Saturday, May 06, 2006

158. சின்னத்திரை இயக்குனர்களுக்கு…

Image and video hosting by TinyPic



G.K.Chesterton எழுதிய ‘On reading habit” என்ற கட்டுரை என்று நினைக்கிறேன். வாசிக்கும் பழக்கம் எவ்வளவு நல்லது என்று கூறும்போது, தற்கொலை செய்துகொள்ளப் போகும் ஒருவன் திடீரென தான் வாசித்துவரும் தொடர்கதையில் கதாநாயகிக்கு அடுத்த வாரம் என்ன ஆகும் என்ற நினைப்பு வந்ததும், ‘சரி, அதைப் படித்துவிட்டு பிறகு தற்கொலை செய்து கொள்ளலாமென நினைத்துத் திரும்பிவிடுவான் என்று எழுதுவார். நம்ம ஊரு சின்னத்திரை மெகாசீரியல்கள் எடுக்கும் இயக்குனர்கள் இதே போல எத்தனை எத்தனை தற்கொலைகளைத் தடுத்துள்ளனரோ, யாருக்குத் தெரியும். இதையெல்லாம் புரிந்து கொள்ளாமல் அவர்களைப் பற்றியும் அவர்கள் எடுக்கும் சீரியல்கள் பற்றியும் மக்கள் நிறைய பேருக்கு கிண்டலும் கேலியும். நியாயப்படி அவர்களை நம் சமுதாயம் தனிப்பட்ட முறையில் கெளரவிக்க வேண்டும்.



இப்போ பாருங்க, நடக்கப்போற தேர்தலில் ஒரு கட்சி நாங்கள் வென்றால் கலர் டிவி தருவதாக வாக்களித்துள்ளார்கள். அது மட்டும் நடக்கட்டும்; எத்தனையோ பிரச்சனைகள் தீர்ந்து விடும்! இரவுகளில்தான் முக்கிய மெகா சீரியல்கள் நடக்கும். எல்லோரும் சீரியல்கள் பார்க்க ஆரம்பித்துவிட்டால் இரவு சாப்பாடுபற்றி யார் கவலைப்படப் போகிறார்கள்? மெகா சீரியல்களில் இப்போதே சகுனம், சாத்திரம், ஜாதகம், தலையெழுத்து போன்ற நல்ல விஷயங்களை கதைகளில் சொல்லுகிறார்கள். இனி அவைகளை இன்னும் கொஞ்சம் ஏற்றிச் சொன்னால் மக்கள் ‘எல்லாம் நம் தலைவிதி’ என்ற தத்துவத்தில் தங்கள் சுக துக்கங்களை ஏற்றுக்கொள்ள மாட்டார்களா என்ன? இத்துணை நல்ல விஷயங்களை நமது மெகா சீரியல்கள் மூலமாக நடைப்படுத்த நம் சின்னத்திரை இயக்குனர்கள் நிச்சயமாக முனைவார்கள் என்பதில் எனக்கு ஒரு சின்ன எபிசோடு அளவுகூட சந்தேகமேயில்லை!



இவ்வளவு நல்லது செய்யும் நம் சீரியல் இயக்குனர்களுக்கு நான் ஒரு சில டிப்ஸ் கொடுக்க நினைக்கிறேன்; சில கேள்விகளும்தான். அதற்கு முந்தி எனக்கு இந்த சீரியல்களில் வரும் நடிக, நடிகையர்கள் பெயரெல்லாம் தெரியாது. ராதிகா, தேவயானி இவர்கள் பெயர்தான் தெரியும். மற்றவர்களைப் பற்றிப் பேச அவர்கள் நடிக்கும் ரோல்களை வைத்துதான் சொல்ல முடியும். அதென்னமோ தெரியவில்லை, நம் சீரியல்களில் வரும் ‘திருமுகங்கள்’ எப்படி தேர்ந்தெடுக்கப் படுகிறார்கள் என்றே தெரியவில்லை. நமது இயக்குனர்களுக்குள்ள aesthetic sense அவ்வளவுதானா என்பது ஒரு பெரிய கேள்விக்குறி. மெட்டிஒலியில் ஒரு பெரிய பெண் பட்டாளம்; அதில் சகோதரிகளாக வந்த நடிகைகள்(முதல் மகள் தவிர) + மாணிக்கத்தின் தங்கை+மாணிக்கத்தின் தம்பியைத் திருமணம் செய்த பெண்+ பின் காதலித்த பெண் - இவர்களையெல்லாம் எப்படி தேடிப்பிடித்தார்கள் என்று எனக்கு சந்தேகம். அதில் பெரிய ஆச்சரியம் அதில் பெரும்பாலோர் புதிய பல சீரியல்களில் வருவதுதான். கொஞ்சம் அழகானபெண்களுக்கு அவ்வளவு பஞ்சமா, என்ன? அல்லது அழகான பெண்ணாக இருந்தால் கொஞ்ச நாளில் தற்கொலை செய்து கொள்கிறார்களா? (சமீபத்தில் தற்கொலை செய்து கொண்ட இரு நடிகைகள் நன்றாகவும் இருந்தார்கள்; நன்றாகவும் நடித்தார்கள்; பாவம்) சரி, நடிகைகள்தான் இப்படி என்றால் நடிகர்கள் அதைவிடவும் மோசமாக இருக்கிறார்கள் - at least எனக்கு அப்படி தோன்றுகிறது. கோலங்களில் வரும் கதாநாயகனும், வில்லனும் - less said better for them. இதிலும்கூட விஜய் ஆதிராஜ் நன்றாகவும் நடித்து, பார்க்கவும் ஸ்மார்ட்தான்; ஆனால் ஆளே காணோம்! லிஸ்ட் போட்டால் நீண்டுகொண்டே போகும். இது ஒரு காதல் கதையில் முதலில் வந்த கதாநாயகனைப் பார்த்தது அய்யோடா என்று இருந்தது; ஆள் மாற்றினார்கள்; இப்போது பழைய ஆள் பரவாயில்லை என்று தோன்றுகிறது. இயக்குனர்களே, கொஞ்சம் அழகுணர்ச்சியோடு உங்கள் நடிக, நடிகையர்களைத் தேர்ந்தெடுங்களேன். எங்களை ரொம்பவும் சோதிக்கணுமா, என்ன?



என்னடா இவ்வளவு சீரியல்களை இந்த மனுஷன் பாத்துக்கிட்டு இருக்கானேன்னு தோணுமே. அதற்கும் நம் இயக்குனர்களுக்குத்தான் நன்றி சொல்லணும். ஒரு சீரியலை இரண்டு தடவை பார்த்துவிட்டு, பிறகு எத்தனை நாள் கழித்துப் பார்த்தாலும் கதை புரிகிறது. (அப்படி ஒன்று இருந்தால்தானே!) வெறும் சம்பவங்களின் தோரணங்களாகவே இருப்பதால் கதை எப்போதும் புரியும். இந்த அளவு திறமையோடு நம் இயக்குனர்கள் ‘கதை’களை நகர்த்திக் கொண்டு போகிறார்கள். இப்படியே இருங்க.



இன்னொண்ணு இந்த சகுனம், சோதிடம் என்று அந்த நம்பிக்கைகளை வளர்க்கிறது மாதிரி கதையைக் கொண்டு போகாதீர்கள் என்று சொன்னால் கேட்கவா போகிறீர்கள்; அதனால் அதைப் பற்றிப் பேசவில்லை. ஆனால், இந்த காட்சி அமைப்புகளில் வழக்கமாக வரும் ஒரு விஷயம்: ஒரே காமிராவை வைத்து படம் எடுப்பதலா இல்லை குறைந்த செலவில் எடுக்க முற்படுவதாலா எதனால் என்று தெரியவில்லை - உங்கள் சீரியல்களில் வரும் கேரக்டர்களில் ஒரு சீனில் மூன்று பேர் இருப்பதாக வைத்துக் கொள்வோம். பேசும் நபர் காமிராவைப் பார்த்துதான் பேசுகிறார்; அதாவது, ஆடியன்ஸைப் பார்த்து. பழைய நாடகங்களில் நடிக்கும்போது ஒரு பொது விதி சொல்வார்கள். ஸ்டேஜில் நடிகர்கள் தவறியும் ஆடியன்ஸுக்கு - - - க் காட்டக் கூடாது என்று.(முதுகைத்தான் சொன்னேன்!) அந்த ட்ராமா விதியை அப்படியே நமது சின்னத்திரை இயக்குனர்கள் கடைப்பிடிப்பது நல்ல வேடிக்கை. முக்கால்வாசி நேரங்களில் கதாபாத்திரங்கள் ஒருவரை ஒருவர் பார்த்துப் பேசுவதைவிடவும், ஆடியன்ஸைப் பார்த்துக்கொண்டு, மற்ற கதாபாத்திரங்களுக்கு - - - க் காட்டிக்கொண்டு பேசுகிறார்கள். நல்ல வேடிக்கையாக இருக்கிறது. இன்னொன்று கதாபாத்திரங்கள் அடிக்கடி தனக்குத்தானே பேசிக்கொள்வார்கள். நானும் வீட்டில் ஓரிரு முறை அதே மாதிரி முயற்சித்தேன்; மனைவி, மக்கள் என்னை ஒரு மாதிரியாகப் பார்க்க ஆரம்பித்துவிட்டார்கள். அதாவது ஆடியன்ஸுக்குப் புரிய வைக்க இப்படி ‘நோட்ஸ்’ போடுகிறார்கள்; ஆனாலும் ஆடியன்ஸ் அவ்வளவு மோசமா?



எது எப்படியோ, நீங்கள் உங்கள் வழியில், உங்கள் ரசனையில் கொண்டுபோய்க்கொண்டிருங்கள்; எங்கள் தலைவிதி உங்களைத் திட்டிக் கொண்டேகூட நாங்கள் உங்கள் சீரியல்களைப் பார்த்துக்கொண்டே இருப்போம்.







Pathivu Toolbar ©2005thamizmanam.com


May 06 2006 03:57 pm | ஊடகங்கள் and சினிமா |
83 Responses
முத்து(தமிழினி) Says:
May 6th, 2006 at 4:42 pm
//தவறியும் ஆடியன்ஸுக்கு - - - க் காட்டக் கூடாது என்று.(முதுகைத்தான் சொன்னேன்!) //

கட்சியில் சேர்ந்தவுடன் வெற்றிக்கொண்டான் பாணியா… வீரப்பன் பழனியில் _ _ _ நோண்டியது கதை தெரியுமா?

//அடிக்கடி தனக்குத்தானே பேசிக்கொள்வார்கள். நானும் வீட்டில் ஓரிரு முறை அதே மாதிரி முயற்சித்தேன்; மனைவி, மக்கள் என்னை ஒரு மாதிரியாகப்//

தண்ணி அடிச்சிட்டு வீட்டுக்கு போனா மேல பார்த்து கீழே பார்த்து திரும்பி நின்னு பேசுவாங்களே..

அய்யா..அழகு இல்லாத ஆட்களை டிவியில் போடுவது ஒரு உளவியல் அணுகுமுறை..மக்களுக்கு ஒரு நெருக்கம் வருணும் இல்லையா?

Sivabalan Says:
May 6th, 2006 at 8:27 pm
//தற்கொலைகளைத் தடுத்துள்ளனரோ// may be!

//aesthetic sense // Wow!! One simple word about Serial Directors.

//அப்படி ஒன்று இருந்தால்தானே// It is true!!

Good Blog! Keep up!!

தருமி Says:
May 6th, 2006 at 8:46 pm
கட்சியில் சேர்ந்தவுடன் வெற்றிக்கொண்டான் பாணியா… //
- அது ஒண்ணும் இல்லை தமிழினி! நம்ம டைரடக்கர் ஒருத்தர் அந்தக் காலத்தில நாங்க எல்லாம் ட்ராமா ஆர்ட்டிஸ்ட்டுகளா ‘கொடிகட்டிப் பறந்த போது’ அப்படி அவரை சொல்ல வைக்கிறதுக்காகவே நாங்க ரிகர்சல்களில் - - - க் காட்டுறது உண்டு. பழைய நினைப்புடா பேராண்டி அப்டிங்கிறது மாதிரி..ஹி..ஹி..தலைவர் தப்பா எடுத்துக்கிட்டு, ஒழுங்குப் பிரச்சனையெல்லாம் எடுத்திறப் படாது.

Prasanna Says:
May 6th, 2006 at 8:56 pm
///மெட்டிஒலியில் ஒரு பெரிய பெண் பட்டாளம்; அதில் சகோதரிகளாக வந்த நடிகைகள்(முதல் மகள் தவிர) + மாணிக்கத்தின் தங்கை+மாணிக்கத்தின் தம்பியைத் திருமணம் செய்த பெண்+ பின் காதலித்த பெண் - இவர்களையெல்லாம் எப்படி தேடிப்பிடித்தார்கள் என்று எனக்கு சந்தேகம்.////

அத்தன பேருக்கும் எப்படி சம்பளம் குடுத்து முடியுதுனு தான் தெரியல!!!

///இது ஒரு காதல் கதையில் முதலில் வந்த கதாநாயகனைப் பார்த்தது அய்யோடா என்று இருந்தது; ஆள் மாற்றினார்கள்; இப்போது பழைய ஆள் பரவாயில்லை என்று தோன்றுகிறது.///

முதல்ல அவர் விலகும் போது என்ன சொன்னார் தெரியுமா?? சினிமா தான் என் லட்ச்சியம். கவுண்டமணி சொன்ன மாதிரி “ஏன் நீ இது வரைக்கும் பண்ணது பத்தாதா??”
பிரசன்னா

கமல் Says:
May 6th, 2006 at 9:48 pm
செல்வத்தைக் காதலித்த பெண் (சக்தி?) அழகா இல்லையா? அட, என்ன சார் நீங்க!

நல்லவேளை! ‘செல்வி’ல வில்லியா (பெயர் மறந்து போச்சே நீலாம்பரி? நந்தினி? ) நடிச்சவங்களை வம்புக்கு இழுக்கலை. அவங்களுக்கு ஒரு பெரிய ரசிகர் மன்றமே இருக்கு தெரியுமோ? டின்னு கட்டிடுவாங்க!

//ஆனாலும் ஆடியன்ஸ் அவ்வளவு மோசமா?//

நீங்க வேற! ஒரே ஷாட், வசனமே இல்லாம, இப்படியெல்லாம் மெட்டி ஒலியில போட்டுப் படுத்தி எடுத்தாங்களே!

நன்றி
கமல்

பொன்ஸ் Says:
May 6th, 2006 at 9:55 pm
அழகா இல்லாதவங்க அழுதாத் தானே அழகா இருக்காது.. அப்போ தானே மக்கள் பரிதாபப்படுவாங்க?!! இல்லைன்னா, இப்படி இவளைப் போய் அழவிடறானேன்னு எரிச்சல் படுவாங்க.. அப்படியே ஒரு பாசமும் வந்துரும்..

பொன்ஸ் Says:
May 6th, 2006 at 9:56 pm
ஆமாம், அதுக்கு எதுக்கு அழகழகா குத்து விளக்கெல்லாம் எடுத்து வைத்திருக்கீங்க??:)

பட்டணத்து ராசா Says:
May 6th, 2006 at 10:08 pm
//அழகுணர்ச்சியோடு உங்கள் நடிக, நடிகையர்களைத் தேர்ந்தெடுங்களேன். எங்களை ரொம்பவும் சோதிக்கணுமா, என்ன?//

என்னே தருமிக்கு வந்த சோதனை? ஏ இதல்லாம் நோட்டுப் பண்ணுங்க தேர்தல அறிக்கையில ஒரு பாயிண்டா சேத்துக்கலாம்யிலல

//வெறும் சம்பவங்களின் தோரணங்களாகவே இருப்பதால் //
நிங்க வேற பெரும்பாலான சினிமாக்களே சீன் சீனா பில்ட்டு பண்ணுவாங்க துனை இயக்குனர்களிடம் பேசிப்பாருங்க இவுஙக ரூம் போட்டு சீன் சீனா திறைக்கதைய shape செய்யுற ஆழகே தனிதான்.

தருமி Says:
May 6th, 2006 at 10:42 pm
thank you, Sivabalan

தருமி Says:
May 6th, 2006 at 10:44 pm
எல்லாம் ப்ரஸ் உங்கள மாதிரி ஆட்களால்தான். பின்னே, நடிக்கக் கூப்பிட்டா போறதில்லை. அப்புறம் இந்த மாதிரி ஆட்கள்தான் வருவாங்க.எல்லாம் எங்க தலைவிதி

தருமி Says:
May 6th, 2006 at 10:47 pm
கமல்,
அந்தப் பெண் பேரு சகதியா.. i mean, சக்தியா? இப்போ அவங்க கோலங்களில் வரும் கோலம் பார்த்தீங்களா? பொல்லா அலம்புதாங்க!

எனக்கு என்ன சந்தேகம்னா, அவங்களுக்கெல்லாம் நாம ரொம்ப அழகுன்னு நினப்பு இருக்கும்ல.

செல்வி -வில்லி, சும்மா சொல்லக்கூடாது அழகா இருக்காங்க. யாருங்க நீங்கதான் ரசிகர் மன்றத் தலைவரா?

தருமி Says:
May 6th, 2006 at 10:51 pm
பொன்ஸ்,

அது என்ன உங்க குரு என்னடான்னா ‘உளவியல் அணுகுமுறை..’ அப்டின்னு மனோதத்துவம் எல்லாம் பேசறாரு. நீங்களும் அதே பாணியில் சொல்றீங்க. நல்ல குரு..நல்ல சிஷ்யை

இது மாதிரி குத்து விளக்காட்டம் பெண்களை தேர்வு செய்யுங்கப்பான்னு இயக்குனர்களுக்கு சிம்பாலிக்கா ஒரு ஃபோட்டோ. அம்புடுதன்..

தருமி Says:
May 6th, 2006 at 10:56 pm
பட்டணத்து ராசா ,
தேர்தல அறிக்கையில ஒரு பாயிண்டா சேத்துக்கலாம்யிலல ..//
- அடுத்த தேர்தலுக்கா?

நீங்க சொன்ன திரைக்கதையமைப்பு கொஞ்சம் பிரமிப்பூட்டும் காரியம்தான், அதிலேயும் குப்பைப் படங்களுக்கி இன்னும் அதிகமாய் மெனக்கெட வேண்டும்போல. லண்டன் அப்டின்னு பிரசாந்த நடிச்ச படம் ஒண்ணு. கட்டாயம் பாருங்க. எப்படி இந்தமாதிரி படங்களுக்குத் திரைக்கதை அமைச்சுபடம் எடுத்து, எடிட் செய்து…பாவம் ரொம்பவே கஷ்டப்பட்டாதான் இந்த மாதிரி ஒரு கண்றாவியான படம் தரமுடியும். அதே மாதிரி அவங்க கஷ்டப்பட்டு எடுத்ததால் நாமும் பார்க்க ரொம்பவே கஷ்டப்படவேண்டியதிருக்கு

கமல் Says:
May 6th, 2006 at 11:01 pm
சக்தி-ங்கறது அந்தக் கதாபாத்திரத்தோட பேர். நிஜப்பேர் என்னன்னு தெரியலை. கோலங்களான்னு ஞாபகம் இல்லை. ஒருநாள் பார்த்தேன். அந்த எபிசோட் முழுக்க அந்தப்பெண்தான். தாங்க முடியலை. மெட்டி ஒலியில மட்டுந்தான் நல்லா இருந்தது.

ரசிகர் மன்றத் தலைவரெல்லாம் இல்லீங்கோ! கணிசமான ஆட்கள் சேர்ந்தா, இணையத்துலயே ஆரம்பிச்சிடலாம். நீங்க தலைவரா இருக்க ரெடியா? ஏன்னா, உங்க வாயால (சரி! கையால) அழகுன்னு சொன்னது இவங்களை மட்டும்தான். ஆறு மாசத்துக்கு முன்பு கோவையில என் உறவினர் கல்யாணத்துக்குப் போயிருந்தேன். அப்ப நெறையப்பேரு அவங்க கட்டியிருந்த டிசைன் புடவையையே கட்டியிருந்தாங்க. அப்ப அது ரொம்ப பாப்புலரா இருந்தது.

ஐயோ!!!யாராவது அவங்க பேரைச் சொல்லுங்களேன்! எவ்வளவு யோசிச்சும் ஞாபகம் வரமாட்டேங்குது.:???:

நன்றி
கமல்

தருமி Says:
May 6th, 2006 at 11:17 pm
கமல்,
வேண்டாம்; இந்த விளையாட்டெல்லாம் எங்கிட்ட வச்சுக்காதீங்க; உங்க மனசுல என்னதான் நினச்சிக்கிட்டு இருக்கீங்க. இதுதான் கடைசி தடவையா இருக்கட்டும். சரியா..? என்ன துணிச்சல் இருந்தா “மெட்டி ஒலியில மட்டுந்தான் நல்லா இருந்தது..” அப்டின்னு சொல்லுவீங்க?

ஏங்க கமல் நிஜமா சொல்லுங்க, நீங்க சும்மானாச்சுக்கும்தானே அந்த மாதிரி சொன்னீங்க? பாக்கிற மூஞ்சுங்களா அது - அன்றைக்கும் இன்றைக்கும்?

“நீங்க தலைவரா இருக்க ரெடியா?”// வேணாங்க, அனாவசியமா இன்னொரு தற்கொலைக்கு நான் காரணமாக முடியாது. இப்படி ஒரு ரசிகர் மன்ற தலைவரா நமக்குன்னு நினச்சு அந்த பொண்ணு…வேணாங்க அந்தப் பாவம் எனக்கு; உள்ளதே போதும்

சரி விடுங்க..பேர்ல என்னங்க இருக்கு? Rose is a rose is a rose

தருமி Says:
May 6th, 2006 at 11:19 pm
kamal,
“அப்ப நெறையப்பேரு அவங்க கட்டியிருந்த டிசைன் புடவையையே கட்டியிருந்தாங்க…”//
- அதில “அவங்களும்” சேத்தியா?

கமல் Says:
May 6th, 2006 at 11:24 pm

ஆங்!! ஞாபகம் வந்திடுச்சி!!!! ரஞ்சனி.

//உள்ளதே போதும் //

என்ன சார் இது! ஏமாத்திட்டீங்க! சரி விடுங்க! உங்க ஊராச்சேன்னு சொன்னேன். வேற யாராவது கேட்கறாங்களான்னு பார்ப்போம்!

நன்றி
கமல்

கமல் Says:
May 7th, 2006 at 9:01 am
//- அதில “அவங்களும்” சேத்தியா? //

பற்றிக் கொள்வதில் நீங்க ஒரு கற்பூரம்னு இன்னொரு முறை நிரூபிச்சிட்டீங்க! அதுதான் நான் சொல்ல வந்தது.

நன்றி
கமல்

தருமி Says:
May 7th, 2006 at 9:12 am
கமல், “உங்க ஊராச்சேன்னு சொன்னேன்”//
- என்னது அவங்க எங்க ஊரா? அதான, அழகா இருக்கிறப்பவே நினச்சேன்

ஓ, ரஞ்சனியா அவங்க பேரு. அப்டின்னா ‘அவுங்க’?

KOZHUNDU Says:
May 7th, 2006 at 9:17 am
சம்பளம் நிறையக் கொடுத்தாதானே அழகா இருக்கிறவங்க நடிக்க வருவாங்க! இவங்களுக்கெல்லாம்
மாசச் சம்பளமா இருக்கும்.
அன்புடன்
சாம்

பொன்ஸ் Says:
May 7th, 2006 at 9:19 am
ரஞ்சனி அழகா இருக்காங்கன்னு சொல்றீங்களா? நான் நீங்க மாயாவைத்தான் சொல்றீங்கன்னு பார்த்தேன்..

தருமி Says:
May 7th, 2006 at 9:29 am
சாரி கமல்,
பேரு கேட்டு ரொம்ப மூக்க நுழைக்கக் கூடாதுல்ல. அதோட பேருல்ல என்ன இருக்கு…Rose is a rose is a rose

வளர, மலர வாழ்த்துக்கள்

தருமி Says:
May 7th, 2006 at 9:32 am
கொழுந்து சாம்,
சம்பளம் பிரச்சனை இல்லைன்னு நினைக்கிறேன். அது தயாரிப்பாளர் தலைவலி; இல்லையா? நம்ம இயக்குனர்களின் டேஸ்ட் அப்படி இருக்குன்னு நினைக்கிறேன்.

தருமி Says:
May 7th, 2006 at 9:35 am
அய்யோ பொன்ஸ்,
நான் சொல்றது அந்த மாயாதான். ரஞ்சனி நல்லா நடிக்கிறாங்க. மாயா அழகா இருக்காங்க. இன்னொண்ணு வருமே..இப்பகூட சீரியல்ல conceive ஆகி இருக்கே..அதுவும் அதுக்கு கணவனா வருதே ஒண்ணு…விடுங்க, வேற ஆளுக பற்றிப் பேசுவோமா?

பொன்ஸ் Says:
May 7th, 2006 at 9:36 am
//இவங்களுக்கெல்லாம் மாசச் சம்பளமா இருக்கும்.//

இவங்களுக்கெல்லாம் தினச் சம்பளம்னு எங்கயோ படிச்சேன்…

(சும்மா தெரிஞ்சி வச்சிக்கத் தான்.. என்னிக்காவது உதவுமில்ல. )

பொன்ஸ் Says:
May 7th, 2006 at 9:46 am
தருமி, இந்த சீரியல் வில்லிகள் எல்லாம் அழகா இருப்பது இன்னோரு உளவியல் சங்கதி.. இவங்களை அழ விட மாட்டாங்க.. அதனால, இவங்க மேல எந்த ஒரு பாசமும், affection-உம் சீரியல் பாக்கற பொண்ணுங்களுக்கு வந்துரக் கூடாது… அழகா இருந்தா, இந்தப் பொண்ணு நம்ம மாதிரி இல்லைன்னு தோணி எந்த நெருக்கமும் வராது இல்ல…

தருமி Says:
May 7th, 2006 at 10:03 am
பொன்ஸ்,
நானும் அப்படித்தான் கேள்விப்பட்டிருக்கிறேன். அதோடு மேக்கப், காஸ்ட்யூம் எல்லாம் நடிகர்களே பார்த்துக்கணும்னும் கேள்வி. எப்படி..கண்டிஷன் எல்லாம் உங்களுக்கு ஓகேதானே

தருமி Says:
May 7th, 2006 at 10:05 am
பொன்ஸ்,]
“….இன்னோரு உளவியல் சங்கதி.. “//
- எங்கேயோ போய்க்கிட்டு இருக்கீங்க…mass psychology எல்லாம் கொளுத்துரீங்க…உங்க குருகூட அங்க எங்கேயோ பின்னால நிக்கிறாரு..

KOZHUNDU Says:
May 7th, 2006 at 10:06 am
என்னங்க சன் டீ வீல அதிக பட்ச சம்பளமே எட்டு லட்சம் தானாமே! இங்க தமிழ்மணத்தில தான்
படிச்சேன். கோடி கோடியா லாபம் பார்க்கிறவங்க இப்படியா பண்ணுவாங்க! போட்டி வேணும்.
பேசாம சிங்கப்பூர், மலேஷியாகாரங்க இன்னொரு சானல் ஆரம்பிச்சாங்கன்னா உள்ளூர்காரங்க
பயந்துக்குவாங்க!
அன்புடன்
சாம்

தருமி Says:
May 7th, 2006 at 10:21 am
கொழுந்து சாம்,
பேசாம U.S. NRI எல்லோரும் சேர்ந்து ஒண்ணு ஆரம்பியுன்க்களேன். அப்படியே நமக்கு ஒரு சான்ஸ்…ஹி ஹி..

ramachandranusha Says:
May 7th, 2006 at 10:33 am
துளசி., பொன்ஸ்,
ஒரு விஷயம் கவனிச்சீங்களா? பெண்கள்தான் சீரியல் பார்ப்பாங்கன்னு சொல்லிக்கிட்டு இருக்காங்களே, ஆனால் வில்லி, அழகி, புடவை டிசைன்னு யாரூ யாரூ பேசுவதுன்னு பார்த்தீங்களா?

கமல் Says:
May 7th, 2006 at 12:19 pm
அடப்போங்க சார்! ‘பேருல என்ன இருக்குன்னு Rose டயலாக்கை நான் சொல்லலாம்னு இருந்தேன். நீங்க முந்திட்டீங்க!

//ரஞ்சனி நல்லா நடிக்கிறாங்க. மாயா அழகா இருக்காங்க.//

ஐயய்யய்யோ!! இப்படி பல்டி அடிக்கறீங்களே! இதுக்கெல்லாம் தாவல் தடைச்சட்டம் இல்லையா?

சீரியல் வில்லிங்க அழகா இருக்கறதாலதான் இந்தப் பினாத்தல்களைக் கொஞ்சமாவது பார்க்க முடியுது. (நான் என்னைச் சொல்லலைப்பா! ) ஆனா யுவராணி படத்துல அழகா இருந்தாங்க.

என்னங்க பொன்ஸ்!

//அழகா இருந்தா, இந்தப் பொண்ணு நம்ம மாதிரி இல்லைன்னு தோணி//

அப்படீன்னா, சீரியல் பார்க்கற பொண்ணுங்க எல்லாம் அழகா இல்லைன்னு சொல்றீங்களா? நான் இல்ல. எஸ்கே…ப்.

நன்றி
கமல்

பட்டணத்து ராசா Says:
May 7th, 2006 at 12:26 pm
இவக்களுக்கு சம்பளமெல்லம் குறைச்சல் இல்லைங்க தினப்படி சம்பளம் தான் அவங்க பொழியில சொல்லுறதுன்னா மீட்டர். இதுல டபுல் டிரிபுல் மீட்டர் ( அதாங்க ஒரே நாள்ள இரண்டு மூனு சிரியல்)நடிக்கிறவுங்களும் உண்டு. அதற்கு அப்புறம் இந்த நடிக தேர்வுகளில் adjustment அப்படிங்கற ஒரு விசயம் இருக்கு.

Geetha Sambasivam Says:
May 7th, 2006 at 2:45 pm
:மெட்டிஒலியில் மாணிக்கத்தின் தம்பியைக் காதலித்த அந்தப் பெண்ணின் பெயர் நீலிமாராணி.கோலங்களில் மட்டும் இல்லை, என் தோழி, என் மனைவி, என் காதலி என்ற சீரியலிலும் அந்தப் பெண் முக்கியப் பாத்திரத்தில் நடிக்கிறார்.இந்த சீரியல் எல்லாம் பிடிக்காவிட்டால் “சிதம்பர ரகசியம்” மட்டும் பாருங்களேன். நாடி ஜோசியத்தைப் பற்றி வருவதால் உங்களுக்குப் பிடிக்கும்.

KOZHUNDU Says:
May 7th, 2006 at 5:14 pm
இங்க தமிழர்கள் எண்ணிக்கை அதிகம் இல்லையே!

//எல்லோரும் சேர்ந்து//:-))
//அப்படியே நமக்கு ஒரு சான்ஸ் //

அப்படியே!

அன்புடன்
சாம்

தருமி Says:
May 7th, 2006 at 7:31 pm
துளசி, பொன்ஸ், உஷா,
மெட்டிஒலிக்கு நிறைய விமர்சனங்கள் வந்திச்சே…அப்போவெல்லாம் நீங்களா எழுதினீங்க?
நாங்க இதையெல்லாம் பார்த்து நம்ம வீட்ல உள்ள மக்களுக்கு என்னென்ன தாக்கம் இருக்கும்; அதை எப்படி handle பண்ணுவது என்று தெரிந்துகொள்ளதான் பார்க்கிறோமாக்கும்!

தருமி Says:
May 7th, 2006 at 7:36 pm
கமல்,
“ரஞ்சனி நல்லா நடிக்கிறாங்க..”//
அட ரஞ்சனி கண்ணு எவ்வளவு அழகு… சரிதானே, கமல்?

தருமி Says:
May 7th, 2006 at 7:42 pm
கீதா,
அப்போ உங்களுக்கு நீ.ராணி பிடிக்கும்னு சொல்லுங்க.

சிதம்பர ரகசியம் பற்றிய பெனாத்தல் சுரேஷின் பதிவொன்றில் அதன் டைரக்டர் நாகா சில பின்னூட்டங்கள் இட்டிருந்தாரே படிக்கலையா? அதிலேயே ஏன் இந்த மாதிரி சீரியல்களாக எடுக்கிறீர்கள் என்று கேட்டு இருந்தேனே..அதோட அந்த சீரியல் உங்களுக்கு ரொம்ப பிடிக்கணுமே - உங்களுக்குப் பிடிச்ச விஷயங்கள் பற்றிய சீரியலாச்சே! நானெல்லாம் anti-நாடி சோதிடம் இல்லையா?

தருமி Says:
May 7th, 2006 at 7:45 pm
கொழுந்து,
“//அப்படியே நமக்கு ஒரு சான்ஸ் //

அப்படியே”//

நன்றி சாம், சான்ஸுக்கு

ramachandranusha Says:
May 7th, 2006 at 7:55 pm
கீதா, சிதம்பர ரகசியம் நல்லா இருக்கு சொன்னவங்களைத் தேடிக்கிட்டு இருக்கேன்

பினாத்தலார் சொன்னாரே என்று கொலை செஞ்சாரூ எடிட்டரை செஞ்சாங்களே, மூணு மாசத்துக்கு முன்னால, அப்பொழுது பார்க்க ஆரம்பித்து, இப்படியா இழுப்பாங்க என்று நாலைந்து வாரமாய் புதன் கிழமை நல்ல வேளையாய் பார்க்க முடியாமல் மறந்துப் போகிறது. இதெல்லாம் பார்க்க பொறுமை
வேணுங்க.

சிங்.செயகுமார் Says:
May 7th, 2006 at 8:09 pm
2002 -ல் சென்னைக்கு வெளியே ஒரு சீரியல் சூட்டிங்.”சிகரங்கள்” சன் டீவில மதியம் 12 மணிக்கு ஒளிபரப்புனாங்க. அந்த டீவி நடிகைகிட்ட பேசிட்டு இருந்தோம் ஒரு நாளைக்கு 1500 ரூபாவாம் சம்பளம். மறுநாளும் வேடிக்கை பார்க்க போயிருந்தேன்.கிடுகிடுன்னு உள்ளே போயி என்ன நடக்குடுன்னு வேடிக்கை பாக்க போனேன் .(கையில சுருட்டிய காகிதம் இருந்திச்சா.) நம்மல யாரோ கை காட்டி இவருதான் அஸிஸ்டண்ட் டைரக்டருன்னு கை காட்ட. அங்கே இருத்த அந்த நடிகை சாரி சார் நான் நேத்து உங்க கூட சரியா பேசல போன் நம்பர் அட்ரஸ் கூட மாத்தி குடுத்துட்டேன் .சாரி சார்ன்னு சொன்னாங்க. அதுக்கு மேல அங்க நிற்கல டைரக்டர் வந்தார்னா நம்மள டின் கட்டிடுவாங்களே!
இப்போ அந்த நடிகை “செல்வி” ல விதவையா நடிக்கிறாங்க பேருதான் மறந்து போச்சு…

காகா ப்ரியன் Says:
May 8th, 2006 at 1:28 am
வணக்கம் வணக்கம் வணக்கம் !

ரொம்ப நாளச்சுல்ல….

என்ன பண்றது இப்பத்தான் ஒரு வழியா எலக்ஷனுக்கு எல்லா ஏற்பாட்டையும் பண்ணி முடிச்சிட்டு வர்றேன்

நல்லா இருக்கீங்களா.. தனி மயிலு கூட காணோம் ?

ம்ம்ம… கவனிச்சுக்கறேன்…

******
இது ஒரு காதல் கதையில் முதலில் வந்த கதாநாயகனைப் பார்த்தது அய்யோடா என்று இருந்தது;
*****

மாட்டிகிட்டீங்க… அந்த ப்ரஜன் தான் தமிழக யுவதிகளின் லேட்டஸ்ட் கனவுக் கண்ணனாம் (எனக்கு எப்படித் தெரியும்னுலாம் கேட்க கூடாது

அவருக்கு ரசிகர்(கை) மன்றமெல்லாம் இருக்குங்க…

உங்க கிட்ட யாராவது 1கோடி கேட்க போறாங்க பாருங்க…



தருமி Says:
May 8th, 2006 at 7:57 am
காகா ப்ரியன்,
“தனி மயிலு கூட காணோம் ?”// ஏன் நம்ம போட்டுருக்கலாம்ல..

” அந்த ப்ரஜன் தான் தமிழக யுவதிகளின் லேட்டஸ்ட் கனவுக் கண்ணனாம்// நெஜமாலுமா..அப்ப என் டேஸ்ட்ல ஏதோ தகராறுதான் போலும். இல்ல?

தருமி Says:
May 8th, 2006 at 7:58 am
சிங்.செயகுமார்,
இப்படி வேற ஆக்ட் கொடுத்தீங்களா? அதான் உங்கள நாடு கடத்திட்டாங்க போலும்..

ஞானவெட்டியான் Says:
May 8th, 2006 at 8:02 am
அன்புடையீர்,
இத்தனை பின்னூட்டங்கள் வந்தும் ஒருவராவது, இந்த நாடகங்களில் நடக்கும் தமிழ்க்கொலையை, அதுதான் “பண்ணித்தமிழ்”, “தமிங்கிலம்”, “ச”கரம் பாம்பாகி “ஷ்” எனச் சீறுதல், ஆகியவற்றைக் கண்டிக்கவில்லையே?

வெளிகண்ட நாதர் Says:
May 8th, 2006 at 8:26 am
என்ன தருமி சார், சீரியல்கள் எல்லாம் பார்த்து அல்சுரீங்க போங்க! நான் இப்படிதான் கால்ல அடிபட்டு ஒரு ஆறு மாசம் வீடல படுத்திருந்தப்ப, இந்த் சீரியல்கள் தான் துணை. அப்ப தான் தெரிஞ்சுச்சு வீட்லேயே இருக்கிற பெண்களை நம்ம் சும்மா சத்தாய்க்கிறோம், நாமுலும் வீடல முடங்கின அப்படிதான்னு. அப்ப தமிழ்மணம் மாதிரி பொழுது போக சாதனம் இல்லை. இருந்திருந்தா இதை பத்தி தினம் ஒரு கதை எழுதி இருப்பேன். அம்புட்டு விஷயம் இருக்கு போங்க்;)

துளசி கோபால் Says:
May 8th, 2006 at 9:07 am
இரும்படிக்கும் இடத்தில் ஈக்கு என்ன வேலை?
நமக்குச் சம்பந்தமில்லாத விஷயமா இருக்கேன்னு நிதானமா வந்து பார்த்தா…………..
நமக்கும் சேதி சொல்லி இருக்கீங்க!

பொன்ஸ்,
‘பளிச்’னு தேய்ச்சுவச்ச குத்து விளக்காட்டம் அழகு’ன்னு படிச்சிருக்கேன். அதனாலெ ‘அழகு’ன்ற
வார்த்தையை சிம்பாலிக்கா சொல்றாரு போல.
இல்லீங்களா தருமி?

உஷா,

அதே அதே. நல்லா இல்லேன்னு சொல்லிக்கிட்டே வீட்டம்மாவுக்குக் கம்பெனி கொடுக்கற சாக்குலே
எல்லாம் பார்க்கறாங்க இவுங்க.

சின்னத்திரையில் ‘நடிக்கும்’ ஒரு தோழி எனக்கு இருக்காங்க.( இதை இங்கே ஏன் சொல்றேன்? ம்ம்ம்ம்

தருமி Says:
May 8th, 2006 at 10:19 am
துளசி,

பொன்ஸ் கேட்டாங்க எதுக்கு இங்க குத்துவிளக்குபடம் எல்லாம் என்று..அதுக்கு நான் சொன்ன பதில் 12-ம் பின்னூட்டத்தில் இப்படி:”இது மாதிரி குத்து விளக்காட்டம் பெண்களை தேர்வு செய்யுங்கப்பான்னு இயக்குனர்களுக்கு சிம்பாலிக்கா ஒரு ஃபோட்டோ. அம்புடுதன்..”

நீங்க என்ன mind reader ஆயிட்டீங்களா, அப்படியே அச்சுக்குண்டா அதையே சொல்லியிருக்கீங்க வரவர எங்கேயோ போய்க்கிட்டு இருக்கீங்க

தருமி Says:
May 8th, 2006 at 10:25 am
ஞானவெட்டியான்,
என்ன சொல்றீங்க நீங்க… ‘கண்ணாடி வீட்டுக்குள்ள இருந்து உடை மாத்தாதே / ‘கண்ணாடி வீட்டுக்குள்ள இருந்து கல்லெறியாதே - (இரண்டில் எது வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளலாம்.)அப்டின்னு சொல்லுவாங்களே. உங்கள மாதிரி நாலைந்து பேர்கள் தேறுமா - நல்ல தமிழில் எழுதுகின்ற ஆட்கள்? மற்றபடி நாங்களே தமிழ்க் கொலை (பண்ணும்) செய்யும்போது நாங்கள் மற்றவர்கள் தமிழைக் குறை சொல்ல முடியுமா, என்ன?

எங்கள் கண்ணில் உள்ள உத்திரத்தை எடுத்து விட்டல்லவா, அவர்கள் கண்ணில் உள்ள துரும்பைப் பற்றிக் கவலைப்பட வேண்டும்.

sivaji rasigan Says:
May 8th, 2006 at 9:18 pm
From one rasigan to another

http://www.lazygeek.net/archives/2006/05/malarndhum_malaraadha.html

P.S Im not the blog owner

குமரன் (Kumaran) Says:
May 8th, 2006 at 10:33 pm
என்னதிது? நான் பார்க்கிற தொடரை வேற யாரும் பாக்குறதில்லை போலிருக்கே? மலர்கள் தொடரைத் தான் சொல்றேன். வீட்டுக்கு சன் டிவி வந்த புதுசுல தொடரெல்லாம் பாக்கக் கூடாதுன்னு இருந்தோம். ஒரு நாள் தப்பித்தவறி இந்தத் தொடரைப் பாத்துட்டோம். அந்த நேரம் பார்த்து யாரோ ஒரு அம்மா சுலோசனாவை அசிங்க அசிங்கமா திட்டி மண்ணெல்லாம் வாரி இறைச்சாங்க. அப்பப் புடிச்சது சனி எங்களுக்கு. அன்னையில இருந்து அதைப் பாத்துக்கிட்டிருக்கோம். தருமி ஐயா, நீங்க சொன்ன மாதிரி இந்தத் தொடருலயும் ஒரு வாரம் பாக்காம விட்டு அப்புறம் பாத்தாலும் தெள்ளத் தெளிவா புரியுது. அப்புறம் இந்தத் தொடரும் சோதிடத்தை வெகு அழுத்தமா சொல்லுதப்பூ… ஐயோ ஐயோன்னு அடிச்சுக்கலாம்…. அந்த அளவுக்கு…

Prasanna Says:
May 8th, 2006 at 11:31 pm
///எல்லாம் ப்ரஸ் உங்கள மாதிரி ஆட்களால்தான். பின்னே, நடிக்கக் கூப்பிட்டா போறதில்லை. அப்புறம் இந்த மாதிரி ஆட்கள்தான் வருவாங்க.எல்லாம் எங்க தலைவிதி///
ஹய்யோ ஹய்யோ உங்கள எல்லாம் பார்க்க எனக்கு பாவமா இருக்கு. எனக்கும் இந்த மாதிரி யாராவது திட்டுவாங்களோன்னு பயம் தான் காரணம், வேற ஒண்ணும் இல்லை.
இந்த மாதிரி நடிக்க வர்றவங்களுக்கு, ஒரு நாளைக்கு இவ்வளவு, இத்தன நாள் இருக்கணும்னு சொல்லிடுவாங்க. முடியும்போது மொத்தமா குடுத்திடுவாங்க. மின் பிம்பங்கள் போன்ற சில நிறுவனங்கள் சம்பளம் சரியாகத் தருவதில்லை எனக் கேள்வி. அண்ணாமலை சீரியலில் கோவணம் கட்டிக் கொண்டு ஆடின்னாரே கார்த்திகேயன், அவருக்கு ராதிகா குடுத்த சம்பளம் ஒரு செல் ஃபோன் மட்டுமே!!!

காகா ப்ரியன் Says:
May 9th, 2006 at 2:41 am
*****
நெஜமாலுமா..அப்ப என் டேஸ்ட்ல ஏதோ தகராறுதான் போலும். இல்ல?
*****

அப்டில்லாம் சொல்லிட முடியாது… நான் நெனைச்சேன்… நீங்க சொல்லிட்டீங்க… நீங்க சன் மியூசிக்-லாம் பாக்கமாட்டிங்களா? அதுல வருவார் பாத்து என்ஜாய் பண்ணுங்க

ஷ்ரேயா Says:
May 9th, 2006 at 4:39 am
//எனக்கு ஒரு சின்ன எபிசோடு அளவுகூட சந்தேகமேயில்லை!//

இப்பிடியும் சொல்லலாம்:
கதையளவு கூட சந்தேகமில்லை

ramachandranusha Says:
May 9th, 2006 at 11:59 am
குமரன், என்ன கேள்விக் கேட்டுபுட்டீங்க நுனிப்புல் பக்கம் வருவதில்லையா? பார்க்க-http://nunippul.blogspot.com/2006/05/blog-post_06.html

தருமி ஐயா, விளம்பரம் போட்டதற்கு மன்னிச்சிடுங்க

தருமி Says:
May 9th, 2006 at 12:38 pm
நன்றி சிவாஜி ரசிகன்…

தருமி Says:
May 9th, 2006 at 12:40 pm
உஷா,
குமரனுக்கு முந்தியே நாம் அங்க போய்ட்டு வந்திட்டேன். அந்தக் கதையை விட நீங்க எழுதின நாடகம் ரொம்ப நல்லா இருக்கு..டோண்டு சொன்ன முடிவு கூட நல்லா இருந்திருக்கும்.

தருமி Says:
May 9th, 2006 at 12:42 pm
குமரன்,
“…..சோதிடத்தை வெகு அழுத்தமா சொல்லுதப்பூ… ஐயோ ஐயோன்னு அடிச்சுக்கலாம்…. அந்த அளவுக்கு… ..”//
நம்புற ஆளுகளுக்கே அப்படி இருந்தா என்ன மாதிரி கேசுகளுக்கு எப்படி இருக்கும்? நீங்களே புரிஞ்சுக்குங்க..

தருமி Says:
May 9th, 2006 at 12:44 pm
ப்ரஸ்,
எல்லா விபரங்களும் விரல் நுனியிலதானா? ரொம்ப தொடர்பு விச்சிருக்கீங்க.keept it up…நாளை நடப்பதை யாரறிவார்? அப்போ சொல்லிக்குவோம்ல ‘ஓ! ப்ரஸ்ஸா, எனக்கு ரொம்ப குளோஸுன்னு’!

தருமி Says:
May 9th, 2006 at 12:46 pm
ஆனா காகா பிரியன். நெஜமாலுமே எனக்கு அந்த சந்தேகம் உண்டு..நம்ம டேஸ்ட்லதான் ஏதோ தகராறுன்னு…ஏன்னா, நூத்துக்கு 90 பேரு “மூஞ்சே’ பிடிக்கலை…that includes men also.

தருமி Says:
May 9th, 2006 at 12:47 pm
சொல்நயம் கண்ட ஷ்ரேயாவுக்கு நன்றி.
நீங்க சொன்னதும் ரொம்ப பொருத்தம்தான்.

Geetha Sambasivam Says:
May 9th, 2006 at 12:57 pm
சீரியல் எது பார்த்தாலும் இந்த நிலைமை தான். ஜோசியத்தை நம்பினா ஜோசியத்தைப் பத்திப் பொய் சொல்ற சீரியலைப் பார்க்கச் சொல்றீங்களே. திருவிளையாடலுக்குப் பிறகு வந்த எந்த சாமி படமும் படமே இல்லை என்ற கொள்கை உள்ளவங்க நான். அதே போல சீரியல் பார்த்து சாமி நம்பிக்கை வரணுமுன்னா அது வேண்டவே வேண்டாம்.அந்த நேராத்தில் 4 புத்தகம் படிக்கலாம் ஏற்கெனவே படித்ததாய் இருந்தாலும்.

தருமி Says:
May 9th, 2006 at 11:14 pm
Geetha Sambasivam,
“திருவிளையாடலுக்குப் பிறகு வந்த எந்த சாமி படமும் படமே இல்லை என்ற கொள்கை உள்ளவங்க நான்”//

அதிலேயும் அந்தப் படத்தில் ஒரு காரக்டர் அப்படியே மனசுல பதிஞ்சுபோயிருக்குமே; இல்ல?

குமரன் (Kumaran) Says:
May 10th, 2006 at 12:05 am
உஷா…. நுனிப்புல்ல நீங்க அந்தத் தொடரைப் பத்தி எழுதுனப்பவே படிச்சாச்சு. இந்தப் பதிவுல யாருமே அதைப் பத்தி சொல்லலியேன்னு கேட்டேன்.

ஷ்ரேயா Says:
May 10th, 2006 at 4:03 am
//அதிலேயும் அந்தப் படத்தில் ஒரு காரக்டர் அப்படியே மனசுல பதிஞ்சுபோயிருக்குமே; இல்ல? //

அடடா.. அவையடக்கம் என்பது இதானா (சுயதம்பட்டத்தையும் அவையடக்கத்தையும் குழப்பிக்கறேன் போலிருக்கே!! ம்ம்.. )

lakshmi Says:
May 10th, 2006 at 7:52 am
good analysis dharumi. Lots of appreciation. But, I don’t agree with the point “charecters must be beautiful”. It is really impossible to do..

I think, you can start taking a mega serial…

regards,
lakshmi

தருமி Says:
May 10th, 2006 at 11:44 am
ஏதோ ஒரு பாகவதர் பெயரில் பாலையா வருவாரே, அவரை நான் சொன்னேன். ஷ்ரேயா, நீங்களும் அவரைத்தானே சொல்றீங்க?

தருமி Says:
May 10th, 2006 at 11:46 am
இந்த லஷ்மி எந்த லஷ்மி? எனக்குத் தெரிஞ்ச ‘அவனா?’

லட்சணமா இருக்கணும்னு சொல்லலை, லஷ்மி…அவலட்சணமா இல்லாம இருக்கக்கூடாதா?

Geetha Sambasivam Says:
May 10th, 2006 at 2:53 pm
உங்க பதிவுக்கு வந்ததே பேரைப் பார்த்துட்டுத்தான். எங்க ஊர் வேறே. நக்கீரன்னு பேர் வச்சுக்கத்தான் ஆசை. யாரோ ஒருத்தர் நற்கீரன்னு பேர் வச்சுக்கிட்டு முந்திக்கிட்டாரு. போட்டி வேண்டாம்னு சொந்தப்பெயரிலேயே தொடருகிறேன்.

தருமி Says:
May 10th, 2006 at 6:21 pm
Geetha Sambasivam ,
நற்கீரன்னு பேர் வச்சுக்கிட்டு முந்திக்கிட்டாரு//
just a suggestion: நக்கீரன்/ நக்கீரி/ நற்கீரி / நற்கீரள் / நக்கீரன் II/ நற்கீறன் II………

ஷ்ரேயா Says:
May 11th, 2006 at 4:33 am
ஆகா!!! “கவுத்துட்டாங்க” என்பதற்கு பொருள் இப்பத்தானே புரியுது..
உங்க leagueஏ தனி!! ( :iceவைத்தல்/butter பூசல்: னு ஒரு இமோட்டிக்கொன் இல்லை இங்கே போலிருக்கே)

தருமி Says:
May 11th, 2006 at 12:25 pm
ஷ்ரேயா,




Geetha Sambasivam Says:
May 11th, 2006 at 2:03 pm
உங்க ஐடியா எதுவும் நல்லா இல்லை.

தருமி Says:
May 11th, 2006 at 2:53 pm
Geetha Sambasivam

:

பொன்ஸ் Says:
May 11th, 2006 at 3:14 pm
முடியலை.. என்னால முடியலை.. இங்க சின்னத் திரைன்னு சொல்லிட்டு இப்படி பெயர் ஆராய்ச்சி எல்லாம் செஞ்சிகிட்டு இருக்கீங்க?!!!

சொல்ல மறந்துட்டேனே.. ஒரு விஷயம் விட்டுட்டீங்க தருமி..
//ஒரு சீரியலை இரண்டு தடவை பார்த்துவிட்டு, பிறகு எத்தனை நாள் கழித்துப் பார்த்தாலும் கதை புரிகிறது//
இந்த ரெண்டு மூணு சீரியல்ல ஒரே நடிக நடிகைங்க வருவாங்களே.. அது ஒரு பெரிய தலைவலி.. எங்க பாட்டி பொதுவா என் பெயரையும் என் தங்கை பெயரையும் மாத்தி மாத்தி சொல்லுவாங்க..

என்னிக்காவது ஒரு நாள் நான் தப்பித் தவறி சீரியல் பாக்கும்போது பாட்டி கிட்ட “இந்தப் பொண்ணுக்குத் தான் கல்யாணம் ஆய்டுச்சே.. திரும்பி என்ன நிச்சியதார்த்தம் பண்ணுறாங்க” என்றால், அதுக்கு பாட்டி, “அது ஆடுகிறான் கண்ணன்ல.. இது சொர்க்கம்.. இப்படி குழப்பிக்காத”ம்பாங்க.. எப்படித் தான் இதெல்லாம் சரியா நினைவு வச்சிக்கறாங்களோ!!!

தருமி Says:
May 11th, 2006 at 11:00 pm
பொன்ஸ்,
ஒரே ஒரு தப்பு பண்றீங்க..“இந்தப் பொண்ணுக்குத் தான் கல்யாணம் ஆய்டுச்சே.. திரும்பி என்ன நிச்சியதார்த்தம் பண்ணுறாங்க” என்றால்,…”// - இப்பட்டிப்பட்ட கேள்வியெல்லாம் கேட்காமல் ‘என்னதான் நடக்கும் நடக்கட்டுமே’ன்னு பாத்தீங்கன்னா புரிஞ்சிடும்.
so moral of the…?: கேள்விகள் ஏதுமின்றி சீரியல்கள் பார்க்கவும்.

Prasanna Says:
May 11th, 2006 at 11:24 pm
///ப்ரஸ்,
எல்லா விபரங்களும் விரல் நுனியிலதானா? ரொம்ப தொடர்பு விச்சிருக்கீங்க.keept it up…நாளை நடப்பதை யாரறிவார்? அப்போ சொல்லிக்குவோம்ல ‘ஓ! ப்ரஸ்ஸா, எனக்கு ரொம்ப குளோஸுன்னு’!///
பெரியவங்க ஆசிர்வாதத்தில ஏதாவது நல்லது நடந்தா சரிதான், அப்புறம் இந்த காதல் படத்துல சொல்ற மாதிரி நானும் ஒரு வில்லன்ல ஸ்டார்ட் பண்ணி அப்டியே ஹீரோவாகி அப்புறம் கோட்டை டெல்லி நு செட்டில் ஆகிடலாம்.
என்ன நடுவுல நீங்க ஒரு பதிவு போடுவீங்க
ரஜினி–>விஜய்–>பிரசன்னா????
இது எப்டி இருக்கு? (சே! சும்ம ஒரு பேச்சுக்கு சொன்ன இந்த வியாதி என்னையும் பிடிச்சுகிசே?)

ஷ்ரேயா Says:
May 12th, 2006 at 4:50 am
//கேள்விகள் ஏதுமின்றி சீரியல்கள் பார்க்கவும்//
பார்க்கணுமா என்பது தான் கேள்வியே.. பார்க்கலைன்னா எவ்வ்வ்வ்ளோ நேரம் மிச்சம்! (மண்டையிலே முடியும் மிஞ்சும்(பொன்ஸ் பிச்சுகிட்டா மாதிரி பிச்சுக்கத் தேவையே வராது ))
உருப்படியா ஏதாச்சும் செய்யலாம் இதுகளைப் பாக்கற நேரத்துக்கு.

பொன்ஸ் Says:
May 12th, 2006 at 10:33 am
//so moral of the…?: கேள்விகள் ஏதுமின்றி சீரியல்கள் பார்க்கவும் //
இப்போ தான் புரியுது.. நீங்க எப்படி இதெல்லாம் பொறுமையா பாக்கறீங்கன்னு..

இப்போ ஒரு மாசமா எங்க அம்மாவுக்கு ஒரே வருத்தம்.. அவங்களோட உட்கார்ந்து சீரியல் பாக்காம நான் தமிழ்மணத்துல சுத்தி கிட்டு இருக்கேன்னு.. நான் அவங்களையும் தமிழ்மணத்துக்கு இழுத்துகிட்டு இருக்கேன்.. அவங்க என்னைக் கோலங்கள் பாக்க வைக்கறதுன்னு கங்கணம் கட்டிகிட்டு இருக்காங்க.. யாருக்கு வெற்றின்னு பாக்க எங்க அப்பா பயங்கர ஆர்வமா இருக்காரு

தருமி Says:
May 12th, 2006 at 11:34 am
pப்ரஸ்,
“என்ன நடுவுல நீங்க ஒரு பதிவு போடுவீங்க
ரஜினி–>விஜய்–>பிரசன்னா????”
சரி வேண்டான்னா விடுங்க; இப்படி போட்டுருவோம்: “சூர்யா< --ப்ரஸ்-->விஜய் –??”

“இந்த வியாதி என்னையும் பிடிச்சுகிசே?”// எத வியாதிங்கிறீங்க?

தருமி Says:
May 12th, 2006 at 12:32 pm
ஷ்ரேயா, பொன்ஸ்,
நீங்க பாட்டுக்கு ஈசியா சொல்லிட்டு போயிட்டீங்க. இந்த சீரியல் பாக்கிறது இருக்கே அது சிகரெட் குடிக்கிறது மாதிரி அல்லது கல்யாணம் கட்டிக்கிறது மாதிரி.

சிகரெட் குடிக்கிறவங்க்ளுக்குத் தெரியாதா என்னன்னு. குடிச்சா நல்லது எதுவும் இல்லை கெட்டதுதான்னு தெரிஞ்சபிறகும் உட முடியுதா? இழுக்க இழுக்க இன்பம் அப்டின்னுட்டு “இறுதி’” வரை இழுத்துட்டு ( நான் அதுக்குக் கொஞ்சம் முந்திவரை) அடிக்ட் ஆகி உக்காந்திரவேண்டியதுதான்.

அடுத்தது என்னன்னா (நீங்க ரெண்டுபேருமே ‘சின்னப் பிள்ளைங்க’ அப்டிங்கிறது என் நினைப்பு) இந்தக் கல்யாணத்தைப் பற்றி ஆங்கிலத்தில் எல்லாரும் அடிக்கடி சொல்லுவாங்களே, கேட்டு இருக்கீங்களா?: ‘It is an unavoidable evil’. அது மாதிரி ஆயிடுது.

வீடென்ன அரண்மனையா/ எங்க உக்காந்தாலும் டி.வி. சத்தம் காதில சாயுங்காலம் உழும். அதில் வேற வேலை என்ன பாக்கிறாது. சரின்னுட்டு, திட்டிக்கிட்டே எதிர்த்தாற்போல உக்காந்து.
திட்டிக்கிட்டே பாத்துக்கிட்டு இருந்துட்டு, திட்டித் திட்டி ஒரு பதிவை போட்டா, அதுக்கும் திட்டித் திட்டி பின்னூட்டம் வந்தா மனுஷன் என்னதாங்க பண்றது??

தருமி Says:
May 12th, 2006 at 12:35 pm
ponS,
“யாருக்கு வெற்றின்னு பாக்க எங்க அப்பா பயங்கர ஆர்வமா இருக்காரு “// அந்த சாக்கை வச்சுக்கிட்டே அப்பாவும் கோலங்கள் பாத்திர்ராங்களா?

பொன்ஸ் Says:
May 12th, 2006 at 1:10 pm
//அந்த சாக்கை வச்சுக்கிட்டே அப்பாவும் கோலங்கள் பாத்திர்ராங்களா?//

பின்ன, அவரும் இந்த unavoidable evil-ஐ முப்பது வருஷம் முன்னாடியே பண்ணினவராச்சே, என்னை மாதிரி புத்திசாலியா இல்லாம

No comments:

Post a Comment