Tuesday, June 21, 2005

19. மன்னிக்கணும்..மன்னிக்கணும்..

மன்னிக்கணும்..மன்னிக்கணும்..பல பேர் என் வலைக்குவந்து புதிய பதிவுகள் இல்லாம
ஏமாந்து திரும்பியதாக தகவல். (லஷ்மி/ அவ்வை..இது எப்படி?) மன்னிக்கணும்..மன்னிக்கணும்.

இதுக்குத்தாங்க, என்னைமாதிரி கம்ப்யூட்டர் கத்துக்குட்டிகளுக்காகவே ஒரு correspondence course நடத்திட்டு அதுக்குப்பிறகுதான் வலையில் சேரணும்னு - முடிஞ்சா ஒரு entrance exam வச்சு, அதுக்குபிறகு அதை cancel பண்ணிட்டு, ஒரு/பல சாரள முறையில் நேர்காணல் வைத்து... - முடிவு பண்ணனும். ஏன்னா இப்ப பாருங்க, எங்க ஊரை விட்டு சென்னைமாநகரம் வந்தேன் (ஐயோடா, தருமி பற்றி கொஞ்சம் சொல்லித்தொலைச்சிட்டேனே..) . மகள் வீட்டுக்கு (மறுபடியும், தப்பா வயசு சொல்லிட்டேனே, போகுது போங்க) கம்ப்யூட்டரில் எனக்குத் தெரிந்தவரை முட்டி மோதி நானும் என்னென்னவோ பண்ணிப்பார்த்தேன். ஹு..ஹும்..என் பாச்சா பலிக்கலை. சரி, ஆபத்பாந்தவா அப்டின்னு திரு. பத்ரிக்கு ஒரு மெயில் அடித்து, அவர் செல் எண் வாங்கி, காரில் போய்க்கொண்டருந்தவரைப் பிடித்து, ஒரு tinkle கொடுத்தேன். சும்மா சொல்லக்கூடாது...ஒவ்வொன்றாக சொன்னார். நல்ல பொறுமை. எனக்கே புரியும்படி சொல்லிக்கொடுத்தார்னா பார்த்துக்கங்களேன். (மறுபடியும், மிக்க நன்றி பத்ரி).

ஆனாலும், மீண்டும் XP-க்காகக் காத்திருந்து...இப்போதான் ஒருவழியா மறுபடியும் என் வலைக்குள் மீண்டும் நுழைகிறேன். ( அது யாரு அங்கே, 'கஷ்டம்டா, சாமி'ன்னு'
சொல்றது? இதான வேண்டாங்றது.)

பி.கு. இந்த இடைப்பட்ட வேளையில் ஒரு வாரத்திற்கு முன்பு எப்படியோ தட்டுத் தடுமாறி 'விருந்தினர் வரவு எண்ணிக்கையை' உள்ளே சேர்த்துவிட்டேன். அப்படியே ஒரு கடிகாரத்தையும் சேர்க்க முற்சித்தேன். இதுவரை முடியவில்லை. பார்ப்போம்..

No comments:

Post a Comment