Sunday, November 20, 2011

535. Oh! JESUS CHRIST !!!




*

Oh! Jesus Christ! Entry through a back door is not a barely legal option even if you go there for paying a deposit.

But considering a flatulence (A state of excessive gas in the alimentary canal ... புர் .. புர்ர்.. ...!) like a murder is crazy.

With dope a drunk may molest any one even with headlights on! Damn devil, he should be an idiot.

ஜாக்கிரதை! மேலே உள்ள மூன்று சொற்றொடர்களை நீங்கள் SMS செய்தால் உங்கள் மீது காவல் துறை நடவடிக்கை எடுக்கலாம். கடும் தண்டனை நிச்சயம்!

நல்ல வேளை இதெல்லாம் இங்கில்லை. பக்கத்து ஊரு பாக்கிஸ்தானில் தான். ‘athlete's foot,' ‘back door,' ‘barely legal,' ‘damn,' ‘deposit,' ‘devil,' ‘dope,' ‘drunk,' ‘flatulence,' ‘headlights,' ‘idiot,' ‘Jesus Christ,' ‘molest,' and ‘murder.'
இதுபோன்ற 1695 வார்த்தைகளைப் பயன்படுத்தக் கூடாதென (அவைகள் அப்படி ஒன்றும் கெட்ட வார்த்தைகள் கூட இல்லையே!)
அரசு சட்டம் போட்டிருக்கிறதாம்.

இங்கே வாசித்துக் கொள்ளுங்கள்.

இந்த வார்த்தைகளை ஏன் அந்த அரசு இப்படி புத்திசாலித்தனமாகத் தடை செய்திருக்கிறது என்பது உங்களுக்குத் தெரிந்தால் சொல்லுங்கள்; நானும் தெரிந்து உய்வடைகிறேனே ...!




*


41 comments:

SURYAJEEVA said...

நான் எப்பொழுதும் சொல்வது போல் குறுஞ்செய்திகள் போன்ற ஒரு அருமையான ஊடகம் எங்கும் இல்லை.. இந்த வார்த்தைகள் தனி தனியாக பொருள் தரா விட்டாலும்... அரசுக்கு எதிராக சென்ற குறுஞ்செய்திகளில் மிக அதிக அளவில் இந்த வார்த்தைகள் இருந்திருக்க கூடும்... ஆகவே அரசுக்கு எதிராக எந்த குருஞ்செய்தியையும் மட்டுறுத்தவே இந்த வழி முறை.. இது நாம் அனுப்பும் குறுஞ்செய்திகளை படித்து பார்க்கவே செய்ய படுகிறது என்பது என் எண்ணம்...

தருமி said...

//அரசுக்கு எதிராக எந்த குறுஞ்செய்தியையும் மட்டுறுத்தவே இந்த வழி முறை..//

இதில் athlete's foot,' ‘back door,' ‘barely legal,' ‘damn,' ‘deposit,' ‘devil,' ‘dope,' ‘drunk,' ‘flatulence,' ‘headlights,' ‘idiot,' ‘molest,' and ‘murder.'...இவைகளெல்லாம் ஏன் தடுக்கப்படணும்னு ஒரு ஆச்சரியம். அந்த ஆச்சரியத்தில்தான் இந்தப் பதிவு.

SURYAJEEVA said...

ஒரு கற்பனையாய் எண்ணி பார்க்கலாம்

with athlete's foot i want to kick our prime minister

the passed law is barely legal

damn prime minister

devil president

our prime minister would have doped and drunk which had led to flatulence

the head lights [mind] of our minister is not working

idiot president

i want to molest and murder our so and so....

தருமி said...

உங்களை உடனே அங்கே அனுப்பி விடலாம் போலிருக்கே!!

naren said...

தடை செய்யப்பட்ட வார்த்தைகளில், Jesus Christ மற்றும் devil இரண்டும் இருக்கிறது. பாகிஸ்தானியர்கள் jesus மற்றும் devil இரண்டு நபர்கள் வெவ்வேறல்ல ஒன்று என்று சொல்கிறார்களா???????????.

யேசு நபி என்று கூவியது என்னவாயிற்று??!!!

இதலிருந்து என்னத தெரிகிறது என்றால், அந்த pakistan Telecom Authorities really love their queer porno stories.

மெனக்கெட்டு பாகிஸ்தானியர்கள் தடை செய்த வார்த்தைகளுக்கு புதியதாக வார்த்தைகளை கண்டுப்பிடிப்பார்கள். நல்ல பொழுதுப் போக்கு. vocabulary வளரட்டும்.

தருமி said...

//யேசு நபி என்று கூவியது என்னவாயிற்று??!!!//
நல்ல நபியாகத்தான் வந்தார். மனிதக்க்ரங்களால் அவரை கள்ள நபியாக்கி விட்டார்களோ?!

//தடை செய்த வார்த்தைகளுக்கு புதியதாக வார்த்தைகளை கண்டுப்பிடிப்பார்கள்.//

நானே சிலவற்றை முயற்சிக்க ஆசைப்பட்டேன்!

NO said...

மத பைத்தியங்களின் தேசம்!

பாகிஸ்த்தானில் என்ன நடக்கின்றது என்பதை சில காலங்களாக மிக உண்ணிப்பாக கவனித்து கொண்டிருக்கிறேன். அறிவார்ந்த சிந்தனைகள் உடைய மக்கள்
இனிமேலும் வாழ தகுந்த ஒரு நாடு அல்ல அது என்பது தெளிவாகிக்கொண்டிருக்கிறது.

ஒரு திரு சுவனப்பிரியனையே நம்மால் தாங்க முடியாதபொழுது கோடிக்கணக்கான சுவனப்பிரியங்கள் உதித்து கொண்டிருக்கும் ஒரு தேசம் எப்படி இருக்கும்
என்று கற்பனை செய்து பாருங்கள். சகிப்புத்தன்மை சிறிதும் இல்லாத மத பொம்மைகளின் சமூகம் அங்கே வேகமாக நிருவபட்டுக்கொண்டிருக்கிறது!

முரட்டுத்தனமான இஸ்லாமிய உயர்வு என்ற விதையை நட்டு, வகாபி இஸ்லாம் இல்லாத மாற்று சிந்தனைகள் எல்லாம் ஒழிக்கப்படவேண்டும் என்ற
தண்ணீரை விட்டு, இந்துக்கள், கிருத்துவர்கள் போன்றவர்கள் தீண்டத்தகாதவர்கள் கீழானவர்கள் என்ற உரம் வண்டி வண்டியாக கொட்டப்பட்டு, இஸ்லாமியமே
எல்லாம் என்ற வேலியை நட்டு உருவாகிக்கொண்டிருக்கும் ஒரு கொடிய விஷத்தோட்டம்தான் இன்றைய பாகிஸ்தான் என்பது. இதிலிருந்து அறுவடை செய்யப்படுவதுதான் மாற்று சமுதாயங்களின் மேலும் மற்றும் எல்லா மாற்று கருத்துகளின் மேலும் உள்ள வெறுப்பு என்ற சமுதாயக்கொல்லி!!!!

என்னை பொறுத்தவரையில் கிட்டத்தட்ட இருபது சதவிகித பாகிஸ்தானிய மக்கள் மாற்று சமுதாயங்களின் மேல் (அதவாது இந்து, கிருத்துவ, அகமதிய யூத சமுதாயங்களின் மேல்) மிக மோசமான கருத்துக்களை வைத்துக்கொண்டிருக்கிறார்கள்!! இருபது சதவிகிதம் என்பது கிட்டத்தட்ட மூன்றரை கோடி மக்கள். இவ்வளவு மக்களின் சிந்தனை, தன்னின் மதம் மற்றுமே உண்மை, தன்னின் வாழுவுமுறை மட்டுமே உண்மை என்பதோடு முடிவதில்லை.
மாற்று நம்பிக்கைகள் மற்றும் அவர்களின் பண்பாடுகள் எல்லாம் அசிங்கம், ஒழ்க்கபடவேண்டியது என்ற மிக ஆணித்தரமான நம்பிக்கைமேல் கட்டப்பட்ட
ஒரு வெறுப்பு உமிழும் தளமாக கட்டபட்டுக்கொண்டிருக்கிறது!!!

இதை பார்த்து ஒரு ஐம்பது சதத்தினர் ஒரு வேளை இதுதான் வாழ்வின் நடைமுறையோ என்று எண்ணி அவர்களின் வட்டத்தில் அருகில் நிற்கின்றனர்.
அவர்களை புகழ்வதோடு நிற்காமல், இஸ்லாமியம் உலகம் முழுவதும் வளர்ந்தால் நன்றாகத்தானே இருக்கும் என்ற நம்பிக்கைகளை கைவிடாமல் கூடவே
கும்மி அடிக்க தயாராகி இருக்கிறார்கள்.

ஒன்னும் ஒரு இருபத்து ஐந்து சதவிகிதம் நமக்கேன் வம்பு என்று ஒதுங்குகிறார்கள்.

எஞ்சி இருக்கும் ஐந்து சதவிகிதம்தான் விசாலமான சிந்தனை உடைய சமூகம். ஆனால் அவர்களும் இப்பொழுது தாக்கப்படுகிறார்கள்!!!! இருந்தும் சிலர் எதற்கும்
பயப்படாமல் எழுதுகிறார்கள், பேசுகிறார்கள்.ஆனால் அவர்கள் ஒரு decreasing tribe மட்டுமே.

பலர் வேறு நாடுகளுக்கு ஓடிவிட்டார்கள். அப்படி ஓடிய நல்ல சிந்தனை உடயவர்கள் மத்தியில் மதவாதிகளும் புகுந்ததனால் அவர்களும் பல நாடுகளுக்கு
உள்ளே புகுந்து விட்டனர். நார்வே முதல் பிரான்சு வரை இவர்கள் இருக்கிறார்கள். ஐரோப்பாவில் முடிந்த வரையில் இவர்களின் வாலை நறுக்கி விட்டார்கள். அந்த நாடுகள் என்ன இந்தியாவா இவர்களை கண்டு சாமரம் வீச. போங்கடா நீங்களாச்சு உங்க மதமுமாச்சு என்று சொல்லத்தொடங்கி விட்டார்கள்.
Anyway அது வேறு கதை!

NO said...

சொல்லவந்தது என்னவென்றால், இதைபோல முட்டாள்தனத்திற்கு பாகிஸ்தானில் பஞ்சமே இல்லை!! இது ஒரு விஷ நாடு!

இப்படி எல்லாம் ஆகும் என்று ஒரு இந்தியர் அடித்து சொன்னார். அதாவது அறுபது வருடங்களுக்கு முன். சொன்னவர் இஸ்லாமியர். திரு சுவனப்பிரியன் போன்ற இஸ்லாமியர் இல்லை. வெறியர் இல்லை. மற்றவர்களெல்லாம் மடையர்கள் என் மதமே என் தூதரே உண்மையானவர் என்று உளறிய ஒருவர் இல்லை. ஐயோ இஸ்லாமியர் இந்தியாவில் ஒழிக்கபட்டுவிடுவார்கள் என்று ஊதிவிட்டு குளிர் காய்ந்தவர்களும் இல்லை. அதே சமயம் இஸ்லாமை அறியாதவரும் இல்லை. அதில் தேர்ச்சி பெற்றவர். மிக்க படித்தவர்.

அவர் சுமார் நாற்பத்து ஆறாவது வருட வாக்கில் ஒரு பத்திரிகைக்கு கொடுத்த பேட்டியில் பாகிஸ்தானின் கதி எப்படி ஆகும் என்று விளக்கி இருக்கிறார்.
அசாதாரண தொலைநோக்கு மற்றும் கணிப்பு என்று சொல்லலாம். அப்படியே நடந்தது. நடக்கின்றது. (மாகத்த்மா காந்தியும் அதேதான் நினைத்தார் என்பது வேறு விடயம் ஏனென்றால் இப்படி கணித்தது ஒரு இஸ்லாமியர்).

அப்படி பட்ட ஒருவரை பன்னிக்கறி உண்டு சாராயம் குடித்த ஒரு இஸ்லாமியர் இந்துக்களின் கைகூலி என்று ஏளனம் செய்தார்!!
அவர் மட்டுமே அல்ல அவரின் அடியாட்கள் பலரும் கேலி செய்தனர். அதற்கெல்லாம் அவர் கவலைப்படவில்லை! ஏனென்றால் வெறித்தனம் என்பதுதான் இஸ்லாம் என்று பலர் நினைக்கையில், அதற்க்கு வேறு ஒரு பதையும் உண்டு, அதுவே அதன் உண்மை பாதை என்பதை எடுத்துக்காட்டியவர்.

கொடுமை என்னவேன்ன்றால், இன்றைய இஸ்லாமிய சூழலில் அந்த மனிதரின் தரிசனங்கள் மற்றும் வழிமுறைகளை யாரும் வாய்கொடுத்து சொல்லுவதில்லை.
இந்திய இஸ்லாமியர்களுக்கு அவர் இன்று ஒரு ஐக்கானாக இருப்பதாக தெரியவில்லை. இஸ்லாமியர் பலர் அவரின் சரித்திரத்தை சிந்தனைகளை
திட்டம் போட்டு மறைக்கிறார்கள். இவரை போன்ற இஸ்லாமிய ஞானிகளை விட்டு விட்டு அப்துல் மதானி, போன்ற பொறுக்கிகளையும், ஜாகிர் நாயக் போன்ற மடையர்களை இஸ்லாமிய வழிகாட்டிகளாக வணகுகிரார்கள்!!

அந்த மாமனிதர் யாரென்றால் அவர்தான் மௌலானா அப்துல் கலாம் ஆசாத்.

காந்தியின் மிக நெருங்கிய ஐவர் வட்டத்தில் ஒருவர்! (நேரு, பட்டேல், ராஜாஜி ராஜேந்திர பிரசாத் மற்றும் அப்துல் கலாம் ஆசாத்)!

சுதந்திர இந்தியாவின் முதல் கல்வித்துறை அமைச்சர்!! (அது ஒரு இஸ்லாமியர் என்பதுதான் மிக சிறப்பு. இது எந்த நாட்டிலும் நடக்காது.
அதுவும் இஸ்லாமிய நாடுகளில் ஒரு இஸ்லாமியர் அல்லாதவரை ஒரு முக்கிய பொறுப்பு கொடுப்பது அதுவும் கல்வித்துறை போன்றவற்றை கொடுப்பது என்பது நடக்கவே நடக்காது நடக்காது நடக்காது!!!!))

நேரம் கிடைக்கும்பொழுது அவரைப்பற்றி மேலும் எழுதுகிறேன்!

Broomboy said...

தருமி அய்யா, தங்களை போன்றோர் கேட்கும் கேள்விகளில் பயந்து தடையை ஒத்தி வைத்திருப்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது!http://www.rediff.com/news/report/offensive-sms-row-pakistan-postpones-moral-police-directive/20111122.htm

தருமி said...

No,

ஒரு பாகிஸ்தானுக்கே இவ்வளவு சொல்றீங்க .. போராட்டம் நடக்கும் எல்லா இஸ்லாமிய நாடுகளில் Islamic Brotherhood தான் வரப்போகுதாம்.


அல்லாதான் நம்மைக் காப்பாற்றணும்!

தருமி said...

//நேரம் கிடைக்கும்பொழுது அவரைப்பற்றி மேலும் எழுதுகிறேன்!//

கட்டாயம் ... இவ்வளவு கேள்விப்பட்டதேயில்லை. எதிர்பார்க்கிறேன்.

தருமி said...

//had been met with outrage and ridicule by consumers and rights activists.//

நல்ல செய்திதான்.
broomboy
உங்களுக்கும் நான் அய்யாவா?
//தங்களை போன்றோர் கேட்கும் கேள்விகளில் பயந்து ..// இப்படியெல்லாம் ‘லந்து’ பண்ணக் கூடாது!

NO said...

// ஒரு பாகிஸ்தானுக்கே இவ்வளவு சொல்றீங்க ..//

பாகிஸ்தான் என்பதே இந்தியாவின் எச்சில்! எச்சில் உருவான இடமே எச்சிலாகிவிடுமோ என்ற பயம்தான்!!

//போராட்டம் நடக்கும் எல்லா இஸ்லாமிய நாடுகளில் Islamic Brotherhood தான் வரப்போகுதாம்.//

இஸ்லாமிய பிரதர் ஹூட் போன்றவைகளின் முதல் டார்கெட் அமேரிக்கா மற்றும் இசரேல். அதை முடித்தபின் பின்னர்தான் திம்மிகளான நம்மேல் (நீகள் கிருத்தவ பின்னணி உள்ளவரானதால் புத்தக மக்கள் என்று நீங்கள் மன்னிக்கப்படலாம் :)) ) விமானத்தை விடுவார்கள். அதுவரையில் அவர்களை பற்றி
நினைக்கவேண்டாம் :). ஆதலால் பக்கத்தில் கிடக்கும் எச்சில்தான் நம்மை ரொம்ப பயமுறுத்துகிறது!!

On a side note தாங்க முடியாத கொடுமை என்னவென்றால் இதற்கும் இவர்கள் ஒரு லின்ன்கு கொடுப்பார்கள், அதாவது ஜே பீ, கா பீ, பீ பீ போன்றவர்கள்
சொல்லுவதை படித்துவிட்டு எங்களை பற்றி புரிந்து கொள்ளுங்கள், விவாதத்திற்கு வாங்கள் என்று! இது நம்ம மாநிலத்தில். இதே வடக்கே என்றால் ஜாகிர் நாயக்கு
என்ற மக்கு உளறுவதை சொல்லிக்காட்டி இதோ பார் அதோ பார் என்று ஆடுவார்கள்.

If you do not know பாகிஸ்தானிலும் ஜாகிர் நாயக்கை கோட் செய்கிறார்கள். அதாவது ஜாகிர் நாயக்கைபோல மடையர்கள் பல உலாவிக்கொண்டிருக்கும் அந்த நாட்டிலேயே ஜாகிர் நாயக்கை கோட் செய்கிறார்கள் என்றால் எச்சில் வாய்க்குள் திரும்ப வர நினைக்கிறதோ என்ற அச்சம் உண்டாகுகிறது!

Broomboy said...

அய்யா என்பது மரியாதை நிமித்தம்.... கேள்விகள் கேட்பது மட்டும் இல்லாமல் எங்களயும் கேள்வி கேட்க துண்டிய மதிப்புக்குரிய ஆசான் நீங்கள்.. so ‘லந்து’ எல்லாம் கிடையாது. உங்கள பார்த்து தான் நாங்களும் கேள்வி கேட்க கத்துகிட்டோம். கேள்விகள் கேட்காததால தானே இந்த சமுதாயம், சமய, அரசியல் மற்றும் கலாச்சார சீரழிவுக்குள இருக்கு...

suvanappiriyan said...

நோ!

//ஒரு திரு சுவனப்பிரியனையே நம்மால் தாங்க முடியாதபொழுது கோடிக்கணக்கான சுவனப்பிரியங்கள் உதித்து கொண்டிருக்கும் ஒரு தேசம் எப்படி இருக்கும்
என்று கற்பனை செய்து பாருங்கள்.//

தவறான புரிதல். பாகிஸ்தானில் மதரஸாக்களின் ஆதிக்கம் அதிகம் உள்ளது. முல்லாக்களின் பேச்சையே வேத வாக்காக நம்புபவர்கள் பலர். குர்ஆன் என்ன சொல்கிறது. முகமது நபி எதை போதித்தார் என்ற உண்மை அந்த மக்களை இன்னும் சென்றடையவில்லை.

அஜ்மல் கசாப்புக்கும் மும்பைக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது? அந்த இளைஞனுக்கு பெரும் தொகையை கொடுத்து கூடவே குர்ஆனின் வசனங்களை தப்பும் தவறுமாக அவனுக்கு விளங்க வைத்து இன்று தூக்கு தண்டனையை எதிர் நோக்கி உள்ளான். முல்லாக்களின் தவறுகளாலும் நமது நாட்டின் உளவுத்துறையின் மெத்தனத்தாலும் இன்று இஸ்லாம் விமர்சனத்துக்குள்ளாகிறது.

சுவனப்பிரியனின் சிந்தனையில் என்ன ஓடுகிறது? இந்த உலகமும் இதில் உள்ள மனிதர்கள் யாவரும் ஒரு தாய் மக்களே! தருமி, வால்பையன், நோ, சார்வாகன், அனலைஸ்ட், நரேன் போன்ற அனைவருமே சுவனப்பிரியனின் சகோதரர்களே குர்ஆனின் கூற்றுப்படி. எனவே இந்துக்களையும் கிறித்தவர்களையும் யூதர்களையும் சகோதரர்களாகவே சுவனப்பிரியன் இன்று வரை நினைத்து வருகிறார். சுவனப்பிரியனைப் போலவே பாகிஸ்தானிய மக்களும் குர்ஆன் ஹதீஸ் இரண்டை மட்டும் தங்கள் வாழ்க்கையில் கடைபிடிக்க ஆரம்பித்து விட்டால் பாகிஸ்தான் சுவனஸ்தானாக மாறி விடும்.

முன்பு தமிழகத்தில் இஸ்லாமிய இளைஞர்கள் பலர் தவறான வழிகாட்டுதலால் வன்முறையை நாடினர். அது தவறு என்று தவ்ஹீத் பிரசாரம் கடந்த 25 ஆண்டுகாலமாக இடையறாது நடைபெற்றதன் காரணமாக இன்று அதே இளைஞர்கள் கல்வியின் பால் ஆர்வம் ஏற்பட்டு பட்டதாரிகளாக வருடாவருடம் வெளி வருகின்றனர். சினிமா நடிகனுக்கு பின்னால் சென்ற இஸ்லாமிய இளைஞர கூட்டம் இன்று குர்ஆனையும் ஹதீஸையும் ஆராய்ந்து கொண்டிருக்கிறது.

இது போன்ற நிலைக்கு பாகிஸ்தான மாறும் போது பல சுவனப்பிரியன்கள் அங்கும் உதிப்பார்கள். அப்பொழுது இந்தியாவின் மீது உள்ள வெறுப்பு மறைந்து நம்மோடு நேசக்கரத்தை நீட்டுவார்கள். அந்த நாள் வெகு தொலைவில் இல்லை.

தருமி!

//ஒரு பாகிஸ்தானுக்கே இவ்வளவு சொல்றீங்க .. போராட்டம் நடக்கும் எல்லா இஸ்லாமிய நாடுகளில் Islamic Brotherhood தான் வரப்போகுதாம்.


அல்லாதான் நம்மைக் காப்பாற்றணும்!//

கவலைப்படாதீர்கள். 'பிரதர் ஸூட்(இஹ்வான்கள்) ஆட்சியில் கிறித்தவர்களும் யூதர்களும் சிறப்பாகவே நடத்தப்படுவார்கள். இஸ்ரேலும் அமெரிக்காவும் இடையில் புகுந்து குள்ளநரித்தனத்தை காட்டாமல் இருந்தால் அனைத்தும் நலமுடனே நடக்கும்.

suvanappiriyan said...

நோ!

//ஒரு திரு சுவனப்பிரியனையே நம்மால் தாங்க முடியாதபொழுது கோடிக்கணக்கான சுவனப்பிரியங்கள் உதித்து கொண்டிருக்கும் ஒரு தேசம் எப்படி இருக்கும்
என்று கற்பனை செய்து பாருங்கள்.//

தவறான புரிதல். பாகிஸ்தானில் மதரஸாக்களின் ஆதிக்கம் அதிகம் உள்ளது. முல்லாக்களின் பேச்சையே வேத வாக்காக நம்புபவர்கள் பலர். குர்ஆன் என்ன சொல்கிறது. முகமது நபி எதை போதித்தார் என்ற உண்மை அந்த மக்களை இன்னும் சென்றடையவில்லை.

அஜ்மல் கசாப்புக்கும் மும்பைக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது? அந்த இளைஞனுக்கு பெரும் தொகையை கொடுத்து கூடவே குர்ஆனின் வசனங்களை தப்பும் தவறுமாக அவனுக்கு விளங்க வைத்து இன்று தூக்கு தண்டனையை எதிர் நோக்கி உள்ளான். முல்லாக்களின் தவறுகளாலும் நமது நாட்டின் உளவுத்துறையின் மெத்தனத்தாலும் இன்று இஸ்லாம் விமர்சனத்துக்குள்ளாகிறது.

சுவனப்பிரியனின் சிந்தனையில் என்ன ஓடுகிறது? இந்த உலகமும் இதில் உள்ள மனிதர்கள் யாவரும் ஒரு தாய் மக்களே! தருமி, வால்பையன், நோ, சார்வாகன், அனலைஸ்ட், நரேன் போன்ற அனைவருமே சுவனப்பிரியனின் சகோதரர்களே குர்ஆனின் கூற்றுப்படி. எனவே இந்துக்களையும் கிறித்தவர்களையும் யூதர்களையும் சகோதரர்களாகவே சுவனப்பிரியன் இன்று வரை நினைத்து வருகிறார். சுவனப்பிரியனைப் போலவே பாகிஸ்தானிய மக்களும் குர்ஆன் ஹதீஸ் இரண்டை மட்டும் தங்கள் வாழ்க்கையில் கடைபிடிக்க ஆரம்பித்து விட்டால் பாகிஸ்தான் சுவனஸ்தானாக மாறி விடும்.

முன்பு தமிழகத்தில் இஸ்லாமிய இளைஞர்கள் பலர் தவறான வழிகாட்டுதலால் வன்முறையை நாடினர். அது தவறு என்று தவ்ஹீத் பிரசாரம் கடந்த 25 ஆண்டுகாலமாக இடையறாது நடைபெற்றதன் காரணமாக இன்று அதே இளைஞர்கள் கல்வியின் பால் ஆர்வம் ஏற்பட்டு பட்டதாரிகளாக வருடாவருடம் வெளி வருகின்றனர். சினிமா நடிகனுக்கு பின்னால் சென்ற இஸ்லாமிய இளைஞர கூட்டம் இன்று குர்ஆனையும் ஹதீஸையும் ஆராய்ந்து கொண்டிருக்கிறது.

இது போன்ற நிலைக்கு பாகிஸ்தான மாறும் போது பல சுவனப்பிரியன்கள் அங்கும் உதிப்பார்கள். அப்பொழுது இந்தியாவின் மீது உள்ள வெறுப்பு மறைந்து நம்மோடு நேசக்கரத்தை நீட்டுவார்கள். அந்த நாள் வெகு தொலைவில் இல்லை.

தருமி!

//ஒரு பாகிஸ்தானுக்கே இவ்வளவு சொல்றீங்க .. போராட்டம் நடக்கும் எல்லா இஸ்லாமிய நாடுகளில் Islamic Brotherhood தான் வரப்போகுதாம்.


அல்லாதான் நம்மைக் காப்பாற்றணும்!//

கவலைப்படாதீர்கள். 'பிரதர் ஹூட்(இஹ்வான்கள்) ஆட்சியில் கிறித்தவர்களும் யூதர்களும் சிறப்பாகவே நடத்தப்படுவார்கள். இஸ்ரேலும் அமெரிக்காவும் இடையில் புகுந்து குள்ளநரித்தனத்தை காட்டாமல் இருந்தால் அனைத்தும் நலமுடனே நடக்கும்.

தருமி said...

சுவனப்பிரியன்,

//சுவனப்பிரியனின் சிந்தனையில் என்ன ஓடுகிறது? இந்த உலகமும் இதில் உள்ள மனிதர்கள் யாவரும் ஒரு தாய் மக்களே!
...அனைவருமே சுவனப்பிரியனின் சகோதரர்களே குர்ஆனின் கூற்றுப்படி.
...சகோதரர்களாகவே சுவனப்பிரியன் இன்று வரை நினைத்து வருகிறார். //

எல்லா மனிதர்களும் சகோதரர்களே என்பது உங்கள் மதத்திற்கு மட்டுமான ஏகத்துவக் கருத்தாக நிறுவ - ‘யாதும் ஊரே; யாவரும் கேளிர்’ என்று எப்போதோ சொல்லிவிட்ட ஒரு சமூகத்தில் பிறந்த நீங்கள் - எப்போதும் முயற்சியெடுக்கிறீர்கள். கிறித்துவ மதத்திலும் இதே கருத்துதானுண்டு. மற்ற மதங்கள் பற்றித் தெரியாது. சகோதரத்துவம் இஸ்லாமிற்கு மட்டுமேயானதில்லை. (ஆனால் கிறித்துவத்தில் சாதியில்லையா என்று கேட்டால் அது நம்மூர் குழப்பம் என்றும் சொல்லலாம். அல்லது, ’குரானில் சொல்லாதது; கடைப்பிடிக்கும் மக்களின் தவறு’ என்று இஸ்லாமியக் குறைபாடுகளுக்குக் காரணம் சொல்வீர்களே - அதே போன்று இங்கேயும் சேர்த்துக் கொள்ளுங்கள்.)
------------------------
//பாகிஸ்தானில் மதரஸாக்களின் ஆதிக்கம் அதிகம் உள்ளது. //

பெரும்பான்மை இஸ்லாமியர் இருந்தால் அதுதான் நடக்கும் என்பது நடைமுறைக் கணிப்பு. உங்கள் எல்லோரிடமும் எனக்குப் பிடித்த ஒரு விசயம் உங்கள் ஒருமித்த கூட்டு முயற்சிதான். இரண்டு சான்று: நீயா நானா நிகழ்ச்சியை ஒட்டுமொத்த ‘சவுண்டு’ கொடுத்து நிறுத்தியது. இரண்டாவது, நமது பதிவுலகில் சமீபத்தில் தமிழ்மணப் பதிவுகளை இஸ்லாமிய நாடுகளில் நிறுத்தி விடுவதாக எப்படி ஒருமித்த ‘சவுண்டு’! அதேபோல் நிறுத்தியும் விட்டீர்கள். (மறுபடி அங்கு மீண்டும் ஆரம்பித்து விட்டார்களா என்பதும் எனக்கு இன்னும் தெரியவில்லை.) எப்படியும் இப்படி ஒன்றுபடுகிறீர்களே, இதையே நான் உங்கள் மதத் தீவிரவாதம் என்றுதான் எண்ணுகிறேன்.

சிறுபான்மையராக இருக்கும்போதே இப்படி உங்களால் நடத்த முடிகிறதென்றால், எல்லாமும் நாங்களே என்ற ஒரு நிலை வந்தால் ... பயமாக இருக்குதுங்க!

மதப் பெரும்பான்மை இருந்தால் மதரஸாக்கள், முல்லாக்கள், ஹஸரத்துகள், இமாம்கள் - இவர்களின் ராஜ்ஜியம் தான் நடக்கும். இதில் யாருக்கு சந்தேகம்?
--------------------------------
//பாகிஸ்தானிய மக்களும் குர்ஆன் ஹதீஸ் இரண்டை மட்டும் தங்கள் வாழ்க்கையில் கடைபிடிக்க ஆரம்பித்து விட்டால்...//

இதைக் கொஞ்சம் படித்துப் பாருங்கள். ’உங்கள் ஆட்சி’ வந்துவிட்டால் இந்த இரண்டையும் கொண்டுவந்து விடுவீர்கள். இந்த ‘ஆட்சி முறை’யில் எந்தவித குடியுரிமைத் தனம் ஏதும் கிடையாது. மதங்களே ஆட்சி செய்தால் நீங்கள் ஏற்கெனவே சொன்னதுபோல் - முல்லாக்களின் தவறுகளால் - மக்கள் மதங்களில் ஏறிக்கொண்டு என்னென்ன செய்வார்களோ.

தலிபான் ஆட்சியும் நினைவுக்கு வருகிறது. அதுவும் இஸ்லாமிய மதச் சார்பான அரசாட்சிதானே! சிலையைக் கூட உடைத்தால் தானே உங்கள் மதமும், கடவுளும் நிலைக்கும். இல்லையா?

//மத தர்மங்கள் பொதுவாக எல்லோராலும் ஒப்புக்கொள்ளக் கூடியவனவாக இருத்தல் இல்லை. மனித தர்மங்களே எல்லோருக்கும் பொதுவானதாக இருக்க முடியும்; இருக்க வேண்டும். // - என் பதிவில் நான் சொன்னது.
----------------------
//'பிரதர் ஸூட்(இஹ்வான்கள்) ஆட்சியில் கிறித்தவர்களும் யூதர்களும் சிறப்பாகவே நடத்தப்படுவார்கள். //

உங்கள் வாசகத்தையே உற்றுப் பாருங்கள். எல்லா மக்களும் ஒன்றுதான் என்று உங்களால் சொல்ல முடியாது. கிறித்தவர்களும் யூதர்களும் சிறப்பாகவே நடத்தப்படுவார்கள் என்ற சிறப்பு ‘உம்மைத் தொகை’ வந்திருக்கிறது பார்த்தீர்களா? எல்லாம் ஒன்று என்றும் உங்களால் சொல்ல முடியாது. வரிகளே இருவிதமாக அல்லவா அல்லா அநியாயமாகக் கொடுத்திருக்கிறார். ஒரு இஸ்லாமிய நாட்டில் நான் வேறு; நீங்கள் வேறு. ஆளுக்கொரு வித வரி!!!
-------------
//பாகிஸ்தான் சுவனஸ்தானாக மாறி விடும்.//
அர்த்தமே தப்பா இருக்கே. சுவனம் எப்படி என்பது நமக்குத்தான் நன்கு தெரியுமே. அதே மாதிரி இங்கேயுமா? அம்மாடியோவ்!!!!!
----------------
//முகமது நபி எதை போதித்தார் என்ற உண்மை அந்த மக்களை இன்னும் சென்றடையவில்லை.//

இதையும் எங்களை நம்பச் சொல்கிறீர்கள். ஓகே’ங்க. நான் நம்பி விட்டேன்!
-------------

suvanappiriyan said...

திரு தருமி!

//எல்லா மனிதர்களும் சகோதரர்களே என்பது உங்கள் மதத்திற்கு மட்டுமான ஏகத்துவக் கருத்தாக நிறுவ - ‘யாதும் ஊரே; யாவரும் கேளிர்’ என்று எப்போதோ சொல்லிவிட்ட ஒரு சமூகத்தில் பிறந்த நீங்கள் - எப்போதும் முயற்சியெடுக்கிறீர்கள். கிறித்துவ மதத்திலும் இதே கருத்துதானுண்டு. மற்ற மதங்கள் பற்றித் தெரியாது. சகோதரத்துவம் இஸ்லாமிற்கு மட்டுமேயானதில்லை.//

ஏகத்துவக் கொள்கையை எல்லா மதங்களும் மார்க்கங்களும் சொன்னாலும் நடை முறையில் எந்த அளவுக்கு அந்த மார்க்கங்களால் கடைபிடிக்கப்படுகிறது என்பதையும் நாம் கவனிக்க வேண்டும். 'ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாதல்லவா!'

'ஒன்றே குலம் ஒருவனே தேவன்' அருமையான வரிகள். இந்த கருத்தை இந்துக்களில் 10 சதம் கூட பின்பற்றவில்லை. ஊருக்கு ஒரு சாமி: சாதிக்கு ஒரு சாமி: மொழிக்கு ஒரு சாமி: அதோடு உயிரோடு உள்ள சாமியார்கள்: என்று பட்டியல் நீளுகிறதே! இதை தடுக்கப் போய் கடைசியில் நாத்திகர்களாக ஆனதுதான் மிச்சம்.

அதே போல் ஓரிறைக் கொள்கை பைபிளைக் கொண்டே எவ்வாறு தரை மட்டமாக்கப்பட்டது என்பதை என்னை விட நீங்களே நிறைய அறிவீர்கள்.

தமிழகத்தில் நாத்திகம் இந்த அளவு வளர்ந்ததில் இந்து மதத்துக்கும் கிறித்தவ மதத்துக்கும் பெரும் பங்குண்டு. இதற்கு காரணம் இந்த இரண்டு மதங்களிலும் உள்ள பலகீனமான கருத்துக்களே!

//நமது பதிவுலகில் சமீபத்தில் தமிழ்மணப் பதிவுகளை இஸ்லாமிய நாடுகளில் நிறுத்தி விடுவதாக எப்படி ஒருமித்த ‘சவுண்டு’! அதேபோல் நிறுத்தியும் விட்டீர்கள். (மறுபடி அங்கு மீண்டும் ஆரம்பித்து விட்டார்களா என்பதும் எனக்கு இன்னும் தெரியவில்லை.) எப்படியும் இப்படி ஒன்றுபடுகிறீர்களே, இதையே நான் உங்கள் மதத் தீவிரவாதம் என்றுதான் எண்ணுகிறேன்.//

தமிழ்மணத்தை சவுதியில் தடை செய்ததில் எனக்கு இன்று வரை உடன்பாடு இல்லை. தமிழ்மண நிர்வாகியே இஸ்லாமிய முகமனை கிண்டல் அடித்ததுதான் பலரை கொதிப்படைய வைத்தது. மற்ற நிர்வாகிகள் அதற்கான விளக்கத்தைக் கொடுத்து பிரச்னையையும் முடித்து விட்டார்கள். இங்கு யாரும் தவறான வார்த்தை பிரயோகத்தை உபயோகிக்க வில்லை. 'நீயா நானாவிலும், தமிழ்மண பிரச்னையிலும் சாத்வீகமான முறையிலேயே போராடினோம். அது கூட தவறு என்கிறீர்களா?

//மதப் பெரும்பான்மை இருந்தால் மதரஸாக்கள், முல்லாக்கள், ஹஸரத்துகள், இமாம்கள் - இவர்களின் ராஜ்ஜியம் தான் நடக்கும். இதில் யாருக்கு சந்தேகம்?//

தவறான வாதம். உண்மையான இஸ்லாமிய வாழ்வில் புரோகிதத்துக்கு துளி கூட இடமில்லை. மெக்காவில் உள்ள காஃபாவில் உலக முஸ்லிம்கள் வருடந்தோறும் வந்து குவிகிறார்கள். அந்த இடத்தில் எந்த ஒரு முல்லாவோ, ஹஜ்ரத்தோ நின்று கொண்டு உங்களுக்கு தீட்சிதை வழங்கிக் கொண்டிருப்பதில்லை. ஐந்து வெளை தொழுகையை தவிர மற்ற வணக்கங்களெல்லாம் முல்லா இல்லாமலேயே நடத்தப்படுவது. குர்ஆனை விளங்காதவன்தான் முல்லாவின் தயவை நாடி ஓட வேண்டும்.

//தலிபான் ஆட்சியும் நினைவுக்கு வருகிறது. அதுவும் இஸ்லாமிய மதச் சார்பான அரசாட்சிதானே!//

தாலிபான்களின் ஆட்சி இஸ்லாமிய ஆட்சி என்று யார் சொன்னது? இஸ்லாத்தை தவறாக விளங்கிக் கொண்டது தாலிபான்களின் குற்றம். கலீபா உமருடைய ஆட்சியில் மாற்று மதத்தவர் எவ்வாறு நடத்தப்பட்டனர் என்பதை சற்று படித்துப் பாருங்கள். அதுதான் உண்மையான இஸ்லாமிய ஆட்சி!

//எல்லாம் ஒன்று என்றும் உங்களால் சொல்ல முடியாது.//

எல்லாம் எப்படி ஒன்றாக முடியும்? ஒருவர் ஏசுவை கடவுள் என்கிறார். மற்றொருவர் அவரை முகமது நபியைப் போன்ற தூதர் என்கிறார். அவரவர் கொள்கை அவரவர்களுக்கு: வற்புறத்தல் கூடாது என்கிறது இஸ்லாம். அனைத்து மக்களையும் அன்புடன் அரவணைத்து செலலவே குர்ஆன் கட்டளையிடுகிறது.

NO said...

நண்பர் திரு சுவனப்பிரியன்

// தவறான புரிதல்// - இடைச்சொருகல் மறுப்பு என்பது இதுதான்! எனது சாரம் - மதத்தின் பெயரால் உலக உண்மைகளை திரித்து விட்டு நீங்களே உருவாக்கிக்கொண்டுள்ள உயர்வு சித்தாந்த்தம் + எனதே உயர்வு என்ற அழிக்க முடியாத மன பிம்பம் + ஆகையால் மற்றவர் மற்றவை எல்லாம் கீழனதே என்று முடியும் கடைசி விவாதம் = ஆகியவற்றின் மொத்த சேர்க்கையினால் உருவான மனமே உங்களுடையது! இதைத்தான் பாதகம் என்று உலகில் உள்ள, உங்க மதத்தை சேராத (சில சேர்ந்த) அறிஞர்கள் முதல் சாமானிய மக்கள் வரை சொல்லுகின்றனர்! இதைத்தான் இஸ்லாமிய
நாடுகளில் எல்லோரின் மனத்திலும் குறிப்பாக சிறார்களின் மனதில் உரம் போட்டு வளர்க்கிறார்கள்! இதைதான் பாகிஸ்தானில் இன்று செய்கிறார்கள்!
இதிலிருந்து வெளிவருபவர்கள் எல்லாம் உங்களை போல நல்லவர்களாக இருப்பார்கள் என்று சொல்ல முடியாது! வெளிவந்த பக்த கோடிகளின் தன்மையை நியு யார்க்கிலும் மற்றும் இந்தியாவிலும் பல முறை பார்த்தாகிவிட்டது! உலகமே பார்த்து விட்டது!

நீங்கள் சொல்லும் சமாதானமும் சாந்தியும் கேட்பதற்கு சுகமான வார்த்தைகளாக இருக்கலாம்! நீங்களும் நல்லவராக, உங்கள் மதத்தின் பெயரால் மற்றவருக்கு
தீங்க செய்ய நினைக்காதவராக இருக்கலாம்! அது உங்களின் தனிப்பட்ட மன அமைப்பின் ஒரு நிலையை காட்டுமே தவிர உங்கள் மதத்தின் தன்மையை காட்டும் ஒரு குறியீடு அல்ல. ஏன் எப்படி சொல்லுகின்றேன் என்றால் உங்களின் மதம் உலகமெங்கும் சந்தேகத்துடனும் பயத்துடனும் பார்க்கப்படுகிறது! அதற்க்கு காரணம் சும்மா ஒரு நிலையை மக்கள் எடுத்து விட்டதனால் இல்லை. உண்மையான காரணம், சிறுபான்மை மக்களை, அதாவது உங்கள் மதத்தை சாராத மக்களை காலம் காலமாக நீங்கள் நடத்திய மற்றும் நடத்தும் விதத்தினால் வந்தது!!!

உலகமெங்கும் ஒன்றை பார்த்து அச்சப்பட்டு ஒரு முடிவை எடுப்பதன் காரணம், அதன் தன்மைகளை மக்கள் கண்ணால் பார்த்து உணர்ந்தமையால் மட்டுமே!

இதில் தவறான புரிதல் என்பதே இல்லை.

அதேபோல அதை இஸ்லாமோபோபியா என்ற முத்திரை குத்தி எங்களை குறிவைக்கிறார்கள் என்று புலம்புவது உங்கள்
தவறுகளை உணர்ந்து சரி செய்யாததினால் வந்த நிலைமை! இதில் தவறான புரிதல் என்பதற்கே இடமில்லை!

அப்படி சொல்லுவதனால் நீங்கள்தான் உலகத்தாரை பற்றி ஒரு துளியும் கவலைபடாதவராக செயல்படுகிறீர்கள் என்று சொல்லலாம்!

NO said...

// குர்ஆனின் வசனங்களை தப்பும் தவறுமாக அவனுக்கு விளங்க வைத்து இன்று தூக்கு தண்டனையை எதிர் நோக்கி உள்ளான். //

இதுவரை பல மக்கள், அறிஞர்கள், வரால்ற்றாசிரியர்கள், சாமானியர்கள், படித்தவர்கள் என்று (திரு தருமி உட்பட) மிக பலர் குரானில் உள்ள பல எழுத்துகள் என்ன சொல்லுகின்றன என்று விலாவாரியா எழுதுவிட்டார்கள்! அதேபோல பலர் இந்து மத புத்தகங்கள் பற்றியும் கிருத்துவ புத்தகங்கள் பற்றியும் எழுதிவிட்டார்கள்! அதை உணர்ந்த இந்துக்களும் கிருத்துவர்களும் ( முக்கால்வாசிக்கு மேல்) எவை முட்டாள்தனம் என்று கருதப்படுகிறதோ அதை ஏற்க்க மறுத்து விட்டார்கள், அல்லது அட்லீஸ்ட் இந்த காலத்திற்கு இது பொருந்தாது ஆகையால் அவை வேண்டாம் என்று தள்ளி வைத்து விட்டார்கள்!!
ஆனால் நீங்களோ பட்டுவர்த்த்னமான வெறியை தூண்டும் மற்றும் மற்றவர்களை அழிக்க சொல்லும் உங்கள் மத வாசகங்களை நீக்கவோ அல்லது அட்லீஸ்ட் அதெல்லாம் இந்நாளில் தவறு என்று சொல்லவோ துணியவில்லை. அதற்க்கு எதிர்ப்பாக உங்களைபோன்ற டீசென்டானவர்களின் பதில், "இஸ்லாமை இவர்களெல்லாம் புரிந்து கொள்ள வில்லை" என்பதே. கொஞ்சம் மேலே போனால் கசாப், ஒசாமா பின் லேடன் போன்றவர்களின் பதில், நாங்க புரிந்து கொண்டு விட்டோம், அதில் சொல்லியதை செய்கிறோம் என்பதே!

ஒரு விதத்தில் ஒசாமா பின் லேடன் உண்மையை பேசினார். திரு சுவனப்பிரியன் பொய் பேசுகிறார். என்ன திரு சுவன் அவர்கள் சொல்லும் பொய்,
மற்றவர்கள அவருடைய மதத்தை தவறாக நினைக்ககூடாது என்பதற்காக, அதே செத்துப்போன தாடிக்கார அரேபியர் சொன்னது அவரின் மதத்தை
மற்றவர்கள் சரியாக நினைக்க வேண்டும் என்பதற்காக!! ஒரு விதத்தில் ஒசாமா சொன்னதுதான் உண்மையான un-edited இஸ்லாம்! ஆதலால் அவர் படித்ததை அப்படியே செய்தார்!

திரு சுவன் அவர்களே, நீங்கள் சொல்லும் இந்த "புரிந்து கொள்ள வில்லை" லைன் நீங்கள் உங்களுக்காகவே நடத்தும் கூட்டங்களுக்கு வேண்டுமானாலும் நன்றாக இருக்கலாம்! ஆனால் விபரம் தெரிந்த எந்த வேற்று மத மக்கள் மத்தியில் எடுபடாது!

குறிப்பாக அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவிலும் சுத்தமாக எடுபடவில்லை! இந்தியாவில் எடுபடுகிரதாக நீங்க நினைத்தால் அதுதான் உங்களின் தவறான புரிதல்! ஏனென்றால் அதை இந்தியாவில் பலர், குறிப்பாக தமிழகத்தில் மிக பலர் சத்தம் போட்டு சொல்லாததற்கு காரணம், பயம்தான்!!! ஒன்று ஒட்டு போய்விடும் என்ற பயம், மற்றொன்று உயிர் போய்விடும் என்ற பயம்!! சமாதனம் மற்றும் சாந்தியின் வலிமை அப்படி இருக்கிறது!

NO said...

//இந்த உலகமும் இதில் உள்ள மனிதர்கள் யாவரும் ஒரு தாய் மக்களே! தருமி, வால்பையன், நோ, சார்வாகன், அனலைஸ்ட், நரேன் போன்ற அனைவருமே சுவனப்பிரியனின் சகோதரர்களே குர்ஆனின் கூற்றுப்படி. //

//எனவே இந்துக்களையும் கிறித்தவர்களையும் யூதர்களையும் சகோதரர்களாகவே சுவனப்பிரியன் இன்று வரை நினைத்து வருகிறார்.//

சாரி நண்பரே! வெள்ளை அடிக்கிறீர்கள்! குரானோ உங்கள் மதமோ அப்படி நினைக்கவில்லை! நாங்கள் எல்லாம் இன்பிடேல் மற்றும் காப்பீர்கள்! உங்களின் சம நிலையில் நாங்கள் இல்லை! நாங்கள் எல்லாம் ஒழிக்கபடவேண்டியவர்கள் அல்லது இந்த காலத்து நடைமுறையில் சொன்னால் "திருத்தப்பட வேண்டியவர்கள்" !!!!

மிஞ்சிப்போனால் எங்களிடம் சமத்துவம் இருக்கிறது என்று கதைப்பீர்கள் ! உங்களின் சமத்துவம் என்பது யாருக்கு வேண்டும்!!!

நான் நீ இல்லை! உன்ன்னின் புனித பிம்பங்கள் என்னுடையது இல்லை! அதை கட்டி அழவேண்டிய கட்டாயமும் எனக்கு இல்லை! அப்படி வாழ எனக்கு சுதந்திரம் மட்டும் தேவை இல்லை. சமூகத்தில் உன்னின் நிகர் நான், உன்னின் உரிமைகள் எல்லாம் எனக்கும் வேண்டும் என்று சொல்லுபவர்களை எப்பொழுது ஒரு சமூகம் அரவணைத்து அவனுக்கு எல்லாம் வழங்குகிறதோ அதுதான் சமத்துவம்!!! அனால் உங்கள் சமத்துவமோ ஒரு அடிமைக்கு வழங்கும் சுதந்திரத்தை வழங்கும் சமத்துவம் மட்டுமே! திம்மியாக, காபிராக கொடுக்கப்படும் ஒரு சுதந்திரம் யாருக்கு வேண்டும்! உங்களின் சமத்துவும் ஒரு பித்தலாட்டம் மட்டுமே!!!

என் போன்று நம்பிக்கை இல்லாதவனுக்கும் எனக்கிருக்கும் உரிமை அத்தனையும் கொடுப்போம் என்று அரசியல் சட்டம் முதல் , நாட்டின் வேறு சட்டங்கள் வரை எந்த நாடுகளில் எல்லாம் எழுதப்பட்டிருக்கிரதோ அதுவே சமத்துவம் பாராட்டும் நாடுகள்! அதுவே சமத்துவம் பாராட்டும் சமூகங்கள்! அரேபியா முதல் பாகிஸ்தான் வரை எந்த இஸ்லாமிய நாட்டிலும் சிறுபான்மையினருக்கு ஒரு அளவிற்கு மேல் உரிமை கிடையாது!! அரேபியாவில் சுத்தமாக கிடையாது! இதுதான் இவர்கள் சமத்துவத்தின் அழகு!! சகோதிரத்தனத்தின் தன்மை!! அந்த நாடுகளைப்போல மற்ற நாடுகளும் ஆகவேண்டியதுதான் அவர்களின் கனவும்!!!

தருமி said...

தடை செய்ததில் எனக்கு இன்று வரை உடன்பாடு இல்லை. (ஓ!)

சாத்வீகமான முறையிலேயே போராடினோம். (ஓ! அப்டியா?)

இஸ்லாத்தை தவறாக விளங்கிக் கொண்டது தாலிபான்களின் குற்றம். (அடப்பாவமே!)

எந்த அளவுக்கு அந்த மார்க்கங்களால் கடைபிடிக்கப்படுகிறது (இஸ்லாமிற்கும் இது செல்லுமா?)

இரண்டு மதங்களிலும் உள்ள பலகீனமான கருத்துக்களே! (இஸ்லாத்தில் இல்லாமலிருபதற்குக் காரணம் அதன் பயம் தரும் மிகப் பலமான க்ருத்துக்களே!)

அதுதான் உண்மையான இஸ்லாமிய ஆட்சி!(போயிருவோமா அங்கே!)

அனைத்து மக்களையும் அன்புடன் அரவணைத்து செலலவே குர்ஆன் கட்டளையிடுகிறது. (ஆஹா!)

ஆனாலும் உங்கள் ‘நேர்மை’ எனக்குப் பிடிக்கிறது! (’நாடோடிகள்’ படம் பார்த்தீர்களா?!!!)

NO said...

//25 ஆண்டுகாலமாக இடையறாது நடைபெற்றதன் காரணமாக இன்று அதே இளைஞர்கள் கல்வியின் பால் ஆர்வம் ஏற்பட்டு பட்டதாரிகளாக வருடாவருடம் வெளி வருகின்றனர். சினிமா நடிகனுக்கு பின்னால் சென்ற இஸ்லாமிய இளைஞர கூட்டம் இன்று குர்ஆனையும் ஹதீஸையும் ஆராய்ந்து கொண்டிருக்கிறது.//

ஒரு சினிமா நடிகன் தன் ரசிகர்களுக்கு இன்னாரை ஓரம் கட்டு, ஒழித்துக்கட்டு என்று சொன்னதாக ரெக்கார்டு இல்லை!

NO said...

//ஊருக்கு ஒரு சாமி: சாதிக்கு ஒரு சாமி: மொழிக்கு ஒரு சாமி: அதோடு உயிரோடு உள்ள சாமியார்கள்: என்று பட்டியல் நீளுகிறதே! இதை தடுக்கப் போய் கடைசியில் நாத்திகர்களாக ஆனதுதான் மிச்சம்.//

தின்றால் நிமிடங்களில் சாவு உறுதி எனும் ஒரு துளி விடத்தை ஒரு குடத்தில் ஊற்றி ஒருவன் அதிலிருந்து ஒரு கோப்பை குடித்தால் கண்டிப்பாக உடனடியாக இறக்க மாட்டான்! அதே விடத்தை ஒரு குளத்தில் ஊற்றினால், அதை குடித்தால் ஒன்றுமே ஆகாது!

அதேபோல்தான் இந்த ஒரே கடவுள் சித்தாந்தமும்!!!

I prefer no gods! But if pressured my vote is for many gods for the one god is generally molded on the image of Hitler!!!

If its many Gods then Stalin, Churchil and others too drop down along with Hitler to cut each other's throat so that the poor HUman can be free for himself!!!

Long live many Gods!

suvanappiriyan said...

திரு நோ!

//நண்பர் திரு சுவனப்பிரியன்

// தவறான புரிதல்// - இடைச்சொருகல் மறுப்பு என்பது இதுதான்! எனது சாரம் - மதத்தின் பெயரால் உலக உண்மைகளை திரித்து விட்டு நீங்களே உருவாக்கிக்கொண்டுள்ள உயர்வு சித்தாந்த்தம் + எனதே உயர்வு என்ற அழிக்க முடியாத மன பிம்பம் + ஆகையால் மற்றவர் மற்றவை எல்லாம் கீழனதே என்று முடியும் கடைசி விவாதம் = ஆகியவற்றின் மொத்த சேர்க்கையினால் உருவான மனமே உங்களுடையது!//

நிச்சயமாக இது முன்னோர்களின் வேதங்களிலும் அறிவிக்கப் பட்டிருக்கிறது.'
26 : 196 - குர்ஆன்

சங்கீதத்தையும், தோராவையும், சுவிஷேஷங்களையும் தவிர்த்து முன்னோர்களின் வேதங்களிலும் அறிவிக்கப் பட்டிருப்பதாக இறைவன் குறிப்பிடுகிறான்.

'நபியே! இன்னும் உமக்கு முன்னர் வஹீ மூலம் ஆண்களையே தூதர்களாக அனுப்பினோம். அவர்களுக்குத் தெளிவான சான்றுகளுடனும், ஏடுகளுடனும் நமது தூதுச் செய்தியை அறிவித்தோம்.'
16 : 43,44 – குர்ஆன்

இது முந்தய வேதங்களிலும், ஆப்ரஹாம், மோசேவுடைய வேதங்களிலும் உள்ளது.'
87 : 18,19 –குர்ஆன்

இங்கு குர்ஆன் மட்டுமல்லாது உலகில் உள்ள அனைத்து வேதங்களையும் கொடுத்தது ஒரே இறைவன் என்றுதானே குர்ஆன் சொல்கிறது. இந்த வசனங்களே உங்கள் வாதங்களை மறுத்துக் கொண்டிருக்கிறதே!

//வெளிவந்த பக்த கோடிகளின் தன்மையை நியு யார்க்கிலும் மற்றும் இந்தியாவிலும் பல முறை பார்த்தாகிவிட்டது! உலகமே பார்த்து விட்டது!//

எண.ணெய் வளங்களை சுரண்டுவதற்காக இஸ்ரேலின் துணையோடு முஸ்லிம் நாடுகளில் அப்பாவி மக்களை கொன்றொழிக்கும் செயல் உங்களுக்கு நியாயமாக படுகிறதா? பாதிக்கப்பட்டவன் அமெரிக்காவை குறி வைக்கிறான். அதற்காக பொது மக்களை குண்டு வைத்து கொல்வதை இஸ்லாம் தடுக்கிறது. கோபத்தை அமெரிக்க ராணுவத்தின் மீதும் ஆட்சியாளர்கள் மீதும் காட்ட வேண்டும்.

இந்தியாவில் மாலேகான் குண்டு வெடிப்பு, சம்ஜோதா எக்ஸ்பிரஸ் குண்டு வெடிப்பு, மெக்கா மஸ்ஜித் குண்டு வெடிப்பு, பாபரி மசூதி தகர்ப்பு அனைத்தும் யாருடைய வேலை என்பதை உளவுத் துறை கண்டு பிடித்து சொன்ன பிறகுமா இந்திய பிரச்னைக்கு முஸ்லிம்களை காரணமாக்குகிறீர்கள்?

//எப்படி சொல்லுகின்றேன் என்றால் உங்களின் மதம் உலகமெங்கும் சந்தேகத்துடனும் பயத்துடனும் பார்க்கப்படுகிறது!//

அதற்கு காரணம் மீடியாக்களின் திட்டமிட்ட பொய் பிரச்சாரமே! இஸ்லாத்தை வாதத்தால் வீழத்த முடியாதவர்கள் சூழ்ச்சிகளால் வீழ்த்த முயற்ச்சிக்கிறார்கள். இதிலும் தோல்வியையே தழுவுவார்கள்.

தருமி said...

சுவனப்பிரியன்,
முன்பே சொன்ன ஒன்றைத் திரும்பவும் சொல்ல வேண்டியதுள்ளது. உங்கள் குரானின் வசனங்கள் உங்களுக்கும் நம்புவோருக்கும் தெய்வ வசனங்கள். நம்பாதவர்களுக்கு அதில் ஏதும் புனிதத்துவம் இல்லை. ஆகவே உங்கள் மேற்கோள்கள் எந்தப் பயனுமின்றி இங்கே நிற்கும். முடிந்தால் உங்கள் வாதங்களை அறிவார்த்தமாகக் கொடுங்கள். உங்கள் மேற்கோள்கள் நம்பிக்கையில்லாதவருக்கு எந்த ஒரு வித தாக்கமும் கொடுக்காது என்பதை புரிந்துகொள்வீர்கள் என நினைக்கிறேன்.

தருமி said...

//ஆண்களையே தூதர்களாக //

அட .. நம்ம ஒளவையாரையும் இந்த லிஸ்டில் வைத்திருந்தேனே!

தருமி said...

//மீடியாக்களின் திட்டமிட்ட பொய் பிரச்சாரமே!//

:)

NO said...

//இங்கு குர்ஆன் மட்டுமல்லாது உலகில் உள்ள அனைத்து வேதங்களையும் கொடுத்தது ஒரே இறைவன் என்றுதானே குர்ஆன் சொல்கிறது. இந்த வசனங்களே உங்கள் வாதங்களை மறுத்துக் கொண்டிருக்கிறதே!// குரான் 87 19 16 43 44 //

நண்பரே மறுபடியும் கூறுகின்றோம் - ஒன்றன் புனிதத்துவதிர்க்கும் உண்மைக்கும் சாட்சியாக அதிலிருந்தே வரிகளை எடுத்து விடுவது என்பது மிக குழைந்ததனமான வழிமுறை! ஆஸ்திரேலியா அபாரிஜின் மக்களுக்கும் கடவுள் உண்டு, அவர்களும் தங்களின் வாய்மொழி பாடல் வழியாக அந்த கடவுளின் இருப்பை நியாயப்படுத்துவார்கள்!

எங்கள் மூல தர்கமே உங்கள் கடவுளார்களும், தூதுவர்களும் கற்பனை உருவாக்கம் என்பதே! அதற்க்கு காரணம், அப்படியே அந்த தூதவரின் பெயரில் ஒருவர் வாழ்திருந்தாலும் அவரால் வாய்மொழியப்பட்டது என்று சொல்லப்படும் புத்தகங்களில் உள்ளவை ஒரு சாமானியர் சொல்ல முடியாத சமாச்சாரங்களை தாண்டி வேறு ஒன்றும் இல்லை! மிஞ்சி மிஞ்சி போனால் அந்த கால பண்பாட்டினை, அந்த குடிகளின் வாழ்வுமுறையை எடுத்து சொல்லி பாடிய பாடல்கள் மற்றும் கதைகள் மட்டுமே!இதை சொல்ல ஒரு ஸ்பெசல் நபர் தேவை இல்லை! அப்படி அவர் ஸ்பெசல் நபர்தான் என்றால் அந்த சாதாரனங்களை சொல்ல ஒரு ஸ்பெசல்லை அனுப்புவித்த ஒருவர் மிக மிக சாதாரனவர் என்று சொல்லலாம்!

The intellect of the chairman of a company can be known by the kind of appointments he does for the vacant posts in his company. If he has infact appointed some one with a masters in engineering from Stanford + Engineering Doctorate from Berkley + MBA from Harvard + years of experience in hard core engineering R&D as the head of mail sorting and delivery department in his company , then one can say that the Chairman sucks!!! If the same Chairman also appoints some one who has not passed second standard and had been herding cows and sheep for years as the head of electrical R&D department he sucks even more!!!

It seems that's precisely what the gods do every time!

Voltaire - If there is indeed no god one should then be invented
Michael Bakunin - If there is indeed god he then should be abolished!

நடந்ததை, நடப்பதை, நடக்கப்போவதை பார்த்தால் சொல்லக்கூடியது ஒன்றுதான் - இறைவன் (இருந்தால்) மிகச்சிறியவன்!!!

தருமி said...

சுவனப் பிரியன்
No அவர்களின் மேற்கோள் ஒன்றைக் கொடுத்து அடுக்கடுக்காய் குரானின் வசனங்களைக் கொடுத்துள்ளீர்கள், இரண்டுக்கும் என்ன தொடர்பு என்று என்னால் கண்டுபிடிக்கவே முடியவில்லை.just a series of quotations would not make any sense

NO said...
This comment has been removed by a blog administrator.
NO said...

//எண.ணெய் வளங்களை சுரண்டுவதற்காக இஸ்ரேலின் துணையோடு முஸ்லிம் நாடுகளில் அப்பாவி மக்களை கொன்றொழிக்கும் செயல் உங்களுக்கு நியாயமாக படுகிறதா? //

இதைவிட பெரிதாக புளக முடியாது நண்பரே. எண்ணை வளங்களை அனுபவிப்பதில் பெருவாரியானவர்கள் இஸ்லாமிய சமுதாயங்களே!

சௌதி அரேபியா மற்றும் இதர அரபு நாடுகளில் எண்ணையை தோண்டி எடுப்பவர்கள் அறம்கோ என்ற அரேபிய தேசிய அரசாங்க கம்பனி மற்றும் அந்தந்த நாட்டு அரசாங்க கம்பனிகள் மட்டுமே. வேறு யாரும் என்னை தோண்டி விற்க முடியாது! அதை காசு கொடுத்து வாங்குபவர்கள் உலக எண்ணை கம்பனிகள்! காசு பார்ப்பவர்கள் அரேபியர்கள்தான்!

சவுதி நாட்டு இஸ்லாமிய ஆளும் வர்க்கம், கிடைத்த காசை முதலில் தங்களின் தேவைக்காக செலவழிப்பார்கள்! அதுவும் கட்டுக்கடங்காமல் செலவு. அவர்களின் குதிரைகள் என்ன, கட்டடங்கள் என்ன! அப்பப்பா!!! அடுத்தது ராணுவ தளவாடங்கள் வாங்க! அதுவும் அமெரிக்காவிடம் மற்றும் ஐரோப்பிய கம்பனிகளிடம்! ஏன், அரேபியர்களை அதை செய்ய சொல்லுங்களேன்?? பிரச்சனை என்னவென்றால், அவற்றை கொலுவில் வைக்கலாம்! வெடிக்காது, அதான் அமெரிக்க மோகம்! சொல்ல வருவது என்னவென்றால் யாரிடம் அழிவு தளவாடங்களை வாங்குவது என்பதல்ல பாய்ண்டு. அழிவுத்தளவாடங்கள் வாங்கிக்குவிப்போம், காசை விடுவோம் என்பதுதான் அது!
அடுத்த காசு செலவழிக்கும் வழி, உலகத்தில் உள்ள எல்லா மசூதிகளையும் வகாபி மசூதிகளாக மாற்ற காசை அள்ளி விடுவது! மேலும் புதிய மசூதிகளை கட்ட மற்றும் அவர்களுக்கு வேண்டிய ஆதரவாளர்களை வளர்க்க காசு கொடுப்பது!

இதே போல காசெல்லாம் கரியாக்கி போண்டி நிலைமைக்கு வந்து கடைசியில் பெட்ரோல் உற்பத்தியை கட்டுப்படுத்தி, விலையை ஏற்றி, உலக மக்கள் எல்லோரும் நொந்து பொய் பெட்ரோல் வாங்கும் நிலைமைக்கு வரச்செய்து தங்களின் கல்லாவை நிரப்புகிறார்கள்!

இப்படியாக ஆட்டம் போடும் இவர்களை யாரோ கொள்ளை அடிக்கிறார்கள் என்று கூசாமல் கூறுவது நீங்கள் நடத்தும் வெள்ளிக்கிழமை கூட்டங்களில் கூடும்பொழுது வேண்டுமானாலும் பேசலாம் நம்புவதற்கு ஆட்கள் ரெடி! !

ஆனால் தயவு செய்து விபரம் தெரிந்தவர்களிடம் பேசாதீர்கள்!!

இஸ்லாமிய நாட்டு எண்ணை வளையங்களை கவர்ந்து கொள்ளை அடிப்பது வேறு யாரும் இல்லை - அது இஸ்லாமியரே!!!!!!

suvanappiriyan said...

தருமி!

// No அவர்களின் மேற்கோள் ஒன்றைக் கொடுத்து அடுக்கடுக்காய் குரானின் வசனங்களைக் கொடுத்துள்ளீர்கள், இரண்டுக்கும் என்ன தொடர்பு என்று என்னால் கண்டுபிடிக்கவே முடியவில்லை just a series of quotations would not make any sense//-dharumy
//உயர்வு சித்தாந்த்தம் + எனதே உயர்வு என்ற அழிக்க முடியாத மன பிம்பம் + ஆகையால் மற்றவர் மற்றவை எல்லாம் கீழனதே என்று முடியும் கடைசி விவாதம்//-No

அதாவது திரு நோ சொல்ல வருவது குர்ஆனைத் தவிர மற்ற வேதங்கள் மற்ற தூதர்கள் எல்லாம் கீழானவர்களே என்ற எண்ணத்தில் முஸ்லிம்கள் இருப்பதாக சொல்கிறார். அதாவது மற்ற இந்துக்களை பிராமணர்கள் நினைப்பது போல....

அதைத்தான் தவறு என்று குர்ஆன் வசனங்களின் மூலம் சுட்டிக் காட்டினேன். அதாவது உலகில் உள்ள வேதங்கள், தூதர்கள் அனைவருமே ஒரே கடவுளிலிருந்து உருவானவையே என்று குர்ஆனே கூறுவதால் வர்ணாசிரமத்தை இங்கு புகுத்த முடியாது என்று சொல்ல வந்தேன்.

suvanappiriyan said...

நோ!

//எவை முட்டாள்தனம் என்று கருதப்படுகிறதோ அதை ஏற்க்க மறுத்து விட்டார்கள், அல்லது அட்லீஸ்ட் இந்த காலத்திற்கு இது பொருந்தாது ஆகையால் அவை வேண்டாம் என்று தள்ளி வைத்து விட்டார்கள்!!//

இங்கு உங்கள் வாதம் சரியான திசையில் செல்கிறது. இந்து மதத்திலும் கிறித்தவ மதத்திலும் வேதங்கள் பாதுகாக்கப்படவில்லை. இன்றைய அறிவியலோடு ஒத்துப் போகவில்லை. நவீன காலத்தில் அந்த சட்டங்களை கடைபிடிக்கவும் முடியாது. எனவே ஒதுக்கி விட்டீர்கள். நான் இந்துவாகவோ கிறித்தவனாகவோ இருந்திருந்தால் அதைத்தான் செய்திருப்பேன்.

//ஆனால் நீங்களோ பட்டுவர்த்த்னமான வெறியை தூண்டும் மற்றும் மற்றவர்களை அழிக்க சொல்லும் உங்கள் மத வாசகங்களை நீக்கவோ அல்லது அட்லீஸ்ட் அதெல்லாம் இந்நாளில் தவறு என்று சொல்லவோ துணியவில்லை.//

இங்குதான் தவறிழைக்கிறீர்கள். இந்து மதமான என் மதம் வீணாகி விட்டது. எனவே இஸ்லாமியனான நீயும் உன் மதத்தை விட்டு வெளியில் வா என்று சொல்வது வேடிக்கையாக இருக்கிறதல்லவா? நீங்கள் குறிப்பிடும் போர்க்கள வசனங்களை போர்க் களத்தில் மட்டுமே வைத்து பார்க்க வேண்டும். மகாபாரதத்தில் பைபிளில் இது பொன்ற போர்க்களக் காட்சிகள் நிறையவே வருகிறது.

நான் முன்பே கேட்டதுதான்: ஆறாயிரத்துக்கும் மேற்பட்ட வசனங்களை உடைய குர்ஆனிலிருந்து அறிவியலுக்கு முரணான ஒரு வசனத்தை காட்டுங்கள் என்று பலமுறை கேட்டு விட்டேன். இதுவரை அதற்கு எந்த பதிலும் ஏன் இல்லை?

குர்ஆன் வெறும் வணக்க வழிபாடுகளை மட்டும் பேசவில்லை. கோள்களின் சஞ்சாரம்: இரவு பகல் ஏற்படுதல்: பிரபஞ்சத்தின் தோற்றம்: பிக்பேங் தியரி: கடல்கள்: மேகங்கள்: மலைகள்: உயிரினங்களின் உற்பத்தி: என்று அறிவியல் கருத்துகள் விரிந்து கொண்டே செல்கிறது.

//குறிப்பாக அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவிலும் சுத்தமாக எடுபடவில்லை!//

எடுபடவில்லையா? பள்ளியில் இடம் கிடைக்காமல் பிரான்சில் ரோட்டில் தொழுகை நடக்கிறதாம். காணொளி கேட்டீர்கள் என்றால் தருகிறேன். அமெரிக்காவும் ஐரோப்பாவும்தான் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்வதில் முண்ணனியில் நிற்கின்றன.

//என் போன்று நம்பிக்கை இல்லாதவனுக்கும் எனக்கிருக்கும் உரிமை அத்தனையும் கொடுப்போம் என்று அரசியல் சட்டம் முதல் , நாட்டின் வேறு சட்டங்கள் வரை எந்த நாடுகளில் எல்லாம் எழுதப்பட்டிருக்கிரதோ அதுவே சமத்துவம் பாராட்டும் நாடுகள்!//

நீங்கள் விரும்பும் சட்டம் எத்தகையதாக இருக்க வேண்டும். உங்களின் உரிமை என்பது என்ன? எதை ஒட்டி இருக்க வேண்டும். அப்படி பின்பற்றக் கூடிய நாடு எது என்பதை கொஞ்சம் விளக்கமாகவே சொல்லுங்களேன். நானும் தெரிந்து கொள்கிறேன்.

தருமி said...

//ர்ஆனிலிருந்து அறிவியலுக்கு முரணான ஒரு வசனத்தை காட்டுங்கள் என்று பலமுறை கேட்டு விட்டேன். இதுவரை அதற்கு எந்த பதிலும் ஏன் இல்லை? //

இந்த ஜோக்கும் மிக மிக பிடிக்கிறது!!!

ஆனால் திரும்ப திரும்ப ஒரே ஜோக்கை அடிக்க வேண்டாம்.

தருமி said...

//உங்களின் மதம் உலகமெங்கும் சந்தேகத்துடனும் பயத்துடனும் பார்க்கப்படுகிறது!//

அதற்கு காரணம் மீடியாக்களின் திட்டமிட்ட பொய் பிரச்சாரமே! //

ஆமாங்க...
http://www.thehindu.com/news/states/tamil-nadu/article2666142.ece
http://www.dinamalar.com//News_Detail.asp?Id=357775&
-- இதைப் போன்ற செய்திகள் எல்லாமே வெறும் பொய்ப் பிரச்சாரங்கள்தான்! ஏமாத்துறாங்க!

தருமி said...

சுவனப்பிரியன்,
http://www.thereligionofpeace.com/Pages/TheList.htm
-இதையும் லிஸ்ட்டோடு லிஸ்டாகச் சேர்த்துக் கொள்ளுங்கள்.

தருமி said...

சுவனப்பிரியன்,
//கவலைப்படாதீர்கள். 'பிரதர் ஸூட்(இஹ்வான்கள்) ஆட்சியில் கிறித்தவர்களும் யூதர்களும் சிறப்பாகவே நடத்தப்படுவார்கள். //

இன்றைய ஹிந்துவில் வந்த செய்தியில் ...:

The Muslim Brotherhood's Freedom and Justice Party (FJP) could end up winning ...

The spectacular performance of the Islamists has jolted their secular and liberal opponents. “Egypt will get into its darkest era ever if the Brotherhood reached the Parliament and then assumed power, it will be the worst epoch ever … I think the country will suffer as long as the Brotherhood represents the majority,” author Gamal El-Gitani was quoted as saying by the Al Ahram website.

Analysts point out that the result has alarmed minorities such as the Coptic Christians, as well as leftists and secularists. Women activists, fearing the imposition of a dress code and Sharia law, are also wary of the Muslim Brothers' vibrant assertion at the polls.

NO said...

I was so busy the entire last week and hence could not look into this verbal comic caper like retort from Mr. Suvanapiriyan. The more I looked into it today the more I see what it can do. What appeared as a harmless comic from some ignorant bigot now looks more like a potential venom that takes pride in reproducing itself in people’s mind.
Seeing the utter divorce of reason in the pages and pages of gibberish by Mr. Suvanapiriyan I could only say the following.
Religion has this capacity to totally cocoon the person’s thoughts, deeds and finally his own self into a miasma of illogic and drivel. Insensibility and illogic comes not only to pervade but also sucks the person more and more inside its darkened abyss.
Mr. Suvanpiriyan and his ilk are simply an example of such a tribe. Looking at the way in which he has enveloped himself into a position of imaginary righteousness, any evidence or logic contrary to his assertions will simply not be heard out at all, let alone considered.
While exploring his blog I also saw the writings of couple of guys one of whom is someone called as Mr. Vanjoor. He seemed to be a perfect complement to the maddening bigotry that this ilk reflects. It looked like that they thrive in their imaginary world where they are the chosen people and of course the only blessed people. Such imagined superiority and narcissism is on a continuous loop with more and more drivel made out of spurious and outright false proclamations getting added to the existing hate quotient. If at all one needs an example of how medieval religious bigots made their bread in those days, one has to see their blogs. And this is 21st Century.

The likes of Mr. Suvanapiriyan, Mr. Vanjoor etc will never stop and would go on and on and on with their pages and pages of apologies for their religion. They simply cannot comprehend the fact that there are more people than their own kind that do not have a high opinion of their only true faith. Like a highly devoted mother that doesn’t accept her child to be ugly - even if it’s true - the fanatic is never going to accept the ugliness of his creation - their religion in this case. For the moment that happens it would make him feel that he has lost a part of himself and the utter wastefulness that he pursued all along. His ego will not allow him to accept this. Hence a more strident posturing followed by countless volumes of apologies on behalf of his creation or somebody’s creation whom he has adopted.

NO said...

A generation in their mid-years (among Tamil speakers) considers Rajini, Kamal and Ilayaraja not only as great entertainers but also a part of their own personal history. Those three actually were present all along their young age, youth and so on. Washing out them from their memory means washing out a part of personal self. If Kamal and Rajini can have such a hold, imagine what the prophets and gods would have. It all goes to a point of something like negating them equates to negate one’s own ancestry, your one’s own history and one’s own social presence. Or that’s what precisely religion has made one to think. It has successfully wormed into the cultural consciousness of humans and placed itself on top of all cultural pointers that define civilization. It successfully hijacked morality inspite of the fact that most moral sermons found in religious books are not something that a normal and sane Homosapien cannot come out with.
In the process of hijacking the human consciousness religion has also made maximum use of minds that are predisposed towards being subservient to an authority which promises him an imaginary super space and also an imaginary state of superiority that a master’s favorite slave would have.
People like Mr. Suvanapiriyan and Mr. Vanjoor are in the league of those extraordinary and ungentle zealots!
Extraordinary because of their total divorce to truthfulness and total commitment to pure drivel ungentle because of their total spite and hatred towards other’s belief’s and Zealots because of the potential harm causing ability their thoughts and deeds possesses!

(Did not have the time to translate into Tamil which in fact is something that I would have preferred to do. Hence in English).

தருமி said...

//...translate into Tamil which in fact is something that I would have preferred to do//

எனக்கும் அதே ஆசைதான்.

நீங்கள் சொன்னது = 100 / 100

நன்றி

Post a Comment