Friday, November 29, 2019

1073. ஐ ஐ டி vs பாத்திமா .. இன்னும் வரப் போகும் பல தற்கொலைகள் ...




*


 அவன் கட்டை விரலை மட்டும் கொடுத்தான். 
இவர்கள் ஏன் உயிரையே கொடுக்கிறார்கள்? 

 குருகுலம் ..? 

பாத்திமா என்ற பெண் ஐ ஐ டியில் தற்கொலை செய்து கொண்டதை எதிர்த்து என் முகநூலில் இதைப் பதிவிட்டேன். வந்த ஒரு பின்னூட்டம் இப்பதிவை பத்திரமாக வைத்திருக்க  வேண்டும் என்ற ஆவலைத் தூண்டியது. 

வந்த சில பின்னூட்டங்கள்  கீழே .........

Avudaiyappan Arunachalam அவர்கள் துரோணர்களாக இருக்கும் வரை ஏகலைவர்கள் இருக்கத்தான் செய்வார்கள்.



Srini Vas அது அப்போ.. இப்ப விலைவாசி அதிகமாயிட்டுது


Vijayakumar Periyakaruppan இவர்களுக்கு கொடுத்தது போதும். அவர்களிடமிருந்து நமக்கானதைப் பிடுங்குவோம்!

Prakash Karath ஏகலைவனுக்கு நல்ல சிந்தனை தெளிவும் தன்மானமும் இருந்தது.

Nattarasan Nattarasan காலம்மாறவில்லை!

G Sam George //Srini Vas அது அப்போ.. இப்ப விலைவாசி அதிகமாயிட்டுது//
ஒரு மனசாட்சியற்ற கொடூரமான பதில் நீங்கள் சொல்லியிருப்பது. ...


Srini Vas G Sam George ஐயா, அந்த காலத்தில் கட்டை விரல் கேட்டதும் பெற்றதும் மஹா தவறு. எனக்கு ஒப்புதல் இல்லை. இருந்தாலும் அது அரசியல் ரீதியான முடிவு எனக் கட்டமைத்தார்கள்.. அதை விடுங்க..

இந்தப் பெண்ணிடம் எந்த ஆசிரியரும் உயிரைக் கேட்கவில்லை. அவராகவே எடுத்த அந்த முட
ிவு விபரீதம். ஆழ்ந்த அனுதாபங்கள்.

ஐஐடிக்குள் வந்து மூன்று மாதங்களில் அங்குள்ள போட்டிகளைப் புரிந்து கொண்டிருக்க வேண்டும். அங்கு சராசரி மாணவனே அதிபுத்திசாலி. ஆசிரியர்களும் அதற்குக் குறைவான மாணவர்களைக் கண்டிருக்க வாய்ப்பில்லை. நான் சொல்ல வருவது ஒரு ஆசிரியராக உங்களுக்குப் புரியுமென நம்புகிறேன்.

வெளியுலகம் அந்தப் பெண்ணுக்கு மனோதைரியத்தை வளர்க்கவில்லை. முதன் முதலாக ஒரு இஸ்லாமியக் குடும்பத்திலிருந்து மேற்படிப்பு படிக்க வரும் மாணவிக்கு அதிகப்படி ஆதரவு தந்து ஊக்குவிக்க வேண்டுமென்று அந்த ஆசிரியருக்குத் தெரிந்திருக்க வில்லை. அது அவர் தவறில்லை. ஐஐடிக்குள் வரும் இஸ்லாமியர்கள் மிகக் குறைவு. அதிலும் பெண்கள் அரிதினும் அரியவர்.

இந்த தற்கொலை சம்பவம் நட ந்திருக்கக் கூடாது. விதி. மற்றபடி ஆசிரியர்களையோ ஐஐடியையோ கழுவேற்றாதீர்கள். உங்கள் பதிவு தவறு. என் பதில் தவறுக்கான தவறு.

மூன்று பெண்களின் தகப்பனாக எனக்கு அந்த பெற்றோரின் வலி புரிகிறது. அவர்கள் இந்த இழப்பின் வலியிலிருந்து மீண்டு வர என் பிரார்த்தனைகள்.

இதயம் முழுக்க பிராமண வெறுப்பு கொண்டிருந்த என் ஆசிரியர்கள் சிலர் கூட என் மீது அன்பு பாராட்டினார்கள். அது போல் பிராமண ஆசிரியர்களும் மற்ற மாணவர்களை அன்புடனே நடத்தினர். அம்பேத்கர் முதல் அப்துல் கலாம் உட்பட எல்லோரும் அதை அனுபவித்து வளர்ந்திருக்கிறார்கள்..

ஆசிரியரைப் போற்றுவோம்.



G Sam George   ஒவ்வொரு வார்த்தைக்கும் பதில் சொல்ல முடியும். கொஞ்சம் நீண்டு விடும்.  அதற்கு முன் ... நீங்கள் தங்களையே உச்சாணிக் கொம்பில் உட்காரவைத்துக் கொண்ட குழுவில் ஒருவர். ஆகவே உங்கள் பதில் இப்படித்தான் இருக்க முடியும். So subjective ! ஆச்சரியமில்லை. அது தானே மனித இயல்பு. நம் முதுகு நமக்குத் தெரியாதல்லவா? இங்கே நான் .. கொஞ்சம் வித்தியாசம் .. பழிப்பவனும் நானல்ல... பழிக்கப்படுபவனும் நானல்ல ... logically i could be more objective than you, sir.


// அது அரசியல் ரீதியான முடிவு// உங்களால் எப்படியெல்லாம் அந்தத் தப்புக்குக் கூட காரணம் கண்டுபிடிக்க முடிகிறது. ஆச்சரியம்.  .. இயல்பு தானே!

// உயிரைக் கேட்கவில்லை.// எவ்வளவு எளிதாகக் கடந்து விடுகிறீர்கள்! ஒன்று நிச்சயம். உங்களுக்குத் தெரியுமோ என்னவோ .. துரோணர்களின் அந்தக் காலம் முடிந்து விட்டது. தெரியாதா? (மன்னிக்கணும் .. அவசரப்பட்டு சொல்லி விட்டேன். அந்தக் காலம் இன்னும் அதிகக் கொடூரமாகத் தொடர்ந்து கொண்டு தானிருக்கிறது. இன்னும்  எத்தனை காலமோ உங்கள் ஆட்சி?)

// அங்கு சராசரி மாணவனே அதிபுத்திசாலி// அப்பாடா ... ஒருவேளை அங்கு வரும் உங்க குழுவை மட்டும் சொல்லாமல் பொதுவாகச் சொல்லியுள்ளீர்கள். நல்ல மனதிற்கு மகிழ்ச்சி. அங்கு வரும் மாணவர்கள் பெரு முயற்சியெடுத்து. தங்கள் அறிவுப் புலமை மூலம் வருகிறார்கள். (வழக்கமான “merit"  பற்றிய விவாதம் இங்கே வேண்டாம்.) நிச்சயம் குட்டை நெட்டை இருக்கலாம். குட்டையெல்லாம் போய் குதிங்கடா என்று எந்த வாத்தியானு(ரு)ம் சொல்லக்கூடாது. இல்லையா?  

//மாணவிக்கு அதிகப்படி ஆதரவு தந்து ஊக்குவிக்க வேண்டுமென்று அந்த ஆசிரியருக்குத் தெரிந்திருக்க வில்லை. அது அவர் தவறில்லை// மிகப் பெரிய தவறு நீங்கள் சொல்வது. 

ஏட்டுப் படிப்பை மட்டும் தரும் ஓர் ஆசிரியன் அந்த வேலைக்குத் தகுதியில்லாதவன். குட்டையாக இருப்பவனை நிமிர்த்துவது அந்த ஆசிரியனின் பணி. I I T வாத்தியார் என்றாலும் ஓர் ஆசிரியன் எப்படியிருக்க வேண்டும் என்றி இதைச் சொல்கிறேன். I just quote: //. நான் சொல்ல வருவது ஒரு ஆசிரியராக உங்களுக்குப் புரியுமென நம்புகிறேன்.//
// விதி. // எது உங்களைப் போல் பிறக்காததா?

////மற்றபடி ஆசிரியர்களையோ ஐஐடியையோ கழுவேற்றாதீர்கள்.//  ஏங்க? அது உங்க ராஜ்யம் என்பதால் வரும் கோபமா? இந்தக் கோபம் உங்களுக்கு வருவதும் இயல்பு தானே!

// மூன்று பெண்களின் தகப்பனாக எனக்கு அந்த பெற்றோரின் வலி புரிகிறது// இரண்டு பெண்ணின் தகப்பனாக எனக்கு வலி மட்டுமல்ல .. கோபமும் வருகிறதய்யா?
இந்தச் சமுகம் என் இன்னும் இப்படி சாதி வெறி பிடித்து, கழுசடையாக இருக்கிறதே என்ற கோபம்.

ஆசிரியர்கள் என்ற நிலைக்கு மாறாக அன்றைய துரோணர்கள் இன்னும் வேறு வடிவில் உங்கள் ஐ.ஐ.டியில் மட்டும் முளைத்து வளர்கிறார்களே என்ற கோபம்.

// அது போல் பிராமண ஆசிரியர்களும் மற்ற மாணவர்களை அன்புடனே நடத்தினர்.// ஏன் ஐ ஐ டி ஆசிரியர்களுக்கு மட்டும் அப்படி கொம்பு முளைத்து விடுகிறது என்ற கோபம்.

ஒவ்வொரு ஐ ஐ டியிலும் ஏன் தலித் மாணவர்களின் தற்கொலை தொடர்ந்து நீடிக்கின்றது என்ற கோபம்.

ஏன் உங்கள் குழுக்காரன் எவனும் அங்கே தற்கொலை செய்து கொள்ளாமல் எங்கள் பிள்ளைகள் மட்டும் கழுவேற்றப்படுகிறார்கள் என்ற கோபம்.

இது போல் வரிசையாக பல கேள்விகளும் .. கோபங்களும் தொடர்கின்றன.

உங்களுக்கு  நீங்கள் இருக்கும் கொம்பில் இருந்து பார்த்தால் இதெல்லாம் புரியாது. புரிந்தாலும் ஒப்புக் கொள்ள மாட்டீர்கள்? 

ஓர் ஆசிரியனாக சாதி பார்க்கும் ஈனப் புத்தி என்றும் என்னுள் எட்டிப் பார்த்ததில்லை. Inferiority உணர்வுகளோடு தனித்து நிற்பவனை அழைத்து அணைத்தது மட்டுமே உண்டு. அவர்கள் மீண்டு நின்றதைக் கண்டு ஆனந்தப் பட்ட நாட்களும் உண்டு.

ஆனால் நீங்கள் சொல்வது போல் // ஆசிரியரைப் போற்றுவோம்.// என்பது எல்லா ஆசிரியர்களுக்குமானது அல்ல. சாதிக் குழு ஆசிரியர்களைத் தூற்றுவோம்

வசந்த தேவி அங்கே ஆசிரியர். அவர் கதை  ஐ ஐ டி நிறுவனங்களுக்கு ஒரு ”நல்ல” சாட்சி. இல்லையென்பீர்களா? 

என்னுடன் வேலை பார்த்த தலித் நண்பனின் மகள் முதுகலை முடித்து மிக நல்ல மதிப்பெண்களோடு ஆய்வு மாணவியாகச் சேர்ந்தாள். தொல்லைகள். அதை விட்டு விட்டு ஒரு பேராசிரியராகி, தன் ஆய்வை முடித்து பட்டம் பெற்றாள். எல்லாம் உங்கள் குழுவின் சதிராட்டமும், கொடூரமும் தான் காரணங்கள். அவள் ஐ ஐ டி விட்டு வந்த போது மிகவும் கோபப்பட்டேன் முதலில் - நல்ல வாய்ப்பைத் தவற விடுகிறாளே என்று.  நல்ல வேளை அவள் எடுத்த முடிவு நல்லபடியாக முடிந்தது.



எனக்கு ஒரு சின்ன வருத்தம். இதை வெளியில் சொல்லக்கூடாது தான். என் மன அழுத்தம் .. சொல்லி விடுகிறேன். என்னை ஒரு ஆசிரியர் தாழ்மைப்படுத்தி என்னை தூக்குக் கயிற்றை நோக்கி நடக்க வைத்தால் .. போறதோ போறோம் .. அதுக்கு முன் முடித்து விட்டுப் போவோம்னு நினைத்து ... தொங்குவேன் அப்புறம்!

 *

Thursday, November 21, 2019

1072. தோரணம்





*

பேருந்தில் மூன்று பெண்களுக்குத் தூக்குத் தண்டனை என்றார்கள். பின்னாளில் அவிழ்த்து விட்டு விட்டார்கள். அந்த நீதிபதிகளுக்கு உள்ள மனசாட்சி அது தான் போலும். 
*****

மேலவளவு 13 கொலைகாரர்களை அரசு வெளியே சுதந்திரமாகச் சுற்ற அவிழ்த்து விட்டு விட்டார்கள். அத்தனை மெல்லிய மனசு நம் அமைச்சர்களுக்கு.
*****

சமூகத்தின் ஒரு சாரார் தங்கள் பிணக்குழிக்குக் கூட ஓர் ஒழுங்கான வழியில் செல்ல முடியாத அளவு இருக்கும் அவலம் அரசின் கண்களில் விழுவதே இல்லையே ஏன்? 
*****

உயர் கல்வி நிலையங்களில் பட்டா போட்டுக் கொடுத்தவர்கள் மட்டும் தான் பயில வேண்டும் என்பது கீழ்நிலை மக்களுக்குப் புரியாமல் ஏன் அங்கே போய் தலை கொடுக்கிறார்கள்?
*****


சாதி வித்தியாசம் பார்க்கும் ஆசிரியர்களை நினைத்தாலே அருவருப்பாக உள்ளதே. ம்ம்..ம்.. சாதி .. அது எங்கும் வியாபித்திருக்கும் பெரும்பொருளாகப் போய் விட்டதே ...

*****





1071. 6 பேரை மட்டுமே கொலை செய்த 13 நல்லவர்கள் விடுதலை





*






  மேலவளவு 13 கொலைகாரர்களை அரசு விடுதலை செய்து விட்டது.

  அவர்கள் அத்தனை 
நல்லவர்களாம்! 



 பழைய செய்தி ஒன்றுண்டு. 
அன்றே தருமி சொன்னான் .. 

இதெல்லாம் வெறும் கண் துடைப்பு என்று.

அதற்கு என் பழைய பதிவு  சான்று சொல்லும்.
கட்டாயம் அதையும் வாசியுங்கள்’
அது சொல்லும்
நாம் எல்லோரும் மனசாட்சியில்லாத ஜென்மங்கள் என்று.





 *

Monday, November 18, 2019

1070. ஒரு மகிழ்ச்சியான காலை வேளை ....




*
இன்று காலை எனக்கு மிகவும் மகிழ்வான ஒரு நாளாகப் பிறந்தது. கால்நூற்றாண்டிற்குப் பிறகு என்னிடம் படித்த மாணவனுடன் தொலைபேசியில் தொலைதூரத்திலிருந்து பேசும் வாய்ப்பு அமைந்தது. கொஞ்சம் வித்தியாசமான ஒரு மாணவனாக இருந்தான். ஆனால் இப்போது மிகவும் வித்தியாசமானவனாக, அதுவும் நான் ஆச்சரியப்படுமளவிற்கு மாறியவனாகவும் உயர்ந்த எண்ணங்களோடும் இருப்பதைப் பார்த்து அத்தனை மகிழ்ச்சியும் வியப்பும் எனக்கு.

சொந்த வாழ்க்கையில் உயர்ந்த ஒரு செயலைச் செய்துள்ளான். அது அவன் இளம் வயது வாழ்க்கை, குடும்பச் சூழல் எல்லாவற்றையும் வைத்துப் பார்க்கும் போது  எனக்கெல்லாம் அதை நினைத்துப் பார்க்கவே ஆச்சரியமாக அவனை அண்ணாந்து பார்த்தேன். அதையும் தாண்டி அவன் பேசியவையும் அப்படி ஒரு மகிழ்ச்சியை அளித்தன. வாழ்க்கையில் “நகர்ந்து கொண்டே” இருக்கிறான் என்பது தெளிவாகப் புரிந்தது. அவன் வார்த்தையில் சொல்ல வேண்டுமானால், he is not enfolded into any "mold" .. he keeps growing or rather enlarging from that mold. இந்த "mold" என்ற சொல்லை அவன் ஆரம்பித்து வைக்க, இருவரும் அதைப் பற்றியே அதிகம் பேசினோம். வாழ்க்கை ஒரு "mold" என்பதைத் தாண்டி, அது "mold"-லிருந்து தொடரும் ஒரு ”நீட்சியாக” இருக்க வேண்டும் என்று பேசினோம்.

எல்லாம் பேசினோம்.

ஆனால் அந்த நீட்சிக்கு கேள்விகள் கேட்கும் மனம் வேண்டும் .. அந்த மனத்தை எனக்கு நீங்கள் தந்தீர்கள் என்றான்.

‘குண்டு சட்டிக்குள் குதிரை ஓட்டக் கூடாது’ என்றும், கேள்விகள் கேட்டுக் கொண்டே இரு என்று நான் சொன்னதையும் எனக்குத் திருப்பிச் சொல்லி, அவைகள் என்னை மாற்ற பெரும் காரணம்  என்பதையும் சொன்ன போது ஆசிரியனின் மனதில் ஒரு விகசிப்பு வருவதைத் தவிர்க்க முடியாததே. அவனும் இப்போது ஆசிரியனாகி தன் மாணவர்களிடமும் அந்தக் “கேள்வி ஞானத்தைப்” பரப்புகிறேன் என்று சொன்ன போது ஒரு ஆசிரியனுக்குப் பெருமிதம் வருவதும் தவிர்க்க முடியாததே.

மனம் நிறைந்த ஒரு காலை நேரம் ....

பி.கு. அவன் வாழ்க்கை. அதை எல்லோர் முன்னிலும் வி(வ)ரிக்க வேண்டாமென்று விவரங்கள் இல்லாமல் எழுதியுள்ளேன்.














Sunday, November 17, 2019

1069. யூதர்களின் இயேசுவும், பவுலின் கிறிஸ்துவும் -- 2





***

ஏனைய பதிவுகள் ….




யூதர்களின் இயேசுவும், 
பவுலின் கிறிஸ்துவும்

எஸ்.  செண்பகப்பெருமாள்


எனக்கு கிறித்துவத்தில் பல கேள்விகள் உண்டு. அவைகளை கிறித்துவ நம்பிக்கையாளர்களிடம் கேட்டு, பதில் பெறாமல் போனதுண்டு;  பல சமயங்களில் தெளிவாக விவிலியத்தில் உள்ளதைக் கேள்விக்கு உட்படுத்தினால் அவர்களிடமிருந்து பதில் வருவதை விட கோபம் அதிகமாக வரும் என்பது என் அனுபவம். வேறு சில கேள்விகளுக்கான பதிலைத் தேடினேன். கிடைக்கவில்லை. ஆனால் இந்த நூல் பல கேள்விகளுக்கான பதில்களைத் தந்துள்ளன.

இந்த ஆசிரியர் - சண்முகப் பெருமாள் - ஓர் இந்து. ஓய்வு பெற்ற ஆசிரியர். கிறித்துவ பாதிரிமார்களிடம் இணைந்து, இறையியல் கல்லூரியில் பைபிள் குறித்த வகுப்புகளை எடுத்துள்ளார். அவரது நூல் கிழக்குப் பதிப்பகத்தால் 2018ம் ஆண்டின் டிசம்பர் மாதத்தில் வெளியிடப்பட்டுள்ளது. நூலுக்கு வாழ்த்துரை வழங்கியவர் Rev. Dr. ஜோயல் செல்லத்துரை - ஒரு பாதிரியார். (நான் என் ‘மதங்களும் சில விவாதங்களும்’ நூலுக்கு அதே போல் கிறித்துவ பாதிரியார்கள் சிலரை முயற்சித்தேன் ... தயங்கினார்கள் .. விட்டு விட்டேன்.)

சில கேள்விகள்:  
  • எப்போதிருந்து பரிசுத்த ஆவி கிறித்துவ மதத்தில் பரவ ஆரம்பித்தது என்று தேடினேன். 
  • விருத்த சேதனம் கட்டாயமாக்கப் பட்டுள்ளதாக பழைய ஏற்பாட்டில் சொல்லப்பட்டுள்ளது. ஆனால் கிறித்துவர்களிடம் அப்பழக்கம் இல்லை; ஏன்?
  • ஏசு திரும்பத் திரும்ப தான் இஸ்ரேயலர்களுக்காக மட்டும் வந்ததாக புதிய ஏற்பாட்டில் சொல்லி வந்தாலும் அவர் அனைவருக்குமான கடவுளாக எப்படி “ஆக்கப்பட்டார்” என்றும் அறிய ஆவல்.
  • பவுல் என்ற அடிகளார் கிறித்துவ மதத்தின் ‘தலைமைக் குரு’வாக ஆகியுள்ளார். அவர் கிறித்துவத்தின் அடித்தளத்தை ‘அவரது விருப்பத்திற்கேற்ப’ மாற்றியதாக வாசித்திருக்கிறேன். அதனைப் பற்றி முழுமையாக அறிந்து கொள்ள ஆசை.
இப்படி ஒரு பெரிய பட்டியல் என்னிடம் இருந்தது.  அதற்குப் பதில் தர வந்தது போல் இந்த நூல் கிடைத்தது. வாசித்து உங்களிடம் பகிர்வதற்கு முயல்கிறேன், அதற்கு  முன் இந்த நூலின் பின்பக்கத்தில் உள்ள குறிப்புகள் புத்தகத்தின் கருத்தடக்கத்தைத் தருவது போலிருப்பதால் அதை முழுமையாக இங்கே முதலில் தருகிறேன்:

பைபிளின்  பழைய ஏற்பாட்டு நூல்கள், யூதர்களின் மதத்தையும் கடவுளையும் நமக்கு விரிவாக அறிமுகம் செய்கின்றன. யூதர்களின் கடவுள் அவர்களுக்கு மட்டுமேயான கடவுள் என்று பைபிளில் திரும்பத் திரும்பச் சொல்லப்படுகிறது. கி.மு. 586-ல் பாப்லோனிய அரசன் நெபுகத்நெசர் யூதர்களின் எருசலேம் ஆலயத்தைக் தாக்கி அழித்து, யூதர்களை அடிமைப்படுத்துகிறான். அன்று தொடங்கி யூதர்கள் மாறி மாறி, கிரேக்கர்கள், ஹாஸ்மோனியர்கள், ரோமானியர்கள் என்று யாரோ ஒருவரிடம் அடிமைகளாக இருந்து வந்தனர். மீண்டும் தங்களுக்கான தனி நாட்டைச் சுதந்திரமாக ஆள விரும்பிய அவர்கள், அரசியல் விடுதலையைத் தங்களுக்கு தரக்கூடிய ஒரு மெசியாவை எதிர்பார்த்துக் காத்திருந்தனர்.

இந்நிலையில் யூதக் குடும்பம் ஒன்றில் கி.மு.4-ல் இயேசு பிறக்கிறார். அவருடைய போதனைகள் யூதர்களை நோக்கி மட்டுமே இருக்கிறது. தன் சீடர்கள் அனைவரும் யூதர்கள் மத்தியில் மட்டுமே பிரச்சாரம் செய்ய வேண்டும். புறஜாதியரிடம் ஒரு போதும் செல்லக்கூடாது என்று இயேசு மிகத் தெளிவாகக் குறிப்பிடுகிறார். இயேசுதான் மெசியா என்று அவருடைய சீடர்கள் யூதர்களிடம் முன்னிறுத்துகின்றனர். ஆனால் ஒரு மெசியா என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்று பழைய ஏற்பாட்டில் சொல்லியுள்ளதோ அவற்றைச் செய்வதற்கு முன்னதாகவே இயேசு கொல்லப்படுகிறார்.

இயேசுவின் நேரடிச் சீடராக இருந்திராத பவுல் என்ற யூதர், இயேசுவைப் பின்பற்றுவோரைக் கடுமையாகத் துன்புறுத்துகிறார். பின்னர் மனம் மாறுகிறார். பவுல்தான் இயேசு என்ற ஒரு மெசியாவை, கிறிஸ்து எனப்படும் அனைவருக்கும் பொதுவான கடவுள் என்ற நிலைக்கு உயர்த்துகிறார். இயேசு கூறியதற்கு மாற்றாக, புற ஜாதியரிடம் இயேசு கிறிஸ்து என்ற கருத்தாக்கத்தைக் கொண்டு செல்கிறார். பவுலுக்கும் இயேசுவின் சீடர்களுக்கும் இடையில் கருத்து வேறுபாடுகள் நிலவுகின்றன. இன்று பவுலின் கிறிஸ்துவமே உலகம் முழுவதும் பரவியுள்ளது

செண்பகப் பெருமாளின் இந்நூல் பைபிளின் பழைய, புதிய ஏற்பாட்டு வசனங்களை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு, யூத வரலாற்றையும் இயேசுவின் வாழ்க்கையையும் ஆராய்கிறது. அதன் மூலம் இன்றைய கிறிஸ்துவத்தின் பல கொள்கைகளையும் கேள்விக்கு உட்படுத்துகிறது.


*