Thursday, June 30, 2011

509. கள்ளர், மூப்பர் .... உங்களை எல்லாம் என்ன சொல்ல???

*


http://www.hindu.com/2011/06/30/stories/2011063065180300.htm

தலித்துகளை அடிமைப்படுத்தி முறையற்ற அடக்கு முறைகளை ஏவும்  ஜாதி இந்துக்களைப் பற்றி ஒரு பதிவிட்டிருந்தேன்.

கொடுமைப்படுத்தும் சாதியினரின் பெயரைக் குறிப்பிட்டு செய்திகள் வெளியாக வேண்டும்; அதுவே கொடுமைப்படுத்தும் சாதியினரில் சிலராவது  இதனால் மனமாற்றம் பெறலாம் என்று என் ஆவலை அப்பதிவில் வெளியிட்டிருந்தேன். காக்கை உட்காரப் பனம் பழம் விழுந்திருக்கிறது.

இன்றைய இந்துவில் ஒரு செய்தி. மதுரை யானை மலைப் பகுதியில் உள்ள கொடிகுளம் பகுதியில் உள்ள கிணற்றில் இருந்து தொலைதூரத்தில் இருந்தும் நீரெடுக்க மக்கள் வந்தாலும், அப்பகுதியிலே வசிக்கும் தலித்துகள் அக்கிணற்றுக்கு அருகில் வரவும் தடை விதிக்கப்பட்டுள்ளார்கள். 61 வயது அக்கினி வீரண்ணனாக இருந்தாலும், 26 வயது சுரேஷாக இருந்தாலும்,  இதனைச் சரியென்று சாதிக்கும் நிலைதான் அங்கு. இதில் தலித்துகள் கிணற்றுக்கருகில் வந்தால் அவர்களை தேனீக்கள் கொட்டி விடும் என்று ஒரு பழங்கதை வேறு.19 வயது கருத்தபையன் போன்றவர்கள் கேள்வி முறையில்லாமல் இதை இன்னும் நம்பிக்கொண்டிருக்கும் கேவலம் இன்னொரு பக்கம்.

இந்தக் கிராமத்து சாதி இந்துக்கள் கள்ளர், மூப்பர் என்ற சாதியினர். இவர்கள் தங்கள் ஊரின் ‘பெருமைக்குரிய’ கொள்கைகளை செய்தியாளர்களிடம் விளக்குவதற்கு எந்தக் கூச்சமும் இல்லாதிருக்கிறார்கள்.  (The caste Hindus of the village, occupied predominantly by people belonging to Kallar and Moopar community, do not hesitate to talk about the discrimination of Dalits even to journalists. )

-----------


இவர்கள் எல்லோரும் எப்போதுதான் கண் திறப்பார்கள்; அல்லது திறக்கவே மாட்டார்களா? 
இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆனால் இவர்களுக்கெல்லாம்  அறிவு வளரும்? புத்தி வரும்?

-----------------

இப்பதிவிற்குரிய பின்னூட்டங்களில் பங்களிக்க ”எல்லா சாதியினரும்”  அனுமதிக்கப்படுகிறார்கள் --  கள்ளர், மூப்பர் சாதியினருக்கும் அனுமதி உண்டு !

-------------------------- 

I have sent an appreciation to the Hindu by the following mail: 

to
the editor & Mohammmed Imanullullah (reporter)

sir
it is in relation with a news item in your paper on 30th June 2011, reported by Mr. Mohammmed Imanullullah  on the status of dalits in kodikulam near yanai malai - http://www.hindu.com/2011/06/30/stories/2011063065180300.htm

i extend my appreciation for mentioning the names of the castes of the suppressors, which very much fulfills my yearning. this is explained in my blog:

http://dharumi.blogspot.com/2011/06/508.html

http://dharumi.blogspot.com/2011/06/509.html



*



Friday, June 24, 2011

508. ”ஜாதி இந்து” என்பவன் யார்?

*
இன்றைய தினசரியில் - Deccan Chronicle - பக்கம் 3-ல் கோவையருகில் கெம்பனூர் என்ற கிராமத்து “ஜாதி இந்துக்களின்” திருவிளையாடல் பற்றி ஒரு செய்தி. தங்கள் ஊர் வரை வரும் பேருந்தை நாற்பது ஆண்டுகளாகப் போராடி, (அமைச்சர் வேலுமணி மூலம் ..) அவர்களை ஊரைத்தாண்டியுள்ள சேரி வரை நீட்டித்திருப்பதை இந்த ஜாதி நாய்களால் -- மன்னிக்கணும் -- ஜாதி மாக்களால் தாங்க முடியவில்லை. அதை எதிர்த்து ஒரு போராட்டம். காலை பள்ளி செல்லும் நேரத்தில் மட்டும் பேருந்து சேரி வரை போவதை இவர்கள் “பொறுத்துக்” கொள்வார்களாம்; ஆனால் மற்ற நேரத்திலும் சேரி வரை சென்று தமிழ்நாடு போக்குவரத்துக் கழகம் நட்டத்திற்கு உள்ளாவது இந்த நாய்களுக்கு -- மன்னிக்கணும்.. மறந்து சில உண்மைகள் வெளிவந்து விடுகிறது -- இந்த ”ஜாதி இந்துக்களுக்கு” தாங்க முடியவில்லையாம்.

தினசரிகளில் அடிக்கடி இது போல் வரும் செய்திகளில் ஜாதி இந்துக்கள் என்றொரு புது ஜாதியை அறிமுகப்படுத்துகிறார்கள். இதற்கான தேவை என்ன என்பது எனக்குப் புரியவில்லை. எந்த ஜாதி இது போல் ‘உயரிய’ போராட்டம் நடத்துகிறார்களோ அவர்கள் ஜாதியை முழுவதுமாகக் குறிப்பிட்டு எழுதினால், ஒரு வேளை அந்த ஜாதி மக்களில் சிலருக்காவது புத்தி வந்து அந்தந்த ஜாதிக்காரனை அவனவன் கொஞ்சம் விரட்ட மாட்டானா என்று நினைப்பு வருகிறது. ஆனால் இங்கே எப்போதும் ‘ஜாதி இந்துக்கள்’ என்று மட்டும் போடுகிறார்கள். அப்படி ஒரு ஜாதி இருந்து தொலைக்கிறதா என்ன?

தினசரிகளுக்கு என் வேண்டுகோள்.

இதுபோன்ற நிகழ்வுகளில் எந்த ஜாதிக்கார மாக்கள் இப்படிப்பட்ட போராட்டங்களை நடத்துகிறார்களோ, அடாவடிச் செயல்களில் ஈடுபடுகிறார்களோ, அந்த ஜாதியை அப்பட்டமாக தினசரியில் குறிப்பிடுங்களேன். நிச்சயமாக இது ஜாதி வெறியாட்டத்தை கொஞ்சமாவது குறைக்கும்.
 -------------------------
பி.கு.
தருமி said...
இதே “கதை”யைப் பற்றி நான் ஐந்து ஆண்டுகளுக்கு முன் எழுதிய பதிவு இது. வாசித்துப் பாருங்கள் ... நான் கோவை மாவட்ட கலெக்டராக இன்று இருந்தால் என்ன செய்வேன் என்றும் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பே எழுதியுள்ளேன். அதையும் வாசித்துதான் பாருங்களேன்... -- அண்ணா நகருக்கு மட்டும் பஸ் போகும் .. கெம்பானூர்ருக்கு பஸ் கிடையாது!!!


Sunday, June 19, 2011

507. "அவன் - இவன்” & ...

*

என் பட .’விமர்சனம்’ தவறாக எடுத்துக் கொள்ளப்பட்டதாக அறிந்ததால் சில மாற்றங்கள் (நீல வண்ணத்தில்...):

முதல் நாளே பார்க்க ஆசைப்பட்டேன்; பார்த்தேன். ஏமாற்றம்.

பாலா,
நீங்கள் எப்போதும் போல் உங்கள் வழியே செல்லுங்கள். ’நான் கடவுள்’ விமர்சனங்கள் உங்களை உங்கள் வழியிலிருந்து விலகிச் செல்ல வைத்ததாக வாசித்தேன். வேண்டாம்.

உங்கள் வழியே நீங்கள் செல்லுங்கள்.



பி.கு. சும்மா சொல்லக்கூடாது. பாலா எல்லா நடிகர்களையும் அழகாக நடிக்க வைத்து விடுகிறார்.

--------------------------

Khushwant Singh, Hindustan Times

Bihari English

Navin Jaggi advocate has sent me a photo-stat copy of an application form for a driver’s licence issued by the Government of Bihar. It seems that Biharis regard murdering English as a patriotic duty. Read on: Driving license applikason phorom Note: Please do not soot the person at the applikason counter. He will give you the licen. If you dot know how to fill, copy from your phriend (dost) applikason. For phurthar instructions, see bottom applikason.

For philling the phorom check karet box

1. Last name
2. Phust name
3. Age
4. Sex
5. Chappal size
6. Occupation — ( ) Politison ( ) Doodhwala ( ) Pehalwaan
7.Number of children libing in the household
8. Number that are yourj
9. Mather Name
10. Phather Name
11. Ejjucason: 1 2 3 4 (Circle highest kilass attended)
12. Dental rekard: ( ) ellow ( ) berownish-ellow ( ) belack ( ) other. Give egjhakt color
13. Your thumb imparesson:

(If you are copying from another applikason pharom, pleaje do not copy thumb impresson also. Pleaje provide your own thumb impression.) Peleje do not use phinger of your legs. Use thumb on your lepht hand only. If you wont have lepht hand, use your thumb on right hand. If you do not have right hand, use thumb on lepht hand.

Note: If you don’t have both hands, you can’t derive. We are istrict about this.


http://www.hindustantimes.com/StoryPage/Print/711070.aspx

Thursday, June 16, 2011

506. சுவனம் செல்ல விழைவோருக்கு ...

*
*

”இஸ்லாமிய சுவனம்”  செல்ல விழைவோருக்கு ...

                              சில பதில்களும், ஒரே ஒரு  கேள்வியும் ....


சில கேள்விகளுக்கு பலமுறை வரும் பதில்:
1400 ஆண்டுகளாக நாங்கள் இந்தக் கேள்விகளுக்குப் பதில் கூறி வருகிறோம். எதுவும் புதிதல்ல ... கேட்ட கேள்விகளே திரும்ப திரும்ப கேட்கப்படுகின்றன.

தரப்படும் பதில்களும் எப்போதும் ஒரே போன்று இருப்பதில்லை. மொழிபெயர்பாளர்களுக்கு ஏற்றாற்போல் பல அடைப்புக் குறிகள்; புதிய விளக்கங்கள். ஏனிப்படி என்றால் ...
//அறிவியல் வளர்ச்சிக்கு ஏற்றவாறு குரானுக்கு பொருள் எழுதினார்கள் -தங்கள் கருத்தை பிராக்கட்டில் போட்டு. பின்னர் அறிவியல் அறிவு வளர வளர....பிராக்கட்டுகள் மாற்றப்படும் அல்லது தகர்க்கப்படும்.//  என்று பதில் வரும். ஆக இதெல்லாம் ஒரு adjustment தான்.

//He is created from a drop emitted- Proceeding from between the backbone and the ribs. (86:7)
இவ்வசனம் சொல்வதன்படி விந்து சிறுநீரகத்தில் இருந்து வருவதாக அல்லவா அர்த்தப்படுகிறது. விந்து சிறுநீரகத்தில் இருந்து வரலாம் என்னும் பிழையான கொள்கையை கிரேக்கர்கள் தான் முதலில் கொண்டுவந்தார்கள். //

//தேனீ  பழத்தை’ச் சாப்பிட்டு தேன் கொடுக்கிறது.//  இங்கே பழம் என்பது மரத்தில் உள்ள எல்லாவற்றையும் என்ற பொருள் வருகிறது என்ற புதிய விளக்கம் வரும்.

பூமியை கடவுள் விரித்தார்; மலைகளை நட்டு வைத்தார் என்பார்கள். வானம் ஏழு அடுக்குகள் என்பார்கள்; கடவுள் ஒரு சிம்மாசனத்தில் உட்கார்ந்திருக்கிறார் என்பார்கள். இதெல்லாமே அறிவியலுக்குள் திணிக்கப்படும் அடைப்புக் குறிகளின் துணையோடு.

female genital mutilation பற்றி முகமது கூறியுள்ளாரே - Do not cut too severely as that is better for a woman and more desirable for a husband. (!!!!!) - என்றால் அதையும் ஒப்புக் கொள்வதில்லை.

ஏன் சுராக்கள் தாங்கள் பேசு பொருள் அடிப்படையில் பிரிக்கப்படாமல் ‘நீளத்தை’ மட்டும் வைத்து முறைப்படுத்தப்பட்டன? இதனால் சுராக்களின் பொருள், காலம், இடம், context என்று எல்லாவிதத்திலும் மாறி விடுமே?


இதுபோல் கேள்விகள் பல. ஏதாவது ஒரு பதில் வரும் இவைகளுக்கு.


ஆனால் சில கேள்விகளுக்கு எப்பதிலும் ஏனோ வருவதேயில்லை.

நானும் ”sin of khalwa" விளக்கம் படித்து அதிர்ந்தேன். இரு பாலார் தனியே இருக்கக்கூடாதாம். (Being alone and privacy (khalwa) with a non-Mahram is unlawful (haram)) அப்படி இருக்க வேண்டிய சூழலில் அப்பெண் அந்த ஆணுக்கு முலைப்பால் கொடுத்தால் அது ஹராம் ஆகாதாம்! இது ஒரு மிக  ‘நல்ல’ மதக் கருத்து.

லாய்லாஹ் - (லாய்லாஹ் - ஆண்களுக்கு கன்னி கழியாத பெண்கள் (55:56-57, 56:7-40) பையன்கள் (52:24, 56:17) சுவனத்தில் நிறைய தரப்படும்.)

ஆண்கள் சுவனத்திற்குச் சென்றால் என்னென்ன கிடைக்கும் என்றெல்லாம் கூறப்பட்டுள்ளது; நன்றாகவே அவைகள் உள்ளன. நல்லது. ஆனால் இதிலும் பால் சார்ந்த வேறுபாடுகள் உள்ளன.

//இஸ்லாமிய மோட்சத்தில் தேன் பாயும்; பச்சைப்பசேல் என்றிருக்கும் என்பதெல்லாம் சரி. ஆனால் இது என்ன ? ஒவ்வொருவருக்கும் 'houris' எனப்படும் (perpetual virgins) 'நித்திய கன்னிகைகள்'? நம்ம ஊர் நித்திய கல்யாணி மாதிரி,  முகமதுக்கு இவ்வுலகத்தில் கிடைத்ததைவிடவும் இரண்டு மடங்கு எண்ணிகையில் - மொத்தம் 72 ஹெளரிகள் -  கிடைக்கும் என்பது எந்த வகையில் ஒரு கடவுள் தரும் 'பரிசாக' இருக்கும். It is not definitely in good taste.

இந்த இரு கேள்விகளுக்கும் யாரும் இதுவரை எந்த விளக்கமோ, பதிலோ, எதிர்ப்போ தெரிவிக்கவில்லை.

சுவனத்தில் ஆண்களுக்கு இவையெல்லாம்  “மிக மிக நல்ல பரிசு”தான். இக்கருத்தை  வைத்தே தீவிரவாதிகளை மூளைச் சலவை  செய்வதாக வாசிக்கிறோம். ஆனால் இதில் எனக்கு வந்த ஐயம் வேறு மாதிரி. ஆண்களுக்கான சுவனம் இவ்வளவு ‘நன்றாக’ இருக்கிறதே ... அப்படியானால் பெண்களுக்கான சுவனம் எப்படியிருக்க வேண்டும். அவர்களுக்கு அல்லாவிடமிருந்து கிடைக்கும் ‘சுவனப் பரிசு’ என்னவாக இருக்கும்? இதை ஒரு கேள்வியாகப் பலமுறை  வைத்தும் ஏதும் பதிலில்லை.

இதில் ஆச்சரியமும் வேதனையும் என்னவென்றால் இது போன்ற கோட்பாடுகளை ஒரு மதம் கொண்டிருக்கிறது என்பதோடல்லாமல், இவையெல்லாம் சரியே என்ற நம்பிக்கையும் கொண்டிருப்பது நல்ல வேதனையான வேடிக்கை!

இப்படி பதில் இல்லாத ஹூரிகள் பற்றிய விஷயம் பற்றி ஒரு கட்டுரை வாசிக்க நேர்ந்தது. அதைப் பங்கிட்டுக் கொள்கிறேன்.

இக்கட்டுரை ஒரு பாகிஸ்தானிய நாளிதழில் - DAWN - NILOAR AHMED  என்பவரால் எழுதப்பட்டது.

52: 20  -  அழகிய கண்களைக் கொண்ட அழகியரை ...

55 : 72  -  அழகிய பெண்களும் (ஹூரிகள்) ...

56 : 22  -  அழகிய கண்களுடைய ஜூர் எனும் மங்கையரும் ...


56 : 34 -38  -  அவர்களைக் கன்னியர்களாகவும் (லாய்லாஹ்?), தங்கள் கணவர்கள் மீது காதல் கொண்டவர்களாகவும் சம வயதுடையவர்களாகவும் ஆக்குவோம்.

இப்படியெல்லாம் கூறப்பட்டாலும், Maulana Umar Ahmed Usmani ஹூரி என்பது இரு பாலாருக்கும் பொருந்தும் என்கிறார். (அப்படியானால்  சுவனம் செல்லும் பெண்களுக்கும் 72 ஆண் ஹூரிக்கள் கிடைக்கும் என்பதுதானே சரியாக இருக்கும்?)

இன்னொரு நம்பிக்கையும் உண்டு. இவ்வுலகில் நல்ல மனைவியாக இருந்தவர்கள் சுவனத்திற்கு வந்து சேரும் நல்ல ஆண்களுக்கு உரித்தான பெண்களாக மாற்றப்படுவார்கள்!!!!

குரானிலிருந்து ஒரு எடுத்துக்காட்டு  -  Hazrat Aasiya என்பவர் அரசனின் பட்டணத்து ராணி. ஆனாலும் தன் கணவனைக் கடவுளாகக் கருதாமல் ஒரே கடவுளை மட்டும் நம்பிய நல்ல பெண்மணி. இவருக்கு சுவனத்தில் என்ன பரிசு என்பது எல்லோருக்கும் உள்ள ஒரு கேள்வி.அவரும் ஒரு ஹூரியாக மாற்றப்பட்டு எந்த மனிதருக்காவது பரிசாக அளிக்கப்பட்டிருப்பாரா? அல்லது ஆண்களுக்கு ஹூரிகள் அளிக்கப்பட்டது போல்  இவருக்கும் அதே பரிசைக்  கடவுள் அளித்திருப்பாரா? சுவனத்தில் காலாதி காலம் இருக்க வேண்டும். அப்போது தனிமை வெருட்டும். ஆகவே சுவனத்தில் நல்ல உடனிருப்போருடன் இருக்க வேண்டும்.

குரானில் கூறப்பட்டுள்ள  ஹூரி, azwaj - இருவருகே இரு பால்களிலும் இருப்பர்; அவர்களே பரிசுகளாக அளிக்கப்படுவர்.

*                                                           *                                                *                          *

இக்கட்டுரைக்கு வந்த சில பின்னூட்டங்களில் எனக்குப் பிடித்த சில:

Syed Roman Ahsan says:
//..as for Aasia the wife of pharoah, since her husband claimed godhead and thus doomed to hell, she will have the honour of being blessed eternal companionship of Prophet Muhammad (pbuh). Can a chaste woman ask anything more than that? //

Aasia the wife of pharoah-க்கு சுவனத்தில் முகமதுவின் துணைவியாகும் வாய்ப்பு அளிக்கப்படும். ஒரு நல்ல பெண்ணுக்கு இதைவிட வேறு என்ன பெருமை?

*                             *                                  *                              *                             *
Dark Prince

However, what amazed me was the quote - In Surah Al-Rehman, the Quran says, “The houris will be protected in tents, whom neither humans nor jinns have touched before (55: 72).”

WTF??? Tents even in heaven?? You gotta be kidding me......No FB, No Internet, No TV, Frarris, PlayStation.......Only Tent, Camels, Sex, Huries................................and wine?? No Vodka, Martini, Rum........And you call this 7th century Bedouin mini-Saudi Arabia in sky as heaven?? This is definitely a creation of a man who was short-sighted and who had never seen the world outside his tent, Kabila and Desert!!



*                             *                                  *                              *                             *

jabeen says:
i wonder why this interpretation by Nilofar was not made by all the Imams,islamic scholars and researchers since the advent of Islam? Its certainly an invention of a new idea by the writer by juggling the Arabic vocabulary.

*                             *                                  *                              *                             *
 Syed N. Hussain,MBA, Ph.D says:
This concept mis-translated and exploited by Western Media has not only become a joke, it seeks to demean Allah to being a “sexist”. In the Eyes of God all human beings are created equal with of course certain biological differences between men and women.

*                             *                                  *                              *                             *
John Loacke says:
Thus, the Houris are always female. This is why you will be incapable of finding masculine descriptions for these “companions”. The carnal focus is clearly to allude to males.

*                             *                                  *                              *                             *
Raman says:
Trying to wriggle out of uncomfortable situation but it does not help as most of the Islamic scholars since 7th century have interpreted houris as females – but with the modern moral values – it becomes uncomfortable and hence try to wriggle out of the uncomfortable situation.

 *                             *                                  *                              *                             *
sameen tahir khan says:
It is about time someone explained this…very nice and informational article….Paradise here I come! Inshallah!

  *                             *                                  *                              *                             *

ஒரே ஒரு  கேள்வி:

Khalwa, லாய்லாஹ் - இதுபோன்ற அறிவுக்கு மட்டுமல்லாது, மனித உணர்வுகளுக்கும் எதிரான, அசிங்கமான கோட்பாடுகளை, எல்லாம் அறிந்த இறைவன் கொடுத்தவை என்று எப்படி நீங்கள் தைரியமாக நம்புகிறீர்கள்?








-

Tuesday, June 14, 2011

WHY I AM NOT A MUSLIM ... 10

*

இப்போதைய பதிவு  -  10

ஏனைய பதிவுகள்:
பதிவு - 7
பதிவு - 8
பதிவு - 9


*





Image and video hosting by TinyPic







Friday, June 10, 2011

505. WHY I AM NOT A MUSLIM ... 16

*



ஏனைய முந்திய பதிவுகள்:
பதிவு - 7
பதிவு - 8
பதிவு - 9
பதிவு - 10
பதிவு - 11
பதிவு - 12
 பதிவு: 13
பதிவு:  14
பதிவு: 15 

இப்பதிவு: 16



Image and video hosting by TinyPic




CHAPTER: 10

HERETICS AND HETERODOXY, ATHEISM AND FREETHOUGHT, REASON AND REVELATION

பல இஸ்லாமிய வேதாந்தங்களும், பிரிவுகளும், வேறுபட்ட கோட்பாடுகளும் இந்த பகுதியில் பேசப்படுகின்றன. (241 - 260)

CHAPTER 11: 

GREEK PHILOSOPHY AND SCIENCE AND THEIR INFLUENCE ON ISLAM
 பல காலக்கட்டங்களில் இருந்த ஸ்லாமிய வேதாந்தக் கோட்பாடுகளும், கிரேக்க வேதாந்தங்களும், அறிவியலும் இஸ்லாமிற்கு அளித்த தாக்கங்களும் பேசப்படுகின்றன. (261 - 275)

இவ்விரண்டு பகுதிகளும் நான் தொடர்ந்து எழுதி வரும் பகுதிகளுக்கு அத்தனை அவசியமானதில்லை என்று கருதுவதால் அவைகளைப் பற்றிய குறிப்புகளை இங்கே தராமல் அடுத்த பகுதிக்கு சென்றுள்ளேன்.

CHAPTER 12:

SUFISM OR ISLAMIC MYSTICISM

அன்றைய சூபிக்கள்,  ‘தான்’ என்ற நினைவையறுத்தவர்களாகவும், சந்நியாச நிலையில் ஈடுபாடு கொண்டவர்களாகவும் இருந்தார்கள். தெய்வீகத் தன்மைகளை விடவும் மேற்சொன்ன இரு பண்புகளையே போற்றி வந்தவர்கள்.  (277)

சூபிக்கள் இறையச்சத்தை விடவும் கடவுளின் மீதான அன்பு, ஞானம், தன்னிலை மறுத்தல், வெறும் கொள்கைப் பிடிப்போடு இல்லாது கடவுளுக்கான சேவையே சிறப்பானது என்ற கொள்கையோடும் இருப்பவர்கள். (278)

நம்பிக்கைகளுக்கு அப்பாற்பட்டு நிற்பதை இஸ்லாம் ஏற்றுக் கொள்கிறதா?
 புதிய கண்டுபிடிப்புகளைப் பற்றி ஒரு தத்துவத்தை இஸ்லாம் முத்லில் இருந்தே வளர்த்து வந்துள்ளது. இந்த புதிய கண்டுபிடிப்புகள் bida - பிடா -  என்று அழைக்கப்படுகின்றன.

ஹடித்துகளின் படி ஒவ்வொரு புதிய கண்டுபிடிப்புமே  நம்பிக்கைக்கு அப்பாற்பட்ட ஒன்று; ஆகவே இது  தவறு; இத்தைகைய தவறுகள் மனிதர்களை நரகத்திற்கே இட்டுச் செல்லும். ஒவ்வொரு கண்டுபிடிப்புமே சுன்னாவிற்கு எதிரான ஒன்று. முன்னாள் இறை வல்லுனர்கள்  புதிய கண்டுபிடிப்பாளர்கள் ஒவ்வொருக்கும் மரண தண்டனை விதிக்க வேண்டும் என்ற கொள்கையைக் 
கொண்டிருந்தனர் ! ஆனால் வளர்ந்து வரும் அறிவியலோடு போட்டி போட முடியாததால், இந்த ‘பிடா’ இரு வகைகளாகப் பிரிக்கப்பட்டன. 

al-Shfi'i என்பவரால்,  குரானையோ, சுன்னாவையோ, ijmaவையோ மறுக்கும் எந்த ஒரு கண்டுபிடிப்பும் தவரான பிடா என்றும் (heretical bida),  இவைகளை மறுக்காத மற்ற கண்டுபிடிப்புகள் சரியான பிடா என்றும் (praiseworthy bida)  என்றும் கருதப்பட்டன. (278)
இஸ்லாம் மறுப்புகளை ஏற்றுக் கொள்வதுண்டா? ‘இல்லை’ என்பதே  இதற்கான பதில். Goldziher மறுப்புகளை ஏற்றுக் கொள்ளும் பண்பு இஸ்லாமியரின் தோற்றக் காலத்தில் இருந்தது என்கிறார். (280)


CHAPTER 13

AL-MA'ARRI

சுய சிந்தனையாளர்கள், கடவுள் மறுப்பாளர்கள், மத நம்பிக்கைகளிலிருந்து மாறுபட்டு நிற்பவர்களை இஸ்லாமியத்தில் zindiqs என்றழைக்கிறார்கள். அப்படிப்பட்ட மிகச் சிறப்பான மூன்றாம் நிலையில் உள்ள ஒருவர்  Abu 'L-ala Ahmad al-Ma' rri (973 - 1057). இவரது பாடல்கள் எழுப்பும் சமயத்தொடர்பான, அதுவும் இஸ்லாமியத்திற்குத் தொடர்பான கேள்விகள் எந்த ’உண்மையான’ இஸ்லாமியரையும் நிலைகுலையச் செய்யும். 

அவரது சில பாடல்கள் மேற்கோள்களாக இந்நூலில் கொடுக்கப்பட்டுள்ளன. சில பாடல்கள்;

                    Hanifs (= Muslims) are stumbling; Chrsitians all astray
                    Jews wildered, Magians far on error's way
                    We mortals are composed of two great schools
                    Enlightened knaves or else religious fools.

இஸ்லாமியத்தை மற்ற மதங்களோடு பிரித்துப் பார்க்கவில்லை. எல்லா சமயங்களுமே அவருக்கு ஒன்றுதான். சமயங்கள் எல்லாமே ‘முட்டாள்களின் தனிச்சொத்து’ என்கிறார்.

                  Mohammed or Messiah! Here thou me, 
                  The truth entire nor here not there can be;
                  How should our God who made the sun and the moon
                 Give all his light to One, I cannot see.

முகமதுவோ, ஏசுவோ முழுமையான உண்மைகள்  அங்குமில்லை; இங்குமில்லை.
எல்லாம் வல்ல, எல்லாவற்றையும் படைத்த ஒரு கடவுள் யாரோ ஒரே ஒரு மனிதருக்கு அவரின் முழுமையான அறிவைக் கொடுத்திருப்பாரா?
(285)

 இப்படியெல்லாம் கவிஞர்கள் எழுதிவிடுவார்கள் என்பதால்தான் இஸ்லாம் கவிதைகளுக்கு, பாடல்களுக்குத் தடை விதித்துள்ளது 
போலும் !!!