Saturday, March 22, 2008

254. இடப் பங்கீட்டின் "வருடாந்திரத் திருவிழா"

எனக்கு இதே பொழப்பா போச்சு. வருஷா வருஷம் தீபாவளி வருதோ என்னமோ, U.P.S.C. தேர்வு முடிவுகள் வரும் நேரத்தில் எல்லாம் ஒரு பிரச்சனை; அது செய்தித்தாள்களில் வர, அதைப் பற்றி நானும் பதிவெழுத ... மெகா சீரியலாகிப் போச்சு. ஆனால் கவலைப் படவேண்டியவர்களும், கவலைப்பட்டு ஆக்க பூர்வமாக ஏதாவது செய்யக் கூடிய நிலையில் இருப்பவர்களும் ஏதும் செய்யாமல் இருப்பதும் மகா மெகா சீரியலாக தொடருது; இன்னும் எத்தனை காலமோ நம் மக்கள் விழிப்பதற்கு?


பாருங்க, இன்று : மார்ச் 22, 2008
இதே விஷயத்தை : ஜுலை14, 2007 எழுதியிருக்கிறேன்.
அதற்கு முன்பு : : ஜூலை 05, 2006


அடுத்த ஆண்டும் இதே விஷயத்தை எழுத வேண்டி வரலாம். எழுத நான் இருந்தால் எழுதிவிடுகிறேன். இல்லைன்னா தயவுசெஞ்சு யாராவது இதைத் தொடரவும் - இப்படி ஒரு முதல் "பதிவுலக உயில்" எழுதி வைக்கலாம்ன்னு தோணுது. அட போங்கய்யா!

***********************************************

சரி, சேதியைச் சொல்லிவிடுகிறேன். இன்றைய The Hindu நாளிதழில் வந்த செய்தி கீழே ஆங்கிலத்தில் உள்ளது. அதில் உள்ள முக்கிய இரு பகுதிகளைத் தமிழில் தருகிறேன்:


(மெரிட்)தகுதி அடிப்படையில் தேர்வு பெற்றிருந்தும் ( O.C.யில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டதாக கருதப்பட வேண்டிய) 31 OBC & 1 SC போட்டியாளர்களுக்கு அந்த அடிப்படையில் வேலை கொடுக்கப்படவில்லை.

... இதனால் .. 31 OBC & 1 SC போட்டியாளர்களின் வேலை வாய்ப்பு பறிக்கப் பட்டுள்ளது.


இதன் முக்கியத்துவத்தைப் புரிந்து கொள்ள கீழே இரு ஆண்டுகளுக்கு முன் இட்ட பதிவில் ஒரு பகுதியையும், என் மற்றொரு பதிவுக்கு வந்த ப்ரபு ராஜதுரையின் பின்னூட்டத்தின் ஒரு பகுதியையும் கொடுத்துள்ளேன்; வாசித்துக் கொள்ளுங்கள்.

***********************************************************


Saturday, July 14, 2007 -
அன்று எழுதியதில் முதல் பத்தி:

சென்ற ஆண்டு ஏறத்தாழ இதே நேரத்தில் (05.06.2006) நான் இடப் பங்கீடு பற்றி எழுதிய ஒரு கட்டுரையில் U.P.S.C. தன் தேர்வு முறைகளில் நடத்தும் அநியாயங்கள் பற்றிக் குறிப்பிட்டிருந்தேன்.


**********************************************************


Thursday, August 03, 2006

I.A.S., I.P.S. என்பதற்கான UPSC தேர்வுகள் எந்தக் குழறுபடி இல்லாமல், ஊழல் இல்லாமல் மிகச் சரியாக சிறப்பாக நடந்து வருவதாகத்தான் நானும் பலரைப்போல் நினைத்திருந்தேன் - இந்த வழக்கைப் பற்றிக் கேள்விப்படும்வரை.

Prelims, Mains தேர்வுகளில் வெற்றி பெற்று அதன் பின் நடக்கும் நேர்முகத்தேர்வில் பெறும் மொத்த மதிப்பெண்களை வைத்து rank செய்யப் பட்டு அதில் அதிக மதிப்பெண்கள் பெற்றவர்களை OC (open competition) -ல் சாதி எதுவும் பார்க்காது தேர்ந்தெடுக்க வேண்டும். OC quota முடிந்தபின் B.C., S.C., S.T. என்ற சாதிவாரியான மாணவர்களை அவர்களது rankபடி தேர்ந்தெடுக்க வேண்டும்.இதுவே முறை. ஆனால் எத்தனை ஆண்டுகளாகவோ தெரியாது; என்ன நடந்திருக்கிறது என்றால் O.C. என்றால் (F.C. என்ற கணக்கில்) அது முற்படுத்திக் கொண்ட மாணவர்களுக்கு மட்டுமே உரியது போல், top rankers-ல் உள்ள Forward Community மாணவர்களை மட்டும் தேர்ந்தெடுத்து விட்டு, மற்ற சாதி அடிப்படையான இடங்களுக்கு மட்டுமே தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப் பட்ட மாணவர்களிலிருந்து தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். They were hoodwinking everybody and kept their portal safe and secure. இதனால் பிறபடுத்தப் பட்டோர் 25%க்கு மேலும், தாழ்த்தப்பட்டோர் மொத்தமே 18%க்கு மேலும் வரமுடியாது. இது ஒரு பயங்கர மோசடி.



**************************

ஜூன்05, 2006ல் எழுதிய பதிவில் திரு. ப்ரபு ராஜதுரை இட்ட பின்னூட்டத்தின் ஒரு பகுதி:

Monday, June 05, 2006
PRABHU RAJADURAI said…

உங்களில் யாரும் இதை அறிந்திருக்கிறீர்களா என்பது தெரியாது. மண்டல் கமிஷன் பரிந்துரையினை ஏற்று மத்திய அரசு பணிகளிலும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இட ஒதுக்கீடு ஏற்பட்ட பிறகு, இட ஒதுக்கீட்டினையே கேலிக்குறியதாக்கும் ஒரு மோசடி நடைபெற்றது. அதாவது, தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் அவர்கள் எவ்வளவு மதிப்பெண் பெற்றாலும் அவர்களை பொது வகுப்பில் தேர்ந்தெடுக்காமல் ஒதுக்கீட்டு பிரிவிலேயே தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். இதன் விளைவு தாழ்த்தப்பட்டவர், பிற்படுத்தப்பட்டவருக்கான ஐம்பது சதவீதம் போக மீதி ஐம்பது சதவீதம் இவர்கள் அல்லாத முற்படுத்தப்பட்டவர்களுக்காக(வே) ஒதுக்கப்பட்டது

********************************************************

இந்துவில் இன்றைய செய்தி:

Merit lists of civil services exam quashed

K.T. Sangameswaran
--------------------------------------------------------------------------------

Court declares Rule 16 (2) of examination rules unconstitutional


--------------------------------------------------------------------------------

CHENNAI: Declaring Rule 16 (2) of the Examination Rules for Civil Services Examination 2005 “unconstitutional, null and void,” the Madras High Court has quashed the merit lists prepared by the Centre and the Union Public Service Commission (UPSC).

A Division Bench, comprising Justices Elipe Dharma Rao and S.R. Singharavelu, said instead of being affirmative, progressive and pragmatic in achieving social justice, the impugned rule ran counter to the benefit of SC/ST/OBC candidates.

The Bench directed the Centre and the UPSC to proceed with the selection from the stage of announcement of results for all the 457 posts in 21 services notified in December 2004, re-work the allocation dehors(?) the impugned rule and treat the reserved candidates, who got selected on merit without availing themselves of relaxed standards, as unreserved candidates.

They should fill the posts of ‘reserved category’ with the candidates who availed themselves of the relaxed standards after preparing the merit list for each category by following the Supreme Court’s judgments in the R.K. Sabharwal’s case and Satya Prakash’s case.

Considering the fact that there was a considerable delay in making the selection, the court directed the official respondents to complete the entire exercise within 12 weeks.

The UPSC had issued a notification in December 2004 to fill 457 posts in 21 different cadres. It published a list of 425 candidates who were successful in the main examination in the first phase and remaining 32 in the second phase along with a consolidated reserve list of 64 candidates. Thirty-one OBC candidates and one SC candidate, whose names were in the merit list, did not choose to get the posting as per the unreserved category. They chose to avail themselves of the higher services under the reserved quota.

Two selected candidates, R. Arulanandan and Ramesh Ram, filed petitions before the Central Administrative Tribunal seeking to declare Rule 16 (2) as unconstitutional and a direction to the respondents to make allocation to various services on the basis of the civil services examinations 2005 by treating the 31 OBC candidates, selected on merit, as general category candidates.

The tribunal disposed of the petitions with certain directions. Aggrieved, the writ petitions were filed.

In the common order, the Bench said the Supreme Court had held that a reserved category candidate getting selected on his own merit should be considered only as an unreserved candidate and not as a reserved category candidate. However, subsequent to the judgment, the impugned amended rule came into effect.

By resorting to Rule 16 (2), the official respondents had deprived 31 OBCs and one SC candidate from getting their postings. It was seen that such vacancies created by the meritorious reserved candidates were then filled with other unreserved candidates.

Wednesday, March 19, 2008

253. எங்க ஊரு காவல்துறையின் "SMART SYS"...தொடர்கதை

இதற்கு முந்திய பதிவில் எங்க ஊரு காவல்துறையின் "Smart sys" என்ற முதல் முயற்சி பற்றி பெருமையாக நான் எழுதிய போது பலரும் அவநம்பிக்கையோடு பின்னூட்டமிட்டார்கள். அதில் கடைசியாக பதிவர் அரவிந்தன், //நீங்க தான் காவல்துறை மேல ரொம்ப நம்பிக்கை வச்சி காமெடி பண்றீங்க.// என்று எழுதியிருந்தார். அவர் வாயில் சர்க்கரைதான் போடணும்.

செம காமெடிதான் பண்ணிட்டேன் !!
என்ன நடந்திச்சின்னா ....

1.sms அனுப்பி ஒரு வாரத்துக்கு மேல் ஆகிப் போச்சு . ஆனா, சொன்ன விஷயம் இதுவரை கண்டுகொள்ளப் படவேயில்லை.

2. அவர்கள் கொடுத்த reference எண்ணை அவர்கள் சொன்னது போல் அதே எண்ணுக்கு நேற்று இரவு அனுப்பினேன். Necessary action is in process என்ற அதே பல்லவி மறுபடி வந்தது.

3. அதோடு விட்டு விடலாமாவென நினைத்தேன்; இருந்தும் என்ன ஆகிறது என்று பார்ப்போமே என்ற எண்ணத்தில் மீண்டும் இப்படி ஒரு sms கொடுத்தேன்:

Automated messaging & answering system is working fine. Nothing more we can expect, I suppose. So sad. இப்படி அனுப்பிய sms-க்கு ன் பழைய பல்லவியான Your message has been received and necessary action is being initiated…...blah…blah என்று வந்தது. புதிதாக இதற்கொரு reference எண்ணும் வந்தது!

4. மறுபடி அந்த reference எண்ணை அனுப்பினேன். பழையபடி - Necessary action is in process என்ற அதே பல்லவி…

5. பொறுமை இழந்து அடுத்து கொடுத்த sms: I’m sorry. Intha vilaiyattukku nan varalai.

6. என்ன ஆச்சரியம். இதுவரை human touch ஏதுமில்லாமல் இருந்த மறுமுனையில் இருந்து உயிர்ப்புடன் ஒரு தொலைபேசி அழைப்பு. பேச ஆரம்பித்ததுமே யார் நீங்கள் என்ற விசாரணை. ஏன் இப்படி ஒரு sms என்ற கேள்வி. அவர் சொன்னதே சொன்னார். நான் அனுப்பிய கோரிக்கை மதுரை நகர் காவல்துறை தொடர்புடையதாம். இவர்களோ மதுரை புறநகர்க்காரர்களாம். என் கோரிக்கையை அனுப்பிவிட்டோம். அவ்வளவுதான் செய்ய முடியும் என்றார். இந்த சேதியையாவது சொல்லாமல் வெறுமனே Automated message அனுப்புவதால் எந்த பயனும் இருக்கப் போவதில்லை என்று நான் கூற, இதில் நாங்கள் ஒன்றும் செய்ய இயலவில்லை என்று அவர்கூற 10-15 நிமிடங்கள் பேசினோம். இப்படி நீண்ட நேரம் பேசுவதற்குப் பதிலாக, reference எண் ஒருவரிடமிருந்து வரும்போது அவரனுப்பிய கோரிக்கையையும், அதற்கு எடுத்த நடவடிக்கை பற்றியும் தகவல் தெரிந்துகொண்டு இதுபோல் நேரடியாக ஓரிரு நிமிடம் பேசினால் கூட போதும்; அதுதான் பயன் என்று நான் சொன்னது அவருக்குப் புரியவில்லையா என்று தெரியவில்லை.

நான் அனுப்பிய கடைசி sms அவருக்குப் பிடிக்கவில்லை என்றாலும் அது இந்த அளவாவது வேலை செய்தது எனக்குப் பிடித்தது! அதோடு வெறும் Automated message மட்டுமே என்றில்லாமல் சிலர் பொறுப்போடு வேலை செய்வது அறிந்ததால் கொஞ்சம் சந்தோஷமே!
பலரிடமிருந்தும் கோரிக்கைகள் நிறைவேற்றப் படுவதால் நன்றி சொல்லி பல குறுஞ்செய்திகள் வருவதாகவும் சொன்னார். நல்லதே நடக்கட்டும்...

சுபம் !

Sunday, March 16, 2008

253. முக்கா முக்கா மூணு சினிமா

எப்பவோ இந்த தலைப்பை வச்சி மூணு படம் பத்தி எழுத ஆரம்பிச்சி ...ரெண்டு படத்தை மட்டும் எழுதிட்டு மூணாவது படம் சாது மிரண்டால் ..  பற்றி எழுத நினச்சி அப்டியே உட்டுட்டேன். பழசையெல்லாம் திரும்பிப் பார்த்தால் ரெண்டு படத்தோடு இடுகை மொட்டையா நிக்குது. சரி .. எழுதினது எழுதியாச்சி... அதை ஏற்றி விடுவோமேன்னு நினச்சி ... ஏற்றியாச்சி.

Tarre Zamin Par
எல்லாரும் எழுதியாச்சி; புதுசா சொல்ல என்ன இருக்குது? ஒரு காலத்தில மாஞ்சி மாஞ்சி பார்த்தது போய், இந்திப் படங்கள் அப்டின்னாலே கேவலம் அப்டின்னு பல வருஷம் இந்திப் படம் பக்கம் தல வச்சதே இல்லை. ஆனால் இப்போ நிலமை ரொம்பவே மாறிப் போச்சு. கடைசியா பார்த்த படங்கள் வரிசையை நினைவுக்குக் கொண்டுவந்தாலே நம்ம தமிழ்ப்படங்கள நினச்சு கவலையா இருக்குது. Mrs. & Mr.Iyer, The Water, Black, Tarre Zamin Par.... இந்த லெவலுக்கு நம்ம படங்களில் ஒண்ணுகூட வரலையே ...

*
*
*


அஞ்சாதே- இயக்கம்: மிஷ்கின்

மிஷ்கின்னின் முதல் படம் பார்த்ததில்லை. அட, காதல் அப்டின்ற விஷயத்தை மையமா வைக்காமலேயே ஒரு படம் போறது எம்புட்டு சந்தோஷமா இருக்கு. காதலை மட்டுமே வைத்துதான் நம்ம படங்கள் ஏறக்குறைய எல்லாமுமாக இருக்கும்போது அதை ஊறுகாய் அளவு கூட வைக்காமல் உப்பு மாதிரி படத்தில் கொஞ்சூண்டு மட்டும் வைத்த இயக்குனருக்கு வாழ்த்துக்கள். அதே போல் நம் தமிழ்ப்படங்களில் காலங்காலமாய் வரும் தத்துவம்: கதாநாயகன் மனித குணக்குன்றாக இருப்பார். பழைய தமிழ்ப்படங்களில் பார்த்தால் எல்லா கதாநாயகனும், கதாநாயகியும் ஸ்டேட்டிலேயே முதல் ராங்கில்தான் தேர்ச்சி பெறுவார்கள். கதாநாயகன் பார்ப்பது எந்த வேலையாக இருந்தாலும் நிச்சயமாக கராத்தே கறுப்புப் பட்டை பெற்றவரையே தூசிமாதிரி அடித்து தூள் பண்ணக்கூடியவராகவே இருப்பார். அதேமாதிரி வில்லன் என்றால் கொடூரத்தின் உச்சத்திலிருந்து கீழெ இறங்காத மனிதனாகவே புனையப்பட்டிருப்பார். இருந்தாலும் கடைசியில் காவல் துறை ஆட்கள் தாமதமாக வந்து இழுத்துப் போகும்போது மனம் மாறி, கதாநாயகனின் அம்மாவிடம் காலில் விழுந்து மன்னிப்புக் கேட்டுவிடுவார். Characters will all be either pure black or white, none in middle grays - இதுதான் நம் தமிழ் சினிமாவின் வழமையான கதாபாத்திரப் படைப்புகள்.

இப்படம் இந்த பார்முலாக்கள் எதுவும் இல்லாமல் ரொம்பவும் வித்தியாசமான இரு பாத்திரங்கள்; நண்பர்கள். அடிப்படைக் குணங்கள் வெவ்வேறாக இருக்க, வாழ்வில் ஏற்படும் மாற்றங்கள் அவர்களின் குணங்களையே மாற்றிப் போட ... அதன் பின் ஏற்படும் கதைப் போக்கில் அடுக்கடுக்கான நிகழ்வுகளை ஒரு க்ரைம் த்ரில்லராக வைத்து இருவரையும் இரு எதிர்முனைகளில் வைத்துக் கதையை இயக்குனர் அழகாகக் கொண்டு சென்றிருக்கிறார்.


*
*
*
சாது மிரண்டால் ...

Monday, March 10, 2008

252. எங்க ஊரு காவல்துறையின் "SMART SYS"

"SMART SYS" என்றொரு முறையின் மூலம் பொது மக்கள் காவல்துறையிடம் தங்களது புகார், குறைகள் பற்றி கைத்தொலைபேசிகளின் குறுஞ்செய்தி வசதி மூலம் முறையிட வழி செய்துள்ளனர்.
இவ்வளவு வசதி கொடுத்தால் நாம் சும்மா இருக்கலாமா...?

சனிக்கிழமை மார்ச்,08, 2008 - The Hindu நாளிதழில் இக்குறுஞ்செய்தித் திட்டம் பற்றி வந்துள்ள செய்தியின் தொடுப்பு: http://www.hindu.com/2008/03/08/stories/2008030858180300.htm

இத்திட்டத்திற்கு நான் அன்றே அனுப்பிய என் முதல் குறுஞ்செய்தி:


High time police dpt took strong steps to instil SOME traffic discipline. Else with booming of traffic things will become unclontrollable.

Pray to refer a page of my blog:
http://dharumi.blogspot.com/2006/12/191.html


இத்திட்டத்திற்கு நான் அனுப்பிய என் இரண்டாம் குறுஞ்செய்தி:

I sent a mail to the portal of Public Grievances of Central Govt. on 17.09.'07 regarding the chaotic traffic in Samayanallur-Paravai-Madurai road and got a response saying that S.P. of Madurai has been asked to look into that.

(Please view: http://dharumi.blogspot.com/2007/12/245.html)

In case the metal barricades that are being put up in this road recently are the result of it, I request that they should be made visible in the night with florescent paint. For those in smaller vehicles these barricades are simply INVISIBLE due to very bright headlights of oncoming traffic.

WILL ANYONE ever keep such barricades of this sort on busy roads IF ONLY he would be held RESPONSIBLE for any possible mishaps?

RSVP