Saturday, April 30, 2011

502. HDR PHOTOS

*


SOME HIGH DYNAMIC RANGING - 

HDR PHOTOS




 













501. மதுரை - தெப்பத் திருவிழா - 2011

*

Image and video hosting by TinyPic


Image and video hosting by TinyPic




Image and video hosting by TinyPic





Image and video hosting by TinyPic











இன்னும் சில படங்கள் -- இங்கேயும் .... ; அங்கேயும் .... .



*


*

Sunday, April 24, 2011

500. ஆறு ஆண்டுகள் ... 500 இடுகைகள் ...

*

1. டி.வி. விளம்பரங்கள் பற்றி தருமிக்கு சில கேள்விகள்....


4/24/2005 02:01:00 PM

1. இந்த வீக்கோ - கிரீம், பற்பசை - விளம்பரங்களிலும், அஷ்வினி எண்ணெய் விளம்பரங்களிலும் வரும் ஆட்களை எங்கே தேடிப்பிடித்திருப்பார்கள்?

2. 'குங்குமம்' விளம்பரத்திற்குப் பயன் படுத்தும் பெண்குரலை மாற்றிய பிறகுதான் குங்குமத்தைத் தொடுவது என்று நான் முடிவு செய்திருக்கிறேன். அப்ப ... நீங்க ?

3. ஆண்களின் உள்ளாடை விளம்பரங்கள் எல்லாம் இவ்வளவு கேவலமா இருக்கு. அது ஏங்க...?

4. இந்த விஜய்யும் - அதாங்க நம்ம இளைய தளபதி - அமிதாப் பச்சனும் விளம்பரப் படத்தில் மட்டும் நன்றாக நடிக்கிறார்கள். அது ஏங்க..?

5. மாமிகள் மட்டும்தான் குங்குமம் படிக்க வேண்டுமாமே. அது ஏங்க..?

தருமி இன்னும் கேட்பான்.... 1

==================
இது என்  முதல் பதிவு. 

சரியாக ஆறு ஆண்டுகளுக்கு முன் -  04.24.2005
சரியாக இன்று  இடுகை இடும் அதே நேரத்தில் -  02:01:00 PM

அந்த இடுகைக்கு ’பாவம் ! இந்தப் பய புள்ள இப்பத்தான் பதிவுலகிற்கு வந்திருக்குன்னு’ பாவப்பட்டு பினாத்தல் சுரேஷ் ஒரு பின்னூட்டம் போட்டிருக்கிறார். நான் நிஜமாவே அப்போ பாவம்தான். கிடச்ச ஒரே ஒரு பின்னூட்டத்தை வச்சி வச்சி பாத்துக்கிட்டே இருந்திருக்கிறேன். அதுக்கு  ‘நன்னி’ன்னு ஒரு பின்னூட்டம் போடணும்னு கூட தெரியாத பாவப்பட்ட பிள்ளை!

ஆனா இப்போ 6 வருஷத்துக்குப் பிறகு என்னமோன்னு நினச்சி நம்ம ரோஸ்விக் வந்து ஒரு பின்னூட்டம் போட்டுட்டார். பதிலும் போட்டுட்டேன். (ஒரு சோகம்: என் இடுகைக்கு இப்படி ஆறு வருஷத்துக்கு ஒரு முறை ஒரு பின்னூட்டம் வர்ரது என்னங்க நியாயம்! )  :(  இருந்தாலும் ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு வந்த ரோஸ்விக், உங்களுக்கும் நன்றி.

இரு பின்னூட்டமும் கீழே இருக்கு ...
=======================

On Monday, April 25, 2005 5:11:00 PM ,
பினாத்தல் சுரேஷ் said...

நல்ல நியாயமான கேள்விகள்.. கேளுங்க..கேளுங்க.. கேட்டுக்கிட்டே இருங்க.

1. அதுதான் முகவரியும் போடறாங்களே!
2. நான் அப்பவும் படிக்க மாட்டேன்.
3.கவர்ச்சியாகவும் எடுக்க முடியாது.. செலவும் பண்ண முடியாது. என்ன பண்றது சொல்லுங்க.
4.ஒரு நிமிஷம் கஷ்டப்பட்டு நல்லா நடிச்சிடலாம்.. மூணு மணி நேரம்? Impossible
5.தோடா.. அவங்க படிக்கிறாங்கன்னா நினைக்கிறீங்க?
===============

On Saturday, April 09, 2011 8:46:00 AM ,
ரோஸ்விக் said...

கலைஞர் ஆட்சி பற்றிய விளம்பரங்கள்ல நல்ல ஃபிகர்களா வருதாமே? உண்மையா?


நாங்களும் கேப்போமுள்ள... :-))

On Saturday, April 09, 2011 10:29:00 AM ,
தருமி said...

ரொம்ப பிடிச்ச மாடல் (திவ்யா?) இதில் வழக்கமான அழகில் இல்லையே!
========================

ஆறு ஆண்டுகள். என்னென்னமோ நினச்சி வந்தேன். என்னென்னமோ எழுதியிருக்கிறேன். எழுதியதில் இரண்டு வகைக் கட்டுரைகள்தான் எனக்கான அறிமுகமாக எல்லோருக்கும் இருக்குமென நினைக்கிறேன்.

உண்மையைச் சொல்லணும்னா, இந்த இரண்டையும் பற்றி பதிவுலகம் வந்த பிறகே நன்கு தெரிந்து கொள்ள ஆரம்பித்தேன். இரண்டும் எதிர்ப்பினால் மட்டுமே வளர்ந்தவை. இடப்பங்கீடு பற்றி எழுத ஆரம்பித்த போது ‘உன் மேல் வழக்குப் போடுவேன்’ என்ற பயமுறுத்தல். அதனாலேயே மேலும் மேலும் வாசித்தேன்; தெளிந்தேன்; எழுதினேன். மதப்பதிவுகளும் அப்படியே. அதிக எதிர்ப்புகள் வந்ததாலேயே ஒரு மதத்தைப் பற்றிய பதிவுகளும் அதிகமாகி விட்டன. மற்ற இரு மத நம்பிக்கையாளர்களும் என்னை எதிர்த்திருந்தால் அவைகள் பற்றியும் இன்னும் அதிகமாகத் தெரிந்திருப்பேன்; கேள்விகளும் கேட்டிருப்பேன்!

சொந்தக் கதைகள் பற்றியும் எழுத ஆரம்பித்தேன். அந்தக் காலத்துக் கதைகள் என்பதாலோ என்னவோ நல்ல வரவேற்பும் இருந்தது. இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டங்கள், நயா பைசா அறிமுகம் போன்ற பொது இடுகைகளுக்கு நல்ல வரவேற்பிருந்தது மகிழ்ச்சி. இதைப் போல் இன்னும் எழுத ஆவல். முயற்சிக்க வேண்டும்.

ஆறு ஆண்டுகளில் ‘சம்பாதித்தது’ என்ன?

நிறைய சம்பாதித்துள்ளேன். முதல் சம்பாத்தியம் - எனக்கு உலகம், அதுவும் அறிவுலகம், எவ்வளவு குறைவாகத் தெரிகிறது என்பதை நான் புரிந்து கொண்டேன். . நிறைய இடுகைகள் time filling என்பது போன்றவைதான். நல்ல துறைகளில் ஆழமான கட்டுரை எழுதப் பலரால் முடியும்; ஆனால் அந்தக் கட்டுரைகளுக்குப் பின்னூட்ட ‘ஆதரவு’ அதிகமாக இருக்காது என்பதாலேயே அவைகள் அதிகமாக எழுதப்படுவதில்லை. ஆனாலும் எழுதும் மிகச்சிலரின் அறிவுத் திறன் என்னை ஆச்சரியப்பட வைக்கின்றது. வெறும் 30 - 40 வயதிற்குள் இருக்கும் சிலரைத் தெரியும்.  அவர்களை என் தனிப்பட்ட முறையில் பாராட்டியும் உள்ளேன். அவர்களது இப்போதைய வயதையும் அந்த வயதில் நான் இருந்த நிலையையும் ஒன்றாய் நிறுத்திப் பார்த்தால், இந்த இளைஞர்கள் மிக உயரத்தில் இருப்பது புரிகிறது. ஏன் அந்த வயதில் இவர்களுக்கிருக்கும் அறிவுத் தேடல் நமக்கு இல்லாது போயிற்று என்ற எண்ணமே மிஞ்சுகிறது. அத்தகைய ’சில’ பதிவாளர்கள் போல் பலரும் தங்கள் தனித் திறமைகளை வெளிக்கொணர வேண்டும் என்றொரு ஆசை எனக்கு.

பதிவுலகம் புதிய வாசலை எனக்குத் திறந்து விட்டுள்ளது. தெரியாதவைகளைத் தெரிந்து கொள்ள, தெரிந்தவைகளை மேலும் புரிந்து கொள்ள, பல நல்ல நண்பர்களை - முகம் கூட தெரியாத பல நண்பர்களை - தெரிந்து கொள்ள ... பதிவனாக ஆன பின் என் உலகம் மிகப் பெரியதாகி விட்டது.

முதன் முதல் ஒரு பதிவர் கூட்டத்தில் கலந்து கொண்டு தமிழ்மணத்தின் முதல் 500 பதிவர்களில் நாமும் ஒருவனாக இருப்போமே என்ற ஆசையில் பதிவனானேன்.  என்ன எழுதுவோம் என்ற எந்த நினைப்பின்றி வந்த நானும் ஆறு ஆண்டுகள் கழித்து விட்டேன்.ஏதேனும் சாதித்திருக்கிறேனோ இல்லையோ, நிச்சயமாக ஒரு நல்ல மன திருப்தியோடு இருக்கிறேன்.  இன்னும் எழுதுவதைத் தொடர்ந்து செய்து கொண்டிருக்க வேண்டும். இன்னும் புதிதாக எழுத முயலவேண்டும்  -- ஆறு ஆண்டுகளின் முடிவில் இருக்கும் இந்த ஆவலை இன்னும் தொடரவேண்டும்.


காசிக்கும், தமிழ் மணத்திற்கும், அனைத்து பதிவுலக நண்பர்களுக்கும், followers-க்கும்  மிக்க நன்றி.








Tuesday, April 19, 2011

499. WHY I AM NOT A MUSLIM ... 15

*




ஏனைய முந்திய பதிவுகள்:
பதிவு - 7
பதிவு - 8
பதிவு - 9
பதிவு - 10
பதிவு - 11
பதிவு - 12
 பதிவு: 13
பதிவு:  14 


இப்பதிவு: 15



Image and video hosting by TinyPic




CHAPTER  9
                                          (தொடர்ச்சி)


THE ARAB CONQUESTS AND THE 
POSITION OF NON-MUSLIM SUBJECTS



அரேபியரின் வீர சாகசங்களும்
இஸ்லாமியரல்லாத மக்களின் நிலையும்


இஸ்லாமியரின் போர் வெற்றிகள்:

(AN APOLOGY:


நூலின்  இந்தப் பகுதியை விளக்கமாகச் சொல்லாமல்  சில செய்திகளைத் தவிர்த்து விடலாமென நினைத்தேன். ஏனெனில் அவை அவ்வளவு குரூரமானவை. 

 இஸ்லாம் என்ற சொல்லுக்கே ”அமைதி” என்பதுதான்  பொருள்; முகமதுவிற்கு வந்த எதிர்ப்பினால் மட்டுமே அவர் பல போர்களை நடத்தினார்; ஒரு மனிதனைக் கூட கொல்வதற்கு எங்கள் மதம் சொல்லவில்லை;  -- இப்படியெல்லாம் இஸ்லாமிய நம்பிக்கையாளர்கள் மீண்டும் மீண்டும் சொல்லிவருவதாலும், அதில் அவர்கள் மிகவும் ஆழ்ந்த நம்பிக்கைகளோடு இருப்பதாலும், (ஒரு வேளை அவர்கள் பார்க்க மறந்து போன,)  நம்பிக்கையற்றவர்களின் பார்வையில் அவர்களது மத நூல் என்ன சொல்கிறது என்பதையும், ஏன் ’இஸ்லாம் கத்தியால் பரப்பப்பட்டது’ என்பது அடிக்கடிசொல்ல்ப்படும் வார்த்தையாக உள்ளது என்பதையும்  அவர்களுக்குக் காண்பிக்கவே இந்தப் பகுதியையும் மற்ற பகுதிகள் போலவே கருதி, அதன் முக்கிய பகுதிகளை இங்கு தருகிறேன்.)

நம் தமிழ்ப் பதிவர்களின் மத்தியில் இருக்கும் மற்றொரு எண்ணமும் என்னை இப்பகுதியின் முக்கியத்துவத்தைக் குறைக்க இடம் கொடுக்கவில்லை. இஸ்லாமிய மன்னர்கள் நம் நாட்டின் மீது படையெடுத்து வந்த அயல்நாட்டு அரசர்கள். நம்மை ஆண்ட ஆங்கிலேயர்கள் போல் இவர்களும் அந்நிய நாட்டு ஆக்கிரமிப்பாளர்கள். ஆங்கிலேயன் நம்மை அடிமைப்படுத்தினான் என்பதால் நமக்கு கிறித்துவத்தின் மேல் (ஓரளவு) வெறுப்பில்லை. அதே போல் எந்த கிறித்துவனும் மதச் சார்பினால் ஆங்கிலேயன் புகழை ஓதுவதில்லை. அவன் என்னை அடிமைப்படுத்தியவன் என்ற உணர்வே எல்லோரிடமும் - கிறித்துவரிடமும் சேர்த்து - உண்டு. மதத்தையும் அரசியலையும் எப்போது இணைத்தே வைத்திருக்கும் இஸ்லாமிய தத்துவம், கிறித்துவத்தில் (இப்போதைக்கு) இல்லை. (சில நாடுகளில் கிறித்துவம்- இஸ்லாம்; கத்தோலிக்கர் - பிரிவினைக்காரர்கள் இவர்களிடையே தகராறும் உண்டு.) ஆகவே ஒரு ஆங்கிலேயனை, அவனது ஆட்சியை எதிர்த்துப் பேசினால் அவன் ஒரு ஆங்கிலேயனாகத்தான் பார்க்கப்படுகிறான். ஒரு கிறித்துவனாக அல்ல.

ஆனால் இஸ்லாமிய மன்னர்களை நம் இஸ்லாமியப் பதிவர்கள் புகழ்ந்தேற்றுவது வேதனையான ஒன்று. ஒளரங்கஜேப் தனி மத  வரி விதித்தானே என்றால் அதற்குப் பதில் ’அவன் ஆள்வதற்கு வரி விதித்தான். ஆகவே ஒவ்வொரு குடிமகனும் அந்த வரியைச் செலுத்துவது கடமை’ என்றொரு விவாதம். அவன் ஒரு ஆக்கிரமிப்பாளன்; அவனுக்கு நான் ஏன் வரி செலுத்த வேண்டும் என்பதை அவர்களுக்கு என்னால் புரிய வைக்க முடியவில்லை. (கட்டபொம்மன் வசனம் அவர்களுக்கு நினைவில் இருக்குமோ என்னவோ!) அவனுக்கு வரி செலுத்தாதது தவறு என்கிறார்கள். இவர்களைப் பொருத்தவரை,  காந்தி உப்புசத்தியாகிரகம் செய்தாரே, அதுவே தவறு. ஆங்கிலேயன் போட்ட உப்பு வ்ரியை நாம் கட்டாயம் செலுத்தியிருக்க வேண்டும்; ஏனெனில் அவன் நம் நாட்டை ஆள்வதற்காகத்தானே வரி கேட்கிறான்!!

இன்னொரு ‘அழகான’ விவாதம் கடையேறியது. இஸ்லாமியர் 700 ஆண்டுகளாக நம்மை ஆண்டு கொண்டிருந்திருக்கிறார்கள். ஆனால் ஆங்கிலேயர் அதன் பின் வெறும் 200 ஆண்டுகள் தான் நம்மை ஆண்டனர். நாம் 200 வருடம் ஆண்ட ஆங்கிலேயரை விரட்டி விட்டோம். ஆனால் 700 ஆண்டுகள் ஆண்ட இஸ்லாமிய அரசர்களை நாம் விரட்டவேயில்லை. அதாவது, நமக்கு இஸ்லாமிய அரசர்கள் மேல் ”அம்புட்டு அம்பு அன்பு” ! இந்த விவாதத்திற்கு என்ன பதில் சொல்லி அவர்களுக்குப் புரிய வைப்பது என்பது எனக்குப் புரியவில்லை.

இதில் நம் வரலாற்று நூல்களில் சில இஸ்லாமிய மன்னர்களைப் பற்றித் தவறான செய்திகள் இருப்பதாகவும் வருந்தினர். கிளைவ், ஜெனரல் டயர் போன்ற ஆங்கிலேயர்களைப் பற்றி மோசமாக எழுதினால், பேசினால் ஒரு கிறித்துவனுக்கும் கோவம் வந்ததாக நான் இதுவரை பார்க்கவில்லை. அதைப் பற்றிய ஒரு பதிவில் நான் சொன்னதைப் புரிந்து கொள்ளும்  இஸ்லாமியப் பதிவர்களையும் நான் பார்க்கவில்லை. ஆக்கிரமித்த ஒளரங்கஜேப் ’மிகவும் நல்ல’ இஸ்லாமியனாம்; சொல்கிறார்கள். தொப்பி தைத்து அதன் வருமானத்தில்தான் சாப்பிட்டானாம். ரொம்ப  நல்லது. ஆனால் அதனால் எனக்கென்ன? என்னை எப்படி ஆக்கிரமித்தான்; எப்படி ஆண்டான் என்பதுதானே என் கேள்வி.

சில / பல இஸ்லாமிய மன்னர்கள் ‘குடியும் கூத்தியுமாக’ வாழ்ந்தார்கள். அது தவறுதான் என்றும் சில பதிவர்கள் ‘பாவமன்னிப்பு’ கேட்டுள்ளார்கள். அதற்காக இங்கு யாரும் அழவுமில்லை; கவலைப்படவுமில்லை.

நம் வரலாற்று நூல்களிலும், பாடப் புத்தகங்களிலும்  இஸ்லாமிய அரசு, ஆட்சி பற்றித் தவறான செய்திகளைப் பரப்பி விட்டார்கள் என்பதும் ஒரு குற்றச்சாட்டு. அதை நினைவில் வைத்து நம் நாட்டைச் சேராத வரலாற்றாளர்கள் கொடுத்த செய்திகளையும் தொகுத்து விடலாமே என்று இந்த நூலில் கண்டுள்ளவற்றைக் கொடுத்துள்ளேன்.)




Schumpeter (1883-1950) - அராபியர்கள் ஒரு போரிடும் சமூகம். போர் என்பது மிகவும் சாதாரணமான ஒரு வழக்கம். சமூகத்தின் அமைப்பே போரில் வெல்வது மூலமே உறுதிப்பட்டது. இஸ்லாம் இல்லாவிட்டாலும் இந்த போர் முறை அவர்களிடம் இயங்கியே வந்திருக்கும். முகமது அமைதியையும், தாழ்ந்து இருப்பதையும் பற்றிப் பேசியிருந்தால் அவரை அந்தச் சமூகத்தினர் ஏற்றுக் கொண்டிருக்க மாட்டார்கள். 

இஸ்லாமின் புதிய தலைமுறையில் இருந்த பெரும் தலைவர்கள் பலரும் இஸ்லாமில் அதிக நாட்டமில்லாதவர்கள். Khalid என்பவர் பைஸாண்டினின் நடந்த போரில் பெரும் தலைவராக இருந்தவர்; அவரைப் பற்றிய குறிப்பில் அவர் ‘போரைத் தவிர வேறெதுவிலும் அவருக்கு ஆர்வமில்லை’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதைப் போலவே எகிப்தை வென்ற Amr b. al-As என்பவரும், போரில் அடித்த கொள்ளைகள் மூலம் மிகவும் பெரிய செல்வரான Othman b. Taliba என்பவரும் அடுத்த சான்றுகள். 

முதல் வெற்றிகள்:
634 - அபு பக்கர் - 4000  பேர் - யூதர்கள், கிறித்துவர்கள், சமாரியர்கள் 
கொல்லப்பட்டனர். காஸா கைப்பற்றப் பட்டது.
635 & 642  - மெஸோபட்டோமியாவில் கிறித்துவ மடங்கள் கொள்ளையடிக்கப்பட்டு, Monophysite Arabs-களால் கட்டாய மத மாற்றம் நடந்தது. Amr b. al-As எகிப்தில் படையெடுத்தபோது அங்குள்ள Behnesa என்ற நகரத்தின் மக்கள் அனைவரும் கொல்லப்பட்டார்கள். பெண்கள், குழந்தைகள் யாருமே தப்பவில்லை. இதே போன்று ஆர்மேனியாவில் உள்ள Euchaita என்ற நகரின் மக்கள் அனைவரும் இதே போல் கருவறுக்கப்பட்டனர். 
642, 643 ஆண்டுகளில் வடக்கு ஆப்ரிக்காவின் ட்ரிபோலி, அனடொலிய, மெஸொபட்டோமியா, சிரியா, ஈராக், ஈரான் போன்ற இடங்களும் போரில் இஸ்லாமியரால் தோற்கடிக்கப்பட்டன. 



இந்தியா


712 - ஈராக்கின் கவர்னரான ஹஜாஜ் (Hajjaj) என்பவரால் திட்டமிடப்பட்டு, முகமது காசிம் (Muhammad b. Qasim) என்பவரின் தலமையின் கீழ் முதல் படையெடுப்பு நடந்தது. ஹஜாஜ் கொடுத்த கட்டளையே ‘இஸ்லாமிய நம்பிக்கையற்றவர்களைக் கொன்று விடுங்கள்’ என்பதே, 

டேபால் (Debal) என்ற கோட்டையைப் பிடித்த இஸ்லாமியர் மூன்று நாட்கள் தொடர்ந்து அந்த நகரின் மக்களைக் கொன்று குவித்தார்கள். அதன்பின் காசிம் மனம் இறங்கி ( ! ) மீதியிருந்தோரை அவரவர் பணிகளில் ஈடுபடவும், தங்களது மதத்தில் தொடரவும் சம்மதித்தான். ஆனால் இது ஹஜாஜூக்குப் பொருத்தமானதாகத் தெரியவில்லை. அவர் காசிமிற்கு ஒரு கடிதம் எழுதுகிறார். அதில் “குரானில் 47:4-ல் நம்பிக்கையில்லாதவர்களைக் காணும்போது அவர்களின் தலைகளைக் கொய்துவிடுங்கள்” என்று கூறப்பட்டுள்ளது. கடவுளின் இந்தப் பெரிய கட்டளையை மதிப்பதும் நடைமுறைப்படுத்துவதுமே சரியானது.  நீங்கள் இரக்கம் காட்டுவது தவறு’ என்று எழுதுகிறான்.


மீண்டும் ஹஜாஜ் திரும்பி வந்து Brahminabad என்ற நகரிலுள்ள 6000 ஆண்களைச் சிரச்சேதம் செய்கிறான். 6000 அல்ல 16000 என்ற கூற்றும் உண்டு. மற்றவர்கள் மன்னிக்கப்பட்டார்கள்.

Mahmud of Ghazni (971 - 1030)
Turco-Afghan என்ற சமூகத்து முகமது கஜினி 1000 ஆண்டில் முதல் முறையாகச் சூறாவளி போல் இந்தியாவினைச் சூரையாடி, மக்களைக் கொன்று, கொள்ளையிட்டுச் சென்றான். ஒவ்வொரு வருடமும் குரானின் இந்தக் கட்டளையைச் செய்து தன்னை அவன் ‘புனிதப்ப்டுத்திக் கொண்டான்’.
Vincent Smith என்ற ஆசிரியர் கஜினி பற்றி, ’அவன் ஆழ்ந்த இஸ்லாமியன்; மற்ற மதத்தினரைக் கொல்வதில் மிகவும் மகிழ்ச்சி அடைந்தான். மிகவும் பேராசை பிடித்தவனாகவும் இருந்தான்’ என்கிறார்.
Alberuni என்ற அறிஞர், ’மகமூது பதினேழு முறை படையெடுத்து இந்த நாட்டை முழுவதுமாகச் சுரண்டினான். அவனது வெறியாட்டத்தில் இந்துக்கள் தூசி அணுக்கள் போல் எங்கும் சிதறடிக்கப்பட்டனர்’ என்கிறார்.

முகமூது முதலில் ஜெய்பால் என்ற பஞ்சாப் மன்னனைச் சிறைப் பிடித்தான். பின், முல்தான் என்ற இடத்தை 1004-ல் கைப்பற்றினான். அங்கேயிருந்த Ghur என்ற இடத்திலுள்ள அனைவரையும் இஸ்லாமியராக மாற்றினான். 

அவனது அடுத்த பலி மதுரா நகர். ‘அந்த ஊரின் நடுவில் வர்ணிக்கவோ, வரையவோ முடியாத அழகுடன் ஒரு கோவில் இருந்தது. முகமூது அந்தக் கோவிலைக் கட்ட 200 ஆண்டுகளாவது ஆகும் என்றானாம். அங்கு  ஐந்து கெஜ உயரத்தில் இருந்த செம்பொன் சிலைகளின் கண்கள் மிகவும் உயரிய கற்களால் ஆனது.’
அந்தக் கோவிலை முழுவதுமாக எரிக்க கஜினி உத்தரவிட்டு, இந்தியாவின் மிகப் பழமையான, அழகான, கலைநயம் மிகுந்த கோவிலை நிர்மூலமாக்கினான். 

அடுத்து சோமநாத் என்ற இடத்தில் இருந்த இடத்தில் 50,000 பேர் கொல்லப்பட்டு, அந்த நகரையும் கொள்ளையடித்தான்.

இஸ்லாமிய வரலாற்றாளர்கள் முகமூதுவை இஸ்லாமின் மதிப்பிற்குரியவனாகக் கருதுவதுண்டு. ஆனால் உண்மையில் அவன் எந்த வித புகழுக்கும் காரணமில்லாதவன்; மிகப்பெரும் கொள்ளைக்காரன்.

Firuz Shah 1351-ம் ஆண்டு வட இந்தியாவில் அரியணையேறினான். படித்துப் பலவும் கற்றவன்; ஆனால் மத இணக்கம் என்பது கொஞ்சமும் இல்லாதவன். அடிமை வணிகத்தில் தேர்ந்தவன். 1,80,000 அடிமைகளை தன் நகரத்தில் வைத்திருந்தான்.அவர்கள் அனைவரும் இஸ்லாமியர்களாகி விட்டார்கள்!
இந்துப் பண்டிகை நடந்த இடத்திற்குச் சென்ற இந்த மன்னன் தனது குறிப்பில், ‘இந்தப் பண்டிகையைக் கொண்டாடுபவர்கள், அவர்களுக்கு உதவுவர்கள் எல்லோருக்கும் அவர்கள் செய்த அநீதிக்காக மரண தண்டனை அளித்தேன். ஆனாலும் கொண்டாடிய இந்துக்களுக்குப் பெரிய தண்டனைகள் கொடுக்கவில்லை. ஆனல் சிலைகள் இருந்த அந்தக் கோவில்களை அழித்து, அதற்குப் பதிலாக மசூதிகளை எழுப்பினேன்’ என்று எழுதியுள்ளான்.


தனியே தன் மத வழக்கங்களைச் செய்துகொண்டிருந்த ஒரு பிராமணனை அந்த இடத்திலேயே நெருப்பூட்டினான்.


கடுமையான ஜிஸ்யா  வரி செலுத்தியவர்களில் பலரை, பிராமணர்களையும் சேர்த்து, பலருக்குப் பணம் கொடுத்து இஸ்லாமியராக்கினான்.


Vincent Smith, ‘ Firuz Shah தன் நாட்டின் இயற்கையையும், மக்களுக்கான கல்வியையும் செவ்வனே கொடுத்தாலும், சமயங்களைப் பொருத்தவரை எந்த விதப் பொறுமையும் இல்லை’.


14-ம் நூற்றாண்டு இஸ்லாமியர்கள் பழைய முதல் இஸ்லாமியர்கள் போலவே சிலை வடிவங்களை வணங்குவது பொறுக்க முடியாத பெரிய பாவம் என்று கருதினார்கள்.(222)


AKBAR, THE GREAT (1542 - 1605)
இஸ்லாமிய வழியில் வளர்ந்தாலும் அக்பர் மற்ற சமயங்கள் மீதும் ஆர்வம் காட்டினார். தனது அரசவையில் Abu Fazl போன்ற விரிந்த சிந்தனையாளர்களை வைத்திருந்தார். இவரோடும் மற்றும் மற்ற சமயத்தினரையும் இணைத்து ஒரு ’தியான மண்டபம்’ அமைத்தார். அங்கு சமயங்கள் பற்றிய உரையாடலை நடத்தினார். இதில் முதலில் இஸ்லாமியர் மட்டுமே கலந்து கொண்டனர். ஆனால் அவர்களின் முட்டாள்தனமான செய்கைகளால் அக்பருக்கு இஸ்லாமின் மீதிருந்த மரியாதை  குறைவதாகக் கண்டார்; அதனால் அவர்கள் மீதும் எரிச்சலடைந்தார். இதன் பின் இந்து, ஜெயின், ஜோராஸ்ட்ரியன், யூதர், இவர்களோடு கோவாவில் இருந்த  சேசு சபைக் கிறித்துவ சாமியார்கள் மூவர் -- இவர்கள் எல்லோரையும் அக்பர் தன் குழுவில் இணைத்தார். எல்லோரும் மரியாதையாக நடத்தப்பட்டனர். அக்பர் கிறித்துவ விவிலியத்தை மரியாதையோடு முத்தமிட்டார்.


இது மட்டுமல்லாது வேறு சிலவும் இஸ்லாமியருக்கு அக்பர் மேல் கோவம் கொள்ள ஏதுவாயிற்று. அதில் முதலாவதாக ”தவறா வரம்” என்ற ஒன்றினைக் கொணர்ந்தார். இஸ்லாமில் எழும் கேள்விகளுக்கு குரானின் துணையோடு அரசர் தரும் பதில் தவறாதது என்ற ஆணையைக் கொணர்ந்தார். அதோடு அபுல் பாஸ்லின் சகோதரர் Faisi இயற்றிய சில பாடல்களைப் பள்ளிவாசலில் மேடையேறி அக்பரே பாடினார்.


வங்காளத்தில் இருந்த முகமதிய குருமார்கள் அக்பருக்கு எதிராக ஒரு போராட்டத்தை ஆரம்பித்தார்கள். அந்த போராட்டத்தை முற்றாக அடக்கிய அக்பருக்கு இப்போது முழு சுதந்திரம் கிடைத்தது. இதைப் பற்றி V.Smith, ‘இஸ்லாமிய மதத்தின் மேலுள்ள தன் விருப்பமின்மையை அக்பர்  காண்பித்தார்’ என்று சொல்கிறார்.


அக்பர் அதுவரை வழங்கி வந்த கால அட்டவணையையும் புறக்கணித்தார். இஸ்லாமிய கால அட்டவணைக்குப் பதில். தன் அரசாட்சியின் காலத்தை வழங்குமாறு செய்தார். அதைவிடவும் அவர் வெளியிட்ட நாணயங்களில் ‘அல்லாஹூ அக்பர்’ என்ற சொற்கள் உண்டு. இது கடவுள் மிகப் பெரியவன் என்ற பொருளிலா, அக்பரே கடவுள் என்ற பொருளிலா என்ற ஐயம் பலருக்கும் எழுந்தது.


தன் ஆட்சிக்காலம் முழுமைக்கும் பெரும்பான்மையான இந்துக்களைப் புறந்தள்ளாதவாறு இருந்து வந்தார். ஓர் அரசன் தன் குடிமக்கள் அனைவரையும் ஒன்றாக நினைக்க வேண்டும் என்ற கருத்தோடு, இந்து, பார்ஸி இனத்தவரின் பண்டிகைகளில் ஈடுபட்டார். அக்பரின் கோட்பாடே பொதுவான சமய நல்லெண்ணம். இதனாலேயே எல்லா மதத்தினரும் மரியாதையோடும், மத சுதந்திரத்தோடும் இருக்க முடிந்தது. இந்துப் பெண் ஒருவரை மணந்தார். இந்துக்கள் பலரும் அரசியலின் உயர் பதவிகளில் அமர்த்தப்பட்டனர். இவரது ஆட்சியின் கீழுள்ள அம்பர், மார்வார், பிக்கானீர் அரசகுமாரர்கள் தங்கள் மதத்திலேயே இருக்க முடிந்தது. இந்த இளவரசர்கள் உயர்ந்த ஆட்சிப் பொறுப்பிலும், படைகளில் பெரும் பதவிகளிலும் இருக்க முடிந்தது.  (233)


AURANGZEB (1618 -1707) :
அம்பரின் கொள்ளுப் பேரனான ஒளரங்கஜேப் இதற்கு நேர் எதிரானவர். அவர் முழுமையான இஸ்லாமிய நம்பிக்கையாளர்.இவர் இஸ்லாமியத்தின் பழைய கட்டுப்பாட்டிற்குள் வாழ்ந்தவர். இவரது காலத்தில் இந்துக் கோவில்கள் அழிக்கப்பட்டன. 1679-80களில் உதய்ப்பூரில் 123 கோவில்களும், சித்தோரில் 63-ம், ஜெய்ப்பூரில் 66-ம்  அழிக்கப்பட்டன. இஸ்லாமியரல்லாதவர்கள் இரண்டாம் தர குடிமக்களாக தங்கள் நாட்டிலேயே ஆக்கப்பட்டனர்.


இந்துக்களுக்கு அக்பர் மிகப் பெரிய இஸ்லாமிய அரசராகவும், ஒளரங்கஜேப் மிக மோசமான அரசனாகவும் தெரிந்தது. இஸ்லாமியருக்கோ இதற்கு எதிர்மறையான கொள்கையாகவும் இருக்கும். (இப்போதைய இஸ்லாமியருக்கும் இதே கொள்கைதான் இருக்கும்! ) அக்பருக்கு இந்தியா ஒரு
இஸ்லாமியரல்லாதவரின்  நாடு என்பது தெரியும். ஒளரங்கஜேபுக்கு இந்தியாவும் ஒரு இஸ்லாமிய நாடுதான்.


**                                              **                                                 **

புத்த மதம்:
Edward Conze - 1000 முதல் 1200 வரை புத்த மதம் இந்தியாவிலிருந்து மறைந்தது. இதற்கான காரணங்களில் ஒன்று -  இஸ்லாமும் இந்துத்துவாவும் இணைந்த முயற்சியின் விளைவு அது. (224)


12வது நூற்றாண்டில் Qutb ud din Aibak என்ற ’இரக்கமற்ற, தீவிரவாதியான’ மன்னன் தன் படையின் தலைவனான  Muhammad Khilji -யை பீகாரை வென்று வர அனுப்பித்தான். அப்போது அங்கு புத்த மதமே தழைத்திருந்தது. புத்த சந்நியாசிகள் விக்கிரக ஆராதனை செய்பவர்கள் என்பதால் அவர்களை அவன் கொன்றொழித்தான். அதுவும் மட்டுமின்றி அங்கிருந்த பெரும் நூலகத்தை எரித்து அழித்தான். (இது இந்த மதத்தோடு பிறந்த வியாதியோ?)


                    **                                            **                                      **


திம்மி (dhimmis) - இஸ்லாமை நம்பாதவர்கள். இந்த திம்மிகளைப் பற்றிய  வரலாற்று நூல்கள் பல உண்டு.Norman Stillman என்பவரது நூல் The Jews of Arab Lands: A History and Source Book (1979).அந்நூலில் -- மத்திய கிழக்கில் அரேபியர்கள் நுழைந்தது மகிழ்ச்சிகரமான காரியமல்ல. இறப்புகளும் அழிவுகளும் பெருமளவில் நடந்தன. அந்நாட்டினரின் சொத்துக்கள் கொள்ளையடிக்கப்பட்டன; பலரும் கொல்லப்பட்டார்கள். ஜிஸ்யா, ஹராஜ் (jisya & kharaj ) என்ற இரு வரிகளும் வறுமையில் வாடிய விவசாயிகளுக்கு முதுகை முறிக்கும் பெருஞ்சுமைகளாக ஆகின. (226)


1165,1678-ல் யேமனில் யூதர்கள் , 1198-ல் ஏடனில் , 1291.1318-ல் டப்ரிஸில் (Tabriz) , 1333-1344-ல் பாக்தாதில் , 1617, 1622-ல் பெர்சியாவில் , 1653 -1666-ல் ஷா அப்பாஸ் காலத்தில் பெர்சியாவில்  - இந்த ஆண்டுகளில் யூதர்கள் இஸ்லாமிற்கு கட்டாய மத மாற்றம் செய்யப்பட்டார்கள். 


யூதர்களைத் தவிர கிறித்துவர்கள், இந்துக்கள், ஜோராஸ்ட்ரியன்கள், போன்ற மற்ற மதங்களிலிருந்தும் இஸ்லாமிற்கான கட்டாய மாற்றம் நடந்தன. 


 Lewis எழுதிய The Jews of Islam (1984) நூலில் ‘இஸ்லாமியருக்கும் அல்லாதாருக்கும் எப்போதும் ‘சம்நிலை’ என்பதே இல்லை. பாரம்பரிய இஸ்லாமிய சமூகங்களில் இந்த சமநிலை எப்போதும் கொடுக்கப்படுவதேயில்லை. (227)
                           
                                 **                                            **                                      **


முஸ்லீமல்லாதவர்களுக்கான தனி வரிகள்:
KHIRAJ -- நிலங்கள் உரிமையாளர்களிடமிருந்து பறிக்கப்பட்டு அந்த நிலங்களுக்கான வரியே இது. போரின் தோல்வியடைந்தவர்களுக்கு நிலத்தில் மேல் எந்த உரிமையும் கிடையாது என்பது இஸ்லாமியக் கோட்பாடு.


JISYA  --  குரன்  9:29-ல் சொல்லப்பட்ட இந்த வரியை தண்டிக்கும் முறை மிகக் கேவலமானது. 9:29-ல் சொல்லப்பட்டதற்கான விளக்கத்தில் இந்த வரி வரிகொடுப்பவனை மிகவும் தரம் தாழ்த்தி, வெட்கப்படுத்தி, கழுத்தில் ‘துண்டைப் போட்டு’ வரி கொடு என்று உரக்கக் கத்தி வசூலிக்க வேண்டும்.


மற்ற வரிகள்: வியாபார வரி, பயண வரி இதுபோன்ற பல வரிகள் திம்மிகளை நசுக்கப் பயன்பட்டன. 


எந்த திம்மியும் ஒரு இஸ்லாமியன் மேல் எந்த வித உரிமையையும் கோர முடியாது. குரான் 3:28 மூலம் திம்மிகளுக்கு எந்த வித சமூகப் பொறுப்பும் மறுக்கப்படும். 


ஆளுக்கொரு சட்டம்:  
* எந்த ஒரு வழக்கிலும் ஒரு இஸ்லாமியனுக்கு எதிரான  திம்மியின் எந்த சாட்சியமும் எடுபடாது. 
* இஸ்லாமியர்கள் திம்மிகளை விட மேம்பட்டவர்கள்.
* ஒரு இஸ்லாமியனுக்குச் சட்டப்படி ஏதேனும் தண்டம் விதித்தால், அந்தக் குற்றம் ஒரு திம்மிக்கு எதிரான குற்றம் என்றால் தண்டம் ஏதும் இல்லை.
* திம்மி ஒரு இஸ்லாமியனாக ஆனால் அவனது சாட்சி வழக்கில் கேட்கப்படும். (229)
* ஒரு இஸ்லாமியன் கிறித்துவ, யூதப் பெண்ணைக் கல்யாணம் செய்து கொள்ளலாம். ஆனால் ஒரு திம்மி ஒரு இஸ்லாமியப் பெண்ணைக் கல்யாணம் செய்யக்கூடாது. (இன்னும் இந்த வழக்கம் நமம ஊர்ல  இருக்கே. )
* ஒரு இஸ்லாமியனுக்கு ஏதாவது ஒரு குற்றத்திற்கான தண்டனை விதித்தால், அவன் அக்குற்றத்தை ஒரு திம்மிக்குச் செய்திருந்தால் அந்தக் குற்றம் பாதியாகக் குறைக்கப்படும்.
* தேவ தூஷணத்திற்கான எந்த சாட்சியும் நீதிமன்றங்களில் கேட்கப்படுவதில்லை. திம்மி தன் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள இஸ்லாமியனாவதே ஒரே வழி. (229)


* 717-720-ல் ஆட்சி செய்த உமார் அபிட் அல் அஸிஸ் (Umar b.Abd al-Aziz) 8-வது நூற்றாண்டில் திம்மிகளுக்கு விதிக்கப்பட்ட விதிகள் நிறைய ... எல்லாமே ரொம்ப interesting!(ஏறத்தாழ தலித்துகளுக்கு வேத காலத்தில் விதிக்கப்பட்ட விதிகளைப் போலவே நிறைய உள்ளன.) 
அவைகளில் ஒரு சில ...
* இஸ்லாமியர் வந்தால் எழுந்து நின்று மரியாதை தரவேண்டும்.
* குதிரையில் சேணம் இல்லாமல் ஓட்ட வேண்டும். (செருப்பு போடாதே என்று சில சாதியினரை இங்கே  இன்னும் சில “சாதி இந்துக்கள்” சொல்கிறார்களே, அதுபோல்.)
* எந்த வித ஆயுதங்களையும் வைத்திருக்கக் கூடாது.  
* தலையின் முன் முடியை சிறைத்திருக்க வேண்டும்.
* இஸ்லாமியரின் வீடுகளை விட பெரிதாகக் கட்டக் கூடாது ....... இப்படி இன்னும் பல ......... (230)


அடிமைப்படுத்துதல் .. இது ஒரு பெரிய நீண்ட அட்டவணை .. சில வரலாற்றுச் சான்றுகள் ---
* 881 - 7000 கிரேக்கர்கள்
* 903 - தெஸோலினிக்கா - 22,000 கிறித்துவர்கள்
*1064 -  ஜார்ஜியா, ஆர்மினியா ... திம்மிகள் அனைவரும் கொல்லப்பட்டார்கள்.


* 300 ஆண்டுகளாக கிறித்துவர்கள் மீது "devshirme" என்ற ஒரு சட்டத்தை சுல்தான் ஓர்க்ஹான் (1326-1359) ஏற்படுத்தினான்.  இதன் மூலம் கிறித்துவக் குழந்தைகளில் ஐந்தில் ஒரு பகுதியை கட்டாயமாக இஸ்லாமிற்கு மாற்றி அவர்களைப் போர்ப்படை வீரர்களாக மாற்றியுள்ளார்கள். ஒரு குறிப்பிட்ட நாளில் இஸ்லாமில் இல்லாதவர்கள் தங்கள் பிள்ளைகளோடு வந்து பொது இடத்தில் நிற்க வேண்டும். அதிலிருந்து பிள்ளைகளை இஸ்லாமியர்கள்  தேர்ந்தெடுத்துக் கொள்வார்கள். இதில் கையூட்டும் நிறைய நடந்ததாக வரலாறு சொல்கிறது. 1656-ல் இந்த சட்டம் நிறுத்தப்பட்டது. 


வணங்குமிடங்கள்:  
* 853-ல் காலிப் முட்டாவக்கில் எல்லா கிறித்துவ கோவில்களையும் தரைமட்டமாக்கினான்.
* 1321-. எகிப்தில் உள்ள எல்லா கிறித்துவ கோவில்களுக்கும் அதே கதி.
* ஆர்மீனியன் கிறித்துவர்கள் 704-705 ஆண்டுகளிலும், பின் 852-855 ஆண்டுகளிலும்  இஸ்லாமியரின் கட்டுக்குள் கஷ்டப்பட்டார்கள்.


ஒவ்வொரு நூற்றாண்டிலும் ஒவ்வொருவகையான பயங்கரங்கள் நிகழ்த்தப்பட்டன.
 8-ம் நூற்றாண்டு - சிந்துவில் ..
 9-ம் நூற்றாண்டு - ஸ்பெயின் கிறித்துவர்கள் ...
10-ம் நூற்றாண்டு - காலிப் அல் ஹக்கிமின் ஆளுகையில் திம்மிகள் ...
11-ம் நூற்றாண்டு - க்ரினடா, பெஸ் (Grenada & Fez) இங்குள்ள யூதர்கள் .... இதே காலத்தில் இந்துக்கள் இந்தியாவில் மகமுதுவினால் (Mahmud)  தொல்லையை அனுபவித்தார்கள்...
12-ம் நூற்றாண்டு - Almohads of North Africa தொல்லை கொடுத்தனர். 
13- நூற்றாண்டு - டமாஸ்கஸ் கிறித்துவர்கள்
14 & 15-ம் நூற்றாண்டு - பயங்கரவாதி  Timur the Lame - இவனது ’திருவிளையாடல்’ வரலாற்று ஆசிரியர்களையே பயத்தில் உறைய வைத்தது.
'Zafer Nameh'  என்ற நூலே தைமூரின் முரட்டுத்தனத்தை இன்றும் நமக்குப் புரிய வைப்பது. இந்நூலில் ‘குரானில் நம்பிக்கையில்லாதவர்களின் மீது படையெடுத்து அவர்களை அழிப்பவர்களுக்கு மிக மதிப்பான சுவனம் கிடைக்கும்’ என்பது சொல்லப்பட்டுள்ளது. தைமூர் இந்தியாவை ஆண்ட இஸ்லாமிய அரசர்கள் இந்துக்கள் மீது சிறிது இரக்கத்தோடு இருந்தது பிடிக்காது போயிற்று. அதற்காகவே அவன் இந்தியா மீது படையெடுத்து வந்தான். ஆயிரக்கணக்கான இந்துக்களைச் சிறைப் பிடித்த பின் அவர்களால் தன் படைகளுக்கு எதிர்ப்பு வரலாமென்ற அச்சத்தில் பிடிபட்ட அத்தனை இந்துக்களையும் சிரச்சேதம் செய்து, அவர்களின் தலைக்குவியலின் மீது தன் வெற்றிக் கொடியை நட்டான். 
                               
                           **                                              **                                                 **

ஜோராஸ்ட்ரியர்கள்: 'Tarikh-i Bukhara' 944-ல் Bukhara-வைப் பற்றி எழுதப்பட்ட நூலில் புக்காராவில் இருந்த மக்கள் ஒவ்வொரு முறை இஸ்லாமியப் படையெடுப்பை ஒட்டி இஸ்லாமுக்கு மதம் மாறுவார்கள். இவ்வாறு நான்குமுறை மதம் மாறிய மக்கள் உண்டு. 


Khurasan, Bukhara என்ற இடங்களில் உள்ள ஜோராஸ்ட்ரியர்களின் நெருப்புக் கோவில்கள் - fire temples -  முற்றிலுமாக அழிக்கப்பட்டு, மசூதிகள் கட்டப்பட்டன. 

ஈரானில் முதலில் நடந்த போர்களில் ஜோராஸ்ட்ரியர்கள் தோற்ற போது வழக்கமான உயிர்ச்சேதங்கள் நடந்தன. சான்றாக Raiy என்ற நகர் இஸ்லாமியரை எதிர்த்து நின்றது; ஆனால் மீதியாக உயிரோடு இருந்தது வெறும் சில மனிதர்களே. Sarakh என்ற நகரில் வெகு சிலர் மட்டும் மன்னிக்கப்பட்டனர். பெண்களும் குழந்தைகளும் இஸ்லாமியரிடம் ஒப்படைக்கப்பட்டனர். (235)
Sus என்ற நகரிலும் இதே நிகழ்வே நடந்தது.
Manadhir என்ற நகரிலும் ஆண்கள் வாளுக்கும், பெண்களும் குழந்தைகளும் அடிமையாக ஆனார்கள்.
Istakhr 40,000 ஈரானியர்கள் கொல்லப்பட்டார்கள்.
Kariyan, Kumm, Idhaj போன்ற நகரங்களிலும் நெருப்புக் கோவில்கள் எறிந்தன; அங்குள்ள குருமார்கள் கொல்லப்பட்டார்கள்.
ஜோராஸ்டரே நட்டதாகக் கருதப்படும் புனித மரத்தை காலிப் அல்-முட்டாவக்கில் வெட்டிச் சாய்த்தான்.


இதனால் ஜோராஸ்ட்ரியர்களும் சில முறை இஸ்லாமியரை எதிர்த்து நிற்கத் முனைந்தனர். Shirz நகரில் 979-ல் அத்தகைய போராட்டம் நடந்தது. ஆனாலும் இஸ்லாமியரின் அடக்குமுறையை எதிர்கொள்ள முடியாத ஜோராஸ்ட்ரியர்கள் ஈரானிலிருந்து இந்தியாவிற்குக் குடி பெயர்ந்தனர். பார்ஸி என்ற பெயரில் சிறுபான்மையராக இன்னும் பெருமையுடன் இந்தியாவில் உள்ளார்கள்.


17-ம் நூற்றாண்டிற்குப் பிறகு ஜோராஸ்ட்ரியர்களின் நிலை மிக மோசமானதாக இருந்தது. 18-ம் நூற்றாண்டில் ’Encyclopaedia of Islam' கூறுவது போல் அவர்கள் எண்ணிக்கையிலும் குறைந்து, மத மாற்றத்திற்கோ, அடுத்த நாட்டிற்குச் செல்வதற்கோ என்று தங்களைக் காப்பாற்றிக் கொண்டார்கள். 19-ம் நூற்றாண்டில் அவர்கள் பாதுகாப்பற்ற ஏழ்மை நிலையில் இருந்தனர்.(236)


ஆர்மீனியர்கள் :
Armenian Christians  ஆர்மீனிய கிறித்துவர்கள் இஸ்லாமியரின் தாக்குதலுக்கு அடிக்கடி ஆளானார்கள். 1894,1895, 1896-களில் நடந்த கொலைவெறித் தாக்குதல்களின் போது துருக்கிக்கும் ரஷ்யாவிற்கும் இருந்த மோசமான அரசியல் தொடர்புகளால், ஆர்மீனியர்கள் ரஷ்யாவிடம் தங்களுக்குப் பாதுகாப்பு வேண்டினார்கள். ஆனால் பயனில்லை. 2,50,000 ஆர்மீனியர்கள்  Sasun, Trapezunt, Edessa, Biredjik, Kharput, Niksar, Wan  போன்ற நகரங்களில் கொல்லப்பட்டார்கள். பல கிராமங்கள் சுத்தமாகத் தீக்கிரையாயின. தேவாலயங்கள் சூறையாடப்பட்டு, எரிந்தன.1896-ல் வெளிவந்த Revue Encyclopedique  என்ற நூலில் ’1894-1896 ஆண்டுகளில் நடந்த வெறிச்செயல்கள் திட்டமிடப்பட்டு நிறைவேற்றப்பட்டன’ என்கிறது.


1904, 1909- களில் 30,000 ஆர்மீனியர்கள் Adana என்ற நகரில் உயிரிழந்தனர். துருக்கியில் 1915-ல் நடந்த மனிதக் கொலைகள் இருபதாம் நூற்றாண்டின் மிகப்பெரிய இனக்கொலை என்று கருதப்படுகிறது. மொத்தம் பத்து லட்சம் ஆர்மீனிய கிறித்துவர்கள் கொல்லப்பட்டிருக்கலாம் எனக் கருதப்படுகிறது.


இந்தக் கொலைகள் எல்லாவற்றிற்குமே ’இஸ்லாமியர் அல்லாதாரை அழியுங்கள்’ என்று ’கடவுளே’ அளித்த கோட்பாடே காரணமாக உள்ளது. இந்தக் கொலைகளால் பயனடைந்தவர்கள் இஸ்லாமியரே. இதுதான் அவர்களது ஜிகாத்.(238)





**                                              **                                                 **






Monday, April 18, 2011

498. வரலாறு மிக முக்கியம், அமைச்சரே!

*



Total Scam Money (approx) Since 1992: 

                                                     Rs. 73000000000000 Cr.(73 Lakh Crore)

Hard to digest ?
Just check the below given details *

*
1992 -*Harshad Mehta securities scam Rs 5,000 cr*

1994 -*Sugar import scam Rs 650 cr*

1995 -*Preferential allotment scam Rs 5,000 cr
Yugoslav Dinar scam Rs 400 cr
Meghalaya Forest scam Rs 300 cr*

1996: -*Fertiliser import scam Rs 1,300 cr
Urea scam Rs 133 cr
Bihar fodder scam Rs 950 cr*

1997 -*Sukh Ram telecom scam Rs 1,500 cr
SNC Lavalin power project scam Rs 374 cr
Bihar land scandal Rs 400 cr
C.R. Bhansali stock scam Rs 1,200 cr*

1998 -*Teak plantation swindle Rs 8,000 cr*

2001 -*UTI scam Rs 4,800 cr
Dinesh Dalmia stock scam Rs 595 cr
Ketan Parekh securities scam Rs 1,250 cr*

2002 -*Sanjay Agarwal Home Trade scam Rs 600 cr*

2003 -*Telgi stamp paper scam Rs 172 cr*

2005 -*IPO-Demat scam Rs 146 cr
Bihar flood relief scam Rs 17 cr
Scorpene submarine scam Rs 18,978 cr*

2006 -*Punjab's City Centre project scam Rs 1,500 cr,
Taj Corridor scam Rs 175 cr*

2008 -*Pune billionaire Hassan Ali Khan tax default Rs 50,000 cr
The Satyam scam Rs 10,000 cr
Army ration pilferage scam Rs 5,000 cr
The 2-G spectrum swindle Rs 60,000 cr
State Bank of Saurashtra scam Rs 95 cr
Illegal monies in Swiss banks, as estimated in 2008 Rs 71,00,000 cr*

2009: -*The Jharkhand medical equipment scam Rs 130 cr
Rice export scam Rs 2,500 cr
Orissa mine scam Rs 7,000 cr
Madhu Koda mining scam Rs 4,000 cr"

SC refuses to quash PIL against Mayawati in Taj corridor scam
Orissa mine scam could be worth more than Rs 14k cr

CORRUPTION, MONEY LAUNDERING SCAM, Koda discharged from hospital, arrest
imminent

'A Cover-Up Operation':
"It's a scam involving close to Rs 60,000 crores"
Spectrum scam: How govt lost Rs 60,000 crore



India's biggest scams 1, Ramalinga Raju, Rs. 50.4 billion
India's biggest scams 2, Harshad Mehta, Rs. 40 billion
India's biggest scams 3, Ketan Parekh, Rs. 10 billion
India's biggest scams 4, C R Bhansali, Rs. 12 billion
India's biggest scams 5, Cobbler scam
India's biggest scams 6, IPO Scam
India's biggest scams 7, Dinesh Dalmia, Rs. 5.95 billion
India's biggest scams 8, Abdul Karim Telgi, Rs. 1.71 billion
India's biggest scams 9, Virendra Rastogi, Rs. 430 million
India's biggest scams 10, The UTI Scam, Rs. 320 million
India's biggest scams 11, Uday Goyal, Rs. 2.1 billion
India's biggest scams 12, Sanjay Agarwal, Rs. 6 billion
India's biggest scams 13, Dinesh Singhania, Rs. 1.2 billion


*

1, Jeep Purchase (1948) :*- Free India's corruption graph begins. V. K.
Krishna Menon, then the Indian high commissioner to Britain, bypassed
protocol to sign a deal worth Rs 80 lakh with a foreign firm for the
purchase of army jeeps. The case was closed in 1955 and soon after Menon
joined the Nehru cabinet.*

2, Cycle Imports (1951) :-* S.A. Venkataraman, then the secretary, ministry
of commerce and industry, was jailed for accepting a bribe in lieu of
granting a cycle import quota to a company.*

3, BHU Funds (1956) :-* In one of the first instances of corruption in
educational institutions, Benaras Hindu University officials were accused of
misappropriation of funds worth Rs 50 lakh.*

4, MUNDHRA SCANDAL (1957):-* It was the media that first hinted there might
be a scam involving the sale of shares to LIC, Feroz Gandhi sources the
confidential correspondence between the then Finance Minister T.T.
Krishnamachari and his principal finance secretary, and raised a question in
Parliament on the sale of 'fraudulent' shares to LIC by a Calcutta-based
Marwari businessman named Haridas Mundhra. The then Prime Minister,
Jawaharlal Nehru, set up a one-man commission headed by Justice M.C.Chagla
to investigate the matter when it becomes evident that there was a prima
facie case. Chagla concluded that Mundhra had sold fictitious shares to LIC,
thereby defrauding the insurance behemoth to the tune of Rs. 1.25 crore.
Mundhra was sentenced to 22 years in prison. The scam also forced the
resignation of T.T.Krishnamachari.*

6, Teja Loans (1960):-* Shipping magnate Jayant Dharma Teja took loans worth
Rs 22 crore to establish the Jayanti Shipping Company. In 1960, the
authorities discovered that he was actually siphoning off money to his own
account, after which Teja fled the country.*

7, Kairon Scam (1963):- *Pratap Singh Kairon became the first Indian chief
minister to be accused of abusing his power for his own benefit and that of
his sons and relatives. He quit a year later.*

8, Patnaik's Own Goal (1965) :-* Orissa Chief Minister Biju Patnaik was
forced to resign after it was discovered that he had favoured his
privately-held company Kalinga Tubes in awarding a government contract.*

9, Maruti Scandal (1974) :-* Well before the company was set up, former
Prime Minister Indira Gandhi's name came up in the first Maruti scandal,
where her son Sanjay Gandhi was favoured with a license to make passenger
cars.*

10, Solanki Exposé (1992) :- *At the World Economic Forum, Madhavsinh
Solanki, then the external affairs minister, slipped a letter to his Swiss
counterpart asking their government to stop the probe into the Bofors
kickbacks. Solanki resigned when India Today broke the story.*

11, Kuo Oil Deal (1976):-* The Indian Oil Corporation signed an Rs 2.2-crore
oil contract with a non-existent firm in Hong Kong and a kickback was given.
The petroleum and chemicals minister was directed to make the purchase.*

12, Antulay Trust (1981) :-* With the exposure of this scandal concerning
A.R. Antulay, then the chief minister of Maharashtra, The Indian Express was
reborn. Antulay had garnered Rs 30 crore from businesses dependent on state
resources like cement and kept the money in a private trust.*

13, HDW Commissions (1987) :-* HDW, the German submarine maker, was
blacklisted after allegations that commissions worth Rs 20 crore had been
paid. In 2005, the case was finally closed, in HDW's favour.*

14, Bofors Pay-Off (1987) :-* A Swedish firm was accused of paying Rs 64
crore to Indian bigwigs, including Rajiv Gandhi, then the prime minister, to
secure the purchase of the Bofors gun.*

15, St Kitts Forgery (1989) :- *An attempt was made to sully V.P. Singh's Mr
Clean image by forging documents to allege that he was a beneficiary of his
son Ajeya Singh's account in the First Trust Corp. at St Kitts, with a
deposit of $21 million.*

16, Airbus Scandal (1990) :-* Indian Airlines's (IA) signing of the Rs
2,000-crore deal with Airbus instead of Boeing caused a furore following the
crash of an A-320. New planes were grounded, causing IA a weekly loss of Rs
2.5 crore.*

17, Securities Scam (1992) :-* Harshad Mehta manipulated banks to siphon off
money and invested the funds in the stock market, leading to a crash. The
loss: Rs 5,000 crore.*

18, Indian Bank Rip-off (1992) :- *Aided by M. Gopalakrishnan, then the
chairman of the Indian Bank, borrowers-mostly small corporates and exporters
from the south-were lent a total of over Rs 1,300 crore, which they never
paid back.*

19, Sugar Import (1994) :- *As food minister, Kalpnath Rai presided over the
import of sugar at a price higher than that of the market, causing a loss of
Rs 650 crore to the exchequer. He resigned following the allegations.*

20, MS SHOES SCAM (1994) :- *Anyone who was old enough in 1994 to read will
remember the advertisements- tens of them intriguingly headlined: 'Who is
Pawan Sachdeva?' For the record, it was the peak of the public issued-led
advertising boom and the ads were created by the Delhi branch of
Rediffusion. Sachdeva, the promoter of MS Shoes, allegedly used company
funds to buy shares (of his own company) and rig prices, prior to a public
issue. He is alleged to have colluded with officials in the Securities
Exchange Board of India (SEBI) and SBI Caps, which lead-managed the issue,
to dupe the public into investing in his Rs. 699-crore public-***-rights
issue. Sachdeva was later acquitted*

21, JMM Bribes (1995) :-* Jharkhand Mukti Morcha leader Shailendra Mahato
testified that he and three party members received bribes of Rs 30 lakh to
bail out the P.V. Narasimha Rao government in the 1993 no-confidence motion.
*

22, In a Pickle (1996) :-* Pickle baron Lakhubhai Pathak raised a stink when
he accused former Prime Minister P.V. Narasimha Rao and godman Chandraswami
of accepting a bribe of Rs 10 lakh from him for securing a paper pulp
contract.*

23, Telecom Scam (1996) :-* Former minister of state for communication Sukh
Ram was accused of causing a loss of Rs 1.6 crore to the exchequer by
favouring a Hyderabad- based private firm in the purchase of telecom
equipment. He, along with two others, was convicted in 2002.*

24, Fodder Scam (1996) :-* The accountant general's concerns about the
withdrawal of excess funds by Bihar's animal husbandry department unveiled a
Rs 950-crore scam involving Lalu Prasad Yadav, then the state chief
minister. He resigned a year later.*

25, Urea Deal (1996) :- *C.S. Ramakrishnan, MD, National Fertiliser, and a
group of businessmen close to the P.V. Narasimha Rao regime fleeced the
government and took Rs 133 crore from the import of two lakh tonne of urea,
which was never delivered.*

26, Hawala Diaries (1996) :-* The scandal surfaced following CBI raids on
hawala operators in Delhi in 1991. But it was S.K. Jain's diaries that had
heads rolling.*

27, CRB SCAM (1997) :-* Another scam forged by greed and discovered through
accident. Chain Roop Bhansali, a smart-talking entrepreneur, created a
pyramid financial empire based on high-cost financing. At its peak, his Rs.
1,000-crore financial conglomerate had in its ranks a mutual fund, a
financial services company into fixed deposits, and a merchant bank. That
Bhansali knew how to work the system became evident when he also managed to
secure a provisional banking license. Then his luck ran out. An executive in
the State Bank of India Inadvertently discovered that some interest warrants
issued by Bhansali were not backed by cash. The bubble finally burst in May
1997, but by that time investors had lost over Rs. 1,000 crore. This was
among the first retail scams in India and it was played out, in smaller
avatars, across the country-especially in the South where financial services
companies promised returns in excess of 20 per cent and decamped with the
principal. Bhansali was arrested for a few weeks and released later on bail.
*

28, MEHTA'S SECOND COMING (1998) :- *The Big Bull returned to the bourses.
This time, he allegedly colluded with the promoters of BPL, Videocon
International, and Sterile Industries to rig the share prices of these
companies. The inevitable collapse happened sooner than planned, Harshad
Mehta orchestrated a cover-up operation that included a high=jinks effort by
officials of Bombay Stock Exchange to (illegally ) open the trading system
in the middle of the night to set things right, but the damage had been
done. SEBI finally passed its ruling on the scam in 2001, banning the three
companies concerned from tapping the market-BPL, for two years. Mehta was
debarred for life form dealing in Securities Appellate Tribunal (SAT) in
October 2001*

29, VANISHING COMPANIES SCAM (1998) :-* A passing remark heard by then
Finance Minister Palaniappan Chidambaram resulted in a furore over what was
badly-kept secret on Dalal street. Chidambaram was told that hundreds of
companies had disappeared after raising moneys form the public. An informal
scrutiny revealed that perhaps over 600 companies were missing. Chidambaram
ordered a probe by SEBI. The SEBI probe conducted in May 1998 revealed that
while many companies are not traded on the bourses at least 80 companies
that had rises Rs.330.78 crore were simply missing. Later that year, the
Department of Company Affairs (DCA) was asked to probe and penalize these
companies. DCA still investigating. Investigations continue to this day.*

30, PLANTATION COMPANIES SCAM (1999) :-* It was as innovative a swindle as
any effected in the world. Savvy entrepreneurs convinced gullible investors
that given the right irrigation and fertilizer inputs, teak, strawberries,
and anything else that could be grown, would grow anywhere in the country.
The promoters could afford to collect money from investors and not worry
about retribution (or returns, for that matter). For, plantation companies
fell under the purview of neither SEBI nor Reserve Bank of India. Indeed,
they didn't even come under the scope of the Department decided to change
things in 1999, enough investors had been gulled: 653 companies, between
them, had raised Rs. 2,563 crore from investors. To date, not many investors
have got their principals back, just another affirmation of the old saying
about money not growing on trees.*

31, Match Fixing (2000) :-* Mohammed Azharuddin, till then India's cricket
captain, was accused of match-fixing. He and Ajay Sharma were banned from
playing, while Ajay Jadeja and Manoj Prabhakar were suspended for five
years.*

32, KETAN PAREKH SCAM (2001) :-* Ketan Parekh's modus operandi wasn't very
different from Harshad Mehta's. If Mehta used banker's receipts, then Parekh
used pay orders to ramp up the prices of his favourite scrips (the K-10).
Apart from money form the banking system Parekh also rerouted money from
corporated like HFCL (Rs. 425 crore), and Zee (Rs. 340 crore) to good
effect. He was caught when pay-orders issued by Madhavpura Mercantile
Cooperative Bank bounced. Although the total amount involved in the scam was
just Rs. 137 crore, the impact was far greater.

Apparently, when a bear cartel sensed Parekh was in trouble, it stepped in
and leveraged a dip in the NASDAQ to bear down stock prices. The resultant
slump in the markets happened soon after Finance Minister Yashwant Sinha
presented what he considered his best budget ever. Under pressure from the
government, SEBI investigated the scam and heads began to roll. Among them:
the entire management team of BSE, including its president Anand Rathi,
CSFB, First Global, and, in an indirect connection, P.S.Subramanyam, the
Chairman of UTL Evidently, for the 18 months that PSS was Chairman of UTI,
the Trust had mirrored the actions of the bull cartel. The result? When the
market tanked, so did the NAV of its holy cow, the US-64.*

33, Tehelka Sting (2001) :-* Tehelka, an online news portal, used spycams to
catch army officers and politicians accepting bribes, in their sting
operation called Operation Westend. Investigative journalism turned another
corner in the country.*

34, Stockmarket Scam (2001) :-* The mayhem that wiped off over Rs 1,15,000
crore in the markets in March 2001 was masterminded by the Pentafour bull
Ketan Parekh. He was arrested in December 2002 and banned from acccessing
the capital market for 14 years.*

35, Home Trade Scam (2002) :-* Under the pretext of gilt trading, Rs 600
crore was swindled from over 25 cooperative banks in Maharashtra and Gujarat
by a Navi Mumbai-based brokerage firm Home Trade. Sanjay Agarwal, CEO of the
firm, was arrested in May 2002.*

36, Stamp Paper Scam (2003) :- *The sheer magnitude of the racket was
shocking-it caused a loss of Rs 30,000 crore to the exchequer. Disclosures
of the mastermind behind it, Abdul Karim Telgi, implicated top police
officers and bureaucrats.*

37, Oil-for-Food Scandal (2005) :- *K. Natwar Singh was unceremoniously
dropped from the Cabinet when his name surfaced in the Volcker Report on the
Iraq oil-for-food scam.

*What India Could Do With Rs 73 Lakh Crore?*

*
Build:* 2.4 crore primary healthcare centres. That’s at least 3 for every
village, at a cost of Rs 30 lakh each.*

Build:* 24.1 lakh Kendriya Vidyalayas at a cost of Rs 3.02 crore each, with
two sections from Class VI to XII.*

Construct:* 14.6 crore low-cost houses assuming a cost of Rs 5 lakh a unit.
Set up: 2,703 coal-based power plants of 600 MW each. Each costs Rs 2,700
crore.*

Supply: *12 lakh CFL bulbs. That’s enough light for each of India’s 6 lakh
villages*

Construct:* 14.6 lakh km of two-lane highways. That’s a road around India’s
perimeter 97 times over.*

Clean up:* 50 major rivers for the next 121 years, at Rs 1,200 crore a river
every year.*

Launch:* 90 NREGA-style schemes, each worth roughly Rs 81,111 crore.
Announce: 121 more loan waiver schemes. All of them worth Rs 60,000 crore.*

Give: *Rs 56,000 to every Indian. Even better, give Rs 1.82 lakh to 40 crore
Indians living BPL.*

Hand out:* 60.8 crore Tata Nanos to 60.8 crore people. Or four times as many
laptops.*

Grow the GDP:* The scam money is 27% more than our GDP of Rs 53 lakh crore."

*
Greed, graft, politics, bribery, dirty money. Just another day in the life
of a nation still rated among the most corrupt in the world. Scan the scams
that have grabbed headlines, destroyed reputations and left many people
poorer.*

*Action Points :- *

1) Don't Delete this email, Circulate as much as you can!!

2) Take a resolution from Year 2011 that you don’t vote for any corrupt
Leader!!





Friday, April 15, 2011

497. ராஜ பக்சேவிற்கு உங்கள் ஓட்டைப் போடுங்கள் - தவறாமல்

*
 எனக்கு வந்த மெயில் ஒன்று.


சகோதர/சகோதரிகள் அனைவருக்கும், 

அஸ்ஸலாமு அலைக்கும், (உங்கள் மீது ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...ஆமீன்)

ஒரு இனத்தை கொடுமைக்குள்ளாக்கிய ராஜபக்ஸேவை எதிர்த்து ஓட்டளியுங்கள். உலகின் 100 ஆற்றல்மிக்கவர்கள் வரிசையில் வர விடாமல் தடுங்கள்.




நன்றி, 

உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹ்மத் அ


Image and video hosting by TinyPic



நானும் அப்பக்கத்தை உடனே புரட்டிப் பார்த்தேன். நான் பார்க்கும் போது நிலைமை மிக மோசமாகத் தெரிந்தது.
அவர் influential என்று ஆதரவாக 70115 ஓட்டுக்களும், அவரை எதிர்த்து வெறும் 17762 ஓட்டுக்களும் இருக்கின்றன.

வாசிக்கும் பதிவர்களை அனைவரும் கீழ்வரும் பக்கத்திற்குச் சென்று உங்கள் வாக்குகளை நன் முறையில் இட்டு இரண்டாம் எண்ணிகையை மேலே வரும்படிச் செய்ய கேட்டுக் கொள்கிறேன்.

http://www.time.com/time/specials/packages/article/0,28804,2058044_2060338_2060246,00.html?xid=fb-time100

இதே வேண்டுகோளுடன்:

http://pattapatti.blogspot.com/2011/04/blog-post_5962.html

http://krpsenthil.blogspot.com/2011/04/blog-post_14.html

http://arulgreen.blogspot.com/2011/04/blog-post_16.html

மணி: இரவு 9.23
கடந்த 9 மணி நேரத்தில் 5000 ஓட்டுகள் அவனுக்குச் சாதகமாகவும், 3700 ஓட்டுகள் பாதகமாகவும் விழுந்துள்ளன.
நாடே அவன் பின்னால் நிற்கிறது போலும்.

அடுத்த நாள் - 16.04.11
சாதகமான எண்ணிக்கை: 92,076
பாதகமான எண்ணிக்கை: 23352

Wednesday, April 13, 2011

496. WHY I AM NOT A MUSLIM ... 14

*




ஏனைய முந்திய பதிவுகள்:
பதிவு - 7
பதிவு - 8
பதிவு - 9
பதிவு - 10
பதிவு - 11
பதிவு - 12
 பதிவு: 13

இப்பதிவு:  14


Image and video hosting by TinyPic


CHAPTER  9

THE ARAB CONQUESTS AND THE 
POSITION OF NON-MUSLIM SUBJECTS

அரேபியரின் வீர சாகசங்களும்
இஸ்லாமியரல்லாத மக்களின் நிலையும்

குரானில் கிறித்துவர்களும் யூதர்களும்:
5 : 51 - நம்பிக்கையாளர்களே! யூதர்களையும், கிறித்துவர்களையும் நண்பராகக் கொள்ளாதீர்கள். (அட! ஒரு கடவுள் தன்னை நம்புகிறவர்களுக்குக் கொடுக்கிற அறிவுரை இப்படியும் கூட இருக்குமா? அடக் கடவுளே!! )

5 : 56 - 64 - உங்களுக்கு முன் வசனங்களைப் பெற்ற யூதர்களையும், கிறித்துவர்களையும், நம்பாதவர்களையும் உங்கள் நண்பராக்கிக் கொள்ளாதீர்கள். (216)

600 - 900 Banu Qurayza மக்களையும், வரலாறுகளில் மறைக்கப்படும் Nadir-களைக் கொன்ற விவரங்களும் எவ்வித இரக்கமோ நற்பண்போ வெளிப்படாத முகமதுவைக் காண்பிக்கின்றன.

முகமது Khaybar-ன் பாலைவனப் பசுஞ்சோலைகளில் யூதர்களை எதிர்த்து 628-ம் ஆண்டு நடத்திய போரில் வென்று அதன் தலைவனைக் கொடுமைப்படுத்தி மறைத்து வைக்கப்பட்ட செல்வங்களைக் கொள்ளையடித்த பின், அந்த யூதர்களோடு ஓர் உடன்படிக்கை செய்கிறார். தோல்வியடைந்த யூதர்கள் தங்கள் நிலங்களில் தாங்களே சாகுபடி செய்யலாம். ஆனால் விளைந்ததில் சரி பாதியை முகமதுவிடம் ஒப்படைத்து விட வேண்டும். ஆனாலும் இந்த ஒப்பந்தத்தை எப்போது வேண்டுமானாலும் முகமது முறித்துக் கொள்ளலாம். இந்த ஒப்பந்தத்தின் பெயர் ‘திம்மா’. இந்த ஒப்பந்தத்தை ஒத்துக் கொண்டோர் ‘திம்மிகள்’. எல்லா இஸ்லாமியரல்லாதவர் இந்த ஒப்பந்தத்தின் மூலம் இஸ்லாமியரின் உயர்வை ஒத்துக் கொள்பவர்களாகவும், இஸ்லாமியரின் பாதுகாப்பிற்குக் கீழ் வருபவர்களாகவும் கருத்தப்பட்டார்கள். ( தமிழ்ப்பட தண்டல் வசூல்காரர்கள் மாதிரி போலும் !! )

இரண்டாம் கலிபாவான உமர் இந்த திம்மி சட்டத்தை 640-ல் முறித்து, யூதர்களையும், கிறித்துவர்களையும் ஹிஜாஸ் (மெக்கா, மெதீனாவைச் சார்ந்த இடங்கள்) பகுதியிலிருந்து வெளியேற்றுகிறார். இதற்காக அவர் முகமதுவின் புகழ் வாயந்த வாசகமான ‘அரேபிய தீபகற்பகத்துக்குள் இரு மதங்கள் இணைந்திருக்க முடியாது’ என்பதை மேற்கோளிடுகிறார். ( இந்தக் கொள்கைகளைத்தான் இன்றும் இஸ்லாமிய நாடுகள் பின்பற்றுகிறார்கள் போலும். அடுத்த நாட்டில் அவர்களின் உரிமைகளை நிலை நாட்டும் இஸ்லாமியர் தங்கள் நாட்டில் அந்நிய நாட்டினருக்கு எந்த வித உரிமையையும் இதனால்தான் அளிப்பதில்லை.) இதனால்தான் இன்றும் சவுதி அரேபியாவில் மற்ற மதங்களுக்கு எந்த இடமும்இல்லை. ( நல்ல நியாயம்யா இது

JIHAD :

 இஸ்லாமின் முழு ஆளுமை அவர்களது ஜிகாட் -  புனிதப் போர் -  என்ற தத்துவத்தில்தான் நன்கு தெரியும். முழு உலகையும் வென்று அல்லாவின் சட்டத்திற்குள் கொண்டுவருவதே அவர்களின் நோக்கம். இந்த மார்க்கம் மட்டுமே ஆன்மா உய்விப்பதற்கான வழி. 

ஜிகாட் என்பது ஒரு தெய்வீக உத்தரவு. இஸ்லாமைப் பரப்புவதற்கென்றே ஆன ஓர் ஆணை.. இஸ்லாமியர்கள் கடுமையாக முயற்சிக்க வேண்டும். தெய்வத்தின் பெயரில் அது உழைப்பின் மூலமாகவோ, போரிடுவதாலோ, எதிரிகளைக் கொல்வதாலோ இருக்கலாம்.

9 : 5-6 - ... இறைவனுக்கு இணைவைப்போரை நீங்கள் எங்கு கண்டாலும் கொன்று விடுங்கள்; மேலும் அவர்களைச் சிறைப்பிடியுங்கள்;  அவர்களை முற்றுகையிடுங்கள்; ......

4 : 76  - ஷைத்தானின் தோழர்களுடன் போர் புரியுங்கள்.

8 : 12 -  ...நிராகரிப்பாளர்களின் உள்ளங்களில் பீதியை ஏற்படுத்தி விடுகின்றேன்.  
 எனவே,. நீங்கள் அவர்களுடைய பிடரிகளில் தாக்குங்கள். அவர்களின் ஒவ்வொரு விரல் மூட்டுகளிலும் அடியுங்கள்.

8 ; 39-42 -  குழப்பம் இல்லா தொழிந்து தீன் முழுவதும் அல்லாஹ்வுக்கே உரித்தானதாகும் வரை நீங்கள் இந்நிராகரிப்பாளர்களுடன் போர் புரியுங்கள். .. அவர்கள் புறக்கணித்தால், அல்லாஹ் உங்கள் பாதுகாவலனாக இருக்கின்றான் .... 

ஒரு இஸ்லாமியன் இதுபோன்று நம்பிக்கையற்றவர்களின் மீது தொடுக்கும் போரில் விலகி நின்றால் அவன் மிகப்பெரிய பாவத்தைச் செய்கிறான். அவன் நிச்சயமாக நரகத்தில் வறுத்தெடுக்கப்படுவான். (217)

8 : 15-16 -  ... நீங்கள் படையாகத் திரண்டு சென்று இறை நிராகரிப்பவர்களுடன் போரிட நேர்ந்தால், அவர்களுக்குப் புறமுதுகு காட்டி ஓடாதீர்கள். ... அந்நாளில் புறமுதுகு காட்டி ஓடினால், ... திண்ணமாக அல்லாஹ்வின் கோபத்திற்கு ஆளாகி விடுவர். 

9 : 39 -  நீங்கள் இறை வழியில் புறப்படவில்லையாயின், அல்லாஹ் உங்களுக்குத் துன்புறுத்தும் தண்டனை அளிப்பான்.

4 : 74 -  இவ்வுலக வாழ்வை விற்று மறுமையைப் பெற விரும்புவோர் அல்லாஹ்வின் வ்ழையில் போர் புரியட்டும். பிறகு யார் அல்லாஹ்வின் வழியில் போர் புரிந்து கொல்லப்பட்டாலும் சரி, அல்லது வெற்றி பெற்றாலும் சரி, அவருக்கு உறுதியாக மகத்தான கூலியை நாம் வழங்குவோம். 

மேற்கூறிய மேற்கோள்களிலிருந்து குரானில் இவைகளெல்லாம் உருவகமாகச் சொல்லப்பட்டதல்ல; ஆனால் உண்மையிலேயே போர்ர்களங்கள் பற்றித்தான் பேசுகிறது.

இப்படிப்பட்ட ரத்த வெறியடிக்கும் வசனங்கள் ஒரு சமயத்தின் தூய புத்தகத்தில் இருப்பதைப் பார்க்கும் போது அது மிக  அதிர்ச்சியளிப்பதாக இருக்கிறது.

மனித குலமே இரு வகையாக உள்ளன. ஒன்று, இஸ்லாமிய சமூகத்தினரால் ஆனது. இவர்கள் எல்லோரும்  உம்மா; இவர்களுக்கு ‘இஸ்லாமிய உலகம்’ சொந்தமானது.(Dar al-Islam - Land of Islam).  மற்ற இனம் இஸ்லாமியரல்லாதவர்கள்; இவர்களுக்கான பெயர்: ஹர்பி (Harbi ) இவர்களின் இடம் போர்க்களத்தின் இடம். (Dar al-Harb - Land of Warfare) (218)