Showing posts with label மதுரை. Show all posts
Showing posts with label மதுரை. Show all posts

Tuesday, February 14, 2012

553. நானும் photography-யும் .... 7 - ஒச்சப்பனும் நானும்




*
ஒச்சப்பனின் MAGIC

*

நான் கெடுத்த படம்
ஒச்சப்பன் சீர்திருத்தி கொடுத்த படம்


ஒச்சப்பனின் MAGIC-ல் வளர்ந்த எனது இரு படங்கள் ....



*

552. நானும் photogrphy-யும் ... 6 & "ஒச்சப்பனும் நானும்"





*
"ஒச்சப்பனும் நானும்"



இரு ஆண்டுகளுக்கு முன்பே ஒச்சப்பன் என்ற பெயரை இணையத்தில் பார்த்தேன். நிழல்படக்காரர். அவரது படங்கள், மதுரையை மிகவும் ரசித்து எடுக்கப்பட்ட படங்களின் தொகுப்பாக, ஒவ்வொரு படமும் ஒரு கதை சொல்லிக்கொண்டு இருந்தன. வண்ணக் கலவைகளும், படம் சொல்லும் 'கதைகளும்', வாழ்வியல் படங்களும், நம் நாடும், நம் ஊரும், நம் மக்களும் வித விதமாக அவர் படங்களில் தோன்றினார்கள். candid  போட்டோக்கள் நிறைய. pose கொடுக்கும் படங்களில் கூட மக்கள் இயற்கையாக candid-ஆகத்   தோன்றினார்கள். மக்களின் வாழ்வியலோடு படம் எடுப்பது வித்தியாசமாக இருந்தது. 

அவர் படங்களை C & P செய்ய முடியாது. ஆகவே அவரது வலைப்பூவைப் பார்த்து வாருங்கள் ... http://www.oochappan.be/ 

இல்லாவிட்டால் அவரின் சில படங்களை இங்கு பாருங்கள்

http://www.pbase.com/oochappan/image/139709681 

ஒரு நாடகமே அல்லவா இங்கே நடக்கிறது. அதில் நாமும் நடிகர்களாக இருப்பதுபோல் தோன்றுகிறது!



http://www.pbase.com/oochappan/image/139709678 

சிகப்பு-மஞ்சள் குவியலுக்குள் ...

 நடுவில் அந்த எவர்சில்வர் பாத்திரம் கண்ணைச் சிமிட்டுகிறதே....

http://www.pbase.com/oochappan/image/131985122   
நவ ரசங்கள் ...

http://www.pbase.com/oochappan/image/140769267 

இப்படத்தை எடுத்த நிமிடம்:  ஒச்சப்பனோடு நானும் ரவியும் சேர்ந்து ஒரு சின்ன சந்தில் சென்று கொண்டிருந்தோம். ஒரு பள்ளியின் பின்பக்க தகரக் கதவு  ஒன்றின் வழியே ஒரு சின்னப் பெண் வெளியே இருந்த கடைக்காரரிடம் ஏதோ தின்பண்டம் வாங்கிக் கொண்டிருந்தாள். நானும் ரவியும் உடனே எங்கள் manual modeல் இருந்த எங்கள் பெட்டிகளைத் தூக்கி, என்ன diaphragm .. shutter .. என்று யோசித்து வைப்பதற்குள் பாப்பா காணாமல் போய்விட்டது. ஆனால், ஒச்சப்பன் அந்தப் படத்தை ஏற்கெனவே எடுத்து விட்டிருந்தார்.



இதுபோல் இடங்களில் பொட்டியை auto mode-ல் அல்லது  program mode-ல் வைத்திருக்க வேண்டும். அப்போதுதான் எந்த வினாடியும் வீணாக்காது ஒரு படத்தை உடனே எடுக்க முடியும் என்றார்
.

http://www.pbase.com/oochappan/image/133248700
எங்கிருந்தோ வரும் 'தேவனுடைய ஒளிக்கதிர்கள்' மாதிரி இல்லை ...?!



சரி ... யாரோ நம்மூர்க்காரர் இப்போது வெளிநாட்டிலிருந்து இங்கு வந்து தன் நகரத்தின் அழகுகளைப் படம் பிடிக்கிறார் என்றுதான் முதலில் நினைத்தேன். இந்த ஆண்டு ஆரம்பத்தில் இன்னொரு நிழல்பட நண்பன் இவரைப் பற்றிய முன்னுரை கொடுத்து, இப்போது மதுரையில், அதுவும் எங்கள் கல்லூரிக்குப் பக்கத்திலேயே தங்கி இருக்கிறார் என்றான். இவர் பெல்ஜியம் நாட்டைச் சேர்ந்தவர்; ஒச்சப்பன் என்பது அவரது புனைப்பெயர்; மதுரைக்குத் தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் வருகிறார் என்பது போன்ற செய்திகள் கிடைத்தன.

யாதும் ஊரே ....
யாவரும் கேளிர்

மயிலில் தொடர்பு கொண்டேன். வரச் சொல்லியிருந்தார்.   முதல் முறை மதுரை வந்த போது கோடை செல்லும் பேருந்தில் அருகிலிருந்த ஒருவரிடம் பேசிக்கொண்டிருந்திருக்கிறார். அவர் மூன்று சக்கர சைக்கிள் ஓட்டி பிழைக்கும் சாதாரண மனிதர். அவரின் பெயர் ஒச்சப்பன். அவரோடு நெருக்கமாகி, அவரது பெயரையே தனக்குப் புனைப்பெயராக வைத்துக் கொண்டுள்ளார். இன்றும் வரும் ஒவ்வொரு ஆண்டும் அவரைச் சந்தித்து நட்பை தொடர்ந்து கொண்டிருக்கிறார்.


அடுத்த நாள் மதுரையில், தங்கியிருக்குமிடத்திற்கருகில் படம் எடுக்கலாம் என்றார். அடுத்த நாள் நானும் பொட்டியோடு சென்றேன். நண்பன் ரவியும் என்னோடு சேர்ந்து கொண்டான். மூவரும் ஆளுக்கொரு பொட்டியோடு கரிமேட்டு சந்தை, பக்கத்திலுள்ள கடைகள், சந்து பொந்துகள் என்று சென்று வந்தோம். (அந்தப் படங்கள் பின்னால் அடுத்த பதிவுகளில் வரும்.)


நாம் பொட்டியோடு போனால் விரட்டியடிக்கும் நம்மூர் மக்கள் இவரோடு போனால் இன்முகத்தோடு ஒத்துழைத்தார்கள். படமெடுக்கத் தடையேதுமில்லை.

HOME WORK செஞ்சிட்டியா ...?

அடுத்த நாள் பக்கத்து கிராமங்கள் சிலவற்றிற்குச் செல்ல ஏற்பாடானது. அன்று காலையிலேயே புறப்பட்டு சில கிராமங்களுக்குச் சென்றேன். எனக்கு அவைகள் புது இடமாக இருந்தன. ஆனால் ஒச்சப்பனுக்கு எல்லாம் மிகப் பழகிய இடங்கள். இடங்கள் மட்டுமல்ல .. அங்குள்ள மக்களுக்கு அவர் மிகவும் தெரிந்தவராக, நண்பராக இருந்தார்.


கீழக்குயில் குடி என்ற ஊரில் ஏறத்தாழ முழு கிராமமுமே அவருக்கு மிகவும் பழகிப் போயிருந்தது. ஒவ்வொரு சந்தும் அவருக்குப் பழகிப் போயிருந்தன. மக்களிடம் அவரது மழலைத் தமிழுக்கு ஏகப்பட்ட வரவேற்பு.


படம் எடுக்கும்போது சில பாடங்களையும் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தார். எனக்கு எப்போதும் profiles எடுப்பது பிடிக்கும். ஆனால் வெறும் முகம் மட்டும் இருந்தால் அது 'கதை ஏதும் சொல்லாது'; அந்தப் படங்களோடு பின்னணி போன்று ஏதாவது இருக்க வேண்டுமென்றார். முந்திய நாள் படம எடுக்கும்போதுகூட அதே போல் சில clues  கொடுத்தார். தலைக்கு மேல் பொட்டியைத் தூக்கி வைத்து படங்களை எடுப்பது journalists' style என்று நினைத்துக் கொண்டிருந்தேன். அப்படியில்லை என்றார். நானும் ஒரு சில படங்களை அது போல் எடுத்தேன். எடுத்தவைகளில் ஒரு படம நன்கு வந்திருப்பதாகச் சொன்னார்.


அவர் சொன்னவை போல் எடுத்த படங்களைப் பின்னால் அடுத்த பதிவில் சேர்க்க எண்ணியுள்ளேன்.

CONTEMPORARIES



வட கிடச்சிருச்சே ..!

*
படங்களை எடுத்த பின் இன்னொரு நாள் post production session. அப்போது தான் ஒச்சப்பனின் magic புரிந்தது. ஒவ்வொரு படத்திற்கும் வெகுநேரம் எடுத்து அவைகளைச் சீர்படுத்துகிறார். அவர் செய்யும் முறையைக் கற்றுக் கொள்ள என் மூளை மிகவும் மறுத்து அட்டகாசம் செய்தது. ஏதோ கொஞ்சம் கொஞ்சம் தெரிந்து கொண்டேன். இனி பயிற்சியில் அவைகளை வளர்க்க வேண்டுமாம் ..
(கடவுளே...! நமக்கு எந்தக் கலையும் களவு படாது என்று அந்தக் கடவுளே என் தலையில் எழுதிட்டார் போலும்!!) ஒவ்வொரு சின்ன மாற்றங்களையும் மிக உன்னிப்பாகப் பார்த்து சீர் செய்கிறார். ஏற்படும் அந்தச் சின்ன மாற்றங்களை மிக உன்னிப்பாகப் பார்த்தால் தான் எனக்கு வித்தியாசமே புரிந்தது. .... பழகணும் :(


டீக்கடை with flash ...
ஒரு டீக்கடை. எங்களுக்காக டீ போட்டார். ஒரு படம் எடுத்திரலாமேன்னு ரெண்டு மூணு முயற்சித்தேன். கடையின் உட்பகுதி மிகவும் இருட்டாகப் போச்சு. சரின்னு ஒரு flash போட்டு ஒரு படம் எடுத்தேன். வெளிச்சம் வந்ததும் ஒச்சப்பன் என்னைப் பார்த்தார். அவருக்கு அது பிடிக்கவில்லை. வீட்டிற்கு வந்து படங்களைப் பார்த்துக் கொண்டிருந்தோம். flash பிடிக்காதோ என்றேன். ஆமாம் என்றார்.
ஆனால் படங்களை வரிசையாகப் பார்த்தவர் இந்தப் படத்தைப் பார்த்து, உள்ளே கையில் இலையோடுஉட்கார்ந்திருக்கும் ஆளைப் பார்த்ததும் அந்த சின்ன மாற்றத்திற்காக இந்தப் படத்தையும் போனால் போகுதென்று 'நல்ல படங்கள்' என்று எடுத்துப் போட்ட என் folder-ல் சேர்த்துக் கொண்டார்.

*
அம்மாடி ...HEAVIEST smoker!!!

Friday, February 10, 2012

551. "வடக்கு வாசல்" இதழில் என் கட்டுரை: 1833 B.C.

*
தில்லியிலிருந்து வரும் "வடக்கு வாசல்" இதழில் வெளிவந்த என் கட்டுரை - 1833 B.C. அதனை இங்கு மீள்பதிவு செய்வதில் மகிழ்ச்சியடைகிறேன்..



*
கட்டுரையைப் பதிவிட்ட வடக்கு வாசலுக்கு மிக்க நன்றி.
*

Wednesday, October 06, 2010

444. தருமியின் சின்னச் சின்ன கேள்விகள்

*
செல்லூர் ரோடு. நித்தம் நித்தம் கல்லூரிக்குச் சென்ற வழி; ஓய்வு பெற்ற பிறகும் தங்ஸின் பள்ளிக்கு நித்தம் நித்தம் சென்ற வழி. 

Wednesday, December 09, 2009

356. AMERICAN COLLEGE CELEBRATES CENTENARY

College celebrates centenary D. Karthikeyan


American College plans a light-and-sound show to mark celebration
— Photo: G. Moorthy

Standing tall: The main building of The American College.


MADURAI: Education is the key to unlock the golden door of freedom- George Washington Carver

Fin de siècle to the close of 19th century and start of 20th century saw the emergence of missionary education spreading across the wider parts of erstwhile Madras Presidency taking education to the unreached spaces.

One such defining moment was the establishment of The American College, in Madurai, started initially as ‘Pasumalai College’ in the year 1881 at Pasumalai.

Rev. Zumbro who had his formal education at University of Michigan, Columbia and Yale, made a proposal in the year 1903 to the Missionary bound in the United States to shift the college to Madurai.

New vision

The idea behind this shifting was to give a new vision to Christian higher education.

By this, Rev. Zumbro meant that education should be made available to the common man despite divisions based on caste, creed and religion, said Joseph Chinnaraj Jaikumar, Principal, The American College.

Rev. Zumbro envisaged that once Christian education goes public, people of Madurai would acquire a character which would be beneficial for the city in the long term.

In his words, “Madurai should grow with American College and American College should grow with Madurai.”

The century old American College main building symbolizes this slogan as it was this grandiose structure built by adopting the Indo Saracenic style rather than Gothic or Victorian that signified the arrival of modernity in Madurai.

Mr. Chinnaraj Jaikumar, said that this synthesis of Indo Aryan style also represents secularism as it possesses the minarets and arches of Islamic structure, corridors of Hindu temple and the grandness of gothic style.

Construction

The construction of the building was started in the year 1905 and was completed in 1909.

The main hall of the building was indeed a central element in the major intellectual shift that took place then in the form of public lectures to the citizens of the city.

Eminent literary scholars and international figures like Rabindranath Tagore, French Premiere Georges Clemenceau visited the college and delivered lectures in the hall.

In fact, Tagore gave public lectures in the year 1919 and collected Rs. 2,365 out of which he took Rs.2, 000 for Visva Bharati, Shantiniketan and gave Rs.365 for starting an endowment in American College.

The building was constructed by Henry Irving, who built the Mysore Palace and the then Principal G. T. Washburn was influential in getting funds from the U.S.

The building to the surprise of people of this generation was constructed at a cost of Rs.52, 000, said Mr. Chinnaraj Jaikumar.

The College will be holding a ‘light and sound’ show to mark the centenary celebration.

Mr. Chinnaraj who has done a good amount of research on Rev. Zumbro’s contribution to higher education is to come out with a book aiming to highlight his contributions to the dissemination of knowledge in this part of the world.

Citizens of Madurai owe a great deal of respect and gratitude for Rev. Zumbro who was instrumental in spreading inclusive education based on science.

Zumbropuram

Apart from his contributions in the field of education, Rev. Zumbro was a socially conscious individual who saw the resettlement of palm tree workers and the place was now remembered by his name Zumbropuram.

© Copyright 2000 - 2009 The Hindu

Tuesday, September 22, 2009

Tuesday, August 04, 2009

326. மதுரக்காரங்க - நாங்க ரொம்ப பொறுமைக்காரங்க ...

*

*

கடந்த ஆகஸ்ட் ஒன்றாம் தேதி எங்க ஊரு தமுக்கத்தில ஒரு பாட்டுக் கச்சேரி. வைரமுத்து பாடல்விழா. பெரிய மேடை அமைப்பு; 12 காமிராக்கள்; பெரிய இரு திரைகளில் மேடைக்காட்சிகளின் ஒலி/ளி பரப்பு; அதென்னவோ, ஜாலி ஜம்ப் என்றோ வேறென்னவோ ஒரு பெயர் சொன்னார்கள் - ஒரு காமிரா அங்குமிங்கும் ஆடி ஆடி படம் எடுத்தது.

வைரமுத்து தன் தலைமையுரையில் 'மழை நீக்கி வரம்' ஒன்று கேட்டார். பரவாயில்லை -- "சாமி' முழுசா கேட்காவிட்டாலும், (விழாவின் இறுதி அரைமணி நேரத்தில் மிக மிகச் சின்ன சாரலடித்து, key boardகாரகளையும், மற்ற ஒலி, ஒளிபெருக்கியாளர்களையும் மிரள வைக்க முயற்சித்தது.) ஓரளவு மழையின்றி மாலை 7 மணிக்கு ஆரம்பித்த விழா இரவு 11.30 வரை தொடர்ந்தது.

'தமுக்க மைதானம்' என்றால் அந்தக் காலத்து ராசாக்கள் தமுக்கு அடிக்கும் இடமாதலால் அந்தப் பெயர் என்பதுதான் எங்களுக்குத் தெரிந்த விஷயம். ஆனால், வைரமுத்து திருமலை நாயக்கர் காலத்து, தெலுங்குச் சொல் அது என்றும், அதன் பொருள் 'யானைப் போர் புரியும் இடம்' என்றும், அரசர்கள் யானைகளைப் போரிட வைத்துக் காணும் இடம் என்பதே பொ்ருள் என்றும் சொன்னார்.

பாடல்கள் பாட உன்னி கிருஷ்ணன், சீனிவாசன், சுஜாதா, அவரது மகள் ஸ்வேதா என்ற நான்கு பாடகர்கள். முதலில் உன்னி கிருஷ்ணன் பாட வந்தார். அவருக்கு ஒரு மலைப்பு. இதுவரை இந்த மாதிரி "அமைதியான" கூட்டத்தில் பாடியதாக எனக்கு நினைப்பில்லை என்றார்! ஏறத்தாழ இரு வருடங்களுக்கு முன் எங்கள் கல்லூரியில் நடந்த எஸ்.பி.பி. கச்சேரியிலும் இதே கருத்தை பாடகர்கள் சொன்னது நினைவுக்கு வந்தது. அதான் சொல்றேன்: எங்க மதுரக்காரவுக எல்லோரும் ரொம்ப பொறுமைக்காரங்க .. சும்மா சத்தம் போடுறது; கைதட்டுறது; விசிலடிக்கிறது -- இதெல்லாம் என்னென்னே எங்களுக்கெல்லாம் தெரியாது; அம்புட்டு சுத்தம். கடைசிவரை கூட்டம் அப்படியே - அதாவது அந்த பொறுமைக்கார மூடிலேயே - இருந்தது. நானும் அப்பப்ப திரும்பி கூட்டத்தின் கடைசி, பக்க ஓரங்களில் ஏதாவது இளைஞர் கூட்டம் ஏதாவது டான்ஸ் அது இதுன்னு ஏதாவது செய்யுமான்னு பார்த்தேன். என்னே ஒரு அமைதி ! :)

விழா கொஞ்சம் வித்தியாசமாக இருந்தது. ஒவ்வொரு பாடலுக்கும் நடுவிலும் வைரமுத்து தன் பாடல் எழுதிய அனுபவங்களைப் பற்றிச் சொல்லி, சில விளக்கங்கள் கொடுத்து உற்சாகப்படுத்திக் கொண்டிருந்தார். முதன் முதலில் எம்.எஸ்.வீ.க்கு ஒரு பாடல் எழுதியதற்கு ஒரு விளக்கம் கொடுத்தார். கண்ணதாசன் மருத்துவ விடுதியில் இருந்ததால் தன்னை அழைத்து, மனதில்லாமல் எம்.எஸ்.வீ. கொடுத்த இசைக்குப் பாட்டெழுதியதைக் கூறினார்.

பாடகர்கள் இனிதாகப் பாடினார்கள். ஆனால், நாங்க மதுரக்காரவுக ... எம்புட்டு நல்லா பாடினாலும் மெல்லிதாகக் கை தட்டினோம். முதலில் எல்லாமே melodies தான். பின் சில பாடல்கள் விரைவுப் பாடல்கள். எல்லாவற்றையும் ஒரே சீராக ஒரே தட்டில் வைத்து அடக்கமாகக் கை தட்டினோம்!

முன்பு சொன்னேனே .. அதுபோல் வைரமுத்து முதலில் எம்.எஸ்.வீ. பெயரை ஒரு முறை சொன்னாரா .. அதன் பின் ஒரே ஒரு இசையமைப்பாளரைப் பற்றி மட்டுமே பேசினார் - ரஹ்மான். வேறு எந்த இசையமைப்பாளருக்கும் அவர் பாட்டே எழுதவில்லையோ என்று எனக்குத் தோன்ற ஆரம்பித்தது. நடுவில் சீனிவாசன் ஒரு பாட்டைப் பாடும் முன் 'இது ராஜா சார் பாடல்' என்றார். கூட்டத்தில் அதற்காகத் தனியாக ஒரு கைத்தட்டல்கள் இருந்தன. எனக்கு தோன்றியதுபோலவே வேறு சிலருக்கும் தோன்றியிருக்க வேண்டும். இறுதி நேரத்தில் தங்ஸிடம் 'பாரேன்; இளையராஜா பெயரைக்கூட இந்த ஆள் சொல்லலை பார்த்தியா?' என்று மெல்ல கேட்டேன். அப்போது கூட்டமும் வெகுவாகக் குறைந்திருந்தது. நான் அப்படிச் சொன்ன ஒரு சில நிமிடங்களில் எங்களுக்கு முன்பு இருந்த ஒரு குழுவில் ஒருவர் விரைவாக அடுத்த நபரிடம் சத்தமாகப் பேசியது என் காதில் விழுந்தது. நான் சொன்னதை ஏறத்தாழ அவர் அவரது நண்பரிடம் கூறிக்கொண்டிருந்தார். accusations ...

காதல் ஓவியம், அலைகள் ஓய்வதில்லை, முதல் மரியாதை, கிழக்கே போகும் ரயில் -- இப்படி பல படங்கள் என் மனதில் நினைவுக்கு வந்தன. அந்த மூவரும் - பாரதி ராஜா, இளையராஜா, வைரமுத்து - போட்டியிட்டு நடத்திய அந்த அழகான பாட்டுக்களை எப்படி இவரால் இப்படி மூட்டை கட்டித் தூக்கிப் போட முடியுது என்று தோன்றியது. இளையராஜாவின் பாடல்களைப் பற்றி ஏதும் கூறாமலேயே வைரமுத்து பேசிக்கொண்டிரு்ந்தார். ரொம்பவே நெருடலாக இருந்தது. அப்படி உங்களுக்குள் என்னதான் தகராறு? ego-வா .. இல்லை .. சாதியா .. எது உங்களைப் பிரித்துப் போட்டு .. எங்களைப் பட்டினி போட்டது? வருத்தமாக இருந்தது.

மழை சிறு தூறலாகப் போட ஆரம்பித்த போது கூட்டம் சிறிது கலைந்தது. இருந்தும் கடைசிப் பாட்டு வரையும் உட்கார்ந்திருந்தோம். கூட்டம் குறைந்த அந்த நேரத்தில் பேச வந்த வைரமுத்து, தன் வேண்டுகோளுக்கிணங்கி உட்கார்ந்திருந்த கூட்டத்தைப் பார்த்துப் பேச ஆரம்பித்த போது, நடுவில் உங்களுக்கெல்லாம் நான் 'முதல் மரியாதை' செய்ய வேண்டும் என்றார். ஏனென்ன்று தெரியவில்லை; கூட்டத்திலிருந்து 'அந்த வார்த்தைக்கே' தனி மரியாதை கிடைத்தது. என்னைப் போலவே பலரும் நினைத்திருந்தார்கள் என்பது தெளிவாயிற்று. அதனால்தானோ என்னவோ, எம்.எஸ்.வீ. பற்றிச் சொல்லிவிட்டு, அதன்பின் ரஹ்மானைப் பற்றி மட்டும் பேசியவர், முதல் மரியாதை படத்திற்கு தனக்கு முதல் தேசிய விருது கிடைத்தது பற்றிச் சொன்னார். அந்த மரியாதை மதுரைத் தமிழுக்குக் கிடைத்த பேரு என்றார். 'வீரபாண்டித் தேரு' என்று அந்த பாடலில் எழுதி தன் மண்ணின் பெயரை பாட்டில் ஏற்றியதற்குக் கிடைத்த பரிசு என்றார். கடைசியாக, அதுபோன்ற ஒரு காவியத்தை உருவாக்கிய பாரதிராஜாவுக்குப் பாராட்டும், பாடல்களுக்கு இசையமைத்த இளையராஜாவுக்கு நன்றியும் என்றார். அப்பாடா ...! என்னமோ போங்க .. எல்லோரும் இம்புட்டு பெரிய மனுஷங்களா இருந்திட்டு ... :(

கூட்டம் குறைந்த பின் 12 தொலைபேசிப் பொட்டிகளுக்கு முன்னால் உட்கார்ந்து ஒளிக்காட்சியை ஒழுங்குபடுத்துவதையும், அந்த தொட்டில் காமிராவை இயக்குவது பற்றியும் சுற்றிப் பார்த்துவிட்டு வந்தேன்.



Z TV முக்கியமான ஸ்பான்சர் போலும். நல்லதாகப் போயிற்று. அதனால்தானே, அதில் வேலை பார்க்கும் நம்ம தல பாலபாரதி எனக்கு இரு அனுமதிச் சீட்டுக்களை கூரியரில் அனுப்பி வைத்தார்! வாழ்க தல. எங்கள் குடும்பமும், சில சீரியல்களுக்கும் இப்போது ஒரு திரைப்படத்திற்கும் இசையமைக்கும் நண்பனின் குடும்பமும் சேர்ந்து பார்க்க வைத்த தலைக்கு மீண்டும் நன்றி.



*

Sunday, July 19, 2009

324. மதங்கள் எல்லாம் மனிதர்கள் படைத்ததுதானே ...

*




*

மீனாட்சி அம்மன் கோவில் - அதுக்கு எதிர்த்தாற் போல் இருப்பது மதுரையின் பழமையான கடைகளில் ஒன்றான துணிக் கடையின் பெயர் ஹாஜி மூஸா. அந்தக் கடையின் நுழை வாயிலில் கண்ணாடி போட்டு அழகு படுத்தியுள்ளார்கள். அந்தக் கண்ணாடி முகப்பில் தெரிவது மீனாட்சி அம்மன் கோவில் கோபுரத்தின் நிழல். படத்தை எடுத்தது - Sam.

Wednesday, March 19, 2008

253. எங்க ஊரு காவல்துறையின் "SMART SYS"...தொடர்கதை

இதற்கு முந்திய பதிவில் எங்க ஊரு காவல்துறையின் "Smart sys" என்ற முதல் முயற்சி பற்றி பெருமையாக நான் எழுதிய போது பலரும் அவநம்பிக்கையோடு பின்னூட்டமிட்டார்கள். அதில் கடைசியாக பதிவர் அரவிந்தன், //நீங்க தான் காவல்துறை மேல ரொம்ப நம்பிக்கை வச்சி காமெடி பண்றீங்க.// என்று எழுதியிருந்தார். அவர் வாயில் சர்க்கரைதான் போடணும்.

செம காமெடிதான் பண்ணிட்டேன் !!
என்ன நடந்திச்சின்னா ....

1.sms அனுப்பி ஒரு வாரத்துக்கு மேல் ஆகிப் போச்சு . ஆனா, சொன்ன விஷயம் இதுவரை கண்டுகொள்ளப் படவேயில்லை.

2. அவர்கள் கொடுத்த reference எண்ணை அவர்கள் சொன்னது போல் அதே எண்ணுக்கு நேற்று இரவு அனுப்பினேன். Necessary action is in process என்ற அதே பல்லவி மறுபடி வந்தது.

3. அதோடு விட்டு விடலாமாவென நினைத்தேன்; இருந்தும் என்ன ஆகிறது என்று பார்ப்போமே என்ற எண்ணத்தில் மீண்டும் இப்படி ஒரு sms கொடுத்தேன்:

Automated messaging & answering system is working fine. Nothing more we can expect, I suppose. So sad. இப்படி அனுப்பிய sms-க்கு ன் பழைய பல்லவியான Your message has been received and necessary action is being initiated…...blah…blah என்று வந்தது. புதிதாக இதற்கொரு reference எண்ணும் வந்தது!

4. மறுபடி அந்த reference எண்ணை அனுப்பினேன். பழையபடி - Necessary action is in process என்ற அதே பல்லவி…

5. பொறுமை இழந்து அடுத்து கொடுத்த sms: I’m sorry. Intha vilaiyattukku nan varalai.

6. என்ன ஆச்சரியம். இதுவரை human touch ஏதுமில்லாமல் இருந்த மறுமுனையில் இருந்து உயிர்ப்புடன் ஒரு தொலைபேசி அழைப்பு. பேச ஆரம்பித்ததுமே யார் நீங்கள் என்ற விசாரணை. ஏன் இப்படி ஒரு sms என்ற கேள்வி. அவர் சொன்னதே சொன்னார். நான் அனுப்பிய கோரிக்கை மதுரை நகர் காவல்துறை தொடர்புடையதாம். இவர்களோ மதுரை புறநகர்க்காரர்களாம். என் கோரிக்கையை அனுப்பிவிட்டோம். அவ்வளவுதான் செய்ய முடியும் என்றார். இந்த சேதியையாவது சொல்லாமல் வெறுமனே Automated message அனுப்புவதால் எந்த பயனும் இருக்கப் போவதில்லை என்று நான் கூற, இதில் நாங்கள் ஒன்றும் செய்ய இயலவில்லை என்று அவர்கூற 10-15 நிமிடங்கள் பேசினோம். இப்படி நீண்ட நேரம் பேசுவதற்குப் பதிலாக, reference எண் ஒருவரிடமிருந்து வரும்போது அவரனுப்பிய கோரிக்கையையும், அதற்கு எடுத்த நடவடிக்கை பற்றியும் தகவல் தெரிந்துகொண்டு இதுபோல் நேரடியாக ஓரிரு நிமிடம் பேசினால் கூட போதும்; அதுதான் பயன் என்று நான் சொன்னது அவருக்குப் புரியவில்லையா என்று தெரியவில்லை.

நான் அனுப்பிய கடைசி sms அவருக்குப் பிடிக்கவில்லை என்றாலும் அது இந்த அளவாவது வேலை செய்தது எனக்குப் பிடித்தது! அதோடு வெறும் Automated message மட்டுமே என்றில்லாமல் சிலர் பொறுப்போடு வேலை செய்வது அறிந்ததால் கொஞ்சம் சந்தோஷமே!
பலரிடமிருந்தும் கோரிக்கைகள் நிறைவேற்றப் படுவதால் நன்றி சொல்லி பல குறுஞ்செய்திகள் வருவதாகவும் சொன்னார். நல்லதே நடக்கட்டும்...

சுபம் !

Friday, July 06, 2007

227. யாரைத்தான் நொந்து கொள்வதோ... ? 4

உங்களின் பொறுமைக்கும் ஓர் எல்லை உண்டு என்பது தெரியும்; அதனால் இன்னும் அதிகமாக சோதிக்காமல் இந்தப் பதிவோடு 'யாரைத்தான் நொந்து கொள்வதோ... ? ' என்ற இந்த மெகாசீரியலை முடித்துக் கொள்கிறேன்; சரியா?!

மனசுதான் முக்கியம் அப்டின்னு நாம பொதுவா சொல்றதுண்டு. அதுமாதிரிதாங்க .. எங்க ஊர்ல நிர்வாகம் ஒரு நல்ல காரியம் ஒண்ணு பண்ணணும்னு நினச்சாங்க. அதாவது மதுரையில் ஒரு பெரிய ஆறு - வைகைன்னு பேரு - இருக்கா. அதில எப்பவாவது வெள்ளம் - அதாங்க, ரொம்ப தண்ணி வருமே அதுதான் - வந்திச்சின்னா மக்கள் கஷ்டப் படுவாங்களே அப்டின்னு ஒரு எண்ணம்; அதோடு, விட்டா மதுரக்காரங்க ஆற்றோரம் எல்லாம் மெல்ல மெல்ல ஆக்கிரமிப்பு பண்ணி, பேருக்கு கூட வைகை இல்லாம் பண்ணிடுவாங்க அப்டிங்கிற உண்மையான பயத்தில வைகைக் கரையின் இரு பக்கமும் ரோடு போட்டுட்டா, நதியைக் காப்பாத்திடலாம் அப்டிங்கிற நல்லெண்ணத்தில இரு பக்கமும் உயரமா கரையை உயர்த்தி அழகா ரோடு போட்டாங்க.

ஆனா பாருங்க, ஆற்றின் தென்கரையில் நெடுக போட்ட சாலை ஒரு இடத்தில மட்டும் நடுவில நின்னு போச்சு. இப்ப, இங்க ஒரு சேஞ்சுக்கு கோவில் இல்லை, அதுக்குப் பதிலாக ஒரு பெரிய பள்ளிக் கூடம் கரையோரம் உயர்ந்து நின்னுது. ஆக்கிரமிப்புகளை நீக்கும் நேரத்தில் எந்த நேரமும் ஆற்றுக்குள் நீட்டிக் கொண்டிருக்கும் அந்தப் பள்ளி இடிக்கப் படும் என்ற நிலை. ஆனா விஷயம் அறிஞ்ச சிலர் சொன்னாங்க.. அதெல்லாம் அந்தப் பள்ளிக்கூடத்துக்காரருக்கு முன்னால் அதெல்லாம் நடக்க முடியாது அப்டின்னாங்க; அவரு அவ்வளவு பேமஸான ஆளு அப்டின்னாங்க; நமக்கு என்ன தெரியும்? அது மாதிரியே இன்னும் அந்தப் பள்ளிக்கூடம் ஆற்றின் கரையோரம் நிலச்சு நிக்குது, ஆற்றோர சாலை அப்படியே துண்டு துண்டா ரெண்டுபக்கமும் நிக்குது. ஒரு தனி மனிதனின் செல்வாக்கு மொத்த ஊர் மக்களின் நன்மைக்கு எதிரா இருந்து வெற்றி கொடி நட்டுரிச்சி. இது தென்கரையோர சாலையின் கதை. இது என்ன பெரிய விஷயமா அப்டின்றவங்களுக்கு அடுத்த சாலையின் கதை நிச்சயமா இன்னும் கொஞ்சம் interesting -ஆ இருக்கும் அப்டின்னு சொல்லிக்கிறேன்.



தெரியுதுங்களா .. இதுதான் வைகையின் தென்கரை நெடுக போடப் பட்டுள்ள ரோடு. இடது பக்கம் பச்சையா தெரியறதுதான் எங்க வைகை. தண்ணீர் இருந்தா வெள்ளையா தெரியும்; இல்லைன்னா இப்படி கருவேல புதர்கள்தானே தெரியும். என்ன இவ்வளவு பெரிய ரோடு போட்டிருக்காங்க ... ஆனா போக்குவரத்து, வண்டிகள் அது இதுன்னு எதுவுமே இல்லையேன்னு பாக்றீங்களா? அது எப்படி வண்டிகள் போக்கு வரத்து இருக்க முடியும்? அடுத்த படம் பாருங்க ...






வரப்போற மேம்பாலத்திற்காக கட்டப்பட்டுள்ள பெருந்தூணைத்தான் பாக்றீங்க... என்ன இது ரோடுமேல இருக்கேன்னு பாக்கிறீங்களா? எனக்கும் அதுதாங்க புரியலை. ரோடு போட்டும் ரொம்ப வருஷமாயிடலை. இப்போதான் போட்டாங்க. அதனால போடும்போதே இங்கே ஒரு பாலம் வரும்; அதுக்கு தூண்கள் வரும் என்று எல்லாம் தெரிஞ்சிருக்கும்; தெரிஞ்சிருக்கணும். ஆனா அரசு இயந்திரங்கள் ஒன்றோடு ஒன்றுக்கும் அப்படி ஒரு இணைவு. ஏன் இப்படி என்று கேட்டால் வைகை ரோடு நகராட்சி போட்டது; பாலம் போடுறது நெடுஞ்சாலைத் துறைன்னு பதில் வருகிறது. எப்படி ஒரு coordination! இப்போ போட்ட ரோடு நம்ம காசை மட்டும் விழுங்கிட்டு எனக்கென்னன்னு நிக்குது .. இல்ல ... படுத்திருக்குது!

எனக்கு ஒரு கார்ட்டூன் நினைவுக்கு வருது. தலைப்பு: TEAM WORK !


Image and video hosting by TinyPic

இங்கிலாந்துக்கும், பிரான்ஸுக்கும் இடையில் கடலுக்கடியில் ஒரு சாலை அமைத்துள்ளார்கள். இதில் ஒரு பாதியை ஆங்கிலேயர்கள் அவர்கள் நாட்டு கடலுக்கடியிலும், அதே போல் பிரான்ஸ்காரர்கள் அவர்கள் பாதியை அவர்கள் நாட்டு கடலுக்கடியிலும் தோண்டினார்களாம். இறுதியில் இரண்டு பகுதியும் இணையும்போது மிக மிகச் சரியாக இரு சாலைகளும் கடலுக்கடியில் ஒன்றோடொன்று சேர்ந்தனவாம். ம்..ம்ம்.. நம் நாட்டுல இப்படி ஒண்ணு நடந்தா என்ன ஆகியிருக்கும்னு தெரியலையே ..?

Monday, November 20, 2006

188. கொசுறுகளின் தோரணம்

.


.

கொசுறு: 1

இந்த கொசுறுவிற்கு கீழேயுள்ள தலைப்புகளில் ஏதாவது ஒன்றை வைத்துக் கொள்ளுங்கள்.

ரோட்டுல நடக்க உடுங்க, சாமிகளா..

எங்க ஊரு நல்ல ஊரு...

விவேக்தான் உதவிக்கு வரணும்...



நித்தம் நித்தம் நான் அனுபவிக்கிறதை வேற எங்க போய் கொட்டித் தீர்த்துக்க முடியும், சொல்லுங்க... அதான் இங்கன வந்திட்டேன்.

எங்க ஊர்ல பாத்திமா பெண்கள் கல்லூரியிலிருந்து கோரிப்பாளையம் தேவர் சிலை இருக்கே அதுவரைக்கும் ஒரு ரோடு போகும். சென்னைக்கு கிருஷ்ணாம் பேட்டைன்னா என்னன்னு எல்லோருக்கும் தெரியும்; சென்னைக்கு  கண்ணம்மா பேட்டை மாதிரி எங்க ஊரு மதுரையில 'தத்தனேரி'ன்னா எல்லாருக்கும் தெரியும். அந்த தத்தனேரி இந்த ரோட்டின் நடு செண்டரில் இருக்கு. இந்த தத்தனேரியிலிருந்து தேவர் சிலை வரை உள்ள ஏரியா செல்லூர். topography புரிஞ்சிதா? இப்பகுதியில் ஒரு சமுதாயத்தினர் பெரும்பான்மையாக உள்ளனர். என் தலைவிதி நித்தம் 4 - 6 தடவை அந்த தத்தனேரியைக் கிராஸ் பண்ணியாகணும். (கிராஸ் பண்ணிதான போற; நேர அங்கேயேவா போய்ட்ட? - அப்டின்னெல்லாம் கேக்கப் படாது.) அடக்கமெல்லாம் நம்மள பண்ணப்படாது; இது மாதிரி எரிக்கத்தான் வேணும் அப்டின்னெல்லாம் நினைச்சுக்கிட்டு, நம்ம இங்க வரும் போது எப்படி இருக்கும் (அப்ப உயிரோடு இருக்கிறவங்களுக்குத்தான்..) யாரு யாரு வருவாங்க; என்னென்ன பேசுவாங்க; பாவம், அவங்க, நல்லதா பேசுறதுக்கு எதுனாச்சும் அவங்களுக்கு இருக்குமா; பாய்ண்ட்ஸ் கொடுத்திருக்கமா? அப்டின்னெல்லாம் சுகமா கற்பனை பண்ணிக்கிட்டு போறதுதான் வழக்கம். ஆனா, பல நாளு இந்த மாதிரியெல்லாம் சுதந்திரமா கற்பனையெல்லாம் பண்ண முடியாதபடி சில விஷயம் நடக்கும் பாருங்க..அதுவும் தத்தனேரி - செல்லூர் பகுதியில் அடிக்கடி நடக்கும் அந்த விஷயங்களைப் பத்தி சொல்லத்தான் வந்தேன்.

பழுத்த பழம் செத்தா கல்யாணச் சாவு அப்டின்னு நம்ம ஊர்ல அந்த மாதிரி சாவையே பல மக்கள் ஒரு விழா மாதிரி கொண்டாடுவாங்க..அதெல்லாம் சரிதான். கொண்டாட்டத்தை வீட்டுக்குள்ள - அட்லீஸ்ட், தெருவுல வச்சிக்கிட்டா நான் இங்க வந்து ஏன் பிலாக்கணம் பாடப் போறேன். சரி...பெருசா பாடையெல்லாம் ஜோரா கட்டுங்க...மேளதாளத்தோட தூக்கிட்டுப் போங்க...அட, அதுக்காக உங்க வீட்டு இழவ ரோட்டுல போற எல்லாரு மேலயும் எதுக்கு ஏத்தணும்னு தெரியலையே.சமீபத்தில நடந்த ஒண்ணு ரெண்டு விஷயம் சொல்றேன்; கேளுங்க.

இப்போ ரெண்டு மூணு நாளைக்கு முன்னால..காலையில எல்லோரும் ஆபிஸ், ஸ்கூல், காலேஜ் போற நேரம். இவங்க குரூப் ஒண்ணு வருது. வழக்கம்போல பேயாட்டம் போட்டுக்கிட்டு மொதல்ல ஒரு 'வாட்டர்' கூட்டம். தடுக்கிறதுக்கோ,அடக்கி வைக்கவோ சில சமயங்களில் இந்த மாதிரி குரூப்புகளோடு நல்ல மனுசங்க நாலஞ்சு பேரு வர்ரது உண்டு. அன்னைக்கி அப்படி ஒரு புண்ணியாத்மா யாரும் வரலை. வழியில் உயிரைக் கைல பிடிச்சிக்கிட்டு மனுச சனம் ஒதுங்கி நிக்குது. பாடையில இருக்கிற பூவையெல்லாம் பிச்சி கூட்டத்தை  நோக்கி எறிஞ்சிக்கிட்டு வாராங்க. எனக்கு சைடுல ஒருத்தரு அவரு மகளை பைக்ல பின்னால உக்கார வச்சிக்கிட்டு நிக்கிறாரு..காலேஜுக்கு பொண்ண கொண்டு விடப் போறது மாதிரி இருக்கு. நம்ம ஆளுங்களுக்கு மூடாய் போச்சு..ஒரு மாலை.. பாதி பூ.. பாதி நாறு..எடுத்து அந்தப் பொண்ணு மேல எறியறான் ஒருத்தன்.. பாவம், பொண்ணு மேல போய் நச்சுன்னு மூஞ்சில விழுது...அந்த நாய் - sorry, அந்த boy - சிரிக்கிறான். இது பத்தாதுன்னு ரெண்டு பசங்க - அந்தக் கூட்டத்த சேந்த கேசுகள்தான்.. பைக்ல வித்த காமிக்க ஆரம்பிச்சிட்டான்...என் வண்டிக்கு நேர, அது என்ன.. கார்ட்டிங்கா இல்ல வீலிங்கா..அது மாதிரி ஏதோ கோணக்க மாணக்க பண்ண, வண்டி என் வண்டிக்கு நேர வர்ரது மாதிரி இருந்தது.. சரி..இன்னைக்கு நம்ம மாட்னோம்டான்னு நினச்சேன்.. நல்ல வேளை ..**** வண்டியிலிருந்து விழுந்ததுகள்.சந்தோஷமா இருந்திச்சி (இப்படியெல்லாம் அடுத்தவன் உழுறது பாத்து சிரிக்கப் படாதோ? மனுசத்தனம் இல்லாம பேசப்படாதோ..?) ஆனா ஒண்ணும் அடி படலை..கொஞ்சம் வருத்தம்தான்.

நாலஞ்சு மாசத்துக்கு முந்தி ஒரு தடவை... இந்த மாதிரி ஒரு இழவு ஊர்வலம்.. சிவனேன்னு ஓரத்தில நின்னுக்கிட்டு இருக்கேன். இவங்க போடற மாலைக்குப் பயந்து கண்ணாடிய ஏத்தி உட்ருந்தேன். எதிர்த்தாற் போல் வந்த ஊர்வலத் தலைவர்களில் ஒரு சுள்ளான்; இருவது வயசுகூட இருக்காது. நான் கண்ணாடிய ஏத்தி உட்டது பாத்துட்டான். அது அவனுக்குப் பிடிக்கலை. டேய்! கண்ணாடிய ஏத்திக்கிட்டுதான் வருவீகளோ அப்டின்னு கத்திக்கிட்டு பானட்ல ஓங்கி அடிக்க வந்தான். நம்ம வண்டிதான் சோப்பு டப்பாவாச்சே; வேகமா ஒரு வேப்பங்காய் விழுந்தாலும் 'டொக்' விழுகிற டப்பா. அவன் அடிக்கிற அடியில அப்படியே பள்ளம் விழுகப் போகுது; டிங்கரிங், பெயிண்டிங் அப்டின்னு அஞ்சு பத்து செலவாகப் போகுதுன்னு நினச்சிக்கிட்டேன். நல்ல வேளை ஒரு ஆபத்பாந்தவன், அநாத ரட்சகன்; அவர்தான் அந்தக் கூட்டத்துக்கு கண்ட்ரோலர் போலும். சடார்னு அவன இழுத்துட்டுப் போய்ட்டார். பெரிய மனசு பண்ணி, பொழச்சுப் போ அப்டின்னு அந்த ** சொல்லிட்டு போயிரிச்சி. அப்பாடான்னு எனக்கும் ஆச்சு. அந்த வழியே அடுத்த அரைமணி நேரத்தில திரும்பி நான் வந்துகிட்டு  இருக்கும்போது அதே குரூப் இப்ப எல்லா வேலையும் முடிச்சிட்டுத் திரும்பி வந்துகிட்டு இருந்தது. இப்போ ஒரே கூட்டமா வரலை. அஞ்சாறு பேரா வந்துகிட்டு இருந்தாங்க. அதில அந்தப் பயலும் ஒண்ணு. ஆனா இப்போ பூனக்குட்டி மாதிரி அலம்பல் இல்லாம ஒழுங்கா போய்க்கிட்டு இருந்தான். அரை மணி நேரத்துக்கு முந்தி இவந்தான் அப்படி ஆடினான்னு சொன்னாக்கூட நம்ப முடியாது; அப்படி ஒரு நல்ல பிள்ளையாய் அந்த **.

இன்னொரு வகை வீர திலகங்கள் இந்தக் கூட்டத்தில உண்டு. சரவெடி போடுவாங்க.. சரி, ஒழியுது.. ஓரத்தில நின்னு பொறுத்திருந்து போயிடலாம். சில நாய்ங்க -ச்சீ..பாய்ஸுங்க - லஷ்மி வெடியா, யானை வெடியா..? அத கையில வச்சிக்கிட்டு பத்த வச்சி கூட்டத்துக்குள்ள எறிஞ்சி ஒரு தடவ பாத்தேன். என்ன கெக்கலிப்பு அப்போ!

இதில அந்த ரோட்ல இருக்கிற ரயில்வே கிராஸிங்கல எப்பவும் ஒண்ணு ரெண்டு போலீஸ்காரங்க நிப்பாங்க. அவங்க ஏதாவது சொல்லணுமே! ஹு.. ஹும்.. ம்ம் ..கண்டுக்கிறதேயில்லை. ஏதோ அவங்களும் அந்தக் கூட்டத்து சொந்தபந்தம் மாதிரி எமொஷனலா இழவு காத்திருவாங்க. அவங்கள சொல்லியும் குத்தமில்ல.. நமக்கில்ல அறிவு வேணும். எல்லாத்துக்கும் போலீஸ்காரவுங்களா குச்சிய தூக்கிக் கிட்டு வருவாங்க?

நான் சொல்ற இந்த ரோட்டுல இன்னொரு விசேஷம் என்னன்னா, ரோட்டுக்கு ரெண்டு பக்கமும் ராட்சச போஸ்டர்கள் - flex boards - இருக்கும். கல்யாணம், காது குத்து, வீடு திறப்பு, இப்படின்னு எதுக்கும் ஒரு போஸ்டர். அதிலெல்லாம் எனக்கு ஒண்ணும் ஆட்சேபனை இல்லை. நல்லா இருக்கும்; பொம்பிளையாளெல்லாம் கழுத்து மறைய நகை நட்டு...(அதப் பார்த்ததும் கந்துவட்டின்னு மனசுல ஒரு எண்ணம் வர்ரதையும் சொல்லியாகணும். அது சரியோ தப்போ தெரியாது.) ஆம்பிளைங்க கொடுக்கிற போஸ், அந்த செல்போன் பேசிக்கிட்டே கொடுக்கிற போஸ் எல்லாம் நல்லா ரசிக்கலாம். என்ன, சில சமயம் பொண்ணு மாப்பிள்ளைய பாத்தா பெத்தவங்க மாதிரி தெரியும். அதெல்லாம் அட்ஜஸ்ட் பண்ணி, பாத்து ரசிக்கலாம்.

ஆனால் என்ன, நடிகர் விவேக் இதெல்லாம் நல்லது இல்லை; இதுக்கு ஏதாவது அரசாங்கம் செய்ய முடியுமான்னு தீபாவளியப்போ சன் டி.வி.யில கலைஞரிடம் விசனப்பட்டு கேட்டார்.அதனால அவர கூப்பிட்டு, இந்த போஸ்டர் சமாச்சாரம் எல்லாம் எப்படியோ இருந்துட்டுப் போவட்டும். இந்த இழவு சமாச்சாரத்தை நீங்கதான் கொஞ்சம் மக்கள்ட்ட சொல்லி "அவரவர் இழவு அவரவருக்கு" என்ற ஒரு நல்ல philosophy -யைச் சொல்லி இந்த மக்களை நீங்கதான் திருத்தணும்னு கேக்கணும்னு நினச்சிக்கிட்டு இருக்கேன்.

விவேக் சொன்னா கேப்பாங்க; என்னதான் இருந்தாலும் நம்ம சொந்தக்காரர் சொல்றார்னு ஒரு மரியாதை இருக்காதா,என்ன?


.

.




கொசுறு: 2

இந்த ரோட்டின் ஒரு முனையில் பாத்திமா பெண்கள் கல்லூரி இருக்கிறது. இதன் பக்கத்தில் ஒரு traffic island - மூன்று ரோடுகள் சந்திக்கும் இடம். சிக்கலான போக்குவரத்து உள்ள பகுதி. கொஞ்ச வருஷத்துக்கு முந்தி எந்த ஒழுங்கு முறையும் சரிப்படுத்தாத நிலை இருந்தது. பாவம், ஒரு சின்ன வயது வாலிபர்; புதிதாக வாங்கிய பைக்கில் அந்த இடத்திலேயே விபத்தில் இறந்தார். அந்த விபத்திற்குப் பின் போலீசார் அந்த இடத்தில் போக்குவரத்தைச் ஒழுங்கு படுத்தினார்கள். அதிலிருந்து இதுவரை நன்றாக இருந்தது. கொஞ்ச நாட்களுக்கு முன்பு அந்த இடத்தை கொஞ்சம் சீர் செய்தார்கள். islands-க்கு நடுவில் இடம் விரிவாக்கப் பட்டது. எல்லாம் செய்தார்கள். ஆனால் sign boards எதுவும் கிடையாது. போலீஸ் எதுவும் கிடையாது. இப்போது நம்ம ஊரு வழக்கமான free for all -தான். யார் யாருக்கு எந்த வழி பிடிக்குதோ அந்தப் பக்கம் போய்க்கொள்ளலாம்.எப்போது மற்றொரு விபத்து நடக்குமோ தெரியாது. போக்குவரத்து காவலர்களும் அதற்காகத்தான் காத்திருக்கிறார்களோ என்னவோ. விபத்து என்று ஒன்று நடந்தால்தான் மறுபடி ஒழுங்கான விதிமுறைகளும்,sign boards-களும் வைத்து நடைமுறைப்படுத்துவார்கள் என்று நினைக்கிறேன். எங்களில் யார் தலையில் அந்த ஆண்டவன் என்ன எழுதியிருக்கிறானோ; யாருக்குத் தெரியும்?



கொசுறு: 3

இந்த ரோட்டில் ஐந்தாறு இடங்களில் road divider - ஆக காலி பீப்பாய்கள் வைக்கப் பட்டுள்ளன. keep left அப்டிங்கிற அடிப்படை சாலை விதியை எல்லோரும் மதிக்கவேண்டுமென்றுதான் இந்த பீப்பாய்கள் ரோட்டின் 'நடு செண்டரில்' வைக்கப்பட்டுள்ளன என்று நான் நினைக்கிறேன். ஆனால் நம் மஹா ஜனங்களில் மிகப் பெரும்பான்மையர் அப்படி நினைப்பதில்லை போலும். யாரும் - போலீஸ் வாகனங்கள் உட்பட - இதை லட்சியம் பண்ணுவதாகத் தெரியவில்லை. இதுவரை இரு முறை போலீஸ் வாகன ஓட்டிகளிடமும், பலமுறை மற்ற வாகன ஓட்டுனர்களிடமும் சண்டை போட்டிருக்கிறேன் - எந்த வித பயனுமின்றி! அதில் என்ன அவர்களுக்கு சந்தோஷமோ தெரியவில்லை. keep left என்ற விதியை மீறுகிறோம் என்பதைத் தவிரவும் அவர்களுக்கு இதிலெந்த வித பயனும் இல்லை; இருந்தும் பலரும் அதை 'தவறாது' செய்வதைப் பார்க்கும்போது, விதியை மீறும் "சுகத்துக்காகவே" நம் மக்கள் அப்படி செய்வதாகத்தான் தோன்றுகிறது. Is it a sort of adventurism? விதியை மீறுகிறோம் என்பதில் நம் மக்களுக்கு ஒரு தனி உற்சாகம் வந்து விட்டதாகத்தான் எனக்குத் தோன்றுகிறது.



கொசுறு: 4

சாலையை இடது, வலது என்று பிரித்து வைக்கத் தான் இந்த பீப்பாய்கள் இருக்கின்றன என்ற நினைப்பில் இன்னும் இருக்கிறேன். ஆனால் இந்த பீப்பாய்கள் வைக்கப்பட்டுள்ள இடங்களில் தான் சரியாக பஸ் ஸ்டாப்புகளும் அனேகமாக உள்ளன. அரசு பேருந்துகள் சரியாக இந்த பீப்பாய்கள் இருக்கும் இடத்தில் நின்று, முழுமையாக ஒரு பக்க சாலையை அடைத்து விடுகின்றன. எனக்குள்ள பல நாள் சந்தேகங்கள் - இந்த பேருந்துகளின் ஓட்டுனர்களுக்கு சாலையை முழுவதாக மறித்து வாகனத்தை நிறுத்துவதால் பின்னால் வரும் வாகனங்களுக்கு இடையூறாக இருக்குமே என்ற நினைவு எப்படி வராமல் போகும்?அவர்களூம் வழிமறித்து யாரேனும் வாகனங்களை நிறுத்தினால் எரிச்சல் படத்தானே செய்வார்கள். பின் எப்படி அவர்களுக்கு 'தங்களின் முதுகு' தெரியாமல் போகிறது? ஆச்சரியமாகததான் இருக்கிறது. அட, பீப்பாய் இருக்கும் இடத்திலிருந்து சிறிது முன்னேயோ, பின்னேயோ இந்த பஸ் நிறுத்தங்களை வைக்க வேண்டுமென்ற எண்ணம் கூட இந்த போக்கு வரத்து அதிகாரிகளுக்கும் தெரியாமல் போனதென்ன?

யாரைத்தான் நொந்து கொள்வது? - பஸ் நிறுத்தங்களை சரியான இடங்களில் வைக்காமல் இருக்கும் போக்குவரத்துத் துறை சார்ந்த அதிகாரிகளா? இல்லை, இடத்திற்கு ஏற்றாற் போல் வாகனங்களை முன்னேயோ பின்னேயோ நிறுத்த மனமில்லாத அரசு போக்குவரத்து வாகன ஓட்டிகளா, இந்த பீப்பாய்கள் வைக்கப்படுவதற்கான அடிப்படைக் காரணத்தைக் கொஞ்சமும் மதிக்காமல் இஷ்டத்திற்கு வண்டிகளை ஓட்டிச் செல்லும் வாகன ஓட்டிகளா - யாரைத்தான் நொந்து கொள்வது...?


.
.

Saturday, March 18, 2006

144.எப்படி இருந்த நான்… !

எனது பழைய பதிவொன்றில் மதுரையின் பழம் பெருமை வாய்ந்த ஒரு கட்டிடத்தினைப் பற்றி எழுதியிருந்தேன். எழுதி இரண்டு மூன்று மாதங்களில் அந்த இடத்தைத் தாண்டி செல்லும்போது பார்த்தது ஒரு கணம் திடுக்கிட வைத்தது. ‘எப்படியிருந்த நான் இப்படி ஆயிட்டேன்’ அப்டின்னு சோகமா சொன்னது மாதிரி இருந்தது. . அந்தக் காலத்துப் பெருமையெல்லாம் போய் - சிலரின் அந்திக் காலத்தில் உடம்பெல்லாம் வற்றிப் போய், துருத்திக்கொண்டிருக்கும் முன்பற்களோடு பரிதாபமாகத் தோற்றமளிப்பார்களே அது மாதிரி - முன்னால் இருந்த அந்த முகப்பு -facade - மட்டும் இடிக்கப்படாமல், அதன் ஜன்னல்கள் வழியே தெரியும் உள்வெற்றிடம் வெட்டவெளியாய் தெரிய நின்று கொண்டிருக்கிறது.
எதற்கும் அந்தப் பதிவில் பதிவில் போட்டிருக்கும் படத்தையும் அதன் பழம் பெருமையையும் பார்த்துக்கொள்ளுங்களேன்.

ஒரு கொசுறு சேதி: ஒரு காலத்தில் ஊரிலேயே பெரிய தங்குமிடமாக இருந்த போது, இதன் அருகில் ஒரு ‘ஃபேமஸ்’ இட்லிக்கடை இருந்தது என்று எழுதியிருந்தேன். இன்றும் இந்தப் பாழடைந்த கட்டிடத்தின் எதிர்தாற்போல் சுப்ரமணிய சாமி புகழ் முருகன் இட்லிக் கடை உள்ளது. இந்தப் படம் எடுக்கும்போது அந்தக் கடையில் உள்ளவர் ஒருவரிடம், ‘இந்த இடத்தில என்ன வரப் போகுதுன்னு’ கேட்டேன். ‘ஓணர் இன்னும் இதை விற்கவில்லை; அதனால என்ன வரப்போகும்னு தெரியாது’ என்று சொல்லிவிட்டு, ‘என்ன சார், நீங்க பத்திரிக்கைகாரரா?’ என்று கேட்டார்.

யாரும் வாங்கிப் போடறதுன்னா போடலாமேன்னு இந்த ‘டிப்ஸ்’ கொடுத்தேன்







Pathivu Toolbar ©2005thamizmanam.com


Mar 18 2006 10:45 pm | Uncategorized | | edit this
4 Responses
சிங்.செயகுமார் Says:
March 18th, 2006 at 11:15 pm e
தருமி சார் கண்ணதாசன் சொல்லுவாரே அந்த லாட்ஸா இது?!

selvan Says:
March 19th, 2006 at 4:19 am e
பார்ட்னர்,

மாடர்ன் லாட்ஜ் கதைய கேட்டதும் பாவமா போச்சு.மாடர்ன் லாட்ஜுன்னு பேரு வெச்சா போதுமா?மாடர்னா போட்டி போட்டு ஓடிருக்க வேண்டாமா?

Geetha Sambasivam Says:
March 19th, 2006 at 4:54 pm e
Oru kalaththil koottam neriyum idam ippothu ippadiya? Maduraiyin mugam modern aga mari vittathu.Now she is a modern girl.

கில்லி - Gilli » Madurai, then & now - Dharumi Says:
April 8th, 2006 at 5:16 am e
[…] ‘எப்படி இருந்த நான் இப்படி ஆய்ட்டேன்’ என்று விவேக் ஸ்டைலில் மதுரை நகரம் புலம்பினால் எப்படி இருக்கும்? தருமியின் இந்தப் பதிவு போல இருக்கும்… […]

Saturday, March 04, 2006

139. எங்கள் கல்லூரி…



படித்தது என்னவோ வேறு இரு கல்லூரிகள்; வேலைபார்த்ததும் இரு கல்லூரிகளில்; இருப்பினும் ‘எங்கள் கல்லூரி’ என்றால் அது அமெரிக்கன் கல்லூரி என்றாகி விட்டது. 33 ஆண்டுகால உறவு என்பது மட்டுமே நிச்சயமாகக் காரணமல்ல.

கல்லூரியின் 125-வது ஆண்டு விழா சென்ற வாரம் நடந்தது. மற்றொரு பெரிய, நகரை விட்டு 15கி.மீ. தள்ளியுள்ள புதிய வளாகம் ஒன்றில் -satellite campus - பெப்.24-ம் தேதி புதிய கட்டிடம் ஒன்று திறக்கப் பட்டது. அடுத்த நாள்: Commemoration Day - வரலாற்றைத் திரும்பி நன்றியோடு நினைவுபடுத்திக் கொள்ளும் நாள்.


ஏழு ஆண்டுகளுக்கு முன்பு கல்லூரியின் முதல் கட்டிடமான Main Hall கட்டி முடிக்கப்பட்ட 90-வது ஆண்டு விழாவைச் சிறப்பாகக் கொண்டாட முடிவெடுக்கப்பட்டது. அவ்விழாவின் ஒருங்கிணைப்பாளராக இருக்க நான் அழைக்கப்பட்டேன். ஒரு முழு நாள் விழாவின் முக்கிய இறுதிப் பகுதியாக ஓர் ‘ஒலி-ஒளி’ நிகழ்ச்சி நடத்த ஏற்பாடு செய்திருந்தோம். அக்காட்சிக்கு அந்த மெயின் ஹாலே நிகழ்களமாக ஆக்கி, கல்லூரியின் முதல் இரு முதல்வர்களான (அமெரிக்கர்கள்) Zumbro and Wallace இருவரும் பசுமலையில் இருந்த சிறு கல்லூரியை வைகையின் வடகரைக்கு மாற்றுவது பற்றி பேசி, திட்டமிட்டு, முதல் கட்டிடத்தைக் கட்டி எழுப்பியதை ஒலி-ஒளி காட்சியின் கருத்தாகக் கொண்டு நடத்தினோம்.

இக்காட்சி பலருக்கும் கண்ணில் நீர் கோர்க்கும் அளவிற்குச் சிறப்பாக அமைந்ததற்குக் காரண கர்த்தாக்கள் இரு நண்பர்கள்: பேரா. பிரபாகரும், பேரா.சுந்தரும். நாற்பதே மாணவர்கள் படித்துவந்த அந்தக் காலத்திலேயே ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களைக் கொள்ளும் அளவிற்கு ஒரு கட்டிடம் கட்ட முனைந்த அந்த இரு பெரிய மனிதர்களின் ‘ஆவியே’ இறங்கி வந்ததால்தான் நிகழ்ச்சி அவ்வளவு சிறப்பாக அமைந்தது என்று நண்பன் சுந்தர் சொல்வதுண்டு.அந்த விழாவின் வெற்றி ஒவ்வொரு பிப்ரவரி மாதத்தின் கடைசி சனிக்கிழமையில் தொடர்ச்சியாகக் கொண்டாட வழிகோலியது.

சென்ற வாரத்தின் 25-ம் தேதி வழக்கம்போல் காலையிலிருந்து கொண்டாட்டாங்களின் நாளாக இருந்தது. வழக்கத்தை விட மாணவர்களின் கூட்டம் அதிகம். மதியம் ஒரு மணி முதல் மாலை 6மணி வரை நடத்தத் திட்டமிட்டிருந்த கலை நிகழ்ச்சிகள் 7 மணி வரை செல்ல, 7.30க்கு ஒலி-ஒளி நிகழ்ச்சி ஆரம்பித்தது. இம்முறை வாலஸ் மாணவர் விடுதி - Wallace Hostel - நிகழ்களமாக ஆனது. 7.30க்கு எல்லா விளக்குகளும் அணைந்த போது ஒரு சில விசில் சத்தங்கள். இருட்டில் 2000-க்கும் மேல் மாணவர்கள் இருக்கும்போது அதுகூட இல்லாவிட்டால் எப்படி? ஒரே ஒரு ஸ்பாட் லைட் எரிய கல்லூரி முதல்வர் அந்த ஒளி வட்டத்துக்குள் வர, மாணவர்கள் பகுதியில் இருந்து சத்தம். ஆனால், எல்லாமே ஏழெட்டு வினாடிகளுக்குத்தான். முதல்வரின் 4-5 நிமிட பேச்சுக்கு ஓர் அழகான அமைதி.



பிறகு ஒலி-ஒளி காட்சி. கல்வி என்பதே கைக்கெட்டாப் பொருளாக, உயர்சாதியினரின் உடைமையாக இருந்த ஒரு கால கட்டத்தில், சமூகத்தின் அடிமட்டத்தில் உழன்று கொண்டிருந்தவர்களுக்கும் கல்வி போய்ச் சேர வேண்டும் என்ற குறிக்கோளோடும், “In the service of God and people” என்ற தாரக மந்திரத்தோடும் உழைத்த பெருமக்களின் பரந்த மனத்தை, காலங்காலமாய் மெளன சாட்சியாய் நின்று பார்த்துக் கொண்டிருக்கும் அந்தக் கட்டிடம் இன்றைய மாணவர்களிடம் சாட்சி பகர்ந்தது; பெரிய ஞானிகளையும், விஞ்ஞானிகளை மட்டுமே உருவாக்குவதற்காக அல்ல இந்தக் கல்லூரி. தன் மடி மீது வரும் ஒவ்வொருவரையும் நல்ல மனிதனாய், மனித நேயனாய் மாற்ற முயலுவதே நம் முன்னோர்களின் எண்ணமாகவும் நம்பிக்கையாகவும் இருந்து வந்துள்ளது. உங்கள் ஒவ்வொருவரிடமும் அந்த நெருப்புப் பொறியை ஏற்றுவதே இந்தக் கல்லூரியின் நோக்கமும், ஆவலும் என்பது போன்ற வசனங்கள் பின்னால் ஒலிக்க இருண்ட பின்புலத்தில் ஒளியோடு பல காட்சிகள் நடந்தேறின.


‘அக்கினிக் குஞ்சொன்று கண்டேன் -அதை

அங்கொரு காட்டிலோர் பொந்தினில் வைத்தேன்

வெந்து தணிந்தது காடு - தழல்

வீரத்தில் குஞ்சென்றும் மூப்பென்றும் உண்டோ?

தத்தரிகிட தத்தரிகிட தித்தோம்

- என்ற முண்டாசுக்காரனின் வசனங்களோடும், திடீரென வெடிகள் மூலம் வானில் ஏற்படுத்தப் பட்ட வண்ணக் கோலங்களோடும் நிகழ்ச்சி முடிவுக்கு வந்தபோது அனைவரின் மனங்களும் உணர்வு வயப்பட்டிருக்க, அண்ணாந்து நோக்கிய முகங்களில் பெருமிதம் பூத்திருக்க விழா முடிந்தது. இந்த ஆண்டு நிகழ்ச்சி முழுமையாக பேரா. பிரபாகரின் மேற்பார்வையில், பழைய மாணவன் ஷண்முகராஜா (விருமாண்டியின் பேய்க்காமன்) -முயற்சியினால் நடந்தேறியது.

கடந்த ஒவ்வொரு வருடமும், இந்த நிகழ்ச்சிகளில் நான் பிரமிப்படைவது எங்கள் கல்லூரி மாணவர்கள் இந்த ஒலி-ஒளி காட்சிகளின்போது நடந்து கொள்ளும் விதமே. இந்த ஒலி-ஒளி நிகழ்ச்சிகளில் இளம் வயசுப் பசங்கள் கலாட்டா பண்ணுவதற்கேற்ற நேரமே. ஏனெனில் அவர்கள் வயது அப்படி; இருண்ட சூழல் வேறு. இருப்பினும் rising to the occasion என்பது எப்படி அவர்களுக்குச் சாத்தியமாகிறது; எந்த உணர்வு அவர்களை கட்டுக்குள் வைத்திருக்கிறது என்பது எனக்கு இன்றுவரை பிடிபடுவதேயில்லை. அதுதான் எங்கள் கல்லூரியின் பாரம்பரியமோ…








Pathivu Toolbar ©2005thamizmanam.com


Mar 04 2006 10:34 pm Uncategorized edit this
24 Responses
sarah Says:
March 4th, 2006 at 11:44 pm e
Thank you sir for post

I am always proud to say that I studied in
“The American College”.

It was nice moments i spent in my life there, where i learnt a lot and still have connection with that in terms of my best teachers, batch mates , friends and juniors even after i left the college. We always have some close feelings when we hear that somebody is from American College.

Thank you for the photos

sarah

தருமி Says:
March 4th, 2006 at 11:55 pm e
sara,
“I am always proud to say that I studied in “The American College”.//

it is always this feeling among the alumni that gives a place of pride to this great institution.
- thank you.

கோ.இராகவன் Says:
March 5th, 2006 at 12:15 am e
அதனால்தான் தமிழ் சொல்லுது….”அன்ன யாவினும் புண்ணியம் செய்தல் ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்…” அதை மறுக்கிறவன் நிச்சயம் உயர்ந்த சாதி என்று சொல்லிக் கொள்ள முடியாது.

அமெரிக்கன் கல்லூரியை நான் பலமுறை வெளியில் இருந்து பார்த்திருக்கிறேன். அது பற்றிப் பலர் சொல்லியும் கேள்விப்பட்டிருக்கிறேன். நல்லதொரு நினைவு கூறல்.

dharumi Says:
March 5th, 2006 at 9:14 am e
ஒரு சிறு பின் குறிப்பு:
24-ம் தேதி நடந்த புதிய வளாகத்திறப்பு விழாவிற்காக ஒரு சைக்கிள் பேரணி நடந்தது. கல்லூரியிலிருந்து மிகச் சரியாக காலை 6 மணிக்குப் புறப்பட்டு வழி நெடுக ஆசிரியர்கள் கண்காணிப்பில் இரண்டு இரண்டு பேராக யாருக்கும் எவ்வித இடைஞ்சலும் இல்லாமல் கண்ணியமாக நடைபெற்றது. விழா முடிந்த பிறகு இருபது இருபது மாணவர்களாகத் திரும்பிச் சென்றார்கள். அதிகாலை என்பதால் யாருக்குமே எந்த இடைஞ்சலும் இல்லை. வழியோ ஊருக்கு வெளியே.

ஆனால், அடுத்த நாள் தினமலரில் மாணவர்கள் ஊர்வலம் போக்குவரத்தை மிகவும் பாதித்ததாகவும், இது போன்றவை தேவையா எனவும் கேள்வி கேட்டிருந்ததாகக் கேள்விப் பட்டேன். பொறுப்பற்ற விதமாய் செய்திகள் தருவதென்பதே இவர்களின் வழக்கமோ என்று தோன்றியது.

இவர்கள் நடத்தும் கல்லூரிக்குத் தன்னாட்சிக் கொடுக்கப் பட்டிருப்பதாக இன்றைய செய்தித்தாள் தகவல். கல்லூரியையாவது நன்றாக நடத்த மாட்டார்களா என்றொரு ஆசை எனக்கு.

இளவஞ்சி Says:
March 5th, 2006 at 3:14 pm e
சும்மா போயிட்டு வந்த என்னோட காலேஜ் மேல 12 வருசம் ஆகியும் எனக்கு இத்தனை அட்டாச்மெண்டு இருக்கறப்ப 33 வருசம்னா உங்களுக்கு எவ்வளவு இருக்கும்?!!

இரண்டாவதா இருக்கற கல்லூரி போட்டோ சூப்பருங்க சார்!!

umarewa Says:
March 5th, 2006 at 5:44 pm e
chekkukkum sivalingaththirkum ,,,,,,,,,,,,

கைப்புள்ள Says:
March 5th, 2006 at 6:12 pm e
நம்மோட கல்லூரி பத்தி பேசறதுன்னா எப்பவுமே ஒரு தனி பிரியம் தான் இல்ல? எனக்கும் அப்படி தான். அமெரிக்கன் கல்லூரி பற்றியும் அதன் வரலாற்றைப் பற்றியும் அவ்வப்போது பத்திரிகைகளில் படித்திருக்கிறேன். பேராசிரியர்.சாலமன் பாப்பையா அக்கல்லூரி பேராசிரியர் என்று கேள்விபட்டிருக்கிறேன். நடிகர் விவேக் அக்கல்லூரி மாணவர் என்றும் கேள்வி. உங்க காலேஜின் பழைய மாணவர்கள்(celebrities) பத்தி மேலும் சொல்லுங்களேன்.

செல்வன் Says:
March 6th, 2006 at 8:56 am e
பார்ட்னர்,

மதுரையில் உள்ள மிகப்பெரிய கல்லூரி என கேள்விப்பட்டிருக்கிறேன்.ஆனால் நேரில் பார்த்ததில்லை.அமெரிக்கன் கல்லூரி ஆண்கள் கல்லூரி என ஒருவர் சொன்னார்.உண்மையா?அப்படியானால் அங்கு படிக்க போரடிக்குமே?

vaheesan selva Says:
March 6th, 2006 at 1:20 pm e
வணக்கம் தருமி,

தங்களின் கடவுள் நம்பிக்கை பற்றிய பதிவை படிக்க நேர்ந்தது.
தங்களைப்போலவே நானும் பல குழப்பங்களுக்குள்ளாகி இப்போது சற்றே தெளிவாகியுள்ளேன்.
நல்ல சிந்தனைகள். அதிலும் அதன் முடிவில் கண்ணதாசன் பாடல் வரிகளோடு இணைத்திருந்தீர்கள்.
மிக்க மகிழ்ந்தேன்.

தொடரட்டும் உங்கள் பணி….

வாழ்த்துக்களுடன்
வாகீசன்.

dharumi Says:
March 6th, 2006 at 2:32 pm e
முதல்வர் சாமுவேல் சுதானந்தா சொன்னது:

Sam, Thanks for sharing your comments with me. It was wonderful. Thanks once again. Sudanandha

தருமி Says:
March 6th, 2006 at 10:02 pm e
இராகவன்,
“அதை மறுக்கிறவன் நிச்சயம் உயர்ந்த சாதி என்று சொல்லிக் கொள்ள முடியாது.”//
- ஆனால், பல காலமா இருந்து வந்த விஷயமல்லவா அது. சொல்லப் போனால் அந்த எண்ணம் இன்னும் பலர் மனசில இருக்கே. “அவங்களால அவ்வளவுதான் முடியுமுங்க” அப்டின்னு சொல்லிக் கேட்டதில்லை?

தருமி Says:
March 6th, 2006 at 10:21 pm e
அதான் சொல்லவந்தேன் இளவஞ்சி.
இந்த ‘உறவுக்கு’ வெறும் 33 ஆண்டு மட்டுமே காரணம் இல்லை
…அதையும் தாண்டி…!
ஏன்னா இதவிட கூட வருஷம் இருந்திட்டு, திரும்பிப்
பாக்காதவங்களும் உண்டு.
இளவஞ்சி, கீழே ஒருத்தர் வாஹீசன் அப்டின்னு ஒருத்தர் புதுசா
வந்து பின்னூட்டம் போட்டிருக்கார்; அவர் ஃபோட்டோ போய் பாருங்க. அசத்தலா இருக்குல்ல அந்த தாடி. ஒரு information-தான். மற்றபடி ஒங்களுக்கு ஒண்ணும் suggest பண்ணலை!!!

தருமி Says:
March 6th, 2006 at 10:25 pm e
இளவஞ்சி.
அப்புறம் இன்னொரு விஷயம். அந்தக் கட்டிடம் நல்லா இருக்குன்னு சொன்னீங்களே. அது indo-saracenic architecture அப்டிங்கிறாங்க. இந்தக் கட்டிடம், சென்னை உயர் நீதிமன்றம், மைசூர் அரண்மனை இதெல்லாமே ஒரே ஆளால் வடிவமைக்கப்பட்டது என்று கேள்வி.

தருமி Says:
March 6th, 2006 at 11:03 pm e
மக்களே,
(வழக்கம்போல) தருமிக்கு ஒரு சந்தேகம்
மேலே உள்ள பின்னூட்டங்களில் இளவஞ்சி, உமாரீவா, கைப்புள்ள,செல்வன், வாகீசன் - இவர்களது பின்னூட்டங்கல் என் inbox-க்கு வராமலே, பின்னூட்ட மட்டுறுத்தலுக்குக் காத்திருந்தன.approve என்று கிளிக் செய்த பிறகு பின்னூட்டப் பகுதிகளில் தோன்றின.

ஆனால்..
ஷோலே பற்றிய பதிவில், பதமா அவர்களின் பின்னூட்டம் எனக்கு என் மயில் பொட்டியில் வராமல் நேராக மட்டுறுத்தலுக்குக் காத்திருந்தது. approve என்று கிளிக் செய்த பிறகும் இங்கு பின்னூட்டத்திற்கு வரவில்லை.
* ஏன் என் inbox-க்கு வராமல் பின்னூட்ட மட்டுறுத்தலுக்கு நேரடியாக வந்தது?
* மட்டுறுத்தப் பட்ட பிறகும் ஏன் பின்னூட்டத்திற்கு வரவில்லை?
* முன்பு சில தடவைகள், சில பின்னூட்டங்கள் inbox-க்கும் வராமல், மட்டுறுத்தலுக்கும் வராமல் நேரடியாக பின்னூட்டத்தில் வந்து விட்டன. அது எப்படி?

என்னதாங்க நடக்குது…?

Kumaran Says:
March 7th, 2006 at 9:02 am e
நானும் பாத்திருக்கேன் சார். அமெரிக்கன் கல்லூரியில படிச்ச பசங்களுக்கெல்லாம் அவங்க காலேஜ் மேல ஒரு தனிவிதமான பெருமையான உணர்வு இருக்கிறத. என் நண்பர்கள் பல பேர் சௌராஷ்ட்ரா கல்லூரியில் தான் படித்தார்கள்; ஒரு நெருங்கிய நண்பன் உங்கள் கல்லூரியில் படித்தான். அவனுக்கு எப்போதும் தான் அமெரிக்கன் காலேஜில் படிக்கிறோம் என்று ஒரு தனிப்பெருமை. சௌராஷ்ட்ரா காலேஜெல்லாம் ஒரு காலேஜா என்று சொல்லிக்கிட்டே இருப்பான்.

dharumi Says:
March 7th, 2006 at 9:29 am e
umarewa சொல்லி இருக்கிறதுக்கு அவரோ அல்லது
வேறு யாராவது கொஞ்சம் ‘நோட்ஸ்’ போடுங்களேம்’ப்பா!

உமாரீவா, மொத மொத வரும்போதே இப்படி ‘கிளப்புறீகளே’; வாங்க அடிக்கடி. ஆனா என்னமாதிரி ஆளுக்குப் புரியறது மாதிரி சொல்லுங்க..சரியா?

கைப்புள்ள,
“நம்மோட கல்லூரி பத்தி பேசறதுன்னா எப்பவுமே ஒரு தனி பிரியம் தான் இல்ல?”//-
- அவைகளை வெறும் கட்டிடங்களாகப் பாராமல், நம்ம வாழ்க்கையின் ஒரு பகுதியாகப்
பார்க்கும்போது நீங்க சொல்ற அந்த உறவு, பாசம் எல்லாம் வந்திருதில்ல.

dharumi Says:
March 7th, 2006 at 9:30 am e
பார்ட்னர்,

“அப்படியானால் அங்கு படிக்க போரடிக்குமே?”
தெரியலை. ஏன்னா நாந்தான் அங்க படிக்கலியே!

ஆனா ஒண்ணு பார்ட்னர், பசங்க மட்டும் இருக்கிற கிளாஸ்ல பாடம் நடத்துறது மாதிரி co-ed-ல் கிளாஸ் எடுக்கிறது interesting-ஆக இருந்ததில்லை. ஜோக்குல இருந்து எல்லாம் யோசிச்சு சொல்லணும். free flow will be the first victim in combined classes for a (நம்மள மாதிரி)teacher! (ஆமா, நீங்க எப்படி? என்னமாதிரி இல்லாம நல்ல வாத்தியாரா இருப்பீங்கல்ல? இருங்க!)

dharumi Says:
March 7th, 2006 at 9:32 am e
வாகீசன்,

புதிதாக வந்திருக்கிறீகள். நன்றி.
உங்க வீட்டுக்குப் போய் பார்த்தேன். சின்ன programmer அப்டின்னுட்டு IBM test அது இதுன்னு கலக்குறீங்க…நல்லா இருங்க. வந்து போய் இருங்க..நானும் அங்க வர்ரேன்.

உங்க தாடி பத்தி மேல ஒரு comment போட்டுருக்கேன்; பாத்தீங்களா? it suits you quite well !

dharumi Says:
March 11th, 2006 at 2:12 pm e
குமரன்,
அது உண்மைதான். மாணவர்களுக்கு மட்டுமல்லாமல் வேலை செய்ற வாத்தியார்களுக்கும் அந்த ‘நினப்பு’ உண்டு.

நான் வேலைக்குச் சேர்ந்த புதிதில் இன்னொரு கல்லூரிக்குச் சென்றிருந்த போது, நான் ஒருவருக்கு அறிமுகம் செய்யப் பட்டேன். அந்த ஆங்கிலத்துறை ஆசிரியர் ரொம்ப காஷுவலாக ‘hi’ என்றவர்,He is from American College’என்றதும் எழுந்து நின்று மரியாதை கொஞ்சம் அதிகமாகவே கொடுத்து, முகமன் கொடுத்தது இன்னும் நினைவில் இருக்கிறது.

கல்லூரி மாணவர்கள் மத்தியிலும் - பெண்கள் கல்லூரி உட்பட - இந்த வேறுபாடு பல்லாண்டுகளாகவே உண்டு.

srishiv Says:
March 12th, 2006 at 1:41 pm e
உண்மைதான்
கௌதம்ராஜ் சரிதம் புத்தகத்தில் படித்ததாக நினைவு???? அது திருநெல்வேலி கல்லூரி மற்றும் மதுரை அமெரிக்கன் கல்லூரி என்றுநினைவு, என் சித்தப்பாவும் அங்கு பயின்றவர்தான், அதன்பின்னர் தியாகராசர் பொறியியற்கல்லூரியில் பொறியியல் பயின்று திருநெல்வேலி தலைமை பொறியாளராக இருந்து சமீபத்தில் பணி ஓய்வு பெற்றார்
ஸ்ரீஷிவ்….:)

Rajan Says:
March 14th, 2006 at 11:15 pm e
Dear Dharumi

Is Pera.Sundar is our Kaa.Sundar?

Regards
Rajan

தருமி Says:
March 15th, 2006 at 9:20 am e
ராஜன்,
வேற யாரு…நம்ம ஆளு,தாடிக்கார காளி சுந்தரேதான். what an effort! and what an achievement! it was simply superb and the credit goes to those two guys out and out.

ஜோ Says:
March 15th, 2006 at 9:50 am e
நன்றி தருமி உங்கள் பகிர்வுக்கு.

150 வருடங்களை கடந்துவிட்ட எங்கள் திருச்சி ஜோசப் கல்லூரி நினைவுகளை தூண்டிவிட்டீர்கள்.

தருமி Says:
March 15th, 2006 at 12:05 pm e
மூத்தவங்களே ஜோ,
நன்றி..
பின்னூட்டம் மட்டும் போடறது; இப்போதைக்கு (தவ முயற்சியோ?)எழுதறதில்லைன்னு முடிவா?

Thursday, December 08, 2005

112. தல புராணம்…6

சாயுங்கால வேளைகள் பொதுவாக காலேஜ் ஹவுஸ் முன்னால்தான் என்றாலும், போரடிக்கக்கூடாதென்பதற்காக அவ்வப்போது அப்படியே காலாற நடந்து மேற்குக்கோபுரம், தெற்குக் கோபுரம், கிழக்குக் கோபுரமும் தாண்டி, அந்தப்பக்கம் அந்தக் காலத்தில் இருந்த மெட்ராஸ் ஹோட்டலில் போய் ஒரு சமோசாவும், டீயும் அடிச்சிட்டு மறுபடியும் வந்த வழியே திரும்பவும் நம்ம குதிரை நிக்கிற இடத்துக்கு வர்ரது ஒரு வழக்கம். அவ்வளவு தூரம் நடக்கச் சோம்பேறித்தனமான நாட்களில் மதுரை ரயில்வே ஸ்டேஷன் முன்னால் அப்போதிருந்த பாதைகளின் பக்கவாட்டில் போடப்பட்டிருக்கும் சிமெண்ட் கிராதிகளின்மேல் உட்கார்ந்து கொண்டு…ம்..ம்ம்…என்ன இனிய நேரங்கள்; என்ன பேசினோம்; எதைப்பற்றிப் பேசினோம் என்றெல்லாம் யாரறிவார்?


தெற்குக் கோபுரத்தின் உச்சியிலிருந்து….



…………..கோயிலின் உட்பக்கம்..

ரொம்பவே ஸ்பெஷலான நாட்களில், காலேஜ் ஹவுஸ் உள்ளே நுழைந்ததும் வலது பக்கம் இருக்கும் கடையில் சில ஸ்பெஷலான ஐட்டங்கள் இருக்கும்; பயந்திராதீங்க. அந்தக் கடையில் எல்லா magazines and newspapers கிடைக்கும். அவ்வப்போது வேறு வேறு பத்திரிக்கைகள், செய்தித்தாட்கள் வாங்குவதுண்டு. அதோடு, எல்லா foreign brand சிகரெட்டுகளும் கிடைக்கும் என்பது இன்னொரு விசேஷம். மறைந்து மறைந்து குடித்த நாட்களில் ஒரு பிராண்டும், அதற்குப் பின் வேறு ஒரு பிராண்டும் நமது ஃபேவரைட். அந்த முதல் ஃபேவரைட்: மார்க்கோபோலே-ன்னு ஒரு சிகரெட். வித்தியாசமா இருக்கும்; ப்ரெளண் கலர்; சப்பையா, ஓவல் வடிவில் இருக்கும்; வாசனை பயங்கர சாக்லெட் வாசனையா இருக்கும். எப்படியும் வருஷத்தில் இரண்டு மூன்று தடவை இந்த ஸ்பெஷல் சிகரெட். இதே மாதிரி - a poor man’s version of Marco Polo - Royal Yacht என்றொரு சிகரெட். அதே கலர்,வாசனை, சுவை…! இந்த ஸ்பெஷல் ஐட்டங்களை வாங்கிட்டு, மதுரை ரயில்வே ஸ்டேஷன் உள்ளே போய் - அப்பல்லாம் பிளாட்பார்ம் டிக்கெட் உண்டா இல்லையா என்றே தெரியாது -ஏதோ ஒரு ஒதுக்குப்புறத்தில் உட்கார்ந்து, பயந்து, ரசிச்சி…..ம்..ம்ம்..அது ஒரு காலம்! பயம் போன பிறகு ஃபேவரைட் ப்ராண்ட் மார்ல்போரோ சிகரெட்தான்…ஆடிக்கொண்ணு அம்மாவாசைக் கொண்ணுன்னு…




………..தெற்குக் கோபுரத்தின் உச்சியிலிருந்து..

பறவைப் பார்வையில் மதுரை….........


அந்த சாயுங்கால ஊர்சுற்றல்களில் அந்தக் கோயில் கோபுரங்களைத் தாண்டும்போதெல்லாம் அதன் உச்சிக்குச் செல்ல நினைத்ததுண்டு; ஆனால், அது நிறைவேற ஆண்டுகள் பல காத்திருக்க வேண்டியதாயிற்று.காமிரா கிறுக்கின் உச்ச நிலையில் கோயிலின் உள்ளும் புறமும் எடுத்தபிறகு, தெற்குக் கோபுரத்தின் மேல் ஏறுவதற்கு உத்தரவு வாங்கி, நண்பன் ரவியோடு கோபுரத்தின் உச்சிக்குப் படம் எடுக்கச் சென்றோம். பொன்னியின் செல்வனை அந்த வயதில் படித்த அனைவருக்குமே இருக்கும் ஒரு சாகச உணர்வு. ஏதோ பாண்டியர் காலத்திற்கே சென்று விட்டது போன்ற நினைப்பு. அந்தக் காலத்து குடிமக்கள் எல்லாம் நினைவில் வருவதில்லை; ராஜ குமாரர்களும், குமாரத்திகளும்தான் நினைவில். அசப்பில மணியனின் குந்தவி பிராட்டி நம்முடனே நடந்து வர்ர மாதிரி நினைப்புல மேல ஏறினோம். மேலே போனா கோபுரத்தின் உச்சியில் தெரியும் அந்த கலசங்களுக்கு நடுவில் ஓர் ஆள் நுழையும் அளவிற்கு துவாரங்கள். கலசங்களுக்கு இரு புறமும் அந்தப் பெரிய பூத கணங்களின் முட்டைக் கண்களும், நீண்டு வளைந்த பற்களும்..அம்மாடியோவ்! அதுவும் dead close-up…!



ரவியும், உடன் வந்த இன்னொரு நண்பனும் ரொம்ப சாதாரணமாக அதன் வழியே வெளியே சென்று, கோபுரத்தின் உச்சியின் மேல், வெளியே - open space-ல் - நின்றார்கள்.(top of the world ?) அதை நினைத்துப் பார்க்கையில் எனக்கு இப்போது கூட அடிவயிற்றில் அட்ரீனலின் சுரப்பதை உணர முடிகிறது. அதென்னவோ, உயரமான இடங்களின்மேல் ஏறி நின்றாலே இந்த அட்ரீனலின் தன் வேலையைக் காண்பிக்கும். இதுதான் vertigo-வா என்று தெரியாது. அட போங்கப்பா, நான் வெளியில் வரமாட்டேன்னு சொல்லிட்டு, இரண்டே இரண்டு படம் எடுத்தேன். ஒன்று அங்கிருந்து கோயிலின் உட்புறம் நோக்கி; இன்னொன்று கீழ் நோக்கி மதுரையை எடுத்தேன். (இங்கே இருக்கும் படங்கள்தான் அவைகள்). ரவி நிறைய எடுத்தான்.

இந்த எபிசோட் முடிந்த சின்னாட்களில் இதே கோபுரத்தின் உச்சிக்குச் சென்று, மேலே ஏறி, வெளியே நின்று, குதித்து, கோயிலின் உட்புறம் கல் வேயப்பட்ட ஆடிவீதியில் விழுந்து ஒரு இளைஞன் தற்கொலை செய்துகொண்ட பிறகு இந்தக் கோபுரத்தில் ஏறுவதற்குத் தடை விதிக்கப்பட்டதாக அறிந்தோம்.

Dec 08 2005 06:20 pm | சொந்தக்கதை.. | | edit this
Rate this post at www.thamizmanam.com
இதுவரை விழுந்த "உள்குத்து" நிலைமை பாருங்க!!??:
(இதுவரை 2 பரிந்துரைகள்)

ஹலோ, வந்தது வந்தீங்க; வந்ததுக்கு ஒரு வோட்டு / வேட்டு போட்டுட்டு போறதுதானே! சும்மா அப்டியே போய்ட்டா எப்படி??
5 Responses
குமரன் Says:
December 8th, 2005 at 8:06 pm e
தருமி ஐயா, இதெல்லாம் எனக்கு நினைவு தெரிஞ்ச நாட்களுக்கு முன்னால நடந்திருக்கும்னு நெனைக்கிறேன். ஏன்னா எங்களை எல்லாம் கோபுரத்துல ஏற யாரும் விட்டதில்ல.

மெட்ராஸ் ஓட்டல் எனக்கு தெரிஞ்சு T.M. கோர்ட்ல (மேலமாசி வீதி, தெற்குமாசி வீதி முக்கு) தான் இருந்துச்சு. சிக்கன் பிரியாணிக்கும் சிக்கன் சாப்ஸ்க்கும் ரொம்ப பேமஸ் (எனக்கு இது ரெண்டும் அந்த ஓட்டல்ல பிடிக்கும். அதனால பேமஸ்ன்னு போட்டாச்சு). நீங்க அந்த ஓட்டலத்தான் சொல்றீங்களா?

தருமி Says:
December 8th, 2005 at 9:31 pm e
“எங்களை எல்லாம் கோபுரத்துல ஏற யாரும் விட்டதில்ல. “//
- அதனாலதான குமரன் இந்தப் பதிவு.
இறந்த பையன்கூட நண்பன் ஒருவனுக்குத் தெரிந்தவரின் தம்பி.
நீங்க சொல்ற மெட்ராஸ் ஹோட்டல் தெரியும். அதுக்குப் பக்கத்தில தான் நான் முந்தி சொன்ன பேமஸ் இட்லிக்கடை இருந்தது. இன்னொரு மெட்ராஸ் ஹோட்டல் நான் சொல்ற இடத்தில், செண்ட்ரல் மார்க்கெட் பக்கம் உயரமான படிக்கட்டோடு இருக்கும்.

பல்லவி Says:
December 8th, 2005 at 9:56 pm e
உம் மதுரையை நினைத்தால் ஞாபகம் வருவது கோபுரங்களும்,கோயில் கடை வீதியும் தான்.அப்புறம் இந்த தமுக்கம் மைதானம் பக்கத்தில் இருக்கும் நகராட்சி பூங்காவில் இருக்கும் பிள்ளையார் கோவிலும் கொஞ்ஞம் தள்ளி இருக்கும் பெருமாள் கோவிலும் தான்.உங்கள் பகுதியில் பழைய நினைவுகளை அலசுகிறீர்கள்.நடக்கட்டும்!

ivarugala Says:
December 9th, 2005 at 2:11 am e
இப்பக்கூட அந்த தருணத்தை நினைத்தால் புல்லரிக்குதுங்க தருமி.

தருமி Says:
December 9th, 2005 at 9:44 pm e
ivarugala என்ற அழகுரவிப் பையா,
வேற ஏதாவது முக்கியமான விஷயம் விட்டுப் போயிருந்தா எடுத்துக் கொடு; சரியா…?

Tuesday, November 22, 2005

108.தல புராணம்…5



*
ஏனைய பதிவுகள்:
1...................
2..................
3...................
4..................
5..................



*

ரீகல் தியேட்டர் உறவு பல ஆண்டுகள் நீடித்தது. பின்னால் பரமேஸ்வரி என்று இன்னொரு தியேட்டர் ஆங்கிலப் படங்களுக்கெனவே வந்து, அதுவும் எங்கள் வீட்டுப் பக்கமே இருந்தது வசதியாகப்போனது. அதன் பின் வேறு சில தியேட்டர்களும் ஆங்கிலப் படத்துக்கென்றே வந்தன. ஆனாலும், அந்த ரீகல் தியேட்டரும், தனிப்பட்ட அதன் culture-ம், அதில் படம் பார்க்கும் ரசனை மிகுந்த கூட்டமும் - எல்லாமே காலப் போக்கில் ஓர் இனிய கனவாகிப் போயின. இப்போது வெளிப்பூச்செல்லாம் அழகாகச் செய்யப்பட்டு, ‘பளிச்’சென்று இருந்தாலும், ஐந்தரை மணிவரை வாசகசாலையாக இருந்து, அதன்பின் ஏதோ மாயாஜால வித்தை போல் சடாரென தியேட்டராக மாறும் அந்த இனிய நாட்கள் இனி வரவா போகின்றன?



‘ரீகல் நாட்க’ளின் தொடர்பு இருந்தபோது, அதிலிருந்து 50 மீட்டர்தொலைவுகூட இல்லாத ‘காலேஜ் ஹவுஸ்’ என்ற லாட்ஜிடமும் ஒரு தொடர்பு ஏற்பட்டது. இது ரீகல் தியேட்டரிலிருந்து ஆரம்பமாகும் டவுண் ஹால் ரோடு என்ற மதுரையின் மிக முக்கிய ரோட்டில் உள்ள பழம்பெருமை பேசும் மதுரையின் இன்னொரு ‘தலம்’!



படம் பார்க்காத நாட்களில் எங்கள் நண்பர்கள் கூடும் ‘joint’ இந்த லாட்ஜின் முன்னால்தான். படத்தில் தெரியும் ஜுபிடர் பேக்கரி முன்னால் நம்ம குதிரை -அதாங்க, நம் ‘ஜாவா’ - ஒவ்வொரு மாலையும் நிற்கும். அதற்குப் பக்கத்தில் இருபுறமும் நாலைந்து சைக்கிள்கள். நண்பர்கள் குழாம் கூடிவிடும். ஆறு மணி அளவில் வந்தால் எட்டு ஒன்பது மணி வரை இந்த இடமும், இதைச் சார்ந்த இடமும்தான் நம் அரட்டைக் கச்சேரி மேடையேறும்; எல்லா விஷயங்களையும் அலசி, ஆராய்ந்து, துவச்சி, காயப்போட்டுட்டு, அதற்கு அடுத்த நாள் வந்து அதை எடுத்து மீண்டும் அலச ஆரம்பிக்கிறது. ஆர அமர்ந்து அரட்டை அடித்த இடம் இது என்று இப்போது யாரிடமேனும் சொன்னால் நம்பாமல் ஆச்சரியப்படுகிறார்கள். ஏனெனில் இப்போது இங்கு நிற்கக்கூட முடியாது; அவ்வளவு ஜன நெரிசல். கீழே உள்ள படத்தைப் பார்த்தாலே இப்போது எப்படி இருக்கிறதென்பது தெரியும்.

ஆனால் இந்த ‘காலேஜ் ஹவுஸ்’ அதுக்கு முந்தியே நம்ம வாழ்வில் ஒரு இடம் பிடிச்சிரிச்சி. சின்னப் பையனா இருந்த போதே, இந்த காலேஜ் ஹவுஸுக்கு ஒரு தனி ‘மருவாதி’ உண்டு. அப்போவெல்லாம், நயா பைசா காலத்துக்கு முந்தி காபி, டீ எல்லாமே ஓரணாவிற்கு விற்கும்; நயா பைசா காலம் வந்ததும், காபி, டீ விலை சாதாரணமா 6 பைசா; ஸ்பெஷல் காபி’ன்னா 10 பைசா. அந்தக்காலத்திலேயே, அந்த மாதிரி 10 பைசாவுக்கு காபி, டீ விற்கும்போது காலேஜ் ஹவுஸில் காபி நாலரையணா, அதன்பின் 30 பைசா. அதாவது, வெளியே விற்கும் விலையைவிட 3 மடங்கு அதிகம். அப்போ, எங்க வீட்டுக்கு ஒரு உறவினர் வருவார். வந்ததும் முதல் வேலை, ஒண்ணு அப்பா சைக்கிள் இல்ல..வாடகை சைக்கிள் எடுத்துக்கிட்டு, என்னையும் பின்னால உட்கார வச்சுக்கிட்டு - நான் தான் அவருக்கு சந்து பொந்து வழியா வழி சொல்ற வழிகாட்டி - நேரே காலேஜ் ஹவுஸ் போய் காபி குடிக்கிறதுதான். எனக்கு அவர் காபி குடிக்கிறதுக்காகவே ஊர்ல இருந்து வர்ராரோன்னு தோணும். அப்படி ஒரு மகிமை அந்த காபிக்கு. அந்தக் காபியின் மகத்துவம் பற்றி நிறைய வதந்திகள் - யாரோ ஒரு சாமியார் கொடுத்த ஒரு மூலிகை ஒன்றை சேர்ப்பதலாயே அந்த ருசி; அப்படியெல்லாம் இல்லை. காபியில அபின் கலக்குறாங்க; அதனாலதான் அந்த டேஸ்ட். அதனாலேயே இந்த காபி குடிக்கிறவங்க அது இல்லாம இருக்க முடியாம (addiction என்ற வார்த்தையெல்லாம் அப்போ தெரியாது) ஆயிடுறாங்களாம். இப்படிப் பல வதந்திகள். எது எப்படியோ, நிறைய பேர் இந்தக் கடை காபிக்கு அடிமையாய் இருந்தது என்னவோ உண்மைதான்.

சின்ன வயசில ‘வேப்ப மர உச்சியில நின்னு பேயொண்ணு ஆடுது…’அப்டின்றது மாதிரி இது மாதிரி எத்தனை எத்தனை வதந்திகள். அதையே ஒரு பெரிய லிஸ்ட்டாகப் போடலாம். இந்த காலேஜ் ஹவுஸுக்குப் பக்கத்து சந்திலதான் ஆசியாவின் மிகப் பெரிய தியேட்டர் என்ற பெருமையோடு இருந்தது - தங்கம் தியேட்டர். ஒரு பெரிய கால்பந்து மைதானத்தையே உள்ளே வைத்து விடலாம்போல அவ்வளவு பெரிய தியேட்டர். சுற்றியும் பெரிய இடம். தியேட்டரின் வெளி வராந்தாவே அவ்ளோ அகலமா இருக்கும். இதுதான் நான் சிகரெட் குடிச்சி, போலிசிடம் பிடிபட்டு, ஆங்கிலத்தால தப்பிய ‘தலம்’! இந்த தியேட்டரில் கூட முதல் நாள் படம் பார்க்க டிக்கெட் வாங்கும் இடத்தில் கூட்டத்தில் சிக்கி உயிர் இழந்த சினிமா ரசிகர்கள் உண்டு என்றால் எங்கள் ஊரின் மகிமையை என்னென்று சொல்வது! இந்த தியேட்டர் கட்டும்போது - அப்போது நான் நான்காம் ஐந்தாம் வகுப்பு மாணவனாயிருந்திருப்பேன் என்று நினைக்கிறேன். பல கதைகள் காற்றில் வந்த நினைவு இருக்கிறது. நரபலி கொடுத்ததில் பானை நிறைய கிடைத்த தங்க காசுகள் வைத்துக் கட்டப்பட்ட தியேட்டர் என்றார்கள். இதன் முகப்பு மீனாட்சி அம்மன் கோயிலைவிட உயரமாகப் போய்விடும் என்பதால் அந்த முகப்பைக் கட்ட அனுமதி மறுக்கப்பட்டது என்று பின்னாளில் கேள்விப் பட்டோம். ஆனால் அந்த சமயத்தில் நரபலிக் கதையின் தொடர்ச்சியாக வேறு சில கதைகள் மிதந்தன.

இப்போது இந்த தியேட்டரின் படத்தைப் போட ஆசைப் பட்டு படம் எடுக்கப் போனால், மிகவும் பரிதாபமாக முள்ளும் செடியும் மரமுமாய் பாழடைந்து பரிதாபக் கோலத்தில் இருக்கிறது. படம் எடுக்கவும் அனுமதியில்லை. என்ன பிரச்சனையோ. ஒரு காலத்தில் சிவாஜி கணேசன் இதை வாங்கப் போறதாகவும் ஒரு வதந்தி. பல வதந்திகளில் முதலிலிருந்தே சிக்கியிருந்த அந்த பிரமாண்டமான தியேட்டரைத்தாண்டி வரும்போதும், பார்க்கும்போதும் அதன் அன்றைய நாளின் சிறப்பு கண்முன்னே வருகிறது. என்ன, இன்னும் சில ஆண்டுகளில் அங்கே ஒரு பெரிய ஹோட்டலை எதிர்பார்க்கலாம் என்று நினைக்கிறேன்.

இப்படி, ரீகல் தியேட்டர் போல் பிரபல்யமான இடங்களும், தங்கம் தியேட்டர் மாதிரியான பிரமாண்டமான இடங்களும் மிகக் குறுகிய காலத்திலேயே இருந்த இடம் தெரியாமலோ, அல்லது தங்களின் உன்னதங்களை இழந்து போவதென்றால் மனுஷ ஜென்மத்தைப் பற்றி சொல்ல என்ன இருக்கிறது? அதிலும் ஒன்று ‘வெள்ளையடிக்கப்பட்ட கல்லறைகள்’ என்று சொல்வதுபோல, வெளியே பார்க்க அழகு; உள்ளே சீழும், பேனும் என்பது போலவும், இன்னொன்று முற்றுமாய் எல்லாம் இழந்து பரிதாபமுமாய் நிற்பதைப் பார்க்கும்போது என்ன சொல்வதென்றே தெரியவில்லை.

QUE CERA CERA…








Nov 22 2005 10:10 pm | சொந்தக்கதை.. | | edit this
Rate this post at www.thamizmanam.com
இதுவரை விழுந்த "உள்குத்து" நிலைமை பாருங்க!!??:
(இதுவரை 8 பரிந்துரைகள்)

ஹலோ, வந்தது வந்தீங்க; வந்ததுக்கு ஒரு வோட்டு / வேட்டு போட்டுட்டு போறதுதானே! சும்மா அப்டியே போய்ட்டா எப்படி??
20 Responses
Kumaran Says:
November 22nd, 2005 at 11:05 pm e
நம்ம ஊர் புராணம் சொல்றீங்க அதனால ஒரு + போட்டுட்டேன். ரீகல் தியேட்டர் (தங்க ரீகல் ஆவதற்கு முன்) உரிமையாளர்களில் (14 பேர் இருந்தார்கள்) என் தாய்வழி தாத்தாவும் ஒருவர் என்பதால் நிறைய படங்கள் பாப்கார்னுடன் ஓசியில் பார்த்திருக்கிறேன்.

சன்னாசி Says:
November 23rd, 2005 at 12:49 am e
//இந்த தியேட்டரில் கூட முதல் நாள் படம் பார்க்க டிக்கெட் வாங்கும் இடத்தில் கூட்டத்தில் சிக்கி உயிர் இழந்த சினிமா ரசிகர்கள் உண்டு என்றால் எங்கள் ஊரின் மகிமையை என்னென்று சொல்வது!//

என்னதான் தள்ளுமுள்ளாக இருந்தாலும், கம்பியில் காலைவைத்து ஏறுகிறேன் என்ற சாக்கில் வரிசையில் முன்னால் நிற்கும் ஆள் தோள்மேல் ஏறி நடந்து கூட்டத்துக்குள் பாயும் rock starகள் போல சர்வசாதாரணமாக சினிமா டிக்கெட் கவுண்ட்டரைநோக்கிப் படையெடுக்கும் நபர்களை முதன்முதலாக மதுரையில்தான் (மாணிக்க விநாயகரில், அதுவும்!!) பார்த்தேனென்பதை இங்கே கூறிக்கொள்ள விரும்புகிறேன் . பார்க்கச் சென்றது Gladiator படமென்பது உபரித் தகவல்!!

Rajan Says:
November 23rd, 2005 at 2:37 am e
Dear Dharumi

In another corner of college house around 6-7 PM I used to be there standing with another group. In your busy chit-chat with your friends you would not have noticed a slim person in his kadar dhoti and shirt wearing a specs chatting with another group in another corner of the same college house. That person is now deciding the financial fate our country.

People used come in their Enfield Bullets from neighbourhood villages just to have a coffee and meet friends in college house. The full meals lunch of college house was very famous next to its coffee once upon a time. Now a days for coffees small roadside chains like Visalam are famous. Taste the coffee at Rajendra in a small lane (the one in my photo album) next to Sai Engg in Townhall road. They still maintain a superb taste.

Now a days it is very difficult to find a suitable joint near townhall road. Since college house became crowded we started assembling behind Sarvodhya Ilakkiyap Pannai. Hmm, I miss all those days crisscrossing the town without any purpose, chitchatting, going to second show movies, chatting for another couple of hours after the movie was over. That was a life.

When I sought a permission to apply for a passport, Major.PPC told me ‘Maduraiyai Chuthuna Kazhuthai kooda veliya pogaathu, neeya pogap pora?’

Regards
Rajan

Rajan Says:
November 23rd, 2005 at 2:45 am e
One more titbit:

The land where the current college house stands was originally acquired to build the current Madura College. Somehow instead of college, a lodge with boarding facility came up. So it acquired the name college. Seerkazhi Sivachidambaram is married to the daughter of this complex. Rest you carry on. There was a joke on how rickshaw waalaahs used to bring people from railway station to college house.

Regards
Rajan

துளசி கோபால் Says:
November 23rd, 2005 at 3:10 am e
தருமி,

காலேஜ் ஹவுஸ்ன்னு சொன்னதும் எனக்கு ஞாபகம் வர்றது என்னன்னா, அடுக்களை
பக்கத்துலே ஒரு பெரிய ஹாலிலே ஆட்டுக்கல்லுங்களாப் போட்டிருக்கும். எல்லாம்
மின்சாரத்தாலே வேலை செய்யும். கடமுடகடமுடான்னு தானே மேல்குழவி சுத்திச்சுத்தி
ஆட்டறதை வேடிக்கைப் பார்க்க எனக்கு ரொம்ப இஷ்டம்! ஒரு இரும்புச் சங்கிலி குழவியோட
சேர்த்திருப்பாங்க.

அதுசரி, நான் ஏன் மாவாட்டற இடத்துக்குப் போனேன்னு கேட்டுறாதீங்க

அந்தக் காலத்துலே மதுரைக்கு வர்றப்பெல்லாம் காலேஜ் ஹவுஸ்லேதான் தங்குவோம்.

அப்படி வர்றப்ப ‘தங்கத்துலே’ படம் பாக்கறதும் உண்டு.

வெளிகண்ட நாதர் Says:
November 23rd, 2005 at 5:22 am e
நீங்கள் சொல்ற மாதிரி சில தியோட்டர்ங்க பெருமையெல்லாம் அந்தந்த காலகட்டத்தோட முடிஞ்சு போவுது. நமக்குத்தான், பழய நினப்புதான், பேராண்டி, பழய நினப்புதாங்கிற மாதிரி அல்லாடுது. எதுவுமே நிலையைல்ல, இருந்த உருத்தெரியாம போவும்னு சொல்றாங்களே, அது மனுஷ ஜன்மத்தையும் சேத்து தான்.

தருமி Says:
November 23rd, 2005 at 2:27 pm e
குமரன்,
நீங்கள் பாப்கார்ன் மட்டும்தான் சாப்பிட்டிருப்பீர்கள் என்றே நினைக்கிறேன். அந்த வயசில் பாவம் உங்களை எந்தப் படம் பார்க்க அனுமதித்திருக்கப் போகிறார்கள்!

இப்போது மூடிக்கிடக்கும் நியூ சினிமா தியேட்டரும் அந்த குரூப்புக்கு உரியது என்பார்களே? உண்மையா?

குத்துக்கு நன்றி

தருமி Says:
November 23rd, 2005 at 2:32 pm e
சன்னாசி,
ஹும்..முந்தா நாள் வந்த படம் gladiator; அத நேத்து பாத்துட்டு இப்படி அசந்து நிக்கிறீங்க! அந்தக் காலத்தில சிவாஜி, எம்.ஜி.ஆர். படம் வந்தா முதல் இரண்டு நாள்ல கட்டாயம் எந்த தியேட்டரா இருந்தாலும் ஒண்ணு ரெண்டு சாவு or at least குத்துவெட்டு நடக்கலன்னா என்ன ஊரும்பாங்க, தெரியுமா?

தருமி Says:
November 23rd, 2005 at 2:36 pm e
Rajan,
thanks for the tips. that gives me a chance to write about the ‘famous’ roadside coffee joints including vishalam. let me write it as an annexure to this.

“That person is now deciding the financial fate our country. ” // - whom do you mean, P.C. ..??

தருமி Says:
November 23rd, 2005 at 2:40 pm e
துளசி,
நீங்க என்ன சொல்லுங்க…”ஏன் மாவாட்டற இடத்துக்குப் போனேன்னு கேட்டுறாதீங்க ..” - இதில என்னமோ இருக்கு. உண்மையைச் சொல்லிடுங்க எங்கிட்ட மட்டும்; நான் யார்ட்டயும் சொல்லலை, சரியா?

தருமி Says:
November 23rd, 2005 at 2:42 pm e
வெளிகண்ட நாதர்,
நம்ம வாழ்க்கையோடு ஒன்றிவிட்ட சில விஷயங்களைத் திரும்பிப் பார்க்கும்போது-nostalgia ? - ஒரு சின்ன கலக்கம்தான்; இல்லியா?

தருமி Says:
November 23rd, 2005 at 2:47 pm e
குமரன்,
அது என்ன என் பதிவின் பின்னூட்டத்தில் மட்டும் உங்கள் படம் வரவில்லை?

குமரன் Says:
November 23rd, 2005 at 3:45 pm e
//அந்த வயசில் பாவம் உங்களை எந்தப் படம் பார்க்க அனுமதித்திருக்கப் போகிறார்கள்//

உண்மைதான். எல்லா படத்துக்கும் என்னை அனுமதித்தது கிடையாது. எங்க அப்பா மட்டும் போய் பார்ப்பார்.

//இப்போது மூடிக்கிடக்கும் நியூ சினிமா தியேட்டரும் அந்த குரூப்புக்கு உரியது என்பார்களே? உண்மையா?// உண்மை.

//அது என்ன என் பதிவின் பின்னூட்டத்தில் மட்டும் உங்கள் படம் வரவில்லை? // ஏன் என்று எனக்குத் தெரியவில்லை.

Rajan Says:
November 24th, 2005 at 12:21 am e
Yes Sir, It was PC. That was in early 80s. One day, by pointing him my friend whispered in my ears “see that person is paana cheena who translates Indira’s speeches in meetings’. He used to be seen in college house frequently along with aavanna rathinam et al. College House book store is the only place in Madurai, where you can find everything from Time magazine to Kanayaazhi. For a city like Madurai where public parks and beaches are of unheard things, college house served the purpose of everything. Another peaceful airy place is Kovil’s aadi veedhi, the beach of Madurai.

Yes, you may write about such roadside popular joints like visalam, mudaliyar idli, konar mess, nagapattinam kadai etc too, pl. feel free to use that idli shop photo, if you need. Although lot of big hotels came to Madurai my favorite eating places are still the Rajendra, Gobu Iyengaar, Modern Rest, visalam cofee only.

New Cinema, Reagel, Thangam, Parameswari were managed by a group of partners I think.

Thanks
Rajan

anand Says:
November 24th, 2005 at 10:52 am e
தருமி. நன்றி. நான் இன்னும் பார்க்கவில்லை
எங்கே படம் ??

தருமி Says:
November 24th, 2005 at 11:17 am e
ஆனந்த்,
http://dharumi.weblogs.us/2005/11/08/124- படம்தான் சொன்னேன்.

தருமி Says:
November 24th, 2005 at 11:22 am e
rajan,
i had missed the opps to be some bigwig by a whisker, it seems!

கோ.இராகவன் Says:
November 24th, 2005 at 4:11 pm e
தருமி, எனக்கு விவரம் பத்தாத சிறு வயதில் (இப்ப என்ன பத்துதுன்னு கேக்காதீங்க) தங்கம் தேட்டரில் மலையூர் மம்பட்டியான் படம் பார்த்தேன். பிறகு தூத்துக்குடிக்குப் போய், சார்லஸ் தேட்டர் அளவுக்குப் பெரிய தேட்டர் மதுரைல ஒன்னு இருக்குன்னு நண்பர்கள் கிட்ட சொல்லீட்டு இருந்தேன். அது உண்மையில்லை. தங்கம் உண்மையிலேயே மிகப்பெரியது என பிறகு உணர்ந்தேன்.

சென்ற முறை மதுரை சென்ற பொழுது தங்கியிருந்தது காலேஜ் ஹவுசில். பழைய பளபளப்பு இல்லாவிட்டாலும் சாப்பாடு பிரமாதம். தோசை போன்ற ஐட்டங்கள் சூப்பர்.

மணியன் Says:
November 24th, 2005 at 5:05 pm e
மதுரையின் காலேஜ் ஹவுஸ் மற்றும் ரீகல் பற்றியெல்லாம் முன்பே குமுதம், விகடன் மதுரை சிறப்பிதழ்களில் வந்திருந்தாலும், அவற்றோடு இணைந்திட்ட நினைவுகளை நீங்கள் பகிரும்போது அவற்றின் முழு பரிமாணம் உணரமுடிகிறது. எல்லோருக்கும் அவரவர் மதுரை நிகழ்வுகளை நினைவுக்குக் கொண்டு வருகிறது.

தருமி Says:
November 25th, 2005 at 2:05 pm e
இராகவன்,
உங்க ஊரு சார்லஸ் தியேட்டர்தான கப்பல் மாதிரி இருக்கும்?

நன்றி, மணியன்.

Sunday, October 16, 2005

94. தல புராணம்…4

* ஏனைய பதிவுகள்:

1...............

2.............. 

3............... 

4............. 

5............. 




*







சொகுசான அறை; சின்ன நண்பர்கள் குழாம்; புதிதாக ஏற்படுத்திக்கொண்டிருந்த புகைப்பழக்கம் - வாழ்க்கை நல்லாவே போச்சு. ஒரு கெட்ட பழக்கம் பழகியாச்சு. அந்தப் பழக்கமும் 1990 ஜனவரி 10 தேதி இரவு 12 மணி வரை தொடர்ந்தது. இன்னொரு பழக்கம் சொன்னேனே - அது நல்ல பழக்கமா, இல்ல கெட்ட பழக்கமா? நீங்களே முடிவு பண்ணிக்கீங்க,, சரியா?

எங்களுக்குக் கொடுக்கப்பட்ட அறை அந்த காம்பஸின் கடைசியில், மேற்கு மூலையில் இருந்தது. அதை ஒட்டி காம்பவுண்டு சுவர். எங்கள் ‘முன்னோர்கள்’ எங்களுக்கு வைத்து விட்டுப் போயிருந்த இன்னொரு வசதி என்னவென்றால், எங்கள் அறையை ஒட்டிய காம்பவுண்ட் சுவற்றில் ஏறிக் குதிப்பதற்குரியவாறு அங்கங்கே செங்கல்கள் பெயர்ந்திருக்கும். நாங்கள் அந்த காம்பஸுக்குள் வருவதற்கு இதுவே சுலப வழி எங்களுக்கு. ஒரு டீ குடிக்கணுமா, ஒரு ‘இழுப்பு’ இழுக்கணுமா, சும்மா ஒரு ஜம்ப்; அவ்வளவுதான். எங்களுக்குத்தான் அத்தனை சுலபம். எல்லாருக்கும் அப்படியெல்லாம் முடியாது. எங்கெங்கே செங்கல்லில் ஓட்டை, இன்னும் பல விஷயம் அதில…லேசுப்பட்ட டெக்னிக் இல்ல. இதுக்கெல்லாம் பிறகு ஏதோ போனா போகுதுன்னு, அப்பப்போ படிக்கக் கூட செய்வோம்!

பள்ளியிறுதி வரை வீட்டுக்குத் தெரியாமல் போனது ஒரே ஒரு சினிமா. எப்படியோ, தைரியமாய், காசெல்லாம் செட்டப் பண்ணி நண்பர்களின் வற்புறுத்தலிலும், சுயமாய் வளர்த்துக்கொண்ட தைரியத்திலும் (?) ஒரு பெரிய ரிஸ்க் எடுத்து பார்த்தது அந்த சினிமா. மற்றபடி சினிமா போனா வீட்டோடு; இல்ல ஊர்ல இருந்து விருந்தாட்கள் யாரும் வந்தால் ஒட்டிக்கிறது அவ்வளவுதான். இங்கிலீசு படம் எல்லாம் ஒண்ணிரண்டு - எல்லாம் சாமி படங்கள் -தப்பா எடுத்துக்காதீங்க, இப்ப சொல்ற ‘சாமி படங்கள்’ இல்ல. நிஜ சாமி.. Ten Commandments மூணுதடவை பாத்தேன். எப்டீங்கிறிங்களா? முதல்ல வீட்டோட; அதுக்குப் பிறகு இந்தப் படம் பார்க்கவே ஊரிலிருந்து வந்த உறவு மக்களோட - ஒரு guide மாதிரி வச்சுக்கங்களேன்!

அதில என்னென்னா, பாத்த அத்தனை இங்கிலீசு படங்கள்ல வர்ர மூஞ்சு எல்லாம் ஒரே மாதிரிதான் தெரிஞ்சுது. முதல் சீன்ல செத்துட்டான்னு நினச்சவன் அடுத்த சீன்ல மறுபடியும் உயிரோடு வருவான்! ஏதோ, ‘Ten Commandments’ மட்டும் ஒரு ஆளு-Charlton Heston- தாடியோடவும், மொட்டைத்தலையோடு Yul Brynner வந்ததும் நல்லதாப் போச்சு.


காம்பஸுக்குப் போனால் இரவு ஒன்பது மணிக்கெல்லாம் வீட்டில் ஆஜராகி இருக்கவேண்டுமென ஸ்ட்ரிக்ட் ரூல். அதனால, இந்த சினிமாவுக்குப் போற எண்ணமே வந்ததில்லை. ஏதோ , ஒரு டீ குடிச்சமா, ஒரு தம் அடிச்சமான்னு இருந்தோம். அப்பதான் ரீகல் தியேட்டர் பற்றி மக்கள் விவரமா சொன்னாங்க. எப்படி no risk-ல இங்கிலீபீசு படம் பாக்க முடியும்னு தெரிஞ்சிச்சு.


ஊருக்கு ஊர் பிரிட்டீஷ்காரங்க டவுன் ஹால்னு ஒண்ணு கட்டிப் போட்டிருப்பாங்க போல. அது மாதிரி இது ஒரு ஹால்; எட்வர்டு ஹால்னு பேரு. மதுரை ரயில் நிலையம் விட்டு வெளியே வந்ததும் மெயின் ரோட்ல இருக்கு. இந்த தியேட்டருக்கு எதிர்த்தாற்போல கிழக்கே போற ரோடுதான் டவுன் ஹால் ரோடு; நேரே போனா மீனாட்சி அம்மன் கோவில்தான். இந்த தியேட்டரிலிருந்து பார்த்தாலே கோவிலின் மேற்குக் கோபுரம் தெரியும்.(படம் -கீழே)


இந்த தியேட்டர்ல ஒரு விசேஷம் என்னன்னா, பகல் முழுவதும் இது ஒரு வாசகசாலை. சாயங்காலம் ஆறு மணிக்கு அதை மூடி, பென்ச்,ஸ்க்ரீன் அப்படி இப்படி ஒரு பத்து நிமிஷத்தில தியேட்டரா புது ஜென்மம எடுத்திடும். ஆறரை, ஆறே முக்கால் மணிக்கு மேலதான் டிக்கெட்டே கொடுக்க ஆரம்பிப்பார்கள். ஏழு மணிக்கு அப்போதெல்லாம் சட்டமாக இருந்த அரசு நியூஸ் ரீல போட்டு (ஆமா, இப்போவெல்லாம் அந்த அரசு செய்தித் தொகுப்பு எல்லாம் உண்டா? உண்டென்றால் அதை யார், எங்கே பார்க்கிறார்கள்?), அதுக்குப் பிறகு ஸ்லைடு, ட்ரைலர் எல்லாம் போட்டு முடிச்சி படம் போட எப்படியும் குறைந்தது ஏழேகாலாவது ஆகிவிடும். எவ்வளவு லேட்டானாலும் படம் எட்டே முக்காலுக்குள் முடிந்துவிடும். ஆக, வீட்டிலிருந்து ஆறே முக்கால், ஏழு மணிக்குப் புறப்பட்டால் கூட படம் பார்த்து விட்டு நல்ல பிள்ளையாய் ஒன்பது மணிக்கு முன்பே திரும்பிடலாம். சில சின்னச் சின்ன, ஆனா முக்கியமான precautions எடுக்கணும்: நம்ம பசங்ககிட்ட முதல்லே சொல்லிடணும்; இல்லன்னா சரியா அன்னைக்கிப் பாத்து வீட்டுக்குத் தேடி வந்திருவானுங்க; இரண்டாவது, திரும்பி வரும்போது கிழிச்ச அரை டிக்கெட்டை எடுத்து பத்திரமா வெளியே கடாசிட்டு வரணும். ஒரு tell tale signs -ம் இருக்கக் கூடாதல்லவா?


இந்தத் தியேட்டருக்கென்றே சில culture உண்டு; மிகவும் ஆச்சரியமானவைகள். டிக்கெட் எடுக்க வரிசையில் நிற்கும்போதெல்லாம் அந்த ஆச்சரியங்கள் அநேகமாக நடக்கும். மிகச் சாதாரண ஆட்களாக இருப்பார்கள். ஆனால், பேச ஆரம்பித்தால் ஹாலிவுட்டின் சரித்திரமே அதில் இருக்கும். எந்தப் படம் எந்தக் கம்பெனியால் எப்போது எடுக்கப் பட்டது; நடிக, நடிகைகள் பெயர்கள், டைரக்டர்கள் எல்லாமே அலசப்படும். பொய்க் கதைகளாக இருக்காது; நிஜமான தகவல்களாக இருக்கும் கிரிக்கெட் விசிறிகள் கெட்டார்கள் போங்க… என்ன, கிரிக்கெட் ரசிகப் பெருமக்களில் நூற்றுக்குத் தொண்ணூறு பேர் மழைக்குக் கூட விளையாட்டு மைதானங்களில் ஒதுங்கி இருக்க மாட்டார்கள். ஆனால் வாய் கிழியக் கிழிய technicalities பேசுவார்கள். இங்கே அப்படி இல்லை.. ரெகுலரா படம் பார்க்கிற கூட்டமே உண்டு. ஒன்றிரண்டு மாதங்கள் நீங்களும் ஆங்கிலப் படங்கள் பார்க்கப் போனீர்கள் என்றால் பல முகங்களை அடிக்கடி தொடர்ந்து பார்க்கலாம். அவர்களில் பலரும் நான் சொன்னது மாதிரி நடமாடும் ‘என்சைக்கிளோபீடியா’வாக இருப்பார்கள்.


இதைவிடவும் ஆச்சரியமான விதயம் ஒன்றுண்டு. நம்ம மக்களுக்கு, படித்தவன் படிக்காதவன் என்ற வேற்றுமையே இல்லாமல் ஒரு நோய் உண்டு; மூத்திரப் பை ரொம்ப வீக்; அங்கிங்கு என்னாதபடி எங்கெங்கும், எப்போதும், தம் கண்களை மூடிக்கொண்டு நம் கண்களையும், மூக்குகளையும் மூட வைப்பதில் மன்னர்கள்தான். ஸ்மார்ட்டாக உடுத்துக்கொண்டு ‘ஓரங்கட்டும்’ எத்தனை படித்த இளைஞர்களிடம் நானே சண்டை போட்டு, திட்டியிருக்கிறேன். நன்றாக செலவு செய்து கட்டிய மூத்திரப்பிரையாக இருந்தாலும் நம் தியேட்டர்களில் அவைகளின் உள்ளே செல்ல நல்ல மன உறுதி இருக்க வேண்டும் - இப்போதும் கூட. ஆனால், ரீகல் தியேட்டரில் பெரிய ஒரு சதுரம்; மேலே கூரை கிடையாது; நான்கு பக்கமும் சுவர்கள்; சுவர்களை ஒட்டி இரண்டு இன்ச் உயரத்தில் ஒரு சிமெண்ட் மேடை; அவ்வளவுதான். ஆனாலும், ஏன் என்று யாருக்கும் தெரியாது - இந்த தியேட்டருக்கு வருபவர்கள் எல்லோருமே ஒரு ஒழுங்கைக் கடைப்பிடித்து, தன் வரிசைக்குக் காத்திருந்து சரியான இடத்தில் சரியாகப் "போவது" என்பது இதுவரை நான் எங்கும் கண்டதுமில்லை; கேட்டது கூட இல்லை.


அதே போலவே எல்லா தியேட்டர்களில் மட்டுமல்ல எங்கெங்கு படிகள் இருக்கின்றனவோ அந்த படிகளின் மூலைகளைப் பார்த்ததும் இந்த வெற்றிலை போடும் ஆட்களுக்கு என்ன ஆகுமோ தெரியவில்லை; என்ன instinct அல்லது reflex என்று தெரியாது - Pavlov-ன் நாய் மாதிரி - மூலைகளில் எச்சில் துப்பும் அந்த ‘இந்தியப் பண்பை’ ரீகலில் பார்க்கவே முடியாது.

தியேட்டரின் கீழ் பகுதியில் மூன்று வகுப்புகள், மேலே இரண்டு பகுதிகள். கீழே உள்ள மூன்று வகுப்புகளின் கட்டணம் எல்லாமே ஒரு ரூபாய்க்கும் குறைவே. 30, 60, 90 பைசா என்ற கணக்கில் டிக்கெட்டுகள் என்று நினைக்கிறேன். நம்ம ஸ்டாண்டர்டுக்கு எப்பவுமே இரண்டாம் வகுப்புதான். ஆனால் அதில் ஒரு தடவை ஒரு பிரச்சனை. இப்போ சன் டீ.வி.யில் வர்ர மாதிரி அப்போ நம்ம தியேட்டரில் ஸ்பெஷல் வாரங்கள் என்று வரும். ஒரு வாரத்தில் ஞாயிற்றுக் கிழமை தவிர மீதி 6 நாட்களுக்கு நாள் ஒன்றுக்கு ஒரு படமாக போடுவார்கள்; ஒரே நடிகர் - ஜெர்ரி லூயிஸ், கிளார்க் கேபிள், நார்மன் விஸ்டம்,…- நடித்த படங்கள், ஒரே கம்பெனியின் படங்கள் - எம்.ஜி.எம்., கொலம்பியா, - என்று இருக்கும். முதல்லேயே ஒழுங்கா ப்ளான் செய்து எந்தெந்த படங்களைப் பார்ப்பது, அதற்குரிய பொருளாதாரப் பிரச்சனைகளை எப்படி எதிர் கொள்வது என்பது போன்ற திட்டங்களைத் தீட்டி - இறுதிப் பரிட்சைக்கு டைம் டேபிள் போடுவது போல் - ரெடியாக வேண்டும்.

அப்படி போட்டதில் ஒரு தடவை எக்ஸ்ட்ராவாக ஒரு படம் சேர்ந்து விட்டது. பொருளாதாரப் பிரச்சனை மிகுந்த சிக்கலை ஏற்படுத்தியது. இருந்தாலும் போய்விடுவது என்று முடிவெடுத்து தியேட்டர் போனேன். 30 பைசா வரிசை
தியேட்டருக்கு வரும் எல்லோரும் பார்க்க முடியும்; மற்ற இரு வகுப்புகளுக்கும் டிக்கெட் கவுண்ட்டர் உள்ளே இருக்கும். அந்த வரிசையில் நிற்கத் தயக்கம். நின்ற ஒருவரிடம் ஏதோ காரணம் சொல்லி டிக்கெட் எடுத்தாகிவிட்டது. உள்ளே விரைந்து போய் கடைசி வரிசையில் இடம் பிடித்து கையோடு கொண்டு போயிருந்த நோட்டை (ஆமா! பிள்ளை படிக்கப் போகிறது என்று அப்பதான் வீட்ல நினைப்பாங்க!) அந்த சீட்டில் வைத்து ரிசர்வ் செய்துவிட்டு வெளியே வந்து, லைட் எல்லாம் அணைத்த பிறகு உள்ளே போனேன். வேறு யாரும் நான் 30 பைசா டிக்கெட்டில் வந்திருப்பது தெரியக்கூடாது என்ற எண்ணம். ஏன்னா, அது ‘தரை டிக்கெட் லெவல்தான்’. அதற்குள் பக்கத்து சீட்டுக்காரர் என் நோட்டைத் திறந்து பார்த்து விட்டார் போலும். நான் போய் உட்கார்ந்ததும், ‘தம்பி, பெரிய கிளாஸ்ல படிக்கிறீங்க; எதுக்கு இங்க வர்ரீங்க’ன்னு கேட்டார். அப்போ நான் முதுகலை முதலாண்டு. இப்படிப்பட்ட நல்ல உள்ளங்களை இனியும் நோகடிக்கக் கூடாதென்று முடிவு செய்து அதன் பிறகு அந்த வகுப்பிற்குப் போவதில்லை.


இன்னொரு unique matter என்னன்னா, இடைவேளையில் தியேட்டருக்கு வெளியே செல்ல அனுமதி உண்டு; ஒரு சிகரெட் அட்டையின் பின்பக்கம் ஒரு சீல். அதுதான் அவுட்பாஸ். எதிர்த்தாற்போல் இருந்த, இன்னும் இருக்கும் Zam-Zam டீக்கடையில் (the hottest tea i have ever had in my life) குடிச்சிட்டு வரலாம். சில பேர் முதல் பாதி சினிமாவை ஒரு நாளும், பின் பாதியை அடுத்த நாளும் - ஒரே படத்த இரண்டு instalments-ல் - பார்த்ததுண்டு. ஆனால் இது சில காலமே நடைமுறைப் படுத்தப் பட்டது.


இதில என் தப்பு ஒண்ணுமே இல்லீங்க; இப்படி திருட்டுத்தனமா பாத்த முதல் படம் நல்லா நினைவில் இருக்கிறது.  Rank Organization’s ON THE BEAT என்ற Norman Wisdom நடித்த நகைச்சுவைப் படம். நான் போடும் ஒரு கணக்கு: Norman Wisdom + Jerry Lewis = நம்ம நாகேஷ். காதலிக்க நேரமில்லை படத்தில் கூட ‘செல்லப்பா’ தனது ‘ஓஹோ’ என்ற படக்கம்பெனியின் மேசை மேல் Jerry Lewis போட்டோ வைத்திருப்பார். Norman Wisdom ஹாலிவுட் ஆள் இல்லையென்பதால் அதிகமாக நமக்குத் தெரியாத நடிகர். ஆயினும் நாகேஷின் பல படங்களில் இவரது பாதிப்பு இருக்கும். A stitch in time என்ற படத்தின் கதை நெஞ்சில் ஓர் ஆலயம் படத்தின் காமிக் ட்ராக்காக வரும்.


சரி, நம்ம கதைக்கு வருவோம். படம் பாத்துட்டு, வீட்டுக்குப் போய் அப்பாகூட உக்காந்து இரவுச் சாப்பாடு சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது படத்தில் உள்ள ஒரு நல்ல காட்சி நினைவுக்கு வர, என்னையறியாமல் சிரித்து விட்டேன். அப்பா என்னவென்று கேட்க ஏதோ காலேஜ்..அது.. இது.. என்று அங்கே ஒரு ரீல் விட்டேன். அவ்வளவு பிடித்த படமே முதல் படமாக அமையாமல் இருந்திருந்தால் நான் அதற்குப் பிறகு இங்கிலீசு படம் பாக்கப் போயிருப்பேனா?


ரொம்ப வருடத்துக்கு இந்தப் பழக்கம் இருந்தது. வேலை பார்க்கும்போது நம்ம ஜாவாவில் போய் மெத்தைக்கு டிக்கெட் எடுத்து படம் பாக்கும்போதெல்லாம் 30 பைசாவில் சினிமா பார்த்த ‘ அந்த நாள் ஞாபகம்…’ வந்திரும். இப்போவெல்லாம் DVD வீட்டுக்கே வந்திடுதே! தியேட்டருக்கு அதிகமா போறதில்லையானாலும் இன்னும் அந்தப் பழக்கம் விடலை…ஏங்க! நீங்களே சொல்லுங்க; இது நல்ல பழக்கமா…இல்ல கெட்ட பழக்கமா…?



*******






Oct 16 2005 03:39 pm சொந்தக்கதை.. edit this
Rate this post at http://www.thamizmanam.com/ Current rating is:
(இதுவரை 1 பரிந்துரைகள்)ஹலோ, வந்தது வந்தீங்க; வந்ததுக்கு ஒரு வேட்டு / வோட்டு போட்டுட்டு போறதுதானே! சும்மா அப்டியே போய்ட்டா எப்படி??

7 Responses
சின்னவன் Says: after publication. e -->October 16th, 2005 at 8:14 pm e
எவ்வள்வு பெரிய கிருதா !

Sa.Thirumalai Says: after publication. e -->October 16th, 2005 at 8:58 pm e
Dear Sir
For many Madurai-tians this is an irresistible habit. Parameswari is another theatre where good English movies were shown. I think both were run by same management. I used to see many friends only at these theatres not anywhere else in Madurai. Now except Mappillai Vinagayar no other theatre is showing regular English cinema, no theatre is showing real classical holywoods. Hmm, those are the days. You rekindled my nostalgia one more time. Interesting experiences. Pl. continue. Edward Hall has a better and clear look in now.
ThanksSa.Thirumalai

கோ.இராகவன் Says: after publication. e -->October 17th, 2005 at 6:45 pm e
தருமி, உண்மையிலேயே அற்புதமான பதிவு. தருமீன்னு பேரு வெச்சிருக்கீங்களேன்னு பாத்தேன். மதுரக்காரருன்னு இப்பத்தான தெரியுது.
சின்னப் பிள்ளைல மதுரைல ஒரு வருசம் இருந்தோம். அப்ப இந்த ரீகல் தேட்டரப் பாத்திருக்கேன். வெளிய இருந்துதான். பின்னே விட்டா வீட்டுக்குப் போகத் தெரியாத வயசுல எப்படி தேட்டருக்குத் தனியாப் போக.
பின்னாட்களில் மதுரை வழியாப் போகைல பார்த்ததுண்டு. எனக்குத் தெரிஞ்சு ஜெயராஜ், விஜயலட்சுமி, சினி-மினி-சுகப் பிரியாக்கள், செண்ட்ரல், இதுகதான் நினைவிருக்கு. அப்புறம் இன்னோன்னும் இருக்கு….பேரு நெனவுக்கு வர மாட்டேங்கி……ஸ்டேசனுக்குப் போற வழியில….ரெண்டு தேட்டரு சேந்தாப்புல இருக்கும்.
நீங்க சொல்ற ரீகல் தேட்டர் பக்கத்துல பிரேம விலாஸ் அல்வா கடைல சாந்தரமாப் போனா அல்வாவை எலைல போட்டுத் தருவாங்க. அடடா!

யாத்திரீகன் Says: after publication. e -->October 20th, 2005 at 2:19 am e
அஹா.. பலரும் இப்படி மதுரை நியாபகங்களை கிளரிவிட்டுகிட்டு இருக்கீங்களே…. 2 வருஷம் கல்கத்தால இருந்துட்டு… இங்க வர்ரதுக்கு முன்னாடி மதுரை-ல ஒரு நாள் இருந்தப்ப, நீங்க சொன்ன கடைகலிலேல்லாம் சாப்பிடரதுக்குன்னே சுத்துனேன்
ஆனா எனக்கு நினைவு தெரிஞ்ச நாள்ல இருந்து தங்கரீகல்-ல படம் பார்த்தேன்னு சொன்ன வீட்ல பின்னிருவாங்க… மத்தவுங்க ஒரு மாதிரி பார்பாங்க.. அப்படி ஆகிப்போச்சு இப்போ….
மாப்பிள்ளை விநாயகர் தியேட்டரும் கொஞ்ச காலம் அப்படி இருந்தது, இப்போ, தமிழ்ல மொழிபெயர்த்த ஆங்கிலப்படங்களும் போடுறாங்க.. நீங்க சொன்ன கழிப்பறை நியதி, எனக்கு தெரிஞ்சு, இந்த தியேட்டர்லதான் உருப்படியா இருக்கு

தருமி, படங்களுக்கு நன்றி.. இப்படி வாரம் ஒரு மதுரை படம்னு கூட நீங்க பதிவு போடலாம்…
கொஞ்சம் அப்படியே மதுரையில் கிடைக்கும் சாப்பாட்டுனு ஒரு தொடர் எழுதுங்க ரொம்ப ஆசையா இருக்கு ஹிஹிஹி.. !!!!

-செந்தில்/Senthil
ivarugala Says: after publication. e -->October 22nd, 2005 at 1:07 am e
அந்த நாள் ஞாபகம் நெஞ்சில்லே வந்ததே நண்பரே!
ஞாபகப்படுத்தியதற்கு நன்றி.
ivarugala.

கல்வெட்டு Says: after publication. e -->October 22nd, 2005 at 1:22 am e
//முதல் சீன்ல செத்துட்டான்னு நினச்சவன் அடுத்த சீன்ல மறுபடியும் உயிரோடு வருவான்!//
:-)))

வசந்தன் Says: after publication. e -->October 22nd, 2005 at 6:09 am e
//அப்போ நான் முதுகலை முதலாண்டு. இப்படிப்பட்ட நல்ல உள்ளங்களை இனியும் நோகடிக்கக் கூடாதென்று முடிவு செய்து அதன் பிறகு அந்த வகுப்பிற்குப் போவதில்லை.//
படிக்கப்போறதை நிறுத்திட்டீங்களா?அல்லது அந்த ‘தரை டிக்கெட்’ வகுப்புக்குப் போறதை நிறுத்திட்டீங்களா?;-)