Friday, June 28, 2019

1058. ஒரு ”நடிகனின்” (!!) கதை .... 6 என் அகில உலக ரசிகப் பெருமக்களுக்கான ஒரு சுற்றறிக்கை.



***
தொடர்புடைய பிற பதிவுகள்

 5. https://dharumi.blogspot.com/2019/06/1056-5-dubbing-days.html

8.  https://dharumi.blogspot.com/2019/06/1058-6.html


***
துணை இயக்குனர் சிவா
&
ஒலிப் பதிவாளர்  சுதா மேடம்





THE LAST TOUCHES

உலகம் முழுவதும் இருக்கிற என் நடிப்பின் ரசிகர்களான உங்கள் அனைவருக்குமான என் சுற்றறிக்கை இது.

மெளனகுரு இயக்குநரான சாந்த குமார் இயக்கும் மகாமுனி என்ற படம் இந்த மாதம் (19?) வெளியாகிறது என்பதும் அதில் நான் நடித்திருப்பதும் உலகம் முழுவதுமுள்ள என் ரசிகர்களான உங்களுக்குத் தெரிந்திருக்கும். படத்தை எப்படி ஆர்வமுடன் எதிர்பார்த்திருப்பீர்கள் என்பது எனக்கு நன்கு தெரியும். எப்போதுமே நீங்கள் அப்படித்தானே .. என் அனைத்துப் படங்களையும் எவ்வளவு ஆர்வத்தோடு வரவேற்பீர்கள் என்பது எனக்குத் தெரியாதா என்ன!

ஆனால் நான் ஒவ்வொரு முறையும் சொல்வது போல் இந்தப் படத்திற்கும் சொல்லிவிடுகிறேன். வேண்டாமென்றாலும் கேட்கவா போகிறீர்கள்! ஆடி மாதம் ஆரம்பித்து அநியாயக் காத்து அடிக்கிறது. ஆகவே ரொம்ப உயரமான கட் அவுட் வேண்டாம். 40 அடியோடு நிறுத்தி விடுங்கள். அது போதும்.

இன்னொன்றும் சொல்லி விடுகிறேன். இந்த தடவையாவது கேட்டுக் கொள்ளுங்களேன். நீங்கள் ஒவ்வொரு படத்துக்கும் பெரிய பெரிய ப்ளக்ஸ் போர்டுகள் வைத்து பால் ஊற்றுகிறீர்கள். நிக்க வைத்து பால் ஊத்தினாலும் எனக்கென்னவோ என்னைப் படுக்கப் போட்டு கடைசியாகப் பால் ஊத்துவது போலவே அது  இருக்கிறது,\.இந்தப் படத்திற்கு பால் ஊத்த வேண்டாமே! சரியா?

படத்தின்  டைட்டிலோடு  என் குரலோடு தான் படம் ஆரம்பமாகிறது. குரல் மட்டும் வருகிறது ... ஆளைக் காணோமே என்று பயந்து விடாதீர்கள் ... வந்திருவேன்.  வெளியே ரொம்ப நேரம் ஆடிக்கொண்டிருக்காமல்,  தியேட்டரின் மணி அடிச்சதும் பாய்ஞ்சு லேட்டாக வராமல் மொதல்லேயெ வந்திருங்க.  சட்டுன்னு நம்ம குரலோடு படத்தை ஆரம்பிச்சிருவோம். சரியா?

 எத்தனை சீனில் வருகிறேன் என்பதெல்லாம் ஒரு கேள்வியா? அட... ரெண்ட் சீன்ல வந்தாலும் எப்படில்லாம் நடிக்கிறோம் என்பது தானே பெருசு. இல்லீங்களா? பின்னிடுவோம். (அப்படி பின்றோமோ இல்லையோ .. ஆனா  வெளிய வந்து எங்க தலை பின்னிட்டார்னு சவுண்டு உட்ருங்க. நமக்குள் இது ரகசியமா இருக்கட்டும்!  நமக்குள் ஆக வேண்டியதை பிறகு பார்த்துக் கொள்வோம்.)

இந்தப் படத்தில் என் நடிப்பைப் பார்த்து அப்படியே அசந்து போய் விடாதீர்கள். இதெல்லாம் நமக்கு ரொம்ப சாதாரணம் என்பது உங்களுக்குப் புரியாதா என்ன? ஆனாலும் நீங்க ரொம்பவே வியந்து போய் இந்தப் படத்திலேயே எங்க ஆள் தான் டாப் என்றெல்லாம் சொல்லி விட வேண்டாம். சீனியர்லாம் வருத்தப்பட வைக்கக் கூடாதல்லவா? எல்லாம் ஒரு நனி நாகரீகம் தான்!!

முன் குறிப்பு:

முன்குறிப்பாக இருக்க வேண்டியதை பின்குறிப்பாகக் கொண்டு வந்துள்ளேன்.  இந்த முன்-பின் குறிப்பை வாசித்து அதை முன் குறிப்பாகக் கொள்ளுங்கள் என்று இந்த பின் குறிப்பில் விளக்கமாக விளக்கி விடுகிறேன். விளங்கிக் கொண்டீர்களா? (வெழங்கிடும்...!)

முன்பே டப்பிங் பற்றி எழுதியிருந்தேனா?  ஆனால் சென்னையிலிருந்து மீண்டும் அழைப்பு. சிறிது நேரம் டப்பிங் தர வரவேண்டும் என்றார்கள். காலையிலேயே சென்னை சென்றேன். மாலையில் தான் டப்பிங் என்றார்கள். என்னை வீட்டுக்கே வந்து அழைத்துச் சென்றார்கள். ரொம்பவும் நன்றாக டப்பிங் பேசி விட்டேன் போலும், ஏனெனில் நான் பேசி முடித்ததும் இதுவரை வராத மழை வந்து வெளுத்துக் கட்டியது.  காலையிலிருந்து சீரியசாக டப்பிங் பார்த்துக் கொண்டிருந்த சுதா மேடம், துணை இயக்குநர் சிவா இருவரும் ஒரு ப்ரேக் எடுத்து ஜன்னல் வழியே மழையை ஆசை தீரப் பார்த்துக் கொண்டார்கள். 

முன்பு டப்பிங் வந்த போது professional dubbing artists யாரையும் பார்க்கவில்லை. இந்த முறை இருவர் வந்திருந்தார்கள். ஒருவர் டிவியிலும் பணி புரிகிறாராம். விஜயா என்று  இன்னொருவர். இருவருமே தொழில் முறை ஆட்களாக இருந்ததால் சொன்னதை உடனே புரிந்து கொண்டு டக் .. டக் .. என மிகச் சரியாக, சரியான டைமிங்கோடு, எதிர்பார்த்த ஒலிகளை எளிதாகக் கொடுத்தார்கள். ஒரு பெண் அழுகின்ற சீன். அந்த நடிகையின் தொண்டை அசைவுகளை வைத்து அவர் அழுகும் ஒலியை விஜயா கொண்டு வந்தார்,  எல்லாம் சில வினாடிகளுக்கான் ஒலிகள் தான், ஆனால் அவை படத்தை மிக பொருத்தமாக, அழகாகக் கொண்டு வந்தன. சிறு சிறு ஒலிகளும் படத்திற்கென்று ஓர் உருவத்தைக் கொடுத்தன. வியப்போடு பார்த்து ரசித்தேன்.

வேலை முடிந்த பின் இயக்குநர் வந்து இதைப் போன்ற சில கடைசி நிமிட வேலைகளைப் பார்த்து எல்லாம் சரி தானா என்று பார்க்க வேண்டும் என்று காத்திருந்தோம். அவரும் வந்து என் பகுதியைச் சரியென்றார். திருப்தி. வேலை முடிந்தது. படம் ஜூலை மாதமே வெளிவந்து விடும் என்ற பேச்சு சுற்றி வந்தது. Yet to be confirmed. 


***




Sunday, June 09, 2019

1057. Ar MEYYAMMAI ON DSL







Farewell to fatherly prof
I rushed to see you
You didn't,
You didn't for once.
Doors closed
Ambulance moved
in a pace you would like!
I followed your convoy quietly.
Eyebrows rose
I rode, eyes welling up
Teardrops rolling down now and then
as I heard you care for me
like nobody else have.
All in a fatherly tone!
You reached your destination
All dressed up for the occasion
Lying down in casket
Bespectacled face
as bright as north star
Your gentle spirit smiling
And peace pervading!
Priests called upon the Lord
Prayed for your soul
Vowed to surrender your body
to mother Nature
And gave way believing in resurrection.
You led us to crematorium
As I saw, you were slided into the chamber
to be reduced to ashes.
You are gone, not for me!
Your gentle spirit smiles,
Your soft voice reverberates,
And peace pervades! Amen!
AR Meyyammai
D. Samuel Lawrence, fondly called DSL, my dear professor, who was genuinely interested in my and my daughter's well-being, passed away on May 23. He made it a mandate to call me at least once a month, even as he was on dialysis, and enquire about us both. I was gifted to have a person like him as my teacher.
I shall always treasure the memories of all that is uniquely you, Sir!
Poetry being spontaneous overflow of powerful emotions, this is the poem I penned down soon after I returned home from the Keerathurai crematorium where Prof DSL was cremated according to his wish. He donated his eyes to Aravind Eye Hospital.



*


Sunday, June 02, 2019

1056. ஒரு ”நடிகனின்” (!!) கதை .... 5 ... DUBBING DAYS



பிற தொடர்புடைய பதிவுகள்

 5. https://dharumi.blogspot.com/2019/06/1056-5-dubbing-days.html

8.  https://dharumi.blogspot.com/2019/06/1058-6.html

*
சென்னையிலிருந்து சனி, ஞாயிறு இரு நாட்களுக்கு (25,26-5-19) டப்பிங் பேச அழைப்பு வந்தது. சம்மதம் சொன்னதும் பயணச் சீட்டுகள் வந்து விட்டன. வெள்ளி மாலையே புறப்பட வேண்டிய கட்டாயம். அன்று மாலை நடந்த ஒரு முக்கிய சோக நிகழ்வுக்கு - நான் இருந்திருக்க வேண்டிய - நிகழ்வைத் தவிர்க்க வேண்டியதாகி விட்டது.

*   *   *   


ஏற்கெனவே ஒரு முறை டப்பிங் பேசியது பற்றி எழுதியிருந்தேன். அதில் ஒன்றரை மேஜை போட்டிருந்த சிறு அறையில் டப்பிங் செய்த அனுபவத்தை எழுதியிருந்தேன். அந்த நினைவில் இப்போது வரச் சொன்ன இடம் தேடி 25ம் தேதி காலை. சென்றேன். தடபுடலான கட்டிடம். சொந்தக்காரர் புகழ்பெற்ற இயக்குனரான பிரியதர்ஷன். 

இப்போது எல்லாமே பயங்கர richness உடன் இருந்தது. அந்த தியேட்டர் இருந்த கட்டிடமே மிகு நவீனமாக இருந்தது. உள்ளே நுழைந்தால் கருப்பு வண்ணங்களில்  ஆடியோ கார் ஒன்றும், பென்ஸ் கார் ஒன்றும் முறைத்துப் பார்த்தன. நுழைவாசலில் நுழையும் இடத்திற்கு எதிரே ஒரு பெர்ர்ர்ரிய கண்ணாடி எதிரொலிளித்தது. FOUR FRAMES SOUND COMPANY. முகப்பு தான் அழகு என்றால் உள்ளும் அப்படியே. Everywhere richness reflected.



 















இரண்டு பெரிய குளிரூட்டப்பட்ட அறைகள். முழுவதும் acoustic-க்காக தரை, கூரை, சுவர்கள் எல்லாமே ”போர்த்தப்பட்டு” இருந்தன. இரு அறைகளில் ஓர் அறை டப்பிங் செய்வதற்கான அனைத்து கருவிகளுடன் இருந்தது. கருவிகளுக்கு எதிரே ஒரு பெரிய டிவி திரை. அதில் ஒலி சேர்க்க படம் ஓடும். உதட்டசைப்பு .. அது இதுவென்று பார்த்துக் கொள்ள வசதி.

PARI, Asst. to Dubbing Master adjusting mikes 
அடுத்ததும் அதே போல் ஒரு பெரிய அறை. இரண்டும் இரு கண்ணாடித் தடுப்புகளால் பிரிக்கப்பட்டிருந்தன.இங்கும் ஒரு பெரிய திரை. LCD projector வைத்துப் படம் பெரிதாகத் திரையில் விழுகிறது. திரைக்கு எதிர்த்தாற் போல் வலது ஓரத்தில் பேசுபவர்களுக்கான இடம். போன தடவையே உட்கார்ந்து டப்பிங் செய்வதை விட நின்று செய்வது எளிது என்று எழுதியிருந்தேன். இங்கே அப்ப்டித்தான் .. நின்று கொண்டே பேச வேண்டும்.  ஒரு சின்ன உயர மேசை.. அதற்கு எதிர்ப் பக்கம் பேச்சுக் கருவி வைக்கப்பட்டுள்ளது. படத்தில் தெரிவது போல் ஒரு பெரிய filter. pop filter  - என்பது அதன் பெயராம், ஒலியை சிறிது muffle செய்யும் போலும். தலைக்கு மேல் ஏசி. பேசும்போது நிறுத்தி விட வேண்டும். பக்கத்திலேயே குடி நீர். நானும் பல தடவை மிடறு மிடறாகக் குடித்து தொண்டையைச் சரி செய்து கொண்டேனாக்கும்! வசதியாய் உட்கார நல்ல சோபா ஒன்று.பொதுவாக பேசும் போது திரையைப் பார்க்க வேண்டும் என்பதற்காக அறை இருட்டாக்கப்படுகிறது. மேசை விளக்கின் ஒளி மட்டும். அப்போது உதவுகிறது.

Prof. JEYASUDHA, SOUND ENGINEER

Dubbing head ஒரு பேராசிரியர். திருமதி ஜெயசுதா. கல்லூரியில் விஸ்காம் பேராசிரியர். sound engineering படிப்பை திரைப்படக் கல்லூரியில்.படித்து தங்கப் பதக்கம் பெற்றவர். அதை விட  பெரும் படங்களில் அளித்த பங்களிப்பு அதிகம். மகாநதி, குருதிப் புனல் என்று ஒருபெரும் நீண்ட பட்டியல். இதுவரை ஆயிரம் படங்களுக்கு மேல் முடித்து நீண்ட அனுபவம் வாய்ந்தவராக இருந்தார். அதுவும் நாங்கள் இருவரும் ஒரே ஆசிரிய சாதியினர் என்பதால் எங்களுக்குள் affinity நன்றாகவே இருந்தது. நடு நடுவே பல கதைகள். அப்படி பேசும் போது புதிய தகவல் ஒன்று சொன்னார்கள். அடுத்து வரப் போகும் இளையராஜாவின்  பிறந்த நாள் விழாவில் எஸ்.பி.பி. பாடுவதற்காக ஒத்திகைக்காக வந்திருக்கிறார் என்றார்கள். அப்போது தான் தெரிந்தது அவரது கணவரும் ஒரு sound engineer. அதுவும் ராஜாவின் sound engineer!
 (இதைத் தெரிந்ததும் நான், “அப்போ .. மேடம் ஒரு பெரிய சவுண்டு பார்ட்டி” என்றேன்!)

அங்கு தான் எஸ்.பி.பி.யை அன்று காலை பார்த்ததாகக் கூறினார்கள். அவர்கள் சொன்ன செய்தி புதிதாக மட்டுமல்ல மிக இனிமையானதாகவும் இருந்தது. அவர்கள் இந்தச் செய்தியைக் கூறிய பிறகு இரு நாட்கள் கழித்து தான் அச்செய்தி ஊடகங்களில் வந்தது.

இயக்குநர் - சாந்த குமார்
படம்: துணை இயக்குநர் கிருஷ்ண மூர்த்தி

முதலில் நான் படத்தில் பேச வேண்டிய காட்சிகளுக்கான டப்பிங் நடந்தது. நான் நிறைய பயந்து “மேடையேறினேன்”. ஆனால் அவ்வளவு சிரமுமில்லை. அதுவும் நல்ல நட்புணர்வு இருந்ததால். அதிக சிரமுமின்றி நடந்து முடிந்தன. மீதி இருந்தது ஒரு  voice over -அதாவது சீனில்  முகம் காண்பிக்காமல் என் குரல் மட்டும் ஒலிக்கும் காட்சிகள். படத்தின் ஆரம்பத்தில் டைட்டிலின் ஊடே குரல் மட்டும் கேட்கும் காட்சிகள். ஆனால் அன்று மாலையாகி விட்டதால் முதல் பகுதி மட்டும் முடித்து விட்டு, மீதிப் பகுதியை அடுத்த திங்கட்கிழமை வைத்துக் கொள்ள முடிவானது.

அடுத்த இரண்டாம் நாள் - ஞாயிற்றுக் கிழமை - படக்குழு தங்கியிருந்த அலுவலக அறைக்கு வரும்படி மாணவ நண்பன் பாபி ஜார்ஜ் சொல்லியிருந்தார். அங்கே காலை சென்றதும் சிறிது நேரம் படத்தொகுப்பறையில் இருந்தேன். துணை எடிட்டரான முருகனின் வேலையைத் தொடர்ந்து பார்த்துக் கொண்டிருந்தேன். நிறைய பிரமிப்பாக இருந்தது. ஏனெனில் தொடர்ந்து பல காட்சிகள் ... பின் அதில் ஒவ்வொன்றையும் மாற்றி மாற்றித் தொகுக்க வேண்டும். தேவை அத்தனை நினைவாற்றல். எப்படியப்பா என்று முருகனிடம் ஆச்சரியப்பட்டுக் கேட்டேன். இதெல்லாம் நம்மளால் ஆகாது என்று நினைத்துக் கொண்டேன். எடிட்டர் சாபு ஜோசப் வந்தார். என்னை அறிமுகம் செய்ததும், அவர் என்னை “ஓ! அந்த டாக்டர் ...” என்றார். எனக்கோ உச்சி குளிர்ந்தது!

மதிய உணவிற்கு முன் ஜார்ஜ் Making of the movie என்று தான் எடுத்திருந்த காட்சிகளைத் தொகுத்திருப்பதைக் காட்டினான். இயக்குநர், எடிட்டர், போட்டோகிராபர் என்று படத்தில் வேலை பார்த்த technicians பேசுகிறார்கள். அதோடு நடித்த நடிகர்கள் சிலரும் பேசினார்கள். நடு நடுவே படத்தின் சில காட்சிகள். இத்தொகுப்பு எடிட் செய்வதைப் பார்த்துக் கொண்டிருந்தேன்.

மதிய உணவிற்குப் பின் ஜார்ஜ் bytes எடுக்க வேண்டும் என்றார். அப்படியென்றால் என்ன என்று கேட்டேன். படத்தில் என் அனுபவம், படத்தைப் பற்றிய என் கருத்து நான் சொல்ல அது படமாக்கப்படும் என்றார். அந்த அலுவலகம் ஒரு பெரிய ரிச்சான இடத்தில் பல 18 மாடிக்கட்டிடங்கள் இருந்த பகுதி. அதில் ஒரு சன்னலின் முன்னால் உட்கார வைத்து நான் நினைத்ததைச் சொல்லச் சொன்னார். சென்னேன். படமாக்கப்பட்டது. படமாக்கிய பின் என்னை நான் அதில் பார்த்துக் கொண்டேன். எனக்கு முழு திருப்தி. ஏனெனில்  படத்தில் என் மேக்-அப் என்னை வேற்று ஆளாகக் காண்பித்தது. எனக்கே என்னைப் பிடிக்காதது போல் தோன்றியது.  இது என்னை மட்டும் காட்டியது. ஜார்ஜிடம் இதெல்லாம் வருமா .. அல்லது நீளம் காரணமாக வராமலும் போய்விடுமா என்று கேட்டேன். கட்டாயம் வந்து விடுமெனச் சொன்னார், இருந்தும் கைவசம் இருக்கட்டும் என்று என் bytes பகுதியை பென்ட்ரைவில் வாங்கி வந்து விட்டேன். ஆனால் அதன் ரிலீஸ் படம் வெளிவந்த பின்பு தான்.

திங்கட்கிழமை. என் டப்பிங் நடப்பதற்கு முன்னால் கொஞ்சம் காத்திருக்கச் சொன்னார்கள். அந்த அறையில் உட்கார்ந்து scrabble விளையாடிக் கொண்டிருந்தேன். நான்கு பேர் அறைக்குள் வந்தமர்ந்தனர். துணை இயக்குனர் ஷிவா என்னிடம் அவர்களுக்கெல்லாம் சின்னச் சின்ன வசனங்கள்;  அதை முடித்து நீங்கள் என்றார். காத்திருந்த நேரத்தில் வந்திருந்தோரிடம் பேசிக் கொண்டிருந்தேன். அதில் ஒருவர் மதுரை; எங்க ஏரியா. இன்னும் இருவர் தேனிக்காரர்கள். அவர்கள் என்னைப் போன்ற “புது முகங்கள்” இல்லை.  அவர்கள் வேலை முடிந்ததும் நான் அழைக்கப்பட்டேன்.

இன்று இயக்குநரும் உடன் இருந்தார்.  துணை இயக்குனர் கிருஷ்ணமூர்த்தி என்னை வழிநடத்தினார், அலுப்பின்றி வேலை நடத்துகிறார்கள் .. perfectionக்கு அத்துணை முயற்சி.என் குரலை நானும் சில தடவைகள் கேட்க முடிந்தது. மோசமில்லை என்று நினைத்துக் கொண்டேன். கிருஷ்ணகுமார் மாலையில் தான் செல்லும் வழியில் என்னை என் வீட்டருகே இறக்கி விட்டுச் சென்றார்.




கிருஷ்ணகுமாரின் வழி நடத்தல்
பாடம் படிக்கின்றேன் ...


கிருஷ்ணகுமார்-நான் - ஷிவா - பேரா.ஜெயசுதா



இவர்களோடு பயணப்பட்ட நாட்கள் இனிதே இருந்தன. வாலிபக் கூட்டம். அது ஒன்றும் எனக்குப் புதிதில்லை. நல்ல நட்புறவுகள். என் மகுடத்தில் இன்னொரு சிறகிற்கும் இடம் கிடைத்தது ... என் ‘மதங்கள் சில விவாதங்கள் - நூலைப் பற்றி மூவர் என்னிடம் பேசினார்கள். அதிலும் இப்படத்தில் இரு நூலகக் காட்சிகள் வருகின்றன. அதில் ஒன்றில் நான் வருகிறேன். ஆனால் இன்னொரு சீனில் உள்ள நூலகத்தில் வைத்திருந்த நூல்களில் என் நூலும் இருந்ததாம். கொஞ்சம் பெருமிதப்பட்டுக் கொண்டேன்.