Showing posts with label அசோகர். Show all posts
Showing posts with label அசோகர். Show all posts

Monday, March 05, 2018

974. அசோகர் நூலைப் பற்றி தெக்கா - நான்காம் பாகம்





*

பேரரசன் அசோகர்: பகுதி-3 

வாங்கி கிடப்பில் போடு (அஜந்தா)


புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட வட அமெரிக்கா பூமியில் இரத்தக் களரி ஆட்டம் நிகழ்ந்து கொண்டிருந்தது. அதே கால கட்டத்தில் தான் கிழக்கிந்திய கம்பெனியும் பெருமளவில் இந்திய துணைக் கண்டத்தில் ஆக்கிரமித்து அவர்களுக்குத் தேவையானதை செய்து கொண்டது போக, நம்முடைய சமூக சீர்திருத்தத்திற்கும் அரும்பணி ஆற்றி இருக்கிறார்கள்.
இது போன்ற பண்டைய கால வரலாற்று புத்தகங்கள் படிக்கும் பொழுது வெளித் தெரியாத பலப்பல விடயங்கள் பல துறைகளிலும் நிகழ்த்தப்பட்டிருப்பதாக தெளிவாகிறது.
கிழக்கிந்திய கம்பெனியின் வழியாக வேலைக்கென இங்கு வந்த வெள்ளையர்கள் அவர்களுக்கிட்ட பணியைத் தாண்டி தங்களது ஓய்வு நேரத்தில் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி நம்முடைய துணைக்கண்டத்திற்கான பண்டைய வரலாற்றை மண்ணிலிருந்து மீட்டெடுத்து நமக்கான சுவடுகளை அறியத் தந்திருக்கிறார்கள்.
உதாரணமாக ஒருவர் நாணயங்கள் தயாரிப்பு அல்லது நில அளவை செய்வதற்கென வந்தவர் இங்கு காணும் பழைய காலத்து சிதிலமடைந்த குடைக் கோவில்கள், சிலைகள், ஓவியங்களை பார்த்து மலைத்துப் போய் அதன் வழியில் தங்களுடைய மொழித் திறமையை வளர்த்து ஒரு தொல்லியல் துறை நிபுணனுக்கேயான வழியில் தங்களை பட்டை தீட்டி மொழி பெயர்ப்பில் ஈடுபட்டு கிடைக்கும் தடயங்களை சேமிப்பு செய்திருக்கிறார்கள்.
அவர்களுடைய உழைப்பைப் பற்றி வாசிக்கும் பொழுது பெரும் பெருமூச்சும் ஒரு விதமான வெட்கமுமே எஞ்சி நிற்கிறது. அந்த கால கட்டத்திலும் வேத விற்பன்னர்கள் தங்களுடைய மொழியை தங்கள் சுற்றத்தை தாண்டி வேறு யாருக்கும் கற்றுக் கொடுக்க தயாராக இல்லை என்பதும், கிடைக்கும் தரவுகளை அவர்களிடத்தில் காட்டி அதனையொட்டி கேள்விகள் எழுப்பினால் மழுப்பலான பதிலுமாக கொடுத்திருந்திருக்கிறார்கள்.
இந்த பகுதியில் அஜந்தா குகை கோவில்களை கண்டெடுப்பதற்கு முன் அங்கே செல்வதற்கே அச்ச மூட்டும் வகையில் புலிகளின் நடமாட்டம் மிக்க பகுதி என்றும்சொல்லப்பட்ட, பல நூற்றாண்டுகளாக கண்டு கொள்ளாமல் விடப்பட்ட பல வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கோவில்களும், கல்வெட்டுகளும், சிற்பங்களும், ஓவியங்களுமென நிரம்பிக் கிடந்த ஏகாந்தமான புதையல் பகுதியான அஜந்தா குடைக் கோவில் பகுதியை கண்டெடுத்திருக்கிறனர்.
அந்தப் பகுதியை அடைய கால் நடையாக நடந்து ஒரு குடைவுப் பகுதியிலிருந்து இன்னொரு பகுதிக்கு செல்ல மரங்களில் ஏறியும் பார்த்து நகல் எடுத்திருந்திருக்கிறார்கள். அவைகளை பிரிதொரு சமயம் உரியவர்களிடம் கொடுத்து...
//...அலெக்சாண்டர் பேசிய பின் ஆறு மாதங்கள் கழித்து காப்டன் க்ரெஸ்லி(2) என்பவரும் ரால்ஃப்(3) என்பவரும் அஜந்தாவைக் காணச் சென்றனர். அவர்கள் அங்கிருந்த கல்வெட்டின் நகல்களைக் கொண்டுவந்தார்கள். இந்த நகல்களை பெனராஸில் உள்ள பிராமணப் பண்டிதர்களிடம் கொடுத்தும், அங்கிருந்த கல்லூரியின் செயலரிடம் கொடுத்ததும், எப்பயனும் இன்றிப் போனது ...//
வாங்கி கிடப்பில் போட்டிருக்கிறார்கள். சில இடங்களில் செய்தி தரவுகளைக் கூட கொடுக்க மறுத்திருக்கிறார்கள். காலனிய ஆராய்ச்சியாளர்களின் உழைப்புதான் இங்கு மெச்சுதலுக்குறியது. ஏனெனியில் இத்தனை தவிர்ப்புகளையும் தாண்டி தொடர் முயற்சியின் மூலமாக வட மொழி கற்றுக் கொண்டு தொல்பொருள் ஆராய்ச்சியில் கிடைப்பனவற்றை ஏனைய பகுதிகளில் வேலை பார்க்கும் அதே ஆர்வமுடையவர்கள் கண்டெடுத்த தரவுகளுடன் ஒப்புமை படுத்தி ஒரு நேர்த்திக்கு கொண்டு வந்திருக்கிறார்கள்.
அசோகர் காலத்து ஸ்தூபா ஒன்று இடித்து தரைமட்டமாக்கியது போக எஞ்சிய பகுதிகளை புபனோஷ்வரின் ஓர் ஆலயத்திற்கு அருகில் இருப்பதாக அறிந்து செல்கிறார்கள். வனப்பகுதியில் இடிந்த நிலையில் ஒரு சிங்கத்தின் தலையும் தோள்பகுதியும் கிடப்பதையும் அருகிலேயே அந்த தூணின் சில பகுதிகளும் கண்டு அருகில் உள்ள ஆலய நிர்வாகிகளிடம் அது பற்றி பேசப் போக அவர்கள் இந்த ஆராய்ச்சியை இத்தோட விட்டு விடுங்கள் என்று கேட்டுக் கொண்டதிற்கு இணங்க அந்த தடயம் தாண்டி செல்லப் பட்டிருக்கிறது.






இதிலிருந்து நமக்கும் தெரிய வருவது என்ன வென்றால், எங்கிருந்தோ வந்தவர்கள் நம்முடைய வரலாற்றை தோண்டித் துருவி விடுகதையாக விடயங்களை அவிழ்த்துக் கொண்டிருக்கும் பொழுது எதற்காக இங்கேயே இருப்பவர்கள் அதனை மறைக்க எண்ணி குறுக்கே விழுந்திருக்க வேண்டும்? இப்படியான குறுக்கே விழுந்து அரசியல் செய்த கதைகள் வரிசையாக அணி கட்டி இந்த புத்தக்கத்தில் வெளி வருகிறது.






Wednesday, February 28, 2018

973. அசோகர் நூலைப் பற்றி தெக்கா - மூன்றாம் பாகம்


 https://dharumi.blogspot.com/2018/03/974.html



பேரரசன் அசோகர் -2 (அசோக சக்கரம்)

அசோக சக்கரமிருக்கிறது. இந்திய பாடப் பிரிவிலும் வாழ்க்கை முறையிலும் அசோகரின் வரலாறு எங்கே...?
அங்கொன்றும் இங்கொன்றுமாக சிதைத்து அழிக்கப்பட்ட வரலாற்றுச் சுவடுகளின் மீதங்களிலிருந்து புதிருக்கான விடையை அவிழ்ப்பது போல மிக்க சிரமமேற்று அந்த காலத்திய காலனிய வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் நமக்கு வரலாற்றின் பக்கங்களிலிருந்து சுத்தமாக அழிக்கப்பட்ட விடயங்களை நம்முன் கொண்டு வந்திருக்கிறார்கள்.
இந்த நூலில் அது போன்ற ஆராய்ச்சியாளர்களின் முயற்சிகளை காணும் போது ஏன் அதற்கு பிறகான ஒருங்கிணைந்த இந்திய துணைக் கண்டத்தில் புதிதாக எதுவுமே கண்டுபிடிக்கப்பட்டு இணைக்கப்பட வில்லை என்ற கேள்வி தொடர்ந்து எழுந்து கொண்டே வருகிறது.
ஆனால் கச்சிதமாக நம்மிடம் கொட்டிக் கிடந்த தரவுகளையும், துணுக்குகளையும் பிற நாட்டவர் போரிட்டு அழித்தொழித்தது போதாதென இங்கு வாழ்ந்த பண்டிதர்களும் நிறையவே துடைத்தழித்திருக்கிறார்கள் என்பதாக தெரிகிறது.
இரண்டாயிரம் வருடத்திற்கு முந்திய எஞ்சிய கல்வெட்டுகளில் இருந்து அசோக சக்கரம் அந்த கால கட்டத்தில் ஆண்ட அசோகன் தொடங்கி அவன் வாரிசுகள் வரையிலும் பரவலாக பயன்பாட்டில் இருந்திருக்கிறது. இருப்பினும் பின் வந்த காலங்களில் வேத விற்பன்னர்கள் அடிப்படையான அசோகனின் சக்கரத்தை...
//...சக்கரம் ஒன்றைச் சுழற்றும் நிகழ்வு பழைய வேதகாலத்து புராணங்களையும் நம்பிக்கைகளையும் அடிப்படையாகக் கொண்டது. வேத இலக்கியங்களில் தலைவன் காலத்தையே படைக்கிறார். அவனிடமிருந்தே அறவழி பிறக்கிறது. மகிழ்ச்சி பிரவாகமெடுக்கிறது.
இந்தப் பிரபஞ்சத்தைக் கட்டுப்படுத்தும் ஆற்றலும் பரிணமிக்கிறது. பிராமண வேதங்களில் இந்தத் தலைவன் தன் கையில் ஒரு சக்கரம் கொண்டுள்ளான். அது அழிவுக் கருவியாக பகைவர்களைக் கொன்று குவிக்கும் எந்திரமாக செயல்படுகிறது. இதுவே இந்து மதப்பரிமாணத்தில் சக்கரம் ஏந்தி நிற்கும் விஷ்ணு என்னும் கடவுளாக உருவெடுக்கிறது ...//
என்பதாக திரித்து நோகாமல் நொங்கு எடுத்து சாப்பிட்டு இருக்கிறார்கள் இந்த வேத விற்பன்னர்கள். சக்கரம் என்னவோ புத்த காலத்தில் அசோக பேரரசால் ஓர் அறம் சார்ந்த அரசின் குறியீடாக பயன்பாட்டிற்கு வந்தது பின்னாலில் விஷ்ணு வின் அழிவுக் கருவியாக திரிக்கப்பட்டு இருக்கிறது.
ஆங்கிலத்தில் plagiarism என்று கூறுவார்கள் அறிவுசார் திருட்டு என்பதாக தமிழ் படுத்திக் கொள்ளலாம். பார்க்கும் அளவில் தோண்டித் துருவி இந்திய துணைக் கண்டத்தின் வரலாற்றை ஒன்றிணைத்து பார்த்தால் நமக்கு இன்றைக்கு மத நூல்களாகவும், பெரிய பெரிய விஷ்ணு, பெருமாள் (அந்த சிலைகள் கூட புத்த சிலைகளாக இருக்க அனேக வாய்ப்புகள் உண்டு போல...) கோவிலாகவும் எழுந்து நிற்கும் அத்தனையும் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு புத்த சமயத்திற்கென எழுதப் பட்டதும், எழுப்பப்பட்டதுமாக தோன்றுகிறது. அதனிலிருந்து அறிவுசார் திருட்டின் மூலமாக உருவியவையே இன்று நாம் கண்ணுரும் சில விடயங்கள்.
இந்த இடத்தில் ஓர் விடயம் குறிப்பாக கவனிக்கத்தக்கது. அசோகர் காலத்திய புத்த மதம் சார்ந்த விடயங்கள் அனைத்தும் பின்பு வந்த வேத விற்பன்னர்களால் இருட்டடிப்பு செய்யப்பட்டிருந்தாலும், பிற தேசங்களுக்கு சென்றடைந்த புத்த மதம் சார்ந்த குறிப்புகள் பெருமளவில் இலங்கையிலும் இருப்பதாக இந்த நூல் சுட்டிக்காட்டுகிறது.
இதன் அடிப்படையில் வைத்துப் பார்த்தால் இன்றைய கால கட்டத்தில் நமக்குத் தெரியாத ஏதோ ஒன்று இனப் படுகொலையாளன் ராசபக்‌ஷேவிற்கு தெரிகிறது. அதன் அடிப்படையிலேயே விடாமல் திருப்பதிக்கு வந்து பெருமாளை தரிசித்து செல்கிறாரோ என்று எண்ணுகிறேன்.
நான் ஊராட்சி ஒன்றியப் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு வரை படித்த காலத்திலாவது அசோகர் மரம் நட்டார் என்று அளவிலும், ஆரிய, திராவிடர் வரலாறு பற்றியும் படித்தாக நினைவு. இந்த முப்பது வருட இடைவெளியில் அதிலும் குறிப்பாக கடந்த ஐந்தாண்டுகளில் எது போன்ற திரித்தல், இடைச் செருகல்கள் அதிலும் செய்யப்பட்டிருக்கிறது என்பது கவணித்து கொண்டிருப்பவர்களுக்கே வெளிச்சம்.




Tuesday, February 27, 2018

972. அசோகர் நூலைப் பற்றி தெக்கா -இரண்டாம் பாகம்


 https://dharumi.blogspot.com/2018/03/974.html





*




பேரரசன் அசோகர் -1
இந்த அத்தியாயத்தில் வரலாற்றை, புராணங்களின் வழியாக திருத்தி, இடைச்செருகல் செய்து தங்களுக்கு தேவையானதை செய்து வந்திருக்கிறார்கள் வேத விற்பன்னர்கள் என்பதாக தெளியவைக்கிறது.
இன்றைய காலத்தில் மோடி, எடப்பாடி, பன்னீர் போன்ற அடியாட்களை (ஷத்ரியர்களை) முன் நிறுத்தி வேலை நடத்திக்கொள்வது போலவே, ஆயிரம் நூற்றாண்டுகளுக்கு முன்பும் வேத விற்பன்னர்கள் அதே ஒட்டுண்ணி பாவனையில் வயிற்று பிழைப்பு நடத்தி இருக்கிறார்கள் என்பதும் இதன் மூலமாக தெளிவாகுகிறது.
இப்பொழுது கூட எடப்பாடிக்கு பக்கத்தில் ஒரு தேனீயின் சுறுசுறுப்புடன் ஒரு தலைமை செயலளாலர் சுற்றித் திரிவது நவீன ஏற்பாட்டின் ஓர் குறியீடு.
இத்துடன் அந்த நூலின் பக்கத்தை இணைத்துள்ளேன், அன்றும் இன்றும் அதே நிலைதான் நடந்தேறுகிறது. தவறாமல் வாசித்து விடுங்கள்.




















*


971. அசோகர் நூலைப் பற்றி தெக்கா - முதல் பாகம்


*
இப்பதிவோடு இணைந்த வேறு பதிவுகள்

 https://dharumi.blogspot.com/2018/03/974.html


*



பேராசான் Sam மொழி பெயர்த்த "பேரரசன் அசோகன்" என்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நூல் ஒன்றை வாசித்து கொண்டிருக்கிறேன். வாசித்து கொண்டிருக்கும் பொழுதே அடக்க முடியாத உந்துதலின் பேரில் ஒன்றை இங்கே குறிப்பிடத் தோன்றுகிறது.

 பல நூற்றாண்டுகளை அநாயசியமாக அந்த நூல் ஓரிரு பத்திகளில் கடந்து செல்கிறது. அந்த பத்திகளில் எது போன்ற அரசன் ஆண்டான் என்பதனைக் கொண்டு மக்கள் எது போன்ற வாழ்வுச் சூழலில் வாழ்ந்திருப்பார்கள் என்பதனை நினைக்கும் பொழுதே திகீர் என்கிறது.

 அரசியல் சித்தாந்தமற்ற வர்ணாசிரம சூழ்ச்சியும், அதனையொட்டிய அண்டைய நாட்டு படையெடுப்பின் போது அந்த அரசு கவிழ்ந்து வேறு ஓர் அரசிற்கு கீழ் சில நூற்றாண்டுகள் ஆளப்பட்டு மீண்டும் வீழ்த்தப்பட்டுன்னு... காலச் சுழற்சியின் ஒவ்வொரு பக்கத்திலும் நிலையாமையை சுட்டியபடியே நகர்கிறது அந்த நூல். அடிநாதமாக பொதுத் தன்மையே நின்று நிலைக்கும் சித்தாந்தமென நிரவ முற்படுகிறது. வரலாறு மாற்றி எழுதப்பட்டாலும் நீடித்து நிற்பது அறம் சார்ந்த அரசாட்சியே!

 அது நூல் அல்ல ஒரு பாடம் போல இருக்கிறது. அப்பட்டமான முறையில் ஒரிடத்தில் இந்திய துணைக்கண்டம் ஏன் நண்டு தனத்தினாலும், வர்ணாசிராமத்திற்கு அடிமைத் தனம் அடைந்ததாலும் அந்த தேசம் வரலாற்று சுவடுகள் தோறும் வீழ்த்தப்பட்டுக் கொண்டே வந்திருக்கிறது என்று புரிந்து கொள்ள முடிகிறது.

 இந்த பதிவு அந்த புத்தகத்திற்கான விமர்சனமாக நீண்டு கொண்டே செல்கிறது. இன்னும் முழுமையாக வாசித்து முடிக்காத நிலையில் அப்படி எழுதுவது அறமாகாது என்பதால் நிறுத்திக் கொள்ளலாம்.

 சொல்ல வந்தது எப்பொழுதும் மனித வரலாற்றில் தொடர்ந்து அநீதிக்கும் நீதிக்குமான போராட்டம் நடந்து கொண்டேதான் வந்திருக்கிறது. குட் அண்ட் ஈவில்கான சமநிலை எட்டலில் எந்த கால கட்டத்தில் எந்த பக்கம் அதிகமான நல்ல/கெட்ட எண்ணவோட்டம் அதிகமாக குவிகிறதோ அதன் நீட்சியாக நாம் கண்டுணரும் செயல் பாடுகள் ஒரு சமூகத்துள் பாவி நிரையும்.

 அநீதி ஓங்கும் பொழுது எதிர் முனையில் இருப்பவர்கள் சோர்வுற்று இனிமேல் நாம் செய்வதற்கு ஒன்றுமில்லை என்று ஒதுங்கிக் கொள்ள முடியாது. ஒரு சொட்டு நஞ்சு அற்ற தூய்மையான துளி என்றாலும் அது அடர்த்தியாக உள்ள நஞ்சுக் குடுவைக்குள் செலுத்தப்படும் பொழுது அதன் வீரியம் குறைக்கக் கூடியதாக அமைவதைப் போல ஆங்காங்கே தொடர்ந்து எழுப்பப்படும் அநீதிக்கெதிரான குரல்கள் அவசியம் (அது இன்றைய சிரியா, ஆதிவாசி மது, விழுப்புரம் ஆராயியின் குடும்பம் என்பதாக நீள்கிறது...). 


ஆகவே, மக்களே தொடர்ந்து பேசிக்கொண்டே இருங்கள். சிறு துளி பெரு வெள்ளம்.

*

Monday, January 22, 2018

968. உங்கள் எல்லோருக்கும் என் நன்றிகள்





*

உங்கள் எல்லோருக்கும் என் நன்றி.

  என்னை ஆளாக்கியவர்கள் நீங்கள் தானே!

இதுவரை நான்கு நூல்கள் வெளி வந்துள்ளன.
n  அமினா (2009)
n  அசோகர் (2014)
n  மதங்களும் சில விவாதங்களும் (2015)
n  கடவுள் என்னும் மாயை (2018)
இந்த நான்கு நூல்களில் ”அசோகர்” என்ற வரலாற்று மொழிபெயர்ப்பு நூலும், நான் எழுதிய ”மதங்களும் சில விவாதங்களும்” முதல் அச்சு விற்று முடிக்கப்பட்டதாலும், இன்னும் அதற்கு வாசகர்களின்  தேடுதல் இருப்பதாலும் இந்த ஆண்டு மீண்டும் அச்சிடப்பட்டு இரண்டாம் பதிவாக வெளி வந்துள்ளன.

2015ல் பதிக்கப்பட்ட இந்த நூல் 2017ல் மறு பதிப்பு கண்டுள்ளது.
*******




”அசோகர்” 2014ல் முதல் பதிப்பும் இப்போது 2018ல் இரண்டாம் பதிப்பாகவும் வெளி வந்துள்ளது.

*****

எல்லாம் நீங்கள் கொடுத்த ஆதரவே இதற்கான காரணம். கரங்கூப்பி நன்றி சொல்லிக் கொள்கிறேன்.
”மதங்களும் சில விவாதங்களும்” நூலில் சில மாற்றங்களும், சிறிது அதிகமான செய்திகளும் சேர்க்க நினைத்தும் முடியாமல் போயிற்று. முடியுமானால் இரண்டாம் பதிப்பு கொண்டு வந்து அதில் சேர்த்துக் கொள்ளும் முடிவில் உள்ளோம்.











*

Friday, September 01, 2017

948. அசோகர்



*


https://www.facebook.com/sam.george.946/posts/10212057853234879?pnref=story


*

***


*

Sunday, November 13, 2016

915. அசோகர் -- "குங்குமம்" இதழில் ஒரு அறிமுகம்





*
18.11.16
குங்குமம் ஜங்ஷன்
புத்தகம் அறிமுகம்
பேரரசன் அசோகன்

சார்லஸ் ஆலன் / தமிழில்: தருமி
(எதிர் வெளியீடு, 96 நியூ ஸ்கீம் ரோடு,
பொள்ளாச்சி – 642 002. விலை ரூ. 400.
தொடர்புக்கு; 98650 05084)


“சாலையெங்கும் மரங்களை நட்டார் அசோகர்” என படித்தறியாத சிறுவர்கள் இங்கே எவரும் இருக்க முடியாது. அததகைய பேரரசன் அசோகனின் மறக்கப்பட்ட அல்லது மறைக்கப்பட்ட வரலாற்றை விவரிக்கிறது இந்நூல்.

அசோகன் வெறும் மன்னர் மட்டுமில்லை, அவரது மனச்சித்திரங்களாகக் காணக்கிடைப்பது ஆச்சரியமூட்டுகிறது. அவர் ஒரு தேசாந்திரியாக இருந்திருக்கிறார். அவரது பயணங்கள் விசாலமானவை. வாழ்ந்த இடமே மறந்து போகிற அளவுக்குப் பயணப்பட்டிருக்கிறார். அனைத்து மதங்களுமே மரியாதைக்குரியவை என நினைத்து வந்திருக்கிற அசோகனின் பெருந்தன்மை நினைவு கூரத்தக்கது. வரலாற்றைப் புறக்கணித்து விட்டு நாம் வந்துவிட இயலாது. மக்களின் மகிழ்ச்சி, அவர்களின் வாழ்க்கைத் தரம் என அவர் எப்போதும் கவனம் செலுத்தி வந்திருப்பது அழகு, சிறப்பு. வாசகனைச் சென்றடைய வேண்டிய முயற்சிகளை சார்லஸ் ஆலன் திறம்பட உழைத்து அமைத்திருக்கிறார்.


மொழியாக்கத்தில் தருமியின் செயல்பாடு மனதுக்கு நெருக்கமானது. முன்னோர்களை அறிய முயல்வது நம்மை அறிவது போன்றதே.








***

இவ்வார குங்குமத்தில் வந்த அறிமுகம்.

மகிழ்ச்சிக்குரிய ஒன்றை இந்த அறிமுகத்தில் பார்த்து  மகிழ்ச்சி அடைந்தேன். அசோகர் நூலை வாசிக்கும் போதே நான் ஆச்சரியப்பட்ட செய்தி அது.

2000 ஆண்டுகளுக்கு முன்பே இன்றும் நம்முடன் இருக்கவேண்டிய சமய நல்லிணக்கமும் மதத் தீவிரவாதத்திற்கு எதிரான கருத்துகளும் அன்றே அவரது மனதில் தோன்றி அதனைக் கல்வெட்டுகளில் அடித்து வைத்த அந்த மாமன்னனின் தீர்க்கப்பார்வை இன்னும் பெரும் ஆச்சரியத்தை உண்டாக்குகிறது. 

சார்லஸ் ஆலனின் முழுமையான அர்ப்பணிப்பும் என்னை ஆச்சரியப்பட வைத்த இன்னெரு விஷயம்.

இவை இரண்டையும் இந்த அறிமுகத்தில் குறிப்பிடப்பட்டிருப்பது பெரும் மகிழ்ச்சியைத் தந்தது.  

நன்றி



அசோகரின் மலைக் கல்வெட்டுகள்

எல்லோரும் என் குழந்தைகளே...  என் குழந்தைகளுக்கு நான் என்ன விரும்புகிறேனோ அவர்களின் நலமும் மகிழ்ச்சியும் இந்த உலகத்தில் மட்டுமல்லாது மறு வாழ்விலும் வேண்டியது போல் எல்லோருக்கும் அவை கிடைக்க வேண்டுமென்று  ஆசைப்படுகிறேன்.  எனது இந்த ஆசை எவ்வளவு பெரியதென்று உங்களுக்குத் தெரியாது.


***


எல்லா சமயங்களின் கருத்துகளும் நன்கு வளர வேண்டும். 

... தன் சமயத்தைத் தானே  புகழ்வதும், ஏனைய சமயங்களைக் காரணமின்றி குறைகூறுவதும் தவறு. 

....  யாரெல்லாம் தங்கள் மதத்தின்மீது கொண்ட தீவிரமான பற்றில் அதனைப் போற்றி ஏனைய மதங்களைக் குறை சொல்கிறார்களோ அவர்கள் உண்மையில் தன் மதத்தை தாங்களே தாழ்த்திவிடுகிறார்கள்.  

ஆகவே சமயங்கள் ஒன்றோடொன்று தொடர்புகொள்வது மிக நல்லது. ஒவ்வொருவரும் அடுத்த மதங்களில் சொல்லப்படும் கொள்கைகளைக் கட்டாயம் கேட்கவேண்டும். 


****


Thursday, January 15, 2015

816. எஸ். ரா. வாங்கிய புத்தகங்கள்






*



தி இந்து - ஜனவரி 14, 2015

 வாசகர் திருவிழா - 2015 

 நான் என்னென்ன வாங்கினேன்? -- எஸ். ராமகிருஷ்ணன் 


 நமது ஆளுமையை, அழகுத்திறனை, அனுபவத்தை மேம்படுத்திக் கொள்ள எளிய, சிறந்த வழி புத்தகங்களே. ‘உனது நண்பன் யாரென்று சொல்; உன்னைப் பற்றி நான் கூறுகிறேன்’ என்றொரு பொதுமொழியிருக்கிறது. இதற்கு மாறாக, நீ என்ன புத்தகம் படித்திருக்கிறாய் என்று சொல்; உன்னைப் பற்றி நான் கூறுகிறேன் என நான் சொல்வேன்.

வேறு எந்த உயிரினமும் தனது அறிவை, அனுபவத்தைச் சேகரித்து இன்னொரு உயிரினத்துக்குப் பரிசாகத் தருவதில்லை. மனிதன் மட்டுமே செய்கிறான்.

புத்தகச் சந்தையில் ஒவ்வொரு நாளும் புத்தகங்களை அள்ளிச் செல்வது என்னுடைய இயல்பு.

இன்றைக்கு வாங்கிய புத்தகங்களில் முக்கியமானவை: --

ரே பிராட்பரி எழுதிய “பார்ன்ஹீட் 451
வண்ணதாசனின் “சின்ன விஷயங்களின் மனிதன்”
ஜெ.ட். சாலின்ஜர் எழுதிய “குழந்தைகளின் ரட்சகன்”
சார்லஸ் ஆலன் எழுதிய “பேரரசன் அசோகன்”
”டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி சுயசரிதை”
“தி.க.சியின் நாட்குறிப்புகள்





 *

Sunday, December 28, 2014

811. அசோகன் - ஓர் அறிமுகம்







*




கவனிக்க வேண்டிய புத்தகங்கள் 


தி இந்து - டிசம்பர் 24, 2014


மறக்கப்பட்ட பேரரசரின் சரித்திரம் 



கி.மு. 304-ல் பிறந்த அசோகச் சக்கரவர்த்தி கி.மு.270 முதல் கி.மு.233 வரை, இந்தியாவின் தென்பகுதி நீங்கலாக மொத்த நாட்டையும் ஆண்டவர். ‘சாலை ஓரங்களில் மரத்தை நட்டார்’ என்ற அளவில் அவரைப் பற்றிய அறிமுகம் நம் அனைவருக்கும் பரிச்சயம். அசோகரின் வாழ்க்கை, இந்தியாவின் பேரரசராக அவரது வரலாறு, புத்த மதத்தைத் தழுவியதற்கான காரணம், பயணத்தின் மீது அவருக்கு இருந்த ஆர்வம், வெளிநாடுகளிலும் புத்த மதத்தைப் பரப்ப அவர் எடுத்துக் கொண்ட முயற்சிகள் என்று பல்வேறு தகவல்களுடன் விரிவான புத்தகமாக வெளிவந்திருக்கிறது.

‘பேரரசன் அசோகன் - மறக்கப்பட்ட மாமன்னனின் வரலாறு’ ஆங்கிலோ-இந்திய எழுத்தாளரான சார்ல்ஸ் ஆலன் எழுதிய இந்தப் புத்தகத்தைத் தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார் தருமி.   இந்த வரலாறு நேர்க்கோட்டில் அல்லாமல், பல்வேறு காலகட்டத்தில் நடந்த விஷயங்களின் தொகுப்பாக இருப்பது வாசகர்களுக்குப் புது அனுபவமாக இருக்கும். 



பேரரசன் அசோகன், சார்ல்ஸ் ஆலன், எதிர் வெளியீடு, 

தமிழில்: தருமி

பக்கங்கள்: 496 விலை: 400


 மேற்கண்ட நூலை வெளியிட்டவர்கள்: எதிர் வெளியீடு, 96,நியூ ஸ்கீம் ரோடு, பொள்ளாச்சி - 642002

தொலைபேசி: 04259-226012; 99850 05084



*

Friday, July 25, 2014

779. அசோகர் நூல் வெளியீடு






*



  ஈரோடு புத்தகத் திருவிழா 



2014 ஆகஸ்ட் 1 முதல் 12 வரை நடைபெற உள்ள ஈரோடு புத்தகத் திருவிழா 2014ன் போது "எதிர் வெளியீடு" வெளியிட உள்ள புத்தக வெளியீடுகளின் பட்டியலை  இத்துடன் இணைத்துள்ளேன்..






இவைகளில் நான் மொழியாக்கம் செய்த “பேரரசன்  அசோகன்” என்ற நூலும் உள்ளது.









To buy thro VPP or Courier services.....

Contact the address and phone numbers below...

Ethir Veliyedu
96,New Scheme Road,
Pollachi
642002

ethirveliyedu@gmail.com
04259 226012
99425 11302






 *

Monday, July 07, 2014

772. மாமன்னர் அசோகர் - சில ஆச்சரியங்கள் - 5

*

பிற பதிவுகள்

 

https://dharumi.blogspot.com/2014/06/763-1.html

https://dharumi.blogspot.com/2014/06/764-2.html

https://dharumi.blogspot.com/2014/06/767-3.html

https://dharumi.blogspot.com/2014/06/768-4.html

https://dharumi.blogspot.com/2014/07/772-5.html

 






*


 எதிர்க் கருத்தைத் தாங்காத மக்கள், சிலை வணக்கத்திற்கு எதிரான மக்கள், இயற்கையின் அழிவு சக்திகள் - பல திக்குகளிலிருந்து வரும் இத்தகைய எதிர்ப்புகளையும் தாண்டி அசோகரது பெயர் பல மாற்றங்களுக்கும் மத்தியில் 2270 ஆண்டுகளையும் தாண்டி நிலைத்து நின்று விட்டது. ஆனாலும், அசோகரைப் பற்றிய பல புத்த சமயக் கதைகள் இருந்தாலும், "சக்கரம் சுழற்றும் பேரரசன்" என்ற தன் தர்ம சக்கரத்தினால் பெயர் பெற்ற அசோகன் என்ற தனி மனிதரைப் பற்றிய விவரங்கள் ஏதும் நம்மிடமில்லை. இருப்பதில், பல கற்பனைகள் தவிர முழு நிஜமுமல்ல. தன் முகத்தைச் சிறிதே வெளிக் காண்பிக்கிறார். முழு உருவம் எதுவும் தெரியாது. அசோகரின் இந்த மாயச் சிற்பம் ஆய்வாளர்களுக்குரிய கேள்விக் குறியாகி விட்டது.

ஒரு பெரும் வரலாற்று மனிதனைச் சுற்றி இத்தனைக் கேள்விக் கணைகள் … இப்படி ஒரு நிலை இந்தியாவில் மட்டுமே இருக்கக் கூடிய ஒன்று. இந்திய நாடு முழுவதும் ராமாயணத்தின் நாயகன் ராமரைத் தொழுதேத்துகிறது. ராமர் ஒரு புராணக் கதை வீரன். ராவணன் என்ற ராட்சசனை வென்று, அயோத்தியாவில் பெரும் மன்னனாக முடி சூட்டப்படுகிறான். அதன் பின் பதினோராயிரம் ஆண்டுகள் பெரும் பேரரசனாக நல்லாட்சி செய்கிறான். இது ராமரின் புராணக் கதை! இதை நம்பிச் செல்லும் மக்கள் கூட்டம் உண்மையான மனிதன் ஒருவனைப் பற்றி அதிகம் தெரியாதிருக்கிறார்கள். முதன் முறையாக இந்தியாவை தனது ஒரே குடையின் கீழே கொண்டுவந்த மன்னன் - அவ்வகையில் அவன் தான் உண்மையான ‘இந்தியாவின் தந்தை’; இந்தியாவில் எல்லோருக்கும் ஏற்கும்படியான கொள்கைகளைக் கொண்டு வந்த பெருமனிதன்; காந்தியின் அஹிம்சை கொள்கைகளுக்கு முன்னோடியாக, மூத்து முதலில் நின்றவன்; அறமே எவரையும் வெல்லும் ஆயுதம் என்ற பெரும் கருத்தினைக் கண்டவன்; ஆட்சியாளர்களின் மத்தியில் யாரும், எவரும் ஒத்துக் கொள்ளும் தனிப்பெரும் ஆட்சியாளன்; ஆட்சிப் பண்புகளால் உயர்ந்த இடத்தில் அமர்ந்தவன்; -- ஆனால் இவனைப்பற்றி ஏதும் தெரியாத மக்கள் கூட்டம் …! ஆச்சரியமும், வேதனையும் தான் மிஞ்சுகிறது.

அசோகன் எழுப்பிய குரல் ஆசியக் கண்டத்தின் மூலை முடுக்குகளையும் கவரத் தவறவில்லை. ஆனால் அவன் குரலுக்கு இந்தியாவில் ஏதும் பெரிய மரியாதை இல்லாமல் போயிற்று. அவன் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பு எழுப்பிய பல நினைவுச் சின்னங்கள் மீது நாட்டுக்கோ, அதன் மக்களுக்கோ, எல்லாவற்றையும் விட இந்திய தொல்பொருள் ஆய்வுக் கழகத்திற்கும் கூட அதிக மரியாதை இல்லை. அந்த நினைவுச் சின்னங்களுக்கு ASI கூட எந்தப் பாதுகாப்பும் இன்றும் கொடுக்காது இருப்பது வருத்தத்திற்குரியது.


ஏனிப்படி ஒரு நாடே முழு இருளுக்குள் அமர்ந்திருக்கிறது? அறியாமையா? 




*

Thursday, June 26, 2014

768. மாமன்னர் அசோகர் - சில ஆச்சரியங்கள் - 4




*

பிற பதிவுகள்

 

https://dharumi.blogspot.com/2014/06/763-1.html

https://dharumi.blogspot.com/2014/06/764-2.html

https://dharumi.blogspot.com/2014/06/767-3.html

https://dharumi.blogspot.com/2014/06/768-4.html

https://dharumi.blogspot.com/2014/07/772-5.html

 




*

அசோகரின் கல்வெட்டுகளில் நாம் காணக்கூடிய சில ஆச்சரியங்கள் .....

தன்னை ஒறுத்து, தன் பழம் வழிகளிலிருந்து முற்றிலும் மாறி தன் மக்களுக்கு முன் தானே ஒரு முன் மாதிரியாகி நிற்கும் மன்னனின்  ஓர் அரசாணை….

கடவுள்களின் அன்பிற்குரிய மன்னன் பியாதாசி எழுதிய தர்ம அரசாணைஎன் நாட்டில் எந்த உயிரினமும் கொல்லப்படவோ, பலி கொடுக்கப் படவோ கூடாது.
முன்பெல்லாம் கடவுள்களின் அன்பிற்குரிய பியாதாசின் அடுப்பங்கரையில் ஆயிரக்கணக்கான மிருகங்கள் உணவிற்காகக் கொல்லப்பட்டனஆனால் இந்த அரசாணை எழுதப்படும் போது மூன்றே மூன்று மிருகங்கள் - இரண்டு மயில்களும், ஒரு மானும் மட்டுமே - கொல்லப்படுகின்றனமான் தினமும் கொல்லப்படுவதில்லைகாலப்போக்கில் இந்த மூன்று உயிர்களும் கூட கொல்லப்படாது.

----------------------


நம் நாட்டுக் கலாச்சாரத்தில் தொன்மையான பொருட்களுக்கு எந்த வித தனி மரியாதையையும் நாமோ, நம் அரசுகளோ கொடுப்பதில்லை என்பது ஆகி வந்த ஒரு விதி. இங்கே நம் நாட்டின் முதன் முதல் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு வரலாற்றுத் தடயம் யாருக்கும் தெரியாமல் “காணாமல் போய்விட்டது” என்ற உண்மை நம்மைச் சுடுகிறது; வெட்கப்பட வைக்கிறது.

1892ல் டாக்டர் வில்லியம் ஹோயி  வடக்கு பீகாரில் உள்ள கோரக்பூர் பகுதியின் கமிஷனராக இருந்து வந்தார்ரப்தி நதி அருகில் பல மண் மூடிப் போன திண்டுகளை அவர் ஆய்வு செய்து கொண்டிருக்கும்போது, அருகிலிருக்கும் சோஹ்கவுரா  என்ற கிராமத்திலிருந்து ஒரு வயதான பெரியவரிடம் பேசியுள்ளார்அப்பெரியவர் ஒரு சின்ன தாமிரத் தகடு ஒன்றினை இந்த ஆற்றுப் படுகையில் கண்டெடுத்ததாகவும், அதனை அங்கிருந்த ஜமீன்தாரிடம் கொடுத்ததாகவும் கூறியுள்ளார். சில மாதங்கள் கழித்து அந்த ஜமீன்தாரின் மகன் ஹோயியின் அலுவலகத்திற்கே வந்து அந்தத் தகட்டினை அன்பளிப்பாகத் தந்திருக்கிறார்.

 அந்த சோஹ்கவுரா தகடு" தாமிரத்தால் ஆனதல்ல, பித்தளையால் செய்யப்பட்ட தகடுபித்தளை என்பதே ஆச்சரியத்திற்குரிய ஒன்று. அத்தகடுஇஞ்ச் நீளத்திலும் 1’ 3/4  இஞ்ச் அகலத்திலும் இருந்தது. தகடு மிகவும் நல்ல நிலையில் இருந்தது. அதையும் விட அந்தகட்டில் இருந்த எழுத்துகளும், குறியீடுகளும் மிகவும் சிறப்பான, சீரான புடைப்பு எழுத்துகளோடு இருந்தன.


 அசோகரது ப்ராமி எழுத்துகளில் நான்கு வரிகளில் எழுத்துகள் இருந்தன. அதற்குமேல் முதல் வரிசையில் ஏழு குறியீடுகள் இருந்தன. இரண்டு வேறு வேறு வகைச் செடிகள், சுற்றுச் சுவடுக்குள் தூண்களோடும், கூரைகளோடும்  மூன்று மாடிக் கட்டிடங்கள், இரண்டு ஈட்டி போன்ற ஓர் ஆயுதம், உலக உருண்டையும், அதன் மேல் காளைபோன்ற உருவமும், நடுவில் பிரமிட் போன்ற ஸ்தூபியும், மூன்று அரைவட்டக் கூம்புகளும், அதற்குமேல் ஒரு கொம்பு வைத்த நிலவும் இருந்தனஅந்த இரு கட்டிடங்களைத் தவிர ஏனைய குறியீடுகள் பழைய நாணயங்களின் புடைப்புகளில் பார்க்க முடியும்.

 ஹோயி, ஸ்மித் இருவரும் இணைந்து வங்காள ஆசியக் கழகத்தின் பதிவுகளில் சோஹ்கவுரா பித்தளைத் தகடு பற்றிய தங்கள் ஆய்வுகளைப் பதிப்பித்தார்கள். ஆனால் அவர்கள் அத்தகடு மௌரியன் காலத்துத் தகடு என்பதை மட்டுமே உறுதியாகக் கூறினார்கள்அதற்கு மேல் எந்த விவரமும் தர இயலவில்லை.

ஆனாலும் அந்தத் தகட்டில் உள்ள எழுத்துக்களைப் புகைப்படம் எடுத்து, பேராசிரியர் புஹ்லெருக்கு அனுப்பினார்அவர் தகட்டில் உள்ள எழுத்துகள் ப்ரகிரிதி எழுத்துகள் என்றும், மேலும் அதில் உள்ள செய்திகளின் பொருளும் கூறினார். இத்தகடு ஸ்ரவஸ்தியில் உள்ள சமய அதிகாரிகளுக்கு அளிக்கப்பட்ட உத்தரவு அது.  ’வம்சகிரஹா என்ற இடத்தில் உள்ள இரு கிட்டங்கிகளில் தானியங்கள், பருப்புகள், உணவுப் பொருட்களுக்கான தேவை அதிகமாக இருப்பதால், விரைந்து அவர்கள் தேவைகளைத் தாமதமின்றி அனுப்ப வேண்டும்என்ற ஆணை அதுவாசகங்கள் புரிந்து கொள்ளப்பட்டு வாசிக்கப்பட்டு விட்டாலும், முதல் வரிசையில் உள்ள குறியீடுகள் பற்றிய விளக்கங்கள்அன்றும் தெரியவில்லை;  இன்றும் தெரியவில்லை.

 சோஹ்கவுரா தகடுகள் ஒரு புதிய, பெருமைக்குரிய சான்று. வெறும் படங்கள் மூலம் செய்திகளைப் பரிமாறிக் கொண்ட நம் முன்னோர் முதல் முறையாக எழுத்துகள் மூலம் தங்கள் கருத்துகளைப் பரிமாறிக் கொள்கின்றார்கள் என்பதற்கான சான்றாக இது இருந்தது.   
       
  சோஹ்கவுரா பித்தளைத் தகடும், மஹாஸ்தான கல்தகடும் ஒரே காலத்திய ஆவணங்கள்இரண்டுமே மௌரிய சாம்ராஜ்யத்தைச் சேர்ந்தவைஇவை அக்காலத்திய சிறப்பான ஆட்சி முறைக்குச் சான்றுகளாக நிற்கின்றனஆட்சிமுறையின் தகவல் மாற்றங்களுக்கு நல்ல ஒரு எடுத்துக்காட்டு

டாக்டர் கோயி சோஹ்கவுரா தகட்டினை வங்காள ஆசிய ஆய்வுக் கழகத்திடம் ஒப்படைத்தார். ஆய்வுக்கழகத்தில் அப்போதிருந்த நிலையில் பொருட்கள் முறையாகப் பேணப்படாமல் இருந்தனஇந்த வரலாற்று முக்கியமான சான்றும், சில ஆண்டுகள் கழித்து காணாமல் போய் விட்டதாகச் சொல்லப்பட்டது. ஒரு வேளை இன்னும் பல ஆண்டுகள் கழித்து அத்தகடு, ஆய்வுக்கழகத்தின் தலைமைச் செயலகம்  கல்கத்தாவில் உள்ள பார்க் தெருவில் உள்ள கட்டிடத்தின் உள்ன ஏதோ ஒரு பழைய அலமாரிக்குள் இருந்து மீண்டும் கண்டுபிடிக்கப்படலாம்! ஆயினும் தற்போது காணாமல் போய்விட்டது என்று சொல்லப்படுவது மிகவும் பெரிய சோகத்திற்குரியதுஏனெனில் முதன் முதல் இந்திய வரலாற்றில் இது போன்ற பித்தளைத் தகடு அதுவரை மட்டுமல்ல, இன்று வரை வேறெங்கும் கண்டெடுக்கப்பட்டதேயில்லை என்ற உண்மை சோகத்தைப் பெரிதாக்குகிறது


___________________


’Living together’ என்பது இன்று நமக்கு மிகவும் புதியதானது. இன்னமும் இதற்கு சமுதாய சம்மதம் கிடைக்கவில்லை. ஆயினும் இந்தப் ‘புரட்சிகர’ செயலை இரண்டாயிரத்திச் சொச்சம் ஆண்டுகளுக்கு முன்பே அசோகர் தன் வாழ்நாளில் கடைப்பிடித்துள்ளார் என்பது இன்னொரு பெரிய வரலாற்று ஆச்சரியம்.


ஒரு கல்வெட்டு பங்குரேரியா என்ற ஒரு சின்னகிராமத்தில் கிடைத்ததுஇது நர்மதா நதியின் வடக்குக் கரையில் உள்ளதுஏறத்தாழ எண்ணூறு மைல் நீளத்திற்கு இந்தியாவின் அகலமான நடுப்பகுதியில் மேற்கு நோக்கி ஓடுகிறதுநாட்டின் குறுக்கே இப்படி ஓடுவதால் இந்நதி இந்தியாவை வட இந்தியா, தென்னிந்தியா என்று இரு பகுதிகளாகப் பிரிக்கின்றதுஇந்நதி ஒரு பள்ளத்தாக்கில் பாய்ந்து செல்கிறதுஇதன் வடக்கே விந்திய மலைத் தொடரும்,தெற்கே சாத்புரா மலைத்தொடர்களும் உள்ளன. பங்குரேரியா கிராமம் இப்பள்ளத்தாக்கில் உள்ளதுஒரு புறம் நதிக்கரை; இன்னொரு புறம் விந்திய மலைத் தொடரிலிருந்து தனித்து நீட்டிக் கொண்டுவரும் ஒரு மலை என்ற இரண்டிற்கும் நடுவில் நிற்கிறது இக்கிராமம்.  இம்மலைத் தொடரில் பல இயற்கைக் குகைகள், மலைக் குடியிருப்புகள் உள்ளனநாக்பூர் பகுதியின் இந்திய தொல்பொருள் ஆய்வுக் கழகத்தின் குழுவினர் மிகப் பழங்காலத்து  மக்கள் குடியேற்றத்திற்கான சான்றுகளை இந்த மலையில் தேடிவரும்போது இக்கல்வெட்டைக் கண்டுபிடித்தனர்.

  இக்குழுவினர் பங்குரேரியாவின் அருகில் பள்ளத்தாக்கிற்குள் சரிந்து நிற்கும் மலைத்தொடர் இருக்கும் பகுதியில் ஒன்பது சிறிய ஸ்தூபிகளைக் கண்டனர்இந்த ஒன்பதில் மிகப் பெரிய ஸ்தூபி இருப்பதிலேயே உயரமான ஸ்தூபியாகவும் இருந்ததுஇதன் உச்சிக்கு மேலே ஒரு கல்லால் ஆன குடியிருப்பு ஒன்று இருந்ததுஇப்பகுதியில்தான் அக்கல்வெட்டு இருந்ததுஇக்கல்வெட்டு  MRE - சிறு மலைக் கல்வெட்டு - சீரில்லாமல் பொறிக்கப்பட்டிருந்ததுஇக்கல்வெட்டின் ஆரம்ப வரிகள் வாசிக்கக் கூடியவைகளாக இல்லைஆயினும் முடிந்த அளவு வாசிக்கப் படும்போது அது  MREs -களில் இருக்கும் வழக்கமான வரிகளாக இல்லை. அதற்குப் பதிலாக சம்வா என்ற இளவரசருக்கு  அசோகர் எழுதியது போன்ற வரிகளாக அவை இருந்தனசம்வா என்ற சொல் சமஸ்கிருதத்தில் உடன் செல்பவன் அல்லது நட்பு கொண்டவன்என்ற பொருள் கொண்டதுஇந்த இளவரசர் அசோகரின் மகன்தானா என்பது ஆய்வுக்குட்பட்ட ஒன்று. ஏனெனில் இப் பெயர் வேறெங்கும் இதுவரை காணப்படவில்லைஇருக்கும் சான்றுகளை வைத்துப் பார்க்குபோது இம்மலைக் குடியேற்றத்தில் புத்தக் குருமடம் ஒன்று இளவரசர் சம்வாவின் தலைமையின் கீழ் இயங்கி வந்துள்ளதுஇந்தக் குருமடத்தில் இருந்த சந்நியாசிகள் தனித்தனி அறைகளில் தங்காமல், முதலில் இருந்த வழக்கம் போல், இம்மலையின் பொதுவான இடங்களைத் தூங்குவதற்குப் பயன்படுத்தினர்.   இந்தக் குகைக் குடியிருப்பிற்கு அருகில், அதன் இடதுபக்கம் இன்னொரு குகைக் குடித்தன இடம் இருந்ததுஇது அதே தாழ்ந்த பாறையில் இருந்தது. இக்குகையின் வாயிலருகே பாறையின் முகப்பில் மிகப் பெரிய எழுத்துகளில் எழுதப்பட்டிருந்தனஇந்த எழுத்துக்கள் வழக்கமாக உளி, சுத்தியலால் கொத்தப்பட்டு எழுதப்படாமல், அதற்குப் பதிலாக மிகவும் செப்பனின்றி எழுதப்பட்டிருந்தன. எழுத்தைச் செதுக்கியவர் வெறும் உளியை, ஒரு குச்சியின் உச்சியில் செருகிக் கொண்டு எழுத்துக்களை முரட்டுத்தனமாகக் கொத்தி எழுதியதுபோல் இருந்ததுஇதில் இருந்த வாசகங்கள் மற்ற கல்வெட்டுகளில் உள்ளவைபோல் திருத்தமாக எழுதப்பட்டவை அல்லஆயினும் ஆட்சி செலுத்தும் மன்னரின் உத்தரவின் பேரில் எழுதப்பட்டது அதுஎழுத்தியலில் மிகவும் பெயர் வாங்கிய பேராசிரியர் ஹாரி ஃபாலிக் இந்த வாசகங்களை மொழி பெயர்த்துள்ளார்.
         
  ப்யாதாசி நாமா
    ராஜகுமாரா வா
    சம்வாசிமானே
            இமாம் தேசம் பாபுனித
            விகார(யா) அத்தய்(யி)

ஃபால்க்கின் மொழிபெயர்ப்பில் . . . .

   ”மன்னன் (பட்டமளிப்புக்குப் பின்) ப்யாதாசி என்றழைக்கப்படுகிறார்.அவர்  (முன்பு) இந்த இடத்திற்கு ஒரு மகிழ்ச்சி சுற்றுலாவில் ஓர் இளவரசனாக வந்திருந்தார்அவரோடு திருமணம் ஆகாமல்  உடன் வாழ்ந்த பெண்ணுடன் வந்திருந்தார்”.

 பங்குரேரியா விந்திய மலைத் தொடரிலிருந்து நாற்பத்தி ஐந்து மைல் தொலைவில் உள்ளதுபுத்த புனித இடங்களும், சாஞ்சியும் இருக்கும் மாவட்டம் இதுதான்இது தான் அசோகரின் முதல் மனைவி பிறந்த இடம். பங்குரேரியாவில் இருந்த செப்பனில்லாத சாதாரணக் குறிப்புகள் தன் வாலிபப் பருவத்தில் வருகை தந்த இடங்களைத் தன் ஆட்சிகாலத்தில் பேரரசர் மீண்டும் வந்தபோது அவரின் ஆணையின் பேரில் பொறிக்கப்பட்ட வாசகங்களே அவை. உஜ்ஜயினின் அரசு அதிகாரியாக, தன் தோழியோடு இளம்வயதில் வந்து பார்த்த இடங்களே இவைஇந்த தோழி அவர் மனைவியாக ஆகி, அசோகரின் மூத்த மகனும், மகளுமான மஹிந்தா, சங்கமித்ராவைப் பெற்றெடுத்தார்

மலையில் இருந்த அந்தச் சாதாரணக் கல்வெட்டு தனி மனிதன் ஒருவனின் மனிதத் தன்மையை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளதுஅது வெறுமனே மனதைத் தொடும் கல்வெட்டு மட்டுமல்லஒரு பெரும் மன்னன் தன் உயர் நிலையிலிருந்து கீழிறங்கி, சாதாரணன் போல் தன்னை உணர்ந்து, வாழ்ந்த நேரம் அது.














*


Monday, June 23, 2014

767. மாமன்னர் அசோகர் - சில ஆச்சரியங்கள் - 3


*

பிற பதிவுகள்

 

https://dharumi.blogspot.com/2014/06/763-1.html

https://dharumi.blogspot.com/2014/06/764-2.html

https://dharumi.blogspot.com/2014/06/767-3.html

https://dharumi.blogspot.com/2014/06/768-4.html

https://dharumi.blogspot.com/2014/07/772-5.html

 




*

மக்களைக் காப்பாற்றுவது மட்டுமே என் முழு நேரத் தொழில் என்று ஒரு மன்னன் பறை சாற்றுவது மிகவும் அதிசயமான விஷயமே. அதனை எப்படி சாத்தியப்படுத்து என்பதையும் அதன் வழி முறைகளையும் வகுத்தது அவனது முழு ஈடுபாட்டையே காண்பிக்கிறது.

மக்களைக் காப்பாற்றுவது என்று சொல்வதே ஒரு அரசனின் பெரும் மாண்பு என்கிறோம். ஆனால் அசோகர் அதையும் தாண்டி தன் நாட்டிலுள்ள விலங்குகளின் மீதும் இத்தனை கரிசனம் கொள்வது, அதுவும் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே அவனுக்கு ஏற்பட்ட முனைப்பு இன்றும் ஆச்சரியான விஷயமே!

என் நாட்டு மக்களுக்கு சேவை செய்வேன் என்பதை விட அருகிலுள்ள பக்கத்து நாட்டு மக்களின் ந்லனையும் ஏற்றுக் கொள்வது பெரும் ஆச்சரியமே.

அத்தனை காலத்திற்கு முன்பே மருந்துச் செடிகள் வைத்துப் பேணுவதும் அவைகளை நாடெங்கிலும் பரப்பி மக்கள் நலனுக்கு முனைந்த அவனது ஆர்வம் மிகவும் ஆச்சரியப்பட வைக்கும் ஒன்றாகும்,

*****

மக்களின் மன்னன் ……

கடவுளின் அன்பிற்குரிய மன்னன் பியாதாசி இவ்வாறு கூறுகிறார்:

முன்பு அரசியல் விவகாரங்கள் பகிரப்படவில்லைஅரசனிடம் எந்த நேரத்திலும் அறிக்கைகள் கொடுக்கப்படவில்லை. ஆனால் இப்போது நான் இந்த ஆணையை அறிவிக்கிறேன்எந்த நேரமாயினும், நான் உணவு உண்டு கொண்டிருக்கும்போதோ, அந்தப் புரத்தில் இருக்கும்போதோ, படுக்கையறையில் இருக்கும்போதோ, ரதத்திலோ பல்லக்கிலோ, தோட்டத்திலோ இருக்கும்போதோ, எங்கே நான் இருந்தாலும் எந்த செய்தியும் எனக்கு உடனே தரும்படி அதிகாரிகளை நியமித்து மக்களின் நிலைமை எனக்கு உடனே வரும்படியும், நான்  எங்கிருந்தாலும் உடனே ஆவன செய்யவும் முடியும்

எப்போது நான் கொடுக்கும் நன்கொடையோ, பொது அறிவிப்புகளோ அல்லது எப்போது எந்த அவசரவேலையும் மஹாமத்திரர்கள் மேல் சுமத்தப்படும்போது ஏதேனும் அதிருப்தியோ, வாக்குவாதமோ ஏற்பட்டால் அது உடனே எனக்குத் தெரியப்படுத்த வேண்டும்இதற்காகவே நான் ஆணையிட்டிருக்கிறேன்எந்த வேலையையும் உடனே முடிக்கவும், என்னை முழுவதுமாக ஈடுபடுத்திக் கொள்வதிலும் எனக்கு எப்போதுமே திருப்திவராது.  

உண்மையிலேயே, எல்லோரின் நலனுமே எனது கடமை, இதற்காக என்னை வருத்திக் கொள்வதிலும், வேலைகளை உடனே முடிக்கவும் தவறமாட்டேன்மக்களின் நலனை மேம்படுத்துவதைத் தவிர வேறு எந்த வேலையும் பெரிதல்லநான் எடுக்கும் முயற்சிகள் எதுவாயினும் அவை எல்லோருக்கும் வாழக்கையில் மகிழ்ச்சியைக் கொண்டு வரவும், எல்லோரையும்  சொர்க்கத்திற்கு இட்டுச் செல்வதுமே என் கடமையாகத் தானிருக்கும்.

            ஆகவே இந்தக் கல்வெட்டு ஆணை நிலைத்து நிற்க இங்கு எழுதப்படுகிறதுஎனது மகன்களும், பேரன்களும், கொள்ளுப் பேரன்களும் இதை மக்களின் நலனுக்காக நிலை நிறுத்தவே இந்த ஆணை. ஆயினும்  இவைகளை பெரும் முயற்சியோடு மட்டுமே செய்யமுடியும்.


*****

                  மக்களை மட்டுமல்ல மாக்களையும் காப்பாற்றிய மன்னன்                                                                                                                                                                 கடவுள்களின் அன்பிற்குரிய மன்னர் பியாதாசி இவ்வாறு பேசுகிறார்:                                                                                                                                                                     எனது பட்டமளிப்பிற்குப் பிறகு இருபத்தி ஆறு ஆண்டுகள் கழித்த பிறகு  பல விலங்குகள் பாதுகாக்கப்படவேண்டுமென்று ஆணையிடப்பட்டதுகிளி, மைனா , அருணா, சிகப்பு வாத்து, நாட்டுவாத்து, நந்திமுக்கா, ஜெலாட்டா, வவ்வால், பெண் எறும்பு, நன்னீர் ஆமை, எலும்பில்லா மீன், வேதராயக்கா கங்காபுபுதாகா, சங்கியா மீன், ஆமை, முள்ளம்பன்றி, அணில், மான், காளைமாடு, ஓகபிந்தா, காட்டுக்கழுதை, காட்டுப் புறா, மாடப்புறா, உண்ணமுடியாத, பயன்படுத்த முடியாத நான்கு கால் விலங்குகள்  இவை அனைத்தும் பாதுகாக்கப்பட்ட விலங்குகள்குட்டியிட்டு பால்கொடுக்கும் ஆடுகள், பெண் பன்றிகள், அதேபோல் ஆறு மாதம் தாண்டாத குட்டிகள் பாதுகாக்கப்பட்டவை. சேவல்களின் ஆண்மை மாற்றப்படக்கூடாதுஉயிரினங்களை மூடி நிற்கும் உமி எரிக்கப்படக் கூடாதுகாடுகளில் மரங்கள் காரணமின்றியோ, அல்லது காட்டுப் பிராணிகளைக் கொல்லவோ, எரிக்கவோ கூடாது. மிருக இனத்தின் உணவிற்காக மாற்று உயிர் கொல்லப்படக் கூடாது. மூன்று காட்டூர்பாசிகள் சமயத்திலும் (மழைக்காலம்) மூன்று திசாக்களிலும் பதினான்காம் பதினைந்தாம் உபோசத்துகளில் மீன்கள் கொல்லப்படவோ விற்கப்படவோ கூடாதுஇதே நாட்களில் யானையும், மீன்களும் பாதுகாக்கப்பட்ட இடங்களில் அவைகள் கொல்லப்படாமல் காக்கப்பட வேண்டும்ஒவ்வொரு பதினான்கு நாட்களில் எட்டாவது நாளும், மற்றும் பதினான்காவது பதினைந்தாவது திகா, புனர்வாசு மூன்று கட்டுர்மாசிகளும் மற்ற நல்ல நாட்களிலும், காளை மாடுகளை விதையடி செய்யக்கூடாதுஅதேபோல் வழக்கமாக விதையடி செய்யப்படும் ஆடுகள், பன்றிகள் போன்ற விலங்கினங்களும் விதையடிக்கப்படக் கூடாது.   திசா நாட்கள் புனர்வாசு, காட்டுர்மாசிஸிக் நாட்களில் குதிரையும் காளைகளும் குறியிடப்படக்  கூடாது.                                                                                                                                                                                                                          கடவுள்களின் அன்பிற்குரிய மன்னன் பியாதாசி சொல்கிறார்சாலைகளில் அரச மரங்களை நட்டு மக்களுக்கும விலங்குகளுக்கும் நிழல் கிடைக்கும்படி செய்துள்ளேன்இவைகளோடு மாமரங்களையும் நட்டு வளர்த்துள்ளேன். எட்டு குரோசாவிற்கு ஒரு முறை கிணறுகள் வெட்டி பயணிகள் தங்குமிடங்கள் கட்டி, மேலும் பல இடங்களில் மனிதர்க்கும், விலங்குகளுக்கும் நீர்த் தொட்டிகள் அமைத்துள்ளேன்ஆனால் இவையெல்லாம் மிகச் சின்ன விஷயங்கள். மக்களை மகிழ்ச்சிப்படுத்த முந்திய மன்னர்கள் பலரும் இதைச் செய்துள்ளனர்ஆனால் மக்கள் தர்மத்தைக் கடைப்படிக்க வேண்டும் என்பதற்காகவே நான் இச்செயல்களைச் செய்துள்ளேன்


 HERBAL GARDEN

கடவுள்களின் அன்பிற்குரிய மன்னன் பியாதாசியின் நாட்டிலும், எல்லையைத் தாண்டியுள்ள சோழர்கள், பாண்டியர்கள், சத்தியப் புத்திரர்கள், கேரளா புத்திரர்கள் போன்ற மக்களும், தாமிரபரணி பகுதியும், கிரேக்க மன்னன் அன்டியோக்கஸ் அரசாளும் மக்களும், அன்டியோக்கஸிற்கு அருகிலுள்ள மன்னர்களின் மக்களும் கடவுள்களின் அன்பிற்குரிய மன்னன் பியாதாசி தரும் இரு மருத்துவ வசதிகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம்மனிதர்களுக்கும் விலங்கினங்களுக்குமான மருத்துவம் தரப்படுகிறதுஎங்கெங்கு மனிதர்களும் விலங்குகளுக்கும் தேவையான மருத்துவச்  செடிகள் இல்லையோ அவை அங்கே தருவிக்கப்பட்டு வளர்க்கப்படும். எங்கெங்கு மருத்துவ வேர்களும், பழங்களும் கிடைக்கவில்லையோ அவைகளும் தருவிக்கப்பட்டு வளர்க்கப்படும். மனிதர்க்கும் விலங்குகளுக்கும் உதவ சாலைகள் தோறும் பல கிணறுகளை வெட்டி, மரங்கள் வைத்துள்ளோம்.   







*