Thursday, February 26, 2009

296. ஏ.ஆர்.ரஹ்மானுக்கு ஆஸ்கார் விருது கிடைத்ததால் பெருமைப் படும் முஸ்லீம்களே !

*

ஆதிரை பரூக் - சார் யாரென்று எனக்குத் தெரியாது; இவர் ஒரு பதிவரா; வலைப்பூ எதுவும் வைத்திருக்கிறாரா என்பதுவும் தெரியாது. தெரிந்து கொள்ளவும் முயன்றதில்லை. ஆனாலும் என்னவோ அவர் ஒரு பதிவராகத்தான் இருப்பார் என்ற நினைப்பு. என் மேல் என்ன பாசமோ, இல்லை என்னை இஸ்லாமிய மார்க்கத்துக்குள் சேர்த்துவிட வேண்டுமென்ற ஆவலோ என்னவோ, எனக்குப் பலதடவை தனி மயில்கள் அனுப்பி வந்தார். எல்லாமே இஸ்லாமியக் கோட்பாடுகள் பற்றியது. நானும் உடனுக்குடன் அவைகளை ஒரு பார்வை பார்த்துவிட்டு trash-க்கு அனுப்பி வந்தேன். கிறித்துவ மக்கள் கொடுக்கும் tractsகளை இதனாலேயே வாங்காமல் சென்றுவிடுவதுண்டு - அவர்கள் முன்னால் அதைக் கசக்கி எறியவேண்டாமே என்று.

மயில்கள் தொடர்ந்து வர ஆரம்பித்ததும் அலுப்புற்று, மிகவும் பணிவுடன் 'தயவு செய்து', 'பணிவுடன்', 'வேண்டிக்கொள்கிறேன்' என்ற சொற்களோடு அவருக்கு இனி இதுபோன்ற மயில்களை எனக்கு அனுப்ப வேண்டாமென்று மிகவும் பணிவோடு எழுதி சில மயில்கள் அனுப்பிப் பார்த்தேன். அவர் புரிந்து கொள்வது போல் தெரியவில்லை. அவரது மயில்கள் என்னைத் தொடர்ந்து விரட்டிக்கொண்டிருந்தன.

அடுத்த கட்ட முயற்சியாக சில பதில்களை அனுப்பிப் பார்த்தேன். உதாரணமாக, எப்படி //கைதேர்ந்தப் படைப்பாளன் ஏகஇறைவன் மிக நேர்த்தியாக ஒட்டகத்தை வடிவமைத்தான்// அதன் பால் எத்தகைய உயர்வானது, அதனை உண்டு //அந்தக் காலத்தில் அரேபியர்கள் மிகவும் திடகாத்திரமான உடலமைப்புடன் ஆரோக்கியமாக வாழ்ந்தார்கள் //.... என்று வந்த மயிலுக்குப் பதிலாக //இப்படி சிறப்பு மிக்க ஒட்டகத்தைப் படைத்த இறைவன் அதை அரேபிய நாட்டினருக்கு கொடுத்துவிட்டு நமக்கெல்லாம் வெறும் எருமையையும், பசுமாட்டையும் கொடுத்து ஏமாற்றிவிட்டானே... ச்சே!// என்றும், மதங்களைப் பற்றிய என் பதிவில் இஸ்லாத்திற்கு எதிராக எழுப்பியிருந்த கேள்விகளில் ஒவ்வொன்றாகவும் அனுப்பிப் பார்த்தேன்.

அவரது மயிலில் இன்னொன்று, நல்ல interesting-ஆக இருந்தது: //இன்று மிகப் பெரிய பொருளாதார வீழ்ச்சியை கண்டிருக்கக் கூடிய நாடுகளுடைய நிலையும் ஏறத்தாழ இறைவனை மறுத்து வாழ்ந்த தோட்டக்காரருடைய வாழ்க்கைக்கு ஒப்பானதாக அமைந்திருப்பதை அறியலாம். நானும் பதிலுக்கு //ஆப்ரிக்க கண்டத்தில் உள்ள பல "இறைவனுக்கு இணைகற்ப்பிக்காத தூய வாழ்வு வாழும் நாடுகள்" படு தரித்திரத்தில் காலங்காலமாக இருந்து வருகின்றனவே அவைகளில் அல்லல் படும் மக்களின் பாவங்களை இறைவன் மன்னித்து செல்வத்தை அதிகரிக்கச் செய்யவில்லையே.... அது ஏனுங்க? என்று கேட்டிருந்தேன்!

இவைகளையெல்லாம் நான் அவரிடம் பதில் எதிர்பார்த்து அனுப்பவில்லை; இவனுக்கெல்லாம் நல்லது சொன்னால் பயனேதுமில்லை; உட்டுருவோம் அப்டின்னு சொல்லி ஆளை உட்டுருவார்னு நினச்சித்தான் அனுப்பினேன். ஆனால் மீண்டும் மயில்கள் தொடர்ந்து வந்துகொண்டேதான் இருந்தன.

இதில் பயங்கர சோகம் எனக்குக் கடைசியாக வந்த கீழ்க்காணும் கட்டுரைதான். சோகம் ஒரு பக்கம்; அதே போல் இதை என் காதில் வந்து ஊதுவதால் மிகவும் கோபமும் எரிச்சலும் வந்தது. இனியும் இப்படியே விட்டுக்கொண்டிருக்க மனதில்லை. ஆகவே தனி மடல்களாக வந்ததைப் பொதுவில் வைக்கிறேன். அவரது கட்டுரை பச்சை வண்ணத்திலும், என் comments-களை சிகப்பிலும் தந்துள்ளேன்; கடைசியாக என் மனதில் தோன்றியவைகளையும் சொல்லியுள்ளேன்:


================================================================


ஏகஇறைவனின் திருப்பெயரால்...

எங்கே செல்லும் இந்தப் பாதை ???

ஏ.ஆர்.ரஹ்மானுக்கு ஆஸ்கார் விருது கிடைத்ததால் பெருமைப் படும் முஸ்லீம்களே !



ஒரு சினிமா தயாரிக்கப்படுவதற்கு முன் அதில் பங்கேற்கும் கலைஞர்களில் முழுமையாக கதையைக் கேட்கக் கூடியவர்கள் இசயமைப்பாளர்கள் தான் கதையைக் கேட்டு விட்டு சில நேரங்களில் பாடலாசிரியர் எழுதிக்கொடுத்தப் பாடல்களின் வரிகளைக் கூட மாற்றியமைக்கும் அதிகாரம் படைத்தவர்கள் இசையமைப்பாளர்கள்.

பம்பாய் என்னும் திரைப்படக் கதையை கேட்காமல் இசையமைத்துக் கொடுத்து எனது சமுதாயத்திற்கு தீங்கிழைத்து விட்டேன் என்று பின் வாங்க முடியாது பம்பாய் கதையை முழுமையாகக் கேட்டு அதற்கொப்ப இயைசமைத்துக் கொடுத்தவர் தான் ரஹ்மான் எனும் ஆஸ்கார் விருது பெற்ற இசையமைப்பாளர்.
பம்பாய் படத்தில் இஸ்லாமோ இஸ்லாமியரோ குறைத்துச் சொல்லப்பட்டதாகத் தெரியவில்லையே. எந்த விதத் தீவிரவாதத்திற்கும் எதிர்ப்பான படம்தானே அது.

முஸ்லீம் சமுதாயத்தின் மீது அபாண்டமாக பழிசுமத்தி, பொய்யையும், மதவெறியையும் தூண்டி விட்ட பம்பாய் திரைப்படத்தைப் பார்த்த ஒவ்வொரு முஸ்லீமும் அதை எதிர்த்து நிருத்த முடியாமல் உள்ளத்தால் செத்து மடிந்தான்.
இது உங்கள் பார்வையின் தவறென்றே நினைக்கிறேன்.


அவர் விருது வாங்கியதால் முஸ்லீம் சமுதாயத்திற்கு என்னப் பிரயோஜனம் ? !!!

இன்னும் யாராவது பம்பாய் போன்ற அல்லது அதையும் விஞ்சும் அளவுக்கு படம் தயாரித்தால் அதற்கும் இவர் இசையமைத்துக் கொடுப்பார் !

இன உணர்வு கொள்வதை இஸ்லாம் வெறுப்பதால் அவரை முஸ்லீம் என்றுப் பாராமல் ஒரு இந்தியனுக்கு கிடைத்தது என்று (சினிமப் பிரியர்கள் முஸ்லீம்களிலும் இருப்பதால்) பெருமைப பட்டுக் கொண்டால் நாம் இதை எழுதப் போவதில்லை.
பின் ஏன் இங்கே இப்படி எழுதியுள்ளீர்கள் என்று சொல்லவேயில்லையே.

இவரைப் போன்றவர்களை ஆதரிப்பவர்கள் பிற்காலத்தில் வருவார்கள் என்று பெருமானார் (ஸல்) அவர்கள் முன்கூட்டியே முன்னறிவிப்புச் செய்து விட்டார்கள்.

என் சமுதாயத்தாரில் சில கூட்டத்தார் தோன்றுவார்கள். அவர்கள் விபசாரம் (புரிவது), (ஆண்கள்) பட்டுத் துணி (அணிவது), மது (அருந்துவது), இசைக் கருவிகள் (இசைப்பது) ஆகியவற்றை அனுமதிக்கப்பட்டவையாகக் கருதுவார்கள்.…. ஆதார நூல்: புகாரி 5590


பட்டுத்துணி, தங்க நகை ஆண்கள் போட்டுக்கக்கூடாது; நின்னுக்கிட்டு ஒண்ணுக்கு இருக்கப்படாது; தாடி வச்சிக்க; குளிக்கும்போதுகூட ஆம்பிள இப்படியிப்படிதான் குளிக்கணும்; பொம்பிள இப்படியிப்படி குளிக்கணும்; துண்டு கட்டாம நாம குளிச்சா சாமிக்கு எப்படியிருக்கும்; இப்படியே நிறைய ... - இதெல்லாமா கடவுள் மனுசப் பயலுக்குக் கட்டளையா கொடுப்பாருன்னு எனக்குத் தோணுது. சரி, உங்க மதம் சொல்றதை நீங்க கண்ணை மூடிக்கிட்டு கேட்டுக்க வேண்டியதுதான்; அதை ஏன் எனக்கும் அனுப்பி கஷ்டப்படுத்துறீங்க. அதனாலதான நான் இப்படி கேக்க வேண்டியதுள்ளது. அதென்ன பட்டுக்கும், தங்கத்துக்கும் ஆண்களின் 'Y' chromosome-க்கும் அப்படி ஒரு ஜென்மப் பகை? யார் கண்டது .. அப்படி ஏதுமுள்ளது என்றொரு கட்டுரையைக் கூட சீக்கிரம் அனுப்பி வைப்பீங்க ..

அவருடைய ஃபீல்டில் அவர் திறமையாக செயல்பட்டார் இளம் வயதில் இரவு பகலாக உழைத்து விருதுபெற்றார். அது அவருக்குப்பெருமை அவருடைய ஃபீல்டைச் சேர்ந்தவர்களுக்குப் பெருமை.

நமக்குப் பெருமையா ?
அதாவது, இஸ்லாமியருக்கு இதில் என்ன பெருமை என்கிறீர்கள்; அப்படித்தானே?

நாம் அந்த ஃபீல்டை வெறுக்கக் கூடியவர்கள் இறைவனின் தூதர்(ஸல்) அவர்கள் சிந்தனையை சிதறடிக்கக் கூடிய இசையை வெறுத்திருக்கின்றார்கள்.
பின்ன ஏங்க, உங்க பாங்கொலியை மட்டும் இழுத்து நீட்டி 'இசை'யோடு தானே படிக்கிறீங்க? அந்த இசையைக் கேட்கும்போதும் உங்கள் சிந்தனை சிதறடிக்கப் படுகிறதோ?

உமையா கோத்திரமே! இசையை அஞ்சிக் கொள்ளுங்கள். அது வெட்கத்தை அழித்து உடல் உணர்வை தூண்டுகின்றது. மனிதாப மானத்தை மாய்த்துவிடுகின்றது. மதுவைப் போன்ற மயக்கத்தை ஏற்படுத்துகிறது. பெண்களை அதில் அறவே பங்கேற்கச் செய்யாதீர்கள். என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: (அறிவிப்பாளர்: யஸீது பின் வலீது(ரலி), ஆதாரம் : பைஹகீ)
அது வெட்கத்தை அழித்து உடல் உணர்வை தூண்டுகின்றதா ? இல்லையா ?
நிச்சயமா இல்லையே! எனக்குத் தெரிஞ்ச வரை தூளியில் தூங்குற குழந்தையில் இருந்து பாடையில போற வயசில இருக்கவங்க வரைக்கும் இசையை நல்லவிதமாகவே அனுபவிக்கிறதைத்தான் பார்த்திருக்கிறேன். மனசுக்கு எம்புட்டு சந்தோஷம் கொடுக்கிற விஷயம். ஒருவேளை இது உங்கள் பிரச்சனை மட்டுமேயோ என்னவோ?

இன்னொண்ணும் சொல்லணும். எல்லாவித இசையுமே முதலில் கடவுளை வணங்கத்தான் பயன்பட்டது. இசை என்றாலே மனதை சமனப்படுத்தும் அரிய கருவி என்றுதான் எல்லோரும் சொல்வதுண்டு. நான் அனுபவித்ததும் உண்டு. நம் தமிழ்/ இந்தியக் கலாச்சாரத்தில் இசைக்கு மிகவும் உயரிய இடம் கொடுக்கப்பட்டுள்ளது என்பது உங்களுக்குத் தெரியாமல் இருக்கலாம். இல்லை, பூனைக்கண்ணை மூடிக்கொண்டு உலகமே இருட்டு என்பதுபோல் சொல்லிக்கொண்டு இருக்கிறீர்களோ என்னவோ?! எப்படியோ, மனுசப் பிறவி மட்டுமில்லாமல் எல்லா ஜீவராசிகளுமே ரசிப்பது இசை என்றிருக்க உங்கள் மேற்கோள்கள் தனிப் பாதை விரிப்பது வேடிக்கையும் வேதனையுமான விஷயம்தான். இதுலேயும் ஏனுங்க பெண்களைத் தனியே அடக்கி வைக்கிறீங்க- ஒரு special class போட்டு? பெண்ணாய் பிறத்தல் பாவம்தானுங்க. :(


சினிமா என்றத் தீமையில் முன்னிலை வகிப்பது இசை தான். மூன்று மணி நேரம் ஓடக்கூடிய சினிமாவை முயற்சித்தால் சில நிமிடங்களில் மறந்து விடமுடியும்.

ஆனால் சினிமாவில் மூன்று நிமிடம் ஓடக் கூடியப் பாடலை பலவருடங்களானாலும் மறக்க முடிவதில்லை.

பாடலில் வரக்கூடிய ஆபாச வரிகளைக் கூட வெட்க உணர்வில்லாமல் ரோடுகளில் பாடிக் கொண்டுத் திரிவார்கள்,

வீடுகளில் உறவினர்கள் முன்னிலையில் உட்கார்ந்துக் கொண்டு வெட்க உணர்வில்லாமல் ஆபாச விரிகள் அடங்கியப் பாடல்களைப் பாடுவார்கள்.

அதையும் கடந்து கழிப்பறைகளில் மெய்மறந்துப் பாடுவார்கள். அதனால் தான் ( மதுவைப் போன்ற மயக்கத்தை ஏற்படுத்துகிறது. என்றுப் பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள் )

வீடு, ரோடு, கக்கூஸ் என்று கண்ட இடங்களிலும், கண்ட நேரங்களிலும் இமேஜைப் பற்றி அறவே சிந்திக்காமல் வாய்விட்டுப் பாடுவதற்கு மூளையை ஆக்ரமித்து சிந்தனைத் திறனை செயலிழக்கச் செய்வதில் திரைப்பட இசைக்குப் பெரும் பங்கு உண்டு.


ஒன்று புரிகிறது. Beauty is in the eyes of the beholders என்பார்கள். அது அழகுக்கு மட்டுமல்ல; இசைக்கும் இன்னும் எல்லாவற்றிற்கும் பொருத்தமான விஷயம். சினிமா பாட்டென்றாலே உங்களுக்கு வாந்தி வந்தால் எந்தவகைப் பாடல்களுக்கு மட்டும் நீங்கள் முக்கியத்துவம் கொடுத்துவருகிறீர்கள் என்று தெளிவாகப் புலனாகிறது. 'ஆடி அடங்கும் வாழ்க்கையடா ...' என்ற பாடலிலிருந்து ஓராயிரம் தத்துவப் பாடல்களையும் இன்னும் பல நல்ல கருத்துக்கள் சொல்லும் 'ஒவ்வொரு பூக்களுமே' போன்ற பாடல்கள் உங்கள் காதுக்குள் இறங்காமல், 'கல்யாணந்தான் கட்டிக்கிட்டு ஓடிப்போகலாமா', சின்னவீடு பாட்டுக்களுக்கு மட்டுமே உங்கள் காதுகள் திறந்திருந்தால் அது யார் தவறு? இந்த உலகம் - உங்கள் கடவுளே படைத்திருந்தாலும் - வாழ்க்கையில் நல்லது கெட்டது எல்லாமே கலந்தேயிருக்கும்.(அதுக்கும் காரணம் உங்கள் கடவுளாகத்தானே இருக்க வேண்டும். அப்படிப் படைத்துவிட்டு பிறகு அங்க போகாதே; இதைச் செய்யாதே என்றால் ... இப்படியும் கேட்டுக்கொண்டே போகலாம்.)அதில் நல்லதை எடுத்துப் பழகுங்கள். நல்லவைகளைக் கண்டுகொள்ளாமல் விட்டு விட்டு, தீயவைகளை மட்டும் கேட்டுவிட்டு, தீயவை வழி சென்றுவிட்டு எங்கேயும் தீமை என்று சொல்வது யாருடைய தவறு? நல்லது எதுவும் என் கண்ணில் படாது என்று யாரேனும் சொன்னால், அவர்களின் மனநிலையே அதற்குப் பொறுப்பு.

ஜாதி, மத பேதமின்றி அனைவரையும் சீரழிக்கக் கூடிய சினிமாவில் இசை பெரும் பங்கு வகிப்பதால் நம்மால் அதை எதிர்க்க முடியவில்லை என்றாலும் மௌணமாக இருந்து விடலாம் அதை விட்டு தீமைக்குப் துணைப் போகலாமா ? (ஆதரிக்கலாமா) .

ஒருவர் ஒரு தீமையைக் கண்டால் அவர் அதைத் தமது கரத்தால் தடுக்கட்டும்; முடியாவிட்டால் தமது நாவால் (சொல்லித் தடுக்கட்டும்) அதுவும் முடியாவிட்டால் தமது உள்ளத்தால் (அதை வெறுத்து ஒதுக்கட்டும்). இதுவே உறுதியற்ற இறைநம்பிக்கையின் இறுதிநிலையாகும்
அது என்ன - உறுதியற்ற இறைநம்பிக்கையின் இறுதிநிலை? அப்படியென்றால் என்ன புரியவில்லையே.) என்று அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் சொல்ல நான் கேட்டிருக்கிறேன்'. அறிவிப்பாளர் : அபூஸயீத் அல்-குத்ரீ (ரலி). முஸ்லீம்

وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُوْلَـئِكَ هُمُ الْمُفْلِحُونَ

நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும் அவர்களே வெற்றி பெற்றோர். திருக்குர்ஆன். 3:104

அஸ்ஸலாமுஅலைக்கும் வரஹ்.... அன்புடன் அதிரை ஏ.எம்.பாரூக்


அதிரை அவர்களே,

நான் இந்தப் பதிவுலகத்திற்குள் நுழைந்தபோது வெறும் ஒரு கடவுள் மறுப்பாளனாகத்தான் இருந்தேன். இங்கு நடைபெற்ற விவாதங்களே என்னை ஒரு மத வெறுப்பாளனாக மாற்றியது. மத நல்லிணக்கம் என்பது எப்படி கிட்டாத ஒரு கானல் நீர் என்பது புரிந்தது. என் மதம் என்று ஒவ்வொரு மத நம்பிக்கையாளர்களும் தங்கள் மதத்தை, அதைவிடவும் ஏதோ பாவம்போல் இருக்கும் அவரவர் சாமிகளை, கடவுள்களைக் காப்பாற்றுவதற்கே தாங்கள் எல்லோரும் பிறவியெடுத்து வந்ததாக நினைக்கும் மத நம்பிக்கையாளர்களும் நிறைந்த இந்த உலகத்தின் 'தரிசனம்' இங்குதான் கிடைத்தது.

ஒவ்வொரு மதத்தினரும் தங்கள் கடவுள்களைக் காக்க பிறந்த பிறவிகளாகத் தங்களை நினைத்துக் கொண்டு, தங்கள் மதக் கருத்துக்களே உன்னதமானவை என்ற நினைப்பில் இருக்கும்போது எந்த வித மாற்றுச் சிந்தனையும் அவர்களிடையே எப்படி ஏற்படப் போகிறது? ஒவ்வொரு மதத்தைப் பற்றியும் அடுத்த மதத்தினர் அல்லது என்னைப் போன்ற மத மறுப்பாளன் ஆயிரத்தெட்டு குறைகளையோ, கேள்விகளையோ எழுப்ப முடியும். ஆனால் வெறும் நம்பிக்கையை மட்டும் வைத்திருப்பவர்களுக்கு அந்தக் கேள்விகளுக்குப் பதில் கூற முடியாது என்பதும் தெரியும்; ஆனால் அதை நம்பிக்கையாளர்கள் ஒத்துக் கொள்வதுமில்லை. எங்கள் மதத்தில் எல்லாக் கேள்விகளுக்கும் பதில் உண்டு என்ற கூற்று மட்டுமே உண்டு. ஒரு வேத புத்தகம் எப்படி வந்தது; யார்மூலம் வந்தது; எப்படி மாறாமல் இருந்தது என்று சொல்லப்படுவதெல்லாம் முக்கியமல்ல; அதன் content தான் முக்கியம் என்னைப் பொறுத்தவரை. இந்தப் பொருளடக்கங்கள் எல்லா மதத்திலேயும் குறைபாடு கொண்டதாகவே நான் உறுதியாகக் கருதுகிறேன்; ஓரளவு அதை நிரூபித்துமிருக்கிறேன்.

மதங்களும் மாறப் போவதில்லை; மதம் கொண்ட மனிதர்களும் மாறப்போவதில்லை என்பது மட்டும் என்னவோ நிச்சயம். அவரவர்க்கு அவரவர் கொள்கை என்று வறட்டு வேதாந்தம் பேசிக்கொண்டு பேதங்களை வளர்த்துக் கொள்வோம். வேறென்ன செய்ய ... சொல்லுங்கள்.

கடைசியாக மறுபடியும் அதே வேண்டுகோளோடு முடிக்கிறேன்: உங்கள் மெயில்களை இன்னும் எனக்கு அனுப்பி என்னைத் துன்புறுத்தாதீர்கள்; இரக்கம் காட்டுங்கள் தயை செய்து.

நன்றி.



*

91 comments:

மணிகண்டன் said...

***
கடைசியாக மறுபடியும் அதே வேண்டுகோளோடு முடிக்கிறேன்: உங்கள் மெயில்களை இன்னும் எனக்கு அனுப்பி என்னைத் துன்புறுத்தாதீர்கள்; இரக்கம் காட்டுங்கள் தயை செய்து.
***

அவர் உங்களுக்கு இரக்கம் காட்ட எல்லாம் வல்ல இறைவனை நான் வேண்டிக்கொள்கிறேன். :)

மெயில்ல ஒரு ரூல் செட் பண்ணி அவர் கிட்டேந்து மெயில் வந்தா அழிச்சிடுங்க சார்.

தருமி said...

மணிகண்டன்,
அது சொல்ல விட்டுப் போச்சே. என் இரண்டாவது முயற்சி mail blockதான். ஆனாலும் இது அதையும் மீறி வந்துக்கிட்டு இருக்கே. இந்த நிமிடத்தில் என் ஜிமெயில் கணக்கில் அவரது பெயரில் 15 மெயில்கள் வந்து நிறுத்தப் பட்டுள்ளன. அவைகளை நான் திறக்கவில்லை. ஆனால் அதையும் தாண்டி மெயில்கள் வருவது எப்படியென்று எனக்குத் தெரியவில்லை.

உங்கள் வேண்டுகோளை எல்லாம் வல்ல இறைவன் நடத்திக்காட்டட்டும்.

Sathis Kumar said...

I Like ur comments...

எம்.எம்.அப்துல்லா said...

அதிரை.பாரூக்கின் செயல் அதி தவறு.பிறர் விரும்பாத ஒரு காரியத்தை அவர்களிடம் மீண்டும் மீண்டும் செய்யும் அதிரை.பாரூக்கை மிகவும் வன்மையாகக் கண்டிக்கிறேன்.

பிறரை உடல்ரீதியாகவோ மனரீதியாகவோ துன்பப்படுத்துவன் என்னைச் சேர்ந்தவன் அல்ல என்ற நபிகளின் மொழியை அதிரை.பாரூக்கிற்கு நினைவூட்டுகிறேன்.

உண்மைத்தமிழன் said...

உஷ்.. கண்ணைக் கட்டுதே சாமி..

உங்களுக்கும் அனுப்பிட்டாரா..?

நானும் இதே மாதிரிதான் ஒரு பதிலைப் போட்டேன்..

என்ன செய்யறது..? எல்லா மதத்துலேயும் இது மாதிரியான தீவிரவாதிகள் இருக்கத்தான் செய்கிறார்கள்..

வால்பையன் said...

ஹா ஹா ஹா

இதே மாதிரி தான் எனக்கும் வந்தது!
முதல்ல அன்பா சொன்னேன்,
படிச்சு பாருங்கன்னு வந்தது.

ஒரு புண்ணாக்கும் வேணான்னு சொன்ன பிறகுதான் நின்னுச்சு!

நீங்க கொடுத்த டோஸ் சூப்பர்.

இனி யாருக்காவது மெயில் போன நானும் ஒரு பதிவு போட்டு தாக்குறேன்.

இலவசக்கொத்தனார் said...

அவரோட எழுத்துகளுக்குப் பச்சை வண்ணம் அடித்த உம் நுண்ணரசியல் கண்டு பிரமித்து நிற்கிறேன். (நுகபிநின்னு போட்ட உமக்குப் புரியாது. அதான் முழுசா!)

அப்புறம் பொதுவில் மின்னஞ்சல் முகவரி எல்லாம் வைத்தா இப்படித்தான்!!

ப்ரீயா விடு மாமே!! ஒரு ரூல் போட்டு இந்த மின்னஞ்சல் முகவரியில் இருந்து வருபவை எல்லாம் நேரா குப்பைக்கு எனச் சொல்லுவீரா. அதை விட்டுட்டு இப்படி இலவச விளம்பரம் தரீரே!

தருமி said...

உ.த., வால்ஸ்,
அப்பாடா! நம்மள மாதிரி வேற ஆளுகளும் இருக்காங்கன்னு தெரிய வரும்போது கிடைக்கிற தெம்பு இருக்கே ... ம்..க்ரேட் போங்க.

G.Ragavan said...

:-) ஒங்களுக்கு நல்ல விஷயம் சொல்லனும்னு பிரியப்படுறாரு. கேட்டுக்கோங்க.

சமீப காலமாக என்னுடைய எண்ணங்கள்ள சிலபல மாறுதல்கள். கடவுள் நம்பிக்கை மாறலை. ஆனா மத நம்பிக்கை மாறியிருக்கு. அதே முருகன் பிடிக்கும். ஆனா இந்தக் குறிப்பிட்ட மதத்துக்குள்ளன்னு என்னை அடைச்சிக்க முடியலை. ஜனவரியில ஒரு வாரம் சவுதிக்குப் போயிட்டு வந்தேன். அங்க ஒரு அட்டைல.. என்ன மதம்னு எழுதச் சொல்லீருந்தாங்க. அதை ஒன்னும் எழுதாமக் குடுத்தேன்.

இதைப் பெருமையாச் சொல்லலை. ஆனா சொல்றேன். முருகான்னு சொல்றதால சர்ச்சுக்குப் போகாம இருக்க முடியாது. அங்கயும் எனக்குப் போகனும். இங்கயும் போகனும். என்னோட எண்ணங்களைக் கட்டுப்படுத்துற விஷயங்கள் வேண்டாம்னு தோணுது. அதோட விளைவுதான் இது.

G.Ragavan said...

:-) ஒங்களுக்கு நல்ல விஷயம் சொல்லனும்னு பிரியப்படுறாரு. கேட்டுக்கோங்க.

சமீப காலமாக என்னுடைய எண்ணங்கள்ள சிலபல மாறுதல்கள். கடவுள் நம்பிக்கை மாறலை. ஆனா மத நம்பிக்கை மாறியிருக்கு. அதே முருகன் பிடிக்கும். ஆனா இந்தக் குறிப்பிட்ட மதத்துக்குள்ளன்னு என்னை அடைச்சிக்க முடியலை. ஜனவரியில ஒரு வாரம் சவுதிக்குப் போயிட்டு வந்தேன். அங்க ஒரு அட்டைல.. என்ன மதம்னு எழுதச் சொல்லீருந்தாங்க. அதை ஒன்னும் எழுதாமக் குடுத்தேன்.

இதைப் பெருமையாச் சொல்லலை. ஆனா சொல்றேன். முருகான்னு சொல்றதால சர்ச்சுக்குப் போகாம இருக்க முடியாது. அங்கயும் எனக்குப் போகனும். இங்கயும் போகனும். என்னோட எண்ணங்களைக் கட்டுப்படுத்துற விஷயங்கள் வேண்டாம்னு தோணுது. அதோட விளைவுதான் இது.

தருமி said...

கொத்ஸ்,
//ஒரு ரூல் போட்டு இந்த மின்னஞ்சல் முகவரியில் இருந்து வருபவை எல்லாம் நேரா குப்பைக்கு எனச் சொல்லுவீரா...//

அதையும் செஞ்சிட்டோம்ல .. இரண்டாம் பின்னூட்டம் படிக்காம தவ்வி வந்திட்டீகளாக்கும் ...அதான்...

தருமி said...

சதீசு,
அப்துல்லா,

நன்றி.

Unknown said...

:-) உங்களுக்கு பொறுமை ஜாஸ்தி சார்! திருவிளையாடல் ஸ்டைல்ல கொட்டீட்டீங்க. இந்த அளவுக்குப் போனதுனால, நீங்க பதிவு போட்டது தான் சரி.

ஆமா, உமையா கோத்திரம்னா என்னா?

:-)

Thekkikattan|தெகா said...

தருமி,

நீங்களும் எத்தனை முறைதான் ஊதின சங்கையே ஊதுவீங்க இது யாரு காதுக்குள்ளரயாவது பாஞ்சிருக்கான்னுதான் தெரியல. எல்லாத் தரப்பும் ஒரே மாதிரிதான் தாளத்தை போட்டுகிட்டு வருதுக!

அதெப்படிங்க இந்த(மதம்) ஒரு விசயமட்டும் நிறம், மொழி, இடம் அப்படின்னு எல்லாத்தையும் தாண்டி மக்களை கிறக்கத்தில ஆழ்த்தி, அடிப்படை நாகரீகத்தைக் கூட இழந்து இப்படி தொந்தரவு பண்ண வைக்கும்?

இந்த நேரத்தில், எனக்கு நடைபெற்று வரும் 'க்ருஸ்து மிஷனரிகளின்' கண் மூடித்தனமான அணுகு முறைதான் (என்னய சொர்க்கத்தில சேர்க்க முயற்சி பண்றது) ஞாபகத்திற்கு வருது :-((. திருந்துங்கப்பா...

குடுகுடுப்பை said...

இறைவனைக்காப்பாற்ற மனிதர்கள் படும் பாடு ரொம்ப அதிகமா இருக்கு.
எனக்கு மதங்கள் மேல் ஈடுபாடு இல்லை,இவை அனைத்தும் உலகை ஆள நினைக்கும் அரசியலாகவே எனக்குப்படுகிறது.
ஏ.ஆர்.ரகுமான் போன்றவர்கள் தொடரும் சுபித்தத்துவம் சொல்லும் உன்னுடைய ஈகோவைப்புதைத்தல் எனக்கு பிடித்திருக்கிறது.அதற்கு கடவுள் தேவை எனில் நல்லதே.

வாழ்த்துக்கள் ஏ.ஆர்.ரகுமான்.

புருனோ Bruno said...

//அவரோட எழுத்துகளுக்குப் பச்சை வண்ணம் அடித்த உம் நுண்ணரசியல் கண்டு பிரமித்து நிற்கிறேன்.//

:)

தருமி said...

கெக்கேபிக்குணி,

உங்க கேள்விக்கு எனக்குப் பதில் தெரியாது.

தெரிந்தவர்கள் யாராவது வந்து சொல்றாங்களான்னு பார்ப்போம் - உங்கள் கேள்விக்கு இப்படி பதில் சொல்லணுமா? இல்லை, பார்த்தீங்களா, அந்த orders எல்லாமே அந்த உமையா கோத்திரத்தாருக்கு மட்டும்தானே; நமக்கில்லையே என்று சொல்லும் நுண்ணரசியலான்னு தெரியலையே!

தருமி said...

ஜிரா,
//என்னுடைய எண்ணங்கள்ள சிலபல மாறுதல்கள். ..//

வாங்க ஜிரா..ரொம்ப நாளாச்சு பாத்து.

ரொம்ப சந்தோஷம் .. இதுதான் ஆரம்பம். குழப்பமான பதிலாகத்தான் தந்திருக்கீங்க..இன்னும் கொஞ்சம் விளக்கமா சொல்லுங்க.

நானும் திரும்பிப்பார்க்கும்போது இதே மாதிரி குழப்பத்திலிருந்தது நினைவுக்கு வருகிறது. இந்தக் குழப்பமே ஒரு நல்ல ஆரம்பம்தானே ..

குழப்பம் தொடர வாழ்த்துக்கள்........

தருமி said...

பச்சை வண்ணம் பற்றிப் பேசும் கொத்ஸ், ப்ரூனோ,

என்னங்கய்யா இதில நுண்ணரசியல்? தெரிஞ்சதுதானே. சொல்ற விஷயத்துக்காரங்களுக்குப் பிடிச்சி வண்ணத்தையாவது சேர்க்கக் கூடாதா என்ன?

ஆமா .. அது என்ன காம்பினேஷன் .. இஸ்லாமுக்கும் பச்சை வண்ணத்துக்கும். போனவருடம் என் மாணவன் ஒருவன் இதே கேள்வியைக் கேட்க நானும் கூகுள் ஆண்டவரிடம் கேட்டுப் பார்த்தேன்; பதில் தெரியவில்லை. உங்களுக்கு ..??

ramachandranusha(உஷா) said...

ஹை, படிக்க சுவாரசியமாய் இருக்கு.இசையை கேட்டால் மன அழுத்தம் குறைகிறதோ இல்லையோ, இந்த மாதிரி காமடிகளைப் படித்தால் நிச்சயம் மன்சுக்கு நல்லது. நான் சும்மா இல்லாமல், இஸ்லாமிய, கிறிஸ்துவ (பெந்தகோஸ்) நண்பர்களிடம் அவங்க மதத்தைப் பற்றி பேச போக, கதை மாறிப்
போனது. இங்க மீட்டிங், அங்க ஸ்பீச்சுன்னு ஓரே குடைச்சல். இதுல மாற்று மதக்காரர்களுக்கு
ஸ்பெஷல் ஸ்பீச்சு வேற. காதுல ரத்தம் வராத குறை.

ஒரு ஸ்டேஜில் என் திட்டுகள் எல்லா கடவுள்களுக்கும் என்று எடுத்து சொன்னதும், ஆளை
விட்டார்கள்.

ராகவா, நான் பில்லீவர் என்று (எங்களைப் போல) போட்டு, அவங்க பிரஷரை ஏத்தாதே :-)


தருமி ஐயா, எனக்கு ஒரு டவுட்டு, எல்லா சாமிகளும் ஏன் குறிப்பிட்ட வட்டம் / எல்லை தாண்டி
யோசிப்பதில்லை. உதாரணமாய் ஓட்டகம் மேட்டர் போல!

Unknown said...

உமையா கோத்திரம்: போன முறை பின்னூட்டிய போது, அதே சொற்களில் கூகிளிட்டிருந்தேன், கிடைக்கவில்லை. வேறு இழையில் கிடைச்சுது: “உமையா” வம்சம் (Umayya) பற்றி கிடைத்தவை வித்தியாசமா இருக்கு.. (நபிகள், உமையா பின் அப்து ஷம்ஸ் இருவருக்கும் ஒரே மூதாதைன்னு கூட சொல்றாங்க?; இதைத் தவிர ஷியா/சுன்னி வேற்றுமையும் இருக்காம் கதைகளில்).

BTW, ”Islam venerates the color, as it expects paradise to be full of lush greenery”. விக்கி சொற்கள்; சுட்டில யாரோ தனிமனிதரின் விளக்கம்.

புதசெவி அல்லது "ரொம்ப அவசியம், க்கும்”:-)

SurveySan said...

அவர் எண்ணம் ஈடேறியது.

அவர் மயிலை ஊரே பாக்க பொதுவுல வச்சுட்டீங்க ;)

இவ்ளோ பெருசெல்லாம் படிச்சா, கண்ண கட்டுமே?
ஐயோ பாவம்.கூகிள் ரூல் எழுதி, தனி ஃபோல்டர்ல போய் சேர வைங்க. மாசத்துல ஒருக்கா, டெலீட் பண்ணிடலாம்.

✨முருகு தமிழ் அறிவன்✨ said...

இந்தக் கருத்துத் திணிப்பு எல்லா domain களிலும் இருக்கிறது.

எனக்கு ஒரு அன்பர் தலித்தியம்,பெரியாசியம் பற்றிய தொடர் மயில்களை அனுப்பிக் கொண்டிருக்கிறார்.

நானும் அன்புடன் பதில் அளித்துப் பார்த்து விட்டேன்.

இப்போது திருவாளர் ஜங்'கார்தான் உதவி செய்கிறார்.

எம்.எம்.அப்துல்லா said...

தருமி அய்யா போலி பகுத்தறிவு வேடம் போடும் ஒருவரது பதிவில் போட வேண்டிய பின்னூட்டத்தை தவறுதலாக உங்களது பெட்டியில் இட்டுவிட்டேன். தயவு செய்து அதை வெளியிட வேண்டாம்.

ambi said...

உங்களுக்குமா? இப்பத் தான் எனக்கு சந்தோஷமா இருக்கு. :))

அவரு வளச்சு வளக்சு அனுப்பிட்டு இருககாரு போல. நானும் அன்பா ஒரு தரம் சொன்னேன். அப்புறம் என்ன? கூப்பை கூடை தான்.

ரூல்ஸ் எல்லாம் செட் பண்ண முடியலையே பா ஜிமெயிலுல. யாகூல பிலாக் பண்ணிடலாம்.

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

அவரிடமிருந்து எனக்கும் தொடர்ந்து வருகிறது. mark as spam எனப் போட்டாலும் தொடர்ந்து வருகிறது. ஒவ்வொருமுறையும் டிலீட் செய்து கொண்டிருக்கிறேன் :(

KARTHIK said...

// கடைசியாக மறுபடியும் அதே வேண்டுகோளோடு முடிக்கிறேன்: உங்கள் மெயில்களை இன்னும் எனக்கு அனுப்பி என்னைத் துன்புறுத்தாதீர்கள்; இரக்கம் காட்டுங்கள் தயை செய்து.//

நானும் அவர்கிட்ட கெஞ்சாத கொரையா கேட்டுப்பாத்துட்டேன் ஆனா அவரு கண்டுக்கரமாதிரி தெரியல.

மறுபடியும் அனுப்பினா இந்த பதிவுக்கு பதில் சொல்லிட்டு அனுப்புங்கனு சொல்லிப்பாக்குரேன்.

அது என்னமோ வால் சொன்னா உடனே மயில் அவருக்கு வர்றது நின்னு போச்சு ஆனா எனக்கு மட்டும் தான் இன்னும் வருது என்ன உள்குத்தோ தெரியல

தருமி said...

எம்,எம்.அப்துல்லா,
நீங்கள் நிறுத்தச் சொன்னீங்க; நிறுத்திட்டேன். ஆனாலும் ஒரு சின்ன சந்தேகம் அது எனக்குத்தானோவென்று ...?!

தருமி said...

//இந்த(மதம்) ஒரு விசயமட்டும் நிறம், மொழி, இடம் அப்படின்னு எல்லாத்தையும் தாண்டி மக்களை கிறக்கத்தில ஆழ்த்தி, //

தெக்ஸ்.
நீங்களே சொல்லீட்டீங்கல்ல .. மதமே நீங்க சொல்ற அந்த கிறக்கத்தை உண்டு பண்றதுக்குத்தானே .. நல்லவனா இருன்னா கேப்பீங்களா .. மாட்டீங்க. அதனால் அந்தக் காலத்து புத்திசாலிங்க ஒண்ணு சேர்ந்து சாமின்னு மேல ஒண்ணு உக்காந்து பாத்துக்கிட்டே இருக்கு. நீ ஒழுங்கா இருந்தா, அப்பாலிக்கு உனக்கு என்னென்னமோல்லாம் தரும்; இல்ல கண்ணக் குத்தி நரகத்தில தள்ளிடும் அப்டின்னா ஒழுங்காவும் இருப்பீங்க. என்னென்னமோ கிடைக்கப் போவுது அப்டின்னு ஒரு கிறக்கமான எதிர்பார்ப்போடு இருக்க மாட்டீங்களா?

எல்லாம் ஒரு 'செட்டப்பு'தானே!

தருமி said...

//எனக்கு மதங்கள் மேல் ஈடுபாடு இல்லை,இவை அனைத்தும் உலகை ஆள நினைக்கும் அரசியலாகவே எனக்குப்படுகிறது//

குடுகுடுப்பை,

நீங்க சொல்றதுல ஒரு சின்ன மாற்றம் சொல்லணும்னு தோணுது. உலகை அல்ல 'மனுஷ ஜாதியையே',அதன் மூளை, மனசு,"ஆத்மான்னு ஒண்ணு" எல்லாத்தையும் ஒட்டு மொத்தமா ஆட்டிப் படைக்கத்தான் என்று எனக்குப் படுகிறது.

தருமி said...

//எனக்கு மதங்கள் மேல் ஈடுபாடு இல்லை,இவை அனைத்தும் உலகை ஆள நினைக்கும் அரசியலாகவே எனக்குப்படுகிறது//

குடுகுடுப்பை,

நீங்க சொல்றதுல ஒரு சின்ன மாற்றம் சொல்லணும்னு தோணுது. உலகை அல்ல 'மனுஷ ஜாதியையே',அதன் மூளை, மனசு,"ஆத்மான்னு ஒண்ணு" எல்லாத்தையும் ஒட்டு மொத்தமா ஆட்டிப் படைக்கத்தான் என்று எனக்குப் படுகிறது.

Joe said...

It's hard to fight with these kind of fundamendalists.

Good that you got rid of his torture, after a long while!

Indian said...

//தருமி ஐயா, எனக்கு ஒரு டவுட்டு, எல்லா சாமிகளும் ஏன் குறிப்பிட்ட வட்டம் / எல்லை தாண்டி
யோசிப்பதில்லை. உதாரணமாய் ஓட்டகம் மேட்டர் போல!
//

b'coz the creators (of god) were weak in geography.

Tey couldn't comprehend that different gods would appear in different parts of the world over different times.

எம்.எம்.அப்துல்லா said...

// ஆனாலும் ஒரு சின்ன சந்தேகம் அது எனக்குத்தானோவென்று ...?!

//

அய்யா...எனக்கு யார் முதுகிலும் குத்திப் பழக்கம் இல்லை. அது உங்களுக்கு எனும் பட்சத்தில் அதை அனுப்பிவிட்டு நிறுத்தச் சொல்லும் கோழை நானல்ல. அப்புறம் நீங்கள் உண்மையான பகுத்தறிவுவாதி. நான் அனுப்பியது ஒரு ”போலி பகுத்தறிவு வியாதிக்கு”.(பகுத்தறிவுவாதி என்ற போர்வையில் பகுத்தறிவுவாதிகலையே விமர்சிக்கும் ஒரு விஷகிருமிக்கு)

enRenRum-anbudan.BALA said...

Religion, according to me, is a very personal thing and should never be an hindrance to others around you !!!

வோட்டாண்டி said...

என்ன பிரச்னை உங்களுக்கு? இந்த மாதிரி குப்பை எல்லாம் உங்க மின்னஞ்சல் முகவரிக்கு வந்தா அத நீங்களே கட்டிக்கிட்டு அழுவ வேண்டி தானே? என் பதிவு போட்டு மொத்தமா எல்லாருக்கும் torture குடுக்குறீங்க ? நாங்க எங்களுக்கு வந்த குப்பை(மற்றும் பலான பலான ) மின்னஞ்சல எல்லாம் பதிவுல போட்டு "யான் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம்" torture குடுக்குரோமா?
மின்னஞ்சல் முகவரிய பொதுவாக்கி(பப்ளிக்)- சனியன தூக்கி பனியன்ல போட்டுகிட்டா இப்படி தான் ஆவும்.

சரி உடுங்க இந்த மாதிரி சைகோ தொந்தரவு குடுத்து குழந்தை தனமா காமெடி பண்றவங்கள உங்க பதிவுல இடம் குடுத்து அவங்கள பெரிய ஆளா ஆக்கிபுடாதீங்க

இந்த மாதிரி சில்லறை பசங்களுக்கு எல்லாம் basica ஒரு ஒண்ணாம் கிளாஸ் கேள்வி கேட்டு அமுக்கணும்
"If god is strong and powerful and created this world, Can he create a stone which he himself cannot move"??

அப்படி அந்த கல்ல செய்ய முடிஞ்சா அப்பறம் அவரால ஒரு கல்லை நகர்த்த முடியாது. so powerful taga remove பண்ணிடலாம்.

அப்படி அந்த கல்ல செய்ய முடியலன ஒரு கல்லை கூட செய்ய முடில இவர் எங்கேந்து
sun-->earth-->solar system-->milkway galaxy-->andromeda galaxy(நம்ப பக்கத்துக்கு galaxy)-->comet-->stars-->asteroids-->metor-->metorites இதெல்லாம் create பண்ணி இருப்பார்?

இந்த ஜுஜூபி கேள்விக்கு பதில் எல்லாம் எந்த booklayum இருக்காது..
ஏன்னா கீதை, பைபிள், குரான், வேதம், இத எல்லாம் எழுதுனவங்களுக்கு galileova கல்ல உட்டு அடிக்கவும், darwina விரட்டி விரட்டி அடிக்கவும் தான் தெரியும்.

இந்த "holy book"(என்ன எழவோ!) எல்லாம் படிக்கிறதுக்கு முன்னாடி கொஞ்சம் உங்க எதிர்த்த வீடு பையனோட 8th அறிவியல் booka வாங்கி படிங்க அப்பு!!
அதுக்கு அப்பறம் விலாவாரியா உக்காந்து பேசுவோம்

200 பெரியார் இல்லை 400 பெரியார் வந்தாலும் முடியாதுடா!!!!

தருமி said...

எம். எம். அப்துல்லா,
சந்தேகப்பட்டு நோகடிச்சிட்டேனோ. மன்னிச்சுக்கங்க. தப்புத்தான்.

தருமி said...

Indian,

கையைக் கொடுங்க இப்படி. என்னமா சொல்லியிருக்கீங்க!

//மனிதர்கள் தங்களுக்குத் தெரிந்த நிலப்பரப்பில் தாங்களே உருவாக்கிக்கொண்டதே சமயங்கள்; தங்கள் சாயலில் உருவாக்கியவைகளே கடவுளர்கள்.//

இது எனது 'எனக்கு மதம் பிடிக்கவில்லை...8' கட்டுரையில் உள்ளது. அதையும் கொஞ்சம் வாசித்துப் பாருங்களேன். parallel thinking .. same blood!!

நன்றி

தருமி said...

உஷா,

//நான் சும்மா இல்லாமல், இஸ்லாமிய, கிறிஸ்துவ (பெந்தகோஸ்) நண்பர்களிடம் அவங்க மதத்தைப் பற்றி பேச போக,...//

அட! நம்ம கேசு!!

//ஒரு ஸ்டேஜில் என் திட்டுகள் எல்லா கடவுள்களுக்கும் என்று எடுத்து சொன்னதும்...//

அட கடைசியில 'ஸ்டேஜிலேயே' போய் சொல்லிட்டீங்களா :-) சும்மா .. லுலுயாயிக்கி ..
ஆனா உண்மையில் ஒரு கூட்டத்தில காசு வாங்கிட்டு ஏதாவது கதை சொல்றதுக்கு ஆளிருக்குமாம். ஒப்ருத்தன் காசு வாங்கிட்டு கடைசியில ஸ்டேஜ்ல ஏறி உள்ளத சொல்லிட்டானாம்!

//எல்லா சாமிகளும் ஏன் குறிப்பிட்ட வட்டம் / எல்லை தாண்டி
யோசிப்பதில்லை.//
இந்தியன் சொல்லிட்டார். அவருக்கு நானிட்ட பின்னூட்ட தொடுப்பையும் தொட்டுப்பாருங்களேன்.

தருமி said...

கெக்கே பிக்குணி,
தகவலுக்கு நன்றி.

ஆனாலும் சும்மா சொல்லக்கூடாது சுவனத்தை. போயிடணும்னு எனக்கும் செம ஆசை!

தருமி said...

சர்வேசா!
செஞ்சு பாத்தாச்சு... ம்..ம்.. முழுசா பலனில்லை!

தருமி said...

அம்பி,
ஜ்யோவ்ராம் சுந்தர்
அறிவன்
அப்பாடா .. கொஞ்சம் திருப்தி

G.Ragavan said...

// தருமி said...
ஜிரா,
வாங்க ஜிரா..ரொம்ப நாளாச்சு பாத்து. //

ஆமாமா கடைசியா மதுரைல பாத்தது. மூனு வருசம் இருக்குமா? குறஞ்சது ரெண்டர வருசமாச்சும் இருக்கனும்.

// ரொம்ப சந்தோஷம் .. இதுதான் ஆரம்பம். குழப்பமான பதிலாகத்தான் தந்திருக்கீங்க..இன்னும் கொஞ்சம் விளக்கமா சொல்லுங்க. //

குழப்பமா விளக்கமா! அதாகப்பட்டது..... கடவுள் நம்பிக்கை இருக்கு. முருகனை இன்னும் பிடிக்கும். ஏசுநாதரையும் பிடிக்கும். மகமாயியையும் பிடிக்கும். புத்தரையும் பிடிக்கும். அல்லா கான்செப்டும் பிடிக்கும். எல்லாம் ஒன்னுதான்னு தோணுது. ஆனா முருகனைப் பிடிக்குங்குறதால இந்துன்னு சொல்லிக்கிற முடியலை. அப்படிச் சொன்னா... ஏசுவைப் பிடிக்கிறதால நான் கிருஸ்துவனாகவும் இருக்கனும். சரி... ரெண்டும்னே வெச்சுக்கிட்டா.... தான் இந்துன்னும் கிருஸ்துவன்னும்... முஸ்லீம்னும் சொல்லிக்கிறவங்க.... நீ எங்காள்னா... இப்பிடியிப்பிடி இருக்கனும்னு சட்டம் வைக்கிறாங்க. இல்ல.. அவங்கவங்களுக்குள்ள சட்டம் வெச்சிக்கிறாங்க. அதை ஏத்துக்க முடியலையே. இந்தியன் பேங்குல கணக்கு இருக்குறதால.... ஸ்டேட் பாங்குல கணக்கு வைக்காதன்னு சொன்னா எப்படி? இல்ல... ஒத்துக்க முடியாத சட்டமெல்லாம் வெச்சா எப்படி? அப்ப ஒதுங்கிக்கிறதுதானே நல்லது.

கடவுள் எல்லாருக்கும் பொதுன்னு சொன்னா... நம்மள எப்படி அடையாளப்படுத்திக்கிட்டாலும் நம்ம கூடத்தான இருக்கனும். அப்புறம் அடையாளம் என்னத்துக்கு? இப்பிடிப் போகுது எண்ணம்.

உண்மையச் சொல்லப் போனா இந்த எண்ணம் வர்ரதுக்குத் தூண்டுதலா இருந்தது வெட்டி பாலாஜியின் கேள்விகளும் கே.ஆர்.எஸ்சின் கேள்விகளும்தான்.

// நானும் திரும்பிப்பார்க்கும்போது இதே மாதிரி குழப்பத்திலிருந்தது நினைவுக்கு வருகிறது. இந்தக் குழப்பமே ஒரு நல்ல ஆரம்பம்தானே ..

குழப்பம் தொடர வாழ்த்துக்கள்........ //

குழப்பம் தொடரன்னு சொல்றீங்க.. ஆனா இப்பத்தான் தெளிவா இருக்கோமோன்னு தோணுது. :-) அதுதான் குழப்பம்னா... தொடரட்டுமே. :D

G.Ragavan said...

// ராகவா, நான் பில்லீவர் என்று (எங்களைப் போல) போட்டு, அவங்க பிரஷரை ஏத்தாதே :-) //

எனக்கு அந்தச் சந்தேகமும் வந்துச்சு... ஒன்னுமே எழுதாம விட்டா பிரச்சனையாயிருமோன்னு....ஆனாலும் முருகன் மேல பாரத்தப் போட்டு மதங்குற எடத்துல ஒன்னும் போடாமக் குடுத்தேன். அதான் இமிக்கிரேஷன் ஆளு சிடுசிடுன்னு விழுந்தானா?!?!

நம்பிக்கையின்மைன்னு சொல்ல மாட்டேன். கடவுள் நம்பிக்கையிருக்கு. ஆனா மதநம்பிக்கை இல்லை.


// தருமி ஐயா, எனக்கு ஒரு டவுட்டு, எல்லா சாமிகளும் ஏன் குறிப்பிட்ட வட்டம் / எல்லை தாண்டி
யோசிப்பதில்லை. உதாரணமாய் ஓட்டகம் மேட்டர் போல!//

சாமியெல்லாம் வட்டம் சதுரம்னு யோசிக்கலை. சாமியை வெச்சி பூமியை வளைக்கிற ஆசாமிங்கதான் வட்டத்துக்குள்ளயும் சதுரத்துக்குள்ளயும் யோசிக்கிறது.

Unknown said...

//ஆனாலும் சும்மா சொல்லக்கூடாது சுவனத்தை. போயிடணும்னு எனக்கும் செம ஆசை! // ஆஹா, சுவனம் போகப் போறீங்களா, பாக்யசாலி;-) எனக்கு அந்த வாய்ப்பு கிடையாதாம்:-))))))

ரவி said...

அந்த கோராமை இங்கயுமா ??

நான், வீ த பீப்புள், ஜோசப் பால் ராஜ் மூவரும் அம்புலிமாமி என்பவரிடம் மாட்டிக்கொண்டு மண்டை காய்கிறோம்./

இதுவரை 100 முறை சொல்லிட்டோம்...

என்ன தான் பன்றது எப்படி ப்ளாக் பன்றதுன்னே தெரியல..

G.Ragavan said...

// உண்மையச் சொல்லப் போனா இந்த எண்ணம் வர்ரதுக்குத் தூண்டுதலா இருந்தது வெட்டி பாலாஜியின் கேள்விகளும் கே.ஆர்.எஸ்சின் கேள்விகளும்தான். //

இப்பிடி மொட்டையா சொன்னதைத் தப்பா எடுத்துக்கக் கூடாதுல்ல. அதுனால விளக்கமும் சொல்றேன். சமயம் குறித்த கேள்விகளைத் தனிப்பட்ட முறையிலயும்...வலைப்பூக்கள்ளயும் அவங்க கேக்குறப்போ அவங்களுக்கு விடை சொல்லனுங்குறத விட எனக்கு விடை சொல்லனுங்குறதுக்காக யோசிச்சி யோசிச்சுதான் இந்த எண்ணங்கள் வந்திருக்கு. ஆகையால வெட்டி பாலாஜியும் கே.ஆர்.எஸ்சும் எனக்கு உதவி செய்திருக்கிறதாகத்தான் நான் நெனைக்கிறேன். கேள்விகளால் வேள்விகளை நான் செய்தேன்னு வைரமுத்து சொன்ன மாதிரி.

தருமி said...

//எல்லாம் ஒன்னுதான்னு தோணுது. //
மொதல்ல நம்மதுதான் உசத்தின்னு தோணும்; அடுத்து எல்லாம் ஒண்ணுதான்னு தோணும். அதுக்கு அடுத்த கட்டத்தில இதில எல்லாத்திலயும் என்னதானிருக்குன்னு மனசு கேக்கும் ... ஒண்ணுமே இல்லை; இது எல்லாமே மனுசப் பயலுவ புத்திசாலித்தனமா படைச்சது - Man's best creation is god - அப்டின்றது புரியும்.

இதுதான் enlightenmentக்குச் செல்லும் வழி!

//ஆனா இப்பத்தான் தெளிவா இருக்கோமோன்னு தோணுது.// இல்லைன்னுதான் நினைக்கிறேன் ஜிரா. இரண்டாம் நிலைதான் அப்டின்னு நினைக்கிறேன்.

வெட்டி பாலாஜியும் கே.ஆர்.எஸ்சும் எடுத்து உட்ட கேள்விகளையும் பார்க்கணுமே; தொடுப்பு கொடுங்களேன்.

தருமி said...

வோட்டாண்டி,
உடுங்க .. அவர், தான் செய்வது என்னதென்று தெரியாமல் செய்திருப்பாராக்கும்!

ஒரு "கடவுளுக்கு" அல்லது 'கடவுளின் தூதுவருக்கு' எப்படி இசையின் மீது இப்படிப்பட்ட வெறுப்பும், ஒரு பக்க சார்பும் இருக்க முடியும் என்றே யோசிக்காதவரிடம் இது போன்ற தத்துவார்த்தக் கேள்விகளைக் கேட்கணும் அப்டின்றது உங்களுக்கு டூ மச் அப்டின்னு தோணலை?!

தருமி said...

//எனக்கு அந்த வாய்ப்பு கிடையாதாம்//

என்ன கெக்கேபிக்குணி,
இப்படி சொல்லிட்டீங்க. உங்களுக்கு இல்லாதது எனக்கும் வேண்டாம்னு சொல்லிடுவேன். ஆமா, உங்களுக்கு ஏன் வாய்ப்பு இல்லைன்னு சொல்றீங்க... ஈசிதாங்க..வாங்க .. சேர்ந்து முயற்சிப்போம்; சேர்ந்து போனா நல்லா இருக்கும்ல!

தருமி said...

//அந்த கோராமை இங்கயுமா ??//

ரவி,
அடப்பாவமே! இத்தனை வீட்ல இத்தனை வாசப்படியா? டெக்னிகல் ஆளுகளுக்கே தடுப்புச் சுவர் கட்ட முடியலைன்னா க.கை.நா. என்ன பண்ணுவோம்?
கிமெயில்-காரங்களுக்கு மொத்தமா ஏதாவது எழுதி -suggestions/request - அனுப்பலாமா? யாஹூவில சுத்தமா நிப்பாட்டிடலாமாமே .. அது மாதிரி இங்கனயும் செஞ்சிரலாம்லா ..

தருமி said...

என்றென்றும் அன்புடன் பாலா,
//Religion, according to me, is a very personal thing.. //

none needs to wear it on his sleeve என்பதில் எனக்கு முழு உடன்பாடு.

உனக்கும் உன் கடவுளுக்குமான ஆன்மீகத் தொடர்பை உலகத்துக்குக் காட்டணுமா அப்டின்றதுதான் கேள்வியே. யாருக்காக இந்த "சத்தம்"? என்பதுதான் என் கேள்வி.

Unknown said...

தருமி அய்யா,

அதிரை ஃபாருக் அவர்கள் தமக்கு கிடைத்த ஒரு வழிக்காட்டுதல் தாங்களுக்கும் கிடைத்திட வேண்டும் என்பதற்காவோ

அல்லது அதை பதிவிக்கூடும் என்பதற்காவோ தொடர் மின்னஞ்சல் அனுப்பி இருக்கக்கூடும்...!

ஆனால், தாங்கள் விரும்பவில்லை என்பதை தெரிவித்தும் அனுப்பியமை ஏற்புடையவை அல்ல; இஸ்லாமிய மரபும் அதுவல்ல!


ஆனாலும் தாங்களும் ஒரு இறைவனை ஏற்று திராவிடனின் தாய் மார்க்கமான இஸ்லாத்தை ஏற்று முஸ்லிமாகிட வேண்டும்...

யாருக்கும் யாரும் அடிமை இல்லை; கண்டதே காட்சி கொண்டதே கோலம் என தாங்களும் இருந்திட கூடாது என்ற அவாவில் தான் தொடர் மின்னஞ்சல்...


அய்யா, ஏக இறையின் இறுதி வேதமாம் அல்குர் ஆனை ஒருமுறையேனும் தமிழ் மொழிப்பெயர்பில் படித்துப் பாருங்கள்...

அத்துடன் தமிழ் மொழிப்பெயர்பில் பகவத்கீதை யையும் பைபிளை யும் மிகவும் திறந்த மனதோடு படித்துப்பாருங்கள்


எது மனித வாழ்விற்கு சரியானவை என நினைக்கின்றீர்களோ அதை ஏற்றுக்கொள்ளுங்கள்...!

தருமி said...

வோட்டாண்டி சொல்றார்:

//ஒட்டகம்-துபாய்-உடல் ஆரோக்கியம்-எண்ணெய் வளம் - செல்வ செழிப்பு-இஸ்லாம்

room போட்டு உக்காந்து யோசிப்பாங்களோ?

பச்சை நிறத்தோட significance இப்ப தான் புரிஞ்சுது
இப்ப ஒரு சாதரண வார்த்தை ஓட பச்சைய சேர்த்து பாருங்களேன்
(பச்சை) த்ரோகம் ,"(பச்சை பச்சையா) திட்டுவேன்" ,"பச்சை the******)
இப்படி சில வார்த்தைங்களோட powera அதிகமாக்குது
பச்சைக்குதிரை--இப்படி சில வார்த்தைங்க்ளோட அர்த்தத்தையும் மாத்துது

ஒரு வேலை இஸ்லாம் மதத்துல "பெண்கள் ஆண்களின் அடிமைகள், சொத்துகள் , பெண் ஆணுக்கு சமம் இல்லை" இப்படி பல உயர்ந்த(?) தத்துவத்தை மறைமுகமா சொல்லறதுனால பச்சை அவங்களுக்கு பிடிச்சிருக்குமோ என்னவோ

பின்ன பச்சை குழந்தை மாதிரி பொண்ணுங்க வழிபடற எடத்துக்கு வர கூடாது, பொண்ணுங்க பள்ளிக்கூடம் போக கூடாது( --தாலிபான் ), பொண்ணுங்க உச்சி லேந்து உள்ளங்கால் வரைக்கும் cover பண்ணனும்( இல்லன ஆண் மனசு சஞ்சல படுமாம்!! உன் மனசுக்கு நீ dress போடாம ஒரு பொண்ண மூடிக்கிட்டு இருக்க சொல்றது எந்த ஊரு நியாயம்னு எனக்கு தெரில ), சானிய குட்டை பாவாடை போடா கூடாது(ஒரு ஆண்
இந்த துணிய தான் உடுத்தணும்னு எதாவது பெண் அமைப்பு போராட்டம் பண்ணி இருக்கா ? )

இதுல higlighte தலாக் matter தான் .

பச்சை குழந்தை மாதிரி "நான் சொன்னது தான் சரி, நான் தான் மத்தவங்கள விட ஒசத்தி "னு அடம் பிடிகம பச்சை தண்ணிய குடிச்சிட்டு யோசிங்க!!
அப்பறமா a.r.rahmana குறை சொல்லலாம்

--வோட்டாண்டி

தருமி said...

அதிரை,

//...என்பதற்காவோ தொடர் மின்னஞ்சல் அனுப்பி இருக்கக்கூடும்...!//
ஆக எதற்கு அவர் எனக்குத் தொடர் மின்னஞ்சல் கொடுத்தார் என்பது நிச்சயமாக உங்களுக்குத் தெரியாமலேயே "பஞ்சாயத்து" செய்ய முயல்கிறீர்கள் என்று நினைக்கிறேன். நல்ல உள்ளத்துக்கு நன்றி. ஆனால் அவர் எதற்காக அனுப்பினார் என்று அவரிடமிருந்தே தெரிந்துகொண்டு எழுதியிருக்கலாம்! உங்க ஊர்க்காரர் ஆச்சே.

என் கருத்தைத் தெரிவித்தும் அவர் தொடர்ந்து அனுப்பியது ஏற்புடைத்தது அல்ல என்று சொன்னது வரை சரி. அதன்பின் //இஸ்லாமிய மரபும் அதுவல்ல!// என்பது எதற்கு. இது ஒரு தனி மனித நாகரீகம் பற்றிய விஷயம். இதில் மதத்தை எதற்கு இழுக்கவேண்டும். மதம் இல்லாமல் மனிதனாக மட்டும் எந்த காரியத்திலும் இருக்கவே முடியாதா?

//திராவிடனின் தாய் மார்க்கமான இஸ்லாத்தை ஏற்று ...// இது என்ன புதுக்கதை; இதுவரை கேள்விப்பட்டதேயில்லை. நீங்கள் ஒரு நல்ல தமிழர் என்பதை நிரூபித்துவிட்டீர்கள். ஏனென்றால் நமக்குத்தான் ஒரு நல்ல குணம் உண்டு. நாம்தான் கல் தோன்றி மண் தோன்றாக்காலத்து மூத்த குடி என்று சொல்லிக் கொள்வோம்; நமது மொழிதான் உலகத்தின் முதல் மொழி என்று சொல்வோம்; நம் மொழியிலிருந்தே பல சொற்கள் பிறந்தன என்று சொல்லி மகிழ்வோம். அதுபோல் நீங்களும் ஒரு நல்ல தமிழராய், அதோடு ஒரு முஸ்லீமாக இந்தப் புதுக்கதையைச் சொல்லிறீர்களோ என்று ஓர் ஐயம். எதற்கும் ஒரு விளக்கம் கொடுத்தால் தெரிந்து கொள்வேன்.

//கண்டதே காட்சி கொண்டதே கோலம் என தாங்களும் இருந்திட கூடாது என்ற அவாவில் ...// என்ன இது? உங்கள் நண்பரின் தொடர் மெயிலுக்கான வேறு புதுக்காரணம் கண்டுபிடித்திருக்கிறீர்கள் இப்போது?!

இரண்டு கேள்வி: 1. நான் இப்போது 'கண்டதே காட்சி கொண்டதே கோலம்' என்றிருப்பதாகக் குற்றம் சாட்டுகிறீர்கள்; இல்லையா? நல்லது.

2.இஸ்லாமியனாகிவிட்டால் என் பார்வைகளும் வாழ்க்கையும் நேர்பாதைக்கு வந்துவிடும் என்று நினைக்கிறீர்களா? அதாவது உங்கள் மார்க்கமே எல்லாவற்றையும் சீர் செய்யும் அற்புத மார்க்கம் என்கிறீர்களா?
இதைத்தான் என் பதிவுகளில் ஆப்ரஹாமிய மதக்காரர்களின் superiority complex என்று கூறியிருப்பேன்; வாசித்துப் பார்த்துக் கொள்ளுங்கள்.

மூன்று 'புத்தகங்களை' வாசித்துப் பார்க்கச் சொல்லியுள்ளீர்கள். நல்லது; நன்றி. நீங்கள் சொல்லியுள்ளவைகளை ஏதோ கொஞ்சமேனும் வாசித்திருக்கிறேன்.அந்த வாசிப்பிலேயே போதுமென்ற அளவிற்கு எதிர்மறைக் கருத்துக்கள் உருவாகிவிட்டன. இன்னும் வாசித்தால் இன்னும் முற்றிலும் "கெட்டுப் போய்" விடுவேன். உதாரணமாக, இரண்டாம் வாசிப்பில்தான் //பட்டுத்துணி, தங்க நகை ஆண்கள் போட்டுக்கக்கூடாது; நின்னுக்கிட்டு ஒண்ணுக்கு இருக்கப்படாது; தாடி வச்சிக்க; குளிக்கும்போதுகூட ஆம்பிள இப்படியிப்படிதான் குளிக்கணும்; பொம்பிள இப்படியிப்படி குளிக்கணும்; துண்டு கட்டாம நாம குளிச்சா சாமிக்கு எப்படியிருக்கும் (அது எப்படி, நாம் அப்படி குளிச்சா சாமிக்கு வெக்கமாயிருக்கும்?); இப்படியே நிறைய ...// விஷயங்களை அதன்பின்பே தெரிந்து கொண்டு,//இதெல்லாமா கடவுள் மனுசப் பயலுக்குக் கட்டளையா கொடுப்பாருன்னு எனக்குத் தோன்றியது.// வேடிக்கையாகவுமிருக்கிறது!

என்னை வாசிக்கச் சொல்லியிருக்கிறீர்கள். நானும் பதிலுக்கு ஒன்று சொல்கிறேன். என் மதப் பதிவுகளில் உங்கள் மதத்தை நோக்கி நீட்டியுள்ள கேள்விகளை ஒரு முறை வாசித்துப் பாருங்கள்; பதில் இருந்தால் தாருங்கள். அட .. அதுகூட வேண்டாம்; இந்தப் பதிவில் சிகப்பெழுத்தில் நான் சொல்லியுள்ளவைகளுக்கும், உங்கள் அன்பரின் இப்பதிவின் கருத்துக்கும் மட்டுமாவது பதில் தாருங்கள். இசை பிடிக்காத ஒரு சாமியைப் பற்றியும் தெரிந்து கொள்கிறோமே. யார் கண்டது; நீங்கள் ஆசைப்படுவதுபோல் நான் மனம் மாறலாமே; மாற்றிய புண்ணியம் உங்களுக்கு வந்துவிட்டுப் போகட்டுமே!

பி.கு. வாசித்துப் பதில் தருவதானால் கொஞ்சம் ஒழுங்காக முழுமையாக வாசித்து, புரிந்து கொண்டு அதன் பின் பதில் தாருங்கள். இல்லாவிட்டால். //அதன் பால் எத்தகைய உயர்வானது என்று 'உங்க ஆள்' சொல்லியிருப்பதை நான் மேற்கோளிட்டிருப்பதைப் புரிந்துகொள்ளாமல், ஏதோ நான் எருமையும் பசுவும் பாலுக்குப் பதில் கோகோ கோலா தருவதாக நினைத்து வெட்டிப் பேச்சு பேசிக் கொண்டிருப்பதாக நீங்கள் நினைத்துவிடக்கூடாதல்லவா!

அதோடு, //..எல்லோருமே சொர்க்கத்துக்குப் போயிட்டால் நரகத்துக்கும் ஆள் வேண்டாமா? என்று கேட்ட கழுதைகளும் அதிரையில் உண்டுதானே! // எனக்கு 'ரிசர்வேசன்' கொடுத்தமைக்கு அதிரை "ஆட்களுக்கு" (உங்க மொழியில், "கழுதைகளுக்கு" )நன்றி.

வோட்டாண்டி said...

பட்டு- silkworm லேந்து edukkuraanga இத ஆம்பளை போடலாம்-போடக்கூடாது னு சொல்றது
திண்டுகல்ல இடி இடிச்சா திருப்பதில மழை பெய்யுற மாதிரி இருக்கு

அதே மாதிரி gold is just an ordinary metal . அத pottukittaa இந்த பிரச்னை வரும், வராதுன்னு solravanga ellarukum சிறந்த காமெடிக்கு oscar குடுக்கலாம்.
இதே மாதிரி diamonda வச்சி hindu philosphyla சில பல காமெடிகள் இருக்குன்னு நெனைக்கிறேன்.
diamond is just another form of carbon. graphite is also a form of carbon. அது எப்படி diamonda pottukitta வர்ற ராசி graphitea போட்டுகிட்டா வர மாட்டேன்கிது?

//குளிக்கும்போதுகூட ஆம்பிள இப்படியிப்படிதான் குளிக்கணும்
இந்த விஷயதுலேந்து ஒண்ணு மட்டும் புரியது. நம்ப அம்மணமா இருக்குறது கடவுளுக்கு பிடிக்கில போல இருக்கு. பிறக்கும்போது ஒரு வேளை அந்த காலத்துல ஜெட்டி போட்டுகிட்டே பிறந்தாங்களோ என்னவோ!!
நிக்கவும் முடியாம உக்காரவும் முடியாம படுக்கைலையே ஒண்ணுக்கு போறவங்க எல்லாரும் (6 மாச குழந்தை மற்றும் சில பாவப்பட்ட நோயாளிகள்) நரகத்துக்கு டிக்கெட் எடுக்க வேண்டி தானா ?
உடலுறவு போது எதாவது "code of conduct" & "dress code"la இருக்கணும்னு கடவுள் எதாவது சொல்லிருகாரா ? அந்த samayathula சாமிக்கு வெக்கமா இருக்காதா ?
(இந்த கடவுள நெனைச்சாலே பாவமா இருக்கு.. எந்த எந்த matteruku எல்லாம் "code of conduct" solli kuduka vendiyadha இருக்கு பாருங்க!!!)

நன்மனம் said...

அதிரை பாருக் தொடர்ந்து எரிச்சலடையவைத்திருக்கிறார். தவறு.

'மார்க்கத்தில் வற்புறுத்தல்கள் இல்லை' என்ற குரான் வசனத்தை அவருக்குத் திருப்பினால் ஒருவேளை திருந்துவாராயிருக்கும்.

அவரை நீங்கள் இந்தப்பதிவின் மூலம் நன்றாக அவமானப்படுத்திவிட்டதாகத் தெரிகிறது. மனுஷன் இனி திருந்திருவார்.

("அன்பையே ஏற்றுக்கொண்டேன்: ஏ ஆர் ரகுமான் :-) )

தருமி said...

//நன்றாக அவமானப்படுத்திவிட்டதாகத் தெரிகிறது. //

மன்னிக்க வேண்டும் நன். என் நோக்கம் நிச்சயமாக அதல்ல. ஒரு பொருந்தாத கொள்கையைக் கேள்வியாக்குவதே முதல் நோக்கமேயொழிய தனிப்பட்ட மனிதரை அவமானப்படுத்த இல்லை இப்பதிவு. வேறு பதிவுகள் வந்தபோது அதிகமாகக் கண்டு கொள்ளாமல் விட்டது போல் இப்பதிவின் கருத்தை விட முடியவில்லை. அதுதான் காரணம்.

நன்மனம் said...

//வேறு பதிவுகள் வந்தபோது அதிகமாகக் கண்டு கொள்ளாமல் விட்டது போல் இப்பதிவின் கருத்தை விட முடியவில்லை. அதுதான் காரணம்.//

அன்பின் தருமி அய்யா,

அதிரை பாருக் வேண்டாம் என்று சொன்ன பிறகும் தொடர்ந்து மயிலிட்டது தவறு என்றால் நீங்களாவது பெயர் குறிப்பிடாமல் ஒரு முஸ்லிம் பதிவர் என்றோ ஒரு அதிரைக்காரர் என்றோ எழுதியிருக்கலாம். அ.பாருக் பதிவராக இருக்கும்நிலையில் அவர் எதை எழுதினாலும் இனி ஒரு 'முத்திரை'பார்வையுடனே பார்க்கப்படும் நிலையாகிவிட்டது.

//ஒரு பொருந்தாத கொள்கையைக் கேள்வியாக்குவதே முதல் நோக்கமேயொழிய... //

உங்கள் முதல்நோக்கம் புரிகிறது.ஆனால்
பொருந்தாத கொள்கை என்று எதைச் சொல்கிறீர்கள் என்று புரியவில்லை

கொள்கைமீது நம்பிக்கையற்ற நிலையில் பொருந்துகிறது - பொருந்தவில்லை என்ற கவலை தேவையில்லையல்லவா.

ஒருமனதுக்கு; ஒரு மண்ணுக்குப் பொருந்தாததாக தோன்றுவது இன்னொரு இடத்தில்; மனதில் பொருந்தலாமல்லவா!

எவருக்கும் தீங்காக ஆகாமலிருக்கின்றதா; தீங்கு செய்யாமலிருக்கின்றதா என்று பார்த்தால் போதுமே!

ஒரு பகிர்தலுக்காகவே இதனை எழுதுகிறேன். தவறாக நினைக்க வேண்டா.

தருமி said...

//ஒருமனதுக்கு; ஒரு மண்ணுக்குப் பொருந்தாததாக தோன்றுவது இன்னொரு இடத்தில்; மனதில் பொருந்தலாமல்லவா!//

நியாயம்தான். ஆனாலும் இசையை மறுக்கும்/வெறுக்கும் ஒரு கொள்கையை, அதுவும் அது ஒரு மதக்கருத்தாக இருப்பதை, கடவுள் சொன்னார் என்று சொல்வதை அப்படி மற்றவை போல் எடுத்துக் கொள்ள என்னால் முடியாததால்தான் இந்தப் பதிவு.

//நீங்களாவது பெயர் குறிப்பிடாமல் ஒரு முஸ்லிம் பதிவர் என்றோ ஒரு அதிரைக்காரர் என்றோ எழுதியிருக்கலாம்//
எழுதியிருக்கலாம். ஆனால் அவருக்கு இதில் ஏதும் பிரச்சனை இருக்காதென்று நினைக்கிறேன். ஏனெனில் அவர் தன் முகவரியோடு எனக்குத் தகவல்கள் அனுப்பிவருகிறார். பெயர் குறிப்பிடாமல் எழுதியிருந்தால் இதைவிட அது பெரியதாக இருந்திருக்கும் என்றே நினைத்தேன்; நினைக்கிறேன்.

//ஒரு பகிர்தலுக்காகவே இதனை எழுதுகிறேன். தவறாக நினைக்க வேண்டா.//
நிரம்பவும் நிதானமாகவும், நன்றாகவும் உங்கள் கருத்தைக் கூறியமைக்கு மிக்க நன்றி. சிலவைகளில் உங்கள் கருத்தோடு முழுமையாக ஒன்றிப் போக முடியாமைக்குப் பொருத்தருள்க.

மீண்டும் நன்றி.

கோவி.கண்ணன் said...

//ஆனாலும் தாங்களும் ஒரு இறைவனை ஏற்று திராவிடனின் தாய் மார்க்கமான இஸ்லாத்தை ஏற்று முஸ்லிமாகிட வேண்டும்...
//

:)))

ஐயோ ஐயோ !

தருமி said...

ஒரு ட்ரெய்லர்!!:

(அடுத்த என் பதிவில் வரும் ஒரு விஷயத்தை - இந்த பதிவுக்கு அது மிகவும் சரியாக இருப்பதால் - அதை ஒரு ட்ரெய்லராக இங்கே ஓட்டுகிறேன்!!)


இந்த தடவை எந்தக் கட்சிக்கு ஓட்டுப் போடணும் அல்லது போடக்கூடாது; நீ ஓட்டு போட்டது சரியான முடிவல்ல - இப்படி எதைப் பற்றியும் நாம் விவாதிக்கலாம். ஆனால் (sabath day for jews)சனிக்கிழமை நீ எந்த வேலையும் செய்யக்கூடாது என்றால் அதைப்பற்றி விவாதிக்கக் கூடாது; ஏனெனில், அது மதம் தொடர்பானது; கேள்வி கேட்காமல் அதை மதிப்பதே சரி என்பது எவ்விதத்தில் சரி? (இந்தப் பதிவைப் பொருத்தவரை, 'இசை ஏன் ஒரு மதத்தால் மறுக்கப் படவேண்டும் என்று கேட்பது சரிதானே?)

சமயம் தொடர்பான நம்பிக்கைகளைக் கேள்வி கேட்கக்கூடாது என்று நாம் நமக்குள் ஒரு வழக்கத்தைக் கைக்கொண்டிருக்கிறோம் என்பதைத் தவிரவும், பகுத்தறிவோடு சிந்தித்தால் எல்லாவற்றையும் போல் இந்த மத நம்பிக்கைகளையும் நாம் ஏன் வெளிப்படையாக விவாதிக்கக்கூடாது? - DOUGLAS ADAMS

தமிழ்ப்பதிவன் said...

//இசை ஏன் ஒரு மதத்தால் மறுக்கப் படவேண்டும் என்று கேட்பது சரிதானே?//

சரிதான்

கீழ்த்தர இச்சையைத் தூண்டுவது-இசையாக இருந்தாலும்-விலக்கப்படவேண்டும் (ஹராம்) என்று கூறுவதும் இஸ்லாம் தான்.

தொழுகைக்கான அழைப்பையே இனிதாக நீட்டி முழக்குவதும் இஸ்லாம் தான்.

தான்சேனிலிருந்து ஏஆர் இரகுமான் வரை; கேட் ஸ்டீவன்ஸிலிருந்து ஜாகிர் உசேன் வரை புகழ்பெற்ற இசைவாணர்களும் இஸ்லாமியர்கள்தான் - அதுவும் Devouted முஸ்லிம்கள் இல்லையா!

அவ்வளவு ஏன்,

குரானை "மற்றவர்கள்" (முஸ்லிமல்லாதவர்கள்) தொடவே கூடாது என்பதும் முஸ்லிம்கள் தான்

குரான் முஸ்லிம்களுக்கு மட்டும் சொந்தமல்ல - அனைவருக்கும் உரியது என்று கூறுபவர்களும் முஸ்லிம்கள் தான்.

ஆக, ஓரிருவர் சொல்வதை/கேட்பதை வைத்தோ எங்கோ ஒன்றிரண்டு படிப்பதை வைத்தோ முடிவுக்கு வராமல் முழுமையாகப் படித்துச் சிந்தித்து முடிவுக்கு வருவதை நான் என்னளவில் கடமையாக்கிக்கொள்கிறேன்.

தருமி said...

In the Name of allah ..



REBUILDING AL-KA'BAH AND THE ARBITRATION ISSUE:

When the Messenger of Allâh (Peace be upon him) was thirty five, Quraish started rebuilding Al-Ka‘bah. That was because it was a low building of white stones no more than 6.30 metres high, from the days of Ishmael. It was also roofless and that gave the thieves easy access to its treasures inside. It was also exposed to the wearing factors of nature — because it was built a long time ago — that weakened and cracked its walls. Five years before Prophethood, there was a great flood in Makkah that swept towards Al-Ka‘bah and almost demolished it. Quraish was obliged to rebuild it to safeguard its holiness and position. The chiefs of Quraish decided to use only licit money in rebuilding Al-Ka‘bah, so all money that derived from harlotry, usury or unjust practices was excluded. They were, at first, too awed to knock down the wall, but Al-Waleed bin Al-Mugheerah Al-Mukhzumi started the work. Seeing that no harm had happened to him, the others participated in demolishing the walls until they reached the basis laid by Abraham. When they started rebuilding its walls, they divided the work among the tribes. Each tribe was responsible for rebuilding a part of it. The tribes collected stones and startwork. The man who laid the stones was a Roman mason called Baqum. The work went on in harmony till the time came to put the sacred Black Stone in its proper place. Then strife broke out among the chiefs, and lasted for four or five days, each contesting for the honour of placing the stone in its position. Daggers were on the point of being drawn and great bloodshed seemed imminent. Luckily, the oldest among the chiefs Abu Omaiyah bin Mugheerah Al-Makhzumi made a proposal which was accepted by all. He said: “Let him, who enters the Sanctuary first of all, decide on the point.” It was then Allâh’s Will that the Messenger of Allâh (Peace be upon him) should be the first to enter the Mosque. On seeing him, all the people on the scene, cried with one voice: “Al-Ameen (the trustworthy) has come. We are content to abide by his decision.” Calm and self-possessed, Muhammad (Peace be upon him) received the commission and at once resolved upon an expedient which was to conciliate them all. He asked for a mantle which he spread on the ground and placed the stone in its centre. He then asked the representatives of the different clans among them, to lift the stone all together. When it had reached the proper place, Muhammad (Peace be upon him) laid it in the proper position with his own hands. This is how a very tense situation was eased and a grave danger averted by the wisdom of the Prophet (Peace be upon him).

Quraish ran short of the licit money, they collected, so they eliminated six yards area on the northern side of Al-Ka‘bah which is called Al-Hijr or Al-Hateem. They raised its door two metres from the level ground to let in only the people whom they desired. When the structure was fifteen yards high they erected the roof which rested on six columns.


When the building of Al-Ka‘bah had finished, it assumed a square form fifteen metres high. The side with the Black Stone and the one opposite were ten metres long each. The Black Stone was 1.50 metre from the circumambulation level ground. The two other sides were twelve metres long each. The door was two metres high from the level ground. A building structure of 0.25 metre high and 0.30 metre wide on the average surrounded Al-Ka‘bah. It was called Ash-Shadherwan, originally an integral part of the Sacred Sanctuary, but Quraish left it out.
Saifur Rahman al-Mubarakpuri

Islamic University Al-Madina Al-Munawwara


www.quran.com

தருமி said...

ஏகஇறைவனின் திருப்பெயரால்....



சகோ: தருமி சார அவர்களுடைய வலைப் பூவில் நாம் எழுதிய 'எங்கே செல்லும் இந்தப் பாதை ' எனும் தலைப்பிலானக் கட்டுரையைப் பதிந்து அவரும் சில கேள்விகளை எழுப்பி வாசகர்களையும் விமர்சனம் செய்ய விட்டிருந்தார்.



அவற்றிற்கு பதில் எழுதத் தெரியாமல் நமக்கில்லை முஸ்லீமல்லாத ஒருவர் நம்மை விமர்சித்ததும் வரிந்து கட்டிக்கொண்டு பதில் கொடுக்க வேண்டியதில்லையே பொறுமையுடன் இருப்போம் என்பது ஒரு நோக்கம், அதற்கடுத்து சில இறைநம்பிக்கையை வலுப்படுத்தும் விதமான நமது ஆன்மீக கட்டுரைகளுக்குத் தேவையான ஆதாரங்களை இணையங்களில் தேடுவதற்காக அதிக நேரம் தேவைப்படுகிறது அதனால் கிடைக்கும் நேரத்தில் தான் நன்மையை ஏவித் தீமையைத் தடுக்கும் அரும் பணிக்காக நேரம் ஒதுக்குகிறோம்.



இதற்காகத் தான் '' வலைப்பூ ' திறக்காமல் இருக்கிறோம் வலைப்பூவில் பதிந்தனுப்பினால் தேவையற்ற பலக் கேள்விகள் வரும் ஒருவரோடு ஒருவர் மோதவிடும் போக்குத் தொடரும் அதனால் நடுவில் மத்தியஸ்தம் செய்ய வேண்டி வரும். அது நமக்கே மணஉலைச்சல் ஏற்பட்டு மார்க்கப் பணியில் தொய்வு ஏற்படலாம் அதனால் வலைப்பூவில் பதியாமல் சாதாரண மெயிலாகவே அனுப்புகிறோம்.



ஏ.ஆர்.ரஹ்மானுக்கு கிடைத்த விருதை அதுவும் அவர் முஸ்லீம் என்பதால் ஒருசில முஸ்லீம்கள் ஆஹா, ஓஹோ என்ற ஆர்ப்பாட்டங்கள் செய்ததால் அவர்களைக் கண்டித்து எழுதினோம்.



உண்மையில் இந்தியத் திரைப்படத் துறைக்கு ஆஸ்கார் விருது கிடைத்ததற்காக பெருமைப் பட வேண்டும் என்றால் சாதி, மத பேதமின்றி பிங்கி குறும் படத்திற்கு கிடைத்த விருதுக்காக பெருமைப் படலாம் அது ஒரு வழியில் நன்மையை மக்களுக்கு ஏவியது .



இறைத்தூதர் அவர்களால் தடைசெய்த இசைத் துறைக்கு கிடைத்த விருதுக்காக அவர் முஸ்லீம் என்பதால் நபிமொழியை முதுக்குப் பின் தூக்கி எறிந்து விட்டு குதூகலம் அடைந்ததால் இனவெறி கொள்ள வேண்டாம் என்று எழுதினோம்.



இனவெறி - ஓர் விளக்கம்

அல்லாஹ்வின் தூதர் அவர்களே ! மாச்சரீயம் என்பது யாது? என நான் வினவியபோது அதற்கு நபியவர்கள், ''உன் சகோதரன் தவறிழைக்கும் போது அவனைத் தடுத்து நிறுத்துவதாகும் ''என பதிலுரைத்தார்கள், மாறாக, நம் சகோதரன் அல்லது உறவினர் என்பதற்காக அவன் செய்யும் தவறுகளுக்கு உடந்தையாக இருந்தால் அது இனவெறி, மாச்சரீய உணர்வுகளுக்கு வழிவகுக்கும், தனக்கு ஒரு நீதி, அடுத்தோருக்கு ஒரு நீதி! தன் குடும்பத்தினருக்கு ஒரு நீதி, மற்றோருக்கு அநீதி! என்ற ரீதியில் செயல்படும் வெறித்தனத்திற்கு நபியவர்கள் இதன் மூலமாக முற்றுப்புள்ளி வைத்தார்கள். மாச்சரீய உணர்வுகளை அகற்றிட இதுவே சிறந்த உபதேசம்.



தருமி சார் சுட்டிக் காட்டுவதுப் போன்று நாம் ஒரு இனவெறியராக இருந்தால் நாமும் ரஹ்மானை ஆஹா ஓஹோ என்றுப் பாராட்டித் தள்ளி இருப்போம்.



இசையின் தீமையை முன்பே சுருக்கமாகப் பட்டியலிட்டதால் அதை மீண்டும் எழுத முடியாது ஆனாலும் சகோதரர் அவர்கள் ஒருசில கருத்தாழமிக்கப் பாடல்களையும், ஆபாசக் கருத்துக்கள் அடங்கியப பாடல்களையும் எழுதி நல்லதை எடுத்துக் கொள்ளும் படி எழுதி இருந்தார்.

அவர் சொல்லக்கூடிய நல்லக் கருத்துள்ளப் பாடல்கள் பெரும்பாலும் வயது முதிர்ந்த வட்டாரத்திற்குள் முடங்கி விடுகிறது தவறான கருத்துக்கள் அடங்கியப் பாடல்களே அதிகபட்ச இளைஞர்கள் மத்தியில் பிரபலமாகி விடுகிறது



போற்றுதலுக்குரிய தாய்மையின் அங்க அவயங்களை அதுப் போன்ற ஆபாசக் கருத்துக்கள் அடங்கியப பாடல்கள தோலுரிக்கின்றன ஈவ்டீஸிங் காரர்களுக்கு அதுவேப் பெரும்பாலும் உந்துதலாக அமைந்து விடுகிறது.



கேள்வி ? : ஓட்டகம் ஏன் பாலைவனத்திற்கு மட்டும் இறைவன் அனுப்பினான் நமக்கு ஏன் அனுப்பவில்லை ?
பதில் ! : இன்னும் ஒட்டகம் சம்மந்தமான தொடர் முடியவில்லை முடியும் வரை பொறுமையாப் படியுங்கள் அது ஏன் பாலைவனத்திற்கு மட்டும் அனுப்பப் பட்டது என்பதை புரிந்து கொள்வீர்கள் ?



கேள்வி ? : அமெரிக்க, ஐரோப்பிய பொருளாதார வீழ்ச்சி இறைவனின் கோபம் என்றால், ஆப்பிரிக்க கண்டத்தின் வறுமை யாருடைய கோபம் இது தருமி சார் அவர்களுடைய கேள்வி ?


பதில் ! : தன்னுடைய செல்வ செழிப்பால் பிறரை அடிமைப் படுத்தி வாழ வேண்டும் என்று ஆசைப்பட்டவன் உலகில் வாழ்ந்ததாக வரலாறே கிடையாது அவன் அழிந்தேப் போவான் அதுதான் இன்றைய அமெரிக்கா, ஐரோப்பா சந்தித்து வரும் அவலநிலை.



ஆப்பிரிக்க மக்கள் இதுவரை செல்வ செழிப்பை சந்தித்ததில்லை ஆனால் அவர்களுக்கும் இறைவன் செல்வ நிலையை வழங்குவான் அதுமாதிரியான ஒரு காலம் வரும்பொழுது தங்களுடைய பழைய நிலையை மறந்து நேட்டோப் படைகளை உருவாக்கிக் கொண்டு வீட்டோ அதிகாரம் செய்தால் அங்கும் இறைவன் தனது வல்லமையை நிரூபிப்பான் ஆனால் இதெல்லாம் உடனே நடக்காது ப்ரதர் அரசு அன்று கேட்கும் தெய்வம் நின்று கேட்கும்'.



கேள்வி ? : கவிமதி சார் நமக்கு நேரடியாக அனுப்பிய கேள்வியில் கடவுள் நம்பிக்கையாளர்களே இலங்கையைப் பாருங்கள் மக்கள் கொன்றொழிக்கப்படுகின்றார்கள் இதைப் பார்த்து விட்டு கடவுளை ஏற்றுக் கொள்ளுங்கள் என்று அவரது வலைப் பூவையும் அனுப்பி இருந்தார் .


பதில் ! : பின்வரும் காலத்தில் ஆட்சியாளர்களால் குழப்பங்களும் அநீதிகளும் ஏற்படும் அவ்வாறான வேளையில் நீங்கள் ஆயுதம் தரித்து ஆட்சியாளருடன் எதிர்த்து யுத்தம் செய்யாமல் பொறுமையைக கடைப்பிடியுங்கள் அரசுக்கு கட்டுப்படுங்கள் அரசன் மக்களுக்கு அநீதி இழைத்தால் அரசனுக்கு நியாயத்தை அறவழியில் எடுத்துரையுங்கள் என்றேப் பெருமானார் (ஸல்) அவர்கள் அவர்களுடைய தோழர்களிடம் உபதேசம் செய்தார்கள்.



இழந்த உரிமையை மீட்டெடுப்பதற்காக அறவழியில் போராடும் காலமேல்லாம் ரெத்தம் சிந்த வேண்டிய அவசியம் வரவே வராது அறவழியைத் தவிர்த்து ஆயுதமேந்தி அரசை எதிர்த்தால் அது எந்த நாடாக இருந்தாலும் அப்பாவி மக்கள் நசுக்கப்படுவார்கள். அதனால் அரசுக்கெதிராக போராட நினைக்கும் தீவிரவாதக் குழுவை வளரவிடாமல் மக்கள் ஆரம்பத்திலேயே முடக்கி விடவேண்டும்.



இன்றும் இஸ்லாமிய பெயரைச் சொல்லி உலகில் சிலக் குழுக்கள் யுத்தப் பிரகடனம் செய்வது இஸ்லாம் அனுமதித்ததல்ல.



இலங்கை அரசுக்கெதிராக ஆயுதம் தூக்கிய விடுதலைப் புலிகள் இயக்கத்தில் ஆரம்பத்திலேயே மக்கள் இணைந்து கொள்ளாமல் அவர்களை வெறுத்து ஒதுக்கி இருந்தால் இன்று ரெத்தம் சிந்த வேண்டிய நிலை வந்திருக்காது. இலங்கையின் தமிழின மக்களுடைய அபரிமிதமான செல்வாக்கு கிடைத்ததால் வரம்பு மீறி நடந்தார்கள் சொந்த நாட்டின் பிரஜைகளை ( முஸ்லீம்கள் எனபதால் ) பள்ளிவாசலில் தொழுகையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கையில் முதுகுக்குப் பின்னால் நின்று காட்டுமிராண்டித தனமாக சுட்டுத் தளளினார்கள் ஊரை விட்டு வெளியேற்றினார்கள், அடைக்கலம் கொடுத்த நாட்டின பிரதமரை அநியாயமாக கொன்றொழித்தார்கள். PJ_QA_ViduthalaiPuligal



காட்டுமிராண்டிகளாக வாழ்க்கை நடத்திய மக்களிடத்தில் கடவுள் நம்பிக்கையை ஆழமாகப் பதியச் செய்து மனிதாபிமானத்தை வேரூன்றச் செய்த பெருமானார் அவர்களுடைய கூற்றுக்களை கிஞ்சிற்றும் மாற்றமில்லாமல் ஏற்றுக்கொண்டு அதனடிப்படையில் வாழ்க்கையை அமைத்துக் கொள்கின்றவர்கள் கிளர்ச்சியாளர்களுடன் கைகோரத்து அரசுக்கெதிராக ஆயுதம் ஏந்தி கிளர்ச்சி செய்யாமல் சகிததக் கொண்டால் அந்த நாட்டில் அமைதி நிலவும் .



இறைவனுடைய, இறைத்தூதருடைய கட்டமைப்பபை மீறி கலகம் செய்தால் அங்கே ரெத்த ஆறு ஓடும் அதன்பிறகு இறைவன் இருக்கின்றானா ? என்று இறைவனை குறைக்கூறி இறைமறுப்பாளரானால் மனிதாபிமானம் செத்துப் போகும்.



கேள்வி ? : பம்பாய் திரைப்படத்தில் நாம் பார்த்தளவுக்கு இனவெறயைத் தூண்டும் காட்சிகள் ஒன்றுமில்லை தீவிரவாதத்தை மட்டும் தான் காட்டியது தருமி சார் அவர்களுடைய கேள்வி இது.
பதில் ! : அந்தப் படத்தை மீண்டும் ஒருமுறை அவரைப் பார்க்கும்படிக் கேட்டுக் கொள்கிறோம். பம்பாயில் நடந்த இனக்கலவரத்தை முஸ்லீம்களே முதலில் தொடங்கியதாக காட்சி அமைத்து முஸ்லிம்களை கலவரக் காரர்களாக மணிரத்னம் சித்திரித்திருந்தார்.



உண்மை அதுவல்ல வரலாற்று சிறப்புமிக்க ஒருப பள்ளி வாசலை குறிப்பிட்ட ஒரு மதவெறியர்கள் இடித்துத் தள்ளினார்கள் அதே வகையறாக்கள் பம்பாயில் மூவாயிரம் முஸ்லீம்களை மராட்டியப் போலீஸ் துணையுடன் கொலை செய்தார்கள் உண்மை அவ்வாறிருக்கு உண்மைக்குப் புறம்பாக முஸ்லீம்களே முதலில் தொடங்கியதாக அவருடைய சினிமாவில் சித்தரித்திருந்தார் அந்தப படத்தில் முஸ்லீம்களை வெறியூட்டும் இன்னும் பல... நாம் அதை விவரிக்க விரும்ப வில்லை.





கேள்வி ? : உமையாக கோத்திரம் என்றால் என்ன ?
பதில் ! : உமையாக கோத்திரம் என்பது குடும்பப் பெயர் அவ்வளவு தான் குடும்பப் பெயரை கூறி அழைப்பதே அன்றைய அரேபியர்களுடைய வழக்கில் இருந்ததாகும். இதற்காக நிறைய ஆராய்ச்சிகளை மேற்கொள்ள வேண்டாம்.





கேள்வி ? : வால் பையன் சார் அவர்கள் எனக்கு கடவுள் நம்பி;க்கை இல்லை நான் திக காரன் எனக்கு மெயில் அனுப்பி உங்கள் நேரத்தை வீணடிக்கதீர்கள் என்று எழுதி இருந்தார்.


பதில் ! : பொதுவானப் பலக் கருத்துகளை அனுப்புவோம் பொறுமையாகப் படிக்கும் படி பதில் எழுதினோம் அதற்கு அவர் மறுப்பு தெரிவிக்க வில்லை ஆனாலும் தருமி சாருடைய வலைப் பூவில் அவரும் விமர்சனம் செய்துள்ளார். தருமி சார் திக காரர் என்பதால் அவருடைய தலைவர் பெரியார் அவர்களுடைய கொள்கை(?)யை கீழ்கானும் லிங்கைப பார்வையிடட்டும்.



கடவுள் நம்பிக்கையை ஊட்டுவதே நமதுப் பணி, மதம் கடந்தும் அதைப பரப்புகிறோம்,

அதைத் தொடர்ந்து செய்து வருகிறோம் இறைவன் நாடும் வரை செய்வோம்.

விரும்பியவர் படித்துப் பயன் பெறலாம் .



وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُوْلَـئِكَ هُمُ الْمُفْلِحُونَ



நன்மையை ஏவிஇ தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும் அவர்களே வெற்றி பெற்றோர். திருக்குர்ஆன். 3:104



அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.... அன்புடன் அதிரை ஏ.எம்.பாரூக்

வால்பையன் said...

தருமி தி.க.காரர் அல்ல!

அவர் ஒரு மனிதர் அவ்வளவே!
நீங்கள் நினைப்பது போல் எங்கேயும் அவர் எந்த ஒரு அடையாளத்தையும் வைத்து கொள்ளவில்லை.

நீங்கள் அளித்துள்ள பதிலுக்கும் விளக்கங்களுக்கும் நான்கு விதமான எதிர்கேள்விகளை எங்களால் வைக்க முடியும்.

எங்களுக்கு என்றும் ஒருவருடய நம்பிக்கையை அசைத்து பார்க்கவேண்டி ஆசை இருந்ததில்லை. நீங்களாக வாததிற்கு வரும் பட்சத்தில் எந்த கேள்வியையும் வருவதற்கு சம்மதம் இருந்தால் வரலாம். அதுவும் உங்கள் விருப்பமே! எங்களுக்கு வேறு வேலைகள் இருக்கிறது. உங்களுக்கு இருப்பது போல் எங்களுக்கு இறைப்பணி இல்லை, காரணம் எங்களுக்கு இறைவனே இல்லை.

//வால் பையன் சார் அவர்கள் எனக்கு கடவுள் நம்பி;க்கை இல்லை நான் திக காரன் எனக்கு மெயில் அனுப்பி உங்கள் நேரத்தை வீணடிக்கதீர்கள் என்று எழுதி இருந்தார்.


பதில் ! : பொதுவானப் பலக் கருத்துகளை அனுப்புவோம் பொறுமையாகப் படிக்கும் படி பதில் எழுதினோம் அதற்கு அவர் மறுப்பு தெரிவிக்க வில்லை //


நான் மறுப்பு தெரிவிக்காதிருந்தால் இன்றும் நீங்கள் எனக்கு அனுப்பி கொண்டிருப்பீர்கள். தருமி சாருக்கு முன்னரே நான் பதிவிட்டிருப்பேன்.

நான் இரண்டாம் முறையும் வேண்டாம் என்றே கூறினேன்.

//கடவுள் நம்பிக்கையை ஊட்டுவதே நமதுப் பணி, மதம் கடந்தும் அதைப பரப்புகிறோம்,//

எல்லா மததுக்கும் கடவுள் இருக்கு!
வெட்டியாக கடவுளுக்குள் சண்டை மூட்டி விடாதீர்கள்

தருமி said...

அதிரை பாரூக்,
//கடவுள் நம்பிக்கையை ஊட்டுவதே நமதுப் பணி, மதம் கடந்தும் அதைப பரப்புகிறோம்,//

தொடருங்கள்; வாழ்த்துக்கள்.

//விரும்பியவர் படித்துப் பயன் பெறலாம் .//
அப்படியானால் ஒன்று செய்யுங்கள். நீங்களே ஒரு வலைப்பூ ஆரம்பித்து அதில் உங்கள் பதிவுகளையிட்டால் //விரும்பியவர் படித்துப் பயன் பெறலாம் .//

இனி எனக்கு உங்கள் பதிவுகள் வராது என்று நம்புகிறேன்; நன்றி.

வோட்டாண்டி said...

தலித்துகளை கிறிஸ்துவ மதத்துக்கு மாற்ற பல இடத்துல முயற்சிகள் நடக்குற மாதிரி. நாத்திகர்களை இஸ்லாதுமுக்கு மாத்துற வேலை வலைபூல அமோகமா நடக்குது.
freedom of religion படி இது தப்பு, இத சமாளிக்க தான்
//கடவுள் நம்பிக்கையை ஊட்டுவதே நமதுப் பணி, மதம் கடந்தும் அதைப பரப்புகிறோம்,//
இந்த மாதிரி சில பிட்ட போட வேண்டியது .

//பம்பாயில் நடந்த இனக்கலவரத்தை முஸ்லீம்களே முதலில் தொடங்கியதாக காட்சி அமைத்து முஸ்லிம்களை கலவரக் காரர்களாக மணிரத்னம் சித்திரித்திருந்தார்.//

அந்த படத்துல பம்பாயில நடக்குற கலவரத்துக்கு முன்னாடி saffron parties நடத்துன ஊர்வலம், ராமர் கோவில் கட்ட வீடு வீடா போய் வசூல் செஞ்சது, அத எல்லாம் காட்டி இருந்தார். பம்பாயில நடந்த கதைய மட்டும் படத்துல சொல்றப்ப பாபர் மசூதிய இடிச்சது, அதோட வரலாறு, முன்னாடி அங்க ராமர் கோவில் இருந்துச்சா இல்லையானு எல்லாத்தையும் காட்டிடு அப்பறம் கலவரத்த காட்டி இருந்தா படம் 3 மணி நேரத்த தாண்டி இருக்கும் . சரி கலவரம் ஆரம்பிச்சது இந்துக்கள்னு காட்டுனா இவங்க சும்மா இருக்க மாட்டாங்க. அப்ப screena split பண்ணி simultaneousa இரண்டு காட்சிகள ஒட்டுரத தவிர வேற வழி இல்லை.

//தன்னுடைய செல்வ செழிப்பால் பிறரை அடிமைப் படுத்தி வாழ வேண்டும் என்று ஆசைப்பட்டவன் உலகில் வாழ்ந்ததாக வரலாறே கிடையாது அவன் அழிந்தேப் போவான் அதுதான் இன்றைய அமெரிக்கா, ஐரோப்பா சந்தித்து வரும் அவலநிலை.//

அமெரிக்கா, ஐரோப்பா இப்ப பொருளாதார சிக்கல்ல இருக்குது உண்மை தான். ஆனா எந்த முதலாளியும் தெருக்கு வரல. வேலை இல்லாம தெருல நிக்கிறது எல்லாம் நடுத்தர வர்க்கம்.

//அவர் சொல்லக்கூடிய நல்லக் கருத்துள்ளப் பாடல்கள் பெரும்பாலும் வயது முதிர்ந்த வட்டாரத்திற்குள் முடங்கி விடுகிறது தவறான கருத்துக்கள் அடங்கியப் பாடல்களே அதிகபட்ச இளைஞர்கள் மத்தியில் பிரபலமாகி விடுகிறது
போற்றுதலுக்குரிய தாய்மையின் அங்க அவயங்களை அதுப் போன்ற ஆபாசக் கருத்துக்கள் அடங்கியப பாடல்கள தோலுரிக்கின்றன ஈவ்டீஸிங் காரர்களுக்கு அதுவேப் பெரும்பாலும் உந்துதலாக அமைந்து விடுகிறது.//

என்ன ஒரு நல்ல எண்ணம். அதாவது இசை நல்ல சமாச்சாரம் தான் ஆனா அது மூலமா கெட்ட விஷயத்த பரப்பிடுறாங்க-இத தான சொல்ல வரீங்க.
நானும் அதே தான் சொல்ல வர்றேன். கத்திய வச்சி நான் பழம் மட்டும் தான் வெட்டுறேன், பக்கத்துக்கு வீட்டுக்காரன் ஆள வெட்டுறான் . கத்திய தடை செஞ்சிருவோம்!! computerla ஆபாச மின்னஞ்சல் அனுப்புறாங்க அதானல computer எல்லாத்தையும் kolutthiruvom. அட இது மட்டுமா இஸ்லாம் மத்த எல்லாரும் நல்ல வழிலேயே follow பண்ணாலும் சில தீவிரவாதிகள் இருகதன செய்றாங்க. ஒரே அடியா இந்த மதங்கள எல்லாத்தையும் தடை செஞ்சிருவோமே!!!!

தருமி said...

வோட்டாண்டி,
கடைசிப் பத்தி ... ம்.. ம்.. . பின்னீட்டீங்க. நல்ல லாஜிக். இதுனாலதான் சொல்றேன் பதிவரா ஆயிருங்கன்னு.

ஆனா .. சில இடங்களில் லாஜிக் எடுபடுவதேயில்லை :(

வோட்டாண்டி said...

//நல்ல லாஜிக். இதுனாலதான் சொல்றேன் பதிவரா ஆயிருங்கன்னு.
இது லாஜிக்கே இல்லை அப்பறம் எங்க எடுபடறது

வோட்டாண்டி said...

a.r.rahman ஒரு இந்தியன் என்பதை விட்டு விட்டு, அவர் ஒரு முஸ்லிம், அவர் எங்க இனத்துலையே இருந்துட்டு எங்க மதத்துக்கு துரோகம் செஞ்சிட்டார்னு(ஒரு இந்து இத பண்ணிட்டு oscar வாங்கிருந்தா சும்மா இருந்திருப்பாங்க போல இருக்கு!!) சொல்றத கூட மன்னிச்சு விட்டு விடலாம். ஆனா ஒட்டகம் எங்க மத அடையாளம், மாடு இந்து மத அடையாளம், ஆடு கிறிஸ்துவ மத அடையாளம், நாய் அவங்க மத அடையாளம், நரி இவங்க மத அடையாளம், எறும்பு எங்க மத அடையாளம்-- உங்க மத சண்டைல மனுஷங்க எல்லாம் மிருகமா மாறி ரொம்ப நாள் ஆயாச்சு. தயவு செய்து மதங்கள பத்தி ஒண்ணுமே தெரியாத ஐந்தறிவு(அதுக்கு மட்டும் தான் அஞ்சறிவா?) படைத்த உயிரினங்களையாவது உங்க மத சண்டைல இழுக்காதீங்க.
வேணும்னா குரங்க எல்லா மதத்துக்கும் பொதுவா அறிவிச்சிடலாம்.. ஏன்னா மத சண்டை போடுற உங்கள மாதிரி ஆளுங்கள பாத்துதான் "மனிதன் கண்டிப்பா குரங்குலேந்து தான் வந்தான்னு" நாங்க நம்ப ஆரம்பிச்சோம் . அந்த நம்பிக்கைக்கு அடையாளமா "நாங்க இன்னும் மனிதனா மாறல evoulution stagela சின்ன fault ஆகி போச்சு.. நாங்க எல்லாம் இன்னும் குரங்குகள் தான்"னு உங்க லாஜிக் இல்லாத பதிவுகள் (ஆறாவது அறிவு-logic) மூலமா திரும்ப திரும்ப சொல்லிட்டு இருக்கீங்க..

தருமி ஐயா அவர்களுக்கு ஒரு சிறு வேண்டுகோள்: இனிமேல் "மனிதர்களின்" மின்னஞ்சல் மற்றும் பின்னூட்டங்களை மட்டுமே seriousaga எடுத்துக்கொள்ளவும்..

தருமி said...

நல்ல மனுஷங்களுக்கு ஒரு சொல் அப்டின்னு சொல்லுவாங்க ... ஆனா .. ஆதிரை பரூக் என்னென்னு தெரியலை. அவரது மதத்தொண்டே அவருக்கு பெருசாம்; மனுச நியாயங்கள் பெருசு இல்லை போலும். அதனால உடாம இன்னும் அனுப்பிக்கிட்டு இருக்கார்.

கடைசியா வந்தது - write an essay on the desert adapations of camel அப்டின்ற கேள்விக்கு ஒரு essay எழுதி அனுப்பியிருக்கார். ரொம்ப நல்லா இருந்தது. பத்துக்கு ஒம்பது வரை கொடுக்கலாம். என்ன படம் ஒண்ணும் போட்டு பாகம் குறிச்சிருந்தா பத்துக்கு பத்தே போடலாம்தான்.

ஆனா அதோடு - //11:6. பூமியில் உள்ள உயிரினம் எதுவாக இருந்தாலும் அவற்றுக்கு உணவளிப்பது அல்லாஹ்வின் பொறுப்பாகும்.// அப்டின்னு ஒரு மேற்கோள் கொடுத்திருக்கார்.

மனுசனோட வரலாற்றில் நெடுகெங்கிலும் நடந்ததும், இன்றும் எத்தியோப்பா, சோமாலியாவில் நடந்துவரும் பட்டினிச்சாவு நினைவுக்கு வந்தது. அதனால் அந்த மயிலுக்கு, அல்லா பொறுப்போடு இருந்தால் உலகத்தில் எதற்கு பசியும் பட்டினியும்? என்று பதில் கொடுத்திருக்கிறேன். நான் வேறென்னதான் செய்ய முடியும் .. நீங்களே சொல்லுங்க.

வோட்டாண்டி said...
This comment has been removed by a blog administrator.
வோட்டாண்டி said...

desert adaption of camel..என்ன ஒரு நல்ல தலைப்பு..ஆனா பாருங்க எஜமான் ஒட்டகம் பாலைவனத்துல மட்டும் தான் ராஜா. கடவுள் படைத்த(நான் சொல்லலை) பனி பிரதேசங்கள்ள கடவுள் படைத்த(முஸ்லிம்கள் சொல்றாங்க) ஒட்டகம் வாழ முடியாதது என்ன காமெடினு எனக்கு தெரில.

சரி இந்த ரேஞ்சுக்கு கொள்கைகள பத்தி பேசுறாங்களே இவங்க எந்த லெவலுக்கு இவங்க கொள்கைல stronga இருந்திருகாங்கனு பாப்போம். 10th அறிவியல்ல "explain birth and death of a star" அப்படின்னு ஒரு கேள்வி இருக்கு. (இந்த அறிவாளிகள் எல்லாம் 10th ஆவது pass பண்ணி இருப்பாங்கன்னு நான் நம்புறேன்). அதுக்கு எந்த ஹிந்துவும் கடவுள் தான் உலகத படைச்சார் அவர் தான் ஒரு நட்சத்திரம் உருவாகவும் காரணம் அழியறதுக்கும் காரணம்னு எழுதல. எந்த ஒரு முஸ்லிமும் அல்லா தான் நட்சத்திரத்த படைச்சார்னு எழுதல. எந்த ஒரு கிறிஸ்துவனும் கடவுள் 6 நாள்ல உலகத படைச்சிட்டு ஏழாவது நாள்(இது தான் original ஏழரை) rest எடுத்தார்னு எழுதல(ஆமாம் எவ்ளோ பெரிய வேலை பண்ணி இருக்காரு!!). எல்லா நாதாரிங்களும் stellar evolution-->protostar formation-->hydrogen to helium fusion, In death of a star accumulation of helium-->red giant phase-->white dwarf-->black hole அப்படின்னு தெளிவா படம் போட்டு எழுதுறாங்க
கொசுறு தகவல்: சூரியன் இன்னும் 5000 million years வரைக்கும் தான் இருக்கும், red-giant phasela சூரியன் நுழையிறப்ப mercury,venus,earth, மூன்றும் காலி..(கடவுள் வந்தாலும் காப்பாத்த முடியாது. பூமிக்கே நம்ப விஞ்ஞானிகள் நாள் குறிச்சிடாங்க!!)

இப்படி கேவலம் மதிப்பெண்களுக்காக தங்கள் கொள்கையையே மாற்றி கொண்டு (விற்று விட்டு ) இங்க வலை பதிவுல அல்லா உலகத்த படைச்சார்னு சவுண்டு விட்டுட்டு இருக்காங்க...

இந்த முஸ்லிம் பதிவர்கள் பண்ற அலம்பல் தாங்க முடியாம நானே இந்த தேர்தல்ல bjp-க்கு வாக்கு போட்டு விடலாம்னு யோசிக்கிற levellukku கொண்டு வந்துட்டாங்க.. இந்த மாதிரி சில பதிவர்கள் இருப்பதினால் தான் bjp இன்னும் ஆட்சி பிடிக்கலாம்னு கனவு காண்கிறது.

என்ன மாதிரி எல்லா மதமும் குப்பைனு நினைக்கிறவங்களுக்கே இந்த நிலமைன்ன ஒரு சாதாரண இந்து இவங்க பதிவ படிச்சா கண்டிப்பா RSS ல சேந்துடுவான்.

இவங்க சொல்ல வர்றது எல்லாம் ரொம்ப சிம்பிள்.
anti america, anti modi, anti hindu, anti jews, அல்லா மட்டுமே உயர்ந்தவர்-நல்லவர்-நாலும் தெரிஞ்சவர்--இந்த உலகத்தின் பாவங்களை சுமக்கும் சுமை தாங்கி,
அடுத்து பெருசா ஒண்ணும் இல்லை இன்னும் கொஞ்ச நாளைக்கு அப்பறம் இந்தியா முஸ்லிம்களுக்கு துரோகம் செய்து விட்டது, ஜனநாயகம் நம்மை காக்காது , ஒசாமா பின் லடேன் அல்லாஹ்வின் அவதாரம், உலக musilmgalai காக்க வந்த இறை தூதர்(குகை குள்ள ஒளிஞ்சிகிட்டே காப்பாதுவாறு! ).. கட்டடம் மேல விமானம் விடு,a.r.rahman வீட்ல கல்ல உட்டு அடி, மணிரத்தினம் படத்த கண்டிச்சு bit-notice அடி, கோவில் பக்கதுல குண்டு போடுன்னு பிரச்சாரம் பண்ணால்லும் அதுல ஆச்சரியம் படுறதுக்கு ஒண்ணுமே இல்லை.

ஆனாலும் ஒரு சிறிய ஆறுதல் அளிக்கும் விஷயம் என்னன்னா தினமும் இப்படி பட்ட brain wash பண்ற பதிவுகள்ள படித்தும் ஒரு சாதரண முஸ்லிம், ஒரு இந்தியன் oscar வாங்குனதுக்காக ஒரு சக இந்தியனாக பெருமை படுறாங்க. பாகிஸ்தான் இந்தியா மேல தாக்குதல் நடத்துனா தன் மத நாடுன்னு பாகிஸ்தான support பண்றது இல்லை. இப்படி பட்ட சில இந்திய முஸ்லிம்கள் இருப்பதினால் தான் இந்தியா இன்னும் secular நாடாக இருக்கிறது.

puthisuthaan said...

அன்பின் நண்பர்களே

“….The family finally tried the same Pir Qadri, whom they called very late in the case of Sekhar. Dilip’s sister made a miraculous recovery. This was attributed to the Pir and Dilip slowly came under his influence. Gradually, the entire family converted to Islam; Kanchana even accepted divorce as the price of conversion…..”

கேள்வி : இந்த பீர்கள் அல்லது சுபீ என்பவர்கள் யார் ? இவர்கள் எந்த மதம் ?

என்னா இப்படிக் கேடுப் போட்டீங்கோஓஒ…ன்னு நீங்க கேக்கலாம்…

எனக்கு எழும் சந்தேகங்கள்
—————————————————————-

- பீர்கள் (அ) சூபிக்கள் மாந்திரீகம், ஜபம் மூலம் வியாதிகளை குணப்படுத்துவதாயும் இவர்கள் இறைத்தூதர்கள் என்றும் மஹான்கள் என்றும் சொல்லப் படுகின்றனர். …இது தூய இஸ்லாமியக் கோட்பாடுகளுக்கு முரணானது ….தூய இஸ்லாமிய கோட்ப்பாடின் படி “…லா இலாஹி இல்லலாஆஹ்.. முஹம்மது ரசூல் ரசூலுல்லாஹ்… ” அதாவது அல்லாவுக்கு நிகர் கடவுள் இல்லை, நபிகள் (PBUH)க்கு பின் தூதர் இல்லை (அவரே கடைசீத்தூதர்). ஆகவே தூய இஸ்லாத்தில் சூபிகளுக்கு இடமில்லை. அதனால் தான் சவுதியிலோ மற்ற இஸ்லாமிய நாடுகளிலோ பீர்களையோ சூபிகளை இன்று பார்ப்பதில்லை .

- தர்கா வழிபாடு : பீர்கள் (அ) சூபிக்கள் இறந்தால் அவர்கள் புதைக்கப்படும் இடம் தர்காவாகிறது. அதாவது இந்து மத சமாதி வழைபாடு போல !! இந்த தர்கா வழிபாட்டுக்கும் தூய இஸ்லாமில் இடமில்லை. அதனால் சவுதியிலோ மற்ற இஸ்லாமிய நாடுகளிலோ இன்னார் தர்க்கா என்று தர்க்காக்கள் இல்லை. மசூதிகள் உண்டு ..அவை தொழும் இடங்கள் அவ்வளவே. இன்னாரை அன்னாரை புதைக்கும் இடங்கள் இல்லை…

- உதி, அல்லது சாம்பல் கொடுப்பது :

- மற்றும் ஊதுவது (மந்திரம் ஓதி அதை நோய் வாய்ப்பட்டவர் மீது ஊதுவது..) : இவை இரண்டும் ஹிந்து ஜபம், அல்லது விபூதி கொடுப்பது போல. இதற்கும் தூய இஸ்லாமில் இடமில்லை.

ஆக மொத்தம் இந்த பீர்கள் அல்லது சுபிக்கள் - இந்துக்களா ? இஸ்லாமியர்களா ? அல்லது அல்லாவை தொழுகிறோம் என்று அல்லாவை ஹிந்து வழக்கப்படி (சமாதி வழைபாடு, ஜபம், உதி என்று.. ஹிந்து வழக்கப்படி ) தொழுவதாய் சொல்லி ஹிந்துக்காளை சுலபமாய் ஈர்க்கிறார்களா என்ற கேள்விகள் எல்லாம் வருகின்றன..

இந்திய சுதந்திரம் என்ன என்ன விந்தைகளை செய்கிறது :

எ.கா : ஒரு காஞ்சனா (இந்துப் பெண்) தன் கணவனை சுலபமாய் விவாகரத்து செய்ய முடியும்…ஆனால் ஒரு இஸ்லாமிய பெண் செய்ய முடியுமா ? (ஆண்கள் மட்டுமே இஸ்லாமில் தலாக் கொடுக்க முடியும்..!!!)

அன்புடன்
ஒரு இந்தியன்

அம்சுருவாணி said...

திரை இசை பற்றிய இஸ்லாமிய கருத்து என்ன ?


திரை இசை ...அதாவது இசைக்கருவிகளை கொண்ட இசையை இஸ்லாம் ஒப்புக்கொள்கிறதா என்று கேட்டால் இல்லை என்றே தோன்றுகிறது. இஸ்லாமில் pop பாடல்களுக்கோ, இசைக்கருவிகளுக்கோ இடமில்லை. இதை பலர் கூறியுள்ளனர்

இயற்கை சப்தங்கள் ...அதாவது பரவை ஒலி, மனித குரல் இவற்றை கேட்கலாம்.

The seventeenth-century Muslim scholar Chelebi distinguishes three categories of music: that coming from birds, from the human throat and from instruments. He states that in Islam it is permissible to listen to the melodies produced by birds, and to those produced by the human throat, subject to certain conditions and rules. To listen to instruments that are blown or struck however, is never permissible

இசைக்கருவிள் வாசிப்பதை ஸல் அவர்கள் ஆதரிக்கவில்லை என்பது பற்றி பல ஆதாரங்கள் இருக்கின்றன. ஒரு சில ஆதாரங்கள் மட்டும் எடுத்து போட்டு இருக்கிறோம்...

.............

மேலும் :
http://amsuruvani.blogspot.com/2009/03/blog-post.html

வால்பையன் said...

//இசைக்கருவிள் வாசிப்பதை ஸல் அவர்கள் ஆதரிக்கவில்லை என்பது பற்றி பல ஆதாரங்கள் இருக்கின்றன. ஒரு சில ஆதாரங்கள் மட்டும் எடுத்து போட்டு இருக்கிறோம்..//

யாருங்க அந்த ஸல்?
அவரு என்ன காரணம் சொல்றார் அதை ஆதரிக்காமல் இருப்பதற்கு! அவரு எதை சொன்னாலும் நீங்க கேக்குற அளவுக்கு வேற என்ன செஞ்சிருக்காரு?

வோட்டாண்டி said...

//He states that in Islam it is permissible to listen to the melodies produced by birds, and to those produced by the human throat, subject to certain conditions and rules//

மனிதன் உண்டாக்கும் ஒலி என்பதே தொண்டை, குரல் வளையில் உண்டாகும் அதிர்வுகளால்(vibration) ஆனதே.. இதே concept தான் எல்லா இசை கருவிகளிலும் இருக்கு. some or other form of vibration.
மனிதனின் கண்டுபிடிப்புகளை உங்கள் மதங்களின் target ஆக்கி விடாதீர்கள்.

அப்படி பார்த்தா குழந்தைகள் குடுகுடுப்பை வச்சிக்க கூடாது.
இஸ்லாமியர் கைபேசி(cellphone) வச்சிக்க கூடாது..ஏன்னா அழைப்பு வரும்போது இசை(ring tone) வருதே..வேணும்னா silent modela வச்சிகோங்க..
இன்னொரு முக்கியமான மேட்டர்..எப்படி மனிதனால சில ஒளிகள பாக்க முடியாதோ..அதே மாதிரி சில ஒலிகள(பறவைகள் மற்றும் விலங்குகள் கேட்கக்கூடிய) கேக்கவும் முடியாது.
வண்டி ஒட்டுரப்ப horn அடிக்காம ஓட்டணும்..
தெருவுல ஏறங்குன்ன உடனே காத பொத்திகிட்டு தான் நடந்து போகணும்..
என்ன கொடுமை சார் இதெல்லாம்??

//subject to certain conditions and rules//

எதுஎதுக்கு எல்லாம் rule போடுறதுன்னு ஒரு விவஸ்தை வேண்டாம் ??

தருமி said...

அம்சுருவாணி,

//இசைக்கருவிள் வாசிப்பதை ஸல் அவர்கள் ஆதரிக்கவில்லை என்பது பற்றி பல ஆதாரங்கள் இருக்கின்றன//

அடடா! ஆதாரங்களெல்லாம் எனக்கெதுக்கு? நீங்க சொன்னாலே நம்பிற மாட்டேனா என்ன? ஆனா ஏன் ஆதரிக்கவில்லை என்பதற்கு மட்டும் ஏதாவது பதிலிருந்தால் சொல்லுங்கள்.

தாலாட்டு, ஒப்பாரி பாடலாமான்னுகூட ஒரு சந்தேகம் ..!

தருமி said...

அம்சுருவாணி,

உங்க பெயரேகூட ஏதோ இசை தொடர்பானதுபோல் ஒலிக்கிறது!!

அம்சுருவாணி said...

என் இடுகைகளுக்கும், பின்னூட்டுக்கும் பதிலளித்தவர்கள் இஸ்லாமியரா, இல்லையா என தெரியவில்லை

ஒரு பொதுவான விளக்கம்

இஸ்லாமியர் அல்லாதவர்கள் ஸல் அவர்களின் கட்டளைகளை பற்றி தவராக பேசுவதும், கேலியாக பேசுவதும் தெரிந்ததே; எனக்கொன்றும் இது புதிதல்ல . மற்றவர் மனவருந்ததக்க இந்த செயலில் ஈடுபட வேண்டாம் என பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

நான் சொல்ல வந்தது.

1. இஸ்லாமியர் அனைவரும் இஸ்லாமியக் கொள்கைகளை பின்பற்ற வேண்டும் .

அல்லாதவர்களை பற்றி நான் பேசவில்லை

2. தன்னை ஒரு இஸ்லாமியன் என்றும் "I always had a choice between love and hate in my life. And I chose love and I am here " என்று தெளிவாய் தான் இந்து மதத்தை விட்டு இஸ்லாமை தழுவியதை சுட்டிக்காட்டிய ஏ ஆர் ரஹ்மான், இஸ்லாமியக் கொள்கைகளையும் ஸல் அவர்களின் கட்டளைகளையும் பின்பற்ற வேண்டும், பின்பற்ற முயற்சியாவது செய்ய வேண்டும்

3. பேசும்போது மட்டும் இஸ்லாம், இஸ்லாமியன் என்று பேசுவது, ஆனால் செய்வது இஸ்லாமுக்கு ஒவ்வாததானால் அது வேடம்

4. ஏ ஆர் ரஹ்மான் அப்படிப்பட்டவரல்ல என நம்பி என் பின்னூட்டு

5. ஆகவே தன்னை ஒரு தூய இஸ்லமியன் என்று சொல்லிக்கொள்பவர்கள் இஸ்லாமால் மறுக்கப்பட்ட சுபி வழிபாடு, வாதியங்கள் கூடிய திரை இசை ஆகியவற்றை விடவேண்டும் என்பது என் தாழ்மையான வேண்டுகோள. இதுவே திரு ஏ ஆர் ரஹ்மானுக்கும் எனது வேண்டுகோள்

6. காசும் புகழும் தான் முக்கியம் என ரஹ்மான் கருதுவாரேயானால், தான் ஒரு இஸ்லாமியன் என்று சொல்லிக் கொள்வைதையாவது விடவேண்டும்


அன்புடன்
சுருவாணி

வால்பையன் said...

டியர் சுருவாணி!

ரகுமான் இஸ்லாமியர்ன்னு சொல்லிகிறதும் சொல்லாததுமவரோட பிரச்சனை!
அது தப்புன்னா அவரோட கடவுள் அதாங்க உங்க அல்லா அவருக்கு தண்டனை கொடுத்துட்டு போறாரு விடுங்க! அதுல உங்களுக்கு என்ன வந்துச்சு!

எல்லாம் வல்ல இறைவன் இப்படி தான் இருப்பார்ன்னு முடிவு பண்ணி எழுதிட்டாங்க! நீங்களும் இப்படி தான் இருக்கனும்னு முடிவு பண்ணிட்டிங்க!

ஒருவேளை கடவுளே வந்து நான் எப்படி இருந்தா என்னப்பான்னு கேட்டா நீ கடவுளே இல்ல தூரப்போன்னு சொல்லிருவிங்க போல!

இஸ்லாம் மதம் உருவான நாட்ல கூட இப்படி கூச்சல் போடுறதில்லை, ஆனா உங்க சலம்பல் தாங்கலப்பா

தருமி said...

////தன்னுடைய செல்வ செழிப்பால் பிறரை அடிமைப் படுத்தி வாழ வேண்டும் என்று ஆசைப்பட்டவன் உலகில் வாழ்ந்ததாக வரலாறே கிடையாது அவன் அழிந்தேப் போவான் அதுதான் இன்றைய அமெரிக்கா, ஐரோப்பா சந்தித்து வரும் அவலநிலை.//

தெருமுக்கில் டீக்கடையில் நின்னு பேசிக்கிட்டு இருக்கும்போது - சுனாமி நடந்து முடிந்த சிலநாட்களில் - எங்கள் பேச்சில் குறுக்கே புகுந்த ஒருத்தர் 'இந்தோனேஷியாவில் உள்ள இஸ்லாமியர்கள் மோசமாக நடக்க ஆரம்பித்துவிட்டார்கள்; அதான் அல்லா இப்படி சுனாமியை அனுப்பி வச்சிட்டார்' என்றார்.

அவர் சொன்னதற்கும் நீங்கள் மேலேயுள்ளதுபோல் சொன்னதற்கும் என்ன வேற்றுமை?

It is just your wishful thinking!!

Unknown said...

இந்த விவாதம் இன்னும் முடியலியா?

சுருவாணி அவர்களே, //2. தன்னை ஒரு இஸ்லாமியன் என்றும் "I always had a choice between love and hate in my life. And I chose love and I am here " என்று தெளிவாய் தான் இந்து மதத்தை விட்டு இஸ்லாமை தழுவியதை சுட்டிக்காட்டிய ஏ ஆர் ரஹ்மான், இஸ்லாமியக் கொள்கைகளையும் ஸல் அவர்களின் கட்டளைகளையும் பின்பற்ற வேண்டும், பின்பற்ற முயற்சியாவது செய்ய வேண்டும்//

1. தம் ஆஸ்கர் பேச்சில், இஸ்லாமியன் என்று அவர் எப்போது சொன்னார்?
2. ”I always had a choice between love and hate in my life. And I chose love and I am here ” - அவர் எளியோருக்கு அடியோரான பீர், சுஃபிக்களைத் வணங்கும் வாழ்க்கை, மதந் தாண்டி மனம் மகிழ்விக்கும் (இனிமையான இசைதரும்) எளிய வாழ்க்கை இவற்றை இஸ்லாமிய கொள்கைகளாகக் கருதி, அதுவே love என்று தம் ஆஸ்கர் பேச்சில் சொன்னாரோ!

மற்ற (இந்து, கிறித்தவ, வஹ்ஹாபி உள்ளிட்ட) கொள்கைகளை hate ஆகச் சொன்னாரா என்று அவர் தான் சொல்ல வேண்டும். அவரே வந்து சொல்லாத வரையில் உங்கள் பொருளை ஏற்க இயலாது.

கெ.பி.

வஜ்ரா said...

ரகுமானை விடுங்கள், சின்னப்பையன். ஹிந்துஸ்தானி இசை ஜாம்பவான்கள் பலர் இஸ்லாமியர்கள் தான். இன்றும் பாகிஸ்தானி இசை மேதை மெட்டமைத்துக் கொடுத்து வெளிவந்த இந்திப்படப்பாடல்கள் மிகச்சிறந்தவையாக இருக்கின்றன. அதெல்லாம் இஸ்லாமிய மதத்துக்கு எதிரானது இஸ்லாமிய மனிதகுலத்துக்கு எதிரானது என்றால் அதை எல்லாம் ரசிப்பவர்கள் மனிதர்களே இல்லையா ?

அடிப்படைவாத இஸ்லாம் என்பது மனிதகுல எதிரி. அது பொதுமக்களைக் குறிவைத்து தற்கொலைத் தாக்குதல் நடத்துவது மட்டும் தான் என்று நாம் நினைத்தோம் என்றாம் நம்மள மாதிரி முட்டாள்கள் இருக்கமுடியாது.

வஜ்ரா said...

அம்சுருவாணி,

ஏ.ஆர்.ரகுமான் இசை இஸ்லாமுக்கு எதிரானது என்றால், உடனடியாக உங்கள் அருகாமையில் இருக்கும் மசூதியின் காஜியிடம் சொல்லி ரகுமான் இஸ்லாமியர் அல்ல என்று ஃபத்வா வெளியிடச்சொல்லவும். தற்பொழுது இருக்கும் நிலையில் உங்கள் ஏரியா மசூதி உலகப்புகழ் பெற (எல்லாப்புகழும் இறைவனுக்கே!) வாய்ப்புண்டு. சீக்கிரம் செல்லுங்கள் இல்லையென்றால் வேறு யாராவது செய்து புகழைத் தட்டிச் சென்றுவிடுவர்.!

வோட்டாண்டி said...

//இஸ்லாமியர் அல்லாதவர்கள் ஸல் அவர்களின் கட்டளைகளை பற்றி தவராக பேசுவதும், கேலியாக பேசுவதும் தெரிந்ததே;

அதான் இஸ்லாமியர் எல்லாரையும் follow பண்ணா சொர்க்கம், follow பண்ணாட்டி நரகம்னு மிரட்டி வச்சி இருக்கீங்களே. இதையும் தாண்டி சில அறிவாளிகள் கிண்டல் பண்ணா அவங்களுக்கு fatwa குடுக்குறீங்க..நாடு விட்டு நாடு விரட்டி விரட்டி அடிகிறீங்க(taslima nasreen,salman rushdie), கூடிய சீக்கிரம் a.rrahman கும் fatwa issue பண்ணிருங்க..

//"I always had a choice between love and hate in my life. And I chose love and I am here " என்று தெளிவாய் தான் இந்து மதத்தை விட்டு இஸ்லாமை தழுவியதை சுட்டிக்காட்டிய ஏ ஆர் ரஹ்மான்,

என்ன ஒரு கண்டுபிடிப்பு!!! இதோட என் நிறுத்திடீங்க.. "i love you" னு சொல்றவங்க எல்லாரும் இஸ்லாமியர்,"I hate you"nu சொல்றவங்க எல்லாரும் ஹிந்துனும் சொல்லிருங்களேன்.. room போட்டு உக்காந்து யோசிச்சி இல்லாத அர்த்தத்த எல்லாம் கண்டுபிடிக்க வேண்டியது??
இனிமே love சொல்ற எல்லாரும் அவங்க ஊருல இருக்குற மசூதில மொதலா permission வாங்கிருங்கபா..

////தன்னுடைய செல்வ செழிப்பால் பிறரை அடிமைப் படுத்தி வாழ வேண்டும் என்று ஆசைப்பட்டவன் உலகில் வாழ்ந்ததாக வரலாறே கிடையாது அவன் அழிந்தேப் போவான் அதுதான் இன்றைய அமெரிக்கா, ஐரோப்பா சந்தித்து வரும் அவலநிலை.//

இதுவும் "room போட்டு உக்காந்து யோசிப்போர்" சங்கத்தோட கண்டுபிடிப்பு!!!

//தெருமுக்கில் டீக்கடையில் நின்னு பேசிக்கிட்டு இருக்கும்போது - சுனாமி நடந்து முடிந்த சிலநாட்களில் - எங்கள் பேச்சில் குறுக்கே புகுந்த ஒருத்தர் 'இந்தோனேஷியாவில் உள்ள இஸ்லாமியர்கள் மோசமாக நடக்க ஆரம்பித்துவிட்டார்கள்; அதான் அல்லா இப்படி சுனாமியை அனுப்பி வச்சிட்டார்' என்றார்.

ஆக சுனாமில செத்தவங்க எல்லாம் பாவம் செஞ்சவங்க..அப்பறம் எதுக்குங்க இந்த செஞ்சிலுவை சங்கம் எல்லாம் சுனாமில பாதிக்கப்பட்டவங்களுக்கு நிதி திரட்டுறாங்க??
எல்லாம் பாவம் பண்ணதுனால தான் அனுபவிகிறாங்க.. அனுபவிக்கட்டுமே !!!

//ஒருவேளை கடவுளே வந்து நான் எப்படி இருந்தா என்னப்பான்னு கேட்டா நீ கடவுளே இல்ல தூரப்போன்னு சொல்லிருவிங்க போல!
ஆமா சார் கடவுளுக்கே fatwa issue பண்ணிருவாங்க சார்....

”I always had a choice between love and hate in my life. And I chose love and I am here ”
இத
”I always had a choice between Islam and hinduism in my life. And I chose Islam and I am here ”
--இப்படி அறிவுபூர்வமா translate பண்ணது நல்ல வேளை a.r.rahmanukku தெரியாது!!!

KARTHIK said...

//தன்னுடைய செல்வ செழிப்பால் பிறரை அடிமைப் படுத்தி வாழ வேண்டும் என்று ஆசைப்பட்டவன் உலகில் வாழ்ந்ததாக வரலாறே கிடையாது அவன் அழிந்தேப் போவான் அதுதான் இன்றைய அமெரிக்கா, ஐரோப்பா சந்தித்து வரும் அவலநிலை.//

அப்படியெல்லாம் ஒன்னும் இல்லைங்க
இடிஅமீன் எடுத்துங்க 94 வயசுல 4 பொண்டாட்டியோட சந்தோசமாத்தான் செத்துப்போனாரு அவர் பண்ணாத கொலையா,பாவமா இப்படி இன்னும் பல பேர்த்த சொல்லமுடியும்.

தருமி said...

நானும் ரஹ்மான் தத்துவார்த்தத்தோடு, அதாவது தன் மதத்தோடு ஒத்துப் பார்த்து இஸ்லாம் மேன்மையாக இருப்பதாகக் கண்டு மதம் மாறியவர் என்று நினைத்திருந்தேன். ஆனால் அவர் மத மாற்றத்திற்கான காரணம் அறியும்போது ப்..பூ.. இவ்வளவுதானா என்று ஆகிவிட்டது. தந்தைக்கும் தமக்கைக்கும் உடல் நலமில்லாமல் போனபோது மற்ற சமயக்காரர்களின் தயவுநாடி, அதில் தந்தை மறைந்தாலும் தமக்கை பிழைத்ததால் மதம் மாறியதாகச் சொல்லப்படுகிறது. அதிலும் இஸ்லாம் எதிர்க்கும் பிர் போன்றவர்களின் வழியாக இது நடைபெற்றுள்ளதாகச் சொல்லப்பட்டிருக்கிறது.

இதுபோன்ற மத மாற்றங்களினால் மாறியவர்களுக்கும், மதங்களுக்கும் பெருமை ஏதுமில்லை.

ஒரு மனதிருப்தி; நன்றிக்கடன். அவ்வளவே.வேலை போட்டுக்கொடுத்த முதலாளியிடம் விசுவாசம் வைப்பதுமாதிரி.(முதலாளி எப்படிப்பட்டவர் என்பது அங்கு முக்கியமல்ல.)

வஜ்ரா said...

பிஸ்மில்லாஹ் ரஹ்மானுர் ரஹீம்

விஜயவாணி.காம் எல்லாம் ராதா ராஜன், சந்தியாஜெயின் போன்ற தீவிர இந்துத்வா வெறி பிடித்த பெண்மணிகள் நடத்தும் தளம். அங்கிருந்தெல்லாம் சுட்டிக் காட்டி நீங்கள் எப்படிப்பட்டவர் என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டிவிட்டீர்கள்.

அதற்கு அல்லாஹ்வுக்கு நன்றி.

தருமி said...

அப்டியா, வஜ்ரா?!

Post a Comment