Monday, September 28, 2015

869. மதங்களும் சில விவாதங்களும் -- ஒரு விளக்கம்









*





 நேற்று இரவு எனக்கு ஒரு தொலைபேசி வந்தது. குரலிலிருந்து இளைஞர்கள் என்று நினைக்கிறேன். நால்வரோ ஐவரோ என்னோடு பேசினார்கள். அவர்களுக்கு என் மீது கோபம் – நான் நபியைத் தாக்கி தரம் தாழ்த்தி எழுதி விட்டேன் என்று. அவர்களுக்குப் பதில் சொன்னேன். இருந்தாலும் எல்லோருமே தெரிந்து கொள்ள மீண்டும் அதனைத் தருகிறேன்.


இளைஞர்களின் கோபத்திற்கான காரணம் நான் ஹதீஸ் பற்றி எழுதியிருப்பது. பக்கம் 217 – 222. அதிலும் 220 -222 பக்கங்கள். இதில் நான் கொடுத்திருக்கும் தலைப்பைப் புரிந்து கொண்டாலே என் மீதுள்ள கோபம் போய் விட வேண்டும். அந்தத் தலைப்பு: முகமதுவை இழிக்கும் சில ஹதீஸ்கள். (முகமதுவை நான் இழிக்கவில்லை.)


1.ஹதீஸ்கள் வேண்டாமென்று அல்லாவும், நபியும் கூறியதாகச் சொல்லும் வசனங்களைக் குறிப்பிட்டுள்ளேன். அவர்கள் இருவரும் வேண்டாமென்று சொன்ன பின்னும் ஹதீஸ்கள் மதத்திற்குள் நுழைந்துவிட்டன.

2. அப்படி நுழைந்த ஹதீஸுகளில் சில நபியைp பற்றி (உயர்வாகப் பேசுவதாக நினைத்தோ என்னவோ) எழுதியவை அவரின் புகழுக்கு மாசு கற்பிக்கின்றன.


இந்த இரு பாய்ண்ட்டுகளையும் இப்பக்கங்களில் சொல்லியுள்ளேன். அதற்கு ஹதீஸுகளையே மேற்கோள்களாகக் காட்டியுள்ளேன். அவை ஹத்தீஸ்தானே ஒழிய என் வார்த்தைகளல்ல என்பதை நண்பர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

நபியைத் தரம் தாழ்த்தி எழுதும் அளவிற்கு நிச்சயமாகச் செல்ல மாட்டேன் என்று உறுதி எனக்கு எப்போதுமுண்டு.

****

விவாதங்களைத் தொடர விரும்பும் நண்பர்கள் பதிவுகளிலோ, என் பழைய / புது முகவரியிலேயோ கேள்விகளைத் தரும்படிக் கேட்டுக் கொள்கிறேன்.
தொலைபேசியில் பேசும்போது சரியான விளக்கங்களையோ. ஆதாரங்களையோ தரமுடியாது போகின்றது.    இருவருக்கும் பயனில்லாமல் போகிறது.

 ***

personal number  போனில் பேசியவருக்கு,
என்னை ஆர்.எஸ்.எஸ்சின் ஆள் என்றீர்கள். என் பதிவுகள் சிலவற்றைப் படித்தால் உண்மை புரியும். படித்துப் பாருங்கள்

***
சில எண்களுக்குப் பதிலளிக்கவில்லை. காரணம் மேலே சொன்னது தான்: தொலைபேசியில் பேசும்போது சரியான விளக்கங்களையோ. ஆதாரங்களையோ தரமுடியாது போகின்றது.
எழுதுங்கள் ... விவாதிப்போம்


***

Sunday, September 27, 2015

868. புத்தம் புது அறை (தருமி பக்கம்)







*



 அடுத்த நாள் நல்ல பையனாக சாமியாரைப் பார்க்கப் போனேன். ஒரு சாவி கொடுத்தார். ஏதோ ஒரு வகுப்பறையாக இருக்குமென நினைத்தேன். தனியாகத்தான் படிக்கப் போகிறாயா என்று கேட்டார். ஆமாம் என்றேன். வேறு யாரும் கேட்டால் என்னைப் பார்க்கச் சொல் என்றார். சரி .. போ என்றார். எந்த அறை என்று தெரியவில்லையே என்று கேட்டேன். ஒரு அறையைச் சொன்னார். எனக்கு திக்கென்றது. இதற்கு முன் இன்னொரு சாமியார் அங்கு அலுவலகம் வைத்திருந்தார். அவர் காலி செய்த அறை அது. அந்த அறையா என்று எனக்கு ஒரு சந்தேகம். மறுபடி கேட்டு உறுதி செய்து கொண்டு அந்த அறைக்குப் போனேன்.

அந்த அறை எனக்குத் தெரியும். வெளியே இருந்து பார்த்திருக்கிறேன். அந்த அறையா என்ற ஆச்சரியத்துடன் அந்த அறைக்குப் போனேன். கோவிலின் நேர் பின்னால் Fathers' House. அதாவது சாமியார்கள் தங்கும் பங்களா. பின்னாளில் St. Xavier's College, St. Joseph's College, Loyola College போன்ற மூன்று கல்லூரிகளிலும் இருந்த Fathers' Houses ஒரே மாதிரியான கட்டிட அமைப்புடன் அச்சு அசலாக ஒரே மாதிரியாக இருந்ததைப் பார்த்தேன். அந்த மூன்றோடு மதுரை St. Mary's கோவிலும் அதே அமைப்பில் இருந்தது. எல்லாமே Jesuits என்று சொல்லும் சாமியார்களின் அமைப்பில் இருந்தன. அதனால் தான் அந்த ஒற்றுமை.

கோவிலுக்குப் பின்னால் Fathers' House. இதற்கு இடது பக்கத்தில் உயர்நிலைப் பள்ளி. வலது பக்கத்தில் ஆரம்பப் பள்ளி. Fathers' Houseக்குப் பின்னால் ஒரு பெரிய தோட்டம். நிறைய தென்னையும் பாக்கு மரங்களும் இருக்கும். சுற்றிலும் சுற்றுச் சுவர்கள். இப்போது இந்த சுவர்கள் நல்ல உயரத்தில் கட்டப்பட்டுள்ளன. அப்போது உயரம் கொஞ்சம் கம்மி தான். வலது பக்கத்தில் இருக்கும் ஆரம்பப் பள்ளியின் முக்கிய பகுதி கிழக்கு மேற்கில் நீண்டு இருக்கும். அதன் மேற்குக் கடைசியில் இருந்தது தான் எனக்கு வாய்த்த அறை. பள்ளி அப்போது பழைய கட்டிடமாக இருந்தது. ஆனால் இந்த அறை மட்டும் ஒரு புதுக்கட்டிடமாக இருந்தது.

வாசலே மிக அகலமாக இருக்கும். நான்கைந்து நீளப்படிகள் ஏறணும். அங்கே அறை நீளத்திற்கு collapsible gate இருக்கும். ஒரு பாதி கதவுதான் திறப்போம். முன்னறை மாதிரி நீள வாக்கில் முதல் அறை. அடுத்து இன்னொரு வாசல் திறக்க நம் அறை! வீட்டில் செங்கல் தரை. அம்மா வாரம் தோறும் சாணியால் மெழுகுவார்கள். ஆனால் இங்கே எல்லாம் சிமண்ட் மயம். உள்ளே நுழைந்தால் .... அடே .. அப்பா...!

கல்லூரியைத் தவிர இதுவரை என் தலைக்கு மேல் மின் விசிறி  எப்போதும் சுற்றியதில்லை. இங்கே தலைக்கு மேல் ஒரு மின் விசிறி. அதன் கீழே  மேசை; ஒரு நாற்காலி. மேசை நாற்காலி என்று உட்கார்ந்து கொண்டு படிப்பது எல்லாம் ஒரு கனவு தானே ஒழிய, நிச்சயமாக நிஜத்தில் அது மாதிரி ஏதும் வாழ்க்கையில் இது வரை நடந்தது இல்லை. அதுவும் முட்டை விளக்கில் இருந்து பழகிய எனக்கு ஒரு பெரிய ட்யூப் லைட் வெளிச்சம் ... அடடா... என்ன ஆச்சரியம். என்னமோ சொல்வார்களே .. என் வாழ்க்கையையே திருப்பிப் போட்ட ஒரு சம்பவம் என்பார்களே .. அது மாதிரி புது அறை இருந்தது.

நல்லா படிக்கிற ஒரு நல்ல பிள்ளைக்கு இந்த மாதிரி ஒரு அறை கிடைத்திருந்தால் என்னமா பண்ணியிருப்பான்! என்னென்னமோ பண்ணியிருப்பான்!  ஆனால் ... நான் என்ன அந்த மாதிரி நல்ல பையனா?

அறை அமைந்ததை விட சுற்றுச் சுவர் எனக்கு மிகவும் தோதானஒன்றாக மாறிப்போய் அதுவே வாழ்க்கையை மேலும் சிறிது புதிய கோணத்தில் மாற்றியது. சுவர் எப்படி வாழ்க்கையை மாற்றும் என்கிறீர்களா?

மாற்றும் ... நிச்சயமாக என் வாழ்வில் மாற்றியது. எப்படி என்று பிறகு சொல்கிறேனே ....











*

Wednesday, September 23, 2015

867. மதங்களும் சில விவாதங்களும் --- என் கேள்விக்கென்ன பதில்?



 D.Samuel Lawrence

*


 ஆசிரியர் தருமியின் உண்மையான தேடல் பல நிலைகளைக்கடந்து இன்று நாத்திகவாதியாக தன்னை வெளி உலகிற்கு தெரிவித்துக் கொள்ளுமளவிற்கு தைரியத்தையும் நம்பிக்கையையும்கொடுத்திருக்கிறது. அவருடைய உண்மை, நேர்மை, துணிவு பாராட்டப்பட வேண்டிய ஒன்றுதான்.

 ****************

அந்த நிலைக்கு நான் இன்னும் வரவில்லை. விடை காணா சில கேள்விகள் இன்னும் மனதில் இருந்து தொல்லை கொடுத்துக்கொண்டே இருக்கின்றன. பள்ளிப் பருவத்தில், மணல் மேட்டில் படுத்துக்கொண்டு, இரவு வேளையில் வானத்தைப் பார்த்துக்கொண்டு, எதையாவது யோசித்துக்கொண்டே இருப்பது என்னுடைய பழக்கம். சில வேளைகளில் கேள்வி மேல் கேள்வி மனதின் விளிம்பில் தோன்றி மறைந்து கொண்டிருக்கும். அதே நிலை இப்போதும் தொடர்கிறது.
காரணம், தருமியின் புத்தகம்.

 *************

வானத்தில் நிலா, விண் மீன்கள் போன்றவை எல்லாம் மறைந்து போய்விட்டால், ஒன்றுமே இல்லாமல் சூனியமாகி விட்டால் எப்படி இருக்கும்? வானம், பூமி, கடல், மலை, எதுமே இல்லாமல் வெறுமையாகிவிட்டால் எப்படி இருக்கும்?

கடவுள் எங்கேஇருக்கிறார்? படைப்பின் காரண கர்த்தா அவர் என்றால், அவரைப் படைத்தவர் யார்? படைத்தவரைப் படைத்தவர் யார்? அவர் அல்லது அது எது? அதை இயக்குவது எது? இப்படியே கேட்டுக்கொண்டே போனால், இந்த பிரபஞ்சத்தை யாரோ அல்லது சக்திதான் உருவாக்கியிருக்க வேண்டும் என்ற முடிவிற்கு வர வேண்டியிருக்கிறது. கற்பனை பண்ணி பார்க்க முடியாத அளவிற்கு படைக்கப்பட்டிருக்கின்ற யாவற்றையும் உருவாக்கியுள்ள கடவுள் அல்லது சக்தி எங்கிருந்து எப்படி வந்தது? தெரியவில்லை.

 கடவுளை உருவகப்படுத்திப்பார்க்கும்போதுதான் சிக்கல் ஆரம்பிக்கிறது என்று நினைக்கிறேன். அதனாலேயே மதங்கள் தோன்றி பிரிவினைகள். சண்டைகள் ஆகியவற்றிக்கு வித்திட்டன என்று சொல்லலாம். மனதில் எழுகின்ற எண்ணற்ற கேள்விகளுக்கு உறுதியான, தெளிவான, முழுமையான பதில் கிடைக்காமல் மனிதன் தத்தளிக்கும் நிலை இன்னும் தொடர்கிறது என்பதுதானே உண்மை. இப்படி இருக்கலாம் என்று சொல்ல முடிகிறேதே தவிர, இப்படித்தான் என்று சொல்லமுடியவில்லையே.

இந்த இயலாமையை அல்லது அறியாமையை வைத்துத்தானே பல மதங்கள் உருவாகியிருக்கின்றன.

அறிவு, பகுத்தறிவு, ஞானம் இவை எல்லாம் மனிதனுக்குக் கொடுத்தது யார் அல்லது எது ? மற்ற படைப்புகளுக்கு பகுத்தறிவு, ஞானம் போன்றவை கிடையாது என்று நாம் நம்பினால் அவைகளுக்கு ஏன் கொடுக்கப்படவில்லை? மனிதன்தான் படைப்பின் சிகரமா? படைப்பின் சிகரம் படைப்பையே அழிக்கக் காரணம் என்ன?

இன்னொன்று: மோட்சம், நரகம் எல்லாம் கற்பனைதானா? நான் ஏன் பிறந்தேன்? இந்த வாழ்க்கையின் அர்த்தம் என்ன? இறந்தபின் என்ன நடக்கிறது? எதற்குமே முழுமையான பதில் இல்லை. இன்னும் இருளில்தான் இருக்கிறோம்.இப்படி, விடைகாணமுடியாத கேள்விகள் பல இருக்கும் பொழுது கடவுள் இருக்கிறார் என்றோ அல்லது இல்லை என்றோ எப்படி உறுதியாகச் சொல்லமுடியும்? அப்படியென்றால், இது தேவையற்ற தேடல் என்று சொல்லலாமா? 

கடவுள், மதம் என்று நாம் சண்டையிட்டுக்கொண்டிருப்பதைவிட நல்ல விழுமியங்களை மனதில் கொண்டு, எல்லோருடனும் அன்பைக் கடைப்பிடித்து, நீதிக்காக போராடி நேர்மையான வாழ்வு வாழ்வது ஆயிரம் மடங்கு நல்லதுதானே!





*


 

866. MOZART .... ILAYARAJA .... MOZART

* *

Saturday, September 19, 2015

865. ”தனி ஒருவன்” - கிஸ் பண்ண விடுங்கப்பா ...







*



copy cat என்பதால் இயக்குனர் ராஜா மேல் பெரிய அபிமானம் ஏதும் கிடையாது. ஆனால் தனி ஒருவன் படம் பார்த்ததும் அவருக்கு என் பாராட்டுகளை அளிக்க விரும்பினேன். படம் நன்றாக, விருவிருப்பாக சென்றது.ஹை டெக் விஷயங்கள் .. வேகமாக நகரும் கதை .. நன்றாக நடித்த நடிகர்கள்.. அதிலும் அப்பாவாக வரும் ராமய்யா ... வழக்கமாக யோசித்து புரிய வேண்டிய காட்சிகள் தமிழ்ப்படங்களில் வந்தால் உடனே இயக்குனர்கள் அதற்கு ஒரு விளக்க உரை.. அது இதுன்னு கொடுப்பாங்க. இந்தப் படத்தில் அந்த மாதிரி ’நோட்ஸ் போடுறது’ இல்லை. அரவிந்த சாமி ரோலும் நல்லா இருந்தது. முரடன்கள் தான் வில்லன்களாக இருக்கணுமா? பெரிய விஞ்ஞானிகளும் பெரிய வில்லன்களாக முடியுமில்லையா?

படம் ஆரம்பித்த முதல் 10 நிமிடங்களுக்குள்ளே ரெண்டு மூணு டிவிஸ்ட் வந்தது படத்துக்கு நல்ல ஆரம்பம் கொடுத்தது. சின்னப் பயல் கட்சித் தலைவரிடம் போட்ட டீல் சூப்பர்ப்.

இந்த மாதிரி படங்களில் ரொம்ப லாஜிக் ஓட்டைகள் இருக்கும். இதில் ரொம்ப கொஞ்சம் மட்டும் தான். கடைசி சீனில் எப்படி அரவிந்த சாமி SD Cardல் எல்லா தகவலும் சொல்லி புல்லட் கோட்டில் வைக்கிறார் ....... எனக்குத் தெரிந்த பெரிய ஓட்டை இது தான்.

படம் பார்க்கும் போது ஆரண்ய காண்டம் படம் நினைவுக்கு வந்தது. ஏனென்று தெரியவில்லை. இதைவிட ஆரண்ய காண்டம் பிடித்தது என்றும் நினைவுக்கு வந்தது. ஏன் அந்தப் படம் க்ளிக் ஆகலை. திருட்டு சிடி கூட அப்படத்திற்கு இல்லையாமே...!

படத்தில் பிடிக்காத இடம் - இந்தப் படத்தில் வந்த காதல் டூயட். நயந்தாரா விரட்டி விரட்டி காதலிக்க, ஹீரோ மாட்டேன்றார். கடைசியா சரின்னு ஆனதும் நயந்தாரா அப்படி மூஞ்சை மேலே தூக்க ... கடற்கரையில் ஒரு பாடல். எரிச்சலா இருந்தது. படத்தின் வேகத்திற்கு சட்டென்று போட்ட கடிவாளம். நம்ம தமிழ்ப்படத்தில் இரண்டு கஷ்டம்: ஒண்ணு பாட்டு ... ரெண்டு நீளம். பாட்டைக் குறைச்சாலே நீளம் குறையும்.

அதோடு நம்ம படங்களில் கிஸ்ஸிங் சீன் இல்லாம எடுக்கிறது தான் நம் “தமிழ்ப்பண்பாடு”ன்னு யாரோ சொல்லிட்டுப் போய்ட்டாங்க. அதெல்லாம் வெட்டிக் கதை. அந்த மாதிரி சில வினாடிகளில் ஒரு கிஸ்ஸிங்கை காண்பிக்கக் கூடாது என்பதற்காக 3-5 நிமிடம் வரை அலையில் பெண்ணைப் புரட்டிப் போட்டு, மழையில் மஞ்சள் சேலையில் போட்டு நனைத்து எடுத்து, மரத்தைச் சுத்தி ஓட விட்டு மூச்சு வாங்க வைத்து ... இதுவே ஒரு சோதனையாக ஆகிவிடுகிறது.

இரண்டு மணி நேரம் இல்லாமல் ஒன்றரை மணி நேரத்தில் முடித்தால் இது மாதிரி படங்கள் இன்னும் நன்கு அமையும்.

தமிழ்ப்பண்பாட்டை மறந்து விட்டு ஒரு நாலைந்து வினாடிக்கு ஒரு கிஸ் சீனை வச்சிட்டீங்கன்னா... எங்களுக்கும் வசதி; உங்களுக்கும் செலவு குறைவு. கிளுகிளுப்புன்னு சொல்லி எங்களில் பலரையும் ஏமாத்திடலாம் ஈசியா...!



 *

Monday, September 14, 2015

864. என் நூலைப் பற்றி வந்த பின்னூட்டக் கருத்து ... 4





*


 என் நூலைப் பற்றி வந்த பின்னூட்டக் கருத்து 


மதங்களும் சில விவாதங்களும் என்ற தலைப்பிட்ட தங்கள் நூலை விரும்பி, சுவைத்து படித்து அகமகிழ்ந்தேன். ஒரு கருவை வடிவமைத்து, எழுதி, நேர்த்தியான உரைநடையால் வாசிப்பவரின் கவனத்தை ஈர்தது நூலின் மையக் கருத்தினை பதிய வைப்பது எளிதான முயற்சி அன்று. ஆனால் நீங்கள் அதனை நேர்த்தியாக, செவ்வனே செய்து தமிழில் தங்கள் ஆளுமையை நிலைநாட்டி உள்ளீர்கள். நல்ல கருத்து, நல்ல முயற்சி, நல்ல நோக்கம். நீங்கள் ஒரு நல்ல சிந்தனைவாதி என்பதும் நல்ல படைப்பாளி என்பதும் யாம் அறிந்தது, ஒரு நல்ல தத்துவ ஞாநியும் கூட என்பதை இப்போது அறிகிறோம். வாழ்த்துக்கள். தமிழில் இது போன்ற மூலப்படைப்புகள் அரிது. இது போன்ற தங்கள் முயற்சிகள் மேன்மேலும் வளம் பெற வாழ்த்த வயதில்லை...hats off sir

RAM MOHAN 





 *

863. மதங்களும் சில விவாதங்களும் - இரு பின்னூட்டக் கருத்துகள் ...3








*

தருமி: மதங்களும் சில விவாதங்களும்


God should be omniscient (knowing that a rape is going to take place), omnipotent (having the ability to stop that rape), benevolent (the merciful disposition to stop that rape), and omnipresent (present everywhere, all the time).

The fact that a rape takes place also means that God had known about it beforehand and in fact,is right there in the midst of that scene, doing nothing about it.

Do we need such an impotent deity?  We don't need consolation; we need security before the event occurs. We can't blame the whole thing on satan or fate.

Bharathiyar says, 'If a single individual goes hungry, it is cause enough to destroy this world'.

We should say, if a single rape takes place, it should be cause enough to destroy all religious structures.

Madhangalum, sila vivadhangalum is a wake-up call to everyone. We need to recognize religion as a power structure created by vested interests.

Humanism is good enough for all of us. We don't need forces descending from heaven. If a person requires religion to make him good, then only God can help him.

blog: motormouth



*****


மதங்களும் சில விவாதங்களும்  is a timely book. 


Religious intolerance is not a thing of the past. It is with us, today, and is getting worse. All that the book exhorts us to do is just think. How difficult can that be! All religions hate the thinker. For the believer who feels he has nowhere else to go in times of distress, the religious experience has always been a triumph of hope over experience. No matter how many times our God lets go of our seeking hands, we continue to beseech. 'Eli,eli, lama sabach thani' should not be a supplication, but a show cause notice to the God who had promised and not delivered.

This book needs to be translated into as many languages as possible. This book is a scientific deconstruction of the sloppy aggregation of myths that today goes by the name of religion.

Humanism is the answer. Man doesn't require refereeing by a supernatural being. Our inherent goodness of heart is adequate. If a person requires religion to make him humane, then only god can help him!


comment from: yingyang


******

*









Thursday, September 10, 2015

862. என் நூலைப் பற்றி வந்த இரண்டாம் பின்னூட்டக் கருத்து





*



Brilliant and gutsy writing; well-researched (Professor, after all)and impartially dissecting ( habit of a Zoology professor?) all religions (with equal malice towards one and all); needs also to come out in the e-book format.

 Part of my permanent library.

 CONGRATULATIONS!!!


Thomas Paul

 *

Saturday, September 05, 2015

861. என் நூலைப் பற்றி வந்த முதல் பின்னூட்டக் கருத்து




*


என் நூலில் தனி முகவரி ஒன்று கொடுத்து, நூலைப் படித்து முடித்ததும் உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள் என்று கேட்டிருந்தேன். முதன் முதல் வந்தது நண்பர் D.S.L.  அவர்களின் 'கண்ணோட்டம்'. சிறப்பான நன்றி அவருக்கு. 





முதலில் பாராட்டுகள்உங்களின் துணிவான முயற்சிக்கு. 

பொதுவாக, ஏதோ பிறந்தோம், வாழ்ந்தோம், இறந்தோம் என்ற நிலையில்  பெரும்பாலானோரின் வாழ்க்கை ஓட்டம் முடிந்துவிடுகிறது . ஏன் பிறந்தோம்? எதற்காக  வாழ்கிறோம்? ஏன் இறக்கிறோம்? இறந்தபின் நடப்பது என்ன? என்றெல்லாம் கேள்விகள் கேட்டு விடை காண முயல்வதுமில்லை; ஆர்வமும் இல்லை. யாரையும் குறை சொல்ல முடியாது.

கோயில், மசூதி, தேவாலயம் போன்ற வழிபாட்டுத்தலங்களுக்குச் செல்கிறோம். இயந்திரத்தனமாக வழிபாடு செய்கிறோம். ஏதோ கடமையை முடித்துவிட்ட  மனநிறைவுடன் வருகிறோம். மதம், கடவுள்  போன்றவற்றைப் பற்றி சிந்திப்பதும் இல்லை. நமது நம்பிக்கைகள் பல, ரத்தத்தோடு கலந்து, உணர்வோடு உறைந்துஎளிதில் மாற்ற முடியாத கற்பாறைகளாக, மனதின் அடித்தளத்தில் கிடக்கின்றன. பகுத்தறிவிற்கு, இங்கே வேலை இல்லை.

'மதங்களும், சில விவாதங்களும் மனக் குட்டையில் வரவேற்கத்தக்க சலனங்களை உருவாக்குகின்றன; அலைகளை எழுப்புகின்றன.

மதத்தின் பெயராலும், கடவுளின் பெயராலும்  கண் முன்னே நடக்கின்ற அநியாயங்களைக் கண்டும் காணாத மாதிரி நடித்தால், நம்மைவிட மோசமான வில்லன்கள் இருக்க முடியாது.   நம்மை முட்டாள்களாக்கும் மூடப்பழக்கங்களையும்  துருப்பிடித்தக் கருத்துக்களையும்  குப்பைத்தொட்டியில் போட 'தருமியின்' எண்ணங்கள் நிச்சயமாக உதவும்.

விருப்பு வெறுப்பின்றி நடுநிலைக் கண்ணோட்டத்துடன் 'தருமி' எழுப்பும் கேள்விகள் நம்மை சிந்திக்க தூண்டுகின்றன.  

'கடவுள் இருக்கின்றாரா? இருந்தால் எங்கே இருக்கிறார்? மனிதன் கேட்கிறான்'.

'கருணை பொங்கும் உள்ளம்; அது கடவுள் வாழும் இல்லம்,
கருணை மறந்தே திரிகின்றார்; தினம் கடவுளைத் தேடி அலைகின்றார்'.

மதம் தூக்கி எறியப்படவேண்டும்,

மனிதம் தழைக்க வேண்டும்.

இத்தகைய புத்தகங்கள் அந்த இலக்கை நோக்கி நம்மை வழி நடத்திச் செல்ல உதவும்.






Prof. D.Samuel Lawrence  

9940752852





 *






Friday, September 04, 2015

860. மதங்களும் சில விவாதங்களும் -- நூல் வாங்க .. இங்கே வாங்க ....





*






மதுரைப் புத்தகத் திருவிழாவில் .. கடை எண்: 126  &  127

நூல் கிடைக்கும் வேறு சில கடைகள்  ....

            சென்னை --          DISCOVERY,  K.K.  Nagar
                                                New Book Land,  T.nagar
                                               Bharathi Puthaha Nilayam, Thenampettai
                                               Panuval Book Store, Thiruvanmiyur

            மதுரை                 Jeyam Book Centre
                                             Mallikai Book Centtre

           கோவை               Vijaya Pathippagam

திருவண்ணாமலை  Arumai Book Centre

திருநெல்வேலி          New Century Book House

       திருச்சி                    Anand Book Park

        கம்பம்                     Maya Book Centre 

       சேலம்                       Palam Book Store


இணையத்தின் மூலம் வாங்க ....


http://www.ethirveliyedu.in/

https://www.facebook.com/wecanbook.distributors

udumalai.com

nammabooks.com

chennaishopping.com

bookconnect.com

wecanshopping.com

panuval.com

flipkart.com

hillskart.com

www.nhm.in/shop/ethirveliyedu



***********



மதங்களும் சில விவாதங்களும்

தருமி

பக்கம் 240
ரூ. 220


மத நம்பிக்கைகள் பொதுவாகவே பிறப்போடு வருகின்றன. ஆனாலும் பிறப்பினால் ஒரு மத்த்தில் இருப்பவர்கள் தங்கள் சமய நம்பிக்கைகளைக் கேள்வி கேட்பதே இல்லை. ஏனெனில் அவர்களுக்குப் பிறந்த உடன் போடப்பட்ட ஒரே “கண்ணாடி” வழியே பார்த்து தான் பழக்கம். அந்தக் கண்ணாடியைக் கழட்டுவதே “பாவம்” என்ற நினைப்பில் வாழ்வதுவே நமது வழக்கம். ஒரு சிலருக்கு சில ஐயங்கள்  ஏதேனும் எழலாம். அவ்வப்போது தலை காட்டும் இந்த ஐயங்களை அவர்களது நம்பிக்கைகள் பொதுவாக ஆழப் புதைத்து விடும். இந்த ஐயங்களின் மீது தொடர்ந்து கேள்விகளை எழுப்பி விவாதப் பொருளாக மாற்றியுள்ளார் நூலாசிரியர்.

இந்நூலில் உள்ள ஒவ்வொரு வரியிலும் நேர்மை, வெளிப்படைத் தன்மை, நாகரிகம் என்னும் உயர்பண்பு, அறிஞர்களுக்கே உரித்தான துணிவு, தங்கு தடையற்ற நடையழகு போன்ற அரிய பண்புகள் இழையோடுவதைக் காணலாம்.






 *

Wednesday, September 02, 2015

859. HINDUTHUVA COLLECTION ... 1




*

Hindutva activists threaten two more rationalists a day after Dr Kalburgi was shot dead



*
30 Aug 15

Who killed 

Dr Malleshappa Kalburgi?


MM KALBURGI

Malleshappa Kalburgi, a leading Indian scholar and a well-known rationalist thinker.

The former university vice-chancellor had been given police protection after Hindu hardliners protested against his comments. Some of these groups actually celebrated the professor's killing on social media yesterday.

Many believe Dr Kalburgi made many enemies within his own Lingayat community - an influential Hindu sect that dominates life and politics in Karnataka - with his outspoken remarks about its traditional beliefs and practices.




Dr Kalburgi's killing comes two years after the murder of another prominent rationalist-thinker, Dr Narendra Dabholkar, in the western city of Pune. His killers have still not been caught.



 March 16, 2015

Who killed Govind Pansare?



He waged a long battle against superstition. He was the communist who also engaged with the caste question.


- See more at: http://indianexpress.com/article/opinion/columns/who-killed-govind-pansare/#sthash.aKwNKlx6.dpuf




Govind Pansare





The first question that came to mind when I heard of Pansare’s demise was who might have killed him, and why such a saintly person would have been targeted.

All through his life, Pansare had rubbed the conservative sections, the Hindutva forces in particular, the wrong way. 

....he had opposed the glorification of Nathuram Godse



*

August 20, 2013

Rationalist Dabholkar shot dead


Anti-superstition activist and Maharashtra’s most vocal rationalist Dr. Narendra Dabholkar (65) was shot dead by two youth on a motorcycle on the Omkareshwar bridge near Pune.


An all-party bandh has been called in Pune on Wednesday in protest against the killing.

The police said it was a planned murder.

Dr. Dabholkar, a medical doctor, turned to social work more than two decades ago. 



  1. Narendra Dabholkar

*