Tuesday, May 30, 2006

160. இன்னொரு guinea pig - மதுமிதாவிற்கு.

Image and video hosting by TinyPic

வலைப்பதிவர் பெயர்: G. Sam George
வலைப்பூ பெயர் : தருமி
சுட்டி(url) : http://dharumi.weblogs.us/

ஆங்கில வலைப் பூ: http://sixth-finger.blogspot.com
புகைப்படங்களுக்கான வலைப்பூ: http://singleclicks.blogspot.com/
ஆயினும் அளிக்கப்படும் தகவல்கள் என் தமிழ்ப்பதிவை அடிப்படையாகக் கொண்டவையே.

ஊர்: மதுரை
நாடு: நம் நாடுதான்.

வலைப்பூ அறிமுகம் செய்தவர்: அது ஒரு விபத்துதான்.(விபத்து எனக்கல்ல!)முதலில் பார்த்தது தேசிகனின் பதிவு. அதன் மூலம் மெரினா கடற்கரைப் பதிவர் கூட்டத்திற்கு ஆஜர். அங்கே கிடைத்த உந்துதல்.

முதல் பதிவு ஆரம்பித்த நாள்,வருடம் :24.04.05

இது எத்தனையாவது பதிவு:160

இப்பதிவின் சுட்டி(url):http://dharumi.weblogs.us/2006/05/30/225

வலைப்பூ ஏன் ஆரம்பித்தீர்கள்: கொஞ்சூண்டு மொழிக் காதல்; இத்தினிக்கூண்டு சமூக அக்கறை; அதோடு, 37 ஆண்டு ஆசிரியனாக இருந்து, நித்தம் நித்தம் பத்து ஐம்பது பேரை ஆடியன்ஸாக வைத்திருந்து, ஓய்வு பெற்றதும் ஏற்பட்ட ‘காலி இடம்’ — இம்மூன்றின் ஒட்டு மொத்தக் கூட்டுதான் பெருங்காரணி.

சந்தித்த அனுபவங்கள்:

சந்தோஷமான அனுபவங்கள்: (சின்னச் சின்ன வயது ஆட்களிடமிருந்தும்கூட) ஆச்சரியப்பட வைக்கும் தீர்க்கமான சிந்தனைகள்; ஆழமான அறிவு; மொழிப் பற்று; மொழி ஆளுமை.

வருத்தமான அனுபவங்கள்: படித்துப் பட்டம் மட்டுமின்றி பெருந்தொழிலில் இருப்பது மட்டுமின்றி, நல்ல அறிவிருந்தும் அதை அற்பவழியில் செலவிடும் பலரைப் பார்ப்பது.

பெற்ற நண்பர்கள்: நிறைய; ஆயினும் அந்த நண்பர்களில் மிகப்பலரும் (ஒரு சீனியர் பதிவாளர் அறிவுறுத்தியதுபோல்) out of sight out of mind என்பார்களே அதே போல் பதிவிட்டால் மட்டுமே இந்த நட்பு இருக்கும் என்ற நிலையில் இருப்பது ஒரு சோகம்.

கற்றவை: வலைப்பதிவர் உலகம் ஒரு microcosm. வெளியுலகத்தின் சிறு நகல். எல்லாவித மனிதக் குண நலன்களையும் இச் ‘சிறு வெளியில்’ பார்ப்பதே ஒரு தொடர்கல்விதான். முடிவில்லாதது.

எழுத்தில் கிடைத்த சுதந்திரம்: முழுசு. நினைத்ததை எழுதுகிறேன்.

இனி செய்ய நினைப்பவை: இதுவரை செய்ததையே மேலும் தொடருவது.

உங்களைப் பற்றிய முழுமையான குறிப்பு:
முழுமையாக இல்லாவிட்டாலும் ஓரளவு இங்கே…

இன்னும் நீங்கள் சொல்ல நினைக்கும் ஒன்றைச் சேர்க்கலாம்:
தமிழ்ப் பதிவுகள் இன்னும் முதிர்ச்சியடையவில்லை; இன்னும் தவழும் குழந்தைதான். ஆனால், இது வளர்ந்து சமுதாயத்தின் ‘நான்காவது தூணின்’ முக்கிய ஒரு பகுதியாக உயர்ந்து, சமூகத்தின் ‘thinking tank’ ஆக மாறும் நாள் விரைவில் வர பேராவல்.
நகைச்சுவைப் பதிவுகளும், மற்ற வித light hearted பதிவுகளே அதிகமாக வந்து கொண்டிருந்தாலும், சமூகத்தைப் பிரதிபலித்து - ஏன், அந்தச் சமூகத்தை வழி நடத்தவும் - தமிழ்ப் பதிவுகள் எல்லோராலும் உற்று நோக்கப்படும் காலம் வரவேண்டும். பேராசை இல்லையே?



if need be: http://i2.tinypic.com/1198htd.jpg







Pathivu Toolbar ©2005thamizmanam.com


May 30 2006 09:02 pm | Uncategorized |
49 Responses
பொன்ஸ் Says:
May 30th, 2006 at 9:22 pm
//அதோடு, 37 ஆண்டு ஆசிரியனாக இருந்து, நித்தம் நித்தம் பத்து ஐம்பது பேரை ஆடியன்ஸாக வைத்திருந்து, //

என்ன சொல்லிக் கொடுத்தீங்க? உங்க வகுப்பில் படிக்கலையேன்னு இருக்கு இப்போ

//சமூகத்தைப் பிரதிபலித்து - ஏன், அந்தச் சமூகத்தை வழி நடத்தவும் - தமிழ்ப் பதிவுகள் எல்லோராலும் உற்று நோக்கப்படும் காலம் வரவேண்டும்//
சீக்கிரம் வந்துவிடும் என்று நினைக்கிறேன்

Prasanna Says:
May 30th, 2006 at 10:25 pm
///(சின்னச் சின்ன வயது ஆட்களிடமிருந்தும்கூட) ஆச்சரியப்பட வைக்கும் தீர்க்கமான சிந்தனைகள்; ஆழமான அறிவு; மொழிப் பற்று; மொழி ஆளுமை.////
என்னத் தான சொன்னீங்க, பேர சொல்லியே சொல்லி இருக்கலாமே
உண்மைய சொல்லணும்னா, உங்க கிட்ட இருந்து நான் நிறைய கத்துக்குறேன், உங்க மாணவர்கள் குடுத்து வைத்தவர்கள். நீங்கள் உங்கள் ஆசிரியர்களை நினைவு கொள்வது போலவே அவர்கள் நினைவில் நீங்க எப்பவுமே இருப்பீங்க.
பிரசன்னா

D the Dreamer Says:
May 31st, 2006 at 8:32 am
//ஆயினும் அந்த நண்பர்களில் மிகப்பலரும் (ஒரு சீனியர் பதிவாளர் அறிவுறுத்தியதுபோல்) out of sight out of mind என்பார்களே அதே போல் பதிவிட்டால் மட்டுமே இந்த நட்பு இருக்கும் என்ற நிலையில் இருப்பது ஒரு சோகம்//

அருமையாக சொல்லியிருக்கீங்க தருமி.

துளசி கோபால் Says:
May 31st, 2006 at 10:12 am
out of sight out of mind இல்லை என்று நிரூபிக்க இந்தப் பின்னூட்டம்னு வச்சுக்கலாமா?

தருமி Says:
May 31st, 2006 at 10:29 am
out of blog…out of mind என்ற நடைமுறைத் தத்துவத்தை எனக்கருளிய சீனியர் பதிவாளர் துளசி,

நீங்களே உங்கள் தத்துவத்தைப் பொய்யாக்க எவ்வளவு முயற்சி எடுக்க வேண்டியதிருக்குது; பாத்தீங்களா?
(இருந்தாலும் நம்ம என்ன அப்டியா பழகியிருக்கோம், மறந்திர்ரதுக்கு )

தருமி Says:
May 31st, 2006 at 10:31 am
D the Dreamer,
நானாங்க அத சொன்னேன். சொன்னது துளசி. ஆனா, நச்சுன்னு மனசில பதிய வச்சுக்கிட்டேன்.

தருமி Says:
May 31st, 2006 at 10:37 am
ப்ரஸ்,
“என்னத் தான சொன்னீங்க, பேர சொல்லியே சொல்லி இருக்கலாமே..” // நினப்புதான பொழப்ப கெடுக்குது. ஆமா, என்ன இப்ப ஆளே இந்தப் பக்கம் காணோம்? ஓ! out of blogging….blah..blah…இல்ல?

“அவர்கள் நினைவில் நீங்க எப்பவுமே இருப்பீங்க.” அது தெரியும். ஆனா எப்படின்னு தெரியலை. ஒரே ஒரு மாணவன் இந்தப் பக்கம் வந்துகிட்டு இருந்தான். நல்ல வேளை!
இப்போ ஆராய்ச்சியின் கடைசிக் கட்டத்தில ரொம்ப பிஸியா ஆய்ட்டான். இல்லன்ன வந்து உண்மையையெல்லாம் புட்டு புட்டு வச்சிருப்பான்; பொழச்சேன்.

தருமி Says:
May 31st, 2006 at 10:40 am
உங்க வகுப்பில் படிக்கலையேன்னு இருக்கு இப்போ”// அந்த அளவு எனக்கு நல்ல ‘வாய்ஸ்’கிடையாது - lullaby பாடறதுக்கு!

//சமூகத்தைப் பிரதிபலித்து - ஏன், அந்தச் சமூகத்தை வழி நடத்தவும் - தமிழ்ப் பதிவுகள் எல்லோராலும் உற்று நோக்கப்படும் காலம் வரவேண்டும்//
சீக்கிரம் வந்துவிடும் என்று நினைக்கிறேன் “//
சீக்கிரம் வந்துவிடும் அப்டின்னு சொல்லிட்டி அப்புறம் என்ன ஒரு ஸ்மைலி

D the Dreamer Says:
May 31st, 2006 at 10:40 am
//சொன்னது துளசி//

துளசி அக்கா நன்றி

//நச்சுன்னு மனசில பதிய வச்சுக்கிட்டேன்//

நானும். With due thanks to you

pattanathu rasa Says:
May 31st, 2006 at 10:58 am
I got into the blogs through your chain essays about GOD. I always say to me “I will get the best” and So I. Thanks to you sir. though i don’t give the best

thanu Says:
May 31st, 2006 at 4:19 pm
//பதிவிட்டால் மட்டுமே இந்த நட்பு இருக்கும் என்ற நிலையில் இருப்பது ஒரு சோகம்.//hope this is not applicable to me. u will be horrified by my kadi SMS!!!
(soory for english comment. in delivery room, no tamil software in laptop)

thanu Says:
May 31st, 2006 at 4:20 pm
hw cme my cme comes immediately without moderation!!!

TheKa Says:
May 31st, 2006 at 6:37 pm
தருமி,

என்னாத்தா சொல்றது. கலக்கீபுட்டீங்க. நியாயமான ஆசைகளை முன் வைத்திருக்கிறீர்கள்… நிறைவேறும் காலம் வெகு தொலைவில் இல்லை, நம் முகத்திரையை அகற்றி சற்றே பரந்த மனப் பாங்குடன் விசயங்களுடன் காணும் பொருட்டு .

ஆமா, நீங்க மீன் கொத்தி எல்லாம் அருந்துவது உண்டா ? அப்படிப் பட்ட prof களுடன் மட்டுமே hangout பண்ணுவதில் quality time கிடைத்ததாக கருதுபவன் அடியேன்… இல்லென்னா நான் உங்க வகுப்பிலிருந்து டிமிக்கு கொடுத்துவிட்டு விஜய் படம் பார்க்க சென்றுருப்பேன்…

தருமி Says:
May 31st, 2006 at 7:54 pm
பட்டணத்து ராசா,
நம்ம ‘கடவுள்’ சீரியலுக்கு இப்படி ஒரு ‘மரியாதையா’? யாருக்குத்தான் best கொடுக்க முடியும்? ஒன்றுக்குஅடுத்து அடுத்து betterஆக கொடுத்தா போதாதா?

Sivabalan V Says:
May 31st, 2006 at 7:56 pm
// பேராசை இல்லையே? //

நிச்சயம் பேராசையில்லை..

நிறைவேறும்..

தருமி Says:
May 31st, 2006 at 8:29 pm
தாணு,
உங்க வார்த்தைகள் கேட்கவே சந்தோஷமா இருக்கு.
பதில் ‘கடி’கள் எப்படியிருக்கு?

sorry for english comment. in delivery room, no tamil software in laptop :

வேலைத்தளத்தில் இருந்தேவா? பரவாயில்லை..ஒரே கல்லில் ரெண்டு மாங்காய் ஓ! sorry, ஒரே room-ல் ரெண்டு deliveryயா

தருமி Says:
May 31st, 2006 at 8:37 pm
// அப்படிப் பட்ட prof களுடன் மட்டுமே hangout பண்ணுவதில் quality time கிடைத்ததாக கருதுபவன் அடியேன்…//
- இதில பெரிய உண்மையே இருக்கிறது மாதிரி இருக்கே

“நீங்க மீன் கொத்தி எல்லாம் அருந்துவது உண்டா ?”//
ச்சீ..ச்சீ..மீன் கொத்தியா? அதெல்லாம் சின்னப் —- சாப்பிடுறதில்ல.. (கொத்ஸ், கால்கரி சிவா நான் ஒண்ணும் உங்கள சொல்லலை’பா …”நாங்கெல்லாம் அரசம்பழத்திற்கே படுக்கும் ஆள்” )
ஜானி நடையர், ராஜ சலாம்..இப்படி. இல்லைன்னா தங்க
பை ஊதுக்காரன் -இதுகதான் சரியா வரும். மீன்கொத்தியில ரொம்ப calories இருக்குல்லா அப்டின்னு சொல்லிடறது. நாங்கல்லாம் ரொம்ப ‘கடினமான’ ஆளாக்கும்

பொன்ஸ் Says:
May 31st, 2006 at 8:39 pm
பாருங்க தருமி, போனமுறை இந்த பின்னூட்டம் முழுக்க தட்டி, உங்க பதிவில போட்டா மக்கர் பண்ணிடுச்சு.. ஆனாலும், ஒரு “அறிவுப் பூர்வமான ”விவாதத்தை விட்டுடக் கூடாதுன்னு திருப்பி தட்டிகிட்டு இருக்கேன்..

//பதிவிட்டால் மட்டுமே இந்த நட்பு இருக்கும் என்ற நிலையில் இருப்பது ஒரு சோகம்.//
இந்த வரிகள் எனக்கில்லைன்னு நினைச்சு வெளில போய்ட்டேன்..

ஆனா, எனக்கென்ன புரியலைன்னா, நீங்க என்ன சொல்ல வர்றீங்க? உங்க பதிவுல நான் பின்னூட்டம் போடறேன், நீங்க பின்னூட்டம் போட்டா, பதில் சொல்றேன்.. நான் மதுரை வந்தா பார்க்கலாம் இல்லை நீங்க சென்னை வந்தா, அதுக்கு மேலதிக தொடர்பில் இல்லைன்னா நட்பு இல்லைன்னு எப்படிச் சொல்றீங்க?

இப்போ என் நண்பர்கள் சிலர் இங்க இருக்காங்க.. அவங்களோட பேசி 4 வருஷம் கிட்ட ஆச்சு.. அவங்க ஊருக்கு வந்ததினால கூப்பிட்டுப் பேசினேன்.. பதிலுக்கு அவங்களும். அவ்வளவுதானே?!! இன்னும் தொடர்ந்த தொடர்பில்(continous contact) இருக்கணும்னா அது அல்டிமேட்லி, அரட்டைக் கச்சேரி ஆகிவிடாதா?

கல்யாணம், காதுகுத்துன்னா இருக்கவே இருக்கு, கூப்பிடப் போறோம்.. வேற என்ன சொல்லவர்றீங்க?

தருமி Says:
May 31st, 2006 at 9:44 pm
சிவபாலன்,
உங்கள் வார்த்தைகளைப் பார்க்க உண்மையிலேயே எவ்வளவு சந்தோஷமா இருக்கு தெரியுமா?

நிறைவேற்றிக் காட்டுங்கள். வாழ்த்துக்கள்.

SK Says:
May 31st, 2006 at 9:45 pm
பல நல்ல செய்திகளை, உங்களது மற்ற பதிவுகள் போலவே, இதிலும் தெரிந்து கொண்டேன். நன்றி!

தருமி Says:
May 31st, 2006 at 9:57 pm
பொன்ஸ்,
“இந்த வரிகள் எனக்கில்லைன்னு நினைச்சு வெளில போய்ட்டேன்.. “// இந்த வரிக்கு நன்றி.

உங்கள் மூன்றாவது பத்திக்கு நான் பதில் சொல்வதை விடவும் துள்சி சொன்னத சொல்றேனே. (அது நான் பதிய ஆரம்பித்த நேரம்): ” தருமி, நீங்க ஒரு ரெண்டு மூணு மாசம் எழுதலைன்னு வச்சுக்கங்க; யாரு, உங்கள தேடப் போறாங்க. எழுதுறது வரைக்கும் பின்னூட்டம் அது இதுன்னு தொடர்பு. அதுக்குப் பிறகு நினைவில இருந்து மெல்ல மறைஞ்சிர்ரதுதான் நடக்கும்” அப்டின்னாங்க.
இப்ப பாருங்க இருந்து காணாம போன சில ஆட்கள் எனக்கு நினைவுக்கு வர்ராங்க.தனிப்பட்ட உறவுன்னுகூட சொல்ல முடியாது. ஆனால் அடிக்கடி பதிவு, பின்னூட்டம்னு ‘சந்திச்சிக்கிட்டு’ இருந்தவங்க காணாம போனதும் தொடர்பு இல்லாமதான் போயிடுது.

எப்படியோ கல்யாணத்துக்கு அழைப்பு உண்டு அப்டிங்கிறத சொல்லிட்டீங்க. அதில கூட ஒரு தயக்கம் வந்திருது - நமக்கு அங்க யாரையும், அழைச்சவங்ககூட தெரியாதேன்னு.

பொன்ஸ் Says:
May 31st, 2006 at 10:13 pm
//அதில கூட ஒரு தயக்கம் வந்திருது - நமக்கு அங்க யாரையும், அழைச்சவங்ககூட தெரியாதேன்னு.
//
இருங்க தருமி.. நம்மூருக்கு வந்ததும், மதுரைக்கு ஒரு ட்ரிப் போட்டுர்றேன்,.. அதுக்குள்ளார, வெஜிடேரியனா ஏதாச்சும் சமைக்கக் கத்துக்கிடுங்க

Prasanna Says:
May 31st, 2006 at 10:13 pm
நினைப்பு தான் பிழைப்ப கெடுக்குதா??? அவசரப் பட்டேனோ??, அவுட் ஆஃப் பிளாக்கிங் எல்லாம் ஒண்ணும் இல்லைங்க, கொஞ்சம் ஆறப் போடலாமேன்னு தான்,
பிரசன்னா..

குமரன் (Kumaran) Says:
May 31st, 2006 at 11:35 pm
நல்ல பதிவும் நல்ல பின்னூட்டங்களும் இதுக்கு மேல நான் சொல்றதுக்கு என்ன இருக்கு? நடப்பதெல்லாம் நன்மைக்கே.

Padma Arvind Says:
June 1st, 2006 at 1:41 am
சும்மா என்னை மறந்து போகாம இருக்க

கால்கரி சிவா Says:
June 1st, 2006 at 2:02 am
சார்,

//“நீங்க மீன் கொத்தி எல்லாம் அருந்துவது உண்டா ?”//
ச்சீ..ச்சீ..மீன் கொத்தியா? அதெல்லாம் சின்னப் —- சாப்பிடுறதில்ல.. (கொத்ஸ், கால்கரி சிவா நான் ஒண்ணும் உங்கள சொல்லலை’பா …”நாங்கெல்லாம் அரசம்பழத்திற்கே படுக்கும் ஆள்” )
ஜானி நடையர், ராஜ சலாம்..இப்படி. இல்லைன்னா தங்க
பை ஊதுக்காரன் -இதுகதான் சரியா வரும். மீன்கொத்தியில ரொம்ப calories இருக்குல்லா அப்டின்னு சொல்லிடறது. நாங்கல்லாம் ரொம்ப ‘கடினமான’ ஆளாக்கும்//

நானும் “கடினமா” தான் இருந்தேன், சவூதிக்குப் போய் கடின ப் பழக்கம் விட்டுப் போய் கெட்டு விட்டேன்.

இப்போது தங்க லேபிளைக் கண்டவுடன் ஜொள்ளுகிறது. சாரி சார் உங்க கிட்டே போய் இதெல்லாம் பேசிக் கிட்டு.

சரி, என்னுடைய அப்பா என்னை அமெரிக்கன் கல்லூரியில் பி.யு.ஸி சேர்க்க இருந்தார். நான் என் நண்பர்களுடன் போய் சௌராஷ்ட்ராக் கல்லூரியில் சேர்ந்துவிட்டேன். அவர் அடிக்கடி அவருடைய நண்பர் அமெரிக்கன் கல்லூரியில் வேலை செய்வதாக கூறுவார். அது நீங்களாக இருக்குமோ? ஏனென்றால் என் தந்தை ரீகல் தியேட்டரில் சிறிது காலம் டிக்கட் கவுண்டரில் வேலை செய்துக் கொண்டிருந்தார். நீங்களும் அடிக்கடி ரீகல் தியேட்டருக்கு போனவர்.

அவரிடம் கேட்கலாமென்றால், அவரில்லை. போன டிசம்பரில் காலமாகிவிட்டார்

தருமி Says:
June 1st, 2006 at 9:29 am
ப்ரபா, அது ‘ராஜ சலாம்’ இல்லை…’ராஜ சவால்’

மஞ்சூர் ராசா Says:
June 1st, 2006 at 2:47 pm
அது என்னமோ தெரியலே எப்பவுமே ஆசிரியர் என்றாலே் ஒரு தனி மரியாதை தானாக வந்துவிடுகிறது. இப்பவும் உங்களெ நேரிலெ பாக்கலேன்னாலும் அந்த உணர்வு மனதிற்குள் எழுவது என்னமோ உண்மை.

இன்னொரு உண்மையெ சொல்லணும்னா இன்னிக்கி தான் இங்கே முதல் முதலா வந்திருக்கேன்னு நினைக்கிறேன்.

நல்ல பதிவாகத்தான் இருக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது. அனைத்தையும் கூடிய விரைவில் படித்துவிட்டு பின்னூட்டம் இடுகிறேன்.

ஆசிரியருக்கு வாழ்த்து சொல்லுவது மாணவனுக்கு அழகல்ல என்பதால், வணங்குகிறேன்.

நன்றி.

TheKa Says:
June 1st, 2006 at 10:51 pm
//நாங்கல்லாம் ரொம்ப ‘கடினமான’ ஆளாக்கும் //

பிட்டு பிட்டு வச்சுட்டீங்க… என்னொட முதல் சுற்று இண்டர்வியூ-ல நீங்க பாஸ்… இன்னும் வருது .

ஹைலைட் வந்து உங்களுடைய தமிழ் மொழிப் பெயர்ப்புகள் நெஞ்சாங் கூட்டை தொட்டது என்றால் மிகையாகது…

அப்படியே கொஞ்சம் மிச்ச சரக்குகளுக்கும் தமிழாக்கம் தேவை… மெழிச் சேவை பின்னால் ஆற்றுவதற்குகென … நீங்க வேற ஏன் சார் அப்படி என்னை பார்க்றீங்க…அடெ

இளவஞ்சி Says:
June 1st, 2006 at 11:23 pm
தருமிசார்,

//out of sight out of mind //

ப்ளாக் மட்டும் இல்லைங்க! வாழ்க்கை முழுசும் அப்படித்தான் போகுதோன்னு பயமா இருந்தாலும் தவிர்க்க முடியலை!

5 வருசமா அந்த நண்பனுக்கு ஒரு 20 மெயில் அனுப்பிச்சிருப்பேன்! அதுலையும் 15 பார்வேர்டு! 6 மாசம் முன்னாடி அவன் இங்க வந்தப்ப தடால்னு திரும்பவும் அதே நட்பு.. அதே பேச்சு.. அதே ப்ரீக்வென்ஸி… ஒரு வித்தியாசமும் தெரியலை! யோசிச்சா ஒன்னும் புரியலை! ஆனா இதுல தப்பு இருக்கறதாவும் தோணலை!

ஒருவரது இருத்தலின் இழப்பு இப்போதெல்லாம் பெரிய பாதிப்பை கோடுப்பதில்லை போல!

தருமி Says:
June 2nd, 2006 at 10:11 am
நன்றி SK.
கவலையே படாதீங்க SK. பிகிலு சொல்லியா நாம சண்டை போடப்போறோம். நம்ம என்ன அப்படியா பழகியிருக்கோம்??!!

தருமி Says:
June 2nd, 2006 at 10:19 am
“வெஜிடேரியனா ஏதாச்சும் சமைக்கக் கத்துக்கிடுங்க “//
இதுவரை மூன்று முறை செய்து முதல் முறை மட்டும் நன்றாகச் செய்து, அதன் மூலம் மோர்க்குழம்பு expert என்ற பெயர் வாங்கிய அதே குழம்பை எடுத்து உட்ருவோம். சரியா? இத்தனூண்டு நெத்தியில ஆண்டவன் எவ்வளவு எழுதியிருக்கான், பாத்தீங்களா? (அட்டா, இதை வெங்கட்ரமணியின் டாப்10 பதிவில போட்டிருக்கலாமே!)

தருமி Says:
June 2nd, 2006 at 10:21 am
பொன்ஸ்,
do we ‘miss’ anybody in Thamizmanam என்பதுதான் கேள்வி

தருமி Says:
June 2nd, 2006 at 10:27 am
ப்ரஸ்,
என்ன அதுக்குப் பிறகு சென்னை போனீங்களா? தங்கச்சிகிட்ட அடி வாங்கினீங்களா? ரகசியமா சொல்லுங்க..இங்க வந்து. நான் யார்ட்டயும் சொல்லலை. சரியா?
டெய்லர் சித்தப்புவைக் கேட்டதாகச் சொல்லவும்.

தருமி Says:
June 2nd, 2006 at 10:35 am
குமரன்,
உங்க ‘நல்ல′ பின்னூட்டத்தில் ஸ்மைலிகளாகப் போட்டு, அந்த ‘நல்ல′ என்பதைக் கேள்விக்குரிய விஷயமாக்கி விட்டீர்களே

அதோடு இன்னொரு விஷயம். கேக்கணும்னு ரொம்ப நாளா நினச்சிக்கிட்டு இருந்த விஷயம். இந்த ‘விஷயம் / விடயம்’ பற்றி ‘ஒரு சொல்’ பதிவு ஏதும் போட்டிருக்கிறீர்களோ? தேடிப்பார்த்தேன். வேஷ்டிதான் கிடச்சுது; விஷயம் கிடைக்கலை லின்க் இருந்தால் கொடுங்களேன்.

தருமி Says:
June 2nd, 2006 at 10:37 am
பத்மா,
தாணு, துள்சி, பொன்ஸ் அவர்களுக்குச் சொன்னது மாதிரி - கேட்க சந்தோஷமா இருக்கு.
உங்களிடம் கேட்க வேண்டிய கேள்வி இன்னும் ரெடி பண்ணவில்லை; வெறுமனே அசைமட்டும் போட்டுக் கொண்டிருக்கிறேன். மறக்கவில்லை. வருகிறேன் சீக்கிரம்.
நன்றி.

தருமி Says:
June 2nd, 2006 at 10:41 am
கால்கரி சிவா,
அப்பாவைப் பற்றி எழுதியிருப்பது..sorry about it siva. நீங்க அப்போ எங்கே இருந்தீங்க? should have been a hard time.

தருமி Says:
June 2nd, 2006 at 10:46 am
கால்கரி சிவா,
அமெரிக்கன் கல்லூரியில் there was a big ‘tribe’ addicted to Regal theatre. mostly many of them were my seniors. ஒருவேளை அவர்களில் யாரேனும் இருக்கக் கூடும். ஏனெனில் எனக்கு முருகேசன் என்பவர் மட்டும் தெரியும்; அவர் தியாகராசர் கல்லூரியில் வேலைசெய்து, மாலை மட்டும் தியேட்டருக்கு வருவார் பகுதி நேர வேலைக்கு.

“சவூதிக்குப் போய் கடினப் பழக்கம் விட்டுப் போய் கெட்டு விட்டேன்.”//
-வாழ்க்கையில “திருந்துங்கப்பா”!

{நான் இப்படி எழுதுறது சரியா? தப்பா?…எனக்குத் தெரியலையேப்பா! (நாயகன்..?) }

தருமி Says:
June 2nd, 2006 at 10:53 am
மஞ்சூர் ராசா,
welcome.
you make me feel terribly guilty. உங்க மரியாதைக்கு எனக்குத் தகுதி இருக்கான்னு தெரியலை. வேண்ணா இதுக்கு மேல் உள்ள பின்னூட்டம் பாருங்களேன். திருத்த வேண்டிய வாத்தியார்…இப்படி..?!

“நல்ல பதிவாகத்தான் இருக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது. அனைத்தையும் கூடிய விரைவில் படித்துவிட்டு பின்னூட்டம் இடுகிறேன்.”//
எதற்கும் படித்துவிட்டு கருத்து சொல்லுங்கள்; ஆவலோடு காத்திருக்கிறேன். மரியாதை உணர்வோடு படிக்க ஆரம்பிக்கும் ஒருவருக்கு என் எழுத்துக்கள் என்ன தாக்கம் உண்டு பண்ணுகிறது என்று அறிய ஆவல்.
வணக்கம் எல்லாம் சொல்லி அந்நியப் படுத்தணுமா?

தருமி Says:
June 2nd, 2006 at 10:58 am
தெக்கிஸ்,
ஆஹா நான் பாசாயிட்டேன்
அடுத்த ‘ரவுண்ட்’ -i mean அடுத்த சுற்று இண்டர்வியூ எப்போ? நான் ரெடி..அப்போ நீங்க..?

தருமி Says:
June 2nd, 2006 at 11:12 am
“இருத்தலின் இழப்பு இப்போதெல்லாம் பெரிய பாதிப்பை கொடுப்பதில்லை போல!”// அப்டியா சொல்றீங்க, இளவஞ்சி. ஒருவேளை நான் இன்னும் கொஞ்சம் சென்டியான ஆளோ? நல்லா நட்போட இருந்த பதிவர் திடீர்னு கண்டுக்கலைன்னா என்னமோபோலதான் இருக்கு.

“வாழ்க்கை முழுசும் அப்படித்தான் போகுதோன்னு …”//
நீங்க சொல்றதுமாதிரிதான் வாழ்க்கையும். ஆனா என்ன, ப்ளாக்கில ஒரு சில வாரங்கள்ல இந்த மாற்றம் ஏற்படுது; வாழ்க்கையில சில வருஷங்கள். அதனாலதான் இப்பதிவில் பதிவுலகம் ஒரு microcosm என்று சொன்னேன்.

உங்க இந்த மதுமிதா பதிவுக்காகக் காத்துக்கிட்டு இருக்கேன். ரொம்ப வித்தியாசமா இருக்கும்; தெரியும்.

குமரன் (Kumaran) Says:
June 2nd, 2006 at 3:42 pm
ஐயா. நான் போட்ட சிரிப்பான்கள் எல்லாம் நக்கல் சிரிப்பான்கள் இல்லை. புன்சிரிப்பான்கள். தப்பா நினைச்சுக்காதீங்க.

விஷயம் என்ற சொல்லைப் பத்தி பின்னூட்டங்கள்ல மக்கள் பேசியிருக்காங்க. தனிப் பதிவா இல்லை. இனிமே போடறேன். விஷயம் என்பதற்குப் பதிலாக செய்தி, சங்கதி, சேதி, விடயம், விதயம் என்று இடத்திற்குத் தகுந்தாப்ல பயன்படுத்திக்கலாம்.

Balamurugan Says:
June 2nd, 2006 at 5:37 pm
நல்ல அறிவு இருந்தாலும் அற்ப வழியில் செலவு செய்யறதுன்னு சொன்னா என்ன அர்த்தம் பெரியவரே? நடிகர்களை ஒப்பிட்டு நீங்க எழுதினது எல்லாம் கிடையாதுதானே?

வாழ்க்கையில “திருந்துங்கப்பா”!

பொன்ஸ் Says:
June 2nd, 2006 at 7:10 pm
//do we ‘miss’ anybody in Thamizmanam //

//“இருத்தலின் இழப்பு இப்போதெல்லாம் பெரிய பாதிப்பை கொடுப்பதில்லை போல!”//

வாத்தியார் சொல்வது உண்மைதான்.. இதப் பத்தி இன்னும் கொஞ்சம் கருத்தும் இருக்கு.. இங்க விவாதிக்கலாம்னா ..க்கலாம்..

இருங்க வரேன்..

தருமி Says:
June 2nd, 2006 at 7:32 pm
குமரன்,
அந்த விஷயத்தை ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள். ஏனெனில் ஏற்கெனவே இதைப் பற்றி நான் ஒரு பதிவு போட்டேன். விளக்கங்களை எதிர்பார்க்கிறேன்.

தருமி Says:
June 2nd, 2006 at 7:35 pm
பொன்ஸ்,
அது ‘don’t we miss people in Thamizmanam என்றிருந்திருக்க வேண்டும்.

க்கலாம்; …ங்க!

தருமி Says:
June 2nd, 2006 at 7:38 pm
சின்னவர் பாலமுருகரே,
உங்கள் உள்குத்து புரியுது.
‘அற்ப வழியில்’ என்பதை ‘கேவலமான வழியில்’ என்ற பொருளில் கொள்க.

கமல் Says:
June 22nd, 2006 at 8:22 pm
//படித்துப் பட்டம் மட்டுமின்றி பெருந்தொழிலில் இருப்பது மட்டுமின்றி, நல்ல அறிவிருந்தும் அதை அற்பவழியில் செலவிடும் பலரைப் பார்ப்பது.//

100% சரி. சிந்திக்கத் தெரிந்த ஒவ்வொருவரையும் வருத்தப்பட வைக்கும் விஷயம். குறைந்த பட்சம் நம்மைச் சுற்றி உள்ளவர்களுக்காவது புரிய வைக்க வேண்டியது நம் கடமை.

//பதிவிட்டால் மட்டுமே இந்த நட்பு இருக்கும் என்ற நிலையில் இருப்பது ஒரு சோகம்.//

அப்படி ஒரேயடியாகச் சொல்லிவிட முடியாது சார்! இந்த விஷயத்தில் பொன்ஸ்-ன் கருத்துதான் என்னுடையதும்.

//இன்னும் தொடர்ந்த தொடர்பில்(continous contact) இருக்கணும்னா அது அல்டிமேட்லி, அரட்டைக் கச்சேரி ஆகிவிடாதா?//

கடந்த இரண்டு மூன்று வாரங்களாக இணைய இணைப்பை மாற்றியது மற்றும் இந்தியப் பயணம் போன்ற காரணங்களால் தமிழ்மணம் பக்கம் வர முடியவில்லை. அதற்காக, உங்களை மறந்து விட்டேன் என்று அர்த்தமா? ஊருக்கு வந்தபோதுகூட உங்களையும் தாணுவையும் சந்திக்க வேண்டும் என நினைத்திருந்தேன். ஒரே ஒரு வாரம் மட்டும் இருந்ததால் முடியவில்லை. அடுத்தமுறை முயற்சி செய்கிறேன். ஊரிலிருந்தபோதுகூட, உங்களின் மதங்களைப் பற்றிய பதிவுகளைப் பற்றி ஆர்.எஸ்.எஸ் ஆதரவாளரான என் நண்பரிடம் பேசிக்கொண்டிருந்தேன். கிறிஸ்தவ/இஸ்லாமிய மதங்களை யாரும் கேள்வி கேட்பதில்லை என்ற அவரது வழக்கமான குற்றச்சாட்டுக்கு, தங்களின் பதிவை உதாரணமாகக் கூறினேன். உடனே, ‘அவர் ஓய்வு பெற்றதால்தான் அப்படி எழுத முடிகிறது. பணியிலிருக்கும்போது எழுதியிருந்தால் என்ன ஆகியிருக்கும் தெரியுமா?’ என்றார். எதற்கெடுத்தாலும் ஒரு ஊகத்தை பதிலாகச் சொன்னால் என்னதான் செய்யிறது? இப்படியே இருங்கன்னு விட்டுட வேண்டியதுதான்.

நன்றி
கமல்

தருமி Says:
June 23rd, 2006 at 1:29 am
kamal,
“அடுத்தமுறை முயற்சி செய்கிறேன். ” முயற்சியெல்லாம் வேண்டாம். just make it possible.

ungkaL RSS நண்பரிடம் சொல்லுங்கள்: எங்கள் கல்லூரியில் சில ஆசிரியர்கள் open house என்று ஓர் அமைப்பை வைத்திருந்தோம். யார் வேண்டுமானாலும் எதைப்பற்றியும் பேசலாம். அதன்பின் அக்கருத்துக்களின் மேல் விவாதங்கள் நடைபெறும். அப்படிப்பட்ட அமைப்பில் நான் அரங்கேற்றியதே இந்த மதம் பற்றிய எனது கருத்துக்கள். அன்றுதான் நானே என்னை முதல் முதலாக ஒரு நாத்திகன் என்று நினைக்கத் தொடங்கினேன்.கிறித்துவத்தைப் பொருத்து நான் எழுதியுள்ள என் கருத்துக்கள் அன்று விவாதத்திற்கு உட்படுத்தப்பட்டன. இன்று எழுதியுள்ளவைகள் இன்னும் கொஞ்சம் ஆழப்படுத்தப் பட்டுள்ளன. அவ்வளவே.

எங்கள் கல்லூரி தனக்கென சில வேறுபட்ட பாரம்பரியங்களைக் கொண்டது என்ற பெருமை எனக்குண்டு.

No comments:

Post a Comment