Monday, October 27, 2014

797. 3-ம் பதிவர் திருவிழா -- 2
































































நானே .. நானே தான் !

796. 3-ம் பதிவர் திருவிழா -- 1



மூன்றாம் பதிவர் விழா நன்முறையில் நடந்தேறியது.

விழாவின் போது என் ‘பொட்டி’யில் சிக்கியவர்கள் ....




மேடையில் .... 




அன்று - நேருவும் காமராஜரும்;
அண்ணாவும் கலைஞரும்
இன்று  தலைவரும் துணைத் தலைவரும் !!




REGISTRATION 




நுழை வாயிலில் ....


திரு G.M.B.

திரு G.M.B.  &  திரு ரமணி





   



திரு   தனபாலன்



முனைவர் ஜம்புலிங்கம்





திரு கரந்தை ஜெயக்குமார்

திருமதி துளசி



திருமதி சீனா


திரு தாமோதரன்


திரு கோபால் - திருமதி துளசி

திரு. மதுரை சரவணன்





















சிறப்புப் பேச்சாளர் - இந்திரா செளந்திரராஜன்







8



Saturday, October 25, 2014

795. தமிழ்மணத்திற்கு இன்னுமொரு கோரிக்கை





*


தமிழ்மணத்தோடு என் பயணம் ஏறத்தாழ பத்து ஆண்டுகளாகத் தொடர்கிறது. இன்னும் இனிதே தொடர வேண்டுமென்பது என் ஆவல். தமிழ்மணத்தின் பங்கு இல்லையெனில் என் ஓய்வு வாழ்க்கை எப்படி இருந்திருக்குமோவென்று தெரியவில்லை. தமிழ்மணத்தோடு செல்வது ஒரு முழு வாழ்க்கையை வாழும் நினைவைக் கொடுத்திருக்கிறது. எனது வாசிப்பு மிகவும் குறைந்த காலத்தில் தமிழ்மணத்தில் இணைந்தேன். வாசித்தாக வேண்டிய கட்டாயமே வந்தது. வாசித்ததை சிந்திக்கவும், சிந்தித்ததை எழுதவும் முனைப்போடு இருக்க முடிந்தது.

இந்த தமிழ்மணம் வழியே தான் நூல் மொழியாக்க வழியும் பிறந்தது. முதல் மொழியாக்க நூலுக்கே இரு பரிசுகள். பரிசளிப்பு விழாவிலேயே நான் முதல் நன்றி கூறியது தமிழ்மணத்திற்கும், அதை உருவாக்கிய திரு. காசிலிங்கம் அவர்களுக்கும் தான். அறுபதுக்குப் பிறந்த புது வாழ்க்கை பொருளுள்ளதாக ஆனதற்கு தமிழ்மணம் ஒரு பெரிய காரணம். காசிக்கும், தமிழ்மணத்திற்கும், அதன் இப்போதைய நிறுவன உறுப்பினர்களுக்கும் எனது மனத்தின் ஆழத்திலிருந்து எழும் மிகப் பெரும் நன்றி உரித்தாகும். இதை நான் எப்போதும் மறந்ததில்லை. 


திரைப்படங்கள் வந்ததால் ரேடியோ ஓய்ந்து விடும் என்றார்கள். தொலைக்காட்சி வந்ததால் சினிமா படுத்துவிடும் என்றார்கள். அது போலவே சமுக தொடர்புத் தளங்கள் வந்ததும் ப்ளாக் தொலைந்து விடும் என்றார்கள். எல்லாமே தவறாகி விட்டன. எந்த ஊடகமும் சாகவில்லை. அதிலும் சமுகத்தளங்களில் கிடைத்த சில அனுபவனங்களை வைத்துப் பார்க்கும் போது Google +, whatsapp, facebook, twitter - இவைகள் எல்லாவற்றையும் விட ப்ளாக் தான் எனக்கு மிகவும் பிடித்துள்ளது. அதில் மட்டுமே முழுமை கிடைக்கிறது. துண்டு துண்டாக எழுதுவதை விட மொத்தமாகவோ, தொடராகவோ ஒரு பொருள் பற்றி எழுத முடிகிறது. அவை நல்லதொரு கட்டுரைத் தொடராக நிலைத்து நிற்கிறது.  ஏனைய சமுகத் தளங்கள் அவ்வப்போது நேரம் கிடைக்கும் போது சின்னச் சின்னச் செய்திகளை பரிமாற மட்டுமே வசதி போல் தோன்றுகிறது. ப்ளாக்கோடு தான் எனக்கு ஒட்டு. மற்றதெல்லாம் அரட்டை அடிக்க மட்டும் தான் சரி என்று நினைக்கிறேன். அதோடு அந்தத் தளங்களில் எழுத புத்தி கொஞ்சம் அதிகம் தேவை போலும். Meant for sharp witted and intelligent people. நமக்குத் தான் சட்டியில ஒண்ணும் இல்லையே!


 தமிழ்மணம் இந்தக் காலக் களேபரங்களில் தன்னுடைய சில ’பழங்கள்’ சிலவற்றை இழந்து காய்ந்த மரமாக, சிறிது சோபை இழந்து தான் நிற்கிறது. சிறந்த பதிவுகளுக்கான இடம் போய் விட்டது. ’பூங்கா’ காணாமல் போய் விட்டது. வாரத்திற்கு ஒரு ’நட்சத்திரம்’ கண் சிமிட்டியது இப்போது இல்லாமல் போனது. நான் இரு முறை நட்சத்திரமாக இருந்ததும். அந்த வாரங்களில் என் மேல் அடித்த சிறப்பு வெளிச்சமும் இன்னும் நினைவில் இருக்கிறது. இந்த நல்ல பழங்கள் எல்லாம் காலப்போக்கில் கனிந்து விழுந்து விட்டன. தமிழ்மணம் நல்லன பல இழந்து மொட்டையாய் இருப்பது நன்றாகவா இருக்கிறது. ஏனைய சமுகத் தளங்களோடு போட்டியிட்டுக் கொண்டு சிறப்பிடம் வகிக்க வேண்டாமா?


இந்தப் பழைய கனிகள் மீண்டும் வருவதற்கு நிர்வாகத்தினர் மட்டும் பொறுப்பாக இருந்தால் மிகவும் சிரமமே!ஆனால் இந்த சிரமமான வேலைகளை பொறுப்புள்ள சிலரிடம் ஏன் subletக்கு விடக்கூடாது? பதிவர்களுடன் பகிர்ந்து கொள்ள முடியாது?  இறுதிப் பொறுப்பு நிர்வாகத்தினரிடம் இருக்கட்டும். ஆனால் நல்ல பதிவுகளைத் தேர்ந்தெடுப்பது, பூங்காவில் அவற்றிற்கு இடமளிப்பது, நட்சத்திரங்களைத் தேர்ந்தெடுப்பது போன்ற பணிகளை ‘விவரமான’ பதிவர்களிடம் கொடுக்கலாமே. நிர்வாகத்தினரின் பழு குறையும்; ஆனால் தமிழ்மணம் தனித்து அழகாக நிற்குமே!


சில பதிவர்களும், அவர்களின் ஆற்றலும் இப்போது என் நினைவுக்கு வருகிறது.

சீனா - தமிழ்வாசியின் துணையோடு ‘வலைச்சரம்’ என்னும் ஒரு இணைய இதழை பல ஆண்டுகளாகத் திறமையோடு நடத்தி வருகிறார். எப்படி இவ்வளவு சரியாக தொடர்ந்து இந்தச் சேவையை அவரால் செய்ய முடிகிறது என்று நான் ஆச்சரியப்படுவதுண்டு. புதிய பதிவர்களையும் தேடிப்பிடித்து, வாசித்து, நல்ல பதிவர்களை அடையாளம் காண்பது அவ்வளவு எளிதா என்ன?


ராமலட்சுமியும் இன்னும் இரு நண்பர்களும் இணைந்து ‘அதீதம்’ என்றொரு மின் இதழைக் கொண்டு வருகிறார்கள். இவர்களின் தேடுதல்களும் இதேபோல் ஆச்சரியமளிப்பவை. வித விதமான - assorted - கட்டுரைகள் ...புகைப்படங்கள்.. நல்ல தொகுப்புகள். நல்ல பத்திரிகைக்குரிய லே அவுட். 


எந்தப் பதிவுகளுக்கும் நான் புதிதாகப் போனாலும் அங்கு அனேகமாக இருவர் பின்னூட்டமிட்டிருப்பார்கள். ஒருவர் திண்டுக்கல் தனபாலன்; இன்னொருவர் பகவான் ஜி. தமிழ்மண மறுமொழியாளர்கள் பகுதிகளில் இவர்கள் இருவர் பெயர் இல்லாமல் இருப்பது மிகக் கடினம். பதிவுகளைப் படிக்காமலா மறுமொழியளிக்க முடியும். ஆக, அத்தனை பதிவுகளைப் படிக்கிறார்கள். இதில் சேர்த்துக் கொள்ள வேண்டிய இன்னொருவர் கரந்தை ஜெயக்குமார். இவரது பதிவின் தரமும் மிகவும் உயரம்.

நான்  வாசிக்கும் பதிவுகள் மிகவும் குறைவு. என் சிறிய வாசிப்பின் மூலம் நான் கண்ட சிலரைப் பற்றி மட்டுமே நான் குறிப்பிட்டுள்ளேன். (இதில் நிறைய மதுரைக்காரர்கள் இருப்பது ஒரு தற்செயல் என்று தான் நினக்கிறேன்!)

இவர்கள் போல் பல திறமையான / நிறைய பதிவுகளை வாசிக்கும் / நல்ல பதிவர்கள் நம்மிடம் உண்டு. அவர்களில் பொருத்தமானவர்களை தமிழ்மண நிர்வாகத்தினர் கண்டுணர்ந்து, அவர்களை விரும்பிக் கேட்டுக் கொண்டால், ஒவ்வொரு தமிழ்மண தனிச் சிறப்பு பகுதிகளுக்கும் குழுக்கள் அமைத்தால் அவர்கள் அப்பொறுப்பினை அழகுறச் செய்ய மாட்டார்களா?  மேற் பொறுப்பை நிர்வாகத்தினர் வைத்திருந்தால் ‘பழைய மவுசு’ தமிழ்மணத்திற்கு மீண்டும் வந்து விடாதா என்ற நப்பாசை எனக்கு!

தமிழ்மண நிர்வாகத்தினரிடம் எனது புதிய கோரிக்கை இது.

நல்லது நடக்கக் காத்திருக்கிறோம் .........



*

கடைசி இரு பதிவுகளும் தமிழ்மணத்தை மேலும் பயனுள்ளதாக்குவது பற்றியான பதிவுகள்.  இரு பதிவுகளும் ஆயிரம் பதிவர்களுக்கும் மேலானவர்களால் வாசிக்கப்பட்டுள்ளன. இது போன்ற எல்லோருக்குமான பதிவுகளில் பலர் பின்னூட்டமிட்டால் தானே நிர்வாகத்தினரின் கண்களுக்கு அது போய்ச் சேரும் என்று நினைக்கிறேன்.

ஆனால் பதிவர்களே!
எப்படி அந்த எண்ணம் உங்களுக்கு வரவில்லை? ஏனிந்த மெளனம்?? இதில் கூடவா ஒற்றுமை வரக்கூடாது?!





 *

Wednesday, October 22, 2014

794. தமிழ்மணம் மாறுமா ... மாற்றுவோமா?





*

தமிழ்மண பதிவர்கள் அனைவருக்கும் (தமிழ்மண பொறுப்பாளர்களுக்கும் சேர்த்து) தீபாவளி வாழ்த்துகள்.

 தமிழ்மணத்தில் வரும் சில பதிவுகள் மிகவும் கீழ்த்தரமானவைகளாக இருப்பதைப் பற்றி பல பதிவர்கள் பல முறை தொடர்ந்து எழுதியும் இது வரை தமிழ்மண பொறுப்பாளர்கள் எந்த வித எதிர்வினையும் செய்யவில்லை. ஒரு அடிப்படை நாகரீகம் கருதியாவது ஏதாவது ஒரு பதிலோ, பதிவோ கொடுத்திருக்கலாம். அந்த அளவு basic courtesy கூட காண்பிக்காமல்  பதிவர்களுக்கு அவர்கள் கொடுக்கும் ‘மரியாதைக்கு’  மிக்க நன்றி. அந்த அளவில் தான் நமது உறவும் இருந்து வந்திருக்கிறது என்பது மிகவும் வருத்தத்திற்குரிய விஷயம் தான்.

இந்த நிலையை மாற்ற வேண்டும் என்பது காலத்தின் கட்டாயம்.


கீழ்த்தர பதிவர்களையும் பதிவுகளையும் எதிர்க்கும் பதிவர்களுக்கு மட்டும்:


எனக்குத் தோன்றும் சில வழிகள்:

1.  புதிய ஒரு பதிவுத் தொகுப்பை - compiler - ஆரம்பித்து, தமிழ்மணத்தின் போக்கை எதிர்க்கும் பதிவர்கள் அனைவரும் அங்கே சென்று விடலாம். இதற்குத் தேவை தொகுப்பை தயாரிக்கத் தெரிந்த சில பதிவர்கள்.  யாரும் அப்படிப்பட்ட பதிவர்கள் இருக்கிறீர்களா? ஆட்டைக்கு வருகிறீர்களா?

2. மேலே சொன்னது நடக்கும் வரை ஏதாவது ஒரு நாளைக் குறிப்பிட்டு (1.11.14 ???)அன்று பதிவர்கள் எல்லோரும் பதிவு எதுவும் போடாமல் ஒரு நாளை ‘மொட்டை’ நாளாக ஆக்கி விடலாம்.

3. தமிழ்மணப் பொறுபாளர்களின் கேட்காத காதுகளுக்கு இச்செய்தி போய்ச் சேர வேண்டும். ஆகவே இப்பதிவையோ, இது போன்ற பதிவையோ முதலில் உங்கள் இணைய இதழில் எல்லோரும் ஏதாவது ஒரு நாளில்  ( 28.10.14) வெளியிடுங்களேன். PLEASE ......


இச்செய்தி பரவ முதலில் சில பதிவுகள் இதை மறுபதிப்பிடலாமே! மறு பதிவிடுவோர் பின்னூட்டத்தில் அதன் இணைப்பைக் கொடுத்தால் நலம்.


Ref: -  http://vishcornelius.blogspot.com/2014/09/blog-post_11.html 
           http://muudarulakam.blogspot.com/2014/10/blog-post_21.html
            http://www.pulavarkural.info/2014/10/blog-post_22.html

திரு.காசி,

அழகாகப் பெற்று, பண்புடன் வளர்த்த  உங்கள் ’குழந்தையை’த் தவறான ஆட்களிடம் இப்படி ஒப்படைத்து விட்டீர்களே?!



 *

Friday, October 17, 2014

793. பலித்த ஆருடங்கள் .........




*

முந்திய பதிவில் நான் சொல்லிப் பலித்த ஆருடங்கள் ..........



சில வாரக்கணக்கில் மம்மிக்கு பெயில் கிடைக்கும். மம்மி இப்போ புது வேஷம் எடுப்பாங்க. காளி வேஷம் தான். ஒரு கையில் துண்டமாக ஒரு தலை -- அதைப் பார்த்து மட்டும் எனக்குப் பயம். 


நீதி மன்றங்கள் உயரும் போது தண்டனைகள் குறைவது நம் நாட்டின் நீதித் துறைகளில் வழக்கம் தானே -- ‘கனிந்த’ மக்கள்தான் உயர்ந்த நீதிமன்றங்களின் நீதிபதிகளாக ஆகிறார்கள் போலும்!

Wednesday, October 08, 2014

792. IT'S A TURNCOAT








*


எழுபதுகளில் கல்லூரிகளில் நடக்கும் போட்டிகளில் TURNCOAT என்றொரு போட்டி இருக்கும். ஆங்கிலத்தில் மட்டுமே இது நடக்கும். பேச்சாளர் முதல் 3 அல்லது 5 நிமிடங்களுக்கு கொடுக்கப்பட்ட தலைப்பின் ஒரு பக்க கருத்துக்களைக் கூற வேண்டும். மணி அடித்ததும் அடுத்த பக்கக் கருத்தை அடுத்த நேரக்கட்டுப்பாட்டில் கூற வேண்டும். அணு உலைகள் வேண்டும் / வேண்டாம்  என்ற தலைப்பு என்றால் முதல் காலக் கெடுவில் வேண்டும் என்றும் அடுத்ததில் வேண்டாம் என்றும் பேச வேண்டும். சினிமாவிற்கு சென்சார் வேண்டும் / வேண்டாம் என்றோ, தாய்மொழிக் கல்வி வேண்டும் / வேண்டாம் என்றோ ... இப்படிப் பல விதமான தலைப்புகள் ஆளாளுக்குத் தரப் படும். வேடிக்கையாக இருக்கும். இந்தப் போட்டிகளுக்கு நல்ல வரவேற்பும் இருக்கும். பேசுபவர்கள் மாணவர்களே ... ஒருங்கிணைப்பவர்கள் ஆசிரியர்களோ மாணவர்களோ இருப்பதுண்டு.

(இப்போதெல்லாம் இந்த விளையாட்டுப் போட்டிகள் நடப்பதில்லை. இப்படி மாற்றி மாற்றிப் பேசுவதற்கு, அதிலும் ஆங்கிலத்தில் பேசுவதற்கும், அதைப் பொறுமையாக உட்கார்ந்து கேட்பதற்கும் இப்போது மாணவர்கள் தயாரில்லை. இந்த அளவிற்கு ஆங்கிலத்தில் பேச இப்போதுள்ள மாணவர்களால் முடியாது என்றே நினைக்கிறேன். நமக்குத் தான் டமிலும் வராது; ஆங்கிலமும் வராதே...!)

நேற்று தொலைக்காட்சிகளைப் பார்க்கும் போது இந்த விளையாட்டுதான் நினைவுக்கு வந்தது.  பிணை கிடைத்து விட்டது என்ற செய்தி; அது மனதிற்குள் செலவதற்குள் அடுத்த செய்தி. அப்படியே மாறிய செய்தி. முதல் செய்தி வந்ததும் போட்ட ஆட்டமும், வேட்டும் அடுத்த சில நிமிடங்களில் கிடைத்த இறுதிச் செய்தி வந்ததும் எல்லாம் அடங்கி விட்டன. ஒரு மெளன அமைதி. அதுவும் பயமாகத்தான் இருந்தது.

நிகழ்ச்சி பார்க்கும் போது, ‘புரட்சித் தலைவி அம்மா’ என்று ஒரு முறை சொல்ல மறந்து போனாலும் தூக்குத் தண்டனை போட்டு விடுவார்கள் என்ற அச்சத்தோடே அனைவரும் பேசியது போல் தோன்றியது. சிறுசு பெருசு என்ற பாகுபாடு இல்லாமல் கட்சிக்காரர்கள் - வக்கீலாக இருந்தாலும், பாமரனாக இருந்தாலும் - அழுத்தியழுத்தி அதை உச்சரிக்கும் போது வேடிக்கையாகவும் எரிச்சலாகவும் இருந்தது. அப்படியென்ன ஒரு எழுதாத சட்டம்! கேட்டால் அன்பினால் வரும் வார்த்தைகள் என்று அவர்கள் கூறலாம்.

என்னமோ போங்க ....!




*





Wednesday, October 01, 2014

791. JIHADI COLLECTION (11) - அத்தைக்கு மீசை முளைத்தால் .... !!!







*

ஆங்கில இந்து நாளிதழில் வழக்கமாக எழுதும் ஒரு இஸ்லாமியக் கட்டுரையாளர் எழுதிய சமீபத்தியக் கட்டுரை எனக்கு மிகவும் பிடித்தது. அக்கட்டுரையில் உள்ள சில பகுதிகளின் தமிழாக்கத்தை இங்கு தருகிறேன்.

பல உயர்ந்த கருத்துகளை உள்ளடக்கிய இம்மதத்தில் உள்ள ‘ஜிகாதி’ என்ற சொல்லின் உண்மையான பொருள், ஆனால் நம் வழக்கில் அச்சொல்லுக்கு உள்ள பொருள், பெண்களுக்கு எதிராக மதம் இருப்பது, பொறுமையைப் போதித்துக் கொண்டு தீவிரவாதத்தைக் கைக் கொண்டிருப்பது, குரானிலும் ஹதீசுகளிலும் உள்ள குழப்பங்கள்  -- இவைகளைப் பற்றி அக்கட்டுரையில் கூறுகிறார்.

இதைவிட, வாளால் மதத்தைப் பரப்புவது எல்லா மதங்களிலும் நடப்பதுதான். ஆனால், உதாரணமாக கிறித்துவத்தில், இந்த நிலையை அடுத்து அந்த மதங்கள் தங்களை மாற்றிக் கொண்டன. தாங்கள் கொண்டிருந்த பழைய நிலைப்பாடை மாற்றிக் கொண்டன. இது போல் இஸ்லாமும் தங்கள் குரானை முறையாக வரிசைப் படுத்தி, எந்த வித ஐயமும் இல்லாமல் அவைகளை முறைப்படுத்தி புதியதாக வெளிக் கொணர வேண்டும் என்பது அவர் கருத்து. அக்கருத்தினை கீழே சிகப்பு வண்ணத்தில் கொடுத்துள்ளேன்.

பதிவுலகில் கிடைத்த அனுபவங்களின் படி,  சிகப்புப் பகுதி அடிப்படைவாதிகளான வஹாபிகளுக்கு முற்றும் பொருந்தாத ஒன்றாக இருக்கும் என்றே நினைக்கிறேன். என் இந்தக் கருத்து தவறெனில் மகிழ்ச்சியாக மாறிக் கொள்வேன்.                ......... தருமி.

இதனாலேயே தலைப்பை இப்படி வைத்தேன்.


Islam and its interpretations 

HASAN SUROOR

the hindu

உங்கள் சமயத்தில் உள்ள உயர்ந்த விஷயங்களைச் சொல்லுங்கள் என்று ஒரு இஸ்லாமியரிடம் கேட்டால் அவர் கீழே உள்ளவைகளை ஒவ்வொன்றாக அடுக்கிக் கொண்டு போவார்.
--  சமுக வாழ்க்கையின் உயர்வு
--  ஜாதி, ஏழை-பணக்காரன் என்ற வேற்றுமைகளை முற்றாக புறந்தள்ளுதல்
--  கேள்வி ஞானத்தின் உயர்வு
--   உலகின் எந்த சக்திக்கும் தலை வணங்காமை
--  எளிமையான தூய வாழ்வு
--   தன் கீழுள்ளோருக்கு உதவும் தனித்துவமான  மாண்பு
--  பொருளாதார, சமுகச் சுரண்டல்களை முற்றிலும் வேரறுப்பது

’அமைதி’ என்ற பொருள் கொண்ட மதம்; ஆனால் கொடூரத்தை எப்போதும் கையில் எடுத்திருக்கும் மதம். பெண்களுக்குக் கண்ணியத்தையும், மரியாதையையும், சமத்துவத்தையும் தரும் மதம் என்று கூறப்படும் மதம். ஆனால் பெண்ணின் சாட்சியம் ஒரு ஆணின் சாட்சிய மதிப்பில் பாதி என்று மட்டும் கருதும் மதம்.

அறிவுத் தேடல் முக்கியம் என்று சொல்லும் மதம்;  ஆனால் பள்ளிக்குச் செல்லும் பெண் குழந்தைகளைக் கொல்லும் தீவிரவாதம் உள்ள மதம். சகிப்புத் தன்மையையும், இணைந்து வாழ்தலையும் உரத்துச் சொல்லும் மதம்; ஆனால் வெறுப்பையும், பொறுமையின்மையையும் கைக்கொள்ளும் மதம்.

மித இஸ்லாமியர்கள் மிதமாகச் சொல்லும் வாதங்களுக்கு மாற்றாக மிகக் கொடூரமான பொருள் கொடுக்கும் தீவிரவாதிகள்.

இவ்வாறு தங்கள் நிலைக்கேற்ப மாறி மாறி பொருள் கொடுக்கும் இந்த நிலைக்குக் காரணம் இஸ்லாமியத் தத்துவமே! குரானே இரு பொருள் நிறைந்த ஒரு எரிமலை. யார் யாருக்கு எப்படி எப்படி வேண்டுமோ அந்தப் பொருளைக் கொள்ளும்படி உள்ள வசனங்கள்; அவைகளை வைத்து அவரவர் தங்கள் கருத்துக்கு வலு சேர்த்துக் கொள்கிறார்கள். இஸ்லாமிய செயல்களுக்கு வலு சேர்க்கும் ஹதீசுகளும் இதைப் போலவே மாற்றுப்பொருள் தர ஏதுவாக உள்ளன.

பல ஹதீசுகளை இடம் பாராது பொருத்துதலாலும், தவறான பொருள் கொடுப்பதாலும் பல தவறுகளுக்கு வழிகோலுகிறது.

’ஜிகாதி’ என்ற சொல்லே மிகவும் வன்முறையான சொல்லாகக் கருதப்பட்டு வருகிறது. ‘காஃபிர்கள்’ என்ற சொல்லும் இதைப் போலவே கருதப்படுகிறது.

தங்கள் மதத்தைப் பரப்ப முயலும் எந்த மதமுமே தங்கள் வரலாற்று ஏடுகளில் வன்முறைகளைக் கையாண்டிருப்பார்கள் என்பது உண்மை. பெரும் ராஜ்ஜியங்களைக் கட்டமைத்து அதன் வழியே வன்முறை மூலம் தங்கள் மதங்களைப் பெருக்கியிருப்பார்கள் என்பதும் உண்மை. ஐரோப்பாவில் பழம் மதங்களை அழித்து கிறித்துவத்தைப் புகுத்தியது அமைதியான முறையில் இல்லை; வன்மம் மிகுந்து இருந்தது.  மரண விசாரணைகள், சிலுவைப் போர்கள் மூலம்  ரத்த ஆறுகள் தொடர்ந்து ஓடின.

இப்போராட்டங்களில் கிறித்துவம்  தனது ஆரம்ப காலத்து வன்முறைகளைக் கைவிட்டு வளர்ந்தது போல் இஸ்லாம் தங்களது இறையியலை செப்பனிட்டு மாறாமல் தன் பழைய நிலையிலேயே நின்று, தன் பழமையோடு ஒன்றி நின்று விட்டது. கிறித்துவத்தில் எழுந்த மறுமலர்ச்சி, புத்துயிர்ப்பு போன்றவைகளின் நிழல்கூட படாமல் இஸ்லாம் வரலாற்று வளர்ச்சி ஏதுமற்று தேங்கி நின்று விட்டது. 

இஸ்லாமிற்கு இன்னொரு ஒழுங்கற்ற முகமும் உண்டு. தாலிபன் இன்னும் இது போன்று அவர்களோடு இணைந்து செல்லும் சில குழுக்கள் நடத்தும் போதனைகளும் இஸ்லாம் தான். அவர்களும் மற்ற இஸ்லாமியர்கள் போலவே குரானையும், ஹதிசுகளையும் மேற்கோள் காட்டியே தங்கள் கருத்துகளை முன் வைக்கின்றனர். இது ஒரு பெரும் குழப்பமான ஒரு சூழல். தீவிரவாதிகளும், அவர்களை எதிர்க்கும் மிதவாதக் குழுவும் குரானையும் ஹதிசுகளையும் வைத்தே மோதிக்கொள்ளும் நிலையே நீடிக்கின்றது.


கிறித்துவத்தில் இருக்கும் புதிய ஏற்பாடு போல் இன்னொரு நூலே இக்கடினமான சூழலில் இருந்து இஸ்லாம் விடுபடுவதற்கான வழி. இஸ்லாமிய அறிஞர்கள் ஒன்று கூடி குரானில் உள்ள ஒவ்வொரு ‘ஆயத்’துகளையும், ஹதிசுகளையும் எந்த வித குழப்பமுமில்லாமல், நேரடி பொருள் தரும்படி தொகுக்க வேண்டும். இந்த நூலே எல்லோருக்குமான பொதுவான நூலாக, இஸ்லாமியக் கோட்பாடுகளுக்கான ஒரே நூலாக இருக்க வேண்டும்.

=======================

இஸ்லாமியத் தீவிரவாதம் என்றெல்லாம் பேசும் போது இஸ்லாமிய மதம் மட்டும் தனித்து ஒரு குற்றவாளிக் கூண்டில் வைத்து பேசப்படுவதே வழக்கம். ஆனால் ‘தூத்துக்குடியிலிருந்து ஒரு குரல்’ என்ற வலைப்பூ ஒன்றில் நான் சமீபத்தில் கண்ட கருத்து மிகச் சரியாக இருந்தமையால் அதனை அப்படியே ஒற்றெடுத்து இங்கே பதிவிடுகிறேன். (பதிவரின் அனுமதியை இதனைப் பதிவிட்ட பிறகே கேட்க உள்ளேன்.)
--------------------------------------------




தீவிரவாதத்தின் ஆணிவேர்

ஒசாமாக்களையும் உசேன்களையும் உருவாக்கிவிடுவது, 
பின்னர் 'தீவிரவாதத்தை அழிப்போம்' என உலக நாடுகளுக்கு அழைப்பு விடுவது,
போர் என்னும் பெயரில் அப்பாவிகளை கொன்றுகுவித்து விட்டு, எண்ணைய்க் கிணறுகளை தன் வசப்படுத்துவது,
அரபு நாடுகளின் ஆசியோடு அவர்கள் மண்ணில் தன் ஆதிக்கத்தை நிலைக்க செய்வது.
இதுதான் காலம்காலமாக அமெரிக்கா நடத்தும் செயல்.
(இன்னும் 10000 அமெரிக்க படையினர் ஆப்கானிஸ்தானில் உள்ளனர். ஆப்கனில் அமெரிக்காக்காரனுக்கு என்ன புடுங்குற வேலை??)

தீவிரவாதத்தின் ஆணிவேரைத் தேட முயற்சித்தால் அந்த தேடல் அமெரிக்க குடியரசுத் தலைவர் மாளிகையில் சென்று முடிவடையும்.


790. அம்மா ---> காளி மாதா









*




 http://www.vinavu.com/2014/09/30/ammaa-glycerin-kavithai/ வினவு பதிவில் - துரை. சண்முகம் என்பவரின் கவிதை மிக அழகு. இன்றைய தமிழனின், தமிழ் நாட்டின் நிலையை அழகாகக் காண்பித்துள்ளார்.

வாசித்ததும் நானும்  அழுவாய்ச்சியாக மாறினேன்....!

திரைப்படத் துறையினர் உண்ணாநோன்பிருக்கின்றனராம். (தீபாவளி வேறு சீக்கிரம் வருகிறதே! படங்கள் வெளியாகி ஓடணுமே!) ‘தர்ம தேவதைக்கு அநீதியா? என்றொரு கேள்வி அவர்கள் கூடாரத்தின் பின்னால் ஒட்டப்பட்டிருந்ததாம்.  காதின் ஜவ்வு கிழிகிறது.
படங்கள் - வினவு

படங்கள் - வினவு


மக்களின் ‘உணர்ச்சிக் கொந்தளிப்பு’ ரொம்பவே பயங்கரமாக இருக்குது. அது இந்து ஆங்கில இதழின் கடிதப்பகுதியில் கூட கொந்தளித்தது ஆச்சரியமாக இருந்தது. நேற்று  ஒரு அறிவு(கெட்ட)ஜீவி இப்படி எழுதியிருக்கிறார் -- செயலலிதா முதல் படத்தில் வெண்ணிற ஆடை கட்டி வரும் சோகத்தோடு படம் முடிந்ததாம். ஆனால் அந்த வெண்ணிற ஆடை இப்போதும் தொடர்ந்து சிறையில் கட்டிய வெண்ணிற ஆடையோடு வந்து நிற்கிறதாம். - வாசித்ததும் உங்களுக்கும் அழுகாச்சி வரவில்லை ...? எனக்கு ரொம்ப வந்தது.

நேற்று தீர்ப்பு வந்த நான்காவது நாள். நேற்றும் எங்கள் பகுதியில் கடையடைப்பு தொடர்கிறது. விடாது கருப்பு ...!

வழக்கமாக வரும் மின்சாரமும் நேற்று இல்லை. வழக்கமாக இரண்டு மணி நேரம் மின்சாரம் இல்லாமல் இருந்து மீண்டும் வந்து தொடர்ந்திருக்கும். ஆனால் இன்று அரை மணி நேரம் மின்சாரம் ... பின் ஓரிரு மணி நேரம் மின்சாரம் இல்லை என்று காலை ஆறு மணியிலிருந்து கண்ணாமூச்சி ஆட்டம் காண்பித்தது. மின்சார அமைச்சர் பெங்களூரு போனதினாலோ, அல்லது மம்மி சிறையில் இருப்பதினாலோ என்னவோ இப்படி மின்சாரம் ஆட்டம் போடுகிறது. ஆட்டத்தில் சிக்கிக் கொண்டோம்.

மீனவர்கள் மிகவும் வருந்தி போராடுகிறார்களாம்  -- ஏனென்று எனக்குத் தெரியவில்லை.

வக்கீல்கள் சேர்ந்து ஒரு போராட்டமாம். இவர்கள் தான் நமக்கு சட்ட திட்டங்களைப் பற்றிய அறிவைத் தருகிறார்களாம். ஆனால் இவர்கள் இப்படிப் போராடுவது ஏன் என்பது ஒரு பெரிய கேள்விக்குறி. தீர்ப்புக்கு எதிராக அவர்கஇருந்தால் பேசாமல் அடுத்த சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். எதற்காக இந்தப் போராட்டம் ... அதுவும் ஒட்டு மொத்தமாக எப்படி சேர்ந்தார்கள்? நமக்கேன் தெரியும், நாராயணா...!

அதிமுகவில்  பதவியில் இருக்கும் நண்பனொருவனிடம், ‘ஏண்டா உங்க கட்சியில் இருக்கிறவங்க இப்படி பொசுக் ... பொசுக்குன்னு கால்ல விழுகுறீங்க?’ அப்டின்னு கேட்டேன். சரியா பதில் சொன்னான். ’அமைச்சர் கால்ல ஒரு தடவை விழுந்தா சில பல கோடி; எங்கள மாதிரி ஆளுக விழுந்தா சில பல லட்சம். விழக்கூடாதா?’ அப்டின்னான். நல்லா விழுந்து  விழுந்து  எழுந்திருங்க அப்டின்னேன்.




கடந்து வந்த காலத்தைக் கொஞ்சம் திருப்பி ஆச்சரியத்தோடு  பார்க்கிறேன்.

அந்தக் காலத்திலிருந்து சில அரசியல் ஆரூடங்கள் நான் சொல்லி, அவற்றில் பல நிகழ்வுகள் அப்படியே நடந்து வந்துள்ளன.

***ஏறத்தாழ இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன் என் மாணவ நண்பன் (பெயரளவில் அவன் ஒரு இந்து) தனது மகனுக்கு எனது பெயரை வைப்பதாகக் கூறினான். ‘வேண்டாமப்பா ... நாடு போகிற போக்கில் உன் பையன் பெரியவனாக வரும் போது மைனாரிட்டுகளுக்குப் பிரச்சனைகள் வரலாம்  என்றேன். (முழுவதும் உண்மையாகவில்லை என்று இன்றுவரை மகிழ்ச்சிதான்.)

***இருபது ஆண்டுகளுக்கு முன் புது வீட்டுக்குக் கல்லிடைக்குறிச்சியில் கதவு செய்யப் போன போது அங்கு இரு மாடல்களில் செய்ய முடியும் என்றார்கள். ஒன்று, வெறும் வட்ட அமைப்பில் ஒரு பூ,  இன்னொன்று, தாமரைப் பூ. கட்டாயம் பா.ஜ.க. வந்து விடும். அதனால் தாமரைப் பூ வேண்டாமென்றேன்.



***எம்.ஜி.ஆர். திமுகவிலிருந்து தூக்கி எறியப்பட்டதும். தி.மு.க. (அண்ணா பாசறை) என்ற பெயரில் புதிய கட்சி உருவாகும் என்றேன்.

***அயோத்தியாவில் பாபர் மசூதி இடிக்கப்படும் என்று மாணவர்களிடம் சில நாட்களுக்கு முன்பே சொல்லியிருந்தேன்.

***எம்.ஜி.ஆர். இருக்கும் வரை தி.மு.க. தலையெடுக்க முடியாது என்றேன்.

இதே போல் இப்போதும் ‘ஆத்தா’ இறங்கி வந்து என்னிட்ட என்ன சொல்றா தெரியுமா....?

பெரிய ஆளுக ஜேத்மலானி மாதிரியெல்லாம் நீதி வேண்டி களத்தில் இறங்குறாங்க... பெரிய குருஷேத்திரப் போர் தான்! சில வாரக்கணக்கில் மம்மிக்கு பெயில் கிடைக்கும். மம்மி இப்போ புது வேஷம் எடுப்பாங்க. காளி வேஷம் தான். ஒரு கையில் துண்டமாக ஒரு தலை -- அதைப் பார்த்து மட்டும் எனக்குப் பயம். இந்த பயம் நம் திரைத் துரையினருக்கும் வந்திருக்கும் போலும். அதான் வரிசை கட்டி நிக்கிறாங்க ...

இப்போ கண்ணீராக தமிழ் நாடு அழுது கொண்டு இருக்கிறதல்லவா? அழுகும் ம்க்களை மம்மி கரையேத்த வேண்டுமா இல்லையா? இந்த sympathy waveயை வடி கட்டி திசை திருப்ப வேண்டுமா இல்லையா? பெயிலில் வெளி வந்தும் ஆட்சிக் கட்டிலில் ஏற முடியாததால் பல மக்கள் நலத் திட்டங்கள் நடைபெறாமல் இருக்குமல்லவா? அதையெல்லாம் மக்கள் உணர்ந்து மம்மி உட்கார முடியாமல் இருக்கிறார்களே என்று வருத்தத்தின் உச்சியில் அமர்ந்து கவலைப் பட்டுக் கொண்டிருக்கும் போது மம்மி டக்குன்னு அரசைக் கலைத்து விட்டு ஓராண்டிற்கு முன்னாலேயே அடுத்த தேர்தலை வச்சிருவாங்க.... அலையோ ..அலை... அப்படி ஒரு அலை. நாப்பதும் நமக்கே என்பது மாதிரி இந்த தேர்தலிலும் ஒரு குறி இருக்கும். அது நடக்கவும் செய்யும். எதிர்க் கட்சியாவது ... ஒண்ணாவது. (பாவம் ...ஸ்டாலின்!)

இதற்குள்  உயர் நீதி மனறம் ... பிறகு உச்ச நீதி மன்றம். என்று வழக்கு வேகமாக முன்னேறும். இப்போது போல் 18 ஆண்டுகள் நடக்காது. வழக்கறிஞர்கள் ... வாய்தாக்கள் ... இன்ன பிற ... அதிகமாகப் போனால் 18 மாதங்கள் நடக்கும். வழக்கின் முடிவில் “கறைகள் மிக நல்லது” என்பது முடிவாகும். இதற்குப் பின் மம்மிக்கு முழு விடுதலை. இருக்காதா பின்னே... நீதி மன்றங்கள் உயரும் போது தண்டனைகள் குறைவது நம் நாட்டின் நீதித் துறைகளில் வழக்கம் தானே -- ‘கனிந்த’ மக்கள்தான் உயர்ந்த நீதிமன்றங்களின் நீதிபதிகளாக ஆகிறார்கள் போலும்!

முழுவதுமாக மம்மி முதலமைச்சர். இப்போது நிறைய பாடம் கற்றிருப்பார்கள்.  இனிமேல்  இப்போது போல் தங்கள் பெயரிலேயே இல்லாமல்  வேறு வழியில் வெளிநாட்டு drafts வாங்குவார்கள். இன்னும் ஒரு எஸ்டேட்.... முந்திரிப் பழத் தோட்டம் (இத்தாலியிலோ?) ... ஹோட்டல் (இப்போது இங்கிலாந்தில்; அப்போது எங்கேயோ) இப்படியே வண்டி போகும். காளி மாதாவின் ருத்ர தாண்டவம் தொடரும் ............ -- எல்லோருக்கும் நன்மையைச் செய்ய என்பதைத் தான் அப்படிச் சொல்கிறேன்!

நமது தமிழ்நாட்டு மக்கள் அவரை ‘நிரந்தர முதலமைச்சர்’ ஆக்காமல் ஓய்ந்து விடுவார்களா .. என்ன..?! (’நிரந்தர பிரதம அமைச்சர்’ என்பது ஓய்ந்து விடும் என்று தான்  நினைக்கிறேன்.)

ஒரு கை பார்த்து விடுவோம் !!!


*

சில பின் குறிப்புகள்;

அது ‘பார்ப்பன அக்ரஹாரா’ அல்லது ’பரப்பான அக்ரஹாரா’ -- இரண்டில் எது சரி?

*

தீர்ப்பு வந்ததும் நண்பர் ஒருவர் - அந்தக் காலத்து எம்.ஜி.ஆர். வழிவந்த அதிமுக காரர் -  ரொம்ப வருத்தப்பட்டார். இந்த அம்மா நூறு கோடிக்கு எங்கே போகும் என்றார். அட .. நமக்குத்தான்யா நூறு கோடிங்கிறது ரொம்பப் பெருசு; அவுகளுக்கு இதெல்லாம் தூசு மாதிரி என்றேன்.

அவரால் அதை ஒத்துக் கொள்ள முடியவில்லை.

நம் நாட்டு மக்களுக்கும் நூறு கோடி இதே மாதிரிதான் பெருசா தெரியுது; அவுகளுக்கு இதெல்லாம் ஜுஜுபி என்பது தெரியவில்லை. நம்ம அளவுக்கே அவுகளையும் நினச்சிக்கிறாங்க போலும்.........

*







 *



*