Thursday, August 08, 2013

675. முதல் பதிவும் நானும் ... நீங்களும்








*


முதல் பதிவு போட்டதை பற்றியும் எழுதணுமாமே ... அதாங்க கம்ப்யூட்டரும் நானும் பதிவில் சொன்னது மாதிரி எப்படியோ கம்ப்யூட்டர் வாங்கியாச்சி... சாலிடெர் அதன் பின் ஃப்ரீ செல் விளையாடப் பழகியாச்சி. (இதில் இரண்டாவது விளையாட்டு தான் இப்போ கம்ப்யூட்டரை ஆன் செய்ததும் ஒரு warming up-ற்காக ஒரு விளையாட்டும், கம்ப்யூட்டர் ஆப் செய்யும் போது ஒரு dry run மாதிரி ஒரு விளையாட்டும் விளையாடுறதுன்னு ஆகிப்போச்சு!!) கம்ப்யூட்டர் வாங்கி விளையாட்டு (Claw அப்டின்னு ஒரு விளையாட்டு ரொம்ப பிடிச்சிப் போச்சு; அதில் வர்ர சவுண்டுகள் தங்க்ஸிற்கு ரொம்ப பிடிச்சிப் போச்சு.), தட்டச்சு வேலை இது மட்டும் பார்க்க ஆரம்பித்து, அடுத்த கட்டமாக மயில்கள் ‘வாங்க, விற்க’ ஆரம்பிச்சாச்சு...

இந்த மயில் வேலையை முதலிலே ஆரம்பித்தது நல்ல பழக்கமாயிற்று. ஏனெனில் ஒரு நூறே நூறு நாட்களுக்கு அமெரிக்கா போனது 2002-ம் ஆண்டு. அதுவும் ஒரு பை பாஸ் அறுவை செய்து சரியாக ஒன்பதாவது வாரம் புறப்பட்டுப் போய்ட்டேன். அதுனால் வீட்டோடு கட்டாயம் ஏதாவது தொடர்பில் இருக்க வேண்டுமே. அதனால் மகள்களுக்கு தினமும் ஒரு மயில் என்பதாக அனுப்பிக் கொண்டிருந்தேன். அதில் ஒரு வசதி ... ப்ளாக் அல்லது முகநூல் ஸ்டேட்டஸ் போடுறது மாதிரி என் தினசரி அனுபவங்களை மகள்களுக்கு அப்போது எழுதி அனுப்பி வந்தேன். அதாவது அப்போவே .. அந்தக் காலத்திலேயே .. பிஞ்சிலேயே முத்திட்டோம்ல் ..

காலச்சக்கரம் இப்படியாக சுழன்று கொண்டிருந்த போது ....

தேசிகன் அப்டின்னு ஒருவர். அவர் யாருன்னு எனக்குத் தெரியாது. அவரிடமிருந்து சில மயில்கள் தொடர்ந்து எனக்கு வந்து கொண்டிருந்தன. அவைகள் எல்லாமே தமிழில் வந்தன. அதுவும் சுஜாதா கதைகள் தொடர்புள்ளவைகளாக வந்தன. அவைகள் எல்லாமே வலைப்பூவில் - ப்ளாக்கில் - அவர் எழுதிய பதிவுகள் என்பது எனக்குத் தெரியாது. தமிழில் கம்ப்யூட்டரில் எழுத முடியும் என்பது அவரது பதிவுகளைப் படிக்கும் போது தெரிந்தது.

இப்போது தான் முந்திய பதிவில் சொன்னது போல் மெரீனா கடற்கரைக்குச் சென்று முதல் பதிவர் கூட்டத்தில் கலந்து கொண்டேன். அங்கே போனதும் ஒரு பயமும் வேகமும் இணைந்தே வந்தன. பயம் - அவர்கள் பேசியது புரியாததால் வந்தது. வேகம் - அந்த நாள்வரை 460 பேர் தமிழில் வலைப்பூ வைத்திருக்கிறார்கள் என்ற தகவல் சொல்லப்பட்டது. ஆஹா ...இப்போ ஆரம்பிச்சா முதல் 500 தமிழ் வலைப்பதிவர்களில் நாமும் ஒரு ஆளாக ஆகி விடலாமேன்னு ஒரு நப்பாசை வந்தது. ஆயிரத்தில் ஒருவனாக இருப்பதை விட ஐந்நூற்றில் ஒரு ஆளாக ஆகி விடணும்னு ஒரு ஆசை வந்து மீதூர ....

ஆனால் எப்படி ப்ளாக் ஆரம்பிக்கத் தெரிந்தது என்பது நினைவில் இல்லை. ஆனால் தமிழில் எப்படி எழுதுவது என்பதை மெரீனா கூட்டத்திற்கு அடுத்த நாள் பத்ரிக்கு தொலைபேசியில் கேட்டு, அவர் சொன்னதை வைத்து எழுதப் பழகினேன். பத்ரி கார் ஓட்டிக்கொண்டே அன்று எனக்கு டியூஷன் எடுத்தார்.

நம்ம மனசுல எப்போதுமே கேள்விகள் நிறைய இருக்குமா .. அதனால் கேள்வி கேட்கிறதில வித்தகராக சினிமாவில் வந்து போன தருமி பெயரை வச்சுக்குவோம்னு நினச்சிக்கிட்டேன். அதோடு முதலில் சொந்தப் பெயர், வயது இவைகளைச் சொல்லாமல் ஆரம்பிக்க நினைத்தேன். முதல் பதிவு - நாலைந்து வரிகள் .. சில கேள்விகள் .. போட்டு 24.04.2005 அன்று ஒரு பதிவைப் போட்டேன். இங்க பாருங்கை’யா .. அடுத்த நாளே பெனாத்தல் சுரேஷிடமிருந்து ஒரு பின்னூட்டம் வந்திருச்சி. ஒரே ஒரு பின்னூட்டம் தானேன்னு நான் கவலைப்படுவேன்னு நினைச்சாரோ .. இல்ல .. அவரும் அப்போ கத்துக்குட்டியாக இருந்ததாலோ என்னவோ .. ஒரே பின்னூட்டத்தை இரண்டு தடவை அனுப்பிட்டாரு. நானும் நல்லதாச்சுன்னு ரெண்டு பின்னூட்டத்தையும் போட்டுக்கிட்டேன். ஆக முதல் பதிவு போட்ட அடுத்த நாளே இரு பின்னூட்டங்கள் அப்டின்னு மார்தட்டி சொல்லிக் கொள்ளலாமே ... வரலாறு ரொம்ப முக்கியம், அமைச்சரே!

ஆனால் அதுக்குப் பிறகு ரோஸ்விக் என்ன நினச்சிப் பாவப்பட்டாரோ தெரியலை... ஆறு வருஷம் கழித்து அவர் ஒரு பின்னூட்டம் போட்டு உட்டுட்டாரு.  

பெனாத்தல் சுரேஷ் ... வாழி .. வாழி (இரண்டு பின்னூட்டத்திற்கு இரு வாழி!!)


ரோஸ்விக ..... வாழி (ஒரு பின்னூட்டத்திற்கு ஒரு வாழி !)





*



 

3 comments:

”தளிர் சுரேஷ்” said...

சுவையான அனுபவ பகிர்வு! வாழ்த்துக்கள்!

Avargal Unmaigal said...

முதல் பதிவே நக்கல் கேள்விகளாக வந்திருக்கின்றன. மதுரக்காரர்கள் என்றால் சும்மா வா

டிபிஆர்.ஜோசப் said...

உங்களுக்காவது ஒரு பின்னூட்டம் வந்துது. எனக்கும் வந்துது ஆனா ரெண்டு வருசம் கழிச்சி!

நா பதிவு போட ஆரம்பிச்சப்போ நீங்க தமிழ்மணத்துல இந்த வார ஸ்டாராவே ஆகியிருந்தீங்கன்னு நினைக்கிறேன்.

Post a Comment