Monday, July 31, 2006

167. ஏன் வேண்டும் இட ஒதுக்கீடு…4

சாதிகள் இருக்குதடி பாப்பா…4


II. இரண்டாம் பகுதி.


ஏன் வேண்டும் இட ஒதுக்கீடு?:



சாதிகளை இன்றே தூக்கியெறியுங்கள்; இட ஒதுக்கீடும் ஒரு மண்ணும் யாருக்கும் தேவையில்லை. ஆனல் முதலில் சொன்னது நடக்குமா? நடப்பதற்குறிய எந்த அறிகுறியும் இல்லை. சனாதன தர்மமும் நிலைக்க வேண்டும்; சமூக நீதியும் கிடையாது என்பது என்னவிதமான மனப்பாங்கு?ஆண்டாண்டு காலமாய் நம் சமூகத்தைப் பீடித்துள்ள சாதி என்னும் வியாதி ஒழிந்து, பிறப்பினால் எந்த மனிதனும் உயர்ந்தவனோ தாழ்ந்தவனோ இல்லை என்ற சமத்துவ சமுதாயம் ஏற்படும் என்ற நம்பிக்கைக் கீற்றைக் கூடக் காண முடியாத இன்றைய சூழ்நிலையின் நிதர்சனங்களை நாம் எதிர்கொண்டே ஆகவேண்டும். சாதிகள் இல்லை என்றோ, ‘நம்மைப் போன்றவர்களுங்கூட’ சாதிப் பிரிவினைகளைப் பற்றிப் பேசுவது தவறு என்றோ நினைத்தால் நாம் கண்களை மூடிக்கொண்ட பூனைகளாகத்தான் இருப்போம். நம்மிடையே சாதிகளும், சாதீய உணர்வுகளும் ஆழமாகவே பதிந்துள்ளன. சாதிகளால் கட்டமைக்கப்பட்ட சமூக ஏற்றத் தாழ்வுகள் எங்கும் நீக்கமற நிறைந்தே இருக்கின்றன. கீழ்நிலை படுத்தப்பட்டவரைப் பார்த்து, அவருக்குச் சாதீயத் தரவரிசையில் சற்றே மேலேயுள்ளவர்கள் ‘அவன்’ மேலே வந்துவிடக்கூடாதே என்ற நச்சு நினைவோடு ‘கீழ்சாதிக்காரன்’ எப்போதுமே தன் அடிமையாகவும் தான் எப்போதுமே ‘ஆண்டை’யாகவும்’ இருக்கவேண்டும் என்ற மன வெறியை எல்லா சாதி நிலைகளிலும் பார்க்க முடிகிறது. நம் சமூக உயர்வில் பங்களிக்காதவர் யார்? ஏதோ ஒரு வழியில் அரசுக்கு வரும் வருமானத்தில் ஒவ்வொருவரும் பங்களிக்கவில்லையா? அப்படியானால் அரசு தரும் service-களில் எல்லோருக்கும் பங்குபெற உரிமை உண்டா இல்லையா? அந்த உரிமை மத நம்பிக்கைகளால் சமூகத்தின் ஒரு பெரும் பிரிவினருக்கு - 75% விழுக்காட்டுக்கு மேல் - மறுக்கப்பட்டு வந்துள்ளது உண்மையில்லையா? மறுக்கப்பட்ட உரிமைகளைப் பெற அவர்களுக்குச் ‘சலுகைகள்’ என்ற பெயரிலாவது இனியாவது புதிய கதவுகளைத் திறப்பது அரசின் முதல் கடமை இல்லையா?

இடஒதுக்கீடு ஏன் என்ற கேள்விக்கு ஒரே வரியிலும் பதில் தரமுடியும்: To provide level playing field என்பதே அது. மண்டல் தன் அறிக்கையில் கூறுவது: ” சமமானவர்களிடம்தான் சமத்துவம் இருக்க முடியும். சமமாக இல்லாதவர்களை சம்மானவர்களாகக் கருதுவதே சமத்துவமின்மை ஆகும்.” ஒரே அமைப்பில் ஒரு பகுதியினர் கல்வியோடு தொடர்பு கொண்டவர்களாகவும், மற்றொரு பகுதியினர் பொது சமூகநலனுக்காக ‘உழைக்கும் வர்க்கமாகவும்’ பிரிக்கப்பட்டு வெகுகாலமாய் பிரித்து வைக்கப்பட்ட ஒரே காரணத்தால் மட்டுமே தங்களை ‘அறிவாளிகளாகப்’ புனைந்து கொண்டு கல்வி தங்களுக்கே உரிய ஒரு விஷயமாகக் கற்பித்துக்கொண்டு இருப்பதுவும், மற்றவருக்குத் ‘தகுதி’ இல்லையென்ற கூற்றை கோயபல்ஸ் தனமாக திரும்ப திரும்பக் கூறிக் கொண்டிருப்பது இன்னும் எத்தனை நூற்றாண்டுகளுக்கு செல்லுபடியாகும்? (தகுதி, திறமை பற்றியப் பிரச்சனைகளைத் தனியாக, அடுத்ததாகப் பேசுவோம்).

நாம் எப்போதுமே அண்ணாந்து பார்க்கும் அமெரிக்க நாட்டில் 1964-லேயே Proactive Employment Law என்ற சம வேலைவாய்ப்புச் சட்டம் கொண்டு வரப்பட்டது. இதனால் மக்கள் தொகை, race - இவைகளின் அடிப்படையில் வேலை வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும் என்பது அரசு வேலைகளுக்கு மட்டுமின்றி தனியார் துறைகளுக்கும் பொருந்தும் என்ற சட்டம் இயற்றப் பட்டுள்ளதே. சரியான இன்னுமொரு சான்று வேண்டுமெனின், டெட்ராய்ட் மாநிலத்தில் பாதிக்கு மேல் ஆஃப்ரோ-அமெரிக்கர்கள் இருந்தும் பல அரசு வேலைகளில் அதுவும் காவல் துறையில் மேல்பதவியிலிருப்பவர்கள் பலரும் வெள்ளையர்கள் என்பதை எதிர்ப்பு செய்தமையால், 50:50 என்ற அளவில் இரு சாராருக்கும் பதவிகள் கொடுக்கப் பட அதை எதிர்த்து வெள்ளையர் நீதி மன்றம் சென்ற போது நீதி மன்றம் விகிதாசார அடிப்படையில் பதவிகள் கொடுக்கப்படுவதே சரியென்று தீர்ப்பும் அளித்தது.

ஆனால் நம் நாட்டில் இப்படி ஒரு தீர்ப்பை இன்னும் பல ஆண்டுகளுக்கு எதிர்பார்க்கவே முடியாது. ஏனெனில் இங்கே ஒரு பக்க நியாயம் - அதுவும் முற்படுத்திக்கொண்டோரின் நியாயம் - மட்டுமே படியேறும். ஏனெனில் இதுவரை உச்ச நீதி மன்றத்தில் நீதியரசர்களாக இருந்தவர்கள் மொத்தம் 270; அதில் பிற்படுத்தப்பட்டோர் நான்கு பேர் மட்டுமே; தாழ்த்தப்பட்டோர் யாருமே இல்லை.*** (*** பின் குறிப்பில் விளக்கம் காண்க.) 266 பேர் யாரென்று சொல்லவும் வேண்டுமோ? இது ஒன்றும் வாய் புளித்ததோ; மாங்காய் புளித்ததோ என்று சொல்லிச் செல்லும் குற்றச்சாட்டல்ல. இதுவரை இட ஒதுக்கீடு தொடர்பான பல வழக்குகள் நம் நீதியரசர்கள் முன் தோல்வியடைவதே வாடிக்கை. அதிலும் நம் நீதியரசர்கள் எப்போதும் இந்த விஷயத்தில் மிகவும் proactive -ஆக இருப்பது கண்கூடு. 1950- ஆம் ஆண்டில் சண்பகம் துரைராஜ் என்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த ப்ராமணப் பெண் சென்னை உயர் நீதி மன்றத்தில் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள இட ஒதுக்கீட்டை எதிர்த்து ஒரு வழக்கு தொடுக்கப்படுகிறது. பொதுவாக, கல்லூரியில் - பெயரளவிலாவது - பயிலப் போகும் மாணவர்களின் பெயரில் இம்மாதிரி வழக்குகள் தொடுக்கப்பட வேண்டும். ஆனால் இங்கு யாரோ ஒருவர் - மருத்துவப் படிப்போடு தொடர்பேதுமில்லாதவர் - வழக்கு ஒன்று போடுகிறார். ஸ்ரீனிவாசன் என்ற பொறியிய்யல் மாணவரும் இது போன்ற ஒரு வழக்கைத் தொடுக்கிறார், நீதியரசர் S.R.Das - அவர் சாதி என்ன என்பதை இங்கே குறிப்பிட்டால்தான் எல்லோருக்கும் தெரியுமா, என்ன..? - உடனே அந்த வழக்கை எடுத்து, எடுத்த வேகத்தில் இட ஒதுக்கீட்டிர்கு எதிர்ப்பான தீர்ப்பை அ(ழி)ளிக்கிறார். வழக்கு உச்ச நீதி மன்றத்திற்கு செல்கிறது. அங்கே உள்ள ‘பென்ச்’சில் ஒரு நீதியரசர் மட்டும் இஸ்லாமியர்; மற்றவர் வழக்கம்போல். ஆகவே அங்கும் அதே தீர்ப்பு. இதிலும் ஒரு நல்லது நடந்தது. இத்தீர்ப்புகளுக்கு எதிராக பெரியாரால் தமிழ்நாட்டில் எழுந்த போராட்டமும், தில்லியில் அம்பேத்காரின் முயற்சியாலும் இட ஒதுக்கீடு அரசியலமைப்புச் சட்டமாக மாறிற்று. நன்றி அந்தப் பெண்மணிக்கு; வழக்கில் தொடர்புள்ள அத்தனை நீதிபதிகளுக்கும்தான்!

அன்று நடந்தது இன்றும் தொடர்கிறது. 2005-ல் நடந்த இனாம்தார் வழக்கில் தனியார் கல்லூரிகளில் இட ஒதுக்கீடு கூடாது என்றும் நம் நீதியரசர்கள் தீர்ப்பளித்துள்ளார்கள். சொந்தக் காசில் கல்லூரி நடத்துகிறார்கள் என்ற கோஷம் அவ்வப்போது வரும். ஆனால் வசதியாக, கல்விக்கூடங்களை நடத்துவதால் - அதுவும் இப்போதெல்லாம் அதுவும் ஒரு வியாபாரம்தான் என்பது யாருக்குத்தான் தெரியாது - கல்லூரி நிர்வாகிககளுக்கு அரசிடமிருந்து கிடைக்கும் பல உதவிகள், சலுகைகள் ( tax exemption on land, buildings, vehicles; exemption from land ceiling etc..etc..) மக்கள் தரும் வரிப்பணத்திலிருந்துதான் என்பதை வசதியாக மறந்துவிடுகிறார்கள் நம் நீதியரசர்களும், ஏனைய தனியார் கல்லூரிகளுக்கு வக்காலத்து வாங்குபவர்களும்.

இட ஒதுக்கீட்டை அனுமதித்தால் சமத்துவம் (equality) இல்லாமல் போய்விடும் என்று முற்படுத்திக்கொண்டோர் சொல்லுகிறார்கள். அதுவும் அவர்களது ‘விளக்குமாறு போராட்டத்தில்’ இந்த ‘வசனம்’ அடிக்கடி பலர் வாயிலிருந்தும் வந்தது. சமூகத்தில் சமத்துவம் உள்ளதா? இல்லாமலிருப்பின் அதற்குரிய காரணிகள் என்ன? யார்? சமூகத்தில் சமத்துவத்தை மறுப்பவர்கள், சமத்துவம் பிறப்பிலேயே இல்லை என்பவர்கள் கல்வி வாய்ப்பில் சமத்துவம் பேசுகிறார்கள். சமூகத்தில் சமத்துவத்தைக் கொண்டு வருவதற்காகத்தானே கல்வியில் முடக்கப்பட்டவர்களுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டியதுள்ளது. இந்திய சமூகத்தில் 5% மட்டுமே ப்ராமணர்கள்; ஏனைய முன்னேறிய பிரிவினர்களையும் சேர்த்தால் இவர்கள் மொத்தம் 15% மட்டுமே. சமூகத்தில் இருக்கும் மக்களுக்கு அவரவர் மக்கள் தொகைப்படி ‘விகிதாச்சார இட ஒதுக்கீடு’ (proportional reservation) செய்திருந்தால் இன்று இவர்கள் 75முதல் 85% விழுக்காடு வரை ஆக்கிரமித்து இருக்க முடியுமா? ( எங்களிடம் ‘திறமை’ இருந்ததால் மேலே வந்தோம் என்று யாரும் இந்த இடத்தில் சொல்ல நினைத்தால் கொஞ்சம் பொறுங்கள்.)
¼br /> வேறொன்றுமில்லை. ஓரளவேனும் இருக்கும் இப்போதைய இட ஒதுக்கீட்டினால் பிற்படுத்தப் பட்டோர், தாழ்த்தப்பட்டோர் சிறிது சிறிதாக முன்னேற்றம் கண்டு வருகிறார்கள். இதனால்,இட ஒதுக்கீட்டையே ஒழிக்க முயலுகிறார்கள். முற்படுத்திக்கொண்டவர்களுக்கு மட்டுமே உரியது முன்னேற்றம் என்ற “நல்லெண்ணமே” இதற்கெல்லாம் காரணம். ஓட்டப் பந்தயத்தில் தனக்கு முந்திய இடத்தில் இருப்பவனை முந்துவதே ஒவ்வொரு ஓட்டப் பந்தயக்காரனின் முனைப்பாக இருக்கும். ஆகவேதான் சாதித் தரவரிசைகளில் கடைசிப் படிக்கட்டில் வைக்கப்பட்ட தலித்துகளின் முன்னேற்றம் அவர்களுக்கு சற்றே மேற்பட்ட படியில் வைக்கப்பட்டுள்ள தாழ்த்தப்பட்டவர்களுக்கு எரிச்சலை மூட்டுகிறது. இவர்கள் எல்லோரும் ஓரளவாவது முன்னேறுவது இதுவரை முதலிடத்தில் இருப்பவர்களுக்கு எரிச்சலை மூட்டுகிறது.


***பின் குறிப்பு:
*** நீதி மன்றத்தில் நீதியரசர்களாக இருந்தவர்கள் மொத்தம் 270; அதில் பிற்படுத்தப்பட்டோர் நான்கு பேர் மட்டுமே; தாழ்த்தப்பட்டோர் யாருமே இல்லை. - இந்தத் தகவல் தவறு. 4 தாழ்த்தப்பட்டோர் நீதிபதிகளாக இருந்துள்ளனர். அவர்களைப் பிற்படுத்தப்பட்டோர் என்று தவறான தகவலை (திசைகள் இதழில்) கொடுத்தமைக்கு மிக வருந்துகிறேன். ஆயினும், நீதிமன்றத்தைப் பொருத்தவரையில் நான் சொன்ன கருத்துக்களில் மாற்றமில்லை - சில வழக்குகளில் உயர் நீதி மன்றம் இட ஒதுக்கீட்டுக்குச் சார்பாக நீதி வழங்கியிருப்பினும்.







Pathivu Toolbar ©2005thamizmanam.com


Jul 31 2006 10:11 am Uncategorized
2 Responses
k Says:
August 8th, 2006 at 10:42 pm
RESPECTED SIR,

I HEREBY WISH TO BRING TO YOUR ESTEEMED NOTICE THAT NEEDS YOUR IMMEDIATE ATTENTION AND ACTION.TO STOP WHATEVER DAMAGE DONE ALREADY AND TO RETRIEVE WHATEVER IS POSSIBLE.
IN THIS JUNCTURE I WISH TO EXPRESS MY KUDOS TO THE AUTHOR MR,SHARAD YADAV , RAJYA SABHA M.P AND MANY CONGRATULATIONS TO THE HINDU FOR PUBLISHING HIS COURAGEOUS ARTICLE ON 7-7-2006. APPROPOS THE UNCONSTITUTIONAL POLICY OF DISCRIMINATION PRACTICED BY THE UNION PUBLIC SERVICE COMMISSION IN CONDUCTING THE CIVIL SERVICE EXAMINATION 2005.A PIECE OF DOCUMENT THAT WAS INCISIVE AND STRIKES AT THE ROOT OF OUR NATION’S MALAISE AND WITHOUT MINCING, ANSWERS THE QUESTION OF MEDIOCRITY IN OUR ADMINISTRATION TOO.
SIR , I AM ONE OF THE SUCCESSFUL CANDIDATES IN THE CIVIL SERVICE 2005 EXAMINATION ,YET A VICTIM OF THE HIGH LEVEL SCANDAL AND DISCRMINATION BY THE PREMIER EXAMINATION CONDUCTING BODY OF THE NATION AS VIVIDLY DESCRIBED BY THE WELL INFORMED AUTHOR MR, SHARAD YADAV.I BELONG TO THE SECTION OF THE SOCIETY THAT HAS BEEN DENIED IT’S RIGHTFUL POSITION BY THE HONORABLE U.P.S.C.
IT IS ONE OF THE MOST SOPHISTICATED AND REFINED SCAM PERPETUATED NOT JUST AGAINST A SECTION OF THE SOCIETY BUT AGAINST THE WHOLE NATION, ITS YOUTH AND THE ASPIRING CHILDREN WHO HAVE A BLIND FAITH ON THE IMPARTIALITY AND FAIRNESS OF THESE SO CALLED CONSTITUTIONAL BODIES. A FRAUD COMMITTED AGAINST AN INNOCENT NATION WHICH HAS BEEN SYSTEMATICALLY DENIED OF AN EFFICENT AND ENLIGHTENED ADMINISTRATION SINCE INDEPENDENCE. THE PEOPLE OF THIS NATION THROUGH THEIR ELECTED GOVERNMENTS AND THEIR SET CONSTITUTIONAL POLICIES BASED UPON SOCIAL JUSTICE DELEGATED TO THESE BODIES THE RESPONSIBILITY OF SELECTING THE BEST SET OF EXECUTIVES TO ADMINISTER THEIR NATION BY A FAIR AND IMPARTIAL METHOD BASED ON THE CONSTITUTIONAL PRICIPLES OF SOCIAL JUSTICE. BUT THAT RESPOSIBILITY AND TRUST HAS NOT ONLY BEEN WANTONLY FAILED BUT THE NATION STANDS CHRONICALLY CHEATED BY THESE ELITE BODIES.
U.P.S.C HAS BEEN ACCORDED RESPECT ALL THESE YEARS NOT BECAUSE IT WAS FAIR AND TRANSPARENT , WORDS WHICH ARE NON- EXISTENT IN THE BOOKS OF THE U.P.S.C ,BUT BECAUSE OF THIS NATIONS GOODNESS IN REPOSING FAITH ON SUCH HIGHER NATIONAL BODIES AND A PUBLIC THAT DOES NOT WANT TO SEE ITS OWN HIGHEST EXAMINATION CONDUCTING BODY DEGRADED BEFORE ITS OWN EYES , AMIDST THE HEAP OF SCANDALOUS NEWS AND REPORTS ON THE VARIOUS STATE PUBLIC SERVICE COMMISSIONS AND OTHER LOWER LEVEL BODIES.
SIR, MYSELF, AS A HUMBLE CITIZEN, AS A CIVIL SERVANT DESIGNATE AND ABOVE ALL AS A PATRIOT, SEEK ANSWERS TO THE FOLLOWING QUESTIONS.

1. WHY DOES THE U.P.S.C CONDUCT THE 2005 CIVIL SERVICE EXAMINATION INTERVIEWS TO THE SC/ST AND BC CANDIDATES ON SEPERATE DATES, THEREBY OPENLY DISCLOSING THE CASTE OF THE CANDIDATES TO THE INTERVIEWERS AND EXPOSING HIM/HER TO THEIR PREJUDICES ? .
IN A SOCIETY THAT IS HIGHLY FRACTURED AND DIVIDED ON COMMUNAL LINES WITH AN UNDER CURRENT OF COMMUNAL PREJUDICES FLOWING AT EVERY LEVEL AND IN EVERY SECTION OF THE SOCIETY , WHY HAVEN’T THE U.P.S.C FOUND A DECENT METHODOLOGY BY WHICH THE CANDIDATE’S CASTE IS NOT REVEALED TO THE INTERVIEWER.WHY DOES IT SEGGREGATE THE CANDIDATES WHO ARE THE PROSPECTIVE FUTURE CHIEF EXECUTIVES ON COMMUNAL LINES, EVEN AT THE TIME OF INTERVIEW ITSELF. IS UNTOUCHABILITY THE ANSWER FOR THIS UNCIVILIZED WAY OF TREATING THESE ASPIRANTS BELONGING TO THE RESERVED CATAGORY . DOES THE U.P.S.C PERPETUATE THE UNCONSTITUTIONAL PRACTICE OF UNTOUCHABILITY CLANDESTINELY. WHY NOT CALL THE CANDIDATES IN THE ORDER OF THEIR ROLL NUMBER OR BY THE ORDER OF THEIR MAINS MARKS OR EVEN BY ALPHABETICAL ORDER.
THE PRACTICE OF SEGGREGATING CANDIDATES ON CASTE LINES DURING THE INTERVIEW IS NOT JUST PRIMITIVE AND BACKWARD BUT SHAMEFUL.
SAD , THAT THE U.P.S.C IS YET TO LEARN THE ESSENCE OF THE INDIAN CONSTITUTION AND MODERN CIVILISATION.
THIS UNETHICAL POLICY IS THE ROOT-CAUSE FOR THE SC/ST CANDIDATES BEING GIVEN AVERAGELY 140 MARKS IN THE INTERVIEW AND THE CANDIDATES BELONGING TO NON- RESERVED CATEGORY GETTING AVERAGELY 200 MARKS.THIS DIFFERENCE OF 60 MARKS IN THE INTERVIEW IS THE KEY INSTRUMENT IN THE HANDS OF THESE WELL ORGANISED COMMUNAL MINDED ELITE COTERIE TO DISCRIMINATE THE CANDIATES BELONGING TO SC/ST WHO ARE TIGHTLY PACKED AFTER THE 350 TH RANK .THE IDEA BEHIND THIS PLAN IS TO KEEP THE OPEN SEATS RESERVED EXCLUSIVELY FOR THE FORWARD CATEGORY CANDIDATES AND CROWNING THEM THE TOPPERS IN IAS AND AS THE SOLE OWNERS OF THE SO CALLED MERIT AND KNOWLEDGE. ON THE OTHER HAND IT PUTS THE OPEN CATEGORY SEATS BEYOND THE REACH OF EVEN A BETTER PERFORMING SC/ST AND BC CANDIDATES. CAN’T ASK FOR A BETTER COMEDY THAN THIS IN THE NAME OF MERIT.

2. WHY HASN’T THE U.P.S.C BE TRANSPARENT IN CONDUCTING THE EXAMINATION .LACK OF TRANSPARENCY BREEDS CORRUPTION.NO ONE KNOWS THE CUT OFF MARK FOR THE PRELIMINARY EXAMINATION FOR CIVIL SERVICES NOR THE MARKS OBTAINED BY THE CANDIDATES ARE REVEALED.WHAT IS THE MAINS MARKS RANKING? IT IS AN EVERLASTING SECRET.WHAT IS THE COMMUNAL REPRESENTATION IN THE INTERVIEW BOARDS?

THE HONORABLE U.P.S.C HAS BEEN BURNING ITS MIDNIGHT OIL TO SEE TO IT THAT EVERY INFORMATION IS KEPT HIDDEN FROM PUBLIC SCRUTINY AND CRITICISM.NON-TRANSPARENCY IS ITS CORE POLICY.THE FINAL MARKS OF THE CANDIDATES CAN BE SEEN IN THE U.P.S.C WEB SITE ONLY BY TYPING THEIR DATE OF BIRTH AND NOT BY THEIR ROLL NUMBER.THIS PREVENTS ONE TO KNOW THE MAINS AND INTERVIEW MARKS OF THE SUCCESSFUL CO- CANDIDATES OR RATHER THE MARKS OF COHORTS BELONGING TO OTHER COMMUNITIES BECAUSE EVERYONE KNOWS THE ROLL NUMBERS OF THE SUCCESSFUL CANDIDATES BUT NOT THEIR DATE OF BIRTH .SO NO CHANCE OF COMPARING THE COMMUNITYWISE PERFOMANCE IN MAINS PAPERS AND THE INTERVIEW. PERHAPS THE U.P.S.C DOES NOT WANT ITS UNSCRUPULOUS HANDIWORKS REVEALED BY ANY MEANS.
WILL THE U.P.S.C COME OUT OF A RANKING LIST BASED ON THE MAINS MARKS OF ALL THE SELECTED CADIDATES EXCLUDING THE DUBIOUS INTERVIEW MARKS . THEN THE DYE WON’T LAST. I WONDER WHETHER THE U.P.S.C HAS SUCH POLICIES AS FOLLOWED BY CERTAIN CENTRAL INSTITUTIONS LIKE NATIONAL INSTITUTE OF TECHNOLOGIES (FORMERLY R.E.C) WHO ALLOT ROLL NUMBERS TO THE CANDIDATES FOR THEIR EXAMS WHOSE CERTAIN DIGITS CAN REVEAL THE COMMUNITY OF THE CANDIDATES TO THE PAPER EVALUATING OFFICIAL.THIS AGAIN IS A DISCRIMINATORY POLICY ELSWHERE, IN ANOTHER ELITE TECHNICAL INSTITUTION IN THIS COUNTRY. DOES THE U.P.S.C FOLLOW ANY SUCH UNSCRUPULOUS METHODS LIKE THE ONE FOLLOWED IN THE N.I.T’S. IT REMAINS TO BE ANSWERED.

3. WHY DOESN’T THE U.P.S.C REVEAL THE RANK LIST WITH THE COMMUNITY RANK SIDE BY SIDE IN ITS FINAL RESULT RELEASED RECENTLY. JUST ONE SCHEDULED CASTE CANDIDATE FIGURES IN THE FIRST 100 RANKS OF THE SO CALLED MERIT LIST.THIS IS A HIDDEN FACT. WAS IT A PREMEDITATED MOVE BY THE U.P.S.C TO COVER UP SUCH GLARING INFORMATIONS WHICH CAN RAISE MANY AN EYEBROWS AND BOUND TO AGGITATE MANY A SANER SOULS.THIS INFORMATION IS REVEALED NOW VERY LATELY BY THE DEPARTMENT OF PERSONEL AFFAIRS AND TRAINING IN ITS OFFICIAL LIST OF SUCCESSFUL CANDIDATES AND BY THEN THE U.P.S.C CAN ESCAPE FROM LEGAL OR ANY OTHER OFFICIAL INTERVENTIONS ON THE PRETEXT OF HAVING WASHED IT’S HANDS OFF, HAVING DONE ITS JOB OF SELECTING THE SUCCESSFUL CANDIDATES. BY THEN THE BATON HANDED OVER TO THE D/O.P.T. INDEED A WONDERFUL, YET A SINISTER PLAN TO SCUTTLE ANY POTENTIAL SCRUTINY OR LEGAL INTERVENTION BY SPARING NO TIME FOR THE AGGRIEVED PARTIES TO SEEK JUSTICE. CONGRATS, FULL MARKS TO THE U.P.S.C.

4. THE CONDUCT OF CIVIL SERVICE EXAMINATION 2005 AND 2006 BY UPSC WAS UNTIDY AND MESSY BY ITS OWN STANDARDS.FIRST THE NEWS OF SOME QUESTION PAPER PROBLEM IN SOME CENTERS RESULTING IN A RE-EXAMINATION FOR THE PUBLIC ADMINISTRATION OPTIONAL CANDIDATES ALL OVER THE COUNTRY A MONTH LATER.THEN CAME THE NEWS OF WRONG ALLOCATION OF I.P.S POST FOR THE SC/ST CANDIDATES.IT REQUIRED AN ENQUIRY AND FEW SUSPENTIONS TOO.SUBSEQUENTLY THE SADDEST PART OF THIS MESS IS THE RESHUFFLING OF THE CIVIL SERVICE 2005 RANK LIST.THIS REARRANGEMENT OF RANKS ALSO AFFECTED ONLY THE SC/ST CANDIDATES. WHY NOT THE ENTIRE LIST? WHO WILL ANSWER TO THE CANDIDATES AFFECTED BY THE ARBITRARY RESHUFFLING OF THEIR RANKS BY THE U.P.S.C?. IS THE U.P.S.C SO CALLOUS TO THE ISSUES CONCERNED WITH SC AND ST CANDIDATES.

5. NOW THE OPEN OR RATHER A BIGGER QUESTION IS, CAN WE ASSUME THAT THE MEDIOCRE , INSENSITIVE ,APATHETIC AND CORRUPT ADMINISTRATION IMPOSED ON THIS NATION ALL THESE YEARS ( ONE OF THE VITAL STIMULANT FOR ANGUISHED PERSONS LIKE ME TO ENTER CIVIL SERVICE) IS BECAUSE OF SUCH UNPROFESSIONAL, UNETHICAL AND OBVIOUSLY UNCONSTITUTIONAL WAYS OF U.P.S.C CONDUCTING THE CIVIL SERVICE EXAMINATION , BLATANTLY DISCRIMINATING A LARGE SECTIONS OF THE NATION AND VIOLATING NOT JUST THE BASIC POLICIES OF THE GOVERNMENT BUT CHEATING THE INNOCENT YOUTH AND CHILDREN WHETHER DWELLING IN A SMALL HUT OR IN A BIG MANSION , IN EVERY NOOK AND CORNER OF THIS WONDERFUL NATION WHO PROUDLY AND EARNESTLY WISH AND ASPIRE TO BECOME AN I.A.S OR AN I.P.S OFFICER TO SERVE THEIR NATION,who NOT KNOWING THAT SUCH A LARGE AND METICULOUSLY PLANNED SCANDAL IS BEING PERPETUATED AGAINST THEIR HOPES AND HARD WORK BY A SINISTER SET OF COMMUNAL MINDED PEOPLE WITHIN U.P.S.C AND ITS ACCOMPLICE THE DEPARTMENT OF PERSONEL AND TRAINING.A NATION ROBED OF ITS OWN VIBRANT AND DYNAMIC HUMAN RESOURSES.
ALL THESE YEARS THE U.P.S.C HAD TOOK FOR GRANTED THE BLIND TRUST OF THE PUBLIC AND ESTEEMED REPUTATION REPOSED BY THE STUDENT COMMUNITY ON IT.EVEN THE USUALLY VITRIOLIC POLITICAL ESTABLISHMENT DID NOT WISH TO INTERFERE IN THE AFFAIRS OF THE U.P.S.C AND ITS WAY OF CONDUCTING THE CIVIL SERVICE EXAMINATION.
TOO MUCH FAITH AND TRUST AND INTENTIONALLY KEPT FAR AWAY FROM POLITICAL ,PUBLIC AND MEDIA SCRUTINY AND THE LACK OF GENUINE REFORMS HAVE CAUSED THIS SERIOUS LAPSE OF MORALITY AND EHICS IN THE PHILOSOPHIES AND POLICIES OF THIS INSTITUTION. THE U.P.S.C AND ITS VILLAINOUS PLANS HAS KEPT AWAY THE MERITORIOUS CANDIDATES OF THE RESERVED SECTIONS OF THE SOCIETY ALL THESE YEARS FROM THE TOP RANKS SHOULD BE COUNTED AS ONE OF THE MOST PROLONGED,SINISTER AND NOTORIOUS SCANDALS KNOWN TO THIS COUNTRY.THE DAMAGE DONE TO THE NATION IS IRREPARABLE ON THE ACCOUNT OF UNDESERVING CANDIDATES OF SOME PREVILIGED SECTIONS OCCUPYING THE CHAIR BECAUSE OF THE UNDUE AND UNPRICIPLED FAVOUR SHOWERED UPON THEM AND THE INJUSTICE CAUSED TO THE DESERVING CANDIDATES OF THE BACKWARD SECTIONS OF THE SOCIETY IS UNIMAGINABLE.THIS SINISTER DESIGN SHOULD NOT GO UNANSWERED AND THE SCRIPT WRITERS UNPUNISHED.
A DRASTIC CHANGE IS A MUST TO END SUCH MODERN DAY APARTHIED PERPETUATED BY SUCH HIGHER INSTITUTIONS.CONSTITUTING REFORM COMMITTEES WILL NOT SOLVE THE PROBLEM, BECAUSE SUCH COMMISSIONS ALSO ACT AS THE AGENTS OF THESE COMMUNAL MINDED SECTIONS OF THE SOCIETY AS THEY ARE DRAWN FROM SUCH BIASED SECTIONS OF THE ELITE.IN ADDITION IT IS NOT ENOUGH THAT JUSTICE IS DELIVERDED BUT IT SHOULD BE QUICK AND SEEM TO HAVE BEEN DELIVERED.THIS CANNOT BE EXPECTED FROM A WELL ORGANIZED SET OF THE ‘MERIT’ BRIGADE WHICH SEEMS TO RAPIDLY LOSE FAITH ON MERIT ITSELF BUT IS DEPENDING MORE AND MORE ON SUCH CROOKED DESIGNS TO CONTINUE HAVE AN IRON GRIP OVER THE POWER STRUCTURE OF THIS NATION.
I WISH THE HONORABLE PRESIDENT AND THE FIRST CITIZEN OF OUR GREAT COUNTRY WILL TAKE IMMEDIATE STEPS TO RECTIFY A MAL FUNCTIONING INSTITUTION. YOU ALONE HAVE THE MORAL STRENGTH TO TAKE UP THESE INSTITUTIONS AS THEY ARE NOT THE GOLDEN CALF NOR THE HOLY SPIRIT BEYOND BLASPHEMY TO EXPECT BLIND TRUST BEYOND suspicion .COMMUNAL MINDED PEOPLE HAVE HIJACKED THIS REVERED INSTITUTION .IT HAS TO BE RETRIEVED ,REFOMED AND REJUVENATED .WE THE PEOPLE OF THIS COUNTRY ARE WITH YOU IN THIS ENDEAVOUR TO RESCUE THIS ESTEEMED INSTITUTION AND REASSURE THE HOPES OF MILLIONS OF OUR PATRIOTIC YOUNG CIVIL SERVICE ASPIRANTS ON THE UNION PUBLIC SERVICE COMMISSION , BEFORE THE LAST FEW DROPS OF FAITH ON THE SAYING ‘TRUTH ALONE TRIUMPHS” DRIES UP.
THANK YOU.
YOURS SINCERELY,

A humble citizen who has passed the civil service 2005 examination.

Sivabalan V Says:
August 18th, 2006 at 10:10 pm
தருமி அய்யா,

உங்களின் இந்தப் பதிவை என் பதில் இனைத்தமைக்கு மிக்க நன்றி.

Tuesday, July 25, 2006

166. சாதிகள் இருக்குதடி பாப்பா..3

இட ஒதுக்கீட்டுக்காகப் போராடும் மக்கள் எப்படிப்பட்டவர்களை எதிர்த்து போராட வேண்டியதுள்ளது என்ற நிலைப்பாட்டினை புரிந்துகொள்ள இக்கட்டுரை சிறிதாவது உதவும் என்ற நம்பிக்கையில்…



‘சாதிகள் இருக்குதடி பாப்பா’ என்ற இந்தத் தலைப்பில் நான் எழுதிய கட்டுரை ஒன்று ஜூலை மாத “திசைகள்” இணைய இதழில் வெளி வந்துள்ளது. அதற்கு வந்துள்ள பின்னூட்டங்களில் அதனைத் தொடர்ந்த விவாதங்கள் இடம் பெற்றுள்ளன.

மீண்டும் மீள்பதிவாக அதன் ஒரிஜினல் வடிவில் பின்பு தருவதாக நினைத்துள்ளேன். ஆயினும் அதற்கு முன்பாக முக்கியமாக உங்களைச் சேரவேண்டுமாய் நான் நினைப்பதைத் தனித்தனிப் பதிவாக பதிக்க எண்ணி, அதன் இரண்டாம் பதிவாக அக்கட்டுரையின் 5-ம் பகுதியைச் சில கூடுதல்களோடு இங்கு தருகிறேன்.



V. ஐந்தாம் பகுதி

தற்போதைய நிலை:




நம் அரசுகள் பார்க்காத போராட்டங்களா? நினைத்திருந்தால் இட ஒதுக்கீட்டுக்கு எதிரான இந்த ‘விளக்குமாறு போராட்டங்களை’ எளிதில் முடிவுக்குக் கொண்டு வந்திருக்க முடியும். மனமிருந்தால் வழியிருந்திருக்கும். அதை விட்டு விட்டு, கண்காணிப்புக் குழு, அறிஞர் குழு என்றெல்லாம் அமைப்பது நமது நாட்டு அரசியல்வாதிகள் ஒரு முடிவுக்கும் வராமல் ஒரு விஷயத்தை இழுத்தடித்து, பிரச்சனையையே மக்களை மறக்க வைக்கும் ஒரு டெக்னிக்தானே!
இப்போதே பல உயர் கல்வி நிலையங்களில் நுழைவுத் தேர்வு முடிந்து விட்டது என்ற காரணம் சொல்லி 2006-2007-ல் இட ஒதுக்கீடு இல்லையென்றாகி விட்டது.அடுத்த ஆண்டுக்கு இன்னும் எத்தனை எத்தனை நொண்டிச் சாக்குகளோ?

அதோடு முற்படுத்திக் கொண்டோரிடமிருந்து பிறந்து அரசால் தத்து எடுத்துக் கொள்ளப் பட்டுள்ள இன்னொரு ‘பரிந்துரைப்பு’ - உயர்கல்வி நிலையங்களில் உள்ள மாணவர் எண்ணிக்கையை அதிகப் படுத்துவது. சும்மா சொல்லக் கூடாது - இது ஒரு நல்ல ராஜதந்திரம். கீழ்க்கண்ட கணக்கு அதைத் தெளிவுபடுத்தும்.
தற்போது I.I.T.களில் உள்ள மொத்த இடங்கள் : 4000
54% இட அதிகரிப்பில் கூடும் இடங்கள் : 2160
ஆக மொத்த இடங்கள் : 6160
பிற்படுத்தப்பட்டவர்களுக்கு (4000ல் 27%) : 1080
தாழ்த்தப்பட்டவர்களுக்கு - SC (4000ல் 15%) : 600
தாழ்த்தப்பட்டவர்களுக்கு - ST (4000ல் 7.5%) : 300
B.C. + S.C. + S.T. 27%+15%+7.5%) : 1980

- இது மொத்த 6160 இடங்களில் வெறும் 32%.

அதாவது ஏற்கெனவே உள்ள 49.5% யை வெறும் 32% ஆக மாற்றும் நல்ல ராஜதந்திரம். மீதியுள்ள 68% (51%க்குப் பதிலாக) விளக்குமாறு போராட்டக்காரர்களுக்கு! இது மட்டுமின்றி இப்படி 54 விழுக்காடு சீட்டுகளை அதிகப்படுத்துவதற்காக மத்திய அரசு பல நூறு கோடி ரூபாய் செலவழிக்கவேண்டும்; ஆகவே, இதுபோல் சீட்டுகளை அதிகமாக்கத் தேவையில்லை; அதனால், இந்த உயர் கல்வி நிறுவனங்கள் இப்போது உள்ளதுபோலவே தொடரவேண்டும் என்பது விளக்குமாற்றுப் போராட்டக்காரர்களின் இன்னொரு விவாதம். இந்தக் கருத்தையே, India Today தன் ஜுலைமாத இதழில் cover story-யாக எழுதியுள்ளது.

ஏன், அதற்குப் பதிலாக இப்போது இருக்கும் சீட்டுக்களை இட ஒதுக்கீட்டின் கீழ் கொண்டுவந்தால் மட்டும் போதும் என்ற முடிவைக்கூட எடுக்கலாமே! எதையாவது சொல்லி, செய்து “தரமற்ற” மற்றவர் யாரும் தங்கள் “சாம்ராஜ்ஜிய எல்கைகளுக்குள்” வந்துவிடக் கூடாது என்ற நல்லெண்ணமே இவ்வளவுக்கும் காரணம்.

நம்ப முடிகிறதா…??

மேலே சொன்ன ராஜதந்திரம் போன்ற திறமைகளுக்குப் பஞ்சமேயில்லை நம் விளக்குமாறு போராட்டக்காரர்களுக்கு! இதை விடவும் சட்டத்தை எப்படி தைரியமாக, தந்திரமாக, வெளியே தெரியாதபடி (கமுக்கமாக) தங்களுக்குச் சாதகமாக முறியடிக்கும் trickery-யை இன்னொரு உதாரணம் மூலம் பார்க்கிறீர்களா? இதோ அந்தச் சாதனை……..

I.A.S., I.P.S. என்பதற்கான UPSC தேர்வுகள் எந்தக் குழறுபடி இல்லாமல், ஊழல் இல்லாமல் மிகச் சரியாக சிறப்பாக நடந்து வருவதாகத்தான் நானும் பலரைப்போல் நினைத்திருந்தேன் - இந்த வழக்கைப் பற்றிக் கேள்விப்படும்வரை.

Prelims, Mains தேர்வுகளில் வெற்றி பெற்று அதன் பின் நடக்கும் நேர்முகத்தேர்வில் பெறும் மொத்த மதிப்பெண்களை வைத்து rank செய்யப் பட்டு அதில் அதிக மதிப்பெண்கள் பெற்றவர்களை OC (open competition) -ல் சாதி எதுவும் பார்க்காது தேர்ந்தெடுக்க வேண்டும். OC quota முடிந்தபின் B.C., S.C., S.T. என்ற சாதிவாரியான மாணவர்களை அவர்களது rankபடி தேர்ந்தெடுக்க வேண்டும்.இதுவே முறை. ஆனால் எத்தனை ஆண்டுகளாகவோ தெரியாது; என்ன நடந்திருக்கிறது என்றால் O.C. என்றால் (F.C. என்ற கணக்கில்) அது முற்படுத்திக் கொண்ட மாணவர்களுக்கு மட்டுமே உரியது போல், top rankers-ல் உள்ள Forward Community மாணவர்களை மட்டும் தேர்ந்தெடுத்து விட்டு, மற்ற சாதி அடிப்படையான இடங்களுக்கு மட்டுமே தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப் பட்ட மாணவர்களிலிருந்து தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். They were hoodwinking everybody and kept their portal safe and secure. இதனால் பிறபடுத்தப் பட்டோர் 25%க்கு மேலும், தாழ்த்தப்பட்டோர் மொத்தமே 18%க்கு மேலும் வரமுடியாது. இது ஒரு பயங்கர மோசடி.
கதைபோல் தெரிகிறதா? எனக்கும் அப்படியே தோன்றியது. எப்படி இப்படிப்பட்ட உயர் அமைப்புகளில் விதிகளை இந்த அளவு மீறி (trickery and violation of law) தைரியமாக மிக மிக அநியாயமான ஒரு செயலைச் செய்திருக்க முடியும் எனபது ஆச்சரியமாகவும் கவலைக்குறிய ஒன்றாகவும் இருக்கிறது. எத்தனை பேரின் கூட்டில் இந்தச் சதி நடந்திருக்க முடியும்? இதை எப்போது நம்ப முடிந்தது என்றால்…

நம்பித்தான் ஆகவேண்டும்…!!

க்ளீட்டஸ் என்பவர் UPSC தேர்வுகள் எழுதி GRADE I Officer ஆக தேர்ந்தெடுக்கப்பட்ட பின், நடந்தவைகளை வைத்து CAT -Central Administration Tribunal -க்கு ஒரு Original Application ( O.A. - this is equivalent to writ petition ) கொடுத்தார். அஜ்மல்கான் என்ற வழக்கறிஞர் இதை க்ளீட்டஸுக்காக வாதாடினார். நீதிபதி திருமதி பத்மினி ஜேசுதுரை இவ்வழக்கில் UPSCக்கு எதிரான தீர்ப்பளித்தார். இதன் பிறகு விதிகள் கடைப்பிடிக்கப் படுகின்றன என நம்பப் படுகிறது. இது எப்படிப்பட்ட வடிகட்டிய அநியாயம் என்பதை இந்த வழக்கைப் பற்றி அறிந்த போது உணர்ந்தேன். ஆனால் இப்படி ‘வடிகட்டிய’ போதும் வெற்றி பெற்ற B.C., S.C., S.T.மாணவர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும். இவ்வளவு தடைகளையும் மீறி அவர்கள் பெற்ற வெற்றி அவர்களின் தகுதியின் தரம் பற்றிய உண்மையை எல்லோருக்கும் தெளிவாக்குகிறது.

இப்படி நான் ‘திசைகளில்’ எழுதியபோது ரவி சிரினிவாஸ் என்ற பதிவர் ஒருவர் கீழ்க்கண்ட விளக்கம் - UPSC தேர்வுகள் எவ்வளவு சரியாக நடந்து வருகின்றன என்பதைக் காட்ட - ஒரு statistical data ஒன்றைக் கொடுத்தார். ஆனால், அந்த statistical dataவே ஒரு தவறான தகவல்; யாரை ஏமாற்ற இப்படி ஒரு தகவலை அளித்துள்ளார்கள் என்ற என் கேள்வியை அவர்முன் வைத்தேன். அந்தக் கேள்வி பதில்கள் இங்கே:

ravi srinivas said…
http://upsc.gov.in/general/civil.htm#CS (Main)
Statistical Data - CS (Main)

Year Of Exam Vacancies Candidates Recommended
SC ST OBC GEN TOTAL SC ST OBC GEN TOTAL
1995 98 49 165 333 645 101 49 192 303 645
1996 125 57 174 383 739 138 59 212 330 739
1997 89 43 166 323 621 94 46 215 266 621
1998 53 28 114 275 470 60 30 142 238 470
1999 53 27 97 234 411 63 30 127 191 411
2000 54 29 100 244 427 58 34 128 207 427
2001 47 39 97 234 417 52 42 131 192 417
2002 38 22 88 162 310 38 22 88 138 286



This is the information from UPSC website.Please compare the % of OBCS with what he has written.27% quota is filled and OBCs get more
than 27%.In other words OBCs get selected in general or open quota
also.I wont be surprised if Dharumi comes up another cock
and bull story to justify what
he written.That is his wont.

என் பதில்:


//OBC Quota is 27%// - Accepts r.s.
The following is just a part of the table provided by r.s.. I have taken OBC and the total vacancies and I have worked out the percentage.

year OBC TOTAL %
1995 165 645 25.5
1996 174 739 23.5
1997 166 621 26.7
1998 114 470 24.3
1999 97 411 23.6
2000 100 427 23.4
2001 97 417 23.3
2002 88 310 28.4

How come UPSC had it always less than 27% except for 2002?
How come it swings only between 23-24% mostly?
MAY I HAVE YOUR ANSWER
SPECIFICALLY FOR THIS, MR. R.S?
———————————–

The % of ‘candidates recommended’ goes like this with the concerened years in brackets: 27.9%(1995); 28.6(1996); 34.6% (1997 & 98); 30%(1999); 31% (2000 &2001); 30% (2002).
Just 3% OBC candidates have found place in GEN Quota.
Mathematically it shows that top ranking OBCs have been added in the GEN. But is it justifiable to argue that only 3% OBC candidates stood at par with the GEN category and still claim that top OBCs were included in the GEN category. This is what I called hoodwinking.

============================================================

திசைகள் கட்டுரை மறுபடியும் தொடர்கிறது:

ஆனாலும் இப்போதும் இன்னொரு தடைக்கல் இருப்பதாக நண்பர்கள் மூலமாக அறிகிறேன்: Prelims, Mains - இவைகளில் தேர்வு பெற்று நேர்முகத் தேர்வுக்குப் போகும்போது மாணவர்களை random-ஆக interview boards-ல் ஏதாவது ஒன்றிற்கு அனுப்புவதே சரி. அவர்கள் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள், அவர்களது சாதி பற்றிய விவரங்கள் ஏதுமின்றி நேர்முகத் தேர்விலும் அவர்கள் மதிப்பிடப்பட வேண்டும் என்பதே சரி.Prelims, Mainsதேர்வுகளில் மாணவர்களின் தனி அடையாளங்கள் எப்படி திருத்துபவர்களுக்குத் தெரியாதோ அதே போலத்தானே நேர்முகத் தேர்விலும் இருக்க வேண்டும். pedagogical principlesகளில் ‘halo effect’ என்று ஒன்று சொல்வார்கள். மாணவனைப் பற்றிய எவ்வித முன்முடிவுமின்றி அவனது தேர்வுத்தாள் திருத்தப்பட வேண்டும்; இல்லையெனில் மனித மனம் முதலில் மாணவன் மீது திருத்துபவர் கொண்ட முடிவின்படி மதிப்பீடு செய்யும் தன்மை கொண்டதே என்பது இந்த ‘halo effect’ .
UPSC நேர்முகத் தேர்வுகளில் முதலில் OC. மாணவர்கள் தொடர்ந்து அனுப்பப் பட்டு அதன் பின் ..B.C.,… S.C….. S.T….என்று சாதி வாரியாக வரிசைப்படுத்தப்பட்டே அனுப்பப் படுகிறார்களாம். தேர்வாளர்களாக இருப்பவர்களில் இன்றைய நிலையில் யார் பெருவாரியாக இருக்கிறார்கள் என்பது நமக்குத் தெரியாதா என்ன? இம்முறையினால் நேர்முகத் தேர்வுகள் ‘halo effect’ இல்லாமல் நேர்மையாக இருக்குமா என்பதை உங்களின் முடிவுக்கே விட்டு விடுகிறேன்.

இப்படி நான் எழுதியதும் மறுபடி சிரினிவாஸ்:
//இட ஒதுக்கீடு எப்படி அமுல் செய்யப்பட வேண்டும், பதவி உயர்வில் இட ஒதுக்கீடு எப்படி தரப்பட வேண்டும் என்பதற்கான தெளிவான,விரிவான விதிமுறைகள் உள்ளன. தருமி இந்தப் பிண்ணனித் தகவலை தரவேயில்லை.மாறாக ஊர்ஜிதப்படுத்தபடாத செய்திகளை ஆதாரமாகக் கொண்டு எழுதியிருக்கிறார்.// என்றார்.
நான் கேள்விப்பட்டதை வைத்தே இந்தக் குற்ற༯p>







Pathivu Toolbar ©2005thamizmanam.com


Jul 25 2006 03:27 pm Uncategorized
22 Responses
ravisrinivas Says:
July 25th, 2006 at 5:27 pm
For Dharumi:
” நீங்கள் என் மீது ஒரு வழக்குப் பதிவதாகச் சொல்லியிருக்கிறீர்களே;”

Where and when.Have I written so,
anywhere?. If so please give evidence.

You are YET to reply to this. If there is any evidence to support your claim place it.

aathirai Says:
July 25th, 2006 at 6:14 pm
4000ல் 27%) : 1080

indha kanakku thavaru. motha idangalil irundhudhan
kanakkida vendum

தருமி Says:
July 25th, 2006 at 8:58 pm
ravi
better read the last para of your very first comment for this article in ‘Thisaigal’.

in case you think you can side track this article by harping about this i am not in a mood to entertain you here further.

IF YOU HAVE ANY ANSWERS AT ALL TO MY QUESTIONS GIVE THEM; else “do the needful” and keep away.

தருமி Says:
July 25th, 2006 at 9:48 pm
ஆதிரை,
//motha idangalil irundhudhan kanakkida vendum //
அப்படி பண்ணினால் அதில் முற்படுத்திக்கொண்டவர்களுக்கு என்ன நன்மை? ஆகவே தான் 4000ல் 27%) : 1080 என்ற இந்த ஏற்பாடு.

aathirai Says:
July 25th, 2006 at 10:03 pm
4000 க்கு 27 சதவிகிதம் என்று எங்கு படித்தீர்கள்? மொத்த இடங்களில்
27 சதவிகிதம் என்பது தான் சட்டமாக இருக்க முடியும். 2005 ஆம் வருடம்
இருந்த இடங்களில் 27 சதவிகிதம் என்று சட்டம் எழுதமுடியாது.

தருமி Says:
July 25th, 2006 at 10:36 pm
//…சட்டமாக இருக்க முடியும்….சட்டம் எழுதமுடியாது//
முழுக்கட்டுரையையும் படித்து விட்டீர்களா? சட்டங்கள் எப்படி முறியடிக்கப்பட்டுள்ளன என்று சொல்லிய பிறகும் உங்கள் கேள்விகள் உங்களுக்கே சரியாகத் தோன்றுகின்றனவா?

நான் எழுதியது ஒன்றும் என் சொந்தக் கற்பனையல்ல. OBC-க்கு கொடுக்கும் ஒதுக்கீட்டால் எங்களுக்கு நஷ்டம் வருமே என்ற போது இந்த திட்டம் ஒரு possibility ஆகச் சொல்லப்பட்டுள்ளது. இதன்மூலம் ‘விளக்குமாறு போராளிகளுக்கு’ வழக்கமாகக் கிடைக்கும் இடங்கள் பறிபோகாது; மேலும்தான் கூடும் என்ற ஒரு சமரச முயற்சியில் சொல்லப்பட்டுள்ள ஒன்று.

இது நடக்கக் கூடாது; நடக்குமா, நடத்த முடியுமா என்பது கேள்விக்குறி.

Sivabalan V Says:
July 25th, 2006 at 10:37 pm
தருமி சார்

பதிவுக்கு நன்றி.

கோ.இராகவன் Says:
July 25th, 2006 at 10:54 pm
இப்படியெல்லாம் வேற நடக்குதா…அடடா!

இதையெல்லாம் எதிர்த்து ஆதாரங்களோடு வழக்கு போட முடியாதா என்ன?

குறும்பன் Says:
July 26th, 2006 at 1:30 am
தருமி நன்றாக விளக்கியுள்ளீர்கள்.

/ தேர்வாளர்களாக இருப்பவர்களில் இன்றைய நிலையில் யார் பெருவாரியாக இருக்கிறார்கள் என்பது நமக்குத் தெரியாதா என்ன? இம்முறையினால் நேர்முகத் தேர்வுகள் ‘halo effect’ இல்லாமல் நேர்மையாக இருக்குமா என்பதை உங்களின் முடிவுக்கே விட்டு விடுகிறேன். /
உறுதியாக “halo effect” இல்லாமல் இருக்காது.
ஆளின் நிறம், பெயர் & பேச்சை வைத்தே நம்மாளுங்க எடை போட்டுறுவாங்கப்பா

Ramani Says:
July 26th, 2006 at 2:20 am
4000 இடங்களில் மட்டும் ஒதுக்கீட்டை அமுல்படுத்திவிட்டு ஊடகங்களிடமிருந்து அரசு தப்பிக்கமுடியாது என்று நினைக்கிறேன். ஒதுக்கீட்டின் சில அம்சங்களில் எனக்கு மாற்று கருத்து இருப்பினும், பொதுவாக ஒதுக்கீடு அவசியம் தேவையே என்று கருதுகிறேன். 27% ஒதுக்கீடு என்று வாக்களித்துவிட்டு இதுமாதிரி catch வைத்தால் அது அர்ஜூன் சிங்கின் அரசியல் மூளையைத்தான் காட்டுகிறது.

தருமி Says:
July 27th, 2006 at 10:58 pm
ராகவன்,
//இதையெல்லாம் எதிர்த்து ஆதாரங்களோடு வழக்கு போட முடியாதா என்ன? //
நன்றி ராகவன்…ஒன்று சேருவோமா?

தருமி Says:
July 27th, 2006 at 11:05 pm
நன்றி - சிவபாலன், குறும்பன்.

தருமி Says:
July 27th, 2006 at 11:16 pm
ரமணி,
//….ஊடகங்களிடமிருந்து அரசு தப்பிக்கமுடியாது என்று நினைக்கிறேன்….//

1. ஊடகங்கள் யார் கைகளில் இப்போது? (சுந்தரவடிவேலின் கட்டுரையை வாசியுங்கள்)
2. ஊடகம் ஏறக்குறையாக முழுமையாக இட ஒதுக்கீட்டுக்கு எதிராக இருப்பது கண்கூடு.
3. மேலே சொல்லியுள்ளதுபோல்,மிகவும் கற்றவர்கள் தொடர்பான UPSC தேர்வுகளிலேயே இந்த அளவு ‘திருவிளையாடல்” நடந்து வந்தும், இன்னும் மிகப் பெரும் அளவில் நாட்டிலோ, நம் வலைப்பதிவுகளிலோ எந்தவித எதிர்வினையும் அதற்கு இல்லாது இருக்கும்போது நீங்கள் சொல்வது நடக்குமா?
4. ஷரத் யாதவின் கட்டுரை the hindu-வில் வந்த அடுத்த நாள் letters to the Editor -ல் கடிதங்கள் வந்ததென்னவோ உண்மை. அக்கட்டுரையின் தாக்கம் நம் கற்றவர்களிடம் அந்த அளவோடு முடிந்தது.
5. இட ஒதுக்கீட்டால் நன்மை பெற்றவர்கள்கூட அடுத்த தலைமுறைக்குத் தாங்கள் செய்யவேண்டிய கடமையாக இதை எண்ணாது போவதும் நாம் பார்ப்பதுதான்.

தருமி Says:
July 27th, 2006 at 11:20 pm
மேலே சொன்ன சுந்தரவடிவேலின் கட்டுரைக்குரிய லின்க்:
http://bhaarathi.net/sundara/?p=278

மோகன் Says:
July 27th, 2006 at 11:31 pm
கண்காணிப்புக் குழு, அறிஞர் குழு என்றெல்லாம் அமைப்பது நமது நாட்டு அரசியல்வாதிகள் ஒரு முடிவுக்கும் வராமல் ஒரு விஷயத்தை இழுத்தடித்து, பிரச்சனையையே மக்களை மறக்க வைக்கும் ஒரு டெக்னிக்தானே!
மிக மிக சரியான வரிகள்

TheKa Says:
July 28th, 2006 at 12:38 am
தருமி,

இந்த UPSC சங்கதியை என்னால் இன்னமும் ஜீரணிக்க முடியவில்லை. .

எனக்கு பல அதிர்ச்சியான தகவல்கள் உங்களின் கட்டுரையின் மூலமாக கிடைத்தது.

எனக்குப் பட்டது இதுதான், இன்னமும் நாம் இப்படி நலிந்தவனை அடித்து உலையில் போட்டு வாழ எத்தனித்தால், நக்சல்கள் புற்றீசல்கள் போல முளைப்பதை யாராலும் தடுக்க முடியாது. அறிந்து உணர்ந்து எல்லோரையும் அரவணைத்து செல்வதுதான் நாகரீகமடைந்த நமக்கு எல்லாம் அழகு.

தருமி Says:
July 28th, 2006 at 6:46 pm
தெக்கா,
நானும் அதிர்ச்சி அடைந்தது உண்மை; நம்பகூட முடியாமல்தான் முதலில் கேள்விப்பட்டது என்று ஜாக்கிரதையாக எழுதினேன். ஷரத் யாதவ் கட்டுரை பார்த்த பின்பே நிச்சயமாயிற்று.

ஒரு வார்த்தையில் சொல்ல வேண்டுமாயின்: பயங்கரம் !

TheKa Says:
July 28th, 2006 at 7:11 pm
“பயங்கரத்தில்” ஆரம்பித்தது பின்னாலில் பயங்கர”வாதமாக” மாறாமல் இருந்தால் சரி.

Sivabalan V Says:
August 18th, 2006 at 10:09 pm
தருமி அய்யா,

உங்களின் இந்தப் பதிவை என் பதில் இனைத்தமைக்கு மிக்க நன்றி.

செல்வன் Says:
August 19th, 2006 at 8:40 am
பார்ட்னர்

இந்த பதிவில் பின்னூட்டம் வேலை செய்ய ஆரம்பித்து விட்டது போல.தமிழ்மண முகப்பில் இருந்து வந்தேன்.வீடு மாறியாச்சா,இல்லையா?

தருமி Says:
August 21st, 2006 at 9:31 am
partner,
இந்தப் பின்னூட்டத்தை நான் மட்டுறுத்தாமலேயே வந்திருக்கிறதே, எப்படி?
இதைக் கைவிட்டு விட்டு http://dharumi.blogspot.com/ -க்குப் போயாச்சு. அதற்கு இன்னும் பின்னூட்டம் வேலை செய்ய ஆரம்பிக்கவில்லை.

Bruno Says:
August 30th, 2006 at 5:26 pm
தற்போது I.I.T.களில் உள்ள மொத்த இடங்கள் : 4000
54% இட அதிகரிப்பில் கூடும் இடங்கள் : 2160
ஆக மொத்த இடங்கள் : 6160
பிற்படுத்தப்பட்டவர்களுக்கு (6160ல் 27%) : 1663
தாழ்த்தப்பட்டவர்களுக்கு - SC (6160ல் 15%) : 924
தாழ்த்தப்பட்டவர்களுக்கு - ST (6160ல் 7.5%) : 462
B.C. + S.C. + S.T. 27%+15%+7.5%) : 3049

49.5 % of 6160 = 3049.2

சரி தான் என்பது என் அபிப்ராயம்

Saturday, July 15, 2006

165. சாதிகள் இருக்குதடி பாப்பா..2

‘சாதிகள் இருக்குதடி பாப்பா’ என்ற இந்தத் தலைப்பில் நான் எழுதிய கட்டுரை ஒன்று ஜூலை மாத “திசைகள்” இணைய இதழில் வெளி வந்துள்ளது. அதற்கு வந்துள்ள பின்னூட்டங்களில் அதனைத் தொடர்ந்த விவாதங்கள் இடம் பெற்றுள்ளன.

மீண்டும் மீள்பதிவாக அதன் ஒரிஜினல் வடிவில் பின்பு தருவதாக நினைத்துள்ளேன். ஆயினும் அதற்கு முன்பாக முக்கியமாக உங்களைச் சேரவேண்டுமாய் நான் நினைப்பதைத் தனித்தனிப் பதிவாக பதிக்க எண்ணி, அதன் முதல் பதிவாக அக்கட்டுரையின் முடிவுரையை சில கூடுதல்களோடு முதலில் இங்கு தருகிறேன்.

VI. ஆறாம் பகுதி

முடிவுரை:

ப்ராமணர்களை ‘வந்தேறிகள்’ என்கிறார்கள் ஒரு பிரிவினர்; இன்று human genomics பற்றிய ஆராய்ச்சிகளின் மேற்கோள்களோடு “நாம்’ அனைவரும் ஒரே RACE என்கிறார்கள். (ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகள்? )இன்னொரு பிரிவினர். ஆனால், “திராவிட, ஆரிய பிரிவு என்பது கருத்தியல் ரீதியாக, சமூக ரிதியாக இருப்பதை” மறுக்க முடியாது - (போனபார்ட்) “Sharing a haplotype/genotype with other populations in the world doesn’t mean that your forefather(s) and the other population’s forefather(s) (don’t get it mixed up with the primordial archetype here, we’re talking about ‘modern man’ are/were 100% genetically identical.-( சன்னாசி)- இது போன்ற மாற்றுக்கருத்துக்களும் உண்டு.

இப்படி இரு வேறு கருத்துக்கள் இருப்பினும், நம் ஒவ்வொரு சாதியின் ‘gene pool’ ஒன்றும் water tight compartments இல்லை. பல்லாயிரம் ஆண்டுகளாக ஒரே நிலப்பரப்பில் வாழும் எந்த உயிரினங்களுக்குள்ளும் (different communities of the same species) genetic exchange நடந்தே தீரும் என்பது மறுக்க முடியாத உண்மை. There are no biological barriers - free flow of genetic exchanges should have been the norm. இங்கே என்னதான் சாதிப் பிரிவினைகள் என்ற கோடுகள் போட்டு மக்களைப் பிரித்து வைத்திருந்தாலும் , பாலுணர்வுக்கு ஏது வரைமுறைகள். அங்கொன்றும் இங்கொன்றுமாக அவ்வப்போது நடந்திருந்தாலும் ஒவ்வொரு சாதிக்குறிய gene pool 100% purity-யோடு இருக்க சாத்தியமேயில்லை. 3000 ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது என்ன என்பதை விடவும், அதன் பின் நடந்திருக்கக் கூடிய இனக் கலப்பு - genetical outbreeding (இங்கு outbreeding என்பது species விட்டு species என்ற பொருளில் இல்லை; caste மாறி caste என்ற பொருளில் கொள்க.) நம் எல்லோரையும் ஒரே genetic pool-யைச் சேர்ந்தவர்களாக ஆக்கியுள்ளது என்பதே இன்றைய human genomics பற்றிய ஆராய்ச்சிகளின் முடிவுக்குக் காரணமாக இருக்க முடியும்.

நடுவில் ராமானுஜர் தாழ்த்தப்பட்ட சாதியினரை ‘முற்படுத்திய’ வரலாறு வேறு உண்டு. இப்படி வழியில் எவ்வளவோ!

aryan invasion is a myth என்று சொல்பவர்களுக்கு: வந்தேறிகள் என்று அழைக்கப்படும் போது வருந்திய, கோபமுற்ற முற்படுத்திக் கொண்டோர் இப்போது DNA கூற்றினை உண்மையென ஒத்துக்கொள்கிறார்களா? ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகள் என்ற தத்துவத்தை ஒப்புக்கொள்கிறார்களா? அப்படியாயின், சானாதன தர்ம நம்பிக்கையைக் கை கழுவுகிறார்களா? வர்ணாச்சிரம் என்று ஒன்றுமில்லை; ‘ஏற்றத் தாழ்வு சொல்லல் பாவம்’ என்ற கொள்கை ஏற்றுக்கொள்ளப்படுகிறதா? ப்ரம்மனின் பல்வேறு anatomical parts-களிலிருந்து ஜாதிகள் உருவாகின என்ற தத்துவங்கள் குழிதோண்டிப் புதைக்கப்படுமா?

ஏன் இன்னும் சாதிகளைக் கட்டிக்கொண்டு அழுகிறோம்?! நம் DNAக்களில் இருக்கும் ஒற்றுமைகளை நாம் புரிந்து கொள்ளப் போகும் காலம் எப்போது? விளக்குமாறே உன் கதி; உன் தொழில் என்ற தள்ளப்பட்டு சமூகத்தின் கடைசியில் நிற்கும் ஒருவருக்கும், ஒதுக்கீட்டிற்கு எதிராகப் ‘போராளி’யாய் இன்று தெருவில் விளக்குமாறோடு நிற்பவருக்கும் என்ன வேறுபாடு? இரண்டு பேருமே சொந்தக்காரர்கள்தானே! அண்ணன்-தம்பிகளோ, மாப்’ள-மச்சான்களோதானே!

50, 60 ஆண்டுகளுக்கு முன்பு இது ‘சாதிப்புத்தி’ என்று ஒவ்வொரு சாதிக்கும் சில ‘பண்பு நலன்களை’ (??!!)க் கூறுவதுண்டு. இன்று அந்த மாதிரியான பேச்சு ஒருவாறு குறைந்து வந்து கொண்டிருந்தது. இட ஒதுக்கீடு போன்ற பிரச்சனைகள் நம்மை மறுபடியும் 50-60 ஆண்டுகளுக்கு முந்திய காலத்துக்கு கொண்டு போய்விட்டது.¼br /> இன்னும் 2000-3000 ஆண்டுக்கதைகள் எதற்கு? கடந்த 50-100 ஆண்டுகளில் எல்லோருக்கும் பொதுவான வசதி வாய்ப்புகளைப் பெரு வாரியாக ஒரு சிலர் அடைந்து விட்டனர். சாதியின் பெயரில், சாதி உயர்வு சொல்லி அதனால் வந்த வாய்ப்புகள் ஒரு சிலருக்கே கிடைத்து வந்திருக்கிறது. சாதிப் பிரிவினைகளை மட்டுமே வைத்து வந்த வாய்ப்புகள் அவை. வேறு எந்த காரணமுமில்லை. திறமை நம் எல்லோருக்கும் உண்டு. இனியாவது வாய்ப்புகள் அனைவருக்கும் கிடைக்கக் கூடிய சூழ்நிலை உருவாக வேண்டும்; உருவாக்க வேண்டும். ஏற்கெனவே பலன்களை corner செய்துகொண்டவர்கள்தான் இதற்காக முதலில் நேசக்கரம் நீட்ட வேண்டும்; இனியாவது எல்லோரும் முன்னேறினால்தான், எல்லோரையும் முன்னேற்றினால்தான் அது நாட்டின் எதிர்காலத்திற்கு நல்லது; அதுவே முறையானது; மனிதத்தனமானது என்ற உணர்வு வரவேண்டும். வருமா..?

B.C., S.C., S.T., - இவர்களுக்கு ஒரு வார்த்தை:

சமூக நீதி கிடைக்கப் பெறுவதற்குரிய வரலாற்றின் ஒரு திருப்புமுனைக் கட்டத்தில் இருக்கிறோம். (இதுவரை சமூக நீதி என்ற பெயரில் நடந்துவந்துள்ள போராடங்களையும், பித்தலாட்டங்களையும் பற்றிப் பிறகு பார்ப்போம்.) பலருக்கும் இட ஒதுக்கீடு, அதனைச் சார்ந்த பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்டோருக்குக் கிடைக்க வேண்டிய நியாயமான கல்வி, வேலைகளில் இட ஒதுக்கீடு பற்றிய புரிதல் இல்லாமல் உள்ளது; அதனை ஒட்டி நடக்கும் போராட்டங்கள் யாருக்காகவோ, எதற்காகவோ நடப்பது போல் பலரும் இருப்பதாகவே படுகிறது. புரிந்து கொள்வதும், புரியாதவருக்குப் புரிய வைப்பதும் இன்றைய கால கட்டத்தில் ஒரு கட்டாயத் தேவை.

புரிந்தவர்கள், சமூக, பொருளாதார தளங்களில் மேலே வந்து விட்டவர்கள், படித்தவர்கள் - இப்படிப் பலரும் சாதிகளைப் பற்றிப் பேசுவதே தவறென்று நினைத்துக் கொண்டு, தங்களைப் புனித பிம்பங்களாக கருதிக் கொண்டு இட ஒதுக்கீட்டுப் போராட்டத்திற்கு வலு சேர்க்காதது பெரும் தவறு. எதிர் காலம் அவர்களைக் குற்றம் சொல்லும்.







Pathivu Toolbar ©2005thamizmanam.com


Jul 15 2006 03:32 pm Uncategorized
20 Responses
தருமி Says:
July 15th, 2006 at 6:40 pm
சன்னாசி, போனபார்ட்,
உங்களின் கருத்துக்களை இக்கட்டுரையில் மேற்கோளிட்டுள்ளேன்.உங்களுக்கு ஏதும் எதிர்ப்பு இருக்காதென்றே எண்ணுகிறேன். சரியாக உங்கள் கருத்துக்களைப் பயன் படுத்தியுள்ளேனா என்று பார்த்துச் சொல்லுங்கள்.
நன்றி.

கோவி.கண்ணன் Says:
July 15th, 2006 at 7:40 pm
இந்தியர்கள் ஒரே நிறத்திலும், தோற்றத்திலும் இல்லாதது இந்தியாவின் துரதிர்ஷ்டம். இன்றைய வாழ்வியல் இக்கட்டில் சாதிகள் இல்லை, ஆரியர் இல்லை, திராவிடர் இல்லை என்று சொல்வது வெறும் வார்த்தை மட்டும்தான்.ஆனால் உள்ளுக்குள் அனைவரும் தன் குலம் உயர்ந்தது என்ற மாயையில் தான் இருக்கிறார்கள்.

வெளிநாட்டுக்கு வேலைச் செல்கிறவர்கள் கூட எல்லாவித பழக்கவழக்கங்கள், உணவுமுறைகள் மற்றும் எல்லாவற்றையும் இந்தியாவில் விட்டுச் சென்றாலும் சாதியை மட்டும் விடுவதேயில்லை. எத்தனையோ வெளிநாட்டுக் கலச்சாராங்களையும் வாழ்வியலையும் பார்கிறவர்கள் பெண் தேடும் போது மட்டும் தன் சாதியாக இருக்கவேண்டுமென்று விரும்புகிறார்கள். இந்தியர்களுக்கு சாதி உணர்வு ஜீன்களிலேயே அடங்கியிருக்கிறது.

என் கருத்து இது … தாழ்ந்தவராக கருத்தப்பட்டவர்கள் கூட தாங்களும் உயர்ந்தவர் என்று ஒரு மாயையில் சிக்கிக்கொள்ளத் தேவையில்லை. மாறாக தாங்களும் எல்லோரைப் போலவே சமமானவர்கள் என்று நினைத்தாலே போதும். உயர்வு ஒன்றை எதையாவது நினைத்துக் கொண்டிருந்தால் சமண்பாடுகள் எப்போதும் சாத்தியம் அல்ல.

உயர்ந்தவர்கள் என்பதற்காக சமூக அந்தஸ்து எதுவும் இப்பொழுது கிடைப்பதில்லை என்பதை நினைவில் கொள்ளவேண்டும்

சாதிகள் ஒளிக்கப்படவேண்டுமெனில் அது திருமணங்கள் மூலம்தான் ஒழிக்கப்பட முடியும் அதற்கு நூற்றாண்டுகள் ஆகலாம்.

TheKa Says:
July 16th, 2006 at 12:57 am
“வந்தேறிகள்” என்பது மனித பரிணாமச் சுழற்சியில் ஒன்றுமே கிடையாது. ஹோமோ எரெக்டஸ் என்ற மனித குரங்கு இனம் புது இடங்களுக்கு வலசை போகமல் இருந்திருந்தால், அதற்கு அடுத்த மனித இனமாக தோன்றிய ஹோமோ சாபியன்ஸ் என்ற இந்த தற்கால மனிதன் தேன்றி இருக்க வாய்ப்புகள் கிடைத்திருக்காது.

“விலங்குகள்” உலகில் எந்த ஒரு இனமும் தன்னை இயற்கையின் நடைமுறை சேர்காப்பு (inclusion) சுழற்சியில் தற்காத்து அடுத்த தலைமுறைக்கு செல்ல வேண்டுமெனில், ஒரு சில தேவையில்லாத தகவைமைப்புகளை, பண்புகளை இழந்தோ அல்லது பெருக்கிக்கொண்டோ அடுத்த பரிணாமச் பயணத்தில் பயணித்தே ஆக வேண்டும்.

இந்த கூற்று அப்படியாக இருக்கையில் ஒரு தனிப்பட்ட இனம் தழைக்கவேண்டுமெனில் இயற்கை மீண்டும் அத் தனிப்பட்ட இன பிரஜைகளிடுடேயே கூட தறம் வாய்ந்த மரபுப் பண்புகளை பெரும் வண்ணமும் அவைகளை தனது அடுத்த சந்ததியினர்களுக்கு கடத்தி விடவும் சில பல முறைகளில் அந்த யுக்தியை இயற்கை நடத்த வாய்பளிக்கிறது.

உதாரணமாக, விலங்குகளுக்கிடையே இனப்பெருக்கத்தினை முன்னிட்டோ அல்லது தனது குடும்பத்தை யார் வழி நடத்தி (Alpha male) செல்வது என்பதற்கென நடக்கும் சண்டைகள் (குரங்கு வகைகள், மான்…), கிட்டத்தட்ட எல்லா வகை இனங்களுக்கும் இது போன்ற இயற்கை தேர்ந்தெடுப்பு இயற்கையாகவே நடந்தேறுகிறது. கிடைக்கும் நன்மை, தனது அடுத்த சந்ததி மிக்க திறமைகளை கொண்ட ஆரோக்கியமான, இயற்கை எதிப்புகளை சந்திக்க திறன் மிக்க ஒரு இனம்.

இதற்கு மாறாக இப்பொழுது மனித இனத்தில் இந்த சாதிகள் அடிப்படையில் நடந்தேறும் இனப்பெருக்க யுக்தி, இயற்கைக்கு புறம்பான யுக்தியாக உள்ளது. ஒரு குறிப்பிட்ட இனத்திற்குள்ளேயே மீண்டும் மீண்டும் இனப்பெருக்கம் செய்ய நேரிடும் பொழுது அங்கே நிகழ்வுறுவது “தன் சாதிப் பெருக்கம்” இதனை ஆங்கிலத்தில் Inbreeding என்று அழைக்கிறார்கள். இதன் மூலமாக மரபணுக்களில் எந்த ஒரு சிறப்பு புற பண்புகளும் அடுத்த தலைமுறைக்கு இணைக்கப்படுவதில்லையாதலால், பிறக்கும் சந்ததிகளும், ஒரு நல்ல ஆரோக்கியமற்ற, உடல் மற்றும் புத்தி சார்ந்த தேக்கம் நிகழ்ந்து விடுகிறது.

….. To be Contd

TheKa Says:
July 16th, 2006 at 12:59 am
…Part II

இது போன்ற மரபணு தேக்க நிலையின் இறுதி கட்ட வாழ்வு எப்படியிருக்கும் என்பதனை ஒரு பாலூட்டிகளில் நடதிய ஆராய்ச்சியின் பொழுது கண்டெடுத்த உண்மைகளை கொண்டு அறிந்து கொள்ளலாம்.

ஒரு மூன்று வித அளவுகோலுடன் உள்ள மழைக்காடுகளில் இந்த ஆராய்ச்சி நடத்தப் பட்டது. ஒன்று, இயற்கையான மனித நடமாட்டம் இல்லாத மிகப் பெரும் நீண்ட காடு அதனை ஆங்கிலத்தில் Main Land என்பார்கள், இரண்டாவது, அது போன்ற மெயின் லாண்டிலிருந்து உடைந்த சிறு பெரும் காடு (Fragmented Landscape) சுற்றிலும் தேயிலை தோட்டத்தால் துண்டிக்கப்பட்டு, மூன்றாவது, இரண்டாவது வகை காட்டை விட இன்னும் அளவில் சிறியது அது போன்றே பண்புகளுடன்.

இப்பொழுது மரபணுச் சோதனை ஒரு குறிப்பிட்ட எலி வகை தேர்ந்தெடுக்கப்பட்டு நிகழ்த்தப் பட்டது, முதல் வகை காட்டில் அதாவது மெயின் லாண்டில் எந்த தங்கு தடையுமின்றி இனப்பெருக்க ஓட்டத்திற்கான வழிமுறைகள் இருந்ததால் between individuals, அங்கு உள்ள சந்ததிகளின் நோய் எதிர்புத்தன்மை, குட்டி ஈனும் பொழுது குட்டிகளின் சாவு எண்ணிக்கை எல்லாம் குறைந்தே காணப்பட்டது.

மாறாக இரண்டாவது காட்டில் மெயின் லாண்டின் சூழ்நிலைக்கு எதிர் மரையாக காண நேர்ந்தது. ஆனால் மூன்றாவது வகை காட்டில் அந்த இன எலியே காணப்படவில்லை. காரணம் ஆராயப்படும் பொழுது, இனப் பெருக்க inbreeding ஒன்றே முதல் காரணியாக கண்டறியப்பட்டது. உணவு சார்ந்த பற்றாக்குறை இருந்த போதிலும்.

இந்த தன் இனச் சேர்க்கையால் (inbreeding), ஒரு சில குறிப்பிட்ட நோய் தாக்கும் பட்சத்தில் அந்த இனமே அழிந்து போகும் அபாயம், மரபணு டைவர்சிடி இல்லாததால் நோய் எதிர்ப்பு சக்தி அற்ற நிலையில் நடந்திருக்கலாம் என கண்டறியப்பட்டதாக அவ்வறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

இந்திய இளைஞர்களை தன் இயற்கை சார்ந்த திறமைகளின் மூலம் தனது பார்ட்னர்களை கவர்ந்து திருமணம் செய்து கொள்ள வேண்டி வந்தால் நாமும் ஒலிம்பிக், உலக கால்பந்து போட்டி போன்ற உலகப் போட்டிகளில் கலந்து கொண்டிருப்போமோ

kpd Says:
July 16th, 2006 at 5:07 am
/*
எல்லோரும் முன்னேறினால்தான், எல்லோரையும் முன்னேற்றினால்தான் அது நாட்டின் எதிர்காலத்திற்கு நல்லது
*/
சரியான கருத்து… மற்ற அனைத்து சமூக காரணிகளை புறம் வைத்து, நாளைய ஒருமித்த தேசிய நலன் அல்லது குறுகிய சுயநலன் அடிப்படையில் பார்த்தால் கூட, மற்றவர்கள் சிறிதாவது முன்னேறினால் தான் நாளைய தேசிய/நமது நலன் பாதுகாப்புறும் என்பது அடிப்படை.

எனவே சமூக/தேசிய/சுயம் ஆகிய அனைத்து நலன்களுக்கும் இந்த ஒதுக்கீடு ஒரு கருவியாக பயன்படும். போகும் காலத்தில் கருவியில் ஏற்படும் பழுதுகளை நீக்கிடும் விவாதங்களே அனைவருக்கும் நன்மை பயக்கும்.
Thx.

தருமி Says:
July 16th, 2006 at 11:33 am
கோவி.கண்ணன்,
//உயர்ந்தவர்கள் என்பதற்காக சமூக அந்தஸ்து எதுவும் இப்பொழுது கிடைப்பதில்லை …//

அப்படியா சொல்கிறீர்கள்?
உயரந்தவர்கள்- தாழ்ந்தவர்கள்; அந்தந்த அந்தஸ்துக்கு ஏற்ற வேலைகள் என்றில்லையா என்ன?

கோவி.கண்ணன் Says:
July 16th, 2006 at 12:04 pm
//அப்படியா சொல்கிறீர்கள்?
உயரந்தவர்கள்- தாழ்ந்தவர்கள்; அந்தந்த அந்தஸ்துக்கு ஏற்ற வேலைகள் என்றில்லையா என்ன? //

அதிக வருமானம் உள்ள குலத்தொழில்கள் மட்டுமே தற்பொழுது சந்ததிகள் மூலம் விரும்பி செய்யப் பட்டுவருகிறது.
மற்ற குலத்தொழில்கள் வறுமையின் காரணமாகவும் வேறு தொழில் தெரியாததாலும் தொடர்கிறது.

அந்தஸ்துக்கு ஏற்ற வேலை என்று எதுவும் இல்லை. படிப்புக்கு ஏற்ற வேலை உண்டு என்று சொல்லலாம்.

உண்மையை சொல்லுங்கள் ‘தாங்கள் உயர்ந்தவர்கள்’ என்று சொல்பவர்களுக்கு நீங்கள் கும்பிடு போடுகிறீர்களா ?

ஆனால் முன்பு இடுப்பில் துண்டைக் கட்டிக்கொண்டு, செருப்பை கழட்டிக் கொண்டு ஓரமாக நின்று கும்பிட வேண்டும் என்ற ஒரு எதிர்பார்பு இருந்தது. இன்று அது இல்லை.

இந்த நிலை இன்று இருப்பதற்கு யார்காரணம் உயர்ந்தவர்கள் என்று கூறிக் கொள்பவர்களின் பெரும்தன்மையா ?

தாங்கள் இறங்கிவந்தது எப்படி என்று தெரிந்தும், உண்மையை ஒப்புக்கொள்ளும் பண்பட்ட மனம் இன்றும் இல்லை என்பது, அவர்கள் சமூக மாற்றம் கொண்டுவந்தவர்களுக்கு எதிராக முழங்குவதிலிருந்தும் அவதூறு பேசுவதிலிருந்தும் தெரியவரும் நிதர்சன உண்மை.

சின்னக்கடப்பாரை Says:
July 17th, 2006 at 11:25 am
அரசாங்கத்துக்கு lobby செய்பவர்கள் அனைவரும் மேல்தட்டு, படிப்பில் உயர்ந்த, பிள்ளைகளை வெளிநாட்டில் படிக்க வைக்கின்ற டாகூர்களும், ராஜ்புட்களும். அவர்களை போன்ற “ஏழைகளுக்கா” தெரியாது BC, SC, ST, படும் வேதனைகள்?

அரசியல்வாதிகளை விட கேவலமான கோமாளிகள் இவர்கள்.

அசுரன் Says:
July 17th, 2006 at 7:13 pm
ஆரிய திராவிட பிரிவு பற்றி பிறருக்கு சொல்லி அவர்கள் அப்படி ஒரு பிரிவு இன்றும் இருக்கிறதா என்று திருப்பிக் கேட்டால் பின்வரும் விவரத்தை சொல்லுவது வழக்கம். அதாவது ஒரு ஆரியன் அல்லது திராவிடன் என்று உயிரியல் ரீதியாக பிரிக்க நினைத்தால் இன்று முடியுமா என்று தெரியவில்லை. ஏனெனில் பல்லாயிரமாண்டு ஒரே நிலப்பரப்பில் இருப்பதின் விளைவு அப்படி ஒரு பிரிவினை இருப்பதை எந்த அளவு விட்டு வைத்திருக்கும் என்று தெரியவில்லை.

ஆனால் அப்படி ஒரு வெறுப்புடன் நிலை நிறுத்தப்பட்ட பண்பாட்டு அடக்குமுறைகள் பல்லாயிரம் வருடங்களாக தொடர்வதை யாராலும் மறுக்க முடியாது. எடுத்துக்காட்டுக்கு எனது பெயர்(அசுரன்). சுர பானம் அருந்தாதவன் அசுரன்.

அது இங்கிருந்த திராவிடன் என்று அறியப்பட்ட தோல்வியுற்ற ஒரு சமூக பிரிவுதான்.

நீங்கள் சொல்லுவது போல் சட்டத்தை மீறிய உயிரியல் கலப்பு நிகழ்ந்ந்துள்ளன. வேறு சில காரணங்களும் உள்ளன.

//அப்படியாயின், சானாதன தர்ம நம்பிக்கையைக் கை கழுவுகிறார்களா? வர்ணாச்சிரம் என்று ஒன்றுமில்லை; ஏற்றத் தாழ்வு சொல்லல் பாவம் என்ற கொள்கை ஏற்றுக்கொள்ளப்படுகிறதா? ப்ரம்மனின் பல்வேறு anatomical parts-களிலிருந்து ஜாதிகள் உருவாகின என்ற தத்துவங்கள் குழிதோண்டிப் புதைக்கப்படுமா?//

மனிதன் பிறப்பால் வேறுபட்ட குண நலனுடன் பிறக்கிறான் என்ற விசயத்தை பார்ப்பனிய பயங்கரவாதிகளால் விட்டொழிக்க முடியாது.

ஆனால் உண்மை என்னவெனில் பிறக்கும் மனிதரில் ஏற்றத்தாழ்வான நிலை இருக்க காரணம் சமூக பொருளாதார ஏற்றத்தாழ்வும், பல்லாயிரம் வருடங்கள் நிலைத்திருக்கும் அந்த சமூக பொருளாதார ஏற்றத்தாழ்வு விட்டுச் சென்றுள்ள மரபு ரீதியான தொடர்ச்சிகளுமே.

ஒரு பொதுவுடைமை சமுதாயாத்தில் இந்த ஏற்றத்தாழ்வுகள் களையப்படும் பொழுது ஒன்றிரண்டு(அல்லது மூன்று, நான்கு) தலைமுறைகளில் மனிதரிடையே அப்படிப்பட்ட பிறப்பின் அடிப்ப்டையில் உள்ள ஏற்றத்தாழ்வுகள் அழிந்துபோகும்.

இது போன்றெல்லாம் சிந்திக்க அவர்களுக்கு தெரியாது. பிற்போக்குவாதிகள்,
“5 ஆயிரம் வருடங்களுக்கு முன்பே வேதத்தில் எல்லாம் சொல்லியிருக்கிறது என்று கங்கை கரையில் இருந்து பிதற்றும் ஐந்துக்கள்” என்று புதுமைபித்தனால் விமர்சிக்கப்பட்ட அவர்கள் வேறு விதமாக சிந்தித்தால்தான் நாம் ஆச்சரியப் படவேண்டும்.

அவர்களது பதிவுகளை பாருங்கள் எதையாவத் வாந்தி எடுத்திருப்பார்கள். வாந்தி எடுத்த அவர்களால் ஒரு சில அடிப்படை கேள்விகளை கேட்டால் பதில் சொல்ல இயலாமல் நம்மீது அவதூறு கிளப்புவார்கள்.

அந்த மாதிரி ஆட்களின் தளத்தில் சென்று விவாதம் செய்யக்கூடாது. மாறாக நமது மாற்றுக் கருத்தை நமது ஆதரவு தளங்களில் பதிவிட்டு அதன் மூலம் அவர்களின் தந்திரங்களை முறியடிக்க வேண்டும்.

//புரிந்தவர்கள், சமூக, பொருளாதார தளங்களில் மேலே வந்து விட்டவர்கள், படித்தவர்கள் - இப்படிப் பலரும் சாதிகளைப் பற்றிப் பேசுவதே தவறென்று நினைத்துக் கொண்டு, தங்களைப் புனித பிம்பங்களாக கருதிக் கொண்டு இட ஒதுக்கீட்டுப் போராட்டத்திற்கு வலு சேர்க்காதது பெரும் தவறு. எதிர் காலம் அவர்களைக் குற்றம் சொல்லும். //

புரிய வேண்டியவர்களுக்கு புரிந்தால் சரி.

நல்ல பதிவு…இடஓதுக்கீடு பற்றிய பகுதி அதீத கவனம் எடுத்து படித்தால்தான் தங்களது நிலைப்பாடு புரிய வருகிறது(ஒருவேளை அவசரமான எழுதினீர்களோ?).

நன்றி,
அசுரன்

கோவி கண்ணன்,
சாதிகள் பொருளாதார, காலாச்சார ரீதியாக கிராமப்புறங்களில் வேறூண்றியுள்ளது அது வெறுமனே திருமணம் என்ற ஒன்றின் மூலம் அழிந்துவிடாது.

asuran Says:
July 18th, 2006 at 9:24 pm
தருமி,

எனக்கு தனிமடலில் கேட்டிருந்த, எனது விமர்சனம் பற்றிய ஒரு சிறு விளக்கம்.

அது வேறு ஒன்றும் இல்லை எப்பொழுதுமே முதலில் பதிவுகளை ஒரு கழுகு பார்வை பார்ப்பது வழக்கம். அது போல தங்களது பதிவை பார்த்த பொழுது நீங்கள் இடஓதுக்கீடை மறுத்து எழுதியது போல் தோன்றியது. பிறகு இரண்டாம் முறை தங்களது பதிவு பற்றிய எனது கருத்தை முடிவு செய்வதற்காக படித்த பொழுதுதான் நீங்கள் அந்த பகுதியை மற்றவர்களுக்கான அறிவுரையாக கூறியது புலப்பட்டது.

அதனால்தான் முந்தைய பதிவில் குறிப்பிட்டவாறு “சிறிது கவனம் எடுத்து படிக்க வேண்டியதாக இருந்தது’ என்று குறிப்பிட்டேன்.

மற்றபடி இடஓதுக்கீட்டை நடுத்தர வர்க்கம் ஆதரிக்காதது பற்றிய தங்களது மனவியல் ஆய்வு முடிவு மிகச் சரியான ஒரு பார்வை. இதையே நீங்கள் ஒரு விரிவான பதிவாக வெளியிட்டிருந்தால் சம்பந்தப்பட்ட மேல்நிலையாக்கம் அடைந்த வலைப்பூ பிரிவினருக்கு ஒரு நல்ல செய்தியாக சென்றடைந்திருக்கும்.

அதாவது இடஓதுக்கீடு எதிர்ப்பில் பார்ப்பினிய/மேல்சாதி வெறியும்/திமிரும், நடுத்தர வர்க்க குட்டி முதலாளித்துவ ஜனநாயக உணர்வும் என்ற இரண்டு அடிப்படை இருப்பதைப் பற்றி ஒரு விரிவான பதிவு இடலாம்.

நீங்கள் விருப்பப்பட்டால் இப்படி ஒரு கட்டுரை எழுதுவது பற்றி மீண்டும் தொடர்பு கொள்கிறேன்.

நன்றி,
அசுரன்.

asuran Says:
July 18th, 2006 at 9:31 pm
TheKa உயிரியல் ரீதியாக சாதி வெறியை அடிக்கிறார்…..

நல்ல கூட்டணிதான் நமக்கு கிடைத்திருக்கிறது ))) அவருக்கு எனது வாழ்த்துக்கள்

நன்றி,
அசுரன்.

தருமி Says:
July 19th, 2006 at 1:44 pm
கோவி. கண்ணன்,
ஒப்புக்கொள்கிறேன்.

சின்னக் கடப்பாரை,
நன்றி

தருமி Says:
July 19th, 2006 at 1:47 pm
அசுரன்,
இது ஒரு முழுக்கட்டுரையின் முடிவுரை. அதை முதலில் தந்துள்ளேன். அதனால் கூட அந்தத் தோற்ற மயக்கம் ஏற்பட்டிருக்கக் கூடும்.

சோம்பேறி பையன் Says:
July 20th, 2006 at 4:53 pm
// ஏன் இன்னும் சாதிகளைக் கட்டிக்கொண்டு அழுகிறோம்?! நம் DNAக்களில் இருக்கும் ஒற்றுமைகளை நாம் புரிந்து கொள்ளப் போகும் காலம் எப்போது? //

நல்ல வரிகள்.. இக்கட்டுரை திசைகள் இதழில் வந்ததாக தெரிவித்துள்ளீர்கள், வாழ்த்துக்கள் !!

Sivabalan V Says:
July 20th, 2006 at 7:29 pm
தருமி சார்,

அருமையான பதிவு.

தெகாவின் விளக்கம் அருமை.

பதிவுக்கு மிக்க நன்றி.

தருமி Says:
July 20th, 2006 at 8:50 pm
சோம்பேறி பையன், சிவபாலன்,
இருவருக்கும் மிக்க நன்றி.

கமல் Says:
July 21st, 2006 at 5:13 pm
தருமி சார்,

வழக்கம் போலவே நல்லதொரு பதிவு. ஆனால், கடைசி இரண்டு பத்திகளில் அழுத்தம் போதவில்லை என்று நினைக்கிறேன். இட ஒதுக்கீட்டிற்கு ஆதரவாகக் குரல் கொடுக்காத பிற்படுத்தப்பட்டவர்கள் கண்டனத்துக்குரியவர்கள்தான்.

இன்று இட ஒதுக்கீட்டை எதிர்க்கும் பிற்படுத்தப்பட்டவர்கள், தங்களை விட அதிக மதிப்பெண்கள் எடுத்த அதே சாதி மாணவனும் மருத்துவப் படிப்பில் சேர்ந்து விட்டான். தன்னை விடக் குறைந்த மதிப்பெண்கள் எடுத்த தாழ்த்தப்பட்ட சாதி மாணவனும் மருத்துவப் படிப்பில் சேர்ந்து விட்டான். ஆனால் தான் மட்டும் மருத்துவம் கிடைக்காமல் பொறியியல் படிக்க வேண்டியதாகப் போய்விட்டதே! இதற்குக் காரணம் இட ஒதுக்கீட்டால்தானே! என்று கூறுகிறார்கள்.

ஆனால் இவர்கள் மறந்து விட்டது அல்லது புரிந்து கொள்ள மறுப்பது என்னவென்றால், இட ஒதுக்கீடு இல்லாவிட்டால், தன்னைவிட அதிக மதிப்பெண்கள் எடுத்த அதே சாதி மாணவனுக்கும் மருத்துவம் கிடைத்திருக்காது. தாழ்த்தப்பட்ட சாதி மாணவனுக்கும் மருத்துவம் என்ன? பொறியியல் கூடக் கிடைத்திருக்காது என்பதுதான்.

அப்படியானால், ஒருவரின் வாய்ப்பைத் தட்டிப் பறித்துத்தான் மற்றவர் மேலே வரவேண்டுமா என்கிறார்கள்.

அவசியமில்லை. வட்ட வடிவமான ஒரு மைதானத்தில் ஓட்டப்பந்தயம் நடக்கும்போது, உள் வட்டத்தில் இருப்பவரை விட, வெளி வட்டத்தில் இருப்பவர் சற்று முன்னே இருந்துதான் ஓட்டத்தை ஆரம்பிப்பார். அதற்காக அதை அவருக்குக் கிடைத்த சலுகை என்று கூறிவிட முடியுமா? சமூகத்தில் உள்ள ஏற்றத்தாழ்வுகள் மற்றும் ஒவ்வொரு சமூகத்திலும் உள்ள மக்கள் தங்கள் பிள்ளைகளின் கல்விக்குத் தரும் முக்கியத்துவம் ஆகியவற்றைப் பொறுத்துத்தான் இடங்கள் ஒதுக்கப்படுகின்றன.

இப்படி மதிப்பெண் சலுகை தந்து அனுமதிப்பதன் மூலம் தரம் குறைந்து விடாதா? என்றால், நிர்வாக ஒதுக்கீட்டில் பணம் கொடுத்துச் சேரும் பணக்கார மாணவர்களால் குறையாத தரம், இதனால் குறைந்து விடாது என்பதுதான் பதில்.

//உண்மையை சொல்லுங்கள் ‘தாங்கள் உயர்ந்தவர்கள்’ என்று சொல்பவர்களுக்கு நீங்கள் கும்பிடு போடுகிறீர்களா ?//

கோவி.கண்ணன்,

நாம் சொல்வதில்லை. ஆனால், இன்னும் கோயில்களில் ‘சாமி, இங்கே கொஞ்சம் விபூதி கொடுங்க!’ என்று கேட்கிறார்களே! இல்லாவிட்டால், விபூதி கிடைக்குமா? விபூதிக்குக் கிடைக்கும் மரியாதை தன் சக மனிதனிடம் இல்லையே?

இட ஒதுக்கீட்டைப் பற்றி நண்பரிடம் விவாதித்துக் கொண்டிருந்த போது, ‘இட ஒதுக்கீடு இருந்தால், கலப்புத் திருமணத்தால் கூடச் சாதியை ஒழிக்க முடியாது’ என்றார். எப்படி? என்று கேட்டதற்கு, பின்வரும் பதிலைக் கூறினார்.

‘இரண்டு வேறு சாதிகளைச் சேர்ந்த இருவர் திருமணம் செய்து கொண்டால், பிறக்கும் குழந்தை எந்த சாதியைச் சேர்ந்தது? அதை முடிவு செய்பவர்கள் யார்? பெற்றோர்கள்தானே? சாதி வரிசையில் கீழே இருப்பவர்களுக்கு இட ஒதுக்கீடு என்ற சலுகை இருந்தால், எந்த சாதியைத் தேர்வு செய்வார்கள்? குறைந்த அந்தஸ்து உள்ள சாதியைத்தானே! ஆனால் வளர்க்கும்போது எந்த சாதி அடிப்படையில் வளர்ப்பார்கள்? இவர்களை யாருடைய குடும்பம் ஏற்றுக் கொண்டுள்ளதோ அல்லது யாருடைய குடும்பம் பொருளாதாரத்தில் உயர்ந்ததோ, அந்த சாதியின் மனநிலையில்தானே? ஆக, எல்லாருக்கும் மனதளவில் ஒரு சாதி, ஏட்டளவில் இன்னொரு சாதி என்றிருந்தால், சாதி எப்படி ஒழியும்?’

இதற்கு என்ன பதில் சொல்வது என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன். யாருக்காவது தெரிந்தால் சொல்லுங்களேன்!

நன்றி
கமல்

தருமி Says:
July 21st, 2006 at 9:27 pm
கமல்,
நன்றி.
நீங்கள் சொன்ன குறை - ஒருவேளை இது முழுப்பதிவினொரு பாகம், அதுவும் முடிவுரையை வேண்டுமென்றே முதலில் தந்துள்ளேனே அதனால்தானே என்னவோ. நீங்கள் சொல்லும் தரம்பற்றி முழுக்கட்டுரை பதியும்போது காணுங்கள்.

பொன்ஸ் Says:
July 21st, 2006 at 9:30 pm
கமல்,
உங்க கேள்வி சரிதாங்க.. ஆனால், இந்தப் பின்னூட்டத்திலயே இன்னும் ஒரு க்ளூவும் கொடுத்திருக்கீங்க..

இட ஒதுக்கீடு இருப்பதால், அதற்கு வசதியான ஜாதியில் பிள்ளையைப் பதிவு செய்பவர்கள், இன்னொரு ஜாதிக்கு ஏற்ற மாதிரி வளர்ப்பது என்றால், அப்போ இட ஒதுக்கீட்டை ஒழித்தால் மட்டும் ஜாதி வேற்றுமை ஒழிந்துவிடுமா என்ன? ..

கமல் Says:
August 21st, 2006 at 7:40 pm
//அப்போ இட ஒதுக்கீட்டை ஒழித்தால் மட்டும் ஜாதி வேற்றுமை ஒழிந்துவிடுமா என்ன?//

ஒழியாதுன்னுதாங்க நானும் சொல்றேன். ஆனால், இட ஒதுக்கீடு இல்லாவிட்டால் சாதிச் சான்றிதழே தேவையில்லை. அதனால் காலப்போக்கில் மறைந்து விடும் என்கிறார் நண்பர்.

அப்படியென்றால், வெள்ளைக்காரன் வந்த பிறகு வந்ததுதானே இந்த சான்றிதழ் விவகாரமெல்லாம்? அதற்கு முன் ஏன் ஜாதி இருந்தது? அப்படீன்னு கேட்டேன். இப்போ அவர் யோசிச்சிட்டிருக்கார்.

இப்படியே புலி வாலைப் பிடித்த நாயர் கதையாகப் போய்க்கொண்டிருக்கிறது.

நன்றி
கமல்

Sunday, July 09, 2006

164. சாதிகள் இருக்குதடி பாப்பா..1

இந்தத் தலைப்பில் நான் எழுதிய கட்டுரை ஒன்று ஜூன் மாத “திசைகள்” இணைய இதழில் வெளி வந்துள்ளது. அதற்கு வந்துள்ள பின்னூட்டங்களில் அதனைத் தொடர்ந்த விவாதங்கள் இடம் பெற்றுள்ளன.

மீண்டும் மீள்பதிவாக அதன் ஒரிஜினல் வடிவில் பின்பு தருவதாக நினைத்துள்ளேன். ஆயினும் அதற்கு முன்பாக, The Hindu-ல் வந்த இக்கட்டுரை நான் சொன்ன பல கருத்துக்களுக்கு வலு சேர்ப்பதாலும், சான்று தருவதாலும் அதனை முதலில் இங்கு அளிக்கிறேன். நீளமான ஆங்கிலப் பதிவைப் படிக்க நேரம் இல்லாதவர்களுக்காகவே சில வரிகளை சிகப்பெழுத்தில் தந்துள்ளேன். அவைகளைப் படித்தாலே கட்டுரையின் மையக் கருத்துக்களைப் புரிந்து கொள்ள இயலும்.

என் கட்டுரையை இரண்டு மூன்றாகப் பிரித்து மீள்பதிவாக பின்னால் இடுகிறேன்.

இக்கட்டுரை தொடர்பான பின்னூட்டங்களில் பெயரில்லாமல் வரும் பின்னூட்டங்களை வெளியிடும் எண்ணம் இல்லை.





Date:07/07/2006 URL: http://www.thehindu.com/2006/07/07/stories/2006070703771000.htm


--------------------------------------------------------------------------------


Opinion - Leader Page Articles

Who is perpetuating reservation in jobs?

Sharad Yadav

In a bizarre turn, the Union Public Service Commission and the Department of Personnel and Training have transformed the policy of reservation into a policy of communal awards. They have treated general seats as seats reserved for people belonging to non-reserved categories.





WHENEVER THERE is talk about reservation, the bogey of merit is raised by opponents of this policy. But the question arises: do the opponents respect the merit of candidates from the Other Backward Classes (OBCs) and the Scheduled Castes (SCs) and the Scheduled Tribes (STs)? Empirical studies suggest they do not. Almost six decades have passed since Independence but all important institutions of India, barring Parliament and Legislative Assemblies and Councils, have been under the strong command of these self-styled votaries of merit. With some exceptions, they have abused their position to denigrate the merit of the people who have been given the constitutional right of reservation — so that privileges enjoyed by some people under the caste system are de-reserved.

The Union Public Service Commission provides glaring examples of how the merit of candidates belonging to SCs, STs, and OBCs is denigrated. The UPSC is a constitutional body. It commands high respect in India but in collusion with the Department of Personnel and Training (DoPT), it has been denying the rights of meritorious candidates belonging to reserved categories. It has been indulging in unconstitutional activities despite the clear-cut policy of the Government of India on reservation. The Supreme Court and High Courts have interpreted the policy in many judgments. There is no scope for any ambiguity regarding this policy, but the UPSC has continued to deny meritorious candidates of reserved categories the right to join the civil services as general category candidates.

This has resulted in a denial of jobs to hundreds of succcessful candidates belonging to reserved categories; and almost the same number of candidates belonging to the non-reserved category has got jobs, without being declared successful by the UPSC at the time of declaration of results. This is happening despite many judgments of the higher judiciary against the practice. People controlling the UPSC and DoPT are so strongly motivated against the candidates of reserved categories that they can go to any extent in their adventure to block the entry of reserved categories in the civil services.

Under the reservation policy, 49.50 per cent of the seats is reserved. The remaining 50.50 per cent is open to all. Candidates who qualify for the civil services by dint of their merit alone should be enlisted in general open categories. After all, there is no bar on SC and ST candidates fighting elections for general seats. Many leaders, including Kansi Ram and B.P. Maurya, have fought and won from general seats. General seats do not mean seats reserved for people belonging to non-reserved categories. Similarly, general open seats in the civil services are not reserved for people belonging to non-reserved categories. The Government of India has not reserved hundred per cent of the seats of the civil services. In fact, it cannot do so. There is a 50 per cent ceiling placed on reservation by the Supreme Court. But in effect, the UPSC and the DOPT are implementing reservation policy to ensure 50.50 per cent reservation for the unreserved categories that are supposed to form just 15 per cent of the Indian population.

For the last civil services examination, around 214 of 425 seats were general open merit seats. Out of the first 214 candidates, 50 were from reserved categories. Forty of them were from OBCs. But the UPSC refused to allow reserved category candidates to enlist themselves as general candidates. Twenty seven per cent of 425 is 117: this is the exact number of candidates belonging to OBCs who were declared successful. Even those in the top 10 were classified as reserved category candidates!


By doing this, the UPSC has denigrated meritorious candidates from the reserved categories. It has also denied jobs in the civil services to an equal number of reserved category candidates. In fact, 157 candidates from OBC categories should have been selected: 40 on the basis of merit and 117 on the basis of the 27 per cent reservation extended to them.

People belonging to SCs and STs in the early days of the Republic lacked education. Their number was not sufficient to fill the vacancies declared for them. Later on they picked up but there were all-out efforts to deny them their right to reservation under one pretext or another. If we analyse the data on successful ST and SC candidates, we discover they have done better in the written test, where the examiner does not know their caste. In the interviews they have been given fewer marks because people in the interview board know their caste.

It is shocking that candidates belonging to reserved categories are interviewed separately. They sit for the written examinations alongside non-reserved category candidates, but when the time of interview comes, they are segregated. The interview board is well aware of their social background and discriminates against them while giving them interview marks. An analysis of the results reveals a big gap between the average interview marks given to reserved category candidates and non-reserved category candidates. One successful candidate of the 1996 civil service examinations, who was denied a job, has calculated these averages on the basis of information available with him. Since he fought for his job in the Supreme Court and won, the data he offers can be relied upon in the absence of authoritative data provided by the UPSC. According to this candidate, the average interview mark in the non-reserved category is around 200, while the average for reserved categories candidates is 140. I believe that if there were no caste discrimination, the number of successful OBC candidates in the general merit category would have been much higher than 40. Unfortunately, even these 40 candidates were not declared successful in the general merit category.

The concept of excluding the creamy layer sounds progressive. Indeed the benefit of reservation should be made available to people from less privileged OBC families. In principle this is all right. But the design of those opposed to OBC reservation is to keep the creamy layer out of the reservation ambit and deny the benefits of reservation to less privileged individuals. These individuals have no means of fighting the might of the UPSC and the DoPT. They have no money to engage lawyers to fight legal battles. It is quite easy to deny them their right. So they are denied jobs despite getting letters from the UPSC informing them of their success. My information is that thus far 390 successful candidates have been denied jobs in the civil services. Some of them, who have had resources thanks to being in other services, have challenged the DoPT successfully. But what about those who have not moved the courts? Why can’t the courts take suo motu notice of such gross denial of justice?

Babasahib Bhim Rao Ambedkar was for separate electorates for Dalits. He wanted proportionate reservation for them but also demanded that their representatives should be elected from an electoral college comprising Dalits exclusively. Separate electorates for Dalits were termed the communal award. Gandhiji and many other leaders thought such an arrangement would divide India; he went on a fast and Dr. Ambedkar withdrew his demand. The policy of reservation was put in place so that those hailing from reserved categories could contest elections from unreserved seats also.

The same rule applies to jobs. But the UPSC has turned the policy of reservation into a policy of communal awards. I cite below some judgments of Indian courts that are being consistently violated by the UPSC and the DOPT:

(a) India Shawnee v. Union of India, 1992 Supp. (3) SCC 217

“In this connection it is well to remember that the reservation under Article 16(4) does not operate like a communal reservation. It may well happen, that some members belonging to, say, Scheduled Castes get selected in the open competition field on the basis of their own merit; they will not be counted against the quota reserved for Scheduled Castes; they will be treated as open competition candidates.”

(b) Union of India vs. Virpal Singh Chauhan (1995) 6 SCC 684

“While determining the number of posts reserved for SCs and STs, the candidates belonging to the reserved category but selected on the rule of merit (and not by virtue of rule of reservation) shall not be counted as reserved category candidates.”

(c) Rithesh. R. Shah’s case (1996) 3 SCC 253

“In other words, while a reserved category candidate entitled to admission on the basis of his merit will have the option of taking admission to the colleges where a specified number of seats have been kept reserved for reserved category … while computing the percentage of reservation he will be deemed to have been admitted as a open category candidate and not as reserved category candidate.”

In a Delhi High Court judgment of April 29, 2003, the division bench made the following observation: “The decision of the Apex Court in Rithesh. R. Shah’s case (supra) as also the proviso to rule 16 clearly prohibit deprivation of the benefit of the reservation only because some reserved category candidates had also been selected on merit inasmuch as they were not to be treated as reserved category candidates except for a limited purpose, namely, for the purpose of allocation of service, but thereby OBC candidates cannot be deprived of their right to obtain allocation of any service.”

The interesting question arises: who is perpetuating reservation? If people from the SCs, STs, and OBCs get representation according to their population, the scheme of reservation will come to an end. But who is depriving the meritorious from getting jobs as general category candidates?

(The author, a Member of the Rajya Sabha, is president of the Janata Dal (United) and a former Union Minister. He was educated to be an electrical engineer.)


READ THIS TOO: http://www.hindu.com/2006/07/10/stories/2006071002871002.htm









R







Pathivu Toolbar ©2005thamizmanam.com


Jul 09 2006 10:19 am Uncategorized
10 Responses
iraamaki Says:
July 9th, 2006 at 11:51 am
அருமையான கட்டுரை. கட்டுரை ஆசிரியர் நேர்த்தியாக அலசுகிறார். வழக்கம் போல் இதையும் கிண்டல் செய்து தூக்கி எறியத்தான் பலரும் முயலுவார்கள். மாற்றம் என்பது மனத்தில். அது என்றைக்கு வருகிறதோ, அன்றுதான் இந்தியா மாறும்.

அன்புடன்,
இராம.கி.

தருமி Says:
July 9th, 2006 at 3:51 pm
இராம.கி. அவர்களுக்கு
உங்களோடு சேர்ந்து நானும் கட்டுரை ஆசிரியருக்கு என் பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

//மாற்றம் என்பது மனத்தில்.// - ஆனால், கனியாத காயை, கனிய மறுக்கும் காயைக் கையில் வைத்துக்கொண்டு என்ன செய்வது?

kpd Says:
July 10th, 2006 at 4:09 am
wow…no words to say. it takes a damn criminal mind to tweak the system like this. people do this practice should striped of their post and should be investigated on par with hawala or bofors. do you know what’s the govt and court stand on this practice?

kalvetu Says:
July 10th, 2006 at 8:57 am
//ஆனால், கனியாத காயை, கனிய மறுக்கும் காயைக் கையில் வைத்துக்கொண்டு என்ன செய்வது//
sad and true (((

தருமி Says:
July 10th, 2006 at 9:18 am
do you know what’s the govt and court stand on this practice? //

no idea kpd. i know only my stand: we should do something about such injustice - that too, before the beginning of next academic year.

Sivabalan V Says:
July 10th, 2006 at 9:30 am
தருமி சார்,

நல்லதொரு பதிவு.

இக்கட்டுரையை எழுதிய ஆசிரியருக்கும் மிக்க நன்றி.

உங்களுக்கும் என் நன்றி.

//In the interviews they have been given fewer marks because people in the interview board know their caste.//

இவர்களை பேசாமல் சுட்டு கொன்றுவிடுவதுதான் நல்லது.

மிகப் பெரிய சக்தியுடன் பெரியதொரு புரட்சி செய்தால் ஒழிய இவர்களை ஒன்றும் செய்யமுடியாது.

அய்யா நடுநிலை கனவான்களே, இக்கட்டுரையை கொஞ்சம் படியுங்க.. தெ(ளி)ரிந்துகொள்ளுங்கள்.

selvanayaki Says:
July 10th, 2006 at 11:27 am
இதை இங்கு படிக்கத் தந்தமைக்கு நன்றி.

kpd Says:
July 15th, 2006 at 8:11 pm
/*no idea kpd.*/
I belive, if it’s taken to court, it will be severly condemned and this practice would be stopped. Reason is, you don’t even need an argument for this case, the practice it self explains all it’s wrong doings. Not to mention, this should be already in court I guess(hope).

As a author of this blog article, if (time permits) you can do a little research on the follow-up events on this and collect in one place(here), it will complete(complement) your effort.

Thanks.

தருமி Says:
July 16th, 2006 at 11:35 am
kpd,
thanks for the motivation. let me see…

Sivabalan V Says:
August 18th, 2006 at 10:12 pm
தருமி அய்யா,

உங்களின் இந்தப் பதிவை என் பதில் இனைத்தமைக்கு மிக்க நன்றி.