் பங்குக்கு நான்கு பேரை கைதூக்கி விடவேண்டும். ப்ண உதவியைச்சொல்லவில்லை; விழிப்புணர்வைத்தர வேண்டும் - தங்கள் உரிமைகளையும், அரசு தரும் சலுகைகளைப் பற்றியும்கூட தெரியாமல் இருக்கும் தலித்துகள் அநேகம்.

3. லாப நோக்கிலாக இருந்தாலும் பரவாயில்லை; வசதியுள்ளவர்கள் கல்வி நிறுவனங்கள் துவங்க வேண்டும்.

4.எந்த அரசியல் தலைவனையோ கட்சியையோ நம்பக்கூடாது.


இவையெல்லாம் நடக்குமா...? ஒரு சமூகத்தலைவன் தோன்றுவானா?

Thursday, June 02, 2005

15. கள்ள ஓட்டு போடுறாங்கப்பா...

(பொது. 7) கள்ள ஓட்டு போடுறாங்கப்பா...


இது கொஞ்சம் கூட நல்லா இல்லீங்க..தப்பு தப்பா கள்ள ஓட்டுதான் போட்டிருக்கணும். பின்னே எப்படி நம்ம ஐஷுவுக்கு 9-வது இடம்தான் கிடைக்கும். உலக அழகிகள் 50 பேரில் முதல் இடம் ஏஞ்சலினா ஜோலி-க்காம். அந்த 'அம்மா' நல்லாதான் இருப்பாங்க..செக்சியான உதடுதான்...இல்லைன்னு சொல்லலை... ஆனா, அவங்களுக்கு முதலிடமும், நம்ம ஐஷுவுக்கு 9-வது இடம்னா அது சரி இல்லீங்க. ஏதோ கள்ள ஓட்டு சமாசாரம்தான்!


இப்படிதாங்க, நானும் ஏண்டா நம்ம பதிவுகளுக்கு ஓட்டே விழுகமாட்டேங்குதுன்னு யோசிச்சேன்.. இப்பதான் புரியுது சமாசாரம்! ஓட்டுன்னு வந்துட்டாலே இப்படிதான் எல்லாமே கும்மிடிப்பூண்டியாயிடுது.


எப்பதான் இந்த மாதிரி 'நல்ல' பதிவுகளுக்கு மக்கள் ஒழுங்கா ஓட்டு போடுவாங்க...?

Wednesday, June 01, 2005

14. சொந்தக்கதை...சோகக்கதை

சொந்தக்கதை...சோகக்கதை

அம்மாடி, போதுண்டாப்பா சாமி. புது வீடு கட்டினால், வேறு வீட்டில் தங்கிக்கொண்டே கட்டிக்கொள்ளலாம். இருக்கும் வீட்டையே மராமத்து பார்க்கிறதோ, புதுசா ஏதாவது சேர்க்கிறதோ இருக்கிறதே... அனுபவிச்சாதான் தெரியும். அகதிகள் கெட்டார்கள், போங்கள்.

உடைச்சிப்போட்ட சுவர்கள், தோண்டிப் போட்ட தரைகள், குவிச்சு வச்ச குப்பைகள், புதிதாக வெட்டிப் போட்ட பள்ளங்கள்... musical chair விளையாட்டு மாதிரி சாமான் செட்டுகளோடு இந்த அறையிலிருந்து அந்த அறைக்கும், அந்ததிலிருந்து அடுத்ததற்கும் நாளொரு அறையும், பொழுதொரு இடமுமாக மாறி மாறி... தூசி படக்கூடாதுன்னு நீங்க நினைக்கிற உங்க கம்ப்யூட்டர், இன்னும் மற்ற சாமான்களை மூடிப் பாதுகாத்து... இது போதாதுங்கிறது மாதிரி, சூடம் அடிக்காத குறையா நாளைக்கு இந்த வேலையென்று உங்கள் காண்டிராக்டர் / கொத்தனார் / பெயிண்டர் சொல்லிச் சென்றதை நம்பி நீங்களும் எதையாவது எங்காவது மாற்றி விட்டு, வெளி வேலைக்கும் மாற்று சொல்லிவிட்டு பாவம்போல உட்கார்ந்திருப்பீர்கள் - உறுமீனுக்குக் காத்திருக்கும் கொக்கு மாதிரி... அதெல்லாம் உங்கள் தலையில் அவர்கள் வைத்த வெண்ணைய் என்று தெரியாமல். அடுத்த நாள் வந்து அவர்கள் கொடுக்கும் சால்ஜாப்புகள் உங்களை மெய்சிலிர்க்க வைத்துவிடும். கத்தினால் உள்ளதும் போச்சுடா நொள்ளைக்கண்ணான்னு ஆயிடுமோங்கிற பயத்தில் நீங்கள் மவுனமாக ஆனால் உணர்ச்சிபூர்வமாக அவர்களது விளக்கங்களோடு - ஜோதியில் கலப்பதுமாதிரி -கலந்தேயாக வேண்டும்.

சீச்சீ..இந்தப் பழம் புளிக்கும் என்ற முன்யோசனையோடு, அல்லது இந்த விளையாட்டுக்கு நான் வரவில்லை என்று புத்திசாலித்தனமாக முடிவெடுக்காமல், அவங்க சொன்னாங்க இவங்க சொன்னாங்கன்னு வீட்டைப் புனருத்தாரணம் பண்றேன்னு முடிவு பண்ணி இந்த சிக்கலில் மாட்டிக்கிட்டீங்கன்னு வச்சுக்குவோம்; அதுவும் மனைவி சொல்லே மந்திரம்னு (என்னை மாதிரி ) நினைச்சு இந்த மாயவலையில் சிக்கிட்டீங்கன்னு வச்சுக்குவோம். அடுத்தடுத்து வரும் சிக்கல்களை எதிர்கொண்டு, இருக்கும் கொஞ்ச தலைமுடியையும் பிச்சுக்கிட்டு, பல்லைக்கடிச்சுக்கிட்டு உட்கார்ந்துக்கிட்டு இருக்கும்போது 'நான் அப்பவே நினைச்சேன் இதெல்லாம் தேவையான்னு' அப்டீன்னு ஒரு அசரிரீ கேட்கும்; உங்களை இந்த சிக்கலில் சிக்க வைத்த அந்த ஆத்மாதான் அதைச் சொல்லியிருக்கும். இதிலும், உங்க மனைவி சொல்லி இதில் இறங்கியிருந்தீர்கள் என்று வைத்துக்கொள்வோம். பாவம் நீங்கள்.. உங்கள் அகதி வாழ்க்கை ரொம்பவே கஷ்டம்தான். இப்போ பழிபூராவையும் நீங்கள்தான் தாங்கிக்கொள்ளவேண்டும். Day in and day out 'வேண்டாம் வேண்டாம்னு சொன்னேன்; நான் சொன்னா கேட்டாதானே' என்ற பல்லவி காதில் விழுந்துகொண்டேயிருக்கும். ரொம்ப புத்திசாலித்தனமாக ஏற்கெனவே அவர்கள் சொன்னதை அட்சரம் பிசகாமல் quote பண்ணி, உன்னால்தானே எல்லாம் என்று சொன்னீர்கள் என்று வைத்துக்கொள்ளுங்கள்; தொலைந்தீர்கள். 'நான் சொன்னதே வேறு; நீங்கள்தான் ரொம்ப மேதாவிமாதிரி நினைச்சு தப்புக்கு மேல் தப்பாகச் செய்துவிட்டீர்கள்' என்று புதுப்புது கணைகள் பாயும்; வேறு வேறு தண்டனைகள் வரும். இந்தக் குப்பைக்குள் போய் சமையல் எல்லாம் செய்யமுடியாது என்பது சர்வ நிச்சயமான முதல் விஷயமாயிருக்கும். இப்போது உங்களுக்கு புது வேலை ஒன்று வந்துவிட்டது - வேளாவேளைக்கு சாப்பாட்டுக்கு ஏற்பாடு செய்தாகவேண்டும். வேலை நடக்கும் நாளெல்லாம் புதுப்புது ஹோட்டல் தேடியாகவேண்டும்.

இதில் எனக்கென்று இன்னொரு கஷ்டம் என்னவென்றால் - புதிதாக ஒரு blog தொடங்கி, ஏறக்குறைய புது மாப்பிள்ளை ஜோரில் சில நாட்களுக்கு ஒரு பதிவாகப் பதிந்து, மயிலிறகை புத்தகத்தில் வைத்துவிட்டு குட்டி போட்டுவிட்டதா என்று தினம் தினம் பார்க்கும் குழந்தைபோல, பின்னூட்டங்கள் ஏதாவது வந்திருக்கின்றனவா என்று தினம் தினம் பார்த்து ஏமாந்து, கன்னா பின்னாவென்று பின்னூட்டங்கள் பெறும் blogகளைப் பார்த்துப் பெருமூச்சுவிட்டு, எல்லாம் நேரம் என்று காலத்தை நொந்து நூலாகி, blog browsing ஒரு addictionஆக ஆகிவிட்ட நிலையில், இந்த வீட்டு வேலையால் திடீரென்று நிறுத்தியதால் ஏற்பட்ட withdrawal syndrome-ஆல் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டு ஓரிரு தடவை browsisng centre போய் மெயில் பார்த்து, பின் வழக்கம்போல் பின்னூட்டங்கள் ஏதாவது வந்திருக்கின்றனவா என்று பார்த்து, வழக்கம்போல் ஏமாந்து, வழக்கம்போல் கன்னா பின்னாவென்று பின்னூட்டங்கள் பெறும் blogகளைப் பார்த்துப் பெருமூச்சுவிட்டு, வழக்கம்போல் எல்லாம் நேரம் என்று காலத்தை நொந்து நூலாகி, சரி..சரி இனி நல்ல நல்ல விஷயங்களைப் பற்றி எழுதி பொறி கலக்கிடணும்னு மனசில ஒரு வைராக்கியத்தை வச்சுக்கிட்டு, மூடிவச்சிருந்த கம்ப்யூட்டரைக் கட்டவிழ்த்து..........